All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நினைவிலும் நீதானடி என்னுயிரே..

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவிலும் நீதானடி என்னுயிரே

அத்தியாயம் ..6


உதாசீன மாக
வெறுப்பாக காட்டும்
உந்தன் பேரன்பில்
ஊற்றாக பெருகியதே
என்னுள் ....

இரவு முழுவதும் தூங்காமல் பழைய நினைவுகளின் தாக்கத்தில் புரண்டபடியே இருந்தவன் நேற்று மாலை அன்பினியை அடித்ததும் அவள் முகம் கன்றி சிவந்து நீளக் கண்களில் கண்ணீர் கரைக்கட்டி
"நீயா" என்னை அடித்தது பார்த்தும் இன்னும் எத்தனை அடி வேண்டுமானலும் அடித்துக் கொள் நின்ற தோரனையும் என்னை வெறுத்தாலும் உன்னை விடமாட்டேன் அவளுடைய மன தைரியத்தை பார்த்த அவ்வினாடியே அவளை விட்டு விலகியே ஆகனும் முடிவு செய்தவன் வழியில் நின்றவளை விலக்கிவிட்டு விருட்டென காரை எடுத்து கிளம்பியவன் சென்னைக்கும் போகும் முடிவை எடுத்தான் அனலரசு.

எதை கண்டு பயந்து ஓட எண்ணுகிறான் அவனுக்கே புரியவில்லை .இங்கிருந்தால் இன்னும் அவளை துன்புறுத்தி விடுவேன் ,வார்த்தையாலே வதம் செய்துவிடுவேன் எண்ணினான் போல ..அவனாலே தன் மனதின் எண்ணங்கள் போற போக்கை கணிக்க முடியாமல் திகைத்தவன் இந்த பிரச்சினை தீர ஒரே வழி இங்கிருந்து கிளம்புவது தான். அவளும் அப்பாத்தாவும் சேர்ந்து பண்ணும் லூட்டி ஜீரணிக்க முடியவில்லை. இத்துண்டு இருந்துக் கொண்டு விழியாலே என்னை ஆட்டி வைக்கிறா.என் ஒற்றைக் கோபத்தை கூட அவளால் தாங்க முடியாது தெரிந்தும் தினமும் வந்து பார்வையாலே வதம் செய்யும் அவளை விட்டு விலகியே ஆக வேண்டும் எண்ணியவன் படுக்கையை விட்டு எழுந்து தன் காலை வேலைகளை விரைவாக முடித்தான் அனலரசு..

ஊரில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு வீட்டினுள்ளே வர அழகம்மா எல்லாரும் வாங்க சொல்லி அமர செய்தவர் "என்ன" காலையிலே வந்திரீக்கிங்க என்ன விசயம் கேட்டார்...

வந்திருந்தவர்கள் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்தவர்கள்
ஆத்தா தானே காலையில் விரசா கிளம்பி வீட்டுக்கு வா சொல்லுச்சு இப்ப என்ன இப்படி கேட்கதே.. முளித்தவர்கள் அங்கிருந்த அனலரசின் பெரியப்பா ஆத்தா" நீ" தான் வீட்டுக்கு எல்லாரும் வாங்க ஒரு விஷயம் பேசி முடிவு எடுக்கனும் போன் பண்ணி சொன்னீங்க அன்பினி புள்ள சொல்லுச்சு அதான் எல்லாரும் வந்தோம்..

சரி சரி வயசாச்சுல அது தான் மறந்துட்டேன் போல தலையை ஆட்டியபடி சொன்னவர் மாடியை நோக்கி குரல் கொடுத்தார்.""ராசா, ராசா "எங்கய்யா இருக்கே கொஞ்சம் கீழே இறங்கி வாய்யா உன்னை பார்க்க ஊர்க்காராங்க எல்லாரும் வந்திருக்காங்க கூப்பிட்டார் அழகம்மா.

அப்பாத்தவின் குரலைக் கேட்டதும் எட்டிக் கீழே பார்த்தவன் பெரியவர்கள் எல்லாரும் ஒன்றாக வந்துருப்பதை பார்த்து புருவத்தை சுருக்கி யோசித்தபடி கீழே இறங்கி வந்தான் அனலரசு.

வாங்க பெரியப்பா, எல்லாரும் வாங்க சொல்லி பங்காளிகளையும் மாமா மச்சான்களையும் வரவேற்றான்.

அவர்கள் எதிரில் அமர்ந்தவன் அப்பாத்தா எல்லாருக்கும் குடிக்க காபித் தண்ணீ கொடுத்திங்களா அவரைப் பார்த்து கேட்டான்..

தம்பி சொல்லுனுமங்கலா, இங்கே வந்தாலே சாப்பாடு காபி எல்லாம் கொடுத்துவிடுவாங்கலே அதில் எல்லாம் எந்த குறைபாடும் இல்லைங்க.

