All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யுனோவா காரின் பின்புறம் வைஷூ மற்றும் ஷாலுவும், அதன் பின்புறம் கலையரசி மற்றும் அவரின் கணவரும், முன் சீட்டில் விஷ்ணு என அமர்ந்திருந்தனர். ஓட்டுனர் சீட் மட்டும் காலியாக இருந்தது.


அனைவரும் காரில் ஏறியும் இன்னும் தன் மூத்த மகனை காணாது “விஷ்ணு அண்ணன எங்க, ஏற்கனவே நேரம் ஆச்சு, இவன் வேற எப்ப பாரு அந்த போனவே காதுல வச்சிக்கிட்டு” என்று மகனை நினைத்து சலித்துக் கொண்டே விஷ்ணுவிடம் கேட்டார்.


“தெரியலம்மா, நா காருல ஏறும் போது போன் கால் வந்துச்சு, பேசிட்டே நடந்து போனாறு” என்று சொல்லும் போதே காரில் ஏறி இருந்தான். கலையரசி விஷ்ணுவிடம் மூத்த மகனை பற்றி கேட்கும் போதே இன்ப அதிர்ச்சியில், இனம் புறியாத படபடப்புடன் அத்தை மற்றும் மாமா முன் எந்த விதமான முக மாறுதலையும் காட்ட இயலாது அமர்ந்திருந்தாள்.


“அத்தான் வந்துருக்காங்கனு இந்த வைஷூ கூட சொல்லவே இல்ல, இருக்கு அவளுக்கு” என்று திட்டிக் கொண்டிருந்தாள்.


“ஆமா அவ கிட்ட நீ போய் சொன்னியா இதுக்கு முன்னாடி, நா உன் அண்ணன லவ் பண்றேனு, சொல்லிருந்தேனா அவ உன்கிட்ட சொல்லிருப்பா” என்றது அவளின் மனசாட்சி.


“இன்னைக்கு கண்டிப்பா வைஷூ கிட்ட நா லவ் பண்றத சொல்லனும் “ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். அதை கண்டு மனசாட்சி தலையில் அடித்துக் கொண்டது “கர்மம் கர்மம், லவ் பண்றத மொத உன் அத்தான் கிட்ட சொல்லு, அத விட்டுட்டு அத்த மக கிட்ட சொல்லுதான்” என்று.


அதற்குள் காரில் ஏறிய கலையரசி “எங்கடா போன, எப்ப பாத்தாலும் போன் தானா, சீக்கிரம் கிளம்பு டா, அப்ப தான் ஒன்பது மணிக்குள்ள அங்க போய் சேர முடியும்” என்றார்.


தூரத்தில் இருந்தே ஷாலுவை பார்த்து விட்டு அவளின் முன் தான் இருக்கும் போது முக மாறுதலையும் காண வேண்டும், தன்னை அடையாளம் கண்டு கொள்வாளா, தன்னை அவளிற்கும் விருப்பம் உள்ளதா என்று பல விதமாக யோசித்து தள்ளி நின்று கொண்டிருந்தான். அனைவரும் காரில் ஏறியும் சிறிது தாமதமாகவே வந்தான்.


அவனின் எண்ணங்களை பொய்யாக்காமல் சிறு எதிர் பார்ப்பும், சிறு அதிர்வு சுமந்த முகமும், கண்ணில் ஒருவித நிம்மதியுடனும் தன்னை பார்த்த அந்த ஓரிரு நிமிடங்களில் அவளின் முக மாறுதலை கண்டான்.


கலையரசி பேசுவதை எல்லாம் காதில் வாங்காது ரிவர்வியூ கண்ணாடியை சரி செய்யும் சாக்கில் அதில் ஷாலுவின் முகம் விழ வைத்து, அவளை பார்த்து வசிகர புன்னகையுடன் கண்சிமிட்டி காரை கிளப்பி திருமங்கலத்தில் இருந்து சுமார் இரண்டு மணி நேர தூரத்தில் மேலூரை தாண்டி உள்ள ப்ரான் மலையை நோக்கி காரை லாவகமாக செலுத்திக் கொண்டிருந்தான் தர்ஷன்.



“மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்
கோபத்தில் உள்ள அன்பையும்
யாரால்
உணர முடிகிறதோ
அவர்களே
நமக்கு கிடைத்த
உன்னதமான உறவு”




பூக்கும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் நட்பூஸ்,

என்னோட அடுத்த அப்டேட் போட வந்துட்டேன், படிச்சுட்டு கமெண்ட்ஸ் ப்ளீஸ்.


http://srikalatamilnovel.com/community/threads/ரேவதியின்-ஒரு-புன்னகைப்-பூவே-கருத்துத்-திரி.414/

இப்படிக்கு அன்புடன் உங்கள் ReY babyma 😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 8:



திகைத்த நிலையில் அமர்ந்திருந்த ஷாலினியை ரிவர்வியூ கண்ணாடியில் கண்டவன் கண்சிமிட்டி விட்டு காரை கிளப்பியவன் கைகளில் சீறிப் பாய்ந்தது. தர்ஷன் தன்னுடைய சந்தோஷம், கோபம், அனைத்தையும் தன் காரின் வேகத்தில் தான் காண்பிப்பான்.


வைஷூவின் பேச்சில் தற்காலிகமாக தன் கவனத்தை செலுத்தினாள். ஆனால் ஓர விழிகளில் தர்ஷனை பார்த்து கொண்டிருந்தாள். இதை வைஷுவும்,தர்ஷனும் கண்டும் காணாமல் கவனித்து கொண்டு தான் இருந்தனர். ஓரளவிற்கு மேல் சோதிக்காமல் வைஷூ தான் அமைதியாக வேண்டியதாகியது.


ஒரு மணி நேர பயணம் முடிந்திருந்த நிலையில் கலையரசி “ராசு கொஞ்சம் கடை பக்கம் காரை நிறுத்து பா, நம்ம அங்க போக இன்னும் ஒரு மணி நேரம் மேல ஆகும், அப்பறம் கோயிலுக்கு மலைல ஏற ஆரம்பிச்சுட்டா சாப்ட இன்னும் நேரம் ஆகிடும்” என்று சொன்னதும் சிறு நிமிடத்தில் காரை நிறத்தினான்.


“அம்மா, இறங்கிக்கோங்க, இத விட்டு அடுத்து கடை கஷ்டம் தான், சரியான காடு” என்று தன் சித்தப்பாவை பார்த்து சொல்லிக் கொண்டே இறங்கினான்.


காரில் இருந்து இறங்கிய கலையரசி,வைஷூ,ஷாலு ஒரு புறமும் மற்றொரு புறம் கலையரசியின் கணவர்,விஷ்னு,தர்ஷன் அமர்ந்திருந்தனர்.


“உங்க தம்பி குடும்பம் கிளம்பிட்டாங்களானு கேட்டீங்களா, எங்க வராங்கனு கேளுங்க” என்றார். “பக்கத்து வந்துட்டாங்களாம், நம்ம அங்க போறதுக்குள்ள வந்துடுவாங்க” என்று கலையரசிக்கு பதில் அளித்து விட்டு அனைவருக்கும் சாப்பிட ஆர்டர் செய்தார்.


வைஷூவிடம் ஓரிரு வார்த்தை பேசியபடி காபியை அருந்திக் கொண்டிருந்த ஷாலுவை கண்டவன் விட்டால் தன் அத்தை மகள் பேசமாட்டாள் என்பதை உணர்ந்து “அம்மு, எப்டி இருக்க,காலேஜ் முடிய போகுதுல, அடுத்ததா என்ன பண்றதா ப்ளான் பண்ணிருக்க” என்றவாறு பேச்சை தொடர்ந்தான்.


“ஹான், நல்லா இருக்கேன் அத்தான், ஆமா, நெக்ஸ்ட் ஜாப் தான் போகனும், இல்லனா மாஸ்டர் டிகிரி போடனும்” என பதில் அளித்து விட்டு பேச்சை தொடர்ந்தாள்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பி எப்பொழுதும் போல் பேச ஆரம்பித்தாள். அவளின் நேர் எதிரில் அமர்ந்திருந்த தர்ஷன் அவள் பேசும் போது காதணி அசைவும், இடையில் முன் நெற்றியில் விழும் முடியை காதோதரம் ஒதுக்கிய பாங்கும், எதார்த்தமாக தன்னை பார்ப்பதும், தான் பார்ப்பது தெரிந்தவுடன் சட்டென தன் நுனி நாக்கை கடிப்பதும் என அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்தும் பார்க்காத படியும் ரசித்துக் கொண்டிருந்தான்.


