All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM ---17 தவம் -17

ஏழாவது அழைப்பில் "ஹல்லோ ....."என்று மதுராவின் குரல் தூக்க கலக்கத்துடன் ஒலித்தது .

"ஏய் ! எந்த ஹாஸ்பிடலில் இருக்கே ?"என்றாள் சோனா (அடியேய் ....உன்னை ...கல்லால் அடித்தே கொல்லனும் டீ ...பாவி பாவி )

"நான் எந்த ஹாஸ்பிடலிலும் இல்லையே ... ...."என்றாள் மதுரா தூக்கம் தெளியாமல் .

ஆங் ....ஹாஸ்பிடலில் இல்லையா ......எந்த பங்களாவில்,ஹோட்டலில் இருகேடீ ..."என்றாள் சோனா கடுப்பாக .

"நான் எந்த பங்களாவிலும் ,ஹோட்டலிலும் இல்லையே ...."என்றாள் மதுரா சோனாவின் ரத்த அழுத்தத்தை தான் ஏற்றி கொண்டு இருப்பதை அறியாமல் .

"ஏய் சனியனே ...கொன்னுடுவேன் ......எங்கே இருக்கே சொல்லி தொலை ....."என்று ஹை பிட்ச்இல் பைத்தியம் போலே கத்தினாள் சோனா .

"லூசாடீ நீயி ......நான் என் வீட்டில் ....ஐ மீன் சுபா வீட்டில் இருக்கேன் ....சண்டே அதுவுமா போன் செய்து தூங்கிட்டு இருக்கிறவளை தூங்க விடாம ....பைத்தியம் போல ஏண்டீ என் உயிரை வாங்கறே ......அட சீ போனை வைடி ....."என்றாள் மதுரா எரிச்சலோடு

"அங்...என்ன .....து ...உன் வீட்டில் இருக்கியா .....அடிப்பாவி அந்த சுமன் இடம் இருந்து எப்படி டீ தப்பினே ...."என்று உளறி கொட்டினாள் சோனா .

'சுமன் 'என்ற பெயர் தூக்கத்தை விரட்டி விட ,வாரி சுருட்டி எழுந்து அமர்ந்தாள் மதுரா .

"என்ன ...என்ன ...சொன்ன .....சு ...சுமன் ...சுமன் என்றா சொன்னே ?"என்று திகைப்புடன் கேட்டாள் மதுரா .

"அமாம் டீ ...சுமன் தான் ....உனக்காக தென்னம் தோப்பில் காரோடு நிற்க சொன்னேனே ....அவன் கிட்டே இருந்து எப்படி தப்பினே .....கரெக்ட் பிளான் போட்டோமே ....எப்படி தப்பினே .....நீ தப்பியது தெரிந்தால் அவன் என்னை கொன்று விடுவானே ....."என்று தன் பாட்டுக்கு புலம்பி கொண்டு இருந்தவள் அறியவில்லை மதுராவின் நிலையை .

சுமன் பற்றி ஆபீஸ் பேச்சு உண்டு ....அவன் வரும் போது எல்லாம் இவளை சுபாவோடு எங்காவது அனுப்பி விடுவான் விஜய் . அந்த கொடூரமானவன் ,ரோக் ,எதற்காக காத்து இருந்தான் என்கிறாள் இவள் .பயபந்து உருள அந்த ஏ .சி அறையிலும் வியர்த்து கொட்டியது மதுராவிற்கு .

"அய்யோஓஒ .....எங்கே போனான் ......தெரியலையே ....என்னை கொன்று விடுவானே .....எங்கே போய் தேடுவேன் .....போன் சுவிட்ச் ஆப் நு வருதே ....இவன் வந்து விட்டதாக கால் செய்த உடன் தானே நான் நேற்று கிளம்பினேன் ....."என்று புலம்பியவாறு அழைப்பை துண்டித்து விட உறைந்து போய் அமர்ந்து இருந்தாள் மதுரா .

'அந்த கேடு கெட்டவனின் அடுத்த குறி நானா ....????ஏற்கனவே பல பெண்களின் வாழ்வை அழித்தவன் ஆயிற்றே ....இப்போ தானே ஒரு தொழில் அதிபரின் மனைவி இறக்க காரணம் இவன் என்று கேள்வி பட்டேன் .....பாவி ...பாவி ...படுபாவி ....ராட்ஷட்சி ......பாதகி ...என்ன பாவமடீ செய்தேன் உனக்கு நான் ....என் மானத்தை அழிக்கவே துணிந்து விட்டாயே .....'என்று மனதிற்குள் அரற்றியவள் பிரமை பிடித்து எவ்வளவூ நேரம் அமர்ந்து இருந்தாலோ ,சுபாவும் ,பாலாஜியும் வந்து பல முறை உலுக்கிய பின்னர் தான் அதிர்ந்து விழித்தாள் .

தன் தோழியை கண்டதும் அவளை அணைத்து கதறி விட்டாள் மதுரா .அவர்கள் சொன்ன எந்த ஆறுதலும் அவள் காதில் விழவே இல்லை ....முடிவே இல்லாத கொடூரத்தில் மாட்டி இருப்பது போலெ ,மீளவே முடியாத பெரும் சூழலில் சிக்கி இருப்பது போல ,மூச்சு விடவே முடியாமல் திணறி போனாள் மதுரா .எந்த அழுகையும் ஒரு சமயம் நிற்கும் ....மதுராவின் கதறலும் மெல்ல நிற்க ,அவளை அணைத்து ஆறுதலாக தட்டி கொடுத்து ,,பாலாஜி கொண்டு வந்த டீ யினை மதுராவிற்கு குடிக்க கொடுத்தாள் சுபா ......

டீ யில் ஓவர் சர்க்கரை சேர்க்க பட்டு இருந்ததால் முகம் சுளி த்தாள் ம துரா ..."ம்ம்ம்ம் ...குடி ராணி ....அதிர்ச்சிக்கு இப்படி தான் குடிக்கணும் ...முழுசா குடி ...."என்றான் பாலாஜி ..

"என்னடி ...என்ன ....ஆச்சு ...கனவூ ஏதாவது கண்டு பயந்துட்டியா என்ன ?"என்றால் சுபா மதுராவை தட்டி கொடுத்த படி .

கேவல்களுக்கு இடையே திக்கி ,திணறி ,"அவ ....அவ ...அந்த சோனா .........என்னை வெளியே அனுப்பிட்டு ...அங்கே அந்த சுமன் ......சுமனை காரோடு காத்திருக்க வைத்து இருக்கிறாள் .......அவன் ....அவன் ....என்னை .....எனக்காக ......இவ போன் செய்து எந்த ஹாஸ்பிடலில் இருக்கே ...எந்த ஹோட்டலில் ,பங்களாவில் இருக்கே என்று கேட்கிறாடீ ...........அவன் ....என்னை ...."என்று மேல பேச முடியாமல் முகம் மூடி அழ ஆரம்பித்தாள் மதுரா .

தோழியை கெட்டியாக அணைத்து ,அவளின் அழுகை நிற்கும் வரை தட்டி கொடுத்த சுபா ,மதுரா தன்னை திட படுத்தி கொண்டதை அறிந்து ,"கண்ணை முதலில் துடை ......நீ பயப்படும் படி எதுவும் நடக்க போவதில்லை ......இது உனக்கு தான் நியூஸ் ....நேத்து மாலை முதல் இது எங்களுக்கு தெரியும் ."என்றாள் சுபா .

"திகைத்தவளாய் தோழியின் முகத்தையும் ,பாலாஜியின் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள் மதுரா .

"டீ ......சுபா .....சுபா ......அ .....அண்ணா .....இவ என்ன அண்ணா சொல்றா ?????"என்று திக்கி திணறினாள் .

"மதுரா பதட்ட படாதே .......ரிலாக்ஸ் ......உனக்கு ஒன்றும் ஆக விட மாட்டோம் .....முதலில் இதை மனதில் பதிய வை ....இரண்டாவது உன்னை காக்க உன்னை சுற்றி எவ்வளவூ பேர் இருக்கோம் தெரியுமா ???.....உனக்கு எதுவுமில்லை .....ரிலாக்ஸ் ...இந்தா தண்ணீர் குடி .....நேத்து நைட் எந்த வித ஆபத்தும் இல்லாமல் வீடு வந்தாயே அதை பற்றி மட்டும் நினை .....உனக்கு எந்த ஆபத்தும் வர விட மாட்டாங்க ......என்ன புரியுதா ?"என்றான் பாலாஜி மதுராவின் கைகளை பிடித்து கொண்டு

அவன் பேச்சால் பயம் நீங்கிய மதுரா ,"அப்போ ....அங்கே ...அங்கே சுமன் வருவான்னு தெரியுமா .....சொல்லி இருந்தா போய் இருக்க மாட்டேனே ....."என்றாள்

"சோனா ஏதோ பிளான் போடறான்னு தெரியும் ...அதுக்கு கம்பெனி செலவூ செய்ய மட்டும் தானே தெரியும் ....கணக்கு வழக்கு எல்லாம் அது எந்த காலத்துல பார்த்து இருக்கு ????? ஒரு வருடமாய் உன்னை சிக்க வைக்க இதே வேலையாய் தானே அலையறா .....ஆனா சுமனை இதில் இழுத்து விட்டு அவ்வளவூ கேவலமா போவான்னு நாங்க யாருமே நினைக்கலை .....விஷயமே அங்கு போன பிறகு தான் தெரிய வந்து இருக்கு .....எப்படியோ ஆபத்து எதுவும் நடக்கும் முன் ....உன்னை காப்பாற்றி விட்டோம் ."என்றான் பாலாஜி .

"நான் அவளுக்கு எந்த கெடுதலும் செய்யவில்லையே அண்ணா ....நான் அவ தங்கை முறை ...என்னை போய் சுமனிடம் மாட்டி விட்டு ....ஐயோ கடவுளே ....."என்றாள் மதுரா உடல் நடுங்க .

"சும்மா அந்த சனியனை அக்கான்னு கூப்பிட்டு உறவூ முறைக்கு உண்டான மரியாதையை கெடுத்து விடாதே ....அவளின் சொந்த தங்கை பூரணியை அவளிடம் இருந்து காப்பாற்ற உன் பெரியப்பா ,பெரியம்மா ,பாட்டி ஹாஸ்டெலில் சேர்த்து இருக்காங்க ....அவளுக்கே அந்த நிலைமை என்றால் ....நீ சித்தப்பா மகள் தானேடீ ......புத்தி கெட்ட பைத்தியக்காரிக்கு யாராய் இருந்தா என்ன ....."என்றாள் சுபா வெறுப்போடு .

"அண்ணா ......உண்மையில் அங்கே தோப்பில் சுமன் இருந்தானா ?"என்றாள் மதுரா நம்ப முடியாமல்

"உன்னிடம் ஏன் நான் பொய் சொல்ல போகிறேன் ...சுமன் வந்தான் ......ஒன்றை நினைவில் வை ....ஆயிரம் சுமன் வந்தாலும் உன்னை காக்க ஆள் இருக்கு .....இந்த ஒரு வருடமாய் உன்னை உனக்கே தெரியாமல் காப்பாற்ற தெரிந்தவருக்கு இனியும் காக்க தெரியும் ....நீ சும்மா பயப்படாதே ..."என்றான் பாலாஜி .

"அவன் ...அந்த பொறுக்கி ....ரத்தன் சிங் மனைவியையே கொன்று விட்டவன் ஆயிற்றே ....அவர் எவ்வளவூ பெரிய கோடீஸ்வரர் .....அவராலேயே அவர் மனைவியை காக்க முடியவில்லையே அண்ணா .....நான் எல்லாம் எந்த மூலை .....சோனா வேறு உடன் இருந்தே அவனுக்கு உதவூகிறாளே ...."என்றாள் மதுரா கண்கள் கலங்க .

"மதுரா ! ரத்தன் சிங்க்கு வார்னிங் தர யாரும் இல்லை .....கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டார் .....ஆனால் உன் விஷயம் அப்படி பட்டது இல்லையே ......ஆரம்பம் முதல் உனக்கான ஏற்பாடுகள் பக்காவா செய்து இருக்கார் ...ஒரு வருடமாய் உன்னை சுற்றி உனக்கே தெரியாமல் பாதுகாப்பு வளையம் போட்டு இருக்கார் ....சுமன் ஆபீஸ் வரும் போது எல்லாம் கரெக்ட்டா நீ எப்படி சுபாவோடு வெளியே போனாய் ???நீ முதலில் தங்கி இருந்த ஹாஸ்டல் பக்கம் அடிக்கடி சுமன் வந்துட்டே இருந்தான் .....அதனால் தான் உன்னை இங்கே ,இந்த வீட்டில் எங்களோடு தங்க வைத்து இருக்கார் ....இந்த ரெண்டு தெரு முழுவதும் நமக்காக என்றால் உயிரை கொடுக்கவோ ,எடுக்கவோ தயங்காத சபரி மாதிரி ஆட்கள் உண்டு ....ஒரு குரல் கொடுத்தால் போதும் ....எனக்கே கார் ஓட்ட தெரியும் தான் ...ஆனால் ஒவ்வொரு முறையும் சபரி வந்து ஏன் கார் ஓட்ட வேண்டும் என்று யோசித்து இருக்கிறாயா ????எல்லாம் உன் பாதுகாப்பிற்காக தான் ......சுபா ,சபரி ,என்னிடம் கூட லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி உண்டும்மா ...."என்ற பாலாஜியின் பேச்சை கேட்டு பேந்த பேந்த விழித்தாள் மதுரா .

