All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM -9 தவம் ---9
80449235eefb3a8fc7ad47f78caac145.jpg


"தூங்கட்டும் மா அவளாவது நிம்மதியா தூங்கட்டும் .........ரெண்டு நாட்களுக்கு அவள் ஆபீஸ் வர வேண்டாம்.பார்த்துக்கோ சுபா .அவ வளர்ந்த குழந்தை ......மா.தனியா விடாதே .....சோனா வேறு இவளை நன்றாக குழப்பி விட்டு இருக்கா ..........யோசித்து யோசித்து தூங்காம ,சாப்பிடாம உடம்பை கெடுத்துப்பா மா .....ரெண்டு ,மூன்று நாட்களுக்கு நைட் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுமா ......ஆபீஸ்லேயும் கவனிச்சுக்கோ .ஒழுங்கா சாப்பிடுறாளா என்ன என்று ...இல்லை என்றால் சிலை வைக்கும் அளவூ எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்துட்டு இருப்பா .....இனி அவள் எங்கு போவது என்றாலும் பாலாஜி நீயோ ,சபரியோ உடன் இருங்கள் .....அது எங்கே என்றாலும் சரி .....சுபா முடிந்த அளவூ மதுரா கிட்டே சோனா எங்கே கூப்பிட்டாலும் தனியே போக வேண்டாம் என்று சொல்லி விடு ...தேவை ஏற்பட்டால் சுமன் பற்றி சொல்லிடுமா ......"என்றான் விஜய் தன் முழு கம்பிரத்திற்கு நிமிர்ந்து "நான் போய் அவளை பார்த்துட்டு வந்துடுறேன் "என்றவன் மதுரா படுத்து இருந்த அறைக்குள் நுழைந்தான்.

சிறு பிள்ளை போலெ ,முகத்தில் புன்னகையுடன் உறங்கியவளை பார்க்க தெவிட்டவில்லை விஜய்க்கு .மண்டியிட்டு அவள் முன் அமர்ந்தான் .அவளை பார்க்க பார்க்க கண்கள் தானாக கலங்க ஆரம்பித்தது .

"சாரிமா ...என்னால் தானே உனக்கு இவ்வளவூ ஆபத்துகள் .....நான் இருப்பேன் ...என் கடைசி மூச்சு உள்ள வரை உனக்கு எந்த ஆபத்தும் வர விட மாட்டேன் ....பிராமிஸ் மது ........நீ கார்திக்க்கோடு நூறு வருஷம் சந்தோஷமா வாழ்வதை பார்க்கனும் ......நிச்சயம் உன்னை வாழ வைப்பேன் ....நீ வாழ யாரின் உயிராவது போக வேண்டும் என்றாலும் எடுக்க தயங்க மாட்டேன் ......உன் முகத்தில் உள்ள புன்னகை என்றுமே மாற கூடாது மது ...........உனக்கு ஏற்றவன் கார்த்திக் தான் மது .....உன்னை நல்லா பார்த்துப்பான் ............நான் இருக்கேன்டா உனக்கு ............என்னை மீறி தான் எந்த தும்பமும் ,ஆபத்தும் உன்னை நெருங்க முடியும் ..........பயப்படாதேடா ...............அப்படி எதுவும் ஆக விட மாட்டேன் ...........சாரி ..........ரொம்ப சாரி ..............இன்னைக்கு எப்படியோ தவறு நடந்து போச்சு .........கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துட்டேன் .....இனி அது போலெ நடக்காதுடா .............நீ எதுக்குமே கவலை படாமல் இரு ......எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன் ......."என்றவன் முகத்தில் புரண்ட அவள் முடியைவிரல் நுனி கூட மேல் படாமல் தள்ளி விட்டு ,போர்வையை நன்றாக போர்த்தியவன் அறை வாயில் வரை சென்று மீண்டும் ஒரு முறை மதுராவை திருப்பி பார்த்தான் பின் கடகடவென வாசலுக்கு சென்று காரில் அமர்ந்து விட்டான்.

பாலாஜி கொடுத்த மதுராவின் இரண்டு அக்ரீமெண்டையும் ஆல்வின் வாங்கி கொண்டு கிளம்பி விட ,கருணாகரனும் அந்த பெரியவரும் தங்கள் காரில் ஏறி புறப்பட்டனர் .அவர்கள் கிளம்பும் வரை வாசலில் நின்று கொண்டு இருந்தனர்.பாலாஜியும் ,சுபாவும் .அவர்கள் கிளம்பிய உடன் கதவை தாளிட்டு ஹாலுக்கு வந்த சுபா ,பாலாஜியின் தோளில் சாய்ந்து கதறி விட்டாள்.

"என்ன சுபா இது ....சின்ன பிள்ளை போலெ .....இந்த நிலைமையில் அழலாமா .....கண்ணை தொடை ...."என்றான் அவளை அணைத்தவாரு

"அண்ணா இப்படி இடிஞ்சி போய் பார்க்க முடியல பாலு........அண்ணாக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது ......எவ்வளவூ நல்ல மனுஷன் .......இப்போ இறுகி போய் இருப்பதை கண் கொண்டு பார்க்க முடியலை பாலு ........அவர் சிரிப்பு எவ்வளவூ அழகா இருக்கும் ....சிரித்தால் முகமே ஜொலிக்குமே ........... ........அந்த சோனாவை கொன்று விடும் அளவூ ஆத்திரம் வருதுடா .......கருணா வாழ்க்கையை அழித்தது மட்டும் இல்லாமல் மதுராவின் மானத்தையும் இப்படி அழிக்க பார்க்கிறாளே ......பேசாமல் சோனாவை கொன்று விடலாமா .....எல்லோருக்கும் நிம்மதி ...."என்றாள் சுபா வேதனையோடு

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான் பாலு .நண்பனின் புன்னகை நினைவுக்கு வர அவன் கண்களும் கலங்கியது."கொல்வது எளிது சுபா ......ஆனால் பின் விளைவூகள் ??????கஜேந்திரன் சும்மா இருப்பாரா .....ஆசை பேத்தி ஆயிற்றே .......அந்த ஆள் மனித உருவில் வாழும் நிஜ அரக்கன் சுபா ......அந்த ஆள் செய்து உள்ள கொலைகளுக்கு அளவே இல்லை .......தான் நினைத்ததை அடைய எந்த குறுக்கு வழியையும் கடை பிடிப்பார் ....சோனவையோ ,சுமனையோ கொல்வது கருணாவால் முடியாது என்றா நினைக்கிறே .......நிறைய விளைவூகள் ஏற்படும் சுபா .....அதை எல்லாம் யோசித்து தான் நாங்க யாருமே இதில் நேரிடையாக இன்வோல்வ் ஆவது இல்லை ......முடிந்த அளவூ நாம் தான் மதுராவை காப்பாற்றி வருகிறோம் என்று தெரிந்தால் சோனா ,சுமன் ,கஜேந்திரன் எப்படி ரியாக்ட் ஆவார்கள் ,எந்த எல்லைக்கு போவார்கள் என்று சொல்ல முடியதுமா ......மதுரா ,அவள் குடும்பம் மட்டும் அல்ல இதில் உள்ள நம்ம யாரின் உயிரும் போக கூடாது என்று மிக எச்சரிக்கையாக இருக்கோம் சுபா ..... இதுங்க எல்லாம் ஆலமரம் மாதிரி ,கிளையை வெட்டினால் போதாது ,வேரோடு சாய்க்க வேண்டும் .....கருணா அமைதியாக இருப்பது போலெ தெரியலாம் ....ஆனால் சோனா ,கஜேந்திரனை விட 100 ஸ்டெப்ஸ் அவர்களுக்கு முன்னாடியே யோசித்து இருப்பான்..........விடிவூ காலம் பிறக்கும் சுபா .....கருணா மாதிரி ஆட்களுக்கு துன்பம் வந்தாலும் அதனை நிச்சயம் வெல்வான் ...உன் அண்ணனை பற்றி தெரியாதா என்ன ....... ....தைரியமாக இரு சுபா ......மதுராவுக்கு ஒன்றும் ஆகாது ...."என்றான் பாலாஜி

அதே சமயம் சென்று கொண்டு இருந்த காரில் கனத்த மௌனம் நிலவியது .சட்டென்று அந்த பெரியவர் குலுங்கி அழ ஆரம்பித்தார்

"அப்பா ! என்னப்பா இது ..."என்றான் விஜய் காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவர் புறம் திரும்பி அவர் கைகளை பிடித்து கொண்டு

"கடவுளே ...நீ மட்டும் இன்று இல்லை என்றால் மதுரமாவின் கதி .....சங்கரனுக்கு என்ன பதில் சொல்லி இருக்க முடியும் .......என் மகளாய் இருந்து கொண்டு இப்படி கேவலமான வேலை செய்கிறாளே பா .......தாங்க முடியலை கருணா "என்று அழுதார் சோனாவின் பாவப்பட்ட தந்தை சேதுபதி -கருணாவின் மாமனார் .

"அப்பா! உங்களுக்கு நானும் ,பூரணியும் மட்டும் தான் பிள்ளைகள் .சோனா சொர்ணாவின் மகள் .கஜேந்திரனின் பேத்தி அவ்வளவூ தான் .....உங்களுக்கோ ,கனகா அம்மாவிற்கோ சோனா மகள் கிடையாது .வளர்த்தது நீங்கள் இல்லை .....சொர்ணா ....பெண் பாதை மாறி போனதிற்கு அவர்கள் தான் வருந்த வேண்டும் நீங்கள் இல்லை அப்பா .....இந்தாங்க தண்ணீர் குடிங்க ...உங்களுக்கு எத்தனையோ முறை சொல்லி விட்டேன் உங்கள் விலை உயர்ந்த கண்ணீருக்கான தகுதி சோனாவிற்கு இல்லை என்று ...."என்றான் விஜய் அவரை அணைத்த படி

தன்னை சமாளித்து கொண்ட சேது ,"இனி என்னப்பா செய்வது ?"என்றார்

காரை கிளப்பிய விஜய் ,"தெரியலை அப்பா யோசிக்கணும் ......"என்றான்

"பதினைந்து வருடங்கள் சங்கரனையும் அவன் குடும்பத்தையும் கஜேந்திரனிடம் இருந்தும் சோனா ,சொர்ணா பெண் பிசாசுகளிடம் இருந்து காப்பாற்றி விட்டதாக ரொம்பவே சந்தோச பட்டேன் கருணா .இப்படி மடத்தனமாய் தானும் மாட்டி ,இந்த அப்பாவி பொண்ணு மதுரவையும் மாட்ட விட்டு இருக்கிறானே ......"என்றார் சேது வருத்ததுடன்

"சோனா குன்னூர் போறா என்றதும் நாம் உஷாராகி இருக்க வேண்டும் ....வழக்கம் போலெ பாய் FRIENDS கூட ...........என்று நினைத்தது தப்பாகி விட்டது .....கரெக்ட் டா செக்க்மேட் வைத்து இருக்கு ......அதுக்கு தான் குறுக்கு வழி மூளை நன்றாக வேலை செய்யுமே ......மதுரா இனி இங்கு இருந்து நகர முடியாது ....சோனா ,சுமன் கண்காணிப்பு நிச்சயம் இருக்கும் ......சுமன் மேட்டர் தெரிய வந்தால் ,இன்னும் என்ன செய்யலாம் என்று வெறியோடு அலைவாள் .சுமனும் இவ்வளவூ நடந்த பிறகு அமைதியா இருக்க மாட்டான் ......"என்றான் விஜய்

"அரக்க கூட்டம் .......சாடிஸ்ட்கள் ..............எப்படி தான் எல்லா பேய் ,அரக்க ஜென்மங்கள் ஒன்றாக யோசிக்குதுங்கோலே ............எல்லாத்துக்கும் மற்றவர்களை துடிக்க வைத்து பார்க்கும் வெறி .............30-40 வருடங்களாக தினம் தினம் இவர்களிடம் தெரியாமல் மாட்டி ,செத்து செத்து பிழைச்சுட்டு இருக்கேன் ......என் தலை எழுத்து தான் இப்படி என்றால் உன் தலை எழுத்துமா இப்படி இருக்கனும் ......கடவுளுக்கு இன்னும் கொஞ்சம் உன் மேல் கருணை இருந்திருக்கலாம் கருணா ............இந்த புதை குழியில் மாட்டி கொண்டு இப்படி நீ துடிப்பதை காண முடியலை ......"என்றார் சேதுபதி கண்ணில் நீர் வழிய

"அப்பா !போதும் பா ....ரொம்ப அழுகாச்சி சீன் னா இருக்கு ......முடியலை .....கொஞ்சம் உங்க கண் DAM கிளோஸ் செய்யுங்க ....."என்றான் கருணா அவரை பார்த்து நக்கலாக

"அடேய் ....நான் உனக்காக பேசிட்டு வரேன் .....நீ என்னையே கலாய்கறீயா ......உன்னை ...."என்றவர் சுற்றும் முற்றும் காரில் தேடினர்

"என்னப்பா தேடறீங்க ,என்னை அடிக்க கட்டையா ......வேணும் என்றால் சொர்ணா அதே கிட்டே கேளுங்க அப்பா .....எல்லாம் கிடைக்கும் ....."என்றான் கருணா அடக்க பட்ட சிரிப்புடன்

"நீ வேற ஏன்டா ......மானத்தை வாங்கறே ..."என்றார் அவர் தலையில் அடித்து கொண்டு

"ச்சே போங்க அப்பா ....உங்க ஒர்த் உங்களுக்கே தெரியல .....பட் சொர்ணா அத்தை ரொம்ப ஷார்ப் ......"என்றான் கருணா விடாமல்

"அடேய் ....நிறுத்துடா .....முடியலை .....ஐம்பது வயசுக்கு மேல் சொர்ணா கொடுக்கும் லவ் TORTURE தாங்க முடியலை ......எங்கே போய் முட்டி கொள்வது என்று எனக்கே தெரியலை ....நீ வேற லொள்ளு பண்ணிட்டு "என்றார் சங்கடத்துடன்

"ஐ ...அப்பா ...வெக்க படறீங்க போலெ இருக்கு .......பாமா ,ருக்மணி ,வள்ளி தேவயானை போலெ இந்த பக்கம் சொர்ணா அத்தை ,அந்த பக்கம் கனகா அம்மா ....செம காம்பினேஷன் ....கலக்குங்க அப்பா ....கலக்குங்க .....கண்ணா ரெண்டாம் லட்டு தின்ன ஆசையா ......"என்றான் கருணா வாய் விட்டு சிரித்து .

"உன்னை அடிக்க போறேன் கருணா .....நீ வேற வயித்து எரிச்சலை கொடிக்காதே .......அந்த சொர்ணா இந்த வயசில் வழிவது,சின்ன பெண் போல் நூல் விடுவது ,முகத்தை மூடி வெட்க படுவது ...........வாந்தியே வருது .......ஏன் வீட்டுக்கு ...தப்பு தப்பு நரகத்திற்கு போகிறோம் என்று இருக்கிறது .......என்னை நம்பி இன்னும் அப்பாவியான மூன்று ஜீவன் அங்கு இருக்கே ......இல்லை என்றால் கண் காணாத இடத்திற்கு ஓடி விடுவேன் ..."என்றார் சேது கடுப்பாக

"மூன்று ஜீவன் .....ஹ்ம்ம் ....கனகா அம்மா ,மரகதம் பாட்டி ,அன்னபூரணி ......இந்த லிஸ்டில் என்னை விட்டுடீங்களே அப்பா .....மீ ஆங்கிரி ...."என்றான் அந்த இரும்பு மனிதன் சிறு பிள்ளையாக சிணுங்கி

சாலை விளக்கின் வெளிச்சத்தில் அவனை கண்ட அவரின் கண்கள் மீண்டும் கலங்கின ."நீ இப்படி சிரித்து பார்த்து எவ்வளவூ நாள் ஆச்சு கருனை .....சிரிப்பையே தொலைச்சுட்டியே கண்ணா எப்படி இருந்த பிள்ளை நீ .....கடவுளே .......அந்த கடவுள் தான் உனக்கு வழி காட்டனும் .......என்றார் சேது வேதனையோடு

"காலையில் கண்ணாடி பார்க்கும் போது கூட ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சு இருந்தேன் பா ....இப்போ அவளோ மோசமாக வா இருக்கேன் ......உங்க கண்ணை டெஸ்ட் செய்யணும் .....நமக்கு எத்தனை ரசகுல்லாஸ் விசிறியா கிடைச்சு இருக்குனு SM அட்மின் டீம் POLL ஏற்பாடு செய்தாலும் ஆச்சரிய படறதுக்கு ஒன்னும் இல்லை ."என்றான் தன் தலையை கோதியவாறு (ஹி ஹி விஜய் கண்ணா .........மீ 1ST ........பார்க்க ஆளும் செமையா இருக்கே .............கேரக்டர் மதுரவே கமெண்ட் பண்ணிட்டா ............ரியல் லைப் ல உன்னை மாதிரி ஒருத்தன் பெண்ணுக்கு கிடைத்தால் அவ தான் லக்கி ----உனக்காக இந்த சாங் டெடிகேட் பண்றேன் ----உன்னை போலெ ஒருத்தன நான் பார்த்ததே இல்லை ....உன் உசரம் பார்த்து வானம் கூட சுருங்குமே மெல்ல ....சாமி போலெ வந்தவனே .......)


