ஶ்ரீகலா
Administrator
உறவு : 5
வசுந்தரா தேவி எப்போதடா கல்லூரிக்குச் செல்வோம் என்று பரபரப்புடன் காத்திருந்தாள். அவளது அன்னை தையல்நாயகி கூட அவளை அதிசயமாகப் பார்த்தார்.
"என்னடி அதிசயமா இருக்கு? சூரியன் மேற்கே உதிச்சிருச்சா?"
"ம்மா, மசமசன்னு நிற்காம டிபனை எடுத்துட்டு வாங்க..." அவள் அன்னையை அவசரப்படுத்தினாள்.
"இருடி வர்றேன்..." அவர் சமையலறை உள்ளே செல்ல...
அப்போது வேணுகோபாலன் அங்கு வந்தார். என்றும் இல்லாத அதிசயமாக மகள் சீக்கிரமே கல்லூரிக்கு கிளம்பி இருப்பதைக் கண்டு அவருக்குப் பெருத்த ஆச்சிரியமாக இருந்தது.
"வசும்மா, சீக்கிரமே கிளம்பிட்ட போலிருக்கு. இன்னைக்குக் காலேஜில் என்ன விசேசம்?"
"நம்ம காலேஜ் தேர்தல் கணிப்பு பார்த்து எனக்கு ஒரே சந்தோசம்ப்பா... அதுக்குக் காரணமான சாமை பாராட்டத்தான் கிளம்பிட்டு இருக்கேன்." மகள் உற்சாகமாகச் சொல்ல...
"அதுக்காக இந்த அப்பாவை கூட மறந்துட்டு போறியே வசும்மா? உன் முகத்தில் முழிக்காம என் வேலை எதுவும் நடந்திருக்கா?" வேணுகோபாலன் சுணக்கத்துடன் சொல்ல...
"சாரிப்பா..." என்று மன்னிப்பை வேண்டியவள் பின்பு அவரது கழுத்தில் கட்டி கொண்டு, "என் செல்ல அப்பா..." என்று கூறியபடி அவரது கன்னத்தில் முத்தமிட... மகளது முத்தத்தில் தந்தை குளிர்ந்து தான் போனார்.
"இது சரியில்லையே..." வருண் மஹாராஜ் முகச்சிளிப்புடன் அங்கு வந்தான்.
"என்னடா சரியில்லை?" வேணுகோபாலன் மகனை அதட்டினார்.
"அவனை அதட்டாம அவன் சொல்ல வர்றதை கேளுங்க..." என்றபடி அங்கு வந்த தையல்நாயகி எல்லோருக்கும் தட்டு எடுத்து வைத்து உணவு பரிமாற ஆரம்பித்தார்.
"வசு, இதென்ன ஒரு வேலைக்காரனை போய்ப் பாராட்டுவது... அவன் அவனோட வேலையை, கடமையைத் தானே செய்தான்." வருண் மஹாராஜ் தங்கையைச் சத்தம் போட்டான்.
"ப்பா, பாருங்கப்பா..." மகள் அழுகையில் உதட்டை பிதுக்க... அதைப் பாசமிகு தந்தையால் காண இயலவில்லை.
"விடு வருண்... சின்னப் பாராட்டு தானே... பாராட்டிட்டு போகட்டும்." வேணுகோபாலன் மகனை சமாதானப்படுத்தினார்.
"சின்னதா ஆரம்பிக்கும் விசயம் தான் பின்னாளில் பெரிய பிரச்சினையை உருவாக்கும்." அவன் கோபத்துடன் முணுமுணுத்தான்.
"குழந்தையைப் போய் என்னடா பேசுற?" வேணுகோபாலன் அதட்டவும் அவன் அமைதியாகி விட்டான்.
"நீ போயிட்டு வாடாம்மா..." வேணுகோபாலன் மகளுக்குச் சம்மதம் தெரிவிக்க...
வசுந்தரா தேவி சந்தோசமாய்க் கிளம்பி சென்றாள். அவள் சென்றது கல்லூரி தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே... அதனால் சாம் இன்னமும் கல்லூரிக்கு கிளம்பி வரவில்லை. சாம் வந்ததும் தன்னை வந்து பார்க்குமாறு கடைநிலை ஊழியரிடம் பணித்துவிட்டு அவள் அறைக்குச் சென்று விட்டாள். சரியாக எட்டரை மணிக்குச் சாம் கல்லூரிக்கு வந்தான். அவனிடம் விசயம் சொல்லப்பட... அவன் நேரே அவளைச் சந்திக்கச் சென்றான்.
சாம் வசுந்தரா தேவியின் அறை கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் எழுந்தவள்,
"வா வா சாம்... உனக்காகக் காத்திருந்தேன்." என்க... அவன் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.
