zannath
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
AJ Hospital and research center
AJ குழுமம்
திரு. வெங்கடாச்சலம் கட்டிட துறையில் புகழ் பெற்ற குடும்பத்தை சேர்த்தவர். திரு. தனஜெயன் மருந்தகம் ( pharmacologist ) துறையை சார்ந்தவர். இருவரின் நட்பு
AJ மருத்துவமனைக்கு அடித்தளம் அமைந்தது என்றால், வெங்கடாச்சலத்தின் மகள் பிரியா மற்றும் மருமகன் திரு. சிவா, தனஜெயனின் மகன் பிரகாஷ் மற்றும் மருமகள் லாவண்யா , இந்த நால்வரின் முயற்சியால் இப்பொழுது இந்தியாவில் தலை சிறந்த மருத்துவமனையாக மாறியுள்ளது. மற்ற தொழில் அனைத்தும் சென்னையில் இருந்தாலும், மருத்துவமனைக்காக இந்த இரு குடும்பமும் ஒரே குடும்பமாக கோவையில் வசித்து வருகின்றனர்.
பிரியா தந்தையின் வழியில் கட்டிட பொறியாளர் துறையை தேர்ந்தெடுதார். பிரகாஷ் இருதய அறுவை சிகிச்சை நிபுணர், அவரது நண்பர் சிவா நரம்பியல் சிகிச்சை நிபுணர், நண்பனை காண மருத்துவமனை வருபவர், பின் பிரியா விடம் தன் காதலை பகிர்ந்து அனைவரின் ஆசியுடன் மணந்தார். அவர்களின் ஒரே காதல் சின்னம் தான் ஜோயா. அந்த வீட்டின் கடைசி வாரிசு, பார்க்க அமைதியாக இருந்தாலும் அவள் இருக்கும் இடத்தில் கலவரம் நடந்தால் அதான் காரணம் அவளாக தான் இருக்கும். பிரகாஷ் மற்றும் லாவண்யா திருமணத்திற்கு பின் காதல் என்னும் வகையை சார்ந்தது. இவர்களின் காதல் பரிசு ஆர்யன் மற்றும் அத்விக்.
ஆர்யன் அழுத்தம் நிறைந்தவன். ஒரு வார்த்தை பேச, எதிரில் இருப்பவர் ஒரு மணிநேரம் பேச வேண்டும். இருந்தும் தன் முடிவுகளை வார்த்தைகளில் அன்றி செயலில் வெளிப்படுத்தும் வகையை சேர்ந்தவன். அத்விக் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோற்றம் மட்டும் அன்றி குணமும் ஆர்யன் போல் இருப்பவன். அவன் தமயனுக்கு நேர் எதிர் குணம் கொண்டவன் என்பது குடும்பத்தில் இருப்பவர்கள் தவிர யாருக்கும் அறியா விஷயம். அத்விக், ஜோயா இருவரும் 2வருட இடைவெளி இருந்தாலும் இரட்டை படை போல் ஒற்றி கொண்டே சுற்றும் போர்வழி. இந்த இருவர் அட்டகாசம் தாங்காமல் படிப்பு என்ற பெயரில் இருவரையும் 2 வருடம் வெளிநாடு துரத்தி விட்டு விட, ஜோயா 3 மாதம் முன்பு தான் தன்னுடைய மனோதத்துவ படிப்பு முடித்து நாடு திரும்பி இருக்கிறாள். ஆர்யன் தந்தை ஒற்றி நரம்பியல் மருத்துவம எடுத்து இன்று நாட்டின் தலை சிறந்த இளம் நரம்பியல் மருத்துவன் என்ற பெயருக்கு சொந்தகாரன் . அத்விக் தாயை ஒற்றி மருத்துவ மேலாண்மை எடுத்தான்.
AJ மருத்துவமனை
மேலாண்மை கட்டிடத்தின் நான்காவது தளம், தளத்தின் நுழைவு வாயில் " Restricted Area " பலகையை தங்கி இருக்க தளத்தின் நீளத்திற்கு இருக்கைகள் போட பட்டிருக்க , வலது பாக்க கண்ணாடி அறை " Director's room " எனும் தக்கையை தாங்கி.
