அத்தியாயம் 20.
உயிரே....
உன் பிரிவு என்னை நடை பிணமாக்குகிறது...
உன் நினைவுகள்...
என்னை நிலைகுழைய செய்கிறது...
உன் சுவாசம் கலக்காமல்...
காற்றையும் ஏற்க மறுக்கிறது என் நாசி....
உன் தீண்டலின் தீந்தளிர்கள் மட்டுமே....
என்னை உயிர் வாழவைக்கிறது....
உன் நினைவுபரிசுகள்...
உன்னை என் நெஞ்சுக்கு நெருக்கமாக்குகிறது.......
உன் காதல் கடிதங்கள்....
என்னை காப்பாற்றும் காகிதங்கள் ஆகிறது....
உன் வார்த்தைகள்...
என் மரணத்தையும் ஜனிக்க செய்கிறது....
இதுவரை கிடைக்காத அனுபவம்...
உன் பிரிவு....
இதுவரை சிந்தாத கண்ணீர்....
உன் பிரிவு....
இதுவரை மறந்த மகிழ்ச்சி...
உன் பிரிவு..
இதுவரை மறுக்கப்பட்ட உண்மை...
உன் பிரிவு....
இனியும் தாங்க முடியாத ஒன்று...
உன் பிரிவு...
என் இத்துணை இன்னல்களுக்கும்....
உன் நினைவு ஒன்றே மருந்தாக....
காத்திருக்கிறேன்...
காட்டாயம் காண்பேன் என்று கண்ணுக்குள் மட்டும் உயிர் கொண்டு........
ஒரு மணி நேரம் கழித்து முழித்தவள் விஷ்வாவை பார்த்தாள் . அவன் இன்னும் படுத்த நிலையிலிருந்து ஒரு இன்ஜி கூட நகராமல் அசந்து தூங்கி கொண்டிருந்தான்.
அவன் கைகள் மட்டும் அகலியின் தலைய தன் நெஞ்சோடு அழுத்தி பிடித்திருந்தது..
(பயபுள்ள அவளை தாண்டின கேடிய இருப்பான் போல ..தூக்கத்திலே ரொமான்ஸ் பண்ணிகிட்டு திரியுது)
மெதுவாக அவன் கையிலிருந்து தன்னை உறுவிக்கொண்டவள் அவன் நெற்றில் அழுந்த முத்தம் கொடுத்துவிட்டு
அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும்....
அவன் மார்பின் முடிகள் பிடிக்கும்...
ஐயோ சந்தன நிறமோ பிடிக்கும்...
அவன் சாய்கின்ற நடையும் பிடிக்கும்....
என் அவனுக்கு மட்டும் யானை பலத்தில் நூறு மடங்காச்சி.....
அவன் ஒருவிரல் பட்டு நொறுங்கிடவே என் உயிரை வளர்த்தேனே........
என்று அவன் உதடு , மார்பு, அவன் கன்னம் என்று வருடிக்கொண்டே அவனை காதலிக்க ஆரம்பித்த நாள் முதலாய் தான் விரும்பி கேட்கும் பாடலை மென்மையாக பாடினாள் .
(டேய் கும்பகர்ண அவள் விட்ட உன்னை ரேப் பண்ணிடுவாள் போல ...நீ இன்னும் தூங்கிட்டு இருக்க ,மாறி மாறி தூங்கி ஏன் என் உயிரை வாங்கி என்னை டபுள் ட்யூட்டி பார்க்க வைக்கிறீங்க என்று விதி காண்டாயி கத்திக்கொண்டிருந்தது)
அகலி ஊரிலிருந்து வந்ததே அவனிடம் தன் காதலை சந்தோஷை வைத்துக்கொண்டே சொல்லத்தான்...ஆனால் அவன் இல்லாத இந்த இரண்டு நாட்கள் அவனின் STD யை திருப்பி பார்த்ததில் அவள் உணர்ந்தது விஷ்வா அவனிடம் ப்ரொபோஸ் செய்த எந்த பெண்களையும் அசட்டை கூட செய்யாததைதான்...
