All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்" - கதைத் திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-20

விக்ரம் ஓரிடத்தில் காரை நிறுத்த படாரென்று எழுந்த நந்தினி என்னவென்பது போல் அவனை நோக்க... “காரிலேயே வெயிட் பண்ணு நான் வந்துடறேன்” என்றவன் வாகனத்திற்கு திரும்பும் போது காபியும், பலகாரமும் அடங்கிய பையை ஏந்தியபடி சமீபித்திருந்தான்.

“இந்தா காபியை குடிச்சுட்டு இந்த வடை சாப்பிடு” என்று நீட்ட அவனின் அக்கறை கண்டு நேசம் சுரந்தது.

“தேங்க்ஸ் எனக்கே எதாவது குடிக்கணும் போல இருந்துச்சு”

“தெரியும் அதனால் தான் வாங்கிட்டு வந்தேன் சாப்பிடு”

“இதெல்லாம் கூட கண்டு பிடிக்கறீங்க பரவாயில்லை நல்லா தேறிட்டீங்க”

“முதல் பார்வையிலேயே உன் மனசை கண்டு பிடிச்சவன் இதை கூட புரிஞ்சுக்கமாட்டேனா?” என்று வாய்விட நந்தினி கண்களை அகல விரித்து போலியாக முறைத்தவள்...

“பிராடு அப்போ என்னை பற்றி புரிஞ்சுகிட்டு தான் அப்படி எல்லாம் பேசினீங்களா?” என்று முதுகில் நாலு போட அவனோ அசராது பெற்றுக் கொண்டவன் முகம் புன்னகையில் விரிந்தது.

“போதும் விடு” சிரித்துக் கொண்டே கூறியவன் அவள் கரங்களை தன் கரங்களுக்குள் அடக்கிக் கொண்டு...

“எல்லாத்தையுமே வெளிப்படையா சொல்லிவிடுற பாக்கியம் பெற்றவன் நானில்லை நந்து... இதே நான் கல்யாணம் ஆகாமலோ, சப்போஸ் கல்யாணம் மட்டும் ஆகி ஆதன் கூட இல்லாமல் இருந்திருந்தாலோ எந்த தயக்கமும் இல்லாமல் என் மனசை வெளிப்படுத்தியிருப்பேன்... ஆனால் இது எதுக்கும் வழியில்லாமல் கையில் குழந்தையோட, ஊர் சொல்லும் அவப் பெயரோட இருந்தவன், வயது பெண் உன்கிட்டே நெருங்கி பழகி என்னால் உனக்கு எதுவும் கெட்ட பெயர் வந்துதுன்னா என்னால் தாங்கிக்க முடியுமா?”

அவனின் குரலில் இருந்த ஏக்கமும், இயலாமையும் அவளால் உணர்வு பூர்வமாக உணர்ந்து கொண்டிருக்க இயந்திரத்தை கொண்டு மனதை குடைவது போல் இருந்தது. அப்போது தான் அவள் அவனிடம் கேட்க வேண்டும் என்று இருந்த அந்த கேள்வி உதிக்க அதை கேட்கலானாள்.

“நான் இதை தான் உங்ககிட்டே முதல் கேள்வியா கேட்கணும்னு நினைச்சேன், ஆனால் அதை மறந்துட்டு வேற என்னனமோ பேச்சு வந்திருச்சு”

“அப்படி என்ன கேட்கணும் கேளு” என்றதும்...

“நீங்க எல்லாத்தையும் இவ்ளோ அக்கறையா பார்த்துக்கிறீங்க, அப்படி இருக்ககுள்ள ஆதனை நீங்க ரம்யா வீட்டில் விட்டது தான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு, அவன் அங்கே எப்படி இருக்கிறான் தெரியுமா? அவனை பார்க்கவே எனக்கு பாவமா இருந்தது விக்ரம்... பசியில் இருக்கிறவனுக்கு பச்சை தண்ணி கூட அமிர்தமா தெரியும்ன்னு கேள்விதான் பட்டிருக்கேன் ஆனால் அதை நான் ஆதன் மூலாமாதான் தெரிஞ்சுகிட்டேன்”

“எனக்கு எல்லாம் தெரியும் நந்து” என்றவனை அதிர்ந்த பார்வையால் நோக்கினாள்.

“என்ன தெரியுமா? அப்புறமும் ஏன் அவனை அவங்க பொறுப்பில் விட்டீங்க?” சற்று காரமாகவே அவனிடம் வினவியிருந்தாள்... அதில் அவள் ஆதன் மேல் கொண்ட அக்கறை புரிந்துக் கொண்டவன் நிதானமாக பதில் கூறினான்.

“வேற என்ன செய்யணும் நந்து?” என்றவனை முறைத்தவள்...

“எத்தனையோ பண்ணலாம்... ஏன் கண்ணம்மா இல்லைன்னா மில்லில் செந்தில் அண்ணன் இருக்கிறாரு, அப்படியும் இல்லையா அங்கே உங்க ரூமில் யாரையாவது ஆளை வச்சு பார்த்துக்க சொல்ல முடியாதா?” பச்சை மிளகாயை கடித்தது போல் சுறுசுறுவென்று காரம் ஏற கேட்டவளை இமைக்காமல் பார்த்தவன்...

“சில விஷயம் சொல்லுறது ரொம்ப சுலபம் நந்து... ஆனால் அதை செயல்படுத்துறதில் தான் சிரமம் இருக்கும்ன்னு அதை செய்றவங்களால் மட்டும் தான் புரிஞ்சுக்க முடியும்” என்றவனை புருவம் சுருக்கி பார்த்தாள்.

“நீ சொல்லுற மாதிரி செய்ய நான் யோசிக்காமலா இருந்திருப்பேன்? முதல் நாள் அவனை ரம்யா வீட்டுக்கு அனுப்பினப்போ அன்னைக்கு ராத்திரி ஆதன் அடுத்த நாள் போகவேமாட்டேன்னு அடம் பிடிச்சான், ஏன்னு கேட்டேன் அவனும் அவனுக்கு தெரிஞ்ச வகையில் அவங்க பார்த்துக்கிற விதத்தை ரொம்ப வருத்தப்பட்டு சொன்னான், குழந்தை ஓடியாடி விளையாட ஆசைபடுவான் கொஞ்சம் அப்படி இப்படி குறும்புத்தனத்தோட தானே இருப்பான்... இதில் ஏதோ ஹாஸ்டல் வார்டன் மாதிரி கட்டளை போட்டா அவன் என்ன பண்ணுவான்? அடுத்த நாள் ரம்யா அம்மா என்கிட்டே நேரடியா சொல்லிட்டாங்க அவனை ஒரே இடத்தில் உட்கார வைக்க பழக்கனுமாம், சிந்தாமல் சாப்பிட சொல்லிக் கொடுக்கணுமாம், அப்புறம் இத்யாதி... இத்யாதி... பெரிய அறிவுரை பாடமே எடுத்தாங்க... அவனுடைய வயசுல ஒரு சில பசங்க சாப்பிடவே அப்போதான் பழகியிருப்பாங்க... ஆனால் இவன் சாப்பிடவும் பழகி அதிலேயும் சிந்தாமல் சாப்பிடவும் கற்று கொடுத்திருக்கிறேன் நந்தினி, இருந்தாலும் சின்ன குழந்தை தானே ஒன்றிரண்டு சாதம் விழுந்தா அதை குறையாவா பார்க்க முடியும்?”

“ம்ம்ம்ம்...” என்று முனகியவளுக்கு துக்கத்தில் தொண்டையடைக்க, இதோ நான் வந்துவிடுவேன் என்று கண்ணீர் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

“அவங்க அதையும் குறை சொன்னாங்க, நான் தான் போகவே மாட்டேன்னு அடம் பிடிச்சவனை வீடியோ கேம் வாங்கிக் கொடுத்து அன்பா பேசி அனுப்பிவிட்டேன்... பாவம்! துறுதுறுன்னு இருக்கிறவன் அங்க போனாலே சோர்ந்து தான் இருப்பான் என் மனசு வலிக்கும் நந்து... ஆனால் நீயே யோசிச்சு பாரு இவங்க வீட்டில் இருக்கிறவங்க யாரு வருவாங்க போவாங்கன்னு தெரியும், இவனுக்கு அங்கே சுதந்திரம் இல்லைனாலும் பாதுகாப்பு இருக்கும். ஆனால் மில்லில் அப்படி இல்லை என்னதான் செந்தில் அண்ணன் பார்த்துக்குவாருன்னு சொன்னாலும், அவருக்குன்னு மில்லில் சில பொறுப்புகள் இருக்கு எந்த நேரம் வேணாலும் எதையாவது பார்க்க போகலாம், அப்படி தான் நீ சொன்ன மாதிரி ஆள் கூட போட்டேன் அதுவும் வயசு பொண்ணு வேண்டாம்ன்னு கல்யாணம் ஆகி நடுத்தர வயது பெண்ணை தான் நியமிச்சேன்... ஆனா அந்த பொண்ணு இவனை நிதமும் அடிக்கும், பற்றாததுக்கு என் மேலேயும் தப்பான ஒரு பார்வை, இருக்கிறதெல்லாம் போதாதா இது வேறையான்னு தலைவேதனையா போச்சு... அதனால தான் பின்னதுக்கு முன்னது பெட்டர்ன்னு ரம்யா வீட்டிலேயே விடுவேன்” என்றதும் அவளுக்கு கண்கள் கலங்கிய குட்டையானது.

“என்னது கண்ணில் டேம் எதுவும் கட்டி வச்சிருக்கியா ஆனா ஊன்னா திறந்து விடுற” அவளின் மனதை மாற்ற வேடிக்கையாக அவன் கூற அவளும் அவனுக்காக உதட்டை இழுத்து பிடித்த ஒரு புன்னகையை உதிர்த்தாள்.