கலந்தாய்வு அறை
மருத்துவமனை இயக்குனர்களின் மாதாந்திர கூட்டத்தொடர் நடை பெற்று கொண்டிருந்தது. பிரகாஷ், லாவண்யா, சிவா, பிரியா , ஆர்யன், அத்விக், ஜோயா, தணிக்கையாளர், உட்பட அனைவரும் இருக்க, அந்த மாத அறிக்கை சமர்ப்பிக்கபட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை அனைத்தும் குறிக்கப்பட்டது. கூட்டம் நிறைவு பெற்றது.
சிவா தான் மகள் ஜோயவை நிறுத்த, ஆர்யன் மற்றும் அத்விக்கும் நின்றனர். கடந்தவாரத்தில் தள்ளிவைக்க பட்டு நடத்த பட்ட அறுவை சிகிச்சை ( postponed surgery ) பற்றி கேட்க. நடந்ததை விளக்கமாக கூற….
"உனக்கு எப்படி தெரிந்தது? "
" அன்றய அறுவை சிகிச்சை பட்டியலில், நிறுத்தப்பட்டது, குறித்து விசாரணை செய்யும் போது தெரிந்தது " என்றாள் தலை குனிந்தவாறு.
" ஊழியர்களின் தனிப்பட்ட நடவடிக்கை கண்கணிப்பது யார்?? "
" ------ "
" தனிப்பட்ட நடவடிக்கை கண்கணிப்பது அவர்கள் தேவையை இயன்றவரை நிறைவு செய்யவும், யாருக்கும் விலை போகாமல் இருப்பதற்கு தான். அவர்களை குறை கூறுவதற்கு அல்ல "
"-------- "
" இது என்னுடைய நிறுவனம் என்று ஒவ்வொரு ஊழியனும் நினைக்கின்ற வரை தான் அது நிறுவனம் ஆக இருக்கும். இது வேலை பார்க்கும் இடம் என்னும் நினைப்பு வந்துவிட்டால் அந்த நிறுவனம் இருந்த அடையாளம் கூட இல்லாமல் போய்விடும். " என்றவர் சிறிது இடைவெளி விட்டு " கவனம். உன்னுடைய சிறு தவறுக்கு விலை ஒரு உயிர் ஆகி விடக்கூடாது. " என்று கூறிவிட்டு சென்றுவிட, ஆர்யன், அத்விக் பார்த்து அவளை அழைத்து செல்லுமாறு கூறிவிட்டு அவ்விடம் விட்டு சென்றான்.
சிவாவுக்கு நன்கு தெரியும் நடந்த அணைத்து விஷயம். ஏன் தவறிழைத்த அவனுக்கு கிடைத்த தண்டனை உட்பட. தன் மகள் தன்னுடைய அணைத்து குணங்களும் கொண்டிருந்தாலும். தவறும் போது ஆசானாக அவளை நெறிபடுத்தவும் தயங்கவில்லை.
காரில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவளை, இரண்டு மூன்று தரம் பார்த்தவாறு காரை செலுத்தி கொண்டு வந்தான் அத்விக்.
" என் மூஞ்சிய ஏன் வேடிக்கை பாக்குற? "
இந்த விஷத்தில் இருந்து அவளை திசை திருப்ப எண்ணி,
" இல்ல எனக்கு க்ரில் சிக்கன் ஓட பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு நீ என்னா சொல்லுவேன்னு தான் பாக்குறேன்? "
" அட கொய்யால, நான் இன்னைக்கு திட்டு வாங்கிட்டு வந்து இருக்கேன், உனக்கு பிரியாணி கேக்குதா டா ? " என்றவாறு வாகனம் ஓட்டுவதை கூட பொருட்படுத்தாது அவன் தலை முடியை பிடித்து ஆட்ட,
" ஏய், விடு டீ என் ஹேர் ஸ்டைல் கலஞ்சுடும்" என்று கத்த,
" கார் ஓட்டுறது விட உன் ஹேர் ஸ்டைல் முக்கியமா என்று கேக்க,
" வரலாறில் அழகு முக்கியம் அமைச்சரே ! "
என்று வடிவேல் சொல்வது போல் சொல்ல…..
