All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி மா, congrats.. ஒரு full fledged லவ் ஸ்டோரி..காதல் என்பது காதலிப்பவரின் குறைகளையும் காதலிப்பது.. அதை நல்ல சொல்லி இருக்கீங்க..
லைஃப் ல எல்லாம் perfect -ஆ அமைந்திடாது..கௌதம் அங்குள்ள கலாசாரத்தில் சற்று ஊரியவன்..தேனு சரியான மாமி..சொந்த பந்தங்கங்களுடன் வாழ்ந்து ஒரு வட்டத்தில் இருந்து பெரிய உலகை பார்க்கும் கொஞ்சம் குழப்பவாத நாயகி..

சரி, தவறு தெரிந்தாலும் உணர்ச்சி வசப் பட்டு செய்து விட்டு பின்னர் வருந்துபவள்..

அவளை அவள் போக்கில் விடவும் முடியாமல், தன்னுடன் இணைத்து வாழ
கடைசியில்அவள் சம்மதித்தாலும் கொஞ்சம் ego கௌதம் க்கு...

அதுக்கு தேனு பண்ணின புது வித wallet இஸ்கிங் செம சிரிப்பு..கடைசி வரை அவள் குழந்தைத்தனம் மாறாது தான் highlight..

கௌதம் கரெக்டா சுவத்துல முட்டிக்கிட்டான்..அண்ட் அவன் இந்தியா திரும்பி வந்தது...நிறைய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பண்ணினால் நல்லா இருக்கும்...

மொத்தத்தில் ஒரு lively ஸ்டோரி
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

கதைக்கு முழுவதும் விமர்சனம் கேட்ருக்கீங்க. சிம்பிளா சொல்லனும்னா லவுலி லவ் ஸ்டோரி. :love::love::love::love:

தேனு கேரக்டர் சராசரி பெண்களின் கனவுகளுடன் வலம் வந்தவள். சினிமா, தொழில் என்று வலம் வரும் ஆண்களை கனவு நட்சத்திரங்களாக கொண்டு கனவு காண்பது, அவர்களை ஒரு தடவையாது சந்திக்க வேண்டும் என்று ஆசை படுவது. அப்படி ஒருவனை சந்திக்க நேர்ந்ததால் அவளையும் மீறி அவள் உணர்வுகள் பேசியது. உலகமே கொண்டாடும் ஒருவன் தன்னை கொண்டாடுவதில் அவள் வானத்தில் பறந்தாள். அதில் அவனின் உண்மை காதல் புரியாமல், திருமணத்திற்கு சம்மதித்தது. எல்லாம். அவனின் உண்மை வாழ்க்கை முறை பார்த்ததும் பயத்தில் அவனை பிரிய முடிவு எடுத்தது என்று எதுவும் அவள் உணர்ந்து பண்ணாமல் போனது தான் விபரீதம்.

பிறகு இங்கு வந்து அவள் வழக்கத்தோடு ஒன்றியபிறகு அவள் தொலைத்தது ஒரு பொக்கிஷம் என்று தெரிய அதை இழந்து விட்டோமே என்று ஒவ்வொரு முறையும் தவிப்பது, ஒரு முடிவோடு அதை சரி செய்ய நினைப்பது, ஆனால் இது எந்த ஒரு இடத்திலும் அவள் குழந்தை தனம் மாறாமல் இருப்பது என்று ரசிக்க வைக்கிறாள்.

கெளதம் ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே என்ட்ரி சாங் போட்டு அவனை காட்டி இருக்கணும் . ஓகே ஓகே நானே போட்டுகிறேன் ராஜிமா. உண்மை காதலை தேடி தோற்றுபோனவன், கடைசியில் அதை தேனுவிடம் கண்டு மயங்கி அவளை தனதாக்கி கொண்டாடுகிறான். இதில் எங்கே அவன் தோற்றுப்போனான் என்பது புதிர் தான். அவனின் இயல்பை அவளுக்காக மாற்றாமல் தனது உள்ளத்து காதலை மட்டும் கடைசி வரை அவளிடம் காட்டி வெற்றி பெறுகிறான்.

அவளை ரசிப்பது, அவளை வெறுக்க முடியாமல் தவிப்பது, அவளை பிரிவது இதில் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் அவளுக்காக எல்லா பழியையும் அவன் மேலே போட்டு கொள்வது என்று சும்மா அள்ளுறான்.:smiley2::smiley2::smiley2::smiley2: ஆனா கடைசியில் கம்பியில் முட்டிக்கொண்டானே அது தான் செம்ம. :smiley28:

அலமு க்கு இருந்த புரிதல் தேனுவுக்கு இருந்திருந்தால் அவள் தொலைத்து இருக்க மாட்டாள்.. ஆனால் அவள் தொலைக்கவில்லை என்றால் எங்களுக்கு ராஜிமா இப்படி ஒரு கதையை கொடுத்தும் இருக்க மாட்டார்கள்..

ராஜிமா ஆயிரம் முத்தங்கள் உங்களுக்கு.:Puszi::Puszi: என் சார்பாக அன்பு அண்ணனிடம் வாங்கி கொள்ளுங்கள். ஹா ஹா .. ஏதோ என்னக்கு புரிந்த வகையில் சொல்லியிருக்கேன்
 
Last edited by a moderator:
Gautam is different compare to other novel heros. They have been always described as ultimate and egoestic personality. Our Gautam from first until end carries same loving character. He managed to win Thenu's heart by just pouring his love and not even a single anger comes in between. Really love his
character. Keep rocking and eagerly waiting for nt story. ??
 

Jerusha

New member
Sprb story mam...gowtham romba impress panna character thenu vida...first la irunthu story mudiura vara entha oru confusion um illama love pannite irunthan...thenu character enaku last la than pidichathu...but last la neenga thenu yen apdi irunthanu ovvoru scene laum gowtham ku mattum illama enakum puriya vacha mathri irunthuchi...sprb romantic story:love:...
 

Uma manoj

New member
ராஜி...ஒரு வேண்டுகோள். .
நான் எப்போதும் கதை முடிந்ததும் தான் படிப்பேன்,
இப்போ தான் கதை முடிந்ததை பார்த்தேன்..இப்போ படிக்க துவங்கினாலும் இரண்டு நாட்கள் ஆகும் முடிய..ப்ளீஸ் தயவு செய்து புதன்கிழமை இரவு வரை லிங்க் வைக்கவும். அதற்குள் முடித்து விடுகிறேன் பா..கமெண்ட்ஸ் விமர்சனம் படிக்கும் போது கதை படிக்க மிக மிக ஆவலாக உள்ளேன் ..
வேண்டுகோளை ஏற்கவும் பா..அப்புறம் படிக்கும் போதே லிங்க் எடுத்துடப் போறீங்க
 

arathana

Member
Really interesting and happy ending story. Hero Gowthum lovable and caring person. He is attract each other. Including me. Then honey usual typical Indian woman. I like each other character. Different corrector . “Opposite poles attract each other. “ it’s proof for your story last not but aleast line they are ever green couple for our life.
 
Top