“சாரி விக்ரம் நீங்க அவனை கண்டுக்கலையோன்னு நினைச்சு ஏதேதோ பேசிட்டேன்”

“யாரு நீ தானே பேசினா பேசு நந்து, இன்னும் என்ன எல்லாம் என்கிட்டே கேட்டு என்னை திட்டணும்னு நினைக்கறியோ திட்டு... இத்தனை நாளா இதுக்கெல்லாம் யார் இருந்தாங்க? ஆனால் இப்போ நீ இப்படி உரிமையா கேட்கும் போதே மனசுக்கு எவ்ளோ சந்தோசமா, ஆறுதலா இருக்கு தெரியுமா” என்றவனை வாஞ்சையுடன் நோக்கினாள்.

“சரி சரி ஆதன் இப்போவெல்லாம் உங்ககிட்டே என்னை கேட்டு நச்சரிக்கிறது இல்லையா?”

“இல்லை அப்படியே கேட்டாலும் காலேஜ் போயிருக்கா முடிஞ்சதும் வருவான்னு சொன்னா, பெரியா ஸ்கூலான்னு கையை விரிச்சு காட்டி கேட்டுட்டு ஆமான்னு சொன்ன போயிடுறான்”

“அவன் கேட்கமாட்டான் ஏன்னா இனிமேல் என் மகன் என் பொறுப்பு சோ ட்ரைனிங் இந்த நந்தினியோடது அதனால் நந்தினி புருஷனை அவன் தொந்தரவு பண்ணமாட்டான்” அவள் சொல்லிய விதத்தில் அவனுக்கு கட்டியணைக்க வேண்டும் போல் இருக்க கடினத்துடன் அடக்கிக் கொண்டவன்...

“பாருடா! உன் மகன், உன் ட்ரைனிங்கா நீ நடத்து” அவன் கூறியதை கேட்டு களுக்கென்று சிரிக்க, அவளையே கூர்மையான பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான், அவனின் பார்வை அவளிடம் ஏதோ கேட்க இருப்பதை உணர்த்த...

“என்ன?” என்று ஒற்றை புருவத்தை ஒயிலாக உயர்த்தி வினவ...

“நான் ஒண்ணு கேட்பேன் என்கிட்டே கோவிச்சுகிட்டு முகத்தை திருப்பக்கூடாது”

“அப்படியா அது நீங்க சொல்ற விஷயத்தை பொறுத்து இருக்கு” அவளும் மிகவும் உஷாராக கூறியிருக்க...

“இல்லை, ஊரே வெறுக்கிற என்னையும், ஆதனையும் நீ இவ்ளோ நேசிக்கிறயே, அதுவும் எந்த கபடமும் இல்லாமல் ஆதனை உரிமையா என் மகன்னு உரிமை பாராட்டி என் மனசை குளிர்விக்கிறயே, இவன் ஓடிப்போன என் முதல் மனைவி ஷைலஜாவிற்கு பிறந்த பையன்னு மற்றவங்களுக்கு தோன்றின சுமை உனக்கு தோணலையா?” அவனின் கேள்விக்கு சண்டையிடுவாள், கோபப்படுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவள் அவனை வெகு சாதாராணமாக பார்த்ததை கண்டு உள்ளுக்குள் சிறு ஏமாற்றம் பரவியது... ஆனால் அதுவும் நொடியில் துடைத்தெறிந்தால் அவன் மனதை கொள்ளை கொண்ட இனியவள்.

“இந்த கேள்வி கேட்டதுக்கு நியாயமா எனக்கு கோபம் வரணும் விக்ரம், ஆனால் எனக்கு வரலை மாறா ஒரு விஷயம் தான் தோணுது”

“என்ன நந்து”

“மற்றவங்க ஆதனை சுமையா பார்க்கிறாங்கன்னா அவங்களுக்கு உங்க மேல விருப்பம் இல்லாமல் வெறும் பணமும், அந்தஸ்தும் தான் முக்கியமானதா இருக்கலாம்... அதனால் ஆதனை சுமையா நினைக்க நூறு சதவீதம் வாய்ப்பிருக்கு” என்று நிதானமாக அளித்த பதில் மேலும் அவனை தைரியமாக கேள்வி கேட்க தூண்ட...

“இருக்கட்டும் நந்தினி உனக்கு என் பணமோ, அந்தஸ்தோ பெரிசில்லை நான்... மிடில் கிளாசா இருந்திருந்தா கூட என்னை ஏற்றுகிட்டு இருந்திருப்ப, அதுவும் நீ வயது பெண் உனக்கும் கல்யாண கனவுகள்ன்னு ஆசை எல்லாம் இருக்கும், அதில் என்னை தவிர ஆதன் உனக்கு சுமையாவே தெரியலையா எங்கே உன் வாழ்க்கைக்கு இடைஞ்சலா இருப்பனோன்னு”

“தோணலை விக்ரம் ஏன் தெரியலை... அவன் மேல வெறுமனே பரிதாபம்ன்னு பொய் சொல்லமாட்டேன் அது உண்மையான பாசத்தை கொச்சைப்படுத்துற மாதிரி ஆகிரும்... அவனை பார்த்ததும் அவனை நான் அரவணைக்க முடியலையேன்னு வந்த தவிப்பு இருக்கே அதை என்னால் சொல்ல முடியலை விக்ரம்... பெற்ற தாய்க்கு ஏற்படக்கூடிய அந்த வலி எனக்கு ஏன் தோணனும் பெறாமல் பெற்றெடுத்த இன்பத்தை தந்தவன் ஆதன் அவன் என்னைக்குமே எனக்கு சுமையா ஆகமாட்டான்”

“என்ன இருந்தாலும் நான் ஷைலஜாவுடன் வாழ்ந்....” என்று கூறி முடிப்பதற்குள் வேகமாக இடையிட்டவள்...

“அந்த ஒரு நாள் வாழ்க்கையை தூக்கி குப்பையில் போடுங்க... நம்ம ஊரில் டிவோர்ஸ்ன்னு ஒரு விஷயம் நடக்கிறதே இல்லையா, அப்படி டிவோர்ஸ் பண்ணுறவங்க கல்யாணம் பண்ணிக்கிறது தான் இல்லையா? சுருக்கமா சொல்லனும்னா சேற்றில் பூ விழுந்திருசுன்னா அதை எடுத்து தண்ணியில் கழுவிட்டு நாம உபயோக படுதிறதில்லையா? இத்தனை ஏன் சேற்றிலும் தானே செந்தாமரை வளருது அந்த தாமரையை பறிச்சு நாம உபயோகப்படுத்த நினைக்கிறதில்லையா... சேற்றிலேயும் தாமரை வளருதுன்னு ஒட்டு மொத்த தாமரையும் அசுத்தம்ன்னு ஒதுக்கிற முடியுமா, அதுவும் பூன்னு தான் சொல்றோம்... இப்படி இரண்டு தன்மையுள்ள அந்த தாமரை பூவை உலகத்தை படிச்ச ஆதிசிவன் ஈசனே ஏற்றுக்கும் போது நாம என்ன தூக்கியா எறியுவோம்?” என்று புன்னகையுடன் பதிலளிக்க உணர்ச்சி பெருக்கெடுக்க அனைத்து தளைகளையும் மறந்தவனாக நந்தினியை இறுக அணைத்துக் கொண்டான்.

அவன் கண்கள் உணர்ச்சி பிழம்பில் கலங்கிச் சிவந்திருக்க அவன் இதயம் விம்மியது... நந்தினிக்கு அவன் அணைப்பில் எழும்புகள் நொறுங்கிவிடுவது போல் தோன்றினாலும் அவனை புரிந்தவளாக தானும் அவனுக்கு இசைந்து விட்டிருந்தாள்.

விக்ரம், நந்தினி இருவரும் நேசத்தின் ஆழியில் மூழ்கி அதன் சுகத்தை அனுபவித்ததில் மனம் நிறைந்திருந்தார்கள். நந்தினி விக்ரமின் சந்திப்பு பாதுகாப்பாக தொடர்ந்தது. விக்ரமுக்கு அவளின் படிப்பு பாதிக்கக்கூடாது என்ற எண்ணமே நந்தினிக்கு விக்ரமை உயர்த்தி நிறுத்தியது... அது மட்டுமில்லாமல் எவ்வளவு தனிமை கிடைத்தாலும் அவளுக்காக யோசித்து செயல்பட்டு அவளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் விதம் மேலும் அவனை இருமடங்கு உயர்த்தில் நிறுத்தி அவனை கவர்ந்தது.

இத்தனைக்கும் நந்தினி விக்ரமிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சிந்தனையின்றி அவன் மேல் ஈசித்து கொண்டு இழைபவள் அவளின் தொடுகையையும் அருகாமையையும் விக்ரம் ஒரு நாளும், ஒரு பொழுதும், ஒரு கணமும் தவறாக பயன்படுத்தாது அவளின் ஆசைக்கு தடா போடாமல் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை அவனுக்குள் இருத்திக் கொண்டிருந்தான்.

அச்சமயத்தில் விக்ரம் மட்டும் எனக்கு நீ வேண்டும் நந்தினி என்று கண்ணசைத்திருந்தால் போதும்... அவனிடம் நான் என்றும் உனதே எடுத்துக் கொள்ள என்று சரணாகதி ஆக தயாராக இருந்தாள். அதையெல்லாம் அறிந்தும் அறியாதவனை போல் விக்ரம் நடந்து கொள்ளும் விதம் விக்ரமின் அன்னையை போற்ற வைத்தது.

ஆண்மகனின் ஒழுக்கம் அன்னையின் வளர்ப்பில் என்பதற்கு சான்றாக இருந்தான் விக்ரம்... அப்போது தான் அவளுக்கு அந்த அச்சம் தோன்ற அதை அவனிடமே கேட்டுவிட்டாள்.

“விக்ரம் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு”

“எதுக்கு நம்ம கல்யாணம் நினைச்சு தானே விடு பார்த்துக்கலாம்” என்றவனிடம்...

“அச்சோ அதில்லை” என்று பார்வையை எக்கினாள்.

“வேறென்ன?” புருவம் சுருக்கி தீவிர சிந்தனையுடன் நோக்க...

“உங்களை உங்க அம்மா எவ்ளோ நல்லா பையனா வளர்த்திருக்காங்க, அதே போல நான் ஆதனை வளர்ப்பேனா?” என்று கவலையுடன் கேட்க கடகடவென்று உரக்க சிரித்துவிட்டான்.

“அடியேய் எதெதுக்கெல்லாம் பயப்படுறதுன்னு விவஸ்தை இல்லை” என்றவனின் பேச்சில் அவள் முகம் கூம்ப...

“என் பயத்தை கண்டா சிரிப்பா இருக்கா உங்களுக்கு, சிரிங்க சிரிங்க” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்க...

“ஆதன் உன்னை நந்தினி அம்மான்னு உரிமையா கூப்பிடணும்னா அவனுக்கு அந்த தகுதி இருக்கணும்னு அவன் மனசில் புகுத்திட்டேன்” என்றவன் முகம் தீவிரமாக இருக்க நந்தினி திகைத்து நின்றாள்.

அவன் பேச்சின் சாராம்சம் புரியாதவளா அவள்... “வி..க்..ர..ம்...” என்று திக்கி திணறியவளின் மனம் அன்பில் நெகிழ்ந்திருந்தது...

“உன் விக்ரம் தான் நந்துமா... போதும் இதுக்கு மேல கண்ணை விரிக்காதே கண்ணுமுழி வெளியே தெறிச்சு விழுந்துற போகுது” என்று கேலி பேச மற்றதை மறந்து களுக்கென்று சிரித்து விட்டிருந்தாள்.

“சரி நான் கிளம்பவா?”

“ஏன் நேரமாகிருச்சா?”

“ம்ம்ம்... ஆமாம் நான் பிராக்டிகல் கிளாஸ் இருக்கு அது இதுன்னு கதை சொல்லிட்டு வந்திருக்கேன், இப்போவே மணி ஆறு ஆகிருச்சு வீட்டுக்கு போக சரியா இருக்கும்”

“சரி பார்த்து போ” என்றவன் அவளுக்கு விடை கொடுக்க ஆதன் முத்தமிட்டு அவளை வழியானுப்பினான்.

நந்தினி புன்னகை முகத்துடனே வாகனத்தை கையாள எதிரில் யாரென்று கண்ணுறாமாலே செலுத்தியவள் சரக்கென்று பிரேக்கை பிடித்து வண்டியை நிறுத்தியிருந்தாள். எதிரில் கோபத்துடன் நின்றிருந்த இருவரையும் கண்டு நந்தினி கலவையான உணர்ச்சியை சுமந்தப்படி தத்தளித்து கொண்டிருந்தாள்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-20
விக்ரம் ஓரிடத்தில் காரை நிறுத்த படாரென்று எழுந்த நந்தினி என்னவென்பது போல் அவனை நோக்க... “காரிலேயே வெயிட் பண்ணு நான் வந்துடறேன்” என்றவன் வாகனத்திற்கு திரும்பும் போது காபியும், பலகாரமும் அடங்கிய பையை ஏந்தியபடி சமீபித்திருந்தான்.

“இந்தா காபியை குடிச்சுட்டு இந்த வடை சாப்பிடு” என்று நீட்ட அவனின் அக்கறை கண்டு நேசம் சுரந்தது.

“தேங்க்ஸ் எனக்கே எதாவது குடிக்கணும் போல இருந்துச்சு”

“தெரியும் அதனால் தான் வாங்கிட்டு வந்தேன் சாப்பிடு”

“இதெல்லாம் கூட கண்டு பிடிக்கறீங்க பரவாயில்லை நல்லா தேறிட்டீங்க”

“முதல் பார்வையிலேயே உன் மனசை கண்டு பிடிச்சவன் இதை கூட புரிஞ்சுக்கமாட்டேனா?” என்று வாய்விட நந்தினி கண்களை அகல விரித்து போலியாக முறைத்தவள்...

“பிராடு அப்போ என்னை பற்றி புரிஞ்சுகிட்டு தான் அப்படி எல்லாம் பேசினீங்களா?” என்று முதுகில் நாலு போட அவனோ அசராது பெற்றுக் கொண்டவன் முகம் புன்னகையில் விரிந்தது.

“போதும் விடு” சிரித்துக் கொண்டே கூறியவன் அவள் கரங்களை தன் கரங்களுக்குள் அடக்கிக் கொண்டு...

“எல்லாத்தையுமே வெளிப்படையா சொல்லிவிடுற பாக்கியம் பெற்றவன் நானில்லை நந்து... இதே நான் கல்யாணம் ஆகாமலோ, சப்போஸ் கல்யாணம் மட்டும் ஆகி ஆதன் கூட இல்லாமல் இருந்திருந்தாலோ எந்த தயக்கமும் இல்லாமல் என் மனசை வெளிப்படுத்தியிருப்பேன்... ஆனால் இது எதுக்கும் வழியில்லாமல் கையில் குழந்தையோட, ஊர் சொல்லும் அவப் பெயரோட இருந்தவன், வயது பெண் உன்கிட்டே நெருங்கி பழகி என்னால் உனக்கு எதுவும் கெட்ட பெயர் வந்துதுன்னா என்னால் தாங்கிக்க முடியுமா?”

அவனின் குரலில் இருந்த ஏக்கமும், இயலாமையும் அவளால் உணர்வு பூர்வமாக உணர்ந்து கொண்டிருக்க இயந்திரத்தை கொண்டு மனதை குடைவது போல் இருந்தது. அப்போது தான் அவள் அவனிடம் கேட்க வேண்டும் என்று இருந்த அந்த கேள்வி உதிக்க அதை கேட்கலானாள்.

“நான் இதை தான் உங்ககிட்டே முதல் கேள்வியா கேட்கணும்னு நினைச்சேன், ஆனால் அதை மறந்துட்டு வேற என்னனமோ பேச்சு வந்திருச்சு”

“அப்படி என்ன கேட்கணும் கேளு” என்றதும்...

“நீங்க எல்லாத்தையும் இவ்ளோ அக்கறையா பார்த்துக்கிறீங்க, அப்படி இருக்ககுள்ள ஆதனை நீங்க ரம்யா வீட்டில் விட்டது தான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு, அவன் அங்கே எப்படி இருக்கிறான் தெரியுமா? அவனை பார்க்கவே எனக்கு பாவமா இருந்தது விக்ரம்... பசியில் இருக்கிறவனுக்கு பச்சை தண்ணி கூட அமிர்தமா தெரியும்ன்னு கேள்விதான் பட்டிருக்கேன் ஆனால் அதை நான் ஆதன் மூலாமாதான் தெரிஞ்சுகிட்டேன்”

“எனக்கு எல்லாம் தெரியும் நந்து” என்றவனை அதிர்ந்த பார்வையால் நோக்கினாள்.

“என்ன தெரியுமா? அப்புறமும் ஏன் அவனை அவங்க பொறுப்பில் விட்டீங்க?” சற்று காரமாகவே அவனிடம் வினவியிருந்தாள்... அதில் அவள் ஆதன் மேல் கொண்ட அக்கறை புரிந்துக் கொண்டவன் நிதானமாக பதில் கூறினான்.

“வேற என்ன செய்யணும் நந்து?” என்றவனை முறைத்தவள்...

“எத்தனையோ பண்ணலாம்... ஏன் கண்ணம்மா இல்லைன்னா மில்லில் செந்தில் அண்ணன் இருக்கிறாரு, அப்படியும் இல்லையா அங்கே உங்க ரூமில் யாரையாவது ஆளை வச்சு பார்த்துக்க சொல்ல முடியாதா?” பச்சை மிளகாயை கடித்தது போல் சுறுசுறுவென்று காரம் ஏற கேட்டவளை இமைக்காமல் பார்த்தவன்...

“சில விஷயம் சொல்லுறது ரொம்ப சுலபம் நந்து... ஆனால் அதை செயல்படுத்துறதில் தான் சிரமம் இருக்கும்ன்னு அதை செய்றவங்களால் மட்டும் தான் புரிஞ்சுக்க முடியும்” என்றவனை புருவம் சுருக்கி பார்த்தாள்.

“நீ சொல்லுற மாதிரி செய்ய நான் யோசிக்காமலா இருந்திருப்பேன்? முதல் நாள் அவனை ரம்யா வீட்டுக்கு அனுப்பினப்போ அன்னைக்கு ராத்திரி ஆதன் அடுத்த நாள் போகவேமாட்டேன்னு அடம் பிடிச்சான், ஏன்னு கேட்டேன் அவனும் அவனுக்கு தெரிஞ்ச வகையில் அவங்க பார்த்துக்கிற விதத்தை ரொம்ப வருத்தப்பட்டு சொன்னான், குழந்தை ஓடியாடி விளையாட ஆசைபடுவான் கொஞ்சம் அப்படி இப்படி குறும்புத்தனத்தோட தானே இருப்பான்... இதில் ஏதோ ஹாஸ்டல் வார்டன் மாதிரி கட்டளை போட்டா அவன் என்ன பண்ணுவான்? அடுத்த நாள் ரம்யா அம்மா என்கிட்டே நேரடியா சொல்லிட்டாங்க அவனை ஒரே இடத்தில் உட்கார வைக்க பழக்கனுமாம், சிந்தாமல் சாப்பிட சொல்லிக் கொடுக்கணுமாம், அப்புறம் இத்யாதி... இத்யாதி... பெரிய அறிவுரை பாடமே எடுத்தாங்க... அவனுடைய வயசுல ஒரு சில பசங்க சாப்பிடவே அப்போதான் பழகியிருப்பாங்க... ஆனால் இவன் சாப்பிடவும் பழகி அதிலேயும் சிந்தாமல் சாப்பிடவும் கற்று கொடுத்திருக்கிறேன் நந்தினி, இருந்தாலும் சின்ன குழந்தை தானே ஒன்றிரண்டு சாதம் விழுந்தா அதை குறையாவா பார்க்க முடியும்?”

“ம்ம்ம்ம்...” என்று முனகியவளுக்கு துக்கத்தில் தொண்டையடைக்க, இதோ நான் வந்துவிடுவேன் என்று கண்ணீர் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

“அவங்க அதையும் குறை சொன்னாங்க, நான் தான் போகவே மாட்டேன்னு அடம் பிடிச்சவனை வீடியோ கேம் வாங்கிக் கொடுத்து அன்பா பேசி அனுப்பிவிட்டேன்... பாவம்! துறுதுறுன்னு இருக்கிறவன் அங்க போனாலே சோர்ந்து தான் இருப்பான் என் மனசு வலிக்கும் நந்து... ஆனால் நீயே யோசிச்சு பாரு இவங்க வீட்டில் இருக்கிறவங்க யாரு வருவாங்க போவாங்கன்னு தெரியும், இவனுக்கு அங்கே சுதந்திரம் இல்லைனாலும் பாதுகாப்பு இருக்கும். ஆனால் மில்லில் அப்படி இல்லை என்னதான் செந்தில் அண்ணன் பார்த்துக்குவாருன்னு சொன்னாலும், அவருக்குன்னு மில்லில் சில பொறுப்புகள் இருக்கு எந்த நேரம் வேணாலும் எதையாவது பார்க்க போகலாம், அப்படி தான் நீ சொன்ன மாதிரி ஆள் கூட போட்டேன் அதுவும் வயசு பொண்ணு வேண்டாம்ன்னு கல்யாணம் ஆகி நடுத்தர வயது பெண்ணை தான் நியமிச்சேன்... ஆனா அந்த பொண்ணு இவனை நிதமும் அடிக்கும், பற்றாததுக்கு என் மேலேயும் தப்பான ஒரு பார்வை, இருக்கிறதெல்லாம் போதாதா இது வேறையான்னு தலைவேதனையா போச்சு... அதனால தான் பின்னதுக்கு முன்னது பெட்டர்ன்னு ரம்யா வீட்டிலேயே விடுவேன்” என்றதும் அவளுக்கு கண்கள் கலங்கிய குட்டையானது.

“என்னது கண்ணில் டேம் எதுவும் கட்டி வச்சிருக்கியா ஆனா ஊன்னா திறந்து விடுற” அவளின் மனதை மாற்ற வேடிக்கையாக அவன் கூற அவளும் அவனுக்காக உதட்டை இழுத்து பிடித்த ஒரு புன்னகையை உதிர்த்தாள்.

“சாரி விக்ரம் நீங்க அவனை கண்டுக்கலையோன்னு நினைச்சு ஏதேதோ பேசிட்டேன்”

“யாரு நீ தானே பேசினா பேசு நந்து, இன்னும் என்ன எல்லாம் என்கிட்டே கேட்டு என்னை திட்டணும்னு நினைக்கறியோ திட்டு... இத்தனை நாளா இதுக்கெல்லாம் யார் இருந்தாங்க? ஆனால் இப்போ நீ இப்படி உரிமையா கேட்கும் போதே மனசுக்கு எவ்ளோ சந்தோசமா, ஆறுதலா இருக்கு தெரியுமா” என்றவனை வாஞ்சையுடன் நோக்கினாள்.

“சரி சரி ஆதன் இப்போவெல்லாம் உங்ககிட்டே என்னை கேட்டு நச்சரிக்கிறது இல்லையா?”

“இல்லை அப்படியே கேட்டாலும் காலேஜ் போயிருக்கா முடிஞ்சதும் வருவான்னு சொன்னா, பெரியா ஸ்கூலான்னு கையை விரிச்சு காட்டி கேட்டுட்டு ஆமான்னு சொன்ன போயிடுறான்”

“அவன் கேட்கமாட்டான் ஏன்னா இனிமேல் என் மகன் என் பொறுப்பு சோ ட்ரைனிங் இந்த நந்தினியோடது அதனால் நந்தினி புருஷனை அவன் தொந்தரவு பண்ணமாட்டான்” அவள் சொல்லிய விதத்தில் அவனுக்கு கட்டியணைக்க வேண்டும் போல் இருக்க கடினத்துடன் அடக்கிக் கொண்டவன்...

“பாருடா! உன் மகன், உன் ட்ரைனிங்கா நீ நடத்து” அவன் கூறியதை கேட்டு களுக்கென்று சிரிக்க, அவளையே கூர்மையான பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான், அவனின் பார்வை அவளிடம் ஏதோ கேட்க இருப்பதை உணர்த்த...

“என்ன?” என்று ஒற்றை புருவத்தை ஒயிலாக உயர்த்தி வினவ...

“நான் ஒண்ணு கேட்பேன் என்கிட்டே கோவிச்சுகிட்டு முகத்தை திருப்பக்கூடாது”

“அப்படியா அது நீங்க சொல்ற விஷயத்தை பொறுத்து இருக்கு” அவளும் மிகவும் உஷாராக கூறியிருக்க...

“இல்லை, ஊரே வெறுக்கிற என்னையும், ஆதனையும் நீ இவ்ளோ நேசிக்கிறயே, அதுவும் எந்த கபடமும் இல்லாமல் ஆதனை உரிமையா என் மகன்னு உரிமை பாராட்டி என் மனசை குளிர்விக்கிறயே, இவன் ஓடிப்போன என் முதல் மனைவி ஷைலஜாவிற்கு பிறந்த பையன்னு மற்றவங்களுக்கு தோன்றின சுமை உனக்கு தோணலையா?” அவனின் கேள்விக்கு சண்டையிடுவாள், கோபப்படுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவள் அவனை வெகு சாதாராணமாக பார்த்ததை கண்டு உள்ளுக்குள் சிறு ஏமாற்றம் பரவியது... ஆனால் அதுவும் நொடியில் துடைத்தெறிந்தால் அவன் மனதை கொள்ளை கொண்ட இனியவள்.

“இந்த கேள்வி கேட்டதுக்கு நியாயமா எனக்கு கோபம் வரணும் விக்ரம், ஆனால் எனக்கு வரலை மாறா ஒரு விஷயம் தான் தோணுது”

“என்ன நந்து”

“மற்றவங்க ஆதனை சுமையா பார்க்கிறாங்கன்னா அவங்களுக்கு உங்க மேல விருப்பம் இல்லாமல் வெறும் பணமும், அந்தஸ்தும் தான் முக்கியமானதா இருக்கலாம்... அதனால் ஆதனை சுமையா நினைக்க நூறு சதவீதம் வாய்ப்பிருக்கு” என்று நிதானமாக அளித்த பதில் மேலும் அவனை தைரியமாக கேள்வி கேட்க தூண்ட...

“இருக்கட்டும் நந்தினி உனக்கு என் பணமோ, அந்தஸ்தோ பெரிசில்லை நான்... மிடில் கிளாசா இருந்திருந்தா கூட என்னை ஏற்றுகிட்டு இருந்திருப்ப, அதுவும் நீ வயது பெண் உனக்கும் கல்யாண கனவுகள்ன்னு ஆசை எல்லாம் இருக்கும், அதில் என்னை தவிர ஆதன் உனக்கு சுமையாவே தெரியலையா எங்கே உன் வாழ்க்கைக்கு இடைஞ்சலா இருப்பனோன்னு”

“தோணலை விக்ரம் ஏன் தெரியலை... அவன் மேல வெறுமனே பரிதாபம்ன்னு பொய் சொல்லமாட்டேன் அது உண்மையான பாசத்தை கொச்சைப்படுத்துற மாதிரி ஆகிரும்... அவனை பார்த்ததும் அவனை நான் அரவணைக்க முடியலையேன்னு வந்த தவிப்பு இருக்கே அதை என்னால் சொல்ல முடியலை விக்ரம்... பெற்ற தாய்க்கு ஏற்படக்கூடிய அந்த வலி எனக்கு ஏன் தோணனும் பெறாமல் பெற்றெடுத்த இன்பத்தை தந்தவன் ஆதன் அவன் என்னைக்குமே எனக்கு சுமையா ஆகமாட்டான்”

“என்ன இருந்தாலும் நான் ஷைலஜாவுடன் வாழ்ந்....” என்று கூறி முடிப்பதற்குள் வேகமாக இடையிட்டவள்...

“அந்த ஒரு நாள் வாழ்க்கையை தூக்கி குப்பையில் போடுங்க... நம்ம ஊரில் டிவோர்ஸ்ன்னு ஒரு விஷயம் நடக்கிறதே இல்லையா, அப்படி டிவோர்ஸ் பண்ணுறவங்க கல்யாணம் பண்ணிக்கிறது தான் இல்லையா? சுருக்கமா சொல்லனும்னா சேற்றில் பூ விழுந்திருசுன்னா அதை எடுத்து தண்ணியில் கழுவிட்டு நாம உபயோக படுதிறதில்லையா? இத்தனை ஏன் சேற்றிலும் தானே செந்தாமரை வளருது அந்த தாமரையை பறிச்சு நாம உபயோகப்படுத்த நினைக்கிறதில்லையா... சேற்றிலேயும் தாமரை வளருதுன்னு ஒட்டு மொத்த தாமரையும் அசுத்தம்ன்னு ஒதுக்கிற முடியுமா, அதுவும் பூன்னு தான் சொல்றோம்... இப்படி இரண்டு தன்மையுள்ள அந்த தாமரை பூவை உலகத்தை படிச்ச ஆதிசிவன் ஈசனே ஏற்றுக்கும் போது நாம என்ன தூக்கியா எறியுவோம்?” என்று புன்னகையுடன் பதிலளிக்க உணர்ச்சி பெருக்கெடுக்க அனைத்து தளைகளையும் மறந்தவனாக நந்தினியை இறுக அணைத்துக் கொண்டான்.

அவன் கண்கள் உணர்ச்சி பிழம்பில் கலங்கிச் சிவந்திருக்க அவன் இதயம் விம்மியது... நந்தினிக்கு அவன் அணைப்பில் எழும்புகள் நொறுங்கிவிடுவது போல் தோன்றினாலும் அவனை புரிந்தவளாக தானும் அவனுக்கு இசைந்து விட்டிருந்தாள்.

விக்ரம், நந்தினி இருவரும் நேசத்தின் ஆழியில் மூழ்கி அதன் சுகத்தை அனுபவித்ததில் மனம் நிறைந்திருந்தார்கள். நந்தினி விக்ரமின் சந்திப்பு பாதுகாப்பாக தொடர்ந்தது. விக்ரமுக்கு அவளின் படிப்பு பாதிக்கக்கூடாது என்ற எண்ணமே நந்தினிக்கு விக்ரமை உயர்த்தி நிறுத்தியது... அது மட்டுமில்லாமல் எவ்வளவு தனிமை கிடைத்தாலும் அவளுக்காக யோசித்து செயல்பட்டு அவளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் விதம் மேலும் அவனை இருமடங்கு உயர்த்தில் நிறுத்தி அவனை கவர்ந்தது.

இத்தனைக்கும் நந்தினி விக்ரமிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சிந்தனையின்றி அவன் மேல் ஈசித்து கொண்டு இழைபவள் அவளின் தொடுகையையும் அருகாமையையும் விக்ரம் ஒரு நாளும், ஒரு பொழுதும், ஒரு கணமும் தவறாக பயன்படுத்தாது அவளின் ஆசைக்கு தடா போடாமல் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை அவனுக்குள் இருத்திக் கொண்டிருந்தான்.

அச்சமயத்தில் விக்ரம் மட்டும் எனக்கு நீ வேண்டும் நந்தினி என்று கண்ணசைத்திருந்தால் போதும்... அவனிடம் நான் என்றும் உனதே எடுத்துக் கொள்ள என்று சரணாகதி ஆக தயாராக இருந்தாள். அதையெல்லாம் அறிந்தும் அறியாதவனை போல் விக்ரம் நடந்து கொள்ளும் விதம் விக்ரமின் அன்னையை போற்ற வைத்தது.

ஆண்மகனின் ஒழுக்கம் அன்னையின் வளர்ப்பில் என்பதற்கு சான்றாக இருந்தான் விக்ரம்... அப்போது தான் அவளுக்கு அந்த அச்சம் தோன்ற அதை அவனிடமே கேட்டுவிட்டாள்.

“விக்ரம் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு”

“எதுக்கு நம்ம கல்யாணம் நினைச்சு தானே விடு பார்த்துக்கலாம்” என்றவனிடம்...

“அச்சோ அதில்லை” என்று பார்வையை எக்கினாள்.

“வேறென்ன?” புருவம் சுருக்கி தீவிர சிந்தனையுடன் நோக்க...

“உங்களை உங்க அம்மா எவ்ளோ நல்லா பையனா வளர்த்திருக்காங்க, அதே போல நான் ஆதனை வளர்ப்பேனா?” என்று கவலையுடன் கேட்க கடகடவென்று உரக்க சிரித்துவிட்டான்.

“அடியேய் எதெதுக்கெல்லாம் பயப்படுறதுன்னு விவஸ்தை இல்லை” என்றவனின் பேச்சில் அவள் முகம் கூம்ப...

“என் பயத்தை கண்டா சிரிப்பா இருக்கா உங்களுக்கு, சிரிங்க சிரிங்க” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்க...

“ஆதன் உன்னை நந்தினி அம்மான்னு உரிமையா கூப்பிடணும்னா அவனுக்கு அந்த தகுதி இருக்கணும்னு அவன் மனசில் புகுத்திட்டேன்” என்றவன் முகம் தீவிரமாக இருக்க நந்தினி திகைத்து நின்றாள்.

அவன் பேச்சின் சாராம்சம் புரியாதவளா அவள்... “வி..க்..ர..ம்...” என்று திக்கி திணறியவளின் மனம் அன்பில் நெகிழ்ந்திருந்தது...

“உன் விக்ரம் தான் நந்துமா... போதும் இதுக்கு மேல கண்ணை விரிக்காதே கண்ணுமுழி வெளியே தெறிச்சு விழுந்துற போகுது” என்று கேலி பேச மற்றதை மறந்து களுக்கென்று சிரித்து விட்டிருந்தாள்.

“சரி நான் கிளம்பவா?”

“ஏன் நேரமாகிருச்சா?”

“ம்ம்ம்... ஆமாம் நான் பிராக்டிகல் கிளாஸ் இருக்கு அது இதுன்னு கதை சொல்லிட்டு வந்திருக்கேன், இப்போவே மணி ஆறு ஆகிருச்சு வீட்டுக்கு போக சரியா இருக்கும்”

“சரி பார்த்து போ” என்றவன் அவளுக்கு விடை கொடுக்க ஆதன் முத்தமிட்டு அவளை வழியானுப்பினான்.

நந்தினி புன்னகை முகத்துடனே வாகனத்தை கையாள எதிரில் யாரென்று கண்ணுறாமாலே செலுத்தியவள் சரக்கென்று பிரேக்கை பிடித்து வண்டியை நிறுத்தியிருந்தாள். எதிரில் கோபத்துடன் நின்றிருந்த இருவரையும் கண்டு நந்தினி கலவையான உணர்ச்சியை சுமந்தப்படி தத்தளித்து கொண்டிருந்தாள்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவன்-21

“எங்களை உனக்கு நியாபகம் இருக்கா மிஸ்.நந்தினி?” என்று ரம்யா இளக்காரமான பார்வையுடன் காட்டமாக வினவ...

“அவளுக்கு எப்படி நியாபகம் இருக்கும் ரம்யா... அதுதான் அம்மையாருக்கு புதுசா ஒரு உறவு கிடைச்சிருக்கு இனி நம்மளை எல்லாம் எதுக்கு கண்டுக்கப் போகிறா?” என்று வினிதா அவளை விட இருமடங்கு கடுமையாக கூற, நந்தினி செய்வதறியாது உதட்டை கடித்துக் கொண்டிருந்தாள்.

“.................” அவளின் மௌனத்தை கண்ட இருவருக்கும் மேலும் சினம் தொக்கிக் கொள்ள...

“ஏய் விடுடி இனிமே நம்ம கூட அவ பேசக்கூட யோசிப்பா” என்று எரிந்து விழுந்தாள்.

“அதானே மேடம் யாரு மாடிவீட்டு மகாராணி ஆச்சே” என்று ரம்யா குத்தலாக மொழிய நந்தினி அவர்களை பச்சா தாபத்துடன் பார்த்திருந்தாள்.

“ப்ளீஸ் நீங்க இப்படி எல்லாம் பேசினா மனசு வலிக்குது” கண்களில் வலியுடன் கூறியவளின் துயரத்தை பொறுக்காதவர்கள் சற்றே இறங்கினார்கள்...

வினிதா, ரம்யாவிடம் கண்களால் ஏதோ பேச அதை அப்படியே நந்தினியிடம் விளம்பினாள்.

“நாளைக்கு காலேஜ் முடிச்சுட்டு ஈவ்னிங் வர நாம மீட் பண்றோம்” என்றதும் திடுக்கிட்டவள்...

“ஈவ்னிங்கா” என்று கூறி விக்ரமின் இல்லத்தை கண்ணுற்றவளை கண்டு இருவரின் பார்வையும் மாறியிருந்தது.

ஆனால் அதை பற்றி சிறிதும் லட்சியம் செய்யாத நந்தினி... “ஹேய் ப்ளீஸ் டி மதியம் வேணா மீட் பண்ணலாமா, இல்லைன்னா சாட்டர்டே மீட் பண்ணலாமா?” என்று தயவுடன் ஆலோசித்து கொண்டிருந்தாள்.

“அதான் நாம நினைச்சது சரி தான் ரம்யா... மேடம் பசலை நோயில் விழுந்து பித்து பிடிச்சிருக்காங்க, அதனால் நம்மளை பார்க்க வரணும்ன்னா முக்கியமானவர் கிட்டே பர்மிசன் கேட்கணும் போல”

“ச்சே.. ச்சே.. அப்படி எல்லாம் இல்லை டி வினி... இப்போ என்ன நாளைக்கு பார்க்கணும் அவ்ளோதானே சரி வரேன் என்று வேறு வழியின்றி சம்மதித்திருந்தாள்

அவர்கள் சொன்னபடியே மாலையில் சந்தித்து கொள்ள இருவரும் நந்தினியைவெட்டிக் கொண்டிருந்தனர்... எதுவாகினும் அவர்களே ஆரம்பிக்கட்டும் என்று நந்தினி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“எது நடந்துரக் கூடாதுன்னு நான் அவ்ளோ தூரம் ஜாக்கிரதையா இருக்க சொன்னேனோ கடைசியில் அதுவே நடந்திருக்கு” என்று ரம்யா ஆரம்பித்து வைக்க, அவளை தொடர்ந்த வனிதா...

“மற்றவங்களை குறை சொல்லி பயனில்லை டி... நல்லா படிச்சு பட்டம் வங்கியிருக்காளே அவளை சொல்லணும்”

“..........” அவர்களின் பேச்சுக்கு எந்த எதிரொலியும் இல்லாது மௌனமே உருவாக அமர்ந்திருந்தவளை கண்டு இருவருக்கும் கடுப்பாகியது.

“ஏய் என்னடி இப்படி பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருக்கிற, நாங்க என்ன யாரோ ஒருத்தர்கிட்டயா பேசிட்டு இருக்கோம் இப்படி உம்முனு முகத்தைக் வச்சுக்கிட்டு இருக்கிற?”

“என்னை என்ன சொல்ல சொல்றீங்க ரெண்டு பேரும்? நான் காதலிக்கிறது ஒரு தப்பா” அழுத்தமாக பார்த்தப்படி வினவியவளை கண்டு திகைத்தவர்கள்...

“நீ காதலிக்கிறது தப்பில்லை நந்தினி... ஆனால் யாரை காதலிக்கிறேன்னு தான் பிரச்சனை... அவன் கல்யாணம் ஆகி குழந்தையோட இருக்கிறவன்... அதுவும் அவங்களுக்குள்ள என்ன சிக்கல் ஆகி விவாகரத்து ஆச்சோ ஊரில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசிக்கிறாங்க... உனக்கு என்ன குறைன்னு அந்த விக்ரமை போய் காதலிக்கிற? ஆதனை நாங்க அடக்கி வைக்க காரணம், அவனை அடக்க ஆள் இல்லாமல் இருக்கிறதால தப்பு பண்ணாமல் இருக்கத்தான்” என்று ரம்யா கூற, அதுவரை தோழிகள் என்று நட்புக்காக அடங்கி கட்டுப்பட்டு இருந்தவள் முற்றிலும் பொறுமையை சிதறடித்துவிட்டு....

“போதும் நிறுத்து ரம்யா... ஊரில் ஆயிரம் பேர் ஆயிரம் விதமா பேசுறாங்க தான், ஆனால் உண்மை என்னன்னு உனக்கு தெரியுமா?” ஆவேசத்துடன் பேசிக் கொண்டிருந்த தோழியை அதிர்ந்த விழிகளால் நோக்கினர். அவர்களின் அதிர்ச்சியை சிறிதும் பொருட்படுத்தாமல் தன் பிடியில் உறுதியாக நின்று பேசலானாள்.

“எனக்கு தெரியும் நடந்த உண்மை என்னன்னு... ஆதனை நீங்க சரியான விதத்தில் கொண்டு போகத்தான் அவனுக்கு அத்தனை கண்டிஷன் போட்டீங்களா? அப்படி நினைக்கிற நீங்க அவனை ஒதுக்கி வச்சு செய்திருக்கக்கூடாது... உங்க வீட்டில் இருக்கிற ஒருத்தனா நினைச்சு குழந்தையை எப்படி ட்ரீட் பண்ணணுமோ அப்படி ட்ரீட் பண்ணியிருக்கணும்... ஆனால் அவனை நீங்க அறியா பையன்னு கூட பார்க்காமல் அவன் வயசுக்கே உள்ள சில விஷயங்களை கட்டாயப்படுத்தி கட்டுப்படுத்தி அராஜகமா அடக்கி வச்சீங்க? இதுக்கு நீங்க அவனை பார்த்துக்கவே முடியாதுன்னு சொல்லியிருந்தா இன்னும் பெட்டர்” என்று ஆவேசத்தில் கொந்தளித்தாள்.

“ஏய் நந்து ஏன் டி அவளை திட்டுற, அவ அவருடைய வீட்டு பக்கத்திலேயே பல வருஷமா இருக்கிறவ அவளுக்கு தெரியாததா உனக்கு தெரிஞ்சுற போகுது”

“வீட்டு பக்கத்தில் இருந்தா எல்லாம் தெரிஞ்சவங்களா ஆகிற முடியுமா? சில பெற்றவங்களுக்கே பிள்ளைகள் மனசில் என்ன இருக்குன்னு தெரியாது”

“ஆமாம் உன்னை போல தானே?” அவளை குத்தி காட்டத்தான் அவள் கூறினால் ஆனால் அதற்கெல்லாம் அசராத நந்தினி...

“ஆமாம் அப்படி தான் இருக்கட்டுமே இப்போ என்ன? நான் இப்போ பேசுறது விக்ரம் வாழ்க்கையில் நடந்த அந்தரங்க வாழ்க்கையை பற்றி... ஊரில் ஏதேதோ பேசிக்கிறாங்கன்னு சொல்லிட்டு அதுக்காக அவருடைய அந்தரங்கத்தை மேடை போட்டு மைக் செட் வச்சு ஒளிபரப்ப முடியாது... அதுக்கான அவசியமும் இல்லை... ஏன் நம்மளுடைய அந்தரங்கமும் அப்படித்தானே, இதையெல்லாம் நீங்க வசதியா மறந்துட்டீங்க?” ஆத்திரம் தாங்காது எண்ணையில் இட்ட கடுக்காய் படபடவென பொரிந்து தள்ளியிருந்தாள். அவள் கூற்றில் அவர்களுக்கும் ஒப்புதல் இருந்த போதும் தங்கள் தோழியின் வாழ்க்கை ஆயிற்றே என்று கருதி...

“ஏய் நாங்க உன் வாழ்க்கைக்காக தான் டி பேசினோம், ஆனால் நீ எங்க மேலேயே கோபப்படுற? ஆதன் இப்போ வேணா உனக்கு சுமையா இல்லாமல் இருக்கலாம்... ஆனால் கல்யாணம் ஆன பிறகு சில விஷயங்களுக்கு நீயே அவனை சுமையா தான் நினைப்ப?” என்றவளை சரேலென்று பார்வை உயர்த்தி பார்த்தவள் முகத்தில் தீட்சண்யம் கரைபுரண்டோடியாது.

“நீங்க சொல்ற அந்த காரணம் எந்த காரணம்ன்னு புரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை... அந்த காரணமும், சூழ்நிலையும் அமையும்... ஆனால் அதுக்காக எங்க வாழ்க்கையை நாங்க வாழாமலும் இருக்கமாட்டோம்... அதை எல்லாம் யோசிக்காமல் என் விக்ரம் இருக்கமாட்டாரு... ஏன்னா என் விக்ரம் பேருக்கு தான் திருமணம் ஆனவர்... பொண்டாட்டியோட வாழ்ந்தவர்... ஆனால் அந்த போலி திரைக்கு பின்னாடி இருக்கிற உண்மையை அறிஞ்சவ நான் மட்டும் தான்” என்று தலையை சிலுப்பிக் கொண்டவள் தொடர்ந்து...

“அவர் வாழ்ந்தவர்ன்னு சொல்லுறதை விட ஊருக்காக கணவன் மனைவியா வலம் வந்தவர்... இதுக்கு மேல அவருடைய அந்தரங்கத்தை நான் சொல்ல விரும்பலை... ஏன்னா அவர் என்கிட்டே சொன்னதுக்கு காரணம் அவருடன் நான் வாழப் போறேன் அப்போ கடந்த காலம் என்னன்னு தெரியாமல் இருக்கக் கூடாதுங்கிற ஒரு காரணத்துக்காக தான்... அவருக்கு நடந்தது கிட்டத்தட்ட ஒரு பொம்மை கல்யாணத்துக்கு சமம், ஆதன் பிறப்பு ஒர்நாள் விபரீதமான விபத்தில் நேர்ந்த விதியின் விளையாட்டு... உங்களை போலவே நானும் இதுபோல் நெறைய யோசிச்சிருக்கேன் மனசை போட்டு குழப்பியிருக்கேன்... ஆனால் என் விக்ரம் என்னிடம் உண்மையை சொன்ன பிறகு எனக்கு அவரை தவிர வேற யாரை பற்றியும் சிந்திக்க முடியலை” என்று ஓவ்வொரு முறையும் 'என் விக்ரம்' என்பதை அழுத்தம் கூட்டி கூறியதே அவளுக்கு அவன்மேல் கொண்ட ஈடுப்பட்டை பட்டவார்த்தைனமாக வெளிச்சமிட்டு காட்டியிருக்க, அவர்களுக்கு அதற்கு மேல் அதை பற்றி பேசும் அருகதை இன்றி என்றுணர்ந்தவர்கள்...

“எங்களை மன்னிச்சிரு தாயே ஏதோ நீ எங்களுடைய நெருங்கின பிரெண்டுன்னு நினைச்சு தான் உனக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வந்தோம்... ஆனா யாரோ ஒரு மூணாவது ஆளுக்காக எங்களையே எடுத்தெறிஞ்சு பேசிட்டா, இதுக்கு மேல நாங்க பேசினா அது எங்க மரியாதைக்கு தான் பங்கம், நீயாவே பட்டு திருந்தினா தான் உண்டு நாங்க கிளம்பறோம்... இனி உன் பக்கமே வரமாட்டோம்” என்று தலை மேல் இருகரம் கூப்பி கூறிவிட்டு விருட்டென்று நகர்ந்துவிட்டிருந்தனர்.

நந்தினியை கரித்துக் கொட்டி விட்டு சென்ற இருவரையும் கண்டு, தானும் அத்தனை கடுமையாக பேசியிருக்க கூடாதோ என்று வருந்தினாள்.

“இப்போ நீங்க என்மேல கோபித்துகிட்டு போறீங்க... ஆனால் ஒரு நாள் என்னை தேடி வருவீங்க, அன்றைக்கு நான் விக்ரமுடன் நன்றாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பேன்” என்று தனக்குள் பிரதிக்ஞை செய்துக் கொண்டாள்.

அப்போதே அங்கு நேரமாகிவிட இனி விக்ரமை பார்ப்பது என்பது முடியாத விஷயமாக எண்ணியவள் அடுத்த தினம் கல்லூரியும் விடுமுறை என்பதால் நேரமாக செல்லலாம் என்று முடிவெடுத்து அதை விக்ரமிடமும் தெரிவித்துவிட்டு இல்லம் திரும்பியிருந்தாள்.

