All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “கௌரிசங்கர்” - கதைதிரி

Status
Not open for further replies.

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26395

கௌரிசங்கர் - 7

அன்று சனிக்கிழமை சும்மா சுற்றி பார்க்கலாம் என்று புகழ் பெற்ற மாலிற்கு வந்திருந்தாள் பிரியா. இவள் மட்டும் உள்ளே செல்ல அவளிடம் மனக்கசப்பு உண்டானதால் ரோஹி வெளியே நின்றுக் கொண்டாள். கண்கள் மின்ன ஒவ்வொரு கடையாய் பார்த்துக் கொண்டு வந்தவளின் காதருகில் மிக நெருக்கமாக ,

“ஹாய்...” என்ற குரல் கேட்கவும், திரும்பாமலேயே யார் என்று அறிந்தவளின் உள்ளம் பனி சாரல் அடித்ததை போல ஜில் ஜில் என்று இருக்க, முகம் புன்னகையில் விரிய, ஆர்வத்துடன் திரும்பியவளின் முன் மயக்கும் சிரிப்புடன் நின்றிருந்தான் சங்கர். பதிலுக்கு,

“ஹாய்...” என்று முயன்று சாதாரணமாய் கூறியவள் பின்

“ஷாப்பிங்??? ...” என்று கேள்வியாய் கேட்டவளுக்கு அவனிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டுமே என்ற நினைப்பே பயத்தை கிளப்பியது. அதே நிலைதான் சங்கருக்கும்,

“யா யா ...” என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறியவன், தங்கள் எதிரே இருந்த உயர்தரமான ஆடைகள் அடங்கிய கடையை கண்டவன் இங்கேதான் செல்ல போகிறாள் என்று முடிவு பண்ணியவனாக, அந்த கடையை நோக்கி கையை நீட்டி,

“திஸ் ...” என்று முடிப்பதற்குள், அவன் கேட்கவருவதை புரிந்துக் கொண்டவள் பதில் சொல்ல தெரியாமல் சிறு சிரிப்புடன் அவசரமாக அந்த கடைக்குள் நுழைந்தாள். அவளை தொடர்ந்து சங்கரும் நுழைய, ‘பணக்காரனை கல்யாணம் பண்ண ஆசைப்பட்டா மட்டும் போதாது டி அவன் கூட கொஞ்சி பேச இங்கிலீஷும் தெரிஞ்சிருக்கனும் ... அய்யோ அய்யோ இப்படி பயந்து பயந்து ஓடுவேன் முன்னமே தெரிஞ்சுருந்தா அக்காகிட்ட சண்ட போட்டாவது ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ்சுக்கு சேர்ந்துருப்பேனே’ என மனதில் நொந்த படி அந்த நவநாகரிக ஆடைகள் அடங்கிய கடையை வலம் வந்தாள் பிரியா.

சங்கரோ, ‘அப்பா இங்க இருக்கிற ட்ரெஸ்ஸே செம்ம ரிச்சா இருக்கு ... நம்ம ஆளுக்கு செம்ம டேஸ்ட் போல...’ என்று பெருமையாய் நினைத்தவன் அவளை போலவே வியப்புடன் அங்கிருந்த உடைகளை பார்த்தவாறே அவளை பின் தொடர்ந்தான்.

அந்த முழு கடையும் ஒரு சுற்று சுற்றிய பிரியாவிற்கு அந்த உடைகளின் பிரமிப்பு அவளை மிரள செய்ய அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றாள். வந்ததிலிருந்து இவர்களின் நடவடிக்கைகளை பார்த்திருந்த பெண் விற்பனையாளர் ஒருவர் பிரியாவை புன்முறுவலுடன் நெருங்கி,

“உங்களுக்கு நான் உதவி செய்யவா ... எந்த டைப் உடை வேண்டும்...” என்று ஆங்கிலத்தில் கேட்க, அந்த ஏ.சி அறையிலும் வேர்த்துவிட்டது பிரியாவிற்கு. எதற்கும் பதில் சொல்லாமல் சிறு புன்னகையுடன் நின்றிருந்தவளிடம் மீண்டும் மீண்டும் அந்த பெண் ஆங்கிலத்தில் உரையாட, எங்கே அடுத்து தன்னிடம் பேச தொடங்கிடுவாளோ என்ற பயத்தில் பொங்கி எழுந்தான் சங்கர்.

வேகமா தன் கையை அந்த பெண்ணை நோக்கி நீட்டியவன்,

“ஸ்டாப்...” என்று அதட்ட, பிரியாவிற்கு உண்மை தெரிந்து விட்டதோ என்ற பயத்தில் எச்சில் முழங்கிய படி பயத்துடன் அவனை பார்க்க, அவனோ,

“உங்களுக்கு தமிழ் தெரியுமா...” என்று அந்த பெண்ணிடம் கேட்க, அப்பெண்ணும் தெரியும் என்று தலையாட்டவும்,

“தென் வொய் இங்கிலீஷிலே பேசுறீங்க ... நம்ம தமிழ் எவ்வளவு அழகான பொழி ... அதுல பேசுறத விட்டுட்டு , என்னமோ வெள்ளைக்காரன் வீட்டுல பொறந்த மாதிரி ... எதுக்குங்க இந்த வெட்டி பந்தா...” என்று குற்றம்சாட்டியவனை கண்டு , ‘ம்க்கும் ... நீ என் கிட்ட காட்டுற பந்தாவோட இது கம்மிதான் ...’ என்று மனதில் நொடித்த பிரியா இதான் வாய்ப்பு என்று,

“நான் லண்டன்ல படிக்கும் போது... தேவைன்னா மட்டும்தான் இங்கிலிஷ்ல பேசுவேன் மத்தபடி எப்பவும் தமிழ் தான் ... ஐ லவ் தமிழ்... அதான் இவங்க பேச பேச பதில் சொல்லாம அமைதியா இருந்தேன்...” என்று பிளேட்டை திருப்பி போட, இந்தமுறை நொடிப்பது சங்கரின் முறையானது.

அந்த விற்பனை பெண்ணோ இருவரையும் சந்தேகமாக பார்க்க, சுதாரித்த சங்கர், பிரியாவின் கை பற்றி,

“ப்ரி... நம்ம தாய் மொழிக்கு மதிப்பில்லாத இடத்துல நமக்கு என்ன வேலை ... நீ வா நாம வேற கடை பார்ப்போம்...” என்றவன், திரும்பி அந்த பெண்ணை பார்த்து,

“ஹலோ ...கடைக்கு வரவங்களை இங்கிலீஷுல பேசி ஓட வச்சுடாதீங்க ...” என்று உண்மையான மனக்குமுறலை கொட்ட, பதிலுக்கு அந்த பெண் சங்கரை முறைக்கவும், சீறி எழுந்த பிரியா,

“ஹலோ அட்வைஸ் சொன்னா ... முறைக்கிற ...” என்று அவளுடன் எகிறிக் கொண்டு போக,

“விடு ப்ரி ... பொழைச்சு போகட்டும் ... சில்லி கேர்ள்...” என்று நக்கலடித்து சிரித்தவன் பிரியாவின் கரம் பற்றி வெளியே அழைத்து வந்தான்.

அப்பொழுது தான் தன் கரம் அவன் கரத்தோடு கோர்த்திருப்பதை கண்டு , உலகையே வென்ற களிப்பில் இருந்தாள் பிரியா. தன்னை பிடித்ததால் தானே தன் கையை உரிமையாய் பற்றியுள்ளான் என்று எண்ணியவளுக்கு கோபத்திற்கு பதில் சந்தோசமே வந்தது. இதுவே கௌரிக்கு பதில் வேறு ஒருவன் இருந்திருந்தால் நிச்சயம் அவன் கன்னம் பழுத்திருக்கும் ... இங்கே பணம் முதன்மையாய் தெரிய நெறி தவறி நடக்க தொடங்கினாள் பிரியா.

சங்கருக்கும் அவள் கையை உருவி கொள்ளாதது தைரியத்தை கொடுத்தாலும், தன்னை நல்லவனாக காட்டிக் கொள்வதற்காக அப்பொழுதுதான் தங்கள் கோர்த்திருந்த கைகளை பார்ப்பது போல பார்த்தவன், அவசரமாக கையை உருவிக் கொண்டு,

“சாரி ... டென்ஷன்ல கவனிக்கல...” என்று நல்ல பிள்ளையாய் கூற, அவன் கையை உருவிக் கொண்டதில் உள்ளுக்குள் மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டவள் அந்த கடுப்பை வெளியில் முப்பத்திரண்டு பல்லையும் காட்டி,

“இட்ஸ் ஓகே...” என்று சிரிக்க, அவள் சிரித்த தோரணையை கண்டு , ‘நாம கையை விட்டது பிடிக்கலையா ... வெளிநாட்டுல படிச்சவ வேற..’ என்ற குழப்பமாக அவளை பார்க்க, அப்பொழுதுதான் தன் தவறு புரிந்தவள், அவன் சிந்தனையை மாற்றும் பொருட்டு ,

“பசிக்குது லைட்டா எதாவது சாப்பிட்டு போலாமா ...” என்றவளை பார்த்து இம்முறை பற்கள் அனைத்தையும் காட்டி சிரிப்பது சங்கருடையது ஆனது.’ஒண்ணா சாப்பிட கூப்பிடுறனா... நம்மளை பிடிச்சுருக்குனு அர்த்தம் தானே... கௌரி உனக்கு கிடைச்ச சான்சை மிஸ் பண்ணிடாத... நீ போடுற பிட்டுல மயங்கி அவ ஐ லவ் யு சொல்லணும்...’ என்று தனக்குள் தீர்மானித்தவன், முன்பு போல கவனிக்காமல் தங்கள் முன்னிருந்த இத்தாலியன் சைனீஸ் ஹோட்டலுக்குள் பிரியாவை வழி நடத்தி கூட்டி சென்று இருக்கையில் அமர்ந்த பின்தான் ஹோட்டலின் பெயரை பார்த்ததும் அதிர்ந்து போனான்.

‘அய்யோ ... நம்ம ஊரு சாப்பாடே முக்காவாசி தெரியாது இதுல ... இத்தாலியன் சைனீஸ் சாப்பாடா கிழிஞ்சுது ... நமக்கு ஏதாவது நூடுல்ஸா ஆர்டர் பண்ணிட வேண்டியதுதான்... அவளுக்கு அவளே சொல்லிக்கிட்டும் ...’ என்று நினைத்தவன் ஆர்டர் எடுக்க வந்தவரிடம், கெத்தாய்

“நூடுல்ஸ் ஒன் பிளேட்...” என்று கெத்தாய் கூறியவன் பின் மெனு கார்டை பிரியாவிடம் நகர்த்திய படி

“ப்ரி... உனக்கு என்ன வேணுமோ ...நீயே பார்த்து சொல்லு...” என்று கைவிட்டவனை கண்டு அதிர்ந்து போனவள், மெனு கார்டை குனிந்து பார்க்க, அதிலிருந்த உணவு வகைகளை கண்டு தலை சுற்றிப்போனது.

ஒன்றுமே தெரிந்த உணவாக இல்லாததால் எதற்கு வம்பு என்று சங்கரை போல, நூடுல்ஸ் என்றவளை கௌரி ஆராய்ச்சியாய் பார்க்க, சர்வரோ இரெண்டு பேரையும் என்ன என்ற பார்வை பார்த்து ,

“என்ன நூடுல்ஸ்...” என்று கேட்கவும், அய்யோ என்றானது இருவருக்கும். கடுப்பான சங்கர் மெனு கார்டை பிரித்து , அதில் தன் பார்வையை ஓட விட்டவனுக்கு சிக்கன் நூடுல்ஸ் மட்டுமே தெரிந்த உணவாக இருக்க , அதையே தனக்கு சொல்ல , பிரியாவும் அவனை பின் பற்றி அதையே சொன்னாள்.

மீண்டும் யோசனையாய் பிரியாவை பார்த்தவனின் காதுகளில், “சார் ... எனி ஸ்டார்ட்டர்...” என்று சர்வரின் குரல் கேட்கவும், ஸ்டார்ட்டரா அப்படினா என்ற பார்வையை அவரை நோக்கி வீசியவனை கண்டு , எதுவும் தெரியாதா கேஸ் என்று அவருக்கு புரிந்து போக , மெனு கார்டில் சுட்டிக் காட்டியவரை கண்டு மீண்டும் கடுப்பானவன் ,கண்முன் தெரிந்த சிக்கன் டிக்காவை ஆர்டர் பண்ணி, கேள்வியாய் பிரியாவை பார்க்க, படபடப்புடன் அமர்ந்திருந்தவள் தனக்கு வேண்டாம் என்று தலையசைக்க, சர்வரை அனுப்பியவன் மீண்டும் பிரியாவை ஆராய தொடங்கினான்.

எதுவோ சரியில்ல... சரியில்ல என்று மூளை மணியடிக்க நெற்றியை நீவிவிட்டவன்,

“லண்டன்ல எந்த காலேஜ்ல படிசீங்க...” என்று சந்தேகமாய் கேட்கவும், ஏற்கனவே அவன் ஆராய்ச்சி பார்வையை கண்டுக் கொண்டவளுக்கு அவன் கேள்வி திகிலை உள்ளுக்குள் கிளப்ப, ‘பிரியா அசராம பதில் சொல்லுடி ... சந்தேகம் வந்துட போகுது’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் , நிமிர்வாய்

“லண்டன் யூனிவர்சிட்டி...” என்று அடித்துவிட , அதை பற்றி விவரம் அறியாதவன் , “ஓஹ்... லண்டன் யூனிவர்சிட்டி ...” என்று தனக்குள் சொல்லிக் கொள்ளவும்,

“நீங்க...” என்று பதில் கேள்வி கேட்டவளை கண்டு திகைத்து போனவன் சடுதியில் சமாளித்து,

“அமெரிக்கன் யூனிவர்சிட்டி...” என்று வாயில் வந்ததை கூற , அவனை போலவே , “அமெரிக்கன் யூனிவர்சிட்டியா ...” என்று சந்தேகத்துடன் கேட்டவளை கண்டு பேந்த பேந்த முழித்தவன், “ஆமா...” என்று வேகமாக பதில் கூற அதற்கு எதுவோ கேட்க தொடங்கிய பிரியாவை சர்வரின் வருகை தடுத்தது.

உணவு வகைகளை டேபிளில் பரப்பிய சர்வர் சென்று விட , அவசரமாக பிரியாவின் புறம் நகர்த்தியவன்

“சாப்புடு ப்ரி...” என்று அன்பொழுக கூறவும் சிரித்த முகத்துடன் தலையசைத்தவள் , சிக்கன் டிக்கா பிளேட்டை பார்க்க குச்சியில் சொருகியிருந்த சிக்கன் துண்டுகளை கண்டு நாக்கில் எச்சில் ஊர ஆசையாய் ஒரு குச்சியை எடுத்து கடிக்க போனவளின் கண்களுக்கு முள் கரண்டியும் பட , ‘ஓஹ் ... அப்படியே கடிச்சு சாப்பிட கூடாதோ ... இந்த கரண்டில குத்திதான் சாப்பிடணுமோ’ என்று சந்தேகம் எழும்ப எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் திகைத்து போய் உட்கார்ந்திருந்தாள். சங்கரின் நிலைமையும் அதேதான் ... சிக்கனை பார்க்க பார்க்க எடுத்து சாப்பிட வேண்டும் என்று ஆசை தூண்ட அவஸ்தையில் உட்கார்ந்திருந்தவன் அதை தொடாமல் நூடுல்ஸ் பக்கம் சென்றான்.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம் அந்த பழமொழிக்கு போல இருந்தது சங்கரின் நிலை. முள்கரண்டியால் சாப்பிட்டு பழக்கம் இல்லாதவனுக்கு நூடுல்ஸ்சை எப்படி திண்பது என்று தெரியாமல் விழித்தவன், பிரியாவை ஓரக் கண்ணால் பார்க்க அசால்டாய் முள்கரண்டியால் சாப்பிடுவதை கண்டவன், ‘நாமதான் தேவையில்லாம சந்தேக பட்டுட்டோம் ... பாரு எவ்வளவு அழகா சாப்பிடுறா...’ என்று நினைத்தவன் சாப்பிடாமல் கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தான்.

பிரியாவிற்கு இதேபோல உணவை பார்ப்பது இதுவே முதல் தடவை ... அவளுக்கும் அந்த கரண்டியால் எப்படி சாப்பிடுவது என்று தெரியாது ஆனால் சற்று முன்தான் சங்கர் அவளை சந்தேக கண்ணோடு பார்த்ததால், நூடுல்ஸில் கிடந்த சிக்கன் துண்டுகளை மட்டும் குத்தி குத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

சாப்பிட்டபடி நிமிர்ந்து சங்கரை பார்க்க அவனோ உணவை கிளறிக் கொண்டிருப்பதை கண்டு,

“என்னாச்சு ... ஏன் சாப்பிடாம வச்சிருக்கீங்க ... பிடிக்கலையா ...” என்று கேட்டவளுக்கு , ...சாப்பிட தெரியவில்லை என்று சொல்லவா முடியும் என்று நொந்தவன் ,

“அது ஸ்டொமக் அப்செட் ...அதான் ...” வாயில் வந்த பொய்யை தயங்கி கூறவும், ‘ஸ்டொமக் அப்செட்டா...அப்படினா ...’ என்று யோசிக்க தொடங்கியவளை தவறாக புரிந்து கொண்டவன்,

“உண்மையா ... இப்போ கூட பாருங்க வயிறு கடமுடான்னு சத்தம் போடுது ...” அவசரமாக விளக்கம் கொடுக்கவே மெல்ல சிரித்தவள், அவன்புறம் சரிந்து,

“ஒன்னு சொல்லவா ... எனக்கு சப்ப மூக்குக்காரன் சாப்பாடு சுத்தமா பிடிக்காது ... உங்களுக்காகத்தான் சாப்பிட ஒத்துக்கிட்டேன்... கிளம்புவமா ரொம்ப நேரம் ஆச்சு...” என்றவளுக்கு அவசரமாக சம்மதம் சொன்னவன் பில் எடுத்து வர சொல்ல , வந்த பில்லிற்கு சங்கரின் எதிர்ப்பை மீறி பணம் கட்டினாள் பிரியா. இந்த செயல் அவள் மீதியிருந்த சந்தேகத்தை விரட்டி அடிக்க போதுமாய் இருக்க மனநிறைவோடு கிளம்பினான் சங்கர்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்தவர்கள் சிறிது தூரம் மௌனமாய் நடந்து வர,

“கௌரி ...ஒரு ஹெல்ப் எனக்கு இங்க அவ்வளவா ப்ரெண்ட்ஸ் இல்ல ... ஸ்கூல் படிச்சுதும் ஊட்டி கான்வெண்ட்ல ... காலேஜ் பாரின்ல ... இப்போ ஆபீஸ் வீடுன்னு ரொம்ப போர் அடிக்குது ... எனக்கு கொஞ்சம் சென்னையை சுத்தி காட்டுறீங்களா ...” என்று பாவமாய் கேட்கவும் இதற்காகவே காத்திருந்தார் போல ,

“சரி நாளைக்கு எங்க போலாம் நீயே சொல்லு...” என்றவனை மகிழ்ச்சியுடன் பார்த்தவள் ,

“பீச்...நிறைய வீடியோல பார்த்திருக்கேன் அங்க சுட சுட வடையும் பஜ்ஜியும் போடுறத ... எனக்கும் வாங்கி தறீங்களா...சின்ன வயசுல சாப்டது ” என்று கண்கள் மின்ன இதுவரை வடை பஜ்ஜி சாப்பிடாததை போல பில்ட்டப் கொடுத்தவளின் நடிப்பில் ஏமாந்தவன், சரி என்று தலையாட்டி அவள் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு தன் நம்பரையும் கொடுத்திருந்தான்.

அவள் கார் நிறுத்தியிருந்த இடம் வரைக்கும் வந்தவன் , அவள் காரில் ஏறி கிளம்பிய பின் நீண்ட மூச்சை இழுத்துவிட்டவன் தன் இடத்திற்கு செல்ல பேருந்து நிறுத்ததை நோக்கி சென்றான். பின்னே இன்று அவள் இந்த மாலுக்கு வருகிறாள் என்று பிரசன்னா சொன்னவுடன் அரக்கப்பரக்க ஓடி வந்தவனாயிற்றே.

வீட்டிற்குள் நுழைந்த பிரியாவை சண்முகபிரியா அழைக்க, ‘இன்னைக்கு மால்ல மீட் பண்ணத பத்தி கேட்க போறாங்களோ ...’ என்ற குழப்பத்துடன் அவள் அருகில் சென்றவளை பக்கத்து இருக்கையில் உட்கார சொன்ன ஷம்மு,

“பிரியா... ரொம்ப தேங்க்ஸ் பிரியா ... என் இடத்துல நீ இருந்ததால நிறைய தில்லுமுல்ல கண்டு பிடிக்க முடிஞ்சுது...” என்று அவள் கை பிடித்து கூறவும், ‘அய்யோ நடிச்சது போதும் சொல்லி கிளம்ப சொல்றாங்களா ... ஒரு மாசம் சொன்னாங்களே ... அப்போ கௌரி...’ என்று உள்ளுக்குள் பதறியவளுக்கு கண்கள் இரண்டும் கலங்க தொடங்கின. அடிபட்ட குழந்தை போல சம்முவை ஏறிட்டு பார்க்க,

“இன்னும் ஒரு மாசம் முடிய டூ வீக்ஸ் தான் இருக்கு ... உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு ... பேசின பணத்தை முழுசா கொடுத்திடுறேன் இப்ப கூட நீ கிளம்பி போலாம்...” என்ற குண்டை தலையில் போட , செய்வதறியாது திகைத்து போனவள் பின் நிதானித்து சமாளித்து,

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ... இன்னும் டூ வீக்ஸ் தானே முடிச்சுட்டு போறேன் ... இல்லனா என் மனசு உறுத்திக்கிட்டே இருக்கும்...” என்று அவசரமாக பதில் கூறியவளை கண்டு புன்னகை புரிந்த சம்மு, சரியென்பதாய் தலையாட்ட, தன் அறைக்குள் வந்த பிரியாவால் அதற்குமேல் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

பிரியாவிற்கு கைக்கு கிடைத்து வாய்க்கு கிடைக்காத உணர்வு. அவள் நூறு சதவீதம் நம்பினாள் தன்னிடம் கௌரி மயங்கி இருப்பதாக. இன்னும் இரண்டு வாரத்தில் எப்படி ... என்று குழம்பி போனவளுக்கு விடாமல் அழைத்துக் கொண்டிருந்த கைப்பேசியை கண்டு கடுப்புடன் எடுத்தவள் அதில் மிளிர்ந்த எண்ணை கண்டு கோபம் கொண்டவளாக, அதை உயிர்ப்பித்து காதில் வைக்க,

“பிரியா ...” என்று ஆசையுடன் தொடங்கிய செல்வாவை,

“எதுக்கு விடாம அடிச்சுகிட்டு இருக்கீங்க ... உங்களுக்கு எத்தன தடவ சொல்லிருக்கேன் ... சும்மா சும்மா கால் பண்ணி தொந்தரவு பண்ணாதீங்கன்னு ... நீங்க விடாம பேசுறது பார்த்து எனக்கு எரிச்சலா இருக்கு ... நீங்க சாம்பார் போல லவ் டயலாக் சொல்லிக்கிட்டு திரியறத பார்க்க பார்க்க ஒமட்டிக்கிட்டு வருது ... ச்சை ஒரு தடவ சொன்ன புரிஞ்சுகிற தன்மை கிடையாது ...” என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் போனை கட் செய்ய , திகைத்து போய் நின்றிருந்த செல்வாவிற்கு முதல் தடவையாக தப்பு செய்கிறோமோ என்ற எண்ணம் தோன்றியது.

கட் செய்த போனை கட்டிலில் வேகமாக தூக்கி போட்டவளின் கண்களில் இருந்து இயலாமையால் விடாமல் கண்ணீர் வழிய எப்படி கௌரியை அடைவது என்ற நினைப்பே அவள் சிந்தனை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது.

அங்கே தன் அறையில் மல்லாக்க படுத்திருந்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த சங்கரை யோசனையாக பார்த்த பிரசன்னா ,

“என்னடா ஈவினிங் அவள பார்க்கிறதுக்கு துள்ளி குதிச்சுக்கிட்டு ஓடின ... இப்போ விட்டத்தை வெறிச்சுக்கிட்டு படுத்திருக்க ... என்ன செருப்பை கழட்டி அடிச்சுட்டாளா ...” என்று நக்கல் அடித்தவனை முறைத்த சங்கர் ,

“அப்படி அடிச்சுருந்தா கூட சந்தோச பட்டிருப்பேன் ... அந்த பொண்ணு நடவடிக்கையே சரியில்லடா ... எப்போ அவ கையை நான் பிடிப்பேன் காத்துக்கிட்டு இருக்கிற போலாவே பீல் ஆகுது ... எல்லா விஷயத்தையும் என்ன பார்த்தே செய்யுதுடா... ஒரு வேள சந்தபாண்டியனோட சின்ன வீட்டோட பொண்ணா இருக்குமோ... நான் கற்பனை பண்ண அளவுக்கு இல்ல ... பார்க்கிறதுக்கு அப்படியே என்ன ஜெராக்ஸ் பண்ணது போலவே இருக்குடா...” என்று மனதில் குடைந்த சந்தேகத்தை அவனிடம் கொட்ட , புருவம் சுருக்கி அவனை பார்த்த பிரசன்னா ,

“சரிதான் ... அப்போ நீ வேளைக்கு ஆகமாட்ட... இத்தோடு நிறுத்திப்போம் ... நான் கூட உனக்காக செலவு பண்ற காசை எப்படியாவது உன்கிட்ட இருந்து கறந்துடலாம் நினைச்சேன் ... ஆனா நீ ...” என்று நிறுத்தியவன் பின் தலையை இருபுறமும் அசைத்து,

“வேஸ்ட் ஆப் மணி வேஸ்ட் ஆப் டைம் ... பணக்காரி அப்பாவி கிடைச்சா அவளை எப்படி ஆட்டய போட்டு கரெக்ட் பண்ணலாம் நினைக்கிறது விட்டுட்டு ...ம்ம்ம் ... சரி சரி விடு எப்படி இருந்தாலும் இன்னும் இரண்டு வாரத்துக்குத்தான் இந்த ஆட்டமெல்லாம் ... பிசினஸ் அவார்ட் பங்ஷன் வருது , எங்க குரூப்ஸ்க்கும் ஏதோ அவார்ட் தராங்க போல அத பிரியா தான் வாங்க போற ... அந்த நிகழ்ச்சிக்கு உண்மையான கௌரி கிருஷ்ணாவும் வருவார் ... எப்படியும் உண்மை தெரிஞ்சுதானே ஆகணும் ...” என்று கொளுத்தி போட்டவன் தூங்க செல்ல , அந்த செய்தியை கேட்டு உலகமே தலைகீழாக சுற்றிய உணர்வு சங்கருக்கு.

‘இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கா ... இரண்டு வாரத்துக்கு அப்புறம் நம்ம வேஷம் கலைஞ்சுடுமே ... அதுக்குள்ள எப்படி அவள கரெக்ட் பண்றது ...” என்று யோசனையில் முழுகியவனுக்கு பிரியாவை பற்றிய சந்தேகம் பின்னுக்கு தள்ளப்பட , என்ன செய்து அவளை தக்க வைத்துக் கொள்வது என்று யோசிக்க தொடங்கினான்.

மறுநொடி எதை பற்றியும் யோசிக்காமல் பிரியாவிற்கு நாளை நான்கு மணியளவில சந்திப்போம் என்று குறுஞ்செய்தி அனுப்பினான் சங்கர். அவன் மெசேஜை கண்டதும் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனவள் “சரி ...” என்று அடுத்த நொடி பதில் அளித்திருந்தாள்.

அன்றைய இரவு இருவருக்கும் தூங்கா இரவா போனது. காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பிரியாவை அழைத்திருந்தான் சங்கர்.

“ப்ரி ... காலைல நீ ப்ரீயா ...” என்று கேட்டவனுக்கு பட்டென்று இல்லையென்று பதில் அளித்தவளின் மூளையில் அவன் தன்னை ப்ரி என்று செல்லமாய் அழைத்து ஞாபகம் வந்தது . குப்பென்று முகம் சிவந்து போக ஆனந்தத்தில் பேச முடியாமல் திகைத்து நின்றவளிடம் ,

“அப்போ ரெடி ஆகிட்டு சொல்றியா ... நாமா வெளிய சுத்த போலாம் ...” என்று கூற , தான் கேட்டது நிஜமா என்ற சந்தேகத்தில் தன் கையை கிள்ளிக் கொண்டவள் ,

“ம்ம்ம் சரி ... ஆனா கார் வேணாம் எனக்கு பஸ்லயும் ட்ரைன்லயும் சுத்தணும் ஆசை ...” என்றவளுக்கு சண்முகபிரியாவிடம் வெளியே செல்வதற்காக கார் கேட்க பயம்.

சங்கருக்கும் பணம் செலவாவதில் விருப்பம் இல்லாததால் பஸ்சில் செல்வதற்கு சம்மதம் தெரிவித்தான்.

காலை பத்து மணியளவில் அவன் குறிப்பிட்ட இடத்திற்கு காரில் வந்து இறங்கிய பிரியாவை கண்டு அங்கிருந்தவர்கள் கண் சிமிட்டாமல் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்க , பார்க்க வேண்டியவனின் கண்களை பணம் மறைத்திருந்ததால் ஊன்றி கவனிக்க தவறினான். அதனால் அவளின் பேரழகு புத்தியில் பதியாமல் போக அலட்டிக் கொள்ளாமல் அவளை வரவேற்றான்.

பேருந்தில் தோள் உரச அருகருகில் நெருக்கி உட்கார்ந்திருந்தாலும் ...இருவருக்கும் ஆசைகொண்ட ஆணின் உடலோ பெண்ணின் உடலோ உரசினால் உண்டாகும் சிலிர்ப்பு ஏற்படவில்லை. ஆனால் மொத்த பேருந்தில் இருந்தவர்களின் கண்கள் மொத்தமும் இவர்கள் மேல்தான் . தங்கள் குடும்பத்தை பற்றி பேசுவதை தவிர்த்த இருவரும் பொதுவான விஷயங்களை மட்டுமே பேசினர்.

கடற்கரை மணலில் யார் முதலில் மற்றவர் கையை பற்றினர் என்று அறிந்துக் கொள்ளமுடியா வண்ணம் இருவர் கைகளும் கோர்த்து பின்னி பிணைந்திருந்தன. கடல் நீரில் ஆசையாய் கால் நனைத்தனர்... பின் அங்கே போட பட்டிருந்த கடையில் வடை பஜ்ஜி மீன் வறுவல் எறா வறுவல் இது அனைத்தையும் ஒரே தட்டில் வாங்கி சிரித்தபடி பேசிக்கொண்டே சாப்பிட்டனர். அடுத்தவரின் பார்வைக்கு இருவரும் உருகி உருகி காதலிக்கும் காதலர்களை போல தோன்றினாலும் இருவருக்கும் கொஞ்சம் கூட மனதில் காதல் இல்லை.

ஏழு மணியளவில் கடற்கரையிலிருந்து கிளம்பும் வேளை மழை பிடித்துக் கொள்ள , அதில் நனைந்தவர்கள் அருகில் இருந்த கட்டிடத்தில் மழைக்கு ஒதுங்கினார்கள். ஏற்கனவே அங்கிருந்த சில காதலர்கள் தங்கள் இணையை அணைத்துக் கொண்டு தங்கள் லோகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்க, அங்கே நிற்க பிடிக்காமல் பிரியாவை கட்டிடத்தின் உள்ளே அழைத்து சென்றான் கௌரி.

யாருமற்ற தனிமை இருட்டிய கட்டிடம் வெளியே பெரு மழை அது கிளப்பிய சிலு சிலு காத்து, பக்கத்தில் தான் விரும்பும் பெண் ... ஒரு சாதாரண ஆண் மகனின் ஆசையை தூண்ட போதுமான விஷயங்கள். ஆனால் கௌரிக்கு இதில் எந்த வித உணர்ச்சியும் எழாமல் போக , அவனை சந்தேக கண்ணோடு பார்க்க தொடங்கினாள் பிரியா. அவள் மனதில் ...இயற்கை அமைத்துக் கொடுத்த வாய்ப்பை கண்டுக் கொள்ளாமல் வெளியே வேடிக்கை பார்ப்பவனை கண்டு ,’ஏன்...’ என்ற கேள்வியே அவள் மனதை குடைந்தது.

சற்று நேரம் வெளியே வெறித்தவனுக்கு தன்னை யாரோ பார்ப்பது போல தோன்ற திரும்பி பார்த்தவன் கண்களுக்கு யோசனை முகத்துடன் பிரியா நிற்பதை கண்டதும் , சடுதியில் மூளை வேலை செய்ய தொடங்க ... சற்று முன் தான் வெளியில் கண்ட காட்சியும் பிரியாவின் முகபாவத்தையும் கூட்டி கழித்து பார்த்தவனுக்கு காரணம் புரிய தொடங்கியது.

‘இப்போ நாம ரியாக்ட் பண்ணாம விட்டா ... நம்ம மேல சந்தேகம் வந்துடும்...’ என்று மனதில் நினைத்தவன் மெல்ல அவளை நெருங்கி , அவள் நாடியை பற்றி தனக்கு ஏற்றார் போல தூக்கி பிடித்து , தன்னை சந்தேக கண்ணோடு பார்த்திருந்தவளின் பார்வையை தன் காந்த பார்வையால் கவ்வியபடி அவள் முகம் நோக்கி குனிந்தான்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌரிசங்கர் - 8a

கண்களை இறுக மூடி அவன் முத்தத்தை சகித்துக் கொண்டிருந்தாள் பிரியா. காதல் இல்லாத முத்தம் இனிப்பதற்கு பதில் அருவருப்பை தர காரியம் ஆக வேண்டி கண்ணை மூடி பொறுத்துக் கொண்டிருந்தாள். சங்கருக்கும் அதே நிலைதான் அவள் இதழ்களில் ஆழ புதைந்தவனுக்கோ , அந்த முத்தம் கற்றாழையில் உள்ள பிசுபிசுப்பை போன்ற ஒரு உணர்வு கொடுக்க ,

‘என்னங்கடா இது ... முத்தம் கொடுத்தா வானத்துல ஜிவ்வுன்னு பறக்கிற பீல் வரும் சொல்வாங்க ... இந்த கருமத்துக்கா டா அவ்வளவு பில்ட்டப் கொடுத்தீங்க ...’ என்று மனதில் நொந்து போனான்.

முத்தத்தை வாங்கிக் கொண்டிருந்தவளுக்கோ , அவனுடைய குளுமையான இதழ்களின் ஈரம் பல்லி எச்சம் விட்டதை போல அருவருப்பை தர , தன் உதடுகளை சோப்பு கொண்டு துடைக்க துடித்த தன் கைகளை அவன் தோள்களை அழுந்த பற்றி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் . அவளின் அழுத்தத்தை கண்டு, தன் முத்தத்தில் லயத்ததால் வந்த அழுத்தம் என்று எண்ணிக் கொண்டவன் மேலும் அவள் இதழ்களில் ஆழ புதைத்தான்.

‘அடேய் போதும்டா விட்டுடுடா ... இதுக்கு மேல போன வாமிட் பண்ணிடுவேண்டா ...’ என்று மானசீகமாய் கதறியவளின் கதறல் அவனுக்கு கேட்டுதோ என்னவோ சட்ரென்று அவளிடம் இருந்து விலகினான் சங்கர்.

இருவருக்கும் எதிலிருந்தோ தப்பி வந்த உணர்வு இருந்தும் நாடகத்தை தொடர்ந்து நடத்தினர். முத்தத்தில் மகிழ்ந்ததைப் போல வெட்கப்பட்டவன் தன் பின்னந்தலையை கோதியபடி அவளை பார்த்து வெட்க சிரிப்பை உதிர்க்க

அவன் தந்த முத்தத்தில் முகம் வெளுக்க நின்றவளுக்கு , அவனின் வெட்கத்தை கண்டு , ‘அட இந்த அப்பாடக்கருக்கு நம்ம முத்தம் பிடிச்சுருக்கு போல ... நாமும் வெட்க படுற மாதிரி ஆக்ட் பண்ணுவோம் இல்லனா சந்தேகம் வந்திடும் ... ’ என்று நினைத்தவள் முகத்தை கஷ்டப்பட்டு சிவக்க வைத்து அவனை பார்த்து மயக்கம் புன்னகை சிந்தினாள்.

அவள் சிரித்ததை கண்டு , ‘அய்யோ சிரிக்கிறாளே ... அப்போ திரும்ப அந்த கொடுமையை அனுபவிக்கணுமா ...’ என்று எண்ணியபடி , மீண்டும் முத்தமிட அவளை நோக்கி குனிய

தன் முகம் நோக்கி குனிந்தவனை அரண்டு போய் பார்த்தவள் , ‘அய்யோ இந்த பல்லி உச்சாவா திரும்ப டேஸ்ட் பண்ணனுமா ... ஒருநாளுக்கே குடல பொறடிக்கிட்டு வருதே ...லைப் லாங் எப்படியா தாங்குவேன் ...’ என்று நொந்தவளின் இதழ்களை மீண்டும் முற்றுகையிட்டான் சங்கர்.

அந்த இதழொற்றல் முதல் தடவை போல சில நொடிகளில் முற்று பெறாமல் நீண்டுக் கொண்டு செல்ல, அந்த கொடுமையை பொறுக்க முடியாமல் பிரியாவின் கண்களிலிருந்து கண்ணீர் சாரை சாரையாய் இறங்கியது. காரியமே கண்ணாக முத்தத்தில் லயத்திருந்தவனின் கரங்கள் ஈரத்தை உணர பதறி விலகியவனின் கண்களுக்கு பிரியாவின் கண்ணீர் முகமே தென்பட , தப்பு செய்த குழந்தை போல திகைத்து போனவன், தான் முத்தமிட்டதால் தான் அழுகிறாள் என்று எண்ணியவனாக, அவள் கைகளை அவசரமாக பற்றியபடி,

“சாரி ப்ரி ... அது ... நான் ... தப்பானா கண்ணோட்டத்துல முத்தம் கொடுக்கல ... அது உன்ன ரொம்ப பிடிக்கும் ... அதான் ... அவசரபட்டு...” என்று கோர்வை இல்லமால் தடுமாறியவனை கண்டு கலங்கிய கண்களோடு பார்த்தவளின் மனமோ உள்ளுக்குள்,
‘ஓஹ் ... நாமா தப்பா நினைச்சுட்டோம் நினைச்சுகிட்டு பேசுறான் ... இதையே மெய்டைன் பண்ணிக்குவோம்...’ என்று நினைத்தவள் , சிறு விசும்பலுடன் ,

“கல்யாணத்துக்கு முன்னாடி சொந்தமில்லாத ஆண் என்ன அத்துமீறி தீண்ட கூடாதுன்னு நினைச்சேன் ... ஆனா நீங்க நீங்க ...” என்று செறுமியவாளை தவிப்பாக பார்த்த சங்கர், எங்கே தன்னை தவறாக நினைத்து விடுவாளோ என்ற பதட்டத்தில்,

“ப்ரி ... உன்ன பார்த்த முத பார்வைல இருந்து உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன் ...” ஒரு வேகத்துடன் கூறியவனை நம்பாமல் அதிர்ந்து போய் பார்த்திருந்தவளை கண்டு வேகமாக தலையை ஆட்டியவன்,

“நம்புடா ப்ரி ... சில பேர பார்த்த உடனே புடிச்சு போய்டும் ... பழகி பார்க்கணும்னு அவசியம் இல்ல ... உன்னையும் அப்படிதான் பிடிச்சுது ...என்ன நம்புறதானே ...” என்று கைகளை பிடித்தபடி கெஞ்சவும் , மீண்டும் சிறகில்லாமல் மேல பறக்க தொடங்கினாள் பிரியா.

தன் பதிலுக்காக தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவணை பார்த்து மெல்ல நம்புவதாக தலையசைக்கவும், மின்னல் வேகத்தில் அவளை இழுத்து அணைத்திருந்தான் சங்கர்.

மனதில் , ‘இந்த சான்ச விட்டா திரும்ப கிடைக்காது ... ‘ என்று நினைத்தவன், ஒருமுறை அவளை நெருக்கி அணைத்து பின் விடுவித்தவன் , மீண்டும் அவள் கைகளை பற்றியபடி ,

“ஐ லவ் யு ப்ரி ... என் இறுதி மூச்சு இருக்கிற வரைக்கும் என் கூடவே நீ வரணும் ஆசை படுறேன் ... உன் மடில தான் என் உயிர் போகணும் ... உன் கையை பிடிச்சுக்கிட்டு உலகத்தையே சுத்தி வரணும் ... நீ ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி உன் காலடியில் குவிக்கணும் ... இது எல்லாம் நடக்க உன்னோட சம்மதம் வேணும் ப்ரி ... சொல்லு ப்ரி என் ஆசையை நிறைவேத்தி வைப்பியா ...” என்று நீண்ட வசனம் பேசியவனை ‘என்ன இவன் பாரின்ல படிச்சவன் போல பேசாம பிளாட்பாரத்துல இருக்கவன் போல வசனம் பேசிகிட்டு இருக்கான் ...’ என்று நினைத்தவள், அதை பெரிதாக எடுத்துக்கு கொள்ளாமல், கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனதில்லாமல்,

“அது ... உங்கள போய் யாராவது பிடிக்கலைன்னு சொல்லுவாங்களா ... உங்கள பிடிச்சதாலதான் முத்தம் கொடுக்கவே விட்டேன்... ஆனா எங்க வீட்டுல ...” என்று நிறுத்தியவளுக்கு தன்னை பற்றிய உண்மை தெரிந்தால் இவன் திருமணத்திற்கு ஒத்துக்க கொள்வானா என்ற சந்தேகம் எழ வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்ற தோரணையில் நிறுத்தினாள்.

வீடு என்றதும் சங்கருக்கும் தூக்கிவாரி போட, ‘நாம கௌரிகிருஷ்ணா இல்ல கௌரிசங்கர்ன்னு உண்மை தெரிஞ்சா இவங்க வீட்டுல எப்படியும் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க... பேசாமா வீட்டுக்கு தெரியாம திருட்டு கல்யாணம் பண்ணிக்கிறதுதான் நல்லது ... இவள கல்யாணத்துக்கு எப்படி சம்மதிக்க வைக்கிறது’ என்று யோசித்தவனின் வாய் அவனையும் மீறி ,

“ஆமா கண்டிப்பா உங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கதான் ...” என்று உளறி வைக்கவும் , என்ன என்று திடுக்கிட்டு போய் பார்த்தவளை கண்டு , மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன்,

“அது எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கன்னு சொன்னேன் ... என்னதான் நீங்க சொசைட்டில பெரிய ஆளா இருந்தாலும் ... எங்க வீட்டுல காஸ்ட் பார்த்துதான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க, அதுவும் முடிஞ்சவரை சொந்தத்துலதான் பார்க்குறது ...” என்று வருத்தத்துடன் கூறவும், பிரியாவின் முகம் ஒளியிழந்து போனது .

பின் கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டு பார்த்தவள் ,

“வீட்டுல சம்மதிக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சும் எப்படி நீங்க என்ன கிஸ் பண்ணலாம் ... அப்போ என் கூட டைம் பாஸுக்கு சுத்தலாம் நினைச்சுடீங்களா ...உங்க மனசுல என்ன பத்தி தப்பான அபிப்பிராயம் வச்சிருக்கீங்க அதான் என்கிட்ட அத்துமீறி நடந்துருக்கீங்க ...” என்று கண்ணீர் சொரிய பேசியவளை கண்டு திகைத்து போன சங்கர் ,

“அப்படி இல்லடா ப்ரி ...” என்று சமாதானம் செய்ய முயன்றவனை பேச விடாமல்,

“உங்க கூட பழகின கொஞ்ச நாளிலே உங்க மேல எனக்கு நம்பிக்கை வந்திருச்சு ... அந்த நம்பிக்கையாலதான் உங்கள என்கிட்ட நெருங்க விட்டேன் ... ஆனா நீங்க என்ன ஏமாத்த பாக்கிறீங்க...” என்று கோபத்தில் தொண்டையடைக்க பேசியவளை கண்டு உள்ளுக்குள் , ‘கிஸ் கொடுத்ததுக்கு ஆட்டைய போட்டத போல பேசுறாளே ...’ என்று நொந்துப் போனவன் , இதுவும் நல்லதுக்குதான் என்று நினைத்தவனாக , தன் எதிரே அழுகையை கட்டுப்படுத்திய படி நின்றிருந்தவளின் கன்னத்தை தாங்கி,

“ஹேய் ... இப்போ என்ன ஆச்சுன்னு கண்ண கசக்குற ... நான் தானே உன்ன லவ் பண்றதா சொன்னேன் ...நான் சொல்லாட்டி உனக்கு எப்படி தெரிஞ்சிருக்குமா ... ம்ம்ம் சொல்லு ... இப்போ என்ன வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க அதானே பிரச்சனை, பேசாமா நாம வீட்டுக்கு தெரியாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்போம் ... நேரம் வரும் போது சொல்லிக்கலாம் ... அதுக்கு அப்புறம் யாரு நம்மள பிரிக்க முடியும் ... ம்ம்ம் சொல்லுடா ... ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா ...” என்று காதலில் உருகியவன் போல பேசவும், அந்த பேச்சில் கரைந்தவளாக , பயமும் சந்தோஷமும் சரிசமமாக போட்டி போட சம்மதம் என்று தலையசைத்தாள் பிரியா.

அவள் சம்மதம் கிடைத்தவுடன், தான் நினைத்தது நடக்க போகின்ற சந்தோஷத்தில் மீண்டும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவன் அணைப்பை உணராத வண்ணம் உள்ளுக்குள் இறுகி போயிருந்தாள் பிரியா . என்னதான் தன் கனவு கை கூட போவதை நினைத்து மகிழ்ந்தாலும் தன் குடும்பத்தை நினைத்து உள்ளுக்குள் கலங்கி போனாள் பிரியா. குடும்பமா தன் சந்தோசமா என்று அந்த சில நொடிகளில் பட்டிமன்றம் நடத்தியவளுக்கு தன் சந்தோசத்தை எக்காரணம் கொண்டும் இழக்க விரும்பாததால், மனம் தெளிந்தவளாக ஒருவித கர்வ புன்னகையுடன் அவனை பதிலுக்கு அணைத்துக் கொண்டாள்.
 

Attachments

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26499

கௌரி - 8b

அதன்பின் திட்டங்களை விரைவாகவும் அழகாகவும் தீட்டினான் சங்கர். தாங்கள் நேரடியாக இறங்கினால் எங்கே தன்னை பற்றிய உண்மை தெரிந்து விட போகிறது என்ற பயத்தில் பிரசன்னா மூலம் எல்லா ஏற்பாட்டையும் கவனிக்கும் படி செய்திருந்தான் சங்கர்.

பிரியா பக்கமிருந்து ரோகினி அனைத்து உதவிகளையும் மனமில்லாமல் செய்தாலும் , நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் அவள் எண்ணத்தை மாற்றும் முயற்சியில் இறங்கியவளை , ‘என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துகிறேன்’ என்ற வார்த்தையில் அடக்கினாள் பிரியா.

அந்த மழை இரவில் சங்கருடன் வெளியே சென்றுவிட்டு தாமதமாக வீட்டிற்கு வந்தவளை கண்டு ஆத்திரம் வந்தாலும் பல்லை கடித்துக் கொண்டு பொறுமை காத்தாள் ரோகினி. மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவளின் அருகில் சென்று கீழே மண்டியிட்டு உட்கார்ந்த பிரியா, ரோஹியின் கையை பற்றி,

“ரோஹி ... நானும் கௌரியும் கல்யாணம் பண்ணிக்கலாம் இருக்கோம் ...” என்றவளை அதிர்ந்து போய் பார்த்தவளுக்கு கோபத்தில் கண்கள் கலங்கியது ,

“என்... ன ...” என்று குரல் பிசிற பபேசியவளை கண்டு பிரியாவிற்கு பாவமாக இருந்தது . தனக்காகத்தானே கவலை படுகிறாள் என்ற எண்ணம் தோன்ற , மென் குரலில்

“ஆமாம் ரோஹி ... கௌரி என்ன ரொம்ப லவ் பன்றார் ... எனக்கு அவர் மேல லவ் இல்ல தான் பட் பிடிக்காமலாம் இல்ல ... அவர கல்யாணம் பண்ண ரொம்ப ஆசைப்படுறேன் ... கௌரியை மேரேஜ் பண்ணா என் லைப் நல்லா இருக்கும் நினைக்கிறன் ... ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு ரோஹி...” என்று கெஞ்சியவளை வெறித்து பார்த்த ரோஹிணி,

“இதுல நான் ஹெல்ப் பண்ண என்ன இருக்கு ... உங்க வீட்டுல கிருஷ்ணாவை விட்டு பேச சொல்லு ... அவங்க வீட்டுலயும் பேசி ஒன்ன பொண்ணு பார்க்க வர சொல்லு ...” என்றவளை கோபமாக இடைமறித்த பிரியா

“என்ன ரோஹி கிண்டல் பண்றியா ...” என்றவளை நக்கலாக பார்த்தவள் , பின்

“பாரு உனக்கே இது நக்கலா தெரியுது ... நடக்காத ஒண்ணுக்கு எதுக்குடி ஆசை படுற ... ஒரு வேலை அந்த கௌரி , உன்ன பணக்காரி சண்முகபிரியாவ நினைச்சு லவ் பண்றதா இருந்தா என்ன பண்ணுவ ... என்னைக்கு இருந்தாலும் உண்மை தெரியத்தான் போகுது அப்போ உன்னோட நிலைமை ...அதோடு அவனை உனக்கு எத்தனை மாசம் தெரியும் சொல்லு ... ஏண்டி இப்படி பணம் பணம் அலையுற ... ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளுடி பேசமா ஊருக்கு கிளம்புடி ... உன்ன நினைச்சு காத்துகிட்டு இருக்கிற செல்வாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்க பாரு ... வீணா வாழ்க்கையை கெடுத்துக்காத ...” என்று கண் கலங்க பேசியவளை சில நொடிகள் அமைதியாக வெறித்த பிரியா பின்

“சாரி ரோஹி உன்னோட அட்வைஸ் கேட்கிற நிலையெல்லாம் தாண்டிட்டேன் ... இப்போ எனக்கு அவனை கல்யாணம் பண்ணியாகணும் வெறியே வந்திடுச்சு ... ஒருவேளை அவன் கூட மேரேஜ் நடக்கலைன்னா கண்டிப்பா அவன கல்யாணம் பண்ண முடியலையேன்னு நினைச்சு நினைச்சு பைத்தியம் ஆகிடுவேன் ... அதான் வேணுமா உனக்கு ... சொல்லு நான் பைத்தியமா அலையுறத நீ பார்க்கணுமா சொல்லு டி ...” என்று வெறி பிடித்தவள் போல கத்தியவளை கண்டு மிரண்டு போன ரோஹிணிக்கு , தன்னால் தானே இவளுக்கு இந்த நிலை என்ற குற்றவுணர்வு தோன்ற, பிரியாவை இறுக்கி அணைத்து கொண்டவள்,

“வேணாம்டி பிரியா ... உன் நல்லதுக்குதான் சொல்றேன் ... தயவு செஞ்சு என் பேச்சை கேளுடி ...” என்று கெஞ்சியவளின் பிடியிலிருந்து விலகிய பிரியா தன் முகத்தை அழுந்த துடைத்து பின் தீர்க்கமாக ரோஹிணியை பார்த்தவள் , அழுத்தமாக தலையை இருபுறமும் மெல்ல அசைத்து

“கேட்க மாட்டேன் ... யார் பேச்சையும் கேட்க மாட்டேன் ... இதையும் மீறி எங்க வீட்டுலயோ இல்ல யார் மூலமாவது இந்த கல்யாணத்தை நிறுத்த பார்த்தினா கண்டிப்பா தூக்குல தொங்கிடுவேன் இது என் மேல சத்தியம் ...” என்றவள் தன் தலையில் ஓங்கி அடித்து சத்தியம் செய்திருந்தாள்.

ரோஹிணிக்கு உண்மை தெரிந்தும் தன் தோழியை படு குழியில் தள்ளுவதை கண்டும் ஒன்னும் பண்ண முடியாத தன் நிலையை கண்டு வெட்கி போனவள் , பரிதாபமாக அவளை பார்க்க , அவளின் தோற்றம் பிரியாவின் மனதை அசைத்ததோ என்னவோ , மீண்டும் அவள் கைகளை பற்றி,

“கவலை படாத ரோஹி ... நான் எடுக்கிற முடிவு தப்பா போனா கண்டிப்பா எந்த சூழ்நிலையிலும் உன்ன தப்பா நினைக்க மாட்டேன் ... கேள்வியும் கேட்க மாட்டேன் ...” என்றவளை துக்கம் தாளாமல் இறுக்கி அணைத்துக் கொண்டவளுக்கு புரிந்தது இனி இவளிடம் பேசி பிரோயஜனம் இல்லையென்று.

ஆனாலும் நடப்பது நடக்கட்டும் என்று இல்லாமல், மனம் பொறுக்காத ரோஹி அடுத்து போய் நின்ற இடம் சண்முகபிரியாவிடம் தான். தன் மனக்குமுறலை அவளிடம் கொட்டியபின் அவள் முகம் பார்த்து நின்றவளிடம் ,

“ரோஹி... உன் ப்ரெண்டலவ் பண்ண சொல்லி நான் போர்ஸ் பண்ணல ... இன்பாக்ட் அவகிட்ட சங்கரை பத்தி ஒரு வார்த்தையும் பேசியது இல்ல ... இது அவளா தேடிகிட்டு ஒன்னு ...சாரி இதுல நான் ஒன்னும் பண்ண முடியாது ...” என்று கை கழுவியவளை கண்டு உள்ளுக்குள் கொதித்து போனாள் ரோஹி. பிரியாவிடம் உண்மை சொன்னாலும் புரிந்து கொள்ளும் நிலையை அவள் தாண்டிவிட்டதால் தினம் தினம் குற்றவுணர்ச்சியில் தத்தளித்து கொண்டிருந்தாள் ரோஹி.


வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்வதை பற்றி சிறிதும் கவலையில்லாதவளாக கனவுலோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் பிரியா. திருமணம் முடிந்தபின் எந்தெந்த நாட்டிற்கு தேனிலவிற்கு செல்ல வேண்டும் என்று சிறு பட்டியலையும் தயார் செய்திருந்தவள் ,திருமணத்திற்கு பின்னான வாழக்கையை பற்றி பலவித கற்பனைகளை வளர்த்துக் கொண்டு அந்த நாளிற்காக ஆசையுடன் காத்திருக்க தொடங்கினாள்.

சங்கருக்கோ திருமணம் முடிவதற்குள் எங்கே உண்மை தெரிந்து விடுமோ என்ற பயம். ஆதலால் ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து நிதானமாக செய்ய தொடங்கியவனுக்கு நிம்மதி பறிபோனது.

இதோ இதோ என்று அவர்களின் திருமணநாளும் வந்தது.மிகவும் பரபரப்புடன் முகம் கொள்ள புன்னகையுடன் கிளம்பிக் கொண்டிருந்தாள் பிரியா. ஏற்கனவே ரோஹியிடம் தன் திருமணத்தை பற்றி சண்முகபிரியாவிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியிருந்தாள்.

அன்று காலையில் பட்டுப்புடவை உடுத்தி வெளியே கிளம்பிய பிரியாவை கூடத்தில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சண்முகபிரியா கேள்வியாய் பார்க்க, அசட்டு சிரிப்பை உதிர்த்தவள்,

“கோவிலுக்கு ... ஒரு வேண்டுதல் இருக்கு ... நேத்துதான் அம்மா போன் பண்ணி சொன்னாங்க ... கூட ரோஹியும் அழைச்சுட்டு போய்ட்டு வரேன்...” என்று வாய் கூசாமல் பொய் சொல்லியவளை கண்டு மென்னகை புரிந்து சரியென்று தலையசைத்தாள் சண்முகபிரியா. அவளிடம் வரவைத்த புன்னகையுடன் விடைபெற்ற பிரியா ரோஹியின் கையை பற்றிக் கொண்டு,

“என்ன இவ நம்மள அடிமைன்னு நினைச்சுட்டாளா ... நாம எங்க வேணா போவோம் வருவோம் அத கேட்க இவ யாரு ... பணம் இருக்கிற திமிரு...” என்று பொறுமியவாறே செல்ல, கண்களில் இரைஞ்சலுடன் சம்முவை திரும்பி பார்த்த ரோஹி அவளின் உதவியை நாட , சில நொடி அவளை ஏறிட்டு பார்த்தவள் பின் நியூஸ் பேப்பருக்குள் தலையை மறைத்துக் கொண்டாள்.

இனி கடவுள் விட்ட வழி என்று நொந்த ரோஹி பிரியாவுடன் கோவிலுக்கு சென்றாள்.தான் நினைத்த வாழ்க்கை கிடைக்க போகிறது என்ற சந்தோஷத்தில் ஏற்கனவே அவளின் இஷ்ட தெய்வமான முருகனிடம் வேண்டியபடி தன் வேண்டுதலை மனமார நிறைவேற்றிக் கொண்டிருந்தாள்.

காலையிலிருந்து சங்கரின் மனம் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. இன்னும் சில நொடிகளில் தன் வாழ்நாள் லட்சியம் நிறைவேற போகிற சந்தோசம் கொஞ்சம் கூட இல்லாமல் ஒருவித பதற்றத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தான். எதனால் இந்த பதற்றம் என்று பல கோணங்களில் யோசித்தவனுக்கு ஒன்றும் புலப்படாமல் போக, வெறுமையான மனநிலையில் பட்டு வேட்டியை கட்ட தொடங்கியவனை கலைத்தது பிரசன்னாவின் குரல்.

“குட் மார்னிங் சார் ... ஆமா ஆமா வீட்டுலதான் சார் இருக்கேன் ... இப்போவா ... கீழ வந்து நிற்கவா சார் ... இல்ல இல்ல சார் நீங்க வாங்க சார் ... ஓகே சார் ...” என்று பதட்டத்துடன் பேசியவனை புருவம் சுருக்கி பார்த்த சங்கர்,

“யாருடா அந்த சாரு இந்த பம்மு பம்முற ... எனக்கே பார்க்கணும் போல இருக்கு...”என்ற சங்கர் வேட்டியை கட்டி சட்டையை போட்டபடி நக்கல் அடிக்கவும், வெளி கதவு தட்டும் ஓசை கேட்கவும் சரியாக இருந்தது.

“ஓஹ் வெளில இருந்துகிட்டு தான் கால் பண்ணிருக்கார் போல...” என்று தனக்குள் பேசியபடி கதவை திறந்தான் பிரசன்னா. அங்கே நின்றிருந்த சந்தனபாண்டியை

“வாங்க சார் ... உள்ள வாங்க ...” என்று அவசரமாக வரவேற்றவன், அருகிலிருந்த நாற்காலியை தூசு தட்டி போட்டவன்

“உட்காருங்க சார் ... என்ன சார் குடிக்கிறீங்க காபி இல்ல ஜூஸ் ...” என்று ஒரு வித படபடப்புடன் உபசரித்தவனை கண்டு மெல்ல சிரித்தவர்,

“ரிலாக்ஸா இருங்க பிரசன்னா ... போர்மாலிட்டீஸ் வேணாம் முக்கியமான விஷயம் பேச வந்திருக்கேன் ... வாங்க வந்து என் பக்கத்துல உட்காருங்க ...” என்று தன்மையாய் பேசியவரை கண்டு பிரசன்னா மட்டுமில்லாமல் சங்கரும் குழம்பி போனான்.

‘இவரு பிரியா அப்பா தானே ... இங்க எதுக்கு வந்திருக்கார் ... அதுவும் இந்த நேரத்துல ... ஒருவேளை உண்மை தெரிஞ்சுருக்குமோ அதுக்குதான் வந்திருக்காரா...’ என்று மனதில் பட்டிமன்றம் நடத்திய சங்கருக்கு பயத்தில் வேர்க்க வேற தொடங்கியது. அப்பொழுதுதான் சங்கரை பார்த்தவர் பிரசன்னாவிடம்,

“இவர்...” என்று கேட்கவும்,

“சாரி சார் இண்ட்ரோடியூஸ் பண்ண மறந்துட்டேன் ... இவன் என் ப்ரெண்ட் கௌரிசங்கர் ... கொஞ்ச நாளைக்கு என் கூட ஸ்டே பண்ண வந்திருக்கான்...” என்று உண்மையை சொல்லவும் , ‘துரோகி’ என்று மனதில் முனகிய சங்கர் அவனை உக்கிரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் அவனின் குடும்பம் பற்றியும் வேலை பற்றியும் விசாரித்தவருக்கு பதில் கூற முடியாமல் திணறி போனான் சங்கர். ஒருவாறு சமாளித்து பேசியவனிடமிருந்து பிரசன்னாவை பார்த்தவர்,

“எனக்கு சுத்தி வளைச்சு பேசி பழக்கம் இல்ல பிரசன்ன ... நேரடியா விஷயத்துக்கு வரேன் ... உன்ன பத்தி என் பொண்ணு சொன்னா ... ரொம்ப டெடிகேட்டடா வேலை பார்க்கிறேன்னு ... நானும் உன்ன பத்தி விசாரிச்சேன் நல்ல பெர்பார்ம் பண்றதா தான் கேட்கிறவங்க எல்லாம் சொல்றாங்க ... நெஸ்ட் மந்த ஹையர் ஸ்டெடிஸ்க்காக லண்டன் போறதா என் பொண்ணு சொன்னா ... அதான் இன்னைக்கு பேசி முடிச்சிடலாம் நேருல வந்துட்டேன்...” என்று நிறுத்தியவரை குழப்பத்துடன் பிரசன்னாவும் சங்கரும் பார்க்க, இருவரையும் புன்னகையுடன் பார்த்தவர் பின்,

“என் பொண்ண கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பமா பிரசன்னா...” என்றார் நிதானமாக.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க … கௌரி கதை படிக்கிறவங்க கிட்ட மன்னிப்பு கேட்க வந்திருக்கேன்… இந்த கதையை கொஞ்சநாள் நிறுத்தி வைக்கிறேன்… போன வருஷமும் இதே தான் பண்ணேன் பாதில நிறுத்திட்டு சரோ கதையை கொண்டு வந்தேன்… இப்பவும் அதே தப்பதான் செய்யுறேன். எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு ஒரு சிலர் ஆர்வத்தோடு படிச்சுக்கிடு இருக்கிறாங்க பாதில நிறுத்தினா எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும் .பட் யுடி கொடுக்கனும் என்ற கட்டாயத்துல ஏனோதானோ போட மனசு வரலை, கண்டிப்பா இன்னும் இரண்டு மாசத்துல முழு கதையுடன் வரேன்.

தப்பா எடுத்துக்காதீங்க… கௌரி ஆரம்பிக்கறத்துக்கு முன்னால ஆரம்பிச்ச கதைதான் “அஅன்பே அன்பே” கதை அத முடிச்சுட்டு கௌரிய மீண்டும் கொண்டுவரேன்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌரி - 9

கௌரியும் பிரசன்னாவும் இருவேறு அதிர்ச்சியில் இருந்தனர். பின்னவன் ஆனந்த அதிர்ச்சியில் இருந்தான் என்றால் முன்னவனோ தலையில் இடி விழுந்ததை போல பேரதிர்ச்சியில் திகைத்து போய் நின்றுவிட்டான். இருவரின் அதிர்ந்த தோற்றத்தை கண்ட சந்தனபாண்டியன்

"என்ன ரெண்டு பேரும் திகைச்சி போய் நின்னுட்டிங்க ... கேட்க கூடாதத கேட்டுடேனா ..." என்று கேட்கவும், முதலில் தெளிந்த கௌரி காதை சொறிந்தபடி பிரசன்னாவிடம்,

" டேய் மச்சான் ... ப்ரி பிரசன்னா ப்ரெண்ட்னு சொல்லிருக்கும் ... இந்த கிழட்டு செந்திலு தப்பா புரிஞ்சுகிட்டு போல ... உனக்கு விருப்பமில்லனு சொல்லிடுடா ..." என்று கிசுகிசுத்தவன் , பின் சந்தனபாண்டியனிடம்

" சார் ... நீங்க ... தப்ப ..." என்று ஆரம்பித்தவனை , " எனக்கு சம்மதம் சார் ..." என்ற பிரசன்னாவின் திடமான குரல் தடுக்க , மின்சாரம் தாக்கியதை போல அதிர்ந்து போய் பார்த்திருந்தான்.

" எனக்கு சம்மதம் சார் ... கண்டிப்பா பிரியா மேடம் சொல்லித்தான் என்ன பார்க்க வந்திருப்பீங்க ... அவங்களுக்கு என்ன மேரேஜ் பண்ண விருப்பம்னா , எனக்கும் சம்மதம் சார் ... யாராவாது வீடு தேடி வர அதிர்ஷ்ட தேவதையை வேணாம்னு சொல்லுவாங்களா ..." என்று நிதானமாக பேசியவனை கண் சிமிட்டாமல் பார்த்திருந்த கௌரியால் , இன்னும் தன் காதுகளில் விழுந்ததை நம்ப முடியாமல் போக, ஒருவேளை தன் ப்ரமையோ என்று நினைத்தவன் , யாரும் அறியாமல் தன் கைகளை கிள்ளிப் பார்த்தவனுக்கு அங்கே நடப்பது அனைத்தும் உண்மையே என்று மெல்ல புத்தியில் உரைக்கவும் பிரசன்னாவை அடித்து தும்சம் பண்ணும் வெறி பேராவலாக அவனுள் எழுந்தது.

பிரசன்னாவோ உள்ளுக்குள் அனிருத் இசைக்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தான். அவனே எதிர்பார்க்காத திருப்பம் இது. ஷண்முகப்ரியா திட்டம் போட்டு கௌரியை பழி வாங்க நினைத்தது அவனுக்கு ஏற்கனவே தெரிந்ததே , ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு அவன் மேல் வெறியாக இருப்பாள் என்று அவன் கனவிலும் நினைக்காத ஒன்று.

'நான் ஒன்னும் அவன் வாழ்க்கையை தட்டி பறிக்கல ... வலிய வந்த பிரியாவை எட்டி உதைச்சு அவனே அதிர்ஷ்ட தேவதையை குழி தோண்டி புதைச்சுட்டான் ... இப்போ அதிர்ஷ்ட காத்து என் பக்கம் வீசுது ... அத எட்டி உதைக்க நான் என்ன முட்டாள் கௌரியா" என்று தனக்குள் சமாதானம் சொல்லிக்கொண்ட பிரசன்னா மறந்தும் கௌரி நின்றிருந்த பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. எதுவாக இருந்தால் என்ன வசதியான எதிர்காலம் கண்முன் நிற்க மற்றவை எல்லாம் பின்னிற்கு சென்றது அவனிற்கு.

தன்னை பிரசன்னா திரும்பி பார்க்கும் தருணத்திற்காக வெறியோடு கௌரி காத்திருக்க , அதற்கு வாய்பளிக்காமல் பிரசன்னாவிடம் பேச்சை வளர்த்தார் பாண்டியன். இருபது நிமிடத்திற்கு மேல் சொந்த கதையும் கல்யாணம் கதையும் பேசி கௌரியின் பிபியை ஏகத்துக்கு ஏற்றிவிட்டவரின் பேச்சை தடுத்து நிறுத்தியது அவரின் போன் அழைப்பு.

"சொல்லுமா ... ஹாங் பேசிட்டேன் பேசிட்டேன் ... என்ன சொன்னாரா ... ஹாஹா ... அதுவா வீடு தேடிவர அதிர்ஷ்ட தேவதைய வேணாம்னு யாராவது சொல்லுவாங்களானு கேட்டர்மா ...ம்ம்ம் சரி சரி ... அவங்க அப்பா அம்மாவ நல்லநாள பார்த்து கல்யாண பேச்சு பேச வீட்டுக்கு அழைச்சுட்டு வரேன் சொல்லிருக்கார் மா..." என்று ஷண்முகப்ரியா கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறியவர் பின்,

" பத்து மணிக்கு ரெஜிஸ்டர் இருக்கே ... கௌரிகிருஷ்ணா கரெக்ட் டைம்க்கு வந்துடுவார்மா ... நீ டிலே பண்ணாம அங்க போய்டு ..." என்றவர் போனை வைத்துவிட குழம்பி போய் நின்றான் கௌரி. ஏற்கனவே பிரியா சொல்லித்தான் பிரசன்னாவை பார்க்க வந்ததாக சந்தன பாண்டியன் கூறியிருக்க ,

' கௌரி கிருஷ்ணாவா ... அப்போ நாம யாருன்னு தெரிஞ்சுதான் நம்மகிட்ட நடிச்சுருக்காளா ... எதுக்கு இப்படி பண்ண பிரியா ...' என்று உண்மை தெரியாமல் குழம்பி போய் உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

சந்தனபாண்டியன் இருவரிடமும் விடைபெற்று சென்ற அடுத்த நொடி பிரசன்னாவின் மேல் பாய்ந்திருந்தான் கௌரி.

" துரோகி ... கூட இருந்தே குழி பறிச்ச பச்ச துரோகி டா ..." என்று மனம் பொறுக்காமல் புலம்பியபடி அவன் முகத்தில் ஓங்கி குத்த , குத்து விழுந்த வேகத்தில் வலியில் துடித்த பிரசன்னா அவன் அடிகளை தடுக்க முயன்று முடியாமல் போக பதிலுக்கு அவனை தாக்க தொடங்கினான்.

" யாருடா துரோகி ... நானா ... நீதாண்டா உன்னோட லைப்ப கெடுத்துக்கிட்டது ... பிரியா உன் பின்னாடி சுத்தும்போது உன்ன பார்த்து எனக்கு பொறாமையாதான் இருந்துச்சு ... சரி உனக்கு அடிச்ச லக்குனு விட்டுட்டேன் ... ஆனா உன்ன தேடி வந்த தேவதையை வேணாம்னு நிராகரிச்சது நீதாண்டா ... உன் தலைல நீயே மண்ண அள்ளி போட்டுக்கிட்ட , அது தப்புனு தெரிஞ்சும் நான் தடுக்கல, நம்ம நண்பன் கோடீஸ்வர வீட்டுக்கு மாப்பிளையாய் போறத பார்த்து சந்தோசப்படுற அளவுக்கு எனக்கு பரந்த மனசு கிடையாது ... அதான் சைலெண்டா இருந்துட்டேன் ... ஆனா மச்சி சத்தியமா உன் மேல இருக்கிற கோபத்துல பிரியா என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பானு நினைக்கல ... இதுக்கு காரணம் நீதாண்டா ..." என்றவன் , தன் சட்டையை பிடித்துக் கொண்டிருந்தவனை இழுத்து அணைத்துக் கொண்டு ,

" டேய் மச்சான் ... பிரியாவ கரெக்ட் பண்ண ஹெல்ப் பண்ணா , இப்போ நான் வேலை பார்த்துகிட்டு இருக்கிற கம்பெனிய எனக்கு எழுதி தரேன்னு சொன்ன ... அத நீயே வச்சுக்கோ டா ... கனவுளையும் நினைச்சு பார்க்காத வாழ்க்கை உன்னால கிடைச்சிருக்கு அதுக்கு கிப்ட்டா யு டேக் இட் டா ..." என்று சந்தோசமாய் பேசியவனின் சட்டை காலரை இறுக்கி பிடித்தவன் ,

" என்ன நடந்துச்சுனு ஒழுங்கு மரியாதையா சொல்லு ..." என்று இறுகி போன முகத்துடன் கேட்க , முதலிலிருந்து அனைத்தையும் கூற தொடங்கினான் பிரசன்னா.

அவன் கூறி முடித்ததும் தொய்ந்து போய் அருகிலிருந்த சேரில் அமர்ந்தவனின் முகத்தில் எப்படி பட்ட வாழ்க்கையை தான் உதறி தள்ளியுள்ளோம் என்று நினைத்து ஒரு மனமோ துக்கத்தில் துடிக்க , மறுமனமோ தன்னை திட்டம் போட்டு முட்டாளாக்கி ஏமாற்றப்பட்டுள்ளதை நினைத்து கோபத்தில் கொந்தளித்தது. ஏற்கனவே சிவந்த நிறத்துடையவனின் முகம் கோபத்தில் , தொட்டால் ரத்தம் ஒட்டிக் கொள்ளுமோ என்ற வகையில் இன்னும் சிவந்து போக உள்ளுக்குள் பதறி போனான் பிரசன்னா.

" இங்க பாரு மச்சான் ... நீ எப்பவும் சொல்றதுதான் , வாய்ப்பு கிடைச்சா கப்புனு புடிச்சுக்கணும்னு ... அதத்தான் நானும் செய்யுறேன் ... அதோட உன் லவ்வ நான் சத்தியமா கெடுக்கலைடா ..." என்று தன்மையாக பேசியவனை, கண்கள் மூடி கேட்டுக் கொண்டிருந்தவனின் மனமும் அவன் கூற்றை ஏற்றுக் கொண்டது.

‘இவனால் பிரியாவுடனான வாழ்க்கை என் கையை விட்டு போகவில்லை ... அவன் இடத்தில் நான் இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை கைப்பற்ற தான் நினைத்திருப்பேன் ... வசதியான வாழ்க்கைக்கு தான் ஆசைப்பட்டேனே தவிர அடுத்தவர் முதுகில் குத்த முயலவில்லை ... ஆனால் இவன் நம்பிக்கை துரோகி கூட இருந்தே என்னை குழியில் தள்ளியவன் ...' என்று பலவாறு யோசித்தவன் முகத்தை அழுந்த துடைத்தபடி நிமிர்ந்து பார்க்க கண்கள் இரண்டும் கோவை பழம் போல சிவந்திருந்தது.

" கரெக்ட் ... நானேதான் கெடுத்துகிட்டேன் ... இதுல உன் தப்பு எதுவும் இல்ல ... பட் என்னைக்கும் நீ பண்ணத மறக்க மாட்டேன் ... இனி என் முகத்துல முழிக்காத என்ன பொறுத்தவரை நீ துரோகி டா ..." என்று உதடு துடிக்க பேசியவனின் மொபைல் ஒலிக்க , அதை எடுத்து பார்த்தவனின் முகம் செந்தனலன தகிக்க வேகமா அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

ரெஜிஸ்டர் ஆபீஸ் முன் ஒருவித படபடப்புடன் நின்றிருந்தாள் பிரியா. அருகில் நின்றிருந்த ரோஹியின் கைகளை பதட்டத்துடன் பற்றியவள் ,

" டென்ஷனா இருக்கு ரோஹி ... கௌரிக்கு கால் பண்ணேன் எடுக்கல ... ஒருவேள நான் ஷண்முக பிரியா இல்லைனு தெரிஞ்சுருக்குமோ ... ரொம்ப பயமா இருக்கு ... மேரேஜ் நல்ல படியா முடிஞ்சுடும் தானே ..." என்று கண்களில் பீதியுடன் கேட்டவளை, வேதனையுடன் பார்த்தாள் ரோஹி. சற்று முன்புதான் ஷம்முவிடமிருந்து கௌரிக்கு விஷயம் தெரிந்துவிட்டது என்ற குறுந்செய்தி வந்திருந்தது.

அதை படித்ததிலிருந்து பிரியாவை நினைத்து அய்யோ என்று இருந்தது அவளிற்கு. நகத்தை கடித்தபடி ரெஜிஸ்டர் ஆபீஸ் வாயிலில் ஒருவித டென்ஷனோடு நடை பயின்றவளின் மேல் தான் அங்கிருந்தவர்களின் பார்வை மொத்தமும் இருந்தது . திருமணம் என்பதால் காலையில் எழுந்து தலைகுளித்து தளர ஜடை பின்னி மல்லிகை பூவை சூடி , ஆடம்பரமில்லாத மெல்லிய ஜரிகைவைத்த குங்கும கலர் புடவையில் பார்ப்பவரை வசியப்படுத்தும் அழகுடன் கோவில் சிற்பம் போல நின்றிருந்தாள் கௌரிப்ரியா.

மிதமிஞ்சிய கோபத்துடன் ரெஜிஸ்டர் ஆபீஸ் வளாகத்தின் உள் நுழைத்த கௌரியின் பார்வையில் விழுந்தாள் நடைபயின்றுக் கொண்டிருந்த பிரியா. அவளை கண்ட நொடி முகம் செவ்வானம் போல சிவந்து போக ,சற்று மட்டுப்பட்டிருந்த கோபம் பீறிட்டு எழு தொடங்க, பொது இடம் என்பதால் தன்னை கட்டுப்படுத்தியபடி அதே இடத்தில் அவளை வெறித்தபடி நின்றிருந்தான் சங்கர்.

நடை பயின்றவளின் உள்ளுணர்வு கௌரி வந்துவிட்டதை அறிவிக்கும் விதமாக சிலிர்த்து கொண்டு எழவும் , நின்ற இடத்திலிருந்து மெல்ல தன் பார்வையை சுழல விட்டவளின் பார்வை வட்டத்துக்குள் விழுந்தான் கௌரி. தன்னை நெருங்காமல் தன்னையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தவனை சிறு படபடப்புடன் மகிழ்ச்சி ஆசை பயம் எதிர்பார்ப்பு ஏமாற்றம் என்று எல்லாவித உணர்வுகளையும் கண்களில் காட்டியபடி பார்த்திருந்தவளின் அழகில் திகைத்து போய் நின்றுவிட்டான் கௌரி.

இதுவரை அவளை எப்பேர்ப்பட்டாவது சரிக்கட்டி கல்யாணத்தை முடித்து விடவேண்டும் என்ற குறிக்கோளில் இருந்ததால் அவள் பெரிதும் அவனை கவர்ந்ததில்லை , அன்று விருப்பமில்லாமல் கடனே என்றுதான் முத்தமிட்டது , இன்றுவரை அவளுடான அந்தரங்கமான எதிர்கால வாழ்க்கையை பற்றி சிறு துரும்பாக கூட நினைத்து பார்த்திராதவனின் மனதில் சிறு சலனத்தை ஏற்படுத்தினாள் பிரியா.

அதுவரை இருந்த கோபம் , அவளை பார்த்த நொடியிலிருந்து மெல்ல மெல்ல கரைய தன் மனம் போகும் போக்கை நினைத்து திகைத்து போய் அவளை வெறித்து பார்த்திருந்தவனை மெல்ல நெருங்கினாள் பிரியா. தன்னை நோக்கி வருபவளின் மீதிருந்து கண்ணை எடுக்க முடியாமல் தடுமாறும் இதயத்துடன் அசையாமல் நின்றிருந்தவனை , படபடக்கும் இதயத்தோடு நெருங்க, எதுவோ சரியில்லை என்று அவள் மூளை எச்சரிக்கை செய்யவும் , வரவழைத்த சிறு புன்னகையுடன் அவன் அருகில் சென்றவளின் குறுக்கே சென்று காரை நிறுத்தினாள் ஷண்முகப்ரியா.

அந்த நேரத்தில் இந்த இடத்தில் அவளை எதிர்பார்த்திராத பிரியா , திடுக்கிட்டு போய் கையை பிசைந்தபடி நின்றிருக்க , காரில் இருந்து சிரித்த முகத்துடன் இறங்கிய ஷம்மு ,

" ஹாய் பிரியா இங்கதான் இருக்கியா ... நல்லதா போச்சு கௌரி கிருஷ்ணா சார்ரும் இங்கதான் வந்துகிட்டு இருக்கார் ... உன்ன பார்த்தா சந்தோச படுவாருல ..." என்றவளை சங்கடத்துடன் பார்த்து சிரித்தவளின் மனம் ஊரில் உள்ள கெட்ட வார்த்தையால் தன் முன்னே நிற்பவளை சபித்துக் கொண்டிருக்க,
சற்றென்று நினைவு வந்தவளாக நிமிர்ந்து கௌரியை பார்க்க, கண்கள் இடுங்க அவளையே பார்த்திருந்தான் கௌரி. அவள் பார்வை சென்ற திசையை கண்டு தானும் திரும்பி பார்த்த ஷண்முக பிரியா , அங்கே நின்றிருந்த கௌரியை கண்டு ,

" ஹாய் சங்கர் ... வாட் எ சர்பரைஸ் ... என்ன இந்த பக்கம் ... அதுவும் பட்டு வேட்டி சட்டையில ... மாப்பிளை கோலத்துல ... ஒஹ் ஒஹ் ஒஹ் ... நியாபகம் வந்துடுச்சு ... மாப்பிளையே தானே ...சோ இன்னைக்கு உங்க ரெஜிஸ்டர் மேரேஜ் அம் ஐ கரெக்ட் ... அப்போ உங்க லட்சியத்துல ஜெய்ச்சிடீங்க போல ... நான் கூட நீங்க பணக்கார பொண்ணா பார்த்து கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணுவேன் சொன்னத சும்மா விளையாட்டுக்கு சொல்றீங்கனு நினைச்சேன் ... பட் கன் மாதிரி உறுதியா இருந்து ரெஜிஸ்டர் ஆபிஸ் வரைக்கும் வந்துருக்கீங்க , கில்லாடியான ஆளுதான் நீங்க ..." என்று சிரித்தவள் பின் , தன்னருகில் அதிர்ந்து போய் நின்றிருந்த பிரியாவின் தோளில் கையை போட்டவாறே அந்த இடத்தை சுற்றி பார்த்து ,

" உங்க வலைல விழுந்த அந்த அப்பாவி பொண்ண எனக்கு காட்ட மாட்டிங்களா ... உங்களை பத்தி நாலு வார்த்தை நல்லதா சொல்லிட்டு போறேன் ... கண்டிப்பா நீங்க பணத்துக்காகத்தான் அவங்களை லவ் பண்ணது போல நடிச்சீங்கன்னு சத்தியமா சொல்ல மாட்டேன் ..." என்று கண் சிமிட்டி சிரிக்க , தன் உலகமே காலடியில் நழுவி விழுவதை போல உள்ளுக்குள் தள்ளாடி போனாள் ப்ரியா.

தன்னுடைய கனவு மொத்தமும் சிதைந்து போனதை தாங்கிக் கொள்ள முடியாதவளின் உடல் தன் எதிர்காலத்தை நினைத்து பயத்தில் சில்லிட்டது. இவள் கூறுவது உண்மையா என்று நடுங்கிய பார்வையை கௌரியை நோக்கி வீச , கண்ணை சிமிட்டாமல் அவளை விட்டு சிறிதும் பார்வையை அசையாமல் பார்த்திருந்தவனின் தோற்றம் அப்பொழுதுதான் அவளின் கருத்தில் பதிந்தது.

கலைந்த தலையும் , வேர்வையில் தொப்பலாய் நனைந்திருந்த வெள்ளை சட்டையும் முட்டிவரை ஏற்றி கட்டிய பட்டுவேட்டியும் , வேர்வை நாற்றமுமாக இருந்தவனின் தோற்றமே சொல்லாமல் சொல்லியது அவன் யார் என்று. கண்ணை முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை பெரும்பாடு பட்டு உள்ளிழுத்து கொண்டவளின் அருகில் மற்றுமொரு கார் வந்து நிற்க அதிலிருந்து ஐம்பது வயது மதிக்க தக்க பெரியவர் இறங்கவும் , அவர் அருகில் வேகமாக ஓடிய ஷண்முக ப்ரியா

" ஹாய் அங்கிள் ... ஹொவ் ஆர் யு ..." என்ற அவரை அணைத்து கொள்ளவும் ,

" நல்லா இருக்கேண்டா ராஜாத்தி ... என்னமா வளர்ந்துட்ட ... அப்படியே உங்க அம்மா நிர்மலாவை பாக்கிறது போலவே இருக்கு ..." என்று பதிலுக்கு அணைத்து தலையில் மெல்லிய முத்தம் பதித்தவரை கண்டு புன்னகை புரிந்தவள் , பின்

" அங்கிள் உங்களுக்கு ஒரு சர்பரைஸ் ..." என்றவள் அவர் கைப்பற்றி பிரியாவின் அருகில் அழைத்து சென்று ,

" டன்டன்டான் ... சர்பரைஸ் ... உங்க ஆளை கையோட கூட்டிட்டு வந்திருக்கேன் ..." என்று பிரியாவை காட்டி கூறவும் , அதிர்ந்து போய் பார்த்த பிரியாவிடம் ,

" என்ன பிரியா அப்படி பாக்கிற ... அங்கிள் யாருனு பாக்கிறியா தி கிரேட் கௌரி கிருஷ்ணா இவர்தான் ... உன்னோட ட்ரீம் லவர் பாய் ..." என்று கண்சிமிட்டி கூற , தீ சுட்டார் போல பதறி போய் பார்த்தவளை கண்டு பெருங்குரலெடுத்து சிரித்த பெரியவர் ,

" அடடா ராஜாத்தி ... உன் விளையாட்டுக்கு ஒரு அளவில்லையா ... பாரு குழந்தை பயப்படுது ... ம்ம்ம் எனக்கும் இந்த அழகு முகத்தை பார்த்ததும் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாம் ஆசையாத்தான் இருக்கு ... என்ன பண்ண பொண்ணு என்ன பார்த்து மிரளுதே ... நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான் போல ..." என்று வருத்தம் போல கேலி பேசியவரை மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்ட ஷண்முகப்ரியா ,

" ஹாஹா அங்கிள் உங்களுக்கு ஓகேனா சொல்லுங்க , பொண்ண தூக்கிடலாம் ..." என்று பதிலுக்கு கிண்டலடித்தவள்,

" சரி அங்கிள் நீங்க உள்ள போங்க ... கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சுட்டு வரேன் ..." என்று அவரை உள்ளே அனுப்பிய பின் , பிரியாவை அழுத்தமாக பார்த்த ஷம்மு ,

" பிரியா உன்ன ஷண்முகப்ரியாவ நடிக்கத்தான் இங்க கூட்டிட்டு வந்தது... என் பேரை சொல்லி லவ் பண்ண சொல்லல … இப்போ நடக்கிற எல்லாத்துக்கும் நீ மட்டும்தான் பொறுப்பு ..." என்று கறாராய் பேசியவளை வெறித்து பார்த்தவள் ,

" அப்போ ... இன் ... த ப்ராட பத்தி முன்னமே என்கிட்ட சொல்லி எச்சரிக்கை செஞ்சுருக்கலாமே ... ஏன் செய்யாம விட்டிங்க ...” என்று குரலடைக்க பேசியவளை நக்கலாக பார்த்தவள் ,

" உன்ன வர வச்சதே இந்த ப்ராடுக்கு பாடம் கத்துக் கொடுக்கத்தான் ... அப்படியே உன்னோட பேராசைக்கும் ஒரு பாடம் கத்துக் கொடுக்க நினைச்சேன் ... இப்போ புரிஞ்சுருக்குமே பிரியா பேராசை பெருநஷ்டம்னு ... இருக்கிறத வச்சுக்கிட்டு சந்தோசமா வாழ பாரு , இத ஒரு ப்ரெண்டா நான் உனக்கு பண்ணுற அட்வைஸ் ..." என்றவள் நடந்தது அனைத்தையும் அவளிடம் கூற , உதட்டை கடித்து வெளிறி போன முகத்துடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பிரியாவின் அருகில் சென்று அவள் கைகளை பற்றிக் கொண்டாள் ரோஹிணி.

கலங்கிய விழிகளுடன் அவளை ஏறிட்டு பார்த்தவள் ,

" இவ்வளவு நாளா நான் பேசின பேச்சுக்கெல்லாம் ,என்ன முன்னாடி நடக்க விட்டு பின்னாடி சிரிச்சுருப்ப தானே ரோஹி ..." என்றவளை இறுக்கி அனைத்துக் கொண்ட ரோஹி ,

" சாரி பிரியா ... வெரி சாரி ... நான் ..." என்று தடுமாறியவளின் பிடியிலிருந்து விலகியவள் ,

" முன்ன சொன்னதுதான் ரோஹி , எது நடந்தாலும் நான் மட்டுமே பொறுப்பு ... நீ பீல் பண்ணாத ..." என்றவள் ஷண்முக பிரியாவின் அருகில் சென்று

" பணக்கார வாழ்க்கை வேணும்னு ஆசைப்பட்டது ஒன்னும் தப்பு இல்லைங்க மேடம் ... உங்களுக்கு எல்லாமே ஈஸியா கிடைச்சுடுது , அதான் எங்க கஷ்டம் உங்களுக்கு புரில ... இருக்கிறத வச்சு வாழ பழகிக்கோனு சொல்றீங்க , என்னோட வாழ்க்கையை வாழ்ந்து பாருங்க அப்போ புரியும் பணத்தோட அருமை ..." என்று கண்ணை துடைத்தபடி நிமிர்வாய் கூறியவளை கண்டு நக்கலாய் சிரித்தபடி தோளை குலுக்கியவளின் அருகில் சென்ற கௌரி ,

" நான் பண்ணது தப்புனா அப்பவே உங்க செருப்பை கழட்டி அடிச்சுருக்கலாமே பிரியா ... எதுக்கு இந்த முதுகுல குத்துற வேலை ..." என்றவனை தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி சராமாரியாக அடிக்க தொடங்கினாள் கௌரி பிரியா .
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
28876

கௌரி - 10

ஷண்முக பிரியாவின் சப்பைக்கட்டுகளை கேட்ட கௌரிசங்கருக்கு எல்லையில்லா பெரும் கோபம் எழுந்தாலும் , கோபத்தை காட்டும் நிலையில் தான் இல்லை என்று உணர்ந்தவன் மனம் பொறுக்காமல் ,அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க , திடீரென்று தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி கௌரியை அடிக்க தொடங்கினாள் பிரியா.

இந்த நிகழ்வை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள் சில நொடிகள் திகைத்து போய் நின்றிருக்க , சடுதியில் சுதாரித்த கௌரிக்கு பெருத்த அவமானமாய் போய்விட்டது பிரியாவின் செய்கை. கோபத்துடன் அவள் கைகளை இறுக்கி பற்றியவன் ,

" ஏய் ... என்ன ..." என்று கோபத்தில் கர்ஜித்தவனுக்கு 'நீ மட்டும் ஒழுங்கா ... நீயும் பிராடுகாரித்தானே , என்னமோ நல்லவ வேஷம் கட்டுற ...' என்று கத்தி கேட்கவேண்டும் போல இருந்தாலும் , கஷ்டப்பட்டு தன்னை அடக்கி கொண்டான்.

ஏனோ அனைவர் முன்னும் அவளை அசிங்கப்படுத்த தோன்றாததால் , மேலும் தன்னை அடிக்காமல் கைகளை பிடித்து கொள்ள , அவசரமாக அவள் அருகில் ஓடி வந்தாள் ரோஹி .

" பிரியா ... பப்ளிக் பிளேஸ்ல என்ன பண்ற ... எல்லாரும் பாக்குறாங்க ..." என்று அவளை பிடித்து இழுக்க,

" விடு என்ன ... " என்று திமிறிக் கொண்டு சென்றவளை வலிக்க இழுத்து பிடித்த ரோஹி ,

" பதிலுக்கு அவன் ஒன்ன அறைஞ்சா மூஞ்ச எங்க கொண்டு வச்சுக்குவ ... அவன் பண்ணது ஏமாத்து வேலைனா ... அப்போ நீ பண்ணதுக்கு பேரு என்ன ... இவ்வளவு நாள் ஷண்முகப்ரியாவ நடிச்சுக்கிட்டு தானே இருந்த ..." என்று முகத்தில் அடித்ததை போல பேசவும் , திகைத்து போய் பார்த்தவள் பதில் கூறாமல் திணறிதான் போனாள்.

அதற்குள் மணக்கோலத்தில் இருந்த பெண் மணமகனை செருப்பால் அடித்த விஷயம் அங்கிருந்தவர்களிடம் ஒருவித சுவாரசியத்தை கொடுக்க , இவர்களை சூழ்ந்துக் கொண்டவர்கள் பிரியாவின் கண்ணீரை கண்டு தங்களை தாங்களே நீதிபதியாக நியமித்துக் கொண்டு கௌரியை குற்றவாளி கூண்டில் ஏற்றி சராமாரியாக கேள்வி கணைகளை பிரியாவை நோக்கி வீசினர்.

" சொல்லுமா ... கல்யாணம் பண்றேன் சொல்லி ஏமாத்திட்டானா ..."

" இவன் மூஞ்ச பார்த்தாலே தெரிதே .. ப்ராட் பையன்னு ..."

" என்னம்மா வயித்துல புள்ளையை கொடுத்துட்டு கழட்டிவிட பாக்கிறானா ..." என்று ஆளாளுக்கு கேள்வி கணைகளை தொடுக்கவும் , நிலைமை கை மீறுவதை கண்ட ஷண்முகப்ரியா , அங்கிருந்தவர்களிடம் சுமுகமாக பேசி வெளியேற்றும் முயற்சியில் இறங்கினாள். பிரியாவிற்கோ அவர்கள் கேட்ட கேள்வி அவமானத்தை கொடுக்க அங்கிருக்க முடியாமல் முகம் கருக்க அந்த இடத்தை விட்டு வேகமாக நடக்க தொடங்கினாள்.

அவள் பின்னையே ஓடி வந்த ரோஹியிடம் , கண்களில் கண்ணீருடன்

" நான் ... ஊ ... ஊருக்கு போறேன் ... என் தி ... திங்ஸ் வேணும் , எடுத்து தரியா ..." என்று தொண்டையடைக்க பேசியவளை கண்டு ரோஹிணிக்கு பாவமாக இருந்து.

" சாரி பி ..." என்று எதுவோ கூற ஆரம்பித்தவளை தலையாட்டி வாயில் விரல் வைத்து பேசாதே என்று தடுத்த பிரியா ,

" என் பாக் வேணும் ... எடுத்து தரமுடியுமா முடியாதா ..."என்று கறாராய் கேட்க , வேகமாக தலையாட்டிய ரோஹியை கண்ணீர் மல்க பார்த்தவள் விறுவிறுவென்று வெளியேறி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

அவள் சென்ற திசையை வெறித்து பார்த்த கௌரி , பின் ஷண்முகப்ரியாவிடம் ,

" உங்களையும் உங்க அப்பாவையும் தப்பா பேசுனது தப்புதான் ... அதுக்கு சாரிங்க , ஆனா தேவையே இல்லாம எங்க ரெண்டு பேர் வாழ்க்கைளையும் விளையாண்டிடீங்க ... எங்க முதுகு பின்னாடி குத்தின உங்களுக்கும் ,ஏமாத்தி கல்யாணம் பண்ண நினைத்த எங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லங்க ... சொல்ல போனா நீங்க பண்ணதுதான் மஹாபாவம் , அதுக்கு யாரு பாடம் சொல்லிக் கொடுக்க முடியும் கடவுள தவிர ... பட் கடவுள்கிட்ட வேண்டுகிறேன் உங்களுக்கு எந்த கஷ்டமும் எங்களால வர வேணாம்னு ..." என்று ஞானி போல தத்துவம் பேசியவன் அனைவரையும் பார்த்து பொதுவாக ஒரு கும்பிடு போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

ரெஜிஸ்டர் ஆபீஸ் விட்டு வெளியே நடந்து சென்றவனின் பார்வையில் பட்டான் பிரசன்னா , இருந்தும் கவனிக்காததை போல வெளியேற முயன்றவனின் வழியை மறைத்தவன் ,

" சாரிடா மச்சான் ... மேடம் அவங்க பிளானுக்கு நான் ஹெல்ப் பண்ணா என்ன கம்பெனி செலவுல பாரின்ல ஹையர் ஸ்டடீஸ் பண்ண அனுப்புறதா சொன்னாங்க டா ... நீயும் பிரியாவ ட்ருவா லவ் பண்ணல , ஒருவேளை உண்மை தெரிஞ்சாலும் உனக்கு அதனால கஷ்டமிருக்காது அடுத்த பணக்கார பொண்ண தேடி போய்டுவேன்னு தெரியும்டா ... அதனாலதான் அவங்க சொல்றத செய்ய ஒத்துக்கிட்டேன் ... நீயே சொல்லு இப்படி ஒரு ஆபர் வந்தா நீ என்ன பண்ணுவ ... இப்போ அந்த பிரியா பொண்ணு கிடைக்கலைனு பீல் பண்றியா சொல்லு ... இல்லல ..." என்று நிறுத்தியவன் ,

" அதோடு அந்த பிரியா ஒன்னும் நல்ல பொண்ணுயில்ல ...ஏற்கனவே வீட்டுல மாப்பிளை பார்த்து நிச்சயம் பண்ணிருக்காங்க ... இருந்தும் இங்க உன் கூட லவ்னு சுத்திருக்கு பாரு ..." என்று பிரியாவை பற்றி கூற, ஏனோ அவளை பற்றி தப்பா கூறுவதை ஏற்க முடியாமல் மனம் தடுமாற , கண்ணை மூடி திறந்தவன்

" உன் மேல கோபம்னா இல்ல ... நல்லாயிரு ..." என்று கோபத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேற , 'நல்லாயிருனு உண்மையிலயே வாழ்த்தினான் இல்ல சாபமிட்டான ' என்று புரியாமல் குழம்பி நின்றான் பிரசன்னா.

பிரசன்னா கூறியதை அசைபோட்டபடி வெளியே வந்தவனின் பார்வையில் சோக பதுமையாய் பஸ் ஸ்டாண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்த பிரியா கண்ணில் பட்டாள். பொறுமையாய் அவளை நோக்கி சென்றவன் அவள் அருகில் சென்று பேசாமல் நிற்கவும் , தன் அருகில் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவளின் பார்வை அங்கே நின்றிருந்தவனை கண்டு சடுதியில் அனலை கக்கியது.

" அப்பா சூடு தாங்க முடில உடம்பலாம் எரியுது ..." என்று நக்கலடித்தவன்

" அட பணக்கார கிழட்டு கௌரி கிருஷ்ணாவ பார்த்தாதான் அந்த கண்ணுல காதல பார்க்க முடியுமோ ... சொல்லு ப்ரிக்குட்டி ..." என்று கேலி பேச, பல்லைக் கடித்து பொறுமை காத்தவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்ள ,

"ஏன் ப்ரிக்குட்டி வந்ததும்தான் வந்துட்டோம் ஏன் நாம கல்யாணம் பண்ணிக்க கூடாது ... நான் ஒன்னும் உங்க வீட்டுல பார்த்த மாப்பிளையை நீ கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு சொல்ல மாட்டேன் ..."

"என் கூட ஒரு நாள் வொய்ப்பா வாழ்ந்துட்டு போனா போதும் ... இது கூட ஏன் கேட்கிறனா நீ பணக்கார ப்ரியான்னு நினைச்சு நிறையா காச செலவு பண்ணிட்டேன் , திரும்ப அதையெல்லாம் எடுக்க முடியாதில்ல ... அதுக்கு பதில் ஒரே ஒரு நாள் என் வைப்பா இருந்துட்டு போய்டு ... சும்மானா இல்ல ப்ரிக்குட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் நாம புருஷன் பொண்டாட்டியா வாழ போறோம் ... பார்த்தியா நான் எவ்வளவு நல்லவன்னு ... என்ன ஏமாத்தின பொண்ணுக்கிட்டயே வா தாலி கட்டி குடும்பம் நடத்தலாம்னு கூப்பிடுறேன் ... இப்படி ஒரு நியாயஸ்தானை பார்த்திருப்பியா ..." என்று அப்பாவியாய் பேச, குப்பென முகம் கோபத்தில் சிவந்து போக , நிதானமாய் அவனை திரும்பி பார்த்தவள்,

" ஏன் உள்ள வாங்கினது பத்தலையா ... இல்ல நடுரோட்ல ஓடவிட்டு அடிக்கணும்னு ஆசை படுறியா ..." என்று திமிராய் பேசியவள் ,

" இப்போ என்ன நீ பேசுறத கேட்டு , அசிங்கப்பட்டு துக்கப்பட்டு வேதனைப்பட்டு அவமானப்பட்டு அய்யோ நாம இவ்வளவு மோசமானு கண்ணீர் விடுவேன்னு நினைச்சியா ... போடா டேய் நீ ஆம்பள கௌரினா நான் பொம்பள கௌரி ... உனக்கு எப்படி சூடு சொரணை கிடையாதோ அப்படிதான் எனக்கும் , இதுக்கெல்லாம் அசிங்கப்பட்டிருந்தா சென்னைக்கே வந்திருக்க மாட்டேன் ... போவியா ... பெருசா வெறுப்பேத்த வந்துட்டார் ... அப்புறம் எனக்கு செலவு பண்ணத வேஸ்ட்டா நினைக்காத ... அதெல்லாம் லேசுல கிடைக்காது ... எங்கையோ உனக்கு அதிர்ஷ்ட மச்சம் இருக்கு அதான் அந்த அதிர்ஷ்டம் உனக்கு அடிச்சுருக்கு ... போ போ போய் அடுத்த பொண்ண எப்படி கரெக்ட் பண்ணுறதுனு யோசி ... வெட்டியா என்ன சீண்டி சந்தோச பட நினைக்காத , நீதான் பெரிய பல்ப் வாங்குவ ... ஏன்னா நானும் உன்ன போல துப்பினா துடைச்சுக்கிற ஜாதி ... என்ன ஒன்னு உனக்கு கிஸ் கொடுத்ததுதான் கொஞ்சம் நெருடலா இருக்கு பட் அது கூட பல்லி உச்சா விட்ட பீல் தான் கொடுத்துச்சு அதனால உன்ன இப்படியே மன்னிச்சு விட்டுடுறேன் , இனி என் கண்ணுல படாத ... பட்டா லைப் லாங் நரக வேதனைத்தான் பார்ப்ப ..." என்று அசால்டாய் கூறியவள் ரோட்டில் சென்ற ஆட்டோவை கை நீட்டி ஏறிக் கொண்டாள்.

பிரியாவிடமிருந்து இப்படிப்பட்ட பதிலை எதிர்பார்க்காத கௌரி அதிர்ந்து போய் சில நொடிகள் அசந்து போய் நிற்க , அவள் சென்ற ஆட்டோவின் சத்தம் கேட்டுத்தான் தன்னிலைக்கு வந்தவனின் உதடுகளில் மெல்லிய புன்னகை அரும்பியது. உண்மையில் மனதில் ஏற்பட்ட ஏமாற்றத்தை போக்கி கொள்ளவே பிரியாவை கேவலமாக பேசி அவளை வருத்த நினைத்தான், அவளோ துப்பினா துடைச்சுப்பேன் என்று சொல்லி செல்லவும் இன்னும் சற்று ஆழமாய் கௌரியின் இதயத்திற்குள் நுழைந்தாள் பிரியா.

இரவு பதினோரு மணியளவில் வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்கவும், பாதி தூக்கத்திலிருந்த வளர் எழுந்து சென்று கதவை திறக்க , அங்கே நின்றிருந்தவனை கண்டு இதுவரை அவன் மேல் அடங்கியிருந்த கோபம் பீறிட்டு வரவும் அருகிலிருந்த துடைப்பத்தை எடுத்து விலாச தொடங்கினார்.

" ஏண்டா நாயே ... வீட்டுல இருக்கிற பணத்த திருடிட்டு போவியா ... உன்ன ..." என்று மேலும் பல கெட்ட வார்த்தைகளால் அர்ஜித்து அதகளம் பண்ணியவரை குறுக்கே புகுந்து தடுத்தார் தண்டபாணி.

" விடு வளர் ... திரும்ப ஓடிட போறான் ... உள்ளேவிட்டு பேசு ..." என்று தன் மனைவியை தடுத்தபடி பேசியவரை முறைத்த கௌரி ,

" என்னது ஓடி போனேனா ... ஓஹோ அப்படிதான் எல்லார் கிட்டையும் கத கட்டி வச்சுருக்கீங்களா ... அதோடு எங்க மம்மிக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல்ல ஆயிரம் டீலிங்க் இருக்கும் , நீங்க நல்லவர் வேஷம் போட்டு இடையில வந்து எங்க அம்மாவ கரெக்ட் பண்ண பார்க்காதீங்க ..." என்று அவரிடம் எகிற, தலையில் அடித்து கொண்ட தண்டபாணி

" த்தூ ... அப்பா கிட்ட பேசுறத போலயா பேசுற ... ஆள பார்த்தா எங்கையோ செம்மையா வாங்கிட்டு வந்திருப்ப போல ... அப்போ கூட உன் வாய் அடங்க மாட்டுதே..." என்று நக்கலடிக்கவும் , அப்பொழுதுதான் அவனை நன்கு கவனித்த வளர் பதறி போனவராக ,

" என்னடா ஆச்சு ... ஏன் முகம் வீங்கியிருக்கு ..." என்று அவன் உடல் முழுவதும் தன் கைகளால் வருடியவர் ,

" என்ன மரம்போல பாத்துகிட்டு நிக்கிறீங்க ... என்ன ஆச்சுன்னு கேளுங்க ... எந்த எடப்பட்டு சிறுக்கி மகன் அடிச்சான் தெரியலையே , அவன் கைல கட்ட முளைக்க ... அவன் கை விளங்காம போக ..." என்று சாபம் கொடுத்தவரை முறைத்த தண்டபாணி ,

" பார்த்து வளர் சாபம் பலிச்சு உன் கை இழுத்துக்க போகுது ..." என்று நக்கலடித்தவரை பதிலுக்கு முறைத்த வளரை கண்டு ,

" மூஞ்சுல பூரான் விட்டது வேணா வேற யாரோ இருக்கலாம் ... ஆனா கழுத்துலையும் கைலையும் ரோடு போட்டது நீதாண்டி ..." என்று கிண்டலடித்தவரை கண்டு அந்த நேரத்திலையும் கௌரிக்கு சிரிப்பு வர , சத்தம் போட்டு சிரித்தவன் ,

" எம்மா ... இவர் வாத்தியாரா ... இல்ல பேட்ட ரௌடியா ... பூரான் ரோடுன்னு கோட் ஒர்ட்ல பொளந்து கட்டுறாரு ..." என்று தந்தையை வாரிவிட
அதை கண்டுக் கொள்ளாமல் மகனை வீட்டிற்கு அழைத்து சென்ற வளர் , தன்னருகில் உட்காரவைத்துக் கொண்டு அவன் முகத்தை வருடியபடி

" அம்மாகிட்ட எதையும் மறைக்க மாட்டத்தானே , என்ன நடந்ததுன்னு சொல்லுயா ..." என்று பரிவுடன் கேட்கவும் , ஒரு நொடி சொல்ல வேண்டாம் என்று தயங்கியவன் பின் தன் அன்னையிடம் எதையும் மறைத்து பழக்கமில்லாதவனுக்கு தான் அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை என்று அதற்கு மேல் மறைக்க முடியாமல் நடந்த அனைத்தையும் சற்று மாற்றி கூறினான்.

அதாவது தன் அழகில் மயங்கி தான் ஒரு பணக்காரியாக காட்டிக் கொண்டு ஒரு பெண் தன்னை கல்யாணம் வரைக்கும் கொண்டு சென்று ஏமாற்றியதாகவும் , கடைசி நிமிசத்தில் உண்மை தெரிந்து தான் திருமணத்தை தடுத்ததாகவும் கூற , பொங்கிவிட்டார் தண்டபாணி.

" எவ்வளவு திமிர் இருந்தா நாங்க உயிரோடு இருக்கும் போதே எங்களுக்கு தெரியாம திருட்டு கல்யாணம் பண்ண பார்ப்ப ... அடியே வளரு உன் மகன் சொல்றத பார்த்தா முழு உண்மைபோல தெரில ... எனக்கு என்னமோ அந்த பொண்ணு தான் இவன் கிட்ட ஏமாற பாத்திருக்கும் தோணுது ... அந்த கோபத்துலதான் இவன விளாசி தள்ளிருக்கு ... இப்பவாது உன் மகனுக்கு நல்ல புத்திய சொல்லி திருந்த சொல்லு ... இல்ல இன்னும் அசிங்கப்பட்டு போவான் ..." என்று கோபத்துடன் பேசியவரின் விலாவில் தன் முழங்கையால் குத்திய வளர் ,

" கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருக்கீங்களா ... எப்போ பாரு சாபம் கொடுக்கிறதே வேலையா வச்சுக்கிட்டு ... இப்போ என்ன ஊருல நடக்காததையா என் பையன் பண்ணிட்டான் ... பணக்கார பொண்ணுன்னு நினைச்சு கல்யாணம் வரைக்கும் போயிருக்கான் , இவன் ஆம்பள புள்ள எப்படி இருந்தாலும் தப்பில்லை ... ஆனா அந்த பொட்ட கழுதைக்கு எவ்வளவு திமிர் இருந்தா ஏமாத்திருப்பா ... டேய் கௌரி எங்கையாவது அவள பார்த்தா சொல்லு , அவ குடும்பத்தையே நாரடிச்சுடுறேன் ... என்ன திமிர் இருந்தா என் பையன செருப்பால அடிச்சுருப்பா ... அவ விளங்கவே மாட்ட நாசமா போய்டுவா பாரு ..." என்று ஆத்திரத்தில் சாபமிட்டவரை கண்டு மீண்டும் தலையிலடித்துக் கொண்ட தண்டபாணி ,

" என்ன பண்ணாலும் உன் பிள்ளையை உட்டு கொடுக்க மாட்ட ... பட்டுத்தான் திருந்துவனா என்ன பண்ண முடியும் ..." என்று தனக்குள் புலம்பியவர் ,

"இங்க பாருடா ... உன் ஆத்தாக்காரி பேச்ச கேட்டு இன்னும் உருப்புடாம போகாத ... நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் , இனிமேலாவது பணக்கார வாழ்க்கை வேணும்னு ஆசைப்படாம நான் சொல்ற வேலைக்கு போக பாரு ..." என்று அறிவுரை கூறியவரை நக்கலாக பார்த்தவன் ,

" இத நீங்க என் மம்மி தான் வேணும்னு ஒத்த காலுல நின்னு கட்டாம சொல்லியிருந்தா கேட்டுருப்பேன் ... இப்போ ஐ அம் ஜாரி டாடி ... உங்களுக்கு எப்படி வெள்ள பொண்ணு மேல ஆசையோ , அப்படிதான் எனக்கு பணக்கார பொண்ணு மேல ஆச ... ஏனா எனக்குள்ள ஓடுறது உங்க ரத்தம் டாடி உங்க ரத்தம் ..." என்று டயலாக் அடித்தபடி பேசியவனை கண்டு தலையை இருபக்கமும் அதிருப்தியில் ஆட்டியபடி நொந்து போய் தூங்க சென்றார்

அவர் தலை மறைத்தும் , தன் மகனை பிடித்துக் கொண்ட வளர் ,

" கௌரி ... அப்பா இருந்ததால தான் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினேன் ... எவ்வளவு திமிரு இருந்தா எங்களுக்கு தெரியாம கல்யாணம் வரைக்கும் போயிருப்ப , அப்போ பணம் காச விட நாங்க சீப்பா போய்ட்டோமா ... நீ பண்ண காரியத்துக்கு உன்ன வீட்டுக்குள்ளவே விட்டிருக்க மாட்டேன் ... கூட அப்பா இருந்ததால தப்பிச்ச ... இனிமே எனக்கு தெரியாம எங்கையும் போக மாட்டேன்னு என் தலைல அடிச்சு சத்தியம் பண்ணு ..." என்று கறாராய் பேசியவரின் தலையில் சற்று தயங்கி பின் அவர் தலையில் அடித்து சத்தியம் செய்ய ,

"இப்போ என்ன உனக்கு வசதியான வாழ்க்கைதான் வேணும் ... அத என்கிட்ட விடு ... எப்படிப்பட்ட பொண்ணா பார்த்து உனக்கு கட்டிவைக்கிறேனா இல்லையான்னு பாரு ..." என்றவர் , சாப்பிட்டியா என்று கேட்க , என்ன இருந்தாலும் அம்மா அம்மாதான் என்று நினைத்தவன் , இல்லமா என்று தலையாட்டவும் ,

" போய் குளிச்சுட்டு வா ... தோசை சுட்டு தரேன் ..." என்கவும் , அன்று நடந்ததை அசைபோட்டபடி குளிக்க சென்றவன் வேறு உடையுடுத்தி சாப்பிட சென்றான்.

இசிஆர் ரோட்டில் வேகமாய் காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கௌரி. அவன் அருகில் அமர்ந்திருந்தாள் தேவலோகத்து அப்சரசுகள் தோற்று போகும் அழகில் இருந்த அழகி ஒருத்தி. அவளை கண்ட நொடி அவன் உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து பீறிட்டு எழுந்த காதலை அடக்க முடியாமல் , அவள் இதழ்களில் தன் இதழை பொருத்தி அவசரமாக இதழ் தேனை பருக, அதில் மயங்கி போனவளின் கண்கள் சொக்கி போகவும் மெல்ல சிரித்த படி விலகியவன் எதிரே கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக வந்துக் கொண்டிருந்த லாரியில் பெரும் சத்தத்துடன் மோதினான்.

மோதிய வேகத்தில் வண்டியில் இருந்து தூக்கி வெளியே எறியப்பட்டு அருகில் உள்ள மரத்தில் மோதி வேரறுந்த மரமாய் கீழே விழுந்தவளை கண்டு பதறி போன கௌரி , காரிலிருந்து கஷ்ட்டப்பட்டு வெளியேறி ரத்தவெள்ளத்தில் மிதந்து கிடந்தவளை வாரியெடுத்து மடியில் வைத்தவன் ,

" என்ன விட்டு போகாத டி ... நீ இல்லாம நான் இல்ல ... ப்ளீஸ் போகாத ..." என்று கண்ணீருடன் புலம்ப , மெல்ல கஷ்டப்பட்டு கண்ணை திறந்தவள் ,

" கௌ ... கௌரி ... ஐ ... ல... லவ் யு டா ... நா நா நான் பொழைக்க ... மாட் ... டேன் ... நீ நீ ... இன் ... இனொரு ... கல் ...கல் ... யாணம் ... பண்ணிக்கோ ... என் மே ல ச தி யம் பண்ணு ..." என்று திக்கி திணறி பேசவும் , கதறிவிட்டான் கௌரி .

" இல்லடி ப்ரி குட்டி ... நீ இல்லாத உலகத்துல நானும் இருக்க மாட்டேன் ... ஐ லவ் யு ... ப்ரிக்குட்டி , ஐ லவ் யு ..." என்று அவளை அணைத்துக் கொண்டு கதறிக் கொண்டிருக்கும் போதே அவள் தலை தொங்கி போக ,

" ப்ரிக்குட்டிஈஈஈ ..." என்ற கதறலுடன் அடித்து பிடித்து தூக்கத்திலிருந்து எழுந்தவனின் உடல் முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தது.

சாப்பிடப்பின் தூங்குவதற்காக மொட்டை மாடிக்கு வந்தவன் ,வெறுந்தரையில் காலை நீட்டி படுக்க, அன்று ஏற்பட்ட மனஉளைச்சலால் தூக்கம் விரைவிலையே தழுவி கொள்ளவும் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றவனை தான் கனவு வந்து தூக்கத்தை கலைக்க , மனம் அமைதி படுவதற்காக மெல்ல மாடியில் நடை பயின்றான்.

' சம்பந்தமே இல்லாம இந்த ப்ரிக்குட்டி எதுக்கு கனவுல வரா ... அதுவும் அவளுக்காக உருகி உருகி அழுவ வேற செய்யுறேன் ... உனக்குள்ள என்னடா நடக்குது கௌரி' என்று தனக்குள் புலம்பியவனின் ஞாபகத்தில் அவன் அன்னை பிரியாவிற்கு விட்ட சாபம் நினைவுக்கு வரவும் , இப்பொழுது வந்த கனவையும் கனெக்ட் பண்ணி பார்த்தவனுக்கு மனம் நிலையில்லாமல் தவிக்க , அடுத்தநொடி கீழே இறங்கி சென்றான்.

நல்ல உறக்கத்தில் இருந்த வளரின் அருகில் சென்றவன் அவரை உலுக்கி எழுப்ப, கண்ணை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு கண் விழித்தவரின் கையை பிடித்து தூக்கி உட்காரவைத்தவன் ,

" மம்மி ... த்தூ த்துனு துப்புமா.."என்று குழைந்தவனை , தூக்க கலக்கத்துடன் பார்த்தவரை கண்டு முப்பத்திரெண்டு பல்லையும் காட்டி சிரித்தவன் பின் ,

" ப்ளீஸ் மம்மி என்ன பார்த்து த்தூ த்தூனு துப்புமா ... கெட்ட கனவு கண்டேன் ..." என்று பாவமாய் பேசவும் கெட்ட கனவு என்ற வார்த்தையில் அடங்கி போன வளர் , த்தூ த்தூ என்று மூன்று முறை துப்பியவர் படுக்க முயல , அவர் கைப்பிடித்து தடுத்தவன் ,

" இரும்மா ... அப்படியே தெரியாம சொல்லிட்டேன் ... நான் சொன்னது எதுவும் பலிக்க கூடாதுன்னு ...சொல்லுமா ..." என்று மீண்டும் குழைந்தவனை பின்பற்றி அவன் சொன்னதை கிளி பிள்ளை போல திருப்பி சொன்னவர் , கடைசி வாக்கியத்தில் சுதாரித்து ,

" என்னடா இதெல்லாம் ... இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்ல சொல்ற ..." என்றவருக்கு ,
"ம்ப்ச் ... சொல்லுமா ..." என்று அவரை முழுவதுமாக சொல்ல வைத்தே விட ,

" அதுவா ... நீ பாதி தூக்கத்திலிருந்து எழுந்து அவன் மேல துப்பினா நல்ல புத்தி கிடைக்குமாம் ... கௌரியானந்தா சாமிஜி சொன்னாராம் ... அதான் உன் புள்ள பாதி தூக்கத்தில எழுப்பிருக்கான் ... அப்படித்தானே கௌரி ..." என்று வளரின் அருகில் படுத்திருந்த தண்டபாணி குரல் கொடுக்கவும் , அவர்களுக்கு நடுவில் படுத்தவன் ,

"தள்ளி படுங்க ... உங்ககிட்ட இருக்க கருப்பு எங்க அம்மா மேல ஒட்டிக்க போகுது ..." என்றவனை முறைத்தவர் தன் மனைவியை ரகசியமாய் பார்த்து நக்கலாக சிரிக்க , பீறிட்டுக் கொண்டு எழுந்த சிரிப்பை அடக்கி கொண்ட வளர் அவன் தலையில் வலிக்காமல் கொட்டி தன் தூக்கத்தை தொடர,
இருவருக்கும் நடுவே படுத்தவனின் மனமோ ,

'சின்ன வயசுல இருந்தே கருப்பணசாமிக்கு நந்தியாவே இருந்திருக்கேன் ... அந்த பாவலாம் சேர்த்து வச்சு என்னையும் என் ப்ரிகுட்டியையும் பிரிச்சுடுமோ ..." என்று நினைத்தவனின் எண்ணம் முழுவதும் பிரியாவை சுற்றியே பயணிக்க , அதே நினைப்போடு சுகமாக தூங்கி போனான் கௌரிசங்கர்.
 
Last edited:

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌரி – 11

அந்த சிறிய கல்யாணம் மண்டபம் மக்கள் நடமாட்டத்தால் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்த உறவினர் கூட்டம் ஒருபுறமிருக்க , என்னேரமும் வந்து சேர்ந்துவிடும் மாப்பிளை வீட்டினரை எதிர்பார்த்து படபடப்புடன் வேலைகளை ஏவிவிட்டபடி வாயிலில் நின்றிருந்தார் தனசேகர்.

அந்நேரம் பிரியாவிற்கு பார்த்த மாப்பிள்ளை செல்வராஜ் தன் பெற்றோருடன் அங்கு வந்து சேர, அவர்களை அடக்கத்துடன் வரவேற்றார் சேகர். அவரின் சோர்ந்த முகத்தை கண்ட வேலு ,

"ஏன் சேகர் இப்படி கஷ்டப்படுறதுக்கு பேசாம மாப்பிளை வீட்டுல கேட்டப்பவே எங்க பக்கம் பொண்ணு வீட்டுல கல்யாணம் பண்ற பழக்கம் இல்லைனு சொல்லிருக்கலாமே ... இப்போ பாரு எல்லா வேலையும் உன் தலைல விழுந்துருக்கு ..." என்று அக்கறையுடன் கூற

" அப்படி இல்லங்க ... அவங்க கேட்கும் போது மறுக்க முடில ... போடுற நகைல குறைச்சுக்கிட்டு கல்யாணத்த நம்ம பக்கமே பண்ண கேட்டாங்க , எனக்கு மாப்பிளையை ரொம்ப பிடிச்சுடுச்சு ,இந்த பிரச்சனையால சம்பந்தம் கைவிட்டு போறது பிடிக்கல , கஷ்டமா இருந்தாலும் ஒத்துக்கிட்டேன் ..." என்று விளக்கம் கொடுக்க, அதுவரை அமைதியாக இருந்த செல்வா ,

"மாமா மத்த வேலைகளை தான் என்ன செய்யவிடல ... இப்போவாவது உங்களுக்கு ஹெல்ப் பண்ண என்ன விடுங்க ..." என்றவனுக்கு பதில் சொல்ல சேகர் தயங்கவும் ,

"இங்கப்பாரு சேகரு என் பையன உன் பையனா நினைச்சா அவனை வேலை செய்யவிடு ... இல்ல வெளி ஆள நினைச்சா எதுவும் சொல்ல வேணா , நாங்களும் எதுக்கு வந்தோமோ அத மட்டும் பார்த்துட்டு போயிடுறோம் ..." என்று செல்வாவின் தந்தை வேலு சற்று கோபமாய் பேச , அவர் கைகளை பற்றிய சேகர் ,

“என்ன இப்படி சொல்லிடீங்க ... கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிளையை வேலை வாங்கிறேன் மத்தவங்க தப்பா பேசுவாங்கன்னுதான் நான் தயங்கினேன் ... செல்வா தம்பி பையன் இல்லாத எனக்கு மகன் போலத்தான் ..." என்று நெகிழ்ந்து போய் பேசியவர் ,

" தம்பி மாப்பிள்ளை வீட்டுல இருந்து வரவங்களை பார்த்து தங்க வைக்கிறது உங்க பொறுப்பு ..." என்று சிறு சிரிப்புடன் கூற , அதே சிரிப்புடன்

"சரிங்க மாமா ... நான் போய் பிரியாவா பார்த்துட்டு கிளம்புறேன் ...' என்று பதிலளித்து தன் அன்னையுடன் உள்ளே செல்ல , சேகருடன் அங்கயே நின்றுவிட்டார் வேலு.

"வாங்க தம்பி...வாங்க அண்ணி ..." என்று தங்களை தேடி வந்த செல்வத்தை வரவேற்றார் ஜெயந்தி. அவர்கள் வந்தது தெரிந்திருந்தாலும் , தன் அன்னை அழைத்தது காதில் விழுந்தாலும் திரும்பி பார்க்காமல் அதே இடத்தில் அசையாமல் அமர்ந்துக் கொண்டு கல்யாணத்திற்கு வாங்கிய புடவைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரியா.

சற்று நேரம் பொறுத்து பார்த்த ஜெயந்தி , அவள் திரும்ப போவதில்லை என்றுணர்ந்து , 'ப்ரியா ..' என்று குரல் கொடுக்குமுன் , அவள் அருகில் சென்ற செல்வத்தின் அன்னை ,

" எப்படி கண்ணு இருக்க ..." என்று அவள் தாடையை பிடித்து நிமிர்த்தி கேட்டவர் பின் ,

" என்ன முன்னதுக்கு இப்போ இளைச்சது போல இருக்க ... சரியா சாப்பிடறது இல்லையா கண்ணு ..." என்று பரிவுடன் கேட்டவருக்கு ,

" நல்லா இருக்கேன் ..." என்று தலையை ஆட்டியபடி பதில் கூறியவள், மீண்டும் தலையை புடவையில் திணித்துக் கொள்ள , பெரும் ஏமாற்றமாக போனது செல்வாவிற்கு.

தன்னை பார்த்து சிரிப்பாள் நலம் விசாரிப்பாள் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு , தன் அன்னையின் நலத்தை கூட விசாரிக்காமல் பேச பிடிக்காதவள் போல முகத்தை திருப்பி கொள்ளவும் , தான் எடுத்த முடிவு சரியா தவறா என்று புரியாமல் குழம்பி போனான்.

ஜெயந்திக்கு மகளின் செயல் ஆத்திரத்தை கொடுக்க , அவர்கள் முன் கடிந்து கொள்ள முடியாதவராக ,

"அண்ணி வாங்க , நாம காயத்ரியை பார்க்க போலாம் .." என்று இருவருக்கும் தனிமை கொடுக்க நினைத்தவர் நாசூக்காய் செல்வாவின் அம்மாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

மனதில் உறுத்தல் இருந்தாலும் டிசைனர் புடவையில் நேர்த்தியான மேப்பில் தேவதைப்போல இருந்தவளை கண்டதும் காதல் கொண்ட மனசு அதையெல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு அவள் அருகில் செல்ல தூண்டவும் , மெல்ல அவளருகில் சென்றவன் ,

"எப்படிம்மா இருக்க ..." என்று அன்பொழுக கேட்க, ஏனோ எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது பிரியாவிற்கு. அவன் கேள்விக்கு பதில் கூறாமல் புடவையை திருப்பி திருப்பி பார்த்திருந்தவளை கண்டு உள்ளம் வலித்தாலும் , கல்யாணத்திற்கு பிறகு சரி செய்து விடுவேன் என்ற நம்பிக்கையில் , தயக்கத்துடன் மெல்ல அவள் கைகளை பற்றியவனின் கையை பிய்ந்து கீழே விழும் அளவிற்கு உதறித்தள்ளியவள் அவனை முறைத்தபடி ,

"கல்யாணத்துக்கு முன்னாடி தொடுற வேலைலாம் வேணாம் ... எனக்கு பிடிக்காது..." என்று முகத்தில் அடித்தது போல பேசியவளின் மன கண்ணில் தோன்றி நக்கலாக சிரித்தான் கௌரி.

'இந்த ப்ராட் பய வேற அப்போ அப்போ கண்ணு முன்னாடி தோன்றி , பயம் காட்டுறானே ... நீ மட்டும் என் கண்ணுல மாட்டுன செத்தடா மவனே ...' உள்ளுக்குள் புலம்பியவள் வெளியே கோபமாக முகத்தை வைத்துக் கொள்ள

" சாரி சாரி ... தப்பான எண்ணத்துல பிடிக்கலமா ...” என்று பதறி போய் கூறினான் செல்வா.

"ச்ச ... எத்தன தடவ சொல்லிருக்கேன் அம்மானு கூப்பிடாதீங்கன்னு , அப்படி கூப்பிடும் போது எரிச்சலா இருக்கு ..." என்று சுள்ளென்று எரிந்து விழுந்தவளை பாவமாக பார்த்தவனை கண்டு சிறிதும் இரக்கம் பிறக்கவில்லை அவளிற்கு.

" இல்ல பிரியா ... அது பாசத்துல ..." என்று ஆரம்பித்தவனை கையை நீட்டி தடுத்தவள் ,

" போதும் பொண்ணுங்க போல எல்லாத்துக்கும் காரணம் சொல்லிக்கிட்டு திரியாதீங்க ... எனக்கு கடுப்பா வருது ..." என்று எரிந்து விழுந்தவள் அங்கிருந்து கோபமாக வெளியேற , செய்வதறியாது திகைத்து போய் நின்றுவிட்டான் செல்வராஜ். இதை அனைத்தையும் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த ஜெயந்திக்கு தன் மகளின் கழுத்தை நெரித்து போடும் அளவிற்கு வெறியே உண்டானது.

சென்னையிலிருந்து அவள் வந்திறங்கிய கோலத்தை கண்டவருக்கு வயிற்றில் புளி கரைய தொடங்கியது. அவளிடம் எவ்வளவோ கேட்டு பார்த்தும் அடித்து பார்த்தும் என்ன நடந்தது என்று அவரால் கண்டு பிடிக்கமுடியவில்லை , ஆனால் எதுவோ சரியில்லை என்று தாயுள்ளம் கடந்து துடிக்க நிம்மதியில்லாமல் நடமாடியவரை சமாதானம் படுத்தி தான் பார்த்துக் கொள்வதாக காயத்ரி வாக்கு கொடுக்கவே சற்று தெளிந்தார்.

வந்ததிலிருந்து எதையோ பறிகொடுத்ததை போல நடமாடியவளிடம் ,எந்த உண்மையும் அறிந்துக் கொள்ள முடியாமல் போக , ஒரு கட்டத்தில் காயத்ரியின் பாசத்திற்கு கட்டுபட்டு அவள் தலையில் அடித்து தான் இன்னும் தனசேகர் மகளாக தான் இருக்கிறேன் என்று சத்தியம் பண்ணவும் தான் சற்று தெளிந்தார் ஜெயந்தி. அப்பொழுதே முடிவுகட்டிவிட்டார் , காயத்ரியின் கல்யாணம் முடிந்த கையோடு ப்ரியாவின் திருமணத்தையும் விரைந்து நடத்தி முடித்துவிட வேண்டும் என்று. அன்றிலிருந்து அவளிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டார் அந்த அன்னை.

அவர் பேசாததை கண்டு பெரிதும் அலட்டிக் கொள்ளாத பிரியாவிற்கு ,ஏனோ செல்வாவுடன் ஆனா திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே கௌரியிடம் ஏமாந்ததால் வேறு வழி இல்லாமலும் ஜெயந்தியின் மிரட்டலாலும் வேண்டாவெறுப்பாக அவனுடன் ஆனா திருமணத்திற்கு தன்னை மனதில் தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

தொங்கி போன முகத்தோடு வெளியேறிய செல்வாவை பார்க்க பார்க்க ஜெயந்திக்கு பிரியாவின் மேல் கடுங்கோபம் வரவே அவளை தேடி சென்றவர் ,

" ஏய் உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க பெரிய மைசூர் மஹாராணினா ... கொஞ்சம் வெள்ளை தோள வச்சுக்கிட்டு ரொம்ப ஆட்டம் போடறடி ... ஓவர் ஆட்டம் போடாத அது உனக்கு நல்லதுக்கு இல்ல ..." என்று மிரட்டியவரை சலிப்பாக பார்த்தவள் ,

" இப்போ எதுக்கு சாபம் கொடுக்கிறேன்னு தெரிஞ்சுக்கலாமா ..." என்றவளை கொலைவெறியுடன் பார்த்த ஜெயா ,

" செல்வா தம்பிகிட்ட கொஞ்சம் சாந்தமா பேச தெரியாத ... மூஞ்சுல அடிச்சது போல பேசுற ... பாவம் புள்ள மூஞ்சு தொங்கி போய்டுச்சு ..." என்று ஆற்றாமையுடன் பேசியவரை நக்கலாக பார்த்தவள் , உதட்டை பிதுக்கி ,

" ம்ம்ம் ... மூஞ்சு தொங்கி போய்டுச்சா ... அதுக்கு ஒன்னும் நான் பண்ண முடியாது , அந்த கொஞ்சூண்டு வெள்ள தோள பார்த்து மயங்கித்தானே பொண்ணு கேட்டு வந்தாரு ... அப்படிதான் இருக்கும் , வேணும்னா அவர்கிட்ட அவர் நிறத்துக்கு தகுந்தாற் போல வேற பொண்ணா பார்த்துட்டு போக சொல்லு ... எனக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்ல ..." என்று திமிராய் கூற , பேசிய அவளின் கன்னத்தை பதம்பார்க்க ஓங்கியவரின் கையை பற்றினாள் காயத்ரி.

" ம்மா ... என்னமா பண்ற ... உன்கிட்ட எத்தன தடவ சொல்லிருக்கேன் , அவள எதுவும் கேட்காத நான் பார்த்துகிறேன்னு ... ஏன்மா இன்னும் சீண்டி விட்டுக்கிட்டே இருக்க , அதுவும் மண்டபம் புள்ள சொந்தகாரங்க இருக்கிற இடத்துல ..." என்றவளை , ஆத்திரத்துடன் பார்த்த ஜெயா ,

" அவ என்ன பேசினா தெரியுமா ... அந்த செல்வா தம்பி பாவம் அவர கொஞ்சம் கூட மதிக்க மாட்டுறா , கேட்டா திமிர பதில் வேற சொல்ற ..." என்று கோபத்தில் உதடுகள் துடிக்க பேசியவரை சாந்த படுத்தும் நோக்கில் ,

" அம்மா ப்ளீஸ் இனி இவள பத்தி கவல படாதீங்க ... நான் பார்த்துகிறேன் , அவ நம்ம பிரியமா கொஞ்சமாவது நம்புங்க , எப்பவும் சந்தேகத்தோடு சுத்திகிட்டு இருக்காதீங்க ..." என்ற காயத்ரியை கோபமாக இடைமறித்த ஜெயா ,

" அவ கெட்டு போய் மதிக்காம திமிரா நிக்கிறதுக்கு நீ மட்டும்தான் காரணம் ... எப்ப பாரு அவள கண்டிக்க விடாம ,காப்பாத்தி காப்பாத்தி எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாரு ... நீ பாட்டுக்கு நாளைக்கு கல்யாணம் முடிச்சுட்டு உன் மாமியார் வீட்டுக்கு போய்டுவ , இவளால அசிங்கப்பட போறது யாரு நாங்கதான் ..." என்று கோபத்தில் என்ன பேசுறோம் என்று அறியாமல் வார்த்தைகளை விட , நொடி பொழுதில் தன்னை குற்றவாளியாக ஆக்கிய அன்னையை கண்டு உள்ளுக்குள் நொறுங்கி போன காயத்ரி ,

" நீங்க ஒன்னும் கவலைப்பட வேணாம் ... கல்யாணம் ஆனாலும் அப்படியே அவள விட்டுட மாட்டேன் ... அவளால ஏதாவது பிரச்சனை வந்தா என் உயிர கொடுத்தாவது அத நானே சரிபண்ணிடுறேன் , அவ இனி என் பொறுப்பு ..." என்று கண்ணீர் மல்க கூறிய பெண்ணை கண்டு தான் புரிந்த தவறு தெரிய ,

" சாரி டா பாப்பா ... இவ மேல இருந்த டென்ஷன் எல்லாத்தையும் உன்கிட்ட காட்டிட்டேன் ... அம்மாவ மன்னிச்சுடுடா ..." என்று பதிலுக்கு கண் கலங்கியபடி மன்னிப்பு வேண்டியவரை இழுத்து அணைத்துக் கொண்ட காயத்ரி ,

" ரிலாக்ஸா இருங்கமா ... நான் பார்த்துகிறேன் ..." என்று மீண்டும் வாக்கு கொடுக்க , மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்திருப்பதாக யாரோ குரல் கொடுக்கவும் அவர்களை வரவேற்க சென்றார் ஜெயந்தி .

இரவில் நடக்க வேண்டிய சடங்குகள் அணைத்தும் நடந்து முடிந்தபின் , அதிகாலையில் எழ வேண்டும் என்பதால் பலர் தூங்க செல்ல , வெகு சிலரோ கூட்டமாக உட்கார்ந்துக் கொண்டு கதையடித்துக் கொண்டிருந்தனர்.

தூக்கம் வராததால் மெல்ல எழுந்த பிரியா மண்டபத்தின் மொட்டை மாடி நோக்கி செல்வதற்காக மாடிப்படி ஏறியவளின் கண்ணில் மண்டபத்தின் வாயிலில் நின்றிருந்த BMW கார் கண்ணில் பட ,முதல் தளத்தில் நின்றபடி யாருடையது என்று புருவம் சுருங்க யோசித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளை கடந்து சென்ற இருவரில் ஒருவன்,

“இந்த ஊர்ல bmw காரா … யாருடா அவ்வளவு பெரிய அப்பாடக்கரு …” என்க ,

“மாப்பிள்ளையோட தூரத்து சொந்தம்டா … அவன்கிட்ட இருக்கிற வசதிய காட்டி நாலு பேர் புகழ்ந்து பேசுறத கேட்கவே சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு வந்துடுவான் … சரியான சீன் பார்ட்டி …” என்று மற்றவன் அலுத்துக் கொள்ளவும் ,

“யாரு ரோஹித்தா … வசதியிருக்கு பெருமைடிச்சுகிறான் , உனக்கு என்ன வந்துச்சு … வா அந்த ரூம்ல தான் தங்கியிருக்கான் எதுக்கும் தலையை காட்டிட்டு போவோம்…” என்று பேசிக் கொண்டே அவன் இருந்த ரூமிற்குள் நுழைய , இதெயெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ப்ரியாவின் முகத்தில் சிந்தனை கோடுகள்.

பத்து நிமிடங்கள் கழித்து அந்த அறையை நோக்கி சென்ற பிரியா சிறு தயக்கத்திற்கு பின் அதை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவளின் பார்வையில் தனக்கு முதுகு காட்டி நின்றிந்தவனை கண்டு,

“சாரி சாரி … ரூம் மாத்தி வந்துட்டேன் …” என்றவாறே சிரித்த முகத்துடன் நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் ஈயாடவில்லை தன்னை நோக்கி திரும்பியவனை கண்டு.

“அட மாத்திலாம் வரல கரெக்டான ரூம்க்குதான் வந்துருக்கீங்க ஷண்முகப்ரியா மேடம் …” என்று அவளை நக்கலாக பார்த்தபடி நின்றிருந்தான் கௌரிஷங்கர் . அவனை கண்ட நொடி கோபம் தலைக்கு ஏறி , இருந்தும் அதை காட்டிக் கொள்ளாமல் ,

“அட கௌரிகிருஷ்ணா சார் நீங்களா … இன்னும் அடுத்தவங்க கார தன்னோட கார்னு சொல்ற பைத்தியம் போகலை போலிருக்கு …” என்று நக்கலாக குத்தி காட்டி பேசியவளை விஷமத்துடன் பார்த்தவன்,

“எப்படி உங்கள போலவா … சொகுசுகார் வச்சுருக்கவனா பார்த்து பல்ல காட்டி வெட்கமே இல்லாம கரெக்ட் பண்ணுறத போலவா …” என்றவனை அனல் தெறிக்க பார்த்தவள் பின் நக்கலாக சிரித்தபடி ,

“ஒஹ் சாருக்கு அன்னைக்கு செருப்பால வாங்கினது மறந்துடுச்சு போல , திரும்ப கொடுத்தாதான் ஞாபகம் வரும் போல …” என்று அவனை நோக்கி கையை சுழற்றியவளின் கையை இறுக பற்றியவன் ,

“ எதுவும் மறக்கல ப்ரிகுட்டி … மறக்கிற விஷயமா பண்ணியிருக்கீங்க … அதுக்கு பதிலுக்கு உங்களுக்கு மறக்க முடியாதா பரிச கொடுத்தாதானே உங்களுக்கு மரியாதை …” என்றவன் அவள் கைகளை முறுக்கி தன்னுடன் இறுக்கி கொள்ள , அவனிடமிருந்து விடுபட போராடியவளின் நாசியை குப்பென்று தாக்கியது அவனின் வேர்வை நாற்றம் .

அன்று முழுவதும் ஓடியாடி வேலை செய்ததால் உடல் வேர்த்திருந்தவனுக்கு சாதா நாட்களிலே பக்கத்தில் நெருங்க முடியாதளவிற்கு வேர்வை நாற்றம் அடிக்கும் இன்று கேட்கவா வேண்டும் . என்ன முயன்றும் அவளால் குடலை பொரட்டிக் கொண்டு வருவதை தடுக்க முடியாமல் போக,

“தள்ளி போ , வாந்தி வருது …” என்று உண்மையை கூற , அதை கண்டுக் கொள்ளாதவன் ,

“அட கிட்ட நிக்கிறதுக்கே வாந்தி வருதா , மாமனோட பவரு அப்படி ப்ரிக்குட்டி … என்று போலி சரசத்துடன் பேசியவனை கண்டு,

“ரொம்ப பவர் தான் … உன் மேல இருந்து வர நாத்தம் … தள்ளிப்போ இல்ல உன் மேலையே வாந்தி …” என்று சொல்லிக் கொண்டிருந்தவள் அவன் மீதே சிறிது வாந்தியை எடுத்துவிட்டு பாத்ரூமை நோக்கி ஓட , தன் மேல் தெளித்திருந்த வாந்தியை முகச்சுழிப்போடு பார்த்தவன் , பின்

“அவ்வளவு நாத்தமா அடிக்குது …” என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டவன் தன்னை மோர்ந்து பார்க்க , முகத்திலடித்த வேர்வை நாற்றத்தில் தலையை பத்தடி தூரத்திற்கு இழுத்துக் கொண்டவன் பின் விஷம சிரிப்புடன் அவள் சென்ற திசையை பார்த்துவிட்டு,

“இதுவும் நல்லதுக்குதான் …” என்றவாறே தானும் பாத்ரூமிற்குள் நுழைந்துக் கொண்டான்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
28927

கௌரி - 12

மணமகன் என்று பெயரிட்டிருந்த அறைக்குள் நுழைந்த வளர் , அங்கே போனில் சிரித்து பேசிக் கொண்டிருந்த தன் இரண்டாவது மகன் ரகுராமை கண்டு கோபமாக ,

"விடிஞ்சா கல்யாணம் இன்னும் நாலுமணி நேரம்தான் இருக்கு தூங்காம அப்படி என்ன முக்கியமான விஷயத்தை பேசிகிட்டு இருக்க..." என்று எரிந்து விழுந்தவரை கண்டு அவசரமாக போனை அனைத்தவன் ,

"ஏன்மா டென்ஷனா இருக்க ... சும்மா தூக்கம் வரலை அதான் பேசிகிட்டு இருந்தேன்..." என்க ,

"விடு வளர் அவனுக்கே தெரிஞ்சுருக்கு பொண்டாட்டியா ஆனா அடுத்த நொடி பொண்ணுங்க தலைல கொம்பு முளைச்சுடும்னு ,மதுரை ஆட்சில எங்கிருந்து சிரிச்சு பேசுறது ... என் பையன் என்ன போல ஏமாளியா இல்லாம சுதாரிச்சுக்கிட்டான் அவனாவது சந்தோசமா இருந்துட்டு போகட்டுமே ... வா வந்து கொஞ்சம் நேரம் கண்ண மூடி படு ... அந்த குரங்கு பையன் வந்தானா கருப்பு ஒட்டிக்கும் சிவப்பு ஒட்டிக்கும்னு நிம்மதியா படுக்க கூட விடமாட்டான் ..." சற்று தள்ளி படுத்து அருகில் தட்டி காட்டி தன் மனைவியை படுக்க அழைத்தார் தண்டபாணி.

"ஆமா நல்லா என்கிட்ட வாயடிங்க , அங்க பொண்ணு வீட்டுல வாயவே திறக்காதீங்க ... அவங்க நம்மள அசிங்க படுத்தினாலும் மிக்சர் சாப்பிடுறது மட்டும் நிறுத்தாதீங்க ..." என்று கோபத்துடன் பேசியவரை கண்டு ,

" என்னமா பிரச்சனை , என்கிட்ட சொல்லு அவங்ககிட்ட என்னனு கேட்கிறேன் ... ஏன் அப்பாவ படுத்தியெடுக்கிற ..." என்ற ரகுவிற்கு

"ஏன் நா வாய திறந்து சொன்னாதான் என்னனு தெரியுமா ... ஆமா இது என்ன புறா கூடு போல ஒரு மண்டபம் ... நம்ம சொந்தக்காரங்களுக்கே இது பத்தல அதுவும் மாப்பிள்ளை வீடுன்னு ஒரே ஒரு ரூம் மட்டும்தான் கொடுத்திருக்காங்க ... இது எதுவும் உங்க கண்ணுக்கு தெரியலையா ..." என்று புலம்பி தள்ள ,

" ஏன் இந்த மண்டபத்துக்கு என்ன குறை ... நம்ம சொந்தக்காரங்களுக்கு இந்த மண்டபமே வசதியாகத்தான் இருக்கு ... சும்மா குறை சொல்லணும் பேச கூடாது வளர் ..." என்று தண்டபாணி கண்டிக்க ,

“உங்ககிட்ட பேசல ... நீங்க தூங்குற வேலையை மட்டும் பாருங்க ... மாப்பிள்ளை சார் பேசட்டும் ... கட்டுனா இந்த பொண்ணைத்தான் கட்டுவேன்னு ஒத்தகாலுல நின்னு அடம்பிடிச்சு சாதிச்சுக்கிட்டயே , உனக்கு அசிங்கமா இல்ல இவ்வளவு சின்ன மண்டபத்துல கல்யாணத்த ஏற்பாடு பண்ணிருக்காங்க ... ஆமா இப்போ உனக்கு என்ன குற கை நிறைய சம்பாதிக்கிற கவெர்மெண்ட் மாப்பிள்ளை , அதுக்கு மரியாதை செய்யுற போல ஒரு சண்டி மேளம் , வானவேடிக்கை வைக்க கூட வக்கில்லாத குடும்பத்துல இருந்து பொண்ணு தேவையா ...' என்று ஏகத்துக்கு பேச , எங்கே அவர் பேசுவது பெண் வீட்டார் காதில் விழுந்துவிடுமோ என்ற பயத்தில் ,

" அம்மாஆ ... என்ன பேசுறீங்க ..." என்று ரகுவும் , " வளர் கொஞ்சம் அடக்கி பேசு ..." என்று தண்டபாணியும் சேர்ந்து குரல் கொடுக்க

"ஆமா நான் பேசுறது எதுவும் உன் காதுல விழாது ... நீ தான் அவ காலுலதானே விழுந்து கிடக்கிற ... கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடியே இப்படி இருக்க , கல்யாணம் முடிச்சபிறகு எங்களை சுத்தமா மதிக்கமாட்ட போல ..." என்றவரை ஆயாசமாக பார்த்தவன் ,

" ம்மா என்ன பேச்சு பேசுற ... இப்போ உனக்கு பிரச்சனை கல்யாணம் மண்டபம் இல்ல , காயத்ரிதான் ... அவதான் வேணும்னு நான் அடம்பிடிச்சு கல்யாணம் பண்றதுதான் பிரச்சனை கரெக்டா..." என்றவனை ஆத்திரத்துடன் பார்த்தவர் ,

" ஆமாம்டா அவ தான் பிரச்சனை , எனக்கு அந்த வீட்டுல பொண்ணு எடுக்கிறது சுத்தமா பிடிக்கல ... நாலும் பொண்ணு , நாளைக்கே உன் பசங்களுக்கு மாமன் சீர் செய்யக்கூட ஆள் இல்ல ... அப்படி என்ன ஊர்ல இல்லாத அதிசயம் அவகிட்ட இருக்குனு பிடிவாதமா நின்ன ..." என்று கோபம் மொத்தத்தையும் வார்த்தையில் கொட்ட ,

"அம்மா நல்லா கேட்டுக்கோங்கோ , எனக்கு காயத்ரிய பிடிச்சுருக்கு ... அழகா இருக்கா அறிவாவும் இருக்க அதே சமையம் அடக்கமாவும் இருக்கா ... நாளைக்கு என் பசங்களுக்கு மாமன் வீட்டு சீரு தேவையில்லை , அவங்களை அறிவா வழிநடத்த அம்மா இருந்தா போதும் ... வேலைக்கும் போற ,எனக்கு எல்லா விதத்துலையும் சப்போர்ட் பண்றவளா இருப்பாமா காயத்ரி ... இப்போ பாருங்க படிக்காத அண்ணிய கட்டி அண்ணன் வாழ்க்கையை நிம்மதியில்லாம பண்ணிட்டிங்க ,உங்க கௌரவத்தவிட என் சந்தோசம்தான் பெருசுன்னு நினைச்சா இத்தோடு இந்த பேச்சை விட்டுடுங்க ... " என்று அழுத்தமாய் பேசியவன் அங்கிருந்து வெளியேற ,முகம் கருக்க நின்றிருந்த மனைவியை கண்ட தண்டபாணி ,

"இப்போ என்ன சண்டிமேளமும் வானவேடிக்கையும் ஏன் குதிரை சவாரி கூட உன் முந்தானை புடிச்சுகிட்டு சுத்துற உன் சின்ன பையன் கல்யாணத்துல வச்சுட்டா போச்சு ... நீதான் அவனுக்கு பணக்கார வீட்டுலருந்து பொண்ணு எடுக்க போறேன் சொல்லிருக்கியே ... அப்புறம் என்ன கவலை ... ரகு கிட்ட குறையா சொல்லி அவன் சந்தோசத்த கெடுக்காத வளரு ... அவன் ஒன்னும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணல , நம்மகிட்ட வந்த பொண்ணு போட்டோவ பார்த்துதான் புடிச்சுருக்குனு கட்டி வைக்க சொன்னான் ..." என்ற கணவரை முறைத்தவர்

"எல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்க ஒன்னும் சொல்ல தேவையில்ல …நீங்க சொல்லாட்டியும் கௌரி கல்யாணத்த எப்படி பிரமாண்டமா பண்றேன் மட்டும் பாருங்க ... என் பையன் ஒன்னும் இவன்க போல அம்மா பேச்சு கேட்காத புள்ளயில்ல ...எப்படிப்பட்ட பணக்கார வீட்டுலயிருந்து கொண்டு வந்து எல்லா சொந்தக்காரங்களும் மூக்கு மேல விரல் வச்சு அசந்து போகிறளவுக்கு கல்யாணத்த நடத்தி காட்டல நான் வளர் இல்ல ..." என்று கர்வத்துடன் பேசியவர் அவரை முறைத்துவிட்டு பக்கத்தில் படுத்துக் கொள்ள,

'க்கூம் ... ரகு ஜாதகம் பார்த்த பொண்ணதான் பிடிவாதம் பிடிச்சு கட்டுறான், இவரு ஏற்கனவே வீட்டுக்கு தெரியாம கல்யாணம் வேற பண்ண பார்த்தவரு அவர் மேல இவ்வளவு நம்பிக்கை ... ம்ம்ம் சண்டி மேளம் , வானவேடிக்கையுமா ஹாஹா ... உன் பொண்ணு கல்யாணத்துல பார்த்து பார்த்து செலவு செஞ்ச நீ , மாமியார் அவதாரம் எடுத்தாமட்டும் சண்டி மேளமும் வானவேடிக்கையுமா , முதல்ல உன் பையன் அவன் கல்யாணத்த சொல்லிட்டு பண்றான பாப்போம் …’ என்று மனதில் நக்கலடித்துக் கொண்டவர் ,

“ஆமா எங்க உன் அரும புத்திரன காணும் , நாமெல்லாம் இங்கதானே இருக்கோம் , ஒருவேள எந்த பணக்கார பொண்ணோ அவன் கண்ணுல மாட்டிருக்கும் போல , அத கரெக்ட் பண்ணி செருப்படி வாங்க கிளம்பிட்டான் போல …” என்று நக்கலடித்தவரை திரும்பி பார்த்து முறைத்த வளர் ,

“வாய முதல்ல கழுவுங்க , இங்க இருக்கிற கூட்டம் எல்லாம் வடிகட்டின அன்னக்காவடி கூட்டம் … இதுல போயா … எப்போ பாரு அவன குறை சொல்லிகிட்டே இருக்கிறது” என்று பதிலுக்கு எரிந்து விழ

“ஆமாமா வாயத்தான் கழுவனும் , அன்னகாவடி பொண்ண கட்டி காப்பாத்துற தகுதி கூட உன் பையனுக்கு இல்ல … பாவம் அந்த பொண்ணு உன்கிட்ட இடிசோறு திங்கணும்னு என்ன தலைவிதியா …” என்று நக்கலடித்தவர் ,

“கடவுளே தெரியாம சொல்லிட்டேன் , எந்த அப்பாவி பொண்ணையும் சார் கண்ணுல காட்டிடாத …” என்று மேலே கைகூப்பி வேண்டிக் கொள்ள , அதுவரை அங்கே நடப்பதை கண்ணை மூடி கேட்டுக் கொண்டிருந்த தண்டபாணியின் அன்னை சரசம்மா

“அட நீ ஏன்பா கவல படுற , அவன் மூஞ்ச பார்த்து மயங்கினாலும் அந்த எலி செத்த நாத்தத்துக்கே பொண்ணு தலைதெறிக்க ஓடிடும் … நீ நிம்மதியா தூங்கு …”என்றவர் , பின் மருமகளிடம் ,

“இங்கபாரு வளரு என்னைக்கும் பழச மறக்க கூடாது … அன்னைக்கு உங்க குடும்பத்த அன்னக்காவடி குடும்பமா நினைச்சிருந்த இன்னேரம் நீ இப்படி பேசிகிட்டு இருந்திருக்க மாட்ட … கொஞ்சம் நாம இருந்த நிலையை நினைச்சு பாரு …” என்று குட்டு வைக்க புசுபுசு வென்று கோபமூச்சுகளை விட்ட வளரின
முகம் சிவந்து போவதை கண்ட தண்டபாணி

“வளரு கோபப்பட கூடாது , இது எல்லாம் மாமியாருக்கே ஆனா ஸ்பெஷல் திறமை … பல்லு போன காலத்துல எங்கம்மா மாமியார் கெத்த காட்டுறாங்க பார்த்தியா …நீயும் காட்டலாம் ஒன்னுக்கு மூணு பசங்கள பெத்து வச்சுருக்க … காலம் பூரா காட்டிகிட்டே இருக்கலாம் … இப்போ கொஞ்சம் நேரம் தூங்குமா நாளைக்கு நிறைய வேலை இருக்கு …” என்றவர் தன்மையாக பேசி அவர் கோபத்தை குறைத்து தானும் சற்று கண் உறங்கினார்.

இங்கே இவர்கள் நிம்மதியாக உறங்கி கொண்டிருக்க , அனைவரின் நிம்மதியையும் குலைக்கும் செயலில் இறங்கினான் அவர்களின் இளையமகன் கௌரிசங்கர்.

கௌரியை மனதில் திட்டியபடி குளியலறைக்குள் நுழைந்த பிரியா , முந்தியில் சிந்தியிருந்த வாந்தியை தண்ணீர் விட்டு அலசிக் கொண்டிருக்க , சத்தம்காட்டாமல் உள்ளே நுழைந்தான் கௌரி.

“எதுக்கு இங்க வந்த … வெளியே போ …” என்று திரும்பி பார்க்காமல் அவன் வந்ததை உணர்ந்து கத்தியவளை கண்டு பரவசமானவன்,

“ப்ரிக்குட்டி … மாமா வந்தத திரும்பி பார்க்காமலே கண்டு பிடிச்சுருக்கியே , அப்போ அதுதானே ப்ரிக்குட்டி …” என்று முப்பத்திரண்டு பல்லையும் காட்டி பேசியவனிடம்,

“மயிறு … நீ வந்தத திரும்பி பார்த்துதான் தெரியணும் அவசியமில்ல, அதான் செண்ட் பேக்டரிய உன் உடம்புக்குள்ளையே வச்சுருக்கியே , நீ வர்ரதுக்கு முன்னாடியே உன் நாத்தம் மூக்க தீண்டுது , நான் மட்டுமில்ல ஊர்ல இருக்கிற எல்லாரும் உன்ன திரும்பி பார்க்காமலே கண்டு பிடிச்சுடுவாங்க … அப்போ ஊர்ல இருக்கிறவங்க எல்லாருக்கும் உன் மேல அதுவா கோபால் …” என்று நக்கலடித்து பேச , கோபம் வருவதற்கு பதில் உதடுகள் வளைய ரசித்து சிரித்தான்.

சத்தம் வராததால் திரும்பி பார்த்தவளின் கண்கள் அங்கே மேல் சட்டையை கழட்டியபடி நின்றிருந்தவனை கண்டு அதிர்ச்சியில் விரிய,

“டேய் எரும இப்போ எதுக்கு சட்டைய கழட்டிகிட்டு நிக்கிற … முதல்ல இங்கிருந்து வெளில போட பண்ணி …” என்று ஏகவசனத்தில் பேச,

“அடடா பாருடா ப்ரிக்குட்டி உன் மாமன் அந்த விஷ்ணுவையே மிஞ்சிடுவான் போல , பாரு அஞ்சு நிமிசத்துலயே கௌரியா இருந்த நான் செண்ட் பேக்டரில இருந்து எருமையா அவதாரம் எடுத்து உனக்கு காட்சியளித்து அடுத்து பண்ணி அவதாரம தோன்றிருக்கேன் , என்ன நவீன கால விஷ்ணுவா ஏத்துக்கிட்டு பாராட்டலாமே ப்ரிக்குட்டி …” என்று நக்கலடித்தவனின் மொக்கையில் பொறுமையை இழந்தவள் , இடுப்பில் கையை ஊன்றியபடி

“த்தூ … ஆளையும் மூஞ்சையும் பாரு , நீ நவீன கால விஷ்ணுவா , ப்ராடு பயலே இத மட்டும் அவர் கேட்டார் , கையில இருக்கிற சக்கரத்த வச்சே நாக்க அறுத்துபோட்டுடுவார், உன்ன பத்தி நல்லாவே தெரியும் சோழியன் குடுமி சும்மா ஆடாது … இங்க பணக்கார பொண்ணு இருக்குனு எவனாது கதைகட்டி விட்டானா … நீயும் அத கேட்டுட்டு நாக்க தொங்க போட்டுட்டு வந்திட்டியா …” என்றவளின் வார்த்தைகளை கேட்டு முகத்தில் குறுநகை பூக்க நின்றிருந்தவனை கண்டு உதட்டை பிதுக்கியவள் ,

“ஓ… அப்போ அதானா … நல்லா கேட்டுக்க அசடே யாரோ உனக்கு ராங் இன்போர்மேசன் கொடுத்திருக்கான். மாப்பிள வீட்டுலையும் சரி பொண்ணு வீட்டுலையும் சரி ரெண்டும் சரியான தர்த்திரியம் புடிச்சதுங்க… சல்லி காசுக்கு தேறாத கேசுங்க … அதுவும் மாப்பிள்ளை சைடு பூராவும் கரிசட்டீங்க தான் … போன தடவ போல ஏமாந்து போகாமா அப்படியே திரும்பி பாக்காம போய்டு , நீயும் என்ன போல ஏமாந்த சோனகிரியா இருந்தேன்னதான் பாவம் பார்த்து இந்த இன்பர்மேஷன் கொடுத்திறுக்கேன்…” என்றவளை அதே குறும்பு சிரிப்புடன் பார்த்திருந்தவன் பின்

“ம்ம்ம்… ஓகே ப்ரிக்குட்டி … பட் போறதுக்கு முன்னாடி கொஞ்சம் பல்லி உச்சா …” என்றபடி அவளை நெறுங்க, முகத்தை அஷ்டகோணலாய் சுருக்கியவள் ,

“என்னது…பல்லி உச்சாவா … ” என்று முகத்தை அருவருப்புடன் சுழிக்க ,

“வொய் ஷாக்கிங் அது கிடைக்க எங்கையாவது அதிர்ஷ்ட மச்சம் இருக்கிறவங்களுக்கு தான் கிடைக்கும்னு சொன்னீயே …அன்னைக்கு எப்படியாவது உன்ன கரெக்ட் பண்ணனும்னு இருந்த டென்ஷன்ல சரியா பீல் பண்ணல … இன்னைக்கு ஆற அமர ரசிச்சு குடிச்சு பல்லி உச்சா டேஸ்ட் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுட்டு போலாம் வந்திருக்கேன் …” என்று பவ்வியமாய் பேசி நாக்கை குழைக்கவும் தான் பிரியாவிற்கு அவன் எதை பற்றி பேசுகிறான் என்று பொறி தட்டியது.

“ஓஹ் டேஸ்ட் பார்க்கனுமா … தோ …” என்று டாய்லெட்டை கை நீட்டி காட்டியவள் ,

“இங்க நிறைய ஸ்டாக் இருக்கு அதுவும் வித விதமான பிளேவர்ல … முடிஞ்சா மொண்டு குடிச்சுக்கோ …” என்று திமிராய் நக்கலடித்தபடி நகர முயல , அவளை நகர விடாமல் நெருங்கியவனை கண்டவள் கோபத்துடன் ,

“என்னடா , அன்னைக்கு செருப்பால அடிச்சதுக்கு பழி வாங்க வந்திருக்கியா … மரியாதையா வழியவிடு …” என்று சீற

“அப்பாடா இப்போதான் பல்ப் பிரகாசமா எரியுது போல … ஒருவழியா கண்டு புடிச்சிட்டியே … அதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு … ப்ளீஸ் ப்ரிக்குட்டி…ரொம்ப ஆசையா இருக்கு“ என்று உதட்டை குவித்தபடி நெருங்கியவனின் நெஞ்சில் கையை வைத்து தள்ளியவள் , சிறுசிரிப்புடன்

“அடேய் உன்ன பணத்தாசை புடிச்சவன்னு தானே அந்த ஷண்முகப்ரியா சொன்ன … இப்போ என்னடானா ரோடு சைடு ரோமியோ கணக்கா என்னையே சுத்தி சுத்தி வர …” என்று நக்கலடித்தவள் மீண்டும் அவனை பிடித்து தள்ளியபடி

“இந்த ரொமான்ஸ் கெட்டப் சுத்தமா உனக்கு செட் ஆகல … வேணும்னா சொல்லு பணக்கார பொண்ணா பார்த்து நானே உனக்கு செட் பண்ணித்தாறேன் … இப்போ தயவு செஞ்சு இங்கிருந்து போடா … உன் இம்சை தாங்க முடியல…” என்று அலுத்துக் கொள்ள, சற்று நேரம் அமைதியாக நின்றவன் பின் விஷமச் சிரிப்போடு ,

“ப்ரிக்குட்டி சீக்கிரம் மாமாக்கு வேண்டியத கொடுத்து அனுப்பிடு … … மாமாவோட கண்ட்ரோல் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டே வருது … அப்புறம் இருபது வருஷம் கழிச்சு பல பெண்களோட சாபத்துக்கு ஆளாகியிருப்போம் … யோசிச்சு சொல்லு …” என்று சரசமா பேசிக் கொண்டே அவளை மேலும் நெருங்கி நிற்க , அய்யோ இது என்னடா புது தலைவலி என்று நினைத்தவள் பல்லை கடித்தபடி ,

“வெளில போடா …” என்று கத்த ,

“நோ … நான் சொன்னதுக்கு பதில் இது இல்ல ப்ரிக்குட்டி … கொஞ்சமாச்சும் ஏன் சாபம் கிடைக்கும்னு கேட்க ஆர்வமிருக்கா பாரு” என்று அலுத்துக் கொண்டவன்

“சரி நானே சொல்றேன் …” என்று கண்ணை சிமிட்டியவன்,

“இப்போ உனக்கும் எனக்கும் இந்த இடத்துல கசமுசா
நடந்துச்சுன்னு வச்சுக்கோ … கரெக்டா பத்து மாசம் கழிச்சு நம்ம வீட்டுல குவாகுவான்னு சத்தம் கேட்கும் … உன் அழகையும் என் அழகையும் சேர்த்து வச்சு பிறக்கிற குழந்தை எப்படி இருக்கும் … கண்டிப்பா வளர்ந்து பல பெண்களோடு தூக்கத்த கெடுக்கிற வேர்ல்ட் பேமஸ் லவர் பாயாதான் இருப்பான் …” என்று கூறியவன் அதை கற்பனை செய்து பார்த்து ரகசியமாக ரசிக்கவும்

“சகிக்கல … என் புள்ள பேருக்கு முன்னாடி இனிசியல் போடுறவன் கண்டிப்பா உன்ன போல அன்றாடம் காட்சியா இருக்க மாட்டான் … கற்பனை பண்ணி பாக்குறதுக்கு கூட தகுதி வேணும் …” என்று எடுத்தெறிஞ்சு பேசவும் , கண்ணிமைக்கும் நொடியில் கௌரியின் கண்ணில் கோபம் மின்னி மறைந்து புன்னகையை பூசிக் கொள்ள , மூச்சு காற்று அவள் முகத்தில் மோதும் அளவிற்கு நெருங்கி நின்றவன்

“நான் முடிவு பண்ணிட்டேன் …” என்று நிதானமாக கூற , முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வேண்டாவெறுப்பாக

“என்னனு …” என்று திமிராய் கேட்க,

“என் சந்ததி பெருகனும்னா அது உன் மூலமாத்தான் நடக்கும் ப்ரிக்குட்டி …” என்று ஆழ்ந்த குரலில் கூறிய கௌரியின் முகத்தை பார்த்தவளின் உடலில் சிறு நடுக்கம் தோன்றி மறைய,
“ம்ம்ம் அப்படியா … அப்போ சரி இந்த ஜென்மத்துல உனக்கு குழந்தை பாக்கியம் கிடையாது …” என்று நக்கலடித்தவள் , அவனை தள்ளிக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியே வந்தாள்.

பின் தன் ஒட்டு மொத்த சத்தியும் திரட்டி அவன் நெஞ்சில் கை வைத்து அறையை விட்டு வெளியே தள்ள முயன்றவளின் கால் இடறி கீழே விழ போக , கீழே விழாமல் இருப்பதற்காக கௌரியை பற்றியவள் அவனையும் இழுத்துக் கொண்டு அருகிலிருந்த கட்டிலில் பொத்தென்று விழுந்தவளின் காதில் பலமாக கதவை தட்டும் சத்தம் விழவும், கதவை திறந்துக் கொண்டு யாரோ உள்ளே நுழையவும் சரியாக இருக்க , யார் என்று பார்த்தவள் , அங்கே கூடியிருந்த கும்பலை கண்டு பதறி போய் எழ முயல , தன் மேல் கிடந்தவளை எழவிடாமல் இறுக்கி பிடித்தவன்

“ம்ப்ச் … ப்ரிக்குட்டி அதுக்குள்ள என்ன அவசரம் … இன்னொரு ரவுண்டு போலாமா …” என்றவாறே அவளின் இதழ்களை தன் இதழ்களால் கைது செய்து அவள் பேசிய பேச்சிற்கு தண்டனையை தாராளமாக வழங்கி கொண்டிருந்தான் கௌரிசங்கர்.
 
Status
Not open for further replies.
Top