Shrijo
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 8
இருவரும் கிளம்பி ஷாப்பிங்கை முடித்துவிட்டு, நேராக அவர்களது கெஸ்ட் அவுசிற்கு சென்றனர்.
ரெப்ரெஷ் செய்து அமர்ந்தவர்கள், அடுத்த வேலைகளைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.
“கங்கா நம்ம மேரேஜ் பத்தி பேப்பர்ல நாளைக்கு வந்துடும். கூடவே ஒரு மினி ரிசெப்சன் ஏற்பாடு பண்ணி இருக்கேன்.”
“நீங்க என்ன செஞ்சாலும் சரியா இருக்கும் மாமா”
“தேங்க்ஸ் கங்கா. இன்னொரு விஷயம், மாமா கோமால இருந்ததா சில வருஷங்களுக்கு முன்னாடி எனக்கு தெரியும். கூடவே, அவர் உன் பேர்ல எல்லா சொத்தையும், முன்னாடியே என் தாத்தா மூலமா எழுதி வைச்சு இருக்கார், அதாவது அவருக்கும், மயூரிக்கும் பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் சொத்து சேரும். பசங்க மேஜர் ஆனாலும் மயூரி தான் கார்டியன். மயூரி கையெழுத்து இல்லாம அந்த சொத்துக்களை விற்கவோ, மற்றவருக்கு எழுதி கொடுக்கவோ முடியாது. இன்னொன்னு பசங்க விருப்பம் இல்லாமல், மயூரி வற்புறுத்தி, யாருக்கும் சொத்து எழுதிக் கொடுக்க முடியாது. அதுக்கு மயூரிக்கு உரிமை இல்லை. ”
“அன்னிக்கே சொன்னிங்க... ஆனா இதெல்லாம் புது தகவலா இருக்கு”
“ஆமா. இது கூடவே மாமா ஒரு டிவிஸ்ட் அடிச்சு வைச்சு இருக்கார். அதாவது தனது குழந்தைகளுக்கோ, மனைவிக்கோ, யாருக்காவது மரணம் ஏற்பட்டால், அது நிச்சயம் கொலை முயற்சி தான். அதுவும் தன் உடன் பிறந்தவர்கள் தான் காரணம் அப்படினும் சொல்லி, அப்படி தனது மனைவி, மகள், இந்த உயில் எழுதிய பின்பு, தனக்கும், தன் மனைவிக்கும் பிறக்கும் குழந்தை என அனைவரும் இறந்தால், இந்த சொத்துகள் அனைத்தும் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து அதன் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். ஒருவேளை யாரேனும் ஒருவர் இறந்தால், மற்ற இருவரையும் சாரும். மயூரி இறந்தால் சொத்துகள் குழந்தைகளுக்கு சேரும், அதற்கு கார்டியனாக சுப்பிரமணியன் இருப்பார், அப்படின்னு எழுதி வைச்சுட்டு தான் உன் அப்பா முன்னேற்பாடு செஞ்சு வைச்சு இருக்கார்”
“அப்படினா அப்பாக்கு ஏற்கனவே சந்தேகம் வந்து இருக்கு”
“உண்மைதான் கங்கா. உன் அப்பா உன் அம்மாவோட கண்ணீருக்காக குடியை விட முயற்சி செஞ்சு இருக்கார். அவரை ருத்ரனும், விஜயனும், சங்கரனும், கூடவே தாத்தாவும் ஊத்திக் குடுத்து அவரை அடிமையாக்கி வைச்சு இருக்காங்க”
“இது வேற நடந்து இருக்கா?”
“இன்னும் பல ரகசியங்கள் இருக்கு. அது எனக்கும் தெரியாது. கொஞ்சம் பொறுமையா தான் நாம கண்டு பிடிக்கணும்.”
“சரி சொத்துக்காக அப்பாவை கொல்ல திட்டம் போட்டு வேலை செஞ்சவங்க, ஏன் இன்னும் கொல்லாம வைச்சு இருக்காங்க?”
“காரணம் இருக்கு”
‘என்ன காரணம்?”