இது வரை இருந்த இறுக்கம் கலைத்து சிரித்து விட்டாள். பின்பு "இப்போ எதுக்கு உனக்கு பிரியாணி? " என கேட்க.
" எப்பவும் என்ன திட்டு வாங்க வைக்குற ஒருத்தி இன்னைக்கு, நல்ல வாங்கி கட்டி கிட்ட அதும் என் முன்னாடி எனக்கு ஹாப்பியா இருக்காதா? அதான் " என கூறி தன் பற்கள் அனைத்தையும் காண்பிக்க.
அவனை முறைத்தவள் " என் அடிமை, என் அனுமதி இல்லாம சிரிக்க கூடாதே, இது சரி இல்லையே…. " என்று அவனை ஒரு மார்க்கமா பார்த்து சிரிக்க. அதை கண்டு அவன் ஜெர்க் ஆக, வெளியில் சிரித்தபடி
" அப்படி எல்லாம் இல்ல மா, நான் சும்மா சொன்னேன் " என சமாளிக்க
" நான் நிஜமா சொன்னேன் " என்றாள் ஜோயா
இதை தான் தவளை தன் வாயால் கெடும் என்பது. அத்விக் இப்படி அலறுவதற்கு காரணம் இருக்கிறது. ஜோயா இவ்வாறு சிரித்தாள் அது தனக்கு நல்லதல்ல என்பதை நன்கு உணர்ந்தவன்.
சிறு வயதில் பிரகாஷின் தயார் எதற்கோ அத்விக்கை திட்ட முகத்தை பிடித்து வைத்து கொண்டு அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தான், லாவண்யா மற்றும் பிரியா அன்று இனிப்பு செய்து அனைவரும் கொடுப்பதற்காக தட்டுகளில் நிரப்ப, இடை புகுந்த பத்து வயது ஜோயா தான் சென்று பாட்டி மற்றும் தாத்தாவிற்கு கொடுப்பதாக சொல்ல, இரண்டு தட்டுகளை பெற்று கொண்டு வந்தவள், ஆத்விக்கை துணைக்கு அழைக்க, தட்டுகளின் பாரம் தாங்காமல் உதவிக்கு அழைக்கிறாள் போலும் என்று எண்ணி ஒன்றை வாங்க, அறை வாயில் வரை வந்தவள் அவனை ஒரு முறை பார்த்து விட்டு, தான் கொண்டு வந்ததை தாத்தாவிடம் கொடுத்து விட்டு சென்று விட்டாள். அத்விக் வேறு வழி இன்றி பாட்டியிடம் கொடுத்து விட்டு வெளியேறினான். சற்று பொறுத்து வந்த லாவண்யா இனிப்பில் உப்பு போட்டதற்காக அவனை நன்றாக கவனித்து விட்டு போக, ஒன்றும் புரியாமல் விழித்தபடி இருந்தவனின் அருகில் வந்து அமர்ந்தாள் ஜோயா. தன் தாய் திட்டி விட்டு போனதை பற்றி அவளிடம் புலம்பியவன்
" நான் எங்கு உப்பு போட்டேன் எதற்கு திட்டினார்கள் " என அவளிடம் கேட்க
" எனக்கு நீ வீட்டுப்பாடம் எழுதி தரல இல்ல அதுக்கு தான் "
" அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் " என கேட்க
'அட லூசே ' என்பது போன்ற பார்வை செலுத்தியவள்….
" நான் தான் உப்பு போட்டேன் " என்றாலே பார்க்கலாம்….
" அட கிராதகி " என்றவனை
" நான் சொன்ன நீ செய்யணும் இல்லனா இப்படி தான் "
" நான் உன்னை விட இரண்டு வயது பெரியவன். "
" அதனால் என்ன ?, எனக்கு வாய்த்த அடிமை என்னை விட பெரியவன் " என்று அசால்ட்டாக கூறி விட்டு அந்த இடம் விட்டு ஓடி விட்டாள்.
இது போல் அவனை படுத்தி எடுத்தாலும், எப்பொழுதும் இருவரும் ஒன்றாகவே சுற்றி கொண்டிருக்கின்றனர் இன்று வரை.
