All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் ப்ரண்டஸ்,

என்னோட அடுத்த அப்டேட் போட வந்துட்டேன். படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொன்னீங்கனா ஹாப்பியா இருப்பேன். இந்த அப்டேட்ல இருந்து கதை கொஞ்சம் பாஸ்ட் அண்ட் ஹீரோஸ், ஹீரோயின்ஸ் மீட் அண்ட் லவ்ஸ் கொஞ்சம் அதிகமாவே இருக்கும்.முக்கியமா கொஞ்சம் அறுவையா இருக்காதுனு நம்பி படிக்கலாம்.

இப்படிக்கு

உங்கள் ReY babyma 😍😍😍😘😘
 
Last edited:

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 12 :


தங்களின் அருகில் யாரும் இல்லை என உறுதிப்படுத்தி கொண்டு "அம்மு, நீ யாரையும் காதலிக்கிறியா?" என்றான். சிறு வயதிலிருந்து தான் யாரை உயிரினும் மேலாக விரும்பும் தன்னவன் வாயிலிருந்து இப்படி ஒரு கேள்வியினை எதிர்பாராதவள் கலக்கத்தோடு நிமிர்ந்து பார்த்தவள் இல்லை என்பது போல் தலை அசைத்தாள்.

ஒரு வேலை தான் தான் தேவைக்கு இல்லாது ஆசையை வளர்த்து கொண்டோமோ? இவர் தன்னிடம் மாமன் மகள் என்கின்ற முறையில் தான் பழகினாரோ ? வேற பெண்ணை விரும்புகின்றாரோ,இல்லை தான் சொல்லா விட்டாலும் நான் இவரிடம் காட்டும் நெருக்கம் வேறு யாரிடமும் காட்டவில்லையே, என்னை புரிந்து கொள்ள முடியவில்லையா என தனக்குள் உழன்றபடி இருந்தவளை தர்ஷன் மறுபடியும் "ஏன்" என்று கேட்டபடி அவளின் கவனத்தை தன் புறம் திருப்பினான்.

"எனக்கு விருப்பம் இல்லை" என்றவள் "நீ..ங்...க... யா...ரை...யும் லவ் ப...ண் ...றீ ...ங்...க..ளா ...???" என ஒருவாறு தன்னை சமன்படுத்திக் கொண்டு கேட்டாள்.
சிறிது நேரம் சீண்டி பார்க்கும் எண்ணத்தில் விஷமம் வழியும் சிரிப்பினை தன் வலிய உதடுகளுக்குள் மறைத்த வண்ணம் "ஆமா அம்மு,ஆனா அந்த பொண்ணு என்னை தான் லவ் பண்றாளானு தெரியல, ஒரு வேளை அந்த பொண்ணுக்கு என்னய்ய பிடிக்கலையோ என்னவோ?" என்றான் சின்னச் சிரிப்புடன்.

"அப்ப நான் எதிர்பார்த்தது உண்மை தானா , சென்னையில வேற இருக்கீங்க கண்டிப்பா லவ் பண்வெங்கனு நினைச்சேன், நீங்க எவ்ளோ பெரிய பிசினஸ் மேக்னெட், உங்கள போய் யாருக்கும் பிடிக்காம இருக்குமா??" என்று சிறு குரலில் கூறியவள், அந்த இடத்தை விட்டு நகர போனாள். சட்டென்று விலகியவளை ஒரே எட்டில் அவளின் வலது கையினை பிடித்தவன் "எங்க போற அம்மு?? அந்த பொண்ணு யாருனு பார்க்க வேணாமா, பார்த்துட்டு சொல்லு, அத்தானுக்கு செட் ஆகுவாளா இல்லனா அந்த பொண்ண கழட்டி விட்டுட்டு வேற பொண்ண பார்ப்போமானு சொல்லு " என்றான் இன்னும் தன் விஷம சிரிப்பு மாறாது, அதே சமயம் ஷாலுவிற்கும் தனது சிரிப்பினை காட்டாமல் நின்றான் தர்ஷன்.

ஏற்கனவே கண்களில் இருந்து கண்ணீர் விழுவதா வேணாமா என்பது போல் நின்று கொண்டிருக்க, அவளை இன்னும் தான் பிடித்த வலது கரத்தினை விளக்காது தன்னுடைய இடது கரத்தினால் பேன்ட் பாக்கெட்டில் இருந்து தன் மொபைலினை எடுத்தான்.

தன்னை பிடித்தவனின் கரம் இன்னும் தன் பிடியினை தளர்த்தாது மொபைலினை பார்த்து கொண்டிருந்தவனை கண்டு சிறிது கோபமும், இன்னும் தன்னுடைய காதலினை சொல்லாத நிலையிலே தன் காதல் முடிந்து போன அத்தியாயமாக தோன்றி எதுவும் செய்ய முடியாத இயலாமையில் அவனின் கரத்தினை விலக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

இருந்தும் அவளை விலக விடாது தன் மொபைலில் இருக்கும் பர்சனல் போல்டரில் இருந்து தான் தேடிய போட்டோ கிடைக்கவும் அதனை அவளின் கலங்கிய விழிகளை பார்த்தவாறே “சரி நீ கேட்கலான என்ன நானே காட்றேன்” ஷாலினியின் கையில் குடுத்தான்.

தர்ஷன் போட்டோவை பார்ப்பதற்காக தன் முன் நீட்டியும் மொபைலை பார்க்காது அவனையே பார்த்தவாறு நின்றாள்.
அவளின் பார்வையை உணர்ந்தவன் மொபைலை பார்க்குமாறு கண் காட்டினான். ஒரு வித தடுமாற்றத்துடனும், இதில் இருக்கும் பெண் தனக்கு பிடித்த அத்தானிற்கு பொருத்தமாக இருக்க வேண்டும் என்றும் மொபைலை பார்த்தவளின் கண் சாசர் போல் விரிந்தது.

