உங்கள் கதைகள் எதனையும் இதுவரை நான் படித்ததில்லை. முதன் முதல் கண்ணில் பட்ட இக் கதையைப் படிப்போம் என்று நினைத்தேன், அங்கும் கரு கொஞ்சம் என்ன நிரம்பவே உணவுப் பிழம்பாய் உள்ளது. ஒரு எழுத்தாளராக எந்தக் கருவையும் எடுத்து எழுத உங்களுக்கு உரிமை உண்டு. இக் கதையில் சில நெருடல்கள் எனக்கு உண்டு. அதனையும் நான் இங்கு குறிப்பிட்டு விடுகிறேன். இங்கு ஒரு பெண் வறுமை நிமித்தம் வாடகைத் தாய். அவர் மேல் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால் அவரால் எப்போதும் மற்றைய உண்மையான காதல் ஜோடிக்குள் புகுவது என்பது ஜீரணிக்க முடியாத நிகழ்வு. வாடகைத் தாயாக மாற முன் அவருக்கு சரியான புரிதல் தேவை. அத்தோடு ஒரு கணவனாக அந்த ஆண் யாருக்கு நியாயம் செய்ய வேண்டும் என்பதனையும் கொஞ்சம் நினைவு வைத்து எழுதினீர்கள் என்றால் நான் மகிழ்வேன். நிஜத்தில் ஒவ்வொரு நிலையிலும் நியாயம் தவறாது எழுதுங்கள். வாடகைத் தாயாக ஒரு குழந்தையை சுமப்பதால் யாரும் யாருக்கும் உரிமை கொண்டாட முடியாது. அந்தப் பெண் தன் உணர்வுகளைக் காட்டி இன்னொரு பெண்ணின் கணவனை சொந்தம் கொண்டாட முடியாது. இதுவே மருத்துவச் சட்டமும், தர்மமும் கூட. ஒரு நல்ல கணவன் மனைவியின் காதலுக்கு இடையில் இன்னுமொரு பெண் நுழைந்து எதுவுமே செய்ய முடியாது, செய்யவும் கூடாது. குழந்தைக்காக கூட உணர்ச்சி மேலிட்டு கணவன் தவறினால் அவர் நல்ல கணவன் இல்லை. மிகவும் சர்சையான கரு எடுத்துள்ளீர்கள், வாடகைத் தாய்க்கு நியாயம் செய்யப் போய் சாதாரண கணவன், மனைவிக்கு அநியாயம் செய்துவிடாதீர்கள். ஒரு கணவன் அல்லது மனைவி இல்லாதவிடத்து இரண்டாவது இன்னொரு திருமணம் கூட ஏற்கலாம், ஒருவர் உள்ள போதே என்ன காரணம் எனினும் இன்னொருவர் வருவது உணர்வு ரீதியாக, உள ரீதியாக, சட்ட ரீதியாக ஏன் தர்ம ரீதியாகக் கூட ஏற்க முடியாதது. உங்கள் நியாயப்படி நீங்கள் எழுதுங்கள், உங்களின் எழுத்தில் நம்பிக்கை வைத்து நானும் கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தாரணி.