அதிலும் நம்ம இந்த விஷயத்தில் ரொம்ப வீக்காக இருப்பதால் என்ன செய்வது , எப்படி செய்வது என்ற தீவிர யோசனைக்கு பின்
மாமாவை அவ்வளவு ஈசியாக ஒத்துக்கொள்ள வைக்க முடியாது என்றும் அவனை டார்ச்சர் செய்தே காதலை ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும் என்று பிளானை ரெடி செய்தும் விட்டாள் .
( உண்மையெல்லாம் நீ செய்ய போறேதேல்லாம் டார்ச்சர்தான்மா பாவம் விச்சிக்குட்டி)
ஆனால் அவளுக்கு தெரியவில்லை அவள் காதல் மற்றவர்களை போல் அல்ல என்பது..அது அவளின் மனம் போல் தூய்மையானது என்றும் ,தாய் பால் போல் கலப்படம் இல்லாதது என்றும் ,இனக்கவர்ச்சி,கார்மோன் பிரச்சனை ,பணம் ,அழகு , ஏன் காதலை கூட அடிப்படையாக கொள்ளாமல் அன்பை மட்டுமே அடிப்படையாக கொண்ட அதிசயம் என்று..அவளை பார்த்த முதல் நாளே விஷ்வா தலை குப்பற விழப்போகிறான் என்றும்.
அவளுக்கு தெரியவில்லை எதையும் எதிர் பார்க்காமல் கண்களில் காதலையும் ,அன்பையும் ,உண்மையையும் நிரம்ப கொண்டு கூறப்படும் காதல் கல்மனம் கொண்டவனை கூட கரைத்துவிடும் என..
விஷ்வாவின் ரூமை விட்டு வெளியே வந்தவள் ஹாலில் அமர்ந்து கொண்டாள் .அதன் பின் சந்தோஷ் வந்து ஊருக்கு இருவரும் கிளம்பும் வரை அவன் தூங்கி விழித்தபாடாய் இல்லை....
சந்தோஷ் அவனை எழுப்பி உனக்கு அறிமுகம் கொடுக்கிறேன் என அவன் விஷ்வாவின் அறையை நோக்கி செல்லும் போதுகூட
அவனை தடுத்து "அந்த நெட்ட கொக்கை அடுத்த முறை பார்த்துக்கிறேன் , பாவம் ரொம்ப டையர்டா வந்ததுலிருந்து தூங்கிறான் ,ரொம்ப வேலை போல " என்று அவனை தடுத்துவிட்டாள்..
சந்தோஷ் குளிக்க போன கேப்பில் மீண்டும் தன் மாமனை கண்களில் நிரப்பி கொண்டு வந்துவிட்டாள்..ஏனென்றால் அவளின் பிளான் படி மீண்டும் விஷ்வாவை காண ஒருவருடம் ஆகுமே
( அப்ப இப்ப பார்க்க மாட்டாங்களா..... ஏன் மா ரைட்டர் என்ன மா நீ....இப்படி பண்ற )
நீ இவளோ சீரியஸலாம் யோசிக்காத அகலி எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது என அவள் மனசாட்சி அவளை கிண்டல் செய்தது...
( நாங்களும் தான் ...ஹா ஹா ஹா )
அவளின் மனசாட்சியை " நீ மூடப்பா " என்று அடக்கிவிட்டு ,கார் புக் செய்கிறேன் என்றவனை "நான் பஸ்லதான் போவேன்" என்று அழுது அடம்பிடுத்து இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள் கோயபேடிற்கு.
வீட்டிலையே அவள் ஈஸியா ஏமாற்றும் ஒரே நபர் நம்ம சந்தோஷ்தான்
அவள் லேசாக கலங்கி கொண்டு எதையாவது சொன்னால் தன் தலைமேல் கொண்டு அதை செய்து முடிப்பவன் ...
அவர்கள் சென்று 2 மணிநேரம் கழித்து எழுந்த விஷ்வாவிற்கு மனதெல்லாம் விவரிக்க முடியாத ஒரு புத்துணர்ச்ச்சி , நிறைவு அந்த மச மச கனவும், உள்ளங்கை கத கதப்பும் தந்த உவகையில் மிதந்து கொண்டிருந்தான் என்றால் மிகை இல்லை.
அந்த கனவு மீண்டும் வேண்டும் என்று சாப்பிட்டு சந்தோஷின் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பிவிட்டு தூங்க சென்றுவிட்டான். அதோ பரிதாபம் அவன் கனவு அழகூரை நோக்கி சென்று கொண்டிருந்தது..
