All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கதை திரி

Status
Not open for further replies.

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய்...
என் பட்டூஸ்... செல்லம்ஸ்... :D:D:D
அடுத்த பதிவு போட்டாச்சு. மறக்காம like and cmt. உங்களோட கமெண்ட்ஸ் தான் என்னை மேலும் மேலும் எழுத வைக்கும்.


நன்றி
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே...
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க...

இதோ உங்களுக்கான அடுத்த பதிவு. இதுவரை எனக்கு ஆதரவு அளித்து.. உற்சாகம் தந்து வரும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. உங்களோட வார்த்தைகள் தான் என்னை இதுவரை கொண்டு வந்துருக்கு. நன்றி என்று சொல்லி எனது வாழ்த்தை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்புறம் அமைதி ஸ்டராபெர்ரிஸ் ப்ளீஸ் உங்கள் கருத்துக்களை பகிர வாருங்கள். உங்களுக்காக நான் waiting...




என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 12


"என் கனவு தேவதையடி நீ
என் கற்பனையின் நகல் நீ
என் காதல் தேவி நீ
என் ஆதியும் நீயே
என் ஆசை நாயகியும் நீயே
என் அழகான ராட்சஸியும் நீயே
என் வாழ்வில் நீ இருந்தால்
எல்லாம் சுகமே
என் வாழ்வின் எல்லை வரை நீ வந்தால்
எனக்கு பேரானந்தமே!"



விழியோடு விழிகள் கலந்து... பெண்ணவள் முகம் தரிசித்து.. ஆண்மகன் தன் காதல் தீர்த்தத்தை தெளிக்க.. பெண்ணவள் பரிசளித்தால் தன் முதல் முத்தத்தை...

இத்தனை ஆண்டுகளாக பொக்கிஷமாக அவளுக்காகவே அவன் வைத்திருந்த அன்பையும்... காதலென்றால் என்ன என்பதை நொடி பொழுதும் உணர்த்தி கொண்டிருபது இந்த ஆண்மகன் தான்.. தனக்கு காதலனாய்.. தோழனாய்.. வரமாய் கிடைக்க நான் தான் என்ன தவம் செய்தேனோ... பெண்ணவள் பிரமித்து தான் போனாள்.

காதலில் இத்தனை வலிமை இருக்க முடியுமா... இக்காதல் தான் எத்தனை சக்தி வாய்ந்தது.. நிமிடத்தில் தோன்றி.. கல்வெட்டாய் மனதில் பதிந்து... வாழ்நாள் முழுதும் நம்மை ஆட்டிப் படைக்கிறதே...

ஆண்மகன் அணைப்பில் மெய் மறந்து இருந்தாள் பேதையவள்.

அந்த இனிமையான நேரத்தில் அவளுக்கு நினைவில் இருந்தது எல்லாம் தன் காதல் மன்னன் ராம் மாத்திரமே.

கன்னத்தில் ஏதோ ஊர்வது போல தோன்றியது. கைகளால் தட்டிவிட்டு விட்டு மீண்டும் காதல் மஞ்சத்தில் உறங்க விரும்பினாள்.

இம்முறை முகம் கழுத்து எல்லாம் கூசியது. என்ன இது.. "ஹ்ம்ம்..ச்..ச்" சிறு ஏரிச்சலுடன் கண் திறந்து பார்த்தாள்.

அங்கே ஆருவும் கீதுவும் நின்றிருந்தனர் முகம் கொள்ளா கேலி சிரிப்போடு..

சட்டென அவன் அணைப்பிலிருந்து விலகியவள் அதிர்ந்து முழித்தாள். இவர்கள் எங்கே இங்கே.??
அந்த மோன நிலை கலைந்ததில் காதலன் விழி திறந்தான்.

"அட... அருந்த வாலுகள்.
ஹே.. என்னடிகளா இங்கே.. அதுவும் இந்நேரத்துல.." ராம்

"ஏய் ஆரு நீ இன்னும் வீட்டுக்கு போகல...?!" வதனா

"பார்ர்ரா... பொறுப்புள்ள ரெண்டு பிள்ளைகள் சேர்ந்து பண்ணுற வே..லை..யை...!!" கொஞ்சம் அழுத்தி தான் சொன்னாள் ஆராதனா.

தோழிகள் இருவரும் தோள் இடித்து கொண்டனர்.

காதலர்கள் இளநகை புரிந்தனர்.

"ஹேய்.. நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை.. நாங்க சும்மா பேசிட்டு இருந்தோம்..." சொன்னாள் காதலி வதனா.

"ஓ ஓ ஓ ஓ.... ஹோ..." கோரசாக ஆரவாரம் செய்தனர் ஆருவும் கீதுவும்.

"ஹே.. ஹே... நிஜம்தான் லூசுகளா..."

இப்போது காதலன் சொன்னான்.

"ஹா ஹா.. நம்பிட்டோம்.." சிரித்தபடி தோழிகள் இருவரும் 'ஹைபை' கொடுத்து கொண்டனர்..

கேலி பேச்சு முகம் சிவக்க வைத்தது போல.. தங்கைகளின் பேச்சு அபாயகரமான திசைக்கு செல்கிறதோ.. காதலர்களுக்கு இப்போது செல்ல கோபம் பூத்ததோ...

"ம்ம்ம்ம்...ஆராதனா..." பற்களை கடித்தாள் வதனா..

"ஏய் கீது... சும்மா இரு. போதும் உங்க ரெண்டு பேரோட வம்பும்.

இங்கே என்ன விஷயமா இப்போ நீங்க வந்தீங்க..

பேக்கரி ஷாப் தான் க்ளோஸ்ன்னு போர்டு போட்டுருக்குல.. பின்ன என்னடி உங்களுக்கு இங்க வேலை..?!" வார்த்தைகளால் தாழித்தனர் ராமும் வதனாவும்.

"ஆமா.. இது பெரிய கோட்டைவாசல். ஓபன் பண்ணி உள்ளே வர ஐம்பது பேர் தேவை.. அட போடா சமோசா மண்டையா..." கிழித்து தொங்கவிட்டாள் பெண் ஆராதனா.

"ஏய்.. வாடா போடான்னு சொல்லாத.. அத்தான் முறை வரும் உனக்கு. ஒழுங்கா மரியாதையா கூப்பிடு..." கடுபடித்தாள் வதனா.

"போடி போடி... நேத்து பெய்த மழையில முளைச்ச காளான் நீ... ஆனா நாங்க அப்படியா..?! நாங்கள் எல்லாம் சின்ன வயசுல இருந்தே தோஸ்து... சோ யூ கோ... மீ ஆல்வேஸ் இன்னு...."காலர் இல்லாத சட்டையில் காலரை தூக்கி விட்டு கொண்டாள் ஆரு.


"ஷ் ஷ்... போதும் போதும்... நிறுத்துங்க.." என்று இருவரையும் கை ஆட்டி தடுத்தவன்... ஆருவை பார்த்து..

"இன்றைக்கு எப்படி போச்சி..? ஒன்னும் பிரச்சனை இல்லையே...?!" அக்கறையாய் கேட்டான் ராம்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாம் நல்ல படியா தான் போச்சி.."

அவன் சொல்லி முடிப்பதற்குள்,
"ஹே... அறிவு கேட்டவளே.. இப்படியா கேணச்சி மாதிரி ரோடு கிராஸ் பண்ணுவ.. நல்ல வேளை ராம் அங்க இருந்தான். இல்..லா..ட்டி எவ்ளோ கஷ்டம். உனக்கு கண்ணுன்ணு ஒன்றை ஆண்டவன் தேவையில்லாம கொடுத்துட்டான்.. அதான் இப்படி பண்ணுற.." கோபமாய் பொரிந்தாள் சகோதரி.

"கூல் வது.. அதான் ஒன்றும் இல்லையே. பின்ன எதுக்கு ஆருவை திட்டுர..."

"நீ சும்மா இரு ராம். இவளுக்கு எப்போ பாரு வம்பை பிரீயா ஹாண்ட் பாக்ல போட்டுக்கிறதே ஹாபியா போச்சி..

இதே மாதிரி தான் நம்ம ஏரியா பங்சன் டேலயும் பண்ணுனா.. இப்போ வரை அம்மணிக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது.

தேவேந்திரன் வந்தார்.. கல்லை தந்தார்.. அப்படின்னு புலம்பினாள்.

அன்றைக்கு யார் சென்ற புண்ணியமோ இவளுக்கு எதுவும் ஆகாமல் கடவுள் காப்பாற்றி விட்டார். அதே போல இன்றைக்கும். இப்படி டெய்லி இவளை காப்பாற்றிகிட்டே இருப்பாரா என்ன..?!?

கொஞ்சமாது பொறுப்பு இருக்கா..?எந்த விஷயமாது ஒழுங்கா பண்ணுறாளா...? எப்ப பாரு விளையாட்டு புத்தி. இப்படி இருந்தா எப்படி ராம்...?!" கவலையாய் சொன்னாள் வது..


"ஹேய்.. நீ ஏன் இவ்வளவு கவலைப்படுற.. அதெல்லாம் ஆருக்கு ஒன்றும் ஆகாது.." தோள் அணைத்து ஆறுதல் படுத்தினான்.

சூழ்நிலை சோகத்தின் வாசற்படி சென்று கொண்டிருப்பது புரிந்தது ஆருவிற்கு. அவளுக்கும் அன்றைய நாள் நினைவில் மனம் கசங்கியது. இருந்தும் இப்போதைக்கு அதை நினைத்து பார்க்க விரும்பவில்லை. சோ பேச்சை திசைமாற்றும் பொருட்டு...

"ஹே.. நான் யாரு... என்னை யாருடி தூக்க முடியும்...? எனக்குள்ளே ஒரு சிங்கம் தூங்கிட்டு இருக்கு..! அது இருக்கிற வரை என்னை யாராலையும் ஒன்றும் செய்ய முடியாது. யூ டோன்ட் ஒர்ரி பேபிஸ்..."

"ஹ்ம்ம்... அது சரி.. தின்னு தின்னு இம்புட்டு கொழுப்பு ஏறி இருந்தா யராலதான் தூக்க முடியும்.!" வம்பு செய்தாள் கீது மனத்திற்குள்ளே தான்.

"என்னை பற்றி கவலைப்படாமல் சந்தோஷமா இருக்க பாருங்க. அதை விட்டுவிட்டு... ச் ச்... வடிவேல் சொல்லுற மாதிரி... சின்ன பிள்ளை தனமால இருக்கு..." முகம் சுளித்து கை ஆட்டி சொன்னாள் பெண். அவள் சொன்ன தினுசில் மற்றவர்களுக்கு சிரிப்பலை பொங்கியது..

"ஹ்ம்ம்... இப்படி தான் எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும் எல்லோரும்.. புரியுதா..."விரல் நீட்டி சொன்னாள் தங்கை.. அந்த பாச தங்கை.

##############


"எத்தனை மணிக்கு பாட்டி..?"

"காலையில ஒன்பது மணிக்கு ரீச் ஆகுறதா சொன்னான்" என்றபடி சாய்வாக அமர்ந்தார் அந்த லேடி பாட்டி.

"ஹ்ம்ம்.. ஓ. கே. அப்போ நானே போய் ரிசிவ் பன்ணுறேன். நீங்க தனியா ஆபிஸ் போயிருவீங்களா..?!"

"ம்ம்ம்.." தேநீரை உறிஞ்சியபடியே சம்மதம் சொன்னார்.

"என்னம்மா.. யாரு வாரா.."சொன்னபடி வந்தார் தந்தை ராஜ சேகர வர்மா.

"டேய்.. உன் பொண்டாட்டியோட தம்பியோட பிரென்ட் இளங்கோ இருக்கான்ல..அவன் தான்.."

"நீங்க எந்த இளங்கோவை சொல்றீங்கமா...?!"

"அதான் அமெரிக்காவில் நம்ம பிஸ்னெஸ் பார்ட்னரில் ஒருத்தனா இருக்கிறானே.. நம்ம ரவி கூட அடிக்கடி சொல்வானே என்னோட பிஸ்னெஸ் குருன்னு ஒருத்தரை..."

"ஹாங்...."நெற்றி தடவி யோசித்தவருக்கு... உருவம் கொஞ்சம் ஆட்டம் கண்ட பிறகே பிடிபட்டது....

"ஓ... நம்ம வீட்டுக்கு கூட ஒரு முறை வந்திருக்கிறானே... அந்த இளங்கோ வா... சரி தான்.. பார்த்து நாள் ஆனதும் பிடிபடல..."

"ஹ்ம்ம்..."

"ஆனா அவனுக்கு தான் இந்தியா பிடிக்காதே.. இப்போ எதுக்காக வர்ரான்னாம்..?!"

"ஒரு வேளை அவனுக்கு பிடிச்ச பொருள் இங்கே தான் இருக்குதோ என்னவோ..." அழகாய் கண் சிமிட்டனார் லேடி..

"ஹே.. பாட்டி..." அவர்கள் தன்னை தான் அந்த பொருள் என சொல்கிறார்கள் என்பது புரிந்து பேரனும் சிரித்தான்.

"அட போடா..."

"நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் இளங்கோ அங்கிளுக்கு நான் எப்போவுமே பேவரட் தான்....!"

"அது சரி இப்போ யாரு யாருக்கு குறுக்காலா வந்தது...??! உனக்கு ஏன் பொங்குது.."

பதில் கேள்வி பிறந்தது லேடியிடமிருந்து..

"பா..ட்டி.."

"ஏன்டா...பதில் தெரியலையா...?!" வம்பிலுத்தார் அவர்.

"போங்க பாட்டி.. எப்போ பாரு உங்களுக்கு கிண்டல்.."

"டேய் டேய்... நலுவாதடா.. உண்மையை சொல்லு.. அவனுக்கு மட்டும் தான் உன்னை பிடிக்குமா.. இல்லை குடும்பத்துக்கேவா..?!"

"நான் இந்த பேச்சுக்கே வரல.. போதுமா.. நீங்க எங்க சுத்தி இங்க வாறீங்கன்னு எனக்கு புரியுது. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. இளங்கோ அங்கிள் பொண்ணு நேகா என்னோட பிரென்ட் அவ்ளோ தான். நீங்களா எதாச்சும் கற்பனை பண்ணி பேசாதீங்க.."

"பார்ர்ரா... குடும்பம்ன்னு சொன்னா உனக்கு அவள் மட்டும் தான் நியாபகத்துக்கு வாராளா.. மத்தவங்கல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா...?!"

"பா..ட்...டீ...!"

