“RS CONSTRUCTIONS”, என்ற பெயர்த் தாங்கிய பலகையைக் கொண்டிருந்த அவர்களுடைய அலுவலகம் சில ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாகவே விரிந்திருந்தது.
அங்கு, பூஜா தன் காரை நிறுத்தியதும், ரீனா,”அடேங்கப்பா, எவ்ளோ பெரிய்ய ஆஃபிஸ்”என்று வியக்க,
பூஜா தன் தலையை வெளியே நீட்டி அங்கு நின்ற வாயிற்காவலனிடம், "காரை உள்ளே பார்க் பண்ணலாமா?", என்றுக் கேட்டாள்.
உடனே, அந்தக் காவலன் வாகனத்தினுள் இருந்த மூவரையும் உற்றுப் பார்த்துவிட்டு, "அப்பாய்ண்ட்மெண்ட் இருக்குதா?" என்று வினவினார்.
பூஜா,"அப்பாய்ண்ட்மெண்ட் இல்லை, பட் அஜய் சாரைப் பார்க்கனும், சார் தான் இண்டர்வியூவிற்கு வர சொல்லி இருந்தாங்க", என்றாள்.
காவலன் தன் இடைச்செய்தித்தொடர்பின் (இண்டர்காம்) மூலம் அஜய்க்கு தகவல் சொல்லி உத்தரவு கிடைத்ததும், அந்த பெரிய கதவை ஒரு வணக்கத்துடன் வாயிற்காவலன் திறந்து விட,பூஜாவின் கார் வழுக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தது. வரவேற்பறைக்கு வந்த மூவரையும் வரவேற்றது அஜய் மற்றும் ஷ்யாமின் தனிப்பட்ட உதவியாளர் ஸ்ரீராம்.
பூஜா,"இண்டர்வியூக்கு வந்திருக்கோம்", என்றுக் கூற,
ஸ்ரீ,"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க", என்று கூறிவிட்டு அங்குள்ள பணியாளரை அழைத்து அவர்களுக்கு குளிர்பானம் வழங்குமாறு பணித்துவிட்டு அஜய்யின் அறைக்குச் சென்றான்.
ரீனா,"என்னங்கடா இது? இண்டர்வியூக்கு வந்ததுக்கே ஜூஸா? அப்போ, நல்ல கம்பெனியா தான் இருக்கும்.எப்படியாவது இங்கேயே வேலைக் கிடைச்சிடனும்பா", என்று அவசரக் கோரிக்கை விடுத்தாள் ஆண்டவருக்கு....!
பூஜா,"என்ன மிது, எதுவுமே பேசாம இருக்க. இண்டர்வியூ டென்சனா?" என்றுக் கேட்டாள்.
மிது,"அதெல்லாம் ஒண்ணுமில்லடி, இன்னேரம் சானு அம்மாவையும் அண்ணாவையும் ஒரு வழி ஆக்கிருப்பாளேனு நினைச்சேன்", என்றதும்,
ரீனா, "ஆமாப்பா, அவ இல்லாம ஒரு மாதிரியா தான் இருக்கு. இது இண்டர்வியூ தான பார்க்கலாம்" என்று கூறினாள்.
சரியாக அந்நேரம் மூவரது அலைபேசிகளுக்கும் கட்செவி அஞ்சல் குழுமத்தில் (வாட்ஸ்அப் குரூப்) செய்தி வந்ததற்கான அறிவிப்பு நாதம் இசைத்தது.
மூவரும் தங்களுக்குள் சிறுப் புன்னகையை பரிமாறிக்கொண்டே சஹானா அனுப்பிய, "மொபைலை சைலண்ட்டில் போட்டுட்டு உள்ளே போங்கடி. இதை சொல்லத்தான் மெஸ்ஸேஜ் பன்னுனேன். சரி நீங்க போய் இண்டர்வியூ அட்டண்ட் பன்னுங்க. நான் போய் என் தூக்கத்தைக் கண்டினியூ பன்றேன். ஆல் தி பெஸ்ட்!" என்று சில பல முகவடிக்களுடன் (எமோஜி) முடித்திருந்த செய்தியை படித்து சிறு நகையுடன் நிமிர்ந்தனர்.
அப்போது ஸ்ரீ வந்து அவர்களை உள்ளே அழைப்பதாகக் கூறியதும்,வேறு எதை பற்றியும் யோசிக்காமல் (எம்.டி) அறையில் அனுமதிப் பெற்று உள்ளே சென்றனர்.