( அடக்கிறுக்கு பயலே அதுக்கு தான் காலையிலிருந்து சாய்ங்காலம் வரை தூங்கினியாக்கும்... முழிச்சி இருந்தாலே உனக்கு அது நினைவாவே ஆகிருக்குமே )
***********************************************************
கண்ணன் (விச்சுவின் அண்ணன் ) தான் ஒரு வருடமாக ஓடாய் உழைத்து
கரெக்ட் செய்த தன் மாமியை தன் புல்லட்டில் வைத்துகொண்டு காபாலீஸ்வரர் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
"ஏன் டி மாமி லவ் பண்ற பையனை எங்கையாவது பீச் ,பார்க்கினு அழைச்சிட்டு போகாம எப்ப பாரு கோவிலுக்கு அழைச்சிட்டு போறா", என்று புலம்பிக்கொண்டே வந்தான்.
"ஏன்னா சித்த பேசாம போறேளா , இன்னைக்கு பிரதோஷம் கோவிலுக்குதான் போகணும் , நானே யாரவது பார்த்துடுவாங்களோனு பயந்துகிட்டே வரேன்", என்றாள் கண்ணனின் காதலி ருக்கு , ருக்மணி அக்மார்க் ஐய்யராத்து மாமி .
பேசிக்கொண்டே செல்லும்போது பின்னாடி வந்த தண்ணீர் லாரி சத்தமாக ஹாரன் அடிக்க , தீடீரென்று கேட்ட சத்தத்தில் ருக்கு பயந்து பைக்கை ஒரு ஆட்டு ஆட்டி கண்ணனின் தோளையும் , இடுப்பையும் இறுக்கி பிடிக்க ,பைக் ஆடியதால் கண்ணன் தடுமாறி போய் பிளாட்பார்மில் பைக்கை மோதி நிறுத்தினான் .
வேகமாக இறங்கி "உனக்கு எத்தனை தட சொல்றது இப்படி சின்ன சத்தத்துக்கெல்லாம் பயப்படாதான்னு இந்நேரம் எவன் மேலாவது மோதி பரலோகத்திற்கோ, போலிஷ் ஷ்டேசனுக்கோ போயிருக்க வேண்டியது ஜஸ்ட் மிஸ் " என்று அவளை திட்ட அப்பொழுதுதான் கவனித்தான் அவள் இன்னும் நடுங்கி கொண்டிருந்ததை.
அவள் கையை பிடித்து அருகே அருகில் இழுத்தவன் " சாரி டா நீ இப்படி பயந்தாகொல்லியா இருந்தா ,எங்க அம்மாவை வீட்ல உள்ளவங்களை எல்லாம் எப்படி சமாளிப்ப , நீதான குடும்பத்துக்கு மூத்த மருமகள்,தைரியமா இருக்கணும் சரியா " என்று வருடத்தின் நூறாவது முறையாக அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தான் , சிரிப்புடன்
"இல்லைணா இந்த ஹாரன் சவுண்ட் கொஞ்சம் ஹெவியா இருந்தது, சாரி " என்றாள் இன்னும் பயம் குறையாமல்...
( அப்பா இப்பதான் கதையில முதலா ஒரு பொண்ணு அடக்க ஒடக்கமா இருக்குப்பா ,),
" என் மண்டு மாமி தண்ணீர் லாரி சவுண்ட் அப்படித்தான் இருக்கும் ,எல்லாம் கோப்பன சொல்லணும் வீட்டுக்குள்ளயே வளர்த்து ,வளர்த்து ஸ்கூல், காலேஜ் , இப்ப வேலை பாக்குற ஸ்கூல் வர எல்லாம் அடி வாசலிலேயே சேர்த்துவிட்டுருக்கான்,அப்பறம் இப்படித்தான் இருப்ப ".....
( ஆனா ஊன இந்த ஆம்பிளைங்களுகெல்லாம் மாமனாரை திட்டலைனா தூக்கம் வராதே ")
"உன் பயத்துல இருக்குற ஒரே ஒரு நல்ல விஷயம் நான் உன்னை முதல் முதல் பார்த்தது நீ பயந்து கத்தும் போதுதான்"என்று கூறி அவளை அணைத்து கொண்டான் .
ஆம் ஒரு முறை அவன் கோவில் செல்லும் போது கோவிலுக்கு வந்திருக்கும் ஒரு பெண்மணியின் கையில் உள்ள வெங்கல அர்ச்சனை கூடை தவறி கீழே விழுந்த போது பயத்தில் அவள் "அம்மா " என்று போட்ட சத்தத்தில்தான் முதல் முதலில் அவளை பார்த்தான்.
பார்த்தது முதல் காதலில் விழுந்தவன் தான் இன்று வரை விழாமல் அவளையும் துரத்தி துரத்தி விழவும் செய்துவிட்டான்....
(விதி தன் கோரைப்பற்களை காட்டி அவர்களை நோக்கி சிரித்ததை பாவம் அவர்கள் அறியவில்லை )
நாட்கள் மாத முதல் 5 நாட்களில் சர சரவென்று காலியாகும் சம்பள பணம்போல் சர சரவென்று காலியாக ,ஒரு வருடம் முடிந்த நிலையில் ஜனனி மெடிசின் முடித்துவிட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் ப்ராக்டிஸ் செய்துகொண்டிருக்க ,
விஷ்வா 6 மாதம் ஒரு பிராஜெக்ட் விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டும் என்று கம்பெனி நிருவாகம் சொல்ல ,விஷ்வா தன் தந்தை தொழிலையும் பார்த்து கொள்ள அடிக்கடி செல்வதால் அவன் சென்னையில் இருப்பதுதான் சரி என்று சந்தோஷ் அந்த பிராஜெக்ட்டிற்காக செல்வதாக விஷ்வாவிடம் சொல்லிவிட்டான் .
தன் நண்பனின் புரிந்துணர்வை நினைத்து மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொண்டான் விஷ்வா..
இரண்டு மாதம் முடிந்த நிலையில் நான்கு நாட்கள் விடுமுறையில் 3 நாட்கள் ஊருக்கு சென்று தன் தேனுக்குட்டியின் டார்ச்சரை அனுபவித்துவிட்டு கடைசி நாள் தான் நண்பனை காண சென்னை வந்திருந்தான் .
சந்தோஷ் " விஷ்வா லவ்வை பற்றி என்ன நினைக்குற", என்றவன் விஷ்வா பார்த்த பார்வையில் “இல்லை பொண்ணுங்கள பார்த்தாலே இப்படி ஒதுக்கும் காட்டுறியே உனக்கு காதல் ,கல்யாணம் இதெல்லாம் எப்படி " என்று கேட்டான் தன் குண்டு தக்காளியை நினைத்த படி...
லவ் என்றதும் அவனுக்கு அந்த கனவு நியாபகம் வர கூடவே அந்த இதம் ,கத கதப்பு எல்லாமே நியாபகம் வந்தது.ஒரு வேலை இதுக்கு பெயர்தான் காதலா? ...ஆனால் எதன் மீது அந்த கத கதப்பின் மீத ,இல்லை அந்த கனவின் மீதா அவனுக்கு தெரியவில்லை
(அட பக்கி அது கனவு இல்ல நிஜம் )
அவனும் இந்த ஒரு வருடமாக அந்த கனவிற்க்காக ஏங்கி கொண்டிருக்கிறான் ஆனால் அந்த கனவு வந்தபாடாய் இல்லை..
விஷ்வா தன் எண்ணத்தை மறைத்தபடி " லவ்வெல்லாம் என் அம்மாவுக்கு பிடிக்காதுனு உனக்கு தெரியுமே டா ,அதனால அம்மா பார்க்குற பொண்ணுதான் லவ்வெல்லாம் என்று யோசித்தவன் நோ கமெண்ட்ஸ் " என்று நிறுத்தி கொண்டான் .
சந்தோஷ் " நான் அம்மாவை பற்றி கேட்கல உன்னை பற்றி கேட்குறேன் " என்றவனை அதை இதை பேசி பெங்களூருக்கு பிளைட்டும் ஏற்றிவிட்டான் "
ஒருவாரம் கடந்த நிலையில் சந்தோஷிடம் சில பல கெஞ்சல்களை போட்டு சில அனுமதிகளை வாங்கிக்கொண்டு தன் தம்பிகளை அழைத்துக்கொண்டு
"அம்மா மியான்கு பால் , சின்னுக்கு pedigire ,அப்பறம் எனக்கு மாதுளை ஜூஸ் " என்று ஆர்டர் கொடுத்தபடியே மூர்த்தியின்( சந்தோஷ் அப்பா ) வீட்டுக்குள் நுழைந்தாள் நம் அகலி .
அங்கு சோபாவில் உட்கார்ந்து நியூஸ் பேப்பர் படித்துகொண்டு இருந்த மூர்த்தியின் அருகில் சென்று தோளில் சாய்ந்து கொண்டாள் சின்னு மறு ஓரத்திலும் ,மியான் அவரின் மடியிலும் அவைகளுக்கான இடங்களை ஆக்கிரமித்து கொண்டது .
மூர்த்தி " என்னடா காலையிலேயே மூணு பேரும் சேர்ந்து வந்துருக்கீங்க ,பிளான் பெருசா “ என்றார்.
“ஆகா கண்டுபிடிச்சிட்டாரே” என்று அசட்டு சிரிப்பு சிரித்தவள் அவரின் கடா மீசையை இருபுறமும் பிடித்து முறுக்கி விட்டுக்கொண்டே " ஆமா அப்பா நான் எம்.பி,எ படிக்க சென்னை போகணும் அப்பாட பேசுங்க " என்றதுதான் தாமதம் ...
கையில் ஜூஸுடன் வந்து கொண்டிருந்த செல்வி " அதெல்லாம் முடியாது. ஒரே ஒரு பொம்பள புள்ளைய மெட்ராசுக்கு படிக்க அனுப்பிச்சிட்டு நாங்க வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க முடியாது " என்றார் .
அகலி அவரை முறைத்துவிட்டு மூர்த்தியை நோக்கி " அப்பா பிளீஸ்பா" என்றாள்
மூர்த்தி " அம்மா சொல்றதும் சரிதானாடா நாங்க இங்க உயிர்ப்போடு இருக்குறதுக்கு காரணமே நீதானாடா உன்னை விட்டுட்டு நாங்க எப்படி இருப்போம் ,
அத்தோட கல்யாணம் வரைக்கும் தான் எங்க கூட இருப்ப அதுவரை எங்க கூட இருடா பாப்பா "
( ம்க்கும் அவள் போறதே கல்யாணம் பண்றதுக்கு உங்க மருமகனை கரெக்ட் பண்றதுக்குத்தான் )
அகலி " அப்பா ப்ளீஸ்பா 2 வருஷம்தான் ,அப்பறம் குடு குடுனு இங்க வந்துறோம் "
(ஓம்ம்மா..... அவன் பஸ்ட் உன்னை லவ் பண்ணறானான்னு பாரு பக்கி.)
அவள் கெஞ்சலை தாங்க முடியாமல் மூர்த்தி " சரி பாப்பா என்ன காலேஜ் என்ன யூனிவர்சிட்டி " என்றார் .
( ம்க்கும் நல்லமாட்டிக்கோ “என்ன காலேஜாம் “,அப்பறம்”என்ன யூனிவெர்சிட்டியாம்” ஹா ஹா )
அவள் தலையை சொறிந்த படி "அண்ணாமலை யூனிவர்சிட்டி , டிஸ்டன்ஸ் ஸ்டெடிஷ்பா " என்றாள்.
செல்விக்கு வந்ததே கோபம் வேகமாக அவள் அருகில் வந்து மண்டையில் ஒரு கொட்டு வைத்து " அந்த இத்து போன யூனிவெர்சிட்டில படிக்கிறதுக்கு இங்க இருந்தே படிக்குறத்துக்கு என்ன " .
மூர்த்தி " ஆமா பாப்பா டிஸ்டன்ஸ் எடுக்கேஷன்(education ) தானா வீட்லேருந்தே படி டா " என்றார் .
(அது எங்க படிக்க போகுது அங்கிள் நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு )
இவங்கல ஈஸியா சாமாளிச்சி வீட்ல பேசலாம்னு பார்த்தா இதுவே இவளோ கஷ்டமா இருக்கே ,அப்பறம் அப்பா , அப்பத்தா , மருது அப்பா ,மல்லிகா அம்மா ஐயோ கடவுளே முடியல....
