நித்திலா மதுகிருஷ்ணா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டியர் பிரெண்ட்ஸ்,
இனிய காலை வணக்கம்
கடந்த பகுதிக்கு விருப்பம்
தெரிவித்த,கருத்தைப்
பகிர்ந்து கொண்ட
தோழமைகளுக்கு எனது
அன்பான நன்றிகள்
மதுவின் வருகைக்கான
காரணத்தை அறிந்து
கொள்வோமா?
வாசித்து உங்கள் கருத்தைப்
பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றி.
அடுத்த பதிவு
வியாழனன்று.
ப்ரியமுடன்,
நித்திலா
இருண்ட வானில்
மின்னல் ஒன்று
மின்னி மறைந்தது.
மழை வரப் போவதை
மேகங்கள் முரசு
கொட்டி அறிவித்துக்
கொண்டிருந்தன.
வெளியுலகம் அறியாமல்
தங்களுக்கான தனி
உலகத்தில் இருந்தனர்
மதுரகீதனும்,மயூரிகாவும்.
தன்னவன் முகத்தில்
மயூரிகா பார்வை
பதிந்திருக்க,தன்னையே
பார்க்கும் மயூரிகா
விழிகளில் கட்டுண்டு
தன்னையே
மறந்திருந்தான்
மதுரகீதன்.
அவன் பார்வை
அசையாதது கண்டு,
தன் வாய் மீதிருந்த
அவன் கரத்தை விலக்கி
விட்டு எழுந்து
அமர்ந்தாள் மயூரிகா.
"சாரிடா.என்னை திடீர்னு
பார்த்ததுல பயந்து
கத்திடுவியோன்னு
தான்..."அவள்
அசைந்ததும் பிரக்ஞை
பெற்றான் மதுரகீதன்.
"பரவாயில்லை மது"
"நான் இப்படி...இந்த
நேரத்துல உன் ரூம்முக்கு
வந்திருக்கக் கூடாது.பெரிய
தப்பு தான்.ஆனா...
என்னால பொறுமையா
இருக்க முடியலை மயூ"
".........."
"ரெண்டு நாளா நீ வீட்டை
விட்டு வெளியிலயே வரலை.
வருண் சத்தம் போட்டதுல...
நீ அப்செட்டா இருந்தே…
சாப்பிடுவியா...அழறயா...
என்ன பண்றயோன்னு
கவலையா இருந்துச்சு.
வருணும் ரெண்டு நாளா
இங்க வரலை.சண்டைப்
போட்டீங்களோ...
உன்னால வருண் பேசாம
இருக்கிறதைத் தாங்கிக்க
முடியாதேன்னு...எல்லாம்
யோசிச்சு யோசிச்சு...
இன்னைக்கு உன்னைப்
பார்த்தே ஆகணும்னு...
வேற வழியில்லாம...இப்படி
வந்துட்டேன் மயூ"
"நான் நல்லா இருக்கேன்
மது.நீங்க கவலைப்
படாதீங்க.நான் தான்
தனியா இருக்கணும்னு
சொன்னேன்.அதான்
வருண் வரலை.நாங்க
சண்டை எல்லாம்
போடலை"
"ஓ!சரிடா கண்ணம்மா"
"எதுக்கு இந்த நேரத்துல
வந்தீங்க மதுரன்?இவ்வளவு
ரிஸ்க் வேண்டாம் மதுரன்"
"சாரிடா"
"எனக்குப் போன் பண்ணி
இருக்கலாமே மது"
"சாரிடா.நான் போன்
பண்ணா நீ பேசுவியோ...
மாட்டியோன்னு..."
"சரி பரவாயில்லை.
கிளம்புங்க.நாம
நாளைக்குப் பேசலாம்"
"நான்..மயூ...நான்
வந்ததுக்கு வருண் மட்டும்
காரணம் இல்லை.அபிநயா
உன் கிட்டப் பேசுனாளா?
அதுவும் ஒரு காரணம்...
நான் வந்ததுக்கு"
மதுரகீதன் முகத்தை
அகலாதிருந்தது அவள்
பார்வை!
"நான் உன் கிட்டப் பேசக்
கூடாதுன்னு சொல்லி
இருக்கேன்.அபி என் மேல
இருக்கிற அன்பில...