"என் ஹாண்ட் பாகில் பெப்பர் ஸ்பிரே ,வெளிநாட்டு ஸ்டன் கன் ,சிறு கத்தி ,மிளகாய் போடி இருப்பதை பார்த்து அடிக்கடி கிண்டல் செய்வாயே ....'உன்னை எல்லாம் எவண்டீ கடத்த போறான் 'என்று ....நியாபகம் இருக்கா ???இவற்றை நான் வைத்து இருப்பது என் பாதுகாப்பிற்காக இல்லை ....உன் பாதுகாப்பிற்காக ....உன்னோடு நான் கராத்தே கிளாஸ் சேர்ந்ததும் உன் பாதுகாப்பிற்காக தான் ..... நள்ளிரவிலும் சபரி அண்ணனின் நண்பர்கள் ,கூர்க்காவோடு சேர்ந்து ரோந்து செய்வார்கள் அது உனக்கு தெரியுமா ???நேற்று கூட உன்னை ட்ராப் செய்து விட்டு சபரி அண்ணா எங்கேயும் போய் விடவில்லை .....அங்கேயே தான் நிற்க வைக்க பட்டு இருந்தார் .....அந்த இரவூ வேளையில் சுட சுட 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு கூட வந்ததேடீ ...கவனிக்கவில்லையா .....சுமன் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது .....நீ கவலை படாமல் இரு .....இந்த அக்ரீமெண்ட் .கடன் எல்லாம் கூட உப்பு பெறாத விஷயம் உன்னை காக்க இரவூ ,பகல் பாராமல் பம்பரமாய் சுழல ஆள் இருக்கும் போது எதற்கடி இப்படி பயப்படுறே ???பாரதியார் ,பாரதிதாசன் கவிதைகளை விரும்பி படிப்பாயே ,"அச்சமில்லை ...அச்சமில்லை ...அச்சம் என்பது இல்லையே ...''கோடைவாளினை எடுடா கொடியோர் செயல் அறவே 'என்று மறந்து போச்சா ?எழுந்துருடீ ....சும்மா அழுகாச்சி சீன் போட்டுட்டு இருக்கே ...உனக்காக தான் ஒன் மேன் ஆர்மி யே இருக்கே ....குளிக்க போடீ எருமை "என்றாள் சுபா .

"யார் ...யாரை சொல்றே சுபா .அப்பொழுதில் இருந்து ரெண்டு பேரும் யாரோ சொல்வதை நீங்க செய்வது போலவே பேசிட்டு இருக்கீங்க .....ஒரு வருடமாய் என்னை எனக்கே தெரியாமல் காப்பாற்றுகிறார் ,பம்பரமாய் சுழல்வது ,ஒன் மேன் ஆர்மி ,விஷயத்தை முன்னரே கண்டு பிடித்தது ,ஹோட்டல் சாப்பாடு ,நேற்று நைட் காப்பாற்றியது .......யார் சுபா ...யார் செய்தது இவ்வளவும் ....எனக்கு உங்களை தவிர இங்கு வேறு யாரையும் தெரியாதே !"தன்னை காக்க ஒரு வருடமாய் போராடும் அந்த உயர்ந்தவன் யார் ....இந்த ஊரில் சோனாவை ,சுமனை எதிர்க்கும் துணிவூ யாருக்கு உண்டு ????

"நம்ம கருணா தான் ....வேறு யார் உனக்காக போராடுவார்கள் ?"என்றான் பாலாஜி .

"என்ன ........து ......விஜய்யா ........அந்த ரோபோட்டா ......!"அதிர்ச்சியில் கட்டிலை விட்டு எழுந்தே விட்டாள் மதுரா.

"அடிங்க ....மவளே உன்னை காப்பாற்றினா ....நீ அவரை கிண்டலா பண்றே ....பாரு பாலு ...ரோபோட்டம் லே ரோபோட் .....நைட் ரெண்டு மணி வரை உனக்கு பாதுகாப்பாக பின்னாடியே வந்த மனுசனுக்கு நீ கொடுக்கும் மரியாதை இது தானடீ குரங்கே ......என்ன நேத்து உன் அக்காக்காரி உடன் இருந்ததால் அவள் காற்று வீசுதா .....உன் உயிரை ,மானத்தை காத்தவருக்கு ...ச்சே ....."என்று பொரிந்து தள்ளினாள் சுபா .

"இல்லை ...இல்லடீ ...அவர் எப்பவுமே என் கிட்டே எரிஞ்சு எரிஞ்சு விழுவாரில்லே ......அதான் ......உன் கிட்டேயே பல முறை சொல்லி இருக்கேன்னேடீ ......"என்றாள் மதுரா இறங்கி போன குரலில்

PENANCE WILL CONTINUE................ தவம் தொடரும்...................

anitha rajkumar
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
55036c2943eea.jpg

"இல்லை ...இல்லடீ ...அவர் எப்பவுமே என் கிட்டே எரிஞ்சு எரிஞ்சு விழுவாரில்லே ......அதான் ......உன் கிட்டேயே பல முறை சொல்லி இருக்கேன்னேடீ ......"என்றாள் மதுரா இறங்கி போன குரலில்

"எரிஞ்சு எரிஞ்சு விழ அவர் என்ன எரிநட்சத்திரம் பாரு .....எருமை மாடே ......ஆழம் தெரியாம காலை விடறே என்று எத்தனை தடவை வேற வேலை வாங்கி தரேன்னு கெஞ்சாத குறையாய் கேட்டார் ........இத்தனை பேர் சொன்னால் ஏதாவது காரணம் இருக்கும் என்று உன் மர மண்டைக்கு புரியலை என்றால் அவரை ஏன் குறை சொல்கிறாய் ?????........உன் அக்காக்காரி ஏதாவது அது மற்றவருக்கு ஆபத்தாய் தானே முடியும் ......உங்க அப்பா ,அம்மா வாழ்கையில் கும்மி அடிச்சு இருக்காளே அதன் பிறகும் இங்கே தான் வேலை செய்வேன் ,பாச பயிரை வளர்ப்பேன் .....அவ உலக ,மகா ,மெகா உத்தமி என்று கண்ணை மூடி பாழும் கிணற்றில் விழுவேன் என்று லூசு மாதிரி சொல்லிட்டே இருந்தால் ,உன்னை என்ன அவர் மடியில் வைத்து கொஞ்சுவாரா .....இவளும் இவ அப்பாவும் சேர்ந்து தான் 'அபியும் நானும் -பார்ட் 2 உருவாக்கறாங்க ...போடி ....வாயில் ஏதாவது வந்துட போகுது "என்றாள் சுபா கோபத்தோடு .

விஜய் மடியில் தான் இருப்பது போலவும் ,அவன் தன்னை கொஞ்சுவது போலவும் கற்பனை குதிரை தறி கெட்டு ஓட அதிர்ந்து போனாள் மதுரா .(TUBELIGHT இப்போ தான் கண்சிமிட்டுகிறது )

'கடவுளே !என்ன இது ......இப்படி எல்லாம் நினைப்பது நான் தானா ?????ஒரு நாளைக்குள் எத்தனை அதிர்ச்சியை தான் தாங்குவது ????.....எவ்வளவூ பெரிய விஷயம் போய்ட்டு இருக்கு ....இப்போ போய் இப்படி எல்லாம் ஏன் நினைக்க தோன்றுது ????மதுரா உனக்கு பைத்தியம் தான் புடிச்சி போச்சு ...... ச்சே ச்சே ...இல்லை இல்லை ...எல்லாம் இந்த சோனா சனியனால் வந்தது ......திரும்ப திரும்ப இல்லாத 'AFFAIR ' இருக்கு இருக்குன்னு சொல்லி சொல்லியே மண்டையை குழப்பி விட்டாள் .....விஜய்யோடு சேர்த்து வைத்து பேசியதால் வந்த வினை ......என்னது ...விஜய் யா ....? கருணா சார் எப்போதில் இருந்து விஜய் ஆனது ???எப்படி ஆனது ?........வாழ்கை ,மானம் ,உயிர் கேள்வி குறியாக்க முயலும் சகோதரி ,அவளுக்கு சிங் சாங் அடிக்கும் கேடு கெட்டவன் ,இவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்ற போராடும் விஜய் என்று அனைவரும் வேலை செய்துட்டு இருந்தால் மவளே உனக்கு கொஞ்சல் கேக்குதா அதுவும் மடியில் வைத்து ......'என்று மனசாட்சி வறுத்து எடுக்க மிரண்டு போனாள் மதுரா

"மதுரா !சோனா போன்ற ஒரு ஜென்மத்துக்கு கணவன் என்பது சாதாரண விஷயம் இல்லைம்மா ....கூடவே சொர்ணா ,கஜேந்திரன் போன்ற அரக்க கூட்டம் இருந்தால் யாராய் இருந்தாலும் ரோபோட் தான் ஆவார்கள் ....இவர்கள் முன் மற்றவர்கள் நிம்மதியாக சிரித்து வாழ்ந்து விட்டால் அதை முதலில் கெடுத்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள் ......"என்ற பாலாஜி சொர்ணா ,கஜேந்திரன்,சோனா மற்றவர்கள் வாழ்வில் எப்படி எல்லாம் விளையாடி இருந்தார்கள் என்று சில பல உதாரணங்களை கூறினான் .

(ஆமாம் இதுங்க செய்து இருக்கும் வேலை எல்லாம் ராமாயணம் ,மஹாபாரதம் ,புத்த சரிதம் பாரு ...கேட்ட உடன் புண்ணியம் கிடைக்க .....பாலாஜி நீ சொல்லி முடி ...நான் போய் டீ சாப்பிட்டு வருகிறேன் ......)

பாலாஜி சொல்லி முடிக்கவும் ,"இப்போ சொல்லுடீ ...அண்ணா என்ன ரோபோட் டா ????அவராய் இருக்க போய் இந்த துஷ்ட ஜந்துக்களை சமாளிக்கறார் ...அவர் இடத்தில நாம் இருந்தோம் ஒன்று பைத்தியம் ஆகி இருப்போம் ,இல்லை என்றால் சூசைட் செய்துட்டு இருப்போம் .....அதற்கு எல்லாம் தனி கட்ஸ் வேணும்டீ .......இங்க பாரு .....அண்ணா எல்லாத்தையும் பார்த்துப்பார் .....நீ கவலைப்படாதே ...ஒரே வாரத்தில் இந்த அக்ரீமெண்ட் ,கடன் எல்லாத்துக்கும் வழி பண்ணுவார் ......அப்படி செய்த பிறகு தயவூ செய்து ஊருக்கு கிளம்பும் வழியை பாரு ......போய் குளிச்சுட்டு வா ....உனக்கு பிடித்த மஷ்ரூம் பிரியாணி ரெடி ......"என்றாள் சுபா .

"இல்லை ...நீங்க போய் சாப்பிடுங்க ...நான் வரேன் ......கொஞ்சம் யோசிக்கனும் ......இது எல்லாவற்றையும் பொறுமையா அலசி ஆராயனும் ......டைஜஸ்ட் செய்யனும் .....கொஞ்ச நேரம் தனியா விடுங்க ....."என்றாள் மதுரா தளர்ந்து போனவளாய் .

"இப்பொழுதாவது செய் .....என்ன லுக்கு ???....மூளையை பயன் படுத்தி யோசிப்பதை சொன்னேன் ....நாட்டுக்கு இது இப்போ ரொம்ப தேவை மா ......யோசி ......"என்று மதுராவிற்கு ஒரு கொட்டு வைத்து சென்றாள் சுபா .

சுபாவும் ,பாலாஜியும் சென்ற பிறகு தன்னை தூய்மை செய்து கொண்டவள் ,ரெடி ஆகி வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் இருந்த மல்லி ,முல்லை பந்தலின் கீழ் உள்ள சேரில் அமர்ந்தாள் .அவளுக்கு அந்த வீட்டில் பிடித்ததே அந்த தோட்டம் தான் .அந்த வீடு நான்கு புறமும் இடம் விட்டு ,தாழ்வாரத்துடன் கூடிய இரண்டு அடுக்கு வீடு .பாலாஜியும் சுபாவும் மேலே தங்கி இருந்தனர் .மதுரா கீழ் போர்சன்னில் இருந்தாள் .வீட்டை சுற்றி தோட்டம் ,மரம் ,செடி ,கொடி என்று கண்ணிற்கும் ,மனதிற்கும் குளுமையாக இருக்கும் .மதுரா பாதி நேரம் தவம் இருப்பதே அந்த தோட்டத்தில் தான் .....சில இடங்களை ,மனிதர்களை பார்க்கும் போது மட்டுமே பூர்வ ஜென்ம பந்தம் போலே ஒரு உறவு இருப்பதாக தோன்றும் ...இந்த வீடு மதுராவிற்கு அப்படி ஒரு பிடித்தம் .....மதுரா ,சுபா கை வண்ணத்தில் மா ,தென்னை ,வேப்பிலை மரங்களும் ,காய்கறி ,கீரை வகைகளும் செழித்து வளர்ந்து இருந்தது .

வீட்டின் ஒரு பக்கம் இரண்டு கொம்புகள் நடப்பட்டு முல்லை,மல்லி பந்தல் அமைக்க பட்டு ,அதன் கீழ் மூவர் அமரும் படி நாற்காலி ,டேபிள் போட பட்டு இருக்கும் .குளு குளுவென்று காற்று வீச அந்த பந்தலின் கீழ் அமர்ந்து இசை ரசிப்பதும் ,புத்தகம் படிப்பதும் மதுராவிற்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு .மனம் எப்பொழுதாவது கலங்கும் போது தாய் மடியாய் அவளுக்கு நிம்மதி தருவதும் அந்த தோட்டம் தான் .இன்று மனம் கலங்கி போய் இருக்க ஆறுதலை தேடி அந்த அந்த பந்தலின் கீழ் அமர்ந்தாள் .

கண்கள் இலக்கற்று வெறிக்க ,பலதை நினைத்து குழம்பி கொண்டு இருந்தவளின் காதில் பக்கத்து
வீட்டு டீவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்த பாடல் விழுந்தது .

"யாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ....
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவென்றால் முள்ளாகும்
உயிர் எல்லாம் கல்லாகும்
...............................................
வேட்டையாடும் மான் ஆனேன்
வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல் நாட்டில்
வாழும் பெண் ஆனேன்
.......................................................................
அன்னை பெற்றாள் பெண் என்று ....
அதனால் தானே துயர் இன்று ....
கண்ணை தந்த தெய்வங்களே
கருணை தந்தால் ஆகாதா ????

.................................................................
அழகை காட்டும் கண்ணாடி
மனதை காட்ட கூடாதா ????
பழகும் போதே நம்மை ,தீமை
பார்த்து சொல்ல கூடாதா ???
.......................................................
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகை இல்லா
மனிதர் இங்கே எவர் உண்டு ????


இவளுக்காகவே எழுத பட்ட வரிகளோடு ஒலித்தது .எவ்வளவூ உண்மையான வரிகள் .!!!!

