கணவன் திரன் குழுமத்தை வளர்ப்பதற்குத் தனது சீமந்த புத்திரியையும், அவளது பிள்ளைகளையும் உதாசினப்படுத்துவதை அவர் ரசிக்கவில்லை. அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமையையும் சொத்து சுகங்களையும் கொடுக்கவில்லை என்ற கோபம் மனதின் உள்ளே கனன்று கொண்டிருக்கும். ஷிவேந்திரன் முன்பு தன்னுடைய மகள் வயிற்றுப் பேர பிள்ளைகள் பிச்சை காரர்கள் போல் நிற்பதைக் காண காணக் கணவனை விஷம் வைத்துக் கொன்றுவிடும் என்று வெறி வரும். ஆனால் அந்த தர்மேந்திரன் இல்லையென்றால் தான் இந்த சுபிக்ஷத்திற்குள் வாழ முடியாது என்பதை அவர் அறிவார். ஷிவேந்திரன் வாழ விடமாட்டான்! இங்குக் கணவனை காண வேண்டி வந்திருப்பதற்குக் காரணம் விமன்யா! ஆசை பேத்தி! கணவனிடம் பேச ஆரம்பித்தார் மேகவதி.
“விமிய பத்தி பேசனும்” என்று கணவனின் முகம் பார்த்தார் மேகவதி. தர்மேந்திரன் முகம் பார்த்து அவர் அதிகம் பேசுவதில்லை. அப்படிப் பேசினால் தனது மகளுக்காவும், அவளுடைய பிள்ளைகளுக்காகவும் மட்டும் தான் இருக்கும். தர்மேந்திரன் மேலே சொல் என்பது போல் அமைதியாக இருந்தார்.
“விமிக்கு மேரஜ் பண்ணனும். ஷிவ் அந்த ராஜகுமாரிய கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டான். இனிமே விமிய இப்படியே விட முடியாது அவளோட லைஃப் ஸ்பாயில் ஆகிடும். அவளுக்கு நல்ல மாப்பிள்ளை நீங்க பார்க்கனும்.
“பார்க்கலாம்.. பெரிய விஷயமில்லை மேகா.”
“அவ நம்ம பேத்தி. நம்ம ஸ்டேட்டஸ்ல பாருங்க.. ஆல்ரெடி ஷிவ்வ கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னு கோபத்துல இருக்கா.. அதனால பைத்தியம் மாதிரி அலையிறா. அப்படியே வேற ஒருத்தனை மேரேஜ் பண்ணாலும் ஷிவ்வவிட எல்லா விதத்திலையும் பெஸ்ட்டா ஒருத்தனை தான் பண்ணிக்குவாளாம். அடிச்சி சொல்லிட்டா.”
“ஓ..! நோ பிராப்ளம் அவளையே அப்படி ஒரு மாப்பிளையை பார்த்துக்கச் சொல்லு. நாம சந்தோசமா போய் மேரஜ் அட்டெண்ட் பண்ணிட்டு வரலாம்.”
“என்ன விளையாடிறிங்களா?” கணவனிடம் சீறினார் மேகவதி.
“லுக் மேகா, அவங்க அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி தான் ஆசைப்படனும். ஷிவ்வ கல்யாணம் பண்ணிக்க என்ன தகுதியிருக்கு விமன்யாவுக்கு? அத்தை பொண்ணுன்றது எல்லாம் தகுதி கிடையாது. இதுவே ஷிவ் வசதியில்லாதவனா சாதாரண ஒரு கிளார்க்கா இருந்தா உன் பேத்தி இப்படி கல்யாணம் பண்ண ஒத்த காலுல நிப்பாளா? உன் பொண்ணும், மருமகனும் நம்ம வீட்ல பழியா கிடப்பாங்களா? அவங்களுக்கு வாழ்க்கையில பொழைக்க வழி தெரியலை, அதுக்கு ஷிவ்கிட்ட ஒட்டிக்க பாக்குறாங்க. அவன் ஒன்னும் சுகுணாயில்லை அப்படியே நீங்க உருக்கமா ஆடுற நாடகத்தை நம்பி மோசம் போறதுக்கு. ஹீ இஸ் ஷிவ்! நியாயம் அநியாயத்தைப் பத்தி நான் பேசல. பட் ஷிவ் டிசைட் பண்ண ஒரு விஷயத்தை நான் மாத்த மாட்டேன்.”
மேகவதியின் முகம் கறுத்துவிட்டது, ஆனால் கணவனிடம் தன் மகளை விட்டுக் கொடுக்காது. “இங்க பாருங்க, அவ சொன்னதை நான் சொன்னேன். அவ சின்ன பொண்ணு மனசுல நடக்காத ஆசைய வளர்த்துக்கிட்டா. அதுக்கு நாமளும் ஒரு விதத்தில காரணம் அதை மறுக்கவோ மறக்கவோ வேண்டாம். இப்போ நான் கேக்கறது, நம்ம அந்தஸ்துக்கு ஓரளவுக்கு கிட்ட நிக்க கூடிய இடத்தில விமிக்கு சம்பந்தம் பண்ணனும்.”
“ரகுவரன் மகளாகத்தான் எல்லாரும் பார்க்குறாங்க.”
“தர்மேந்திரன் பேத்தியா பார்க்கவைங்க.”
"எல்லாரும் பணமும் பாரம்பரியமும் எதிர்பார்க்குறாங்க. இன்னாருடைய வீட்ல சம்பந்தம் பண்ணறோம்னு வெளில மதிப்பா சொல்லிக்க ஆசைப்படுறாங்க. அப்படி பார்த்தா உன் மருமகன் ரகுவரன் போல தான் ஒருத்தன் கிடைப்பான் பராவாயில்லையா??”
“ஹக் தி கிரேட் கஜேந்திரனோட பேத்திக்கு, ஃபேமஸ் இண்டஸ்டிரியலிஸ்ட் தர்மேந்திரனோட மகளுக்கு ரகுவரன் தான் கிடைச்சான்!”
“இல்லைன்னு யாரு சொன்னா! எங்க பிள்ளைக்கே இப்படின்னா ரகுவரனோட பிள்ளைங்களுக்கு எப்படிப்பட்ட பிள்ளைங்க கிடைக்கும்! யோசிக்கனும்..”
“நாம இங்க ஆர்கியு பண்ண வரலை...என் மகளுக்கு வந்த நிலை என் மக வயித்து பேரப் பிள்ளைகளுக்கு வரக் கூடாதுன்னு நினைக்கிறேன்!” என்றார் கரகரத்த குரலில் மேகவதி கலங்கிய கண்களுடன்.
.
மனைவியின் அந்தக் குரலில் தன் கண்களை மூடிக் கொண்டு தலையைப் பின்னுக்கு சாய்த்துக் கொண்டார்.
“ராஜேந்திரன் சுகுணாவோட பிள்ளைங்க விஷ்வேந்திரனும் ரூபாதேவியும் நமக்குச் சமமான அந்தஸ்துல இருக்கிற குடும்பத்தில ஓஹோனு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஷிவேந்திரன் இவங்களுக்கு ஒரு படி மேலே போய் ராஜவம்சத்தில கல்யாணம் பண்ணிக்க போறான். இதெல்லாம் எப்படி நடக்குது. ராஜேந்திரன் சுகுணாவுக்கு கணவனா அமைஞ்சதால தான். வசுந்தராவுக்கு நாம கவுரவத்தை காப்பத்துறோம்னு எவனோ ஒரு கையாலாகதவன கட்டி வச்சிட்டோம்!.
ராஜேந்திரன் செஞ்ச தப்புக்கு என் மகளும் அவளுடைய பிள்ளைகளும் தண்டனை அனுபவிக்கிறாங்க. சுகுணா! அவ இன்னைக்கு ஜெ.எம்.டியா இருக்கா, எதனால? திறமையான புருஷனால! ஒன்னுமில்லாம வந்தவ, அவ பிறந்த வீட்டுல இருந்து ராஜ் ஒத்த பைசா வாங்கல. அவளை ராணி மாதிரி பார்த்துக்கிறான். அவளுக்கு அப்புறம் தான் பிள்ளைகளுக்கு சிவகாமி இண்டஸ்டிரீஸ் அப்படின்னு அவளுக்காக யோசிச்சி உயில் எழுதி வச்சிட்டான். கண்ணோட இமை போல வச்சு காப்பாத்துறான். வாழ்க்கைப்பட்டா அப்படியொரு புருஷனுக்கு வாழ்க்கைபடனும்! வசுந்தராவிற்கு நாம என்ன மாதிரி வாழ்க்கை அமைச்சுக் கொடுத்திருக்கோம்னு யோசிச்சு பாருங்க. வசுவுக்கு கிடைக்காத அந்த நல்வாழ்வை விமிக்கும், வசந்துக்கும் கொடுக்கனும். நாம செய்யாம தவறவிட்டதை நம்ம பேத்திக்காக பேரனுக்காக செய்யனும்... நீங்க அதுக்கான வேலையைச் செய்யுங்க.. என் பேத்தி பேரன் நல்ல இடத்தில வாழ்க்கைப்பட்டு நல்லா இருக்கனும். அதை தவிர உங்ககிட்ட கேட்க எனக்கு எதுவுமில்லை” என்று அமைதியான குரலில் தன்னுடைய கோரிக்கையை(?) முன் வைத்தவர், கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறையைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டார்.
தர்மேந்திரன் அசையாமல் அமர்ந்திருந்தார். மனைவி சுற்றி வளைத்து நீயும் குற்றவாளி தான் என்று சொல்லிவிட்டுச் சென்றது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தியாகத் தெரியவில்லை. ஆனால் வசுந்தராவின் வாழ்வில் நடந்த அவலங்களுக்கு ஒரு தந்தையாக அவரும் காரணியே என்பதால் மனைவியின் கோரிக்கையைப் பற்றிச் யோசிக்கலானார். ஒரு சில நிமடங்களில் யோசனையில் இருந்து விடுபட்டவராக தன்னுடைய அலைபேசியிலிருந்து தன்னுடைய நெருங்கிய நண்பனுக்கு அழைப்பு விடுத்தார்.
விமன்யா இன்னொரு வசுந்தராவா அல்லது சுகுணாவா?
கருப்பு அழகி வருவாள்…
“விமிய பத்தி பேசனும்” என்று கணவனின் முகம் பார்த்தார் மேகவதி. தர்மேந்திரன் முகம் பார்த்து அவர் அதிகம் பேசுவதில்லை. அப்படிப் பேசினால் தனது மகளுக்காவும், அவளுடைய பிள்ளைகளுக்காகவும் மட்டும் தான் இருக்கும். தர்மேந்திரன் மேலே சொல் என்பது போல் அமைதியாக இருந்தார்.
“விமிக்கு மேரஜ் பண்ணனும். ஷிவ் அந்த ராஜகுமாரிய கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டான். இனிமே விமிய இப்படியே விட முடியாது அவளோட லைஃப் ஸ்பாயில் ஆகிடும். அவளுக்கு நல்ல மாப்பிள்ளை நீங்க பார்க்கனும்.
“பார்க்கலாம்.. பெரிய விஷயமில்லை மேகா.”
“அவ நம்ம பேத்தி. நம்ம ஸ்டேட்டஸ்ல பாருங்க.. ஆல்ரெடி ஷிவ்வ கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னு கோபத்துல இருக்கா.. அதனால பைத்தியம் மாதிரி அலையிறா. அப்படியே வேற ஒருத்தனை மேரேஜ் பண்ணாலும் ஷிவ்வவிட எல்லா விதத்திலையும் பெஸ்ட்டா ஒருத்தனை தான் பண்ணிக்குவாளாம். அடிச்சி சொல்லிட்டா.”