அங்கே சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த ஆண்கள் மூவரையும் பார்த்ததும், உள்ளே சென்றப் பெண்கள் மூவருக்கும் ஆச்சார்யமும், ஒரு வித மகிழ்ச்சியும், பதட்டமும் ஒருசேரத் தோன்றியது.ஏனென்றால் அங்கு அஜய் மற்றும் ஷ்யாமுடன் மூன்றாமவராய் அமர்ந்திருந்தது கார்த்திக்....!
கார்திக்கைப் பார்த்ததும் மூவருக்கும் மூன்று விதமான எண்ணங்கள்.
ரீனாவிற்கு,'அப்பாடா கார்த்தி அண்ணா இருக்காங்க. சோ, ஜாப் கன்ஃபார்ம்' என்று மகிழ,
பூஜாவோ,'கார்த்தி அண்ணாக்கு இவங்க இவ்ளோ க்ளோஸா?' என்று வியக்க,
மிதுனாவிற்கோ,'கார்த்தி அண்ணா முன்னாடி சொதப்பிடக் கூடாதே', என்ற பதட்டம் தோன்றியது.
முதலில் சுதாரித்த ரீனா,”குட் மார்னிங் சார்’ஸ்”, என்று தன் வழக்கமான பணியை கையில் எடுக்க அதைத் தொடர்ந்த பூஜாவும் மிதுனாவும் கூட காலை வணக்கத்தை ஒரு சிறு புன்னகையுடன் நிறுத்திக் கொள்ள,
ரீனாவோ, ”ஹாய் அண்ணா, நீங்க வர்றேன்னு சொல்லவே இல்லை”, என்று தன் தோழிகள் இருவருடைய முறைப்பையும் சம்பாதித்தாள்.
கார்த்திக்கும் ஒரு சிறு புன்னகையுடன் நிறுத்திக்கொண்டான்.
பூஜாவோ, ”பக்கி, நாம இண்டர்வியூக்கு வந்திருக்கோம்டி, மானத்தை வாங்காதே”, என்று அடிகுரலில் எச்சாரித்தாள்.
அஜய், ”வெல்கம்....அண்ட் டேக் யுவர் சீட்..”, என்று பெண்களைப் பார்த்துக் கைக்காட்டியவன், ஷ்யாமிடம் திரும்பி, ”டேய்,என்னடா ஆச்சு உனக்கு?”, என்று அவன் தோளைத் தட்ட மறக்கவில்லை.
அறைக்குள் நுழைந்தப் பெண்களைக் கண்டதும் ஒரு நொடி வியந்த ஷ்யாம், அதிலும் குறிப்பாக, அந்த வானநீல நிறத்தில் அனார்கலி சுடிதார் அணிந்து அதற்கு ஏற்ற சின்ன சின்ன நகையணிந்து, வானத்து தேவதையோ என்று எண்ணும் அளவிற்கு இருந்த மிதுனாவைப் பார்த்ததும் மெய் மறந்துப் பார்த்திருந்தான், இதை அந்தப் பெண்கள் கவனிக்கும் முன் சுதாரித்த அஜய் அவனை நடப்பிற்கு மீட்டினான்.
அஜய், ”வெல்... யுவர் சர்டிஃபிகேட்ஸ்..”, என்று கேட்க, பூஜா தனதுச் சான்றிதழ்கள் அடங்கியக் கோப்புகளை அஜய்யிடம் கொடுத்தாள். அதனைப் பார்த்ததும் அவன் முகத்தில் ஒரு திருப்தி நிலவியது, அவன் பார்த்ததும் ஷ்யாமிடம் தர அவனும் பார்த்துவிட்டு கார்த்திக்கிடம் கொடுத்தான்.
கார்த்தி ‘தன்னிடம் ஏன்’ என்றவாறு புருவம் உயர்த்த அஜய், ” பாத்துச் சொல்லு”, என்று முடித்துவிட்டான்.
மூன்று பேரின் மதிப்பெண்கள், கூடுதல் பாடதிட்ட சான்றிதழ்கள் அனைத்தையும் பார்வையிட்ட இருவர் முகத்திலும் ஒரு திருப்தி நிலவியது. கார்த்திக் இதனை எல்லாம் தன் தங்கையின் மூலம் பார்த்திருந்ததால் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை.