"என்னம்மா.. உண்மையா தான் சொல்லுறீங்களா...?!"கண்கள் மின்ன கேட்டார் ராஜ சேகர்.

"டாட்.. இட்ஸ் நதிங். பாட்டி சொல்லுறதை நம்பாதீங்க.!" என்றபடி இதற்கு மேல் பேச எதுவும் இல்லை என எழுந்து சென்று விட்டான்.

விதியின் கையில் நாம் எல்லோரும் விளையாட்டு பொம்மைகள். இதில் இந்த அயர்ன் லேடி நினைத்தால் மட்டும் நடந்திடுமா..?!

#######################


"டொய்ங்... டொய்ங்... டொய்ங்..." ஒலி எழுப்பிய அந்த கடிகாரத்தை ஆசையாய் முறைத்து கொண்டிருந்தாள் ஆராதனா. மணி பன்னிரெண்டு என்று சொல்லி அவளது தூக்கத்திற்கு 'டா டா' காட்டியது.

இது என்னடா கொடுமை. இன்றைக்கு பார்த்து தூக்கம் வர மாட்டுக்குது...

விபத்தின் வீரியமும் வதனாவுடனான வாதமும் அந்த தேஜா வூ வின் நியாபகமுமாய் சேர்ந்து பெண்ணவள் தூக்கத்தை காவு வாங்கியது.

எவ்வளவு முயன்றும் தூக்கம் வருவது போல தெரியவில்லை. பெட்டிலிருந்து எழுந்தவள் ஜன்னலோரமாய் தெரிந்த இருட்டு வானத்தையும்.. ஒளிரும் நிலாவையும் கண்டாள்... எங்கும் கும்மிருட்டாய் இருக்க.. இவள் விழிகள் மட்டும் விழித்து கிடந்தது..

இங்க நான் தூக்கம் வராமல் முழிச்சிக்கிட்டு இருக்கேன்.. ஆனால் நீங்க எல்லோரும் நிம்மதியா தூங்கிறீங்களா... என பக்கத்து வீட்டு வாசிகளின் ஜன்னல் பார்த்து புலம்பியவள் மண்டையில் நச்சென அந்த யோசனை தோன்றியது...

கை தட்டி ஆர்பரித்தவள்.. "ஹ்ம்ம்.. உங்க எல்லோருக்கும் இது தான் சரி. நான் எப்படி இங்க புலம்புறேனோ.. அதே போல நீங்க எல்லோரும் புலம்ப வேண்டாமா..?!
சோ சாரி மை ஏரியா பர்ட்ஸ்... "

கட கட வென.. வேலையில் இறங்கினாள்.

நேராக மாடிக்கு சென்றவள்.. நிலா மகளை பார்த்து கண் சிமிட்டியவள்..

"என்ன அப்படி பார்க்குற... நீ மட்டும் தான் லைட் அடிப்பியா..?!! இதோ நானும் வர்றேன்.." என்றபடி சிறகை விரித்து பறந்தாள்.

"காற்றிலே அசைந்தாடும் என்னை...
கட்டி அணைத்திட தான் முடியுமோ...?!
மின்மினி வண்டின் ரீங்காரம் தான் தோற்றிடுமோ..?!
கண் கூச நானும்..
கபளீகரம் செய்வேனோ..?!
ராத்திரி நேர பூஜைக்கு
நீ தானே..
அடி நீ தானே கலக்கும் நாயகி...!"


"ஹா ஹா ஹா..." தூங்கா மோகினியின் சிரிப்பலை அந்த ஏரியா பறவைகளை பந்தாடியதோ...?!


ஹாய் மக்களே...
உங்களுக்கான புதிர் தான் இது.. பொறுமையா வாசிங்க. பதிலை சொல்லுங்க..
என்ன ரெடியா..?!

ஆருவோட இந்த திட்டம் தான் என்ன..?! அப்படி என்ன தான் செய்தா..?! அடுத்த பதிவில் பார்க்கலாம்.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 13



14812

"காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு.."


இருள் விலகி.. சூரிய மங்கை தரிசனம் தர வருகின்ற நேரம்... குளிரின் ஆட்டம் முடியும் அந்த விடியாதா காலை பொழுதில்.. கொட்டாவி ஒன்றை விட்டப்படி கதவை திறந்து கொண்டு வந்தாள் கீது..

தூக்க கலக்கம் இன்னும் முகத்தில் மிச்சம் இருந்தது. முகத்தினை அழுந்த துடைத்து தலையினை கைகளால் வாரி கொண்டை ஒன்றை போட்டுக்கொண்டாள். கையில் வாரியலை எடுத்து கொண்டு, வாளியில் நீர் நிரப்பியவள் ரெண்டையும் தூக்கி கொண்டு வாசல் முற்றத்திற்கு சென்றாள்.

அப்போது தான் பக்கத்து வீட்டு அக்காவும் வெளிக்கதவை திறந்தபடி வந்தார் கையில் கோல மாவுடன்.

அப்போது முகத்தினில் ஏதோ மின்னல் ஒளி வெட்டியது போன்ற பிரம்மை மாதுவிற்குள்.
கண்களை சிமிட்டியவள் மிச்ச தூக்க கலக்கத்தை ஒதுக்கியபடி, கண்களை தேய்த்துக் கொண்டு விழிகள் விரிய பார்த்தாள்.

வெள்ளை உருவத்தில் பேய் ஒன்று வானத்தில் மிதந்தபடி வந்தது இவளை நோக்கி.. தன் அகோர பற்களால் பயங்காட்டியது...

பயத்தில்"வீல்" என்று அலறினாள் பெண். ஆனால் பல குரல் ஒரு சேர அந்நேரம் இதே போல அலறியது. ஆம்.அந்நேரம் அத்தெருவே அலறியது...

திக் பிரம்மை பிடித்தது போல பெண்கள் திகைத்து நிற்க... அத்தெருவில் கோலம் போட வென்றும், மற்ற வேலையாக வந்தவர்களும் விக்கித்து போய் இருந்தனர்.

விட்டு விட்டு அடிக்கும் அலாரம் போல... ஒவ்வொரு அலறல் சத்தமுமாய் அந்த எரியாவே அல்லோல பட்டது நிமிடத்திற்குள்.

சில ஆண்களும் கூட்டமுமாய் பேயறைந்தார் போன்று திகைத்து நின்றிருந்தனர்.

"அது என்ன..?!"

"ஹேய் உனக்கும் தெரிகிறதா...!"

"நீ பார்த்தாயா...?!"

"யாராவது போலீசுக்கு இன்போர்ம் பண்ணுங்க.. அது என்னன்னு வேறு தெரியல...??"

கலவையான குரல்கள் கேட்டன.

கண்களில் காட்சி விழுந்தும் சிந்தைக்கு எட்டாமல் பெண்ணவள் அதிர்ந்து போயிருந்தாள்.

பலர் அலறி அடித்துக் கொண்டு வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர். ஒரு சிலரே அதுவும் மறைந்து நின்ற படி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

'வுயங்... உயங்... உயங்.....' ஆம்புலன்ஸ் சத்தம் காதை அழுத்தியதில் 'ஹாங்...' கண்களை சிமிட்டி நடப்பிற்கு திரும்பிய பெண் கண்ட காட்சி அவளது நெஞ்சில் இருந்த மிச்ச மீதி துணிவையும் துடைத்து சென்றது.


அந்த ஏரியா குர்காவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி கொண்டு சென்றனர் வந்தவர்கள். மிரண்டு போயினர் அங்கு இருந்தவர்கள்.

"கண்டிப்பாக இது அதோட வேலையா தான் இருக்கும். அதுக்கு இன்னும் தாகம் அடங்கல.. அதான் இன்னும் சுத்திக்கிட்டு இருக்கு..." தன்னை கடந்தபடி சென்று கொண்டிருந்தவர்களது பேச்சு காதில் விழுந்தது.

"அப்படி இருக்குமா... அதுவும் இந்த கா..ல..த்..து..ல..??! எதுவோ விஷயம் இதுல இருக்கு..!!"என்றபடி தெருவில் இறங்கி ஆகாயத்தை கண் கொட்டாமல் தரிசித்தபடி மெல்ல எட்டுக்கள் வைத்து முன்னேறினாள் பெண்.

கண்களில் எக்ஸ்ரே மிஷினை மாட்டிக்கொண்டு..அதாங்க செல்போன்... கூர்ந்து பரர்த்தாள் அவள். மூளையில் மின்னல் பளிச்சிட்டது. முகம் பிரகாசித்தது...

அங்கே அந்த கருநீல நிறமும் கடல் நிற நீலமும் கலந்தாற்போல் படுத்திருந்த வானத்தில் காற்றினிலே அலை பாய்ந்து கொண்டிருந்த அந்த மின்மினி பூச்சியின் வாலின் முனையை கண்டுகொண்டாள் அம்மங்கை.

அது செல்லும் திசையில் நடையை கூட்டினால் இப்போது. அது நேராக ஆருவின் வீட்டருகே இழுத்து சென்றது.

"இது என்ன... இவள் வீட்டுக்கு
மே..லே..யா... அப்படி..யா..னால்...?!?! "

"ச்..ச... ச்..ச... ஆருவா இருக்காது.."

"இருந்தாலும் இவள் செய்தாலும் செய்வாள்... எக்குத்தப்பாக காரியம் செய்வதில் இவளை மிஞ்ச முடியுமா என்ன..??" என்றெண்ணிய படி கதவை தட்ட முனைகையில்... காற்றிலே கானமாய் ஆண்மகன் குரல் மிதந்து வந்தது... திரும்பி பார்த்தாள். அங்கே அவன் ராஜேஷ் இவளையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

காலை தரிசனம். மனதிற்க்கினியவனின் வருகை. கேசுயல் டீ ஷர்ட்டில் வரி வடிவமாய் தெரிந்த ஆண்மை ததும்பும் மார்பும்.. முறுக்கேறிய கைகளும் மங்கையவள் மனதை மயக்கியது. விழிகளில் காதலை அடக்கி அழகாய் புன்னகைத்தப்படி சொன்னான்,

"குட் மார்னிங் கீது... என்ன இந்த பக்கம்...?"

குரலில் அத்தனை காதல்..

பெண்ணவள் கிறங்கி போக இது ஒன்று போதாதா...?! மங்கை கங்கை ஆற்று நீரில் கால் பதித்து பாவம் போக்கியது போல உணர்ந்தாள்.

அவன் இப்போது கொஞ்சம் அருகில் வந்தான். பெண்ணவள் இன்னும் அதே நிலையில் தான் இருந்தாள்.

"அட.. என்ன இது..?!" கண்கள் கூச மேலே பார்த்தான். பார்த்ததும் தான் தாமதம் ..

"அய்யோ.. அம்மா... பேய்..." என்று அலறிய படி கீதுவின் பின் சென்று ஒளிந்து கொண்டான்.

ஆண்மகன் இப்போது வெகு அருகில். அவன் மூச்சு காற்று முதுகு தண்டில் மயிலறகாய் வருடி சென்றது. அவன் மணம் பெண்ணவள் நாசியில் இஷ்டமாய் நுழைந்தது.

ஒரு நாளிலியே இத்தனை காதல் போதையா... இது தாங்குமா...?!?

அந்த புத்தம் புது காதல் பறவைகள் காதலென்னும் நிழலில் அமர வேண்டாமா...அதற்குள் அங்கே அந்த உருவம் இப்படி காதலனை கோமாளி ஆக்க வேண்டுமா.. அதுவும் அப்பைங்கிளி முன்...?!

அவன் வானத்தில் தெரிந்த அந்த வெள்ளை நிற ஆவி போன்றும்.. அதனை சுற்றி மின்னி மின்னி மறையும் ஒளியையும்... பறந்து பறந்து செல்லும் அந்த உருவத்தையும்... கண்டு வெலவெலத்து போனான். அவன் உடலின் நடுக்கம் பெண்ணவளால் உணர முடிந்தது.

"ஏய் கீது.. என்னை என்னோட வீடு வரைக்கும் கொண்டு போய் விட்ருமா..! உனக்கு கோடான கோடி புண்ணியம் கிடைக்கும்..! அட மகமாயி.. என்னை காப்பாத்துமா..." நடுங்கிய படி பதறினான் அந்த காதல் பக்தன்.

"அட லூசு பயலே.. உன்னை எந்த ரேஞ்சுக்கு நான் நினைச்சிருந்தேன். இப்படி கவுத்துட்டியே மடையா..." நொந்து கொண்டாள் பெண்.

ஆற்றாமையால் புசு புசு வென்று கோபம் வந்தது அவளுக்கு. "கொஞ்சமாது தைரியம் வேண்டாமா..?! பெண் நானே நிற்கிறேன். இவன் என்னடாவென்றால் இப்படி தொடை நடுங்கியாக இருக்கிறான். இவனை நம்பி எப்படி நான் என் வாழ்க்கையை ஒப்படைக்க நினைத்தேன்..?!" தன்னையே கடிந்து கொண்டாள்.

"அட ச்ச்சி.. வெளியே வாடா.." சாடினாள் பெண்.

"நோ.. நோ.. நான் வரல.. அங்கே மேலே பாரு.. கோஸ்ட் இருக்கு.. நம்ம மேல தான் சுற்றி சுற்றி வருது.. நீயும் ஒளிஞ்சிக்கோ.." என்றபடி அவளது துப்பட்டாவை எடுத்து இருவரது தலைக்கு மேலேயும் மூடி கொண்டான்.

தீடிரென இத்தனை நெருக்கத்தை பெண்ணவள் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது தான் காதல் மயக்கம் தெளிந்து வந்தால்.. அதற்குள் இவன் ஹனிமூனுக்கு டிக்கெட் போட்டுவிடுவான் போல..

சிந்தனையை அவன் உஷ்ணம் சுக்கு நூறாய் தகர்த்து.. இதயத்தில் காதல் கொடியை நிலைநாட்டியது.

"ஹைய்யோ.. என்ன பண்ணுகிறான் இவன்.? தெரிந்து தான் செய்கிறானா..?! நாலு பேர் பார்க்க இப்படி நடு தெருவில் நின்று கொண்டு செய்யும் செயலா இது..?!"

விழி உயர்த்தி பார்த்தாள். ஆண்மகன் காதல் பார்வை இவள் நெஞ்சை துளைத்தது. 'கண் பார்த்து முகம் நோக்கி பேசும் ஆண்மகன்கள் அத்தனை பேரும் அழகு தான்'. ஆனால் இத்தலைவன் பார்க்கும் பார்வை, சொல்லும் செய்தி, உடல் மொழி, உரிமை கொண்டாடல் எல்லாம் தலைவியை நாணத்தில் குளிக்க செய்தது.. அதுவும் இக்காலை நேர குளிரில்... ஷ்..ஷ்... தாங்குவாளா மங்கை..?!

