காலம்1
இந்த நடுநிசியில் தன் வீட்டின் காலிங் பெல் விடாமல் அடித்து கொண்டு இருந்ததை கேட்டு அவனுக்கு ரோம்பவே கோபம் வந்தது.அந்த கோபத்திலே கதவை திறந்தவன் ,
அங்கே பதற்றத்துடன் நின்று கொண்டு இருந்த டெலிவரி பாயை பார்த்ததும் ,தன் கோபத்தினை கட்டு படுத்தி கொண்டு
"என்ன வேண்டும்? என்று கேட்டான்",
"ஆகாஷ்".
அனால் அவனோ கதவை திறந்தவனை
"செத்தவன் உயிரோடு வந்தது போல் அவனை அதிர்ச்சியாக பார்த்து கொண்டு இருந்தான்".
ஏற்கனவே மனஉழைச்சலில் இருந்தவன்,தன்னை அதிர்ச்சியுடனே பார்த்து கொண்டு இருந்தவனை பார்த்து,தேவை இல்லாமல் அட்ரஸ் மாத்தி வந்து அடுத்தவங்க நிம்மதிய கெடுக்குரது என்று சொல்லி டப்.......என்று கதவை அடைத்தான் ஆகாஷ்.
கதவை அடைத்த சத்தத்தில் தன்னை மீட்டு கொண்டவனோ....இப்போது தன்னை தானே கேவலமாக திட்டி கொண்டு இருந்தான்.....இப்போது நேரம் வினாகுவதை உணர்ந்து மீண்டும் காலிங் பெல்லை அழுத்தினான்....'ஆனால் அந்த பக்கமோ இன்னும் கதவை திறக்காததால் ,
அவனுடைய இதயத் துடிப்பின் வேகம் மிகவும் அதிகரிக்க தொடங்கி அவன் வியர்வையில் நினைந்த நேரம் ...'
இப்போது பொறுமையாக கதவை திறந்தவன், கையை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து தீர்கமாக பார்த்தான்.
அந்த டெலிவரி பாயோ அதில் மயங்கினாலும்.... டக்கென்று...... வீட்டினுள்ளே புகுந்து கொண்டு,அவனை விட தீர்கமாக பார்த்து கதவை அடைத்து கொண்டு வாங்க, நான் உங்களிடம் பேசவேண்டும் என்றான் அலுத்தமாக அதே சமயம் தீர்மானமாக.
நோடி நேரத்தில் தன் வீட்டில் புகுந்து கொண்டு தன்னிடமே அதிகாரமாக பேசுபவனின் மேல் கோபம் வந்தாலும்... அதே நேரம் சந்தேகமாகவும் அவனை பார்த்தான்...எதற்கோ இருக்கட்டும் என்று கத்தியை கையில் எடுத்து கொண்டு கதவை அடைத்தான்....
தான் ஏதாவது செய்து விடுவேன் என்று முன்னேச்சரிக்கையுடன் கத்தியுடன் அமர்ந்து இருக்கும் அவனை பார்த்து...பாவமாக இருந்தது.
"அவன் இதுவரையில் அனுபவித்த துன்பமே போதும் என்று கடவுளிடம் மனதால் வேண்டி விட்டு",அவனிடம் பேச ஆரம்பித்தான்.
"மிஸ்டர் ஆகாஷ் நான் யாருனு உங்களுக்கு தெரியாது பட் நீங்க யாரு எப்படி பட்டவருனு எனக்கு தெரியும்" நீங்க இதுக்கு மேல எந்த துன்பமும் படகூடாது என்ற நோக்குடன் நான் சொல்லுவதை கேட்டு பாதுகாப்பாக இருங்க பிளிஸ்.... என்றான்.
அவன் கூறியதை பொறுமையுடன் கேட்டவன்,
சரி எனக்கு என்ன ஆபத்து வர போகுதுனு உனக்கு எப்படி தெரியும்?,ஏதாவது ஆதாரம் வைத்து இருக்கியா? என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்... ஆகாஷ்.
ஒரு கனத்த அமைதிக்கு பின் சொல்ல ஆரம்பித்தான் அவன்....
நான் எதிர் காலத்தில் இருந்து வந்து இருக்கேன்...என்று சொல்லி விட்டு ஆகாஷின் முகத்தை பார்க்க!
ஆகாஷோ ஏதோ காமேடியை கேட்டது போல் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தவன்,ஜஸ்ட் கெட் அவுட் அப் மை ஹவுஸ் இடியட்" என்று கோபத்தில் வீடே அதிரும் படி கத்தினான்.
அவன் கோபத்தில் உள்ளுக்குள் நடுங்கினாலும்.... வெளியே சார் உங்களுக்கு ஆதாரம் தானே வேனும் ,இந்தாங்க இது என்னோட மொபைல்.இதுல இன்டர்நெட்ல இருந்து சேவ் பன்ன உங்க விடியோஸ் இருக்கு நீங்களே பாருங்க... என்று கொடுத்தான்.
அதில் ஆகாஷ் இறந்ததை வைத்து கிளம்பிய காசிப்ஸ்,அவன் இறந்த உண்மையான காரணம் போன்ற கானோலிகளை கண்டவன்," மேலும் தான் யார் என்று யாருக்கும் தெரியாமல் வைத்திருந்த ரகசியம் மொத்தமும்...அந்த கானோலியில் இருந்ததை கண்டுஅதிர்ச்சியில் இருந்தான்!...இது பொய்யாக இருக்க வாய்ப்பேயில்லை என்று தனக்குள் கூறிக்கொண்டவன்!அந்த செல்போனில் செமித்து வைத்த கானோலிகளின் தேதியும் நேரத்தையும் பார்த்தால்.... இது ஒரு மாதத்திற்குள் நடந்தது எனக் காட்டி கொண்டு இருந்து.(அதாவது நாளையிள் இருந்து நடக்க இருப்பதை காட்டி கொண்டு இருந்தது).
இப்போது தன் எதிரில் இருந்தவனை ஆராய்ச்சியாகவும் அதே சமயம் சற்று பயத்தோடும் பார்த்து கொண்டு இருந்தான் ஆகாஷ்.....