உறவூகாரியான சோனா முள்ளாகி தானே குத்தி கிழிக்கிறாள் ........மனம் கல்லாகி போனதால் தானே சுமன் போன்ற வடிகட்டின உலகமகா அயோக்கியன் ,பெண் பித்தனிடம் ,பெண்ணாய் இருந்தும் தன்னை மாட்டி விட முடிந்தது ?????அன்னை பெண் என்று பெற்று இருக்கா விட்டால் சோனாவிடமும் ,சுமனிடமும் மாட்டி இருக்க வேண்டாமே ......முகம் பார்க்கும் கண்ணாடியும் ஒருவரிடம் நாம் பழகும் போதே அவரின் நன்மை ,தீமையை காட்டி இருந்தால் சங்கரனும் ஏமாறாமல் இருந்து இருப்பாரே ........வாழ்த்தியவாறு தானே கையில் வாள் கொண்டு கழுத்தை அறுத்தாள் .போற்றுவது போலெ நடித்து விஷத்தை கக்கி விட்டாளே .....

penance will continue.............
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயர்திரு சத்யவாணி அவர்களை "காட்சி பிழையால் காதல் கொலென் ','உரமும் உயிரும் உழவே '''என் உயிரின் வலி (கேள்வியில் )மறித்து உயிர்க்கிறேன் ' போன்ற நாவல்கள் மூலம் அறிவோம் ...

நேரம் எடுத்து என்னுடைய "என்ன தவம் செய்தேன் " கதையினை படித்து கவிதை மூலம் புகழ் ஆரம் சூட்டி உள்ளார் ....என் கிறுக்கல்களுக்கு இது மிக உயர்ந்த அங்கீகாரம் ...நன்றிகள் பல கோடி தோழி .....

அவரின் கருத்துக்களை அப்படியே கொடுத்து உள்ளேன் கவிதையோடு

hi honey..

semma story....

dialogue flow is fantastic...

counter dialogues are very nice...

your explanation about the character are too good...



என்ன தவம் செய்தேன் உன்னை காவலனாக பெற

என்ன பாவம் செய்தேன் ராட்சசியிடம் சசிக்கி தவிக்க

பாவம் தீர்ந்து தவத்தின் வரம் கைசேரும் நாளில்

என் வாழ்வும் உன் வாழ்வும் மாறுமோ

என்னில் சிறு மாற்றத்தை விதைத்த என் ரட்சகனே

பகை கொண்டவர்களின் கதை முடிக்கும் வல்லவனே

என்ன தவம் செய்தேன் நானறியேன்

நடக்க போவதை விதி அன்றி வேறு யார் அறிவர்..



இந்த அன்புக்கு ,அங்கீகாரத்திற்கு எதை ஈடாக கொடுக்க முடியும் ?????வாய் வார்த்தை நன்றி இதற்கு ஈடு ஆகவே முடியாது
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'பறக்கும் பாவை' படத்தில் சரோஜா தேவி மனம் நொந்து பாடும் பாடல் .அங்கு அவரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தில் இருந்து காப்பாற்ற M .G .R வந்தார் .

'இங்கு என்னை காப்பாற்ற யார் வர போவது ?'என்று கண்கள் கலங்க தலையை இரு கைகளால் பிடித்து அமர்ந்து இருந்தாள் மதுரா .

'ஏன் விஜய் இல்லையா ????/ஒரு வருடமாய் காப்பாற்றுவதாக தானே சொன்னார்கள் .....இனி மேல் வேறு ஒருவன் வந்து காப்பாற்றும் நிலையிலா நீ இருக்கிறாய் ????? விஜய் ஒருவன் போதாதா உன்னை காக்க ???'மனம் கேள்வி எழுப்ப அதிர்ந்து போனவளாய் நிமிர்ந்து அமர்ந்தாள் மதுரா .

'உண்மை தானே ....அந்த சோனாவின் ஈன செயல் தெரிந்து தானே 'வேலை விட்டு போ போ 'என்றான் ......வாரத்திற்கு ஒரு தடவையாவது 'வேறு வேலை வாங்கி தருகிறேன் 'என்று சொல்லாமல் இருந்தது இல்லையே ......அப்பொழுதெல்லாம் அப்படி சொன்னவன் மேல் எவ்வளவூ கோபம் வரும் ?அவன் ஒரு சிறு தவறு கூட கண்டு பிடித்து விட கூடாது என்று தானே அப்படி ஓடி ஓடி உழைத்தேன் ......சுபாவிடம் ,ஆபீஸ்யில் மற்றவரிடம் விஜயையை எவளோ திட்டி இருப்பேன் ,எத்தனை விதமாக கிண்டல் செய்து இருப்பேன் ...அவன் என்னை காப்பாற்ற அல்லவா என்னுடனே போராடி இருக்கிறான் .சோனா மட்டும் தன் உண்மை முகத்தை காட்டி இருக்கவில்லை என்றால் யார் சொல்லி இருந்தாலும் அவளை பற்றி உண்மை பிம்பம் தெரியாது போய் இருக்கும் .....அந்த அளவிற்கு அவளும் நடித்தே அல்லவா கழுத்தை அறுத்து இருக்கிறாள் ....அதுவும் ஒரு வருடமாய் .....எனக்காக மனைவியை எதிர்த்து போராடி கொண்டு இருப்பவரை எவளோ தப்பாக நினைத்து நானும் படுத்தி இருக்கேன் .....'என்று மனம் அரற்றியது மதுராவிற்கு .

பாலாஜி சோனா ,சொர்ணா ,கஜேந்திரன் பற்றி கூறியவற்றை ஒரு முறை மனதிற்குள் நினைத்து பார்த்தவள் ,அந்த மூன்று அரக்க ஜென்மங்களிடம் மாட்டி முழிக்கும் சேது ,கனகா ,மரகதம் ,பூரணி நிலையை நினைத்து ரத்தமே வடிந்தது மதுராவிற்கு .எதை பற்றி நினைத்தாலும் கடைசியில் விஜய்யிடமே வந்து நின்றது அவள் எண்ணம் ......

விதியும் விஜயயை பார்த்து கை கொட்டி சிரிக்க ஆரம்பித்து இருந்தது .ஒரு வேளை முதலில் சோனா விஷயத்தில் செய்த தவறை சரி செய்ய நினைக்கிறதா ?????வாழ்க்கை யாரையும் வஞ்சிப்பதில்லை என்பது உண்மை தானோ .......

'விஜய் ----எவ்வளவூ உயர்ந்தவன் ...உழைப்புக்கு அஞ்சாதவன் ...அதனால் தானே தொழிலாளர்கள் இவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் .அவர்களுக்கு எதாவது ஒன்று என்றால் இவனும் தானே துடிப்பான் .....தொழிலாளாளர்களுக்கு பார்த்து பார்த்து செய்வதில் இவனை மிஞ்ச ஆளே இல்லையே ....அவர்களின் வீட்டு முக்கிய நிகழ்ச்சிகளில் முதல் ஆளாய் நிற்பவன் இவன் தானே ....அவன் ஆடையகத்தில் வேலை செய்யும் பெண்கள் நிம்மதியாக ,மன நிறைவோடு வேலை செய்ய அனைத்தும் செய்து இருக்கிறானே ....வந்து செல்ல இலவச பஸ் ,வேன் ,மலிவு விலை கான்டீன் ,குழந்தைகள் காப்பகம் ,பெண்கள் பிரிவில் பெண்களே காவல் ,cctv என்று ...இவன் செய்து இருக்கும் பட்டியல் மிக நீளம் .....இதெல்லாம் வீண் செலவூ என்று வானத்துக்கும் ,பூமிக்கும் குதித்த கஜேந்திரன் கூட அரசாங்கமே அழைத்து பாராட்டவும் வாய் மூட வில்லையா !!!ஒரு முதலாளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் விஜய் இல்லை என்றால் வேறு யார் ?????பெண்களை உயர்வாய் ,போற்றி ,மதித்து பாதுகாப்பவனுக்கு போய் ஒரு பேய் மனைவியா ?'என்று பெரு மூச்சு விட்டவளுக்கு ஆறு மாதங்களுக்கு முன் அலுவலகத்தில் சோனா செய்த கூத்தும் ,அதனால் தன் குடும்பம் நிலைகுலைந்த விதமும் நினைவுக்கு வந்தது .

ஆறு மாதங்களுக்கு முன் ........

'இந்தர் ஆடையகத்திற்கு " மூன்று நாடுகளில் இருந்து ஆர்டர் கிடைத்து இருந்தது .மூன்றும் மூன்று விதமான ஆர்டர்.எக்ஸ்ட்ரா ஷிபிட் போட்டு ,இரவு பகல் பராமல் வேலை நடந்து கொண்டு இருந்த நேரம் .விஜய்யும் ,சேதுவும் ஆபீஸ் ,குடௌன் ,பாக்டரி என்று மாறி மாறி ஓடி கொண்டு இருந்தார்கள் .எப்போ சாப்பிடுகிறார்கள் , தூங்குகிறார்கள் என்று கூட அவளுக்கு தெரியவில்லை .பாதி நாள் அங்கேயே தங்கி இருந்தார்கள் .அன்று சேது ஏதோ வேலையாக வெளியே சென்று இருக்க ,விஜய் ஆடை உருவாகும் தொழிலகத்திற்கு மேற்பார்வை இட சென்று இருக்க ,மத்திய உணவூ வேளை என்பதால் அலுவலக ஆட்கள் உணவூ உண்ணும் அறைக்கு சென்று இருந்தனர் .

சேதுவும் ,விஜய்யும் வெளியே செல்லும் சமயங்களில் அலுவலகத்தினை நிர்வகிப்பது மதுரா .விஜய் அலுவலக அறையில் அமர்ந்து மத்திய உணவினை அவசர அவசரமாக சுவை கூட அறியாதவளாய் சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .மேலும் இரண்டு ,மூன்று இடங்களில் இருந்து QUOTATION ,PORTFOILIO கேட்டு இருந்தார்கள் .அவர்கள் கேட்டவற்றை அனுப்பி விட்டே அவள் சாப்பிட அமர்ந்தது ,மேலும் விவரங்கள் தேவை பட்டால் அழைப்பதாக கூறி இருந்தனர் அதனால் வேக வேகமாக சாப்பிட்டு கொண்டு இருந்தாள் .

போன் ,லேப்டாப் ,உணவு என்று மாற்றி மாற்றி கண் வைத்தவாறு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அந்த அறையின் வாயில் கதவூ படாரென்று திறந்தது .கதவு திறந்த சத்தத்தில் அதிர்ந்து போய் எழுந்து நின்றாள் மதுரா .கதவூ அடித்த வேகத்தில் ,கதவின் அருகே இருந்த செல்பில் இருந்த பொருட்கள் எல்லாம் விழுந்து சிதறியது .
hamsa_nandini_transparent_white_saree_highres16.jpg

அறை வாயில் மேல் சாய்ந்தவாறு நின்று இருந்தாள் சோனா.அவள் நின்று இருந்த நிலை ,அவள் கோலம் கண்டு மதுரா ஆடி போனாள் .திறந்த வாய் திறந்த படி ,தான் காண்பது கனவா ,நினைவா என்று புரியாமல் மதுரா திகைப்பின் உச்சத்தில் இருந்தாள் .தலை முடி கலைந்து பறக்க ,கண்கள் சிவந்து இருக்க ,அணிந்து இருந்த புடவை தாறுமாறாக கிடக்க ,எந்த நொடியிலும் அவிழ்ந்து விடும் நிலையில் இருந்தது .சரியாக நிற்க முடியாதவளாய் தள்ளாடி கொண்டு இருந்தாள் .

"சோ .....சோனா ...உடம்புக்கு ஏதாவது முடியலையா என்ன ????ஆர் யூ ஆல்ரைட்.?"என்று பதறியவளாய் பெரியப்பா மகளை தாங்கி பிடிக்க ஓடி வந்தாள் .

அவளை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்ட சோனா ,"எங்கடீ அவன் ?"என்றாள் குழறலாக .

"யாரை கேட்கிறே சோனா .....புரியவில்லை ...."என்றாள் மதுரா அதிர்ச்சி நீங்காதவளாய்

"ம்ம்ம் ...எவனோ .....என் புருஷன் ....மை லவ் .....மை லைப் .......என்னை தொட்டு தாலி கட்டிய கணவன் .......விஜய கருணாகரன் ......எங்கே அவன் ?"என்ற சோனா தள்ளாடியவாறு அங்கு இருந்த சோபாவில் பொத்தென்று விழுந்தாள் .

அவள் விழுந்த வேகத்தில் புடவை அவிழ்ந்து தாறுமாறாக தொங்கியது .உணவூ இடைவேளை முடிந்து திரும்பி இருந்த ஆபீஸ் ஆட்கள் மதுராவிற்கு குறையாத திகைப்புடன் பார்த்து கொண்டு இருந்தனர் .மதுராவிற்கும் திகைப்பு தான் என்றாலும் சட்டென்று தன்னை சமாளித்து கொண்டாள்.

""இங்கே என்ன வேடிக்கை ???? செய்ய வேலை இல்லையா ????கருணாகரன் சார் வந்தால் சீட்டு கிழிந்து விடும் ....போங்க போய் உங்க வேலையை பாருங்க ....."என்று வெளியே சென்று சத்தம் போட ,அனைவரும் கலைந்து சென்றனர் .

அவர்கள் சென்ற உடன் அறை கதவை சாத்தியவள் உள்ளே சோனா இருந்த நிலையை கண்டு கண் விழி பிதுங்கி நின்றாள் .உருண்டு ,பிரண்டு மொத்த புடவையும் அவிழ்ந்து தரையில் கிடந்தது .

"ஏய் .....கூப்பிடுடீ அவனை ......என் கருணா உடனே வேண்டும் ....அவன் எங்கே ....கர் டார்லிங் .....ஐ வாண்ட் ஹிஸ் கிஸ் .......ஐ வாண்ட் ஹிஸ் ஹூக் ....ஐ வாண்ட் ஹிம் FULLY நவ் ........வேணும் ....அவன் எனக்கு மட்டும் வேண்டும் ......"என்று உரக்க கத்தி கொண்டு இருந்தாள் சோனா .

