All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன தவம் செய்தேன்

love-wallpapers-25250-8188001 (1).jpg

காதல் ........காதல்......காதல்


இந்த சிறு வார்த்தைக்கு தான் எத்தனை சக்தி. காலங்கள் மாறினாலும் இன்றும் இளமையோடு ,புது பொலிவோடு ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டு தானே இருக்கிறது .இதில் எத்தனையோ ட்ரென்ட்ஸ் வந்து விட்டது .பார்க்காமலே காதல் ,பார்க்க பார்க்க காதல் ,சொல்லாமலே காதல் ,ஒரு தலை காதல், முக்கோண காதல் என்று பல வகை காதல் கண்டு ,கேட்டு ,பார்த்து ,வாழ்ந்து ,ரசித்து இருப்போம் .

ஒரு பெண்ணை பார்த்து காதலித்து அவளுக்காக மட்டுமே வாழ்ந்து ,மூச்சு விட ஒருவனால் முடியுமா ????அவளின் நிழலை தவிர்த்து வேறு ஒரு பெண்ணின் நிழலை கூட மிதிக்காமல் வாழ்ந்து விட முடியுமா ????வாழக்கையில் 1000, லட்சம் பெண்களை கடந்து வருவோம் .ஒரு கணமாவது ஏதாவது ஒரு பெண்ணின் அழகு கண்டு நின்று ,"என்ன அழகு "என்று ரசித்து ,பாராட்டி இருப்போம் மனத்திற்குள்ளாவது .அதை கூட செய்யாது "மனதாலும் இன்னொரு மாதை தீண்டேன் "என்று கலியுக ஸ்ரீ ராமனாக ஒருவனால் வாழ முடியுமா ????ஒரு இல் ,ஒரு சொல் ,ஒரு வில் என்று வாழந்த ராமனாக இன்று இருக்க முடியுமா ????அந்த பெண்ணை காக்க உலகத்தையே கூட எதிர்க்கும் துணிவு கொண்ட ஒருவன் இருந்தால் ???? இந்த கேள்விகளுக்கு விடையாக ---என்ன தவம் செய்தேன்

விஜய கருணாகரன் -மதுராக்ஷி இவர்களின் வாழ்க்கை ,காதல் ,மோதல் தான் "என்ன தவம்செய்தேன் "-இதில் யார் யாருக்காக தவமிருப்பது ???இவர்களின் தவத்திற்கு பலன் ??????பொறுத்து பார்ப்போம்

1551327009869.png
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM -1 தவம் 1

images (1).jpg images (3).jpg

எதிலும் இயங்கும் இயக்கமும் நானே ........
என் இசை நின்றால் அடங்கும் உலகே ...........
நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே -----


திருவிளையாடல் படத்தில் வரும் பாடலில் ஒரு நொடி இறைவன் தன் அசைவை நிறுத்தியவுடன் ,உலகமே ஒரு நொடி உறைந்து நிற்பதாக கட்சி வரும் .காற்று ,அலை ,பறக்கும் பறவைகள் ,பொங்கும் எரிமலை என அனைத்தும் பிரீஸ் ஆகி நின்று விட்டதாக காட்டுவார்கள் .அதேபோல் தன்னை சுற்றி அனைத்தும் ஒரு கணம் நின்று போனதாகவே தோன்றியது மதுரக்ஷிக்கு .பூண்டு வகை தாவரத்தில் ஒன்று உண்டாம் .அதை மிதித்தவர்கள் அப்படியே சிலையாக உறைந்து நின்று விடுவார்களாம் .நொடிகளோ பல வினாடிகளோ மதுராக்ஷியும் அவ்வாரே சிலையாக உறைந்து நின்று கொண்டு இருந்தாள் .கண்கள் இமைக்க மறந்து ,தேவர் மகனில் ரேவதி சொல்வது போல அவளின் திறந்த வாயில் இருந்து "வெறும் காற்று "தாங்க வெளி வந்தது .

மதுராக்ஷி -- சங்கரன் -பவானியின் தவ புதல்வி .அண்ணன் ரகுராமனின் பத்ரகாளி(((((பயபுள்ளக்கு தீடிர்னு எப்படி இவளோ தைரியம் வந்தது ???)))) .கார்த்திக்கின் கனவூ நாயகி (இப்படி சொல்லலீனா அவனுக்கு அடி விழுங்க -பேய் ,பூதம் என்பதை தான் இவளோ பாலிஷா சொல்றான் ) 22 வயது .முடித்தது MBA (+ கம்ப்யூட்டர் கோர்ஸ் .(போய் வா மா என்று டிகிரி கொடுத்து அனுப்பிட்டாங்களோ -யார் கண்டது .நமக்கு ஏன் வம்பு.சொன்ன ஓத்துட்டு போயிடுவோம் .நமக்கு நம்ம ஹெல்த் முக்கியமுங்கோ --உங்களுக்கு ?????)))) சட்டென்று பார்ப்பதற்கு சமந்தா + ஸ்னேகா மாதிரி ஹோம்லி லுக் .நிச்சயம் திரும்பி பார்க்க தூண்டும் அழகி .மஞ்சள் பொற்சித்திரம் .இடை வரை தாண்டிய கருங்கூந்தல் .மான் ,மீன் கலந்த கலவையாக கண்கள் .அதில் இட பட்டு இருந்த மை கண்களுக்கு தனி அழகினை கொடுத்தது .ஸ்ட்ராபெர்ரி ,செர்ரி ,ரோஜா இதழ்கள் தேனில் ஊற வைத்த எபெக்ட் கொடுக்கும் சிவந்த இதழ்கள் .புருவத்தின் மேல் உள்ள மச்சம் அந்த ப்ரஹ்மனே திரிஷ்டி பொட்டு வைத்தது போல் இருந்தது.கொடி இடை /ஸிரோ சைஸ் உடல் அமைப்பு எல்லாம் இல்லை .நமது பக்கத்துக்கு வீட்டு பெண்கள் எப்படி இருப்பார்களோ அப்படி பட்ட உடல் அமைப்பு .உயரத்தில் மட்டும் 5 '8 இருப்பாள் .

மாசு மரு வற்ற சருமம் .chubby சீக்ஸ் .dimpled சின்.சில பல சினிமா பாடல்களில் பெண்களை வர்ணிப்பார்களே அவை இவளுக்கு பொருந்தும் .அதை சிச்சுவேஷன் சாங் போலெ பாட இரு ஜீவன்கள் பின்னால் வருவாங்க.குணத்திலும் தங்கம் .மற்றவர்களுக்கு பார்த்து பார்த்து நல்லது செய்வதில் மதுராக்கு நிகர் மதுரா தான் .கொஞ்சம் வாலு ,கொஞ்சம் அப்பாவி .

Iஇந்த அழகு சிலை தான் நிஜ சிலையாக மாறி பேச வார்த்தை கிடைக்காமல் வாயை திறந்து திறந்து மூடி கொண்டு இருந்தாள் .அத்தனை தவிப்பு ,திணறல் ,அதிர்ச்சி ,கலக்கம் அவளிடம் .கண்கள் கலங்கி நின்ற அவளின் கோலம் பார்க்கும் யாருக்குமே நெஞ்சை பிசையவைக்கும் .குழந்தை தனமான அந்த குமரியை அவள் வீட்டினரே,நண்பர்களோ கூட அழ வைத்தது இல்லை .

ஆனால் மதுராவை கலங்க வைத்து அவளின் தவிப்பு ,திணறலால் பாதிக்க படா தவளாய் ,அதை அலட்சியம் செய்தவாறு அந்த மாபெரும் ஹாலில் அவள் அமர்ந்து இருந்தாள் .கையில் நுரை பொங்கிய சாம்பைன் (champagne )க்ளாசில் இருந்து வாய் வைத்து உறிஞ்சிய வாறு அடிக்கண்ணில் மதுராவின் நிலையை சுவைத்து கொண்டு இருந்தாள் சோனா .அவள் அமர்ந்து இருந்த விதம் படையப்பா நீலாம்பரியை ஓத்து இருந்தது .திமிர் ,தெனாவட்டு ,அகம்பாவம் ,டாம்பீகம் ,சுயநலத்தின் ஒட்டு மொத்த அகராதி அவள் .ஆயிரம் நீலாம்பரி ,சொர்ணக்காவின் கலவை குணத்தில் ,நடத்தையில் .

சோனா மதுராவின் பெரியப்பா சேதுபதியின் மகள் .இந்தர் இண்டஸ்ட்ரீஸ் கஜேந்திரனின் பேத்தி .மாபெரும் கோடீஸ்வரி .அளவுக்கு அதிக பணம் ,கஜேந்திரனின் வளர்ப்பு என்று மற்றவர்களின் வலி ,வேதனை ,துயரம் என்று எதற்குமே சற்று கூட இளக்கம் காட்டாத ராட்சச ஜென்மம் .தான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் ,அப்படி நடக்க எந்த எல்லைக்கும் போகும் வெறித்தனம் சோனவிடம் உண்டு .

அவளை போலவே ஐந்து அல்லக்கைகள் அந்த ஹாலில் அமர்ந்து இருந்தன .சோனாவின் பணத்திற்காக உடன் சுற்றும் காக்கை கூட்டம் .குணத்திலும் சோனவை போன்றவர்கள் .ஒன்று மட்டும் உறுதி நிச்சயம் இவர்கள் பெண்களே கிடையாது .பெண்களின் எந்த குணமும் இவர்களிடம் கிடையாது .ஆடை என்ற பெயரில் அறுவரும் கெர்ச்சிப் அணிந்து இருந்தனர்என்று சொன்னால் மிகையாகாது .மறைக்க வேண்டியவை வெளிச்சம் போட்டு காட்ட பட்டு இருந்தது .பெண்ணியம் பேசுபவர்களே முகம் நிச்சயம் சுளிப்பார்கள் .தரை முழுவதும் மது பாட்டில்கள் .டேபிள் மேல் குவிந்து கிடந்த சிகரேட் துண்டுகள் .இந்த மாதிரி பெண்களிடம் தவறு ராட்சசிகளிடம் மாட்டி விழி பிதுங்கி நின்று இருந்தாள் மதுரா .

"மதுரா ! அம்மா சொல்வதை கேளுமா .அப்பா கிட்ட நீயே சொல்லி இதை தடுக்க பாரு மா .தேவை இல்லாம உன் தலையில் நீயே மண்ணை அள்ளி போட்டு கொள்ளாத ."என்று தான் தாயார் பவானி ஒரு வருடத்திற்கு முன் ,பல முறை தன்னிடம் கெஞ்சியது நினைவுக்கு வர மதுராவிற்கு இதயம் வலித்தது .அத்தனை தடவை கெஞ்சினாரே !!!.துஷ்டனை கண்டால் தூர விலக வேண்டும் என்று சொல்வார்கள் .சோனாவை கண்டதும் மாநிலமே மாறி இருக்க வேண்டும் என்று நிரூபித்து விட்டாளே !!!!தன் தாய் உண்மையில் ஒரு தீர்க்க தரிசி .இப்படி ஒரு நிலை மகளுக்கு வரும் என்று எண்ணி தானே அவர் பயந்தது .அவர் பயம் உண்மையாகி விட்டது .உண்மையாக்க பட்டு விட்டது

உடன் பிறந்த ரகு ,அவளுக்கு என்று மணம் முடிக்க பெரியவர்களால் சிறு வயதில் இருந்தே பேச பட்ட கார்த்திக் ,அவ்வளவூ ஏன் சோனாவின் பெற்றோர் ஆனா சேதுபதி -கனகா கூட "வேண்டாம்"என்று எவ்வளவூ தடுத்தார்கள் ?????யார் பேச்சையும் கேட்காமல் முடிவூ எடுத்த தந்தை சங்கரனின் வார்த்தையை மறுத்திருக்க வேண்டுமோ ???கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல சோனாவின் உண்மை முகம் தெரிந்த பிறகு புலம்பி என்ன செய்ய முடியும் ????

"ஆஸ்திரேலியாவில் இதை விட சம்பளம் அதிகமான வேலை வாங்கி தருகிறேன் ராணி மா .ப்ளீஸ் .....இது தேவை இல்லாத வேலை .சரியா படலை .மனசு பதறுது ராணி .வேண்டாம் மா "என்று காலில் விழாத குறையாக கெஞ்சினனானே கார்த்திக் -அவன் பேச்சை மதிக்காதற்கான தண்டனை இதோ.

தந்தை நல்லது செய்கிறார் ,பிரிந்த குடும்பம் ஒன்று சேர பாடுபடுகிறார் என்று நினைத்தது தப்போ !!!!இந்த சோனாவும் கூட தான் குடும்பம் ,பாசம் ,அன்பு ,தன் தந்தை சேதுபதி செய்த தவறுக்கு தண்டனை,பிரெயிஸித்தம் ,என் தங்கை ,தங்கை ஒரு கோவில் ,என் தங்கை மதுரா என்று பக்கம் பக்கமாக டயலாக் விட்டாளே !குடும்பம் ,தங்கை என்று ஒரு வருடம் முன்பு உருகி வழிந்தவளா இன்று இப்படி பேசியது ????மற்ற ஜந்துக்களையும் பேச விட்டு ரசித்தது ???

"இன்னொரு உயிரை கொன்று புசிப்பது மிருகமடா .......இன்னொரு உயிரை கொன்று ரசிப்பது அரக்கனடா "இந்த பாடல் வரிகள் சோனாவிற்காகவே எழுதினார்களோ ?????

காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகள் .அதுவும் ஒவ்வொரு பெண்ணும் உயிருக்கு மேலாக மதிக்கும் ,உயிரை கொடுத்தாவது காப்பாற்ற துடிக்கும் ஒழுக்கத்தை ,கற்பை ,மானத்தை அல்லவா வாய் வார்த்தையால் குதறி எடுத்து விட்டனர் .

maxresdefault.jpg


PENANCE WILL CONTIUNE......... தவம் தொடரும்.......................
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM---2 தவம் ---2

15no 1  QQ.jpg

குழந்தை மனம் கொண்டவளை ,சொந்த சித்தப்பா மகளை வார்த்தைகளால் குற்றுயிர் ஆக்கி விட்டு அதை ரசித்து மகிழ்ந்தது அந்த பேய்கள் கூட்டம் .உடம்பே தீ பற்றி எரிவது போலெ துடித்து போனாள் மதுராக்ஷி .வேடனின் விஷ அம்பு பட்டு மரண வலியில் துடிக்கும் மானை போல் சொல்லம்பு பட்டு துடித்து கதறியது அவள் மனம் .இது போன்ற கேவலங்களை ,விஷ சொற்களை அவள் கண்டதும் இல்லை ,கேட்டதும் இல்லை .சோனாவின் அளவூ பணத்திலேயே புரள வில்லை என்றாலும் ,பார்ன் வித் கோல்டன் ஸ்பூன் மல்டி மில்லியனைர் இல்லை என்றாலும் மதுராவும் உயர் மத்திய குடும்பத்தை சார்ந்தவள் தான் .