PENANCE WILL CONTINUE................. தவம் தொடரும் ..............
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM -10 தவம் --10

1327486173618772.jpg

போடா போக்கிரி ....."என்று அவனை மொத்தியவர் " தம்பி ...மதுராவால் ஒரு கோடி ஏறக்குறைய புரட்ட முடியும் ...ஆல்வின் ,பாலாஜி ,கார்த்திக் கூட ஹெல்ப் செய்வார்கள் .......கனகவிடமும் ,மரகதம் அத்தையிடமும் சில வைர நகைகள் மற்ற யாருக்கும் தெரியாமல் இருக்கு பா ....அதை பிலேட்ஜ் செய்யலாம் ,வேணும் என்றால் விற்று விடலாம் கண்ணா ....நீயும் உன்னால் முடிந்த அளவூ ட்ரை செய்ப்பா .......சுலபமாய் நான்கு கோடி புரட்டி விடலாம் ....மதுராவது காப்பாற்றி விடுவோமே ...."என்றார் சேது


"பணம் எல்லாம் பிரச்சைனையே இல்லை பா ......நான்கு கோடி என்ன ,எனக்காக கேள்வியே கேட்காமல் ,சூரிட்டி கூட வாங்காமல் 10 கோடி என்றாலும் கூட தர ஆள் உண்டு ......உங்களுக்கு நான் சொல்லி தான் தெரியனுமா என்ன ....ஆனால் கொடுப்பது நீங்களும் ,நானும் என்று தெரிந்தால் ,மதுராவிற்காக நாம் சிறு கை அசைத்தோம் என்று சோனாவிற்கு தெரிய வந்தால் ,அவளோடு சேர்ந்து கஜேந்திரன் எப்படி ரியாக்ட் ஆவார் என்று தெரியாது .....சோனாவிற்கு தேவையே நம் ரியாக்ஷன் தான் .....அதற்கு தான் ,இந்த துடிப்பை,வலியை காண தான் அவள் காத்து இருக்கிறாள் ......இப்பாவது கௌரவுமாக வேலை ஒப்பந்தம் ,கடன் என்று ஓர் அளவூ இருக்கிறது ....அந்த பெருச்சாளிக்கு உண்மை தெரிஞ்சுச்சு போட்டி கம்பெனியின் உளவாளி ,கம்பெனி ரகசியத்தை விற்றாள் ,பள்ளி ,கல்லூரிகளில் போதை மருந்து மதுரா கூவி கூவி விற்றாள் ,தீவிரவாதிகளுக்கு துணை புரிந்து தேசத்துரோகம் செய்தாள் ,சுபா ,பாலாஜியுடன் அந்த வீட்டில் பலான தொழில் செய்தாள் என்று வாய் கூசாமல் புகார் சொல்லுவாள் .....எவிடென்ஸ் கூட இவளே CREATE செய்து வைத்தாலும் வைப்பா .......இது எல்லாவற்றையும் மதுராவோ ,அவள் குடும்பத்தினரோ தாங்குவார்களா .....ஊர் முழுதும் பெயர் இப்படி எல்லாம் அடிபட்டால் கூட கார்த்திக்கின் குடும்பம் மதுராவை ஏற்குமா ????? இப்படி நிறைய இருக்கு பா ............சோனா நான் தான் மதுராவை காப்பாற்றுவது என்று கண்டு பிடித்தாள் ,மறு கணம் மதுராவை கொல்ல கூட தயங்க மாட்ட ......எந்த எல்லைக்கும் போகும் அந்த பேய் ......இடியாப்ப சிக்கல் நிறைய உண்டு பா ...பொறுமையா தான் HANDLE செய்யணும் ....."என்றான் விஜய் .

"என்னப்பா இது ......எந்த பக்கம் போனாலும் கண்ணை கட்டுதே ......மதுராவை எப்படி கண்ணா காப்பாற்ற போகிறோம் .....நினைச்சாலே தலை சுத்துது "என்றார் சேது கவலையாக

"ஒரு பிசாசு இருந்ததாலே சமாளிப்பது கஷ்டம் .....கூடவே குட்டிச்சாத்தான் ,காட்டேரி ,ராட்சசன் ,என்று எல்லாமே அல்லவா சேர்ந்து ஆட்டம் போடுதுங்க .......ஒரு வருடம் காப்பாற்ற வில்லையா மதுராவிற்கே தெரியாமல் .......இப்போ அவளுக்கும் கொஞ்சம் விஷயம் தெரிந்து இருக்கும் ........வழி கிடைக்கும் ...டென்ஷன் வேண்டாம் அப்பா ......உங்க உடம்புக்கு நல்லதில்லை .....ரிலாக்ஸ் ஆகுங்க ....இதை பத்தி பேச வேண்டாம் ......பாட்டு கேளுங்க "என்று ரேடியோவை ஆன் செய்தான் .

சீர்காழி டாக்டர் கோவிந்தராஜன் குரலில் ,ஜஸ்டிஸ் விஸ்வநாத் என்ற படத்தில் வரும் பாடல் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது

இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில்
நியாயங்கள் யார் சொல்ல கூடும்
எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்
எந்த குற்றங்கள் எதனாலே தீரும்(இது)


சட்டம் ஏமாந்து போனாலும் போகும்
தர்மம் எப்போதும் பழி வாங்கி தீரும் நீ
உனக்காக உருவாக்கும் நியாயம்
அது அநியாயம் ஆனாலும் ஆகும்


தெய்வம் தான் அன்று இருந்த ராமன்
பொய் மானை தேடியதும் பேதம்
எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்
எந்த குற்றங்கள் எதனாலே தீரும்(இது)


நல்ல அறிவோடு வாழ்ந்தரும் உண்டு
வந்த விதியோடு சென்றாரும் உண்டு அந்த
சினம் என்றும் சேர்ந்தாரை கொல்லும்
நல்ல மனம் தானே எந்நாளும் வெல்லும்


நெஞ்சில் தெய்வங்கள் சில நேரம் வாழும்
அந்த மிருகங்கள் சில நேரம் ஓடும்
எந்த நெஞ்சங்கள் எதனாலே ஆறும்
எந்த குற்றங்கள் எதனாலே தீரும்(இது)


எவ்வளவூ உண்மையான தத்துவங்கள் மிக எளிமையாக கண்ணதாசன் பாடி எழுதி விட்டார் ......கருணாவின் நிலையும் அது தானே!!!!!!

"அட ரேடியோக்காரன் கூட நம்மை ஓட்டறான் பாருங்க அப்பா ..."என்று வாய் விட்டு சிரித்தவனின் முகம் சட்டென்று கற்பாறையாக இறுகியது எதிரே நின்ற அந்த மாளிகையை கண்ட உடன்

"நரகம் வந்துச்சுப்பா ...."என்றான் எக்கு போன்ற குரலில் .அது வரை சேதுவிடம் குறும்பு செய்து கொண்டு வந்தவன் இவன் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்.ஆதி முதல் அந்தம் வரை அவன் தோரணையே மாறி விட்டது

"ஹ்ம்ம் ..."நீண்ட பெரு மூச்சு ஒன்றை வெளியிட்டார் சேது

கஜேந்திரன் என்ற ராட்சசஸின் கோட்டை -மாளிகையின் பெயர் -கஜா போர்ட்
104970334.jpg

அந்த நள்ளிரவில் அழகிய ஆபத்தாக ஒளிர்ந்து கொண்டு இருந்தது கஜா போர்ட் .இரண்டு பெரும் வாயில் கதவூகளை திறந்து விட்ட வாச்சேமென் கார் உள்ளே நுழைய சலூட் அடித்தனர்.மெல்ல ரன்வேயில் கார் செலுத்தினான் கருணா

"எங்கே இருதோம் ?"என்றான் கருணா

"ஆஃபிஸில் "என்றார் சேது மரத்த குரலில்

"என்ன செய்தோம் ?" என்றான் கருணா

"புது ஆர்டர் சீனாவுடன் ....அங்கு இருந்து டெலிகேட்ஸ் அடுத்த வாரம் வராங்க ....அவங்களுக்கு கஜா இண்டஸ்ட்ரீஸ் உடன் பார்ட்னர் ஆகும் ஆசையும் இருக்கிறது ..."என்றார் சேது மனப்பாடம் செய்ததை ஒப்புவிக்கும் குரலில்

"அதற்கு ஏன் எவ்வளவூ நேரம் ?"என்றான் கருணா

"வீடியோ கானபெரென்ஸ் பேசினோம் .....எல்லாத்தையும் விளக்க நேரம் ஆகி விட்டது ....கோடிக்கணக்கில் இன்வெஸ்ட் செய்வதால் துருவி துருவி விசாரித்தார்கள் ."என்றார் சேது

" ஆபீஸ்இல் இல்லையே .....செக்யூரிட்டி சொன்னார்களே ....."என்றான் கருணா

"செக்யூரிட்டி அடிக்கடி வந்துட்டே இருந்தான் ...ஒரு வேளை அவன் 'வெற்றி ' குரூப்ஸ்' உளவாளியோ என்று சந்தேகமா இருந்தது .எனவே நுங்கம்பாக்கம் கெஸ்ட் ஹவுஸ் க்கு போய்ட்டோம் .ஆடிட்டர் பாஷியம் சார் கூட வந்துட்டார் .............யப்பா .....சாமி ....இவ்வளவூ கேள்வி கேட்பாங்க என்று நினைக்கிறே ???//அதுவும் நள்ளிரவு இரண்டு மணிக்கு .......பேய் கூட முழிச்சி இருக்காது பா .....அதுங்க எப்பவூ தண்ணீ போட்டு மட்டை யாகி இருக்கும்க."என்றார் சேது கார் விட்டு இறங்கியவாறு

"அப்பக்காரு ...கொஞ்சம் அக்கட சூஷ்கோவண்டி .....வரவேற்பு கமிட்டி ஆல்ரெடி ஹாலில் இருக்கு ....கெட் ரெடி ....F .B .I /C .I .A INTERROGATION எல்லாம் தோற்பது போலெ இருக்கும் நானா ...."என்றான் கருணா ஏளனமாக

படியேறி மாளிகைக்குள் வந்தவர்களை வரவேற்றது கமிட்டி -சோனா ,சொர்ணா ,கஜேந்திரன் .முழுதும் நெட்டில் ஆனா ,TRANSPARENT உடையில் ஏதோ MIDNIGHT மசாலா பட நாயகி போலெ ஒரு சோபாவில் படுத்து போஸ் கொடுத்து கொண்டு இருந்தாள் சோனா .கருணா உள்ளே வந்த உடன் உடலை வளைத்து நெளித்து என்று அவன் கவனத்தை கவர ஏக பட்ட சேஷ்டைகள் .....சேது வெளிப்படையாகவே தலையில் அடித்து கொண்டார் .

'இப்படி எல்லாம் ஐடியா இந்த சனியனுக்கு எவ கொடுப்பது ......கன்றாவி ......வேலையாட்கள் நடமாடும் இடத்தில இப்படியா கடை விரிப்பாள் ........வேண்டாம் கருணா வாய் திறக்காதே .....இது தான் சாக்கு என்று அட்டையாக ஒட்டி கொள்வாள் .......'என்று மனசாட்சி எச்சரிக்கை விடுக்க கஜேந்திரனை பார்த்த படியே மாடியில் உள்ள தன் அறைக்கு செல்ல முயன்றான் கருணா

அவனின் நிலை அது என்றால் சேதுவின் நிலை அதை போலெ மோசமாக தான் இருந்தது .....சோனாவாது இளம் வயதினள் .தன் புருஷனை கவிழ்க்க ஏதோ செய்கிறாள் ....ஆண்டியை தாண்டிய பாட்டி வயசில் சொர்ணாவூம் வெட்கப்பட்டு காலால் கோலம் இட ,சேதுவிற்கு கண்ணை இருட்டி கொண்டு வந்தது .எங்கே அங்கேயே வாந்தி எடுத்து விடுவோமோ என்று தன் அறைக்கு ஓட பார்த்தார் .இந்த வயசில் இப்படி உடை அணிந்து அவருக்கு ஹார்ட் அட்டாக் கொடுத்து கொண்டு இருந்தாள் சொர்ணா .இப்படி ஓட முயன்ற இரு மருமகன்களையும் தடுத்து நிறுத்தியது கஜேந்திரனின் சிம்ம + வெங்கல குரல்

கஜேந்திரனுக்கு அறுபது வயது .ஆனால் பார்க்க நாற்பது போலெ இருப்பார் .திமிர் ,தெனாவட்டு ,ஆணவம் ,டாம்பீகம் ,வெறி என்று பணத்தை ,மதிப்பை பெற எதை வேண்டும் என்றாலும் செய்ய தயங்காத ராட்சசன் .அகராதியில் கெட்டது என்று தேடினால் அதற்கு விளக்கமாக கஜேந்திரன் என்ற பெயர் தான் இருக்கும் .அந்த வீட்டுக்கு எடு பிடியாக உள்ளே நுழைந்தவர் இந்த கஜா .அந்த வீட்டு மாப்பிளை சோமசுந்தரத்திற்கு நண்பன் என்ற பெயரில் கிடைத்த ஆலகால விஷம் .சோமசுந்தரத்தின் மனைவி மரகதம் .ஜமீன் வம்ச அழகு சிற்பம் .அதன் மேல் கஜாவின் கண் விழுந்தது .நல்லவரான சோமசுந்தரத்திற்கு மது ,மாது ,போதை என்று பழக்க படுத்தி நண்பன் ஆனா இரண்டே வருடத்தில் அவரை கொன்று விட்டான்.

யாருக்கும் இவர் மேல் சந்தேகம் வராத மாதிரி கொல்வதில் இவருக்கு நிகர் இவரே . இளம் மகள் விதவை ஆகி விட தவித்த மரகதத்தின் தந்தை முன் ஏற்கனவே நல்ல பெயர் எடுத்து இருந்த கஜாவை மரகதத்திற்கு இரண்டாம் திருமணம் நடத்தி வைத்தார் அந்த அப்பாவி தந்தை .

images (9).jpg

திருமணம் வரை நல்லவன் என்ற முகமூடி அணிந்தவர் ,திருமணம் ஆனா மறுநொடியில் இருந்து தன் சுயரூபத்தை காட்டினார் .ஏற்கனவே மகளின் விதவை கோலம் கண்டு ஒரு முறை ஹார்ட் அடக்க வந்து இருந்த மரகதத்தின் தந்தை ,இரண்டாம் மருமகனின் சுயரூபம் தெரிய வர மகளின் வாழ்வை தாமே கெடுத்து விட்ட கவலையில் போய் சேர்ந்து விட கஜாவை அடக்க ஆள் இல்லாமல் போனது .மரகதம் வாய் இல்ல பூச்சி .....எதற்குமே அவர் வாய் திறக்காதது இவருக்கு சாதகமாக போய் விட பேயாட்டம் ஆடினார் ,ஆடி கொண்டு இருக்கிறார்.மரகதத்தின் சொத்து முழுவதும் இவர் கையில் ...பதவி ,பணம் ,மதிப்பு என்பதின் மேல் வெறி ...வெறி ....வெறி மட்டுமே ....பணத்தை சம்பாதிக்க மற்றவர் வாயில் ,வயிற்றில் அடிக்க கஜா தயங்கியதே இல்லை .ஆரம்பத்தில் மறுவாழ்வு தந்த தெய்வமாக இவரை மரகதம் பார்க்க ,ஆனால் அவரோ ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவி சிவகாமி கர்ப்பிணியாக இருக்கும் போது நடுத்தெருவில் அவர்களை விட்டு விட்டு தான் மரகதத்தை கரம் பிடித்தார் .இந்த மரகதத்தின் பெண்களே சொர்ணாவும் ,கனகாவும் .சொர்ணா கஜாவை போலவும் ,கனகா மரகதத்தை போலவும் குணத்தில் இருந்தனர் .

பெண்கள் இருவருக்கும் மணம் முடிக்க ஏற்பாடு செய்ய பட்டது .கனகா மனதாலும் ,உடலாலும் அழகானவள் .ஆனால் சொர்ணா அழகு படுத்தி கொள்ள தெரிந்தவர் .தனக்கு பார்த்த மாப்பிளை விடுத்து ,மரகதத்திற்கு பார்த்து முடிவூ செய்ய பட்டு இருந்த வரதராஜனை மட்டுமே மணப்பேன் என்று தகராறு செய்து ,அவரை மணந்து அமெரிக்கா சென்று விட்டாள் சொர்ணா .

கனகா குணவதி .குறுக்கு வழி தெரியாத பாசக்கார பெண் .கனகாவை பொறுத்த வரை திருமணம் என்பது அந்த நரகத்தில் இருந்து அவளுக்கு தப்பிக்க கிடைத்த வாய்ப்பு ......அதை தட்டி பறித்து கோடீஸ்வரனின் மனைவி என்று வெளிநாடு சென்றாள் சொர்ணா .உண்மையான அழகு எது ,வாழ்வில் பணத்தை விட எது முக்கியம் என்று வரதராஜனுக்கும் ,அவன் குடும்பத்திற்கும் இரெண்டே நாளில் காட்டி விட்டாள் சொர்ணா .வாழ்கை சில உண்மைகளை தலையில் அடித்து புரிய வைக்கும் போது மனிதன் எழ முடியாது .வரதராஜன் நிலையும் அப்படி தான் ஆகி போனது .

கனகாவிற்கு மரகதம் அவர்கள் சொந்தத்திலேயே நல்லவனாய் ,பணம் இல்லை என்றாலும் நேர்மை ,உழைப்பு ,குணம் இருந்த சேதுபதியை திருமணம் முடித்தார் .ஏழை என்றாலும் சேது கடின உழைப்பாளி .வரதராஜன் போலெ அழகு இல்லையென்றாலும் உழைப்பின் நிமிரவூ சேதுவிற்கு தனி களை கொடுத்து இருந்தது .அதை கண்டு காதல் கொண்டே சேதுவை கரம் பிடித்தார் கனகா.



PENANACE WILL CONTINUE....... தவம் தொடரும்
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 11 தவம் 11
prithviraj-sukumaran__603925.jpg


எல்லாம் நன்றாக போய் இருக்கும் .ஏழை வீட்டு மருமகளாய் ,சேதுவின் மன ராணியாய் உயிர்ப்போடு வாழ்ந்து இருப்பார் கனகா சேதுவின் வீட்டில் .ஆனால் சேதுவின் தயார் உடல் நிலை மோசமாகி ,ஆபரேஷன் செய்ய பணம் தேவை பட்டது ...........தம்பி சங்கரனை படிக்கச் வைக்க பணம் தேவை பட்டது...... .தங்கைகளுக்கு மணம் முடிக்க பணம் தேவை பட்டது .....பணம் ....பணம் ....பணம் ....இது கஜேந்திரனிடம் அள்ள அள்ள குறையாமல் இருந்தது வள்ளலாய் வாரி இறைத்தார் கஜா .