மனம் பூரித்து போய் கிடக்க.. மான்விழி கண்கள் பம்பரம் ஆடியது... அவனோ பச்ச குழந்தையாட்டம் நடித்தான். விரல்கள் பட்டும் படாமலும் மேனியில் உரச.. பார்வை இவளை மேய... எதுவும் தெரியாதது போல அழகாய் இம்சித்தான்.

"ஏதோ பேயிடமிருந்து காப்பாற்றுவது போல சொல்லிவிட்டு இப்போது இவன் பண்ணும் வேலை தான் என்ன...?!"

"என்ன முழிக்கிற..? ஒழுங்கா மூடிக்கோ இல்லைன்னா பூதம் உள்ளே வந்திற போகுது..!" சொல்லியபடி நெருங்கி வர இடமில்லா இடத்தில் நெருங்கி வந்தான்.

மயிரிலை அளவு இடைவெளி அவன் வி..ட்..ட..து பெரிய சாகசம் தான். பெண்ணவள் இதயம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க ஆசைப்பட்டு ஓடியது.

"தக்...தக்..தக்..." மங்கையின் இதய தாளம் தப்பாமல் சத்தம் எழுப்பியது.

அவள் இதயத்தின் இசை ஆண்மகனுக்கு கொண்டாட்டமோ...?! அவன் காதலை சுவாசத்தின் மூலம் இதய சிரைகள் எடுத்துக் கொண்டு.. அவள் மனக்கிடங்கில் மறைத்து வைத்திருந்த அவன் மீதான காதலை.. தமனிகள் தப்பாமல் உடலெங்கும் தவழவிட்டது..


இந்த உணர்வை பெண்ணவளால் தாக்குப்பிடிக்க முடியாமல்... காதலை கண்களில் ஒளிர ஆரம்பித்த அந்நொடி..

ஆண்மகன் சட்டென துப்பட்டாவை விலக்கினான்.

அங்கே ஆருவின் அம்மா கதவை திறப்பது தெரிந்தது.

"அட.. கீது.. என்ன இந்நேரத்துல... ஹே.. ராஜேஷ் கண்ணா என்னடா இந்த பக்கம்..." என்று இருவரையும் பார்த்து வியந்தபடி கேட்டார்.

"ஒன்றும் இல்லை ஆன்ட்டி சும்மா... மார்னிங் வாக் வந்தேன்.. அப்படியே ஆருவை பார்த்துட்டு போகலாம்னு நினைச்சேன்.

வர்ரப்போ இவன் எதிரில் வரவும் நீங்க டோர் ஓபன் பண்ணவும் சரியா இருந்து..." சரசமாய் அவிழ்த்து விட்டாள்.

"ஓ.. சரிம்மா.. அவளோட ரூம்ல தான் இருக்கா. போய் பாரு. இன்னும் எழுந்த மாதிரி தெரியல..."

"அப்படியா.."

"ஹ்ம்ம்.. நீ போய் பாரு." என்றவர் ராஜேஸின் புறம் திரும்பி

"புதுசா ஒரு வேலையில ஜாயின் பண்ணியிருக்கியாமே.. வேலை எப்படி..? புடிச்சிருக்கா..?!"

உள்ளே செல்ல முனைந்த கீதுவின் கால்கள் இவர்கள் சம்பாஷனையில் தடைப்பட்டு காதவருகிலே மறைந்து நின்று கொண்டாள். அவன் வாய் வழி தகவல் கேட்க விரும்பியது மனம்.

"ஆமா ஆன்ட்டி.. ஜாயின் பண்ணி ஒரு மாசம் ஆகுது. ஒன்றும் பிரச்சனை இல்லை. எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கு. லைஃப்ல செட்டில் ஆகுற மாதிரி தான் சம்பளம்."

"அப்படின்னா ரொம்ப சந்தோஷம்."

பெண்ணவளுக்கும் ஆனந்தம் தான்.

"கீ..ர்..த்..த..னா அ..க்..கா.. நீங்க பார்த்தீங்களா அந்த பூதத்தை.. அதோ அங்கே நிக்குது பாருங்க...!" என்று பயந்தபடி வந்தார் பக்கத்து வீட்டு மாலதி அக்கா.

"ஆமா ஆன்ட்டி நான் கூட பார்த்தேன்" என்றபடி அவனும் சேர்ந்து கொண்டான்.

"எ..ன்..ன...?! எதை சொல்லுறீங்க...? பூதமா..?! எங்கே..?! ".

"இதோ இங்க பாருங்க" என்றபடி மேலே பறந்து கொண்டிருந்த அந்த வெள்ளை ஆவியை சுட்டி காட்டினார்கள்.

"ஹைய்யோ.. உண்மையிலே இது பூதம் தானா..?!" சந்தேகமாய் கேட்டார் கீர்த்தனா.

"பார்க்க அப்படி தான் தெரியுது". மலாதியும் ராஜேஸும் சேர்ந்தபடி சொன்னனர்.

"நம்ம டீக்கடை கணபதி காலையில வரும் போ அவரை இந்த பூதம் என்ன பண்ணிச்சோ.. ஆள் இன்னும் எழுந்த பாடில்லை... அவர் பொண்டாட்டி ஒரே புலம்பல்க்கா..." தகவல் சொன்னார் மாலதி.


"அது மட்டுமில்லை மாலதி அக்கா.. நம்ம குர்காவை இப்போ தான் ஆம்புலன்ஸ்ல ஏற்றிட்டு போறாங்க.. அவரையும் இந்த பூதம் தான் ஏதோ பண்ணியிருக்கணும்.." அவனும் தனக்கு தெரிந்த தகவலை சொன்னான்.

இவர்கள் பேச்சு தொடரவும் சரி நாம் வந்த வேலையை பார்ப்போம் என்றெண்ணியபடி.. கீது கடகடவென ஆருவின் அறைக்கு சென்று பார்த்தாள்.. அம்மணி படுக்கையில் காணவில்லை.

"இது என்னடா..?? இவள் எங்க போனா..?!"

முகத்தில் வெளிக்காற்று தீண்டவும் ஜன்னல் புறம் பார்த்தாள்.. அங்கே கும்பகர்ணி சேரில் அமர்ந்த வாக்கில் தலையை ஜன்னல் புறம் வைத்து தூங்கி கொண்டிருந்தாள்.

"இவள் எதற்கு ஜன்னலருகே சென்று உக்காந்துகிட்டே தூங்குறா..?!!" புருவம் தூக்கி யோசித்தாள் பெண்.

"ஹ்ம்ம்.. சரி தான்.. இவள் வேலையா தான் இருக்கும்" எண்ணியபடி ஆருவின் அருகில் வந்தாள். குனிந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். தெளிவாக அந்த வெள்ளை பூதம் காட்சி தந்தது..

"ஹ்ம்ம்... இதை பார்க்க தான் அம்மணி இப்படி கிடந்து தூங்குறாளா...??!"

"ஏய்.. ஏய்.. ஆரு.. எழுந்துருடி...! இது என்ன வேலை... !" ஆருவை எழுப்பியபடி கேட்டாள்.

"ச் ச் ச்... மம்மி சும்மா இரு... இல்லை நீ ஆகிடுவ டம்மி...!" சொல்லியபடி தலையை வசதியாக சாய்த்து கொண்டாள்.

"ஹே...பூசி போன கத்தரிக்காய்.. எழுந்திருடி நாயே..."

அலரலில் இப்போது ஆரு முழித்து கொண்டாள்.
"ஷ்..ஷ்..
கத்தாதடி எருமை.. கடிச்சிடுவேன் உன்னை..." பதிலுக்கு அவளும் கத்தினாள். தூக்கம் கெடுகிறதே என்ற கவலை..

"என்னடி பண்ணி வச்சிருக்க... வெளியே என்ன நடக்குதுன்னு தெரியுமா..?!"

கொட்டாவி ஒன்றை விட்டப்படி.. "எனக்கு எப்ப..டி..டி தெரியும்.??! நான் என்ன வெளியே போய் பார்த்துகிட்டா இருக்கேன்.?!"

"வர்ற கோபத்து...க்கு அடிச்சிடுவேன் உன்னை.. நீ என்னடி பண்ண.. முதல அதை சொல்லு"

"இது என்ன..?? நீ ஏன் பெட்ல படுக்கமா இங்க ஜன்னல் பக்கம் உக்காந்து தூங்குன்னா..."

சர சரவென.. ஆருவிற்கு நேற்றிரவு நடந்தது நியாபகத்திற்கு வந்தது. "அச்சோ.. மறந்துட்டே..ன்..டீ" பதறியப்படி ஜன்னல்புறம் பார்த்தாள். அவளையும் பார்த்து சிரித்தது அந்த ஆவி. கூடவே அந்த ஏரியா ஆட்களையும் தான்.

"ஹைய்யோ.. இப்போ என்னடி செய்ய..."

"இப்போ பீல் பண்ணி ஒன்னும் ஆக போறது இல்லை. முதல நீ என்ன பண்ணுனன்னு சொல்லு..."

"அ...து...வா..." என்று தயங்கிய படி விஷயத்தை சொன்னாள் பெண்..

நேற்றிரவு தூக்கம் வராமல் தவித்ததையும்.. பின் செய்த செயலையும்...

"சோ நான் மட்டும் தூக்கம் வராமல் கஷ்டப்படுற மாதிரி எல்லோரும் ப..ட..ட..ட்..டு..மே அப்டிங்கிற எண்ண..த்..து..ல..." கைகளை பிசைந்தபடி இழுத்தாள் பெண்.

"ஹ்ம்மம்ம்... மேலே சொல்லு.."

"என்..னோ..ட.. ஜிகினா பதித்த வெள்ளை துப்பட்டாவை பட்டத்துல கட்டிட்டு.."


"ம்ம்ம்... அப்புறம்..."

"அதோ..ட.. பட்டம் பார்க்க கோஸ்ட் மாதிரி தெரிய... முடியை விரிச்சபடி கோரமா ஒரு பெண்ணோட முகத்தை வரைஞ்சு... அந்த பட்டத்தோட ஒட்டினேன்.. கொஞ்சம் பார்க்க பேய் மாதிரி... இருந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சா.. அதான்... அப்படியே மின்மினி பூச்சி மாதிரி பளிச்சுன்னு தெரியட்டுமேன்னு...
கூடவே கொஞ்சம் டெக்கரேஷனுக்கு... ரேடியம் ஸ்டிக்கர்ஸ் ஒட்டுனேன்..."

"அடி பாவி.. நல்லா தான் யோசிச்சிருக்க போ...! அப்புறம்..?"

"அதை மேலே கொண்டு போய் பறக்க விட்டுட்டு நூலை அங்கே இருந்த பைப்பில கட்டிட்டேன்"

"அச்சு அசல் பேய் மாதிரியே இருந்துச்சிடி! அந்த ராத்திரி நேரத்துல பார்க்க சும்மா ஜம்ம்ன்னு இருந்து...!! சோ என்னோட பிளான் படி ராத்திரி கச்சேரிக்கு ஹீரோயின் ரெடி..." சிரித்தபடி சொன்னாள்.

"இருந்தாலும் இதை பார்த்து யாரோட தூக்கமாது போகண்ணுமே... அப்படின்னு நினைச்சி.. செக் பண்ணி பார்த்தேன்..."

"என்னடி சொல்லுற...??! எப்படி செக் பண்ணுன ?!?யாருடி அந்த சோதனை எலி.???"

"அ..து..வா...?? நம்ம ஏரியா குர்க்கா தான்...!" சிரித்தபடி சொன்னாள்.


"அப்புறம் என்ன.. அவர் என் வீட்டு பக்கம் வர்றப்போ.. பேய் மாதிரி சிரிச்சிகிட்டே... கத்துனேன்னா.. அவன் பயந்து போய் ஓடிட்டான்.." புன்னகைத்து கொண்டாள் ஆரு.

"ஹைய்யோ..."

கையை தலையில் வைத்தபடி நொந்து போனாள் கீது.

"ஏன் டி நீ பீல் பண்ணுற...??!"

"கொன்னுருவேன் உன்னை... நீ பண்ணி வச்சிருக்கிற காரியத்துக்கு... உன்னை..." கைகளால் அவள் கழுத்தை நெருக்குவது போல் செய்தாள்.

"ஏய்... என்னடி ஆச்சு..." ஆருவிற்கு இப்போது லேசான பயம் ஒற்றிக் கொண்டது.

"முதலில் மாடிக்கு போவோம் வா..." இருவரும் தட தட வென மாடிக்கு ஓடினர்.

"ஹேய் முதல அந்த பட்டத்தை அவுத்து விடுடி.."

ஆருவும் கட கடவென சென்று பட்டத்தை அவிழ்க்க பார்த்தாள். முடியவில்லை.

"என்னடி முழிக்கிற..?"

"கீது முடிச்சை எடுக்க முடியலடி..." பாவமாய் சொன்னாள் ஆரு.

"எந்த லட்சணத்துலடி கட்டுன...??!" சொல்லியபடி அருகே வந்து முயன்றாள் கீது. அவளாலும் முடியவில்லை.

"இப்போது என்ன செய்வது.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமே... இல்லாவிட்டால் ஆரு மாட்டிக்கொள்வாளே..." பதறிய மனதை அடக்கியபடி... பட்டத்தின் நூலை பற்களால் கடித்து அறுபட செய்தாள்.

நூல் துண்டிக்கப் பட்டதும் அங்கும் இங்கும் குட்டிகரணம் போட்டபடி... அந்த பூதம் வானில் பறந்து சென்றது...

"ஹேய்.. ஹேய்... என்னோட துப்பட்டாடி..." பதறினாள் ஆரு.

"வாயை மூடுடி கழுதை.." முதுகிலே ஒன்று போட்டாள் கீது.

"ஷ் ஷ்... ஏன்டி அடிக்கிற...??"

"போற சனியனை ஏன்டி கூப்பிடுற...?!"

"அது என்னோட பேவரைட் துப்பட்டாடி... !"

"ஆமா ஆமா.. இப்போ ரொம்ப முக்கியம்.. தலையே போக போகுது இப்போ உனக்கு மூடிக்க துண்டு வேணுமா...?!"

"சும்மா கம்முன்னு இரு.."

"நீ பண்ணி வச்ச காரியத்தால அங்கே குர்க்கா ஆஸ்ப்பிட்டல கிடக்கிறான்.. டீ கடைக்காரன் மயக்கத்துல கிடக்கான்... ஏரியா ஆட்கள் எல்லாம் பயந்து போய் கிடக்கிறாங்க... அது மட்டுமா...??
ஹ்ம்ம்...?!" இடுப்பில் கை வைத்து புருவம் உயர்த்திய படி சொன்னாள் கீது.