சங்கரன் நேர்மையான ஆடிட்டர் .தொழிலில் வெகு சுத்தம் .நீதி ,நேர்மை ,நியாயம் என்று இன்னமும் இவற்றை கடை பிடிக்கும் நம்ம தந்தையை போன்றவர் .வீடு ,குடும்பம் ,உறவு என்று பாச வட்டத்தின் தலைவர் .அவர் மனைவி பவானி டீச்சர் .ஒரு சில டீச்சர்களை நம்ம வாழ்வில் மறக்கவே முடியாது இல்லையா .அது போலெ பாசமான ,மாணவ,மாணவிகளை அரவணைத்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்

maxresdefault (11)11.jpg
(BHAVANAI----SANKARAN)

இவர்களின் மூத்த குமாரன் ரகுராமன் -பெற்றோர் கிழித்த கோட்டை தாண்டாத உத்தமன் .எவனால் அதிகம் மாட்டுவது மதுரா தான் .ஆண் பிள்ளை பெண் போலெ பொறுப்பாக இருக்க ,பெண் பிள்ளையோ ஆண் போலெ பொறுப்பு இல்லமல் ,குரங்கு தனம் செய்தால் ????பின்ன என்ன பா கோலம் போடுவது முதல் ,நைட் தட்டை கழுவி சாய்க்கும் அனைத்து வேலைகளையும் ரகு செய்யும் போது மதுராவை கழுவி ஊத்த மாட்டார்களா என்ன ???இதற்கும் ரகு சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்து IT நல்ல வேலையில் இருப்பவன் .சாப்பிட கூட கிட்சன் பக்கம் போகாத நல்லவங்க மேடம் .டைனிங் டேபிள் ஓடு இவள் வேலை முடிந்து விடும் .(ரொம்ப குஷ்டம் -சே கஷ்டம் .கார்த்திக் சமைக்க தெரியுமப்பா .சீக்கிரம் கத்துக்கோ .)))

"வயத்துல நெருப்பை கட்டிட்டு இருக்கேன் " "போற இடத்துல சம்பந்தி என்னை தான் கேள்வி கேட்பாங்க -என்ன பொண்ண வளர்த்து வைத்து இருக்கீங்க என்று " "பொண்ணா லட்சணமா நட ." "பையன் ,ஆம்பிள அவனே அமைதியா இருக்கான் ,பெண் பிள்ளைக்கு எவ்வளவூ வாய் ஆகாது ." "பெண்ணா இது ?" இது போன்ற லட்சர்ச்சனைகள் ,சுப்ரபாதங்கள் -மதுராவின் வீட்டில் தினமும் கேட்கலாம் . (((ஹி ஹி அங்கேயுமா மதுரா ???)))


சங்கரனின் -பவானியின் உடன் பிறவா சகோதர ,சகோதரியாக கோசலை -முரளி .இவர்களின் மகன் தான் மதுராவிற்கு என்று அவள் பிறக்கும் போதே நிச்சயிக்க பட்ட மாப்பிளை .சங்கரன் -பாவனியினால் தூக்கி வளர்க்க பட்டவன் .இன்னொரு ரகு .இந்த அன்பு சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி மதுரா என்று சொன்னால் கூட மிகையில்லை.அன்பு ,பாசம் ,கருணை ,கனிவு ,பண்பு என்று நல்லதிற்கு மட்டுமே வளர்க்க பட்ட தேவதை அவள் .அவளை போய் என்ன சொல்லி விட்டனர் இவர்கள் நாக்கில் நரம்பு இல்லாமல் .

கண்கள் கண்ணீரை சிந்த முயல ,கை கால்கள் நடுங்கி கொண்டு இருக்க ,மனமோ ரத்தம் சிந்த ,சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவாறு காக்டெய்ல் குடித்து கொண்டு இருந்த தன் பெரியப்பா மகளை நிமிர்ந்து பார்த்தாள் மதுரா.வஞ்சம் வாய்த்த பாம்பு போல் தன் மேல் விஷம் கக்கி விட்டு அதை அவள் அணுஅணுவாக ரசிப்பதை கண்டதும் மதுரா நிதானித்தாள் .எதற்கும் அஞ்சாதவள் தான் மதுரா .பாரதியாரின் புதுமை பெண்

நிமிர்ந்த நடையும் ,நேர்கொண்ட பார்வையும் ,நிலத்தில் யாருக்கும் அஞ்சாத செருக்கும் என்று இருப்பவள் தான் என்றாலும் சகோதரியின் வார்த்தைகளின் முன் துடித்து தான் போனாள் .அந்த துடிப்பு கூட 5-10 நிமிடங்கள் மட்டுமே இருந்தது .மெல்ல மெல்ல அவளின் வழக்கமான நிமிர்வு மீண்டது .தவறு எதுவும் செய்யாத போது எதற்கு அஞ்சி நடுங்க வேண்டும் ????

'இவள் என் வலி ,வேதனையை ரசிக்கிறாள்.இது தெரியாமல் குடி போதையில் சொல்ல பட்டது அல்ல .வேண்டும் என்றே சொல்லியது .'என்று மூளை எச்சரிக்கை விடுக்க,சோனாவின் முகத்தில் நிலவிய பூரண திருப்தி ,எதையோ சாதித்து விட்ட வெறியில் கண்கள் பள பளப்பாதை கண்ட மதுரா தன்னை சமாளித்து தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்தாள் .

' 'நோ ஸ்டெடியா நில்லு மதுரா ......இந்த காட்டேரி உன் வலி,கண்ணீரை ரொம்பவே என்ஜோய் செய்றா .விடாதே .....இதுங்க எல்லாம் ஒரு மனுஷ ஜென்மங்க .இதுங்க பேசுதுங்கனா நீ உடைய பார்த்தே .....விடாதடி இதுகளை 'மனம் தெளிவாகி விட எரிமலையின் சீற்றத்திற்கு ஈடாக கோபம் உயர ஆரம்பித்தது .

மதுராவின் இந்த நிமிர்வை சோனா எதிர் பார்க்கவில்லை போல் இருந்தது .முகம் கறுக்க ,வெறியோடு மதுராவை நோக்கியவள் முகத்தில் நாகப்பாம்பின் சீற்றம் தென்பட்டது .தனது இரை மிஸ் ஆகி விட்ட கடுப்பு அவள் முகத்தை விகாரமாக்கியது .விட்டால் அப்போதே மதுராவை அடித்து கொன்று விடும் வெறி
hqdefault (1).jpg

ஆனாலும் உனக்கு திமிர் ஜாஸ்தி தான் டார்லிங் " என்றாள் சோனா .

"பட் பிச்சைக்காரிக்கு எவ்வளவூ திமிர் இருக்க கூடாதே சோனா "என்றது அருகில் இருந்த ஒரு ஜந்து .

"அந்த திமிர் இருக்க போய் தானே கொழுத்த பணக்காரன் எவன் கிடைப்பான் என்று அலைய முடிகிறது "என்றது இன்னொரு சாக்கடை புழு

"உன் ஸ்டேட்டஸுக்கு இவளை எல்லாம் உன் அருகவே சேர்த்து இருக்க கூடாது சோனா டியர் .நீ பாவம் பார்த்தா ........இந்த மோகினி பேய் உன் வாழ்க்கையே பங்கு கேட்கிறாள் ."என்றது இன்னொரு ஜால்ரா .

"பணத்துக்காக என்றால் ஊரில் வேறு எவனுமே கிடைக்கலையா உனக்கு ?????எங்க சோனுவின் ஹுஸ்பேண்ட் தான் கிடைத்தாரா ????அதற்கு தான் ஊரில் பல ஹோட்டல் இருக்கே "என்றாள் இன்னொரு குடிமகள் .

((((எனது விஜய கருணாகரன் சோனாவின் husband ஹா ?????அட கடவுளே உனக்கு கண்ணு இல்லையா ,இரக்கமே இல்லையா ?????சந்தனத்திற்கும் சாக்கடைக்கும் எப்படி பா பொருந்தி வரும் ??????சோனாவுக்கும் கருணாகரனுக்கும் லவ் வா ????சோனாவை மனுஷ ஜென்மமாக கூட யாராலும் ஏற்க முடியாது .அது கூட காதல் என்பது காதலையே கொச்சை படுத்துவது போன்றது .இதில் திருமணம் .....இந்த ரத்த காட்டேரி கிட்ட ஹீரோ எப்படி பா சிக்கினான் ????என்னப்பா இது குரங்கு கையில் பூ மாலை கேள்வி பட்டு இருக்கேன்.இது அதற்கும் மேல் இருக்கே !!கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்த கதை .....இது என்ன சூரியன் போன்றவனை புதை குழியில் தள்ளி விட்டு இருக்கே !!!!!!!இ ப்படி குணமுடைய ஒருத்தியை கண்டு பிடிக்க கூடவா இவனால் முடியலை ஹார்ட் அட்டாக் வருது பா .இவளுக்கு புருஷனா இருக்கறதுக்கு இந்த மனுஷன் சந்நியாசம் வாங்கிட்டு போய் இருக்கலாமே இது என்ன பா கருணாகரனுக்கு வந்த சோதனை ?????பிசாசின் கையில் தேவனா??????
இவனை மீட்கவே 100 பேர் தேவை படும் போலெ இருக்கே ....இவன் எப்படி மதுராவை சோனாவிடம் இருந்து காக்க போகிறான் ???????யார் யாரை மீட்க போகிறார்கள் ????யார் யாருக்காக தவம் இருக்க போவது ????ரட்சகன் கருணாவா ரட்சிக்க போகிறவள் மதுராவா ??????இதில் இவன் எப்படி ஸ்ரீ ராமன் ஆக இருக்க முடியும் ???ஒரு வேளை இவன் ஸ்ரீ ராமனாக கடைசி வரை தியாகியாக இருக்க போவது சோனாவிற்கா ???????யாரின் ஸ்ரீ ராமன் இவன் ????? தவம் தொடரும் ?????)))))
km600x400-53fc3e3a5b6ce31.jpg


PENANCE WILL CONTINUE............. தவம் தொடரும்
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM---3 தவம் ---3

jennifer-hot-pic.jpg


"சொல்லுடீ ....எவ்வளவூ பேர் கேட்கிறாங்கல.........உனக்கு என் ஹுஸ்பேண்ட் தான் கிடைத்தாரா !!!!!!பணம் தேவை என்றால் சொல்ல வேண்டியது தானே !!!!ஒ வெயிட் வெயிட் .....பணத்தோடு ......மற்ற ............என் ஹப்பி தான் வேணுமா உனக்கு ........."என்று சென்சார் செய்யும் அளவூ மேலும் தொடர்ந்தாள் சோனா .

"அம்மா !!!!!!"என்ற அலறல் அந்த மாளிகை முழுதும் எதிரொலிக்க ,தன் கை எறிந்த பிறகே தான் சோனவை பலமுறை மாறி மாறி கன்னத்தில் அறைந்து இருக்குகிறோம் ,சோனாவின் உதடு கிழிந்து ரத்தம் சொட்டுகிறது என்பதையும் ,அடித்த அடிகளின் வேகம் தாள முடியாமல் அந்த ஹாலின் ஒரு கோடியில் போய் சோனா விழுந்து இருக்கிறாள் என்பதும் ,தன் கோபத்தை கண்டு மற்ற புழுக்கள் மாற்றுரு மூலைக்கு சென்று நிற்கின்றனர் என்பதே மதுராவின் புத்திக்கு உரைத்தது .

actress-sonakshi-sinha-in-akira-bollywood-film-wallpapers-535217.jpg

ஒரு விரலை உயர்த்திய மதுரா சோனவை நோக்கி காட்டி ,"இன்னொரு முறை உன் சாக்கடை வாயை திறந்தே வாயை கிழித்துடுவேன் .உன்னையும் ,உன் கூட சுத்துற இந்த ஜால்ரா கோஷ்டியின் குரவளையை கடிச்சு ரத்தம் குடிக்காமல் விட மாட்டேன் டீ .மவளே !!!!உன் கிட்டே வேலை பார்த்தால் எது வேண்டும் என்றாலும் பேசி விடுவியா என்ன ??????சங்க அறுத்துட்டு போயிட்டே இருப்பேன் .த்தூ ......வெட்கமா இல்ல .......நீயெல்லாம் தெய்வம் மாதிரியான கனகா பெரியம்மா வயத்திலே பொறந்தவளாடீ .........குப்பை புத்தி ......நானடி உன் வீட்டு படியேறி 'அம்மா தாயே ...அடுத்த வேளை சோற்றுக்கு கூட வழி இல்லாமல் இருக்கோம் .....வேலை குடுன்னு கேட்டது ??????நீ வந்தேடி .....என் வீட்டு படியேறி நீ வந்தே ......ஒரு முறையா ரெண்டு முறையா .....பத்து தடவை நீ என் வீட்டு படியேறி என் அப்பா காலில் விழுந்து ட்ராமா போட்டு ,நீலி கண்ணீர் வடிச்சவ நீ .....என்னவோ நான் வரலைனா உன் கம்பெனி அழிந்து விடும் என்று BUILT UP கொடுத்தவ நீ .....பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கணும் என்று கதை அளந்தவ நீடி ......அப்பவே நெனச்சேன் ஓவர் ரா இருக்கே னு .....புத்திய காட்டிட்டே .....என்னவோ உன் புருஷனை விளைகிறேன் என்று வாய் கூசாம சொல்றேயேடி ......ஆடிட் நடக்கும் பொது நான் மட்டுமே இருந்தேன் ??????மொத்தம் எட்டு பேர் .....உன் தாத்தாவோடு சேர்த்து தான் சொல்றேன் .இதுல மூன்று பேர் பெண்கள் ........பல வாரமாய் இரவு ,பகல் பாராமல் ,பசி ,தூக்கம் பற்றி யோசியாமல் வேலை செய்தா என்னடி சொன்ன உன் புருஷனோடு .......பச்சையா பேசுறியே நீயெல்லாம் குடும்ப பொண்ண ........மவளே !!!!உன் லோலாயி தனத்தை காட்டினே நான் சங்கரனின் மகள் ......இளநீர் சீவுவது போலெ ஒரே வெட்டாக உங்க தலைகளை வெட்டிட்டு அதோடு போலீஸ் ஸ்டேஷன் போகும் தில் எனக்கு ருக்குடி .....பார்கறீயா .....பார்கறீயா ....."என்றவள் அங்கு இருந்த சாம்பைன் பாட்டிலை டேபிளில் உடைத்து கூர் முனையை சோனாவின் கழுத்திலேயே வைத்து அழுத்தினாள் .