தன் கையில் உள்ள அலைபேசியை திகைப்பு,மகிழ்ச்சி,நமக்கு பிடித்த தொலைந்த பொருள் நம்மிடம் மீண்டும் கிடைத்து விட்ட சந்தோஷம், தன்னை இவ்வளவு நேரம் சீண்டிய தன் மனம் கவர்ந்தவனின் செய்கையில் தோன்றிய கோபம் என மாறி மாறி முக பாவனையை தன முகத்தில் கட்டியவளை ரசித்து பார்த்தபடி நின்றான்.

ஓரிரு நிமிடம் அவளின் முக மாறுதல்களை நன்றாக ரசித்தவன் இன்னும் தன்னுடைய நிலையில் இருந்து அவள் வெளிவரவில்லை என்பதால் "என்ன அம்மு வேற பொண்ணு பார்த்துருவோமா இந்த பொண்ணு அத்தானுக்கு செட் ஆகா மாட்டாளா, அதான் இந்த லுக்கு விட்றியா ?? " என்று முகத்தில் சிறு போலி கவலையை படர விட்டவாறு கூறினான்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷனின் கிண்டல் வழியும் தொனியை தற்பொழுதே கண்டுகொண்டவள், தர்ஷனையும் அவனின் மொபைலினையும் மாறி மாறி பார்த்தவள் கோபத்துடன் அதனை தூக்கி ஏறிய முயன்றாள். அவளின் எண்ண ஓட்டத்தை ஊகித்தவன் போல் "அடியேய், என்னடி பண்ண போற, நியூ மொபைல்டி வாங்கி மூணு மாசம் தான் ஆகுது" என அலறியபடி மொபைலை வாங்க முயன்றான்.

மொபைலை வாங்க முயன்றவனின் கையினை பிடித்து தடுத்தவாறு தரமாட்டேன் என்பது போல் தலையத்தவள் "இந்த போட்டோ உங்களுக்கு எப்படி கிடைச்சது, அணைக்கு நீங்களும் அங்க தான் இருந்தீங்களா, இல்லை வைஷு அல்லது வேற யாரும் குடுத்தாங்களா, ஆனா இந்த மாதிரி வேற யார்கிட்டயும் இல்லையே, வைஷுக்கு கூட இந்த போட்டோ நா அனுப்ப சான்சசும் இல்லையே, இதே மாதிரி போஸ்ல எடுக்கணும்னு ட்ரை போனப்போ என் ப்ரண்ட் கவி சொதப்பிட்டா, அப்ப நீங்களும் வந்திருந்தீங்களா??" என தன் பார்வையை இன்னும் போட்டோவில் இருந்து விலக்காது படபடவென விடாது பேசியவளை பார்த்தான்.


தன் கேள்விக்கு பதில் அளிக்காது தன் கையினை பிடித்தபடி நின்ற தர்ஷனை கண்டவள், “அத்தான் நான் கேட்டதுக்கு
பதில் சொல்லாம கையை பிடுச்சுட்டே நின்னா என்ன அர்த்தம்??” என விடாது பேசியவளை பார்த்தும் ஒன்றும் சொல்லாது அவளின் வலது கையில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றினான.


“ஐயோ என்ன அத்தான் இது, டாட் ப்ரெசென்ட பண்ணுன ரிங் அது, உங்களுக்கு எதுக்கு இது” என்று பதறினாள்.

"அடியேய் காலையில வந்ததுல இருந்து நா கேக்குறதுக்கு மட்டும் பதில் பேசிட்டு இருந்தவ , இப்ப மட்டும் ஏன்டி தொன தொனன்னு கேள்வி கேட்டுகிட்டு இருக்க கொஞ்ச நேரம் இருடி " என்று மீண்டும் தன் பேண்ட் பாக்கெட்டினுள் கை விட்டு எதையோ தேடினான் . தேடியது கையில் அகப்பட்டவுடன் வெளியில் எடுத்து அதை ஷாலுவின் விரலில் அணிவித்தான். இதனை எதிர்பாராதவள் தர்ஷன் தன் கையில் அணிவித்த மோதிரத்தை உற்று கவனித்து பார்த்தாள். அதில் 'S' வடிவ எழுத்து புதுவித டிசைனில் பொறிக்கப்பட்டிருந்தது.

ஷாலினி மோதிரத்தை பார்த்தும் எந்த பதிலும் சொல்லாததினால் "என்ன மேடம் எப்ப பாரு இப்படியே ஷாக் அடிச்ச மாதிரி நின்னுட்டா நான் என்னனு நினைக்கிறது,ஏத்து வேற ரியாக்ஷனும் கொஞ்சம் குடுமா" என்று அவளை சீண்டியவன் "என்ன அம்மு ரிங் பிடிச்சிருக்கா, இந்த ரிங்ல ஒரு ஸ்பெஷல் இருக்கு, அது என்னனு கண்டுபிடிக்க முடியுதான்னு பாரு" என்றான்.

தர்ஷனின் கையில் இருந்த தன் கையை விடுவித்துக்கொள்ள முயன்றவளை "இப்டியே இருந்தே பாரு அம்மு" என்று அவளின் கையை விடும் நோக்கம் இல்லாது சொன்னான். "இவரு இப்படியும் பிடிச்சுட்டு பாருன்னு சொன்னா என பண்றது??" என்று முணுமுணுத்தாலும் தன் கையில் சற்று நேரம் முன் அணிவிக்கப்பட்ட மோதிரத்தை பார்த்தவளிற்கு 'S' எழுத்தை தவிர வேற எதுவும் வித்தியாசமா தெரியத்தினால் "ஒன்னுமே டிஃபரெண்டா எனக்கு தெரியலையே அத்தான்" என்று உதட்டை பிதுக்கினாள்.


அவளின் அந்த சிறு siruseiyaஅவளின் சிறு செயலில் மயங்கியவன் அவளின் கரத்தினை பிடித்து சட்டென்று தன் அருகில் இழுத்தவன் அவளை இழுத்த வேகத்திலே திரும்பியவன் அவளின் முதுகுப்புறம் நின்றான். திகைப்புடன் விலக முயன்றவளை விலக விடாது செய்தவன் பின்னில் இருந்தே அவளின் மோதிரம் அணிந்த விரலினை பிடித்தான்.