"எங்கப்பா தான் வெற்றி பெறுவார்ன்னு நீ தேர்தல் கருத்துக் கணிப்பில் சொல்லியிருந்தல்ல... அதைப் பார்த்து எனக்கு ரொம்பச் சந்தோசம்... அதுக்குக் கிப்ட்டா அப்பா கிட்ட சொல்லி இந்த மாசத்தில் இருந்து உன்னோட சம்பளத்தை அதிகரிச்சுக் கொடுக்கச் சொல்றேன்." என்று மகிழ்ச்சியோடு கூறியவள் அவன் எதிர்பாராத நேரத்தில் அவனை அணைத்து அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவள் கொடுத்த முத்தத்தில் ஒரு கணம் திகைத்தவன் அடுத்தக் கணம் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான். அவன் அறைந்ததில் முதலில் அதிர்ந்து நின்றவள் பின்பு சினத்தில் முகம் சிவக்க அவனைப் பார்த்தாள். அவளைப் பொறுத்தவரையில் அவள் சாதாரணமாகத் தான் அவனை அணைத்தாள், முத்தமிட்டாள், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவ்வளவே... அதற்காக அவன் அவளை அறைவானா!
"ஹௌ டேர் யூ..." அவள் ஆத்திரத்தில் வார்த்தைகள் வராது தடுமாறியபடி நின்றிருந்தாள்.
"இப்படிக் கட்டிப்பிடிக்கிறது, முத்தம் கொடுக்கிறது எல்லாம் எனக்குப் பிடிக்காது மேம்..." அவன் எச்சரிக்கும் தொனியில் பேச...
"டேய் சோடாப்புட்டி, உனக்கு ரொம்பத்தான் நினைப்பு... ஏதோ சந்தோசத்தில் இப்படிப் பண்ணிட்டேன். அதுக்குன்னு நீ ஓவரா கற்பனையை வளர்த்துக்காதே..." என்றவள் கோபத்துடன் அவனை அறைவதற்குக் கையை ஓங்க... அவனோ அவளது கையை இறுக பற்றிக் கொண்டு,
"இதே இது நான் நீங்க செய்ததைச் செஞ்சிருந்தால் உங்க ரியாக்சன் என்னவாக இருந்திருக்கும்?" என்று நிதானமாகக் கேட்க...
"செருப்பு பிஞ்சிருக்கும்." என்று அவள் கோபத்துடன் சொல்ல...
"அதே தான் எனக்கும்... பெண்களுக்கு மட்டும் தான் கற்பு, ஒழுக்கம் இருக்குன்னு நினைக்காதீங்க... ஆண்களுக்கும் உண்டு..." என்றவன் அவளது கரத்தினை விட்டு விட்டு,
"எனிவே, நீங்க சம்பளம் ஏத்தி கொடுத்ததுக்குத் தேங்க்ஸ்..." என்றவன் அறையை விட்டு வெளியில் வர...
அவள் திகைப்புடன் நின்றிருந்தாள். அவன் அவளை அறைந்தது கோபம் தான் என்ற போதும், அவனது வார்த்தைகள் என்னமோ அவளது மனதில் சாமரம் வீசியது.
வெளியில் வந்த சாம் வசுந்தரா தேவியை அடித்த தனது கையை விரித்துப் பார்த்தான். அவளது கன்னத்தை ஸ்பரிசித்த தனது கரத்தை காணும் போது சில்லென்று ஐஸ்க்ரீம் உண்டது போலிருந்தது. அவனது உதடுகளில் அவனையும் அறியாது மந்தகாச புன்னகை தோன்றியது.
'அடேய், உன் திறமை என்ன? படிப்பு என்ன? உனக்கு இந்த அடி முட்டாள் தான் வேணுமா?' அவனது மனசாட்சி அவனைக் காறி துப்பியது.
'அது முட்டாள் இல்லை... இன்னொசென்ஸ்...' அவன் மனசாட்சியைத் திருத்தினான்.
'எங்க ஊரு பக்கம் இதைக் கிறுக்குத்தனம், பைத்தியக்காரத்தனம்ன்னு சொல்லுவாங்க.' மனசாட்சி மறுபடியும் கவுண்ட்டர் கொடுத்தது.
'இப்போ என்ன சொல்ல வர்ற?' அவன் சலிப்புடன் மனசாட்சியைக் கண்டு கேட்டான்.
'நீ அவளுக்கு வில்லன் தான்... அதனால் வந்த வேலையை மட்டும் பாரு. தேவையில்லாம சென்ட்டிமென்ட் விசயத்தில் சிக்கி சின்னாபின்னமாகிறாதே. சீஃப்க்கு இதெல்லாம் பிடிக்காது.'
'சீஃப் கொடுத்த வேலையை உயிரை கொடுத்தாலும் செய்வேன். அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்?'
'அதான் சொன்னேனே... நீ வந்திருப்பதோ வில்லன் வேலை பார்க்க... அது தெரிஞ்ச பிறகு அவள் உன்னை லவ் பண்ணுவாளா? இதெல்லாம் உனக்குத் தேவையா?' மனசாட்சி சொன்னதும் அவன் மௌனம் சாதித்தான்.
'இப்போ நான் சொல்ல வருவது புரிந்ததா? உன் வாழ்க்கையில் நீ பார்க்காத பெண்களா? எதுக்கு இந்தச் சண்டிராணியைப் பிடிச்சிட்டு தொங்குற... போ, போய் வேற வேலையைப் பாரு.' மனசாட்சி அவனைக் கடிந்து விட்டு மறைந்து விட்டது.