அப்ப வேற என்ன குறை எல்லாரும் சேர்ந்து வந்திருக்கீங்க, என்ன விசயம் சொல்லுங்கள்.

அனலரசின் பெரியப்பா திகைத்து அழகம்மா முகத்தை பார்க்க அவர் விழியாலே சேதி சொல்ல அதைப் புரிந்துக் கொண்டு அது வந்து தம்பி நம்ம அன்பினி புள்ள இருக்குல ..அது உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்ல சொல்லுச்சு,அது தான் வந்தோம் எல்லாரும் சேர்ந்து போய் தான் சொல்லனும் சொல்லிருச்சு தலையை சொறிந்தபடி சொல்ல சொல்ல அனலரசின் முகம் இறுகி எழுந்து நிற்க அங்கிருப்பவர்கள் எல்லாரும் எழுந்து நின்றவர்கள் தம்பி நாங்க சொல்ல வருவதை கேட்காமலே எழுந்திட்டீங்களே...

அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் பெரியப்பா உங்களை எல்லாம், அந்த சுண்டெலி சொல்லுச்சு ஊரே திரண்டு வந்துருக்கீங்க. கொஞ்சமாச்சும் வயதுகுரியவர்கள் மாதிரி நடந்துக் கொள்ளுங்கள் அவ சொல்ல சொன்னாலாம், நீங்க சொல்ல வந்தீங்களா பல்லைக் கடித்தபடி வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தவன்,வாசல்படியில் நிழலாட அங்கே நிமிர்ந்து பார்த்தான்.

அங்கே ஓரத்தில் எட்டிப்பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் அனலரசு சொல்லிய சுண்டெலி அன்பினி.அவளை உக்கிரமா முறைத்தவன் என்ன சொன்னாள் பெரியப்பாவைப் பார்த்து கேட்க
அவர் அன்பினிக்கு சீக்கிரம் பரிசம் போட்டு கண்ணாலம் கட்டி வாழனுமா,அவளுக்கு யார் இருக்கா
நாங்க தானே இருக்கிறோம். அது தான் தம்பிகிட்ட கேக்கலாம் ,பேச பேச அனலரசின் முகம் மேலும் மேலும் இறுகி போனது.

யார் யாருக்கோ கல்யாண பண்ண இங்கே எதுக்கு வந்தீங்க ..

"என்ன ராசா இப்படி சொல்லரீங்க"
அவ பிறந்தப்பவே அவ உனக்கு தான் முடிவு செய்தது தானே, ஏதோ கால கோளாறு ஏதே ஏதோ நடந்துவிட்டது. அவளுக்கு யாரு இருக்கா ,மன நோகும்படி பேசாதீங்க சொன்னார் அனலரசின் பெரியப்பா காளியப்பன்.

அப்பாத்தா சத்தமிட்ட அனலரசை நேக்கி வந்த '' அய்யா ராசா'' வந்தவங்களுக்கு பலகாரம் கொடுத்து சாப்பிட்டு போகச் சொல்லுங்கள் நான் கரும்பு ஆலைக்கு போய்யிட்டு அப்படியே சென்னை கிளம்பிறேன் ,சொல்லி கிளம்ப, தம்பி எதுவும் சொல்லாமல் கிளம்பினால் எப்படி, கேட்டவரை முறைத்தவன், வேக வேகமாக வெளியே சென்றவன் வாசல்படியில் நின்றிருந்தவளை முறைத்துவிட்டு சென்றான்.

அவன் முறைத்தைப் பார்த்து மனதுகுள் நடுங்கினாலும் வெளியே கெத்தாக பார்ப்பதைப் போல பார்த்தவள், உள்ளே திரும்பி ''ஏன்'' கிழவி காலையிலே காபியில் சர்க்கரைக்கு பதிலா மிளகாய் பொடியை கலந்து கொடுத்திட்டியா, இப்படி காரமா பேசறாங்க..

ஏண்டி பேச மாட்டே, என் பேரன் பல்லுல தண்ணீ கூட படாமல் கிளிம்பிட்டான்,அப்படியே சென்னைக்கு வேற போறான், போய்யிட்டு எப்ப வருவானா தெரியலயே புலம்பியபடி சோபாவில் அமர அவர் அருகில் வந்த அன்பினி, காலடியில் அமர்ந்து உன் பேரன் சென்னை போகட்டும் ''பியூட்டி'' அடுத்த நாளே இங்கு வரவச்சிடலாம் ''நீ கவலைபடாதே'' சொல்ல ''என்னடி'' பண்ணப் போற என்கிட்ட சொல்லிட்டு செய்..உங்கிட்ட சொல்லாமலா அதுயெல்லாம் சொல்லிட்டு தான் செய்வேன், அதிலே மெயின் கேரக்டரே நீ தானே அழகம்மாவை பார்த்து கண்ணயடித்தாள்...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவிலும் நீதானடி என்னுயிரே

அத்தியாயம் ...7

என்தன்பை எடைப்
போட இவ்வுலகில்
எடைகல்யில்லைடா
உந்தன் இதயத்தை தவிர...