"மாமா ரொம்ப நல்லவர் கனகா ....கேட்காமலே இவளோ உதவி செய்கிறார் .."என்று சேது கண் கலங்க ,அவர் எவ்வளவூ நல்லவர் என்பதையும் ,காரணம் இல்லாமல் ஒத்தை ரூபாய் கூட செலவூ செய்யாதவர் என்று புரிந்த கனகாவும் ,மரகதமும் பயந்து நடுங்கினர் .

விலை இல்லாமல் ஓசியில் கிடைப்பது எதுவுமே இல்லை என்று சேதுவிற்கு புரிய வைக்க பட்டது .கொடுத்த பணத்திற்கு விலையாக "வீட்டோடு மாப்பிளை "இல்லை "வீட்டோடு அடிமை ,வேலைக்காரன்,எடுபுடி என்று சொல்ல வேண்டுமோ அப்படி ஆக்க பட்டார் சேது ..கனகா -சேதுபதியின் சிறகுகள் பிய்க்கப்பட்டன .சேது ஏழை என்பதால் ஒருவித துவேசம் அவர் மேல் கஜாவிற்கு .....குடும்பத்திற்காக பலி கொடுக்க பட்டார் சேது .

திருமணம் நடந்து பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை சொர்ணவிற்கு .இது பிரச்சினை கிளப்பும் என்று தெரிந்தே கனகாவும் பிள்ளை உண்டாவதை தள்ளி போட்டு கொண்டு இருந்தார் .ஆனால் விதி யாரை தான் விட்டது .கனகா தாய் ஆனார் .கனகாவின் மயக்கம் தெளியும் முன்னே ,பிறந்த குழந்தையின் முகத்தை கூட யாருக்கும் காட்டாமல் ,யாரையும் பார்க்க விடாமல் ,யாரிடமும் அனுமதி பெறாமல் அமெரிக்கா தூக்கி சென்று விட்டார் .சொர்ணவால் அவள் குணத்தோடு வெளிநாட்டில் வளர்ந்த அந்த குழந்தை தான் இன்று மதுரா-விஜய் வாழ்வில் விளையாடும் சோனா .

சோனாவிற்கு பனிரெண்டு வயதான போது மீண்டும் தாய் ஆனார் கனகா .இந்த முறையும் பெண் குழந்தை .ஆனால் அந்த குழந்தை மரகதம் ,கனகா ,சேதுபதியின் குணத்தோடு ,அழகோடு வளர்ந்தது .பெயர் அன்னபூரணி ..பி.எஸ்..சி படிக்கும் முதலாம் ஆண்டு படிக்கும் சுட்டி .

வயது வந்த பெண்களுக்கு திருமணம் ஆக போகும் வயதில் கணவனோடு சண்டை போட்டு, டிவோர்ஸ் செய்து விட்டு சோனாவுடன் ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பி இருந்தார் சொர்ணா.

(கப்பல் ஏறி போயாச்சு ...சுத்தமான ஊராச்சு ---விடுதலை விடுதலை -என்று அமெரிக்காவில் பாடும் ஜீவன் சாட்சாத் வரதராஜன் தான் .யப்பா எவ்வளவூ வருடம் கழிச்சி நீ எஸ்கேப் ஆகிட்டே .இங்கு நிறைய பேர் வாழ்வூ போச்சே )

.இவர்களின் வரவூ பலர் வாழ்வில் சனி ஒட்டுமொத்தமாக பிடிக்க காரணமாய் இருந்தது .பலரின் வாழ்வூ அழிந்தது .பலர் வாழ்வு நாசம் ஆனது .அதில் முதல் பலி விஜய் ,அவன் குடும்பம் .

இருவரும் மொத்தமாக வருவது தெரிந்த உடன் மரகதம் ,கனகா ,சேது செய்த முதல் வேளை பூரணியை ஹாஸ்டெலில் விட்டது தான் .இவர்கள் மூவரும் சென்று பார்ப்பார்களே ஒழிய ,பண்டிகை ,நல்ல காரியம் என்று எதற்குமே பூரணியை வீட்டுக்கு அழைப்பது இல்லை .பிசாசுகளின் கண்ணில் இந்த தேவதை பெண் ஏன் பட வேண்டும் ????நடுவே கருணாரனுக்கும் சோனாவிற்கும் திருமணம் நடத்த பட்டது ..சேது போலெ குடும்பத்திற்காக பலி ஆனா மான ,ரோஷம் உள்ள உள்ள இன்னொரு ஆண்மகன் .

சேதுவை அடிமை ஆக்கிய கஜாவோ ,குறி வைத்து மணந்த சோனாவாளோ விஜயை வளைக்க முடியவில்லை என்பது உண்மை .அவன் இரும்பு மனிதனாக இருந்தான் .கற் பாறை போன்றவன் .அவனை இளக்கவோ ,ஓடைக்கவோ அற்ப புழுக்கள் ஆனா கஜா ,சோனாவால் முடியாமல் இன்று வரை திணறி கொண்டு இருந்தனர் .பேரழகி என்று பட்டம் பெற்ற சோனாவை கல்லையும் ,மண்ணையும் பார்ப்பது போலெ தான் பார்த்து வைத்தான் .
(அடேய் யாருப்பா இந்த பிசாசிற்கு அந்த பட்டத்தை கொடுத்து அழகையே கொலை செய்த பைத்தியக்காரன் ...மவனே கையில் சிக்கினே நீ கைமா தாண்டா ....இது பேரழகி .... உள்ளூர் கிழவியாக கூட லாயக்கு இல்லை.குட் ஷாட் விஜய் )

"லுக் மிஸ்டர் கஜேந்திரன் !.....நான் உங்கள் கம்பெனி M .D .அந்த பதவி மட்டுமே என்னுடையது ......திருமணம் என் தங்கையின் மானத்தோடு விளையாடி ,என் தங்கை கழுத்தில் கத்தி வைத்து அவளின் ரத்தத்தில் நடந்தது ....எனக்கும் உங்கள் பேத்திக்கும் நடந்தது திருமணமே அல்ல ,வியாபாரம் ....திருமணத்தை மதிப்பவளாக இருந்தால் திருமாங்கல்யம் கட்டிய அரை மணி நேரத்தில் அதை கழற்றி குப்பை தொட்டியில் போட்டு சென்று இருக்க மாட்டாள் ....திருமண மண்டபத்தில் இருந்து ஒரு வாரம் ஆள் எங்கு இருக்கிறாள் என்றே தெரியாமல் போனாளே -அப்படி போனவள் யாரோடு போனாள் தெரியுமா ....அந்த சுமனோடு ......திருமணத்திற்கு உரிய மரியாதையை எந்த வகையிலும் தராத இவள் எந்த வகையில் என் மனைவி என்று விளக்கி சொல்லுங்கள் பார்க்கலாம் .......வேறு ஏதாவது ட்ரை செய்தீங்க அது யாராக இருந்தாலும் தலையை சீவிட்டு போயிட்டே இருப்பேன் ....'"ன்று எரிமலையாய் பொங்கியவனை பார்த்து சோனா ,சொர்ணா ,கஜா மிரண்டு போனார்கள்
.((((யப்பா .....கருணாகர அப்பவே உன் ருத்ரதாண்டவமா ...கலக்கு ...கலக்கு ...ஸோ ஹாப்பி)))

அதற்குள் அடங்கி விட்டால் அவர் கஜா இல்லையே ,"இப்பவும் உன் குடும்பத்தை அழிக்க என்னால் முடியும் கருணாகரா .....இந்த கஜா மோசமானவன் ."என்றார் வீரப்பாக

அடுத்த நொடி அவர் குரல்வளையை பிடித்து நெறிக்க ஆரம்பித்து இருந்தான் ."செய்யுங்க .செய்து பாருங்கோ என்று தான் சொல்கிறேன் ....இந்த பூச்சாண்டிக்கு பயப்படும் கேனையன் வேறு எவனாவது இருப்பான் .....அவன் கிட்டேயே காட்டுங்கோ ....உங்களை மாதிரி கையில் அழுக்கு படாம வேலை செய்பவன் நான் இல்லை .....என் குடும்பம் இருக்கும் வரை தான் உங்களுக்கு பாதுகாப்பு .அவங்க கையில் சின்ன கீறல் விழுந்தால் கூட உங்க தலைஉங்களுக்கு இல்லை ..... .......நான் உங்கள் மாப்பிள்ளை சேது போன்றவர் இல்லை குட்ட குட்ட குனிய ......நீங்க 10 அடி பாய்ந்தால் நான் 100 அடி முன் பாய்ந்து குதறி விடுவேன் ."என்றவனின் கை அழுத்தம் கூடி கொண்டு போக ,அவனிடம் இருந்து அவரை ஆறு பேர் மிகவும் கஷ்ட பட்டு பிரித்து விட்டனர் .

பெருத்த அவமானம் வீட்டு வேலை ஆட்கள் முன் .சும்மா இருப்பாரா கருணாவின் தம்பி சாகர் (((( ஹை ...கருணா ...........உனக்கு தம்பி கூட இருக்கா ......சூப்பரப்பு;);):D:D:D:love::love::love:)))) சென்ற பைக் ACCIDENT செய்து வைக்க கால் முட்டி சிராய்ப்போடு தப்பித்தான் .ஆனால் அன்று இரவே சோனா ,சொர்ணா ,கஜா சென்ற கார் விபத்துக்குள் உள்ளாகி கை ,கால் உடைந்து நான்கு மாதம் மூவரும் ஹாஸ்பிடலில் கிடந்தனர் .

"என்ன மிஸ்டர் கஜா ....இப்படி ஆகி போச்சுங்களே ...பாவி பசங்க உங்க கால் ,கையை உடைத்து விட்டார்களே "என்று வெகு நக்கலாக ரஜினி வாய்ஸ்இல் சிவாஜி பட டயலாக் விட்டவனை வெட்ட ,குத்தவா என்று முறைத்தார் .

"நீங்க போடும் பிச்சை காசுக்கு காக்கை கூட்டம் வரும் கஜா ....ஆனால் நான் சொல்ல கூட இல்லை ....குடும்பத்தோடு படுக்க வைத்து விட்டார்கள்.....வாய் திறக்காத போதே இப்படி என்றால் நான் வாய் திறந்தால் உங்க உயிர் உங்களது இல்லை ..... "என்றான் விஜய்

அவர் ஹாஸ்பிடல் விட்டு வெளியே வருவதற்குள் மொத்த கஜா இண்டஸ்ட்ரீஸ் இவன் வசம் இருந்தது .குறுக்கு வழியில் அவர் சேர்த்ததை விட 100 மடங்கு நேர் வழியில் நான்கே வருடங்களில் விஜய் சம்பாதித்தான்.அவன் அசுர வளர்ச்சி ,அவன் அறிவூ கஜாவையே உலுக்கி விட்டது .அவன் இல்லை என்றால் 'இந்தர் இண்டஸ்ட்ரீஸ் 'இல்லை என்ற நிலைமை உருவாகி இருந்தது .தொழிலாளிகள் அவன் பக்கம் .அரசு ,அதிகாரிகள் அவன் பக்கம் .அவன் முன் நின்று பேச கூட தயங்கும் நிலைக்கு வந்து விட்டார் கஜா .அதிகமாக யாரிடமும் பேச மாட்டான் .ஆனால் அவனின் ஒரு கூர் பார்வை ஆயிரம் லேசர் கதிர் வீரியத்துடன் ,கூர் வாட்களை போலெ மனதை கிழித்து விடும்

தங்குவதற்கும் ,உண்பதற்கும் 'மன்னன்' பட ரஜினி ஸ்டைலில் தனக்கு மட்டும் பணம் செலுத்தி விடுவான் . அங்கு விஜயசாந்தி ராட்சசியாக இருந்தாலும் திருமாங்கல்யத்திற்கும் ,கட்டிய கணவனுக்கும் உரிய மரியாதையை கொடுத்தாங்க .அதனால் மனைவிக்கும் சேர்த்து ரஜினி பணம் கொடுத்தார் .இங்கு இந்த சோனாவை மனைவி என்றால் மத்த திருமணம் ஆனா பெண்களை அவமதிப்பது போலெ ஆகி விடும் .

உணவூ கூட அவன் அறையில் மட்டுமே சாப்பிடுவான் .அதுவும் மரகதம் ,கனகா பரிமாறினால் மட்டுமே உண்பான் .காலை ஆறு மணிக்கு வெளியே சென்றான் என்றால் நள்ளிரவூ 12 -1 ஆகி விடும் அவன் திரும்ப .இரவூ உணவூ அதிகமா வெளியே தான் இருக்கும் .தொழில் துறை பார்ட்டி ,ஏதாவது FUNCTION என்று அனைத்து இரவும் வெளியே தான் அவன் உணவூ .அந்த வேளையில் மரகதம் ,கனகாவை தொந்தரவூ செய்ய மாட்டான் .ஆனால் அவன் வருகைக்கு மூன்று ஜீவன் தவம் இருக்கும் தினமும் -சேது ,மரகதம் ,கனகா .சொந்த மகன் போலெ பாசம் ,அன்பு கட்டினார்கள் சேதுவும் ,கனகாவும் .மரகததிற்கு அவன் அன்பு பேரன்.

நள்ளிரவூ வேலை முடித்து களைத்து வந்தாலும் அந்த மூவரோடு சற்று நேரம் பேசாமல் உறங்க செல்ல மாட்டான் .சில நாட்கள் மரகதம் ,கனகா மடியில் தலை வைத்து தூங்கியும் விடுவான் .அவனுடன் பேச மழைக்கு ஏங்கும் சாதக பட்சிகள் போலெ மூன்று மாடி வீட்டு---இல்லை இல்லை பங்களா ஏழைகள் அவன் அன்புக்கு தினமும் ஏங்கி கிடந்தன .சொந்த மகள் இவர்களை மனிதர்களாக கூட மதிக்காத போது எங்கிருந்தோ வந்தவன் மகனாகி போனது விசித்திரம் தான் .

சேது 'வீட்டோடு மாப்பிளை ,அடிமை 'என்றால் அதில் உள்ள உள் குத்துக்களை நன்றாக அனுபவித்தவர் ஆயிற்றே ...அதுவும் கஜா போன்ற குள்ள நரி வீட்டு மாப்பிளை என்றால் சுலபமா என்ன !!!!!!தான் அனுபவித்த கேவலங்களை தன் மருமகனாக வந்து மகனாக மாறி இருந்த விஜய் படாமல் அரணாய் நின்று காத்தார் அந்த தந்தை .மனம் ,வயிறு வாடாமல் பார்த்து கொண்டனர் அன்னையர் இருவரும் .

ஆனால் விஜய் சேது போலெ நாணலாய் வளைந்து கொடுப்பவன் இல்லை .அவன் வளைவது அவனுக்கு உரியவர்களிடம் மட்டுமே .அவன் ஆழிப்பேரலை போன்றவன் .எரிமலையின் சீற்றம் ,சூரியனின் கடுமை கொண்டவன் என்பதை சோனா ,சொர்ணா ,கஜாவிற்கு ஒரு வாரத்திலேயே உணர்த்தி விட்டான் .அவனிடம் தெளிவு ,உழைப்பு ,நேர்மை இருந்தது .மதுரா சொன்னது போலெ கம்ப்ளீட் MAN அவன் .

"அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
உச்சி மீது வான் இடிந்து வீழும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
இச்சகத்தில் உள்ளார் எல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
என்று கர்ஜிப்பவன் .

அவனை கண்டு அஞ்ச ஆரம்பித்தது கஜா மட்டும் இல்லை ,ஆசை பட்டு ,சூழ்ச்சி செய்து மணந்த சோனாவின் நிலையும் அது தான் .அவளிடம் இருந்த எதுவும் அவனை கவரவில்லை. பணத்தால் ,சூழ்ச்சியால் அவனை கணவனாய் ஆக்கிய அவளால் அவனை நான்கு வருடங்களாக நெருங்க முடியவில்லை .சினிமாவில் வருவது போலெ அந்த கால ஜெயமாலினி ஆரம்பித்து இந்த காலத்து முமைத் கான் போலெ அரைகுறை ஆடையோடு ஆடி கூட பார்த்தாள் .

நாலு அறை விட்டவன் "உனக்கு பேய் பிடிச்சி இருக்கு ...உங்க சொர்ணவிடம் சொல்லி வேப்பிலை அடிக்க சொல்லு ....இனி என் அறைக்குள் வந்தே அடித்தே கொன்று விடுவேன் .பெண் என்று கூட பார்க்க மாட்டேன் ,மரியாதையை கெட்டு விடும் .....ஓவர் ரா ஆடினே ஆசிட் ஒரே முக்கு முக்கிடுவேன் ....."என்றவன் ஒரு ஸ்கேல் வைத்து அவளை வெளியே தள்ளி விட்டான் .
((((வாட் எ அடி சர்ஜி ....அப்பவே வாங்கிட்டியா சோனா .....அப்பவும் நீ திருந்தலை............உன்னை எதுல தாண்டீ அடிக்கிறது .ஆசிட் ல முக்க போறியா ....குட் ஒர்க் .....முதல அதை செய்மா விஜய்)))


PENANCE WILL CONTINUE....................... தவம் தொடரும்.....................
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையின் எபிசோடுகளை படிப்பவர்களுக்கு நன்றி .உங்களின் ரெகக்னிஷன் பெரிய வரம் .4000 பேர் படிப்பது என்பது beyond தி words ...உங்க அன்பு ,ஆதரவூகு நன்றி

படிப்பவர்கள் தயவூ செய்து கமெண்ட் sectionஇல் உங்கள் கருத்து ,விமர்சனங்களை பதிவூ இடுங்கள்.இல்லைனா டெய்லி நைட் ல பேய் மாதிரி வந்து கனவுல பயமுறுத்துவேன் செல்லம்ஸ்.கொசு படையை விட்டு கடிக்க வைச்சுடுவேன் ...இது எல்லாம் நைட் ல தேவையா மக்கா .....சோ என்ன பண்றீங்க பெரிய மனது வைத்து என் எபிசோடில் கொஞ்சமா பேசிட்டு போய்டுங்க .......என் கதையையே தைரியமா படிச்சிடீங்க ...ஒன்னும் ஆகலை ....சோ 2மின்ட் டைம் ஒதுக்கி விமர்சங்களை பதிவூ இடுங்கள் .....

