All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 14 :



ADS Group of companies


இன்றோடு வேலையில் சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் கம்பெனியின் முறைப்படி மூன்றாம் மாதத்தில் ப்ராஜெக்ட்டின் ரிவ்யூ நடக்க உள்ளதால் ஒவ்வொரு டீமும் தங்களை தயார் படுத்திக்கொண்டிருந்தனர். தீக்ஷா ஒரு டீமிலும் யாழினி ஒரு டீமிலும் என பிரித்து இருந்ததனர். ஒவ்வொரு டீமிலும் சீனியரில் இருந்து ஒருவரும் ஜூனியர்சில் இருந்து ஒருவரும் தான் ப்ரெசென்ட் செய்யவேண்டும் என்பது ஆதியின் முடிவு.


எனவே தீக்ஷா ஜூனியர்ஸ் லெவெலில் ப்ரெசென்ட் செய்வது என பொறுப்பை ஏற்று கொண்டு அதற்கான பவர்பாயிண்ட் டாக்குமெண்டும் தயாராக வைத்திருந்தாள். அவள் தான் பெர்பெக்ஷன் ஆச்சே. ப்ரெசென்ட் செய்வதிலும் எந்த தயக்கமோ பயமோ தடுமாற்றமோ இல்லாது இருந்தாள்.


இன்னும் சிறிது நேரத்தில் மீட்டிங் என்பதால் தீக்ஷா தற்பொழுது பார்க்கும் ப்ராஜெக்ட்டில் உள்ளவர்கள் மட்டும் மீட்டிங் ஹாலை அடைத்தனர். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆதி,ஷர்மிளா, மற்றும் வேறு இரண்டு பேரும் ஹாலில் நுழைந்தனர். ஒரு நொடி ஆதியை பார்த்து தீக்ஷா திகைத்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.


தீக்ஷா மற்றும் அல்ல அங்கு உள்ள மற்ற பெண்களும் தான். இன்று சனிக்கிழமை என்பதாலும்,இந்த மீட்டிங்கில் கலந்து கொள்பவர்களை தவிர மற்ற அனைவருக்கும் விடுமுறை என்பதாலும், மீட்டிங் முடிந்து வெளியில் செல்ல வேறு வேலை இருப்பதன் காரணமாக வொயிட் டிஷர்ட் ராயல் ப்ளூ ஜீன்ஸ், வழக்கமாக அணியும் சன் க்ளாஸ் அவனின் ட்ஷர்ட்டில் மாட்டப்பட்டு, ஜெல் தடவப்படாத அடர்ந்த கேசத்தினை ஸ்டைலாக கோதியபடி உள் நுழைந்தவனை கண்டு அனைவரும் ஆச்சரியத்துடனும்,வியப்பிலும் பார்த்திருந்தனர்.


பர்சனல் வேலை இருந்தால் ஷர்மிளா மட்டும் அலுவலகம் வரவேண்டிய சூழ்நிலைகளில் அவள் இதே போல் டீசர்ட் ஜீன்ஸில் அவனை பார்த்திருந்தாலும் இன்று மீண்டும் புதிதாக அவனின் தோற்றத்தை பார்ப்பது போல் ஜொள்ளினாள்.



உள்ளே நுழைந்தவன் அனைவரையும் பார்த்து மீட்டிங் ஹாலில் தனக்கென்று போடப்பட்டிருந்த பிரத்யேகமான நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அவன் அமர்ந்த தோரணை அனைவரையும் தடுமாற செய்தது என்னவோ உண்மை தீக்ஷா என்ன மாதிரி உணர்ந்தாள் என்பது அவளே அறியவில்லை.


ஆதி தன்னை கவனிப்பதை உணர்ந்தவள் தன்னை நிலை படுத்திக்கொண்டு ஆதியின் பேச்சினை கவனிக்க ஆரம்பித்தாள் ஆதியின் ஒவ்வொரு செய்கையும் கவனித்தாலும் இந்த ப்ரொஜெக்ட்டிலே அவனுடைய திட்டமிடுதலும் வேலையை நுண்ணியமாக எவ்வாறு செய்ய வேணும் என்பதை அவன் விவரிக்கும் பாங்கும், அவனின் சிந்திக்கும் அபார சிந்தனை ஆகட்டும் ஒவ்வொரு செய்கையும், அவனை விட்டி கண்ணை அகற்ற இயலாது செய்தது. ஆதியின் பேச்சு முடிந்ததும் ப்ரொஜெக்ட்டிங் ஹெட் பேச எழவும் ஒரு சிறி தலை அசைப்பை பதிலாக அனுமதி அளித்தான்.


அடுத்ததாக தீக்ஷா பேச ஆரம்பித்தாள். எப்பொழுதும் போல் இப்போழுதும் நிமிர்வுடன் தங்கு தடையின்றி பேசியவளை பார்த்தவனின் பார்வை ரசனையாக மாறியது. அவள் பேசி முடித்ததும் ஆதியை பார்க்க அவன் கண்களில் இருந்த தனக்கான பாராட்டினையும், மெச்சுதலையும் கண்டு கொண்டவள் தன் இருக்கையில் அமர்ந்தாள்.


மீட்டிங் முடிந்தவுடன் அனைவரையும் கிளம்ப சொன்னவுடன் தீக்ஷாவிடம் “மிஸ் தீக்ஷா, கேன் யூ கம் டூ மை கேபின் ஆஃப்டர் டென் மினிட்ஸ்” என்று அவள் கண்களை பார்த்தபடி கூறவும், அவன் அனைவரின் முன்பும் அதுவும் மீட்டிங் முடிந்தவுடன் சீனியரை அழைக்காது தன்னை அழைத்ததும் தடுமாறியவள் “இவ்வளவு நேரம் நான் தைரியமா பேசுனதே பெரிசு, இவரு வேற இப்ப எதுக்கு கூப்பிடுறாரோ “ என்று நினைத்தவள் அவனிடம் “ஓ.கே சார்,வில் கம்” என்பதோடு முடித்து விட்டு கிளம்பினாள்.


ஆதி தீக்ஷாவிடம் சொன்ன பத்து நிமிட இடைவெளி அவன் தன்னை நிலைப்படுத்தி கொள்ளவே. அவளை பார்த்த முதல் நாளில் இருந்து தற்பொழுது முடிந்த மீட்டிங் வரை நடந்த ஒவ்வொரு விஷயமும் கண்முன் விரிய யோசனையுடன் தன் இருக்கையில் கண் மூடி யோசித்து கொண்டு இருந்தவனின் யோசனையை அவன் எண்ணத்தின் நாயகியின் வருகை தடை செய்தது.