சாம் யோசனையுடன் நடந்து சென்று கொண்டு இருந்தான். அவன் வாழ்வில் எத்தனையோ பெண்களைச் சந்தித்து இருக்கிறான் தான். ஆனால் இந்த மாதிரி ஒரு சண்டிராணியை, யுனிக் பீசை அவன் இதுவரை சந்தித்தது இல்லை. விரிவுரையாளரான அவளுக்குச் சப்ஸ்ட்டிட்யூட்டாக அவனை வேலைக்கு அமர்த்தி இருப்பதன் மூலம் அவளது அறியாமையை அறிந்து கொள்ளலாம்.
சாம் வசுந்தரா தேவியை நினைத்து புன்னகைத்தபடி சென்று கொண்டு இருந்தான்.
*************************
தேர்தல் வியூகத்தின் அடுத்தக் கட்ட நகர்வாக வேணுகோபாலன், வருண் மஹாராஜ் இருவரும் தமிழகம் முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்க வேண்டும். பொதுமக்களைச் சந்திக்க வேண்டும் என்றால்... சும்மா அவர்களைச் சந்தித்துக் கைக்கூப்பி வணக்கம் போட்டுப் புகைப்படம் எடுப்பது மட்டும் இல்லை. இவர்கள் மக்களைச் சந்திக்கும் போது அவர்கள் என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும் அந்த வேலையை இவர்களும் இறங்கி செய்ய வேண்டும் என்பதே!
"அவன் சாக்கடையைச் சுத்தம் செஞ்சிட்டு இருந்தா... நாங்களும் அதைச் செய்யணுமா?" வேணுகோபாலன் எரிச்சலுடன் சொல்ல...
"கட்டாயம்... அப்போ தான் மக்கள் மனசில் இடம் பிடிக்க முடியும்... அடுத்துக் கோட்டையில் கொடியை நிலைநாட்ட முடியும்." என்ற ஜெகனை உறுத்து பார்த்தவர்,
"எல்லாம் சரி தான்... உங்க சாரை நாங்க எப்போ தான் சந்திப்பது? பணம் எல்லாம் கொடுத்தும் எங்களால் அவரைச் சந்திக்க முடியவில்லையே." என்று கேட்க...
"உங்களுக்கு வேண்டியது வெற்றி... எங்களுக்கு வேண்டியது பணம்... நீங்க வெற்றி பெறலைன்னா தான் நீங்க எங்களைக் கேள்வி கேட்க வேண்டியது இருக்கும். மத்தபடி இது தேவையில்லாத ஒன்று." ஜெகன் கத்தரித்தார் போன்று பேசினான்.
வருண் மஹாராஜ் தான் தந்தையை அடக்கினான். இதோ பணம் முழுவதும் கொடுத்ததும் அடுத்தத் திட்டத்தைச் செயல்படுத்த சொல்லி அறிக்கை கொடுத்து இருந்தனர். அதில் முதலில் உள்ளது தான் இந்த ரத யாத்திரை.
ரத யாத்திரை கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. லட்சக்கணக்கில் தொண்டர்கள் புடைசூழ வேணுகோபாலன் ரதத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ரத யாத்திரையைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவரது ரதம் புறப்பட்டுச் செல்ல... அவரின் பின்னே லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களது வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றனர். இந்தச் செய்தி தமிழகத்தையே அதிர செய்தது.
இது குறித்து வெற்றி வேந்தனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டனர்.
"வேணுகோபாலன் சார் ரதத்தை ஓட்டி ஆரம்பித்துப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?"
"அவருடைய தந்தை கார் டிரைவர்... அந்தப் புத்தி மகனை விட்டு போகவில்லை போலும்..." என்று அவன் கிண்டலாய் பதில் சொன்னான்.
இந்தச் செய்தியை கேட்டு வேணுகோபாலன், வருண் மஹாராஜ் இருவரும் கொதித்தனர். இதற்கு எதிர் அறிக்கை விட வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர். அந்த இடத்தில் வருண் மஹாராஜ் சற்று நிதானித்துத் தந்தையிடம்,
"எதற்கும் ஜெகனிடம் கேட்போம்..." என்று சொல்ல...
"ஆமாடா, ............. இதுக்குப் போகணும்ன்னா கூட அவன் கிட்ட கேட்டு தான் போகணும் போல..." வேணுகோபாலன் ஆத்திரத்தில் வார்த்தைகளை விட...
"பொறுமையா இருங்கப்பா..." என்று தந்தையைச் சமாதானப்படுத்திய வருண் ஜெகனுக்கு அழைத்துப் பேசினான்.
"வெற்றிக்கு எதிரா நாங்க அறிக்கை கொடுத்தே ஆகணும். எங்களை அவமானப்படுத்திப் பேசிய அவனை நாங்களும் அவமானப்படுத்த வேண்டும்." வருண் மஹாராஜ் ஜெகனிடம் கொதித்தான்.
"நோ, நோ அப்படி எல்லாம் அவசரப்பட்டுப் பண்ணிராதீங்க... இதைப் பொறுமையா தான் கையாளணும்." என்ற ஜெகனை கண்டு வருண் மஹாராஜ்க்குக் கோபம் வந்தது.