சோனா மனைவியாய் காதலோடு வரவில்லை ,குடி போதையில் வேறு எண்ணங்களோடு வந்து இருக்கிறாள் என்பது புரிய மதுராவின் நிலை சொல்ல முடியாததாய் இருந்தது .அவள் அறிந்த பெண்கள் காதலை கூட இலை மறை காய் மறையாக ஒளித்தே காட்டும் குடும்ப பெண்கள் .இப்படி பகலில் பட்ட வர்தனமாக நடு ஆபீஸ் அறையில் காமத்தை முரசு இல்லா குறையாய் அறிவிப்பது அவளால் ஜீரணிக்க முடியவில்லை .

அங்கு நிற்கவோ ,சோனாவின் சென்சார் உளறல்களை கேட்கவோ மதுராவால் முடியவில்லை .சட்டென்று அருகில் இருந்த பாத்ரூமிற்குள் நுழைந்து கதவின் மேல் சாய்ந்து தன்னை நிலை படுத்தி கொண்டாள் .தன்னை சமாளித்து கொண்டவள் விஜயையை செல்லில் அழைத்தாள் .
"விஜய் ஹியர் ...."என்றது எதிர்முனை கம்பீரமாக .

மதுராவிற்கு குரலே எழும்பவில்லை .சோனா ஏற்படுத்தி இருந்த நிலையில் அவன் குரலை கேட்கவே லஜ்ஜையாக இருந்தது அவளுக்கு .....ஒரு ஆணிடம் இந்த விஷயத்தை அவளால் சொல்ல முடியவில்லை .

"ஹலோ ......விஜய் ஹியர் ......மே ஐ நோ ஊ ஹிஸ் காலிங் ....."என்றவன் பதில் வராது போகவே காலர் ID பார்த்தான் .

"மிஸ் .மதுராக்ஷி ......கேன் யூ ஹியர் மீ ......நான் பேசுவது கேட்குதா ????லைனில் தான் இருக்கீங்களா ?"என்றவன் பதில் வராது போகவே ,"மதுராக்ஷி ....மதுரா .....மதுரா .....கேட்குதா "என்று பல முறை கேட்டு விட்டான் .

அவசரம் என்றால் ஒழிய மதுரா அழைக்கமாட்டாள் என்பதாலும் ,அழைத்து விட்டு இப்படி வெகு நேரம் பேசாமல் இருக்க மாட்டாள் என்பதாலும் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தான் விஜய் .

"மதுரா !....என்னம்மா ஆச்சு .....பேசு ......என்ன ஆச்சு ...."என்றான் தன்மையாக

விஜய்யின் குரலில் என்ன உணர்ந்தாளோ ,"ச ....சார் ....சார் ....."என்று தந்தி அடித்தாள் .

"சொல்லுங்க மதுரா .....என்ன விஷயம் ...எதுவா இருந்தாலும் தைரியமாக சொல்லுங்க ...என் கிட்டே என்ன தயக்கம் ????சொல்லுங்க "என்றான்

"ச ...சார் ...அக்கா ....மேடம் ....சோனா மேடம் .....மேடம் ...இங்கே வந்து இருகாங்க.நீங்க உடனே வாங்க சார் "ஒருவழியாய் எதையோ உளறி கொட்டினாள் மதுரா பதட்டத்தோடு

சற்று நேரம் எதிர் முனையில் மௌனம் நிலவியது .அவனிடம் இருந்து பதில் வராது போகவே மதுராவின் பதட்டம் அதிகமாகியது .

"சார் ....சார் ...கருணா சார் ...லைனில் இருங்கீங்களா ...சார் ....சார் ..."என்று பல முறை அழைத்தாள் மதுரா .

"லைனில் தான் இருக்கேன் மதுரா .....உன்னை ஏதாவது அவள் சொன்னாளா ...ஏதாவது திட்டிடாளா ?.....சொல்லு மது ....."என்றான் பதட்டத்துடன் .

ஒரு கணம் மதுரா பேச்சு இழந்து நின்றாள் என்றால் மிகையல்ல .அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை ஸ்தம்பிக்க வைத்து இருந்தது .

'கருணா சார் ...பதட்ட பாடுகிறாரா .....அதுவும் எனக்காகவா .....மனைவியை பற்றி விசாரிக்காமல் என்னை பற்றி ஏன் எவ்வளவோ கவலை படுகிறார் ?'என்ற கேள்வியை எழுப்பியது அவள் மூளை .

'அடியேய் ....மதுரா......நட் போல்ட் கழண்டு போச்சா உனக்கு ?????சோனா அடிக்கும் கூத்தில் லூசு ஆகி விட்டாயா என்ன ......நீ யாரு அவருக்கு ??????உனக்காக அவர் ஏன் கவலை பட போகிறார் ....மனைவியின் குணம் தெரிந்து இருப்பதால் விசாரித்து இருப்பார் ....அதை போய் ....லூசு லூசு ....'என்று சரியாய் தவறாக தாளித்தது மனசாட்சி .

அவள் தனக்குள் வாதத்தில் இருக்க ,அதற்குள் 10 முறை அவள் பெயரை அழைத்து விட்டான் விஜய் ."மதுரா ....மது ....மது ......என்னம்மா ....பேசு .......பேசும்ம்மா .....மது ."இந்த முறை அவன் பதட்டம் வித்தியாசமாக மதுராவின் மனசாட்சிக்கே தோன்றியது.

ஆனால் அதை பற்றி மேலும் ஆராயாமல் ,"சார் ...சார் ...எனக்கு ஒன்றும் இல்லை சார் ....மேடம் எதுவும் என்னை சொல்லலை சார் ......சொல்லும் நிலையிலும் அவங்க இல்லை சார் ...சார் ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார் ......ப்ளீஸ் சார் ....."என்றாள் மதுரா .

"வரேன் ...எதற்கும் கவலை படாதே மது ...ஐ ஆம் ஆன் தி வே ...."என்றான் விஜய் அவசரத்துடன் .

மதுரா மீண்டும் திகைத்தாள் ....இன்று திகைப்பை,பல அதிர்ச்சிகளை முழு குத்தகைக்கு எடுத்து இருக்கிறோம் போல் இருக்கிறது என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை அவளால் .எதற்குமே பதட்ட படாத விஜய்யின் நிதானம் அந்த நேரத்தில் மிஸ் ஆகுவதை உணர்ந்தாள் .

'மனைவிக்கு என்னவோ ஏதோ என்று பதறி விட்டான் போல் இருக்கு 'என்று அன்று தான் நினைத்தது சரியில்லை என்று இன்று தோட்டத்தில் யோசிக்கும் போது புரிந்தது மதுராவிற்கு .

PENANCE WILL CONTINUE............... தவம் தொடரும்
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ் ......என்ன தவம் செய்தேன்னுக்கு தாங்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி .உங்களின் கருத்துக்கள் பக்கா மாஸ் .....தேங்க்ஸ் dears

பெரிய எபிசொட் கேட்டு இருந்தீர்கள் .... அட்மின் டீமுக்கு update அனுப்ப மெயில் id கேட்டு இருக்கிறேன்...எப்போது லிங்க் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை ...தினமும் இரவு அப்டேட் அனுப்பி விடுவதாகவும் ,காலை 9-10 மணிக்குள் வழக்கம் போலெ அப்டேட் லிங்க் கொடுக்குமாறு கேட்டு உள்ளேன் .பதில் க்கு வைட்டிங் .....லிங்க் இன்று கொடுத்தால் அப்டேட் செய்ய முடியும் ........சோ mail id,link கிடைத்தால் பதிவூ இடுகிறேன் ....

நன்றி ......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM ---20 தவம் 20
09-1402317149-karan-singh-grover-2-300513.jpg


அன்று விஜய் கொண்ட பதட்டம் தனக்கானது ...அன்று அவன் காட்டிய அக்கறை தனக்கானது .அவன் பட்ட கவலை அவளுக்கானது 'என்பது இன்று புரிய உடல் சிலிர்த்தது மதுராவிற்கு

'சார் வர குறைந்தது அரை மணி நேரமாது ஆகும் ....அது வரை இவளை எப்படி சமாளிப்பது ???திரும்பவும் சென்சார் வார்த்தைகளை பேசினால் என்ன செய்வது ?'என்று யோசித்தவாறே பாத்ரூமில் இருந்து வெளியே வந்த மதுரா திகைத்தாள் .

சோபாவில் உருண்டு ,பிரண்டு கொண்டு இருந்த சோனாவை அந்த அறையில் காணோம் .அவள் புடவை மட்டும் கார்ப்பெட்டில் கிடந்தது .

'அப்படியே வெளியே போய் விட்டாளா ...கடவுளே !'ஒரு கணம் மதுராவின் இதய துடிப்பு நின்றே போனது .அவள் அப்படி செய்ய கூடியவள் தான் என்பதால் மதுரா விதிர்விதித்து போனாள் .ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் ,விஜய் மானம் கப்பல் ஏறாமல் கடவுள் தான் காப்பாற்றினார் போல் இருக்கிறது .சோனா சோபாவில் விழுந்த உடன் கதவை சாத்தி இருந்த மதுரா லாக் செய்ய மறக்கவில்லை .

'கதவூ லாக் ஆகி தானே இருக்கு ...இவ எங்கே போய் தொலைஞ்சா ....?'என்று மதுரா நினைப்பதற்கும் ,அந்த அறையில் இருந்த விஜய்யின் படுக்கை அறையில் இருந்து ஆங்கில பாடல் ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது .

விஜய்யின் அந்த ஆபீஸ் அறை நான்கு பகுதிகளாக பிரிக்க பட்டு இருக்கும் .முன்புறம் மதுராவிற்கான பி.ஏ அறை .அவன் அறையில் இருந்து கண்ணாடி தடுப்பால் பிரிக்க பட்டு இருக்கும் .உள்ளே வந்தால் விஜய் ஆபீஸ் அறை .மூன்று அறைகளாக பிரிக்க பட்டு இருக்கும் .ஆபீஸ் அறை ,பாத்ரூம் ,படுக்கை அறை .வேலை அதிகம் உள்ள நாட்களில் சேதுவும் ,விஜய்யும் அங்கேயே உறங்கி விடுவார்கள் .இன்று அந்த அறையில் ஆடை அவிழ்ந்து கிடப்பதை கூட உணராமல் போதை ஊசியினை போட்டு கொண்டு இருந்தாள் சோனா .


மதுராவிற்கு மீண்டும் ஒரு முறை இதயம் நின்று பின் துடித்தது .குடி ,போதை மருந்து பழக்கம் சோனாவிற்கு உண்டு என்பதை மதுராவில் ஏற்கவே முடியவில்லை .அந்த அறை கதவை சாத்தியவள் ,தன்னை சமாளித்த படி சேரில் வந்து அமர்ந்தாள் .இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்த பிறகே அவள் படபடப்பு குறைந்தது .

சோனாவின் வெளிநாட்டு கலாச்சாரம் ,உடை ,உணவூ பழகும் விதம் என்று அனைத்திலும் மிக அதிகமாவே தெரியும் என்றாலும் ,இன்றைய ஆட்டம் வரம்பு மீறிய ஒன்று .

'ஒருவேளை நாம தான் திருமண உறவை தவறாக நினைக்கிறோமோ .....திருமணம் ஆன பின் பெண்கள் தங்கள் கணவனிடம் இப்படி தான் வெளிப்படையாக இருப்பார்களோ .....தனக்கு தெரிந்த எந்த பெண்ணும் இது போலெ நடந்தது இல்லையே .....இப்படி பட்டவர்த்தனமாக யாரும் இல்லறத்தை மூன்றாம் நபரின் முன் வெளியிட்டதில்லையே .....குடி ,போதை பழக்கம் ....இன்னும் வேறு என்ன எல்லாம் பழகி வைத்து இருக்கிறாள் ..'முதன் முறையாக சோனாவின் முகமூடி விலக ,அங்கு தென்பட்ட கோரம் ,விகாரம் மதுராவை திணற வைக்க ,தலை வலிப்பது போலெ தோன்ற இரு கைகளால் தலையை பிடித்து அமர்ந்து விட்டாள் .

அப்படியே எவ்வளவூ நேரம் இருந்தாளோ ,கதவூ தட்ட படும் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள் .விஜய் நின்று இருப்பதை பார்த்து திகைத்து போனாள் .அரை மணி நேர பயணத்தை பதினைந்து நிமிடங்களில் கடந்து வந்து இருக்கிறான் .

'மனைவி மேல் அவ்வளவூ அக்கறை ,காதல் போல் இருக்கு ....இப்படியொரு காதலை அடைந்த சோனாவிற்கு வாழ தெரியவில்லையே .'என்று தான் அன்று கவலை பட்டது எல்லாம் வீண் .

விஜய் அவ்வளவூ வேகமாக கார் ஒட்டி ,பதினைந்தே நிமிடங்களில் விரைந்து வந்ததிற்கான காரணம் சோனா அல்ல ' தான் ' என்று ,இன்று தெளிவாக புரிந்தது மதுராவிற்கு

மதுரா கதவை திறந்த உடன் ,அவசரமாக உள்ளே வந்தவன் ,கதவை மூடி தாழ் இட்டு ,மதுராவின் இரு தோளிலும் கை வைத்து ,"மதுரா !உனக்கு ஏதும் இல்லையே மா .......உன்னை ஏதாவது சொன்னாளா .....எதுவும் உன்னை செய்யலை தானே ......ஆர் யூ ஆல்ரைட் ?"என்றான் ஒருவித தவிப்போடு .

இமைக்க மறந்து போய் ,வாய் திறந்து திறந்து மூட அவன் கைகளில் தான் சிலையாக நின்ற நிலை இன்று மதுராவிற்கு நினைவுக்கு வந்தது .அவன் கண்களில் இருந்தது என்ன ?அவன் முகத்தில் தென்பட்ட பாவம் தான் என்ன ?'இரும்பு மனிதன் 'என்று தொழில் வட்டத்தில் பெயர் எடுத்து இருந்தவனின் அந்த கலக்கம் ,தவிப்பு ,துடிப்பு அன்று எதற்காக என்று புரியாதவளாய் ஸ்தம்பித்து நின்றாள் மதுரா .

அந்த பூம்பாவை ..அவன் கண்களோ ,அவன் கைகளின் தொடுகையோ ,அவனிடம் இருந்து வெளிப்பட்ட ஏதோ நூதன உணர்வூ மதுராவின் இதய துடிப்பை ஒரு கணம் நிறுத்தி ,பின் பன்மடங்கு துடிக்க வைத்தது .நெஞ்சாம் கூடே காலியான உணர்வூ .பிரபஞ்ச சுழற்சியே நின்று விட்டது போன்ற பிரமை கூட மதுராவிற்கு ஏற்பட்டது .இருவரும் அந்த மௌன நிலையில் எவ்வளவூ நேரம் நின்றார்களோ அவர்களுக்கே தெரியாது .