" டேய் மாமா " என்று மனதுக்குள் கருவியவள்
அவர் அடித்த தலையை தடவிக்கொண்டே முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு " அம்மா நான் இங்கவே இருந்து இருந்து எனக்கு உலக அறிவே இல்லம்மா " என்று ராஜாவை தேடிக்கொண்டே சொன்னாள்
(அடேங்கப்பா உலக நடிப்புடா சாமி , ராஜ இருந்தான் உன் மண்டைய பொலந்துருப்பான் )
அதனால நான் நான் உலகத்தை எதிர்கொள்ள நீங்க இதுக்கு ஒத்துக்கிவிட்டே ஆகனும்,அப்பதான் அப்பா நான் சொந்த கால்ல நின்னு நம்ம பிஸினஸை பார்த்துக்கு முடியும்.
,அப்பறம் நான் 3 கிளாஸ் வேற போகணும்னு முடிவு பண்ணிருக்கேன் , யோகா கிளாஸ் ,டைலரிங் கிளாஸ் ,கம்ப்யூட்டர் கிளாஸ் " என்று உலகத்தில உள்ள மொக்கையான 3 கிளாஸை தேர்வு செய்திருந்ததை சொன்னாள்.
மியானும் ,சின்னுவும் அது பங்குக்கு "லொள்" என்றும் "மியா" என்றும் கத்திக்கொண்டிருந்ததுகள் .
( சப்போர்ட் பண்றாங்கலாமா மா மா ) "
ஒருவழியாக அவர்களை ஏறக்கட்டி கையோடு தன் வீட்டில் உள்ளவர்களிடமும் தலையால் தண்ணிகுடித்துவிட்டு சம்மதமும் வாங்க ஒரு வாரம் பிடித்துவிட்டது ..
சந்தோஷ் 4 நாட்கள் விடுமுறை ஏற்கனவே எடுத்துவிட்டதால் ஒரு நாள் விடுமுறை மட்டுமே நிர்வாகம் எடுத்துக்கொள்ள அனுமதித்தது .
அதன் படி விஷ்வாவின் அப்பார்மென்டிலேயே ஒரு வயதான தம்பதிகள் வீட்டை வாடைகைக்கு கொடுத்துவிட்டு US ல் தங்கள் மகனுடன் சென்று செட்டில் ஆகப்போவாதல் அந்த வீட்டை அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துவிட்டு நாளை காலை சென்னை செல்லும் பேருந்தில் ஏறியும் அமர்ந்த்துவிட்டான்..
ஊரில் அதே மாரி அண்ணன் , மாரியின் மனைவி அவரின் வீட்டு வேலை செய்யும் ராணி அக்கா.
அவர்களின் ஒரே பொண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டதால் அவர்கள் வீட்டோடு தங்க ஒத்துக்கொண்டுவிட்டார்கள்,
வீட்டிற்கு தேவையான பொருட்கள் பின்னே ஒரு டெம்போ வேனில் , கூட துணைக்கு ராஜா என அனைவருடன் சென்னைக்கு மறுவீடு செல்வது போல் கிளம்பிவிட்டாள் நம் செல்ல ராட்சசி
( போல் என்ன ஆல்மோஸ்ட் அப்படித்தான் போகுது அந்த பக்கி..)
கூடவே அவன் தம்பிகளும் , அப்பார்ட்மென்டில் பெட்ஸ் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை என்று கூறியவர்களிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதியும் வாங்க வைத்துவிட்டாள்
வழக்கம் போல் ராஜா கத்திக்கொண்டிருந்ததை காதில் வாங்காமல் காரில் படுத்து தூங்கிவிட்டாள்.
மறுநாள் காலை அனைவருக்கும் பரபரப்புடன் விடிய அவளை காலேஜில் சேர்ப்பது,கிளாசில் சேர்ப்பது என அண்ணன் தம்பி இருவரும் அலைந்து கொண்டிருக்க யாருக்கோ வந்த விருந்தென்று அவளை அழைத்து சென்ற இடமெல்லாம் சந்தோஷ் வாங்கி கொடுத்த சாக்கிலேட்டை மொக்கி கொண்டிருந்தாள் நம் நாயகி..