"என்னங்க பேசுறீங்க? நாங்க எலெக்சன்ல ஜெயிக்கணும் தான். அதுக்காக எங்க தன்மானத்தை இழந்துட்டு ஜெயிக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை."
"நீங்க இதை நெகட்டிவ்வா பார்க்கிறீங்க... நாங்க இதைப் பாசிட்டவ்வா பார்க்கிறோம்."
"எங்களைக் கேவலப்படுத்துறது உங்களுக்குப் பாசிட்டிவ்வா? நீங்க எங்காளா? இல்லை அவங்க ஆளா?" வேணுகோபாலன் கோபத்துடன் கேட்க...
"உங்க கிட்ட தானே பணம் வாங்கி இருக்கோம். அப்போ நாங்க உங்க ஆளு தான்... நான் சொல்றபடி செய்ங்க..." என்றவன் மேற்கொண்டு அவர்கள் செய்ய வேண்டியதை சொல்லி கொடுத்தான். அதைக் கேட்டு அவர்களது முகம் மலர்ந்தது.
"ஓட்டுநர்கள் என்றால் கேவலமா நமது முதலமைச்சர் மகனுக்கு? அவர் தனது ஆணவ பேச்சால் அனைத்து ஓட்டுநர்களையும் கேவலப்படுத்தி விட்டார். கார், ஆட்டோ, லாரி, மினி வேன், பஸ், ரயில், என்று அனைத்தும் ஓட்டுபவர் ஓட்டுநரே… அப்படி என்றால் எல்லோருமே கேவலமா? வெற்றி வேந்தன் என்னைக் கேவலப்படுத்தவில்லை. நம்மில் ஒருவனைக் கேவலப்படுத்தி இருக்கிறார். அதாவது என்னை, உங்களைக் கேவலப்படுத்தி இருக்கிறார். அவருக்கு நீங்கள் எல்லோரும் சரியான பாடம் புகட்ட வேண்டும். செய்வீர்களா?" வேணுகோபாலன் கண்கள் கலங்க, உணர்ச்சி மிக மக்களிடையே வீராவேசத்துடன் முழங்கினார்.
அவரது முழக்கம் எல்லாச் சமூக ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பட்டது. இது எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடைந்தது. அதன் விளைவு அனைத்து ஓட்டுநர்கள் சங்கங்களும் வேணுகோபாலனை ஆதரித்துச் சமூக ஊடகங்களில் பதிவு செய்ய ஆரம்பித்தனர். சமூக ஊடகங்களில் இந்தப் பதிவுகள் எல்லாம் வைரலாகி டிரெண்டானது. தொலைக்காட்சிகளில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. ஓட்டுநர் என்ற வார்த்தை மெல்ல விஸ்வரூபம் எடுத்து சாதி, இனம் என்று பிரச்சினையை வேறு ரூபத்துக்கு மாற்றியது.
இவை எல்லாம் வேணுகோபாலனுக்குச் சாதகமாக மாறியது. மதியழகனுக்குப் பெருத்த தலைவலியாக மாறியது.
"வெற்றி, உனக்குத் தான் அரசியல் ஒத்து வரலையே... அப்படின்னா ஒதுங்கி நிற்க வேண்டியது தானே... எதுக்குத் தேவை இல்லாம வாயை கொடுத்த... இப்போது வாங்கிக் கட்டிக்கிறது யாரு? நான் தான்... சும்மாவே இருக்க மாட்டியாடா?" மதியழகன் மகனை கடிந்தார்.
வேணுகோபாலனுக்குப் பெருகிய ஆதரவு கண்டு வருண் மஹாராஜ் மகிழ்ச்சி அடைந்தான்.
"என்னமோ சொன்னீங்களேப்பா...? இப்போ பார்த்தீங்களா? இனிமேலாவது பேசாம அவங்க சொன்னதைக் கேட்டு நடந்துக்கோங்க." என்று அவன் தந்தையிடம் சொல்ல...
"இனி அவங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்." வேணுகோபாலன் திருப்தியுடன் சொன்னார். இப்போதே வெற்றி அவர் வசம் என்பது போல் ஒரு மகிழ்வு அவருள்...
தந்தை திட்டியதும் வெற்றி வேந்தனுக்கு மிகவும் வருத்தமாக, எரிச்சலாக இருந்தது. அவன் தனது கோபத்தைத் தணிக்கும் வகைத் தெரியாது காரை எடுத்துக் கொண்டு வேகமாக ஊரை சுற்றி வந்தான். அப்படி இருந்தும் அவனது மனம் அமைதி அடையவில்லை. தனது வார்த்தையைக் கொண்டே தன்னைக் கட்டம் கட்டிய வேணுகோபாலன், வருண் மஹாராஜ் மீது அவன் கொலைவெறியில் இருந்தான். அன்று வீட்டிற்குச் செல்ல பிடிக்காது அவன் தனது விருந்தினர் மாளிகைக்கு வந்தான். அங்கு வந்ததும் அவனுக்குப் பிரியதர்சினி ஞாபகம் வந்தது. அவளோடு கொண்ட உறவு அவனால் மறக்க முடியாது. அவனது மனம் அதிலேயே உழன்றது.