மதுராவின் கண்களில் தெரிந்த உண்மை என்னும் நெருப்பை ,கோபத்தை பார்க்க முடியாமல் ஒரு நொடி சோனாவின் கண்கள் நிலம் பார்த்தது ."உன்னை உன் வீட்டில் அடக்கி இருக்கனும் ....பெரியப்பா அடக்கலை .....உன்னை கட்டினார் பாரு உலகத்திலேயே வேறு பெண் இல்லை என்று காதலித்து மணந்தார் பார் அந்த விஜய கருணாகர மகாராஜா ....அந்த ஆளாவது உன்னை அடக்கி இருக்கனும் ......உன்னை அவரும் அடக்கலை .....ஸோ உன் பிறந்த வீட்டிலும் ,உன் புகுந்த வீட்டிலும் உன்னை அடக்க எவனுமே ஆண் இல்லை போலெ இருக்கு ....வாடி என் பாசக்கார அக்கா ....நான் அடிக்கற அடியில் உன்னை பிடிச்சு இருக்கற மொத்த பேய்யும் ,திமிரும் அடங்கிடும்டி ......."என்று கன்னம் கன்னமாய் அடி கொடுத்தவள் "இனி என் வீட்டு பக்கம் வந்துடாதே .....இப்போ பாட்டில் சொருகியது போலெ கத்தியை சொருக யோசிக்கவே மாட்டேன் ...."என்று பெண் சிங்கமாய் ,பத்ரகாளியாய் கர்ஜித்தவள் இழுத்து வைத்து மேலும் அறைந்த பிறகே வாயிலை நோக்கி சென்றாள்.

maxresdefault (2).jpg

அந்த மாளிகையினுள் இருப்பதே அருவெறுப்பாக இருக்க வேக நடை போட்டு வாயிலை நோக்கி சென்றாள் மதுரா .மான ,ரோசம் உள்ள யாரும் அங்கு அதற்கு மேல் இருக்க மாட்டார்கள் தானே .

"நில் ! எங்கே போற மதுரா ????என்றாள் சோனா .
(((அடங்கொய்யால ,இப்போ தானடீ உனக்கு வேப்பிலை அடிச்சா .,ஏதோ போனா போகுதுனுன்னு உன்னை உசுரோடு விட்டுட்டு போறா , எல்லாத்தையும் தொடைச்சு போட்டுட்டு ஒருத்தியால் பேச முடியுமா ?????எப்படிடீ போய் பேசறே ????எந்த வகை ஜந்து டு நீயி ??????உன்னை எல்லாம் பெத்தாங்கலா ,செஞ்சாங்களாடீ .மதுரா .நீ தான் மா இவளுக்கு சரி .இன்னும் கொஞ்சம் வேப்பிலை அடி )))

" உன் வேலையை பார் .நான் எங்கே போறேன் ,வரேன் னு உனக்கு ரிப்போர்ட் கொடுக்க முடியாது "என்றாள் மதுரா தன் நடையை தொடர்ந்த வாரே திரும்பாமல் .

"ஆபீஸ் பைல்ஸ் எடுத்து வந்தியே ,உங்கப்பனா வந்து எடுத்து போவார் ....டேக் இட் ....."என்றவளை வெட்டவா குத்தாவா என்பது போல் முறைத்தாள் மதுரா

"அடியேய் நீ இவ்வளவு பேசிய பிறகும் உன்னிடம் வேலை செய்ய எனக்கு என்ன பைத்தியமாடீ ??//சோத்துல உப்ப போட்டு சாப்பிடறேன் .ஸோ எனக்கு மானம் ,ரோசம் ,சூடு ,சொரணை எல்லாத்துக்கும் மேலே கெளரவம் என்று இருக்கு .இதோ எச்சை இலைக்காக பறக்கும் காக்கை கூட்டம் போலெ உன் கூட நிக்குதுங்களே இந்த அல்லக்கைகளில் யாருக்காவது உன் உயர்ந்த வேலையை கொடு .ஈன்னு இளிச்சிட்டு இன்னும் ஜால்ரா தட்டுவாங்க .போடீ போடீ ....வாயில ஏதாவது பச்சையா சொல்லிட போறேன் ....."என்றாள் மதுரா கோபத்தோடு

"ஹா ஹா ஹா .....குட் ஜோக் ...நல்லா தான் பேசுறே .....பட் உன்னை அவ்வளவூ சுலபமா விடவாடி மூன்று வருடம் நாயை போலெ அலையோ அலைன்னு அலைந்து திரித்து உன்னை கண்டுபிடிச்சு என் கஸ்டடிக்கு கொண்டு வந்தேன் ????/வாழ்க்கையில் இன்னும் நீ எவ்வளவோ துடிக்கனும் ,கதறனும் .....ஏன் பிறந்தோம் ,ஏன் உயிரோடு இருக்கனும் என்றும் ஒவ்வொரு நொடியும் நீ அழணும்னுடீ .....அதற்குள் எஸ்கேப் ஆகி விடுவாயா ????ஆக தான் விட்டுவிடுவேனா ?????என்னடீ என்னவோ அப்படி சாமி ஆடினே ....இப்போ என்ன இப்படி முழிக்கரே ....என்ன புரியலையா ....????வெயிட் செய் ...."என்றவள் அங்கு இருந்த சில பேப்பர்களை தூக்கி மதுராவின் மேல் விட்டு எறிந்தாள் சோனா

woh-apna-sa-serial-nisha-ridhi-dogra.jpg

அவற்றை படித்து பார்க்க பார்க்க மதுராவிற்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது

PENANCE WILL CONTINUE....... தவம் தொடரும்.........
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM---4 தவம் ---4


03-Kaathirunnu-Kaathirunnu-Ennu-Ninte-Moideen-romantic-song-2015-premam-top-movie-rankings.jpg

சோனா தன் மேல் வீசி எறிந்த பத்திரங்களை படிக்கச் படிக்கச் மதுராவிற்கு தலை சுற்ற ஆரம்பித்தது.5 வருட பணி ஒப்பந்தம் வேலையில் சேரும் போது இவள் படித்து பார்த்து சைன் போட்டது தான் .அப்போ இருந்த சரத்தும் இன்று இவள் கையில் இருந்த பத்திரத்தில் இருந்த விஷயமும் முற்றிலும் மாறி இருந்தது ....இல்லை சோனாவால் மாற்ற பட்டு இருந்தது .

'5 வருட பணி காலத்தில் எக்காரணம் கொண்டும் வேலையே ரிசைன் செய்ய முடியாது .உயிர் போனால் தவிர........அப்படி விலகி போக வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் இந்தர் இண்டஸ்ட்ரிஸ்க்கு நஷ்ட ஈடாக தர வேண்டும் ' என்று இருந்த ஒப்பந்த பத்திரம் மதுராவின் சைன் பெற்று தன் கோர முகத்தை காட்டியது.அதில் இருந்தது மதுராவின் சைன் தான் ....ஆனால் எப்படி ....?????

இதுவே மதுராவை தலை சுற்ற வைத்தது என்றால் அடுத்த பத்திரம் அணு குண்டை வெடிக்க வைத்தது .'சங்கரன் சோனாவிடம் இருந்து மூன்று கோடி கடன்' பெற்று இருப்பதாக கூறியது .பத்திரத்தில் இருந்தது சங்கரனின் கையெழுத்து தான் .அது பதிவும் செய்ய பட்டு இருந்தது மதுராவின் பணி ஒப்பந்த பத்திரம் போல் .கடன் திருப்ப படவில்லை என்று சோனா நினைத்தால் எந்நேரமும் சங்கரனின் மொத்த குடும்பமும் கைது செய்ய படலாம்

'ஓசி டீ கூட வாங்கி குடிக்காத தன் தந்தை மூன்று கோடி கடன் வாங்கினாரா ????இருப்பதை வைத்து மன நிறைவோடு வாழும் மனிதர் ஆயிற்றே .தன் குடும்பத்தையும் அப்படி தானே பழக்கினார் .தேவைக்கு அதிகமாக எதையும் விரும்பாதவர்கள் அவள் குடும்பத்தினர் .மூன்று கோடி ரூபாய்க்கு அவர் எதற்கு கடன் வாங்க போகிறார் ???சொந்த வீடு ,கார் ,சம்பாதிக்கும் மகன் ,மனைவி ,மகள் .யாருக்கும் உடல் நல குறைவோ கிடையாது .அப்படியே என்றாலும் மெடிக்கல் இன்சூரன்ஸ் எல்லார் பேரிலும் இருக்கிறது .கை காசு போட்டு தான் வைத்தியம் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை .தனக்கோ ,ராகுவுக்கோ இப்பொது எந்த திருமண ஏற்பாடும் நடக்கவில்லை .திருமணம் கூட கோயிலில் செய்து விட்டு பார்ட்டி மட்டும் கொடுக்கும் ஐடியாவில் தான் மதுராவும் ரகுவும் இருந்தனர் .கார்த்திக் குடும்பமும் அதை ஆதரித்தனர் .பின் எதற்கு தந்தை இவளிடம் மூன்று கோடி கடன் வாங்கினார் ???என்ன அவசியம் ????அவசரம் ?????

"வாட் டார்லிங் .....அப்படி குதிச்சே .....இப்போ பெட்டி பம்பா அடங்கி கிடக்கறே.என்ன காரணம் .....ஒரு ரீசன் ...சொல்லு செல்லம் ......சொல்ல முடியலையா .....நான் சொல்லவா நான்கு கோடி ரீசன் .....ஓஓஓஓஓஓ .........நாலு கோடி காரணமா ???????இதெல்லாம் ட்ரைலர் தான் கண்ணு .மெயின் பிச்சேர் இனிமே தாண்டீ இருக்கு .ஓசி டீயை கூட குடிக்காத உன் எப்படி மூன்று கோடி கடன் வாங்கினார் என்று யோசிக்கரியா மது பேபி .....ரொம்ப யோசிக்காதே .....அவர் அப்படி வாங்கவே இல்லை .ஆனால் இந்த போலி பத்திரம் சொல்லும் அவர் கடன் வாங்கி இருக்கார் என்று .....யு நோ .....என் தாத்தா சொன்னது போலெ யுவர் டாட் ஹிஸ் சென்டிமென்டல் இடியட் .....கண்ணை கசக்கியவாறு 'அப்பா பேசணுமாம் சித்தப்பா 'என்று போன் கொடுத்தேன் .போனில் பேசி கொண்டே படித்து கூட பார்க்காமல் சைன் செய்து விட்டது.அந்தளவூ பாசம் ......என் கிராண்ட் பா சொன்னது போலெ உன் டாடி யூஸ் லெஸ் பெல்லோ தான். பணம் பத்தும் செய்யும் மதுரா ......நாலு கட்டு தூக்கி போட்டேன் .....போர்ஜ்ரி செய்து ரெண்டு டாக்குமெண்ட்ஸ் கொடுத்துட்டாங்க .....ஸோ சிம்பிள்......சொல்லுடீ என் பவர் காடடுட்டுமா .போலீசை விட்டு குன்னூரில் இருக்கும் உன் அப்பனை கைது செய்து காட்டட்டுமா ????? செய்ய மாட்டேன்ன்னு மட்டும் நினைக்காதே ......உன்னை இப்படி நிற்க வைக்க மூன்று வருஷம் திட்டம் போட்ட எனக்கு உன் பேமிலி மொத்தத்தையும் ஜெயிலில் தள்ளுவது ரொம்ப ஈசி பேபி ......ஆனா மதுரா குட்டி ஒரு டவுட்டீ செல்லம் .....ஊர் புல்லா பெயர் நாறிய பிறகு உன் டாடி அவர் மட்டும் சூசைட் செய்து கொள்வாரா ????/இல்ல சினிமாவில் ,கதைகளில் வருவது போலெ மொத்த குடும்பத்தையும் கொன்னுட்டு தானும் தற்கொலை செய்து கொள்வாரா ????.....டெஸ்ட் செய்து பார்க்கலாமா ????/ என்ன பெட் செல்லம் .......என் பிரெய்ன்ட் உன் டாடி மட்டும் தற்கொலை செய்து கொள்வார் என்கிறாள் ......நான் பாமிலியோடு தற்கொலை செய்து கொள்வார் என்கிறேன் ....பெட் பணம் எவ்வளவூ தெரியுமா மூன்று கோடி .....நீ சொல்லு ஹெட் ஆர் டெய்ல்ஸ் ???????"என்றாள் சோனா விகார சிரிப்போடு . 299933.jpg

நடப்பது கனவா ,நனவா என்று புரியாமல் ,மூளை செயல் பட மறந்து விட மீண்டும் சிலையாக நின்றாள் மதுரா .'இவ என்ன சைக்கோவா .......மன நலம் பாதிக்க பட்டவளா ???????இவளுக்கு தான் எந்த கெடுதலையும் செய்யவே இல்லையே ......இவளுக்கு மட்டுமல்ல வேறு யாருக்கும் கூட தான் கனவிலும் தீங்கு நினைத்தது இல்லை .......இவ பேசுவதை பார்த்தால் பல வருட பிளான் போலெ இருக்கே .....வீட்டை விற்றால் கூட ஒரு கோடி கிடைக்குமா என்பதே சந்தேகம் ....சில பல லட்சம் என்றால் கூட சமாளித்து விடலாம் ....ஆனால் இவ செக் மேட் நான்கு கோடிக்கு அல்லவா வைத்து இருக்கிறாள் ......அவ்வளவு பணத்திற்கு எங்கு போவது ....யாரிடம் கேட்க முடியும் ????......சரிதான் போடீ உன்னால் முடிந்ததை பார்த்துக்கோன்னு போக முடியுமா ????இப்படி சொல்ல ஒரு நொடி போதும் ......ஆனால் அதன் விளைவு ....அப்பா நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டார் ...ஊர் முழுக்க கடன் வாங்கியதால் கைது என்றுமீடியாவில் தெரிய வந்தால் உயிரை விட்டு விடுவார் ....ரோஷம் அதிகம் உள்ளவர் .....ஒரு வார்த்தை அண்ணன் சேதுபதி சொல்லி விட்டார் என்று பதினைந்து வருடங்களாக அவருடன் பேசாமல் இருந்தவர் ஆயிற்றே !!!!! டிவி ,மீடியானு பெயர் அடிபட்டால் ........கடவுளே !!!!!'மனம் கதறியது மதுராவிற்கு .

crying-700x400.jpg

"ஏன் ???"என்றாள் மதுரா தோற்ற குரலில் .என்ன யோசித்தும் இவள் ஏற்படுத்திய சிக்கலில் இருந்து மீளும் வழி தென் படவில்லை .

