நினைவு-4
அன்று புதன்கிழமை....
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில், கார்த்தி சஹானாவின் தலையை வருடியவாறே,
"சானுமா... போயிட்டு வர்றேன். 6 மாசம் தான்டா. சீக்கிரம் ஓடிடும், நல்ல சாப்பிடு, நல்ல எக்ஸாம் எழுது..." என்று சொல்லிக் கொண்டிருந்தவனைத் தடுத்த அவன் தாய்
"போதும்டா.. எத்தனை தடவை தான் சொல்லுவ? அதெல்லாம் அவ சரியா தான் செய்வா. நீ போற வேலையை வெற்றிகரமாக முடிச்சிட்டு வா.." என்றார் அவன் தாய் ரேனுகா. அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டவன், ஞாயிறு அன்று, கடற்கரையில் வைத்து தான் வெளிநாடு செல்லவிருப்பதைத் தெரிவித்த நிகழ்வை நினைவுக் கூர்ந்தான்.
அன்று மாலை தங்கையின் விருப்பப்படி, பல நாள்களுக்குப் பின் குடும்பமாக கடற்கரைக்குச் சென்றனர். பெசண்ட் நகர் கடற்கரை மணலில் கம்பளம் விரித்து நால்வரும் அமர்ந்து பேசியவாறேக் கொரித்துக் கொண்டிருக்க, சஹானாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி. அப்போது தான் கார்த்திக்,
"நான் ஒண்ணு சொல்லனும்.. நான் 3 வருஷமாக ட்ரை பண்ணின அமெரிக்கன் கம்பெனியில் இருந்து எனக்கு ஆஃபர் வந்திருக்கு. ஒரு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு" என்றதும் அனைவரும் மகிழ்ந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
கார்த்தி, "அ..அதுக்கு இப்போ... இப்போ நான் யூ.எஸ் போயாகனும். ஒரு 6 மாசத்துக்கு" என்றான் தயங்கியவாறே.
அங்கு நிலவிய சில நொடி அமைதியைத் தகர்த்துவிட்டு,
"என்னண்ணா நீ? இப்போ கார்மெண்ட்ஸ் விட்டுட்டு அப்பாவால எப்படி யூ.எஸ் வரமுடியும், அப்பா வராமல் அம்மாவும் வர மாட்டாங்க, எனக்கும் ஃபைனல் எக்ஸாம்ஸ் இருக்கு, ஒரு த்ரீ மந்த்ஸ் கழிச்சுன்னா ட்ரைப் பண்ணலாம்", என்றாள் அனைவரும் செல்லும் நோக்குடன். சஹானாவின் கூற்றின் நோக்கத்தை அறிந்த கார்த்திக், தான் அமெரிக்கா செல்லும் எண்ணத்தை வலுப்படுத்தினான்.
கார்த்திக்,"இல்லடா அம்மு, நான் மட்டும் தான் போறேன்" என்க,
சஹானா,"நோ அண்ணா.... போனால் நாலு பேரும் சேர்ந்து போகணும், இல்லன்னா போகக்கூடாது", என்று சொல்லிவிட்டு ‘அவ்வளவு தான் பேச்சு’ என்பது போல் தன் கையில் இருந்த முறுக்கில் கவனமானாள்.
இப்போது சஹானாவின் நோக்கம் தெளிவாகவே பெற்றோருக்கும் புரிய, கார்த்திக் அமெரிக்கா செல்வதனால் ஏற்படும் இந்த சிறு பிரிவும் அவளுக்கு அவசியம் என்று உணர்ந்தனர்.
கார்த்திக்,"சானுமா....அது.." என்று இழுக்க,
சஹானாவோ, "அம்மா, அந்த காஃபியை ஊத்து" என்றாள்.
கார்த்திக்,"அம்மு... நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்.." என்று கெஞ்ச,
சஹானா, "அப்பா, நீங்க கார்மெண்ட்ஸை ஒரு 6 மாசம் யார் பொறுப்பிலாவது விட முடியுமாப்பா?" என்க, அவரோ அதிர்ந்து விழித்தார்.
ரேணுகா,"சானு, இது என்ன ஆட்டோவா? காரா? வேறு ஆள்கிட்ட ஒப்படைத்துட்டு வர? அவன் போய்ட்டு வரட்டும். 6 மாசம் தானே?" என்றார்.