அங்கு நிறைய பேர் கேள்விகள் கேட்டு உள்ளனர் அதற்கான பதில்களும் பதிவூ இட்டு உள்ளேன்

கதை பிடிக்க வில்லை என்றால் dislike செய்யும் முன் காரணத்தை பதிவூ இடுங்கள் .....காரணம் புரியாமல் ரொம்ப மனம் வருந்துகிறது ..
மீண்டும் நன்றிகள் பல நட்பூஸ் ......கடைசி வரை இந்த பயணத்தில் உங்கள் துணை தேவை .
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM --12
ANI--11.jpg


(SETHU/KANAGA)
நான்கு ஆண்டுகளாய் அவன் அறை இரும்பு கோட்டையாய் என்றுமே திறந்தது இல்லை .வேலைக்கு கிளம்பும் போது கூட பூட்டி சாவியை எடுத்து கொண்டே செல்வான் .(((((பயபுள்ள தெளிவா தான் இருக்கு ....சாரா டார்லிங் உன் கேள்வியே வேஸ்ட் ஆகிடுத்து .....)))))))

சோனா காதல் என்று கூறி திருமணம் செய்தாலும் உண்மையான ,தெய்வீக காதல் எல்லாம் அவன் மேல் இல்லை.
இவள் செய்த அலட்டல் தாளாமல் பார்ட்டி ஒன்றில் விஜய் 'இவளை எல்லாம் எவன் மணப்பான் ....மானம் ,ரோசம் உள்ள இந்த உண்மையான ஆணும் மணக்க முன் வர மாட்டான் 'என்று கோபத்தில் சொல்லி விட அன்றே 'மணந்தால் மகாதேவி இல்லை என்றால் மரணதேவி' என்ற ரேஞ்சுக்கு சபதம் விட்டு ,கஜேந்திரன் மூலமாக சில பல சூழ்ச்சிகள் செய்து ,பணத்தால் விஜய் குடும்பத்தை அடித்து மணந்து இருந்தாள் ....

சில காரணங்களால் விஜய் வாழ்க்கை வெறுத்து இருந்த சமயம் அது.யார் பெண் என்று கூட கேள்வி கேட்காமல் ,பெற்றோரின் வற்புறுத்தலில் சோனாவின் முகத்தை கூட பார்க்காமல் தாலி கட்டி இருந்தான் ...

(((((((ஓ ...இப்படி தான் நீ மாட்டினீயா ....என்னப்பா ஆச்சு உனக்கு ...........சோனாவை மீட் செய்த பிறகு தான் உன் வாழ்க்கை வெறுத்து இருப்பேன்னு பார்த்த ....அதுக்கு முன் ஒரு பிளாஷ் பாக் இருக்கும் போல் இருக்கே ......என்னவா இருக்கும் ??????------(கொஞ்சம் வாய் மூடரியா நீ .......சும்மா சும்மா நொய் நொய் ன்னு பேசிட்டு ..... )ஹனி என்னப்பா நீ ...இதுக்கு எல்லாம் கோவிச்சிகிட்டா எப்படி பா ...சும்மா ஒரு ஆர்வம் தான் ......உன் ஆர்வத்துல தீயை வைக்க)))))

கட்டிய திருமாங்கல்யத்தை அரை மணி நேரத்தில் அவித்து குப்பை குடையில் போட்டு விட்டு சுமனோடு சென்ற ஜென்மம் இவள்(((((உன் கேரக்டர்ருக்கு கட்டிய உடனே இந்த சீன் எதிர்பார்த்தேன் ...பட் அரை மணி நேரம் ....சுமன் வர லேட் ஆகிடுச்சா )))))) பழி வாங்குகிறாளாம் .....சோனாவை பொறுத்த வரை விஜய் அவளின் அடிமை ,அவளிடம் உள்ள பொருட்கள் போலெ விஜய்யும் ஒருவன் .வெளியே காட்டி கொள்ள ஒரு "பொம்மை புருஷன் "ஆறடி இரண்டு அங்குல உயரத்தில் ,கிரேக்க சிறப்பமாய் ,ஆணழகனாய் ,ஆல்பா MALE இருந்தவனை அடையும் வெறி மட்டுமே.அவனை அடக்கி ஆள வேண்டும் என்று தான் அவள் பிளான் போட்டது ....பிளான் எல்லாம் நல்லா தான் போட்டா .ஆனா ரிசல்ட் தான் அவள் நினைத்திற்கு எதிராக இருந்தது .

தங்கைக்காக வளைந்தவன் வேறு எதற்காகவும் வளைய தயாராக இல்லை .இரும்பை நெருப்பால் வளைக்க முடியும் ,புழுவால் வளைக்க முடியுமா ????ஒரு வேளை மற்ற ஜால்ராக்களை போலெ இவனும் குழைந்து இருந்தால் ரெண்டே நாளில் டிவோர்ஸ் செய்து இருப்பாள் .அவனின் ஒதுக்கமே இவளை வெறி ஏற்றி கொண்டு இருந்தது .தோல்வி தோல்வி ....தோல்வியே கண்டு இராதவள் முதன் முறை தோற்று இருந்தாள் .அவன் விலக விலக அவனை அடைந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று இருந்தது .

பிச்சைக்காரன் என்று அவள் கேவலமாக நினைக்க ,உழைப்பால் அவன் இமய மலை போலெ உயர்ந்து கொண்டே போனான் .கஜேந்திரனின் பெயர் மறைந்து விஜய் பெயர் பரவ அதிர்ந்து போனாள் .அவன் சுயம்பு ....தன்னை தானே செதுக்கி கொண்டவன் .....உழைப்பு ,அறிவூ ,மனிதாபிமானம் அவனது மூலதனம்.அவள் தாத்தாவே அவனை கண்டு நடுங்க,இது என்னடா குரங்கு பிடிக்க தான் அவள் நினைத்தது ,அவள் சொல் பேச்சு கேட்டு ஆடும் குரங்கு ...ஆனால் வந்தது என்னவூ பிள்ளையாராக ......ஒரு வேளை சேதுவின் கனகாவாக சோனா இருந்து இருந்தால் விஜய்யும் சோனாவிற்கு கணவனாகி இருப்பானோ என்னவூ ......கையில் கிடைத்திருப்பது கிடைக்கவே முடியாத அறிய வகை ,விலை மதிப்பில்லா வைரம், என்பதை அறியாத குப்பை புத்தி கொண்டவள் போலி கல்லின் பின் அலைந்து கொண்டு இருந்தாள் .

சோனா வளர்ந்த விதம் ,மேல் நாடு வாழ்க்கை முறை ,அந்த நாட்டு கலாச்சாரம் ,குணம் ,பார்ட்டி ,பப் ,போதை ,அளவுக்கு அதிகமான பணம், நண்பர்கள் என்ற பெயரில் துச்சாதனனங்கள் ,ஜால்ரா கூட்டம் என்று அவள் வாழ்க்கை தடம் மாறி போனது .சொர்ணாவின் அகங்காரம் சோனாவின் வாழ்வை நாசத்தை நோக்கி கொண்டு சென்று இருந்தது .மானமுள்ள எந்த ஆணும் ,பெண்ணும் ஏற்று கொள்ள முடியாத வாழ்க்கை முறை அவளுடையது .

அவளை சுற்றி இருந்த அவள் வயது மேல் தட்டு ஆட்களின் வாழ்க்கை முறையும் அது தான் என்னும் போது இது சரி ,இது தவறு என்று அவளுக்கு புரியவில்லை ......தும்மினால் கூட டைவோர்ஸ் என்று வாழும் நபர்கள் நிறைந்த,அதிகமான பர்சனல் space ,பர்சனல் லிபெர்ட்டி உள்ள நாடு.......மூச்சு விடுவது எவ்வளவூ முக்கியமோ அது போல் 'இரவினில் ஆட்டம் , பகலினில் தூக்கம் .....இது தான் எங்கள் உலகம்' என்று வாழும் ஹை டெக் சமுதாயம் .

குழந்தையை தூக்கி சென்ற சொர்ணா தாய் இல்லையா,தாயாக வளர்க்கவில்லையா என்று கேட்டால் அது பேய் .தன்னிடம் இல்லாத ஒன்று குழந்தை ....அதை தனக்கு என்று தூக்கி வந்ததோடு சரி .....தன்னிடம் உள்ள பொருட்களில் அந்த குழந்தையும் ஒன்று ......அதோடு சொர்ணாவின் உறவூ முடிந்து விட்டது ......தாய்ப்பாசம் என்பது எல்லாம் சொர்ணா அறியாத ஒன்று ......கிரிமினல்கள் இவவாறு தான் விதைக்கபடுகிறார்கள்......குழந்தைகள் கண்ணாடி போன்றவர்கள் .எதை பார்க்கிறார்களோ ,எதை கேட்கிறார்களோ அதையே REFLECT செய்பவர்கள் ....

'பிறக்கும் எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே ...அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பிலே 'என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள் ....பெற்றோர் இருந்தும் அனாதையாக ,முறையற்ற நாட்டில் வளர்ந்த பெண் வேறு எப்படி இருப்பாள் ????

.'என்னையா எவனும் கட்ட மாட்டான் ...உன்னையே கட்டி காட்டுகிறேன் என்ற அகம்பாவத்தின் வெளிப்பாடே விஜய் உடன் திருமணம் ....அது நடந்த பிறகு ,சபதத்தில் ஜெயித்த பிறகு விஜய் என்பவன் அவளுக்கு தேவை இல்லை. சொர்ணா எப்படி குழந்தை தனக்கு என்று தூக்கி செல்லும் வரை இருந்தாளோ ,குழந்தை தனக்கு என்று ஆகிவிட்ட பின் எப்படி அதை கண்டு கொள்ள வில்லையோ ,அந்த குணம் சோனாவிடமும் வெளிப்பட்டது.

ஒருவேளை சேது ,கனகா போலெ 'இது நம்ம பண்பாடு இல்லை ,வேண்டாம் மா 'என்று கெஞ்சி இருந்தாலோ ,அதட்டி ,அடித்து இருந்தாலோ கூட சோனாவிற்கு மனம் ஆறி இருக்கும் .

விஜய்யோ 'நான் என்ன இங்கு மறுவாழ்வூ மையமா வைத்து நடத்துகிறேன் ...உன்னை திருத்த ??????உன் வாழ்வூ ...உன் விருப்பம் .....எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை என்னும் போது , .....நீ எப்படி போனால் எனக்கு என்ன ......"என்று இருந்தான் .

"நான் உன் WIFE ......உன் WIFE கண்டவனோடு ஊர் சுற்றுகிறாள் என்று தான் சொல்வார்கள் ..."என்றாள் சோனா விடாமல்

கண்களை அழுந்த மூடி திறந்தவன் ,"நீ .......என் மனைவி இல்லை ...........அதற்கான தகுதி ,தராதரம் உனக்கு என்றுமே இல்லை ......திருமண நாள் அன்றே தாலியை கழற்றி வீசி ,சுமனோடு ஒரு வாரம் சென்ற போதே .......உனக்கும் எனக்கும் இருந்த கணக்கு தீர்ந்து விட்டது... ....மனைவி என்ற எண்ணம் சுமனோடு சென்ற அன்று இல்லையா ????? இந்த தாலிக்காக எமனோடு போராடியவர்கள் ,ஒட்டு மொத்த ஊரையே எரித்தவர்கள்,கல் ஆனாலும் கணவன் ,புல் ஆனாலும் புருஷன் என்று வாழ்பவர்கள் உள்ள நாடு இது மேடம் .... இங்கு நான் சொன்ன புல் விஸ்கி ,பிராந்தி இல்ல மேடம் ...அது எல்லாம் புரிய இந்திய கலாச்சாரம் தெரிந்து இருக்கனும் .ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னத கோட்பாடு தெரிந்து இருக்கனும் .....நம்மளுக்கு எங்கே அது எல்லாம் தெரிய போகுது .எங்கே எந்த ரேவ் ,பார்ட்டி ,ட்ரக்ஸ் ன்னு அலையும் உன்னை போல் ஆளுகளுக்கு இதஹு எல்லாம் பைத்தியக்காரத்தனம் ....உன் லைப் ஸ்டைல் வேறு ....என் கோட்பாடு வேறு............இது வரை யாரும் என்னிடம் வந்து உன்னை பற்றி கூறியது இல்லை .....அப்படியே வந்து சொன்னாலும் அதை கேட்க எனக்கு நேரமும் இல்லை .....குப்பையான விசயத்திற்கு எல்லாம் என்னால் டைம் ஒத்துக்க முடியாது ......அந்த மடத்தனத்தை செய்யும் ஆள் நான் இல்லை ......சும்மா எமோஷனல் பிளாக்மெயில் செய்யலாம் என்று கனவூ காணாதே ......இளிச்சவாயன் வேறு எவனாது கிடைப்பான் .....மூவ் அவுட் OF மை வே .."என்றவன் தோளை குலுக்கி விட்டு சென்று விட்டான் .

அவனை எப்படியுமே நெருங்க முடியாமல்,வீழ்த்த முடியாமல் ,தான் போட்ட அனைத்து பிளான்களும் சொதப்பி விட ,நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்தவளுக்கு இரு நியூஸ் கிடைத்தது .உச்சகட்ட அதிர்ச்சி.அந்த இரண்டில் ஒன்று மூலமாய் அந்த இரும்பு கோட்டையையே தூள் தூளாக்கி ,விஜயை கதற வைக்க விபரீதமான திட்டங்கள் உருவானது .அதன் ஒரு கட்டமாய் சித்தப்பாவிடம் அழுது ,கதறி ,நாடகமாடி ,மதுராக்ஷியை குன்னூரில் இருந்து சென்னைக்கு வரவழைத்து ,விஜயின் பி .ஏ ஆக்கியது .

அந்தோ பரிதாபம் சோனாவின் கணக்கு படி எதுவுமே நடக்கவில்லை .விஜய் நார்த் போல் (POLE )என்றால் மதுரா சவுத் போல் ஆகா இருந்தாள் .இரண்டு பேரும் முட்டி கொண்டார்களே ஒழிய அவள் எதிர்பாத்த ரியாக்ஷன் கிடைக்கவே இல்லை.மதுராவிற்கு விஜய் மேலோ ,விஜய்க்கு மதுரா மேலோ லவ் வரவில்லை ....அவளுக்காக இவனோ ,இவனுக்காக அவளோ துடிக்கவில்லை.:oops::oops::oops:o_Oo_O

"அக்கா ....உங்க முகத்துக்காக பார்க்கிறேன் .....மனுசனா உங்க வீட்டுக்காரர் .....இப்படி எதுக்கு எடுத்தாலும் குற்றம் சொல்றார் ."என்று பலமுறை மதுரா வேலையும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்று கிளம்ப நினைக்க ,மதுராவை வேலையில் நிறுத்தி வைப்பதற்குள் சோனாவிற்கு தலை சுற்றி விட்டது .

போட்ட திட்டம் தவிடு போடி ஆகி விட ,விஜயயை விட்டு விட்டு மதுராவை டார்கெட் செய்தாள் சோனா .தனக்காக துடிக்கவில்லை என்றாலும் மதுராவிற்காக அவனிடம் இருந்து ரியாக்ஷன் எதிர் பார்த்தாள் .அதன் முதல் படி இ .சி .ஆர் பங்களா விற்கு மதுராவை வரவழைத்து தோழிகளுடன் சேர்ந்து குதறி எடுத்து ,அவளின் யோசிக்கும் திறனை குறைத்து ,குழப்பி விட்டது .குழப்பி விட்டு நள்ளிரவில் தனியாக மதுராவை வெளியேற்றியது.

பெண் பித்து பிடித்து அலையும் சுமனிடம் இவளை பற்றி கூறி ,மதுராவை அடையும் வெறி ஏற்றி இருந்தாள் .
மதுராவின் கொள்ளை அழகு சுமனை திக்குமுக்காட வைத்தது .போட்டோவை பார்த்தே மூளை கலங்கி போனவன் ,மதுராவை நேரில் பார்த்து பித்தாகி போனான் ....எந்த வழியில்லாவது மதுராவை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம் ஒவொவொரு நொடியும் அதிகரித்து அந்த அரக்கனை மேலும் கொடியவனாக்கி இருந்தது .....((((பெண்ணின் மானம் என்றவுடன் அதற்காகவாது விஜய் துடிப்பான் என்று எதிர்பார்கிறாளோ)))

மதுராவை சுமனிடம் மாட்டி விட்டு ,தன் மேல் எந்த பழியும் வர கூடாது என்று செக்யூரிட்டி கேமராவில் தான் மட்டும் தன் தோழிகளுடன் கிளம்பி செல்வதை தேதி ,நேரத்தோடு பதிய வைத்தாள் .யாராவது விசாரித்தால் கூட தான் அங்கு இல்லை என்ற ஆதாரம் உருவாக்கி இருந்தாள்::eek::eek::eek::eek:.ஆனால் வெளியே இவள் திட்ட படி சுமன் சோனாவை கடத்த கத்தி ,மயக்க மருந்து உடன் காத்து இருந்தான் .காத்து இருந்த நேரத்தில் தான் விஜய் தன் ஆள் மூலம் கொடுத்து அனுப்பி இருந்த தூக்க மருந்து கலந்த ஆல்கஹால்,சோனா கொடுத்து அனுப்பியது என்று நினைத்து குடித்து விட்டு மதுராவை பிடிக்க முடியாமல் ,விஜய் ஆட்களால் கயிறு மூலம் குழியில் விழ வைக்க பட்டான் .

PENANCE WILL CONTINUE................. தவம் தொடரும்....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 13 தவம் 13

விஜய் அவனை பந்தாடியதையோ ,சுமனின் உயிரை காப்பாற்ற ஆல்வினும் ,சேதுவும் எவ்வளவூ போராட வேண்டி இருந்தது என்று சோனாவிற்கு தெரியாது. ஆல்வின் அவன் கை கால் உடைத்து கொல்கத்தா சதுப்பு நில காட்டிற்கு பார்சல் செய்ய பட்டான் .இது எதுவும் தெரியாத சோனா ,மதுரா அந்நேரம் சுமனிடம் மாட்டி சின்னாபின்னமாகி இருப்பாள் என்று வானத்தில் உயர பறந்து கொண்டு இருந்தாள் .இவளவூ பாவகரமான செயலை ஒரு பெண்ணாய் இருந்து இன்னொரு பெண்ணுக்கு செய்து விட்டு ..எதுவுமே நடக்காதது போலெ அரை குறை ஆடையுடன் விஜயயை கவர போஸ் கொடுப்பது சோனா என்ற அரக்கியால் மட்டுமே முடிய கூடியது .