"அது மட்டு..மா..டி...?! உன் துப்பட்டாவை பேயின்னு நம்பி போலீஸுக்கு வேற தகவல் சொல்லியாச்சி... இப்போ வந்து உன்னை மாமியார் வீட்டுக்கு அனுப்ப போறாங்க.. அங்கே போய் உன் துப்பட்டா காணும்ன்னு கம்ப்பெலேய்ன் பண்ணு... சரியா...?!" நக்கலாய் முடித்தாள் தோழி.

"ஹேய்.. என்னடி சொல்லுற.. எல்லாம் நிஜமா..?!"

"பி..ன்..ன...?!! நான் என்ன பல்லாங்குழியா விளையாடுறேன்.. அடி போடி... இவளே...!!"

ஆரு அமைதி ஆகி விட்டாள். அவள் செய்த முட்டாள் தனம் , அவளை எங்கு கொண்டு போய் விட்டிருக்கிறது. ஆருவின் மௌனம் கீதுவிற்கு புரிந்தது. அதை கலைக்க விரும்பவில்லை அவள்.

வானமகள் இப்பொழுது நிலா குளியல் முடிந்ததன் அடையாளமாக மஞ்சள் பூசி... முகம் சிவக்க.. சூரியனை நெற்றியில் பொட்டு வைத்து... அன்றைய வேலைக்கு தயாராகி காட்சி தந்தாள்.

காலை நேர இளம் வெயில் ஆருவின் முகத்தில் பட்டு தங்கத்தில் ஜொலித்தது... அவளை தேவதையாட்டம் காண்பித்தது.. கூடவே அவள் கழுத்தில் அணிந்திருந்த அந்த நீல பச்சை டாலரும் ஒளிர்ந்தது மயில் நீல நிறத்தில்...

ஆச்சர்யப்பட்டு போனாள் கீது. இது என்ன... வித்தியாசமாய்...

ஆரு தங்க நிறத்தில் ஜொலிக்க... அக்கற்கள் பசுமை கலந்த நீல நிறத்தில் ஒளிர... சாட்சாத் அந்த கடவுள் லட்சுமி தேவியாட்டம் தெரிந்தாள்.

கீதுவிற்குள் பரவசம் பொங்கியது. ஏதோ ஒருவித புது அனுபவத்தை அவளுள் பாய்ச்சியது.. அவ்வொளி மெதுவாக பட்டு தெறித்து... ஒளி பிரகாசமகி... பின் சட்டென மறைந்து விட்டது.. இது என்ன விதமான கற்கள்...?!

ஒரு நொடி மேனியே சிலிர்த்து விட்டதே.. அ..ப்..ப..ப்..பா... இப்பொழுது கூட ஸ்பரிசம் கூசுகிறதே...

"ஹேய் ஆரு.. ஆரு.." தோள் தொட்டு அழைத்தாள் கீது..

"ஹ்ம்ம்.. நான் இந்த அளவுக்கு சீரியஸ் ஆகும்னு நினைக்கலை கீது.. அந்த குர்க்காகக்கு ஏதும் ஆகிடுமா ...?!
டீ கடைகாரன் முழிச்சிப்பானா..??!"

"அதெல்லாம் ஒன்றும் ஆகாது... நீ பயப்படாதா... நீ தான் பன்ணுனன்னு எந்தவித ஆதாரமும் இல்லை. அதோட.. இதை யாரு பெருசு படுத்த போறா... நீ தைரியமா இரு.. இனி இப்படி லூசுதனமா எதுவும் பண்ணி தொலைக்கதா... சரியா..."

"ஹ்ம்ம்..." பூம் பூம் மாடு போல தலையை ஆட்டிப் கொண்டாள்.

"அப்புறம் இந்த செயின்..." என்றபடி அவள் கழுத்தில் அணிந்திருந்தை தூக்கி காண்பித்தவள்... "இந்த டாலர் இப்போ மின்னுச்சிடி... அது பார்க்க ஏதோ தெய்வீகமா இருந்து... நானே ஒரு நொடி ஸ்தம்பித்து போய்ட்டேன் டி..."

"இது அன்றைக்கு இருட்டுல வந்த ஆ..ள்.." ஆரு முறைக்கவும்...
"சரி சரி தேவேந்திரன் தானே உனக்கு தந்ததா சொன்ன... ??ஹ்ம்ம்..??"

"ம்ம்ம்.ஆமா".

"இது ஒரு வேளை வைரமா இருக்குமோ.. அழகா ஜொலி ஜொலிச்சுடி... பேசாம விற்றுவிடுவோமா..."

"பேசாம ஓடிரு.. மவளே... நானே இதை அவனோட நியபகர்த்தமா வச்சிருக்கேன். இதை போய் விற்க சொல்லுற..அதுவும் இல்லாம இது எனக்கு சொந்தமானது இல்ல. கண்டிப்பா அவன் வருவான்.. அப்போ இதை அவன்கிட்ட கொடுப்பேன். அதுவரை என்னோட பதுகாப்புல இது இருக்கும்."

"இனி இது போல பேசாத.." சொல்லியபடி அவள் கீழிறங்கி செல்லும் ஆருவையே கீது பார்த்துக்கொண்டு இருந்தாள்..
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மை செல்லம்ஸ்...:smiley6:

உங்களுக்காக இதோ அடுத்த பதிவு. படிச்சிட்டு மறக்காம ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க:WritingSmiley:
உங்கள் எல்லோராட ஆதரவிற்கும் நன்றி.

அப்புறம் சபை மெம்பேர்ஸ்க்கு சொல்லி கொள்வது என்ன வென்றால்.. புதிர் என்று ஒன்று கொடுத்தால் பதில் என்று ஒன்று வர வேண்டாமா... :rolleyes: :smiley4:தோழிகளே கொஞ்சம் புதிர் அவிழ்க்க முயலுங்கள். வாருங்கள்:);)(y):smiley29:





:smiley44:



ஹீ ஹீ ஹீ...

உங்கள் மைண்ட் வாய்ஸ் கேக்குது... இருந்தும் என்ன பண்ண... என்னோட தொல்லையை நீங்கள் பொறுத்து தான் ஆகணும்....


See u... Tata... plsu Try to solve puzzle and give ur valuable cmts dears...

Then thank u thank u for ur supportma...
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 14

14878

'காலங்கள் கடந்தாலும்
காத்திருப்பது சுகமே...
காதல் உலகில்...!'

"ஹா..ய் இளங்கோ அங்கிள்...!" புன்னகை முகமாக வரவேற்றான் ரவி. ஏர்போட்டிலிருந்து அழைத்து செல்வதற்காக வந்திருந்தான் அவன்.

தடுப்பு தாண்டி வந்தவரை கட்டியணைத்து தன் அன்பை பறைசாற்றினான். "ஹாய் லதா ஆன்ட்டி". என்றபடி அவருக்கும் ஒரு அட்டெண்டஸ் போட்டவனை... இளமை பொங்கும் நவயுக குமாரி நேகா ஆசையாய் தன் இருப்பை அவனுக்கு காட்டினாள் அவன் வரவேற்ற பாணியிலே...

"ஹேய்... நீ இன்னும் அந்த பெர்பியும் தான் யூஸ் பண்ணுறீயா... ?!" கழுத்தோரமாய் தன் கூர் நாசியினால் மணத்தை உள்ளிழுத்த படியே வினவினாள்.

புன்னகையை பதிலாக கொடுத்தான்.

"அப்புறம் சொல்லுங்க அங்கிள்.. ட்ராவல் ஒன்றும் பிரச்சனை இல்லையே..??"

"நோ பிரோப்ளம் மை சன். இட்ஸ் குட்". ரவியின் தோளில் கை போட்டு அணைத்தபடியே பதில் கூறினார் இளங்கோ.

" உங்களுக்கு தங்குவதற்கு எங்க வீட்லயே ரூம் அரேஞ் பண்ண சொல்லிட்டேன். சோ இன்றைக்கு ரெஸ்ட் எடுங்க. அப்புறமா உங்களோட பிளான்ஸ் எல்லாம் பார்த்துக்கலாம். சரியா அங்கிள்..?!"

"ஓ கே டா. உன் விருப்பப்படியே நடக்கட்டும்". பேசியபடியே
அவர்கள் எல்லோரும் ஏர்போட்டிலிருந்து வெளியே கார்பார்க்கிங்ற்கு சென்றடைந்தனர்.

நால்வரும் காரில் ஏறி கொள்ளவும் அந்த வெள்ளை நிற ஆடி கார் தென்றலாய் புறப்பட்டது.

முன் சீட்டில் ரவியும் நேகாவும், பின் சீட்டில் இளங்கோவும் லதாவும் அமர்ந்து கொண்டனர்.

"ஹே நேகா.. டேஷ் போர்ட் கொஞ்சம் ஓபன் பண்ணு.." காரை ஓட்டிய படியே சொன்னான்.

"அதோ அந்த ப்ளூ கலர் ஃபைலை எடு".

சொன்னபடியே அவளும் எடுத்து கொடுத்தாள். தலையை பின்புறமாக திருப்பியபடியே சொன்னான், "அங்கிள் இது தான் நாங்க புதுசா கட்டிக்கிட்டு இருக்கிற ரெஸ்டாரண்ட். அம்மாவோட நினைவா இருக்கட்டும்ன்னு நாங்க ஆசைப்படுறோம். பாருங்க. உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க. உங்களுக்கும் அம்மாவை நல்லா தெரியும். சோ அவர்களுக்கு பிடிச்சதுல ஏதாவது நான் மிஸ் பண்ணியிருந்தேனா... நீங்க எனக்கு கைட் பண்ணுங்க.. "

"சுயர் மை பாய். ஆனால் உங்க அப்பாகிட்ட கேட்டாலே சொல்லுவார்டா. அவருக்கு தெரியாததா எனக்கு தெரிய போகுது.? உ ..உ..ங்..க அம்மாட்ட நான் அந்த அளவு நெருங்கி பழகுனது இல்..லை..டா ரவி. இருந்தாலும் ஏதாவது நினைவுக்கு வந்தா சொல்லுறேன் சரியா..?!"

"போதும் நிறுத்துங்க.டேய் ரவி என்னடா இது..? வந்தவுடனே ஆரம்பிச்சிட்டிங்களா...எப்போ பாரு பிஸினஸ் தானா...??!" குறைப்பட்டாள் லதா நேகாவின் அம்மா.

ஆண்கள் இருவரும் சிரித்து கொண்டனர்.

"என்னங்க நீங்க..??! பிஸ்னஸ் எல்லாத்தையும் கொஞ்ச நாளைக்கு ஓரங்க்கட்டிட்டு ரெஸ்ட் எடுக்கிற வழியை பாருங்க."

"இந்த இந்தியா ட்ரிப்ல நீங்க எந்த வேலையையும் பார்க்க மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கீங்க. மறந்திறாதீங்க" விரல் நீட்டி எச்சரித்தாள் லதா.

"சரி தான். எஜமானி அம்மாவே சொல்லிட்டீங்க நான் கேக்கமா இருப்பேனா...?!!" அழகாய் நடித்துக் கொண்டார்.

"ம்ம்ம்... இப்போ இப்படி சொல்லிட்டு அப்புறம் ஏதாவது வேண்டாத வேலை பார்த்திங்கன்னு வைங்க...??!"

"ஹா ஹா ஹா.." நேகாவும் ரவியும் சிரித்து கொண்டனர். அவர்களுக்கு தான் தெரியுமே. ஓய்வு என்று கூறினாலும் அவரால் கொஞ்ச நேரம் கூட சும்மா அமர்ந்திருக்க முடியாதே...

"என்ன சிரிப்பு..??! ஹாங்..." இப்போது இளசுகள் அத்தையின் பிடியில் மாட்டிக்கொண்டனர்.

"போங்கம்மா.. உங்களுக்கே நல்லா தெரியும் அப்பாவை பற்றி.. !"

"அவரே அடங்கி வீட்ல இருந்தாலும் நீங்க இருக்க விட மாட்டிங்க போல.?!?"

"ஹா ஹா ஹா..." சிரித்து கொண்டாள் நேகா.

அப்படியே பேசி கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

எல்லோரும் பரஸ்பர பேச்சு பேசிய படியே உள்ளே செல்ல ஆயத்தமாயினர்.

இளங்கோவின் போன் ரிங் ஆகவும் அவர் மற்றவர்களை பார்த்து ரவி நீங்க எல்லோரும் வீட்டுக்கு உள்ளே போங்க.. நான் பேசிட்டு வந்திருதேன்.

"ஹ்ம்ம்... சொல்லு".
........
"தென் வாட் அபௌட் ஸ்டார்ஸ்...?"
........
"கோ டு ஹெல் மேன்..."
.......
"டோன்ட் ஷோ யுவர் பேஸ்".

கோபம் கொப்பளிக்க போனை அணைத்து விட்டு உள்ளே சென்றார்.
##############

"நீங்கள் எத்தனை பாரம்பரியமாகவும் நவநாகரீகமாகவும் இதை கட்டி முடிச்சாலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக மகிழ்ச்சியை கொடுப்பது ஊஞ்சல்தான்ன்னு நான் சொல்லுவேன். ஆனால் இப்பொழுது எல்லாம் இந்த பழக்கம் ரொம்ப குறைஞ்சு போச்சு. முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக ஆடினார்கள். ஆனால் இப்போ அப்படி கிடையாது. முடியவும் முடியாது".

கைகளை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தாள் ஆராதனா. பேசும் அழகில் கவரப்பட்டவனாய் ரவியும் அவள் கொஞ்சு மொழியை ரசித்து கொண்டிருந்தான் அவளுக்கு தெரியாமல். ஏர்போட்டிலிருந்து அவர்களை வீட்டில் விட்டு விட்டு ஆபிஸ் வர தாமதம் ஆகவே அவர்களை அவன் கட்டி கொண்டிருக்கும் ரெஸ்டாரண்ட்ற்கு தான் இன்று வர சொல்லியிருந்தான். அவளும் அகிலும் முன்னவே அங்கு வந்திருக்க அங்கு என்னனென்ன மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் பேசி கொண்டிருந்தார்கள்.

வந்தது என்னவோ பெயின்டிங்ஸ் எப்படி அமைப்பது என்ற ஐடியாவிற்காக... ஆனால் இவர்கள் செய்வதென்ன..?! ஏதோ அவர்களது ரெஸ்டாரண்ட்ற்கு டிசைன் எப்படி செய்யலாமென இங்கே பட்டி மன்றம் நடத்தி கொண்டிருப்பது என்ன..?!