"ரிவென்ஜ் மதுரா செல்லம் .....ரிவென்ஜ் .....பழிக்கு பழி .....நீ அழணும் .....கதறி துடிக்கனும் ....நீ இப்படி துடிப்பதை பார்த்து அந்த பிச்சைகார பயல் கருணாகரனும் தவிக்கனும் ....ஒரு கல்லில் இரண்டு மாங்காய் மதுரா ....வரட்டா "என்றவள் மதுரா ஸ்தம்பித்து நிற்கும் போதே தன் ஜால்ராக்களுடன் பீச் ஹவுஸ் விட்டு வெளியேறி காரில் பறந்து விட்டாள் .

87145-1.jpg

ஒருத்தி அங்கு துடிப்பதை கண்டும் லட்சியம் செய்யாமல் சோனா கிளம்பிய சில நொடிகள் மதுரா அந்த ஹாலில் அப்படியே நின்றாள் .தன்னை சமாளித்து அவள் நிமிரும் போது சோனா காரில் ஏறி கொண்டு இருந்தாள் .

"சோனா !சோனா .....நில்லு சோனா .....சோனா "என்று கத்திய படியே ஓடி வந்த மதுராவை அவள் கண்டு கொள்ளவில்லை.

அந்த மாபெரும் பீச் ஹவுஸ் வாயிலில் நின்ற மதுராவிற்கு தலை சுற்றியது .மேல் மூச்சு ,கீழ் மூச்சு வாங்க சென்ற காரையே வெறித்து பார்த்து கொண்டு நின்றாள் .அவள் எண்ணத்தை தடை செய்தது வாட்ச்மேனின் குரல்
"தா பொண்ணு ....ஹே உன்ன தான் .....என்ன சும்மா முழிச்சுட்டு நிற்கறே .....பங்களாவை விட்டு வெளியே போமே .பங்களாவை பினாயில் ஊத்தி கழுவ சொன்னாங்க ......ரெண்டு தபா ...ஹே பொன்னி ....தோ இந்த பொண்ணு நின்ன இடத்தியெல்லாம் மூணு ,நாலு முறை பினாயில் ஊத்தி கழுவ சொல்லிச்சு சின்ன மேடம் ....ஹே தா ...நில்லு .....இந்த பைலுகளை உங்க அப்பனா தூக்குவான் ....கொண்டு போ ....பொன்னி கழுவி தள்ளு புள்ள ..."என்று சொல்லிய வாட்ச்மேன் மதுராவை வெளியே தள்ளாத குறையாய் காம்பௌண்ட் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டு உள்ளே சென்று விட்டான் .வேலைக்கார பெண் பொன்னியும் வீட்டை பினாயில் ஊத்தி கழுவ ஆரம்பித்தாள்

40.jpg

வேலைக்காரர்களிடம் கூட இப்படி நடக்க சொல்லி விட்டு சென்று இருந்த சோனாவின் அடுத்த திட்டம் என்ன என்று புரியவில்லை மதுராவிற்கு .வேலையாட்களின் அலட்சியம் ,இப்படி பேசுவதற்கான தைரியம் யாரிடம் இருந்து வந்தது என்பது புரிந்து விட குன்றி போனவளாய் அந்த பங்களாவை விட்டு வெளியேறினாள் .மனம் முழுக்க ஏன் என்ற கேள்வி மட்டுமே .சுற்று புறத்தை மறந்தவளாய் கால் போனா போக்கில் நடக்க ஆரம்பித்தாள் .சுற்றம் ,நேரம் என்று எதுவுமே மனதில் பதிய வில்லை .பின்னால் தொடர்ந்த ஆபத்தையும் சேர்த்து..........

12.jpg

PENANCE WILL CONTINUE.......... தவம் தொடரும்.............
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM----5

darkness-knife-hand-fog-man-fist-leather-jacket-hoodie-backlight-81923047.jpg

கால்கள் அதுவாக நடக்க ,சுற்றம் ,நேரம் ,போகும் இடம் என்று எதுவும் மதுராவின் கண்களிலோ ,கருத்திலோ பதியவே இல்லை .''எப்படியாவது என்னை துடிக்க வைக்கும் வேகம் என்ன ?ஒரு வேலை வெறியோ ??அதுவும் தான் எதற்கு ???இன்று தவிர கடந்த ஒரு வருடத்தில் எதற்குமே சோனாவை எதிர்த்து பேசியது கூட இல்லையே !இந்த ஒரு வருட பி .ஏ வேலையின் போது கூட கொடுக்க பட்ட சம்பளத்திற்கும் மேலாக தானே உழைத்தேன் .ஒரு வார்த்தை யாரும் சொல்லி விட கூடாது ,சோனா வேலையில் ஒரு குற்றம் கூட கண்டு பிடிக்க கூடாது என்று மாடாய் உழைத்தது எல்லாம் வீண் .பெற்றோர் தலை குனிய கூடாது என்று பார்த்து பார்த்து நடந்தது எல்லாம் விழலுக்கு இரைத்த நீரின் கதை தானோ ......இல்லை .....இல்லை இவளே சொன்னாளே பல வருட பழி ,திட்டம் என்று ....மூன்று வருடம் தேடி அலைந்தாக சொன்னாளே .சொன்ன அவளின் முகத்தில் அந்த நொடி தெரிந்த கோவம் ,வெறி ,......ஐயோ அப்பா !பாசத்தில் படுகுழியில் நீங்களும் விழுந்து என்னையும் அல்லவே மாட்டி விட்டு இருக்கிறீர்கள் ......இதை எப்படி பா தாங்குவீர்கள் ?இதில் இருந்து எப்படி அப்பா மீள போகிறோம் 'மனம் ஊமையாய் புலம்ப அந்த இருட்டில் ஆள் அரவம் இல்லாத தென்னம் தோப்பிற்குள் நுழைந்து இருந்தாள் .முடியை பிய்த்து கொள்ளாதது ஒன்று தான் குறை

(((நாங்களும் எபிசொட் 1 ல இருந்து முடிய பிச்சுட்டு தான் இருக்கோம் மதுரா செல்லம் ......எப்பா 4 எபிசோடிக்கா ஒருத்தி இப்படி கதற விடுவா...................சுப்பா இப்பாவது கிளம்பி போனாளே டிராகுலா ......எதை வைச்சு தான் இவளை எல்லாம் திட்றது ன்னு கூட தெரியலையே ......என்ன ஜென்மம் டா அவ எல்லாம் ??? ........மூன்று வருஷமா தேடி அலைந்தவ இதோட விடுவான்னு தோணலேயே ...எப்பா .கருணாகர மஹாராஜா உனக்காவது சோனாவின் உண்மை முகம் தெரியுமா இல்லை சங்கரன் போலெ சோனாவின் நடிப்பில் ஏமாந்து இன்னும் அவளை கண்ணை மூடிட்டு லவ் பண்றீயா ....... நினைப்பே TERROR ரா இருக்கு தம்பி ......உனக்கும் அந்த ஜந்துக்கும் லவ் வா ...வேக் ....வாந்தியே வருது ....உன் காதலுக்கு ,கண் ,மூளை ,விவஸ்தை எதுவுமே இல்லையா ........)))

இ சி .ஆர் ரோட்டில் ஒதுக்குபுறமான இடத்தில் பல ஏக்கர் நிலப்பரப்பை ஆக்ரமித்து கட்ட பட்டு இருந்தது அந்த பீச் ஹவுஸ் .ஹவுஸ் அல்ல மாளிகை .கஜேந்தரினனின் பினாமி சொத்துக்களில் இதுவும் ஒன்று .சில கிலோமீட்டரில் பீச் ரிசாட் கூட உண்டு .தென்னம் மரங்கள் ,முந்திரி தோப்புகள் சுற்றி நிறைந்து கிடக்க அந்த இரவு வேளையில் ஒரு அமானுஸ்ய தன்மையோடு நின்று இருந்தது அந்த பங்களா நடந்து கொண்டு இருந்த பயங்கரத்திற்கு வாய் மூடி மௌன சாட்சியாகி கொண்டு இருந்தன

135821334-640x640.jpg

தன் எண்ண ஓட்டத்தில் முழுகி கால் போனா போக்கில் நடந்து கொண்டு இருந்த மதுராவை ஆறு கண்கள் கவனித்து கொண்டு தான் இருந்தன .(((((ஆறு கண்களா .......யாருடா நீங்க எல்லாம் ......4 எபிசொட் வரை ஒருத்தனும் வரலை .இப்ப்போ ஒட்டு மொத்தமா திடீர் தீடீர் ன்னு என்ட்ரி கொடுக்கறீங்க ......ஒருத்தன் பின்னால் கத்தியோடு வாரான் ....அவனே யாருனு புரியாம முடியை பிச்சிட்டு இருக்கோம் ....இதுல இன்னும் ரெண்டு பேரா ........கண்ணை கட்டுது சாமி )))))......

அந்த மூவரில் ஒருவன் மதுராவை காமத்துடனும் ,மற்ற இருவர் வேதனையுடனும் பார்த்து கொண்டு இருந்தனர். .தனக்கு பின்னால் இருளோடு இருளாக தள்ளாடியவாறு தொடரும் அந்த வெறி பிடித்த, மனித போர்வையில் வாழும் மிருகத்தை மதுரா கவனிக்க வில்லை .சாதாரண நேரமாய் இருந்து இருந்தால் பெண்களுக்கே உண்டான உள்ளுணர்வூ ஆபத்தை கூறி இருக்கும் ,சோனா தான் முழுவதுமாய் குழப்பி விட்டாளே .தந்தையின் மானம் ,உயிர் தன் கையில் என்ற நிலையில் மகளாக தந்தைக்கு கலங்கி தவித்தது அவள் மனம் .

மயிர் நீக்கின் வாழ கவரி மான் ---வகை அவள் தந்தை .எந்த அளவு நேர்மையை கடை பிடிக்கிறாரோ அந்த அளவூ அப்பாவி .அதை தானே தனக்கு சாதகமாக பயன் படுத்தி சங்கரன் -பவானியின் வாழ்க்கையே கேள்வி குறி ஆக்கி விட்டாள் .எவ்வளவு ஆதர்சன தம்பதி என்று ஊரே வியந்த பெற்றோர் .வள்ளுவனின் வாசுகி யாக வாழந்த தாய் .மனைவியின் கண் பார்த்தே தேவை அறிந்த கணவன் .6 மாதமாக இருவரும் பேசுவது கூட கிடையாது .உபாயம் ---சாட்சாத் சோனா தேவியார் . முப்பது வருட மணவாழ்க்கையை ஒரே நாளில் காலி செய்து விட்ட புண்ணியவதி.இதில் இது வேறு என்றால் மதுரா தவித்து போனாள் .அந்த தவிப்பு,குழப்பம் ,இனி என்ன என்ற கேள்வி பின் தொடர்ந்த ஆபத்தை கவனிக்க விட வில்லை

hoia-baciu-2.jpg

"டார்லிங் ........பேபி ............ஸ்வீட் ........நில்லு ,......ஸ்டாப் ஐ செ .......டார்லிங் "என்று வாய் குழறிய படி கால்கள் தள்ளாட ,கண்கள் அதீத போதையில் சிவந்து கிடக்க ,கைகளை நீட்டி மதுராவை பிடிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான் அவன் .கைகளிகள் மேலும் ஒரு பீர் பாட்டில் .நடுவே நடுவே நின்று அதில் இருந்து குடிக்கவும் மறக்க வில்லை அவன் .ஒரு கையில் பீர் பாட்டில் மாற்றுரு கையில் கத்தி என்று மதுராவை பின் தொடர்ந்தவன் கைகள் நீட்டி அவளை பிடிக்க முயன்று தோற்று கொண்டு இருந்தான் .அவன் இருந்த நிலைமை அவன் வேகத்தை மட்டு படுத்தி இருந்தது .அவன் கூப்பிட்டது அவனுக்கே கேட்டு இருக்காது .அவ்வளவூ குழறல் .ஓவர் குடி ஏற்கனவே புல் போதையில் இருந்தான் அவன் .நடுவே நடுவே மேலும் குடிக்க குடிக்க தள்ளாடியவன் பொத்தென்று பள்ளத்தில் விழுந்தான் .

8.jpg

எங்கோ நாய் குறைக்கும் சப்தம் ,பின்னால் பாட்டில் உடைந்த சப்தம் என்று தன் குழப்பத்துக்குளே மூழ்கி கிடந்த மதுரா சட்டென்று தன்னை சமாளித்து ,தன் எண்ணங்களில் இருந்து மீண்டாள் .மீண்டவள் அதிர்ந்து நின்றாள் .தான் இருக்கும் இடம் ,வாட்ச் காட்டிய நேரம் ,கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கவிந்து கிடந்த இருட்டு ,யாரும் அற்ற தனிமை ......நெஞ்சில் பய பந்து உருள ஆரம்பித்தது .என்றுமே சோனா இவளை இவ்வளவு தூரம் அழைத்து வந்தது இல்லை .இன்று ஆடிட் ரிப்போர்ட் வேண்டும் ,அதில் டவுட் என்று மதியமே அழைத்து வந்து விட்டாள் .