உள்ளே நுழைந்தவளை தன்னுடைய பார்வையால் அளந்தவன் எதுவும் பேசாது அவளை பார்ப்பது மட்டுமே என்னுடைய தலையாய கடமை என்பது போல் பார்த்திருந்தான் அவளிற்கும் அவனின் பார்வையின் அர்த்தம் புரியாது இருக்க சிறு பிள்ளை அல்லவே இருந்தும் எதுவும் செய்ய இயலாது க்கும் என்று தன்னுடைய இருப்பை தெரிவித்தாள் அவளின் செய்கையை சிரிப்புடன் பார்த்தவன் எஸ் மிஸ் தீக்ஷா டேக் யுவர் சீட் என்றான் இந்த மூன்று மாத இடைவெளியில் அவனிடம் தான் ரிப்போர்ட் செய்வதன் மூலமும் தேவைப்படும் போகுது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஆதியை நேரடியாக அணுகியும் பேசியிருக்கிறாள் அப்பொழுது எல்லாம் அவனின் அறைக்கு வர நேர்ந்தாலும் வேலை முடிந்ததும் கிளம்பிவிடுவாள் அவனும் அவளை அமர சொல்வதோ இல்லை இவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் இருந்தது இல்லை.


இன்று இவனின் செய்கை வித்தியாசமாக பட யோசனையுடன் அவனின் எதிரில் அமர்ந்தாள் தீக்ஷா ஒர்க் எல்லாம் எப்படி போகுது ஏதும் கஷ்டம் இருக்கா என்று பேச்சை ஆரம்பித்தான் தான் வந்ததில் இருந்து எதுவும் பேசாது இப்பொழுது இவ்வாறு கேட்கவும் அவனின் கேள்விகளுக்கு பதில் அளித்தாள்.


“ஓ.கே தீக்ஷா நாளைக்கு ஒரு சின்ன டின்னர் அரென்ஜ் பண்ணிருக்கேன். இட்ஸ் ஒன்லி ஃபார் நியூ ஜாய்னர்ஸ் யூ ப்யூபிள். அதனால இதை எல்லாருக்கும் நீங்க சொல்லிடுங்க ஐ ஜஸ்ட் டிசைடட்” என்றான். “ஏன் திடீரென்று,எதும் விஷேசமா” என்ற கேள்வியுடன் ஆதியை பார்த்தாள் ஆதி எந்த பதிலும் சொல்லாது “என்ஜாய் யுவர் டின்னர் என்பதோடு முடித்து கொண்டான்” காரணம் சொல்லாது தன்னுடைய பேச்சு முடிந்தது என்பது போல் பார்க்கும் ஆதியை என்ன செய்தால் தகும் என்ற கோபத்துடன் “ஓகே சார் இன்போர்ம் பண்ணிட்றேன்” என்று கிளம்பிவிட்டாள் தீக்ஷாவும். ஆதியின் பார்வையை உணர்ந்தாலும் அவனின் பார்வையில் தடுமாறினாலும் வெளியில் காட்டிக்கொள்ளாது இருந்தாள்.


வெளியில் செல்லுபவளின் கோபத்தினை அவளின் முகமே காட்டி குடுக்க “ஆளாளுக்கு கொல்றாளுங்களே ஒன்னு என்ன பார்த்து ஜொள்ளுதுங்க இல்லன்னா முறைக்கிதுங்க ஐயோ ஆதிக்கு வந்த சோதனையாடா இது” என்று தனக்குள் நொந்து கொண்டவன் வெளியில் செல்ல கிளம்பினான்.


கார் பார்க்கிங் ஏரியாவில் தன்னுடைய காரினை எடுத்து கிளம்பும் பொழுது தான் கவனித்தான் தன்னுடைய வண்டியில் வராது அலுவலகத்தின் வாயிலில் ஆட்டோவிற்காக காத்துக்கொண்டிருந்தாள் தீக்ஷா. அவளின் அருகில் சென்று காரினை நிறுத்தியவன் கார் கண்ணாடியை இறக்கி விட்டு “என்ன தீக்ஷா வண்டியில வரலையா இங்க நின்னுட்டு இருக்கீங்க, அல்மோஸ்ட் எல்லாரும் கிளம்பி போயிட்டாங்க நான் வேணும்னா ட்ராப் பண்ணவா” என்றான்.


அவனை பார்த்தவள் “இல்லை சார் நானே போய்கிறேன் பக்கத்தில தான் வீடு” என்றவள் “இன்னைக்கு ஒரு நாள் வண்டியில வர வேணாம்னு தான் வந்தேன் உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும் இதுல நான் வேற உங்க டைமை வீணாக்கனுமா சார்” என்று முன்னோக்கி அடக்க துவங்கினாள் மீண்டும். அவளின் அருகில் காரை நிறுத்தியவன் “உங்க ஏரியா சைடு தான் போறேன் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நானே விட்றேன்” என்று அவள் ஏறுவதற்கு கதவினை எட்டி திறந்து விட்டான்.


அலுவலகத்தில் வாயிலில் நின்ற செக்யூரிட்டி தன்னுடைய முதலாளியை கண்கள் விரிய பார்த்து கொண்டிருந்தார். ஆதியை பற்றி நன்கு அறிந்தவர் இன்று தனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்ணிடம் நின்று பேசியதும் அல்லாது தன்னுடைய காரில் ஏறவும் செய்தவனை பார்த்தவாறு நின்றிருந்தார். திக்ஷா வேறு எதுவும் பேசாது மௌனமாக "இவருக்கு எப்படி நாம இருக்க ஏரியா தெரியும் கரெக்டான ரூட்ல போறாரு" என்று

ஏறினாள். அதில் ஆதியின் உதட்டில் அவள் அறியாது புன்னகை மலர்ந்தது.


நாளைய டின்னர் தன் வாழ்வையே மாற்றி அமைக்க போவதற்கு முதல்படி என்பதை அறியாது இருந்தவளின் நிலை அந்தோ பரிதாபம் என்று தான் சொல்ல வேண்டும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரான் மலை சென்று இதோடு பத்து நாட்கள் கடந்திருந்தது. சில நாட்கள் முன்பு தன் தங்கை வைஷ்ணவியின் வேண்டுகோளிற்கு இணங்க திருவிழாவிற்கு வருவதற்கு ஒத்து கொண்டவன் எதிர்பாராது திருவிழா ஆரம்பிக்கும் மூன்று நாட்கள் முன்னதாகவே பிரான்மலை செல்வதற்காக வர வேண்டியதாயிற்று. பதினொரு நாட்கள் திருவிழா முடிந்தும் மேலும் இரண்டு நாட்கள் தங்க சொல்லி அனைவரும் வற்புறுத்தவும் வேறு வழியில்லாது ஒத்து கொண்டான் தர்ஷன்.



திருவிழா முடிந்தும் வடிவேல்-வைதேகி தாத்தா பாட்டியின் இல்லம் மட்டும் இன்றும் திருவிழா போல் காட்சி அளித்து கொண்டிருந்தது. ஆனால் இந்த திருவிழாவின் விழா நாயகர்கள் தர்ஷன் மற்றும் ஷாலினி. ஆம் இன்று இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற ஏற்பாடு செய்துள்ளதால் அந்த பெரிய வீடும் வீட்டை சுற்றி அமைந்துள்ள அந்த பெரிய தோட்டமும் ஆட்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.