“உன் அப்பாக்கு உண்மை தெரிஞ்ச விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு, சோ அவரை கொலை பண்ண பிளான் பண்ணி ஆள் அனுப்பி இருக்காங்க. அந்த ஆக்சிடெண்ட்ல அவர் வெளிய விழுந்து தலைல அடிபட கோமாக்கு போய்ட்டார்.”
“---------------------------------------------“
“அப்புறம் அவரை கொல்ல முயற்சி செய்யறப்ப, ஒருத்தர் தடுத்து இருக்காங்க. அது யார்ன்னு தெரில. அவங்க செய்த உதவி, அவரை காப்பாத்தி இருக்கு”
“அப்ப இறந்ததா போட்ட நாடகம்”
“அது சொத்தை அடைய போட்ட பிளான். ஆனா அப்ப உயில் விஷயம் தெரில”
“---------------------------------------------“
“உன்னையும், அம்மாவையும் வீட்டை விட்டு அனுப்பி வைச்சுட்டு சொத்த மாத்தி எழுத அவங்க ஏற்பாடு பண்ணினாங்க”
“---------------------------------------------“
“அதே சமயம் உங்களை அனுப்பும் போது தாத்தா ஊர்ல இல்லை. ஒரு வேலை இருந்து இருந்தா, நிச்சயம் அவர் இங்கதான் கூட்டிக்கிட்டு வந்து இருப்பார்”
“---------------------------------------------“
“நேர்மையின் சிகரமா இருந்த என் தாத்தா, அவங்க சொத்து எழுதறத தடுத்து ஸ்டே வாங்கிட்டார். கூடவே ஒரிஜினல் உயிலை பத்திரப்படுத்தி வைச்சு முழு பொறுப்பையும் என் கிட்ட கொடுத்தார்.”
“---------------------------------------------“
“நானும் உங்களைத் தேட எவ்வளோ முயற்சி செஞ்சேன். எனக்கு உங்க ஊர் தெரியாது. சென்னைன்னு ஒரு தடவை தாத்தா சொன்னார். அவருக்குமே தெரில. அப்புறம் என் பவர யூஸ் பண்ணி கண்டுபிடிக்க ஏற்பாடு பண்ணேன், கண்டுபிடிச்சுட்டேன்”
“---------------------------------------------“
“இப்ப சொத்து அவங்க பேருக்கு போகணும்ன்னா, உன் அப்பா மறுபடியும் பிழைச்சு வரணும். சோ அவரை டிரீட்மென்ட் குடுத்து பார்த்துக்கறாங்க”
“---------------------------------------------“
“இன்னொன்னு, இப்ப தாத்தா, பாட்டி ரெண்டு பேரும் இல்லை. இவங்க மூனு பேரையும் கண்காணிச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை”
“சரி இப்ப அப்பாவ நாம எப்படி கண்டுபிடிக்கிறது?”
“எனக்கு தெரிஞ்ச எல்லா ஆஸ்பிட்டல்லையும் விசாரிச்சுட்டேன், மாமா எதுலையுமே இல்ல. சோ அவர் இருக்கற இடம் இன்னும் தெரில”
“இப்ப எப்படி கண்டுபிடிக்கிறது?”
“ஒரு வழி தான் இருக்கு. அது இந்த சொத்துக்களோட உரிமையை நீ எடுத்துக்கனும்.”
“இது என் மேல அவங்களுக்கு இன்னும் கோபத்தை அதிகரிக்கும்”
“கங்கா, இந்த கூட்டத்தோட அச்சாணி யார் தெரியுமா? ருத்ரன்”
“சரி... அவர் தான் ஏற்கனவே என் மேல கொலை வெறில இருக்காரே”
“ஆமா. அவர் அடைய நினைச்ச சொத்து முழுக்க, இப்ப அவர் மருமக வசம். இப்ப அது, அவர் கைலன்னு, அவருக்கு புரிஞ்சா போதும்”
“எனக்கு புரில மாமா”
“இத்தனை சொத்தும் யாருக்காக அவர் அடிச்சு பிடுங்க முயற்சி பண்ணார்?”
“உங்களுக்காக!”