'ரொம்ப தூரமா இருக்கே சோனா ?'என்று கேட்டதிற்கு எவ்வளவு நேரம் ஆனாலும் நானே கொண்டு விடுகிறேன் மதுரா "என்று பச்சை புள்ள போலெ சொன்னியேடி ராட்சசி ....என் பெற்றோரிடம் நீ விளையாடிய போதே நான் சுதாரித்து இருக்க வேண்டும் .ஏதோ தப்பு செய்து விட்டு அதனால் அம்மாவை மாட்டி விட்டே என்று நினைத்தால் உன் புத்தியே இப்படி தான் என்று நிரூபித்து விட்டாயே .....கையில் மட்டும் கிடைச்ச மவளே ........உனக்கு எல்லாம் அடி மட்டும் பத்தாது......தோலை உரிச்சு விடணும் ......'ல்லை .......இல்லை இதுவும் ஏதோ ஒரு பிளான் .....மதியம் அழைத்து வந்து விட்டு ஒரு வாய் தண்ணீர் ,சாப்பாடு கூட கொடுக்காமல் ......கடைசி இரண்டு மணி நேரத்தில் குதறி எடுத்து .....வீட்டை விட்டு துரத்தி இருக்கிறாள் ...அதுவும் இரவு 11 மணிக்கு மேல் ......எல்லாமே பிளான் போட்டு செய்து இருக்கா .......ஆள் நடமாட்டமே இல்லாத ஒதுக்குபுறமான தோப்பு இருக்கும் இடம் .இரவினில் ஆட்டம் ......பகலினில் தூக்கம் என்று வாழும் சில உயர்ந்த உள்ளங்கள் தங்களது மன விகாரங்களை தீர்த்து கொள்ள தோதான இடம் .....பெரிய மனிதர்கள் என்ற முகமூடியினை இறக்கி விட்டு மனிதர்கள் மிருகங்ககளாய் உலவும் வேட்டை பொழுது. .....' மிகவும் சரியாக தான் கணித்தாள் மதுரா .

அவள் அறியாதது அந்த மன விகாரம் மிக்க ஒருவன் பின்னால் அது வரை வந்து கொண்டு இருந்ததை ....அவனிடம் மேல் தட்டு வாடை வீசியது .அதாவது சோனா அண்ட் கோ போலெ பணக்கார வீட்டு பிள்ளை .வயது 30 இருந்தால் அதிகம் ..சட்டென்று பார்க்க வால்டர் வெற்றிவேல் படத்தில் சத்யா ராஜ்க்கு தம்பியாக அப்பாவி முகத்தை வைத்து கொண்டு ,அனைத்து தவறுகள் செய்வானே அதே போலெ இருந்தது இவன் முகம் .இந்த முகத்தை வைத்து அவனை நம்பி ஏமாந்த பெண்களின் லிஸ்ட் வெகு நீளம் ....... குடி ,போதை ,பார்ட்டி ,ட்ரக்ஸ் ,வரை முறை அற்ற உறவுகள் ,கலாச்சார சீர்கேடுகள் உடைய சோனாவின் ஆண்பால் ....வழி தவறி மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதை பழக்கமாய் கொண்ட ராட்சசன் அவன் .....தூணுக்கு சேலை கட்டி இருந்தால் அதை கூட விட்டு வைக்காத ரகம் .குடும்ப பெண் ,மாற்றான் மனைவி என்ற பேதம் எல்லாம் அவனிடம் இல்லை .மனித உருவில் வாழும் சாக்கடை புழு .அவனின் குறி தற்போது மதுரா .அந்த இடத்திற்கு மதுராவிற்காக அவன் காத்து இருக்கும் போதே புல் போதையில் இருந்தான் .மதுராவின் நல்ல காலமோ இல்லை ஏதோ ஒன்று அந்த மனித மிருகத்தை மதுராவை நெருங்க விடாமல் தடுத்து இருந்தது.பெண்களின் வாழ்க்கையில் விளையாடுவது ,யூஸ் அண்ட் த்ரோவ் போலெ பயன் படுத்துவது அவனது ஹாபி .நான்கு பெண்கள் மரணத்தில் இவன் மேல் சந்தேகம் இருந்தாலும் ,விட்னஸ் இல்லாத ,இல்லாமல் ஆக்க பட்ட காரணத்தால் வெளியே இருப்பவன் .சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நடு தெருவில் நிற்க வைத்து கல்லால் அடித்தே கொல்ல பட வேண்டியவன் .இவன் செய்து உள்ள பாவங்களுக்கு 1000 தடவையாது கொல்ல பட வேண்டியவன் ...

ஏதாவது நடந்து கத்தினால் கூட உதவிக்கு என்று யாருமே வர முடியாத இடம் ...மெயின் ரோட்டுக்கு போகவே இன்னும் பல கிலோமீட்டர் நடக்க வேண்டி இருக்கும் போலெ இருக்கிறதே ........அதன் பிறகு இந்த நல் இரவில் ஆட்டோ ,பஸ் ,டாக்ஸி என்பது எல்லாம் கிடைக்குமா என்பது சந்தேகமே .அண்ணா நகர் எங்கு இருக்கிறது .....இ .சி .ஆர் எங்கு இருக்கிறது .....கடவுளே ......அப்படியே கிடைத்தாலும் எந்த நம்பிக்கையில் அவர்களோடு போவது ....நடுவே போலீசிடம் சிக்கினால் ....நிச்சயம் தன் கதையை நம்புவார்களா என்பதே சந்தேகம் ,......சோனாவிடம் அவர்கள் விசாரித்தால் பைத்தியக்காரி ---எனக்கு இவளை தெரியவே தெரியாது என்று சத்ய ப்ரமாணமே செய்தாலும் செய்வா .......'

'பாவி ....பாவி ... .....உன் பேச்சை கேட்டு வந்த ஆட்டோவை கூட திருப்பி அனுப்பிவிட்டேனே ....ஆட்டோ அண்ணா எத்தனை தடவை கேட்டார் ......எவ்வளவு நேரம் ஆனாலும் வெயிட் செய்கிறேன் என்றாரே ......பாதகத்தி ....உன் பேச்சை நம்பினேனே .....உன்னை நம்பி தானே வந்த ஆட்டோவையும் திருப்பி அனுப்பினேன் ......எவ்வளவூ நேரம் ஆனாலும் நானே கொண்டு போய் விடுகிறேன் என்று கதை அளந்தியே .....என் மடத்தனத்தை தான் நொந்து கொள்ள வேண்டும் .......ஆமா இவ இப்படி பாம்பாய் கொத்துவாள் என்று யார் எதிர்பார்த்தா ......நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டாளே .....மனதிற்குள் புலம்பிய வாறு நடந்தவளை நிறுத்தியது அவள் மொபைலிலில் வந்த அழைப்பு .மனக்குழப்பத்தில் தன்னிடம் மொபைல் இருப்பதை கூட மறந்து இருந்தாள் மதுரா
.(அதானே நான் கூட இந்த காலத்து பெண்ணிடம் மொபைல் கூடவா இல்லை என்று தலையை பிய்த்து கொண்டு இருந்தேன் .ஷாக் ல புள்ள அத கூட மறந்து போய் தவிச்சிட்டு இருக்கு .....ஹே யாருப்பா இந்த கதையை எழுதுவது .. .....ஹீரோயின் காப்பாத்த இந்நேரம் ஹீரோ என்ட்ரி கொடுத்து இருக்கனும் ....4 சண்டை ...மரத்தை சுற்றி 3 சாங் .....அண்ணலும் நோக்கினான் .....அவளும் நோக்கினால் ......பானு குட்டி சொன்னது போலெ வாரணம் ஆயிரம் என்று கனவு கண்டு கல்யாணம் முடிய வேண்டாமா .........ஹீரோ இருக்காரா இல்லையப்பா ........நான்கு முறை தவம் செய்த பிறகு தான் அந்த சோனா பிசாசு போச்சு ......முடியலை .....முன்று பேர் வேறு பின்னால் வரானுகோ ......அழைப்பது யார் கார்த்திக் கா .......அவள் பெற்றோரா ........கருணாகரன் ஆ ........யார் அழைப்பது..?????தவறு எதுவும் நடப்பதற்கு முன் மதுரா காப்பாற்ற படுவாளா ............)))

PENANCE WILL CONTIUNE...................... தவம் தொடரும்....................
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM -6 தவம் 6

hqdefault (15).jpg

"ராணி எங்கடீ இருக்கே(((நம்ம மதுராவின் செல்ல பெயர் ராணி யா ---குயின் (யாரின் காதல் குயின் ???))))...மணி என்ன பார்த்தியா இல்லை ஆஸ்ட்ரிச் மாதிரி வேலையில் முழுகி மறந்து போய்ட்டியடி எருமை ...இதுக்காக உனக்கு என்ன இந்தர் இண்டஸ்ட்ரீஸ் ல என்ன சிலை வைக்க போறாங்களா ???.....அப்படி என்ன அந்த காட்ஜில்லா வேலை வாங்குது .....என்னைக்கும் இல்லாத திருநாளாய் அந்த சனியன் ஏன் கணக்கு வழக்கை பார்க்குது ???நாளைக்கு வந்து முடிக்கிறேன் என்று சொல்லிட்டு கிளம்புடீ ......"என்று மறு முனையில் இருந்து அவளது அலுவலக தோழி சுபா இவளை வறுத்து எடுத்தாள் ...சுபாவின் வீட்டில் தான் வாடகைக்கு குடி இருந்தாள் மதுரா ...சுபா அவள் கணவன் பாலாஜி ,மதுரா மூவரும் இந்தர் இண்டஸ்ட்ரீஸ் தலைமையகத்தில் தான் ஒன்றாக வேலை செய்து கொண்டு இருந்தனர்

(அடங போங்கப்பா ...மொபைல் கால் வந்தததும் நான் கூட ஹீரோ தான் கூப்பிட்டு டோஸ் விட போறார் .....மதுரா அழுததும் கார் எடுத்து வந்து ,வில்லன் னோடு சண்டை போட்டு ,ஹீரோயின் காப்பாற்றி டூயட் பாட போறார் ன்னு நெனச்சேன் .......அப்புறம் எதுக்கு கருணாகரன் ,கார்த்திக் .....பெயர் இல்லாத முன்றாம் ஒருவன் ன்னு இந்த கதையை எழுதும் ஜீவன் built up கொடுத்தது. யார் ஹீரோ கண்டு பிடிப்பவருக்கு ஒரு கோடி பரிசு என்ற லெவெலுக்கு இந்த ஹனி கிளப்பி விட்டது ......இப்படியே போன இன்னும் 10 எபிசொட் முடிஞ்சா கூட ஹீரோன்னு யாரும் வர போவது இல்லை )

"சுபா !" என்று அழாத குறையாய் வெளி வந்த தோழியின் குரலில் பயந்து போனாள் மற்றவள் .எதற்கும் சட்டென்று ரியாக்ஷன் காட்டாத பெண் மதுரா .அவளே திருவிழாவில் தொலைந்து போன குழந்தையின் அழு குரல் கொண்டு பேசினால் இவள் என்ன என்று நினைப்பது ????

"ஏய் ! மதுரா ....என்னாடீ ......என்ன ஆச்சுடீ .....என்னமா ....அழாதேடீ .....என்ன சொல்லி தொலை ..."என்று எதிர் முனையில் பதறினாள் சுபா

"சு .....சுபா ....அந்த சோனா ......என்னை வீட்டை விட்டு துரத்திட்டு ...அவ கூட சுத்துங்களே அந்த அல்லக்கைகளோடு காரில் போய்ட்டாடீ .....அவ பங்களா கிட்டே இருகேண்டீ ...."என்றால் மதுரா கேவலுடன்

"அடியேய் அந்த பிசாசிற்கு ஊர்ப்பட்ட பங்களா இருக்கு .இதுல எங்கடீ இருக்கே .....நானும் வரேன் வெயிட் பண்ணுன்னு எத்தனை தடவை தலைப்படா அடிச்சிட்டன் ....கேட்டியாடீ......உங்க அப்பா அம்மா மேட்டருக்கு பிறகும் இவளை போன்ற பச்சோந்தியை எப்படி டீ உன்னால நம்ப முடியுது ?????எங்கே இருக்கே சொல்லி தொலை ....நானும் அவரும் கிளம்பி வரோம் ..."என்றாள் சுபா கடுப்போடு .

"அது அது .....இ .சி .ஆர் ல அவளுக்கு ஒரு பீச் ஹவுஸ் இருக்கு .....அங்கே இருக்கேன் ... தென்னம்தொப்புளே இருக்கேன் .....இங்கே யாருமே இல்லடீ "என்றாள் மதுரா

"என்ன ....து ......இ .சி .ஆர் ....பீச் ஹவுஸ் சா ....அறிவு கெட்டவளே ....கொஞ்சமாவது மூளை இருக்கடீ உனக்கு .....அந்த இடம் ,அவ பீச் பீச் ஹவுஸ் எதுக்கு எல்லாம் பயன் படும் தெரியுமா .....பைத்தியக்காரி .......மரமண்டை ......எங்கே போய் மாட்டி இருக்கே தெரியுமா ......போன வாரம் அங்கே போலீஸ் ரைட் நடந்து 10 பெண்களை பலான கேஸ் ல உள்ளே போட்டாங்க ....அங்கே பெண்களை கடத்தி வெளிநாட்டுக்கு அனுப்பும் வேலையும் நடக்கும் .....வாய் திறந்து சொல்ல முடியாத பல கேவலங்கள் நடக்கும் இடம் டீ அது .அங்கே என்ன ..........போனே நீ ?????"என்று பொரிந்து தள்ளினாள் சுபா .

"நான் என்னடீ செய்வேன் .....காலையில் இருந்து 10 இடத்திற்கு வர வழைத்து கடைசியா இங்கே வர வைச்சுட்டா ..எல்லா இடத்தில இருந்தும் பைலை கலெக்ட் பண்ண சொன்னாடீ .....அப்பவே சொன்னேனே ....ரொம்ப அவுட்டோர் ஏரியா வா இருக்குன்னு ....நானே கூட்டி போய் விடறேன் என்று சொல்லிச்சுடீ அந்த பேய் .....இப்போ வாட்ச்மென் விட்டு என்னை கழுத்தை பிடித்து வெளிய தள்ளாத குறையாய் தள்ளி விட்டு அந்த .....இப்படி செய்யும் என்று எனக்கு என்ன ஜோசியமா தெரியும் ....பெண் தானே அதுவும் சொந்த ரத்தம் ,அக்கா வேறு இந்த மாதிரி வேலை செய்து தொலைப்பாள் என்று எவன் கண்டது ??????நட்டநடு தோப்பில் இருக்கேன் .....மெயின் ரோடு வரவேஇன்னும் எவ்வளோ கிலோமீட்டர் போகணும்னு தெரியலை ......கடைசியிலே டேக் டிவெர்ஸின் ,டேக் டிவெர்ஸன் என்று விவேக் மாதிரி நான் ஆந்திரா ல போய் நிற்க போறேன் ....."என்றாள் மதுரா தன் நிலையை நொந்தபடி

"என்னங்க இவ இப்படி சொல்றா .....இவ இ .சி .ஆர் பங்களா க்கு போனது அவங்களுக்கு தெரியுமா தெரியாதா .....எப்படி அவளோ தூரம் போக விட்டாங்க .....எங்க தப்பு நடந்தது ?????"மறுபுறம் சுபா தன் கணவனிடம் விசாரிக்க தலையும் புரியாமல் வாலும் புரியாமல் வழக்கம் போலெ மதுரா பேய் முழி முழித்த படி நின்றாள் தோப்புக்கு நடுவே ....

