வணக்கம்,
நான் ஆண்டாள் அருகன். பெற்றோரின் வளர்பே ஒரு குழந்தையின் வயதை மீறிய முதிற்சிக்கு காரணம்.
மற்ற சகோதரிகள் சொல்லுவது போல் சமூகம் என்பது தனிப்பட்ட ஒன்று இல்லை தான்.. அதில் நாமும் ஒரு அங்கம் தான்.. ஆனால் இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், ஒரு குழந்தைக்கு பெற்றோர் தான் first circle.. அவர்களை தாண்டி தான் இந்த சமூகம்..
ஒரு குழந்தையின் சில குணங்கள்.(character) பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.. பின்பு வளரும் பொழுது அந்தக்குழநதை தனது பெற்றோரிடம் இருந்து தான் தனது பழக்க வழக்கம், பண்பு, கலாச்சாரம் என்று அனைத்தும் கற்றுக்கொள்கிறது.. ஏழு வயதிற்குள் ஒரு குழந்தையின் குணாதிசயம் முழுமைப் பெற்று விடுகிறது..
அதற்குப் பின் தான் அவர்கள் இந்த சமூகத்திற்கு அறிமுகம் ஆகிறார்கள்..
அந்த ஏழு வயதிற்குள் சம்மோகத்தால் அவர்கள் கற்றுக்கொள்வதை விட பெற்றோரிடம் கற்றுக்கொள்வது தான் அதிகம்.. அப்படி இருக்கும் பொழுது பெற்றோர் தான் அவர்களின் பிள்ளைக்கு எது தெரிய வேண்டும் எது நல்லது எது தவிர்க்கப்பட வேண்டியது என்று தேர்ந்தெடுக்க வேண்டும்..