ஒரு வழியாக சாப்பிட்டு முடிந்ததும் காரை கிளப்பியவன் அடுத்த ஒரு மணி நேர பயணத்ததை குறைத்து விரைவில் பிரான் மலையை அடைந்தனர்.


“அப்பாடா எவ்வளவு பெருசுசு… .இதுல தான் நம்ம ஏறனுமா” என்று தன் விழிகளை அகல விரித்தாள் ஷாலினி. விவரம் தெரிந்து அவள் வரும் முதல் தடவை இது தான்.


“ஹையோ கொல்றாலே, உன்னய யாருடி இவ்வளவு அழகா இருக்க சொன்னது??” என்று இந்த இரண்டு மணி நேரத்தில் இரண்டாயிரம் தடவை கேட்டிருப்பான்.


“ஆமா டா, பார்க்க தான் பெரிசா இருக்கும் ஆனா ஏறும் போது ஒன்னும் தெரியாது,நீ இப்ப தான முதல் தடவை வர. இந்த கோயில்ல இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா, நம்ம கோயிலயும் தாண்டி மேல தர்கா இருக்கு, இங்க ஹிந்து வரத விட முஸ்லிம்ஸ் தான் நிறைய வருவாங்க, வந்து நைட் தங்கிட்டு மறு நாள் தான் கிளம்புவாங்க, அப்படி அவங்க தங்குறப்போ என்ன நினைச்சு அவங்க வேண்டிக்கிறாங்களோ அது கண்டிப்பா நடந்துருக்குனு சொல்வாங்க” என்று விளக்கம் சொல்ல ஆரம்பித்தார் கலையரசியின் கணவர்.



தன் மாமா சொல்வதை கேட்டுக்கொண்டே சுற்றிலும் பார்வையை சுழற்றினாள். பச்சை பசேல் என்று வளர்ந்து இருந்த மரங்களும், பத்து அடி தூரம் மட்டுமே சிமெண்ட் போடப்பட்ட படிகளும், அதனை அடுத்து மலை ஏறுவதற்கான பாதை தொடங்கியது. பின்புறம் திரும்பியவள் சிறு பிள்ளை போல் குதூகலித்தாள். “ஹை யா, எவ்வளவு மாங்காய் மரம், தென்னை மரம், செம்மையா இருக்குல” என்று பேசியவாறே திரும்பினாள்.



காரில் இருந்து இறங்கியவன் வலது காலை கீழே ஊன்றி இடது காலை சாய்வாக வலது காலின் புறம் ஊன்றி, கைகளை மார்பின் புறம் குறுக்காக கட்டிக் கொண்டு பார்த்து கொண்டிருந்தான் தரஷன்.


ஒரு நிமிடம் ஜெர்க் ஆனவள் மறுநிமிடமே சகஜ நிலைக்கு திரும்பி, “அங்க போகலாமா, அதான் இன்னும் மாமா எல்லாரும் வரலைல அத்தை” என்று கலையரசியிடம் கேட்டாள்.


“இல்லடா அவங்க பக்கத்துல வந்துட்டாங்க, நம்ம மூணு மணிக்கு எல்லாம் கீழே இறங்கிடுவோம், அதுக்கு அப்பறம் போகலாம்” என்று சொல்லும் போதே வைஷூ தர்ஷனை நோக்கி கண் காட்டினாள். முதலில் புறியாமல் இருந்தாள் புறிந்தவுடன் தர்ஷனிடம் சென்று நின்றாள்.