"ஏய் சுபா என்னடீ என்னவோ பேசுறே ...ஒன்னும் புரியலை ...."என்றாள் மேலும் குழப்பத்தோடு

"கொஞ்ச நேரம் லைன் இல் வெயிட் செய் மதுரா ...இங்கே பாலு பேசிட்டு இருக்கார் .....அவசர படாதே ....."என்றாள் சுபா கணவன் மற்றொரு போனில் பேசுவதை கவனித்த வாரு

ஏய் ....லூசு ......கிளம்பி வர சொல்லு அண்ணனை ...அதை விட்டு போனில் பேசி என்ன செய்ய போறார் ....பயமா இருக்குடீ ....."என்றாள் மதுரா

சட்டென்று போன் கை மாறியது ."மதுரா நான் பாலாஜி பேசுறேன் .....சொல்வதை கவனி ....நான் கிளம்பி வந்தாலும் அங்கு வந்து சேர குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும் ......அது வரை உனக்கு அங்கு பாதுகாப்பு இருக்குமா என்று தெரியலை .....நான் நமக்கு ரெகுலரா ஆட்டோ ஓட்டுவார் சபரி அண்ணன் அவரிடம் பேசி இருக்கேன் ....அவர் அங்கே சவாரி முடிச்சிட்டு ஆட்டோ ரிப்பேர் என்று அருகில் தான் இருக்காராம் ....இன்னும் பத்து நிமிடத்தில் அவர் உன் முன் இருப்பார் மதுரா.எதற்கும் பயபடாதே .....உனக்கு ஒன்றும் ஆகாது ....உன் பையில் பேப்பர் ஸ்ப்ரே ,சின்ன கத்தி இருக்கு தானே .....மிளகாய் போடி கூட இருக்கு தானே ....தைரியமா இரு மதுரா ...சபரி அண்ணன் இப்போ வந்துடுவார் ....அது வரை போனில் பேசிட்டே இரும்மா ....."என்று தைரியம் கொடுத்தான் பாலாஜி .

இவர்கள் பேசியத்திலேயே தன்னை சுதாரித்து கொண்டாள் மதுரா .சொல்லி வைத்தது போலெ அந்த சபரியும் பத்தே நிமிடத்தில்ஆட்டோ வோடு வந்து சேர்ந்தார் .செம வேகமாக வந்து இருப்பார் போலெ இருக்கு .வெளியே செல்ல சுபாவும் ,மதுராவும் இந்த அண்ணனின் ஆட்டோவை தான் பயன் படுத்துவார்கள் .சில சமயம் பாலாஜியின் கார் டிரைவர் ஆக கூட இந்த சபரி கூட வருவார் .பாலாஜி போலெ இவரும் மதுராவிற்கு ஒரு அண்ணன் .

சில சமயம் ரத்த சொந்தத்தை விட இது போலெ எங்கு இருந்தோ வரும் நட்பு ,சொந்தம் ,உறவுகள் வாழ்க்கையினை மெருகேற்றி விடுவது உண்டு .பாலாஜியும் ,சபரியும் சிறந்த உதாரணம் .

"தங்கச்சி ஏறுமா ...குடு அந்த மூட்டையை ..."என்றார் சபரி

"பாலாஜி அண்ணா ....சபரி அண்ணா வந்துட்டார் .நான் ஆட்டோவில் ஏறிட்டேன் நாங்க கிளம்பிட்டோம் அண்ணா ....சுபாவிடம் சொல்லிடுங்க ."என்ற மதுரா அழைப்பை துண்டித்தாள் .அவளை சுமந்த அந்த ஆட்டோவும் அண்ணா நகர் நோக்கி கிளம்பியது .((((நல் இரவில் இ .சி .ஆர் உள்ள ஒதுக்குபுறமான பீச் ஹவுஸ் அருகே போன் செய்த 10 நிமிடத்தில் ஆட்டோ வருகிறது ............ஏதாவது மாஜிக் கா ?????))))

ஆட்டோ கிளம்பிய சற்று நொடியில் சற்று தொலைவில் மறைவாக இருந்த பிளாக் பி .எம் .டபுள் .யு ...காரில் இருந்து இருவர் இறங்கினர் .மௌனமாக அவர்களை பின் தொரடர்ந்தான் மற்றொருவன் .மூவரும் மௌனமாக பள்ளத்தில் விழுந்து ,குழறறிய படி இருந்த அந்த ராட்சசனை நோக்கி சென்றனர் .

மூவரில் ஒருவன் கீழே கிடந்த அவன் குரல்வளையில் தன் பூட்ஸ் காலால் அழுத்தினான் தன் பலம் கொண்ட மட்டும் ...குரல்வளை நெறிக்க பட கீழே கிடந்த அவன் துடிக்க ஆரம்பித்தான்
depositphotos_100816594-stock-photo-black-car-stay-in-darkness.jpg

மூவரில் ஒருவன் காரை விட்டு இறங்கிய தோரணையே அலாதியாக இருந்ததது .கண்களில் எரிமலையின் சீற்றம் .பேசும் தோரணை சிம்ம கர்ஜனையாக இருந்ததது ....செதுக்கி வைத்த முகம் .கண்களின் தீட்சண்யம் நிச்சயம் மரியாதையை ,மதிப்பை பெற்று தரும் ....6 பேக் உடல் அமைப்பூ .....ஆறடி உயரம் .....முகத்தில் தென்பட்ட களை ஏதோ ரோமாபுரி இளவரசனை நியாபக படுத்தியது .... ஆல்பா male என்ற தலைமை பண்பு கூற்றுட்கு உதாரணம் இவன் மட்டுமே. மொத்தத்தில் பல பெண்களின் கனவூ நாயகன்.பல பெண்களின் தூக்கம் இவனால் கெட்டு இருக்கும் .(வாட்டர் பால்ஸ் வழியுது ஹனி .ப்ளீஸ் கிளோஸ் ) நடை ராஜா நடை ....உலகமே எதிர்த்து வந்தாலும் அதை ஒன் மேன் ஆர்மி யாக எதிர்க்கும் துணிவூ கொண்டவன்.சட்டென்று பார்க்க தெலுங்கு நடிகர் கோபிசந்த் போலெ இருந்தான்(((((ஹி ஹி மொழி புரியலைனாலும் subtitle தெலுங்கு படம் பார்க்கும் effect .....))) .காலர் வைக்காத க்ரே ஸ்போர்ட்ஸ் பனியன் ,பிளாக் டெனிம் ஜீன்ஸ் என்று இவனால் ஆடைக்கு கம்பீரமா என்று பிரித்து கூற முடியவில்லை முடியதா அளவூ ஆணழகன் .......கழுத்தில் மெல்லிய தங்க செயின்யில் மெர்மைட் எனப்படும் கடல் கன்னி கையில் மீன் வைத்திருப்பது போன்ற டாலர் ,அவனுக்கு மேலும் அழகு கொடுத்தது

Nanda.jpg

"தம்பி !கருணா !வேண்டாம் பா விட்டு விடு செத்துடா போறான் ....."என்றார் அவர்களில் பெரியவர் ((((((அப்பா கடைசியில் வந்துட்டியா விஜய் ....இல்லைனா படிக்கறவங்க நிச்சயம் அழுகுன முட்டை ,தக்காளி தான் வீசி இருப்பாங்க ....ஆமாம் நீ எப்படி இங்க வந்தே ...இப்போ தான் வரியா ....இல்லை மதியம் முதல் இங்கு தான் இருக்கியா .......ஆமாம் சுமன் மதுராவை குறி வைத்தது உனக்கு எப்படி தெரிஞ்சது ?????)))))

mermaid-with-fish-3d-model-stl-3dm (1).jpg
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM --7 தவம் --7

gopichand-pantham.jpg

கருணாகரனின் கோபம் அவ்வளவூ சீக்கிரம் அடங்கவில்லை.சுமனை அடி பின்னி எடுத்தான் . அல்வினும் அந்த பெரியவரும் அவனை மீண்டும் கஷ்ட பட்டு சுமனிடம் இருந்து பிரித்து விலக்கி நிறுத்தினர்

"விடுங்க அப்பா என்னை .......இவனுக்கு இது எல்லாம் போதாது ...."என்று உறுமினான் கருணாகரன்.

"அவனை கொல்வது எளிது பா .......மாசிலாமணி சார் உன் குரு ஆச்சே ....அவருக்காக பாரு பா ....."என்றார் பெரியவர்

மாசிலாமணி என்ற அந்த பெரியவரின் பெயரை கேட்டதும் கருணாகரன் நிதானித்தான்.

"எத்தனை மாத்திரை கொடுத்து இருக்கே ஆல்வின் ?"என்றான் கருணாகரன்.

"மூன்று ......அட் லீஸ்ட் 2 டேஸ் ஆகும் இவன் கண் விழிக்க ....."என்றான் ஆல்வின் என்று அழைக்க பட்டவன்

"பத்தாது ஆல்வின் ....ஒரு வாரம் இவன் கண் விழிக்கவே கூடாது .....மருந்தை இஞ்செக்ட் பண்ணிட்டே இருக்க சொல்லிடு ....ராயப்பேட்டை ஆல்பர்ட் கிட்ட சொல்லி இவனை கல்கத்தா சதுப்பு நில காட்டில் விட்டு விட சொல்லு .....ஒரு கையையும் காலையும் கவனிச்சுடு ...இனி அவனுக்கு அந்த கை பயன் பட கூடாது .....ஆட்டோ பின்னாடி யார் போய் இருக்கா ????/"என்றான் கருணாகரன்.

"ராசுவும் ,அப்துல்லாஹ்வும் ....நீங்க கிளம்புங்க ....இவனை நாங்க பார்த்துகிறோம் ."என்றான் ஆல்வின்

தலை அசைபோடு அந்த பெரியவரும் , கருணாகரனும் தங்கள் காரில் கிளம்பி விட , ஆல்வின் ......அவன் உடன் இருந்தவர்களும் கிழே கிடந்தவனை கல்கத்தா சதுப்பு நில காட்டிற்கு பேக் செய்தனர் ,அவன் கை,கால் உடைக்க பட்டு அதற்கு கட்டு கட்டிய பிறகு .அங்கு இரு தென்னம் மரங்களுக்கு இடையேஇருந்து இருள் மறைவில் இருந்து கயிற்றினை கையால் சுருட்டியவாறு இரு வேலை ஆட்கள் வெளி வந்தனர் .
((((அட மதுராவை பிடிக்க போய் இவன் குழியில் விழுந்தது இவர்கள் தூக்கி பிடித்த கயிற்றலா .....செம பிளான் தான் .மதுரா அறியாமல் ,இவர்கள் மதுரா முன்னே வராமலே சுமனை காலை தட்டி விட்டு மதுரா திரும்புவதற்குள் குழியில் விழ வைத்து அவளை காப்பாற்றி விட்டனர் .ஆனால் மதுரா அறியாமல் ஏன் இந்த வேலை ????/இருக்கும் ஆபத்து தெரிந்தால் தானே மதுராவும் தன்னை காத்து கொல்ல முடியும்.......
என்ட்ரியே கை ,கால் உடைப்புனு அதகள படுத்தறான்.ஏன் பா அவனை உயிரோடு விட்டே ????எத்தனை பெண்களின் வாழ்வில் விளையாடி இருப்பான் ??4 பெண்களின் மரணத்திற்கு இவன் காரணம் என்று ஹனி கூட சொல்லுச்சே .......கொன்று விடு பா . ....கூட வேற நிறைய ஆட்கள் இருகாங்க .....அடியாட்களா ??????ஒரு வேலை மகேஷ் பாபு பிஸினெஸ்மேன் படம் போலெ டான்னா நீயி ??????ஏன் பா இந்தஆக்ஷன் கொஞ்சம் அந்த சோனா பிசாசு கிட்டே காட்டுப்பா.மதுரா குட்டிய ரொம்ப செஞ்சுட்டா பா .....கொஞ்சம் இல்லை நிறைய கவனி . .......4 எபிசொட் ரொம்ப ஓவர் ஆட்டம் ....தாங்க முடியல .....நேரே சென்று சோனவை நாலு காட்டு காட்டி இருக்கலாமே .....எதற்கு வெளியே வெயிட் பண்ணிட்டு இருந்தான்......யார் பெத்த புள்ளையோ நீயி .....அந்த ராட்சசன் கை கால் உடைப்புக்கு ,புது ட்ரெண்ட் டா கல்கத்தா சதுப்பு நில காட்டுக்கு பேக் எனக்கு பிடிச்சு இருக்கு )))

சில வினாடிகளில் முன் சென்ற ஆட்டோவை பிடித்தது அந்த கருப்பு நிற கார் .ஆட்டோவின் வேகத்திற்கு ஈடு கொடுத்த படி அதன் பின்னால் பயண பட்டது.பைக்கில் பின் தொடர்ந்தவர்கள் ,காரில் இருந்தவன் ஏதோ சைகை செய்ய அவர்கள் விலகி கொண்டனர் .ஹை வெயில் டோல் பூத் அருகே ஆட்கள் இருந்த இடத்தில் ஆட்டோ நிறுத்தினார் சபரி .

"என்ன அண்ணா ,வண்டி மீண்டும் ரிப்பேர் ரா ???/"என்றாள் மதுரா

"இல்லை தங்கச்சி ....டிபன் சாப்பிடு ....எப்போ சாப்பிட்டேயோ என்னவோ ....சூட இருக்கும் போதே சாப்பிடு "என்று டிபன் பாக்ஸில் இருந்து ஆவி பறக்கும் இட்லி ,சுட சுட சாம்பார் கொடுத்தார்

காலையில் சாப்பிட்டது .அதன் பிறகு ஒரு முறை ஜூஸ் மட்டுமே குடித்து இருந்தாள்.இந்நேரம் வரை பச்சை தண்ணீர் கூட சோனா கொடுக்க வில்லை .தமிழர்களின் விருந்தோம்பல் என்ற பண்பினை அவள் அறியவில்லை போல் இருக்கு (அதுக்கு என்ன தான் நல்லது தெரிஞ்சு இருக்கு இது தெரிவதற்கு ?)