"மது !"விஜய்யின் அந்த அழைப்பு மதுராவிற்கு புதிது போல தோன்றாத்ததையும் ,தனக்கு அந்த அழைப்பு பிடித்து இருப்பதையும் ஒருவித அதிர்ச்சியோடு பார்த்து கொண்டு இருந்தாள் .அந்த அழைப்பு ,குரலில் இருந்த ஏதோ ஒன்று அவள் உயிர் வரை பாய்ந்தது .

முதலில் தன்னை மீட்டவள் மதுரா தான் .பெண்மையின் உள் உணர்வூ ஏதோ சூழலில் சிக்குவதை போலெ உணர வைக்க ,விஜய்யின் செய்கையின் காரணத்தை ஆராய்வதை மேற்கொள்ளவே இல்லை .அதை செய்து இருந்தால் சோனாவின் குறியாக தான் ஏன் ஆனோம் என்று புரிந்து இருக்கும் .ஆனால் வழக்கம் போலெ தேவையானதை விட்டு விட்டு தேவை அற்ற ஆராய்ச்சியில் இறங்கினாள் மதுரா .

'சார் எப்படி எவ்வளவூ வேகமா வந்தார் ????'என்ற பிரமிப்பு மட்டுமே அது என்று அந்த பேதை மனம் சொல்லி இருந்தது .இது நாள் வரை நம்பிய பொய் இன்று தோட்டத்தில் யோசிக்கும் போது பொய்த்து போனது .

'அன்று சோனாவிற்காக விஜய் துடிக்கவில்லை .உச்சி முதல் உள்ளங்கால் வரை அன்று தன்னை ஆராய்ந்த அவன் பார்வை ,அதில் தெரிந்த பயம் ,கலக்கம் ,பின் 'ஒன்றும் இல்லை ,நலமாய் இருக்கிறாள் ;என்று அறிந்ததும் முகத்தில் பிரதிபலித்த நிம்மதி ,'தேங்க் காட் 'என்ற முணுமுணுப்பு ,கண்களில் கண்ணீர் போன்ற பளபளப்பு ------இவை எல்லாம் எதற்காக ?????அவன் செயல்கள் எழுப்பிய கேள்விகளுக்கான விடையை மதுரா அன்று தேடவில்லை .தேட துணியவில்லை என்பதே நிதர்சனம் .......

எங்கோ கண்ணாடி உடையும் சப்தம் இருவரையும் நிகழ் காலத்திற்கு திருப்பி தன்னிலைக்கு வரவழைத்தது .

"சாரி ...சாரி .....மிஸ் .மதுராக்ஷி ....யூ ஆர் ஆல் ரைட் ....நோ ???"என்றவன் பெருமூச்சுகளை எடுத்து விட்டு தன்னை சமாளித்தவாறு அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றான் .

"சார் ......எனக்கு என்ன சார் ....வந்து விட போகிறது .....மேடம் தான் சார் ...."என்று அவன் காதல் மனைவியின் நிலையை கூற முடியாதவளாய் திணறினாள் .

தன்னை அக்கா என்றோ ,விஜயயை மாமா என்றோ அழைக்க கூடாது .சார் ,மேடம் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று ஏற்கனவே கட்டளை இட்டு இருந்தாள் சோனா .அதாவது மதுரா வேலைக்காரி ...வேறு எந்த உரிமையும் கிடையாது ,என் காலுக்கு கீழ் தான் அவள் என்று விஜய்கான செய்தி அது

(அட பிசாசே .....இப்படி எல்லாம் ...........முடியல ......எப்படி எல்லாம் torture பண்றதுன்னு அகராதியே போடுவே போல் இருக்கே )

அவன் துடிப்பு ,தவிப்பு எல்லாம் பொய்யோ என்னும் விதமாக ,திரும்பியவனின் முகம் உணர்ச்சிகள் துடைத்த பாறையாக மாறி இருந்தது .

"எங்கே அவ ..."என்றவனின் குரலில் வழிந்தது நிச்சயம் வெறுப்பே

"உங்க பெட்ரூமில் ...."என்றவளின் வார்த்தையை கேட்டு வெகு வேகமாக அறையை நோக்கி சென்றவன் சட்டென்று நின்றான் .

அவன் வேக நடைக்கு ஈடு கொடுத்து அவன் பின்னாலேயே ஏறக்குறைய ஓடி வந்தவள் ,அவன் அப்படி சட்டென்று நிற்பான் என்று எதிர்பார்த்து இராததால் அவன் முதுகின் மீது மோதியவள் ,கீழே விழுந்து விடாமல் இருக்க பின்புறம் இருந்து அவனை அணைத்து இருந்தாள் .

(நம்தன...............நம்தன ...........நம்தன.......ஐயோ தேவதைங்க எல்லாம் வைட் ட்ரேஸ்ல ஆடலீங்க .....சும்மா நாந்தேன் பாடினேன் .....ஹி]ஹி ......)

அவனை ஒரு பிடிமானத்திற்கு தான் மதுரா அணைத்தது ......அதில் எந்த தவறான எண்ணமும் இல்லை தான் என்றாலும் ,அவன் உடல் அவள் கைகளில் பலமுறை சிலிர்த்தது .கை முஷ்டிகள் இறுக ,கண்களை மூடி ,வேக மூச்சுகளுடன் ,கீழ் உதட்டினை பற்களால் கடித்து ,கண்ணை மூடி அவன் நின்ற கோலத்தை எதிரே இருந்த ஆள் உயர கண்ணாடியில் மதுராவினால் பார்க்க முடிந்தது .

அவன் அன்று நின்ற கோலம் இன்று வேறு விதமான சந்தேகங்களை எழுப்ப முயல ,தன் எண்ணம் போகும் போக்கினை கண்டு திணற ஆரம்பித்தாள் மதுரா .வலுக்கட்டாயமாக அவன் நின்ற நிலையை ஆராய முற்பட்ட மனசாட்சியை ஒரு தட்டு தட்டி உள்ளே பூட்டினாள் .அதன் பின் நடந்தவை மீண்டும் படமாக ஓட ஆரம்பித்தது அவள் மனக்கண்ணில்

முதலில் சுதாரித்து மதுரா தான் ."ஐயோ சாரி அத்தான் ....சாரி சாரி கருணா ...ஐயோ சாரி சாரி சார் ...தெரியாம இடிச்சுட்டேன் ......சாரி ."என்று உளறி கொட்டினாள் .

மீண்டும் அவன் தலையை உலுக்கி கொள்வதையும் ,தலை முடியை கோதி விடுவதையும் கண்டவள் ,கண் முடி திறப்பதற்குள் மீண்டும் அவன் மீண்டு இருந்தான் .

"வாட் இஸ் திஸ் ?"என்றான் கையை கீழே காட்டி -அவன் காட்டிய திசையில் கார்ப்பெட்டில் விழுந்து கிடந்தது சோனாவின் புடவை .அதை கண்ட பிறகு தான் அவன் நின்றது .

'கடவுளே !இது எல்லாம் எனக்கு தேவை தானா ...?"என்று தன்னையே நொந்து கொண்டாள் மதுரா .சோனா நடத்திய கூத்தை ஒரு ஆணிடம் எப்படி அவளால் எப்படி சொல்ல முடியும் ?

"மிஸ் ...மதுராக்ஷி "என்றான் கருணா மீண்டும்

"என்ன வச்சு இருக்கே மதுரக்ஷிக்கு ?'மனதிற்குள் கவுண்டர் ஓடியது மதுராவிற்கு .

"வாட் இஸ் திஸ் ?"என்றான் விஜய் புடவையை சுட்டி காட்டி

'ஹ்ம்ம் ....பார்த்தா தெரியலை .....புடவைன்னு ...'

"இது இங்கே என்ன பண்ணுது ?"என்றான் விஜய் எரிச்சலுடன்

'ஹ்ம்ம்ம் சட்டி ,பானை பண்ணுது ....கேக்கறான் பார் கேனை .......'மீண்டும் மனசாட்சி

என்ன மிஸ் மதுராக்ஷி .....கேள்வி கேட்டுட்டு இருக்கேன் .....மனதிற்குள் எனக்கு அர்ச்சனை செய்துட்டு இருக்கீங்க போலெ இருக்கே ....."என்றான் நக்கலாக

பேய் முழி முழித்து தன்னை தானே காட்டி கொடுத்தவள் ,"ச்சே சே ....அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சார் ...ஒன்றுமே இல்லை ......சார் .....அது மேடம் புடவை ......"என்றாள் திணறலுடன் .அவன் முகத்தில் அவள் திணறலை கண்டு மெல்லிய புன்னகை எழுந்தது

"லுக் மிஸ் மதுராக்ஷி .....நீங்க சுடியில் இருக்கீங்க ....எனக்கு புடவை எல்லாம் கட்டி பழக்கம் இல்லை ....சோ மீதம் இருப்பது உங்க மேடம் மட்டும் தான் .....சோ இது அவங்க புடவையாக தான் இருக்கும் .....நான் கேட்டது அது இல்லை .....உங்க மேடம் புடவை அவங்க கிட்டே இருக்கமா ,என் ஆபீஸ் அறையில் ,என் கார்ப்பெட்டில் என்ன செய்யுது என்று தான் கேட்டேன் ...."என்றான் விஜய்

"சார் .....சார் ..........."என்று இழுத்தாள் மதுரா .

"கம் டு தி பாயிண்ட் மதுரா ....பின் வாயால் தந்தி அடிக்கலாம் ......வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர் ?"என்றான் அவன் மீண்டும் .

PENANCE WILL CONTINUE................. தவம் தொடரும்...............
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM----21 தவம் -21
19-isspyaarkokyanaamdoon2.jpg


பெருமூச்சை வெளி இட்ட மதுரா ,"சார் ...சோனா மேடம் ...ட்ரிங்க்ஸ் எடுத்து இருகாங்க சார் .....ஷி இஸ் நாட் இன் கண்ட்ரோல் .....உங்களை கேட்டு புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க ......உங்க ...பெட் ....ரூமில் இருகாங்க .....உங்க கிட்டே ஏதோ பேசணுமாம் ......"என்றாள் முகம் சிவந்து

சோனா குடிப்பது அவனுக்கு புது விஷயம் இல்லை போலெ இருந்தது .....அவன் எந்த திகைப்பையும் காட்டாமல் ,கை கட்டி தன் டேபிள் மேல் சாய்ந்து நின்றான் .சோனாவை தேடி ஓடுவான் ,என்ன ஆச்சோ என்று பதறுவான் என்று மதுரா எதிர்பார்க்க ,அவனோ சோனாவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நின்ற விதம் மதுராவிற்கு திகைப்பை உண்டாக்கியது .

மதுரா ஏதோ சொல்ல முயன்ற சமயம் ,பெட் ரூம் கதவை திறந்து கொண்டு தள்ளாட்டத்துடன் வெளியே வந்தாள் சோனா .அது வரை இருந்த இலகு தன்மை மறைந்து மேலும் இறுகி நின்றான் கருணா .அவள் வரும் சத்தம் கேட்டு கூட அவன் பார்வை தன் முகத்தை விட்டு ஒரு இன்ச் கூட நகரவில்லை என்பதை கண்ட மதுரா இருவரையும் மாறி மாறி பார்த்து மிடறு விழுங்கினாள் .சோனா நெருங்கி வர வர ,விஜய் அந்த டேபிளை சுற்றி நகர்ந்தவனின் கண்கள் மட்டும் என்னவோ தவம் போலெ மதுராக்ஷியின் முகத்தை விட்டு அகலவேயில்லை .

"டேய் .....கருணா .....கருணா ....பிச்சைக்கார பரதேசி ........நான் யார் தெரியுமாடா .......நான் சோனா ......பிரபஞ்ச அழகிடா ......என் பின்னால் சுத்தாதவனே இல்லை .......என் கண் பார்வைக்கு விழாதவன் எவனுமே இல்லை .......தொட்டவங்க என் காலில் அடிமையாக கிடைப்பானுங்கடா .........நான் வேண்டும்ன்னு சுத்தி சுத்தி வருவானுங்க ......தெரியுமா உனக்கு .......ஆனா நீயி ......என் பக்கத்துல நிற்க கூட தகுதி இல்லாதவன்டா ......போனா போகுதேன்னு உன்னை புருஷன் ஆக்கினேன் .....நாலு .....நாலு ,.....வருஷமா .....தாலி கட்டும் போது கூட உன் விரல் நுனி கூட என் மேல் படலை ...எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா .......அதான் சொல்வாங்களே ..........ஒன்று ,இரண்டு ,மூன்று முடிச்சு ....ஒன்னு கூட நீ போடலை ....சொர்ணா மம்மி தான் போட்டுச்சு .....தெரியாதுன்னு நினைச்சியா நீ ......அப்படி எவளுக்காக டா உன்னை காப்பாத்திட்டு இருக்கே ......நாலு வருஷம் ........எத்தனை தடவை ...நீ வேண்டும் என்று கேட்டு இருக்கேன் ......ஒஒஒஒஒஒ ......பத்து வருட இதய தேவதை ...........அவளுக்காகவா .......அவளுக்காக ....அவளை மட்டும் தான் தொடுவியா ....கட்டி பிடிப்பியா .....கிஸ் பண்ணுவியா .....மத்த ....மத்த ....ஆல் ......ஐ வாண்ட் யு ..........ஹாவ் மீ கருணா ......ஹாவ் மீ ......தெரியும் டா அவ யாருன்னு .....நீ எனக்கு தான் ,......எனக்கு மட்டும் தான் .......இப்போ அவ என் கையில் .....அவளை அழிக்காம விட மாட்டேன் ......அவ சாகனும் ....கொல்லுவேன் ....துடிக்க துடிக்க .....ஹா ....அம்ம்ம்ம்ம் மா "என்று அலறியவாறு அந்த அறையின் மூலையில் சென்று விழுந்தாள் சோனா

விஜய்யின் கரம் சோனாவின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது .ஆனால் அப்பொழுதும் விஜயின் கண்கள் மதுராவின் முகத்தை விட்டு நகரவேயில்லை .மதுரா தான் சோனா கூறியதை கேட்டு உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் .

