Jananiramakrishnan
ஜனனி ராமகிருஷ்ணன்
கலீபா
காலம் 9
ஒரு வழியாக கூட்டநெறிசலில் சுவாமி தரிசனம் பார்த்து வெளியே வந்த ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு நிம்மதி அவர்களையும் அறியாமல் குடிக்கொண்டு இருந்து.
ஆகாஷ் தன் தாயையும் தந்தையையும் தங்களுடைய காரில் அமரச் சொன்னவன், கார் பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த அஞ்சலி மற்றும் ஜீவாவுடன் பேசிக்கொண்டு இருந்த வைஷ்ணவியை நோக்கி சென்றான்.
ஹாய் bro.... என்று ஜீவா அங்கு வந்து கொண்டிருந்த ஆகாஷை நோக்கி கையை அசைக்க.....
அதனை கண்டுக்கொல்லாத ஆகாஷ் என்னாச்சு வைஷு? எதற்கு இவங்க இரண்டு பேரும் இங்கே நிற்கிறாங்க! சென்னைக்கு தானே போகப்போறதா சொன்னாங்க! வாட் பிராப்லம்? என்று வைஷ்ணவியிடம் கேட்டவன், கேள்வியாக அஞ்சலியை நோக்க!
மலையை விட்டு கிழே இறங்கியவுடன் சென்னைக்கு போகுறதா தான் பிளான் இருந்துச்சாம்,இப்போ பார்த்தா கார் பஞ்சர் ஆகிடிச்சாம் என்ன பண்ணுறதுனு தெரியாம நிற்குறாங்க ஆகாஷ் சார், என்றாள் வைஷ்ணவி கவலையுடன்.
சரி நம்ம வண்டியில் இப்போ ஏறச்சொல்லு,போகுறவழியில் நான் இவங்களுக்கு வேற வண்டி ஏற்பாடு பண்ணுகிறேன் என்ற ஆகாஷ் நிற்க...
வேண்டாம் ஆகாஷ் நீங்கள் இதுவரை செய்த உதவியே ரொம்ப பெரிசு,அதனால இதுக்கு மேல நான் பார்த்துகுறேன் என்று கூறிய ஜீவா, அங்கு இருந்த கல் மேடையில் அமர்ந்து தலையை பிடித்து யோசிக்க ஆரம்பித்து இருந்தான்.
ஜீவா கூறியதில் கோபம் அடைந்த ஆகாஷ்,யூ இடியட் நீ பெரிய இவனா டா....உன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கா, அதைக்கூட யோசிக்காம நீயே பார்த்திப்பியா! எப்படி பார்த்துப்ப?ஒழுங்கா இரண்டு பேரும் வந்து வண்டியில் ஏறுங்க! என்றவன், இதுக்கு எல்லாத்துக்குமே காரணமான இவளை தான் முதலில் உதைக்கனும் என்று வைஷ்ணவியை பார்த்து சத்தமாக சொன்னவன் யாரையும் பார்க்காமல் வேகமாக காரை நோக்கி சென்றான்.
நான் என்னத்த பண்ணேன்!என்னையை கோபமாக கத்திட்டு போறான் பன்னி என்று கண்ணையையும் உதட்டையும் சுழித்து வைஷ்ணவி திட்டியவள், அவர்கள் இருவரையும் முறைத்து பார்த்தாள்.
நீ எதுக்கு எங்களை முறைச்சு பார்க்குற வைஷு.... நாங்கள் என்ன பண்ணோம்! என்று அப்பாவியான முகப்பாவத்துடன் ஜீவா கேட்க!
டேய் நாயே உன்னோட அப்பாவியான முகத்தை பார்த்து போனாப் போகுதேன்னு உன்னை இவக் கூட சேர்த்து வைக்க கூட்டிட்டு வந்ததுனாலே இந்த அல்ஷேஷன் நாய்லாம் என்ன கத்திட்டு போகுது... என்று கோபமாக தொடங்கியவள் சோகமாக முடிக்க...
காரில் அமர்ந்த ஆகாஷ் காரின் ஹாரனை விடாமல் அடித்து கொண்டே இருக்க.....