திடீரென ஏற்பாடு செய்த விழா என்பதால் தூரத்தில் உள்ள சொந்தங்கள் நண்பர்கள் யாருக்கும் அழைப்பு குடுக்கவில்லை என்றாலும் அனைவரும் அந்த பெரிய அரண்மனையின் நடுஹாலில் அமர்ந்திருந்த பொழுது நிச்சிய பத்திரிக்கை வாசிக்க வேண்டி நல்ல நேரத்திற்குள் ஷாலினியை அழைத்து வர சொன்ன வடிவேல் தாத்தாவின் சொல்லிற்கேட்ப கலையரசி ஷாலினி இருக்கும் அறையை நோக்கி சென்றார். செல்லும் முன் திரும்பி தன் மூத்த மகன் தர்ஷனை பார்த்தவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இவன் செய்த அட்டூழியங்களை எண்ணி அவனை பார்த்து ஒரு சிரிப்புடன் ஷாலினியின் அறையில் நுழைந்தார்.


ஷாலினியும் தர்ஷனும் எதிர்பாராது இவ்வளவு சீக்கிரமாக தங்களின் காதல் நிறைவேறியதே மகிழ்ச்சியில் ஆழ்த்திருக்க, இன்று நிச்சியம் என்ற நிலையில் கொண்டு வந்த தன்னவனின் எண்ணத்தில் முகம் முழுவதும் வெட்கத்தையும், பூரிப்பையும் பூசிக்கொண்டு அமர்ந்திருந்தாள். கலையரசி உள்ளே நுழைந்தவுடன் "அத்தை" என்று முகம்கொள்ளா புன்னகையுடன் அழைத்த தன் அண்ணன் மகளை கட்டி அணைத்தவர் "ரொம்ப சந்தோஷமா இருக்கு டா, இவ்ளோ நாள் அவன் கலகலப்பா இருந்தாலும்,



எல்லார்கிட்டயும் நல்லா பேசினாலும் அதுலேயும், அவனோட கண்ணுல உண்மையான மகிழ்ச்சியா இருக்காதுனு தோணும்,எங்க அக்கா அதாவது தர்ஷனோட அம்மா இறந்ததுக்கு அப்பறம் அவனுக்கும் ஒரு அம்மாவா நான் எவ்வளவோ நெருங்குனாலும் அதை நானே உணராத அளவு என்கிட்டயும் ஒரு அடி தள்ளி நிப்பான், ஆனா இன்னைக்கு தான் என் பிள்ளை உண்மையான சந்தோஷத்துல இருக்கானு தோணுதுடா " என்று கண்கள் கலங்க கூறியவர் ஷாலினியை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தார். ஹாலில் ஷாலினி வந்து நின்றவுடன் அவளின் கண்கள் தர்ஷனை தான் முதலில் தேடியது. அவளின் தேடலை அறிந்தவன் போல் சிரிப்புடன் அவளை தான் ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.


இளஞ்சிகப்பு நிற சாரீயின் பெரிய பார்டர் பிங்க் நிறமும் அதனை அடுத்த பச்சை நிற மெல்லிய பார்டரும், அதற்கு மேட்சிங்காக பச்சை நிறத்தில் பிங்க் நிற எம்பிராய்டரி ஒர்க் செய்யப்பட்ட ரவிக்கையும் , கழுத்தில் பச்சை நிற கல் பதித்த நகைகள், காதில் பெரிய ஜிமிக்கி, தளர பின்னிய தலையில் மல்லிகை பூவும் என அழகு தேவதையாக வெட்கத்துடன் நின்றிருந்தவளை கண்கொட்டாது பார்க்காமல் இருந்தால் தான் அதிசயம். தர்ஷனை கண்டுகொண்டவள் மீண்டும் நாணத்துடன் கீழே குனிந்தாள். "எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கோம்மா" என்றார்.


அவரின் பேச்சிற்கு இணங்கி சபையின் அனைவரின் முன்பும் குனிந்தவளை தர்ஷனின் அன்னை முறையில் கலையரசி ஷாலினியை தூக்கியவர் கண்கள் கலங்க அணைத்துக்கொண்டார். தன் அத்தை சந்தோஷத்தில் தன கண் கலங்குகிறார் என்றாலும் அவரை மற்றும் பொருட்டு "அத்தை,இப்படியே பிடிச்சுட்டு இருந்தீங்க அப்பறம் உங்க மகன் கிட்ட நீங்களும் நானும் பாட்டு வாங்கனும், திரும்பி உங்க அங்க அத்தானை பாருங்க, மொறைச்சுட்டு இருக்காரு" என்று அவருக்கு மட்டும் கேட்கும்படி சிரிப்புடன் சொன்னவளை நெற்றியில் முத்தமிட்டபடி விலகியவர் தர்ஷனின் அருகில் இருக்கும் இருக்கையில் ஷாலினியை அமர வைத்தார்.


பின் தர்ஷனின் அப்பா மோதிரத்தை இருவரின் கையிலும் குடுத்து அணிவிக்குமாறு சொன்னார். முதலில் தர்ஷன் ஷாலினியின் முன்பு கை நீட்டினான். அனைவரின் முன்பும் சங்கடத்துடன் அவனின் கையை மெல்லியதாக பற்றி மோதிரத்தை அணிவித்தாள். பின் ஷாலினியின் கையில் மோதிரத்தை அணிவிக்க அவளின் கையினை இறுக பற்றியவன் அவளின் கண்களை பார்த்தவாறு,ஏற்கனவே தான் அணிவித்த மோதிரத்தை அவள் முன்னேற்பாடாக வேறு விரலில் மாற்றியிருந்ததை கண்டு சிரித்தபடி அணிவித்தவன், சுற்றிலும் அனைவரின் பார்வையும் தங்கள் மேல் தான் உள்ளது என்பதை கருத்தில் கொள்ளாது, பிரான் மலை கோயிலில் மோதிரம் அணிவிக்கும் பொழுது எவ்வாறு அவளின் பிஞ்சு போன்ற விரலில் தன் இதழ் பதித்தோனோ, அதே போல் இப்பொழுதும் அனைவரின் முன்பும் அவளின் விரலில் தன் இதழினை அழுத்தமாக பதித்தான்.


சுற்றிலும் அனைவரின் பார்வையும் தங்கள் மேல் உள்ளதை சிறிதும் சட்டை செய்யாது தன் விரல்களில் முத்தமிடுபவனை கண்டு இவள் தான் நாணத்தில் நிலைகுலையும் நிலைக்கு சென்றாள். அவளின் கைகளின் நடுக்கத்தை கண்டவன் மேலும் சோதிக்காது அவள் கையை விடுவித்தான். அதற்குள் "நிச்சியம் செய்தாச்சுனாலே பாதி பொண்டாட்டி ஆகிட்டானு முறை,இனி இந்த ராசு பயலை கையில பிடிக்க முடியாதே" என்று வடிவேல் தாத்தா தன் பேரனை வாரியார்.


அவர் அவ்வாறு சொல்லவும் மெல்ல வெட்கத்தில் நின்றிருக்கும் தன்னவளின் காதருகில் அவளின் உயரத்திற்கு குனிந்தவன் "ரிங் மாத்திகிட்டா, பாதி பொண்டாட்டியாம்ல, அப்ப நான் தான் ஒன் வீக் முன்ன ரிங் போட்டேனே, அப்ப நீ முழு பொண்டாட்டி ஆகிட்டியா , அப்ப இன்னைக்கு நமக்கு..." என்று மேலும் அவளை சோதித்தவன் நெருங்கி நின்று வம்பிழுத்தான். அவனின் கூற்றில் இவள் தான் கூச்சத்தில் நெளிந்தாள்.