ஷ்யாம், “ஃப்ரெஸ்ஸர்ஸ் (Freshers), சோ, அனுபவம் இருக்காது பட், இதற்கு முன்னாடி எதாவது ப்ராஜெக்ட் பண்ணிருக்கீங்களா?”,என்று கேட்க,
மிதுனா அவனை நேரே பார்த்து, “இது எங்களோட ஃப்னல் இயர் ப்ராஜெக்ட் சார். பட், குரூப் ப்ராஜெக்ட் தான்”, என்று ஒரு விரலியை (Pen drive) அவனிடம் கொடுத்தாள்.
அதனை தன் மடிக்கணினியில் பொருத்தி பார்வையிட, அந்தக் கோப்பு விரிகையில் அதன் முகப்புப் பக்கத்தில், குழுவில் உள்ள நால்வரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்ததும் அஜய்யின் உதடுகள் தானாகவே அந்த ராகத்தை முணுமுணுத்தது ”சஹானா.....” என்று….!
அதைப் பெண்கள் மூவரும் கவனிக்கவில்லையெனினும், அவனின் இரு பக்கத்திலும் இருந்த தன் நண்பர்கள் இருவரும் கவனித்துவிட்டனர். ஆனால் அதையெல்லாம் அவன் கண்டுகொள்ளாமல் கோப்பில் கவனத்தை செலுத்தினான். அவர்களுடைய அந்த சிறு செயல்திட்டம் கூட அஜய்யை வெகுவாகக் கவர்ந்தது என்றால், ஷ்யாம் ஒரு படி மேலே சென்று வெளிப்படையாகவேப் பாராட்டினான்.
பணி நிமித்தமானக் கேள்விகள் முடிந்து, ஆளுமைத்திறமையைச் சோதிக்கும் தனிப்பட்ட நேர்க்காணல் சுற்று வரவே ரீனாவினால் மூச்சு விட முடிந்தது.
அவர்களின் பொழுதுப்போக்குப் பற்றிக் கேட்கப்பட, அவர்கள் கூறிய பதில் அனைத்தும் குழுத் தொடர்புடையதாகவே இருந்தது, அது ஏனோ அஜய்க்கு காலையில் யாழினி கூறியதை நினைவுப்படுத்த அந்தக்கேள்வியைக் கேட்டான்.
“டெல் சம்திங் அபௌட் யுவர் சானு & கோ”, என்று கேட்க, அவனது அந்தக் கேள்வியில் அங்கிருந்த ஐவருமே அதிர்ந்து அவனை நோக்கினர்.
பூஜா,"ச..சார் என்னக் கேட்டீங்க?", தன் காதில் சரியாக தான் கேட்டதா என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் கேட்டாள்.
அஜய் மிகத் தெளிவாக," உங்களது சானு&கோ பற்றிச் சொல்லுங்க” என்றுக் கேட்க,
மிதுனா,"சார் அது எங்க ஃப்ரெண்ட்ஸ் குரூப், காலேஜ்ல கல்ச்சுரலஸ் ப்ரோக்ராம்காக எங்க டீமிற்கு நாங்க வச்ச நேம்" என்றாள்.
ரீனா,"எங்க 4 பேரோட பெயரும் அதில் இருக்கும்" என்றாள்.
ஷ்யாம்,"யாரந்த நாலாமானவர்?" என்று மிதுனாவிடம் கேட்க,
ரீனா, "அது வேற யாருமில்லை, கார்த்தி அண்ணாவோட தங்கச்சி சஹானா தான், அண்ட் சார், ஒரு திருத்தம். அவ நாலாமானவர் இல்லை. அவளும் எங்க குரூப்பில் ஒருத்தி, இங்க முதல், கடைசினு யாருமே இல்லை" என்றாள் ஒருத் தீவிரத்துடன்.
ஷ்யாம் மேற்க்கொண்டு ஏதோ கேட்க வர, அதனைத் தடுத்த அஜய் அவர்களது வேலையை உறுதி செய்து, சம்பளவிகிதம் பற்றியும், வேலைக்கான பயிற்சிப் பற்றியும் கலந்தாலோசித்து விட்டு, மகிழ்வுடன் வேலை நியமன உத்தரவுடன் விடைபெற்றனர் மூவரும்.