( அவள் படிக்கவே வரலனு சொல்லிக்கிட்டு இருக்கேன்...இவனுங்க வேற)
ஒரு வழியாக எல்லா வேலையும் முடித்துவிட்டு விஷ்வாவிற்கும், ஜனனிக்கும் போனில் மட்டும் தகவல் சொல்லிவிட்டு , அழும் அகலியிடம் 100 பத்திரம் சொல்லி, பிராஜேக்ட் முடிந்ததும் சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று மனமே இல்லாமல் பெங்களூர் கிளம்பினான்..ராஜாவும் ஊருக்கு கிளம்பினான்.
மறுநாள் அவளின் ஸ்வப்பன சுந்தரியின் அத்தை மகனுக்கு கல்யாணம் என்பதால் அவனின் குடும்பம் முழுவதும் அங்கே சென்று விட்டது...அதனால் தான் அகலியை சென்னையில் விட அவர்களால் வர முடியவில்லை.அவனும் அங்கு செல்ல கிளம்பிவிட்டான்....
( ஸ்ஸ்...ப்பா.. ஒரு ஒரு சீன்லயும் ஒரு ஒருத்தவங்களையும் கட் பண்றதுக்குள்ள எனக்கு கண்ண கட்டுதுடா சாமி...பாவம் இந்த ரைட்டர்ஸ்லாம்)
மறுநாள் காலையிலேயே அகலி விஷ்வாவிற்கு கால்பண்ணி காதில் வைத்திருந்தாள்.. அழைப்பு போக அவன் எடுத்தபாடாய் இல்லை.அடுத்த முறை அடிக்கும் போது கடுமையுடன் ஒரு குரல் “ஹலோ” என்றது..
முதல் முதலில் தன்னவனின் குரலை கேட்டதில் கண் மூடி அதை ரசித்துக்கொண்டே நின்றுவிட்டாள்.அவன் மீண்டும் ஹாலோ சொல்லவே தன் தொண்டையை செருமிக்கொண்டே “ ஹலோ ,ஐம் அகலி அலைஸ் தேனுக்குட்டி” என்றாள்.
( மெஷின் ஸ்டார்ட்ஸ்....)
அகலி வித்யாசமான அழகான தமிழ் பெயர் சொல்லும் போதே தித்திப்பாய் இருந்தது விஷ்வாவிற்கு..சந்தோஷும் எப்பொழுதும் தேனு, தேனுக்குட்டி என்பதால் இந்த பெயரை அவன் கேட்டிருக்க வாய்ப்பில்லை
நேற்று சந்தோஷ் கால் பண்ணி அவளை பார்த்துக்கொள்ளவும் ,அவள் எங்கும் தனியாக சென்றது இல்லை என்பதால் கொஞ்ச பழக்கப்படும் வரை துணைக்கு செல்லுமாறும் சொல்லி இருந்தது அவனுக்கு நியாபகம் வந்து அவன் குரல் இதமாக “ சொல்லுங்க அகலி .எங்க போகணும் “ என்றான்.
பின்னே தன் நண்பனின் உயிர் ஆயிற்றே அவள் ,அவன் மூச்சு விடுவதைவிட தேனுக்குட்டி , வெள்ளெளி என்றதே அதிகம் அவனுக்கு தெரிந்த வரை...
அவன் பன்மையில் அழைத்ததில் கடுப்பாக்கியவள்.. “ நான் திநகர் போகணும் ,பக்கத்துல உள்ள பஸ்ஸ்டாப்ல வெயிட்பண்றேன், வந்துடுங்க “ என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல் கட் செய்துவிட்டாள்.
அவன் “கார் பார்க்கிங்கில் வைட் பண்ணுங்க” என்று சொன்னதெல்லாம் வெறும் காற்றுக்கு மட்டும்தான்..
சுள்ளுன்னு மண்டைக்கு ஏறுன கோபத்தை தன் நண்பனுக்காக அடக்கிக்கொண்டவன் ரெடி ஆகி அவள் சொன்ன பாஸ்டாப்பிற்க்கு தன் டுகாட்டி பைக்குடன் சென்றுவிட்டான்.ஆனால் அவள் வந்த பாடாய் இல்லை..
நம்ம தேனுக்குட்டி ஆடி அசைந்து தன் தம்பிகளுடெல்லாம் விளையாடிவிட்டு கையில் ஒரு குட்டி பையுடன் கிளம்பிவிட்டாள்.