“உன்னுடன் வாழ பிறந்தவன் அல்ல நான் உனக்காகவே வாழ பிறந்தவன்


பூக்கும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் ப்ரண்ட்ஸ்,

ஒரு புன்னகை பூவே 15வது அத்தியாதத்துடன் வந்து விட்டேன். படித்தவிட்டு உங்களின் கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள். உங்களின் கருத்துகளுக்காக மீ வெய்டீங்.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கதைத் திரி

https://srikalatamilnovel.com/community/threads/ரேவதியின்-ஒரு-புன்னகைப்-பூவே-கருத்துத்-திரி.414/

இப்படிக்கு

அன்புடன் உங்கள் Reybaby 😍😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 15 :


ஆதி அறிவிக்கப்பட்ட டின்னர் இன்று மாலை என்பதால் வெகு நிதானமாக கிளம்பி கொண்டிருந்தாள் தீக்ஷா. யாழினி இந்த வாரம் சனி ஞாயிறு இரு தினங்களும் அலுவலகம் விடுமுறை என்பதால் வெள்ளி இரவன்றே தன் அம்மா மற்றும் தம்பியை பார்க்க வேண்டும் போல் தோன்றியதால் திருச்சிக்கு சென்று விட்டாள்.


ஆதலால் தீக்ஷா மட்டுமே இன்று தங்களின் ப்ளாடில் இருப்பதனால் பொழுதும் போகாத காரணத்தினால் வீட்டில் இருக்க பிடிக்காது ஆதி சொன்ன நேரத்திற்கு முன்பே கிளம்பியவள் கடற்கரை சென்று விட்டு பின் ஹோட்டல் போகலாம் என்ற மற்ற நண்பர்களின் கூற்றில் கிளம்பினாள்.


அதே போல் கிளம்பியவள் தன்னுடைய வண்டியை செலுத்தினாள். நண்பர்கள் இருக்கும் இடத்தினை அடைந்தவள் அவர்களுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு இப்பொழுது கிளம்பினால் ஹோட்டலிற்கு செல்ல சரியாக இருக்கும் என்று எண்ணத்தில் அனைவரும் கிளம்பினார்கள் தீக்ஷாவை ஒரு ஜோடி கண்கள் குரூரத்துடன் பார்ப்பதை அறியாது ஹோட்டல் நோக்கி சென்றாள் ஹோட்டலில் வண்டியை பார்க்கிங் ஏரியாவில் விட்டு நுழைவாயிலை கண்டவர்கள் அதன் அழகில் பிரம்மாண்டத்தில் அசந்து போயினர்.


நுழைவாயிலில் இருக்கும் சென்சார் கதவுகளை தாண்டி சென்றவுடன் மிக பிரம்மாண்ட வரவேற்பறையில் விருந்தினர்கள் அமர்வதற்காக போட்டிருந்த கிரீம் கலர் ஷோபாவும் அந்த அறை முழுவதும் எரிந்து கொண்டிருந்த லைட்டும் மனதிற்கு அத்தனை இனிமையாய் அமைதியை உணர்த்தும் விதமாய் இருந்தது. வரவேற்பறையை தாண்டியதும் அதன் வலப்புறத்தில் டின்னர் ஹாலின் உள்ளே நுழைந்தவுடன் மெல்லிசை இசை அந்த அறை முழுவதும் இசைக்கப்பட்டிருக்க ஆங்காங்கே மேல்நாட்டு ஆண்கள் பெண்கள் மற்றும் ஒரு சில மேல்தட்டு குடும்பங்களும் அமர்ந்திருந்தனர் அவர்களின் மிடுக்கே சொல்லியது பணம் படைத்தவர்கள் என்று. அனைவரும் ஹோட்டலை சுத்தி பார்த்துவிட்டு ஆதிக்காக காத்துக்கொண்டிருந்தனர்.


அடுத்த சில நிமிடங்களில் உள்ளே ஆதி பிரபாகர் மற்றும் ஷர்மிளா மற்றும் ஆதியின் மற்றொரு உயிர் நண்பன். அலுவலகத்தில் பார்ட்டி என்றும் ஓயாது நச்சரித்து கிளம்பி வந்த ஆதியின் உயிர் தோழன். நண்பனின் செய்கை ஏன் என்று அறியாதவன் அல்லவே. உள்ளே இவர்கள் நுழைந்தவுடன் அனைவரிடமும் இருந்த உற்சாகம் கூடியது.



ஏனெனில் அனைவரும் சைட் அடிக்கும் வண்ண தன இருந்தனர் உள்ளே நுழைந்த மூவரும். கருப்பு நிற டீஷர்ட் வைட் நிற ஜீன் சன்கிளாஸ் அணிந்து கம்பீரமாக ஆதி நடந்தான் எப்பொழுதும் போல் ஆதியின் வலது புறம் நடந்து பழகிய ஷர்மிளா தன்னுடைய பார்மல் சாரீயை விடுத்து அவளின் சிவந்த பால்நிற மேனிற்கு ஏற்றவாறு பேபி பிங்க் நிற குர்தியும் வைட் லெக்கின் மற்றும் துப்பட்டாவும் அணிந்து அழகு சிலையென நடந்து வந்தாள் அவளினை அடுத்து ரெட் டீஷர்ட் ப்ளூ நிற ஜீன்ஸ் அணிந்து யாருடனோ மொபைலில் பேசியபடி வந்தாலும் அந்த கூட்டத்திலும் யாழிலினியை தேடியவாறு நடந்து வந்தான்.


இவர்கள் மூவரும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாது உள்ளே நுழைந்தாலும் ஆதியின் உயிர் நண்பன் ஆதியை உயிர் எடுத்தபடி ஆர்ப்பாட்டமாக சிரித்தபடி ஆதியின் இடது புறம் நடந்து வந்தான். அவன் இன்று வந்த ஒரே எண்ணமே ஆதியின் பிஏ வான ஷர்மிளாவை பார்ப்பதற்கு மட்டுமே என்று ஆதியும் அறிந்து தான் இங்கு அவனை அழைத்து வர முதலில் தடுத்தது ஏனெனில் தன் நண்பனை பற்றி நன்கு அறிந்தவன் ஆயிற்றே.


அவ்னின் பார்வை நொடிக்கொருமுறை ஷர்மிளாவின் மீது படுவதை உணர்ந்தாள் ஆதி “அடேய் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறியா சும்மாவே அந்த பொண்ணு உன்ன மொறச்சுட்டு இருக்கு நீ வந்ததுல இருந்து அப்பறம் பக்கத்துல ஆள் இருக்காங்கனு கூட பார்க்காது பல்ல தட்டிரும் போல” என்று நண்பனின் காதில் மெதுவாக சொல்லியபடி நடந்தான் .நண்பனின் கூற்றில் திரும்பி ஷர்மிளாவை பார்த்தவன் “சரி எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம் இன இந்த கிராதகன் அடுத்து எப்பயும் நம்மள வெளில கூட்டிட்டு வர அனுமதிக்க மாட்டான்” என்று தனக்குள் பேசியபடி உள்ளே சென்றான்.


இவர்கள் அனைவரும் உள்ளே சென்றதும் தங்களுக்கு என்று முன்னதாகவே பதிவு செய்த டேபிள்களில் அமர்ந்தனர். இங்கு பபட் சிஸ்டம் என்பதால் ஒரு சில உணவுகள் மட்டுமே டேபிளில் பரிமாற்றப்படும் மற்றவைகளை தாங்களே சென்று தான் எடுத்துகொள்ள வேண்டும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவரும் தங்களுக்கு உரிய உணவுகளை எடுத்துகொண்டு சிரித்தபடி சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை வரிசையாக நோட்டம் விட்டபடி அமர்ந்திருந்த்தான் ஆதி அவனின் பார்வை தீக்ஷாவை சுற்றியே இருந்தது வைட் நிற குர்தியும் வைட் நிற லெக்கினும் மல்டி கலர் ஸ்டோலும் வழக்கம் போல் காஜல் ஐலைனர் தவிர்த்து வேறு ஒப்பனை இல்லாது அந்த டைனிங் ஹாலின் ஒளிர்ந்த வெளிச்சத்தில் தேவதையென மின்னிக்கொண்டு இருந்தவளை பார்த்தவனிற்கு அவள் புறம் இருந்து பார்வையை அகற்ற மனமே இல்லை என்பது போல் அவளையே சுற்றி கொண்டு இருந்தது.



ஆதியின் பார்வை தீக்ஷாவை சுற்றுயது என்றால், அவனின் நண்பனின் பார்வை துறு துறுவென ஓயாது பேசி சிரித்தபடி அரட்டை அடித்து கொண்டிருந்த ஷர்மிளாவினை விழுங்கும் பார்வை பார்த்தது, பிரபாகரின் பார்வை முதலில் யாழினியை தேடி அவள் வரவில்லை என்பதை அறிந்து அதன் பிறகு ஆதி மற்றும் அவனின் நண்பனிடம் பேசியபடி அமர்ந்திருந்தான். ஷர்மிளாவோ தன்னை ஒருத்தன் பார்ப்பதை அறிந்தும் அவனை கண்டுகொள்ளாது கடுப்பேற்றியபடி இருந்தாள்.


அவளிற்கும் அவனை அவனின் அழகில்,பேச்சில் கவர்ந்து பார்க்க கண்கள் வலியுறுத்தினாலும் திரும்பாது இருந்தாள். மேலும் இரண்டு மணி நேரங்கள் கடந்து அனைவரும் கிளம்பினர் முதலில் அனைவரையும் கிளம்ப செய்த ஆதி பிரபாகர் ஆதியின் நண்பன் இறுதியாக அனைவரையும் வழியனுப்பிவிட்டே கிளம்பினார்கள் யாவரும் கவனிக்க தவறிய ஒரே விஷயத்தினால் தீக்ஷா ஆபத்தில் மாட்டினாள்.


இன்று யாழினி வரவில்லை என்பதை அறிந்து அவள் தனியாக சென்றுவிடுவாளா என்று மனதில் விடாது ஏதோ தவறாக நடக்க போவது போல் உணர்ந்த ஆதி என்ன நினைத்தானோ தீக்ஷா கிளம்பியதும் பல அடிகள் தூரத்தில் அவளை அவள் அறியாது பின் தொடர்ந்தான்.


ஹோட்டலில் இருந்து கிளம்பி தன்னை பின்னால் இரு வாகனங்கள் தொடர்வதை அறியாது இருட்டில் சாலை போக்குவரத்தை கடந்து ஆள் அரவமற்ற ரோட்டில் வண்டியை திரும்பியவளின் அருகில் உரசுவது போல் வந்த வாகனத்தை பார்த்தவள் தன்னை நிலைப்படுத்தி கொள்ள முட்படும் பொழுதே “எவ்வளவு திமிரு இருந்தா எங்கள பார்த்தும் பார்க்காத மாதிரி திமிரா இருக்குறவ அந்த ஆதியை பார்க்க மட்டும் பிடிக்கிதோ அப்பிடி என்னடி என்கிட்ட இல்லாதது அவன்கிட்ட இருக்கு” என்று ஏக வசனத்தில் பேசியவாறு தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழட்ட தலையில் கை வைக்கும் பொழுது இவர்களை நெருங்கிருந்தான் ஆதி.


பேசியவனின் குரலை வைத்தே யார் என்று அறிந்த தீக்ஷா மற்ற நேரமாக இருந்தால் அவனின் கன்னம் பழுத்திருக்கும். ஆனால் இந்த இருட்டில் யாரும் இல்லாத இடத்தில் தோன்றிய பயத்தின் விளைவால் அதிர்ந்து நின்றிருந்தவள் ஆதி வரவும் அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி தனக்கு கிடைத்த ஒரே ஆறுதல் என்று திருவிழாவில் காணாமல் போன சிறுமியாய் கண்களில் அச்சத்துடன் ஓடி சென்று ஆதியை அழுகையுடன் அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.


அவளிற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்ததினால் அவளை சமாதானப்படுத்தும் விதமாய் “அதான் நான் வந்துட்டேன்ல பேபி, எதுக்கு இப்போ இந்த அழுகை, நான் கூட இருக்கும் போது உனக்கு ஒன்னும் ஆக விட்ருவேனா” என்று அவளின் முதுகை நீவியபடி ஆசுவாசப்படுத்த முயன்றான் இங்கு ஆதியை சிறிதும் எதிர்பாக்காதவன் நகர முயலும் பொழுது ஆதியின் குரல் தடை செய்து நிறுத்தியது.


“இப்போ நீ யாருனு சொல்லல அவ்ளோ தான் போலீஸ்க்கு இன்போர்ம் பண்ற மாதிரி இருக்கும் உன்னோட கேரியர ஒன்னும் இல்லாம பண்ணிடுவேன்” என்றான் ஆதி. ஏற்கனவே ஆதியை எதிர்பாராது கண்டதில் பயத்தில் இருந்தவன் போலீஸ் என்றதும் வேற வழி இல்லாது ஹெல்மெட்டை கழட்டினான் ரோஹித் தீக்ஷாவின் கல்லூரியில் படித்த தற்போழுது ஆதியின் அலுவலகத்தில் வேலை செய்து வருபவன்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிச்சியதார்த்தம் முடிந்து அனைவரும் கிளம்பியவுடன் தர்ஷனும் ஷாலினியும் போட்டோஸ் பல போஸ்களில் எடுத்ததும் இரவு உணவை முடித்து தங்களின் அறைக்கு திரும்பினர். பெரியவர்கள் அனைவரும் திடிரென ஏற்பாடு செய்த விழாவின் காரணமாக வேலைகளின் அலுப்பினால் தங்களின் அறைக்கு சென்றதும் உறங்கியும் போயினர்.


வைஷ்ணவியும் தன் அறைக்கு சென்றதால் ஷாலினியும் தன் அறையில் தனிமையில் இன்றைய நிகழ்வுகளை நினைத்தபடி அலங்காரத்தை கலைக்க முனையும் பொழுது தர்ஷன் கால் வந்தது “சொல்லுங்க அத்தான் இப்போ தான பேசிட்டு உள்ள வந்தோம்” என்று சிணுங்கியபடி கேட்டுகொண்டே தலையில் செய்த சிகை அலங்காரத்தை கலைத்தாள்.



“என்னடி பன்னிட்டு” இருக்க என்று தர்ஷனின் கிறக்கமான குரலில் கேட்டவனின் குரலில் இருந்த கிறக்கதிற்கு சிறிதும் குறைவில்லாது இருந்தாள் ஷாலினி. ” என்ன அம்மு வாய்ஸே சரி இல்லையே நீ இப்போ தான பேசிட்டு வந்தோம்னு சொல்றது மறுபடியும் பேச கூப்பிடற மாதிரி இருக்கே” என்றான்.


அவனின் கூற்றில் அழகாய் மெல்லிதாக சிரித்தவள் “ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அத்தான் சின்ன வயசுல இருந்து எனக்கே தெரியாம லவ் பன்னிருந்தாலும் நாள் ஆக ஆக எங்க நீங்க வேற யார் மேலயும் விருப்பம் வச்சுருப்பீங்களோனு பயம் இருந்துட்டே இருக்கும், உங்க காதலை கோயில்ல வச்சு சொன்னது மட்டும் இல்லாம இவ்வளவு சீக்கிரம் நிச்சியம் வர கொண்டு வந்துடீங்க” என்று உணர்ச்சி வசத்தில் பேசியவளின் குரலில் இருந்த தடுமாற்றமே தர்ஷினிற்கு உணர்த்தியது அவளின் அழுகை.


அவளின் அழுகையை பொறுத்துக் கொள்ள இயலவில்லை என்றாலும் காட்டிகொள்ளாது “சரி டி எனக்கு இப்போவே உன்னைய பாக்கணும் மாடிக்கு வா” என்றான். அதில் பதறியவள் “அய்யோ என்னத்தான் விளையாடுறீங்களா இப்போ தான் வந்தோம், அதும் எல்லாரும் தூங்கிட்டாங்களானு கூட தெரியல, யாரதும் பார்த்த அவ்ளோ தான்” என்றாள்.


அதில் கடுப்பானவன் “அடியேய் இன்னைக்கு தான் டி நிச்சியம் ஆகிருக்கு யாரு பார்த்து என்ன சொல்ல போறாங்க, என்னமோ யாரையோ பார்க்க போற மாதிரி இந்த பதறு பதறுற” என்றவன் “இன்னும் பத்து நிமிஷத்துல நீ இங்க மாடிக்கு வர இல்லனா நா உன்னோட ரூம்க்கு வந்து தான் பேச வேண்டியதாக இருக்கும்” என்று எரிச்சலுடன் போனை வைத்தான்.


அவனிற்கு தெரியும் எப்படியும் வருவாள் என்று எனவே பொறுமையாகவே நின்றிருந்தான். கீழே ஷாலினியோ தர்ஷனின் கோபம் பொறுக்காது வேகமாக கனமாக அணிந்திருந்த நகைகளை கழட்டி அதனை டேபிளின் மேல் வைத்து விட்டு சற்று நேரத்திற்கு முன் விரித்து விட்ட முடியினை இரு புறமும் எடுத்து சிறு கிளிப்பில் அடக்கியவள் தன்னுடைய போனை எடுத்து கொண்டு யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்து கொண்டே மாடியை அடைந்தாள்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாடியின் மேல் தளம் வந்ததும் அதன் கதவை திறந்தவள் அடுத்த வினாடி தர்ஷனின் இறுகிய அணைப்பில் அடங்கிருந்தாள் திடீரென தர்ஷன் அனைத்திருந்தாலும் பயம் கொள்ளாது அவனின் அணைப்பில் பாந்தமாக நின்றிருந்தாள் காலையில் கலையரசி சொன்னதில் இருந்து தர்ஷனின் எதிர்பார்ப்புகள் புரிந்ததினாலும் அவனின் மேல் கொண்ட காதலாலும் அமைதியாகவே நின்றாள்.



தர்ஷன் தன்னிலை மீண்டவனாக அவளிடமிருந்து விலகியவன் எதுவும் பேசாது நடந்து சென்று அங்கிருக்கும் சுவரின் ஓரத்தில் சாய்ந்து நின்று கொண்டான். அவனின் மனதை புரிந்து கொண்டவள் போல் ஷாலினியும் எதுவும் பேசாது அவனின் அருகில் சென்று வலதுபுறமாக நின்றவள் அவனின் கைகளுக்குள் தன் இரு கைகளையும் கோர்த்து கொண்டவள் அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.



சிறிது நேரம் பொறுத்து பார்த்தவள் “என்ன அத்தான் இது பேசணும்னு வர சொல்லிட்டு நீங்க அமைதியா இப்படி நின்றிருந்தா எப்படி” என்று அவனை அண்ணார்ந்து பார்த்தபடி கேட்டவளின் கேள்விக்கும் பதில் சொல்லாது நின்றிருந்தவனை பார்க்க சிறிதே கோபம் கிளம்ப தர்ஷனின் கைகளை சுற்றி கோர்த்திருந்த கரங்களை விடுவித்தவள் இரண்டு எட்டு தான் வைத்தாள். ஒரே எக்கில் அவளை பிடித்தவன் தன்னை நோக்கி திருப்பி உணர்ச்சிகளின் தாக்கத்தில் இருந்ததன் பலனாக அவளின் மெல்லிய, இன்றைய அலங்காரத்திற்காக சாயம் பூசிய இதழினை சிறை செய்திருந்தான்.



அவனின் முதல் இதழ் முத்தம் தந்த பயத்தினால் அவனிடம் இருந்து விடுபட போராடியவள், அவன் விடுவதற்காக எவ்வித சுவடும் தெரியாமல் சிறிது சிறிதாக தன்னிலை இழந்தவள் அவனின் மனதின் உணர்ச்சி போராட்டங்களை அடக்கும் எண்ணத்தில் அவனிற்கு வாகாய் நின்று கொண்டாள். நீண்ட இதழ் முத்தத்திற்கு பிறகு அவளினை விடுவித்தவனின் கண்களில் கண்ணீர் குளமாக நின்றிருந்தது. அதில் பதறியவள் ,“என்ன அத்தான் இது சின்ன பிள்ளை மாதிரி, இப்போ எதுக்கு இப்டி” என்று தர்ஷனின் கண்ணீரை துடைக்க சென்றவளின் கைகளை பிடித்து கொண்டவன் ஒரு வினாடி அமைதியாக நின்று பின் பேச தொடங்கினான்.