சஹானா, "என்னம்மா சொல்ற நீ? அண்ணாவைப் பார்க்காமல் என்னால இருக்க முடியாது. நீங்க ரெண்டு பேரும் வரலைன்னா பரவாயில்ல, நான் போறேன்... நான் எக்ஸாம்லாம் எழுதல, நான் வர்றேன்ண்ணா உன் கூட" என்றாள்.
இப்போது அதிர்ந்து விழிப்பது அனைவரின் முறையாயிற்று.
ரகுராம், "சானுமா, கொஞ்சம் பொறுமையா இருடா., அவன் ஏதோ சொல்ல வர்றான். சொல்லட்டும், அவன் கூட நீ மட்டும் தனியாக அங்க இருக்க முடியாதுமா", என்றார் பொறுமையாக.
கார்த்திக், "அம்மு, இப்போ 6 மாசமே இருக்கமுடியாதுன்னா, நாளைக்கு மேரேஜ் ஆகி எப்படிடா இன்னொரு வீட்டில் போயிருப்ப?" என்றான் ஒரு சிறு கண்டிப்புடன்.
சஹானாவும் முறுக்கை வாயில் போட்டவாறே, "சிம்பிள், வீட்டோட மாப்பிள்ளை பார்த்திருண்ணா...!" என்றதும் பெரியவர்கள் இருவருக்கும் ஒரு அதிர்ச்சி. கார்த்திக் ஓரளவிற்கு இந்த பதிலை எதிர்ப்பார்த்திருந்ததால் அதிர்ச்சியடையவில்லை.
கார்த்திக், "சரி தான் சானு. ஆனா, அதுவும் மேல ஒரு 2 இல்ல 3 வருஷத்திற்கு தானடா?" என்க,
சஹானா,"ஏன்.அது என்ன 2 இல்ல 3 வருஷம்?"என்று கேட்க,
கார்த்திக்,"ஆமா, அதுக்கப்பறம் நான் மேரேஜ் பண்ணனும்லா?" என்றான்.
சஹானா,"ஸோ, வாட்??"என்க,
கார்த்திக்,"அப்போ 3 வருஷத்தில் நானும் ஒரு பொண்ண மேரேஜ் பண்ணிக்கிட்டு இன்னொரு வீட்டிற்கு வாழப் போகனும்லாமா?" என்று கூற,
ரேணுகா ஏதோ கூறுவதற்கு வாயெடுக்க, ரகுராம் அவரை கையமர்த்தித் தடுத்தார்.
சஹானா, "என்னண்ணா பேசுற, நீ ஏன் இன்னொரு வீட்டிற்கு போகனும். உன்னைக் கட்டிக்கப்போற அண்ணி தான நம்ம வீட்டிற்கு வரனும்?" என்றாள் அதிபுத்திசாலியாக.
கார்த்திக், "அதெப்படி சானுமா. உன்ன கல்யாணம் செய்யப்போகிற பையனை மாதிரி தானே நானும் அவங்க வீட்டில் போய் இருக்கணும்?" என்றதில் பிற்பகுதியை மட்டும் கேட்டுக்கொண்டவள்,
"கல்யாணம் செய்துகிட்ட மாப்பிள்ளை நீ எப்படி அண்ணா பொண்ணு வீட்டிலே இருப்ப? அண்ணி தான் நம்ம வீட்டுக்கு வரனும்.." என்றாள்.
கார்த்திக், "உன்ன கல்யாணம் செய்துட்டு மாப்பிள்ளை நம்ம வீட்டில் வந்து இருக்குறப்போ, நான் ஏன் அந்தப் பெண் வீட்டில் போய் இருக்கக்கூடாது?” என்று நெத்தியடியாய் கேட்க,
சஹானாவோ ‘இதற்கென்ன சொல்வது’ என்று விழிக்க,கார்த்திக்கே தொடர்ந்தான், "மேரேஜ்க்கு அப்பறம் நம்ம வீட்டிலே நீ இருக்கனும்னு நினைக்குற மாதிரி தானே அந்தப் பெண்ணும் நினைப்பாள்?"என்று.
சஹானா, "இப்போ எதுக்கு இந்த பேச்சு எல்லாம்?" என்று அவள் பேச்சை மாற்ற,
கார்த்திக்,"ஆணாய் இருந்தாலும் சரி, பெண்ணாய் இருந்தாலும் சரி, எங்கேயும் ஒரு சிறு பிரிவு இருக்கும் டா... ஆண்கள் நாங்கள் உழைப்பதற்காக... பெண்கள் நீங்கள் உறவுகளுக்காக...! சரி அம்மு, அதெல்லாம் நடக்குறப்போ பார்த்துக் கொள்ளலாம். இப்போ நான் யூ.எஸ் போகலாமா? வேண்டாமா? சொல்லு...” என்று தொடங்கிய இடத்திற்கே வந்தான்.
சஹானா அமைதியாய் இருக்க, ரேணுகா, “அவன் ஒண்ணும் அங்க செட்டில் ஆக போகலையேடி. ப்ராஜெக்ட்காக தானே போறான். முடிஞ்சதும் இங்க தானே வரப்போறான். போய்ட்டு தான் வரட்டுமே. உனக்கு தான் நாங்க, உன் ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாரும் இருக்குறோம்ல?” என்றார்.
சஹானா,”அப்பா நீங்க என்ன சொல்றீங்க?” என்றுந்தன் தந்தையிடம் கேட்க,
அவரோ,”அதான் அவனோட ஆம்பிஷன்னு வேற சொல்றானே, முடிச்சுட்டு வரட்டும் சானுமா” என்று முடித்துவிட்டார்.
இருவருமே கார்த்திக்கிற்கு ஆதரவாக பேச, வேறு வழியின்றி ஒரு மனதாக சரியெனத் தலையாட்டினாள்.
தன்னருகில் இசைத்த அலைபேசியின் ஒலியில் நடப்பிற்கு வந்தவன், தந்தையிடம் சென்று "அப்பா..." என்று ரகுராமின் கைகளைப் பிடித்துக் கொண்டே, "இந்த 23 வருஷத்தில் முதல்முறையாக உங்களைப் பிரிந்து போறேன். கண்டிப்பா, உங்கள கஷ்டப்படுத்துற நோக்கத்தோட இல்ல... என் வாழ்நாளோட ஒரு சின்னக் குறிக்கோள். அதிகப்பட்சமா 6 மாசம், அதற்கப்பறம் உங்களுக்கு உதவியாக உங்க பிஸ்னஸைப் பார்த்துட்டு உங்கக்கூடவே தான் இருப்பேன்ப்பா. நீங்க உங்களை விட மேலாக சஹானாவை நல்லாப் பார்த்துக்குவீங்கனு தெரியும். சோ, உங்க ஹெல்தைப் பார்த்துக்கோங்கப்பா. நான் போய்ட்டு வர்றேன்.." என்றான் கார்த்திக்.
இதை அனைவரும் விழி இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க, ரகுராமோ 23 வருடத்தில் முதல் முறையாக தன்னை ‘அப்பா’ என்றழைத்த மகனை நெகிழ்வுடன் பார்த்தவராய், "சரிப்பா கார்த்திக், நீ நல்லபடியாக போய் உன் ஆம்பிஷனை முடிச்சுட்டு சீக்கிரமாக வா, டேக் கேர்", என்று அவனின் கைகளில் இருந்த தன் ஒற்றைக் கையில் அழுத்தம் கொடுத்து, மற்றொரு கையினால் அவனது தோள்களைத் தட்டிக் கொடுத்தார்.
சஹானா எதுவும் பேசாமல், அவனருகில் தோழிகளுடன் நிற்க, கார்த்திக்கிற்கு தான் மிகவும் வேதனையாக இருந்தது.
"அம்மு...." என்று கார்த்திக் இழுக்க, "ஹாய் கார்த்தி, ஹவ் ஆர் யூ மேன்", என்று அங்கே பிரசன்னமானார்கள் கார்த்திக்கின் நண்பர்கள் ‘ஆதித்யா’ மற்றும் ‘அர்ஜூன்’.
பெரியவர்களிடம் நல விசாரிப்புகளை முடித்துவிட்டு, "ஹாய் சஹானா, ஹவ் ஆர் யூ?", என்றான் ஆதித்யா, சென்னையில் மிகவும் பிரபலமான கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறான்.
சஹானா, "ஐயம் குட் ஆதிண்ணா, நீங்க..?" என்றாள் அவனருகில் இருப்பவனை முறைத்தவாறே...! அவன் அர்ஜூன். கார்த்திக்கின் நண்பன், சென்னை மாநகரத்தின் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் (ASP).
அர்ஜூனைப் பார்த்த பூஜா, "ஹேய்... இது அந்த முசுடு முருகனில்லா....! இவர் அண்ணாக்கு ஃப்ரெண்டா?" என்றாள் சஹானாவிடம்.
சஹானா,"ஆமா.. ரொம்ப க்ளோஸ் தான் ஸ்கூல் படிக்குறப்போவேயாம்... அவங்க 5 பேர் ஒரு காங் டி... மீதி ரெண்டு பேரை நான் பார்த்ததில்லை." என்றாள்.
அதற்குள், "அவனுங்களை எங்கேடா?" என்றான் கார்த்திக். "இதோ வந்துட்டோமே" என்று அங்கே ஆஜராகினார்கள் அஜய்யும் ஷ்யாமும் யாழினியுடன்....!
யாழினியைப் பார்த்த கார்த்திக்கிற்கோ 'இப்போ ஏன் இவளை கூடிட்டு வந்தானுங்க. நமக்கு ஆப்பு வைக்கன்னே கிளம்பி வருவானுங்களே...'என்று மனதுக்குள் சலித்தவாறுப் பொதுப்படையாக சிரித்து வைத்தான்.
அஜய் மற்றும் ஷ்யாமைப் பார்த்த பூஜா மற்றும் மிதுனா, "குட் ஈவினிங் சார்" என்க,
ரீனாவோ, "ஹேய் வோலினி,.... நீ எங்கே இங்கே? அதுவும் எங்க சார்ஸ் கூட?" என்று தன் முக்கியமான கேள்வியைக் கேட்டாள்.
"காலேஜ் முடியுற டைம்ல, அதான் அண்ணா என்னையும் கூடிட்டு வந்துட்டாங்க" என்று பதிலுரைத்தாள் யாழினி, கார்த்திக்கின் பார்வையில் மறைந்திருக்கும் கேள்விக்கும் சேர்த்தே.
ரீனா,"யாரு உன் அண்ணா?" என்று கேட்க,
யாழினியோ, அவர்களை கைப்பிடித்து இழுத்து வந்து,
"இவங்க தான்" என்று அறிமுகப்படுத்த, மூவருக்கும் உச்சக்கட்ட அதிர்ச்சி.....!!!
அதைக் கண்ணுற்ற ஐவருக்கும் சிரிப்பு வர, சிரித்தவாறே அஜய்யோ சஹானாவைப் பார்த்து,
"இது யாருடா? 4 வாலில்லா குரங்குகளின் கூட்டத்தில் ஒரு அமைதிப் புறா" என்றான் அவள் யாரென்றேத் தெரியாமல்.
"என்னது அமைதிப் புறாவா?" என்று அதிர்ந்தனர் அங்கிருந்த அனைவரும் ஷ்யாமைத் தவிர.
கார்த்திக்,"டேய், இது தான்டா என் தங்கச்சி சஹானா... சானுமா, இது அஜய் ரித்விக், ஹீ இஸ் ஷ்யாம் மாதேஷ்... உன் ஃப்ரெண்ட்ஸோட எம்.டீஸ்" என்று அறிமுகப்படுத்த, அதுவரை அர்ஜூனை முறைத்துக் கொண்டிருந்த சஹானா,"ஓ....” என்று புன்னகைத்தாள் அவர்களைப் பார்த்து.
அவனும் பதிலுக்கு புன்னகைக்க,
ஷ்யாமோ,”ஓ...என் தங்கை பாடும் பல்லவி, இந்த சஹானா ராகம் தானோ?” என்க, அவளோ உடனே திரும்பி யாழினியை முறைத்தாள்.
யாழினியோ, ”ஜானு,..ம்ம், சாரி சானு.. அம்மா கேட்டாங்க, சொன்னேன்.. நானா எதுவுமே சொல்லலை..”என்றாள்.
சஹானாவின் அருகில் வந்த கார்த்திக்கின் தோழன் அர்ஜூன், “சஹா, அதான் அன்னைக்கே சாரி சொல்லிட்டேன்ல.. சரி இங்க இப்போ ஒரு 1000 பேராவது இருப்பாங்க தானே. இங்க வச்சு சாரி கேக்குறேன்...” என்க,
சஹானாவோ கார்த்திக்கிடம்,
“அண்ணா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்னு உன் ஃப்ரெண்ட்கிட்ட சொல்லு” என்றவாறே திரும்ப, அர்ஜூன் சஹானாவின் கைகளைப் பிடித்து,
“அதான் பேசிட்டு இருக்கேன்ல, அதுகுள்ள என்ன ஓடுற? பரம தேவதையே..! மன்னிச்சிருமா..” என்றான்.
சஹானா காதில் வாங்காதது போல் நிற்கவே,
“சரி.... நீ சொன்ன எல்லா கண்டீசன்ஸ்க்கும் ஒத்துக்குறேன். ஆர் யூ ஹாப்பி நவ்?” என்று அர்ஜூன் கேட்க, அவளோ சிறு குழந்தை போல் குதித்தவாறே, “வெரி வெரி ஹாப்பி... அப்போ இனி இந்த ஹிட்லர் ஃபேஸை கொஞ்சம் மாத்திட்டு ஹிருத்திக் ரோஷன் ஃபேஸை வச்சுக்கோங்க” என்றாள் அவனின் தோளில் தட்டியபடி. அனைவரும் அந்நேரம் அங்கு ஒரு பார்வையாளர்களாகவே இருக்க, அவர்களில் இருவர் முகம் மட்டும் அதிருப்தியை வெளியிட்டது...!
அர்ஜூன் சிரித்த படியே,
“சஹா, இந்த ட்ரெஸ்ல நீ சூப்பர்” என்க,
அவளோ, “நான் எப்பவுமே சூப்பர் தான். இருந்தாலும் என் அண்ணனோட செலெக்சன் மாதிரி வருமா?” என்று கண்சிமிட்டினாள்.
அர்ஜூனோ, ”தெரிஞ்சே உன்கிட்ட எதிர்பார்த்தேன் பாத்தியா?எனக்கு இது தேவை தான்” என்று குறைபட,
ரீனாவோ, “அதானே நீயாவது உன் அண்ணனை விட்டுக்குடுக்குறதாவது...!” என்றாள்.
அர்ஜூனோ, “சஹா, உன் ஃப்ரெண்ட்ஸா? இன்ட்ரோ குடுக்கமாட்டியா?” என்க,
சஹானா, “ஓ ஷ்யூர் அண்ணா.. அதுல உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸும் இருக்குண்ணா” என்றதும், அஜய்யின் உதடுகள் தானகவே, “அண்ணாவா” என்று முணுமுணுத்தது.
சஹானாவோ சிரித்தபடியே, “ம்ம்.... அண்ணாவின் நண்பன் எனக்கும் அண்ணாவே….!” என்றாள்.
தோழிகளிடம் ஆதியைக் கைக்காட்டிய சஹானா,”இது ஆதிண்ணா, ரீனு உனக்கு சுத்தமா பிடிக்காத ஃபீல்டில் வொர்க் பண்றாங்க. தென், இது அர்ஜூண்ணா.. பூஜ்,இவங்க உனக்கு ரொம்ம்ம்பபபப் பிடிச்ச ஃபீல்டில் வொர்க் பண்றாங்க...” என்றதும் அனைவரும் அதிர்ந்தனர் அவள் அறிமுகப்படுத்திய விதத்தில்...
“அண்ணாஸ்… இது ரீனா, மிதுனா, பூஜா அண்ட் யாழினி; என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். யாழி எங்களுக்கு ஜூனியர் தான், பட் எங்க டீம். இவங்க மூனு பேரும் அஜய்-ஷ்யாம் அண்ணா ஆஃபிஸ்ல தான் வொர்க் பன்றாங்க” என்றதும்,
ஆதி, “யாழினி தெரியும், அஜய்-ஷ்யாம் ஓட தங்கை” என்றான்.
சஹானாவோ வெகு இயல்பாக, “அப்பறம் அர்ஜூண்ணா, என் ஃப்ரெண்ட் பூஜாவை தான் என் வருங்கால அண்ணியா, அதாவது Mrs.அர்ஜூன் ஆக நான் செலெக்ட் பண்ணிருக்கேன். உங்களுக்கு ஓகே தானே?” என்று ஒரு இடியை இறக்கினாள்.
பூஜாவோ, “ஹேய், சானு,..” என்று அதிர,
ரேணுகாவோ, “சஹானா, என்னடி உளருற?எதில் விளையாடுறதுனு ஒரு அளவு வேண்டாமா? எல்லாம் இவங்கல்லாம் குடுக்கிற செல்லம் தான்”, என்று கடிந்துக் கொண்டார்.
சஹானா,“நோ மாம். ஐயம் சீரியஸ்.” என்க,
ரகுராம், “குட்டிம்மா, இது ஏர்ப்போர்ட் டா. மேரேஜ் விஷயமெல்லாம் இப்படி நடு வீதியில் வச்சா செய்வாங்க? வீட்டுக்குப் போய் அவங்களுக்கு விருப்பம்னா பெரியவங்கக்கிட்ட பேசலாம். இப்போ, இங்க வேண்டாம்டா” என்று அவளை சமாதனப்படுத்த, ரேணுகாவோ தலையில் அடித்துக் கொண்டார்.
சஹானா, “நான் ஆல்ரெடி பூஜாப்பாகிட்ட பேசிட்டேன். அர்ஜூன் அண்ணாக்கு சம்மதம்னா அவங்களுக்கும் சம்மதமாம்” என்றாள் தோள்களைக் குலுக்கியவாறே...!
கார்த்திக், “சரி ஓகேடா. அர்ஜூன் வீட்டில் இப்படி பேசினா சரி வராதுல்ல? சும்மாவே அவனுக்கும் அவங்க அப்பாக்கும் டெர்ம்ஸ் சரிவராது. சோ, பொறுமையா யோசிச்சுட்டு அப்பறம் பேசலாம்” என்றான்.
சஹானா, “அங்கேயும் பேசிட்டேனே அண்ணா” என்றதும் அனைவரும் அதிர,அர்ஜூனோ சிரித்தவாறே, பூஜாவைத் தான் பார்த்தான். அவளோ அதிர்வின் விளிம்பில் சஹானாவைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
மிதுனா, “அங்கே என்னடி பேசித் தொலைச்ச?” என்று கேட்க,
சஹானா, “ஒரு டைம் (அர்ஜூனின்) அக்காகிட்ட பேசும்போது, பூஜா பத்தி சொன்னேன். அக்காக்கு ஓகேனு சொல்லிட்டாங்க. அப்பாக்கிட்ட அர்ஜூண்ணா பத்தி சும்மா ஒரு பிட் போட்டேன். அப்பா கத்த ஆரம்பிச்சுட்டாரு. அப்போ, அப்பாவே ‘நீயே ஒரு நல்ல பொண்ணா அங்கேயே பாரு பாப்பா’னு சொன்னாரு. அம்மாக்கு இந்த விஷ்வாமித்திரன் கல்யாணத்துக்கு சம்மதிச்சாலே போதும்னு சொன்னாங்க.. ஆப்பரேஷன் சக்சஸ்” என்று கண் சிமிட்டியவாறே தன் இரு கைகளிலும் பெருவிரலை உயர்த்திக்காட்டியபடியே கூறினாள்.
ஆதி, ”என்னடா இது? என்கூட தானடா இருக்குற. ஒரு வார்த்தை சொன்னியாடா துரோகி” என்று அர்ஜூனைக் கடிய,
அர்ஜூன், “டேய், எனக்கே இப்போ தான்டா தெரியும். இதுக்கு தான் என் அம்மா நாங்க எப்போ சென்னை வரட்டும்னு கேட்டுட்டே இருக்காங்களா?” என்று கேட்க,
சஹானாவும் ‘ஆமாம்’ என்பது போல் கண்ணடிக்க, அர்ஜூனோ, ”ஆமா சஹா, இதுல உன் ஃப்ரெண்ட்க்கு விருப்பமானு கேட்டியா?” என்று பூஜாவைப் பார்த்தவாறே கேட்க,
சஹானாவோ, “கேட்கல அண்ணா. ஆனா, அந்தப்பக்கம் பச்சைக்கொடி தான். டோன்ட் வொர்ரி.. உனக்கு சம்மதம் தானே பூஜ்....?” என்று பூஜாவின் தோளில் தன் நாடியை அழுத்தியவாறு கேட்க, அப்போது தான் பூஜா என்ற சிலைக்கே உயிர் வந்தது போலும்.
“என்ன சொன்ன?” என்று பூஜா கேட்க,
சஹானாவோ, “ஆமா தானேனு கேட்டேன் பூஜ்” என்க, பூஜாவோ உச்சக்கட்ட அதிர்ச்சியில் என்ன ஏதென்று கூட விசாரிக்காமல்,
“ஆங்...ஆமா தான்” என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.
மிதுனாவும், ‘ரெண்டும் சரியான லூஸுங்க’என்று தன் தலையில் அடித்துக் கொள்ள, சஹானாவோ,
“நான் சொன்னேன்ல அண்ணா. பூஜாக்கு உங்களை மேரேஜ் பண்ணிக்க இஷ்டம் தான்னு. பார்த்தீங்களா அவளே சொல்லிட்டா” என்றாள்.
பூஜா, “நான் எப்போடி சொன்னேன்?”என்று அதிர்ந்து கேட்க,
ரீனா, “இப்போ தான். அதான் அழகா ‘பூம்பூம் மாடு’ மாதிரி ஆமா போட்டியே” என்க,
சஹானா, “அப்பறம் அண்ணா,…” என்று ஆரம்பிக்க, பூஜா அவளை அடிக்க வர, சஹானா ஓட என்று விமான நிலையமே ஒரு விருந்து வீடாக மாறிய எண்ணமே அங்கிருந்த அனைவருக்கும். கார்த்திக்கும் இதமாக உணர்ந்தான்.
அவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் இதனை ரசித்துக்கொண்டிருந்த அஜய்யின் மேல் இடித்து அவனைத் தள்ளிவிட்டவள், “என்ன அஜய் அண்ணா, நீங்களும் ட்ரீம்ல டூயட் பாட போய்ட்டீங்களா? உங்களுக்கும் ஹெல்ப் பண்ணனுமா?”என்று கேட்டாள்.
அஜய் என்ன உணர்ந்தான் என்றே அவனால் சொல்லமுடியாத நிலையில் இருக்க, தன்னை சஹானா கூறிய அந்த ‘அண்ணா’ என்ற அழைப்பை மட்டும் அவனால் ஏனோ ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அஜய் ஏதோ மறுப்பாக சொல்ல வாயெடுக்க, அதற்க்குள் அவனைக் காப்பாற்றினாள் அவன் தங்கை யாழினி, “சானு என் அண்ணாவை எப்படி நீ அண்ணானு சொல்லலாம்?” என்று.
சஹானாவோ, “சரிதான் போமா,. அப்போ நீயும் என் அண்ணாவை அண்ணானு கூப்பிட்ட, அப்பறம் இருக்கு உனக்கு” என்று தன் சகோதரனையும் காப்பாற்றினாள்.
ஷ்யாமோ அஜய்யிடம், “டேய், பாருடா. அறிமுகப் படலம் ஆரம்பிச்ச அரை மணி நேரத்துல, அரை கல்யாணத்த நடத்தி முடிச்சுட்டாளேடா...! பேசாமல் என் மேட்டரையும் சானுகிட்ட சொல்லிராம்னு யோசிக்குறேன்டா” என்க,
அஜய்யோ, “நீ ட்ரை பண்ணுடா, எனக்கே பிரம்மிப்பா தான் இருக்குதுடா. ஏனோ அவகிட்ட சம்திங் ஸ்பெஷல்டா” என்றான்.
சஹானாவோ, “அர்ஜூண்ணா, நீங்க வாட்ஸ்அப் பார்க்கலையா?” என்று கேட்க,
அர்ஜூன், ”மெஸேஜ் பண்ணிருக்கியா என்ன?”என்றவாறு தன் அலைபேசியை எடுத்து, கட்செவி அஞ்சலைப் (WhatsApp) பார்வயிட்டான்.
“எஸ் அண்ணா, அது தான் பூஜாவோட நம்பர். சேவ் பண்ணிக்கோங்க அண்ணா” என்று கூறி பூஜாவின் முறைப்பை தாராளமாகவே சம்பாதித்தாள்.
ஷ்யாம், “தெய்வமே! எனக்கும் தாங்கள் தான் ஒரு அருள்வாக்கு சொல்லவேண்டும் தாயே” என்றான் ரகசியமாய்.
சஹானாவோ சப்தமாக,
“நிச்சயம் அருள்புரிகிறேன் பக்தா...! ஆனால் அதற்கு தக்க சன்மானமாக வருகிற ஞாயிறுக்கிழமை எங்கள் ஐவரையும் மெக்டொனால்ட்ஸ் க்கு அழைத்து சென்று பில்-பே பண்ணவும்” என்றாள்.
ஷ்யாமோ அதிர்ந்து விழிக்க, ஆதியோ, “சானு,நீ சரியான ஆளை தான் கூப்பிட்ட போ. அவனுக்கே அஜய் தான் பே பண்ணுவான்” என்க,
“டோன்ட் வொர்ரி ஆதிண்ணா, அவங்க ரூட்டையும் க்ளியர் பண்ணிடலாம். நமக்கு தேவை பில்-பே பண்ண ஆள்”,என்று சஹானா தோள்களைக் குலுக்கியவாறு சொல்ல,
ஷ்யாமோ, “அவனா? நல்லா சொன்ன போ.. சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காதுமா” என்க, அவளோ புரியாமல் விழிக்க,
அர்ஜூன், “சஹா, நீ என்னையே விஷ்வாமித்திரன்னு சொல்லுவ. அவன் என்னை விட மேல கடுமையான தவம் புரிகிற விஷ்வாமித்தரன் மா”என்று தன் நண்பனின் புகழ்பாட,
“ஓ...”என இழுத்த சஹானா,
“சரி இருக்கட்டுமே. அவங்களுக்கென ஒரு மேனகை வராமலா போய்ருவா?” என்றாள்.
கார்த்திக், “வந்துட்டா” என்றதும் அனைவரும் அவனை நோக்க,
“சீக்கிரமே வந்திருவானு சொன்னேண்டா” என்று சமாளிப்பாக கூறினான். அஜய்யின் மனம் அதை ஆமோதித்ததும், கண்கள் தாமாகவே சஹானாவைப் பார்த்தது. எண்ணத்தின் நாயகியோ ஷ்யாமிடம் கதைத்துக் கொண்டிருந்தாள்.
சஹானா ஷ்யாமிடம், “அண்ணா,அந்த பக்கம் லைட் எறியுறது, மணி அடிக்குறதலாம் கொஞ்சம் கஷ்டம் தான் அண்ணா. ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் வேற... சோ, டைரெக்டா மேலிடத்தில் அப்பீல் பண்ணிலடாம்” என்க, அவனுக்கோ அதிர்ச்சி.
ஷ்யாம், “சானு, பொண்ணு யாருனு நான் சொல்லவே இல்லையேமா?” என்க,
சஹானா, “அதெல்லாம் நீங்க சொல்லனுமா அண்ணா. மிது தானா? நீங்க விட்ற ஜொல்லுல இன்னும் கொஞ்ச நேரத்துல வெல்லமே வரப்போகுது. அப்போ என் அண்ணா ஃப்ளைட் கேன்சல் ஆகிரும்லா?” என்று சொல்ல அவனோ அசடு வழிந்தான். அவள் சொன்னதைக் கேட்டு நண்பர்கள் நால்வரும் ஷ்யாமை ஒரு வழியாக்கிவிட்டனர்.
ஆதி, “எப்படியோ கார்த்தி, சீக்கிரம் ப்ராஜெக்டை முடிச்சுட்டு வந்துருடா. உனக்கு தொடர்ந்து கல்யாண சாப்பாடு இருக்கு..” என்று சொன்னதும் சஹானாவின் முகம் மறந்திருந்த கவலையைத் தத்தெடுத்துக்கொண்டது. அதை அஜய்யின் தன் மனதும் குறித்துக்கொண்டது. கார்த்திக்கைப் பார்க்க, அவனோ ஸ்ருத்திக்காவிடம் அலைபேசித் தொடர்பிலிருந்தான்.
அதற்குள் கார்த்திக் உள்ளே செல்வதற்கான அழைப்பும் வந்துவிட, சஹானாவைப் பார்த்தவன், தாய் தந்தையிடம் விடைப்பெற்று, தங்கையிடம் வர, அவளோ அவனது சட்டையைப் பிடித்துக்கொண்டு,
“போகாதேண்ணா” என்று சிறுபிள்ளை போல் அழுதுகொண்டிருந்தாள். சற்று நேரத்திற்கு முன்பு தன் பேச்சால் அனைவரையும் வாட்டி வதைத்த சஹானாவா என்றேத் தோன்றியது அனைவருக்கும்.
“நானும் வர்றேன், என்னையும் கூடிட்டுப்போண்ணா”, என்று அழுதவளை பார்த்து தோளோடணைத்து சமாதானப்படுத்த வேண்டுமென்றே தோன்றியது அஜய்க்கு.
கார்த்திக், “அம்மு இங்கே பாரு, நான் 6 மாசத்தில் வந்துருவேண்டா அழக்கூடாது. இங்கபாரு, நீ அழறதப் பார்த்து புதுப்பொண்ணே அழறாங்க.. என்னோட ஆம்பிஷண்டா, ப்ளீஸ் சானுமா. எனக்கு மட்டும் உனக்கு விட்டுட்டு போகனும்னு ஆசையா?” என்று அவனுடைய சமாதானமும், தோழிகள் மற்றும் பெற்றோரின் சமாதானமும் கூட எடுபடவில்லை.
ஒருவழியாக அவளின் முன்நெற்றியில் முத்தமிட்டு, பெற்றோரிடம், “பார்த்துக்கோங்கப்பா” என்று விடைபெற்றான். அதே நேரம், நண்பர்களிடமும் கட்டித்தழுவி, “கொஞ்சம் கவனிச்சுக்கோங்கடா” என்று சொல்லவும், யாழினியிடமும், “டேக் கேர், நல்ல படி. வர்றேன்” என்று சொல்லவும் மறக்கவில்லை.
அனைவரிடமும் விடைபெற்று விமானம் ஏறினான் கார்த்திக்.....!