"ஊஞ்சல் ஆடுறது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அகில்.. மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.! எப்படின்னு கேளுடா..??!" அம்பேந்திய வில்லாக புருவங்கள் விரிய பெண்ணவள் ஆர்வமாய் பேசினாள்.

"ஹ்ம்ம்.. வேண்டாம்னாலும் விடவா போற... சொல்லு.. எப்படின்னு சொல்லி முடி..." ஆர்வமே இல்லாமல் வினவினான் அகில்.

"ஹாங்.. அப்படி கேளுடா என் தகரடப்பா ஃப்ரென்ட்டு..!! நாம் ஊஞ்சலில் ஆடுறதனல மனசுல உள்ள நெகடிவ் எண்ணங்கள் எல்லாம் மறைஞ்சு பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுதாம். அதோட மனசுக்கு ஒருவித புத்துணர்வையும் கொடுக்குது. தெரியுமாடா உனக்கு...?!"

"எனக்கு எப்படிமா தெரியும்..? அதுவும் எரிச்சல் கொடுக்கவே நீ இருக்கும் போது..???! இதை தான் நோயும் நீயே மருந்தும் நீயேன்னு சொல்லுறதோ..??!"

"டேய்... என்னடா சொன்ன...?!"முறைத்து கொண்டாள் பெண்.

"ஒன்றும் இல்லைம்மா தாயே.. நீ சொல்லு. அடியேன் கேட்கிறேன்" இலித்தபடியே சொன்னான்.

"ஹ்ம்மம்ம்... என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்...??!" இடுப்பில் இடக்கையை மடக்கியப்படி வைத்து, வலக்கையை இதழோரமாய் தடவியபடியே யோசித்தாள்.

அந்த தோரணையில் கவரப்பட்டவனாய் அவளை ரசித்து பார்த்தான் ரவி. அவளது அசைவுகள் சிரிப்புகள் ஒவ்வொன்றும் அவனிதயத்தின் ஓட்டத்தை வுசெய்யின் போல்ட் ரேஞ்சிற்கு உயர்த்தியது(வுசெய்யின் போல்ட் என்பவர் நம்பர் ஒன் ஓட்ட பந்தய வீரர்). பாவம் அவன். அவளால் எழுப்ப பட்டு கொண்டிருக்கும் உணர்வுகளை அடக்க அரும்பாடு பட்டான்.

"எப்படி.. இந்த சிறு பெண்ணிடம் தலை குப்புற விழுந்தேன்..?! நான் பார்க்காத அழகிகளா... குணவாதிகளா..?! இருந்தும் இவள் என்னை ஈர்க்கிறாளே..! இவள் தான் என் உலகம் என்று மனம் அடம் பிடிக்கிறதே..

அந்த ஒரு நாள் சம்பவத்தை தவிர்த்து இன்று இவளுடனான சந்திப்புகள் ஒன்றும் அந்த அளவிற்கு சொல்லும் படியாக இருந்ததில்லையே.. அவள் அவளாக தான் இருக்கிறாள். நான் தான் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொண்டு இவளுக்காக ஏங்கி தவிக்கிறேன். ஹ்ம்..ம்..ச்.." சலித்துக் கொண்டான்.

"ஹ்ம்ம்.. சொல்லுடா தேங்காய் மண்டையா.. என்னடா சொல்லிக்கிட்டு இருந்தேன்...??" ஆரு.

"ஹாப்படி.. மறந்துட்டா.. நான் தப்பிச்சேன்". நெஞ்சில் பூத்தது மகிழ்ச்சி பூ.

"நான் சரியா கவனிக்கல ஆரு.." அண்டபுழுகு புழுகினான் அகில்.

"ஹா..ங்... நியாபகம் வந்துட்டு.."இரு கைகளையும் மேலே தூக்கி ஆட்டியபடி ஆர்ப்பரித்தாள்.

"ஹைய்யோ வடை போச்சா...!" மனதில் நொந்து கொண்டான்.

"ஊஞ்சல் பற்றி சொல்லிக்கிட்டு இருந்தேன். சரியா... ??! அப்புறம் ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாம். அதான் கோவில்களில் கூட இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டி விழா கொண்டாடுறாங்க". அந்த ரெஸ்டாரண்டின் ஒவ்வொரு இடமாக சென்று பார்த்துக்கொண்டே சொல்லி கொண்டிருந்தாள்.

"அப்புறம் உனக்கு தெரியுமா...?? பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பாங்களாம். வீட்டுக்குள் வரும் தேவதைகள் எல்லாம் வீட்டின் முன்னே இருக்கும் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்களாம்!

அப்படியே சந்தோசமா ஊஞ்சலில் ஆடிகிட்டே நல்லது செய்வார்களாம் இதெல்லாம் அவர்களது நம்பிக்கையாம்" வியப்புடன் சொன்னாள்.

"அது சரி.. இப்போ எதுக்கு இவ்ளோ விலா வரியா இதை சொல்லுற...?"

"அது..வா...டா..

இந்த ரெஸ்டாரண்ட்ல.. சாதாரணமா போடுற சேர் சோபாக்கு பதிலா... டிசைன் டிசைனா... ஊஞ்சல் கட்டி போட்டா என்ன...?!" கண்கள் மின்ன சிறுப்பிள்ளையாய் கேட்டாள்.

"ஹா ஹா ஹா.. நல்ல ஜோக் போ..." குலுங்கி குலுங்கி சிரித்தான்.

"ஏன்டா.. பேய்க்கு டப்பிங் கொடுக்கிற மாதிரி சிரிக்கிற...??"

சிரித்தபடியே சொன்னான்.. "இது என்ன உன்னோட ரெஸ்டாரண்டா..?! வளைச்சு வளைச்சு பிளான் போடுற... கொஞ்சம் அடக்கி வாசி... நாம இங்க வந்திருக்கிறது பெயின்டிங்ஸ்க்கு தேவையான இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணுறதுக்கு... அதை விட்டுட்டு.. நீயா லூசு தனமா பிணத்தாத..."

"போடா... லூசு பயலே... அப்படி பண்ணா அழகா இருக்கும்னு தான் சொன்னேன். அதற்காக ஓவர்..ரா பேசாத.." என்றபடி அருகே இருந்த பைலை கொண்டு அவனை சாத்தினாள்.

"ஹே... விடுடி...! ஹைய்யோ அம்மா..! கொல்லுறாளே...!" அவள் கொடுக்கும் அடிகளை வாங்கிய படியே அலறினான்.

இதை தூரத்தில் நின்று பார்த்து கொண்டிருந்த ரவிக்குள் பொறாமை தீ பற்றி கொண்டது. நட்பு கலந்த சகோதர உறவு தான். இருந்தும் காதல் கொண்ட மனம் குரங்காய் தாவியது.

தனக்கானவள் அடுத்தவனை தீண்டுவதா..?! என்ன உறவாக இருந்தால் என்ன..? அது எனக்கு மட்டும் தான்..! மனம் ஸ்திரமாய் முரசு கொட்டியது.

மேலும் நின்று அதை ரசிக்க விரும்பாமல் வேக எட்டுகளுடன் அவர்களை வந்தடைந்தான்.

"ஹலோ மிஸ் அண்ட் மிஸ்டர்.." வார்த்தைகள் அழுத்தமாய் பிறந்தது.

சிரித்த முகமாகவே திரும்பிய ஆரதனாவின் கண்கள் இவனை கண்டதும் பதறியது. என்ன இது..?? இவன் எப்போது வந்தான்.?? எதற்கு இத்தனை பாசமாய் முறைக்கிறான்...!

"ஹலோ சார்" என்றபடி அகில் அவனுடன் கை குலுக்கி கொண்டான்.

"ரொம்ப சீக்கிரமா வந்துடீங்களா அகில்.."

"நோ சார். 10 மினிட்ஸ் தான் ஆச்சு சும்மா சுத்தி பார்த்துட்டு இருந்தோம்."

"ஓ. உங்களுக்கு தேவையான ஐடியாஸ் கிடைச்சுதா... ??"

"ஐடியா வா...?! நான் எங்க பார்த்தேன்..? இவள் தான் கிறுக்கு தனமா பேசியே ரம்பம் போட்டுக்கிட்டு இருந்தாலே..." கண்களால் முறைத்தான் ஆருவை.

"ஹீ ஹீ.." இப்போ இவன் எதுக்கு வெட்டவா குத்தவான்னு பார்க்கிறான்..?!
அவனை சமாளிக்கும் பொருட்டு ஆருவே பதில் சொன்னாள்.

"இன்னும் கொஞ்சம் பார்த்துட்டு அப்புறம் சொல்லுறோம் சார்."

"ஓ. கே. நீங்க பாருங்க. எனக்கு வேற வேலை இருக்குது. மதியம் உங்க கூட ஜாயின் பண்ணிக்கிறேன்.." சொன்னபடி அவன் சென்றுவிட்டான்.

"சரிடா.. இங்கே வா. இதை பிடி" என்று ஒரு பைலை அவனிடம் கொடுத்தவள். "ஹ்ம்ம் முதல நான் போறேன்.. பின்னாடி நீ வா. நான் என்னோட ஐடியாவை நோட் பண்ணிக்கிறேன். அதே போல நீயும் உன்னோடதை நோட் பண்ணிக்கோ..." சொல்லிவிட்டு அவள் ஒவ்வொரு இடமாக பார்க்க ஆரம்பித்தாள்.

அகிலும் அவளுக்கு பின்னே தான் சென்று கொண்டிருந்தான். அவனுக்கு மேனேஜரிடம் இருந்து அழைப்பு வரவும் உடனே வேறு ஒரு வேலை சம்மந்தமாக கிளம்ப வேண்டி வந்தது. சரி ஆருவிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என்றால் அவளை காணவில்லை. அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் தான் கிளம்பி விட்டதாக அவளிடம் சொல்லுமாறு தகவல் சொல்லி விட்டு கிளம்பிவிட்டான்.

ஒவ்வொரு இடமாக சென்று பார்த்துக்கொண்டிருந்த ஆருவிற்கு அலுப்பு தட்டவே இல்லை. எல்லாம் வெகு நேர்த்தியாக மிகவும் ரசித்து வடிவமைத்தது போல இருந்தது. இவள் வரைந்து கொடுக்கும் பெயின்டிங்ஸ் மட்டும் மாட்டினால் இந்த இடமே கூடுதல் அழகோடு மிளிரும் என்பதில் துளி அளவேணும் ஐயமில்லை.

ஆருவிற்குள் உற்சாகம் குமிழிட்டது. ரசித்தபடியே அந்தந்த இடத்திற்கு ஏற்றாற்போல் மனதில் வரைந்து கொண்டாள்.

நேரம் செல்லவே ஆருவிற்கு ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் போல தோன்றவே திரும்பி வந்த வழியே செல்லலானாள்.

வருகின்ற வழியில் அங்கிருந்த தோட்டம் அவளை வெகுவாக கவர்ந்தது. உயர்ரக செடி கொடிகள் மட்டுமில்லாமல் சாதாரண மக்கள் வீட்டில் வளரும் செடிகள் முதற்கொண்டு அங்கே அலங்கரித்து கொண்டிருந்தது.

அதுவும் அந்த ஜாதி மல்லி பூ செடி அவளை சுண்டி இழுத்தது அதன் மணத்தால்.ஆழ்ந்து மூச்சிழுத்து அனுபவித்தாள் மங்கை.

"ஜாதி மல்லி பூச்சரமே...
சங்கத்தமிழ் பாச்சரமே...
ஆசையென்ன ஆசையடி..
அவ்வளவு ஆசையடி...

எ..ன்..னெ..ன்..ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ...!


ஹ்ம்மம்ம்..மம்ம்ம்ம்...."

இதழ்கள் பாடலின் வரிகளை முணுமுணுக்க... பெண்ணவள் தளிர் கரங்களால் பூக்களை தென்றலாய் வருடினாள். குனிந்தமர்ந்து நாசியில் பூக்களின் மணத்தை நுகர்ந்தாள். கண்மூடி அதை உள்ளிழுத்தால்.

கருப்பு வெள்ளையாய் அந்த நிழலுருவம் வந்து நின்றது.

தன் பின்னே வெகு அருகில்... அத்தனை நெருக்கமாய் அவன் வந்து அமர்ந்தது கூட உணராமல் அந்த நிழல் தேஜாவூ விடம் மனம் லயித்து போயிருந்தாள்.

"பூக்கள் கூட வெட்கப்படும்
உன் விரல் நுனி தீண்டுகையில்...
அப்படி இருக்கையில்..
உன் நாசிநுனி முத்தம் தாங்குமா...?
பெண்ணே.. உன்னால் நான் பூக்கிறேன்..
மேலும் மேலும்...
மணமாய்... மயாஜாலமாய்..."


மீசையின் நுனிகள் செவியினை முத்தமிட... உடலில் மின்சார தூண்டல். காந்தமாய் கவர்ந்திழுக்கும் அந்த குரல் சொன்ன வரிகளில் இருந்த அர்த்தம் பெண்ணவளை சரித்தது. சட்டென கேட்ட அந்த குரலால் பட்டென திரும்பினாள்... அங்கே வெகு அருகில் அவன். ரவி...

கண்கள் கவி பாட.. இதழ்கள் நெருக்கத்திற்காக அழைக்க.. பெண்ணவள் அப்படியே அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ அடுத்த அத்தியாயம் போட்டாச்சு.. படிச்சிட்டு மறக்காம ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க... அப்புறம் இது தான் அந்த கோஸ்ட் காத்தாடி...
14879

யாருக்கேனும்
வேணுமா...???!!!:smiley28:
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 15


14887

"இதழ் தீண்டாமல்...
விரல் தொடாமல்...
பார்வை வீழ்த்தியது!

கதை பேசாமல்..
லயம் தேடாமல்...
இதயம் சரிந்தது..!

உன்னால்.. எல்லாம் உன்னால்.. !"


தன் காதருகே கேட்ட அந்த வரிகளின் வீரியத்தில் ஆருவின் உடல் சிலிர்த்தது. உண்மையில் இவன் யார்.? என்னை ஏன் பாடாய் படுத்துகிறான்...?? இவனை சந்தித்து வாரங்கள் கூட ஆகி இருக்காது.. அதற்குள் என் உணர்வுகள் அடங்காமல் ஆர்ப்பரிப்பது ஏனோ...?! நிழலை தேடவா.. நிஜத்தை ஏற்கவா... ? மனம் இவனிடத்தில் ஏன் இத்தனை விருப்பமாய் சரணாகதி ஆக விரும்புகிறது... ?! மனதில் ஆயிரம் கேள்விகள் துளைக்க பெண்ணவள் தன் எதிரே அமர்ந்திருந்த அந்த ஆண்மகனின் நெருக்கத்தை விரும்பியே ஏற்றது.