'இவ்வளவூ தரம் கெட்டவளா ....சோனா !'உடல் கூசி அருவெறுத்து போனது மதுராவிற்கு .குமட்டி கொண்டு வர பாத்ரூமுக்கு ஓடியவள் உண்மையிலே வாந்தி எடுத்தாள் .மதுரா தன்னை சுத்தம் செய்து கொள்ள தண்ணீர் ,டவல் எடுத்து வந்து நின்றான் .

தன்னை சுத்தம் செய்து கொண்டு வெளியே வந்த மதுரா கொடுக்க பட்ட அறையின் வேகத்தில் விழுந்து இருந்த சோனா மயங்கி கிடந்தாள் .உபயம் -அளவுக்கு அதிகமான குடியும் ,போதை மருந்தும் ,விஜய்யின் தர்ம அடியும் .விழுந்த வேகத்தில் தாறுமாறாக ஏறி இருந்த இன் ஸ்கர்ட் ,சோனாவின் இரு தொடைகளிலும் காணப்பட்ட நூற்று கணக்கான சிறு ஊசி தடயங்களை மதுராவிற்கு காட்டியது .

சோனாவின் பேச்சை கேட்டே வெலவெலத்து போய் இருந்த மதுரா ,தான் கண்ணால் காண்பதை நம்ப முடியாதவளாய் ,உறுதி செய்ய சோனாவையும் ,விஜயயையும் மாறி மாறி பார்த்தாள் .அப்பொழுதும் விஜய் கண்கள் மதுராவின் முகத்திலேயே எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் நிலைத்து இருந்தது .சோனாவின் பக்கம் அவன் பார்வை திரும்பவே இல்லை

என்ன நினைத்தானோ ,மதுராவின் கை பிடித்து ,சோனா இருந்த அறையை விட்டு அவளை வெளியே இழுக்காத குறையாக இழுத்து வந்தவன் முன்னறையில் இருந்த சேரில் மதுராவை அமர வைத்தான் .அவள் அருகே இருந்த பிளாஸ்கில் இருந்து சூடான டீயை கப்பில் ஊற்றி,சர்க்கரையை அளவுக்கு அதிகமாகவே போட்டு ,குழந்தைக்கு ஊட்டி விடுவது போலெ மதுராவிற்கு பருக கொடுத்தான் .

அதிக இனிப்பால் முகம் சுளித்தவளை கண்டு ,"ஷாக் குறையும் ....வாந்தி வேறு எடுத்து இருக்கே ......குடிமா ......"என்றான்

அவள் குடித்து முடித்ததும் சமாளித்து கொண்டாள் என்பதை உறுதி செய்து கொண்டவன் ,"இப்போ புரியுதா மதுரா எதற்கு இத்தனை பேர் இவளிடம் வேலைக்கு சேர வேண்டாம் என்று சொன்னோம் என்று .....உன்னை போன்ற குடும்ப பெண் இருக்க வேண்டிய நரகம் இது இல்லை .....மனித முகமூடி அணிந்து மிருகங்கள் மனிதர்கள் என்ற போர்வையில் வாழும் காடு இது ......நீ ...உன் அப்பா நினைப்பது போலெ குடும்ப நலன் ,ஒற்றுமைக்காக உன்னை அவள் இங்கே வரவழைக்கவில்லை .......அதை புரிந்து கொள் ....இனிமேலும் நீ இங்கு இருந்தால் .......உன் பெயரையும் கெடுத்து விடுவாள் ......எந்த நிமிஷம் எப்படி மாறுவாள் என்று தெரியாது .....அவள் எது செய்தாலும் அது அவளுக்கு மட்டுமே நன்மையாகும் .......மற்றவர்களின் வாழ்வூ குட்டி சுவராகி விடும் ......இப்பொழுதாவது புரிந்து இருக்கும் அவ நல்லவ இல்லை மதுரா ."என்றவன் தன் மொபைல் எடுத்து கஜேந்திரனுக்கு அழைப்பு விடுத்தான் .

"மிஸ்டர் ...கஜேந்திரன் ......"என்று வெகு நக்கலாக அழைத்தவன் ," பேத்தி இங்கே மெயின் ஆபீஸ்யில் வழக்கம் போல FULL போதை ஆகி மட்டை ஆகிட்டாங்க ....சொர்ணா மேடத்தை கூட்டி வந்து இவங்களை தூக்கி போங்க .......ஒஒஒஒஒஒ ...சொர்ணா மேடம் வர மாட்டாங்களா .....ஒஒஒஒஒஒ அவங்க என் வேலைக்காரி இல்லையா ......அப்பப்போ ஓகே .....நீங்களே உங்க கையால் உங்க பேத்திக்கு டிரஸ் போட்டு கூட்டி போங்க ......ஹம்ம்ம்ம்ம் என்ன சொல்றேன்னா .......சுரக்காய்க்கு உப்பு இல்லைன்னு .....FULL போதையில் டிரஸ் அவிழ்ந்து கிடக்காங்க மேடம் .....அதை உங்களால் போட முடியுமா ?????அதற்கு தான் சொர்ணா மேடத்தை கூட்டி வர சொன்னேன் .....ஆபீஸ் லேடி ஸ்டாப் வச்சு டிரஸ் போடலாம் தான் .....பட் நியூஸ் லீக் ஆகி ,நாளை மீடியாகாரங்க மைக்கை உங்க வாயிலேயே சொருகினா என்ன சொல்ல போறீங்கன்னு இப்பவே ரிஹர்சல் பார்த்துக்கோங்க .....பாரின் டெலிகேட்ஸ் வராங்க .....ஆர்டர் கொடுக்க .....அவங்க முன்னாடி உங்க ஆசை பேத்தி ரகளை செஞ்சு ஆர்டர் 'வெற்றி குரூப்ஸ் 'க்கு போனா என்னை சொல்லி நோ யூஸ் ......பல கோடி ரூபாய் ஆர்டர் .......வறீங்களா .....குட் ...."என்று அழைப்பை துண்டித்தவனை "ஆஆஆஆ 'வென்று வாயை பிளந்து பார்த்து கொண்டு இருந்தது இன்று நினைவுக்கு வந்தது .

penance will continue....... தவம் தொடரும் ....
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 21 தவம் 21

கஜேந்திரனின் திடகாத்திர ராட்ஷச உருவத்தை பார்த்த உடனே ஒரு நொடி அனைவரும் பயந்து விடுவார்கள் .அவர் ,'ஏலே !'என்று தன் வெண்கல குரலில் அதட்டல் போட்டதை ஒரு முறை நேரில் கேட்ட மதுராவிற்கு கை கால் நடுங்கியே விட்டது .மீசையை முறுக்கியவாறு அவர் ஆபீஸ் வந்தாலே ,அங்கு இருப்பவர்களுக்கு குளிர் ,ஜுரம் வந்து விடும்.அப்படி பட்டவரை வெகு இலகுவாக கையாண்ட விஜய்யை உலகின் எட்டாவது அதிசயமாக பார்த்து கொண்டு இருந்தாள் மதுரா .

இப்படி பட்ட கூத்துக்கள் ,ரகளைகள் தனக்கு தான் புதிது .விஜய்க்கு இது பழகி போன ஒன்று தெளிவாக புரிந்து விட அவன் மேல் ஏற்கனவே இருந்த மரியாதை டன் கணக்கில் ஏறியது .

"அவங்க வருவதற்குள் இந்த வேலைக்கு முழுக்கு போட்டுட்டு ஊருக்கு கிளம்பும் வழியை பாரு ....கூடவே சுபாவை கூட்டி போ ....உனக்கு ட்ரெயின் இன்னும் மூன்று மணி நேரத்தில் இருக்கு ....டிக்கெட் உனக்கு ஸ்டேஷனுக்கே வந்து சேரும் .....இனி இவ கூப்பிட்டா ,அவ கூப்பிட்டானு இங்கே வரும் வேலை வேண்டாம் ......அவ பாச புறாவை பறக்க விட்டா ....இனி நம்பி ஏமாறாதே ......போ ....உன் வாழ்க்கை நீ உனக்காக வாழ பாரு ......கிளம்பு ....."என்றவன் ,அவள் கிளம்பி அறை கதவை அடைந்த போது "மது "என்றான் ஒரு வித குரலில் .

"சார் "என்று குழப்பத்துடன் திரும்பினாள் மதுரா .அவன் குரல் அவளை குழப்பி கொண்டு இருந்தது .

நீண்ட ,நெடிய பெரு மூச்சை வெளியிட்டவன் ,கண்களை அழுந்த மூடி திறந்தவன் ,"நத்திங் ......கேரி ஆன் .....குட் பை ....மது .....குட் பை பார் எவர் ......"என்றான் குரல் தழுதழுக்க .

மதுரா தலையை எல்லா பக்கமும் ஆட்டி விட்டு டன் கணக்கான அதிர்ச்சி ,திகைப்பு ,குழப்பத்துடன் சுபாவின் துணையோடு அதி முக்கிய பொருட்களை மட்டும் மூட்டை காட்டினாள் ---சென்னைக்கு பெரிய கும்பிடு போடாத குறை .சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சுபா ,பாலாஜியுடன் அவள் அடையும் போது டிக்கெட் ,உணவூ ,தண்ணீர் பாட்டில் எல்லாம் ரெடியாக அவளுக்கு காத்து இருந்தது .சுபாவும் ,பாலாஜியும் அவளை ரயில் ஏற்றி விட்டு ,ரயில் கண்ணை விட்டு மறையும் வரை அங்கேயே நின்று இருந்தனர் .மதுராவிற்கு தெரியாத விஷயம் மாறு வேஷத்தில் ஆல்வின் அவள் உடன் பாதுகாப்பிற்காக வந்தது .குன்னூரில் அவள் தன் வீட்டிற்குள் நுழைந்த பிறகே ஆல்வின் சென்னை திரும்பினான் .

சென்னையில் விஜய்யோ மிகவும் மகிழ்ச்சியில் இருந்தான் .ஆழம் தெரியாமல் காலை விட்டு இருந்த மதுராவை சோனாவிடம் இருந்து காப்பாற்றி விட்ட திருப்தி ........பல வருடங்களுக்கு பிறகு வெகு நிம்மதியாக உறங்கினான் ....பாவம் அவன் அறியாத ஒன்று சுவரில் அடிக்கப்பட்ட பந்தின் வேகம் போல சென்ற வேகத்திலேயே மதுரா திரும்பி வந்து சோனாவிடம் மாட்ட போகிறாள் என்று அதுவும் ஒரே நாளில் .

'திரும்பி வந்த தன்னை கண்ட விஜய்யின் முகத்தில் முதலில் ஏற்பட்ட உணர்ச்சி எத்தகையது ?'நடந்ததை மேலும் நினைத்து பார்த்த மதுராவிற்கு விடை தெரியா கேள்விகளே எழுந்தன

குணா கமல் 'அபிராமியை 'மீட் செய்த உடன் ஒரு பரவச நிலையில் 'அபிராமி ,அபிராமி 'என்று ஒரு முகபாவம் காட்டுவானே அந்த ரியாக்ஷன் விஜய்யின் முகத்தில் கண்ட மதுரா அதை பற்றி ஆராயவில்லை .ஆராயும் நிலையிலும் அவளை சோனா வைக்கவில்லை ......அது ஜில்லா கேடி ஆச்சே ......நல்லா இருந்த சங்கரன் -பவானி வாழ்வில் அந்த ராட்சசி ,ரத்த காட்டேரி ,கொள்ளிவாய் பிசாசு .....கும்மி அடித்து இருந்தது .அதுவும் ஒரே நாள் மாலைக்குள் .......முப்பது வருட இல்லற வாழ்வில் பெரும் சூறாவளியை கிளப்பி விட்டு இருக்க ,சங்கரனும் ,பவானியும் கோர்ட் படி ஏறும் நிலைமை

(அடிப்பாவி ............என்னடி செய்து வைச்சே ...............ஹனி முடியலை ......இப்படி கதற வைக்கிறாளே ......இவளுக்கு மட்டும் விதவித ஐடியாக்கள் எங்கு இருந்து தான் கிடைக்கிறது ....... சம்போ சங்கரா .....)

குன்னூர்

ஊட்டிக்கு பிறகு இரண்டாவது பெரிய மலைவாச ஸ்தலம் குன்னூர் .சுற்றுலாவும் ,தேயிலை பிரதான தொழில் .உயிரே படத்தில் ஷாருக் கான் மலை ரயிலில் தையா தையா என்று டான்ஸ் ஆடும் ரயில் இந்த குன்னூர் வழியாக செல்லும் .

(மது குட்டி வீட்டு அட்ரஸ் சொல்லுமா ......சீசனுக்கு வந்து இறங்கிடறோம் ......)

வாசல் தெளித்து கோலம் போட்டு கொண்டு இருந்தார் பவானி .அப்படியே நடிகை ரேவதி போன்ற தோற்றம் .விடியற்காலையில் பெட்டி படுக்கையுடன் வந்து இறங்கிய மகளை கண்டு இன்பமாய் அதிர்ந்தார் .வயது பெண்ணை வேலைக்கு அனுப்பி விட்டு ,வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு ,மனதால் தங்கள் மகளின் பாதுகாப்பிற்கு தினம் தினம் துடிக்கும் எத்தனையோ அம்மாக்களின் நிலையில் இருப்பவர் .ஒருவேளை மற்ற அம்மாக்களை விட 100% அதிக கவலையில் இருந்தவர் என்று சொன்னால் கரெக்ட்டா இருக்குமோ ????சோனா போன்ற பெண்ணோடு மகளை அனுப்பி விட்டு எந்த தாயால் தான் நிம்மதியாக இருக்க முடியும் ?????அந்த வீட்டில் சிதம்பரம் ஆட்சி .....கைகள் கட்டப்பட்டு இருக்க ,மகளை வேலைக்கு அனுப்பும் சங்கரனின் முடிவை அவரால் மாற்ற முடியவில்லை .

(ஒரு தடவை முடிவூ செஞ்சுட்டா சங்கரன் அவர் பேச்சை அவரே கேக்க மாட்டார் போலெ இருக்கு .....வெயிட் FOR ஆப்பு சங்கர் சார் ......இப்போ தான் உங்க மகளுக்கு வேப்பிலை அடிச்சு இருக்கு ....உங்க டர்ன் வரும் )

"அம்மாடீ ...ராணி குட்டி ......எப்படிடா இருக்கே ......என்னமா இப்படி திடுதிப்புனு வந்து இருக்கே ...உடம்புக்கு எதாவது முடியலையா கண்ணு ...."என்றார் பதறி போனவராய் .

"ஐயோ அம்மா ...ஊரே வேடிக்கை பார்க்குது ......உள்ளே போய் பேசலாம் ...எனக்கு ஒன்றும் இல்லை ....நல்லா தான் இருக்கேன் .....ட்ராவல் செஞ்சது ரொம்ப டயர்ட்டா இருக்குமா ....பசிக்குது ......"என்றாள் மதுரா தாயை வீட்டினுள் தள்ளியபடியே

மகள் பசி என்றதும் ,"போடா கண்ணா ...குளிச்சுட்டு வந்துடு ...டிபன் ரெடி .சூடா சாப்பிடு ."என்றார் பவானி

மகள் குளித்து தயாராகி வந்ததும் காலை டிபன் பரிமாறினார் .

"அப்பா எங்கே மா ?"என்றாள் மதுரா

"அவங்க ஆபீஸ் நம்பர் சீதாராமன் அங்கிள் மகனுக்கு திடீர்ன்னு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சு ....அதான் போய் இருக்கார் .நைட் வந்துடுவார் ."என்றார் பவானி

"நீ கூட போகலையா மா ?"என்றாள் மதுரா .

"இல்லைடா ஸ்கூல் எக்ஸாம் நடக்குது ....லீவு கிடைக்கல .....ரகு வேற வரேன்னு சொல்லி இருந்தான் ...அதான் போகலை "என்றார் பவானி .

"ஓஹ் ...உங்க சீமந்த புத்திரசிகாமணி வந்துடுச்சா ........அப்போ நாங்க எல்லாம் செகண்ட் ஹாண்ட் சிட்டிஸின் .....என் புள்ளைக்கு இது புடிக்கும் ,அது பிடிக்கும்னு ராஜஉபசாரம் நடக்குமே ....."என்றாள் மதுரா நக்கலாக

"அது என்னடீ சீமந்த புத்திரசிகாமணி .....அவனை மட்டுமே பெத்துட்டு உன்னை தவுட்டுக்கு வாங்கி வந்தது போலே சீன் போடறே ......என் புள்ளைக்கு நான் சமைச்சு போடறேன் .......உனக்கு என்ன வந்தது ????இந்த வாய் மட்டும் அடங்கவே அடங்காது ....."என்று பொரிந்தார் பவானி .

"ஓகே ...ஓகே ...ஹோம் மினிஸ்டர் கூல் ......உங்க ஆசை புத்திரனை எதுவும் சொல்லவில்லை ......எங்கே தூங்கறானே ???"என்றல் மதுரா .

"ம்ம்ம்ம் ...நீ வரதுக்கு ஒரு மணி நேரம் முன்னே தான் வந்தான் ....என்னவோ அவன் வேலை செய்யும் இடத்தில் திங்கள் கிழமையும் லீவாம் .....அதான் புள்ள கிளம்பி வந்துட்டான் ....சாப்பிட்டு தூங்கறான் ....."என்றான் பவானி எல்லாவற்றையும் ஒதுக்கிய படி

"நீ சாப்பிடலையா மா ....."என்றாள் மதுரா

"இல்லை மா இப்போ தான் கஞ்சி குடிச்சேன் .பிறகு சாப்பிடறேன் ....ஆமாம் நீ என்ன சாப்பிடுறதே இல்லையா ????இப்படி இளைச்சு போய் இருக்கே .ரொம்ப வேலையா கண்ணா ....கஷ்டமா இருக்கா ???"என்றார் மகளின் தலையை வருடியபடி

(மிஸஸ் பவானி ...ஐ ஆப்ஜெக்ட் திஸ் யுவர் ஆனார் .....அவளே சுபா செய்யறதை வழிச்சி சாப்பிட்டு சாப்பிட்டு நல்லா சீஸ் கேக் கணக்கா இருக்கா .....புள்ள இளைச்சு போச்சாம்ல ......யாருப்பா WRITER ....டயலாக் மாத்துங்க பா .....)

"அதெல்லாம் இல்லை மா ....சுபா சமையலில் ரெண்டு சுற்று பெருத்து தான் போய் இருக்கேன் ...வேலை எல்லாம் கஷ்டமே இல்லை ...."என்றாள் அமர்ந்தவாறே தாயின் இடையை அணைத்து வயிற்றில் முகம் புதைத்து

(நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர் ....சுபாவின் சமையலில் .......ஆபீஸ் வேலை .....மொத்த வேலையும் அந்த விஜய் தம்பி செய்யுது..இல்லைன்னா சுபா ,பாலாஜி செய்யறாங்க ... .....மனசாட்சின்னு ஒன்று இருந்தா இப்படி எல்லாம் BUILT UP கொடுக்க கூடாது )

"அப்போ கூட சுபா தான் செய்யறா ...நீ எதுவும் கத்துக்களை ...அதானே ...நல்லா சாப்பிட்டு தூங்கிட்டு இருந்தே ....."என்றார் பவானி மதுராவின் தலையில் குட்டிய படி

"இல்லையே நான் சமையல் செய்தேனே ...ஒரு வாரம் நான் தானே செய்தேன் ......"என்றாள் மதுரா

"நீ சமையல் செய்தே ....அதுவும் ஒரு வாரம் ......இதை நான் நம்பனும் ???எனக்கு காது குத்தியாச்சு ....எப்போ செஞ்சே கனவில் தானே .....தூக்க கலக்கத்தில் உளறாதே ...போ ...போய் படு .....நீ சமையல் செய்து இருந்தா சுபா இநேரம் எனக்கு போன் செய்து ,'அம்மா இந்த ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கேன் ....டாக்டர்ஸ் மிரண்டு போய் இருகாங்க ....நாடி ,நெரம்பு ,ரத்தம் சதை இது எல்லாவற்றிலும் கொழுப்பு ஏறி இருக்கும் ஒருத்தியால் தான் எப்படி சமைச்சு மத்தவங்களை கொல்ல முடியும் ....மெடிக்கல் மிராக்கிள் ....."என்று புலம்பி இருப்பாளே' .இது வரை அப்படி கால் வரவில்லை .....போய் தூங்கு "என்றவர் மதுரா தலையில் நங்கு என்று குட்டி விட்டு சென்றார் .மதுரா முகத்தில் அசடு வழிய தன் அறைக்கு சென்றாள்

பின்னால் வந்த பவானி ,மகள் படுத்ததும் ,போர்வை போர்வை போத்தி விட்டு தலையை வருடி விட்டார் .

"கொஞ்ச ...நேரம் உன் மடியில் படுத்துக்கவா மா ...."என்றவள் பவானியின் மடியில் படுத்து கொண்டு ,"மிஸ் யு மா ....சுபா சமைப்பா தான் ....ஆனா அது நீ இல்லையே .....உன்னையும் ,உன் சமையலையும் ,உன் சுப்ரபாதத்தையும் ,உன் குட்டல்களையும் ரொம்பவே மிஸ் செய்தேன் தெரியுமா ....தூங்கற வரை என் கூடவே இரும்மா ...."என்றாள் மதுரா தாயின் இடையை கைகளால் அணைத்து

"தூங்குடா .....அம்மா உன் கூடவே இருக்கேன் "என்றவர் தட்டி கொடுக்க மதுரா படுத்ததும் உறங்கி விட்டாள் .மனதின் குழப்பம் ,கவலை ,பயம் தாயின் மடியில் காணாமல் போக மதுரா ஆழ்ந்த உறங்கினாள் .

மகள் நன்றாக உறங்கி விட்டதை கண்டவர் ,அவள் தலையை தலையணையில் தூக்கி வைத்து ,நெற்றியில் முத்தம் இட்டு ,போர்வையால் மூடி விட்டார் .பிள்ளைகள் இருவரும் தூங்க ,தாய் தூங்க முடியுமா ....பிள்ளைகளுக்கு பிடித்த உணவூ வகைகள் மொத்தத்தையும் செய்ய சென்றார் .

கை தன் வேலையை செய்ய பவானியின் மனமோ நிம்மதியாக இல்லை .எப்பவுமே லீவு எடுக்காத மகள் ,மொத்தமாக கிளம்பி வந்து இருப்பதாய் அந்த தாய் முதலிலேயே பார்த்து விட்டார் .ஆல் அம்மா யூனிபோர்ம் போடாத போலீஸ் ஆச்சே .

அடுத்த நொடி சுபாவிற்கு அழைப்பு போனது .நல விசாரணைகளுக்கு பிறகு பவானி நேராக விஷயத்திற்கு வந்தார் .

"சுபா ! மதுரா இங்கே பெட்டி படுக்கையுடன் கிளம்பி வந்து இருக்கா ....நேத்து பேசும் போது கூட இப்படி வருவதாக சொல்லவில்லையே ....என்ன ஆச்சு ...ஆஃபிஸில் ஏதாவது பிரச்சனையா ....?என்றார் பவானி கடுமையான குரலில்

அவருக்கு விஜய் மீது எள் அளவூம் சந்தேகம் இல்லை ...ஆனால் சோனா,சொர்ணா ,காஜா விஷயம் வேறு ஆச்சே .கணவனுக்கும் ,மகளுக்கும் பாசம் என்பது கண்ணை மறைக்கலாம் ....ஆனால் பவானி சோனாவின் நீலி கண்ணீரை நம்பவில்லை .

"அம்மா!....சோனா இங்கே ஆபீஸ் வந்து இருந்தது .....கிட்டத்தட்ட 2 மணி நேரம் விஜய் சார் அறையில் தான் இருந்தா .....உள்ளே என்ன நடந்தது என்று தெரியாது .....ஆனா வேலை ரிசைன் செய்துட்டு கிளம்பிட்டா அம்மா ....நீங்க அவ கிட்டேயே கேட்டுக்கோங்க ......சாரி மா ....."என்றாள் சுபா .

.

PENANCE WILL CONTINUE........................ தவம் தொடரும்
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 22 தவம் 22

வேலையை மகள் ரிசைன் செய்தது அவருக்கு சந்தோசம் தான் ....ஆனால் ரிசைன் செய்யும் அவசியம் ,காரணம் என்ன என்ற கேள்வி அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை .விடை மகளிடம் இருந்து பெரும் வரை அவருக்கு நிம்மதி இல்லை .சமையல் வேலை முடித்து தன் யோசனையிலே எவ்வளவூ நேரம் அமர்ந்து இருந்தாரோ ,ரகு அவரை உலுக்கும் வரை அதே நிலையில் தான் இருந்தார்

"என்ன கண்ணா ?"என்றார் பவானி .

"என்னது ...என்ன கண்ணாவா ?????மா ...என்னமா ஆச்சு ...கூப்பிட கூப்பிட ஏதோ யோசனையில் இருக்கீங்க ?"என்ற ரகு 'வேதம் புதிது 'பட ஆக்டர் ராஜா மாதிரி இருந்தான் .

mqdefault 1.jpg

"ஒன்றும் இல்லை கண்ணா ...நம்ம ராணிக்குட்டியை பற்றி தான் யோசித்து கொண்டு இருந்தேன் .....வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்து இருக்கா ..."என்றார் பவானி

"ஹே ....வாலு வந்துடுச்சா ......எப்பா ...இப்போ தான் மூளைன்னு ஒன்னு வேலை செஞ்சு ,நல்ல முடிவா எடுத்து இருக்கா ....அவ வேலைக்கு போய் தான் ஆக வேண்டும் என்றால் என் ஆபீஸ் இல்லை கார்த்திக் ஆபீஸ்யில் வேலை வாங்கி தர போகிறோம் ....அதுக்கு ஏன் அம்மா இவ்வளவூ யோசனை ......"என்றான் ரகு அவர் அருகே அமர்ந்தவாறு
(மவனே இதை தில்லா மதுரா முழிச்சுட்டு இருக்கும் போது சொல்லி பாரு ---அப்போ தெரியும் .எங்க சிங்கம் தூங்கிட்டு இருக்கு ...எழுந்து வரட்டும் ..போட்டு தரேன்)

"அவ செஞ்சது நல்ல வேலை தான் .ஆனா அது அவளா செய்யலையே ....அந்த பிசாசு சோனா ஆபீஸ்க்கு வந்து இருக்கு .ரெண்டு மணி நேரம் அங்கே தான் இருந்து இருக்கு ...என்ன நடந்தது என்று தெரியலை ...இவ வேலையை ரிசைன் செய்து இருக்கா ...அதான் என்ன என்று யோசித்து கொண்டு இருந்தேன் ."என்றார் பவானி .

"சுபா கிட்டே கேட்க வேண்டியது தானே ...உங்க ஒற்றர் படை தலைவி அவ தானே ...."என்றான் ரகு புன்னகையுடன்

"போடா ..போக்கிரி ....உனக்கு திருமணம் முடிஞ்சு ,ஒரு பெண்ணை பெத்து ,வளர்த்து ...தொலை தூரத்திற்கு வேலைக்கு அனுப்பினால் அப்போ தெரியும் ஒரு பெற்றோராய் என் தவிப்பு ......எத்தனையோ வேதனையான சம்பவங்களை தினமும் கேள்விப்படுகிறோம் .....மதுரா வயசில் எத்தனையோ பெண்கள் உயிர் இழக்கிறார்கள் .....அந்த பெற்றோர்களுக்கு தங்கள் மகளை சுற்றி நடப்பதை பற்றி முன் எச்சரிக்கையாக கூற யாரும் இல்லை ......இதை ஏன் ஒற்று அறிதல் என்கிறாய் ?????என் மகளின் பாதுகாப்பிற்கான ஏற்பாடு ....என் மகளின் மேல் நம்பிக்கை இல்லாமல் சுபாவிடம் விசாரிக்க வில்லை ......என் மகளை எந்த ஆபத்தும் நெருங்க கூடாது என்று யோசிக்கிறேன் ....."என்றார் பவானி

"ஓகே ...ஓகே ....நான் சரண்டர் ....நீங்க உங்க மக பாதுகாப்பிற்கு ஒட்டுமொத்த இந்திய ராணுவதையே அனுப்புங்க ...யார் வேண்டாம் என்றது ....."என்றான் ரகு புன்னகையுடன்

"சும்மா கிண்டல் செய்யாதே ரகு ...சுபா கிட்டே கேட்டா மதுரவையே கேட்டுக்கோங்கோ என்று தயக்கமா சொல்றா .......என்ன என்று நான் நினைப்பது என் கவலை எனக்கு தான் தெரியும் ..அதை விடு ....சாப்பாடு எடுத்து வைக்கவா .....சாப்பிடுறீயா ?"