“எனக்கு எப்படி எக்ஸ்பிரஸ் பண்றதுனு தெரியலடி அம்மு அவ்வளவு சந்தோஷமா இருக்கேன். சின்ன வயசுல இருந்து எங்க அம்மாவோட ஒவ்வொரு அரவணைப்புக்கும் ஏங்கிருக்கேன், என்ன கலாம்மா நல்லா பாத்துக்கிட்டாங்க அவுங்க பெத்த பிள்ளை மாதிரி, மாதிரி என்ன அவுங்க பெத்த பிள்ளைங்க வைஷு விஷ்ணுவை விட என்ன நல்லாவே பாத்துக்கிட்டாங்க, பார்த்துட்டு இருக்காங்க இப்போ வரை, ஆனாலும் ஒரு லிமிட்க்கு மேல அவுங்ககிட்ட உரிமை எடுத்துக்க முடியலைடி, ஸ்கூல் படிக்கும் போதுலாம் எல்லாரோட பாரெண்ட்சும் அவுங்க பிள்ளைங்களை கூப்பிட வரப்போ, அவுங்க பாசமா இருக்கிறத பார்க்கும் போது எனக்கும் எங்க அம்மா நியாபகம் தான் வரும்.


எனக்கு மூணு வயசா இருக்கும் போதே இறந்துட்டாங்கனு சொல்லிருக்காங்க, அம்மாவை நான் போட்டோல தான் பார்த்துருக்கேன். அப்பாவும் பிஸினெஸ் விஷயமாவும் கவனம் செலுத்துனதுல என்னோட தேவையை கவனிச்சாலும் எனக்குன்னு டைம் ஸ்பென்ட் பண்ணலை. அந்த ஒவ்வொரு நாளும் நா அதிகமா மனசுல அம்மாவை தான் தேடுவேன்.


அதுக்கு அப்பறம் தான் என்னோட மைண்ட் ரிலாஸ்க்காக பப் பிசினஸ்னு அதுல கவனம் செலுத்திட்டேன், இப்போ நீ எனக்கே எனக்கானு முடிவு பண்ணப்ப தான் ரொம்ப சந்தோஷமாவும் நிம்மதியாவும் இருக்கேன்டி” என்றான்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷனின் உணர்ச்சிகள் கலந்த பேச்சிலும், தன்னிடம் அவன் எதிர்பார்க்கும் முழு உரிமை கலந்த பாசத்திற்கும் அவனை நெருங்கி நின்றிருந்தவள், மேலும் நெருங்கி நின்று அவனின் உயரத்திற்கு எம்பி அவனின் கன்னத்தில் ஒற்றை முத்தம் பதித்தலில் அவளின் ஒட்டு மொத்த காதலையும் உணர்ந்தவன் மீண்டும் அவளின் இதழ்களை சிறை செய்தான்.



எவ்வளவு நேரம் நீடித்ததோ ஷாலினி தான் முதலில் விலகினாள், தர்ஷனும் அவள் மேலே வந்ததில் இருந்து தனக்காக மட்டுமே அவளின் உணர்வுகளை கட்டு படுத்திக்கொண்டு நெருக்கம் காட்டுகிறாள் என்பதை அறிந்தவனாக விலகி நின்றான். அவளின் முகத்தினை பார்த்தவன் அவளை வம்பிழுக்கும் பொருட்டு “என்னங்க அம்முணி இன்னைக்கு தான் நிச்சியம் ஆகிருக்கு அதுக்கே இவ்ளோ ஸ்பெசலா கவனிக்கிறீங்க, அப்போ கல்யாணம் முடிஞ்சா இன்னும் கவனிப்பீங்க போல இருக்கே, எதுக்கு நாம கல்யாணத்த ஆறுஉஉஉஉஉஉஉஉ மாசம் தள்ளி போடணும், வேணும்னா என்னோட மாமனார் மாமியார் கிட்ட பேசி அடுத்த மூகூர்த்தத்தில வைக்க சொல்லிருவோமா” என்றான் விஷமம் வழியும் சிரிப்புடன்.


தன்னை கிண்டல் செய்கிறான் என்றதும் கோபம் பொங்க “நீங்க கூப்பிட்டீங்கனு எல்லாரும் தூங்குறாங்களா இல்லையானு பயந்து பயந்து போனா போகுது சின்ன பிள்ளை நமக்காக மேல காத்துட்டு இருக்குனு வந்தேன்ல என்னய கிண்டல் வேற பண்ணுவீங்கள” என்று அவனின் மார்பில் அடி போட்டவள் அடுத்த நிமிடம் ஓட துவங்கினாள்.


ஓடும் அவளை பார்த்தவாறு நின்றவன் பட்டு புடவை அணிந்திருந்ததால் கால் தடுக்கி விழ இருந்தவளை இரண்டே எட்டில் நிறுத்தியவன் அவளின் முன் மண்டியிட்டு குனிந்தபடி அவளின் புடவையை சரி செய்து விட்டான். தனக்காக எந்த வித தயக்கமோ இல்லாது மண்டியிட்டு அமர்ந்திருந்தவனை பார்த்தவள் கீழே குனிந்து அவனின் நெற்றியில் இதழ் பதித்தாள் அவனும் சிரித்தபடி அவளின் கைகளை கோர்த்தபடி கீழே இறங்கி வந்தான்.



“நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும், விரல்களை பிடித்தவாறு பேச வேண்டும்”

பூக்கும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் ப்ரண்ட்ஸ்,

ஒரு புன்னகை பூவே 16வது அத்தியாதத்துடன் வந்து விட்டேன். படித்தவிட்டு உங்களின் கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள். உங்களின் கருத்துகளுக்காக மீ வெய்டீங்.


https://srikalatamilnovel.com/community/threads/ரேவதியின்-ஒரு-புன்னகைப்-பூவே-கருத்துத்-திரி.414/

இப்படிக்கு

அன்புடன் உங்கள் Reybaby 😍😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 16:

ரோஹித்தின் பேச்சினில் அவனின் குரலினை கண்டு கொண்டவள் மற்ற நேரமாக இருந்திருந்தால் அவனின் கன்னம் பழுத்திருக்கும். ஆனால் இப்பொழுதோ யாரும் இல்லாத தனிமை பயம் கொள்ள செய்ய மிரண்டு விழித்தவள் ஆதியின் குரலை கேட்டு அவனை சற்றும் எதிர்பாராது தனக்கு கிடைத்த ஒரே ஆறுதல் என்பது போல் இறுக அணைத்து கொண்டாள்.