கண்கள் பேச பாஷையில்லை... மூக்கின் நுனி இடைவெளி தூரமில்லை... இதழ்கள் தீண்ட இடமில்லை... ஈருடலும் மோதவில்லை..
ஆனால் எல்லாம் நடந்தது போல ஒரு பிரம்மை மனதில் எழாமல் இல்லை.

இரு உள்ளங்களும் அந்த இடைவெளி கலந்த நெருக்கத்தை விரும்பியது. ஆண் மகன் தன் உள்ளத்தை பெண்ணவளுக்கு ஒரு துளி மிச்சமின்றி கண்களில் காட்டினான். பெண்ணவள் உள்ளம் குழம்பியது. இது சாத்தியமா... இவனிடம் எனக்கு அந்த தேஜாவூவிடம் எழுந்த அதே பாதுகாப்பு உணர்வு எழுகிறதே...?!

அன்று வந்த அந்த நிழல் இங்கே கண்ணெதிரே இருக்கும் நிஜத்திடம் உணர்கிறதே...??!

நிழலும் நிஜமும் நின்று என் உணர்வுகளை இப்படி பந்தாடுகிறதே...?!

அவன் சட்டை துணி உடலில் மோதி காதல் ஹார்மோன்களை நரம்பெங்கும் கடத்தியது. பெண்ணவள் மெதுவாக இமைகளை தாழ்த்த முற்பட்டாள். அதே நேரம் ஆண்மகன் அவனது முகத்தை உயர்த்தினான். இது போதாதா.. சங்கமிக்க...?! அவள் நாசியின் நுனியில் அவனது இதழ் மொட்டுக்கள் பட்டு சிதறியது. முதல் முத்தம். ஆம்.. இதை முத்தம் என்றால் தகும் தானே...??!

இந்த ஜாதி மல்லி பூக்களை விட அழகு நீ என்பதை உணர்த்த கொடுத்தானோ இந்த மூக்கு நுனி முத்தம்?!

கன்ன கதுப்புக்கள் செந்தாமரையாய் மலர்ந்தது அவளுக்கு. அவன் மூச்சு காற்றின் வெட்பம் மூச்சடைக்க செய்தது.

தாக்குப்பிடிக்க முடியாமல் கீழிதழை மேலிதழால் கடித்துக் கொண்டாள். ஆண்மகன் யோக்கியம் காணாமல் போக வழி வகு..த்..த..தோ..??! பெண்ணவளின் இச்செய்கை.! மெதுவாக அவள் நாடியை பிடித்து உயர்த்தினான். சிப்பியாய் இமைகள் மூடியிருக்க.. அதன் அழகில் கவரப்பட்டவனாய் அடக்கமாட்டாமல் இதழ் பதித்தான் அம்முத்துக்களை அள்ள.
உன்னுடன் என்றும் எப்போதும் நான் பயணிக்க விரும்புகிறேன் என்று உள்ளம் காதல் மொழி பேசி..ய..து பெண்ணவளுக்கும் புரிந்ததோ..?!

எந்தவித தங்கு தடையின்றி காதல் வெள்ளம் கரை புரண்டோட வழி செய்தது இம்முத்தம்.

முத்தத்தின் சுவை எதையென்பேன்..?!
மழலையின் முதல் உணவா...
மங்கையின் இதழ் மணமா...
இதயம் வரை துளைக்கிறதே!
ஹப்பப்பா...
இப்படி ஆர்பரிக்கிறதே நெஞ்சம்...
உன்னில் கலந்திட..!


நொடிகள் கடக்க மனமே இல்லாமல் விலகினான் அவன்.

அழகான கனவு ஒன்று கலைந்தது போல இருந்தது இருவருக்கும்.

அவன் முகம் நோக்க சங்கடப்பட்டு பெண்ணவள் நிலம் பார்த்தாள். அவனுக்கு புரிந்தது அவளது தவிப்பு.

அவளை அவனை நோக்கி அமருமாறு செய்துவிட்டு பேச தொடங்கினான்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும். எல்லாத்தையும்...என் மனசுல உள்ள எல்லாத்தையும். ஒன்றுவிடாம எதையும் மறைக்காமல்... நான் சொல்லுறதை பொறுமையா கேட்பியா...?!"

அவன் கண்களை இப்போது நேருக்கு நேர் சந்தித்தாள் அவள். அவன் சொல்வது போல் இப்போது பேசி தான் ஆக வேண்டும். இந்த உணர்விலிருந்து விடுபட இது தான் வழி.

ஹ்ம்ம்... சொல். நான் கேட்கிறேன். எனபது போல் விழியோடு விழி பார்த்தாள்.

"உனக்கு ஏதாவது தோணுதா என்னை பார்க்கும் போது? ஏதாவது நியாபகம் இருக்குதா...?!"

இவன் எதை கேட்கிறான்..?! இவனை பற்றி எனக்கென்ன தெரியும்?! இவனை இதற்கு முன் நான் எங்கே பார்த்தேன்... நியாபக படுத்த என்ன இருக்கிறது...? பேந்த பேந்த முழித்தபடி வினவினாள்...

"எ..ன்..ன நியா..பக..ம்..?"

"ஹ்ம்ம்..
அப்படின்னா உனக்கு எதுவும் நியாபகத்துக்கு வரல...

சரி விடு...

நீ என்ன நினைக்கிறாய் என்னை பற்றி.."

என்னடா இது.. இவன் இப்படி பட்டென கேட்கிறான்..?

"ஹாங்....
உங்களை ப..ற்..றி நினைக்க எ..ன்..ன இருக்கு...?" புரியாதது போல கேட்டாள்.

சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவள் தோளில் முகம் பதித்து.. கூந்தல் மணத்தை ருசித்தபடியே... சொன்னான்.

"இப்போ சொல்லு...
உனக்கு இப்போ எப்படி பீல் ஆகுது..."

இதயம் லப்-டப்....லப்-டப்... என்பதற்கு பதில்... ல...வ் மீ.... கி...ஸ் மீ... என்று பாடியது..

"ஏன் அமைதியா இருக்குற.. சொல்லு.. உனக்கு என்னோட அணைப்பு கஷ்டமா இருக்கா... ??! ஹ்ம்ம்... சொல்லு... மறைக்காத... எதுவா இருந்தாலும் சொல்லு...!"

இப்படி சொல்லு சொல்லுன்னு சொன்னா நான் என்னத்தைடா சொல்லுவேன். என்னோட இதயகீதத்தை சொன்னா காரி துப்பமாட்ட... அட..போடா...

அவளுக்கு பதில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதை அவளால் இப்போது சரியாக கையாள முடியும் என்று தோன்றவில்லை. எனவே மௌனம் சந்தித்தாள்.

"என்னால இதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியும்..ன்..னு தோணல பேபி.. உன்னை இப்படி ப..க்..க..த்துல வ..ச்..சி..க்..கிட்டு.. ம்ஹும்... ஒரு நிமிஷம் கூட தள்ளி நின்னு வேடிக்கை பார்க்க முடியலடா. இப்படி என்னோட கையணைப்பிலேயே வச்சிருக்கணும்னு தோணுது. பிளீஸ் பேபி புரிஞ்சிக்கோ."

அவள் ஒன்றும் பேசவில்லை. நடப்பதை அதன் போக்கில் போகவிட்டாள். அவன் தொடர்ந்து பேசலானான்.

"நான் செஞ்சு முடிக்க வேண்டிய கடமை ஒன்று பாக்கி இருக்கு. அதை செட்டில் பண்ணிட்டு தான் உன்கிட்ட இதைப்பற்றி பேசணும்ன்னு நினைச்சிருந்தேன். ஆ..னா..ல் உன்னை நேரில் பார்த்ததற்கு அப்புறமா... சத்தியமா முடியலடி...!

உனக்கு இதை நம்புவதற்கு கஷ்டமா தான் இருக்கும். பட் அது தான் உண்மை."
சொல்லியபடி அவள் நெற்றியில் இவன் நெற்றி கொண்டு முத்தமிட்டான். இதழ் தீண்டினால் தான் முத்தமா..?!

அனைத்தையும் கேட்டவள் அமைதியாக கேட்டாள் அவனிடம், "ஏ..ன்..? எதற்காக எ..ன் மேலே...?!"

பிறந்து வளர்ந்தது எல்லாம் தங்க கரண்டி என்பார்களே... அது போல எந்தவித கஷ்ட நஷ்டங்களும் தெரியாமல் வளர்ந்தவன்... இப்படி நடுத்தர குடும்பத்து பெண் மேல் காதல் என்றால் அதை அவளால் எப்படி ஏற்று கொள்ள முடியும்.

கண்டிப்பாக இவன் என்னை முன்னே பார்த்திருக்க வேண்டும். ஆனாலும் என்னிடம் காதல் வரும் அளவு அப்படி என்ன இருக்கிறது..?! மனம் அதன் போக்கில் சிந்தித்தது.

பெண்ணவளுக்கு தெரியவில்லை.. காதல் ஜாதி மதம் பணம் அந்தஸ்து நிறம் என்று எதுவும் பார்ப்பதில்லை...

எப்போது எப்படி எங்கே காதல் வரும் என்று அந்த காதல் நாயகன் மன்மதனுக்கே தெரியாத போது... பாவம் இந்த சின்ன பெண் என்ன செய்வாள்..?!

அவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலாய் ஏன் என்ற ஈரெழுத்தில் பதில் கேள்வி தொடுத்தாள் பெண்.

ஒரு நொடி அவன் மனம் தயங்கியது... பின் நிமிர்வுடன் அவள் கண்களை பார்த்து சொன்னான்.

"பி..கா..ஸ்... ஐ லவ் யூ. உன்னை சார்ந்த எல்லாத்தையும் நான் விரும்புறேன். எனக்கு நீ மட்டும் போதும். என்னோட சந்தோசம் உன்கிட்ட இருக்கும்போ நான் வேற எதை பற்றி நினைப்பேன் பேபி..?"

இதயம் அதிர்ந்தது பெண்ணவளுக்கு. ஒரு யூகமாய் தான் நினைத்திருந்தாள் இப்படியாக தான் இருக்கும் என்று. ஆனால் இப்படி இவன் வெளிப்படையாக அதுவும் இப்படி அழுத்தமாக இருப்பான் என்று நினைத்தது இல்லை.

தொடர்ந்து அவன்பாட்டிற்கு பேசிக் கொண்டிருந்தான்..

"ஐ லவ் யூ பேபி. ஐ காண்ட் லாஸ் யூ பார் எனி ரீசன். ஐ வான்ட் யூ".

வியப்பில் விழிகள் விரித்தப்படி ஆராதனா ஸ்தம்பித்து போய் இருந்தாள். கொஞ்ச நேரம் அவளுக்கு அவன் சொன்னதை உணர்ந்து கொள்ள அவகாசம் கொடுத்தவன், பின் அவள் வலக்கையை எடுத்து தன் நெஞ்சில் பதித்து, "இங்கே நீ எப்போ வந்தன்னு கேட்டா எனக்கு சரியா சொல்ல தெரியல. இது சரி வருமா... அப்படின்னு நிறைய யோசிச்சத்துக்கு அப்புறம் தான் சொல்லுறேன். ஏதோ பார்த்ததும் காதல்ன்னு நினைச்சிறாதா...?! நல்லா தெரிஞ்சி.. உன்னை புரிஞ்சத்துக்கு அப்புறம் தான் இந்த முடிவெடுத்து இருக்கிறேன். உனக்கும் என்னோட அருகாமை பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்..."

அவள் முறைக்கவும்..

"இ..ல்..லை..ன்..னு பொய் சொல்லாத.. உன்னோட இந்த கண்கள் என்னை எத்தனை முறை ஏக்கமாக பரர்த்திருக்கிறதுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்".

அட... அப்படியா பார்த்து தொலைச்சேன்...?! மனம் சாடியது.

"உன்னை பார்க்கிற ஒவ்வொரு நிமிஷமும் எனக்குள்ள வர்ற உணர்வை கட்டுப்படுத்தவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இதுக்கு மேல சத்தியமா முடியாதுடி..."

அவள் கன்னங்களை தன் இரு கைகளாலும் தாங்கியவன் விழி நோக்கி கேட்டான்.

"உனக்கு என்கிட்ட ஏதாவது கேட்கணுமா...?!"

அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. அவன் சொன்னது போல அவனருகில் அவள் அவளாக இல்லை. ஏதோ பெயர் தெரிய உணர்வு அவளுள் எழாமல் இல்லை. ஆயினும் இப்படி உடனே கேட்டால்... என்ன சொல்ல...

"ஐ காண்ட் திங்க் எனித்திங் நவ். ஐ வான்ட் சம் டைம்" எப்படியோ ஒரு வழியாக வாய் திறந்து விட்டாள்.

இதழ்கள் மலர சொன்னான். "சரி.. உன் இஷ்டம். உனக்கு எப்போ பதில் சொல்லணும்னு தோணுதோ அப்போ சொல்லு".

காதல் சொல்ல துடித்த மனதைசிரமப்பட்டு அடக்கியபடி அங்கிருந்து அகன்றாள்.

############


கால் மேல் கால் போட்டு அமர்ந்த படி.. கையிலிருந்த அந்த கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்தார் இளங்கோ.

அதில் இருந்த விஷயம் அவரை கொஞ்சம் வாட்டியது... கூடவே ஒரு சந்தோஷ செய்தியையும் சொல்லியது.

எத்தனை ஆண்டு கால தவம் இது. இது மட்டும் சாத்தியம் ஆனால்... என்னை விட அதிர்ஷ்ட சாலி வேறு யாரும் இருக்கமுடியாது. அவரது கடந்த கால நினைவுகள் கண்முன்னே விரிந்தது. பல உருவங்கள் தோன்றி மறைந்தது. அதில் ஒரு பெண் உருவம் இவரை பார்த்து சிரித்தபடி வந்தது. நிஜத்தில் இருந்துகொண்டு நிழலை தொட விரும்பினார். அந்த உருவம் கிண்கிணியாய் சிரித்தபடி மறைந்தது. கண்கள் பனிக்க டிராயரில் இருந்து ஒரு போட்டோவை எடுத்தார். அதே பெண் தான் இந்த போட்டோவிலும் சிரித்துக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் அலைகழித்த மனம் அமைதி கொண்டது.

"நான் உன்னை கூடிய சீக்கிரமே பார்க்க வந்துக்கிட்டு இருக்கிறேன்ம்மா.. இந்த தடவையாது நீ என்னை ஏமாற்றமா என் கூட வருவியாம்மா..?!" சொல்லியபடி கையில் இருந்த கோப்பில் பார்வை பட்டது.

மெலிதாக சிரித்து கொண்டார். "கண்டிப்பா நீ என் கூட வருவ... இல்லை..ன்..னா நான் வரவைப்பேன். இந்த முறை நான் எக்காரணத்தை கொண்டும் உன்னை இழக்க மாட்டேன்" அழுத்தமாய் வார்த்தைகள் பிறந்தது இப்போது அவரிடமிருந்து.

அதற்கும் அந்த பெண் உருவம் புன்னகையையே பரிசாக கொடுத்தது.

###############


எப்படி வீடு வந்து சேர்ந்தோம் என்று தெரியாமலே வந்து சேர்ந்திருந்தாள் ஆராதனா. அவன் கூறிய வார்த்தைகளும் அந்த நெருக்கமுமே கண் முன் வந்தது.

அணிந்திருந்த ஆடைக்கு உள்ளே மறைத்தபடி போட்டிருந்த அந்த கற்கள் பதித்த செயினை வெளியே எடுத்து பார்த்தாள். "நீ வந்ததுல இருந்து என்னோட வாழ்க்கையிலே எவ்ளோ மாற்றம் தெரியுமா...?! எல்லாம் ரொம்ப வேகமா நடக்கிற மாதிரி இருக்கு".

"ஹே தேஜாவூ... சொல்லு.. நான் அவனை விரும்புறேனா..? அவன் சொன்னது போல நான் அவனை லவ் பண்ணேனா உன் மேல எனக்கு வந்த அந்த பீலிங்ஸ் என்ன... எனக்கு ஒன்னுமே புரியல".

ஏதோ அந்த கற்கள் இவளிடம் பேசுவது போல உரையாடி கொண்டிருந்தாள்.

அப்போது மூச்சு வாங்க வேகமாக ஓடி வந்து அவளருகே வந்து நின்றாள் கீது. தலைமுடி எல்லாம் களைந்து முகம் வெளுக்க எதற்கோ பயந்து ஓடி வந்தது போல இருந்தாள்.

என்னடி ஆச்சு.. ஏன் இப்படி பதறி அடிச்சி ஓடி வர...?! கலக்கமாய் கேட்டாள் ஆராதனா.

அ..ந்..த

அ..ந்..த...

கு....கு....கு... கு..ர்..க்..கா.... செ..த்..துப் போயிட்டான்...டி.... குரல் தந்தியடிக்க மொழிந்தாள் கீது.

சர்வமும் அடங்கியது ஆராதனாவிற்கு. உடல் விறைக்க முகம் வெளுக்க துவங்கியது பெண்ணவளுக்கு. கண் முன்னே ஏதோ சுழல்வது போல இருக்க... அப்படியே மயங்கி சரிந்தாள் ஆராதனா.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அன்பு செல்லங்களே
உங்களுக்கான அடுத்த அத்தியாயம் இதோ . படித்து விட்டு அப்படியே போகாமல் கதை எப்படி இருக்குதுன்னு சொல்லிட்டு போகும் படி கேட்டு கொள்ள படுகிறீர்கள்.
இதுவரை கமெண்ட் மற்றும் like செய்தும் அமைதியாய் வாசித்து விட்டு டாடா கூட காட்டாமல் சென்ற அந்த நல் உள்ளங்களுக்கும் நன்றி.

இனி வரும் பதிவுகள் தமாதமாகும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். நானும் உங்களை போல சாதரண குடும்பத்து பெண் தான். அதுவும் இரண்டு வானரங்கள் வேறு. எனவே என்னால் சரியான நேரத்தில் பதிவு தர முடியும் என்று தோன்ற வில்லை. முடியும் சமயத்தில் பதிவு தருகிறேன். என் செல்லங்களே பொறுத்து கொள்ளுங்கள். இதுவரை தந்த அதே ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.

நன்றி.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 16

14930
தகிக்கும் தீ...
காதல் திருவிழாவில்...
தணிக்கும் தீ..
காதல் திருவிளையாட்டில்...


தன் காதில் விழுந்த செய்தி கேட்டதும் ஆராதனாவிற்கு படப்படப்பாய் வந்தது. தேகம் நடுங்கியபடி பெண்ணவள் தரையை அழுத்தமாய் முத்தமிட்டாள் .

ஏற்கனவே அதிர்ந்து போய் செய்தி சொல்ல வந்த தூதுவச்சி கீதாவின் நிலையோ அதை விட மோசம்.

அப்படியே நிலைகுலைந்து பேசா மடைந்தையாய்... அசையாமல் நின்றிருந்தாள். எங்கோ கேட்ட குயிலோசையில் லேசாக அசைவு வந்தது பெண்ணிடம். மேலும் சில நொடிகள் கடந்த பிறகே முழுதாக நினைவிற்கு திரும்பினாள்.

கீழே மயங்கிய நிலையில் கிடந்த தன் ஆருயிர் தோழி ஆருவை பார்த்ததும் பதறி போனாள் கீதா. அவளை மடி தாங்கிய படி கன்னங்களில் மாறி மாறி தட்டி சுயத்திற்கு வர போராடினாள். ஆருவிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. அப்படியே அசையாமல் கிடக்கவும் கீது மேலும் பதறினாள். சட்டென எழுந்து அருகிலிருந்த பாட்டிலிலிருந்து தண்ணீரை எடுத்து ஆருவின் முகத்தில் தெளித்தபடி "ஆ..ரு ஆ..ரு... ஹே.. ஆரு.. கண்ணை திறந்து பாருடி.." பதற்றத்துடன் அவளை எழுப்ப முற்பட்டாள். சில நிமிடங்கள் கடந்து பல வேண்டுதலுக்கு பிறகே கண் விழித்தாள் ஆரு.

"நான் ரொம்ப பயந்துட்டேன் ஆரு. இப்போ உனக்கு ஒன்றும் இல்லையே...?!"

முகத்தினை கைகளால் அழுந்த தேய்த்து கொண்டாள். ஒரு முறை கண் மூடி நடந்ததை நினைத்து பார்த்தாள். மனம் கலங்கியது. தன் முகத்தினை மறைத்தபடி விழுந்த முடி கற்றைகளை காதோரமாய் ஒதுக்கியபடி கீதுவை நிமிர்ந்து பார்த்தாள்.

"ஹ்ம்ம்.... மேலே சொல்லு. உனக்கு யாரு சொன்னா... என்ன ஆச்சு அந்த கு..குர்க்கா..க்கு..?"

"ஷ்... நீ நினைக்கிற மாதிரி அவனோட சாவுக்கு நீ காரணம் இல்லை. அவனுக்கு யாரோ மயக்கமருந்து கொடுத்துருக்காங்க. அது ஓவர் டோஸ் ஆகி அவன் எதிரில் வந்த வண்டி மேலே மோதி இறந்திருக்கான். அவ்ளோ தான். சோ உனக்கும் இவனோட டெத்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை. புரியுதா உனக்கு?" தோழியை ஆறுதலாய் அணைத்தபடி கூறினாள்.

"இது ஏதாவது திருடனுங்க வேலையா இருக்கும் . சோ நீ தேவையில்லாம பயப்படாத.."

இப்போது கொஞ்சம் உடலும் மனமும் சமன்பட்டது போல இருந்தது ஆருவிற்கு.

"அது சரி. உனக்கு எப்படி இவ்ளோ விஷயம் தெரிஞ்சி?" புருவம் உயர்த்தியபடி கேட்டாள் பெண்ணவள் ஆரு.

"அ...து..
அ...து...
அது வ...ந்...து....து....து.."

"என்னடி இழுக்குற... என்ன விஷயம்...?"

ராஜே...ஷ் தான் சொன்னான். சொல்லியபடி குனிந்து கொண்டாள் கீது.

"எ..ன்..ன..து...?!!! இப்போ என்ன சொன்ன நீ...? கம் அகெய்ன்". வியப்பில் கத்திய படி கீதுவின் முகைத்தை நிமிர்த்தினாள் அவள், அவ்விழிகளோ நாணக் கவிதை பாடியது.

"ஹேய்... என்னடி இது.. நிஜமாவா...!! எப்படிடி...??
உனக்கும் ராஜேஷ்கும் எப்படிடி செட் ஆச்சு... கள்ளி இது எத்தனை நாளா நடக்குது? சொல்லவே இல்லை பார்த்தியா..??!"

நாணத்தால் சிவந்த முகத்தை மறைத்தபடி திக்கி திணறி பேசினாள் அவள்.
"விளக்குமாத்து கையோட அவனை அடிக்க அன்றைக்கு கை ஓங்குனேன்லா அ..ப்..போ..."

"அப்போ இருந்தேவா.. அடி எமகள்ளி.. ஒரு வார்த்தை சொன்னீயா நீ..?!"

"அய்யோ. அப்படிலாம் ஒன்னும் இல்லை. முதல நான் சொல்லி முடிச்சிருதேன். அதுக்கு அப்புறம் பேசு". என்றவள் தொடர்ந்து

"அவனோட மல்லுகட்டுனதுக்கு அப்புறமா எனக்குள்ள ஒரு பீலிங். அது எப்படி வந்துச்சி ஏன் வந்துச்சின்னு கேட்டா சத்தியமா எனக்கு சொல்ல தெரியலடி..."

சொல்லியபடி ஜன்னலருகே சென்று ஆகாய மன்னனின் நீல வண்ணத்தை ஆழ்ந்து பார்த்தாள். தனக்குள்ளே நினைவுகளை அசைப்போட்டபடி சில நொடி அமைதிக்கு பின் மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

"அந்த சம்பவத்துக்கு பிறகு அவனை அடிக்கடி எதேச்சையா சந்திக்கிற வாய்ப்பு அமைஞ்சுது. கொஞ்சம் கூர்ந்து கவனிச்ச அப்புறம் தான் தெரிஞ்சி.. இதெல்லாம் எதேச்சையா நடக்கல, எல்லாம் அவனோட வேலைன்னு. அவனோட செயல் பார்வை பேச்சு எல்லாம் எனக்கு அப்படி தான் சொல்லிச்சு. எனக்கு ஏற்பட்ட அந்த பீலிங் அவனுக்கும் வந்துருக்கும்ன்னு நினைக்கிறேன். இருந்தும் இந்த காதல் சாத்தியமா? அப்படின்னு எனக்குள்ள ஒரு சின்ன பயம். அவனோட காதல் உண்மையான்னு எனக்கு சந்தேகம். சோ அவனை தவிர்க்க நினைத்தேன். ஆனால்.. என்னால முடியல ஆரு... அவனை பார்க்காம இருந்த ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எதை..யோ.. இழந்தது போல இருந்தது. என்னோட காதல் கூடிச்சே தவிர குறையல.

இன்றைக்கு காலைல உன்னை பார்க்க வரும் போது தான் மீண்டும் அவனை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சுது. அவன்கிட்ட சொல்லிடலாம்னு நினைக்கிறதுக்கு முன்ன உங்க அம்மா வந்துட்டாங்க".

"ஹே.. என்னடி சொல்லுற.. அப்புறம் எப்போ...டி.. நீங்க ரெண்டு பேரும் லவ்வை சொன்னீங்க?"

"இதோ இப்போ உன்னை பார்க்க வரதுக்கு முன்ன தான்". சொல்லியபடி கண்ணடித்தாள் தோழி.

"அடா... இவ்ளோ பாஸ்ட்டா நடந்துருக்கா... அது சரி.. ஹ்ம்ம்... அப்புறம்..." இடுப்பில் கை வைத்தபடி கேட்டாள் ஆரு.

"ஈவ்னிங் நம்ம தெரு பிள்ளையார் கோயிலுக்கு போயிருந்தேன். அப்போ தான் அவன் சொன்னான். அவனும் என்ன லவ் பண்ணுறானாம். நீ சொன்னது போல சும்மா விளையாட்டுக்கு தான் நம்ம பின்னாடி வந்திருக்கான். அப்புறம் அந்த சம்பவத்துக்கு பிறகு தான் அவனுக்கு புரிஞ்சிச்சாம். இப்போ சுயமா சம்பாதிக்கிறான். ஒழுங்கா வேலைக்கும் போகிறான். வேற எந்த பிரச்சனைக்கும் போறது இல்லை.. அப்படின்னு சொன்னான். என்னோட விருப்பத்தை கேட்டான். இவ்ளோ தூரம் அவனே எனக்காக மாறி இறங்கி வந்துருக்கான அதுல இருந்தே அவனோட காதல் உண்மைன்னு எனக்கு புரிஞ்சிது. சோ நானும் அக்ஸப்ட் பண்ணிட்டேன். அவனோட வீட்ல சொல்லி சீக்கிரம் பொண்ணு கேட்டு வராதா சொல்லியிருக்கான்".

"வாவ்.... கீது... சூப்பர்டி... சான்சே இல்லை... அடிச்சி தூள் கிளப்பிட்டான் உன் ஆளு... அப்போ கூடிய சீக்கிரமே அம்மணிக்கு கல்யாணம்ன்னு சொல்லு..." மகிழ்ச்சியாய் கட்டி அணைத்து கொண்டாள் தோழியை.

########################


"டேய்.. டேய்... ஒன்னே ஒன்னு.... தாடா..."

"ப்ளீஸ் டா..."

"டேய்.. ஓடாத.. நில்லு..."

"ஏய்... "

"நான் இவ்ளோ தூரம் சொல்றேன்ல.. பின்ன என்னடா...?! அவ்ளோ நாள் என்னால தாக்கு பிடிக்க முடியாதுடா... உன்னை பார்க்காம எப்படிடா இருப்பேன். சோ பிளீஸ் புரிஞ்சிக்கோடா... டேய்... ஏண்டா... என் உயிரை வங்குறா...?!"

அழாத குறையாக கெஞ்சி கொஞ்சி காரியம் சாதிக்க முற்பட்டாள் வதனா.. அந்த ஆணழகன் ராமோ கொஞ்சமும் இலகினான் இல்லை. அவளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவன் பாட்டிற்கு அவன் வேலையை பார்த்து கொண்டிருந்தான்.