எனக்கு நல்லது
செய்யறதா நினைச்சுப்
பேசி இருப்பா.அவ உன்
மனசு நோகிற மாதிரி
பேசுனாளா மயூம்மா"
மயூரிகா விழிகளில்
வியப்பின் சாயல்!
"அவ உன்னைக் கோபப்
படுத்திட்டாளா?
அவளுக்காக நான்
மன்னிப்புக்
கேட்டுக்கறேன் மயூம்மா"
மயூரிகா முகத்தில்
சிந்தனை ரேகைகள் தன்
தடம் பதித்தது.
"எதாவது பேசு மயூ"
அவளின் மௌனத்தில்
தவித்தான் மதுரகீதன்.
"எனக்கும் நம்ம விஷயத்தில
மத்தவங்க தலையிடறது
பிடிக்காது மயூ.அபி ஏன்
இப்படி முந்திரிக்கொட்டை
வேலை பண்ணான்னு
தெரியலை.சாரி மயூ"
"இல்லை இல்லை.அபி
எதுவும் சொல்லலை.நீங்க
சாரி சொல்ல வேண்டாம்
மது"
பின் ஏன் உன் குரலில்
அவ்வளவு கோபம் மயூ?
நம் விஷயத்தில்
அடுத்தவர் தலையிட்டது
மட்டும் தான் உன்
கோபத்திற்குக்
காரணமா?
கோபத்தில் கூட எனக்கு
உன் வாழ்க்கையில்
இடமில்லை என்ற
வார்த்தைகளை உன்னால்
உதிர்க்க முடியாதே மயூ!
மதுரகீதன் சிந்தனை
வயப்பட்டு அமைதியாகி
இருக்க,மயூரிகாவிடமும்
மௌனம்!
நீண்ட நிசப்தத்தைக்
கலைத்தாள் மயூரிகா.
"நான் நல்லா இருக்கேன்.
நீங்க கிளம்புங்க மது"
இந்நேரத்தில் பேச்சை
நீட்டிப்பது சரியில்லை என
நினைத்தவனாய் எழுந்தான்
மதுரகீதன்.
"வரேன் மயூம்மா"அவன்
எழவும்,அவன் கையைப்
பிடித்து எழாமல் செய்தாள்
மயூரிகா.
"என்னடா"
என்னவென்று சொல்லாமல்
அவனை இறுக அணைத்துக்
கொண்டாள் மயூரிகா.
மயூரிகாவின் அணைப்பு
மதுரகீதனை வியப்பில்
ஆழ்த்தியது.
என்னிடம் பேசாதவள்...
அணைக்கிறாளா?நான்
அவள் குடும்பத்தாரிடம்
மாட்டிக் கொள்வேன்
என்று பயப் படுகிறாளா?
"நான் போயிடுவேன்
மயூம்மா.நீ பயப் படாதே.
உன் வீட்டில யாரும்
என்னைக் குறை சொல்ற
மாதிரி நான் நடந்துக்க
மாட்டேன்"
"நான் போயிடுவேன்.
மாட்டிக்க மாட்டேன் மயூ"
"மயூ குட்டி"
"கண்ணம்மா"
"மயூம்மா"
"எனக்குக் கெட்டப் பேர்
வந்துடுமோன்னு பயப்
படறயா"
"வருண் கோபப் படுவான்னு
பயப் படறயா"
"என்னடா மயூ"அவன் கரம்
மெல்ல எழுந்து அவள்
முதுகைத் தடவிக்
கொடுத்தது.
அவனுடைய எந்த
அழைப்பிற்கும்,கேள்விக்கும்
அவளிடம் பதில் இல்லை!
அவளுடைய அணைப்பின்
இறுக்கம் புதிதாக இருந்தது
மதுரகீதனுக்கு.
அரணாய்த் தன்னைத்
தழுவிக்
கொண்டிருந்தவளின்
முதுகைத் தயக்கத்துடன்
வருடிய மதுரகீதன்,
காற்றையும் இடையிடத்
தடை விதிக்கும் படியான
அவள் இறுக்கத்தில்
தெரிந்த பரிதவிப்பில்
துணுக்குற்றான்.
"என்ன கண்ணம்மா"
என்றவன் கரங்களும்
தயக்கத்தை உதறி
அவளைத் தழுவிக்
கொண்டது.