அரைமணிநேரமாக காத்திருந்தவன் “ come soon” என்று மெசேஜ் அனுப்பிவிட்டு வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டான்.
அடுத்த 10 நிமிடமும் அவள் வாராமல் போகவே கடுப்புடன் தன் அப்பர்ட்மெண்ட் வாசலை நோக்கியவன் அப்படியே உறைந்தான், உருகினான், உயிர்தெழுந்தான் என எந்த வார்த்தைகளும் போட்டு கொள்ளலாம்.
சுற்றி உள்ள எல்லா பொருள்களும் மங்கலாக அவனிற்கு 10 அடி தூரத்தில் சாதரண பெண்களை விட சற்று அல்ல கொஞ்சம் அதிகமாகவே குள்ளமான, ஒல்லியாக ஒரு பெண் ப்ளூ கலர் முட்டியை விட 10 இஞ்ச் கீழே உள்ள ஒரு ட்ராக் பேண்ட், தொழ தொழவென்று கருப்பு கலர் புல் ஸ்லீவ் செமி பட்டன் வைத்த டீசேர்ட் போட்டுக்கொண்டு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
( ஏன் அகலி முத தடவை மாமாவை பார்க்க போற நல்ல புடவையாய் கடிக்கலாம்ல ,இப்படி குப்பை அள்ளுறவ மாறி அரை டவுசரை போட்டுறுக்கியே )
பொட்டு அளவுக்கு கூட மேக்கப் இல்லை குளித்து முடித்து அப்படியே உடை மாற்றி வந்திருப்பாள் போல ஏனென்றால் தூக்கி போட்ட கொண்டை இன்னும் அவிழ்க்கவில்லை கழுத்தில் ஒரு சின்ன செயின், ஒரு குட்டி தோடு..நல்ல மல்லிப்பூ போல் மாசு மறுவற்ற பால் போன்ற நிறத்தில் குழந்தை தன்மை மாறாத முகத்தோடு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள் அவனின் செல்லமா...
கண்களை வேறு எங்கும் அசைக்க கூட முடியவில்லை விஸ்வவால் .
ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா ஒரு 12th படிப்பாள என்ற தன் மனசாட்சியின் கேள்விக்கு அவனின் பதிலும் ஆமாம் என்றே இருந்தது.ஏனென்றால் அவள் 50 கிலோ என்று சொல்வதே அதிகமதான், 46 லிருந்து 48 வரைதான் இருப்பாள்.
அவள் அருகில் வர வர அவன் இதயம் துடிப்பது அவனுக்கே பெரிறைச்சலாய் இருந்தது...
என்ன கருமம் உணர்வு இது என்றே அவனுக்கு தெரியவில்லை..
( இதுக்கு பேருதான் “love at first sight” நாங்கனாப்புல யாரு ஆளாளப்பட்ட விஷ்வாமுத்திர முனிவரையே பொண்ண வச்சி கரெக்ட் பண்ண பிளான் போட்டவங்க, சுண்டக்க விச்சுலாம் எம்மாத்திரம் என்று விதி வேற நேரம் காலம் தெரியாம கவுண்டர் விட்டது)
அவளும் அபார்ட்மெண்ட் வாசல் வரும் போதே அவள் மாமனை பார்த்துவிட்டாள். அவன் மேல் உள்ள கோபம் எல்லாம் பறந்து போக ஆ என்று அவனை பார்த்தபடியே அருகில் வந்தாள்.அவள் அருகில் வரும் வரை அவனிடம் எந்த அசைவும் இல்லை.
அவள் அருகில் வந்து “வீர் “, வீர் என்று இரண்டு முறை அழைத்தாள்.. மாமா மாமா என்று இரண்டு முறை அழைத்தாள் அவன் அசையவே இல்லை மீண்டும் அவன் கையை பிடித்து வீர் என்று கூறினாள்..
எங்கே அவன் அதற்கும் அசையவில்லை. அவள் கையை பிடித்த நொடி. அந்த கத கதப்பு, அந்த இதம்...நடு நெஞ்சில் சுளீரென்ற ஒரு சுகம் ஒரு வருடம் முன் தான் தூங்கும் போது வந்த கனவில் உணர்ந்த அனைத்தையுமே அனுபவித்து கண்களை மூடிக்கொண்டான் விஷ்வா...
வருவாள்
மிளாணி