வசுந்தரா தேவி எப்போதடா கல்லூரிக்குச் செல்வோம் என்று பரபரப்புடன் காத்திருந்தாள். அவளது அன்னை தையல்நாயகி கூட அவளை அதிசயமாகப் பார்த்தார்.
"என்னடி அதிசயமா இருக்கு? சூரியன் மேற்கே உதிச்சிருச்சா?"
"ம்மா, மசமசன்னு நிற்காம டிபனை எடுத்துட்டு வாங்க..." அவள் அன்னையை அவசரப்படுத்தினாள்.
"இருடி வர்றேன்..." அவர் சமையலறை உள்ளே செல்ல...
அப்போது வேணுகோபாலன் அங்கு வந்தார். என்றும் இல்லாத அதிசயமாக மகள் சீக்கிரமே கல்லூரிக்கு கிளம்பி இருப்பதைக் கண்டு அவருக்குப் பெருத்த ஆச்சிரியமாக இருந்தது.
"வசும்மா, சீக்கிரமே கிளம்பிட்ட போலிருக்கு. இன்னைக்குக் காலேஜில் என்ன விசேசம்?"
"நம்ம காலேஜ் தேர்தல் கணிப்பு பார்த்து எனக்கு ஒரே சந்தோசம்ப்பா... அதுக்குக் காரணமான சாமை பாராட்டத்தான் கிளம்பிட்டு இருக்கேன்." மகள் உற்சாகமாகச் சொல்ல...
"அதுக்காக இந்த அப்பாவை கூட மறந்துட்டு போறியே வசும்மா? உன் முகத்தில் முழிக்காம என் வேலை எதுவும் நடந்திருக்கா?" வேணுகோபாலன் சுணக்கத்துடன் சொல்ல...
"சாரிப்பா..." என்று மன்னிப்பை வேண்டியவள் பின்பு அவரது கழுத்தில் கட்டி கொண்டு, "என் செல்ல அப்பா..." என்று கூறியபடி அவரது கன்னத்தில் முத்தமிட... மகளது முத்தத்தில் தந்தை குளிர்ந்து தான் போனார்.
"இது சரியில்லையே..." வருண் மஹாராஜ் முகச்சிளிப்புடன் அங்கு வந்தான்.
"என்னடா சரியில்லை?" வேணுகோபாலன் மகனை அதட்டினார்.
"அவனை அதட்டாம அவன் சொல்ல வர்றதை கேளுங்க..." என்றபடி அங்கு வந்த தையல்நாயகி எல்லோருக்கும் தட்டு எடுத்து வைத்து உணவு பரிமாற ஆரம்பித்தார்.
"வசு, இதென்ன ஒரு வேலைக்காரனை போய்ப் பாராட்டுவது... அவன் அவனோட வேலையை, கடமையைத் தானே செய்தான்." வருண் மஹாராஜ் தங்கையைச் சத்தம் போட்டான்.
"ப்பா, பாருங்கப்பா..." மகள் அழுகையில் உதட்டை பிதுக்க... அதைப் பாசமிகு தந்தையால் காண இயலவில்லை.
"விடு வருண்... சின்னப் பாராட்டு தானே... பாராட்டிட்டு போகட்டும்." வேணுகோபாலன் மகனை சமாதானப்படுத்தினார்.
"சின்னதா ஆரம்பிக்கும் விசயம் தான் பின்னாளில் பெரிய பிரச்சினையை உருவாக்கும்." அவன் கோபத்துடன் முணுமுணுத்தான்.
"குழந்தையைப் போய் என்னடா பேசுற?" வேணுகோபாலன் அதட்டவும் அவன் அமைதியாகி விட்டான்.
"நீ போயிட்டு வாடாம்மா..." வேணுகோபாலன் மகளுக்குச் சம்மதம் தெரிவிக்க...
வசுந்தரா தேவி சந்தோசமாய்க் கிளம்பி சென்றாள். அவள் சென்றது கல்லூரி தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே... அதனால் சாம் இன்னமும் கல்லூரிக்கு கிளம்பி வரவில்லை. சாம் வந்ததும் தன்னை வந்து பார்க்குமாறு கடைநிலை ஊழியரிடம் பணித்துவிட்டு அவள் அறைக்குச் சென்று விட்டாள். சரியாக எட்டரை மணிக்குச் சாம் கல்லூரிக்கு வந்தான். அவனிடம் விசயம் சொல்லப்பட... அவன் நேரே அவளைச் சந்திக்கச் சென்றான்.
சாம் வசுந்தரா தேவியின் அறை கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் எழுந்தவள்,
"வா வா சாம்... உனக்காகக் காத்திருந்தேன்." என்க... அவன் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.
"எங்கப்பா தான் வெற்றி பெறுவார்ன்னு நீ தேர்தல் கருத்துக் கணிப்பில் சொல்லியிருந்தல்ல... அதைப் பார்த்து எனக்கு ரொம்பச் சந்தோசம்... அதுக்குக் கிப்ட்டா அப்பா கிட்ட சொல்லி இந்த மாசத்தில் இருந்து உன்னோட சம்பளத்தை அதிகரிச்சுக் கொடுக்கச் சொல்றேன்." என்று மகிழ்ச்சியோடு கூறியவள் அவன் எதிர்பாராத நேரத்தில் அவனை அணைத்து அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவள் கொடுத்த முத்தத்தில் ஒரு கணம் திகைத்தவன் அடுத்தக் கணம் அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான். அவன் அறைந்ததில் முதலில் அதிர்ந்து நின்றவள் பின்பு சினத்தில் முகம் சிவக்க அவனைப் பார்த்தாள். அவளைப் பொறுத்தவரையில் அவள் சாதாரணமாகத் தான் அவனை அணைத்தாள், முத்தமிட்டாள், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவ்வளவே... அதற்காக அவன் அவளை அறைவானா!
"ஹௌ டேர் யூ..." அவள் ஆத்திரத்தில் வார்த்தைகள் வராது தடுமாறியபடி நின்றிருந்தாள்.
"இப்படிக் கட்டிப்பிடிக்கிறது, முத்தம் கொடுக்கிறது எல்லாம் எனக்குப் பிடிக்காது மேம்..." அவன் எச்சரிக்கும் தொனியில் பேச...
"டேய் சோடாப்புட்டி, உனக்கு ரொம்பத்தான் நினைப்பு... ஏதோ சந்தோசத்தில் இப்படிப் பண்ணிட்டேன். அதுக்குன்னு நீ ஓவரா கற்பனையை வளர்த்துக்காதே..." என்றவள் கோபத்துடன் அவனை அறைவதற்குக் கையை ஓங்க... அவனோ அவளது கையை இறுக பற்றிக் கொண்டு,
"இதே இது நான் நீங்க செய்ததைச் செஞ்சிருந்தால் உங்க ரியாக்சன் என்னவாக இருந்திருக்கும்?" என்று நிதானமாகக் கேட்க...
"செருப்பு பிஞ்சிருக்கும்." என்று அவள் கோபத்துடன் சொல்ல...
"அதே தான் எனக்கும்... பெண்களுக்கு மட்டும் தான் கற்பு, ஒழுக்கம் இருக்குன்னு நினைக்காதீங்க... ஆண்களுக்கும் உண்டு..." என்றவன் அவளது கரத்தினை விட்டு விட்டு,
"எனிவே, நீங்க சம்பளம் ஏத்தி கொடுத்ததுக்குத் தேங்க்ஸ்..." என்றவன் அறையை விட்டு வெளியில் வர...
அவள் திகைப்புடன் நின்றிருந்தாள். அவன் அவளை அறைந்தது கோபம் தான் என்ற போதும், அவனது வார்த்தைகள் என்னமோ அவளது மனதில் சாமரம் வீசியது.
வெளியில் வந்த சாம் வசுந்தரா தேவியை அடித்த தனது கையை விரித்துப் பார்த்தான். அவளது கன்னத்தை ஸ்பரிசித்த தனது கரத்தை காணும் போது சில்லென்று ஐஸ்க்ரீம் உண்டது போலிருந்தது. அவனது உதடுகளில் அவனையும் அறியாது மந்தகாச புன்னகை தோன்றியது.
'அடேய், உன் திறமை என்ன? படிப்பு என்ன? உனக்கு இந்த அடி முட்டாள் தான் வேணுமா?' அவனது மனசாட்சி அவனைக் காறி துப்பியது.
'அது முட்டாள் இல்லை... இன்னொசென்ஸ்...' அவன் மனசாட்சியைத் திருத்தினான்.
'எங்க ஊரு பக்கம் இதைக் கிறுக்குத்தனம், பைத்தியக்காரத்தனம்ன்னு சொல்லுவாங்க.' மனசாட்சி மறுபடியும் கவுண்ட்டர் கொடுத்தது.
'இப்போ என்ன சொல்ல வர்ற?' அவன் சலிப்புடன் மனசாட்சியைக் கண்டு கேட்டான்.
'நீ அவளுக்கு வில்லன் தான்... அதனால் வந்த வேலையை மட்டும் பாரு. தேவையில்லாம சென்ட்டிமென்ட் விசயத்தில் சிக்கி சின்னாபின்னமாகிறாதே. சீஃப்க்கு இதெல்லாம் பிடிக்காது.'
'சீஃப் கொடுத்த வேலையை உயிரை கொடுத்தாலும் செய்வேன். அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்?'
'அதான் சொன்னேனே... நீ வந்திருப்பதோ வில்லன் வேலை பார்க்க... அது தெரிஞ்ச பிறகு அவள் உன்னை லவ் பண்ணுவாளா? இதெல்லாம் உனக்குத் தேவையா?' மனசாட்சி சொன்னதும் அவன் மௌனம் சாதித்தான்.
'இப்போ நான் சொல்ல வருவது புரிந்ததா? உன் வாழ்க்கையில் நீ பார்க்காத பெண்களா? எதுக்கு இந்தச் சண்டிராணியைப் பிடிச்சிட்டு தொங்குற... போ, போய் வேற வேலையைப் பாரு.' மனசாட்சி அவனைக் கடிந்து விட்டு மறைந்து விட்டது.