ஜன்னல் வழியே ஊடுருவிய
வானின் மின்னல் மட்டும்
அவர்கள் அணைப்பைக் கண்
சிமிட்டிச் சிமிட்டிப் பார்த்துக்
கொண்டிருந்தது.
"நீங்க என்னோட மது.
இந்த மயூவோட மதுரன்.
உங்க கண்ணம்மா
உங்களை நல்லா
பார்த்துக்குவா.யாரும்
உங்களை வேதனைப்
படுத்த விட மாட்டா.
நான்...நான் தப்புப்
பண்ணிட்டேன்.இனி
எந்தத் தப்பும் நடக்க
விட மாட்டேன்"
மயூரிகா ஏன் இப்படிப்
பேசுகிறாள் எனப் புரியா
விட்டாலும்,அவள்
வார்த்தைகளில்
வெளிப்பட்ட தன் மீதான
நேசத்தில் மதுரகீதன்
உள்ளம் நெகிழ்ந்தது.
சற்றும் மாறாத அவள்
நேசத்தில்,அவள்
மீதான காதல்
பிரவாகித்தது.
"நான் உன்னோட மதுவா
இருக்கணும்னு தான்
எப்பவும் ஆசைப்
படறேன் மயூ.
மயூவோட மதுரனா
இருக்கணும்னு தான்
ஏங்கறேன்.ஐ லவ் யூ
கண்ணம்மா"மென்மையான
கரங்களின் வன்மையான
அணைப்பில் தன்னைக்
கொடுத்து விட்டு
அமைதியாகி விட்டான்
மதுரகீதன்.
நீண்ட பல நிமிடங்களுக்குப்
பிறகு,தானாகவே
விலகினாள் மயூரிகா.
"கிளம்புங்க மது"
அவளை ஒரு கணம்
பார்த்தவன்,அவள்
நெற்றியில் தன்
இதழ்களை அழுந்தப்
பதித்து விட்டு எழுந்தான்.
"மனசைக் குழப்பிக்காமத்
தூங்கு மயூ.குட்நைட்"
"இருங்க மது"
படுக்கையில் இருந்து
இறங்கிச் சென்று குடை
ஒன்றை எடுத்து வந்து
கொடுத்தாள் மயூரிகா.
"மின்னிட்டே இருக்கு.
பார்த்துப் போங்க மதுரன்"
இந்த அன்பல்லவா உன்
மீதான என் காதலை
அமுதச் சுரபியாய்
வைத்திருப்பது!
"மழை வர்றதுக்கு
முன்னாடி கிளம்புங்க
மதுரன்"
உள்ளம் அங்கேயே நிலை
பெற்று விடக் கெஞ்ச,அதை
அதட்டி அடக்கி விட்டு,
அவள் நெற்றியில் ஓர்
அவசர முத்தத்தைப்
பதித்து விட்டு
வெளியேறினான்
மதுரகீதன்.
மதுரகீதன் சென்றதும் சில
நிமிடங்களுக்குக் காதைத்
தீட்டிக் கொண்டு
அமர்ந்திருந்தாள்
மயூரிகா.
எந்த சத்தமும் இல்லை!
மது சென்று விட்டான்.
நன்றி தெய்வமே!
எப்படி வந்தான்?எப்படிச்
சென்றான்?பின் வழியாகத்
தான் வந்திருக்க
வேண்டும்!எப்படியோ
மாட்டிக் கொள்ளாமல்
சென்று விட்டான்.
வெகு நேரம் விழித்திருந்து
யோசித்தபடியே
படுத்திருந்த மயூரிகா,
மதுரகீதனை
நினைத்தபடியே
உறங்கிப் போனாள்.
தன் வீட்டிற்குச் சென்று
படுக்கையில் விழுந்த
மதுரகீதனுக்கு மயூரிகாவின்
நினைவுகளே!
உன்னைப் பார்க்காமல்
நான்கு வருடங்களுக்கு மேல்
இருந்திருக்கிறேன்.ஆனால்
இப்போது இரண்டு நாட்கள்
என்னால் உன்னைப்
பார்க்காமல் இருக்க
முடியவில்லை மயூ.
அதுவும் உன் கண்ணீர்
முகம் என்னை மிகவும்
வாட்டி விட்டது மயூ.
என்னால் எதிலும் கவனம்
செலுத்த முடியவில்லை.