"இதுல உனக்கு எதுவுமே வித்யாசமா தெரியல அம்மு, இந்த S லெட்டரை நல்ல பாரு, இந்த லெட்டர்ல கீழ இருக்க இந்த ஷார்ப் கட்ல 'D' லெட்டர் வர மாதிரி நானே டிசைன் செஞ்சு ஆர்டர் குடுத்து வாங்குனேன். இந்த டிசைனோட மீனிங் என்னனா S லெட்டெர்க்கு உள்ள இருக்க D மாதிரி எப்பயும் நா உனக்குள்ள இருக்கனும்னு ஒரு நினைப்பு வரும், அதுனால இட்ஸ் வெரி ஸ்பெஷல் அண்ட் வெரி செண்டிமெண்ட் ஆல்சோ டு மீ" என்று தர்ஷனின் வார்த்தைகளை கேட்டவள் சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தாள் என்றாள் மிகை அல்ல.

நீண்ட பேச்சினை முடித்தவன் இன்னும் யாரும் தங்களை கவனிக்க அருகில் இல்லை என்பதை உணர்ந்தும், தனிமை குடுத்த தைரியமும் சேர்ந்து தன்னவளின் மோதிரம் அணிந்த விரலில் முதல் முறை தன்னுடைய இதழினை பதித்து விட்டு, அவளின் பட்டு கன்னங்களிலும் அவசரமாகவும், அதே சமயம் மென்மையாகவும் இதழினை பதித்தவன் அவளை தன் இடதுபுறம் நிறுத்தினான்.


தன்னவள் தான் என்றாலும் தாங்களே இப்பொழுது தான் காதலை பகிர்ந்துள்ளோம் அதும் இன்னும் அவள் வாய் மொழியில் தான் அறியவில்லை என்பதும், தங்களை இந்த நெருக்கமான நிலையில் வீட்டினர் பார்த்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் தான், இருந்தாலும் தன்னவள் தன் வீட்டினர் முன் சங்கடப்படும்படியான சூழ்நிலையை உருவாக்க மனது இல்லை.

தன் இடது தோளின் புறம் நின்றவள் மெல்ல அவனின் செய்கையை கிரகிக்கச் செய்து வெட்கமும், மகிழ்ச்சியும் மிளிர தன் முகம் பார்க்க அண்ணார்ந்து “அந்த போட்டோ எப்ப எடுத்ததுனு சொல்லுங்க, நீங்களும் அன்னைக்கு அங்க தான் இருந்தீங்களா?? ” என சிணுங்கியபடி கேட்ட நின்ற விதம் சிரிப்பை உண்டு பண்ண சத்தமாக வாய் விட்டு சிரித்தவன், "என் பக்கத்துல இவ்வளவு குட்டியா இருக்க, சத்தம் மட்டும் ஆளுக்கும் உருவத்துக்கும் சம்பந்தமே இல்லாம அவ்ளோ சௌண்ட்லியா இருக்கு, போட்டோ பத்தி இப்ப தெரிஞ்சிட்டு என்ன பண்ண போற?? “ என்றான்.

தன்னை அவன் கிண்டல் செய்வதை உணர்ந்தவள் அவனின் மார்பில் குத்தினாள். "சரிடி இப்படியேவா நிக்க போற,அங்க பாரு வைஷு,விஷ்ணு வராங்க தள்ளி நில்லு.அப்பறம் உன்ன தான் அதுங்க வச்சு செய்யுங்க" என்றவனின் பார்வை தங்களை நோக்கி வந்து கொண்டிருந்தவர்களின் புறம் சுட்டி கட்டி மீண்டும் ஷாலினியின் புறம் திரும்பியது.

அப்பொழுது தான் தான் நிற்கும் நிலை உணர்ந்து "ஐயையோ, இதுங்க முன்ன இப்டி நின்னா அவ்ளோ தான், அதிலும் அந்த விஷ்ணு ஏற்கனவே என்னய்ய ஒரு மார்க்கமா பார்த்துட்டு இருந்தான்." என்று பதறி விலகினாள். தர்ஷனும் சிறு சிரிப்புடன் தள்ளி நின்றான்.
பின்பு தர்ஷன், ஷாலினி நின்ற இடத்திற்கு அவர்கள் இருவரும் வரவும் தங்களின் அடுத்த அரட்டையை துவங்கியவாறே அனைவரும் இருந்த இடத்தை நோக்கி சென்றனர்.


ஷாலினி அமர்ந்தவுடன் தர்ஷனும் தங்களுடன் வராததும், இவர்களின் இன்றைய புது நெருக்கமும் விஷ்ணுவை யோசிக்க செய்தது. இவர்களின் புறம் இருந்து நகர்ந்த உடன் தன் சகோதரியிடம் முதல் கேள்வியாக "ஏன் வைஷு நம்ம ஷாலுவும் அண்ணாவும் லவ் பண்றங்களா,நா கார்ல இருந்து வரப்ப இருந்து நோட் பன்னினேன். அண்ணாவோட பார்வையும், நம்ம அம்முவோட முழியும் சரி இல்லை" என்றான்.

இன்னும் அவுங்களே மற்றொருவரிடம் பகிர்ந்து கொள்ளாத நிலையில் தன்னுடைய தம்பியே அனாலும் அது அவர்களின் வாய்மொழியாக சொல்லவில்லை என்பதால் இது அவர்கள் இருவரின் தனிப்பட்ட விஷயம் தான் சொல்வது சரி இல்லை என்று நினைத்தவள் தன் தம்பியிடம் கூறாது வேறு பேசி மழுப்ப பார்த்தாள்.

"நீ சொல்ல மாட்டேன்னு தெரிஞ்சும் உன்கிட்ட கேக்கறேன் பாரு, உன்னோடது பத்தி கூட அவ்ளோ க்ளோசா இருக்க என்ன நம்பாம சொல்லாதவ, அடுத்தவுங்களோடதா என்னய்யா நம்பி சொல்ல போற" என்று வைஷுவை அதிர வைத்தான் .