"அம்மா !மதுரா கிட்டே கேட்டுக்கலாம் .....அதுக்கு ஏன் எவ்வளவூ யோசிக்கறீங்கன்னு தான் கேட்டேன் ....எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம் ...அவ வரட்டும் ..."என்றான் ரகு

"சரிப்பா ...இரு உனக்கு டீ தரேன் ...."என்றவர் மகனை கவனிக்க சென்றார்

தாயின் கவலை பற்றி அறியாதவளாய் மதியம் ஒரு மணி வரை நன்கு தூங்கி எழுந்தவள் தன்னை தூய்மை செய்து கொண்டு ஹாலுக்கு வந்தாள் .வந்தவளின் கண்ணில் அவளின் முதல் அடிமை கண்ணில் தென்பட்டன்.ரகு தான் ஹாலில் டீவி பார்த்து கொண்டு இருந்தான் .மெல்ல பூனை போல் அடி மேல் அடி எடுத்து வைத்து அவன் அருகே சென்றவள் ,தீடீர் என்று 'பே 'என்று அவன் காது அருகே கத்த ,சோபாவில் இருந்து அலறிய படி கீழ் விழுந்தான் அந்த அப்பாவி அண்ணன் .

இவளின் இந்த குறி கார்த்திக் தான் .ஆனால் கார்த்திக்கின் நண்பன் என்ற முறையில் இவளிடம் அடிக்கடி மாட்டுவது ரகு தான் .சோனா வந்து சங்கரனிடம் நடித்து ,மதுராவை வேலைக்கு அழைத்து செல்வதிற்கு சில மாதங்கள் முன் கார்திக்க்கும் ,மதுராவிற்கும் நடந்த கோல்ட் WAR ,ஓபன் WAR ஆகி இருந்தது .ரெண்டும் எப்பவுமே டாம் அண்ட் ஜெர்ரி தான் .ரெண்டும் ஒன்றாக இருந்தால் அங்கு ரத்த ஆறே ஓடும் .இவர்களின் நடுவே மாட்டி முழிப்பது ரகு தான் .

மதுரா வால் இல்லா குரங்கு .....இந்த பொறுப்ப்ஸ் ,பருப்ப்ஸ் எல்லாம் ஆஃபிஸில் அதுவும் விஜய் இருக்கும் வரை தான் .ஆஃபிஸில் இவளிடம் மாட்டி முழிப்பது சுபாவும் ,பாலாஜியும் .வீட்டில் மாட்டுவது ரகுவும் ,கார்த்திக்கும் .இவர்களை வச்சி செய்வதில் இவளுக்கு நிகர் இவளே ....அதுவும் மற்ற மூவரை விட இவளிடம் மாட்டி ,திக்கி ,திணறி ,நொந்து அவல் ஆவது கார்த்திக் மட்டுமே ....அவ்வளவூ கோபமாம் அவன் மேல்

காரணமா -பின் என்ன மதுரா அவ அம்மா வயிற்றில் இருக்கும் போதே ,பெண் குழந்தை பிறந்தால் அது கார்திக்க்குக்கு என்று இரு வீட்டு பெரியவர்களும் அவர்களாகவே முடிவூ செய்து விட்டனர் .அவளை -இந்த பெரிய மனுஷியை ஒரு வார்த்தை கேட்கலையாம் .அதுவும் தாய் வயிற்றில் இருந்து இன்னும் கூட பிறக்காத பெரிய மனுஷியை .பெரியவங்க ஏற்பாட்டுக்கு பலி கடா கார்த்திக் .

"டேய் ஜிராஃபீ ....எவளோ தைரியம் டா உனக்கு ????என்னை கேட்காம ஓகே வா சொல்றே நீயி ....யாரை கேட்டுடா நீ ஓகே சொன்னே ????என் லெவல் என்ன .....ஒரு ரன்பிர் கபூர் ,ஹிருத்திக் ரோஷன் ,மகேஷ் பாபு ,பிரபாஸ் னா கூட ஏதோ கன்சிடர் செய்து இருப்பேன் ......புதர் மாதிரி ஒரு தலை .பழம் மாதிரி ஒரு முகம் .கோதாவரங்காய்க்கு பாண்ட் ஷர்ட் போட்ட மாதிரி ஒரு உருவம் ...உனக்கு குன்னூர் இளவரசி தேவை படுதா ....மேரேஜ் அது ,இதுன்னு தட்டை தூக்கிட்டு அங்கிள் ,ஆன்ட்டி கூட வந்தே அணுகுண்டை உன் மேல தூக்கி போட்டுடுவேன்டா .....பல்லி வாயா ..."என்று பொரிந்து தள்ளுவாள்

அவ வாய் குன்னூர் தாண்டியும் நீளும் என்பதை அறிந்தாலும் ,அவளை வெறுப்பு ஏற்றவில்லை என்றால் கார்திக்க்குக்கு பொழுது போகாது ."என்ன ....பப்பும்மா ....சொல்லவேயில்லை ...."என்றான் மிகவும் பொறுமையாக

'எதற்கு இந்த எலி இப்படி பம்முது ....'என்று நினைத்தவாறே "எதைடா சொல்லவில்லை ....கழுவலை என்கிறே "என்றாள் மதுரா அவன் வைக்க போகும் ஆப்பு தெரியாதவளாய்

"ஏண்டீ ....ப்ரபாஸ்க்கு வயசு நாற்பது .மகேஷ் பாபுவுக்கு நாற்பத்தி ரெண்டோ ,ஐந்தோ ,ரன்பிர் கபூருக்கு கூட முப்பத்தி ஐந்தோ என்னவோ ....பட் என்ன பண்றது .....கிழவிக்கு தானே அவ வயசு ஆட்கள் மேல் கிரேஸ் வரும் .....உன்னை மாதிரி கிழவிக்கு என்னை மாதிரி யூத் கேட்குதோடீ காட்ஜில்லா .....இதுல குன்னூர் இளவரசின்னு built up வேற .....உன்னை எல்லாம் உள்ளரூர் கிழவியாக கூட ஏற்கமுடியாது .....இந்த மாமன் ரேஞ்சு தெரியுமாடீ உனக்கு ......ஆஸ்திரேலியா ஆபீஸ் வந்து பாருடீ என் fan கிளப்பை .....உன்னை மாதிரி சப்ப கிடையாது ....ஒவ்வொருத்தியும் சும்மா கும்முன்னு இருப்பாளுங்க ....பார்க்கரியாடீ ...."என்றவன் தன் போனில் இருந்த புகைப்படம் ,விடியோவை காட்ட ஆரம்பித்தான் .----காட்டினான் ,காட்டினான் ,காட்டி கொண்டே இருந்தான் என்று சொல்ல வேண்டுமோ .

(சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வது என்பதும் ,தவளை தன் வாயால் கெடும் என்பதும் இது தான் போல் இருக்கு ....இது உனக்கு தேவையா ....பொறாமை கிளப்பறேன் என்று இப்படி மாட்டிக்கிட்டேயே கார்த்திக் ....)

விளையாட்டு வினையாகி போனது .அவளை கிண்டல் அடிக்க ,பொறாமையை கிளப்ப ,தான் யாரு என்று காட்டி விட தான் அவன் போட்டோக்களையும் ,விடீயோக்களையும் காட்டியது .அவன் கிருஷ்ணன் மாதிரி நடுவில் நிற்க அவனை சுற்றி கோபிகைகள் போல் பெண்கள் கூட்டம் .சில பெண்கள் பெவிகால் இல்லாத குறையாய் அவனை அணைத்து இருந்தனர் .சிலர் கட்டி பிடித்து கன்னத்தில் முத்தம் வைத்து கொண்டு இருந்தனர் .கையில் பீர் ,வாயில் சிகரெட் என்று நான் தான் மாஸ் என்று ஷோ காட்டும்
போட்டோஸ் .வீடியோக்களில் நைட் கிளப்பில் பெண்களுடன் ஆடி கொண்டு இருந்தான் ----10-20-30 என்று போட்டோக்கள் ,வீடியோக்களை காட்டினான் ,காட்டினான் ---காட்டி கொண்டே இருந்தான் .அவள் மன சுணுக்கத்தை அறியாதவனாய் .

அவள் தன்னை விட்டு விலக கூடாது என்று ஒரு பொசெசிவ்நெஸ் ,என்னை விட சினிமா ஸ்டார்ஸ் உனக்கு முக்கியமா என்ற பொறாமையில் தான் அவன் போட்டோக்களை காட்டியது .அனால் அதுவே மதுராவை மனதளவில் அவனிடம் இருந்து பிரித்து விட ,அந்த நொடி முதல் உண்மையிலே கார்த்திக்கிடம் இருந்து விலக ஆரம்பித்தாள் .

ஒவ்வொரு பெண்ணிற்கும் தனக்கு வரும் கணவனை பற்றி ஏதாவது ஒன்று ,இரண்டு எதிர்பார்ப்புகள் இருக்கும் .மதுராவும் விதிவிலக்கு அல்ல .அவள் பாட்டி சங்கரனின் தாயார் ஞானவல்லி தீவிர ஸ்ரீராம பக்தர் .ராமனின் புகழை பற்றி சிறு வயது முதலே பேத்திக்கு தினமும் சொல்லி கொடுத்து வந்தார் .ஸ்ரீராமனின் "ஒரு வில் ,ஒரு சொல் ,ஓர் இல் (மனைவி) கொள்கை மதுராவை மிகவும் கவர்ந்த ஒன்று .மனதாலும் இன்னொரு மாதை தீண்டேன் என்ற வைராக்கியம்அவளுக்கு உயிர் .அந்த ஸ்ரீராமனின் குணநலத்தோடு கணவன் வேண்டும் என்று மார்கழி மாதத்தில், கண்ணனுக்காக தவம் இருந்த ஆண்டாள் போலெ ,மதுரா தன்னுடைய ஸ்ரீராமன் போன்ற கணவனுக்காக நினைவூ தெரிந்த நாளாய் விரதம் இருக்கிறாள் .அது கார்த்திக்கும் தெரியும் .

'மாமன் நான் தான் உன் ஸ்ரீ ராமன் இருக்கேனே .....நமக்கு ரூட் கிளீயர் ....பின் எதற்காக இந்த விரதம் எல்லாம் ?'என்று கார்த்திக் கிண்டல் அடிப்பதும் உண்டு .

ஆனால் மதுரா மார்கழி மாத விரதத்தை நிறுத்தியது இல்லை .தனக்கு வருபவன் மற்ற பெண்களின் நிழலை கூட தொடவோ ,மற்ற பெண்கள் தன்னை நெருங்கவூ கூட கூடாது என்பதில் மிகவும் வைராக்கியமாக இருந்தாள் .பெண்கள் அருகில் வந்தால் கூட ஒரு அடி தூரம் நின்று பேச வேண்டும் .அவள் தந்தை சிகரேட் ,குடி என்று எந்த பழக்கமும் இல்லாதவர் .தொழில் துறை பார்ட்டிக்கு போகும் போது கூட 'ஜஸ்ட் ஒரு சிப் 'என்பதை கூட கடை பிடிக்காதவர் .பவானிக்கு தன் கணவனை பற்றி அதில் மகா பெருமை .மகளிடம் சொல்லி சொல்லி பூரித்து போவார் .சோ மதுராவின் ஸ்ரீ ராமன் கேரக்டர் ஓடு சங்கரனின் இந்த கோட்பாடுகளும் சேர்த்து விட்டாள் மதுரா .நோ சிகரட் ,நோ ஆல்கஹால் ,நோ ஈவென் ஒன் சிப் ,நோ ஒன் பப் .....மொத்தத்தில் கலியுக ஸ்ரீ ராமன் .மனதாலும் இன்னொரு பெண்ணை ஆசையாக கூட பார்க்காத ஏக பத்தினி விரதன் .

அவளின் ஒட்டுமொத்த எதிரிபார்ப்பு கார்த்திக்கின் விளையாட்டால் தவிடு பொடி ஆக்கி ,பெரும் அகழியை ஏற்படுத்தி விட்டோம் என்பதை உணராமல் அவளை வெறுப்பு ஏற்றுவதிலேயே குறியாக இருந்தான் .ரொம்ப நேரமாய் மதுராவிடம் இருந்து சத்தம் வராது போகவே அவளை பார்த்தவன் ,அவள் கண்களில் தென்பட்ட வெறுப்பில் ஆடி தான் போனான் .அவளை பற்றி முழுதும் அறிந்த பிறகும் ,இவ்வளவூ வருடங்களாக அவளுடன் வளர்ந்த பிறகும் ,அவளின் எதிர்பார்ப்பு தெரிந்த பின்னும் அவளிடம் அந்த போட்டோக்களை ,வீடியோக்களை காட்டிய தன் அடி முட்டாள் தனத்தை கோடி முறையாவது இத்தனை வருடங்களில் நொந்து கொள்வதை தவிர அவனுக்கு வேறு வழி இருக்க வில்லை .

"பப்பு ...பப்பும்மா .....ஏய் ...நான் ...சும்மா ...சும்மா உன்னை வெறுப்பேற்ற ...கிண்டல் செய்ய செய்ய தான் ....இது உண்மை இல்லடீ ....இவங்க எல்லாம் உடன் வேலை செய்பவர்கள் .....அவ்வளவூ தான் ....இவர்களுக்கும் ,எனக்கும் எதுவும் இல்லடீ ....ப்ரோமிஸ் ...."என்றவனை கை நீட்டி தடுத்த மதுரா தன்னை சமாளித்து கொண்டு ,அவன் எதிர் பாராத போது அவன் போனை பிடுங்கி ஓடியவள் சென்று நின்றது இரு வீட்டு பெற்றோரிடம் தான் .


PENANCE WILL CONTINUE................ தவம் தொடரும்...............
 
Last edited:
Status
Not open for further replies.
Top