வேறு வழியில்லாமல்
இரவில் உன் அறைக்கு
வரும்படி ஆகி விட்டது.
மன்னித்து விடு மயூ.உன்
அறைக்கு நான் வந்திருக்கக்
கூடாது.அதுவும் இந்த
நேரத்தில்...இனி
இத்தவறை நான் செய்ய
மாட்டேன் மயூ.
மயூவின் பார்வையில்
இருந்தது என்ன?இது
வரை நான் அவள்
பார்வையில் கண்டிராதது
அது!
எதற்கு அப்படி
அணைத்தாள்?நான்
மாட்டிக் கொள்வேன்
என்ற அச்சத்தினால்
விளைந்த அன்பிலா?
இல்லை இல்லை.வேறு
ஏதோ இருக்கிறது!ஏன்
அப்படிப் பேசினாள்?
அபியிடம் அவ்வளவு
கோபமாகப் பேசி விட்டு...
அந்த அணைப்பிற்கான
அர்த்தம் என்ன?
உன் பார்வைக்குப் பொருள்
புரியாமல் நான் தவிக்கும்
நாள் வருமென நான்
நினைத்ததே இல்லை மயூ.
வருண் பேசியது மயூவை
பாதித்து விட்டதா?
இருக்காது.அவர்கள்
புரிதல் மிக ஆழமானது.
வருண் பேசியது சரி
தான் என்றாலும்...ஏன்
அத்தனை கடுமை
காட்டினான்?தன்
குடும்பத்தை எண்ணியா?
என்னால் உனக்கு மட்டும்
தான் வேதனை என
நினைத்துக்
கொண்டிருந்தேன்.அது
எத்தனை பெரிய தவறு?
மயூ திருமணம் குறித்து
அவளைப் பெற்றவர்கள்
எத்தனை கனவோடு
இருந்திருப்பார்கள்?
என்னென்ன காரணங்கள்
சொல்லி மறுத்தாய் மயூ?
மயூவிற்குப் பின் மலர்
இருக்கிறாள்.மயூ
திருமணம் முடிந்தால்
தான் மற்றவர்கள்
திருமணத்தைப் பற்றி
யோசிப்பார்கள்.
மயூ வாழ்வோடு மலர்,
வருண்,கார்த்தி
வாழ்வையும் நான்
பாழாக்கிக்
கொண்டிருக்கிறேன்!
போதும்!இனி யார்
வாழ்வும் வீணாக
வேண்டாம்!
நான் நாளையே
மயூவிடம் பேசி
அனைவரும் மகிழும்படி
செய்வேன்.என் மயூ
நிச்சயம் என்னைப்
புரிந்து கொள்வாள்.
அவள் பார்வையிலும்,
பேச்சிலும் என் மீதுள்ள
அன்பு வெளிப் பட்டதே!
நாளை தாமதிக்காமல்
மயூவைச் சந்திக்க
வேண்டும்.ஒரு முடிவு
எடுத்தே ஆக
வேண்டும்.
நாளை தான் முற்றிலும்
உடைந்து போய்
தேற்றுவாரின்றித்
தவிக்கப் போவதை,
பாவம் மதுரகீதன்
அறிந்திருக்கவில்லை!
நேரம் காலை பத்தரை
மணியை நெருங்கிக்
கொண்டிருந்தது.
சிந்தனை படிந்த
முகத்துடன் சோபாவில்
அமர்ந்திருந்தனர்
குணவதியும்,
மயில்வாகனனும்.
"அன்னம் இல்லாம
வீடு வீடாவே இல்லைங்க.
இந்த மயூவுக்கு என்ன
ஆச்சுன்னே
தெரியலைங்க.அவ
ரூம்குள்ளயே அடைஞ்சு
கிடக்கிறா.மணி
எவ்வளவு ஆகுது?
இன்னும் கீழ வரலை.
இவ போக்கே
சரியில்லைங்க"
"வருணுக்குத்
தெரிஞ்சிருக்கும்.அவன்
வாயைத் திறக்க
மாட்டான்.பார்ப்போம்.
என்ன தான்
நடக்குதுன்னு.மயூ வர்றா.
அவளை எதுவும் கேட்டு
வைக்காதே"
"மில்லுக்குப் போகலையா
தாத்தா"
"கிளம்பிட்டே இருக்கேன்
கண்ணு"
"நீ கிளாஸ்சுக்குப்
போகலையா மயூ"
"இல்லை பாட்டி.ஷாப்பிங்
போகலாம்னு இருக்கேன்.
கொஞ்சம் கிராப்ட் ஐடம்ஸ்
வாங்கணும்"
"சாப்பிட்டு அப்புறம் போ"
"பார்த்துப் போயிட்டு வா
தங்கம்.தனுவையும்
கூப்பிட்டுக்க"
"சரி தாத்தா"
"நான் உன் பாட்டியைத்
தோப்பில விட்டுட்டு,
அப்படியே மில்லுக்குப்
போயிடறேன் தங்கம்"
"சரி தாத்தா.லன்ச்சுக்கு
கரெக்ட் டைம்முக்கு
வந்துடுங்க"
"சரி கண்ணு.வர்றோம்"
மயில்வாகனனும்,
குணவதியும் சென்றதும்
தன் அறைக்குச் சென்று
தனது மடிகணினியில்
மூழ்கினாள் மயூரிகா.
அரைமணி நேரம்
கடந்திருந்தது.
"என்ன விஷயம் மயூ?
எதாவது பிரச்சனையா?
இந்த நேரத்துல கூப்பிட
மாட்டியே.எதுக்குடா
உடனே வர சொன்னே"
கார்த்திகேயன் குரலில்
நிமிர்ந்த மயூரிகா
அவனைப் பார்த்து
மறுப்பாகத் தலை
அசைத்தாள்.
"பிரச்சனை எல்லாம்
இல்லை கார்த்தி.டென்சன்
பண்ணிட்டனா"
"இல்லை இல்லை.மது
கிட்டப் பேசினயா"
ஆவலுடன் கேட்டான்
கார்த்திகேயன்.
"இல்லை கார்த்தி.எனக்கு
ஒரு ஹெல்ப் வேணும்"
"லூசு!சும்மா சொல்லு"
என்றான் மெத்தையில்
அவளருகில் அமர்ந்தபடி.
"இந்த போட்டோஸ் பாரு"
தன் கைபேசியைக்
கார்த்திகேயனிடம்
கொடுத்தாள் மயூரிகா.
புகைப்படங்களைப்
பார்த்தவன் அதிர்ச்சியுடன்
அவள் முகம் பார்த்தான்.
"இதைப் பார்த்து தான்
மேடம் ரொம்ப சைலண்டா
இருக்கீங்களா?
இதுக்கெல்லாம் மூட்அவுட்
ஆகலாமா?இதெல்லாம்
இந்தக் காலத்துல ஒரு
செகண்ட்ல
பண்ணிடுவாங்க மயூ"
"போனும் வந்துச்சு"
"என்ன!!"
மயூரிகா போன்
உரையாடலைக் கூறவும்,
அதிர்ச்சியுடனும்,
குழப்பத்துடனும் அவள்
முகம் பார்த்தான்
கார்த்திகேயன்.
"மது எப்பவுமே உன்னோட
மது மட்டும் தான்.நீ எதுக்கு
அந்தப் பொண்ணு கிட்ட
அப்படி சொன்னே மயூ"
"அவ இன்னும் எதாவது
பேசி வைப்பா கார்த்தி.
இன்னும் எதாவது அனுப்பி
வைப்பா.இன்னும் எதாவது
செய்ய நினைப்பா.எதுவும்
செய்யாம இருக்கட்டும்னு
தான் அப்படி சொன்னேன்"
"நீ சொல்றதும் ஒரு
வகையில சரியா தான்
இருக்கு.ஆனாலும்..."
"எனக்கு அந்தப் பொண்ணு
யாருன்னு தெரியணும்
கார்த்தி.நான் அவளைப்
பார்க்கணும்.அவ பேர்
அபிநயா"
"கண்டு பிடிச்சுடலாம்"
"வருணுக்குத் தெரிய
வேண்டாம் கார்த்தி"
"சரி மயூ.நான் சொல்ல
மாட்டேன்"
"எது எனக்குத் தெரியக்
கூடாது மயூ"
வருணனின் குரலில்
இருவரும் திடுக்கிட்டுக்
கதவைப் பார்த்தனர்.
"அண்ணா..."
"உன்னோட வழக்கமான
நேரத்துல வராம,இந்த
நேரத்துல மயூவைப்
பார்க்க வந்ததை நான்
கவனிக்க மாட்டேன்னு
நினைச்சியா?மயூவைத்
தவிர யாருக்காகவும்
நீ பண்ணையில இருந்து
அசைய மாட்டேன்னும்
எனக்குத் தெரியும்"
"எனக்கு வெளியில போற
வேலையிருக்கு.திரும்பி
வர லேட்டாகும்.மயூவை
ரெண்டு மூணு நாளா
பார்க்கலை.இன்னைக்கும்
பார்க்க முடியாமப்
போயிடுமேன்னு...
இப்பவே பார்க்கலாம்னு
வந்தேன் வருண்"
"நிறுத்துடா.நீங்க
பேசினதை நான் முழுசா
கேட்டுட்டேன்.பொய்
சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை.நான்
உன் பின்னாடியே தான்
வந்தேன்.நீ கவனிக்கலை"
தம்பியின் அருகில் சென்று
அவன் கையில் இருந்த
கைபேசியைப் பறித்துப்
புகைப்படங்களைப் பார்த்த
வருணன் உள்ளத்தில் புயல்
மையம் கொண்டது.
மயூரிகாவும்,
கார்த்திகேயனும்
ஒருவரை ஒருவர்
செய்வதறியாது பார்த்துக்
கொண்டனர்.
"எவ்வளவு தைரியம்?
இப்பவே இதுக்கெல்லாம்
ஒரு முடிவு கட்டறேன்"
கைபேசியோடு
வெளியேறியவனைத்
தடுக்கத் தோன்றாமல்
பார்த்திருந்த மயூரிகாவும்,
கார்த்திகேயனும் விபரீதம்
உணர்ந்து அவன் பின்னே
ஓடினர்.
"வருண் நில்லு.நான்
சொல்றதைக் கேளு"
"அண்ணா நில்லு"
"கோபப் படாதே வருண்.
நில்லுடா.எங்கடா போறே
நீ"மயூரிகாவைப் பதற்றம்
தொற்றிக் கொண்டது.
"உன் மதுவுக்குப் பாடம்
புகட்டப் போறேன்"ஒரு
கணம் நின்று
மயூரிகாவிற்குப்
பதிலளித்து விட்டுத்
தனது வேக நடையைத்
தொடர்ந்தான் வருணன்.
"வேண்டாம் வருண்.
போகாதே வருண்"
அவர்கள் குரல்
கேட்டாலும்,நிற்காமல்
தனது வேகத்தை அதிகப்
படுத்தி விரைந்தான்
வருணன்.
"நில்லு வருண்.நீ போகக்
கூடாது"
மயூரிகா குரலில் தெறித்த
உறுதியில்,படிகளில்
இறங்கிக் கொண்டிருந்த
வருணன் கால்கள் ஒரு
கணம் நின்று பின்
மீண்டும் சென்றது.
மயூரிகாவின் கையைப்
பிடித்து நிறுத்தினான்
கார்த்திகேயன்.
"நீ இரு மயூ.நான் அவன்
கிட்டப் பேசறேன்"
"வருணுக்கு மதுவைப்
பிடிக்காது.ரொம்பக்
கோபமா இருந்தான்.
இப்ப இதுவும்
சேர்ந்துடுச்சு"
"நீ டென்சன் ஆகாதே
மயூ.நான் போய் வருண்
கிட்டப் பேசறேன்.நான்
அவன் கிட்டப் பேசிட்டு
உன்னைக் கூப்பிடறேன்.
நீ உன் ரூம்முக்குப் போ"
"சரி.சீக்கிரம் போ"
கார்த்திகேயன்
போர்டிகோவிற்குச் செல்லும்
போது,வருணனின்
கார் கேட்டைத் தாண்டிச்
சென்றிருந்தது.இருந்தும்,
தன் இருசக்கர வாகனத்தில்
வருணனைத் தொடர்ந்தான்
கார்த்திகேயன்.
எனையன்றி
உன் இதயம்
யார் கொள்வது?
நானின்றி
உன் நினைவை
எவர் வெல்வது?
என் கனவின்றி
என்று நீ
துயில் கொண்டது?
மாறாது உன்
காதல் ராகம்!
நீளும் நம்
காதல் வானம்!
கீதம் மயக்கும்...
நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி