All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "குறிஞ்சி நாடன்...!" கதையின் கருத்து திரி

Vidhushi

Active member
பெருங்கிளை-நாள்மலர் தத்தம் தலைவன்-தலைவிக்கான அன்பை வார்த்தைப்போராக வெளியிட்ட விதம் 👌

ஒரு விழாவில் ஆரம்பித்த கதை, இனி வரப்போகும் விழாவில் என்ன நேருமோ?

Interesting @RamyaRaj sis❤
 

Vidhushi

Active member
விழாக் கொண்டாட்டம், வழிபாட்டு முறைகளின் வர்ணனைகள்; மலைநாடனின் இடத்திலும் கொண்டாடப்பட்டதைக் குறிஞ்சி இங்கிருந்தே மனக்கண்ணிலும், புறக்கண்ணிலும் உணர்ந்த விதம் அழகு @RamyaRaj sis 👌❤

தீபத்தின் சுடர் மட்டுமல்ல, தன் குறிஞ்சியாளின் நம்பிக்கைச்சுடரும் அணை(யு)க்கும் முன்னே மலைநாடனின் வரவை உணர்த்தும் விதமாக 'சரட்... சரட்...' என சத்தம் தலைவியின் செவியை அடைகிறதோ?

Interesting epi.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலைநாடனின் குறிஞ்சியாளுக்கு இனி தன் தலைவனைக் கவனிக்கும் பணி அன்றி வேறு சிந்தை ஏது?

மலர்களாலேயே தன் பூவிளங்குறிஞ்சியாளை அலங்கரித்து, அன்றைய தன் மன விருப்பத்தைப் பூர்த்தி செய்த மலைநாடனின் நேசத்தைத் தன் வாழ்க்கை முழுமையும் பெற்று வாழ, தன் அகம் உரைத்த குறிஞ்சியாளின் மனோரதம் நிறைவேறும் நாள் என்றோ?

Interesting @RamyaRaj sis❤
ரொம்ப ரொம்ப நன்றி மா. நீங்க குடுக்குற கருத்து எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்வை கொடுக்கிறது😍😍😍😘 மனோரதம் விரைவில் நிறைவேறும் மா❤❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெருங்கிளை-நாள்மலர் தத்தம் தலைவன்-தலைவிக்கான அன்பை வார்த்தைப்போராக வெளியிட்ட விதம் 👌

ஒரு விழாவில் ஆரம்பித்த கதை, இனி வரப்போகும் விழாவில் என்ன நேருமோ?

Interesting @RamyaRaj sis❤
இனிதாகவே நிறைவுறும் மா.. கலக்கம் ஏதுமில்லை. மிக்க நன்றி மா💕❤😍😘
 

Vidhushi

Active member
தலைவி, தலைவனின் வருகையில் களிப்புற்றுப் போகும்முன்னே சார்தூலத்தின் வேட்டையினால், அவன் பிரியாவிடை அளிக்கத்தான் வந்தான் என்பதை உரைக்கும் முன் வேலின் கூர்மையினால், தானே அறிந்துகொள்ளும் குறிஞ்சியின் திறன் 👌

போருக்கான புறப்பாடு இங்கிருந்தே ஆரம்பமோ?கந்தர்வ திருமணமோ? இனி, தலைவியின் நிலை?

Interesting @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
மலைநாடன் உருவத்தைச் சுவரில் சித்திரம் எழுதியும், சிலை வடித்தும் தன் பிரிவுத்துயரை ஆற்றிக்கொள்கிறாளோ அவனின் குறிஞ்சியாள்❤

போரினால் ஏற்பட்ட தலைவனின் பிரிவு (பசலை) போதாதென்று, அயலார் குழுவின் பெண்ணோடு திருமணம் என்ற செய்தி(வதந்தி)யும் குறிஞ்சியாளின் நெஞ்சுரத்தை சோதிக்க வேண்டுமா?

இன்னும் எவ்வளவுதான் பிரிவைத் தாங்க வேண்டுமோ இந்நால்வரும்?

அருமை @RamyaRaj sis.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலைவி, தலைவனின் வருகையில் களிப்புற்றுப் போகும்முன்னே சார்தூலத்தின் வேட்டையினால், அவன் பிரியாவிடை அளிக்கத்தான் வந்தான் என்பதை உரைக்கும் முன் வேலின் கூர்மையினால், தானே அறிந்துகொள்ளும் குறிஞ்சியின் திறன் 👌

போருக்கான புறப்பாடு இங்கிருந்தே ஆரம்பமோ?கந்தர்வ திருமணமோ? இனி, தலைவியின் நிலை?

Interesting @RamyaRaj sis.
மிக்க நன்றி மா... தலைவனை பிரிந்த நிலை என்னவோ அதே தான் இங்கேயும் குறிஞ்சிக்கு.. பசலை முற்றும் முன்பே மலைநாடனை அனுப்பி வைத்து விடலாம்... :love::love::love:
 
Top