வாசலில் வாழைமரம் கட்டி, தென்னைமர ஒலையில் தோரணங்கள் அமைத்து வண்ண விளக்குகள் சரசரமாக பந்தகாலில் தொங்க,வீட்டின் முன் வண்ணப் பொடிக் கொண்டு அழகாக ரங்கோலி வரைந்து கொண்டிருந்தனர் பெண்கள்..
உள்ளே ஆங்காங்க பூக்களால் அலங்கார அமைத்து வரவேற்பில் சந்தனம் குங்குமம், பூ தட்டுகளை வைத்துக் கொண்டிருந்தாள் அஞ்சலை..வீட்டில் நடுப் பகுதியில்
அழகிய மணமேடை ரோஜாக்களாக அலங்கரிக்க அய்யர் ஒரு பக்கம் மந்திரம் சொல்லிக் கொண்டு அங்குள்ள பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார்.. தோட்டத்திலிருந்து கொண்டு வந்திருந்த பொருட்களை அய்யருக்கு எடுத்துக் கொடுத்து கொண்டிருந்தான்...

வீட்டின் வடப்புறம் சமையல் வேலை வந்தவர்கள் அமர்ந்து சாப்பிட வரிசையில் சேர்,டேபிளும் போட்டுக் கொண்டிருந்தனர்..அங்கிருந்த பெரியவர்கள் சீக்கிரம் ஆகட்டும்பா,கல்யாணம் முடிந்ததும் சாப்பாடு போட்டு விடுங்கள், எல்லாரும் சாப்பிட வைத்து அனுப்பனும், சாப்பாட்டில் எந்த குறையும் வரக் கூடாது .. பெரியவங்க வீட்டில் ரொம்ப நாளைக்கு அப்பறம் நடக்கிற விசேஷம் ..ஞாபகம் வச்சு நல்லா செய்திருங்க சொல்ல.. அய்யா, நீங்க சொல்லனுமா ..நம் வீட்டு கல்யாணம் யாரும் எந்த குறையும் சொல்லாமல் ஜாம்ஜாமென்று நடத்தி விடலாம்..நீங்க உள்ளே இருக்கும் வேலைகளை போய் பாருங்கள் அவரை உள்ளே அனுப்பினர் ..

எல்லாரும் என்ன நடக்க போகுதோ திக் திக் மனதினுள் இருந்தாலும் வெளியே நம் வீட்டில் நடக்கும் விசேஷம் போல ஆளுக்கு ஒரு வேலையை செய்துக் கொண்டிருந்தனர்...

அழகம்மாவோ வாசலுக்கு போவதும் திரும்ப உள்ளே வருவதுமா இருக்க ஆத்தா நீங்க ஒருயிடத்தில் உட்காருங்கள் , பதட்டத்திலே இருக்கீங்க ..எல்லாம் நல்லபடியா நடக்கும்..அஞ்சலை சொல்லியபடி சேரை எடுத்துப் போட்டு அமர வைத்தாள்..

அழகம்மா மனதோ அஞ்சலை சொல்லிதை காதில் வாங்காமல் முகம் சோர்ந்து போய் அமர்ந்தார்..
வீட்டை சுற்றி சுற்றி பார்வையிட்டவர் எவ்வளவு சந்தோஷமா நடக்க வேண்டிய திருமணம் .. பெரிய மண்டபத்தில் உறவுகாரங்க தெரிந்தவங்க பெரிய கும்பலாக ஒன்று கூடி நடக்க வேண்டிய திருமணம் அவசரகதியில் நடக்கிறதே ஆண்டவா .. இதிலும் எந்த பிரச்சினை இல்லாமல் நடந்தா போதும் மனதில் ஆண்டவனை வேண்டியவர் வெளி வாசலை பார்த்துக் கொண்டிருந்தார்..

அஞ்சலை அஞ்சலை போய் பொண்ணு ரெடியாச்சா பாரு...நேரமாச்சு அவளை உள்ளே அனுப்பினார் அழகம்மா..

எல்லாரும் அவரவர் வேலை பார்த்தாலும் வாசலில் ஒரு கண் வைத்துக் கொண்டே வேலை செய்து கொண்டிருந்தனர்..எல்லார் மனதிலும் இனிமேலாவது பெரிய வீட்டில் இருப்பவர்கள் சந்தோஷமா இருக்கட்டும் வேண்டி கொண்டு இருந்தனர்..ஒவ்வொர் மனதிலும் இக்கல்யாணத்தம் நடந்தால் போதும் நினைத்துக் கொண்டு வேலையில் ஒரு கண்ணும் வாசலில் ஒருகண்ணுமாக பார்த்துக் கொண்டிருந்தனர்...