“நம்பிக்கை என்ற சிறு நூலிலையில் தான் அனைவரின் அன்பும் இயங்கி வருகிறது”

பூக்கும்.
--------------------------------------------------------
 
Last edited:

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் ப்ரண்ட்ஸ்,

ஒரு புன்னகை பூவே 13வது அத்தியாதத்துடன் வந்து விட்டேன். படித்தவிட்டு உங்களின் கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள். உங்களின் கருத்துகளுக்காக மீ வெய்டீங்.

https://srikalatamilnovel.com/community/threads/ரேவதியின்-ஒரு-புன்னகைப்-பூவே-கருத்துத்-திரி.414/

இப்படிக்கு

அன்புடன் உங்கள் Reybaby 😍😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 13:


ADS Group of companies


இன்றோடு வேலையில் சேர்ந்து ஒரு வார காலம் முடியும் நிலையில் பேஸிக் ட்ரைனிங் முடிவதால் அடுத்து வரும் வாரங்களில் இருந்து தனி தனி டீம் ஆக ஸ்ப்ளிடப் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று HR டிபார்ட்மென்ட் அறிவித்திருந்தனர். மதிய இடைவேளையில் கேண்டீனில் அமர்ந்து தீக்ஷா மற்றும் யாழினி பேசிக்கொண்டிருந்தனர்.


"இன்னைக்கு தான டீம் ஸ்பிலிட் பண போறாங்க, இனிமேல் எல்லாருமே டைரக்ட் ரிப்போர்ட் அந்த சிடுமூஞ்சி எம்.டி கிட்ட தான் பண்ணனுமாம் டி, என்னலாம் பாடு படனுமோ?? நேரம் காலம் எல்லாம் பார்க்காம ஒர்க் முடிஞ்சா தான் வீட்டுக்கு கிளம்பவே முடியுமாம்" என்று சத்தமாக கேட்டாள்.


"உன்னட்ட எவ்ளோ தடவை சொல்லிருக்கேன் இப்படிலாம் பேசாதனு, அதும் அவரோட ஆஃபீஸ்லயே இப்டி உட்கார்ந்து சத்தமா பேசிட்டு இருக்க, வேலையை விட்டு தூக்கிட போறங்கடி " என பட படவென பேசியவளின் பேச்சினை காதில் வாங்காது "அட போடி,யாரு காதுல விழுக போகுது, அப்படியே விழுந்தாலும் யாரு போய் அந்த சிடுமூஞ்சிட்ட நீ" என்று தீக்ஷாவின் பேச்சினை கவனியாது அவளின் பின்புறம் பார்வையை பதித்தவளின் வாய் அப்படியே பேச முடியாது நின்றது. தன் தோழி இந்நேரம் இதற்கும் ஏதாவது சொல்லிருப்பாள், ஆனால் இப்பொழுது எங்கு பார்த்து கொண்டிருக்கிறாள் என்று அவளின் பார்வை சென்ற திசையை நோக்கி தன் பார்வையையும் திருப்பியவளும் அதிர்ச்சியில் சட்டென்று எழுந்து நின்றாள்.


அவர்கள் திரும்பிய திசையில் உள்ள மேஜையில் சாய்ந்தவாறு, இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டினுள் கைகளை விட்டு இருவரையும் முறைத்தபடி நின்றிருந்தான் ஆதி. தீக்ஷா எந்த மனநிலைமையில் ஆதியை பார்த்தாளோ அவள் மட்டுமே அறிந்த ஒன்று.




ஆதி தீக்ஷாவின் பார்வையை உணர்ந்தாலும் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு "ஜஸ்ட் கம் டு மை கேபின் யு போத்" என்று கடுப்புடன் மொழிந்தவன் விடுவிடுவென்று தன் அலுவலக அறை நோக்கி நடந்தான். எப்பொழுதும் அலுவலக நேரங்களில் கேண்டீன் வராதவன், இன்று தலை வலிப்பது போல் இருக்க காபி அருந்த எண்ணியவன் ப்யூனை தேடினான், ப்யூனும் மதிய உணவிற்காக வெளியில் சென்றதால் தானே போய் நேராக

வாங்கிக்கொள்ளலாம் என்று எண்ணியவன் எதார்த்தமாக இங்கு வந்ததும் தான் இவர்கள் பேசியதை கேட்க நேர்ந்தது.



ஆதி சென்ற திசையை பார்த்து கொண்டிருந்த தீக்ஷாவின் அருகில் வந்து நின்ற யாழினியை நன்றாகவே முறைத்தவள் ஆதியின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சில அடிகள் சென்றதும் தன் தோழி வராததை உணர்ந்தவள் திரும்பி பார்க்க அதே இடத்தில் ஒரு அடி கூட நகராதவள் தன் காலை அசைக்க இயலாது நின்றவளை பார்க்க அவலோன் அருகில் சென்ற தீக்ஷா முகம் அப்பட்டமான எரிச்சலை படர விட்டவள்,


“இதுக்கு தான் உன்கிட்ட அவ்ளோ தடவை சொன்னேன் இப்டிலாம் பேசாதனு இப்ப பார்த்தியா எம். டி யை பத்தி அவரோட ஆஃபிஸ்ல அதுவும் அவரு முன்னாடியே பேசி வச்சுருக்க. இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்குறாரு அப்போவே இப்டி பேட் இம்ப்ரெஷன் க்ரியேட் ஆகிருச்சு,வேலையை விட்டு தூக்கினாலும் ஆச்சரியப்படுடறதுக்கு இல்ல, லேட்டா போனா அதுக்கும் ஏதாவது சொல்ல போறாங்க வா போவோம்” என்று இழுத்து கொண்டு ஆதியின் அறை முன் கதைவை தட்டி அனுமதிக்காக நின்றிருந்தனர்.




