நானு நானு நானும் சொல்லுவேன்...
ராஜலட்சுமி முருகேசன் ஆக பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவைதான்... எனக்கு பயணம் ஒத்துக்காது.. அடிக்கடி பார்க்காமலும் இருக்க முடியாது என்று... என் அப்பா பக்கத்திலே... ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கட்டிக்கொடுத்துட்டு.. மூன்று வருடங்களுக்கு முன்... அவர் வர முடியாத தூரத்திற்கு சென்றுவிட்டார்.
தற்போது..ராஜலட்சுமி அன்புச்செல்வன் ஆகி அடுத்த வாரம் வந்தால் பன்னிரெண்டு வருடங்கள் ஆகிவிடும்..
என்னோட பத்தொன்பது வயதிலிருந்து நான் நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன்... அனைவரையும் போல் rc mam நாவல்கள் தான் முதல்ல பழக்கம் ஆச்சு.. அதில் விழுந்து நீந்தி கரைத்து குடித்தேன்.. அப்பறம்.. கல்கியின் பொன்னியின் செல்வன் படித்ததும் அசந்துட்டேன்.. நாவல்கள் என்றால்... இப்படியும் கண் முன் காட்சியாய் விரிவது போன்றும் அந்த கதாபாத்திரங்கள் தன் கண் முன் நடமாடுவது போலவும் எழுதலாமான்னு.. வியந்து போய் அடிமையாகிட்டேன்... பின் ஒவ்வொரு எழுத்தாளார்களாக தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.. அப்பொழுது அறிமுகம் ஆனது தான் ஸ்ரீக்காவின் நாவல்கள்... ஸ்ரீக்காவுடைய நாவல் படித்ததும் எனக்கு நாவல் எழுவதில் இப்படியும் ஒவழிமுறை இருக்கா என்று வியந்தேன்.. மனித நுண்ணிய உணர்வுகளை போட்டு ஆலசி அதற்கு அழகான தீர்வு.. அசத்தலான ஹீரா... அவனையே சரணடைய செய்யும் ஹீரோயின் கூடவே... சமூக நலக் கருத்துக்கள்... அசர வைக்கும் எழுத்துக்கள் என்று அமர்களம் செய்திருப்பாங்க.. மேலும் அவர்களுடைய நாவல்களின் தேடலில் இந்த சைட்க்கு வந்தேன்... போன வாரத்தோட முதலாம் ஆண்டு நிறைவு பெற்றது..
இங்கே ஸ்ரீக்காவுன் நட்பு மட்டுமின்றி பல அருமையான தோழமைகள் கிடைத்தார்கள்...(AARK gang ???)
ஒரு வாசகர் தன் கமெண்ட்டில் எனக்கு கதை எழுத பிடிக்கும் என்று எழுதியிருந்தாங்க.. உடனே... ஸ்ரீக்கா கிட்ட இருந்து ரிப்ளை... கதை நேம் சொல்லுங்க த்ரேட் ஓப்பன் செய்து தரேன்.. என்று படித்ததும் அசந்து விளையாட்டாய்... "அட அப்போ நானும் கதை எழுதப் போரேன்" என்று ரிப்ளை செய்தேன். .. உடனே தளத்தோழிகள் லட்சுமி, சாந்தி, திஷியிடமிருந்து வாழ்த்தும்.. வந்தது...ஸ்ரீக்காவிடமிருந்து அழைப்பும் வந்தது... ஐ...மற்றவர்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்காங்க நாமேளே நம் மீது ஏன் நம்பிக்கை வைக்கக்கூடாது என்று எழுத ஆரம்பித்து விட்டேன்...
அனைவரும் கொடுத்த ஆதரவாலும்... உற்சாகத்தாலும்... இப்போ... நான்காவது மற்றும் ஐந்தாவது கதை எழுதிட்டு இருக்கேன்....