“சோ இப்ப உங்கிட்ட இருந்தாலும் சரி, என்கிட்ட இருந்தாலும் சரி சொத்து யாருக்கு?”
“உங்களுக்கு தான்”
“இதை அவர் தெரிஞ்சுக்கனும்”
“அதான் எப்படி?”
“முதல்ல, நீ சார்ஜ் எடுத்ததும், பிரச்சனையை கிளப்ப ஏற்பாடு செய்வாங்க, அந்த பிரச்சனையைத் தீர்க்க நான் ஊர்ல இருக்கமாட்டேன், நீ கூப்பிடப் போறது ருத்ரனை”
“புரியுது, இப்ப அவரை வைச்சு பிரச்சனை வராம தடுக்கற மாதிரி அவர் மனசுல நிக்கனும், குறிப்பா இந்த சொத்து அவரோடதுன்னு சொல்லாம சொல்லிகாட்டனும், இதை வைச்சு அவரை அந்த கூட்டத்துல இருந்து பிரிக்கனும்”
“அதே தான்”
“அதே சமயம், அவர் மூலமா அப்பாவைக் கண்டு பிடிக்கணும்”
“கரெக்ட் கங்கா. ஏன்னா, நாங்க இத்தனை வருஷமா தேடியும் அவரை கண்டுபிடிக்க முடில, கடைசியா பாட்டி இறக்கும் போது தான் அவர் உயிரோட இருக்கற விஷயம் நூறு சதவிதம் உறுதி ஆச்சு”
“இப்ப அவங்களை விட்டா வேற வழி இல்ல”
“ஆமா”
“சரி மாமா. நீங்க சொன்ன மாதிரியே செய்ய நான் ரெடி”
“வெரிகுட் செல்லம். இப்ப வேற பேசுவோம்”
“வேற என்ன?”
“எத்தனை குழந்தை பெத்துக்கலாம்? என்ன படிக்க வைக்கலாம்? இப்படி ஏதாவது” என்று அவன் கண்ணடித்துக்கொண்டே கேட்டான்.
அவள் ஏதாவது துடுக்குத்தனமாக சொல்வாள் என்று எதிர் பார்த்த சாகரனுக்கு, அவள் வெட்கம் பூஞ்சாரலாய் இருந்தது.
மெல்ல அவளருகே நெருங்கி அமர்ந்தவன், அவளைத் தன் மீது சாய்த்துக்கொண்டான்.
அவன் நெஞ்சில் சாய்ந்து அமர்ந்தவளின் கையை எடுத்து, மருதாணியில் சிவந்து இருந்த உள்ளங்கையில் முத்தமிட்டான்.
மீசையின் உரசலில் சிலிர்த்துக் கண்கள் மூடியவள், அவனை இன்னும் இறுக அணைத்தாள்.
மெல்ல அவள் முகம் நிமிர்த்தியவன், “பேசணும் அம்லு..... நாம நிறைய பேசணும்... குறிப்பா நம்ம காதல் கதையை....” என்று சொல்லிக்கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
பிரிய மாட்டேன் என்று அடம் படித்த இமைகளில் முத்தமிட்டவன், மெல்ல காதருகே குனிந்து, “மிஸ் யூ பேட்லி” என்று சொல்லிக் கண்ணீர் மல்க அவளை இறுக்கி அணைத்தான்.
அவளுக்கும் அந்த நொடி அந்த அணைப்புத் தேவையாக இருக்க, அதில் அடங்கிப்போனாள்.
சொல்லொண்ணாத் துயரங்கள் பல இருக்க, அனைத்தும் அந்த நொடி மறந்து போனது இருவருக்கும்.
இருவருக்கும் பிடித்தமான பாடல் எங்கோ ஒலிக்க,
இருவரும் பாடல் வரிகளில் மூழ்க ஆரம்பித்தனர்.
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா!
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா!
தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா!
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா!
(ஒரு கிளி )
நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா!
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா!
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி!
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா!
(ஒரு கிளி )
இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா!
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா!
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா!
(ஒரு கிளி)
அலை கரை தொடும்....