ரோஹித்தும் ஆதியை எதிர்பார்க்கவில்லை என்பதை அவனின் பயந்த தோற்றமே காட்டி குடுக்க அங்கு இருந்து செல்ல திரும்பிய பொழுது போலீஸ் என்றதும் வேறு வலி இல்லாது பயம் கொண்டவனாக தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழற்றியவன் ஆதியின் கண்களில் தீப்பொறி பார்ப்பது போல் தோன்றியது அவனின் அணைப்பில் இருந்த தீக்ஷாவிட்கும் எதிரில் நின்றிருந்த ரோஹித்க்கும்.
தன்னிடம் வேலை பார்ப்பவன் என்றதும் கோபம் கொப்பளிக்க தீக்ஷாவை தன் கை வளைவிலிருந்து அகற்றாது ரோஹித்தை நெருங்கியவன் அவன் யோசிக்கும் முன் சில மணி துளிகள் முன் தான் செய்ய வேண்டும் என்று நினைத்த அறையை கன்னத்தில் பளார் என்ற சத்தத்துடன் ரோஹித்திற்கு அளித்தான் ஆதி.
"எதுக்கு டா இப்போ இவளை ஃபாலோவ் பன்னிட்டு வந்த,எங்கிட்ட வேலை பார்த்துட்டு என்னோட ஆஃபீஸ்ல வேலை பார்க்குற பொண்ணு மேல கையை வைக்க எவ்ளோ தைரியம் வேணும், உன்னைய லாஸ்ட் மந்த் பீச்ல நாங்க மீட் பண்ண அப்போவே நீ இவளை தான் பாலோவ் பன்னிட்டு வந்தன்னும் எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா, சரி நம்மகூட பார்த்தனால இவகிட்ட வம்பு பண்ண மாட்டேன்னு நெனைச்சேன். உன்னோட வேலை இந்த நிமிஷமே போய்டுச்சு, இனியும் ஏதாவது பண்ணுன உன்னயவே ஒன்னும் இல்லாம பண்ணிடுவேன் பார்த்துக்கோ" என்று கடுமையாக எச்சரித்தவன் தீக்ஷாவை தள்ளி நிறுத்தி அவளின் வண்டியை எடுத்து ஓரமாக நிப்பாட்டியவன் தன்னுடைய இருசக்கர வாகனத்தின் முன் சென்று அதை ஆன் பண்ணிவிட்டு நின்றான்.
ரோஹித்தோ "சார் அன்னைக்கு நான் எதார்த்தமா தான் சார் என்னோட பிரெண்ட்ஸ் கூட வந்தேன் சார்" என்று பயத்தில் கத்தியவனை சிறிதும் கண்டு கொள்ளாது "இன்னும் அங்க நின்னுட்டு என்ன பார்த்துட்டு இருக்க பேபி, வந்து ஏறு உன்ன நா ட்ராப் பண்றேன்" என்றான். பயத்தில் இருந்தாலும் தன்னுடைய வண்டியை விட்டும்,ஆதிகூட வண்டியில் செல்ல தயக்கமாக இருக்க அசையாது நின்றிருந்தாள்.
வண்டியை அவளின் அருகில் உரசியவாறு நிப்பாட்டியவன், "பேபி வண்டில ஏறுன்னு சொன்னேன்" என்று வார்த்தைகளில் குடுத்த அழுத்தத்தை உணர்ந்தவள் தன்னுடைய வண்டியில் இருந்த கைப்பை மற்றும் போனை எடுத்து கொண்டு ஆதியின் வண்டியில் ஏறினாள்.
தயக்கத்துடன் வண்டியில் ஏறியவள் மெல்லிய குரலில் “சார் என்னோட வண்டி” என்றாள். அதில் அவளை திரும்பி பார்த்தவன் “உனக்கு ஒன்னும் ஆக கூடாதுனு உனக்கு பின்னாடியே வரேன், ஏதும் கவனிக்காம நீ பேசாம வர, சரி வந்தது தான் வந்த மெய்ன்ல போக வேண்டியது தான ஆள் யாரும் இந்த சைடு அதிகமா வர மாட்டாங்கன்னு தெரியும்ல, அப்பறம் எதுக்கு இந்த சைடு வர, நான் மட்டும் இப்போ வரலைனா என்ன ஆகிருக்கும்” என்றவன்
“உன்னோட பைக் உன்னோட பிளாட்க்கு வந்துரும் இன்னும் கொஞ்ச நேரத்துல” என்றவன், அடுத்து அமைதியாக ஏதும் பேசாது ஆதி வேகமாக அவனின் கைகளில் வண்டி சீறி பாய்ந்தது. தீக்ஷாவிற்கோ பீச் சென்ற தருணம் கண் முன் விரிந்தது.
சென்ற மாதம் வழக்கம் போல் ரிப்போர்ட் செய்வதற்காக ஆதியின் அறைக்கு சென்றவள் தான் செய்த வேலைகள் பற்றி கூறிவிட்டு திரும்பும் பொழுது “பேபி ஒரு நிமிஷம் நில்லு” என்றான். ஆதியின் வார்த்தையில் திரும்பி என்ன என்பது போல் பார்த்தவளின் அருகில் வந்தவன் “என்ன பேபி இந்த ஆஃபீஸ்ல எல்லா பொண்ணுங்களும் எதுக்கு இங்க வராங்கனே மறந்துட்டு என்ன சைட் அடிக்கிறது தான் முக்கியமான வேலையா நெனச்சு பார்த்துட்டு இருக்காங்க, என்னோட பிஏ கூட அதை தான் ரொம்ப சின்சியரா பண்றா, இவ்வளவு ஏன் உன்னோட உயிர் தோழி யாழினியே அதை தான் பண்ணிட்டு இருக்கா நீ மட்டும் ஏன் பேபி என்ன கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டிக்கிற” என்றபடி நெருங்கி நின்றவன்.
தீக்ஷாவின் முன் நெற்றியில் விழுந்த முடியை காதோரம் ஒதுக்கியவன் அவளின் பொறுமையை சோதித்து கொண்டு இருந்தான் ஆதி. “சரி பேபி அதெல்லாம் இருக்கட்டும் உன்கூட தனியா பேசனும், நாளைக்கு ஈவ்னிங் பீச்ல மீட் பண்ணலாம், ஆமா உன்ன எப்படி தனியா வர சொல்றது, சரி நீ என்ன பண்றனா நாளைக்கு சிக்ஸ் போல கிளம்பி உங்க ஏரியா கிட்ட இருக்குற பஸ் ஸ்டாப்பிங் வந்துரு, பைக் எடுத்துட்டு வராத, என்கூட கார்ல போகலாம். முக்கியமான விஷயம் தனியா வரனும் அதை விட்டுட்டு உன்கூட பசை மாதிரி ஓட்டிக்கிட்டே வால் பிடிச்சுட்டு இருப்பாளே உன்னோட உயிர் தோழி அவளையும் கூட்டிட்டு வந்துடாத” என்றான்.
அதில் கோபம் வந்தவளாக “உங்ககிட்ட பேச எனக்கு என்ன சார் இருக்கு, ஆஃபீஸ்ல வச்சு என்ன பிஹேவியர் சார் இது யாராதும் பார்த்தா என்ன ஆகுறது, உங்களை யாரும் கேட்க மாட்டாங்க நீங்க தான் பெரிய ஹீரோ ஆச்சே, அதும் உங்களோட ஆஃபீஸ் வேற, ஆனா நான் அப்படி இல்லையே சார், சோ கேன் யூ ப்ளீஸ் மூவ்” என்றபடி அவனின் நெருக்கத்தை கண்களால் சுட்டி காட்டினாள்.

அதில் அழகாய் சிரித்தவன் “பொறாமைஸ் பேபி, சரி டைம் ஆகிட்டே இருக்கு கிளம்பு நாளைக்கு பார்ப்போம்” என்று அவளின் நெற்றியில் முத்தம் வைத்தவன் மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்து விட்டான். வெளியில் வந்தவள் அவளின் கைப்பையை எடுத்து யாழினியையும் இழுத்து கொண்டு கிளம்பினாள்.
 
Status
Not open for further replies.
Top