பெண்ணவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. அவனுடன் வாதாடியதில் சோர்ந்து போனது தான் மிச்சம். தொண்டை வறண்டு போகவே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவள் கட கடவென அந்த ஒரு பாட்டில் தண்ணீரையும் ஒரே மடக்கில் குடித்து முடித்தாள். எதிரே மனத்திற்கினியவன் அத்தனை சுந்தரமாய் காட்சியளித்தான். பெண்ணவள் ஏக்கம் கூடியதே தவிர கடுகளவும் குறையவில்லை.

"அட பாவி மகனே... நான் உன்கிட்ட என்னடா கேட்டேன்.. ரொம்பதான் பிகு பண்ணுற. ஏதோ கேக்க கூடாத ஒன்றை கேட்டது போல ஓவரா தான் ஆடுற. அவனவன் தன் காதலி எப்போ தருவான்னு ஏங்கி போய் இருப்பானுங்க. ஆனா நீ நானா வழிய போய் தாரேன்னு சொன்னா என்னமோ ஏக பத்தினி விரதன் மாதிரி என்னமா சீன் பண்ணுற.. டேய் டேய்... மகனே உனக்கு ஒரு நாள் இருக்குடா... நீயா வந்து என்கிட்ட கேட்படா. அப்போ நீ எவ்ளோ கெஞ்சி கேட்டாலும் தரமாட்டேன்டா.. பாருடா... அப்போ இருக்கு உனக்கு!" கெஞ்சல் போய் மிஞ்சல் வந்திருந்தது இப்போது கேட்டது கிடைக்காத ஆத்திரத்தில்.

விஷயம் என்னவெனில் வதனாவிற்கு புது அசைன்மெண்ட் ஒன்றிற்கு கீழ் வேலை பார்க்க வேண்டி ஆர்டர் வந்திருந்தது. அது அவளுடைய பாஸின் நெருங்கிய நண்பரின் கீழ் வேறு.அதனால் கிட்டத்தட்ட நாற்பது நாட்கள் தொடர்ந்து வேலை நேரம் தவிர அதிக நேரம் வேலை பார்க்கவேண்டிய கட்டாயம். அதனால் ராமை அவளால் சந்திக்க முடியாது. சோ அதனை ஈடுகட்ட பெண்ணவள் அவனிடம் ஒரே ஒரு முத்தம் கேட்டு தான் கெஞ்சி கொண்டிருக்கிறாள்.

உன்னால் பார்க்க வர முடியாது என்றால் நேரம் கிடைக்கும் பொழுது நான் வந்து உன்னை பார்க்கிறேன். நீ கேட்டது போல இப்போது முத்தம் யுத்தம் என்று எதுவும் கிடையாது. எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு தான் என்றும் முதலில் வேலையில் கவனம் செலுத்தி விட்டு மற்றதை பிறகு பார்க்கலாம் என்று கூறி விட்டான். அதை தான் பெண்ணவளால் தாங்க முடியவில்லை.

அமர்ந்திருந்த அந்த மேசையில் தலை சாய்த்தபடி ராமை சோகமாக பார்த்துக்கொண்டிருந்தாள். பார்க்காதது போல அவளை பார்த்துக்கொண்டே தன் வேலையில் கவனமாய் இருந்தான் அவன். ஆயினும் அவளது சோர்ந்த முகம் வேறு அவனது மனதை வாட்டியது. ஷ் ஷ் ஷ்... கையிலிருந்த பொருளை கீழே வைத்துவிட்டு அவளருகே வந்து அமர்ந்தான்.

"என்ன வதனா இது. சின்ன பிள்ளை மாதிரி பிகேவ் பண்ணுற..?!"

"இது உனக்கு சின்ன விஷயமா...ஹாங்..?!" எகிறினாள் வதனா.

"ஷ்... மெதுவா பேசு. ஏன் கத்துற?"

"இப்போ உனக்கு என் பேச்சு அப்படி தான் தெரியும். உன் லவ் அக்ஸப்ட் பண்ணிட்டேன்ல சோ உனக்கு எல்லாம் ஈஸி தான். நான் தான் பேக்கு மாதிரி உன் பின்னாடி அலையுறேன்.அப்படி தானே சொல்லுற..??!" வராத கண்ணீரை துடைத்து கொண்டே விசும்பினாள்.

இது போதாதா.. காதலன் காதலில் கசிந்துருக.. ஆண்மகன் உள்ளம் தவித்து போனது.

"ஒற்றை நீர் துளி
நெஞ்சு குழி வரை
தாக்க..
கற்றை அடியாய்
நொறுங்கி போனது உள்ளம்..."


தன் மனதிற்கினியவள் அழுகை எந்த ஆண்மகனுக்கு தான் பிடிக்கும். அவள் கண்ணிலிருந்து வடிந்த ஒவ்வொரு துளியும் அவனுள் ஈட்டியாய் பாய்ந்தது. அவனால் அதற்கு மேலும் தாங்க முடியாமல் அவளை இழுத்து அணைத்து கொண்டான். தன்னுள் அடக்கி அவள் கண்ணீரை அவனுடையதாக மாற்றினான்.

"நோ மா.. நோ..
நீ எக்காரணத்திற்காகவும் அழ கூடாது. நான் இருக்கிற வரை உன் கண்ணுல இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வர கூடாது". இரு கைகளாலும் கன்னம் தாங்கியவன் அவள் கண்ணீரை இதழ் கொண்டு துடைத்தான். பெண்ணவள் சிலிர்த்து போனாள். அவன் நடுக்கம் அவளுள் மின்சாரமாய் பாய்ந்தது. அவன் கண்களிலும் இப்போது கண்ணீர். எதற்காக அழுகிறான்.? நான் அழுதலாலா?! அட லூசு பயலே.. இவ்ளோ சென்டிமென்டல்லா இருக்கியேடா.. உன்னை கவுக்கிறது ரொம்ப ஈஸிடா.. ஹேய் வதனா உன் ஆள் இப்படி குழந்தையாட்டம் இருக்கானே.. எப்படிடி..?!! தனக்கு தானே கேட்டு தன் நடிப்பை மெச்சி கொண்டாள்.

"கொஞ்ச நாள் தானேமா.. நீ எதற்கும் கவலைப்படாத.. உனக்கு என்னோட நினைப்பு வரும் போது கண்டிப்பா நான் உன் முன்னாடி இருப்பேன். ஐ ப்ராமிஸ் யு". சொல்லியபடி நெற்றியில் இதழ் பதித்தான்.

'கண்..ணா... லட்டு திங்க ஆசையா.. அதுவும் ரெண்டு லட்டு...' என்பது போல... அவன் அவள் கண்ணீரை கண்டதும் அவனது காரணம் மறந்து முத்தங்களை அவளுக்கு வாரி வழங்கி கொண்டிருந்தான். நெற்றி கண் மூக்கு கன்னம் நாடி என இதழ் பதித்தப்படியே பேசிக் கொண்டிருந்தான்.

"நீ எதை நினைச்சும் ஒர்ரி பண்ணிக்காத. இந்த ஒர்க் உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும்ன்னு நான் நம்புறேன். சோ எதையும் நினைச்சி மனசை போட்டு குழப்பிக்கிடாத. சரியா...?!"

நெஞ்சில் தலை சாய்த்தபடியே பூம் பூம் மாடு போல தலை அசைத்து கொண்டாள். முத்த மழையில் சந்தோஷம் கூட ஓடி வந்தது. அவளது மலர்ந்த முகத்தை கண்டவன்.. "இதே போல நீ எப்பவும் சிரித்த முகமாகவே இருக்கணும். செய்வீயா குட்டிமா...?!"

"மம்ம்ம்ம்...சரி...." இப்போது மனம் லேசானது இருவருக்குமே.

##################


"ஹாய் இளங்கோ... எப்போடா வந்த...?!"

"வந்து டூ டேஸ் ஆகுது மதன். தென் ப்ரொஜெக்ட் எந்த லெவல்ல இருக்கு".

"எவரிதிங்க் இஸ் என்ட்".

"ஓ. கே. நாம் சீக்கிரம் இதை சோதித்து பார்க்க வேண்டும். நேரமில்லை. சோ கூடிய சீக்கிரம் அதற்கு வழிய பாரு".

"கண்டிப்பாடா... இந்த வாரத்திலே அதையும் முடிச்சிருவோம்ன்னு நினைக்கிறேன். ஆனால் நமக்கு ஒரிஜினல் பீஸ் கிடைச்சா தான் ரிசல்ட் பக்காவா இருக்கும். அதையும் புரிஞ்சிக்கோ".

"ஹ்ம்மம்ம்.. நீ சொல்லுறது புரியுது. பட் அது எப்போ கிடைக்கும்னு சொல்ல முடியாதுடா. அது ஒரிஜினலா இல்லை அதுவும் டுப்பிலிகேட்டான்னு கூட தெரியல. அதற்காக காத்துகிட்டு இருந்தா டைம் தான் வேஸ்ட். சோ இப்போ கையில இருக்கிற செயற்கை படிகங்களை வைத்து தான் இந்த ப்ரொஜெக்ட் ரன் பண்ணி ஆகணும்".

"ஆனால் நமக்கு நூறு சதவீதம் வெற்றி கிடைக்காது. ஜஸ்ட் இது சாத்தியமா.. இல்லை ரிசல்ட் எப்படி இருக்கும்னு வேணா பார்க்கலாம். நடைப்படுத்த வேணும்னா உண்மையான படிகம் வேண்டும். அதை புரிஞ்சிக்கோ".

"ஹ்ம்ம்... புரியுது. ஆனால் என்னால் நேரத்தை கடத்த முடியாதுடா. ரொம்ப அவசரம்".

"டேய்.. எனக்கு உன்னோட நிலைமை புரியுது. ஆனால் அவசரப்பட்டா காரியமே கேட்டு போய்டும். அதையும் புரிஞ்சிக்கோ".

"ம்ம்ம்ம்... சரி. கூடிய சீக்கிரம் ஒரிஜினலலோடு வர்றேன். சி யூ..." கை குலுக்கிய படி இருவரும் அந்த ரெஸ்டாரண்ட்டிலிருந்து பிரிந்து சென்றனர்.

####################

"ஹேய் நேகா... அந்த பக்கம் இருக்கிற காயை அடி..." வலப்புறமிருந்து குரல் கொடுத்தார் லதா.

"ஷிட்... ஜஸ்ட் மிஸ் மாம்" .

"விடு. நெஸ்ட் ரௌண்ட்ல பார்த்துக்கலாம்".

"டேய் பேரா... போடுறா குழியில அந்த சிவப்பு சிங்காரியை. என்னா ஆட்டம் காட்டுறா..!"

"உங்கள் சொல்லை மீறு வேணா பாட்டி. இதோ பாருங்க".

"ஹே... அப்படித்தான். கூடவே அந்த கருப்பு காந்தவராயனையும் தூக்கி உள்ளே போடுடா..."

"டன்" என்றபடி தன் முன்னே இருந்த அந்த கேரம் போர்டில் அழகாய் காய் தட்டினான் ரவி.

"ஹேய்... டன் டன் டன்..." வெற்றி பெற்ற சந்தோசத்தில் பாட்டியும் ரவியும் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.

"என்னமா நேகா இந்த முறையும் போச்சா..?!" என்றபடி வந்தார் இளங்கோ.

"யெஸ் டாடி. எப்போ விளையாண்டாலும் இந்த தடியன் தான் வின் பண்ணுறான்".

"ஹே யாரை பார்த்து தடியன்னு சொல்லுற..." நங் கென்று அவள் தலையில் கொட்டினான்.

"பாருங்க டாடி. எப்படி அடிக்கிறான். இருடா வர்றேன் சொன்னபடி எழுந்து அவனை அடிக்க துரத்தினாள். அவனோ சிட்டாய் பறந்தான். "இந்தா முடிஞ்சா பிடிச்சிக்கோ" ஓடியபடியே வம்பு வளர்த்தான் அவன்.

"என்னதுடி இது சின்ன பிள்ளையாட்டம்..."

"விடு லதா.. இப்போ விளையாடமா பின்ன எப்போ தான் இதெல்லாம் அனுபவிக்க. காலம் கடந்து அப்புறம் பொறுப்புகள் வந்துரும். அப்போ நாம நினைச்சா கூட இந்த மாதிரி சந்தோசம் கிடைக்காது".

"சரியா சொன்னா இளங்கோ" -பாட்டி

"அப்புறம் எங்கடா போய்ட்டு வர.." -ராஜ சேகர்.

"பிரென்ட் ஒருத்தனை பார்த்துட்டு வர்றேன். வெளிய போய்ட்டு வந்தது அலுப்பா இருக்கு நான் போய் குளிச்சிட்டு வாரேன்" எழுந்து கொண்டார் இளங்கோ.

"சரி நான் போய் உங்கள் எல்லோருக்கும் டீ போட்டு கொண்டு வரேன்" சொல்லியபடி லதாவும் கிச்சனுக்குள் புகுந்து கொண்டார்.

அங்கே ரவியும் நேகாவும் தோட்டத்து பக்கம் துரத்தி கொண்டு ஆட்டம் போடுவது தெரிந்தது. ஜன்னல் வழி தெரிந்த காட்சியில் புன்னகைத்து கொண்டார் பாட்டி.

"என்னம்மா? என்ன ஆச்சி? எதை பார்த்து அப்படி சிரிக்கிறீங்க.."

"நம்ம ரவிய பார்த்து தான்டா.. சின்ன வயசுல இப்படி தான் எப்பவும் சிரிச்சுக்கிட்டு கலகலன்னு இருப்பான். பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும். இப்போ அதே மாதிரி அவன் சிரிக்கவும் மனசு சந்தோஷ பட்டு போச்சுடா."

"ஹ்ம்ம்..ஆமாம்மா."

இளசுகளின் ஆட்டம் கிழடுகளின் முகத்தில் மகிழ்ச்சியை பரப்பியது. இது தான் அவர்கள் அனைவரும் நிம்மதியாக கழிக்கும் கடைசி பொழுது என்பதை அறிந்தால் அயர்னும் சிங்கமும் என்ன பண்ணுமோ...? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிஸ்...:smiley6:
அடுத்த அத்தியாயம் போட்டு விட்டேன். படித்து பார்த்துட்டு அப்படியே போய் விடாதீர்கள். கொஞ்சம் ஹாய்... பாய்... அப்படின்னு ரெண்டு வார்த்தை சொல்லி டாடா சி யூ எல்லாம் சொல்லிட்டு போங்க. சரியா பட்டூஸ்...:FlyingKiss::smiley3:

இது வரை நீங்கள் கொடுத்த ஆதர்விற்கு ரொம்ப ரொம்ப நன்றி மக்களே...:smiley18::smiley36:

கருத்து திரி
 
Status
Not open for further replies.
Top