இதோ ஹாரன் அடிச்சுட்டே இருக்குறான் பாரு வாங்க போயுடலாம் இல்லைனா கடிச்சு கிடிச்சு வெச்சுட போறான் என்ற வைஷ்ணவி இவர்களை இழுத்து கொண்டு காரை நோக்கி நடந்தாள்.
@@@@@@@@@@
தனதறையில் நிலா தேவியுடன் டிவி பார்த்துக் கொண்டு இருந்த வைஷ்ணவி....... ஆனாலும் இந்த ஜீவாவோட லவ்வர் அஞ்சலி இப்படி அநியாயமா இறந்து போய் இருக்க கூடாது நிலா அக்கா....
ம்ம்ம்ம்ம்........
கேட்ட எனக்கே இப்படி வலிக்குதுனா......காதலிச்ச ஜீவாவுக்கு எப்படி வலிச்சுருக்கும்.......
அதனால நாம என்ன செய்ய முடியும் வைஷு? அந்த பெண்ணோட விதி அவ்வளவு தான் விடு!இனி உன்னோட வாழ்க்கை ஜீவாக்கூட தான் , அதனால நீ அவனை நல்லாப் பார்த்துக்கோ என்ற நிலா தேவி டி.வியை பார்க்க ஆரம்பிக்க...
என் செல்ல அக்கால நீ! உன்னால மட்டும் தான் இதை எல்லாத்தையும் மாத்த முடியும் நீ மாத்தேன்.... என்றாள் வைஷு.
இல்லை வைஷு நான் உனக்காக காலத்தை மாத்துனா!உன்னை சுற்றி இருக்குற எல்லாரோட வாழ்க்கையும் மாறும்! அப்படியே மாறினாலும் அது சந்தோஷமாக இருந்தால் சரி,அதுவே கண்ணீராகா மாறினால்!அந்த ஆதி சக்தி தாயே என்னை மன்னிக்க மாட்டார்கள்,என்று கண்ணை மூடிக்கொண்டு கூறினாள் நிலா தேவி.
எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை நிலா அக்கா....... வைஷ்ணவி
அப்படி என்றால் நீ உனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று கூறிவிடு"நிலா தேவி".
பச்..... ஜீவாகிட்ட சரி சொல்லிட்டேன் அப்பா, அம்மா, பாட்டி,தாத்தா,அண்ணா எல்லாருக்கும் பிடிச்சு இருக்கு நான் என்ன பன்னுறது என்று சோகமாக புலம்பிய வைஷு டிவியில் ஓடிக்கொண்டு இருந்த நீயூஸை அதிர்வுடன் பார்த்து கொண்டு இருந்தாள்.
@@@@@@@@@@@@@
அந்த மலைச் சாலையில் தன்னோட காரை வேகமாக ஓட்டிக் கொண்டே அலைபேசியில் வேறொருவருக்கு பல கட்டளைகளை இட்டுக் கொண்டே வந்தான் ஆகாஷ்.
தீடீரென கார் வேகம் எடுக்கவும் தன்னுடைய தூக்கத்தை கலைத்த வைஷ்ணவி என்னவென்று ஆகாஷை கேட்க....
அவனோ தங்களுக்கு பின்னாடி தொடர்ந்து வரும் இரண்டு கார்களை கண்களால் காட்டியவன் , இன்னும் அதிக வேகமாக காரை ஓட்டினான்.
பையா.... முன்னைவிட அந்த கார் இன்னும் வேகமாக போகுதே,நாம அவங்களை பின் தொடர்ந்து வரது அவங்களுக்கு தெரிஞ்சு இருக்குமோ! அதான் அவங்க இன்னும் வேகமாக போறாங்களோ"என்று அந்த அடியாள் கேட்க!
ம்ம்ம்ம்ம் ஆமாம் டா அப்படி தான் இருக்கும்,அதனால அந்த காரையே துக்கிடலாம் என்றவன் அந்த காரை மலையில் இருந்து கிழே தள்ளிவிட தங்களுடைய காரை அவர்களை நோக்கி வேகமாக செலுத்தினர்.