விக்ரமின் வீட்டில் காலடி எடுத்து வைக்க வீட்டில் நிசப்தமே நிலவியது... யாரும் இல்லையா என்று எண்ணியபடி வீட்டை சுற்றி தேடிக் கொண்டிருக்கும் போதுதான்... “பே...” என்று பேய் மூகமூடி அணிந்த ஆதன் அவள் எதிர்பாராமல் பயமுறுத்தியதில் பயந்து அலறி திரும்பிய சமயம் எதிரில் விக்ரமும் அதே போல் அவளை பயமுறுத்தினான்.

அவர்களின் குறும்பு புரிந்தாலும் எதிர்பாரத அச்சத்தின் தாக்கம் இருவர் மேலும் சினம் கொள்ள வைக்க, இருவரையும் பலமாக முறைத்துவிட்டு தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கோபமாக கிளம்ப ஆயத்தமானவளை கண்ட ஆதன்...

“நந்தினிம்மா... நந்தினிம்மா” என்று கூவ...

“நந்து...” என்று ஒரே தாவில் விக்ரம் அவள் கரத்தை தாங்கி பிடித்துக் கொண்டான்.

“ஏய் நந்து சும்மா விளையாட்டுக்கு தானே பண்ணிணோம் இதுக்கு போய் கோபப்படுற?”

“விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா ஒரு நிமிஷம் என் இதய துடிப்பே நின்னு போச்சு”

“இந்த ஐடியா கொடுத்தது உன் மகன் தான் அவனை கேளு” என்று மகனை மாட்டிவிட்டால் தான் அவளின் கோபத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற யுக்தியை பயன்படுத்தியிருந்தான்... தந்தையின் திட்டத்தை அறியாஹ்ட ஆதனோ நந்தினியிடம் மாட்டிக் கொண்டதில் திருதிருவென்று விழிக்க, நந்தினி ஒற்றை புருவம் உயர்த்தி அவனை கண்டிப்புடன் பார்த்தாள்.

“இதெல்லாம் உன் வேலையாடா?” என்று மிரட்ட அவனோ மிரண்டு விழித்தவன்...

“ங்னா அப்பாக்கூத தான் விளையாண்தேன் நந்தினிமா” என்று மழலையில் மிழற்ற இருவரையும் மாறி மாறி முறைத்தவள், அவர்களின் மிரண்ட விழி பார்வையில் சிரிப்பை கட்டுப்படுத்த இயலாது “ஹாஹாஹா” என்று கலகலத்து சிரித்துவிட்டிருந்தாள்.

“சரி கண்ணம்மா ம்மா எங்கே?” என்று ஆதனிடம் விசாரிக்க...

“கண்ணம்மா கோவிலுக்கு போயிருக்காங்க வர நேரம் தான்” என்று விக்ரம் அவளிடம் கூறியவன் பேசிக் கொண்டே அவளுக்கு தேநீர் தயாரித்து எடுத்தும் வந்திருந்தான்.

“இதையெல்லாம் ஏன் விக்ரம் நீங்க செய்யுறீங்க? என்கிட்டே சொன்னேனா நான் செய்யமாட்டேனா”

“எல்லாம் நான் உன் கழுத்தில் தாலி கட்டி இந்த வீட்டுக்கு வர வரைக்கும் தான், அதுக்கப்புறம் அய்யாவுக்கு சகல பணிவிடைகளையும் அம்மையார் தான் பார்க்கணும்” என்று இமைசிமிட்டி கூற வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

கண்ணம்மாவும் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்திருக்க... “அடடே நந்தினிமா வா வா” என்று அழைத்தார்.

நந்தினியும் பதிலுக்கு நலம் விசாரித்துவிட்டு ஆதனுடன் சிறிது நேரம் செலவழித்துவிட்டிருந்தாள்... நந்தினி விக்ரமிடம் பேச வேண்டும் என்பதை உணர்த்தியதும் ஆதனை கண்ணம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு மாடிக்கு அழைத்து சென்றவன் அவன் அன்னையின் அறையை காட்டி அங்கிருந்த பால்கனிக்கு அழைத்துச் சென்றான்.

“ஏன் விக்ரம் இங்கே கூட்டிட்டு வந்தீங்க?”

“என் ரூம் பால்கனியில் இருந்து பார்த்தா ரம்யா வீட்டு மாடி போர்ஷன் நல்லா தெரியும், சப்போஸ் அவங்க அம்மா பார்த்துட்டா உனக்கு தான் பிரச்சனை” என்ற உண்மையில் அவன் முனெச்சரிக்கை நடவடிக்கை எண்ணி மாட்சிமையுடன் நோக்கினாள்.

“ஆமாம் நேத்து உன் பிரெண்ட்ஸ் பேசினாங்க போல?” என்று விசாரித்தவனை யோசனையாக பார்க்க...

“நீ இந்த தெருமுனையை தாண்டுற வரைக்கும் நான் மாடியில் நின்னு பார்ப்பேன், அப்படித்தான் நேத்தும் பார்த்தேன்”

“ம்ம்... ஆமாம் பேசினாங்கன்னு சொல்லுறதை விட என்னை தாளிச்சாங்க” என்றதும் அங்கே சில கணங்கள் மௌனம் நிலவியது.

“என்னுடைய முடிவுக்கு எல்லாரும் எதிர்ப்பு தான் தெரிவிப்பங்கன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சிருந்தாலும் கூட, படிச்ச என்னுடைய நெருக்கமான பிரெண்ட்ஸ் கூட எதிர்ப்பாங்கன்னு நேற்று தான் தெரிஞ்சுகிட்டேன் விக்ரம்”

“...................”

“நானும் அவங்ககிட்டே எவ்வளவோ எடுத்து சொல்ல முயற்சித்தேன் விக்ரம்... ஆனால் அவங்க என்னை கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே முயற்சிக்கலை” என்றவள் கதனம் தாங்க முடியாமல் அவன் மார்பில் சாய்ந்து துக்கத்தை ஆற்றலானாள்.

அவன் மார்பில் ஆண்மைக்கே உரித்தான வாசம் அவளின் பெண்மையை வசீகரித்து அவளின் வியாகூலத்தை அடியோடு துடைத்தெறிந்து கொண்டிருந்தது தான் விந்தையிலும் விந்தை!

அவள் அவன் மார்பில் ஆறுதல் தேடிய விதம் அவனை நெகிழ்வில் உறைய வைத்தது... திருமணம் எனும் இல்லற வாழ்வில் தன்னவளிடம் எதிர்பார்த்த அந்த உணர்வுகள், அவன் ஊரறிய நிச்சயித்து சுற்றம் முற்றம் சூழ கைபிடித்து வந்த மனைவி அவனுக்கு அளிக்க தவறிய இனிமையான தருணங்களை, எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி தன் பரிசுத்தமான நேசத்துடன் அவனுக்கு பரிசாக அளித்துக் கொண்டு அவன் உயிரில் ஆழமாக பதிந்து ஆணிவேராக உருவாகியிருந்தாள் நந்தினி.

“நந்தினி ம்மா... நந்தினி ம்மா...” என்று அழைத்தபடி வந்த ஆதனின் அழைப்பில் சுதாரித்து விலக எத்தனிக்க, அவளை தன் பிடியில் நிறுத்திக் கொண்டவன் அவள் நெற்றியில் மென்மையாக அவனின் காந்த இதழ்களை ஒற்றி எடுத்த பிறகே தன் பிடியில் இருந்து விடுவித்திருந்தான். ஆதன் பார்வையில் படும் முன் அவசரமாக இருவரும் தங்களை சமன் செய்துக் கொண்டு இயல்பாக நின்றுக் கொண்டனர்.

“நந்தினிம்மா இதை எப்படி வரையறது?” என்று புத்தகத்தில் இருந்த படத்தை காட்டி வினவ, நந்தினியும் விக்ரமை விட்டு விலகி அவன் கேட்டதற்கு சிறிதும் சலிப்பில்லாமல் பொறுப்பாக பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

நந்தினி ஆதனை கையாளும் விதம், அவனின் கேள்விக்கு நிதானமாக பொறுமையாக பதிலளிப்பது, அவன் மேல் கொண்ட அக்கறை என பல விதமான அவளின் செய்கையில் விக்ரமுக்கே ஆதனை பெற்றவள் நந்தினி தானோ என்ற சந்தேகம் எழும்பியது... இதே வேறொரு பெண்ணாக இருந்திருந்தாள் விக்ரமுடன் சல்லாபிக்க இடைஞ்சலாக கருதி ஆதன் மேல் வெறுப்பை உமிழ்ந்திருப்பாள் என்று எண்ணியவனுக்கு நந்தினியின் மேல் நேசம் அதிகரித்தது.

இது பெண்மைக்கே உண்டான தாய்மையின் இயல்பான குணம் என்றாலும் கூட, ஆதனின் பின்புலம் யாரையும் தள்ளி நிறுத்தும் அபத்தமான கதையாக இருக்க, அவை அனைத்தும் துட்சமென கருதி அவனை அரவணைத்து கொண்டிருந்தவளின் அன்பில் விக்ரமின் சித்தம் நிறைந்துவிட்டிருந்தது.

அவர்கள் மூவரும் பார்க்கவே ஓர் குடும்பமாக இணைந்திருந்த அந்த தருணம் நிலைப்பெருமா? நீடிக்குமா... என்ற சந்தேகம் அவனுள் பிரளயத்தை கிளப்பியது.

‘ச்சே... இப்போ போய் ஏன் இந்த மாதிரி தோணுது’ என்ற அவன் உள்ளுணர்வின் எச்சரிக்கை தான் எதிர்காலத்தில் நிஜம் ஆகப் போவதை என்பதை அறிந்திருந்தால் அவன் அக்கணமே உயிரை மாய்த்திருப்பான்... ஆனால் விதியிடம் இருந்து தப்பிக்க அவன் ஆமானுஷ்யமோ, தெய்வமோ அல்லவே சாதாரண மனித பிறவி ஆயிற்றே!!

****************

நந்தினி அவளின் முதுகலை கல்லூரி படிப்பை முடித்திருந்தாள்... அதுவரை நாள் பார்த்து, கிழமை பார்த்து, அக்கம் பக்கம் பார்த்து விக்ரமுக்காக, விக்ரமின் வார்த்தைக்காக என பதுங்கி பதுங்கி அவனை சந்தித்து கொண்டிருந்தவளுக்கு அதிலிருந்து விடுதலை கிடைத்து விட்டதாக எண்ணியவள் அதை விக்ரமிடமும் பகிர்ந்து கொண்டாள்.

“இனிமே நாம சந்திக்க எந்த தடையும் இல்லை... நீங்களும் எனக்கு தடா போட முடியாதாக்கும்” என்று குஷியாக கூறியவளை அபிலாஷையுடன் பார்த்தவன்...

“சோ, உங்க வீட்டில் நான் பெண் கேட்க நேரம் வந்திருச்சுன்னு சொல்லுற?”

“ஆமாம் விக்ரம்... எனக்கு இப்போவே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க எனக்கு தெரியாமல் ரெண்டு மூணு இடத்தில் ஜாதகத்தை கொடுத்துட்டாங்க” என்று துடிப்புடன் ஆரம்பித்தவளின் குரல் முடிவில் உள்ளே சென்றுவிட்டதை கண்டு அவனுக்கும் அவளுடைய உணர்வுகள் தொற்றிக் கொண்டது. பக்கவாட்டிலிருந்து அவனை அணைத்து கொண்டவளின் சிரம் அவள் விலாவில் பதிந்திருக்க வலது கரம் அவன் கழுத்தை சுற்றிக் கொண்டிருந்தது.

‘இவளின் இந்த உரிமையும், அன்பும் எனக்கு வேண்டுமே... கடவுளே! என் நந்தினியை கைப்பிடிக்கும் வரத்தை மட்டும் எனக்கு கொடு வேறெதுவும் நான் உன்னிடம் கேட்கப் போவதில்லை’ என்று அவன் மானசீகமாக கடவுளிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தான்.

“விக்ரம் நம்ம கல்யாணம் நடந்திரும் தானே? யார் சம்மதித்தாலும் சம்மதிக்கலைனாலும் நீங்க என்னை கைவிடமாட்டீங்க தானே?” என்று நடுங்கும் குரலில் வினவியவளின் சொல்லில் அவன் மனதை சம்மட்டியால் அடிப்பது போல் இருக்க ஓர் நொடி துடித்தவன்.

“நான் விடமாட்டேன் நந்தினி... உன்னை விடமாட்டேன்! நம்ம கல்யாணத்துக்கு யார் குறுக்கே நின்றாலும் அவங்களை வெட்டி போடவும் தயங்கமாட்டேன்” கண்களில் தீப்பொறி பறக்க கூறியவனின் சொல்லை கேட்டு கொண்டிருந்த விதியோ... ‘நீதான் அவளை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று ஒதுக்கி வைக்க போகிறாய்... உங்கள் உறவுக்கு வில்லன் நீயாகவே இருக்கப் போகிறாய்’ என்ற விதி கெக்கலி கொட்டி சிரித்ததை அவனால் அறிய முடியாமல் போனது தான் அந்தோ பரிதாபம்!

“நாம நாளைக்கு திருச்சி மலைகோட்டை கோவிலுக்கு போயிட்டு வரலாம் நந்தினி”

“எதுக்கு?”

“உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணணும்... அதுக்கப்புறம் நீ உன் குடும்ப சூழ்நிலையை எப்படின்னு பார்த்து ஒரு நாளில் சொல்லு... நான் கண்ணம்மா ம்மா, செந்தில் அண்ணாவுடன் சேர்ந்து உன்னை பெண் கேட்டு உன் வீட்டுக்கு வரோம்” என்று இனம் புரியாத அச்சம் ஆட்கொண்டு அவளுக்கு படப்படவென்று அடித்துக் கொண்டது. அவள் கரங்களின் நடுக்கத்தை உணர்ந்து இறுக பிடித்துக் கொண்டவன்...

“என்னடா பயமா இருக்கா?” என்று பரிகாசமாக சிகையை கோதி வினவ..

‘ஆமாம்’ என்று மேலும் கீழும் தலையசைத்தவள்...

“பேசாமல் நாம மலைக்கோட்டையில் வச்சு நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாமா? அப்புறம் என்ன வந்தாலும் சரி நாம ஒண்ணா சேர்ந்து பார்த்துக்குவோம்” என்று நந்தினி கூறிய யோசனையை முற்றிலும் நிராகரித்தான்.

“இல்லை நந்துமா நான் தான் தாய், தந்தை இல்லாமல் ஒற்றை ஆளா நிற்கறேன்... உனக்கு இருந்தும் இல்லாமல் போக வேண்டாம். என்ன பிரச்சனை ஆனாலும் உங்க அம்மா, அப்பாகிட்டே பேசிட்டே அவங்க சம்மதத்தோடவே நாம கல்யாணம் பண்ணிக்குவோம்”

“ஆனால் எனக்கு என்னமோ உள் மனசில் ஏதோ ஒரு பயம் வந்து போய்கிட்டே விக்ரம்... ஒரு வேளை நீங்க எனக்கு இல்லைங்கிற சூழ்நிலை வந்திருச்சுன்னா நான் என் உயிரை விட்டிருவேன்” என்றதும் உள்ளம் நடுங்க ஆடிப்போனான்.

“பைத்தியம் இப்படி எல்லாம் பேசாதே அறைஞ்சு பல்லை கழட்டிருவேன் ஜாக்கிரதை” ஒருவித வேகத்துடன் கடிந்து கொண்டுவிட்டிருந்தான்.

“இங்கே பாரு நந்தினி என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ள தைரியத்தை தான் வளர்த்துக்கனுமே தவிர இப்படி முட்டாள்தனமா முடிவெடுக்கக்கூடாது... நாளைக்கு என்னுடன் வர நாம கோவிலுக்கு போகிறோம், அதுக்கப்புறம் அடுத்தகட்டத்துக்கு நாம அடியெடுத்து வைக்கிறோம்” என்றவர்கள் அடுத்ததினம் மலைகோட்டை உச்சி பிள்ளையார் ஆலயம் சென்றனர்.

ஆதனை விட்டுவிட்டு விக்ரம் வந்திருக்க... “ஏன் விக்ரம் ஆதனை விட்டுட்டு வந்தீங்க, குழந்தை பொக்குன்னு போயிருவான்” என்று அவனிடம் உரிமை சண்டையிட்டு போலியாக கோபித்து கொண்டாள்.

“உன்கூட தனியா நேரம் செலவழிக்கனும்ன்னு தான் அவனை விட்டுட்டு வந்தேன்” என்றவன் அவளுடன் ஏதேதோ பேசியபடியே மலையேறினர்.

அவர்களின் பேச்சுகள் அனைத்தும் திருமணத்திற்கு பிந்திய வாழ்வின் திட்டமாக இருந்ததில் நந்தினிக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி உண்டானது.

அவர்களின் சந்திப்பு மனதிற்கு மிகுந்த நிறைவை அளித்திருந்தது... “இப்படியே நான் உங்ககூட வந்திறவா?” என்று அவன் மேல் சாய்ந்துக் கொண்டு ஆசையாக கேட்டவளை அவள் சொல்படி செய்துவிட துடித்தாலும் சில கட்டுபாடுகள் அவனுக்கு தளைகள் இட்டு கட்டுபடுத்தியிருந்தன.

“என்னுடன் தான் நீ இருக்கப் போகிற அதில் எந்த மாற்றமும் இல்லை... ஆனால் உன் பெற்றவங்க சம்மத்தத்தோட என் மனைவியா நீ வரணும்” என்றழைத்துக் கொண்டு ஒரு புடவைக் கடையில் நிறுத்தியவனை கேள்வியாக பார்த்தவளிடம்...

“உனக்கு புடவை எடுத்து தரணும்ன்னு யோசிச்சுட்டு இருந்தேன் அதுக்கு தான் வா” என்றதும் அவனுடன் சென்றாள்.

பட்டுப் புடவை பிரிவில் பல வண்ணங்களும் அவளின் கருத்தை கவர அதை அலசி ஆராய்ந்து ஒவ்வொரு புடவையாக நந்தினியின் மேல் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தான்...

“என்ன வச்சு கண்ணு வாங்காமல் என்னை மட்டுமே பார்த்துட்டு இருக்கிற? நீயும் புடவை செலக்ட் பண்ணு” என்றவனிடம்...

“அது தான் பார்த்து பார்த்து அலங்காரமா எனக்கே எனக்காக என் புருஷன் தேர்ந்தெடுத்துட்டு இருக்கிறாரே, அவரை விட நான் நல்லா செலக்ட் பண்ணிற போறேன், நீங்க பார்த்து எது எடுத்து கொடுத்தாலும் எனக்கு டபுள் ஒகே” என்றவளின் விருப்பத்திற்கு உடன்பட்டு தானே அவளுக்கு புடவையை தேர்வு செய்துவிட்டிருந்தான்.

இவர்களின் சந்திப்பையும், நெருக்கத்தையும் இருவிழிகள் அதிர்ச்சியும், கோபமும் என கலவையான உணர்ச்சிகளுடன் பார்த்துக் கொண்டிருந்ததை இருவருமே அறியவில்லை!!

**************************

வணக்கம் நட்பூக்களே...

“என்னுள்ளே எங்கோ ஏங்கும் ஜீவன்” கதையின் அத்தியாயம்-20 & 21 பதிந்துவிட்டேன்... வாரந்தோறும் மூன்று பதிவுகள் பதிவிடப்படும், படித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே!


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:


Telegram Channel Link:


நட்புடன்

காருராம்.
 
Status
Not open for further replies.
Top