-----------------------
AJ குழுமம்
திரு. வெங்கடாச்சலம் கட்டிட துறையில் புகழ் பெற்ற குடும்பத்தை சேர்த்தவர். திரு. தனஜெயன் மருந்தகம் ( pharmacologist ) துறையை சார்ந்தவர். இருவரின் நட்பு
AJ மருத்துவமனைக்கு அடித்தளம் அமைந்தது என்றால், வெங்கடாச்சலத்தின் மகள் பிரியா மற்றும் மருமகன் திரு. சிவா, தனஜெயனின் மகன் பிரகாஷ் மற்றும் மருமகள் லாவண்யா , இந்த நால்வரின் முயற்சியால் இப்பொழுது இந்தியாவில் தலை சிறந்த மருத்துவமனையாக மாறியுள்ளது. மற்ற தொழில் அனைத்தும் சென்னையில் இருந்தாலும், மருத்துவமனைக்காக இந்த இரு குடும்பமும் ஒரே குடும்பமாக கோவையில் வசித்து வருகின்றனர்.
பிரியா தந்தையின் வழியில் கட்டிட பொறியாளர் துறையை தேர்ந்தெடுதார். பிரகாஷ் இருதய அறுவை சிகிச்சை நிபுணர், அவரது நண்பர் சிவா நரம்பியல் சிகிச்சை நிபுணர், நண்பனை காண மருத்துவமனை வருபவர், பின் பிரியா விடம் தன் காதலை பகிர்ந்து அனைவரின் ஆசியுடன் மணந்தார். அவர்களின் ஒரே காதல் சின்னம் தான் ஜோயா. அந்த வீட்டின் கடைசி வாரிசு, பார்க்க அமைதியாக இருந்தாலும் அவள் இருக்கும் இடத்தில் கலவரம் நடந்தால் அதான் காரணம் அவளாக தான் இருக்கும். பிரகாஷ் மற்றும் லாவண்யா திருமணத்திற்கு பின் காதல் என்னும் வகையை சார்ந்தது. இவர்களின் காதல் பரிசு ஆர்யன் மற்றும் அத்விக்.
ஆர்யன் அழுத்தம் நிறைந்தவன். ஒரு வார்த்தை பேச, எதிரில் இருப்பவர் ஒரு மணிநேரம் பேச வேண்டும். இருந்தும் தன் முடிவுகளை வார்த்தைகளில் அன்றி செயலில் வெளிப்படுத்தும் வகையை சேர்ந்தவன். அத்விக் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோற்றம் மட்டும் அன்றி குணமும் ஆர்யன் போல் இருப்பவன். அவன் தமயனுக்கு நேர் எதிர் குணம் கொண்டவன் என்பது குடும்பத்தில் இருப்பவர்கள் தவிர யாருக்கும் அறியா விஷயம். அத்விக், ஜோயா இருவரும் 2வருட இடைவெளி இருந்தாலும் இரட்டை படை போல் ஒற்றி கொண்டே சுற்றும் போர்வழி. இந்த இருவர் அட்டகாசம் தாங்காமல் படிப்பு என்ற பெயரில் இருவரையும் 2 வருடம் வெளிநாடு துரத்தி விட்டு விட, ஜோயா 3 மாதம் முன்பு தான் தன்னுடைய மனோதத்துவ படிப்பு முடித்து நாடு திரும்பி இருக்கிறாள். ஆர்யன் தந்தை ஒற்றி நரம்பியல் மருத்துவம எடுத்து இன்று நாட்டின் தலை சிறந்த இளம் நரம்பியல் மருத்துவன் என்ற பெயருக்கு சொந்தகாரன் . அத்விக் தாயை ஒற்றி மருத்துவ மேலாண்மை எடுத்தான்.
AJ மருத்துவமனை
மேலாண்மை கட்டிடத்தின் நான்காவது தளம், தளத்தின் நுழைவு வாயில் " Restricted Area " பலகையை தங்கி இருக்க தளத்தின் நீளத்திற்கு இருக்கைகள் போட பட்டிருக்க , வலது பாக்க கண்ணாடி அறை " Director's room " எனும் தக்கையை தாங்கி.