டேய் ஆகாஷ் எதுக்கு இப்படி கார வேகமாக ஓட்டுர மெதுவா போட என்றார் ரவிந்தர்.
அதே நேரம் தங்கள் காரை சடனாக நிப்பாற்றிய ஆகாஷ் அனைவரையும் இறங்கச் சொல்லியவன் , அங்கு வந்த வேறோரு காரில் அவர்கள் அனைவரையும் அமரச் சொன்னவன்,தன்னை ஏறிட்ட அன்னையை ஒன்றும் இல்லை என்று கண்களால் சமாதனம் செய்தவன், அவர்களை அங்கிருந்து கிளப்பினான்.
அவனுக்கு ஏதோ நடக்க கூடாத ஒன்று நடக்க போவது போல் தொன்றிக்கொண்டே இருக்க....அதே நேரம் தங்களை பின் தொடர்ந்து வந்த கார்களை பார்த்தவன்,ஏதோ சரியில்லை என்பதை கூற.... இதனால் தன்னவர்களுக்கு எதுவும் ஆகக் கூடாது என்பதால், அவர்களை முதலில் இங்கிருந்து அப்புறபடுத்தினான்.
ஆனால் அவர்களுடன் வைஷ்ணவி போகாமல் தன்னுடனே இருந்தது ஆகாஷிற்கு ஆறுதல் அளித்தாலும்....எங்கே அவளுக்கும் எதாவது துன்பம் நேர்ந்து விடுமோ என்று அவன் மனம் பரிதவிக்க..."ஏய் ஏண்டி அவங்க கூட போகலை என்று அவன் கூறி கொண்டு இருக்கும் வேலையில்"....
சட்டென்று ஆகாஷை இழுத்து கொண்டு அந்த பக்கம் போய் விழுந்த வைஷ்ணவி,"இதுக்காக தான் நான் போகலை என்றவள் அவனை பார்க்க"!
அதே நேரம் அந்த இடத்திற்கு வந்த வேறோரு படையினர் அந்த ரௌடிகள் வந்த காரினை தங்களது தோட்டாக்களாள் துவம்சம் செய்ய ஆரம்பிமித்திருந்தனர்....
தன்னுடைய ஜீப்பை விட்டிறங்கிய கௌரவ் கபூர் ஆகாஷை நோக்கி வந்தவன் அவன் மண்டையில் பிஸ்டலை வைத்து, எங்கடா என்னோட மச்சானும் தங்கச்சியும் என்று ஆகாஷை பார்த்து கேட்க.....
என்னது உன்னோட தங்கச்சி யா?.... என்னடா சொல்லுற!இதோ என் பக்கத்தில் இருக்காளே இவ தான் உன்னோட தங்கச்சியா என்று வைஷ்ணவியை சுட்டி க் காட்டி கேட்டான் ஆகாஷ்!
டேய் நான் என் தங்கச்சி அஞ்சலிய கேட்டேன் என்று கௌரவ் கத்த.....
என்னது அஞ்சலி உன்னோட தங்கச்சியா என்று ஆகாஷ் அதிர்ச்சியாக கேட்டவன், வைஷ்ணவியை முறைக்க!
வைஷ்ணவியோ முகத்தை அப்பாவியாக வைத்தவள் ஆமாம் என்று ஆகாஷிற்கு சொல்ல....
அடிக் கொலைகாரி என்ன எப்படி எல்லாம் போட்டு தள்ளுரதுக்கு பிளான் போட்டுருக்கா என்று மனதிற்குள் நினைத்தவன் கௌரவை பார்க்க....அவனோ கொலை வெறியில் அவனை போட்டு தள்ள நிற்க.......
அதே நேரம் இவர்கள் மூவரையும் பல காலங்களில் தேடிக் களைத்தவள், இவர்களை கண்டு விட்ட மகிழ்ச்சியில் நோடி நேரமும் தாமதிக்காது.... தன்னுடைய சக்தியால் நிலச்சரிவை உண்டாக்கியவள், அவர்கள் மூவரும் உயிரை விடுவதை சந்தோஷத்துடன் பார்த்தவள் அந்த மலையே அதிரச் சிரித்தாள் "கலீபா".
Last edited: