All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே...." கதைத் திரி(temporally stopped)

Status
Not open for further replies.

தாமரை

தாமரை
ப்பா..



NPNN 9


அம்பாசிடர் காரில் திருநெல்வேலியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். நெல்லையப்பர் உறங்கும் மனைவிக்கு தன் மடியை கொடுத்தவராய் , அலுங்கலில் விழாதவாறு லேசாய் பற்றியவாறு அமர்ந்து இருக்க, கரடு முரடான சாலையில் அதிகம் குலுங்காமல் வண்டியோட்டிக் கொண்டிருந்தான் மகிழ்வேந்தன் .


மடியில் இருந்த பெட்டியில் லேசாக தட்டிய படி கார் ஜன்னலின் வழியே ஓடும் தாமிரபரணியாற்றை ரசித்தவாறு இருந்த மாமன் மகனை ஒரு முறை பார்த்தவன்,

ஏன் கார்த்தி, இந்த காரியம் எனக்குப் பிடிக்கல . நீ வேற நான் வேறையாடே.. ஏன் என் பெயர்ல இருந்த நிலத்தை வச்சு ******* நிதி நிறுவனத்தில கடன் வாங்கலாம் னா வேணாம் னு இரண்டு பேரும் சொல்றீங்க . இப்போ மூனு வருஸம் காட்டை ஒத்திக்கு விட்டாச்சின்னு சொல்றீங்க. நா வேற ஏற்பாடு பண்ணிட்டு இருந்தேன் , சத்த பொறுத்துருக்கலாம். என்றான் மெல்லிய குரலில்.

விடு மாப்ள.. அப்பா முதல்ல செய்தது சரி வராது கேட்டியா.. அத இன்னும் செல மாசம் அப்படியே விட்டா, கடன் அதுக்கு வட்டி, வட்டி போடற குட்டி ன்னு நாளபின்ன பெரிய தலவலியா போய்டும். என்னாதா மூனு காட்லயும் நல்லா வெள்ளாமை வந்தாலும், அசலை மீறிட்டு வட்டி போய்டும். எனது உத்யோக அனுபவத்தில சொல்றேன், இப்ப பண்ணிருக்கது சேஃப். ஒரு பார்ட் தோட்டத்தை ஒத்திக்கு விடறது. அதும் பாரு, நல்ல தோதா ஒரு பக்கம் எல்லாமே பழ மரங்கள், எடுக்கலாம் விக்கலாம். வெவசாய முறை ஏதும் மாத்தக் கூடாது, மண்ணை ஆர்கானிக் ஃபார்மிங் மட்டுமே பண்ணனும் ஓனரா எனது பார்வைக்கு உட்பட்டுன்னு தெளிவா பத்திரத்தில எழுதியாச்சு. இப்ப பாரு, முடியற நேரத்தில எல்லாம் திரும்ப நம்ப கைக்கு வந்திடும். மரங்களுக்கு இன்ஷ்யூரன்ஸூம் போட்டாச்சு.

அதிருப்தியாய் தலையசைத்தான் . எடுத்த ஆட்களோட தாட்டியம் தெரியாம பேசுற.

ப்ச், நீ இந்த எக்ஸாம் கவனம் வச்சு முடி. அதுக்கப்புறம் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டா இதான் ஒனக்கு தோதாருக்கும். நீலூ மஞ்சு எல்லாம் கல்யாணம் பண்ணி குடும்பத்த பார்ப்பாங்களோ வயக்காட்ட பாப்பாங்களா.. கவனிக்க ஏலாம ஆனதுக்கு அப்புறமா விடறது விட இப்பவே பண்றது நல்லது. என்றான் வேகமாய்.


தாடை இறுக அமைதியாய் வண்டியோட்டுபவனின் தொடையில் கை வைத்தவன், என்னெயெல்லா விட பெரிய வேலைல இருக்க வேண்டியவன் டே நீ. இன்னமும் இந்த விக்கிரம சிங்கபுரத்துக்குளேளயே இருந்துறலாம்னு நினைக்காதே. அதுக்கு மாமாவும் சம்மதிக்க மாட்டாக தெரியும் தானே. என்றான்.

மறுப்பாய் தலையசைத்தவன், என்ன வேல? உலகத்துக்கே பொதுவா சொல்லி வச்சது, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்.. என்றவன் அத்துடன் நிறுத்தி, அதெல்லாம் புடிக்காம தானே நீ போய் புனேல பெரிய வேலைல இருக்க.. என்ன சொல்றது.. என்றவன் சில நொடிகள் கழித்து, ஒன்ன சொல்லி குத்தமில்ல. என்னைக்கு மாடு மேய்க்கிறது, சேத்துல வேல பாக்கது, படிப்பு வராதவன் பண்ற வேலன்னு ஏச ஆரப்பிச்சாங்களோ அன்னிக்கு ஆரம்பிச்சது கேடு காலம். உழவும் தொழிலும் இரு கண்கள் டே.. அதாவது ஒரு நாடு முன்னேறனும்னா, தராசுல உழவு ஒரு பக்கம்னா தொழில்கள் அம்புட்டு ம் மறு பக்கத்துல.. அம்புட்டு வெயிட்டு. ஆனா அது நமக்கு தெரியாது. தமிழ் மட்டுமில்ல விவசாயமும் மெல்லச் சாகும் , இந்த ஃபிக்ஷனு படங்கள்ல வாராப் போல எல்லாரும் மாத்திரைய தான் சாப்பாடா முழுங்குவானுங்களா இருக்கும். என்று சொல்லி பெருமூச்சு விட்டவன், நம்ம தலைமுறைல நம்ம கண்ணு முன்னால அது வந்துரக்கூடாது கார்த்தி. என்றவனின் அலைபேசி அடித்தது.


கொப்பரக்கா மண்டையன் காலிங் என்று வர, பார்த்த கார்த்தி, நகைத்தவாறே, ஆருடே இந்த கொப்பரக்கா மண்டையன்? என்ற அவனின் நகைப்பு இவனுக்கும் முறுவலைத் தர,

எண்ண ஆட்ட கொப்பர அனுப்ப சொல்லிருந்தே பண்ணுணானான்னு சாரிக்கனும். அதா, ரிமைண்டர்.
என்றவாறே எடுத்தவன் என்னடே, கோழி ஆடு தீவனச் சோலியெல்லா முடிச்சுட்டியா?

…………………

என்ன அவனா ? அவன் என்னாத்துக்கு, நீலுட்டையா? என்றவன் ஓரமாய் வண்டியை நிறுத்தி இருந்தான்.

******************

வழக்கம் போல மாலை வேளையில் மாட்டுக் காடியில் இருந்த மாடுகளுக்கு சாம்பிராணிப் புகை இட்டுக் கொண்டிருந்த நீலாம்பரியின் முகம் இறுகியிருந்தது. மனம் இன்று முழுவதும் நடந்த நிகழ்வுகளின் அதிர்வில் களைத்து இருந்தது. இயந்திரமாய் கைகள் சாம்பிராணி இடுவதும்.. கால்கள் எங்கு சொல்கிறோம் என்று அறியாமலேயே மாடுகளை கன்றுகளை சுற்றி வந்து புகை காட்டுவதும் ஆக வேலை நடந்து கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பே பிறந்து இருந்த கன்றுக் குட்டி இவளது வருகை கண்டு மிரண்டு எழ.. தட்டை இடக் கைக்கு மாற்றியவளின் வலக்கரம் அக்கன்றுக் குட்டியின் கயிற்றைப் பற்றி இருந்தது. பாலில் குங்குமம் கலந்தாற் போல நிறத்தில் இருந்த அதன் உடலை மெதுவாக வருடினாள்.

சில வாரங்களிலேயே அவளின் தோழனாக ஆகிவிட்டிருந்த புங்கனூர் குட்டை காளை வந்து இடையில் முட்டியதும் அனிச்சை செயலாய் தட்டை உயர்த்தி,

ஆச்சரியமாய் திரும்பி பார்த்தாள்
.உன்னிய யார்டா அவுத்து விட்டது என்றவள், தட்டை அவசரமாய் அங்கிருந்த குட்டை சுவரில் வைத்து விட்டு திரும்ப அங்கே மகிழ் வேந்தன் நின்று கொண்டிருந்தான்.

எப்பத்தான் வந்தீங்க. போன காரியம் சுமுகமா முடிஞ்சதா? கிருஷ்ணா கோட்ஸ் பெரியவரைப் பாத்தீங்களா ? ஊர் பெரியவங்க யாரு யாரு வந்தாங்க. என்று கேள்விகளை தொடுத்தவாறு நெருங்க,


அவளிடம் ஒட்டி நின்ற காளையை இழுத்து சென்றவாறே, இவனை யாரு அந்த மூலைல கட்டினா நீலு. படுதாவில பாதி பிச்சு எடுத்துட்டான்.. என்றவாறு வளையத்தில் பொருத்தி கட்டினான்.


அது கோனாரு லட்சுமிட்ட பால் பீச்சிற நேரம், சேட்டை பண்ணி எண்ணை கிண்ணத்த கவுத்துட்டான். அதான் அவர் எடுத்து அந்த ஓரமா கட்டினாரு. நீங்க சொல்லுங்க.. என்ன நடந்தது.


பெருமூச்சு விட்டவன் , "என்ன நடக்கனும் நீலு? உங்கண்ணன்ட்டயும், பெரிய மாமாமட்டையும் படிச்சு படிச்சு சொன்னேன். பண்ணை நிலங்கள வில்லங்கப் படுத்தாதீங்கன்னு. கேட்கல. இப்போவும் ஒத்திக்கு விட்டு, கார்த்தி பத்திரத்தில எழுதிட்டா அப்படியே நடக்கும்னு கோட்டித்தனமா நம்புறான் , அந்த பாரி, காரி பயலுகளை நம்பாதேன்னா கேட்கல. பஞ்சாயத்து நடக்க எடத்தில அந்த சேதுபதி சின்ன மாமாட்ட அவ்ளோ சந்தேகம்னா பொண்ணை கொடுங்கறாரு. சின்ன மாமாட்ட இந்தப் பொண்ணு கொடுக்கற பேச்ச உடனே நிறுந்துங்கன்னா.. அதையும் கேட்கல.. என்றவன் திரும்பி அவளை ஆழ்ந்து பார்த்தான்.

அந்த பயட்ட பேச்சு வச்சுக்காதேன்னு ஒனக்கும் சொன்னே.. நீயும் கேட்கலை.. எனவும்..

இதயம் அழுத்தட்பட்ட உணர்வில் உடலில் நடுக்கம் ஓடத் தலை குனிந்தாள்.

ஸாரி அத்தான், தப்புதான். என சன்னமாய் முணுமுணுக்க, மனமோ காலையில் நடந்த நிகழ்வுகளின் மறு நினைவில் லேசாய் நடுங்கியது.


தெனாவட்டாய் கிணற்றுத் திண்டில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தவன் பேச்சும் அதே போலவே வந்தது.

இந்த கிணறு, சுத்திலும் இருக்கும் நிலம் இனிமே எங்களுக்குத்தா. இந்த மரங்களுக்கும் பயிர்களுக்கும் நாங்க கொடுக்கறது தா. என்றவன் நிறுத்தி அவளையே ஆழமாய் பார்த்தான்,
நா என்ன பண்ணனும்னு நீ சொல்றியா? மூனு வருஷம் பேப்பர்ல இருக்கது படிச்ச நீயும் வெவசாயத்தை சைடு பிஸினஸா பண்ற அவனும் என்ன செஞ்சு வச்சிருக்கீங்க, நாங்க பரம்பர பரம்பரையா இது போல பல நெலங்களக் கட்டியாண்டவங்க. இனி பாக்கப் போற நீ இந்த பாரியோட ஆட்டத்தை.. என்னையவா விரல நீட்டி பேசுற? என்றவன் குரல் என்னவோ பக்கத்தில் நின்ற அவளுக்கு மட்டும் கேட்கும் விதம் தணிவாக இரு‌ந்தது. அதிலடித்த அனலோ.. இவளின் காதுகள் சூடேறின.

அவனிட்ட "டி" வேறு முகத்தை கோபத்தில் சிவக்க வைக்க, மூச்சில் நெஞ்சு ஏறியிறங்க.. சுற்றிலும் பார்த்தவள், தூரத்தில் செந்திலின் உருவம் கண்டு, அண்ணே.. என்று உரக்க அழைத்தாள்.

அவளைச் சற்றும் கண்டு கொள்ளாதவனாய் தனது அலைபேசி எடுத்து ஏதோ செய்வதைக் கண்டவள் , கையோடு அலைபேசி எடுத்து வராத தன் மடத்தனத்தை நொந்தவாறே, அண்ணே… செந்திலண்ணே என்று உரக்க அழைத்தாள்.

அப்போது அலைபேசி அவளின் முன் நீட்டப்பட, அதில் ஏதோ பத்திரத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பியின் அடியில் அண்ணன் மற்றும் பெரிய தந்தை கையெழுத்தைக் கண்டு விதிர்த்து உற்றுப் பார்க்க முயல,

இதோட காப்பி இன்னும் செத்த நேரத்தில உன் அத்தான் கொணார்ந்து காட்டுவான். அதனால இங்கேருந்து கத்தி காது ஜவ்வக் கிழிக்காத போய் அந்த கோழி ஆட்டுப்பட்டி எப்படி காலி பண்ணலாம்னு ஒன் அடிப்பொடியோட சேர்ந்து யோசன பண்ணு. இன்னிக்கு ஒரு நாள் தான் டைம் தர்றேன். போ போ என்றவனின் குரல் மீண்டும் காதுகளில் ஒலிக்க , இந்த ராங்கிக்காரன் இருக்கும் குடும்பத்திலா தன் தங்கை? என்ற கடுப்புடன் முறைத்தவளை அதிர வைத்தன அடுத்து அவன் சொன்ன வார்த்தைகள்!!!!!!

இப்போதும் வயிறு பிசைய, நிமிர்ந்தவள்
மகிழ்வேந்தனின் முகம் பார்த்து தயக்கத்துடன்,
அப்பா பொண்ணு கொடுக்கற பேச்சுக்கு சரின்னா சொல்லிட்டாங்க அத்தான்?

காளையை கட்டி விட்டு நிமிர்ந்தவன், ஆமென்பதாய் தலையசைத்து, வீட்ல கலந்து பேசி சொல்றோம்னு சொன்னாங்கதான். ஆனா அவருக்கு தான் பாவநாசத்து முடிசூட்டா ராஜாக்கள் சேனாபதி குடும்பத்தில சம்பந்தம் கலக்குற ஆசை வந்துடுச்சே. மஞ்சுவாச்சும் ஏதாச்சும் சொல்லுவான்னு பாத்தா உங்க இஷ்டம்ப்பா அப்படிங்கறா.. கார்த்தி முகத்துல, தான் கொண்டாந்த சம்பந்த்ததை விட பெரிய இடத்துல கொடுக்கப் போற சந்தோஷம் வந்துடுச்சு. என்றான் புகை வருவது நின்று போன அனலைப் பார்த்தவாறு,

அவனின் பார்வை தொடர்ந்தவள், அவசரமாய் லேசாய் ஊதி விட்டு, தன் கையில் உள்ள டப்பாவில் இருந்து சாம்பிராணியை போட்டு இன்னமும் புகைய வைத்தவள்,


அவங்க எல்லாம் அந்த பாரிய பாத்ததில்ல அதனால சொல்றாங்களா இருக்கும். ஆனா அப்பா முன்பு அவங்க டேவிட் அண்ணாச்சி நிலம் வாங்கும் போது பண்ண போட்டி , கொடுத்த கொடச்சல் எல்லாம் மறந்துட்டாங்களோன்னு தோனுது. நீங்க கவலப்படாத இருங்கத்தான் நான் மஞ்சுட்ட அப்பாட்ட பேசறேன். என்றவாறு சாம்பிராணி கரண்டியை எடுத்தாள்.

***********

சின்னத்திரையில் ஏதோ ஒரு சீரியலின் மறு ஒளிபரப்பு ஓடிக் கொண்டிருக்க, அமர்ந்து ஏதோ விடைத்தாள்களை திருத்தம் செய்தவாறு இருந்த தங்கையின் அருகில் வழக்கத்துக்கு மாறாய் அமர்ந்து இருந்த அப்பாச்சியையும், ஏதோ பேசிக் கொண்டு இருந்த தந்தையையும் கண்டவாறு வந்த நீலாம்பரி, தங்கை தங்களுக்கு சொல்லும் அதே பதிலை அதுதான், மௌனமாக காது கேட்டும் கேட்காதது போல வேலை செய்வதை பார்த்தவளிற்கு சிரிப்பு ஒருபுறம், கோபம் மறுபுறம்.

தனியாக பேசிக் கொண்டிருந்த தொலைக்காட்சியை நிறுத்தியவள், தானும் தங்கை முன் வந்து அமர்ந்தாள்.


சிவந்தியப்பர், " அவங்க எவ்ளோ பெரிய ஆளுங்க தெரியுமா பிள்ள? அந்த பெரிய சேதுபதி , பாவநாசமே அவரு பேரு கேட்டா கையெடுத்துக் கும்பிடும்.. அவரே என்னிய கூப்பிட்டு கேட்டாரு தெரியுமாடா? உங்க பொண்ண என் தம்பி மகனுக்குத் தாறீங்களான்னு.. நீ வேல பாக்கிற காலேஜே அவுக காலேஜ் தான் தெரியும் தானே.. நாள பின்ன நீதா கரெஸ்பாண்டட்.. எம்புட்டு சந்தோஸமா இருக்கு சொல்லேயிலே.. என்று மகிழ்ந்தவரின் கையை தொட்டு அவரின் தாயார், அதெல்லா சரிதா அப்பு. ஆனா பொண்ண ரொம்ப வசதியான எடத்துல கொடுத்துப்புட்டு, நாம நாளபின்ன அவுக வூட்டு சோபா போட்ருக்க எடந்தாண்டி போய் நம்ம புள்ளைய விசாரிக்க கூட முடியாது கேட்டியா? அவுக தாத்தன், நம்ம கடை தாண்டி வில்லு வண்டீல போவாக.. உடனே அங்கன நடமாடிட்டு இருக்க ஆக்கள் எல்லாம் தோள்ல இருந்த துண்டை எடுத்து இடுப்புல வச்சிட்டு கால்ல செருப்பு போட்ருந்தா கலட்டி ஓரமா ஒளிய வச்சிடனும்.. இல்லாட்டி போற போக்குல சவுக்குல தட்டிட்டு போற கவுரத புடிச்ச குடும்பமாக்கும்..


ஆங்.. அதா அதா எம்மோ.. அந்த மாதிரி நம்ம பெரியவங்க கைகட்டி நின்ன குடும்பத்தில நம்ம வீட்டு பொண்ணு, கால் மேல காலு போட்டு ராணியா வாழப் போறது எவளோ பெரிய கவுரதை.. அதும் அவுகளா வந்து கேட்காக.. என்று தான் பிடித்த பிடியிலேயே நின்றார் சிவந்தியப்பர்.


'காலு மேல காலா.. விடுவானா அந்த பாரி?' என்று திகைத்த படி தங்கையின் முகம் கூர்ந்து கவனித்தாள் நீலாம்பரி.


" கார்த்தி கொணாந்த எடத்துல வேணா நீ சொல்லுதது நடக்கும் அப்பு.. அவக அம்மையும் அந்த மாப்பிள்ள தம்பியும் எம்புட்டு மருவாதியா பேசுனாக.. சாதகம் கூட பத்துப் பொருத்தமும் கூடி வந்திருக்கு. தொலவட்டா இருக்காகங்கறது தவிர ஒரு கொற சொல்ல முடியாது.. அவங்க மேல.." என்ற அப்பாச்சியின் பேச்சிற்கு தங்கையின் முகம் கவனித்த நீலாம்பரிக்கு ஏமாற்றமே..


அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல், யாரிடமோ பேசுவது போல திருத்தம் செய்து மதிப்பெண் போட்டுக் கொண்டிருந்த தங்கையின் கையை பற்றி நிறுத்தி பேனாவை வாங்கி வைத்தவள்,

"பெரியவங்களுக்கு பதில் சொல்லு மஞ்சு. என்றாள் அழுத்தமான குரலில்.

அக்கா, மச்சான் கல்யாணம் முடியட்டும் அப்புறம் பாக்கலாம். என்றாள் தேவ மஞ்சரி அமைதியாகவே.


அதா பெரியம்மை ஆசப்படுதாளே.. உங்க கல்லாணங்கள கண்ணால பாக்கனும்னு.. என்ற அப்பாச்சியின் குரல் கம்மியது, ஒரு வேள அது அவ கடேசீ ஆசையாக் கூட இருக்கலாம் என்றார்.


மனம் குலுங்க கண்கள் கலங்க இரு பெண்களும் தந்தையைப் பெற்றவளின் முகம் பார்த்தனர்.

ஆமாங் கண்ணுகளா.. அவ ஆசை.. உங்கள தம் பொண்ணுங்க மாதிரி வளத்தவ. அவ கேட்கறது செய்யனும்.


எங்கோ பார்த்தவாறு மஞ்சரி, " நீங்க பெரியவங்க என்ன முடிவு பண்றீங்களோ அது படியே செய்யுங்க. எனக்கு.. என்றவளின் குரல் உள்ளே போக, வெட்கமோ என்று எண்ண முடியாதபடி முகம் களையிழந்து கிடத்தது. தனது நாற்காலியை பின் தள்ளியவள், எழுந்து அருகில் இருந்த அறைக்குள் நுழைய அவளைப் பார்வையால் பின்தொடர்ந்தாள் நீலாம்பரி.


சிவந்தியப்பர், அப்போ உடனே பெரிய சேதுபதி ஐயா ட்ட சொல்லிடலாம் தானே அம்மா.. என உற்சாகமாக கேட்க..

மறுப்பாக தலையசைத்த தாயின் கை பிடித்தவர்,
உறுதியான குரலில்,
ம்மா இதான் சரிவரும். வேந்தன், அத்தான் ஆசப்படி கவர்ன்மெண்ட் ஆஃபீஸராகிடுவான். நீலாம்பரி அவங்கூடவே போயிரும். இங்க நிலம் நீச்சை அவுக சேதுபதி குடும்பம் பொறுப்புல வுட்ரலாம். கடைங்க மட்டும் ரெண்டா புடிச்சு நானும் அண்ணாச்சியும் பாத்துக்கிடலாம். இதுதான் இப்போ நம்ம வீடு இருக்க நிலைமைக்கு சரிவரும்.. என.. அழுத்தமாய் பேச,

ஏதோ யோசனையுடன் தலையசைக்கும் அப்பாச்சியை பார்த்தவளிற்கு, இனி அவர் தடுத்து பேச மாட்டார் என்று புரிந்து போனது.

இல்லப்பா.. ஆச்சி சொல்றது போல அவங்க.. என்றவளை கையுயர்த்தி அடக்கியவர்,
அவுக இந்த வட்டாரத்தில பெரியாளுங்க பாப்பா.. அவுக கேட்டு நாம மறுத்தோம்னு சொல்ல நாயமா ஒரு காரணம் சொல்லனும். மாப்பிள்ளையோ குடும்பமோ ஏதாச்சும் கொணம் ஒழுக்கம் ஏதாச்சும் கொற இருக்கா? இருந்தா சொல்லலாம்.

இன்னிக்கு தோட்டத்தில என்ன நடந்துச்சு தெரியுமாப்பா.. GMO விதைகளும், செயற்கை உரங்களும் குவிச்சுப் போட்டு வச்சிருக்காங்க.. அவங்கட்டையே..

இடை நிறுத்தியவர், அதெல்லா இனி அவுக பாடு, நாம தலவிட தேவயில்ல கேட்டியா? நெலம் மொத்தமும் கேட்டா கூட எழுதித் தர நானும் அண்ணாச்சியும் தயாரா இருக்கோம். உனக்கும் வேந்தனுக்கும் அதுக்கு ஈடா மனை, நிலம்ன்னு மாத்திடலாம். அதான் அவன் உத்தியோகத்துக்கும் தோது..

என்றவரை மனம் கனக்கப் பார்த்தாள். இதற்கா இவ்வளவு பாடு அவன் பட்டான் ? பெருமூச்சு விட்டவள் , தங்கையைக் காண அறைக்குள் சென்றாள்.

இயந்திரம் போல , அமைதியாக துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள் தேவ மஞ்சரி. சன்னமாக மூக்குறிஞ்சும் ஒலி.

அவசரமாக அருகில் சென்றவள், மஞ்சு, அழறியா என்ன? கல்யாணத்தில விருப்பமில்லைனா அய்யாட்ட சொல்லு. ஏத்துக்கிடுவாக. அங்கே சரின்னு தலையாட்டிப்புட்டு இங்கே ஏன் அழறவ? என பதைப்புடன் கேட்க,

பதில் இல்லை. மிகுந்த தயக்கத்தின் பின், நீ.. யாரையாச்சும் விரும்புறாயா.. அப்படி ஏதும்னா சொல்லு.. நா அய்யாட்ட ம்ஹூம் பெரியய்யா பெரியம்மாட்ட சொல்றேன். அவுங்க பாத்துப்பாங்க. என மெதுவாய் சொன்னவளை ஏறிட்டுப் பார்த்த தேவ மஞ்சரி,

மறுப்பாய் தலையசைத்து, அப்படி எல்லாம் இல்லக்கா.. நீயாச்சும் ஏதாவுது நினைச்சு குழப்பிக்காத, என்ன நீ கல்யாணம் பண்ணிப் போயிடுவ, நா தனிக்காட்டு ராணியா இங்கே கொஞ்ச வருசம் அதிகாரம் பண்ணலாம் நினைச்சேன். ஒங்கூடவே என்னையும் பொட்டலம் கட்டி அனுப்பிடுவாங்கன்னு தெரியாம போச்சு. என்றவள் முகம் அமைதியாகி இருந்தது.

தயங்கிய நீலாம்பரி, அந்த பாரி குடும்பம் நமக்கு சரிவராது. நீ சொன்னாத் தா அய்யா கேட்பாங்க.

ஏறிட்டுப் பார்த்தவள், உங்கள விட்டு தூரமா மும்பைக்கு எல்லாம் என்னால போமுடியாதுக்கா.. வடாபாவ் சாப்பிட்டுகிட்டு அரபிக்கடலு காத்தை சுவாசிச்சுட்டு எல்லாம் இருக்க முடியாது..
சுசீயமும், தாமிரபரணி ஆத்துத் தண்ணியும் தா எனக்கு செட் ஆகும். கேட்டியா, அது தெய்வான அத்த சுட்டா என்ன, சேதுபதி வீட்ல சுட்டா என்ன? என்று சிறிதாய் சிரித்தவள்,

ஹூம் நீ கொடுத்து வச்சவக்கா, எப்பவும்..
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை..
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை…
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே ன்னு ஜாலியா பாடலாம்.. என்றவளின் குரலில் பெருமிதமும் மகிழ்வும்.

அப்போது ஹாலில் சிவந்தியப்பர் பேசும் ஒலி கேட்டது, " என்னய்யா இரண்டாவது பொண்ணைத் தானே தர்றதா சொன்னோம். இப்பத் திடீர்னு இப்படி சொல்றீங்க.. தலைக்கும் தலைக்கும் பொருத்தம் வராதே.. என்ன? மன்னிக்கனும்.. இரண்டு பொண்ணுமா.. அது அது.. சரி வராதுங்க அய்யா..

குடும்பத்தில கலந்துகிட்டு சொல்றேன்.. ம்.. பேசறேன்.. சரி. என்றவரின் குரலில்.. வயிற்றினுள் பயப்பந்து உருள அவசரமாய் ஹால் புறமாய் திரும்பினாள் நீலாம்பரி.



' என்னைக் கட்டிக்கிடறதுக்கு பாம்பு புத்துக்குள்ள கை விட்றலாமா? ஒன்ன்ன்… நிலத்துல போட்டது குப்பையா.. நாஆஆஆஆ அதைப் பொறுக்கனுமா? இரண்டுமே நீதான்டீ செய்யப் போற.. பாக்குறியா?' என்ற பாரியின் குரல் காதுக்குள் மறு ஒலிபரப்பானது..


நாயகன் ஆடுவான்..
 
Last edited:

தாமரை

தாமரை
வந்துட்டேன் தோழமைகளே.. நேற்றே எஸ்ஸே எழுதிவிட்ட படியால்
😁😁😁😁😁😁 இன்று கதை பதிவு மட்டும்.. இரு மாதங்கள் கழித்து வந்தவங்க, சரியாக பேசறாங்களா.. தொடர்பு அறுபடாமல் குழம்பாமல் போகிறதா கதை.. கருத்து பகிர, தெம்பாக.. அடுத்தடுத்த பதிவுகள் விரைந்து வரும்.. இனி மூன்று நாட்களுக்கு ஒரு முறை பதிவு இருக்கும் என ஊருணி காத்த அய்யனாரை துணைக்கழைத்து சபதம் செய்கிறேன்🤪🤪🤪🤪🤪

கருத்து பகிர..




லவ் யூ ஆல் டியர்ஸ்..
 

தாமரை

தாமரை
ப்பா..



NPNN 10

குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா.. என் பைங்கிளி… பாடல் ஆவணி மாதத்துக் கொண்டல் காற்றுடன் கலந்து பரவிக் கொண்டிருந்தது.

அன்றைய அறுவடைகளை எடை போடும் வேலையை அமைதியாக செய்து கொண்டு இருந்தான் மகிழ்வேந்தன். மனம் சற்றே சிணுக்கத்தில் இருந்தது. சில நாட்களாக வீட்டின் நிகழ்வுகளை என்ன கணக்கில் எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. எல்லா காரியங்களும் தன் கைமீறி செல்வதாக உணர்வாகிற்று.


புதிய குத்தகைக்கு என்று, க்ருஷ்ணா கோட்ஸ் ஆட்களிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் கொண்டு கொடுக்கச் சொல்லி, பணம் தயார் செய்து எடுத்துக் கொண்டு பெரிய மாமாவிடம் கேட்கப் போனால் ,


'அதெல்லாம் நாணயமான காரியம் இல்ல.. பத்திரம் போட்டது போட்டது தான், வாக்கு மாற்றக் கூடாது என்கிறார்.

அந்த பாரி, ஒத்திக்கு எடுத்த கார்த்தி நிலத்தில் செய்த அடாத வேலைகளை கேட்க ஆரம்பித்ததற்கு , சின்ன பையன் ஏதோ புதுசா சாதிக்கும் ஆர்வத்தில பண்ணிட்டானாருக்கும் டே.. பெரிய சேதுபதி கூட சொல்லிட்டாரு, அதெல்லா இனி பத்திரத்து சரத்தெல்லா சரியா பாத்துக்கிடலாம். அதான் சம்பந்தி ஆகப் போறமே என்றாராம்..


மண்ணை அயலானிடம் விட்டது போல பெண்ணையும் தரத் தயாராக இருக்கும் சின்ன மாமாவைப் பார்த்து என்ன சொல்வதென்றே புரியவில்லை. அதுவாவது ஒத்தி காலம் முடிந்ததும் , எப்படியாவது மீட்டெடுத்துடலாம்.. ஆனால்!!' சன்னமாக பெருமூச்சு விட்டவனைக் கலைத்தது, செந்திலின் குரல்.

என்ன வேந்தா, எடக் கல்லைய மொறச்சு பாத்தானைக்கு இருக்க? சிட்டையக் கொடு.. வண்டி கெளம்பட்டும்.. எனவும்

ப்ச் என்றவன், சமாளிக்கும் விதமாய்,
கணக்கு நோட்டைப் பார்த்து, எங்கடே நெல்லி , பப்பாளி, கொய்யா, எலுமிச்ச எல்லாம் இன்னும் மூட்ட கட்டியாறலையோ.. என்றவன் , அந்த மரங்கள் இருந்த நிலம்தான் ஒத்திக்கு விடப்பட்டு விட்டது, என்று நினைவு வந்தவனாய் கண்மூடித் திறந்தான்.

செந்திலோ மிகுந்த ஆற்றாமையுடன், அந்தப் பழங்களை எல்லாம் இனி எல்லாம் இயற்கை முறைல வெளஞ்ச கிருஷ்ணா விவசாயப் பண்ணை பொருளுங்கன்னு டப்பால போட்டு விப்பாங்கடே.. வம்பாடு பட்டவ நீ.. பலனு அவனுங்களுக்கு.. என்று பேசுபவனை நிறுத்துபவனாய், சிட்டையைக் கையில் வைத்தவன்,

அடுத்த சோலியப் பாருடே.. பூர்வீக நெலத்தில தண்ணிச் சுத்துறது காணாது.. அதனால ட்ராகன் பழம், பேரீச்சை, ஈச்சை வச்சு விட்றலாம்னு இருக்கேன். ட்ராகன் கள்ளிச் செடி துண்டு , நேத்திக்கே சொல்லிட்டனாக்கும். கமிஷன் கடைல பழங்கள இறக்கிட்டு நம்ம கேடிஎஸ் லாரி சர்வீஸ்ல இருக்கும் , முள்ளு பாத்து பதனமா தூக்கிட்டு வாடே.. புரிஞ்சதா.. நடுவால நம்ம கோழிக் கூண்டுகள மாத்திக்கிடலாம். இன்னொரு ஐடியாவும்
இருக்கு..

ஏதே.. கள்ளிச் செடியா.. விளையலைன்னாலும் பிஞ்சக் காடு வேந்தா , அந்த மண்ணுல இதெயெல்லாம் போடுவாகளா.. என்றவன் அவனின் பார்வை இவன் புறமாய் முறைப்பாய் திரும்புவது கண்டு..

ஆங் நீ சொன்னா சரியாத்தே இருக்கும். நா போயிட்டு லோட எறக்கிட்டு , அந்த முள்ளுச் செடிகள எடுத்து வந்திடறேன். என்றவன் அவசரமாய் வாகனத்தை நோக்கி நகர்ந்தான்.

அது நட்ட கையோட அதுக்கு ஸ்டாண்டு போல சப்போர்ட்டு கொடுக்கனும் டே. பாவநாசத்தில நாம கல்லு எடுப்பமில்லா , அவனுங்கட்ட சொல்லி ஒராள வரச் சொல்லனும். அப்புறம் கமிஷன் கடைக்காரன் அம்பது தாரேன்னான். வாங்கி பெரிய மாமா கைல ஒப்படைச்சிரு.. என்று உரக்க சொன்னவன், தோளில் இருந்த துண்டை உதறி முகம் துடைத்தான்.

பழக்கமான வாகன ஒலி.. ஆனால் அதில் வித்யாசமான உறுமல் கேட்டு துண்டை விலக்கி எட்டிப் பார்த்தான்.


நீலாம்பரியின் என்டார்க் வாகனத்தில் தவ்வி தவ்வி குதித்தவாறு கொண்டிருந்தாள் தேவ மஞ்சரி. நீலுவின் கையில் கன்றுக்குட்டியாய் பாய்ந்து வரும் வாகனம் இவளின் கையில் மிரட்சி அடைந்த மான்குட்டி போல துள்ளியது கண்டவனின் வாய் சிரிப்பில் முகிழ்த்தது.


வந்து நிறுத்தி, அப்பாடி என்று பெருமூச்சு விட்டவளிடம், என்னா டீச்சரம்மா.. அதிசயமா காட்டுப் பக்கம்? ஓ.. வருங்கால பண்ணையாரம்மா? உங்க கிருஷ்ணா விவசாயப் பண்ணைய பார்வையிட வந்தீகளோ.. என்றான்..


நிமிர்ந்து முறைத்தவள்,

அக்கா கார்த்தி அண்ணே, அண்ணியோட அகத்தியரு அருவி கெளம்புதா.. என்றவள், கொண்டு வந்த பையை எடுத்து நீட்டி, இதைப் புடிங்க. கொரியர்ல வந்தது. அக்கா வண்டியில ஏறிகிட்டு இருந்த அவசரத்திலேயும் , உடனே உங்கட்ட கொடுக்கனும்னு என்னிய தொரத்திவிட்டுட்டா , விதையா உரமா.. தெரியல, குளு குளுன்னு இருக்கு. என்றவள் கையிலிருந்த பார்சலில் பார்வை பதித்தவன் அவசரமாய் வாங்கினான்.


எடுத்தவன், ஏன் நீ போகலையா? காலேஜூ லீவுதானே போட்ருக்க.. என்று கேட்டவாறு வேகமாக நடக்கத் தொடங்க, மஞ்சரியும் அவனைப் பின்தொடர்ந்தாள்.

ஊஹூம், அவக குளிக்கவா போறாக, பூசாரியம்மா நீலூ தலைமைல பில்கிரிமேஜ் டூர் நமக்கெல்லாம் செட் ஆகாது. வேகமாக அடித்த காற்றில் கும்மென்று பாசுமதி அரிசி வாசம் வர, சிறு சிரிப்புடன், ஊருணிக் கரைல பிரியாணிக் கடே ஏதும் தொறந்திட்டீங்களா என்னா? இம்புட்டு வாசனை.. என்றாள்.

ஆச்சரியமாய் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் , தொடர்ந்து நடந்தவாறே, பரவால்லயே, திடீர்னு செல நாளா பேசாமடந்தையா மாறிப் போனதப் பாத்து, இனி இந்தில பேசுனாத்தா பேசுவ போலன்னு பயந்துட்டே. இப்ப என்னா, உள்ளூருல்லேயே மாப்பிள்ளன்னதும் பேச்சு வருதோ.. என்றவன் , கால்கள் அவர்களின் உரக் குழிகள் இருக்கும் நிலம் நோக்கிச் சென்றன.

தண்ணீர் தேக்கிய வயலில் நாற்றுகள் நீச்சல்குள பச்சை அழகிகளாய் ஒய்யாரம் காட்டி நின்றன. தண்ணீரில் வளைவாய் அசைவு கண்டவள், உற்றுப் பார்த்தாள், பாம்போ என்று..

நடந்து கொண்டிருந்தவன் அவள் தொடராதது கண்டு , திரும்பிப் பார்த்தான். அவளின் மிரட்சியான முகம், கூர்மையாய் அலையும் விழிகள் கண்டு, என்னா பிஸிக்ஸ் டீச்சரு , இதுல எவ்ளோ தண்ணி தேங்கிருக்குன்னு கணக்கு போட்டு பாத்திட்டு இருக்கியா? என்றான்.

எச்சில் விழுங்கியவள், இல்ல பாம்பு போல இருந்தது.. என்றவள் ஏறக்குறைய கத்தினாள்.. அதோ இருக்கு பாருங்க.. என கைகாட்டினாள்.


ஏ பாம்புக்கும் மீனுக்கும் உனக்கு வித்யாசம் தெரியாதா.. என சொன்னவன் சாதாரணமாக நடக்க ஆரம்பித்தான்.

என்னாதூ நெல் வயல்ல மீனா.. என அவள் வாய் பிளக்கவும்..

ஆமா.. நாட்டு மீனுங்க விட்ருக்கு. அதான் வெவசாய நிலத்தில பல்லுயிர் சூழல் உருவாக்கறது. பயிருக்கு பாச்சுற தண்ணீர், அடியுரத்தில இருந்த சத்துக்கள் எடுத்து மீனும் நல்லா வளம்மா வளரும், மீனுங்க விடற கழிவுல கெடைக்கிற இயற்கையான என்பிகே சத்துக்களால பயிரும் உரம்மா வளரும். என்றவன் பார்வை எதிரே வயலின் ஓரங்களில் இருந்த புதர் செடி, முட்களை சுத்தம் செய்யும் ஆட்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பாரியின் மேல் நிலைத்தது.

ஹூம்.. பாடுபட்டு யோசித்து நாம பயிருங்கள காப்பாத்த உயிர்வேலி உருவாக்கி வச்சிருந்தா அதோட அருமை தெரியாம பிச்சுப் போட்டுட்டு இருக்கான் பாரு, அடுத்து ஒன்னத்துக்கும் ஆவாத வேலிக்கல்லு நட்டு கம்பி வேலி வைக்கப் போறான் போல , அடிப்படையே அறியாம இருக்க இவேம் கையில இன்னும் ஒரு நிலம் வேற தூக்கி கொடுத்தாச்சு நம்மூட்டு ஆளுங்க .. என்றவன் சிறு விரக்திச் சிரிப்புடன்.. பூர்வீக நிலம் பக்கமாக நடந்தான்.

ஓங்கியடித்துக் கொண்டிருந்த கொண்டல் காற்று , இவனின் வார்த்தைகளை , அவனின் காதுகளில் கொண்டு சேர்த்ததோ.. தன்னைப் பற்றிய பேச்சு என்ற உணர்வாலோ, விருட்டென்று திரும்பி இவர்கள் புறம் பார்த்தான் பாரி.


மஞ்சரி தாழ்ந்த குரலில், நீங்க பேசுனது அவுகளுக்கு கேட்ருச்சு போல, நல்ல விசயங்கள எட்ட நின்னு பேசறது விட , கிட்ட போய் சொல்லலாம்ல , பாவம் விவசாயத்துக்கு புதுசு தானே அவங்களும்.. என்றவளின் பதிலில், அப்படியே நின்றவன்,

முறுவலுடன், என்னம்மோ! வருங்கால மாப்பிள்ளைக்கு வக்காலாத்தா.. நீ வேண்ணா போய் சொல்லேன். கேட்டுட்டுத்தா மறுவேலை பாப்பான் அந்த வேட்டைக்காரரு பேரன். போ, போய் பேசு. கலியாணத்துக்கு மின்ன பேசிப் பழகினா மாரி இருக்கும். நா வேணா இங்கனையே நிக்கேன். என்றான் கேலியாக மெல்லிய குரலில் .


உதட்டை சுழித்தவள், அவனைத் தாண்டி நடந்தவாறு, ஆங்.. அவரு கூட நா ஏன் பேசோணும்.. பழகோணும்.. அவரு கட்ட ஆசப்படுறது நீலாக்காவத்தானே.. என்றவாறு கடந்தவளின் கையை நகரவிடாமல் பற்றினான்.


என்ன? என்று உறுமலாய் வந்தது குரல்.

புருவம் சுருங்கத் திரும்பியவள், என்ன என்ன? உங்க சின்ன மாமா, அதா எங்கய்யா சொல்லலியா? உங்களுக்கு தெரியாதா? நேத்து ராவுலயே பேச்சு வந்திச்சே. பெரிய சேதுபதி அய்யாவே கேட்டாக போல.. நெசம்மா இன்னுமா உங்க காதுக்கு வரலை..

எங்காதுக்கு வாரது இருக்கட்டும்.. மாமா என்ன பதில் சொன்னாக? என்றான் நிதானமாய்.