சாம் யோசனையுடன் நடந்து சென்று கொண்டு இருந்தான். அவன் வாழ்வில் எத்தனையோ பெண்களைச் சந்தித்து இருக்கிறான் தான். ஆனால் இந்த மாதிரி ஒரு சண்டிராணியை, யுனிக் பீசை அவன் இதுவரை சந்தித்தது இல்லை. விரிவுரையாளரான அவளுக்குச் சப்ஸ்ட்டிட்யூட்டாக அவனை வேலைக்கு அமர்த்தி இருப்பதன் மூலம் அவளது அறியாமையை அறிந்து கொள்ளலாம்.
சாம் வசுந்தரா தேவியை நினைத்து புன்னகைத்தபடி சென்று கொண்டு இருந்தான்.
*************************
தேர்தல் வியூகத்தின் அடுத்தக் கட்ட நகர்வாக வேணுகோபாலன், வருண் மஹாராஜ் இருவரும் தமிழகம் முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்க வேண்டும். பொதுமக்களைச் சந்திக்க வேண்டும் என்றால்... சும்மா அவர்களைச் சந்தித்துக் கைக்கூப்பி வணக்கம் போட்டுப் புகைப்படம் எடுப்பது மட்டும் இல்லை. இவர்கள் மக்களைச் சந்திக்கும் போது அவர்கள் என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும் அந்த வேலையை இவர்களும் இறங்கி செய்ய வேண்டும் என்பதே!
"அவன் சாக்கடையைச் சுத்தம் செஞ்சிட்டு இருந்தா... நாங்களும் அதைச் செய்யணுமா?" வேணுகோபாலன் எரிச்சலுடன் சொல்ல...
"கட்டாயம்... அப்போ தான் மக்கள் மனசில் இடம் பிடிக்க முடியும்... அடுத்துக் கோட்டையில் கொடியை நிலைநாட்ட முடியும்." என்ற ஜெகனை உறுத்து பார்த்தவர்,
"எல்லாம் சரி தான்... உங்க சாரை நாங்க எப்போ தான் சந்திப்பது? பணம் எல்லாம் கொடுத்தும் எங்களால் அவரைச் சந்திக்க முடியவில்லையே." என்று கேட்க...
"உங்களுக்கு வேண்டியது வெற்றி... எங்களுக்கு வேண்டியது பணம்... நீங்க வெற்றி பெறலைன்னா தான் நீங்க எங்களைக் கேள்வி கேட்க வேண்டியது இருக்கும். மத்தபடி இது தேவையில்லாத ஒன்று." ஜெகன் கத்தரித்தார் போன்று பேசினான்.
வருண் மஹாராஜ் தான் தந்தையை அடக்கினான். இதோ பணம் முழுவதும் கொடுத்ததும் அடுத்தத் திட்டத்தைச் செயல்படுத்த சொல்லி அறிக்கை கொடுத்து இருந்தனர். அதில் முதலில் உள்ளது தான் இந்த ரத யாத்திரை.
ரத யாத்திரை கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. லட்சக்கணக்கில் தொண்டர்கள் புடைசூழ வேணுகோபாலன் ரதத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ரத யாத்திரையைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவரது ரதம் புறப்பட்டுச் செல்ல... அவரின் பின்னே லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களது வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றனர். இந்தச் செய்தி தமிழகத்தையே அதிர செய்தது.
இது குறித்து வெற்றி வேந்தனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டனர்.
"வேணுகோபாலன் சார் ரதத்தை ஓட்டி ஆரம்பித்துப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?"
"அவருடைய தந்தை கார் டிரைவர்... அந்தப் புத்தி மகனை விட்டு போகவில்லை போலும்..." என்று அவன் கிண்டலாய் பதில் சொன்னான்.
இந்தச் செய்தியை கேட்டு வேணுகோபாலன், வருண் மஹாராஜ் இருவரும் கொதித்தனர். இதற்கு எதிர் அறிக்கை விட வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர். அந்த இடத்தில் வருண் மஹாராஜ் சற்று நிதானித்துத் தந்தையிடம்,
"எதற்கும் ஜெகனிடம் கேட்போம்..." என்று சொல்ல...
"ஆமாடா, ............. இதுக்குப் போகணும்ன்னா கூட அவன் கிட்ட கேட்டு தான் போகணும் போல..." வேணுகோபாலன் ஆத்திரத்தில் வார்த்தைகளை விட...
"பொறுமையா இருங்கப்பா..." என்று தந்தையைச் சமாதானப்படுத்திய வருண் ஜெகனுக்கு அழைத்துப் பேசினான்.
"வெற்றிக்கு எதிரா நாங்க அறிக்கை கொடுத்தே ஆகணும். எங்களை அவமானப்படுத்திப் பேசிய அவனை நாங்களும் அவமானப்படுத்த வேண்டும்." வருண் மஹாராஜ் ஜெகனிடம் கொதித்தான்.
"நோ, நோ அப்படி எல்லாம் அவசரப்பட்டுப் பண்ணிராதீங்க... இதைப் பொறுமையா தான் கையாளணும்." என்ற ஜெகனை கண்டு வருண் மஹாராஜ்க்குக் கோபம் வந்தது.