வெகு வேகமாக நான்கு ஐந்து இட்லிகளை விழுங்கிய பிறகே தெம்பு மீண்டு விட ,"ஐயோ அண்ணா ....நானே எல்லாம் சாப்பிடுகிறேன் .....உங்களுக்கு ?""என்றாள் தயக்கத்துடன்

"எனக்கு ஏற்கனவே வாங்கி கொடுத்து.........வாங்கி சாப்பிட்டுட்டேன் தங்கச்சி ...நீ வெசன படாதே ...சாப்பிடு .....உள்ளே இன்னும் இட்லி இருக்கு ...காபி ,தண்ணீர் பாட்டில் கூட இருக்கு ...நீ நிம்மதியா சாப்பிடு ..நான் வெளிய நிற்கறேன் ....சாப்பிட்டு அங்கே லேடீஸ் ரூம் இருக்கு .....முகம் கை கால் கழுவிக்கோ ...."என்ற சபரியின் தடுமாற்ற பேச்சினையோ ,சபரி கொடுத்த உணவூ 5 ஸ்டார் ஹோட்டல் பெயரில் இருந்ததையோ ,கிழே இறங்கிய சபரி பின்னால் சற்று தூரத்தில் நிறுத்த பட்டு இருந்த கருப்பு காருக்கு சைகை காட்டியதையோ மதுரா கவனிக்கவில்லை

(((குழந்தை கைக்கும் வாய்க்கும் சண்டையில் இருக்குது பா .மிட் நைட் சுட சுட இட்லி ,சாம்பார் ....எனக்கு ஒரு பிளேட் பார்சல் பா ....அதுவும் இ .சி .ஆர் ரோட்டில் கடல் காற்று முகத்தில் அடிக்க சூடாக சாப்பிடும் சுகம் ....ஹம்ம்ம்ம்ம் யம்மி .....குழந்தை சாப்பிடுது .கண் வைக்க கூடாது )))

அவள் உண்டு முடித்து ,தன்னை சுத்தம் செய்து கொண்டதும் மீண்டும் ஆட்டோ கிளம்பியது .பின்னால் இடை வெளி விட்டு தொடர்ந்தது அந்த கறுப்பு கார் .ஒரு மணி நேர பயணம் கடந்து ,சுபாவின் வீட்டு முன் நின்றது ஆட்டோ .சபரி இருந்ததால் பாதுகாப்பு உணர்வோ ,மதுரா ஆட்டோவிலேயே உறங்கி விட்டு இருந்தாள் .உடல் களைப்போடு ,மனமும் வெகுவாக பாதிக்க பட்டு இருந்ததால் ,தன்னை மீறி உறங்கி இருந்தாள் மதுரா .

"மதுரா ....மதுரா .....வீடு வந்தாச்சு ......உள்ளே வந்து தூங்கு மா ...."என்றாள் சுபா மெல்ல தட்டிய படி .அந்த நள்ளிரவிலும் சுபாவும் ,பாலாஜியும் மதுராவிற்காக கண் விழித்து காத்து கிடந்தனர் ( நம்ம ஆளு கொடுத்து வச்ச ஆள் தான் போல் இருக்கு .இப்படி ஒரு நட்பூஸ் கிடைச்சிருக்கே ....சுபா கண்ணு உனக்கு உடனடியா .....மெரினா பீச் ல சிலை வைக்க சொல்லி நான் ஐ .நா சபைக்கே பரிந்துரை செய்கிறேன் .....ஹ்ம்ம் நமக்கு இப்படி யாரும் கிடைக்க மாட்டான் என்கிறார்களே .....இப்போ தான் பானு ,சினேகா ,மஹா ன்னு ஹலோவில் இருக்கோம் .....சுபா மதுரா ரேஞ்சுக்கு போக ரொம்ப நாள் ஆகும் போலெ இருக்கு .)

கண் விழித்த மதுரா எதிரே நின்ற தோழியை கண்டதும் நடு ரோடு என்று கூட பாராமல் அணைத்து கொண்டாள் ..."சுபா !பாலு அண்ணா ,சபரி அண்ணா மட்டும் இல்லைன்னா என் நிலைமை நெனைச்சு கூட பார்க்க முடியலைடீ "என்று உடல் பதற கூறினாள்

"ஷ் ...மதுரா !என்னடீ இது.....சின்ன குழந்தை போலெ ......அதான் பத்திரமா வந்துடேல .....இனி அந்த சனியன் ஆச்சு அவள் வேலை ஆச்சுன்னு விட்டுட்டு ஊருக்கு கிளம்பும் வழியை பாரு ...."என்றாள் சுபா

மதுரா ஏதோ சொல்வதற்குள் ,"மதுரா !நடு ரோட்டில் நின்று தான் பேசணுமா .....உள்ளே போ மா ...பொறுமையா பேசிக்கலாம் ..."என்றான் பாலாஜி

"ஐயோ ....சபரி அண்ணாவுக்கு பணமே தரலியே .....பசி அறிஞ்சு சாப்பாடு கூட அவர் தான் வாங்கி கொடுத்தார் ..."என்ற மதுரா ஹாண்ட் பாக் தேட

"நீ உள்ளே போ தங்கச்சி .....பணத்தை புறவூ வாங்கிக்கறேன் ......சுபாமா ,தங்கச்சி பயந்து கிடக்கு உள்ளே கூடி போ ....வரேன் பாலு ...."என்றவர் ஆட்டோவை கிளப்பி சென்றார் .

பெண்கள் இருவரும் உள்ளே சென்றதும் வீட்டின் வாயில் கதவை மட்டும் பூட்டாமல் சாத்திய பாலாஜி ,காம்பௌண்ட் கேட் மூடாமல் திறந்து விட்டான் .....ஹாலில் மதுரா அமர்ந்ததும் சூடான ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுத்தாள் சுபா

"சாரி சுபா ....ரொம்ப சாரிடி ...நீயே மாசமா இருக்கே ...இந்த மாதிரி சமயத்தில் உன்னை மிட் நைட் இப்படி தொல்லை பண்ணிட்டேன் ......சாரி அண்ணா .....சாரி சுபா "என்றாள் மதுரா இறங்கிய குரலில்

"பெரிய மனுசி மாதிரி பேசிட்டு இருந்த கடிச்சுடுவேன் ...ஒழுங்கா பாலை குடிடீ ....."என்றாள் சுபா மதுராவின் தலையில் கொட்டிய படி

அப்போதும் மதுராவின் முகம் தெளியாததை கண்டு பாலாஜி ,"மதுரா !.....நீ கூட பிறக்க வில்லை என்றாலும் என் சகோதரி நீ தான் .....ரகுவிடம் ,அவனுக்கு மனைவி ஒருத்தங்க வந்தா இப்படி தான் சாரி கேட்பியா என்ன .....இதனால் எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை ...நீ நல்ல படியாக வந்து சேர்ந்ததே போதும் .....என் வீட்டு பெண்ணுக்கு செய்கிறோம் ...இதில் நீ வருந்த என்னமா இருக்கு ......பட் இதுவே உனக்கு ஒரு பாடமாய் இருக்கட்டும் மதுரா .....எத்தனையோ பேர் சொல்லியும் ...அப்பா சொன்னார் என்று மாட்டினே இல்ல ....இனி இது தெரிந்தால் அவரே உன்னை வேலைக்கு அனுப்ப மாட்டார் ......நாளை காலை குன்னூருக்கு கிளம்பும் வழியை பாரு ......டிக்கெட் புக் செய்து நானே உன்னை கொண்டு போய் விட்டு வரேன் .....உன் சம்பாத்தியத்தில் தான் உன் வீட்டு அடுப்பு எரியும் நிலமை இல்லை .....வேலைக்கு போய் தான் ஆக வேண்டும் என்றால் கார்த்திக் ஆஸ்திரேலியாவில் இதை விட நல்ல ,பாதுகாப்பான வேலை ஏற்பாடு செய்வான் ....துஷ்டனை கண்டால் தூர விலக வேண்டும் மதுரா ."என்றான் பாலாஜி கண்டிப்பான குரலில்

பெருமூச்சை வெளி ஏற்றிய மதுராவின் முகத்தை பார்த்த மற்ற இருவரும் திகைத்தனர் ."அண்ணா !நீங்க சொல்வது எல்லாம் சரி தான் .ஆனால் அந்த துஷ்ட ஜென்மம் பெவிகால் போட்டு விலக்கவே முடியாமல் ஒட்டி கொண்டே தான் தீருவேன் என்று சபதத்தில் இருந்தால் நான் என்ன அண்ணா செய்வது ????"என்றவள் அன்று மாலை சோனாவின் பங்களாவில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள்

1409.jpg

சோனா வெட்கம் ,கூச்சம் ,பண்பாடு என்று அறியாமல் சொன்ன சிலவற்றை கட் செய்து விட்டு மேலாக நடந்ததை ,அவள் பேசியதை கூறவும் பல முறை தடுமாற வேண்டி இருந்தது .எப்படி பூசி முழுகி சொன்னாலும் சோனாவின் பேச்சு மகா கேவலமான குற்றச்சாட்டாக தானே இருந்தது.கேவலத்தை எப்படி நல்லதாக கூற முடியும் ....அதுவும் குடும்ப பெண்கள் சொல்ல அஞ்சும் வார்த்தைகள் .

மற்ற இருவரும் திக் பிரமை பிடித்து அமர்ந்து இருந்தனர் .கேட்ட தங்களுக்கே இதை ஜீரணம் செய்வது கஷ்டமாக இருக்கும் போது குற்றம் சாற்ற பட்ட மதுராவின் நிலை !!!!

"சனியன் ....சனியன் .....இது எல்லாம் பிறக்கவில்லை என்று எவன் அழுதது .....வாயில் பச்சை பச்சையா வருது ...சும்மாவடீ விட்டு வந்தே ....பொண்ணா அது கர்மம் ......சரியான கீழ்ப்பாக்கம் கேஸ் ......psycho .......இப்படி எல்லாமா ஒருத்தி பேசுவா .....அதுவும் திருமணம் ஆனவள் ...தன் கணவனை பற்றி ....சே கருணா சார் யாரு ....என்ன மாதிரி மனுஷன் ....அவரை போய் ......மனசே ஆறலைடீ ....."என்றாள் சுபா வேதனையோடு

'சிஸ்டர் 'என்று எந்த பெண்ணையும் வாய் நிறைய அழைப்பவன் .பெண்களுக்கு மரியாதையை தர தயங்காதவன் .....பெண்களை சமமாக கருதும் உத்தமன் ...இவனை போய் ......சே .....நல்லவங்களுக்கு எல்லாம் சீக்கிரம் சாவு வருது .இந்த சோனா மட்டும் குத்து கல்லு போலெ இருக்கு .....போய் தொலைஞ்ச கூட நிம்மதியா இருக்கும் 'மனதிற்குள் புலம்பி தள்ளினாள் சுபா



PENANCE WILL CONTINUE ........ தவம் தொடரும்..................
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM -8 தவம் 8

"அது தான் எனக்கும் புரியலை சுபா .....பதினைந்து வருடமாச்சு அவளையே அவள் குடும்பத்தையோ பார்த்து .....திருமணத்திற்கு கூட எங்களுக்கு அழைப்பு வரலை .....தீடிர் என்று என் வீடு தேடி வந்ததும் அவள் தான் ......பேசி பேசியே டாடியை கரைத்து என்னை அவளுக்கு பி .ஏ என்று ஆகியதும் அவள் தான் .இங்கே இந்தர் இண்டஸ்ட்ரீஸ் வேலைக்கு சேர்ந்த அன்றே என்னை கருணாகரன் சார்க்கு பி .ஏ என்று மாற்றியதும் அவள் தான் .....இவ என் டாடி கிட்டே நான் அவளுக்கு பி.ஏ என்று சொல்லியதால் தான் அவர் வேலைக்கு அனுப்ப சம்மதித்ததே ........அவளிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அம்மா ,ரகு ,கார்த்திக் ஏன் பெரியப்பா கூட வேண்டாம் என்று தான் சொன்னார்கள் ......அப்போ டாடி பேச்சை ஏனோ கேட்டேன் ......ஒரு வருடமாய் கருணாகரன் சார் இடம் பி.ஏ வாக வேலை செய்ய வைத்தவளும் அவள் தான் .இன்று எனக்கும் அவருக்கும் AFFAIR ,சின்ன வீடு என்று முத்திரை குத்துகிறவளும் இவள் தான் ...இல்லை இல்லை 100% உறுதியே செய்து விட்டாள் .எத்தனையோ தடவை யோசித்து இருக்கேன் ,இவளிடம் அப்படி என்ன கண்டார் என்று விஜய் இவளை லவ் செய்து மேரேஜ் செய்தார் என்று .......மனுஷன் ரோபோ மாதிரி ,முசுடு கணக்காய் ,விஜிபி STATUE MAN போலெ ஜடமாய் இருக்காரே என்று .....இப்படி ஒருத்தியை கட்டினால் யாராய் இருந்தாலும் விஜய் சார் போலெ கல்லாய் ,பாறை போலெ தான் இருப்பார்கள் போல் இருக்கு .....பெரியப்பா ,பெரியம்மா ,விஜய் சார் கூட பலமுறை இத்தனை மாதங்களில் கேட்டு விட்டார் --அப்படி என்ன இங்கு தான் வேலை செய்தாக வேண்டிய தலை எழுத்து என்ன என்று ..........வேறு வேலை வாங்கி தரேன் என்று கூட சொன்னாரே .....கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போலெ ......ச்சே ......என்ன தான் பிரச்சனையோ இருவருக்குள் ...என் தலையை பிடித்து ஆட்டுது அந்த வேதாளம் ."என்று தன் தலையை இரு கைகளாலும் பிடித்து கொண்டாள் மதுரா .தலை வலியே வந்து விட்டது மதுராவிற்கு ....மன அழுத்தம் எக்குத்தப்பாய் ஏற ஆரம்பித்து இருந்தது

"ஏன் மதுரா ...ஏதோ அக்ரீமெண்ட் என்றாயே ....படித்து பார்க்காமலா சைன் போட்டே ...படித்த பெண் தானேம்மா நீயி ......சைன் போடும் முன் எதையும் படிக்காமல் ,அவ சொல்லியதற்கு எல்லாம் ஒகே சொல்லிடுவாயா ..."என்று பொரிந்தான் பாலாஜி

"அட நீங்க வேற அண்ணா ....ஒன்றுக்கு இரு முறை படித்து பார்த்தே சைன் செய்தேன் ...இது போன்ற கண்டிஷன்ஸ் நான் சைன் செய்த அக்ரீமெண்ட்டில் இல்லவே இல்லை ......அவளே சொன்னாள் நாலு கட்டு தூக்கி போட்டதும் போர்ஜ்ரி செய்து கொடுத்துட்டாங்க என்று .....சட்ட பதிவூம் செய்ய பட்டு இருக்கு ....சாட்சி கையெழுத்து கூட இருக்கு ...இந்தாங்க நீங்களே படித்து பாருங்க ."என்ற மதுரா சோனா தூக்கி எறிந்த அக்ரீமெண்ட் இரண்டையும் பாலாஜியிடம் கொடுத்தாள் .