என்ன சொல்வாங்க.. வீட்ல கலந்து பேசிட்டு சொல்லுதேன்னு அந்த பெரிய சேதுபதி ஐயாட்ட சொன்னாக தா. ஆனா யார்ட்டையும் எதுவும் பேசல.. உங்கட்டையும் ஏதும் சொல்லலன்னு இப்போ புரிஞ்சது.

யோசனையில் புருவம் நெரிய நின்றவனிடம், இந்த ஆட்கள் பேசனதுல நட‌ந்த நல்ல விசயம், அந்த மும்பாயி ஆட்கள்ட்ட அய்யா, மன்னிச்சுக்கிடுங்க.. நீங்க வேற எடம் பாத்துக்கிடுங்கன்னு சொன்னது, இன்னொன்னு இந்த பெரிய வள்ளலு, என்று கண்களால் பாரியை சுட்டியவள், கட்டுனா நீலாவத்தா கட்டுவேம்ங்காறாராம். என்னியவே ஆயிரம் தடவை புத்தி சொன்னவா.. அக்காவா சம்மதிப்பா.. அதனால அய்யா கம்முன்னு ஆயிட்டாரு..
எந்தலை தப்பிச்சது.. என்று பழைய கலகலப்பு திரும்பியவளாய் பேசுபவளை .. திரும்பி பார்த்தவன், கோபத்தில் ஏறியிருந்த புருவங்கள் இறங்க , சிறு முறுவலும் எட்டிப் பார்த்தது.

இவிங்க கெடக்கானுங்க.. இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு செயலு.. ஆனா, நெசம்மா அந்த கிஸோரை எனக்குப் புடிச்சுருந்தது மஞ்சூ.. மிஸ் பண்ணிடாதே..

களுக் என சிரித்தவள், எந்தக் கோணத்திலேருந்து பாத்தாலும் உங்காளு ராமராசன் சாயலில்லியே. எப்படி புடிச்சுது அத்தான்..

சிரிப்பில் லேசாக உடல் குலுங்க, அட, உனக்கும் அவருக்கும் செட்டாகும் தோனுது. நீ உம்னு மட்டும் ஒர் வார்த்தை சொல்லேன்..

ஊஹூம் என்று வேகமாய் தலையசைத்தவள், நமக்கெல்லாம் தாமிரபரணி தண்ணீ தான்.. பொதிய மலைக்காத்து தா செட்டாகும். அரபிக்கடலு உப்புக் காத்து.. செட்டாகாது.. விடுங்க விடுங்க. என்றாள்.

மீண்டும் ஒரு முறை இவர்கள் புறம் திரும்பியும் பாராமல் வேலையாட்களை நிலத்தினை உற்று நோக்கி கொண்டிருந்தவனைக் கண்டவன், கையில் கொண்டு வந்த பார்சலை எடுத்தவாறு கோழிக் கூண்டுகள் பக்கமாக செல்லத் தொடங்கினான்.

கோழி தீவனமா, அதுக்கா இவ்ளோ பில்டப்பு என்று கேட்டவாறு அவன் அங்கிருந்த கூண்டின் மீது வைத்து கவனமாக பிரிப்பதை எட்டிப் பார்த்தவள்.. அவன் கையில் அள்ளி எடுத்து மண்புழுக்களை, உரப்படுகையில் இடுவதைப் கண்டு ஆச்சரியம் அடைந்தாள்.

புழுவா , நம்ம தோட்டத்தில இல்லாததா.. இதையா பார்சல் போட்டு அனுப்பினாங்க.. என்று கேட்டாள்.


ம்.. எல்லாம் நாட்டு மண்புழுக்கள் , ஒரு முறை ஒரு விவசாய ஆஃபீஸர் சொன்னது கேட்டு, ஆப்ரிக்க மண்புழுக்களை வாங்கி விட்டேன். உரம் எக்கச்சக்கமா கிடைச்சாலும், அவை நம்ம நிலத்துக்கு பெரிதா நல்லது செய்வதில்லைனு தெரிஞ்சது. அது மட்டுமில்லாம நமது மண்ணுல இருக்குற மண்புழுக்கள அவை அழிக்கறதாகவும் இப்போ நடக்குற ஆராய்ச்சி சொல்லுது. அதான் இப்போ இந்த மாதிரி நமது பாரம்பரிய மண்புழுக்கள பெருக்கணும்னு ஒருத்தருக்கொருத்தர் ஷேர் பண்ணிக்கறோம்.


அய்யா.. எனும் குரலில் திரும்பி பார்த்தான். பாரியுடன் நின்று கொண்டிருந்த வேலை ஆள்.


பாரி வேந்தனய்யா , இந்த கூண்டுங்களை, ஒரக்குழிங்கள எப்போ எடுப்பீகன்னு கேட்காரு.. என்று மெதுவாய் சொல்லி விட்டு மஞ்சரியைப் பார்த்து , நீலாம்மா இன்னும் வரலை யா? என்று கேட்கவும் ,


மகிழ் வேந்தன் நிதானமாய் தன் வேலையை செய்தவாறே பதில் கூறினான், அறுவடைக்கு தான் நேற்றிலிருந்தே கணக்கு. இதெல்லாம் மாத்தம் பண்ண பத்து நாள் டைம் இருக்கு. அதுக்குள்ளே செய்வோம்னு சொல்லு போ.. என்றவன், நகரத் தொடங்கியவனிடம்,

இங்காரும் அண்ணாச்சி.. என்றான்..

ஏனுங்க தம்பி என்று திரும்பியவனிடம்,
முறைத்தவாறே ,
இந்த அடைசல், முள்ளுன்னு நினைச்சு உங்க பாரி அய்யா கழிக்கதெல்லாம் உயிர் வேலின்னு உமக்காச்சும் தெரியுமா தெரியாதா.. என்று கேட்கவும் தலையை சொறிந்தவன்..

முள்ளுச்செடி வேலியா, அதெல்லா அந்தக் காலம் தம்பி, இப்போ அய்யா, கரெண்டு வேலி வைக்க போறார் . அதுலேயே பூச்சி புடிக்க பொறி, சோலாரு லைட்டெல்லா போடப் போறாரு தெரியுமா. பெரிய மூளக்காரரு எங்கய்யா.. என்றவன் குரலில் பெருமை..

சரிதா.. தப்பித்தவறி கூட எங்க பிஞ்சைல கை வச்சிராதீக.. புரிஞ்சதா.. என்றவனின் இறுகிய அடிக்குரலில் மிரண்டு வேகமாக தலையசைத்தவன்,

அது தம்பி, நீலாம்மா, ஊருணிக்கரை ஒட்டி உங்க பனமரத்தில பதனீக்கு கலயம் வைக்க சொன்னாக. எங்கூட வேல செய்ய வந்தவனுகள்ல ஒருத்தே பனையேறி.. கலயம் வைக்கலாமா, என்ன சைசுலன்னு என்னான்னு அவகட்ட கேட்கனும். என்றான்.

அக்கா அகத்தியர் அருவி கோவிலுக்கு... என்றவளை இடைமறித்த மகிழ் வேந்தன்,

அவ இனி வரமாட்டா. பதனீக்கு நா வேற ஏற்பாடு பண்ணிக்கிடுதேன்.. நீரு போரும்.. என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தான்.


ஏனத்தா அப்படி சொன்னீங்க. அவ என்னைக்கு வயலுக்கு வராத இருந்திருக்கா.. சாயங்காலத்துக்கு வந்துருவா. கார்த்தி அண்ணனுக்கு பதநீ சாதம் பிடிக்குமில்ல.. நைட்டுக்கு பண்ணனும்னு சொன்னா, அதுக்கு தா இவங்கட்ட கேட்டுருப்பாளாருக்கும்.


ப்ச், இவிங்க சங்காத்தமே வேணா, நீலூ.. இனி… நீயும் இங்கெல்லாம் .. என்று சொல்ல வந்தவன் நிறுத்தி, பதனீ இன்னிக்கு பொழுதோட ஊட்டு சமயலறைல இருக்கும், அது நா பாத்துக்கிடறேன். நீ வா.. வந்ததுக்கு கோழி, மீனு எல்லாம் அடுக்கு மொறைல வளக்கிற கூண்டு ரெடி பண்ண போறே. அதுக்கு ஐடியா சொல்லு என்றவன், பிடித்து இழுக்காத குறையாக அவளை தங்களது நிலம் நோக்கி தள்ளிச் சென்றான்.

பாரியிடம் திரும்பிச் சென்றவன் , ஐயா, ஒரு வாரம் பத்து நாளைக்குள்ள ஒதுக்கி தந்துடுவாகளாம்.. என்றவன் தயங்கி, நா சொல்லுதே தப்பா நினைக்காதீங்க. சம்பந்தம் கலக்க பேசிட்டு இருக்க தேரத்துல இம்புட்டு கராரா கேட்கலாமாய்யா.. அதும் கட்னா அந்தூட்டுப் பொண்ணத்தா கட்டனும்னு மனசுல வச்சதுக்கு அப்புறம், அவக ஒறமுறைகூட என்னாத்துக்கு தகராறு? எனவும்,

திரும்பி பார்த்தவனின் கண்களில் இருந்த குளிர் கண்ணாடி கைக்கு நகர்ந்ததால், கூரிய பார்வை விழுந்ததில் கேட்டவனிற்கு குளிர் ஏறியது.

என்னவோய்யா , ஏதோ தோனுச்சு சொல்லிபுட்டேன், பாத்துக்கிடுங்க , என்றவன், ஏடே முருகா, வேந்தனய்யா காட்டுப் பனயேற வேணாவாம், நீலாம்மா இனிமேட்டு இந்த பக்கமே வரமாட்டாகளாம்.. ஹூம்… என்றவன் , துண்டை தலையில் கட்டிக் கொண்டு வேலையில் இறங்கினான்…

தாடை இறுக , ஊருல இப்படி பேச்சு பரவிக் கெடக்கா.. இனி வரமாட்டாளா.. பாத்துறலாம் என்று முணங்கியவன்..

சத்தமாய், இந்த வேலை மதிய சாப்பாட்டுக்கு முன்னே முடிச்சுறனும். மூனு மணிக்கு மருந்தடிக்க ஆட்கள் வருவாங்க. அதுக்குள்ள அய்யனார் கோயில் நிலத்திலேயும் வேலைங்க முடிச்சுடுங்க. என்றவன், மணி பார்த்து விட்டு தனது வாகனம் நோக்கி நடந்தவாறு தனது பெரிய தந்தைக்கு அழைத்தான்.


**************
அண்ணி பார்க்க ஆசைப்பட்ட தாமிரபரணியைக் காட்ட அண்ணனை கிளப்பினால், பெரியன்னையோ பாவநாசர் சமேத உலகம்மையை பார்த்து வர சொல்லிவிட்டார்கள். நீலாம்பரிக்கு மிகப் பிடித்தமான கோவில்.

தாமிரபரணி நடக்கும் தடத்தில் அமைந்த.. பாடல் பெற்ற ஸ்தலம் . ஈசன் கல்யாண சுந்தரராய் அகத்தியருக்கு காட்சியளித்த இடம்.

அகத்தியர் அருவியில் நீராடி , கொண்டு வந்திருந்த உணவையும் அங்கேயே அமர்ந்து, உண்டு விட்டு கிளம்பி கோவிலுக்கு வந்த நேரம் சரியாக உச்சி கால பூஜை. உலகம்மைக்கு மஞ்சள் சாற்றும் வைபவம் நடந்து கொண்டிருக்க, பெரியப்பாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி.

" பெரியம்மை உன்னையும் மஞ்சரி பிள்ளையும் இந்த பூசைக்கு நிக்க வைக்கனும்னு சொல்லிட்டே இருந்தா.. அண்ணியும் நீயும் மஞ்சளும் கயிறும் வாங்கிட்டு வாங்க, பூசை ஆனதும் இங்கே சுத்தி வார சுமங்கலிகளுக்கு கன்னிப் பொண்ணுங்களுக்கு கொடுங்க .. என்னப்பன் அருளால எல்லாம் நல்லதா நடக்கும்." என்று சொன்னவர் கோவிலை வலம் வரப் போய்விட, மஞ்சள் கயிறுகள் வாங்கித் தந்த அண்ணன், தூக்கத்தில் விழித்து சிணுங்கிய குழந்தையை சமாளிக்க, அங்கு இருந்த மரங்களில் இருந்த மந்திகளை காட்டி சமாதானப் படுத்த நகர்ந்து விட, அண்ணியுடன் இணைந்து கோவிலை வலம் வந்தவாறு கண்ணில் பட்ட சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறும், கன்னிப் பெண்களுக்கு மஞ்சள் கிழங்கும் கொடுத்தவாறு வந்தனர். அன்று வெள்ளிக் கிழமை , முகூர்த்த நாள் என்பதால் கோவிலில் நல்ல கூட்டமும் கூட..

நீலா , நீ கொடுத்திட்டு இரு, நான் போய் குழந்தைக்கு தண்ணீர் கொடுத்து விட்டு வந்துவிடுகிறேன் என்று கிளம்பிய அண்ணியிடம், மந்திகள் நடமாட்டம் இருப்பதால், பிஸ்கட் பழம் போன்ற தின்பண்டங்கள் வெளியே எடுக்க வேண்டாம் என்று கவனப் படுத்தி அனுப்பினாள். அகத்தியர் சன்னிதி வாசலில்,மர நிழலில் அமர்ந்திருந்து ஏதோ சிறிய புத்தகம் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்த பெண்மணியை நெருங்கியவள், அவர் நிமிர்ந்து பார்க்கவும் அப்படியே நின்று விட்டாள்.


அழகிய பட்டுடுத்தி , அம்சமாய் அளவாய் நகைகள் பூட்டி இருந்தவரின் முகத்தில் கண்களில் வெறுமை.. இவளைக் கண்டதும் முகம் மலரப் புன்னகைத்தவர், தலையசைத்து அருகில் அழைத்தார். தயக்கத்துடன் நெருங்கியவள், மஞ்சள் கயிற்றையும் மஞ்சள் கிழங்கையும் தர, மகிழ்வுடன் கை நீட்டி வாங்கிக் கொண்டவர், சைகையால் அருகில் அழைத்து, தனது கைக்கு அருகில் வைத்திருந்த குங்குமக் கிண்ணத்திலிருந்து இரு விரல்களில் எடுத்தவரின் உத்தேசம் அறிந்து , அவரருகில் சிறு தயக்கத்துடன் மண்டியிட்டு அமர்ந்தவள், நெற்றியைக் காட்டினாள்.

புன்னகை சிரிப்பாய் மாற, பொட்டிட்டவர், அய்யனார் கோயில்ல உன்னியப் பாத்த போது , ஒம் போலப் பொண்ணு மருமகளா வந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன்டா.. கல்யாணமே கிடையாதுன்னு குதிச்சிட்டு இருந்த பையன் உன்னியன்னா கட்டிக்கிறேன்னு சொன்னதும் சந்தோஷம் தாங்க முடியல.. என்று அவளின் கன்னம் தொட்டவரை சங்கடத்துடன் பார்த்தவள், தலை குனிந்து கையூன்றி மெதுவாக எழுந்து திரும்பியவள் அவள் இருந்த இடம் நோக்கி வந்து கொண்டிருந்தவனைக் கண்டு அதிர்ந்து வேகமாக எதிர் திசையில் நகர்ந்து கிட்டதட்ட ஓடினாள். கண்களால் அண்ணன் அண்ணி இருக்கும் இடம் தேட,


அசந்தர்பத்தில் குரல் கொடுத்தார் அந்த பெண்மணி,
ம்மா.. அம்பரி கண்ணு, இந்த பூவை வச்சுக்கோடா.. என்னும் குரலில் வயிறு அதிர தடுமாற்றத்துடன் , காது கேட்காதவள் போல வேகமாக நடக்க,


அழுத்தமான காலடிகள் தொடர்ந்து அவளின் முன்னே நீட்டப்பட்ட கையினால் வழி தடைபட

ஏய் உன்னைத் தானே கூப்படறாங்க. காது கேட்கலையா.. எனும் குரலில் நிமிர்ந்து பார்த்தவள்.


ஒரு பெரிய மனுசி கூப்படறாங்க, என்ன மதிக்காத போற எனும் உறுமலில் இருந்த எகத்தளத்தில் முறைத்தாள்.


மண்ணை மதிச்சு பொண்ணை துதிச்சு வாழ்த்தறவங்க கையிலிருந்தது தான் எதையும் வாங்கி எனக்கு பழக்கம். மிதிச்சு முறிக்கறவங்க தாரது ஏதும் வேண்டாம். என்று நகர்ந்தவளின் முன் வந்து நின்று பாதையை தடை செய்தவன்,

இனி உனக்கும் உங்க குடும்பத்துக்கும் வேற ஆப்ஷன் இல்லயே பொண்ணு.. என்றவன் குரலில் அத்தனை நக்கல்,

கண்கள் சுருங்க நிமிர்ந்து பார்த்தவள், உதடுகள் துடிக்க வாய் திறந்தவளிற்கு, அத்தானின் அறிவுரை ஞாபகம் வந்துவிட கப்பென்று வாய் மூடிக் கொண்டவளாய், விலகி நடக்க முற்பட, அருகில் வந்து கொண்டிருந்த கார்த்திக் மீது மோதிக் கொண்டாள்.

பயந்து தடுமாறியவளை கைபிடித்து ஆசுவாசப்படுத்தியவன்,

என்னடாம்மா. பாத்து வரக்கூடாது என்றவாறு நிமிர்ந்து பின்னால் நின்றவனைப் பார்த்தவன்,

ஹலோ என்றான். என்னாச்சு என்று தங்கையிடம் தாழ்ந்த குரலில் விசாரிக்க பதில் தள்ளி நின்று கொண்டிருந்தவனிடம் இருந்து வந்தது.


அம்மா, சாஆஆ…மி பூவு கொடுத்தாங்க.. என்றவன் ஓரடி முன் வந்து , நீலாம்பரி கையில் இருந்த பூஜைக் கூடையில் பூவை போட்டான்.

அவ்ளோ தான். என்றவன், கார்த்திக்கிடம், உன்கிட்ட. ஹூம் உங்கட்ட பேசனும், நாளைக்கு கிளம்பறீங்கன்னு அப்பா சொன்னாங்க. அதுக்கு முன்னே மீட் பண்ணலாம். என்றவன் திரும்பி தன் தாயாரை நோக்கிச் சென்றான்.


ஹூ இஸ் ஹீ என்று கேட்கும் அண்ணியிடம், அண்ணன் ஏதோ சொல்லுவதையும் அண்ணி ஆச்சர்யமாக திரும்பி பார்த்து ஏதோ சொல்லியவாறு வருவதை கண்டு கொள்ளாதவாறு , பத்மாசனத்தில் அமர்ந்து இறைவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்த பெரிய தந்தை நோக்கிப் போனாள்.

மஞ்சள் கயிறெல்லாம் கொடுத்தாச்சா பிள்ள? என்று கேட்கவும் கையில் இருந்த பூஜைக்கூட மிகவும் கனப்பது போன்ற உணர்வாக, ஆம் என்று தலையசைத்தாள்.


ரொம்ப சந்தோஷம் என்று எழுந்தவர், அவளின் உச்சந்தலையில் கை வைத்து, வீட்டுக்கு போகலாம் .. என்றார்.

காரில் ஏறப் போகையில், பின்னால் அடுத்து இருந்த காரில் தன் தாயார் ஏற உதவிக் கொண்டிருந்தவனை பார்த்த ரோஷிணி, கார்த்திக்கிடம்,

ரியிலி ஹீ இஸ் டால், ஃபேர் அண்ட் ஹௌண்ட்சம் தென் வேந்தன் அண்ணா அண்ட் கிஷோர் நோ.. என்று சொல்வதைக் கேட்டவள், மனம் கடுத்துப் போனது.

ம்க்கும்.. புத்தி, பேச்சு அழகாயில்லியே.. ப்ச், அய்யனாரப்பா, என்று முணங்கியவாறு, பூஜைக் கூடையில் இருந்த பூவினை எடுத்து, காரின் கண்ணாடியில் தொங்க விட்டவள், அதில் தெரிந்தவனின் உருவம் கண்டு பின்னால் சாய்ந்து கண்களை மூடி கொண்டாள்.

நாயகன் ஆடுவான்..

 

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே! இதுவே இந்த கதைக்காக நான் எழுதும் கடேசீ எஸ்ஸேயாக இருக்கட்டும் 🤣🤣🙏🙏🙏🙏 @Priyajulian போட்டுட்டேன் மா.. மிகவும் காக்க வைப்பதற்கு ஸாரி🙊🙏

சபதமெல்லாம் ப்ரமாதமா போட்டாலும் ஒன்னியும் ஒர்க்அவுட் ஆகலை. எனது எல்லா வேலைகளையும் ரீஷெட்யூல் பண்ணி, தோட்டம் எல்லாம் , எதும் புதுசா பண்ணக் கூடாது, இருப்பதை மெயிண்டெயின் பண்ணா போதும் என்றெல்லாம், நானும் என்னென்னவோ செய்து பார்க்கிறேன். அப்படியும் 2000+ வார்த்தைகள் எழுத இத்தனை நாட்கள்😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫😶🌫

கல்லைக் கண்டா நாயகரைக் காணோம் என்பது போல எழுத சமயம் வாய்ப்பதே அரிதாகி, கிடைத்தால் மனமோ உடலோ சந்தர்பமோ ஏதோ ஒத்துழைக்காத சூழல்.

ஒன்று மட்டும் அறுதியிட்டு சொல்லுவேன்.எக்காரணம் முன்னிட்டும் கதையை நிறுத்த மாட்டேன். எவ்வளவு நாட்கள் மாதங்கள் ஆனாலும் எழுதி முடிப்பேன். 25-30 அத்யாயங்கள் எழுத உத்தேசித்து இக்கதை ஆரம்பித்தேன். எனவே விட்டு விட்டு படிக்க விருப்பம் இல்லாதவர்கள்,கதை 22 தாண்டியதும் தொடருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் .

கருத்துப் பகிர்வில் தகவல் தெரிவித்தால் அவர்களே அந்த சமயம் டேக், மென்ஷன் செய்து பதிவுகள் போடுகிறேன்

எனக்கும் வேற வழி தெரியல தோழமைகளே.. மன்ச்சுக்கோங்கோ🤧🤧🤧🤧🤧

மனம் தளராத விக்ரமாதித்தி.. 11ஆம் அத்யாயத்திற்கு 'உ' போட்டுட்டாள். விரைவில் சந்திப்போம் தோழமைகளே.. அப்புறம் அந்த..... கருத்து... ஆங் அடிக்க வருங்குள்ள ஓடிருறேன்..
 

தாமரை

தாமரை
34720

மன்னிக்கனும் தோழமைகளே..
கதை பதிவு அல்ல😶🌫😶🌫😶🌫
பல மாதங்களாக உங்களை தேட வைத்துக் கொண்டே இருக்கிறேன்.

🏝🏝🏝🏝🏝சென்னை வெள்ளத்தின் போது பத்திரமாக இருந்தோம். மின்சாரத் தடை , நெட் பிரச்சனைகள் இருந்தன, அதும் புதன் இரவுக்குள் செட்டில் ஆகி விட்டது. இன்பாக்ஸில் விசாரித்த அன்புள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.

பல முறை முயன்றும் எழுத முடியாத காரணத்தால் கதையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன்.
உடல்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தவிர்க்க முடியாத சொந்த அலுவல்கள் காரணமாக, முன்பு போல எழுத முடியவில்லை. 🥺🥺🥺🥺🥺🥺🥺 இன்னும் 15-18 அத்யாயங்கள் தான் கதை செல்லும் என்பதால்..எழுதி முடித்து விட்டு தொடர்ச்சியாக போட்டு விடுகிறேன். சரியா 👍🙏🙏🙏

எனக்கு யூடிக்களில் லைக்ஸ் போட்டவர்கள், என்றும் தொடரும் தோழமைகள் அனைவரையும் அந்நேரம் டேக் செய்வேன்.

எனவே இன்னும் சில வாரங்கள் நேரம் தருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.


மீண்டு(ம் ) வருவேன்.. விரைவில்🥰💖💪💖💪💖💪🙏



என்றும் அன்புடன் ,
தாமரை💝
 

தாமரை

தாமரை
34734

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தோழமைகளே!!!!


நேற்று போல் இன்று இல்லை.. இன்று போல் நாளை இல்லை என்றாலும், ஒவ்வொரு நாளையும் நாம புதிதாக மகிழ்வாக கடக்க தான் விரும்பறோம். அட்லீஸ்ட் அமைதியாக😁😁😁😁 ஆனால் கப்பல் கட்டமைக்கப்பட்டதே கடலை கடக்கத் தானே.. கரையில் அமைதியாக அலையாட்டத்திற்கு தலையசைத்து நிற்பதற்காக இல்லையே..


எனவே, சோதனைகளை கடக்கும் வலிமையை சாதனைகள் தரட்டும்.

சாதனைகள் படைக்கும் பலம் நித்தம் நித்தம் கிடைக்கட்டும்.

ஒவ்வொரு விடியலும் , ஊக்கமும் நம்பிக்கையாலும் நிறைஞ்சதா இருக்கட்டும்.

வாழ்த்துக்கள். வாழ்த்துங்கள் தோழமைகளே.. பிப்ரவரியில் நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனை முழுதாக ரசிக்க வேண்டும்😆🥰😇😇😇😇😇💜💜💜💜💜

விரைவில் வருகிறேன.

லவ் யூ ஆல்..
 
Status
Not open for further replies.
Top