பெண்கள் சென்றதும் அஜய், "தென் கார்த்தி, உன் சிஸ்டரை எந்த கம்பெனிக்கு அனுப்பப்போற?" என்று கேட்டான்.
கார்த்தி,"எங்கேயும் அனுப்பலடா", என்று சலித்துக் கொள்ள,
ஷ்யாம்,"அப்போ எதுக்குடா பி.ஆர்க் படிக்க வச்சீங்க?" என்றான்.
கார்த்தி, "டேய், உங்களுக்கு எங்க வீட்டு நிலைமை நல்லாவே தெரியும். அவ ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக தான் அவளை பி.ஆர்க் படிக்கவச்சோம். இப்போ இவங்களோட வேலைக்கு வரனும்னு ஒரே அடம், அவங்க அப்பா சம்மதிக்கமாட்டாங்கடா. அதையும் மீறி நான் அனுப்புறது எனக்கு சரினு படலடா," என்று வருந்தினான்.
அஜய்,"அப்புறம் உன் தங்கச்சிக்கு மேரேஜ் பண்ணி வைக்கப் போறீங்களா?", என்று கேட்டான்.
கார்த்தி,"இல்லடா, அது பத்திப் பேச்சு இன்னும் வீட்டில் வரல. ஒருவேளை அவர் நினைச்சிருக்கலாம்" என்க,
அஜய்,”தென், ஆன்ட்டி கிட்ட சொல்லி நல்லா சமைக்கக் கத்துக்க சொல்லு! அதுவாவது யாருக்காவது உதவும்" என்றான் நக்கலாக.
கார்த்தி, "அதலாம் அவ சும்மாவே செய்வாடா. பட் இதுக்காகவா அவ்வளவு ரிஸ்க் எடுத்து அவளை பி.ஆர்க் சேர்த்தோம்?" என்று வருத்தப்பட,
அஜய்,"அதுதான் நானும் கேட்கிறேன்" என்றான்.
கார்த்தி,"நான் அவளை அப்பாக்கு உதவியா கார்மெண்ட்ஸ்க்கு போக சொன்னேன்", என்றதும் அஜய் கோபத்தில்,"ஏன், அதை நீ செய்திருக்காலாமே?" என்று கேட்க,
கார்த்தி, "அது அவளோட அப்பா கம்பெனி டா. அவருக்கு அப்பறம் அவ தானே பார்த்துக்கனும்" என்றான்.
அஜய், "நீ என்ன லூஸா டா, நீ பேசுவது உனக்கு நல்லா இருக்கா? ஒரு பொண்ணு அதுவும், பி.ஆர்க் படிச்ச உன் தங்கச்சி அவரோட தொழிலைப் பார்த்துகணும்னு சொல்லுற, நான் பெண்களால முடியாதுனு சொல்ல வரல. சொல்லப்போனா, ஆண்களை விட பெண்களுக்குத் தான் பொறுமை, நுண்ணறிவு எல்லாமே கொஞ்சம் அதிகமா இருக்கும். ஆனா நீ, சொந்தத் தொழிலை விட்டுட்டு யாரோ ஒருத்தருக்கு கீழ் வேலை செய்யப்போறேனு சொல்ற? அந்த ஃபீல்டில் ஆர்வம் இருந்த நீயே அதை ஏற்றுக் கொள்ள முன்வராதப்போ, அந்த பொண்ணு, அதுவும் நாளைக்கு மேராஜாகி இன்னொரு வீட்டுக்கு போற அந்தப் பொண்ணு எப்படி கார்த்தி இதை ஏற்று செய்ய முன்வருவா..? சொல்லு", என்று அதிரடியாய் கேட்டான் அஜய்.
அவனுக்கு பதிலளிக்காமல் அமைதியாக இருந்த கார்த்தியின் தோளில் கை வைத்த அஜய், "டேய் கார்த்தி, இஃப் யூ டோண்ட் மைண்ட், உன் சிஸ்டரை என்கிட்ட அனுப்புறியா? நான் பார்த்துக்கிறேன்", என்றான் ஒரு ஆசானாக தொழிற்ப்பாடத்தைப் பயிற்றுவிக்கும் நோக்குடன். ஆனால்,தானே அவளுக்கு வாழ்வியல் பாடமும் கற்றுக் கொடுப்போம் என்பதை அஜய் அப்போது அறியவில்லை........!