தன் விசாரணையை அரம்பித்தார் கஜேந்திரன் .

"எங்கே இருந்தீங்க ?"என்றார் தன் வெண்கல குரலில் .

"ஹா "என்று வந்த கொட்டாவியை வெகு சத்தமாக விட்டு ,ஒரு விரலால் காதை குடைய ஆரம்பித்தான் ......'நீ என்ன என்னை கேள்வி கேட்பது என்ற மறைமுக நக்கலும் ,உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும் அவசியம் எனக்கு இல்லை ."என்ற ஏளனமும் விஜயின் செயலில் இருந்தது .

"எங்கே இருந்தீங்க "மறுபடியும் கஜா கேள்வி ஆரம்பமானது .

பதில் கிடைக்காமல் அவர் விட போவதில்லை என்று புரிந்து விட ,சேது விஜய்க்கு கண்களால் சைகை காட்டி ,பேசாமல் இருக்க சொன்னார் .சேதுவின் கெஞ்சலுக்கு தோளை மட்டும் குலுக்கி விட்டு நின்றான் விஜய் .அத்தனை அலட்சியம் ,தோரணை அவன் கைகளை முன் புறம் கட்டி ,கால்களை அகல விரித்து நின்ற விதம்.
(யப்பா ......நிற்கற விதமே மனசை கிள்ளுதே .....உனக்கு situation சாங் டெடிகேட் செய்யலைன்னா ஆல் ரசகுல்லாஸ் அப்செட் ஆகிடும்.ஸோ உனக்கான சாங் .......அழகு ....அழகு.....நீ நடந்தால் நடை அழகு .....நீ சிரித்தால் சிரிப்பு அழகு ....நீ பேசும் தமிழ் அழகு .........நீ ஒருவன் தான் அழகு ..............ஆல் வாட்டர் பால்ஸ் கிளோஸ் ....)

"ஆபீஸ் ல இருந்தோம் "என்றார் சேது .

"அதை எதற்காக நீங்க கேட்கறீங்க கஜேந்திரன் .....இது சுதந்திர நாடு .....யார் எங்கே வேண்டுமானாலும் போகலாம் ,வரலாம் என்று கடைசியாக பார்த்த போது சட்டம் சொன்னது ....ஒரு வேளை ஆபீஸ் விட்டு இங்கு வருவதற்குள் அது மாறி போச்சா ??????"என்றான் விஜய் வெகு நக்கலாக

"கேட்டதற்க்கு பதில் "என்று ஏறக்குறைய கத்தினார் கஜா .

"வீட்டில் வெட்டியா வேலை செய்யாம ,தின்று தின்று பெருத்து போன உங்களிடம் ,காலை முதல் நள்ளிரவூ வரை 1000 வேலை செய்து விட்டு வந்து அட்டெண்டன்ஸ் அண்ட் ரிப்போர்ட் கொடுக்க முடியாது .......அப்பா !!!அம்மா காத்து இருப்பாங்க ...டைம் ஆச்சு ....போய் சாப்பிடுங்க ...நான் ரெப்பிரேஷ் ஆகிட்டு வரேன் ."என்றான் விஜய் (சபாஷ் சரியான போட்டி )

"சேதுபதி !ஆஃபிஸில் என்ன வேலை ?"என்று உறுமினார் கஜா
(யப்பா .காது கிழிஞ்சு போச்சு ...ஆமா இது அது இல்லே :oops::oops::oops:....காரில் விஜய் ,சேது ஒத்திகை பார்த்த டயலாக் ஆச்சே ......விஜய் இந்த அளவுக்கா இவங்களை நீ புரிஞ்சி வைச்சு இருக்கே))

"புது ஆர்டர் சீனாவில் இருந்து வந்து இருக்கு .அங்கு இருந்து டெலிகேட்ஸ் அடுத்த வாரம் வராங்க ...உங்க தொழிலில் முதலீடு செய்து பிசினஸ் பார்ட்னர் ஆகும் ஆசையும் இருக்காம் ..."என்றார் சேது .

"அதற்கு ஏன் இவ்வளவூ நேரம் ?'என்றார் கஜா
(சப்பா ....முடியலை ...விஜய் சரியாத்தான் சொன்னே ....சி.ஐ .ஏ இன்வெஸ்டிகஷன் ன்னு ....யோவ் ...நைட் ரெண்டு மணிக்கு பசியோடு வந்து இருக்கறவங்களை சாப்பிட கூட விடாமல் ...)

"வீடியோ கானபெரென்ஸ் பேசினோம் .....கோடி கணக்கில் இன்வெஸ்ட் செய்ய போவதால் துருவி துருவி கேள்வி கேட்டாங்க ....டைம் டிபரன்ஸ் ரெண்டு நாட்டுக்கும் இருக்கே ...வெயிட் செய்ய வேண்டியது ஆகி விட்டது ...."என்றார் சேது .(பாவம் பா நீ )

"ஆஃபிஸில் இல்லையே ......செக்யூரிட்டி செக் செய்தாங்களே ......"என்றார் கஜா ஊடுருவூம் பார்வையோடு (கிழவா ...tooo மச் சா போறே ....உடம்புக்கு நல்லது இல்லை ......விஜய் பத்தி தெரியாம பேசுறே ....அடங்கு ))))

"செக்யூரிட்டி அடிக்கடி வந்து போனான் ...ஒருவேளை 'வெற்றி குரூப்ஸ் 'உளவாளி என்று நினைத்தோம் .நுங்கம்பாக்கம் கெஸ்ட் ஹௌஸ்க்கு போயிட்டோம் ...ஆடிட்டர் பாஷ்யம் சார் கூட இருந்தார் ."என்றான் விஜய்

'வெற்றி குரூப்ஸ் 'இந்த இரு வார்த்தை கஜாவிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.கால் மேல் கால் போட்டு ,தெனாவட்டாக தாடியை வருடியவாறு கேள்வி கேட்டு கொண்டு இருந்தவர் மகுடிக்கு மயங்கிய நாகம் போல் சட்டென்று அடக்கினார் ...

((:))oops::oops::oops:அட என்னடா நடக்குது இங்கே ...இவ்வளவூ நேரம் ஹை பிச்சில் கத்தி கொண்டு இருந்தவரா இது ......வெற்றி குரூப்ஸ் --காரிலேயே 'வெற்றி குரூப்ஸ் 'உளவாளி என்று செக்யூரிட்டி பற்றி நினைத்தாக சேது டயலாக் ஒப்பித்தார்.யாருப்பா இவங்க நியூ என்ட்ரி ....அந்த பெயரை கேட்டு இந்த கிழம் ஏன் மெர்சல் ஆகுது ?)))

"சரி ....சரி ...போங்க ....."என்றவர் துண்டை காணோம் ...ஹே ஹே ஹே துணியை காணோம் என்ற range க்கு ஓடி தன் அறை கதவை சாத்தி கொண்டார் .
(விஜய் ! என்னப்பா செஞ்சே ...கிழம் இப்படி பேய் படம் பார்த்த மாதிரி ஓடுது ....எப்படி கண்ணா எல்லா பால் சிக்ஸர் அடிக்கறேயே நீ (y)(y)(y))))

'வல்லவனுக்கு வல்லவன் இவையகத்தில் உண்டு' தான் போலும் .கஜேந்திரன் என்ற மதம் பிடித்த யானையை அடக்க விஜய் என்ற அங்குசத்தோடு ,'வெற்றி குரூப்ஸ்ஸின் 'வெற்றிமாறனும் ,அவர் மகன் ருத்ரமாறனும் யானை பாகர்களாக சேர்ந்து இருந்தனர் .

'வினை விதைத்தவன் வினை அறுப்பான் 'என்ற பழமொழிக்கு உதாரணமாய் ,அவர் செய்த பாவம் 'வெற்றி குரூப்ஸ்சாய்'வளர்ந்து இருந்தது -'இந்தர் இண்டஸ்ட்ரீஸ்க்கு போட்டியாக

"நீயும் நானுமா ......கண்ணா ....நீயும் நானுமா "என்று பித்து பிடித்து கஜேந்திரன் படாத குறை .ஏனென்றால் வெற்றிமாறன் அவர் மகன் .ருத்ரமாறன் அவர் பேரன் .நடுத்தெருவில் கர்ப்பிணியாக கை விடப்பட்ட சிவகாமியின் ரத்தம் அவர்கள் .தாய்க்கு நடந்த அநீதிக்கு ,நியாயம் கேட்கவில்லை ..தண்டனை கொடுத்து கொண்டு இருந்தனர் அந்த ஆண் வேங்கைகள் இருவரும் .

"மன்னனின் கெளரவம் சதுரங்கம் நடுவிலே .....மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே"என்று கஜாவின் அனைத்து தொழிலுக்கும் போட்டியாக நின்றது 'வெற்றி குரூப்ஸ் '.

வெற்றி மாறனை சேது போலெ அப்பிராணி என்று நினைத்து பார்ட்டி ஒன்றில் கஜா வாய் விட்டார் .வெற்றி என்ன சேதுபதியா ---கனகவிற்காகவும் ,மரகத்திற்காகவும் பொறுத்து போக ?????சட்டென்று கத்தியை கஜாவின் கழுத்தில் வைத்து அழுத்தி விட்டார் .அவர் மகன்,கஜாவின் பேரன் ருத்ராவோ துப்பாக்கியை கஜாவின் நெற்றி பொட்டில் வைத்து சேப்டி லாக் வேறு ரிலீஸ் செய்தான் .அந்த கண்கொள்ளா காட்சி யூடூப்பில் ,வாட்ஸாப்பில் வைரல்லாய் பரவியது .10 லட்சம் லைக்ஸ் வேறு .......விஜய்யாவது பேச்சோடு நிறுத்தி கொண்டான் ....வெற்றிக்கும் ,ருத்ராவுக்கும் அப்படி எல்லாம் எந்த சென்டிமென்டும் இல்லை.வெற்றி கொடுத்த அழுத்தத்தில் அவர் கழுத்தில் இருந்து ரத்தமே கசிய தொடங்கியது :eek::eek::eek::LOL::LOL:

அந்த வீடியோவை வைத்து இருவரையும் உள்ளே தள்ள -அட்டெம்ப்ட் murder என்று உள்ளே தள்ள முயன்றால் ,எப்பொழுதோ போதையில் இவர் chief மினிஸ்டர்ரை போட்டு தள்ள வேண்டும் என்று உளறி சபதம் எடுத்த வீடியோ இவர் கைக்கு அனுப்ப பட்டது .கஜா ஒரு அடி வைத்தால் ,விஜய் போலவே இவர்கள் 100 அடி முன் இருந்தார்கள் .ரவுண்டு கட்டி விஜயோடு சேர்ந்து இவரை அடிக்க ஆரம்பித்து இருந்தனர். இவர்களின் பின் யார் இருக்கிறார்கள் ,யார் இவர்களின் முதுகெலும்பு என்று புரியாமல் இன்றளவும் அவர் மண்டை காய்ந்து வருகிறார் .அது விஜய் என்பதோ ,விஜயோடு சேர்ந்து இன்னும் ஒருவர் என்பதோ அவருக்கு தெரியவில்லை .மதுராவை எப்படி பின் இருந்தே காப்பாற்றுகிறானோ அதே போல் வெற்றி குரூப்ஸ் பின்னால் இருப்பவன் விஜய் .எங்குமே அவன் தன்னை வெளிக்காட்டி கொள்ள முயலவில்லை .

"வேணா ....வலிக்குது ....அழுதுடுவேன் ....." என்று வடிவேலு ரேஞ்சுக்கு ஆக்கப்பட்டு இருந்தார் .இவர் தான் பல எதிரிகளை இத்தனை வருடங்களில் சம்பாதித்து இருந்தாரே .இவரால் பாதிக்க பட்டவர்கள் வெற்றி குரூப்ஸ் பின் நின்றார்கள் .ரியல் எஸ்டேட் ,நகை கடை ,சிமெண்ட் தொழிற்சாலை ,ஹோட்டல் ,ரெஸ்டாரண்ட் ,ரிசார்ட்கள் என்று இவரின் ஒவ்வொரு தொழிலும் அடி வாங்க ஆரம்பித்து இருந்தது .விஜய் புண்ணியத்தில் 'இந்தர் இண்டஸ்ட்ரீஸ் " ஆடையாக ஏற்றுமதி தொழில் மட்டும் தப்பித்து நன்றாக போய் கொண்டு இருந்தது .கஜா நஷ்டத்தில் விற்கும் தொழில்களை வாங்குவது வெற்றி குரூப்ஸ் .ஒவ்வொரு முறையும் இவர் தொழிலை அடிமாட்டு விலைக்கு விற்பார் .அதை முன் பின் அவர் கேள்விப்படாத ஒரு கம்பெனி வாங்கும் .ஆனால் மறுநாளே அந்த கம்பெனியையும் சேர்த்து வெற்றி வாங்கிவிட்டதாக நியூஸ் வரும் .போலி கம்பெனி உருவாக்க பட்டு ,இரவோடு இரவாக அவை லீகல் ஆக்க பட்டு ,கஜாவின் தொழிலை வாங்கிய பின் ,இரு கம்பெனிகளையும் விழுங்குவது வெற்றி குரூப்ஸ் என்ற தொழில் முதலை .

அடி மேல் அடி .நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் .கடன் மேல் கடன் .பின் பெருமைக்கு எருமை மேய்த்தால் ...???/10-20 கார் ,20 வேலைக்காரர்கள் ,தினமும் ஏதாவது பார்ட்டி ,புது புது டிரஸ்,paintings , என்று வரவுக்கு மேல் செலவூ செய்து கொண்டு இருந்தால் -குடும்பத்தில் ஒருவர் ஊதாரியாக இருந்தாலே விளங்கிடும் ....இவர்கள் வீட்டில் ஒன்றுக்கு மூன்று பேர் அல்லவா இருந்தார்கள் .குந்தி தின்றால் குன்றும் மாலும் என்று இவர்களுக்கு யார் சொல்வது ????சொன்னாலும் கேட்டு கொண்டு தான் மறுவேலை பார்ப்பார்கள்

அவர் பெரிதும் நம்பி இருப்பது விஜய் நடத்தும் 'இந்தர் இண்டஸ்ட்ரீஸ் 'ஏற்றுமதி ஆடையகத்தை தான் .வெளிநாட்டு இந்திய வம்சாவளி பெரும் பணக்காரர்களுக்கு விலை உயர்ந்த கோட் ,suit ,போர்மல்ஸ் ,designer ஷெர்வானி ,குர்தா ,சாரீஸ் என்று டிசைன் செய்து ,நெய்து விருப்பத்திற்கு ஏற்ப wardrobe ,திருமணங்களுக்கு bulk ஆர்டர் செய்து தருவார்கள் .கோடிகளில் புரளும் தொழில் .விஜய் பொறுப்பு ஏற்ற உடன் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி கொண்டு இருந்தது .விஜய்யால் அவன் திறமையால் ஏற்றுமதி விரிவாக்கம் அடைந்து ,லாபம் வருவது என்னமோ உண்மை தான் என்றாலும் கஜாவின் மனம் சில வருடங்களாக சரியாக இல்லை .

வரும் ஆர்டர் எல்லாம் கை நழுவி சிவா கார்மெண்ட்ஸ்க்கு போய் கொண்டு இருந்தது .விஜய் இல்லை என்றால் ,எப்பொழுதோ இதுவும் கோவிந்தா கோவிந்தா தான் .சிவகாமியின் குடும்பத்தை பற்றி டிடெக்ட்டிவ் மூலம் அவர் அறிந்த தகவல் எதுவும் அவர் மனதுக்கு சந்தோசம் அளிக்கவில்லை .இவர் மரகதத்தை மணந்த காரணம் காட்டி ,சிவகாமி ஏற்கனவே டைவோர்ஸ் பெற்று ,வேறு திருமணம் செய்து இருந்தார் .பின் இவருக்காக நளாயினி மாதிரி கூடை சுமக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாரோ .....பணத்திற்காக நடுத்தெருவில் கை விட பட்டவர் இன்று பல கோடி வருமானம் வரும் 'வெற்றி குரூப்ஸ் 'முதலாளி .கஜாவை விட பல படி உயரத்தில் மின்னி கொண்டு இருந்தார் .உழைப்பு ,நேர்மையில் ராணியின் தோரணையோடு கணவர் ஆதிகேசன் ,மகன் வெற்றி,ராம் ,மருமகள் சுசீலா,தாரணி ,பேரன் ருத்ரா,பேத்தி அம்சவேணி என்று அனைவரும் பல் தொழில் வல்லுனர்களாக வெற்றி மேல் வெற்றி பெற்று கொண்டு இருந்தனர் .முக்கியமாக கஜாவை வென்று கொண்டே இருந்தனர் .

penance will continue......................... தவம் தொடரும்...........
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 14 தவம் 14

இந்தியாவின் சிறந்த 'பெண் தொழில் அதிபர் ' என்ற விருது வேறு .இந்தியாவில் மட்டும் அல்ல உலக அளவில் பெயர் பெற ஆரம்பித்து இருந்தார் சிவகாமி .இன்று மட்டும் அல்ல 10-12 வருடங்களாக சிவகாமியின் குடும்பத்தை ,அவர் வெற்றிகளை கேள்விப்பட ஆரம்பித்ததில் இருந்து அவர் சரியாய் உறங்கியது இல்லை .தான் கை விட்டவள் தன்னையே வெல்வதா என்ற வெறி ,கோபம் ,எரிச்சல்,அவமானம் .சிவகாமி ஏதோ ஒரு மூலையில் பிச்சைக்காரியாக இருந்து இருந்தால் கூட மனம் ஆறி இருக்கும் . இரண்டாம் மணம் புரிந்து கணவனோடு சந்தோசமாக வாழ்வதை இவரால் ஜீரணிக்க முடியவில்லை
(ஒரு டன் ஜெலுசில் பார்சல் ))

இவர் அவர்களுக்கு எதிராக எது செய்தாலும் 10 மடங்காக இவருக்கே திருப்பி வந்தது .ஐ .டி ரைட் ,கார் விபத்து ,தொழில்சாலைகளில் தீ ,மெஷின் விபத்து எது இவர் நடத்தினாலும் அடுத்த நாள் அது இவருக்கு நடக்க ஆரம்பித்தது .அவரின் எந்த குள்ளநரி தனமும் ,குறுக்கு வழியும் அவர்களிடம் எடுபடவில்லை .B .P ,சுகர் ,ஹைப்பர்டென்ஷன் ,இதய வலி என்று சாக்லேட் சாப்பிடுவது போலெ மாத்திரைகளை விழுங்க ஆரம்பித்து இருந்தார் .சிவகாமியின் நிமிரவூ ,அவரது திருமணம் ,மகிழ்ச்சியான வாழ்வூ இவருக்கு மன நோயினை கொடுத்து விட்டது .

இவர் இப்படி தான் அறையில் தவிக்க ,சொர்ணா அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ,சோனா மறுநாள் சுமனிடம் இருந்து வரும் நல்ல செய்திக்காக காத்து இருக்க ,இது எதை பற்றியும் கவலை படாமல் விஜய் அறையில் சேது ,கனகா ,மரகதம் உணவூ அருந்தி கொண்டு இருந்தனர் .

கனகாவை கண்டதும் சேதுவின் முகம் தானாக காதலில் கனிந்தது .வயது ஏறிய போதும் கூட அவர்களின் காதல் குறையவில்லை .கணவரின் கண்களில் கண்ட காதலில் கனகா அந்த வயதிலும் மிக அழகாக வெட்கபட்டார் .

"வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் .....
ஆனாலும் அன்பு மாறாதது ....
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்ற சொல்லை அறியாதது .....
அழகான மனைவி ....அன்பான துணைவி ...
அமைந்தாலே பேரின்பமே ......
.என்ற அழகான காவியம் அங்கு உருவாகி இருந்தது .

மரகதம் தன் மாப்பிள்ளையின் கண்களில் தன் மகளுக்கான காதலை கண்டு நிறைவாக புன்னகைத்தார் .அதை கண்டும் காணாமல் பார்த்து உணவூ சாப்பிட்டு கொண்டு இருந்த இருந்த விஜய் சட்டென்று வெளியே வெறிக்க ஆரம்பித்தான் .ஏதேதோ நினைவுகள் அவனை அலைக்கழிக்க அவன் தவிக்க ஆரம்பித்தான் .

கண்கள் தானாக கலங்க ,வேக மூச்சுக்கலை எடுத்து தன்னை சமாளிக்க முயன்றான் .அவன் துடிப்பது அங்கு இருந்தவர்களுக்கு புரியாமல் இல்லை .ஆனால் அவர்களால் மட்டும் என்ன செய்து விட முடியும் .அவர்கள் இருப்பது புதைகுழி .அவர்களால் முடிந்த அளவூ அவனை சேதாரம் இல்லாமல் காப்பாற்றி கொண்டு தான் இருந்தனர் .ஆனால் வலி அவன் மனதிற்குள் இருப்பதாயிற்றே ....

"என்ன ....இன்னைக்கு பேஷன் ஷோ ஹாலில் உங்களுக்காக நடந்தது போலெ இருக்கே சேது ..."என்றார் கனகா மகனை மீட்டு எடுக்கும் விதமாக

"ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி என் பொண்டாட்டி .....ஜோடி சேர்க்கிறது தான் சேர்த்தே ஒரு சமந்தா ,நயன்தாரா ன்னு சேர்க்கறதை விட்டு அந்த ராட்சசி கிட்டே கோர்த்து விடறே ....என்ன பாவம் டீ செஞ்சேன் உனக்கு ????"என்று அலறாத குறையாக கூறினார் சேது

"பாரு கண்ணா ..உங்க அப்பாக்கு சமந்தா ,நயன்தாரா கேக்குதாம் ......நீ டிக்கெட் புக் பண்ணு நான் எங்கம்மா வீட்டுக்கு கிளம்பறேன் "என்றார் கனகா .

"மாம்ஸ் ...நீங்க இருப்பதே உங்க மம்மி வீடு தான் ...வேணும்னா அப்பாக்கு சொர்ணா கூட marriage செய்து அமெரிக்கா அனுப்பிடலாம் .....உங்களுக்கு நான் ஹிருத்திக் ,மகேஷ் பாபு போலெ பையனை பார்த்து கட்டி வைக்கிறேன் ....டாடி ......எப்போ வைச்சுக்கலாம் marriage .பொண்ணு ரேடியோ ரெடி ..."என்றான் விஜய் வாய் விட்டு சிரித்தவாறு

அவன் சிரிப்பதை மற்ற மூவரும் பெருமூச்சோடு பார்த்து கொண்டு இருந்தனர் ."நீ இப்படியே சிரித்துட்டு இரு கண்ணா .....நீ கலங்கினால் மனசுக்கு கஷ்டமா இருக்கு கண்ணா ...."என்றார் மரகதம்.

"அது ஒன்றும் இல்லை பாட்டி ....அதை விடுங்க ....ஐ ஆம் ஆல்ரைட் .......எத்தனை தடவை சொல்லி இருக்கேன் ....இப்படி எனக்காக நள்ளிரவில் கண் விழிக்க வேண்டாம் என்று ....உடல் என்னாவது ...நாங்கள் திரும்ப முன்ன ,பின்ன ஆகலாம் .இப்படி எங்களுக்குகாக சாப்பிடாமல் ,உறங்காமல் இருந்தால் உடல் என்ன ஆவது ??'தன்னை குறித்து அவர்கள் வருந்துவது பிடிக்காமல் பேச்சை மாற்றி விட்டான்

சோனா தர தவறிய அன்பை மருமகனாய் வந்து மகனாய் மாறி இருந்தவனின் செய்கையில் கண்ட உடன் கண் கலங்கியது அன்னையர் இருவருக்கும் .

"ஒரு நாள் கண் விழித்தால் ஒன்றும் ஆகி விடாது கண்ணப்பா ....கனகா பிள்ளைக்கு இன்னொரு இட்லி வை ."என்ற மரகதம் சட்டென்று பார்க்க அந்த காலத்து நடிகை பத்மினி போலெ இருந்தார் .கையெடுத்து கும்பிட தோன்றும் தெய்வீகம் .இவரிடமும் ராணிக்கு உண்டான கம்பீரம் ,கருணை ,பாசம் ,கனிவூ இருந்தது .

மொத்தத்தில் இரு நல்ல பெண்மணிகளின் வாழ்வை கணவனாகி அழித்து இருந்தார் கஜா .நால்வரும் சாப்பிட்டு முடித்ததும் கனகா பாத்திரங்களை வெளியே வைக்கும் சாக்கில் வெளியே யாராவது இருக்கிறார்களா என்று சோதித்து விட்டு கதவை உள்புறம் பூட்டினர் ...அதற்குள் மற்றவர்கள் பால்கனிக்கு சென்று அமர்ந்தனர்

"சொல்லு கண்ணா ...என்ன ஆச்சு ...என்றும் இல்லாமல் இன்று ஏன் எவ்வளவூ நேரம் ?"என்றார் மரகதம் .

நடந்த அனைத்தையும் அவர்களிடம் சொன்னான் விஜய்

"சே சே ...பெண்ணா அது ...பேய் .....வெளிநாட்டில் சுற்றியதுகள் அங்கேயே கிடக்க வேண்டியது தானே .....இங்கே வந்து எதற்காக இத்தனை பேர் உயிரை எடுக்குதுங்களோ தெரியலையே .....இவள்களால் என் பூரணி செல்லத்தையும் அல்லவா பிரிந்து தவிக்கிறோம் ...இவளுகளும் வாழ மாட்டாங்க ...மற்றவர்களையும் வாழ விட மாட்டார்கள் .....சாக்கடை புத்தி ......அந்த மதுரா பெண் கிட்டே போய் இப்படி எல்லாம் பேசி வச்சு இருக்கே ....குழந்தை எப்படி துடித்தாளோ "என்று பொரிந்தார் மரகதம் .

"கேட்கும் நமக்கே நெஞ்சு பதறுதே ....பாவம் கண்ணா மதுரா ......"என்றார் கனகா

"அம்மா !நீங்க நினைக்கிற படி அவள் கொஞ்ச நேரம் தான் தடுமாறினா ....அதற்கு பிறகு கண்கொள்ளா காட்சி தான் ...இதோ பாருங்க "என்றவன் மதுரா சோனாவை வெளுத்து வாங்கியதை வீடியோ எடுத்து வைத்து இருந்தான்
.(அப்போ நீ அங்கே பங்களா உள்ளே தான் இருந்தீயா ...இது தெரியாம ஹீரோ எப்போ வருவார் ன்னு கேட்டு இல்லே ஹனியை கடுப்பு ஏத்திட்டு இருந்தேன் )

அதை பார்த்த அன்னையர் இருவரின் முகம் புன்னகையில் மலர்ந்தது .

"இது முன்பே தெரிந்து இருந்தால் பாயசம் செய்து இருப்பேனே ....அப்பா என்னா கோபம் .....இது போலெ போறவங்க வரவங்க எல்லாம் நாலு சாத்து சத்தினால் தான் திருந்துங்க "என்றார் கனகா

"கனகா !இன்னுமா இவங்க திருந்துவாங்க என்று பகல் கனவூ கண்டுட்டு இருக்கே நீ .....நல்லவளா இரு ......வேண்டாம் என்களை .......அதற்காக இவளவூ நல்லவளா இருந்து தொலைக்காதே ......உன் பாசத்திற்கு தகுதி சோனாவிற்கு இல்லை ......அது விஷப்பாம்பு ......இன்னும் கருணா வாழ்வூ பாழாய் போகணுமா ....."என்றார் மரகதம்

"கரெக்டா சொன்னீங்க பாட்டி ...அவளாவது திருந்தாராவது ....உலகமே அழிஞ்சிடாது ???????மதுராவை இங்கே ,அங்கேன்னு காலையில் இருந்து அலைகழிச்சி ,வார்த்தைகளால் குதறி எடுத்து ,சைகோலொஜிக்கலா அவளை பலவீன படுத்தி ,இரவூ பதினோரு மணிக்கு மேல் அவளை தன்னந்தனியா பங்களா விட்டு தொறத்தி ,மதுராவை குழப்பி ,சிந்திக்கவே விடாமல் செய்து விட்டு ,சுமனை வேறு ஏற்பாடு செய்து இருந்தாள் .அந்த ................ மதுராவை கடத்த வெளியே காத்து இருந்தான் ."என்றான் விஜய் பயங்கர கோபத்தோடு .

"என்ன ......து ..............சுமனா ...."அன்னையர் இருவரும் ஏக காலத்தில் அலறி விட்டனர் .

"அய்யோ ....கண்ணா ...மதுரமா .......மதுராவுக்கு ஒன்றும் இல்லையே .........அவனே தூணுக்கு சேலை கட்டினால் அதை கூட விட்டு வைக்காத ஒண்ணாம் நம்பர் பொறுக்கி ..........அந்த ஈன பிறவி கையில் மதுரா சிக்கினால் ........கடவுளே .........."நெஞ்சில் கை வைத்து அழ ஆரம்பித்தார் கனகா .

"கண்ணப்பா !.........சொல்லு பா ....மதுராவுக்கு ஏதும் ஆகும் முன் ........மதுராவை காப்பாத்திட்டே தானே ......மனசு பதறது...........சொல்லு ப்பா "என்றார் மரகதம் கைகள் நடுங்க

"ஐயோ ...அம்மா ...பாட்டி .....ரிலாக்ஸ் ....இந்தாங்க தண்ணீர் குடிங்க ...........நான் இருக்கும் வரை மதுராவுக்கு ஏதாவது ஆகா விடுவேனா .....உங்க மகன்,பேரன் மீது இவ்வளவூ தான் உங்க நம்பிக்கையா .....போங்க ....மீ ஆங்கிரி ......பேச மாட்டேன் ......"என்று முறுக்கி கொண்டான் .

"அது ஒன்றும் இல்லை கண்ணா .....உன்னை நம்பாம என்று இல்லை ....அந்த சண்டாளன் பேரை கேட்ட உடன் ...அடி]வயிறு கலங்கி போச்சு .....சொல்லுமா என்ன நடந்தது "என்றார் மரகதம் .

"முதலிலேயே சொல்லிடறேன் ..மதுராவுக்கு ஏதும் ஆகவில்லை .......பின்னாடி சுமன் வந்ததே தெரியாம அவ பாட்டுக்கு நடந்து போயிட்டே தான் இருந்தா .....அந்த அளவுக்கு அவளை குழப்பி விட்டு இருந்தது இந்த பிசாசு ......காலையில் இருந்து சபரியும் எங்கே எல்லாம் மதுராவோடு போறார் ஆல்வினிடம் சொல்லிட்டே தான் இருந்தார் ....நேரிடையாக எனக்கு சொன்னால் சோனா எங்கே கண்டுபிடித்து விட போகிறாள் என்று இந்த ஏற்பாடு ......என்னைக்கும் இல்லாத திருநாளாய் இவளுக்கு ஏன் கம்பெனி மேல் அக்கறை வருதுன்னு சந்தேகம் வந்த உடனே ஆல்வின் அவன் ஆட்களோடு மதுராவை தொடர ஆரம்பித்து விட்டான் ....எங்க மேல் சந்தேகம் வர கூடாதுனு நானும் அப்பாவும் மட்டும் மாலை தான் கிளம்பினோம் சுமன் வருவதற்குள் நாங்க அங்க போய்ட்டோம் .....நானும் அப்பாவும் பங்களாகுள் தான் இருந்தோம் .....வாயா அது ......ஒண்ணாம் நம்பர் கூவம் .............வந்த ஆத்திரத்துக்கு அவளை அங்கேயே கொன்று விடும் வெறி வந்தது ........ஆனால் சுமன் வந்து இருக்கான்ன்னு ஆல்வின் வெளியே இருந்து சொன்ன உடன் ,சோனா வேற மாதிரி பிளான் போடுறன்னு புரிஞ்சு போச்சு ......அவன் வரும் போதே ட்ரக்ஸ் எடுத்துட்டு தான் வந்து இருப்பான் போலெ இருக்கு .......ஆல்வின் மூலமா மேலும் சரக்கு கொடுத்து அனுப்பினோம் சோனா கொடுத்து அனுப்புவது போல் .....அதில் தூக்க மாத்திரை மிக்ஸ் செய்து இருந்தோம் ..... சபரியையும் அங்கேயே தான் நிறுத்தி வைத்தோம் .....மதுராவிற்கு ஆபத்து என்ற உடன் சோனாவை வெட்டியே தீருவேன் என்று கிளம்பி விட்டார் ...அவரை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது .விட்டு இருந்தால் சோனாவுக்கும் ,சுமனுக்கும் இன்று இரவே சங்கு ஊதி இருப்பார் ....."என்றான் விஜய் .

"விட்டு இருக்க வேண்டியது தானே கண்ணா .......எதுக்கு பா தடுத்தே ......நாட்டுக்கு நல்லது நடந்து இருக்குமே ..."என்றார் மரகதம் .

"மாசிலாமணி சார் முகத்துக்காக பார்க்க வேண்டியதா போச்சு.......ஆனா செம சீன் .....சான்சே இல்லை பாட்டி .....அருந்த வாலுன்னு தெரியும் .....ஆனா இப்படி ருத்ர தாண்டவம் ஆடுவானு தெரியாது ......"என்றான் விஜய் பெருமையோடு .

"அது உனக்கு விழ வேண்டிய அடி கண்ணா ...ஜஸ்ட்ட்டு மிஸ்ஸு ......மவனே என்னைக்கு உன்னை புரட்டி எடுக்க போறாளோ .......என்றார் சேது

"அம்மா ....பாருங்க அம்மா ......"என்றான் விஜய் சிணுங்கலுடன் .

"கண்ணா ...உங்க அப்பா முகத்தை எல்லாம் ரொம்ப நேரம் பார்க்க எல்லாம் முடியாது ......அதை விடு ......ஆனா அவர் சொல்வதும் உண்மை தானே ..........நியாயமா உனக்கு விழுந்து இருக்க வேண்டிய ஓதை தான் .பெரிய தியாக செம்மல் சீன் எதுக்குப்பா ......உனக்கு என்ன கார்த்திக் ---அண்ணா ,m .g .r ,ஜெயா ,கருணாநிதி சமாதி பக்கத்துல சிலை வைக்க போறானா என்ன ????? எதுக்கு உனக்கு நீயே இந்த தண்டனை கொடுத்து வேதனை படறே ...."என்றார் கனகா


PENANCE WILL CONTINUE...................... தவம் தொடரும்.........................
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thavam confusion---reg

அன்புள்ள நட்பூஸ் ---தங்களின் கருத்துக்களுக்கு நன்றி ......உங்கள் வரவேற்பு தலை சுற்ற வைக்கிறது ....கண்கள் வேர்த்து கொண்டே இருக்கிறது தினமும் வரும் உங்களின் ஆதரவை பார்த்து நன்றிகள் பல .

சில பேர் கேட்பது மதுராவிற்கும் விஜய்க்கும் என்ன உறவூ ...சோனா சொல்வது போல் affair இருக்கிறதா என்று கேட்கீறிர்கள் .விஜய்யின் சில டயலாக்ஸ் அப்படி இருப்பதாகவும் அது affair தானே என்றும் முடிவே செய்து விட்டர்கள்:oops::oops::oops::oops: ......அது என்ன லிங்க்,காதலா ,காமமா ,அதையும் தாண்டி நட்பா ,இல்லை இது எல்லாம் கலந்த ஒன்றா என்று இப்பொது கூற முடியாது ....கூறி விட்டால் சஸ்பென்ஸ் போய் விடும் ...கதையும் முடிந்து விடும் .....இப்போதான் பா ஆரம்பித்து இருக்கிறேன்;););) .....கொஞ்சமாவது எழுதறேனே ......ரத்தம் வந்தால் பொறுத்து கொள்ளுங்கள் நட்பூஸ்ி:p:p:p:p......affair எல்லாம் எதுவும் இல்லை .....இன்னும் விஜய் பிளாஷ் பாக் வரவில்லை ....அது வந்த பிறகு படித்து பார்த்து விஜய்க்கும் ,மதுராவிற்கும் என்ன லிங்க் ,என்ன உறவூ என்று முடிவூ செய்யுங்கள் .....கேரக்டர் பேசும் டயலாக் வைத்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம் .

விஜய் பிளஷ்பக் எப்போ என்று கேட்கறீர்களா ....அது இப்பொதுக்கு கிடையாது ....விஜய் மாதிரி வர வேண்டிய நேரத்தில் தானாக வரும் ......இதை எதற்கு சொல்கிறேன் என்றால் type செய்து போஸ்ட் செய்யும் கடைசி நேரம் வரை சில டயலாக் ,கேரக்டர் ,திருப்பங்கள் தானாக ஏற்பட்டு விடுகிறது .கதையை அதன் போக்கில் எடுத்து செல்கிறேன் .....ஒன்றுக்கு இரண்டு முறை படித்து பார்க்கும் போது புது விஷயங்கள் தானாக சேர்ந்து விடுவதால் எப்பொழுது பிளஷ்பக் என்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை .
இன்று கொடுக்க பட்ட சேது ,கனகா முதுமை காதல் ,சேது விஜய் காரில் பேசுவது,சிவகாமிக்கு திருமணம் போன்றவை type செய்யும் போது இணைக்க பட்டவை .ஒரிஜினல் ஸ்கிரிப்ட்இல் இது இருக்காது . நான் ஒன்று நினைக்க தானாக சிலது அமைந்து விடுகிறது .

சிலர் அப்டேட் சிறிதாக இருப்பதாக வருந்துகிறார்கள் .word லிமிட் 10,000 என்று இருக்கிறது .தனியாக லிங்க் கொடுத்தால் அந்த அளவுக்கு தினமும் பெரிய எபிசொட் கொடுக்க முடியுமா என்று சந்தேகமாக உள்ளது ....முடிந்தவரை தினமும் அப்டேட் கொடுக்கிறேன் ....முடியதா போது முன்னரே அறிவித்து விடுகிறேன் .....quarterly exam starting pa...athan...he he o_Oo_Oo_Oo_Ohe:confused::confused::confused:

thank you all for the moral support
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 15 தவம்---15

சற்று நேரம் எதையும் பேசவில்லை விஜய் ."இப்ப மட்டும் உன் வாய் திறக்கவே திறக்காதே .....என்னவோ போ கண்ணா .....நீ செய்யறது மதுரா விஷயத்தில் பிடிக்கவே இல்லை ...தப்பு செய்யரே என்று தான் சொல்வேன் "என்றார் கனகா .

"கனகா ! விடு மா ...விதி படி தான் எல்லாம் நடக்கும் ....யாருக்கு யார் என்று இறைவன் போட்ட முடிச்சு ...அது படைத்தவன் விருப்பம் இல்லாமல் மாறாது ......நடப்பது நடந்தே தீரும் ......நீ சொல்லு பா ....அப்புறம் என்ன நடந்தது ."என்றார் மரகதம் .

தென்னம் தோப்பில் நடந்ததையும் ,சுபாவிடம் மதுரா தன்னை பற்றி கூறியதையும் சொல்லி முடித்தான்.
அவன் சிரிப்பால் அவன் முகமே ஒளிர்வதையும் ,மதுராவை பற்றி பேசும் போது எல்லாம் அவன் கண்களில் வந்த மின்னல் ,குரல் குழைந்த விதம் ,முகத்தில் தெரிந்த உணர்ச்சி என்று அனைத்தையும் கவனித்த மூவர் தங்களுக்குள் பார்வையை பறி மாறி கொண்டனர் .அவர்களையும் அறியாமல் பெருமூச்சு வெளிவந்தது .

"கண்ணா ! நாலு கோடி கொடுத்திடலாம் .....என் வைர நகைகள் சிலது இருக்கு ....எனக்கு பிறகு பூரணிக்கு என்று ஒளித்து வைத்து இருந்தேன் அவள் திருமணத்திற்கு என்று ......இப்போ மதுரா மானத்தை காக்க பயன் படட்டும் .....இந்த பிசாசுங்க கிட்டே இருந்து அவளை காப்பாற்றுவது தான் கண்ணா முக்கியம் இப்போ ....இவங்க கண் முன்னே இருந்தால் அந்த சுமனோடு சேர்ந்து மதுராவை அழிக்காமல் விட மாட்ட சோனா "என்றார் மரகதம் .

"ஆமாம் ...கண்ணா .....அம்மா சொல்வது தான் சரி .....பணம் கொடுத்து மதுராவை மீட்டு அவள் வீட்டுக்கே அனுப்பி விடு தம்பி ....இந்த நரகம் நம்மோடு போகட்டும் ....நீ மாசம் கொடுக்கும் பணம் ,இவர் கொடுக்கும்பணம் ,என் பேரில் உள்ள கடை வாடகை பணம் என்று கொஞ்சம் சேர்த்து வைத்து இருக்கேன் ....எப்படியும் 30-40 லட்சம் வரும் .....எடுத்துக்கோ ."என்றார் கனகா

சற்று நேரம் எதையும் பேசாத விஜய் ,காரில் வரும் போது சேதுவிடம் கூறிய காரணத்தையே மீண்டும் சொன்னவன் ,"அது மட்டும் இல்லை ......ரத்தன் சிங் பற்றி கேள்வி பட்டு இருக்கீங்க தானே ....ஜெய்ப்பூர் ராஜ வம்சத்தை சேர்ந்தவன் ....ஆள் பலம் ,பண பலம் உடையவன் ......அவன் மனைவி இறப்புக்கு காரணம் கூட சுமன் தான் .....அவங்களை கடத்தி கொண்டு போய் .....இவன் தான் கடத்தினான் என்று துளி கூட தடயம் இல்லாமல் ....அவங்க சாக காரணமாகி விட்டான் .....அவங்க உயிர் விட்டது கஜாவின் ஒரு பங்களாவில் தானே....வழக்கமாய் கஜாவின் பங்களா இன்ஸ்பெக்ஷன் செய்வது தான் .அப்படி போன போது தான் அந்த பெண் அங்கு அடைக்க பட்டு இருப்பதே தெரிய வந்தது ....நானும் ஆல்வினும் அவங்க உயிரை காப்பாற்ற எவ்வளவூ போராடினோம் தெரியுமா .....என் கையில் தான் அவங்க உயிர் பிரிந்தது ......பெரும் பணக்காரன் அவர் மனைவிக்கே சுமனால் இந்த நிலை என்றால் ....கார்த்திக்கால் சுமனை தனியாக சமாளிக்க முடியுமா ????.....நாம் மதுராவிற்காக எது செய்வதாக இருந்தாலும் நேரிடையாக எதையும் செய்ய முடியாது ....அப்படி செய்ய வேண்டும் என்றால் முழுதாய் சோனா ,கஜாவை எதிர்க்க வேண்டி வரும் ...கஜாவிடம் பண தட்டுப்பாடு தான் இருக்கிறதே தவிர அவர் இன்னும் அடிபட்ட பாம்பு தான் .....சுமன் குறி இப்போ மதுரா தான் .....அவனுக்கு பின்னாடி சோனா இருக்கா ....சோனாவிற்கு பக்கபலமாய் கஜா இருக்கார் .....இப்போ எது செய்வதாய் இருந்தாலும் 100 முறை யோசித்து தான் எதையுமே செய்ய முடியும் ...எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது ......நான் மதுராவை காப்பது தெரிந்தால் நாலு சுவற்றுக்குள் 'affair 'என்று சொன்ன சோனா மீடியா முன் இதையே சொல்ல மாட்டாள் என்று என்ன உத்திரவாதம் ????இப்படி சோனா சொல்லிய பிறகு கார்திக்க்கோ அவன் குடும்பமோ மதுராவை ஏற்பார்களா ...."என்றான் விஜய் .

"அது எது வேண்டும் என்றாலும் செய்து தொலைக்கும் .......நீதி கேட்கும் கண்ணகி போலெ மீடியா முன்னாடி நாடகம் கூட போடும் ......ஒருத்தி கிட்டே இருந்து சமாளிப்பதே பெரும் பாடாய் இருக்கு ...இதில் சுமன் வேறு என்றால் ...."என்று தயங்கினார் கனகா .

"ஒரு வருடம் காப்பாற்ற வில்லையா .....பார்க்கலாம் அம்மா ....."என்றான் விஜய் பெரு மூச்சோடு .

"எவ்வளவூ வருடம் தான் உன்னால் காப்பாற்ற முடியும் கருணா ......ஆயுள் முழுதும் உன்னால் செய்ய முடியுமா என்ன ?????கார்த்திக் உடன் திருமணம் நடந்த பிறகு நீ இப்படி இன்வோல்வ் ஆகி இருப்பது தெரிந்தால் ,எதற்காக நீ இந்த வேலை செய்கிறாய் என்ற கேள்வி வராதா ??????இருபத்தி நான்கு மணி நேரமும் நீயும் ஆல்வினும் உடன் இருக்க முடியுமா என்ன ????எந்த உரிமையில் நீ இதை செய்கிறாய் என்ற கேள்வி தான் எழும் .....இன்னும் தெளிவாக சோனா பாஷையில் சொல்வது என்றால் உனக்கும் ,மதுராவிற்கும் 'affair 'இருப்பதால் தான் அவளை காப்பாற்ற போராடுகிறாய் என்று பேசுவார்கள் கண்ணா .....இது தான் உண்மை .....நீ யார் என்று எங்களுக்கு தெரியும் .....உலகிற்கு தெரியுமா ......புரளி பேசும் ஒவ்வொருத்தரிடம் சென்று இதை எல்லாம் விளக்கி தான் கூற முடியுமா ......சங்கரனிடம் நான் பேசுகிறேன் ....உன் முடிவில் மாற்றம் இல்லை என்றால் கார்த்திக் உடன் மதுராவிற்கு திருமணம் முடித்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பிட சொல்லலாம் .....அங்கு போனா மட்டும் ஆபத்து விலகி விடும் என்றும் சொல்லவில்லை ......மதுராவிற்கும் உனக்கும் என்று கிளம்பும் பேச்சு முடிவுக்கு வரலாம் .....சுமன் விஷயம் பிறகு பார்க்கலாம் ..."என்றார் மரகதம் வேதனையோடு .

மூச்சு முட்டுவது போலெ தோன்ற பால்கனியில் உலாவ ஆரம்பித்தான் விஜய் .தொண்டை அடைத்து ,இதயத்தின் மீது ஆயிரம் டன் வெய்ட் ஏறியது போன்று வலி ஏற்பட ,மூச்சு விட முடியாமல் திணறினான் .கைகளை பின்னால் கட்டி ,கண்கள் மூடி அவன் நின்ற கோலம் மூவரையும் கலங்க வைத்தது .

"தண்ணீர் குடிப்பா ...."என்ற கனகா அவன் குடிக்க தண்ணீர் கொடுத்து அவன் முதுகை தட்டி விட்டார் .

ஜக்கில் இருந்த தண்ணீர் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடித்தான் .நெஞ்சில் பற்றி எரியும் தீயை அணைக்க முயன்றானோ ???

பெருமூச்சை வெளியிட்டவன் ,எங்கோ வெறித்தவாறு ,"சுமனின் படைபலம் ,பண பலம் நமக்கு தெரியும் ....திருமணம் ஆனவள் ,ஆகாதவள் என்ற பாகுபாடு எல்லாம் அவனுக்கு இல்லை .ரத்தன் சிங் மனைவி மரணமே உதாரணம் .கார்த்திக் உடன் உடனே திருமணம் நடந்தால் இன்னும் வெறி ஏறி தான் போகும் .....இன்று கிடைத்த தோல்விக்கே எப்படி ரியாக்ட் ஆவான் என்று தெரியாது .......சங்கரன் வேறு முறுக்கி கொண்டு இருக்கிறார் .....அவரை சமாளிக்கணும் .....உடனேயும் சங்கரன் திருமணத்தை நடத்த ஒப்பு கொள்ள போவது இல்லை .........சோனா தன் லீலை அங்கேயும் நடத்தி இருக்கே .....எதுவுமே உடனே நடக்காது .....பொறுமையா தான் செய்யணும் ...."என்றான் விஜய் யோசனை உடன் .

"சரிப்பா ....நானும் அவங்க கிட்டே பேசறேன் .....ஒன்றுக்கு பலர் உதவிக்கு இருந்தால் நல்லது தானே ...நாம் யோசிக்காத வழியில் கூட அவர்கள் யோசிப்பார்கள் ....நீ எதை பற்றியும் நினைத்து கவலை படாதே .நடப்பது நடந்தே தீரும் .....இப்படி கலங்காதே ....நீ இப்படி துடிப்பது மட்டும் சோனவுக்கு தெரிந்தால் ஆபத்தாகி விடும் கண்ணா .......பொழுது விடிய போகுது ...போய் கொஞ்ச நேரமாது தூங்கு ....."என்ற மரகதம் கிளம்ப ,உடன் கிளம்பினார்கள் சேதுவும் ,கனகாவும் .

தூக்கம் ----அவன் தூக்கத்தை தொலைத்து 10 ஆண்டுகள் ஆகிறது .யாரிடம் சொல்லி ஆறுதல் தேட முடியும் .
"சோதனை மேல் சோதனை ...போதுமடா சாமி ....
வேதனை தான் வாழ்கை என்றால் தாங்காது பூமி ....."என்று அவன் பாடாத குறை .

சோனா ,சொர்ணா ,கஜேந்திரன் போன்ற அரக்கர்களின் நரகத்தில் யாரவது நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா ???/தினம் தினம் முகத்தில் எதையும் காட்டாமல் நடிக்க வேறு வேண்டும் .'ரோபோட் ,முசுடு ,இயந்திர மனிதன் ,உராங்குட்டான் ,சிடுமூஞ்சி சின்னப்பா,துர்வாசர் 'என்று அவனுக்கு ஆபீஸ் இல் பட்ட பெயர் இருப்பது அவனுக்கு தெரியும் -----உபயம் ----மதுராக்ஷி .

அவளுக்கு என்ன தெரிய போகிறது இவன் நரகம் ????ஒரு காலத்தில் சொர்க்கத்தில் இருந்தவன் அவன் .'ஐ ஆம் தி கிங் of தி வேர்ல்ட் 'என்று மகிழ்ச்சியில் திளைத்தவன் .ஆனால் இன்றோ ????அவள் தேவதை .அவளை சுற்றி நடப்பவை நல்லது மட்டுமே . ஆனால் இவன் மனதிற்கு மட்டும் அல்ல முகத்திற்கும் ,உணர்ச்சிகளுக்கும் சேர்த்து முகமூடி போட்டு நடித்து கொண்டு இருந்தான் .மரகதம் ,சேது ,கனகா ,பூரணி முன் மட்டுமே அவன் மனிதனாய் இருந்தான் .அவர்கள் முன் மட்டுமே அவன் உணர்ச்சிகளை ,வலி ,வேதனைகளை காட்டினான்.மற்றவர்களின் முன் கல்லாய் ,இயந்திர மனிதனாய் இருக்க வேண்டியது மூச்சு விடுவது போலே இன்றி அமையாதது .

ஆனால் அவன் இரும்பு கவசத்தை ,அவன் முகமூடியை ,அவன் கோட்டையை -'அச்செல்லிஸ் ஹீல் ' என்று கிரேக்க மொழியில் பலவீனத்தை குறிப்பிடவார்கள். ஹோமர் என்பவர் எழுதிய illaid நாடகத்தில் -ட்ரோஜன் ஹார்ஸ் /மரக்குதிரை பற்றி வரும் .அதில் சொல்ல படும் பலவீனம் -ஒரு சாம்ராஜ்யம் அழிவதற்கு காரணமாய் இருந்ததாம் .அதே போல 200 வருடங்கள் பாடுபட்டு ,6000 கிலோமீட்டர் நீளம் உடைய சீன பெருஞ்சுவர் எதிரிகளிடம் இருந்து நாட்டை காக்க கட்டப்பட்டது .ஆனால் ஒருவனின் பலவீனம் அந்த சாம்ராஜ்யம் அழிய காரணமாய் இருந்தது என்பார்கள் .இந்த இரண்டு பலவீனங்கள் போலெ விஜய்யின் பலவீனம் எது என்று ஒரு யூகத்தில் சோனா அடிக்க ஆரம்பித்து இருந்தாள் .அவளின் ரிவென்ஜ் எது என்று மதுராவிற்கு தெரிய வாய்ப்பு இல்லை .ஆனால் விஜய் சுற்றி இருந்தவர்களுக்கு நன்றாக தெரிந்து இருந்தது .

சோனாவின் அடிகளை தாங்கி ,எதுவுமே நடக்காதது போலே நடித்து ,பதில் அடியை வேறு கொடுக்க வேண்டி இருந்தது .அதுவும் ஒரு வருடமாக .சோனா எதிர்பார்த்த ரியாக்ஷன் கிடைக்கவில்லை என்றதும் சுமனை தூண்டி விட்டு இருந்தாள் .அதன் முதல் படி நேற்று இரவூ அரங்கேறி இருந்தது .விஜய் விழிப்பாக இருந்ததால் மதுராவை காப்பாற்ற முடிந்தது .கள்வன் பெரியவனா ,காப்பாளன் பெரியவனா என்ற கண்ணாமூச்சி ஆட்டம் ஆடப்பட்டு கொண்டு இருந்தது .

ஆனால் சோனாவும் ,சுமனும் அறியாத ஒன்று ,விஜய் மட்டும் அல்ல ,மதுராவை காக்க பல பேர் உள்ளனர் என்பது .விஜய் கூட மதுராவின் பெயர் தன்னால் தவறாக வெளியே பரவிட கூடாது என்று தான் அமைதியாக இருக்கிறான் என்பதையோ ,தாங்கள் செய்யும் ஈன செயல்களுக்கு தங்களை கொன்று விட கூட தயங்க மாட்டான் என்பதையோ அறியவில்லை .சோனாவும் எரிமலையை சீண்டி விட்டு அதில் குளிர் காய்ந்து கொண்டு இருந்தாள் .

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தவன் ,பலருக்கு அழைத்து பேசினான் .சுமனை எங்கு வரை கொண்டு சென்று இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டான் .கடைசியாக தன் நண்பன் ஆல்வின்னை அழைத்தான் .

"என்னடா இப்போ பிரச்சனை ?"என்றான் தூக்க கலக்கத்தில் .

"ஏன்டா பிரச்சனை என்று ஒன்று இருந்தால் தான் உன்னிடம் பேச வேண்டுமா என்ன ?????என் நண்பனிடம் பேச என்று அழைத்து இருக்க கூடாதா ?"என்றான் விஜய் .

"யப்பா ....உனக்கு நட்பு அருவியா கொட்றதுக்கு நேரம் காலம் இல்லையா ....தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி நட்பு பயிர் வளர்கிறானாம் .அதுவும் விடியற்காலை நான்கு மணிக்கு .......ஏன்டா எருமை நைட் 12 வரை உன் கூட தானடா இருந்தேன் ....அப்போ பேசி தொலைக்க வேண்டியது தானே .......கேணையன் எவனாவது இருப்பான் அவன் கிட்டே உன் நட்பு பயிரை வளரு ...டேய் நீ சோனா கிட்டே இருந்து டைவோர்ஸ் வாங்கறீயோ இல்லையோ எனக்கு என் பொண்டாட்டி கிட்டே இருந்து நிச்சயம் வாங்கி கொடுத்துட்டு தாண்டா நீ அடங்க போறே .....ஒழுங்கா கூப்பிட்ட காரணத்தை சொல்லு ...."என்றான் ஆல்வின் கடுப்போடு

"பாட்டி சில வைர நகைகள் இருக்குன்னு சொல்ராங்க ....அதை விற்றாவது மதுராவை மீட்க சொல்ராங்க ....சங்கரனிடம் அவரே பேசி கார்திக்க்கோடு திருமணத்தை முடிக்கிறேன் என்று சொல்ராங்க ......பணம் கொடுப்பது நாம் தான் என்று சோனா ,கஜா அறியாமல் கொடுத்து மதுராவை மீட்க முடியுமா ??????சங்கரன்னை வேற சமாளிக்கனும் ...."என்றான் விஜய் யோசனையாக

PENANCE WILL CONTINUE................... தவம் தொடரும்.................
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 16 தவம்16

"ஏன்டா ஒரு வருஷமா மதுராவை அவ வீட்டுக்கு பேக் செய்யுன்னு தலை பாடா அடிச்சிகிட்டேனே ...என் பேச்சை கேட்டியா நீ ....இப்போ சோனா எல்லா பக்கமும் ஆப்பு வைச்ச பிறகு இன்ஸ்டன்ட் சொலுஷன் கேட்டா நான் என்னடா செய்ய முடியும் .....இவ இந்த பிளான் போடுவதற்கு முன்பே மதுராவை அவங்க அப்பா வீட்டுக்கு அனுப்பி இருந்தாலாவது ....அந்த ஆளை சரி கட்டி கார்த்திக்கோடு திருமணம் முடித்து இருக்கலாம் .....திருமணம் ஆன பெண் என்று சோனாவும் விலகி இருப்பா ...சுமனையும் இழுத்து விட்டு இருக்க மாட்டா .....சுமன் வந்த பிறகு மதுராவிற்கு திருமணம் ஆனாலும் ஒன்று தான் ,திருமணம் ஆகவில்லை என்றாலும் ஒன்று தான் .....நீ எல்லாம் பட்டு கூட திருந்தலைன்னா நான் என்னடா செய்ய முடியும் ..."என்றான் ஆல்வின் .

"அடேய் !எத்தனை தடவை தான் ஒருத்தியை விரட்ட என்னால் முடியும் ?????ஒரு வருசமாய் அதை தானடா செய்கிறேன் ....அவ ஒரு லூசு ....அவ அப்பா ஒரு லூசு ...ரெண்டு லூசுகளும் சேர்ந்து என்னை லூசாக்கிட்டு இருக்குதுங்க .....பாசத்தை பொழியரங்களாம் .......தேய்ந்து போன ரெகார்ட் மாதிரி,சரியான சப்பாணி கமல் மாதிரி 'சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு கொடு ' போலெ 'அப்பா அனுப்பினார்....வேலைக்கு வரேன் ..... 'என்பவளிடம் என்னத்தை சொல்ல சொல்கிறாய் நீ ......இது பாழுங்கிணறு ...விழாதே என்றால் 'அப்பா தள்ளி விட்டால் விழுந்தே ஆவேன் என்பவளிடம் எதை சொன்னால் தான் புரிய போகிறது ????மதுராவை இங்கே இந்த பங்களாவில் தங்க வைத்தே ஆவேன் என்று சோனா பேயாட்டம் ஆடினாலே ,திரும்பி வரவே மாட்டேன் என்றதும் தானே டா அடங்கினா ......மதுரா பாதுகாப்பிற்காக தானடா பாலாஜியையும் ,சுபாவையும் அங்கு தங்க வைத்து இருக்கிறேன் ...இதற்கு மேல் என்னை என்னடா செய்ய சொல்கிறாய் ????/போடீன்னு இத்தனை பேர் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக கெஞ்சினோம் ....இனி இவளே போகனும் என்று நினைத்தாலும் போக முடியாத படி பெரிய ஆப்பு அடிச்சு இருக்கே அந்த பிசாசு .....சோனா அடிச்ச வேப்பில்லையில் எதற்கு இத்தனை பேர் மாற்றி மாற்றி போக சொன்னோம் என்று இனியாவது யோசிக்கட்டும் .....பட்டு தான் திருந்துவேன்னு அடம் பிடிச்சா நான் மட்டும் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறே ....."என்றான் விஜய் கோபமாக .

"சரி டென்ஷன் ஆகாதே ....பார்த்துக்கலாம் ...இப்போ நெஸ்ட் என்ன செய்யனும் சொல்லு ....ஓகே ...ஓகே புரியுது ...கத்தாதே ....சொல்லு "என்றான் ஆல்வின்

"எனக்கு அந்த சுமன் பற்றி full டீடைல் வேண்டும் ..நீ யார் கையை பிடிப்பேயோ ,காலை பிடிப்பியோ ,யார் உயிரை எடுப்பீயோ எனக்கு கவலை இல்லை .....இவனை மாதிரி தப்பு மட்டுமே செய்பவன் நிச்சயம் எங்காவது ஒரு clue விட்டு இருப்பான் .......நாளைக்குள் எனக்கு எல்லா தகவலும் வேண்டும் .அது பொய் ,புரளி ,கட்டுக்கதையாக இருந்தாலும் விடாதே ......"என்றான் விஜய் .

"மிஸ்டர் ரத்தன் சிங் நியாபகம் இருக்கா .....அவரும் இவனை பற்றி என்னிடம் தான் விசாரிக்க சொன்னார் ...."என்றான் ஆல்வின்

"ஓ ....அப்போ அவன் தான் இவர் மனைவி மரணத்திற்கு காரணம் என்று ரத்தனுக்கு தெரியுமா ????ரொம்ப அமைதியா இருக்கானே என்று உண்மை தெரியாது என்று நினைத்தேன் ......"என்றான் விஜய் யோசனையாக

"ஊருக்கே தெரிந்த ரகசியம் சுமன் தான் காரணம் என்று .....அவனுக்கு தெரியாதா என்ன ....இவனிடம் சாட்சி மட்டும் தான் இல்லை .சாட்சியே இல்லாமல் காய் நகர்த்துவதில் கில்லாடி ஆயிற்றே சுமன் ....நாம அவன் மனைவியை கண்டு பிடித்ததது கூட தற்செயல் தானே ...."என்றான் ஆல்வின்

" "சட்டம் ,போலீஸ் ,கோர்ட் என்று அலைய போகிறானா என்ன ....காலேஜ் டைம்மில் பயங்கர terror ரா இருந்தானே ...எவனா இருந்தாலும் தப்பு என்றால் தூக்கி போட்டு மிதிப்பானேடா ....இன்ஸ்டன்ட் ஜஸ்டிஸ் கொடுப்பான் என்று பார்த்த இவ்வளவூ பொறுமையா இருக்கான் ....."என்றான் விஜய் சந்தேகமாக

"தெரியலை கருணா .....காசு கொடுத்தால் தடயம் இல்லாமல் சுமனை அழிக்க ஆட்கள் உண்டு.......இவன் பெயர் கூட வெளியே வராது ......பம்பாய் நிழல் உலக தாதா ...........தெரியும் தானே ...அவரும் அவரை போல டெல்லி ,சென்னையில் ரெண்டு பேர் இருக்காங்க .....இவங்க மூன்று பேரும் ரத்தனை வந்து சந்தித்து போய் இருகாங்க ....எந்த உதவி என்றாலும் செய்வதாக கூறி ...உதவினா புரியுது தானே ......ஆனா இவன் தான் இப்போ ஏதும் வேண்டாம் என்று சொல்லி இருக்கான் ....மதுரா விஷயம் அவன் காதில் போட்டு வைக்கிறேன் கருணா ...ஏதாவது உதவி தேவை பட்டால் கண்டிப்பா செய்வான் ....."என்றான் ஆல்வின் .

"சரிடா ...அவனிடம் சொல்லி வை ....இப்போ சுபா தாயாய் இருக்கா ....இப்போ அவளால் பழைய படி மதுராவை காக்க முடியும்ன்னு நெனைக்கிறீயா .....அந்த வீடு மதுராவின் பாதுகாப்பிற்கு போதுமா ..."என்றான் விஜய் .

"உன் ஆபீஸ் கீதா ,நந்தன் நம்ம ஆளுக தான் .....அவங்களை அந்த வீட்டு மாடிக்கு குடித்தனம் வர வைச்சுடலாம் ....மதுரா சுபா ,பாலாஜியுடன் கீழே இருக்கட்டும் ....மதுராவுக்கும் இவங்க நண்பர்கள் தான் .சோ பிரச்சனை ஏதும் வராது ....வெளியே எங்காவது சென்றால் கூட இவங்க கூட போக சொல்லிடலாம் ....ஆபீஸ் வந்து விட்டால் நாம் இருக்கோம் ....."என்றான் ஆல்வின்


" "ருத்ராவிடமும் இப்போ தான் பேசினேன் .....ரகு அவன் கம்பெனில தானே பெங்களூரு வேலை பார்க்கிறான் ...அதை சென்னைக்கு மாற்ற சொல்லிட்டேன் ....அவனிடம் நானும் பேசிட்டேன் ......இன்றுக்குள் சென்னை வந்து விடுவான் ."என்றான் விஜய் .

"கார்த்திக் கூட ஆஸ்திரேலியாவில் இருந்து கிளம்பிட்டான் ......அவனுக்கு தகவல் சொல்லிட்டேன் .....வேறு கம்பெனியை கூட உருவாக்கி கொடுத்துடலாம் அவனுக்கு ....கார்த்திக் ரொம்ப நல்லவன் கருணா .....மதுரா மேல் உயிரையே வைத்து இருக்கான் .......எல்லா வகையிலும் அவளுக்கு ஏற்றவன் கார்த்திக் ."என்றான் ஆல்வின் பெரு மூச்சு விட்ட படி

"எதற்கு எல்லாரும் மாற்றி மாற்றி இந்த டயலாக் விடறீங்க என்று தெரியுது .....இதற்கு எல்லாம் நான் கலங்க மாட்டேன் .....நான் முடிவூ எடுத்தது எடுத்தது தான் .......என் மனம் மாறாது ஆல்வின் ..........ஆழம் பார்க்க அவசியம் இல்லை .............மதுராவிற்கு கார்திக்க்கோடு திருமணம் நிச்சயம் நடக்கும் ....யார் தடுத்தாலும் அதை நடத்தியே காட்டுவேன் ......"என்றான் விஜய் திட்டவட்டமாக .

"யார் யார்க்கு எது வென்று விதி போடும் பாதை ....
போனாலும் வந்தாலும் அது தான் ........."


அவன் வாழ்வே அதற்கு உதாரணம்மாக இருக்கும் போது இவன் போடும் திட்டத்தை பார்த்து விதி கை கொட்டி சிரித்து கொண்டு இருந்தது .....

"கருணா .....இது தேவை இல்லாத வேலை என்று தான் சொல்வேன் ...மதுரா வாழ்கை முடிவூ செய்ய நீ யார் ....இது அவளா தெளிவாக இருக்கும் போது எடுக்க வேண்டிய முடிவூ ....எவனோ ஒரு பொறுக்கிக்கு,பிசாசுக்கு பயந்து எடுக்கற மாதிரி இருக்கு ...... இன்னும் கூட உன் மனச மாத்திக்க நேரம் இருக்கு ....."என்றான் ஆல்வின் .

"ஆல்வின் !"என்று உச்சஸ்தாயில் கத்தினான் விஜய் ."மதுராவிற்கு கார்திக்க்கோடு திருமணம் நடக்கும் .சோனா ,சுமன் ,கஜா யார் வந்தாலும் எதிர்க்க நான் தயார் ....அவ திருமணம் நடக்கும் போது இந்த பிரச்சனையும் வர கூடாது .அதற்குள் இது எல்லாத்துக்கும் முடிவூ கட்ட வேண்டும் .....யார் உயிர் இதற்காக போவது என்றாலும் சரி தான் ."என்றான் விஜய் எக்கு போன்ற குரலில் .

இப்படி தனக்காக விஜய்யோடு சேர்ந்து பலர் தன்னை காக்க முயன்று கொண்டு இருப்பதை அறியாதவளாய் ,தூக்க மாத்திரையின் உதவியோடு நன்றாக உறங்கி எழுந்தாள் .அன்று ஞாயிற்று கிழமை என்பதால் , சோம்பல் சேர்ந்து கொள்ள மீண்டும் உறங்க முயன்றாள் மதுரா .விட்டு இருந்தால் அன்று முழுவதும் உறங்கியே கழிக்கும் அளவூ உடம்போடு ,மனமும் சோர்ந்து போய் இருந்தது .அப்படி மற்றவர்களை நிம்மதியாக உறங்க கூட விட்டால் ,அது சோனா இல்லையே ..

விடியற்காலையிலேயே விழிப்பு வந்து விட்டது சோனாவிற்கு .பல நாள் திட்டம் பலித்து விட்ட மகிழ்ச்சி .பின்னே எவ்வளவூ பிளான் செய்து நள்ளிரவில் சுமனிடம் மதுராவை மாட்டி விட்டு இருந்தாள் .சுமனின் கைகளில் சிக்கிய பெண்களின் கதி அவளுக்கு நன்றாக தெரியுமே .....மதுராவின் நிலை கண்டு விஜய் துடிப்பதை காண போகும் பேராவல் .....தரையில் கால் பதியாமல் மிதந்து கொண்டு இருந்தாள் .இவள் எதற்காக இப்படி குதிக்கிறாள் என்று தெரிந்த மற்றவர்கள் ,இவளை கொன்று விடும் வெறியோடு ,அந்த நல்ல காரியத்தை யாராவது செய்து விட மாட்டார்களா என்று ஏங்கவே ஆரம்பித்து விட்டனர் .எழுந்த ஆத்திரத்தை அடக்க விஜய்யோடு மற்றவர்களும் போராட வேண்டி இருந்தது.

"ஏய் செண்பா ...எங்கேடி இருக்கே ......கூப்பிட்டுட்டே இருக்கேன் ...ஆடி அசைஞ்சு வரே ....சீக்கிரம் வாடி ."என்றவள் சமையல் பெண்ணின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள் ."கூப்பிட்டா அடுத்த செகண்ட் ஓடி வரணும் .....இந்த திமிர் எல்லாம் என்னிடம் வேண்டாம் ......மார்னிங் டிபனுக்கு மூன்று ஸ்வீட் செய் .... இன்னைக்கு வடை ,பாயசம் லஞ்ச் க்ராண்டா இருக்கனும் ..... புரிஞ்சுதா ...கெட் லாஸ்ட் "என்றாள் சோனா .(இவ சாப்பாட்டுல விஷத்தை கொட்டு செண்பா )

"செண்பா ! நில்லு ...இந்த பிசாசிற்கு செய்யும் சாப்பாட்டில் 10 பாட்டில் விஷம் கலக்கிடு ....செத்து தொலையட்டும் ."என்றார் மரகதம் (கையை கொடுங்க பாட்டி )

"பத்து பாட்டில் போதுமா ...அதுக்கே உடம்பு பூரா விஷம் ...நாம கலக்குற விஷம் ,ஆலகால விஷத்தை என்ன செய்ய முடியும் ;மனதிற்குள் புலம்பினார் செண்பா (நான் நெனச்சேன் நீங்க சொல்லிடீங்க )

சந்தோசம் .....அந்த சந்தோசத்துடன் சுமனை அழைத்து கொண்டே இருந்தாள் மூன்று மணி நேரமாக ....அவன் வாய் வழியே நடந்ததை கேட்டு விட்டால் தானே நிம்மதி.அவன் எடுக்கவில்லை .எடுக்கும் நிலையில் தான் அவனை விஜய் விட்டு வைக்கவில்லையே .பொறுக்க முடியாதவள் மதுராவிற்கே அழைத்து விட்டாள் .இந்த பிசாசு இவளுக்கு போன் செய்யும் என்று விஜய் கூட யோசித்து இருக்கவில்லை.யோசித்து இருந்தான் என்றால் சுபா மூலமாக மதுராவின் போனினை மறைத்து இருப்பான் . .விதி தன் விளையாட்டை ஆரம்பித்து இருந்தது .ஆறு முழு அழைப்புகளுக்கு பிறகும் மதுரா எடுக்கவில்லை .அவள் தான் தூக்க மாத்திரை கொடுத்த மயக்கம் தெளியாமல் தூங்கி கொண்டு இருந்தாள் .

ஏழாவது அழைப்பில் "ஹல்லோ ....."என்று மதுராவின் குரல் தூக்க கலக்கத்துடன் ஒலித்தது .

PENANACE WILL CONTINUE.............. தவம் தொடரும்....................

anitha rajkumar
 
Last edited:
Status
Not open for further replies.
Top