தீக்ஷா எப்பொழுதும் தன்னிடம் இப்படி எரிச்சலுடன் பேச மாட்டாள், இன்று அதிக அளவிலான எரிச்சலில் பேசியதன் காரணம் அறியாது அதி முக்கியமான சந்தேகத்திற்கு அந்த நேரத்திலும் யோசித்து கொண்டிருந்தாள். அவளை பொறுத்த வரை ஆதியின் கடும் வார்த்தை பாதிக்க இயலவில்லை. தன் தோழி இவ்வாறு நடந்ததே யோசிக்க செய்தது.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"எஸ் கம் இன்" என்ற ஆதியின் கம்பீர குரலில் தன் யோசனையை தள்ளி வைத்தவள் தீக்ஷாவுடன் சென்றாள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் தன் கணினியில் பதித்திருந்த பார்வையை இவர்கள் இருவரையும் இருவரையும் நோக்கி திருப்பினான். இன்று சனிக்கிழமை என்பதால் கேஷுவல் உடையான அடர் நீல நிற ஜீன்ஸ், பால் வண்ண டாப்ஸில் ஆரஞ்சு நிற பூ டிசைன் இருக்க, கழுத்தில் அலட்சியமாக போட்டிருந்த மல்டி கலர் ஸ்கார்ப் , கண்ணில் காஜல் மற்றும் ஐ-லைனர் தவிர வேற ஒப்பனை இல்லாத முகம் தன் கண் முன் நின்றிந்தவளை ஒரு நிமிடத்திற்கும் கீழாக ஆழ்ந்து பார்த்தான்.


"ஆஃபீஸ்ல வச்சு பார்க்குற பர்ஸ்ட் தடவையே இப்படி பார்வையை பாரு" என்று வாய்க்குள் முனுமுனுத்தபடி தோழியின் புறம் பார்வையை திருப்பினாள் தீக்ஷா. தீக்ஷாவின் உதட்டசைவை வைத்து தன்னை தான் வாய்க்குள் திட்டுகிறாளோ என்றெண்ணி இருவரையும் தீர்க்கமாக பார்த்தவன் “நீங்க இரண்டு பேரும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல எப்படி பேசனும், எப்படி பிஹேவ் பண்ணனும் இப்படி எல்லாம் தெரியாதா, அதும் உங்க பக்கத்துல அவ்வளவு பேர் இருக்காங்க, இன்னைக்கு நீங்க இப்படி பேசுவீங்க, உங்கள பார்த்து அடுத்து யாரும் பேசுவாங்க, இதுனால உங்க ஜாப் போனாலும் பரவாயில்லையா” என்று முகத்தில் கோபம் கொப்பளிக்க சற்று அழுத்தத்துடன் வினவியவன் இருவரையும் பார்த்தான்.


ஆதி பேச ஆரம்பித்தவுடன் அவனை பார்த்தவாறு நின்ற தீக்ஷா தன் தோழியை பார்த்து நான் சொன்னது போல் கேள்வி கேட்கிறார் பார் என்பது போல் கண் காட்டினாள். அவனின் பேச்சினை கேட்ட தீக்ஷா எந்த உணர்வோடு பார்த்தாள் என்பது அவள் மட்டுமே ஒன்று. ஆதியின் கம்பீரமா அவன் பேசும் தொணியிலா, அவனின் ஆளுமையா அல்லது பார்மல்ஸில் அவனிடம் இருக்கும் மிடுக்கா என யோசித்து கொண்டிருந்தாள் என்றாள் யாழினியோ ஆதியின் பேச்சில் அவனின் பார்வையில் பயம் பயம் என்ற ஒரே உணர்வில் நின்றிருந்தாள்.


தீக்ஷவின் பார்வையில் இருந்து ஆதி எதை உணர்ந்தானோ , “திஸ் இஸ் தி லாஸ்ட் , இனி இந்த மாதிரி பிகேவ் பண்ணாதீங்க , யு கேன் கோ நௌ” என்று தன் கணினியில் பார்வையை பதித்தான். “தாங்க் யு சார்” என்று மட்டும் வெளியில் வந்தார்கள் தோழிகள். எம் டி ஆதியை பற்றி தன் கல்லூரியில் ADS group of companies தான் கேம்பஸ் இன்டெர்வியூ வருவதாக சொல்லியதில் இருந்து , அதன் எம்.டி ஐ பற்றியும் , அவனின் ஆளுமை பற்றியும் , வேலையில் அவன் மேற்கொள்ளும் சிரத்தினையும் என பலவாறு பல பேர் கூறிய போது வாய் வார்த்தையாக கேட்டிருக்கிறாள் தீக்ஷா.


ஏன் தன் தோழி யாழினியே ஆதியை கேம்பஸ் இண்டர்வியூ அன்று காரில் இருந்து இறங்கிய ஸ்டைலில் இருந்து அனைத்தையும் பற்றி கூற கேட்டிருக்கிறாளே. இப்பொழுது அவனின் அலுவலகத்தில் ஆளுமையில் நேரில் அவனை கண்டு பிரம்மித்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.


தன்னுடன் வந்த யாழினியை தன் கேபின் செல்லும் வரையிலும் பொறுமை இல்லாது விட்ட இடத்தில் இருந்து திட்ட துவங்கினான். “பாருடி ,இப்போ சந்தோஷமா, இன்னிக்கு தான் முதன் முதலில் எம். டி யை மீட் பண்னோம் எவ்வளவு திட்டு. அவரை பத்தி கேள்வி பட்டத்துக்கு நியாயப்படி வேலையை விட்டு நம்மளை தூக்கிடுவாருனு தான் நினைச்சென் , ஏதோ நல்ல மூட்ல (அந்த நல்ல மூட் என்னனு அந்த நல்லவனுக்கு தானே தெரியும்) இருந்தாரு போல , இனி இப்படி பேசுவதை விடு” என யாழினியை பிடிபிடிவென பிடித்து கொண்டாள் தீக்ஷா.



ஆத்தாடி, ஒரே ஒரு வார்த்தை சிடு மூஞ்சின்னு சொன்னேன், அதுக்கு இதுங்க ரெண்டும் என்ன பேச்சு பேசுதுங்க. சொன்னது அவரே , அந்த ஆதி சார் கூட வார்ன் பன்னி அடுத்த வேலையை பார்க்க போய்ட்டாரு, இவ ஏன் கத்துறா என்று மனதுக்குள் நினைத்தாள். வெளியில் சொன்னால் அதுக்கும் யார் வாங்கி காட்டிக்கொள்வது !!



தங்களின் கேபினிற்கு வந்தவர்கள் வேலையில் கவனத்தினை செலுத்த துவங்கினர். ஆனால் அங்கு ஆதியோ தீக்ஷாவின் நினைவில் இருந்து வெளியில் வர விரும்பாது அவளின் காலேஜ் சென்ற பொழுது அவளை பார்த்ததும் இண்டர்வீயூவின் போது சிறு பயமோ பேச்சில் தடுமாற்றமோ தயக்கமோ இல்லாது நிமிர்வாக அவள் அட்டெண்ட் செய்த விதமும் நேர்முக இறுதி சுற்றான டெக்னிக்கல் ரௌண்ட்டின் பொழுது கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காது பதில் அளித்த விதம் என்று ஒவ்வொன்றாக யோசித்த படி அமர்ந்திருந்தான்.


மூன்று மாதங்கள் ஆகியும் அதன் நினைவுகள் அப்படியே இருந்தது. கிட்டத்தட்ட மொண்டாய் மாதங்கள் சென்று இன்று தன்னுடைய அலுவலகத்தில் அதுவும் தன்னுடைய அறையில் காண்கிறான். ஏதேதோ தோன்ற தே யோசனையில் ப்ரெண்ட நேரம் இருக்க இயலாது தற்காலிகமாக அவளின் எண்ணங்களை தள்ளி வைத்தவன் தன் வேலையில் கவனத்தை செலுத்தினான்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதிகாலை வேளையில் சூரிய கதிர்கள் தன் முகத்தில் விழுந்தும் அதனை சிறிதும் சட்டை செய்யாது நன்கு உறங்கி கொண்டிருந்தவளின் மொபைல் சிணுங்கியது. அந்த தூக்கத்தினிலும் போன் செய்யும் அந்த நபருக்காகவே என்று வைத்திருக்கும் பிரத்யேக ரிங் டோனிலும் அது யார் என்று உணர்ந்தவள் திரையில் ஒளிர்ந்த பெயரினை பார்த்தாள் "Tharu" காலிங் என்று மின்னியது.

தன்னுடைய மனம் கவர்ந்தவனின் பெயரினை கண்டதும் எதிர்பார்ப்பும் சலிப்பும் சேர்ந்து தோன்ற காதில் வைத்து "ஹலோ" என்று சொன்னதும் தான் தாமதம்.

"உன் நெனப்பு உன் நெனப்பு பேபி
உன்ன பாக்குறதே என்னோட ஹாபி........
தினமும் உன் நெனப்பு
உன் நெனப்பு பேபி உன்ன பாக்குறதே என்னோட ஹாபி .......
ஷாக்குல துடிச்சேன்அட ட்ரீமுல முழிச்சேன்அந்த காரணம் புரிஞ்சேன் லவ்வு......"

என்ற தருணின் குரலில் சலிப்பாகியவள் காதில் வைத்திருக்கும் மொபைல் போனை கையில் எடுத்து மணி பார்த்தாள். ஆறு மணியை கூட தாண்டாத நிலையில் இவ்வளவு சீக்கிரம் போன் செய்து தொந்தரவு செய்வது இன்று மட்டும் நடப்பது அல்ல. என்று தருணின் காதலை ஏற்றுக்கொண்டாளோ அப்பொழுதில் இருந்து தருண் வெளியில் செல்ல எவ்வளவு கெஞ்சியும் ஒரு மனதாக மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மட்டும் வெளியில் வருகிறேன் என்றும் அதனை தவிர்த்து எப்பொழுதும் அழைக்க கூடாது என்றும் தருணிடம் உடன்படிக்கை போட்ட பின்பே ஒற்றுக்கொண்டாள். இன்று வெளியில் செல்வதை நியாபக படுத்தவே இவ்வாறு பாட்டு இல்லை என்றால் காதல் வசனம் என்று பேசி அவளை ஒரு வழி பண்ணிவிடுவான்.

"என்ன தரு இது எவ்ளோ டைம் சொல்லிருக்கேன் சண்டே தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டா தூங்க முடியும் இயர்லி மார்னிங் கால் பண்ணிடாத நானே கிளம்பிருவேன்னு சொன்னேன் தான ஏன் தான் இப்டி பண்றியோ , இப்போ என் தூக்கமே போச்சு , இதுக்காகவே இன்னைக்கு உன் கூட வரல போடா" என்று சிணுங்கியபடியே முறுக்கி கொண்டாள்.

"அடியேய் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லையாடி நீ சொன்னதுக்காக மன்த்லி ஒன் டே மட்டும் வெளியே போகலாம்னு ஒத்துக்கிட்டேன். காலேஜ்ல மீட் பண்ணலாம்னு கூப்ப்பிட்ட கூட உன்னோட ப்ரண்ட்ஸ் கூட சேர்த்து வந்து யாரோ மாதிரி பேசிட்டு ஓடிற ரீசன் கேட்டாலும் ஸ்டடீஸ் முடியுமா வரைக்கும் இப்படியே இருப்போம் இல்லன்னா மத்தவங்க கண்ணுக்கு தனியா தெரிவோம் அப்படின்னு நாம மட்டும் தான் ஊர் உலகத்துலயே லவ் பண்ற மாதிரி உன் புராணத்தை பாட ஆரம்பிச்சுருவ எனக்குனு வந்து வைக்கிறீங்களேடி அதுங்க ரெண்டும் தான் என்ன படுத்துறாளுங்கனா நீயுமாடி" என்றான் பரிதாபமாக.

"ஹோ உங்க ப்ரண்ட்ஸ் உங்கள படுத்துறாங்களா அவங்க கிட்ட போட்டு விடவா ரொம்ப பண்றடா வர வர. உனக்கு இருக்கு ஒரு நாள"் என்றவளை மேலும் சிறு நேரம் கொஞ்சி கெஞ்சி வெளியில் வரேன் என்று அவளின் வாயில் இருந்து வர வைத்து விட்டே போனை வைத்தான்.

தருண் காலை கட் செய்து விட்டான் என்றாலும் அதே நிலையில் தன்னிடம் தருண் காதலை சொன்ன சந்திப்பும் அடுத்து சில நாட்களில் இவள் காதலை ஏற்றுக்கொண்ட பொழுது தன்னவனின் செய்கைகளும் என யோசித்தவளின் இதழில் மென்னகை படறவும் வெளியில் கிளம்ப ஏதுவாக அலாரம் வைத்தவள் புன்னகையுடன் விட்ட தூக்கத்தினை தொடர்ந்தாள் தருணின் காதலி.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரான் மலை :


நான்கு மணி அளவில் கோயிலில் இருந்து அனைவரும் கிளம்பினர். வழக்கம் பெரியவர்கள் முன்னே செல்ல போல் வைஷுவும் விஷ்ணுவும் முன்னே இறங்கினர். ஷாலினியின் நாளைக்கு ஏற்ப தர்ஷன் பின் தங்க வந்தான்.


இவர்கள் இருவரும் மிக மெதுவாக நடப்பதால் அனைவரும் இவர்கள் கண் பார்வையில் இருந்து விலகி இருந்தனர். அவளின் மெதுவான அன்னநடையில் எப்பொழுதும் வேகத்தை கடைபிடிக்கும் தர்ஷன் பொறுமை இழந்தவனாக “அடியே கொஞ்சம் வேகமா தான் நடையேன் டி எல்லாரும் ரொம்ப தூரம் நடந்து போயிட்டாங்க நாம மட்டும் இப்டி அடிமேல அடி வச்சு போனோம்னு வை அப்பறம் நாளைக்கு தான் கீழ போகனும் போல,” என்று சலித்து கொண்டான்.


“ஹான் இவ்வளவு பேசுறவரு தூக்கிட்டு போக வேண்டியது தான, உங்களுக்கு என்னவாம் ஈஸியா சொல்லிடீங்க இவ்வளவு தூரம்லாம் நா நடந்தது இல்லை தெரியாம கால் எல்லாம் வலிக்கிது அத்தான்” என்று வம்பு இழுக்க ஆரம்பித்தவள் சிணுங்களாக முடித்தாள்.


தர்ஷனை பற்றி அறியாதவள் வம்புடன் தூக்கிட்டு போக வேண்டியது தான என்றவுடன் இவ்வளவு நேரம் தன்னவளிற்காகவும்,குடும்பத்தின் முன் தன் சேட்டைகளை காண்பிக்க விருப்பம் அல்லது கடைபிடித்த நல்ல பிள்ளை வேகத்தை விடுவித்தவன் சுற்றிலும் ஒரு முறை பார்த்தான். அவள் யோசிக்கும் முன் கையில் ஏந்தியவன் நடக்க ஆரம்பித்திருந்தான்.


திடீரென இப்படி தூங்குவான் என்று எதிர்பார்க்காதவள் பதட்டத்துடன் கீழ் இறங்க முயற்சி செய்தாள் ஷாலினி. உடற்பயிற்சி செய்து உடம்பை திடமாக வைத்திருப்பனுக்கு அவனிற்கு கொசு போல் இருப்பவளை தூக்குவது சிரமம் இல்லை. “நீயே ஆசையா தூக்குங்க அத்தானு கெஞ்சும் போது நான் எப்படி அம்மு மறுப்பேன். நானே நீ இப்படி யோசிக்கல டி உன்ன தூக்கனும்னு” என்று கன்னக்குழி விழ சிரித்தபடி நடந்தான்.


“அய்யோ அத்தான் என்னது இது தயவுசெஞ்சு கீழ இறக்கி விடுங்க ப்ளீஸ் உங்ககிட்ட இனி விளையாட்டுக்கு கூட பேச கூடாது போல. முன்னாடி எல்லாரும் போய்ட்டு இருக்காங்க யாரதும் பார்த்தா அவ்ளோ தான்” என்றாள் ஷாலினி. அவனோ அவளின் பேச்சினை கத்தி வாங்காதவன் “ஹே என்னடி இது காத்து மாதிரி இருக்க தூக்குறதுக்கு, அப்பறம் கல்யாணம் பண்ணுனா குழந்தை திருமணம்னு என்ன தூக்கிட்டு உள்ள வச்சிருவாங்க போல, சாப்பிட்டு உடம்பு தேத்து பேபிமா, அப்பறம் கஷ்டம்” என்று கண்ணடித்தபடி சொன்னவன் நடையை சிறிதும் தடை செய்யாது நடந்தான்.


அவனின் கைகளில் அவன் சொல்வது போல் குழந்தை என்று தான் இருந்தாள் அவனின் கூற்றில் கோபம் வந்தவளாக ஒரு துள்ளலுடன் இறங்க முயற்சி செய்தவளை இறங்க முடியாமல் செய்வது பெரிய விஷயமாக இருக்கவில்லை. எப்படியும் கீழே இறக்கி விட மாட்டான் யாரும் தங்களை காணும் வரையில் என்று அறிந்து கொண்டவளாக ஒரு கரத்தை தர்ஷனின் கழுத்திலும், மற்றொரு கரத்தை அவனின் மார்பிலும் வைத்து அமைதியாகவும்,அவன் கைகளில் இருக்கும்நிலையில் உண்டான வெட்கத்துடனும் இருந்தாள்.


