தாமரையின் " நீ வேறு நான் வேறு"
கடலோவியம் இது கடற்கரைக் காவியம்!
ஆடிய ஆட்டம் அடங்க
ஓடிய நாட்டம் முடங்க
தள்ளாத வயதில்
தடுமாறும் நேரம்...
பாவத்தின் கணக்கும்
புண்ணியத்தின் கணக்கும்
தீர்த்திட்ட வாழ்வே
நிம்மதியின் தீர்வே!
காலம் காட்டிய வழியில்
விதியென்று வாழ்ந்த மனம்
ஞாலம் காட்டிய வழியில்
மதிவென்று ஆழ்ந்த கணம்
தன்வழி தனியென்று
தலை நிமிரும் எதிர் நின்று!
கடலரசன் வேகத்தில்
கரை கடந்த ராணியவள்
மடல் விரித்த உத்வேகத்தில்
நிறைவடைத்த காதலது...
இரு வேறு நெஞ்சத்தில்
ஒன்றான தஞ்சமென
கடலாடும் காதை
காவியத்தின் போதை!
மனம் பேசும் நேரம்
பரிபாசை தூரம் என
வேறான பாசையிலும்
வேர்விட்ட ஆசையில்
தூர்வாரிய நடையது
நேர் மோதிய அழகு!
வாழ்த்துக்கள் தாமரை. அழகாய், நிறைவாய் கதை பேசிய பேரழகில், முற்றும் என்று போடாத வழக்கில் முற்றுப்பெற்ற பாகத்தில், காதல் நிறைவுதான் அதன் கூதலும் நிமிர்வுதான்!
அடுத்த முத்துக்கு காத்திருக்கும் நேரம், இந்த இனிய கதைக்கு என் மனமார்ந்த நன்றிகள் தாமரை. மீண்டும் அடுத்த ஒரு புதிய இலக்கை நோக்கி, அழைத்துச் செல்ல காத்திருக்கிறோம் தாமரை. நன்றி.