“ஓ..! நோ பிராப்ளம் அவளையே அப்படி ஒரு மாப்பிளையை பார்த்துக்கச் சொல்லு. நாம சந்தோசமா போய் மேரஜ் அட்டெண்ட் பண்ணிட்டு வரலாம்.”
“என்ன விளையாடிறிங்களா?” கணவனிடம் சீறினார் மேகவதி.
“லுக் மேகா, அவங்க அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி தான் ஆசைப்படனும். ஷிவ்வ கல்யாணம் பண்ணிக்க என்ன தகுதியிருக்கு விமன்யாவுக்கு? அத்தை பொண்ணுன்றது எல்லாம் தகுதி கிடையாது. இதுவே ஷிவ் வசதியில்லாதவனா சாதாரண ஒரு கிளார்க்கா இருந்தா உன் பேத்தி இப்படி கல்யாணம் பண்ண ஒத்த காலுல நிப்பாளா? உன் பொண்ணும், மருமகனும் நம்ம வீட்ல பழியா கிடப்பாங்களா? அவங்களுக்கு வாழ்க்கையில பொழைக்க வழி தெரியலை, அதுக்கு ஷிவ்கிட்ட ஒட்டிக்க பாக்குறாங்க. அவன் ஒன்னும் சுகுணாயில்லை அப்படியே நீங்க உருக்கமா ஆடுற நாடகத்தை நம்பி மோசம் போறதுக்கு. ஹீ இஸ் ஷிவ்! நியாயம் அநியாயத்தைப் பத்தி நான் பேசல. பட் ஷிவ் டிசைட் பண்ண ஒரு விஷயத்தை நான் மாத்த மாட்டேன்.”
மேகவதியின் முகம் கறுத்துவிட்டது, ஆனால் கணவனிடம் தன் மகளை விட்டுக் கொடுக்காது. “இங்க பாருங்க, அவ சொன்னதை நான் சொன்னேன். அவ சின்ன பொண்ணு மனசுல நடக்காத ஆசைய வளர்த்துக்கிட்டா. அதுக்கு நாமளும் ஒரு விதத்தில காரணம் அதை மறுக்கவோ மறக்கவோ வேண்டாம். இப்போ நான் கேக்கறது, நம்ம அந்தஸ்துக்கு ஓரளவுக்கு கிட்ட நிக்க கூடிய இடத்தில விமிக்கு சம்பந்தம் பண்ணனும்.”
“ரகுவரன் மகளாகத்தான் எல்லாரும் பார்க்குறாங்க.”
“தர்மேந்திரன் பேத்தியா பார்க்கவைங்க.”
"எல்லாரும் பணமும் பாரம்பரியமும் எதிர்பார்க்குறாங்க. இன்னாருடைய வீட்ல சம்பந்தம் பண்ணறோம்னு வெளில மதிப்பா சொல்லிக்க ஆசைப்படுறாங்க. அப்படி பார்த்தா உன் மருமகன் ரகுவரன் போல தான் ஒருத்தன் கிடைப்பான் பராவாயில்லையா??”
“ஹக் தி கிரேட் கஜேந்திரனோட பேத்திக்கு, ஃபேமஸ் இண்டஸ்டிரியலிஸ்ட் தர்மேந்திரனோட மகளுக்கு ரகுவரன் தான் கிடைச்சான்!”
“இல்லைன்னு யாரு சொன்னா! எங்க பிள்ளைக்கே இப்படின்னா ரகுவரனோட பிள்ளைங்களுக்கு எப்படிப்பட்ட பிள்ளைங்க கிடைக்கும்! யோசிக்கனும்..”
“நாம இங்க ஆர்கியு பண்ண வரலை...என் மகளுக்கு வந்த நிலை என் மக வயித்து பேரப் பிள்ளைகளுக்கு வரக் கூடாதுன்னு நினைக்கிறேன்!” என்றார் கரகரத்த குரலில் மேகவதி கலங்கிய கண்களுடன்.
.
மனைவியின் அந்தக் குரலில் தன் கண்களை மூடிக் கொண்டு தலையைப் பின்னுக்கு சாய்த்துக் கொண்டார்.
“ராஜேந்திரன் சுகுணாவோட பிள்ளைங்க விஷ்வேந்திரனும் ரூபாதேவியும் நமக்குச் சமமான அந்தஸ்துல இருக்கிற குடும்பத்தில ஓஹோனு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஷிவேந்திரன் இவங்களுக்கு ஒரு படி மேலே போய் ராஜவம்சத்தில கல்யாணம் பண்ணிக்க போறான். இதெல்லாம் எப்படி நடக்குது. ராஜேந்திரன் சுகுணாவுக்கு கணவனா அமைஞ்சதால தான். வசுந்தராவுக்கு நாம கவுரவத்தை காப்பத்துறோம்னு எவனோ ஒரு கையாலாகதவன கட்டி வச்சிட்டோம்!.
ராஜேந்திரன் செஞ்ச தப்புக்கு என் மகளும் அவளுடைய பிள்ளைகளும் தண்டனை அனுபவிக்கிறாங்க. சுகுணா! அவ இன்னைக்கு ஜெ.எம்.டியா இருக்கா, எதனால? திறமையான புருஷனால! ஒன்னுமில்லாம வந்தவ, அவ பிறந்த வீட்டுல இருந்து ராஜ் ஒத்த பைசா வாங்கல. அவளை ராணி மாதிரி பார்த்துக்கிறான். அவளுக்கு அப்புறம் தான் பிள்ளைகளுக்கு சிவகாமி இண்டஸ்டிரீஸ் அப்படின்னு அவளுக்காக யோசிச்சி உயில் எழுதி வச்சிட்டான். கண்ணோட இமை போல வச்சு காப்பாத்துறான். வாழ்க்கைப்பட்டா அப்படியொரு புருஷனுக்கு வாழ்க்கைபடனும்! வசுந்தராவிற்கு நாம என்ன மாதிரி வாழ்க்கை அமைச்சுக் கொடுத்திருக்கோம்னு யோசிச்சு பாருங்க. வசுவுக்கு கிடைக்காத அந்த நல்வாழ்வை விமிக்கும், வசந்துக்கும் கொடுக்கனும். நாம செய்யாம தவறவிட்டதை நம்ம பேத்திக்காக பேரனுக்காக செய்யனும்... நீங்க அதுக்கான வேலையைச் செய்யுங்க.. என் பேத்தி பேரன் நல்ல இடத்தில வாழ்க்கைப்பட்டு நல்லா இருக்கனும். அதை தவிர உங்ககிட்ட கேட்க எனக்கு எதுவுமில்லை” என்று அமைதியான குரலில் தன்னுடைய கோரிக்கையை(?) முன் வைத்தவர், கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறையைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டார்.
தர்மேந்திரன் அசையாமல் அமர்ந்திருந்தார். மனைவி சுற்றி வளைத்து நீயும் குற்றவாளி தான் என்று சொல்லிவிட்டுச் சென்றது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தியாகத் தெரியவில்லை. ஆனால் வசுந்தராவின் வாழ்வில் நடந்த அவலங்களுக்கு ஒரு தந்தையாக அவரும் காரணியே என்பதால் மனைவியின் கோரிக்கையைப் பற்றிச் யோசிக்கலானார். ஒரு சில நிமடங்களில் யோசனையில் இருந்து விடுபட்டவராக தன்னுடைய அலைபேசியிலிருந்து தன்னுடைய நெருங்கிய நண்பனுக்கு அழைப்பு விடுத்தார்.
விமன்யா இன்னொரு வசுந்தராவா அல்லது சுகுணாவா?
கருப்பு அழகி வருவாள்…