“அத்தான் அங்க போகலாமா ப்ளீஸ், நீங்க சொன்னா மாமா கண்டிப்பா நோ சொல்ல மாட்டாங்க” என்று கண்ணை சுருக்கி கெஞ்சும் குரலில் கேட்கும் போது மாட்டேன் என்றா சொல்வான். அவள் அழகில் மயங்கி இருந்தவன், காரில் ஏறியதில் இருந்து யாரோ ஒருவரை போல் தயக்கத்துடன் இருந்த பொழுது மனம் சிறிது இருந்த சுனக்கம் இப்பொழுது மறைந்தது.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“மேடத்துக்கு இப்ப தான் இந்த அத்தான் கண்ணுக்கு தெரிரேனா” என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறங்கினான். அதற்கு பதில் சொல்லாமல் தலை குனிய போனவளை “அம்மு என் கிட்ட பேசுறதுக்கு என்ன தயக்கம்” என்று கேட்ட நொடி சடாரென நிமிர்ந்தாள்.


“சரி சரி முழிக்காத,எப்பயும் போல இரு அம்மு, எவ்வளவு வயசு வந்துட்டாளும் நா உன்னோட அத்தான் தான், நீ என்னோட அத்தை மகள் தான்” என்று சொன்னான். ஏதோ அவள் தன்னிடம் காட்டும் தயக்கம் பிடிக்கவில்லை.


“கீழ இயங்கும் போது கண்டிப்பா போகலாம், அதுக்கு நான் கேரண்டி” என்றான்.


இங்கு இவர்கள் இருவரையும் கவனித்து கொண்டு இருந்த கலையரசியின் கணவர் “என்னவாம் நானும் வந்ததுல இருந்து பாக்குறேன், உன்னோட பெரிய மகன் பார்வையே சரி இல்லையே, அம்முவ பார்வைலையே முழுங்கிடுவான் போல, இந்த வாலஉ வாலு என்னனா இவன பார்க்குறதுக்கு முன்ன நல்லா இருந்துச்சு, இப்ப பேய் அடுச்ச மாதிரி ஒரு தினுசா இருக்கு” என்று கலையரசியிடம் விசாரித்துக் கொண்டு இருந்தார்.



“நீங்க வேற சும்மா இருங்க அவனுக்கு பாம்பு காது, அப்பறம் உங்கள விட மாட்டான்” என்று சொல்லும் போதே

ஷாலுவிடம் பேசியபடி சித்தப்பாவின் அருகில் வந்தவன் “என்ன ம்மா உங்க லவ்ஸ் இங்கயுமா, கோவில்ல வச்சு ரொமான்ஸ் அதும் பக்கத்துல பிள்ளைங்க இருக்கும் போதே” என்று வம்பை தொடங்கினான்.


“நான் சொன்னேன்ல இவன் கிட்ட மாட்டுனா ஏடா கூடாமா பேசுவானு, அனுபவிங்க” என்பது போல் பார்வையை செலுத்தியவர் காரில் இருந்து பொருட்களை எடுக்கும் சாக்கில் அகன்றார்.


“ஏண்டி இந்த அத்தான் இப்டி மாமாவ பேசுறாரு, அதும் எல்லாரையும் வச்சிக்கிட்டு” என்று வைஷூவின் காதை கடித்தாள் ஷாலு.


“விடுடி சும்மா ஜாலிக்கு தான, அப்பா இதெல்லாம் கண்டுக்க மாட்டாரு” என்று பேசும் பொழுதே சர்ரென ஒரு கார் இவர்களின் அருகில் நின்றது.



காரில் இருந்து இறங்கிய ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு ஆணும், அவரை விட சில வயது குறைவுள்ள ஒரு பெண்மணியும் இறங்கினர்.



“என்ன அண்ணா ரொம்ப நேரம் ஆகிடுச்சா” என்றபடி இறங்கியவர் கலையரசியின் கணவர் ராஜசேகரின் தம்பி . அவரை தொடர்ந்து வந்த அவரின் மனைவியும் “நல்லா இருக்கீங்களா மாமா, அக்கா” என்று வந்தவரின் கண்கள் ஷாலினியை அளந்தது.


அவரின் பார்வையை புரிந்து கொண்டவர் “இது என்னோட அண்ணா மக, லீவுக்காக வந்துருக்கா, நீங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது பார்த்துருப்பீங்க” என்று பதில் அளித்தார் கலையரசி.


இறுதியில் காரில் இருந்து இறங்கினான் இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க அழகான இளைஞன். “என்னடா அங்கயே நின்னுட்டு இருக்க, வா” என்று தன் மகனை அழைத்தார். இறங்கி வந்தவனின் பார்வை ஷாலு மேலே படிவதை உணர்ந்த தர்ஷன் எழுந்த கோபத்தை கட்டுப் படுத்த இயலாது, “வைஷூ, அம்மு வாங்க, நாங்க முன்னாடி நடந்துட்டு இருக்கோம் வாங்க ம்மா நீங்க” என்று நடந்தான்.


“இவன் வருவாங்கனு எனக்கு தெரியாதுடி, ஒரு அண்ணன் மாதிரியா இருக்கான்” என்று வைஷூவும் முன்னால் நடக்க தொடங்கினாள்.


இன்னும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவளை “அம்மு உனக்கு தனியா வேற சொல்லனுமா வா போகலாம்” என்று கையை பிடித்தான்.


முதல் ஸ்பரிசம் பெண்ணவளை என்னவோ செய்ய மந்திரத்திற்கு கட்டு பட்டவள் போல் அவனுடன் நடக்க தொடங்கினாள்.


“ஒரு ஆணின் உண்மையான அன்பை ஒரு பெண் உணர்ந்து விட்டாள் என்றாள் அந்த ஆணை விட அதிர்ஷ்டசாலி எவரும் இல்லை”



பூக்கும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன் டியர்ஸ்,இந்த அத்தியாத்துல இருந்து நம்ம ஹீரோ, ஹீரோயின் நேரா பேசுவாங்க. படிச்சுட்டு கமெண்ட்ஸ் ப்ளீஸ்

இப்படிக்கு
அன்புடன்

உங்கள் ReY babyma 😍😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 9 :



தன் அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியின் ஒலியில் தன் தூக்கத்தில் இருந்து சோம்பல் முறித்தபடி எழுந்து அமர்ந்தவள் அறையை சுற்றி பார்வையை ஓட்டினாள் தீக்ஷா. இரவில் வெகு நேரம் சென்றே படுத்ததினால் இன்னும் அசந்து தூங்கும் தன் தோழியை தொந்தரவு செய்யாது மெதுவே கட்டிலில் இருந்து இறங்கி வந்து அறையை ஒட்டி உள்ள பால்கனியின் கதவை திறந்து வெளியில் வந்து நின்றாள்.


அந்த அதிகாலை நேரத்திலும் சென்னையில் வாகனங்கள் தங்கு தடையின்றி நகர்ந்து கொண்டிருந்தது. இவ்வளவு வருடங்கள் பெற்றோருடனே இருந்து பழக்கப்பட்டவளிற்கு இனி இங்கு தனியாக தங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் நேற்று ஒரு நாள் இரவு கடந்ததே பல வருடங்கள் போல் தோன்றியது. அதற்காக உறவினர்கஏ் வீட்டிற்கு சென்ற பழக்கம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அங்கு சென்றாலும் ஓரிரு நாளில் வீட்டிற்கு சென்று விடலாம் என்பதால் பெரிதாக தெரியவில்லை.


நேற்று வீட்டில் இருந்து கிளம்பும் போது தீக்ஷாவின் பெற்றோரே சலித்து போயினர். “அப்பா பேசாம நானும் சேர்ந்து உங்க கூட பிஸ்னஸ் பாக்க வந்திடவா” என்று இந்த பேக்கிங் செய்த மூன்று நாளில் நூறு முறையாவது கெஞ்சும் குரலில் கேட்டிருப்பாள்.


அவளின் அம்மா “அடியேய் இன்டர்வியு போய் செலக்ட் ஆனதுல இருந்து எத்தனை தடவை தான் ஒரே கேள்விய கேட்டிட்டு இருப்ப, இதுக்கு இன்டர்வியு அட்டெண்ட் பண்ணலனா கூட அந்த ஜாப் வேற யாருக்காகவாது கிடைச்சிருக்கும்ல, இதுக்கே இவ்வளவு அக்கப்போருனா நாளைக்கு கல்யாணம் முடிஞ்சு போதும் போது என்ன பண்ணுவியோ” என்று பேசும் தன் மனைவியை பார்த்து மானசீகமாக வாயை பிளந்தார்.


பின்னே தொடர்ந்து மூன்று நாட்களாக இரவில் தங்களின் அறையில் அவரை போட்டு பாடாய் படுத்தியவராயிற்றே.


தங்களின் அறையில் மனைவி பேசுவதை நினைத்து பார்த்தார்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஏங்க இப்ப நம்ம என்ன வசதியில குறைஞ்சு போயிட்டோம், அவ போய் சம்பாரிச்சு தான் நம்ம சாப்டனுமா, இன்னும் இரண்டு தலைமுறைக்கு வேலைக்கே போகாம உட்கார்ந்து சாப்பிட சொத்து இருக்கு, அவளுக்கு கல்யாணம் பண்ற வரைக்கும் நம்ம கூடவே இருக்கட்டுமே, போர் அடிச்சா உங்க கூட பிஸ்னஸ் பாக்கட்டுமே, அத விட்டுட்டு எதுக்கு அடுத்த ஆள்கிட்ட போய் கை நீட்டி சம்பளம் வாங்கனும்” என்று படபடவென பேசினார்.


“அய்யய்யோ, உன் மகள சமாதானம் படுத்துறதா இல்ல உன்ன சமாதானம் படுத்துறதாடி… பகல்ல அவகிட்ட பேசும் போது அப்பா உங்க கூடவே இருக்கட்டுமானு கேட்குறா, நைட் ஆனா அவள வேலைக்கு போக சொல்லி நா கொடுமை படுத்துற மாதிரி நெனச்சிட்டு நீ என்னய கொடுமை பண்ற” என்று நொடித்துக் கொண்டார்.


தன் மனைவியின் முகம் மாறுவதை உணர்ந்து அவரின் கைகளை எடுத்து தன் கைகளில் பாந்தமாய் அடக்கியவர் பேச தொடங்கினார் “இங்க பாருமா, நமக்கு இருக்குறது ஒரே பொண்ணு, ஒரு பையன் இருந்திருந்தா நானும் உன்ன மாதிரி தான் நினைச்சிருப்பேனோ என்னவோ? நமக்கு நிறையா சொத்து இருக்கு, அவளுக்கும் இப்பவே தேவைக்கு அதிகமாவே சேர்ந்து வச்சிருக்கோம், நாள பின்ன நமக்கு எது ஆனாலும் நம்ம சொத்து முழுசும் அவளுக்கு தான், நான் இல்லனு சொல்லல. ஆனா அவளுக்குனு தனியா இந்த சமூகத்துல அந்தஸ்து வேணும், அவ கல்யாணம் பண்ணிட்டு போற இடத்துல நல்லா வாழனும் வாழ்வா தான், ஆனா ஏதோ ஒரு சந்தர்பத்துல அவளுக்கு நம்ம உதவி தேவையானதா இருக்கலாம் அது பொருளாதாரமாவோ இல்ல வேற எதுக்காகவது, அந்த நேரத்துல நம்ம அவ கூட இல்லனா என்ன பண்ண முடியும். அவ யார் கிட்டயும் எதும் எதிர்பார்க்குற மாதிரி இருந்திட கூடாது,

நாம இருந்தா நம்ம பிள்ளையை நாம பார்த்துப்போம். ஒரு வேளை நம்ம இல்லாத சூழ்நிலையில?? “



நம்ம பக்கத்துல இல்லாத அப்பயும் அவள அவளாவே பார்த்துக்க தெரிஞ்சிருக்கனும். நம்ம பொண்ணு வேலைக்கு போக பிடிக்கலனு சொல்லி என்னட்ட கேட்டிருந்தா நா போக சொல்லி இருக்க மாட்டேன், அவளுக்கு தனியா கம்பெணி ஸ்டார்ட் பண்ணி அதுல சக்சஸ் ஆகனும்னு இருக்கா, நம்மள பிரிஞ்சு இருக்கனூமேனு தான் யோசிக்கிறா, உங்க இரண்டு பேர் கிட்டயும் பேசவே நா தனியா எனர்ஜி ஏத்திக்கனும் போலயே” என்று தீவிரமாக பேச ஆரம்பித்தவர் சலிப்பில் முடித்தார்.



“அங்க ஹாஸ்டல் சாப்பாடு எல்லாம் எப்படி இருக்கும்னு தெரியலயேங்க” என்றவரிடம் “அதெல்லாம் நான் யோசிக்காமல் இருப்பேனா? தீக்ஷாவும் யாழினியும் சேர்ந்தே தங்கு மாதிரி டபுள் பெட்ரூம் ப்ளாட் ஏற்பாடு பண்ணிட்டேன். சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஆள் ஏற்பாடு பண்ணியாச்சு, யாழினி வீட்டுலயும் பேசிட்டேன், நாமளும் போனா தங்க வசதியா இருக்கும்” என்றார்.


எல்லா ஏற்பாடுகளையும் யோசித்து முன்னதாகவே செய்த கணவரை நினைத்து பெருமையும், வியப்புமாக பார்த்தவர் அடுத்து ஏதோ சொல்ல வருவதற்குள் “அம்மா தாயே, உன் மக அங்க போய் வேலைக்கு சேரதுக்குள்ள என்னட்ட நீங்க அங்கு வந்து என்கூட தங்கி அங்க பிஸ்னஸ் பாக்குரிங்களா டாடி னு என் வேலைக்கு உல வைக்க பாக்குறா, இதுல நீ வேற” என்று தலைக்கு மேல் இரு கரம் கொண்டு கும்பிடுவது போல் செய்த கணவரை பற்றி தெரியாதா, மகளின் இந்த தற்காளிக பிரிவே அவரை எவ்வளவு சங்கடப் படுத்தும் என.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனைவியின் புலம்பல்களை நினைத்தவாறு பேசும் மனைவியை புன்சிரிப்புடன் பார்த்தவர் “குட்டிமா எல்லாம் ரெடியா, யாழினியையும் கேளு, கிளம்புவோம்” என்றார்.


“கிளம்பியாச்சாம்பா அவளோட வீட்டுக்கிட்ட இருக்க பஸ் ஸ்டாப்ல வெய்ட் பண்றதா சொன்னா, நாமளும் கிளம்புவோம்” என தீக்ஷா,அவளின் பெற்றோர்,யாழினி மற்றும் அவளின் அம்மா என கிளம்பிய அனைவரும் சென்னையை மாலையில் அடைந்தனர்.


தங்களின் ப்ளாட்டை அடைந்ததும் வேலை செய்பவர்களை அறிமுகம் செய்து விட்டு சிறிது நேரத்தில் பெற்றோர்களும் கிளம்பினர். தோழிகள் இருவரும் நள்ளிரவு தாண்டி தான் தூங்கினார்கள்.


அந்த காலை பொழுது போக்குவரத்தை பார்த்து நின்றிருந்த தீக்ஷா சமையல் செய்பவர் வர இன்னும் நேரமாகும் என்பதால் தானே கிட்சனிற்குள் நுழைந்து காபி கலந்தாள்.


பால்கனியின் ஜன்னல் திட்டில் அமர்ந்து காபி குடித்தவள் “குட் மார்னிங் டியர்… “ என அலைபேசிக்கு வந்த குறுந்தகவலிற்கு பதில் அனுப்ப ஆரம்பித்தாள்.


இன்னும் தூங்கும் தன் தோழியை பார்த்து “இங்க தூக்கம் வராம இருக்கேன், நீ என்னனா தூங்குறியா இந்தா வரேன் இரு” என்று யாழினியின் காதருகில்


“யே அட்ரா அட்ரா
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க



யே அட்ரா அட்ரா
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க



யே அட்ரா அட்ரா
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க” என காட்டு கத்தலில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்த யாழினி அறையை பார்த்தவள் வயிற்றை பிடித்து அடக்க மாட்டாது சிரித்த தீக்ஷா பார்வையில் பட்டாள்.



“அடியேய் உன்ன…..” என்று அடி மொத்தி எடுத்து விட்டாள். “சரி சரி விடு, கிளம்பு கோயிலுக்கு போய்டு டீ நகர் போவோம், நாளைக்கு ஆபிஸ் போனும் மர்சேய் பண்ணலாம்” என கிளப்பி இருவரும் வண்டியில் பறந்தனர்.


தீக்ஷாவின் தந்தை மூர்த்தியின் ஏற்பாடு இது. வேலை மற்றும் வெளி இடங்களுக்கு செல்ல வசதியாக இருக்கம் என.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ADS Group of companies :


“எக்ஸ்யூஸ்மி சார் “ என்று கதவை தட்டிவிட்டு தன் எம்.டி ஆதியின் முன் வந்து நின்றாள்.


“எஸ் மிஸ் ஷர்மிளா, டு டே தான நியூ ஜாய்னர்ஸ் வருவாங்க,வழக்கம் போல வெல்கம் பார்டி ஆஃப்டர்நூன் லன்ச் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டீங்க தான? அண்ட் ஹச்.ஆர் டிபார்ட்மன்ட்ட சொல்லி இப்போதைக்கு டீம் ஸ்பிளிடப் பண்ண வேண்டாம் ஒன் வீக் அப்பறம் பார்த்துக்களாம், இப்போ எல்லாருக்கும் சேர்த்து பேஸிக் டிரைனிங் மட்டும் ஏற்பாடு பண்ண சொல்லுங்க” என்று நீளமாக பேசிய தன் எம்.டி யை கண் சிமிட்டாது பார்த்தாள்.


பின்னே தினமும் இவள் நேரில் வந்து கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு “எல்லாத்தையும் என்கிட்ட கேட்டு கேட்டு பண்ண நீங்க எதுக்கு, உங்களுக்கு எக்ஸ்பளைன் பண்றதுக்கு நானே பார்த்துக்களாம் போல, ஜஸ்ட் மெய்ல் மீ எனிதிங் இம்பார்டண்ட்” என்று எரிந்து விழுவான்.



ஆதியை பற்றி நினைத்தபடி நின்றவள் இன்னும் அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. இன்னும் தன் கேள்விக்கு பதில் வராது கையில் உள்ள பைலில் இருந்து பார்வையை அவள் புறம் திருப்பினான்.


அடிக்கடி அவள் இவ்வாறு தன் முன் தன்னை மறந்து நிற்பாள் என்று அறிந்ததால் “ உன் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான்டா ஆதி” என்றவாறு தனக்குள் புன்னகைத்து கொண்டவன் வெளியில் காட்டாது “ஹலோ மிஸ் ஷர்மிளா..” என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தான்.


“ஹான் சார்..” என்று தன்னிலை இறங்கி ஆதியின் கேள்விகளுக்கு பதில் அளித்து வெளியேறினாள். “என்னாச்சு இவருக்கு, இவரு இந்த கம்பெணி பொறுப்பு எடுத்த ஆரம்பத்துலயே நம்ம வேலைக்கு சேர்ந்துட்டோம், அப்ப இருந்து மூனு கேன்சஸ் வந்துருக்காங்க, இந்த தடவை மட்டும் எதுக்கு இவ்வளவு எக்ஸைட் ஆகுராறு” என்று யோசித்தபடி வெளியில் வந்து ஆதி சொன்னது போல் அனைத்தையும் முடித்தாள்.


கான்பரன்ஸ் ஹால் முழுவதும் ஒரே கல்லூரி மாணவர்கள் என்பதால் சிறு சலசலப்பு, பேச்சு, சிரிப்புமாக

இருந்தது. ஷர்மிளா மற்றும் இன்னும் மூன்று நபர்கள் உள்ளே நுழைந்ததும் அனைவரின் சத்தமும் அடங்கி அறை முழுவதும் அமைதியானது என்றாள்,உள் நுழைந்ததில் ஒரு நபர் பேச ஆரம்பித்த உடன் தன் வசீகரித்தல் அனைவரையும் தன் புறம் திரும்பினான்.



உன் நெஞ்சின் வேகம் எல்லாம் கால்கள் இரண்டோடு புகுத்திக்கொள் நீ




பூக்கும்.
 
Status
Not open for further replies.
Top