All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வடிவேலின் மானே..! மயங்குவதேனோ...! கருத்து திரி...

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi bro, super ud bro, shanthiran perapava love pannithaan kuttito porara?
காவு வாங்க.. காத்திருந்தவன்..!
காதல் கொண்டு, அழைத்துச் செல்கிறான்.
காதல் கொண்ட பேதை மனது...!
குழந்தையாக பின்னே செல்கிறது..
எழுதப்பட்ட தீர்ப்பு ஒன்று...!
ஏட்டில் ஏறும், நாளும்வரும்..
காலன் என்ன நினைக்கிறான்...!
காலம் பதில் சொல்லும்..
காதல் வெல்லுமா..? காலன் வெல்வானா...? காத்திருங்கள்...

என்றும் அன்புடன் வடிவேல்..
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெஞ்சம் கொள்ளா நேசம் கொண்டு
நஞ்சையும் நவமணியின் ஒரு மணியாம்
மாணிக்கமாக்கினாள்.....
அள்ளிப்பருகி ஆசுவாசப்படும் வேளையில்
ஆலகால விஷத்தினும் கொடிய நம்பிக்கையில்லா தீர்மானத்தால்....
தாம்பத்தியத்தின் சாகரத்தில் மூழ்கி
தவத்தால் ஈன்ற முத்தைத் துறந்து.....
முறித்தது உறவை மட்டுமல்ல
மூன்றாம் பிறை நிலவாம்
பெண்மையின் முழுநிறமாம்
தன்னையும் தன் சரிபதியின் பிம்பம் கொண்ட
இளாவையும் தான்.....
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மொக்கையா இருந்தா திட்டாதிங்கோ.......
மீ எஸ்கேப்
 

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெஞ்சம் கொள்ளா நேசம் கொண்டு
நஞ்சையும் நவமணியின் ஒரு மணியாம்
மாணிக்கமாக்கினாள்.....
அள்ளிப்பருகி ஆசுவாசப்படும் வேளையில்
ஆலகால விஷத்தினும் கொடிய நம்பிக்கையில்லா தீர்மானத்தால்....
தாம்பத்தியத்தின் சாகரத்தில் மூழ்கி
தவத்தால் ஈன்ற முத்தைத் துறந்து.....
முறித்தது உறவை மட்டுமல்ல
மூன்றாம் பிறை நிலவாம்
பெண்மையின் முழுநிறமாம்
தன்னையும் தன் சரிபதியின் பிம்பம் கொண்ட
இளாவையும் தான்.....

நடந்த சம்பவம் விதியென்று,
மதிகொண்டு அறிந்தபோதிலும்..
ப(ழி)லிகொண்ட பிஞ்சுமனம்
பாழ்பட்டு போனதேனோ..

மங்கையவள் மான்விழியில்
மயங்கிய சிங்கமாக,
கழுத்தறுக்க வந்தவன்- நானே
உன் கரம் பற்றி செல்கிறேன்..

திட்டங்கள் பல தீட்டி- உனை
கவர்ந்திட்ட போதிலும்
காதல் கொண்ட என்- மனது
உனை காத்திடவே துடிக்கிறது...

காலங்கள் சென்றபின்னே
காவியமாகும் நம்- காதல்
காலனின் காலடி தெரியும்- பொழுது
உன் காலடியில் என் உயிர் பிரியும்...

மான் மட்டுமல்ல சிங்கமும் மயங்கும்...

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு தோழி...

என்றும் அன்புடன் வடிவேல்...
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவியுலகின் முடிசூடா மன்னன்
கருநிறம் கொண்ட கண்ணன்
காவியத்தில் கண்ணம் கொண்டு
காகிதத்தில் எண்ணமேற்றும் - எந்தன் அண்ணா
சந்தம் கூடா வாக்கியத்தை
சாந்தம் பொங்க சொல்லிடினும்
தர்க்கம் செய்யும் தங்கத்தை
தாக்கும் உள்ளம் உண்டோ எனக்கு
புடமிட நினைத்தேனே தவிற
புண்படுத்த நினைக்கவில்லை...
இப்படிக்கு .... SJ
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Belated world book day and copyright day
:smiley38:
 
Top