"என்னங்க பேசுறீங்க? நாங்க எலெக்சன்ல ஜெயிக்கணும் தான். அதுக்காக எங்க தன்மானத்தை இழந்துட்டு ஜெயிக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை."
"நீங்க இதை நெகட்டிவ்வா பார்க்கிறீங்க... நாங்க இதைப் பாசிட்டவ்வா பார்க்கிறோம்."
"எங்களைக் கேவலப்படுத்துறது உங்களுக்குப் பாசிட்டிவ்வா? நீங்க எங்காளா? இல்லை அவங்க ஆளா?" வேணுகோபாலன் கோபத்துடன் கேட்க...
"உங்க கிட்ட தானே பணம் வாங்கி இருக்கோம். அப்போ நாங்க உங்க ஆளு தான்... நான் சொல்றபடி செய்ங்க..." என்றவன் மேற்கொண்டு அவர்கள் செய்ய வேண்டியதை சொல்லி கொடுத்தான். அதைக் கேட்டு அவர்களது முகம் மலர்ந்தது.
"ஓட்டுநர்கள் என்றால் கேவலமா நமது முதலமைச்சர் மகனுக்கு? அவர் தனது ஆணவ பேச்சால் அனைத்து ஓட்டுநர்களையும் கேவலப்படுத்தி விட்டார். கார், ஆட்டோ, லாரி, மினி வேன், பஸ், ரயில், என்று அனைத்தும் ஓட்டுபவர் ஓட்டுநரே… அப்படி என்றால் எல்லோருமே கேவலமா? வெற்றி வேந்தன் என்னைக் கேவலப்படுத்தவில்லை. நம்மில் ஒருவனைக் கேவலப்படுத்தி இருக்கிறார். அதாவது என்னை, உங்களைக் கேவலப்படுத்தி இருக்கிறார். அவருக்கு நீங்கள் எல்லோரும் சரியான பாடம் புகட்ட வேண்டும். செய்வீர்களா?" வேணுகோபாலன் கண்கள் கலங்க, உணர்ச்சி மிக மக்களிடையே வீராவேசத்துடன் முழங்கினார்.
அவரது முழக்கம் எல்லாச் சமூக ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பட்டது. இது எல்லாத் தரப்பு மக்களையும் சென்றடைந்தது. அதன் விளைவு அனைத்து ஓட்டுநர்கள் சங்கங்களும் வேணுகோபாலனை ஆதரித்துச் சமூக ஊடகங்களில் பதிவு செய்ய ஆரம்பித்தனர். சமூக ஊடகங்களில் இந்தப் பதிவுகள் எல்லாம் வைரலாகி டிரெண்டானது. தொலைக்காட்சிகளில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. ஓட்டுநர் என்ற வார்த்தை மெல்ல விஸ்வரூபம் எடுத்து சாதி, இனம் என்று பிரச்சினையை வேறு ரூபத்துக்கு மாற்றியது.
இவை எல்லாம் வேணுகோபாலனுக்குச் சாதகமாக மாறியது. மதியழகனுக்குப் பெருத்த தலைவலியாக மாறியது.
"வெற்றி, உனக்குத் தான் அரசியல் ஒத்து வரலையே... அப்படின்னா ஒதுங்கி நிற்க வேண்டியது தானே... எதுக்குத் தேவை இல்லாம வாயை கொடுத்த... இப்போது வாங்கிக் கட்டிக்கிறது யாரு? நான் தான்... சும்மாவே இருக்க மாட்டியாடா?" மதியழகன் மகனை கடிந்தார்.
வேணுகோபாலனுக்குப் பெருகிய ஆதரவு கண்டு வருண் மஹாராஜ் மகிழ்ச்சி அடைந்தான்.
"என்னமோ சொன்னீங்களேப்பா...? இப்போ பார்த்தீங்களா? இனிமேலாவது பேசாம அவங்க சொன்னதைக் கேட்டு நடந்துக்கோங்க." என்று அவன் தந்தையிடம் சொல்ல...
"இனி அவங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்." வேணுகோபாலன் திருப்தியுடன் சொன்னார். இப்போதே வெற்றி அவர் வசம் என்பது போல் ஒரு மகிழ்வு அவருள்...
தந்தை திட்டியதும் வெற்றி வேந்தனுக்கு மிகவும் வருத்தமாக, எரிச்சலாக இருந்தது. அவன் தனது கோபத்தைத் தணிக்கும் வகைத் தெரியாது காரை எடுத்துக் கொண்டு வேகமாக ஊரை சுற்றி வந்தான். அப்படி இருந்தும் அவனது மனம் அமைதி அடையவில்லை. தனது வார்த்தையைக் கொண்டே தன்னைக் கட்டம் கட்டிய வேணுகோபாலன், வருண் மஹாராஜ் மீது அவன் கொலைவெறியில் இருந்தான். அன்று வீட்டிற்குச் செல்ல பிடிக்காது அவன் தனது விருந்தினர் மாளிகைக்கு வந்தான். அங்கு வந்ததும் அவனுக்குப் பிரியதர்சினி ஞாபகம் வந்தது. அவளோடு கொண்ட உறவு அவனால் மறக்க முடியாது. அவனது மனம் அதிலேயே உழன்றது.