கலந்தாய்வு அறை
மருத்துவமனை இயக்குனர்களின் மாதாந்திர கூட்டத்தொடர் நடை பெற்று கொண்டிருந்தது. பிரகாஷ், லாவண்யா, சிவா, பிரியா , ஆர்யன், அத்விக், ஜோயா, தணிக்கையாளர், உட்பட அனைவரும் இருக்க, அந்த மாத அறிக்கை சமர்ப்பிக்கபட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை அனைத்தும் குறிக்கப்பட்டது. கூட்டம் நிறைவு பெற்றது.
சிவா தான் மகள் ஜோயவை நிறுத்த, ஆர்யன் மற்றும் அத்விக்கும் நின்றனர். கடந்தவாரத்தில் தள்ளிவைக்க பட்டு நடத்த பட்ட அறுவை சிகிச்சை ( postponed surgery ) பற்றி கேட்க. நடந்ததை விளக்கமாக கூற….
"உனக்கு எப்படி தெரிந்தது? "
" அன்றய அறுவை சிகிச்சை பட்டியலில், நிறுத்தப்பட்டது, குறித்து விசாரணை செய்யும் போது தெரிந்தது " என்றாள் தலை குனிந்தவாறு.
" ஊழியர்களின் தனிப்பட்ட நடவடிக்கை கண்கணிப்பது யார்?? "
" ------ "
" தனிப்பட்ட நடவடிக்கை கண்கணிப்பது அவர்கள் தேவையை இயன்றவரை நிறைவு செய்யவும், யாருக்கும் விலை போகாமல் இருப்பதற்கு தான். அவர்களை குறை கூறுவதற்கு அல்ல "
"-------- "
" இது என்னுடைய நிறுவனம் என்று ஒவ்வொரு ஊழியனும் நினைக்கின்ற வரை தான் அது நிறுவனம் ஆக இருக்கும். இது வேலை பார்க்கும் இடம் என்னும் நினைப்பு வந்துவிட்டால் அந்த நிறுவனம் இருந்த அடையாளம் கூட இல்லாமல் போய்விடும். " என்றவர் சிறிது இடைவெளி விட்டு " கவனம். உன்னுடைய சிறு தவறுக்கு விலை ஒரு உயிர் ஆகி விடக்கூடாது. " என்று கூறிவிட்டு சென்றுவிட, ஆர்யன், அத்விக் பார்த்து அவளை அழைத்து செல்லுமாறு கூறிவிட்டு அவ்விடம் விட்டு சென்றான்.
சிவாவுக்கு நன்கு தெரியும் நடந்த அணைத்து விஷயம். ஏன் தவறிழைத்த அவனுக்கு கிடைத்த தண்டனை உட்பட. தன் மகள் தன்னுடைய அணைத்து குணங்களும் கொண்டிருந்தாலும். தவறும் போது ஆசானாக அவளை நெறிபடுத்தவும் தயங்கவில்லை.
காரில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவளை, இரண்டு மூன்று தரம் பார்த்தவாறு காரை செலுத்தி கொண்டு வந்தான் அத்விக்.
" என் மூஞ்சிய ஏன் வேடிக்கை பாக்குற? "
இந்த விஷத்தில் இருந்து அவளை திசை திருப்ப எண்ணி,
" இல்ல எனக்கு க்ரில் சிக்கன் ஓட பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு நீ என்னா சொல்லுவேன்னு தான் பாக்குறேன்? "
" அட கொய்யால, நான் இன்னைக்கு திட்டு வாங்கிட்டு வந்து இருக்கேன், உனக்கு பிரியாணி கேக்குதா டா ? " என்றவாறு வாகனம் ஓட்டுவதை கூட பொருட்படுத்தாது அவன் தலை முடியை பிடித்து ஆட்ட,
" ஏய், விடு டீ என் ஹேர் ஸ்டைல் கலஞ்சுடும்" என்று கத்த,
" கார் ஓட்டுறது விட உன் ஹேர் ஸ்டைல் முக்கியமா என்று கேக்க,
" வரலாறில் அழகு முக்கியம் அமைச்சரே ! "
என்று வடிவேல் சொல்வது போல் சொல்ல…..
இது வரை இருந்த இறுக்கம் கலைத்து சிரித்து விட்டாள். பின்பு "இப்போ எதுக்கு உனக்கு பிரியாணி? " என கேட்க.
" எப்பவும் என்ன திட்டு வாங்க வைக்குற ஒருத்தி இன்னைக்கு, நல்ல வாங்கி கட்டி கிட்ட அதும் என் முன்னாடி எனக்கு ஹாப்பியா இருக்காதா? அதான் " என கூறி தன் பற்கள் அனைத்தையும் காண்பிக்க.
அவனை முறைத்தவள் " என் அடிமை, என் அனுமதி இல்லாம சிரிக்க கூடாதே, இது சரி இல்லையே…. " என்று அவனை ஒரு மார்க்கமா பார்த்து சிரிக்க. அதை கண்டு அவன் ஜெர்க் ஆக, வெளியில் சிரித்தபடி
" அப்படி எல்லாம் இல்ல மா, நான் சும்மா சொன்னேன் " என சமாளிக்க
" நான் நிஜமா சொன்னேன் " என்றாள் ஜோயா
இதை தான் தவளை தன் வாயால் கெடும் என்பது. அத்விக் இப்படி அலறுவதற்கு காரணம் இருக்கிறது. ஜோயா இவ்வாறு சிரித்தாள் அது தனக்கு நல்லதல்ல என்பதை நன்கு உணர்ந்தவன்.
சிறு வயதில் பிரகாஷின் தயார் எதற்கோ அத்விக்கை திட்ட முகத்தை பிடித்து வைத்து கொண்டு அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தான், லாவண்யா மற்றும் பிரியா அன்று இனிப்பு செய்து அனைவரும் கொடுப்பதற்காக தட்டுகளில் நிரப்ப, இடை புகுந்த பத்து வயது ஜோயா தான் சென்று பாட்டி மற்றும் தாத்தாவிற்கு கொடுப்பதாக சொல்ல, இரண்டு தட்டுகளை பெற்று கொண்டு வந்தவள், ஆத்விக்கை துணைக்கு அழைக்க, தட்டுகளின் பாரம் தாங்காமல் உதவிக்கு அழைக்கிறாள் போலும் என்று எண்ணி ஒன்றை வாங்க, அறை வாயில் வரை வந்தவள் அவனை ஒரு முறை பார்த்து விட்டு, தான் கொண்டு வந்ததை தாத்தாவிடம் கொடுத்து விட்டு சென்று விட்டாள். அத்விக் வேறு வழி இன்றி பாட்டியிடம் கொடுத்து விட்டு வெளியேறினான். சற்று பொறுத்து வந்த லாவண்யா இனிப்பில் உப்பு போட்டதற்காக அவனை நன்றாக கவனித்து விட்டு போக, ஒன்றும் புரியாமல் விழித்தபடி இருந்தவனின் அருகில் வந்து அமர்ந்தாள் ஜோயா. தன் தாய் திட்டி விட்டு போனதை பற்றி அவளிடம் புலம்பியவன்
" நான் எங்கு உப்பு போட்டேன் எதற்கு திட்டினார்கள் " என அவளிடம் கேட்க
" எனக்கு நீ வீட்டுப்பாடம் எழுதி தரல இல்ல அதுக்கு தான் "
" அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் " என கேட்க
'அட லூசே ' என்பது போன்ற பார்வை செலுத்தியவள்….
" நான் தான் உப்பு போட்டேன் " என்றாலே பார்க்கலாம்….
" அட கிராதகி " என்றவனை
" நான் சொன்ன நீ செய்யணும் இல்லனா இப்படி தான் "
" நான் உன்னை விட இரண்டு வயது பெரியவன். "
" அதனால் என்ன ?, எனக்கு வாய்த்த அடிமை என்னை விட பெரியவன் " என்று அசால்ட்டாக கூறி விட்டு அந்த இடம் விட்டு ஓடி விட்டாள்.
இது போல் அவனை படுத்தி எடுத்தாலும், எப்பொழுதும் இருவரும் ஒன்றாகவே சுற்றி கொண்டிருக்கின்றனர் இன்று வரை.
-----------------------