இருவரும் கிளம்பி ஷாப்பிங்கை முடித்துவிட்டு, நேராக அவர்களது கெஸ்ட் அவுசிற்கு சென்றனர்.
ரெப்ரெஷ் செய்து அமர்ந்தவர்கள், அடுத்த வேலைகளைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.
“கங்கா நம்ம மேரேஜ் பத்தி பேப்பர்ல நாளைக்கு வந்துடும். கூடவே ஒரு மினி ரிசெப்சன் ஏற்பாடு பண்ணி இருக்கேன்.”
“நீங்க என்ன செஞ்சாலும் சரியா இருக்கும் மாமா”
“தேங்க்ஸ் கங்கா. இன்னொரு விஷயம், மாமா கோமால இருந்ததா சில வருஷங்களுக்கு முன்னாடி எனக்கு தெரியும். கூடவே, அவர் உன் பேர்ல எல்லா சொத்தையும், முன்னாடியே என் தாத்தா மூலமா எழுதி வைச்சு இருக்கார், அதாவது அவருக்கும், மயூரிக்கும் பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் சொத்து சேரும். பசங்க மேஜர் ஆனாலும் மயூரி தான் கார்டியன். மயூரி கையெழுத்து இல்லாம அந்த சொத்துக்களை விற்கவோ, மற்றவருக்கு எழுதி கொடுக்கவோ முடியாது. இன்னொன்னு பசங்க விருப்பம் இல்லாமல், மயூரி வற்புறுத்தி, யாருக்கும் சொத்து எழுதிக் கொடுக்க முடியாது. அதுக்கு மயூரிக்கு உரிமை இல்லை. ”
“அன்னிக்கே சொன்னிங்க... ஆனா இதெல்லாம் புது தகவலா இருக்கு”
“ஆமா. இது கூடவே மாமா ஒரு டிவிஸ்ட் அடிச்சு வைச்சு இருக்கார். அதாவது தனது குழந்தைகளுக்கோ, மனைவிக்கோ, யாருக்காவது மரணம் ஏற்பட்டால், அது நிச்சயம் கொலை முயற்சி தான். அதுவும் தன் உடன் பிறந்தவர்கள் தான் காரணம் அப்படினும் சொல்லி, அப்படி தனது மனைவி, மகள், இந்த உயில் எழுதிய பின்பு, தனக்கும், தன் மனைவிக்கும் பிறக்கும் குழந்தை என அனைவரும் இறந்தால், இந்த சொத்துகள் அனைத்தும் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து அதன் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். ஒருவேளை யாரேனும் ஒருவர் இறந்தால், மற்ற இருவரையும் சாரும். மயூரி இறந்தால் சொத்துகள் குழந்தைகளுக்கு சேரும், அதற்கு கார்டியனாக சுப்பிரமணியன் இருப்பார், அப்படின்னு எழுதி வைச்சுட்டு தான் உன் அப்பா முன்னேற்பாடு செஞ்சு வைச்சு இருக்கார்”
“அப்படினா அப்பாக்கு ஏற்கனவே சந்தேகம் வந்து இருக்கு”
“உண்மைதான் கங்கா. உன் அப்பா உன் அம்மாவோட கண்ணீருக்காக குடியை விட முயற்சி செஞ்சு இருக்கார். அவரை ருத்ரனும், விஜயனும், சங்கரனும், கூடவே தாத்தாவும் ஊத்திக் குடுத்து அவரை அடிமையாக்கி வைச்சு இருக்காங்க”
“இது வேற நடந்து இருக்கா?”
“இன்னும் பல ரகசியங்கள் இருக்கு. அது எனக்கும் தெரியாது. கொஞ்சம் பொறுமையா தான் நாம கண்டு பிடிக்கணும்.”
“சரி சொத்துக்காக அப்பாவை கொல்ல திட்டம் போட்டு வேலை செஞ்சவங்க, ஏன் இன்னும் கொல்லாம வைச்சு இருக்காங்க?”
“காரணம் இருக்கு”
‘என்ன காரணம்?”
“உன் அப்பாக்கு உண்மை தெரிஞ்ச விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு, சோ அவரை கொலை பண்ண பிளான் பண்ணி ஆள் அனுப்பி இருக்காங்க. அந்த ஆக்சிடெண்ட்ல அவர் வெளிய விழுந்து தலைல அடிபட கோமாக்கு போய்ட்டார்.”
“---------------------------------------------“
“அப்புறம் அவரை கொல்ல முயற்சி செய்யறப்ப, ஒருத்தர் தடுத்து இருக்காங்க. அது யார்ன்னு தெரில. அவங்க செய்த உதவி, அவரை காப்பாத்தி இருக்கு”
“அப்ப இறந்ததா போட்ட நாடகம்”
“அது சொத்தை அடைய போட்ட பிளான். ஆனா அப்ப உயில் விஷயம் தெரில”
“---------------------------------------------“
“உன்னையும், அம்மாவையும் வீட்டை விட்டு அனுப்பி வைச்சுட்டு சொத்த மாத்தி எழுத அவங்க ஏற்பாடு பண்ணினாங்க”
“---------------------------------------------“
“அதே சமயம் உங்களை அனுப்பும் போது தாத்தா ஊர்ல இல்லை. ஒரு வேலை இருந்து இருந்தா, நிச்சயம் அவர் இங்கதான் கூட்டிக்கிட்டு வந்து இருப்பார்”
“---------------------------------------------“
“நேர்மையின் சிகரமா இருந்த என் தாத்தா, அவங்க சொத்து எழுதறத தடுத்து ஸ்டே வாங்கிட்டார். கூடவே ஒரிஜினல் உயிலை பத்திரப்படுத்தி வைச்சு முழு பொறுப்பையும் என் கிட்ட கொடுத்தார்.”
“---------------------------------------------“
“நானும் உங்களைத் தேட எவ்வளோ முயற்சி செஞ்சேன். எனக்கு உங்க ஊர் தெரியாது. சென்னைன்னு ஒரு தடவை தாத்தா சொன்னார். அவருக்குமே தெரில. அப்புறம் என் பவர யூஸ் பண்ணி கண்டுபிடிக்க ஏற்பாடு பண்ணேன், கண்டுபிடிச்சுட்டேன்”
“---------------------------------------------“
“இப்ப சொத்து அவங்க பேருக்கு போகணும்ன்னா, உன் அப்பா மறுபடியும் பிழைச்சு வரணும். சோ அவரை டிரீட்மென்ட் குடுத்து பார்த்துக்கறாங்க”
“---------------------------------------------“
“இன்னொன்னு, இப்ப தாத்தா, பாட்டி ரெண்டு பேரும் இல்லை. இவங்க மூனு பேரையும் கண்காணிச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை”
“சரி இப்ப அப்பாவ நாம எப்படி கண்டுபிடிக்கிறது?”
“எனக்கு தெரிஞ்ச எல்லா ஆஸ்பிட்டல்லையும் விசாரிச்சுட்டேன், மாமா எதுலையுமே இல்ல. சோ அவர் இருக்கற இடம் இன்னும் தெரில”
“இப்ப எப்படி கண்டுபிடிக்கிறது?”
“ஒரு வழி தான் இருக்கு. அது இந்த சொத்துக்களோட உரிமையை நீ எடுத்துக்கனும்.”
“இது என் மேல அவங்களுக்கு இன்னும் கோபத்தை அதிகரிக்கும்”
“கங்கா, இந்த கூட்டத்தோட அச்சாணி யார் தெரியுமா? ருத்ரன்”
“சரி... அவர் தான் ஏற்கனவே என் மேல கொலை வெறில இருக்காரே”
“ஆமா. அவர் அடைய நினைச்ச சொத்து முழுக்க, இப்ப அவர் மருமக வசம். இப்ப அது, அவர் கைலன்னு, அவருக்கு புரிஞ்சா போதும்”
“எனக்கு புரில மாமா”
“இத்தனை சொத்தும் யாருக்காக அவர் அடிச்சு பிடுங்க முயற்சி பண்ணார்?”
“உங்களுக்காக!”
“சோ இப்ப உங்கிட்ட இருந்தாலும் சரி, என்கிட்ட இருந்தாலும் சரி சொத்து யாருக்கு?”
“உங்களுக்கு தான்”
“இதை அவர் தெரிஞ்சுக்கனும்”
“அதான் எப்படி?”
“முதல்ல, நீ சார்ஜ் எடுத்ததும், பிரச்சனையை கிளப்ப ஏற்பாடு செய்வாங்க, அந்த பிரச்சனையைத் தீர்க்க நான் ஊர்ல இருக்கமாட்டேன், நீ கூப்பிடப் போறது ருத்ரனை”
“புரியுது, இப்ப அவரை வைச்சு பிரச்சனை வராம தடுக்கற மாதிரி அவர் மனசுல நிக்கனும், குறிப்பா இந்த சொத்து அவரோடதுன்னு சொல்லாம சொல்லிகாட்டனும், இதை வைச்சு அவரை அந்த கூட்டத்துல இருந்து பிரிக்கனும்”
“அதே தான்”
“அதே சமயம், அவர் மூலமா அப்பாவைக் கண்டு பிடிக்கணும்”
“கரெக்ட் கங்கா. ஏன்னா, நாங்க இத்தனை வருஷமா தேடியும் அவரை கண்டுபிடிக்க முடில, கடைசியா பாட்டி இறக்கும் போது தான் அவர் உயிரோட இருக்கற விஷயம் நூறு சதவிதம் உறுதி ஆச்சு”
“இப்ப அவங்களை விட்டா வேற வழி இல்ல”
“ஆமா”
“சரி மாமா. நீங்க சொன்ன மாதிரியே செய்ய நான் ரெடி”
“வெரிகுட் செல்லம். இப்ப வேற பேசுவோம்”
“வேற என்ன?”
“எத்தனை குழந்தை பெத்துக்கலாம்? என்ன படிக்க வைக்கலாம்? இப்படி ஏதாவது” என்று அவன் கண்ணடித்துக்கொண்டே கேட்டான்.
அவள் ஏதாவது துடுக்குத்தனமாக சொல்வாள் என்று எதிர் பார்த்த சாகரனுக்கு, அவள் வெட்கம் பூஞ்சாரலாய் இருந்தது.
மெல்ல அவளருகே நெருங்கி அமர்ந்தவன், அவளைத் தன் மீது சாய்த்துக்கொண்டான்.
அவன் நெஞ்சில் சாய்ந்து அமர்ந்தவளின் கையை எடுத்து, மருதாணியில் சிவந்து இருந்த உள்ளங்கையில் முத்தமிட்டான்.
மீசையின் உரசலில் சிலிர்த்துக் கண்கள் மூடியவள், அவனை இன்னும் இறுக அணைத்தாள்.
மெல்ல அவள் முகம் நிமிர்த்தியவன், “பேசணும் அம்லு..... நாம நிறைய பேசணும்... குறிப்பா நம்ம காதல் கதையை....” என்று சொல்லிக்கொண்டே அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
பிரிய மாட்டேன் என்று அடம் படித்த இமைகளில் முத்தமிட்டவன், மெல்ல காதருகே குனிந்து, “மிஸ் யூ பேட்லி” என்று சொல்லிக் கண்ணீர் மல்க அவளை இறுக்கி அணைத்தான்.
அவளுக்கும் அந்த நொடி அந்த அணைப்புத் தேவையாக இருக்க, அதில் அடங்கிப்போனாள்.
சொல்லொண்ணாத் துயரங்கள் பல இருக்க, அனைத்தும் அந்த நொடி மறந்து போனது இருவருக்கும்.
இருவருக்கும் பிடித்தமான பாடல் எங்கோ ஒலிக்க,
இருவரும் பாடல் வரிகளில் மூழ்க ஆரம்பித்தனர்.
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா!
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா!
தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா!
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா!
(ஒரு கிளி )
நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா!
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா!
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி!
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா!
(ஒரு கிளி )
இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா!
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா!
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா!
(ஒரு கிளி)
அலை கரை தொடும்....