படித்து பார்த்த மற்ற இருவரின் முகத்தில் ஈ ஆட வில்லை ....."என்னடி ராணி ...அப்பா எப்போ டீ இந்த பிசாசு கிட்ட கடன் வாங்கினார் ...அதுவூம் மூன்று கோடி ?"என்றாள் சுபா நெஞ்சில் கை வைத்து .

"ச்சூ சுபா அப்பாவது கடன் வாங்குவதாவது .....வரும் வருமானத்தில் நிறைவாய் வாழும் மனிதர் .....கை சுத்தம் தெரியாத உனக்கு .....அவரை ஏமாற்றி கை எழுத்து வாங்கி இருக்கா அவ ......என்ன சொல்லி அவளை திட்றதுனு கூட புரியல ......குன்னூர் வீட்டை விற்றால் கூட ஒரு கோடி தேறாது ...மீதம் மூன்று கோடிக்கு எங்கு போவது ...."என்றாள் மதுரா

"இது போலி அக்ரீமண்ட் என்று சுலபமாய் கோர்ட்டில் நிரூபித்து விடலாம் ....உன் அக்ரீமெண்ட் போலி என்று சந்தேகம் கிளப்பி விட்டு புரூவ் செய்து விட்டால் இந்த அக்ரீமெண்ட் கூட போலி என்று நிரூபிக்க முடியும் "என்றான் பாலாஜி .

"கோர்ட் போகலாம் அண்ணா ......நீதி ,நேர்மை சாக வில்லை என்று தான் நினைக்கிறன் ....யார் கண்டது சோனாவின் பணம் பாதாளம் வரை பாயும் ....இங்கே பாயாது என்று சொல்ல முடியாது ....உங்களுக்கே என் அப்பாவை பற்றி தெரியும் .....ஊர் ,உலகம் என்ன சொல்லும் என்று வாழ்பவர் .தன்னை மற்றவர் ஒரு விஷயத்தில் கூட தவறாக சொல்லி விட கூடாது என்ற வைராக்கியம் உடையவர் .......கோர்ட் போனால் நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டார் .....அது சோனாவிற்கும் நன்றாக தெரிந்து இருக்கிறது ...அது தெரிந்து தானே அந்த காட்டேரி கும்பல் பெட் வைத்து கொண்டது ....அவர் மட்டும் த .....தற்கொலை செய்து கொள்வாரா அல்லது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வாரா என்று ....பெட் பணம் நான்கு கோடியாம் ....."என்ற மதுரா கண்களில் நீர் வழிய எங்கோ வெறித்தாள் .

மதுரா ! நல்லா யோசித்து சொல்லு .....அவ ஏதாவது காரணம் சொன்னாளா ?????இப்படி பிளான் போட்டு உன்னை கார்னெர் செய்வது என்றால் நிச்சயம் ஏதாவது அழுத்தமான காரணம் இருக்கும் .....அதை சொன்னாளா ?"என்றான் பாலாஜி ஒரு வித பதற்றத்துடன் (இந்த தம்பி எதுக்கு இப்படி பதறுது ?)))))))

பாலாஜியின் பதற்றம் புரியாமல் "ஏதோ ரிவென்ஜ் என்றாள் அண்ணா .நான் அழ வேண்டுமாம் .....கதறி துடிக்க வேண்டுமாம் .....நான் அப்படி துடிப்பதை கண்டு விஜய் சார்ரும் துடிக்கணுமாம் .....நான் கஷ்ட பட்டால் சார் ஏன் துடிக்க போகிறார் ?????என்ன லாஜிக் கோ புரியலை ......ஒரு கல்லில் ரெண்டு மாங்காயம் ......அவ டார்கெட் நானா ,விஜய் சார் ரா ????சார் தான் காரணம் என்றால் லவ் செய்து திருமணம் முடித்த இவரோடு என்ன பகை ????இவர்கள் மண வாழ்க்கையில் எனக்கு என்ன அண்ணா தொடர்பு இருக்க போகிறது ??????எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ????நான் அவரின் பி .ஏ என்பதை தவிர்த்து ...இந்த பதவி கூட சோனா உருவாக்கியது தானே .....நானா விஜய்யிடம் வேலை செய்வேன் என்று கேட்டேன் ?????/அவர் ராமனாக ,நெருப்பாக தான் இருக்கிறார் .....இவளே அவரை கிருஷ்ணன் ஆக்கி விட்டு தான் மறுவேலை பார்ப்பாள் போலெ இருக்கிறது .....இந்த அளவூ பொறாமை ,போஸ்சஸிவ் இருப்பவள் எந்த இதுக்கு என்னை பி .ஏ ஆக்கினாள் ....நீங்கள் தானே அண்ணா எனக்கு முன்பு விஜய் சார் இடம் பி .ஏ வாக இருந்தீர்கள் ......உங்களை தூக்க வேண்டாம் என்று எவ்வளவூ போராடினார் ....'இது என் கம்பெனி ,யாரை வேலைக்கு வைக்க வேண்டும் என்பது என் முடிவூ .....மாச சம்பளம் பிச்சை வாங்கும் நீயெல்லாம் அதை கேட்க கூடாது 'என்று கட்டிய கணவன் என்று கூட பாராமல் அன்று நம் முன்னே தானே விஜய் சார் ரை அப்படி சத்தம் போட்டாள் .....அப்படி பேசி விட்டு இன்று அவளே என்னையும் சார் ரையும் சேர்த்து வைத்து பேசுவது ......முடியல சுபா ...விஜய் சார் ஜெம் OF எ PERSON ,ஐடியல் MAN ,MAN OF DECENCY (கண்ணியமான ),MAN OF டிசிப்ளின் (ஒழுக்கம் )MAN OF DECORUM (நல்ஒழுக்கம் )MAN OF DISTINCTION (ஒப்புமை கூற முடியாத தனி தன்மை வாய்ந்த உண்மையான மனிதன் )COMPLETE MAN (முழுமையான ஆண்மகன் )"என்று பொரிந்து தள்ளினாள் ....நீண்ட நேரம் அங்கு மௌனம் நிலவியது .அவளின் குமுறல் ,விஜய் பற்றி அவள் சொன்ன ஒப்புமைகள் கேட்டு ஐந்து பேர் கண் கலங்கி நின்றனர் ......விஜய் ,சுபா ,பாலாஜி ,ஆல்வின் ,அந்த பெரியவர் அனைவரின் கண்களிலும் கண்ணீரின் பளபளப்பு ......

asdsdfdf.jpg

:)))))eek::eek::eek::love::love::love::love::oops::oops::oops:((((மதுரா குட்டி .....இன்னாமா இங்கிலீபீஷ் பேசுறே செல்லம் ....இந்த வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் போடுவதற்குள் ஹனி பாவம் ....ரொம்ப தான் திணறி போச்சு ....நீ பாட்டுனுக்கு பேசிபுட்டே ....ஹனி முறைக்குது நான் எஸ்கேப் ))))))

சுபாவும் பாலாஜியும் பார்வை பரி மாறி கொண்டு ஜன்னலை பார்க்க ......அந்த வீட்டின் ஜன்னல் அருகே நின்று இருந்த அந்த பெரியவரும் ஆல்வினும் விஜய் தோளின் மேல் கை வைத்து நின்றனர் அவனை சமாதான படுத்துவது போலெ ..பெருமுயற்சி செய்து தன்னை நிலை படுத்தி கொண்ட விஜய் முகம் அதுவரை கண்ட முகபாவம் பொய் என்னும் விதமாக உணர்ச்சிகள் அற்ற கற்பாறையாக மாறியது ...மாற்றி கொண்டான் என்று சொல்ல வேண்டுமோ .உணர்ச்சிகள் காட்டாத கற்பாறையாய் அவன் இருக்கும் வரை தான் அவனுக்கு வெற்றி .சிறிது உணர்ச்சிகள் வெளி பட்டாலும் அது சோனாவிற்கு கிடைக்கும் இன்னொரு பகடை காய் ஆகி விடுமே ......

""சரி மா மதுரா போய் படுமா .....ஏதாவது வழி கிடைக்கும் ......இனி மேல் இங்கு கீழே நீ தனியாக இருக்க வேண்டாம் .நானும் ,சுபாவூம் கூட கீழே தங்கி விடுகிறோம் .....சுபா கூட்டி போ ....டைம் ஆகுது பாரு ..."என்றவன் அவர்கள் இருவரும் மதுராவின் அறைக்கு சென்று தாளிடும் வரை அந்த ஹாலில் அமர்ந்து இருந்தான் .

மதுரா இருந்த குழப்பத்தில்சுபா தன் கணவனுக்கு சைகை காட்டியதையோ ,இருவரும் உள்ளே சென்றவுடன் சுபா கதவை தாழ் இட்டத்தையோ ,கதவூ தாளிடும் வரை ஹாலில் இருந்த பாலாஜி ,கதவூ தாழ் இட்ட பிறகு வெகு வேகமாக வீட்டின் பின் புறம் சென்றதையோ கவனிக்க வில்லை .((((இந்த புள்ள என்னத்தை தான் கவனிக்குது .....இதை கவனிக்குறதுக்கு ))))

அந்த வீடு இரண்டு மாடிகள் கொண்ட வீடு .நாற்புறமும் சுற்றி இடம் விட பட்டு ,மரங்கள் ,செடிகள்,தோட்டம் அமைக்க பட்டு இருந்தன .காலை வேளையில் பார்த்தால் அதன் அழகு மனதை நிச்சயம் மயக்கும் .அந்த நேரத்தில் அந்த வீட்டின் தோட்டத்தில் அமைக்க பட்ட முல்லை ,மல்லி பந்தலின் அருகே வானத்தை வெறித்த வாறு நின்று இருந்தான் விஜய் .வானத்தில் எதை தேடுகிறான் ...தொலைந்து போன நிம்மதியையா ,சந்தோஷத்தையா ......கைகள் பின்னால் கட்டி ,கால்களை அகற்றி ,கண்கள் வானத்து நிலவை வெறிக்க ,தலை தூக்கி நின்ற அவன் நிலை மற்றவர்களின் மனதில் வலியை ஏற்படுத்தியது

அவனின் வலி ,வேதனை நன்கு புரிந்தவர்கள் அவர்கள் .ஆல்வின் ,பாலாஜி -விஜய் உடன் பள்ளி முதல் ஒன்றாக படித்து வந்த உயிர் நண்பர்கள் .அவன் வாழ்வின் அனைத்து இன்ப துன்பங்களையும் ,ரகசியங்களையும் ,அறிந்தவர்கள் .விஜய்க்கு ஒன்று என்றால் உயிரை கொடுக்கவோ ,எடுக்கவோ தயங்காத உண்மையான ஆத்ம நண்பர்கள் .

ஆல்வின் துப்பறியும் நிறுவனம் நடத்தி வந்தான் .பெரிய நிறுவனங்களுக்கு இவன் செக்யூரிட்டி நிறுவனம் தான் காவலர்களை அனுப்புவது .....தொழில் அதிபர்களுக்கு இடையே பாலமாய் இருப்பவன் -facilitator என்பார்களே அது .....தொழிலும் வெகு சிறப்பாகவே நடக்கிறது .காதல் திருமணம் புரிந்தவன் .மனைவி வீட்டில் இவன் வேறு மதம் என்பதால் இவ்வளவூ வருடங்களாக ஏற்க படாதவன்

பாலாஜி விஜய் உடன் இந்தர் இண்டஸ்டரிஸ் இல் ஒன்றாக வேலைக்கு சேர்ந்தவன் .விஜய் சோனாவை மணந்து கம்பெனிக்கு M .D ஆன போது அவன் பி .ஏ ஆனவன் .சுபாவும் இவனும் காதல் திருமணம் என்றாலும் இரு குடும்பங்களும் ஏற்று கொண்டு நடந்த ஒன்று .

நண்பன் வருந்துவது பிடிக்காமல் அவனை திசை திருப்ப "சோனா போட்டு வாங்கி இருக்கா மாதிரி தான் தெரியுது ......இன்னும் எதுவும் சோனாவிற்கு தெரியாது கருணா ....."என்றான் பாலாஜி

"தெரியாத வரை நிம்மதி ......இதற்கே இந்த ஆட்டம் ஆடி விட்டாள் .இன்னும் கிளறினாள் ....என்ன செய்வது ?"என்றார் அந்த பெரியவர்

"நீங்க ஏன் பா கவலை படுகிறீர்கள் ......நான் ,பாலாஜி ,சுபா,நீங்க உட்பட இதில் சம்பந்த பட்டவர்கள் இன்னும் நான்கு பேர் தான் .....யாரும் வாய் திறக்க போவது இல்லை ........"என்றான் ஆல்வின்

"என்ன கருணா நீ எதுவூம் பேச மாட்டேன் என்கிறாய் ...."என்றான் பாலாஜி

"பைத்தியக்காரி .......நான் எது எல்லாம் இல்லையோ அது எல்லாம் நான் என்று பாராட்டி விட்டு போய் இருக்கிறாளே ................ஐடியல் ,கம்ப்ளீட் மனிதன் நானா ......எனக்கு என்ன தகுதி இருக்கிறது மனிதன் என்று சொல்லி கொள்ள ?????எத்தனையோ பெரிய பாவம் செய்தவன் நான் .........என்னை போய் எப்படி உயர்த்தி பேசுகிறாளே அப்பா இந்த லூசு ........????"என்றான் திணறியவனாக

"அது நீங்க இல்லை என்றால் வேறு யார் தான் அண்ணா அதற்கு தகுதி உள்ளவன் ?"என்றாள் அங்கு வந்த சுபா

சட்டென்று கருணா வீட்டை நோக்க ,"மதுரா தூங்கிட்டா அண்ணா .....நீங்க சொன்ன படி பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டேன் ....இல்லை என்றால் புலம்பியே தூங்க மாட்டாளே ....."என்றாள் சுபா

PENANCE WILL CONTIUNE.............. தவம் தொடரும்
 
Last edited:
Status
Not open for further replies.
Top