தர்ஷனோ தன் கைகளில் இருந்து இறங்க முயற்சி செய்தவள் இப்பொழுது தன்னை அவள் பிடித்திருக்கும் விதமும் சிரிப்பை உண்டு பண்ண வாய்விட்டு சிரித்தவாறு “என்ன அம்மு இறங்கனும்னு பில்டப் பண்ணியது நான் உன்ன எதாவது நினைச்சிடுவேனு தான ட்ரை பண்ண, நான் உன்னோட அத்தான் தான் இப்படி உன்ன தூக்க எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு, அதே மாதிரி இந்த இப்படி உரிமையா பிடிக்க இந்த இடம் உனக்கு மட்டும் தான்,அதனால என்கிட்ட நோ ஃபார்மலிட்டிஸ்” என்றான்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவர்கள் இருவரையும் வெகு நேரம் காணாது அவர்கள் வந்தவுடன் சேர்ந்து செல்லலாம் என தூரத்தில் வைஷுவும் விஷ்ணுவும் பின்தங்கினர். தர்ஷன் தன் கைகளில் ஷாலினியை ஏந்தியவாறு வந்தவர்களை முதலில் பார்த்தது விஷ்ணு தான். வைஷு யாருடனோ மொபைலில் தீவிரமாக பேசியதால் கவனிக்கவில்லை. இருவரையும் அந்த நிலைமையில் கண்டதும் தீவிரமாக தன் மொபைலில் எதையோ கூகுலில் தேடினான் விஷ்ணு. தேடியது கிடைக்கவும் இருவரும் அருகில் வருவதற்கு காத்துக்கொண்டிருந்தான் விஷம சிரிப்புடன் .


தூரத்திலேயே விஷணுவை தர்ஷன் பார்த்து விட்டான். அதும் விஷ்ணு தங்களை கண்டு சிரிப்பதை பார்த்தவன்

விஷ்ணு இருக்கும் இடத்தை அடைய சில அடிகளே உள்ள நிலையில் எப்படியும் அவர்கள் அருகில் சென்றதும் கீழே இறக்கிவிட வேண்டும் என்று ஷாலினியின் நெற்றியில் அழுந்த தன் வலிய இதழ்களை இந்த ஒரே நாளில் இரண்டாவது முறையாக உணர்ச்சியின் தாக்கத்தில் பதித்தான்.


ஏற்கனவே தர்ஷனின் கரங்களில் இருப்பதால் ஒருவித பூரிப்போடும், மகிழ்வோடும், தர்ஷனின் முகத்தினை பார்த்தபடி இருந்ததால் விஷ்ணுவின் அருகில் நெருங்கி விட்டோம் என்பதனை அறியாதும், இப்பொழுது தர்ஷன் தன் இதழ் பதிக்கவும் கிரக்கத்துடன் கண்களை மூடிக்கொண்டாள்.


கனவா இல்லை காற்றா ..
கனவா நீ காற்றா ..

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலைய நீ

இப்படி உன்னை ஏந்தி கொண்டு
இந்திர லோகம் போய் விடவா
இடையில் கொஞ்சம் வலி எடுதாளும்ம்ம்ம்ம்
சந்திர தரையில் பாய் இடவா

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா நீ

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதல்லில் கூட எடை இழக்கும் இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி…..


என தன் மொபைலில் சத்தமாக, சற்று நேரம் முன்பு தர்ஷன் ஷாலினியை இந்த நிலையில் கண்டவுடன் கூகுள் பாபாவிடம் தேடி எடுத்த பாடலினை ஒலிக்க விட்டான். பாடலின் சத்தத்தில் கண்களை திறந்த ஷாலினி விஷ்ணு தங்கள் அருகில் இருப்பதை கண்டவள் தோன்றிய சங்கடமான நிலையை மறைக்க தர்ஷனின் மார்பிலேயே தன் முகத்தினை அழுந்த பதித்து கொண்டாள்.


பாடலின் சத்தத்தில் வைஷூவும் மொபைலை கட் செய்தவள் இவர்கள் அருகில் வந்து விட்டாள். “டேய் ஏன்டா, இத ஒரு வேலையா வேற பாட்ட டௌன் பண்ணி போடனுமா, இருந்தாலும் உனக்கு நாங்க நன்றி தான் சொல்லனும், எங்களை தனியா விட்டுட்டு முன்னாடி இறங்கியதுக்கு” என்று கண்ணடித்தபடி சொன்னான்.


“அதெல்லாம் சரி அண்ணா, இருந்தும் உங்க லவ்ஸ கோயில்ல வச்சு தான் காட்டனுமா என்ன, அம்மணிய இறக்கி விடுறது, இரண்டு சின்ன பிள்ளைங்க இருக்கோம்ல” என்று கலாய்க்க துவங்கினான். “லவ்ஸ காட்ட எந்த இடமா இருந்தா என்னடா உனக்கு பொறாமை எங்கள மாதிரி உன்னால முடியலனு” என்றபடி ஷாலினியை கீழே இறக்கி விட்டான்.


வைஷூவையும் விஷ்ணுவையும் பார்க்க இயலாது தர்ஷனின் கரத்தை இறுக பற்றிய படி தலைகவிழ்ந்து நின்றாள். “என்ன ஷாலு வெட்கமா,உனக்கும் அதெல்லாம் இருக்கா என்ன, சத்தியமா நீ வெட்கபடுறத பார்க்க முடியலமா” என்று கலாய்த்த விஷ்ணுவை தர்ஷனின் கரத்தை விலக்கியவள் துறத்த ஆரம்பித்தாள். பின் அனைவரும் சிரிப்புடன் கீழே இறங்க பெரியவர்கள் இவர்களுக்காக காத்திருந்ததால் அனைவரும் வரவே சந்நோஷ மனநிலையில் விடை பெற்று கொண்டு வீட்டிற்கு கிளம்பினர். விக்ரம் மட்டும் இவர்கள் நெருக்கத்தில் மனதில் எழுந்த வஞ்சத்துடன் கிளம்பினான்.


நீ வேண்டும் என்பதை தவிர வேறு சிறந்த வேண்டுதல் எனக்கு இல்லை



பூக்கும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் ப்ரண்ட்ஸ்,

ஒரு புன்னகை பூவே 14வது அத்தியாதத்துடன் வந்து விட்டேன். படித்தவிட்டு உங்களின் கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள். உங்களின் கருத்துகளுக்காக மீ வெய்டீங்.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கருத்துத் திரி

இப்படிக்கு

அன்புடன் உங்கள் Reybaby 😍😍😍
 
Status
Not open for further replies.
Top