மணமேடையில் அய்யர் மந்திரம் ஓதி்கொண்டே அங்கிருந்தவரிடம் மாப்பிள்ளை அழைச்சிட்டு வாங்க சொன்னார்..
அனலரசின் பெரியப்பா காளிப்பன்
போய் மாப்பிள்ளை அழைத்துவந்து அமர வைத்தார்...அய்யர் மாப்பிள்ளைக்கு கங்கணம் கட்டி மாலை போட தாய் மாமனை அழைத்து எல்லா சடங்குகளையும் செய்து கொண்டுயிருக்க வெளியே நின்றிருந்த அழகம்மா மணமேடை பார்க்க வெளியே வாசலை பார்க்க இருப்பதைப் பார்த்த காளியப்பன் உள்ளே வா ஆத்தா..சடங்கு ஆரம்பிச்சாச்சு...உள்ளே கூட்டிச் சென்றார் .

மாப்பிள்ளைக்கு செய்யும் சடங்குகள் முடிந்தவுடன் பொண்ணை அழைத்து வாங்கோ சொல்ல அழகம்மா அஞ்சலை போய் பொண்ண கூட்டிகிட்டு வா சொன்னார்..அஞ்சலை தலையசைப்படி பொண்ணை அழைத்துவர அவளோ கழுத்தில் போட்டிருந்த மாலையில் உள்ள பூவை பியக்கவும், செயினை பிடித்து இழுக்கவும் தன்னையே கலைத்து கொண்டே வந்தாள்... அழகம்மா அவள் முகத்தை பார்த்து கண்ணீர் சிந்தியவர் கண்களை துடைத்துவிட்டு அவளை மணமேடையில் அமர வைத்தார்.

அருகிலிருந்தவன் பொண்ணை பார்த்தும் கண்களை இறுக மூடித் திறந்தவன் அவள் கைகளை பிடித்து பூமாலை பியக்கக் கூடாது சொல்லிவிட்டு கரத்தோடு இணைத்துக் கொண்டான்... அவளோ சரி தலையாட்டியப்படி அவன் முகத்தைப் பார்த்தவள் பார்த்துக்கொண்டே இருந்தாள்..
அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்கள் கண்கள் கலங்குவதை துடைத்துக் கொண்டே அவர்களைப்
பார்த்துக் கொண்டிருந்தனர்..

அழகம்மா இருவரையும் பார்த்துக் கண்கள் கலங்கி நின்றவர் அய்யரிடம் சீக்கிரம் ஆகட்டும் சொல்ல அவரும் வேக வேகமாக மந்திரத்தை ஓதிவிட்டு தாலியை எடுத்து மாப்பிள்ளை கையில் கொடுக்க அதைக் கையில் வாங்கியவன் தாலியை ஊற்றுப் பார்த்துவிட்டு அவள் கழுத்தில் கட்ட திரும்பினான்..அவளோ அவன் கையில் இருப்பதை பார்ப்பதும் அவன் முகத்தை பார்ப்பதும் இருக்க "கண்ணம்மா'' இதை உனக்கு கட்டப் போறேன் இதை ''நீ'' கழற்றி எறிக் கூடாது சொல்ல அவளுக்கு புரிந்தோ புரியவில்லையோ தலையாட்டினாள். அவன் மனதில் ''கடவுளே'' தன்னை மறந்து இருப்பவளுக்கு தாலி கட்டி மனைவியா ஏற்றுக் கொள்கிறேன் .
கடைசிவரை இந்த பந்தம் தொடர்ந்து வரனும் வேண்டிக் கொண்டே தாலிக் கட்டினான். அழகம்மா கண்களை துடைத்தப்படி அட்சதை தூவினார்..

மாப்பிள்ளை பொண்ணும் மணவறை சுற்றி வாங்க சொல்ல எழுந்தவன் தன் மனைவியின் கைப் பிடித்து தூக்க அவளோ தன் மேனியில் விழுந்த அட்சதை அரிசியை வாயில் போட்டு மென்றுக் கொண்டிருக்க அதை மெதுவாக கையிலிருந்து அகற்றிவிட்டு எழுப்பினான். இருவரும் மணமேடை சுற்ற வாசலில் புயலைப் போல வேகமாக கார் வந்து நின்றதது..

காரின் சத்தத்திற்கு அங்கிருந்த அனைவரும் முகமும் வெளுத்துப் போக ''என்ன'' நடக்குமோ பயத்துடன் வாசலைப் பார்க்க மாப்பிள்ளை பெண்ணின் கையை இறுகப் பிடித்தபடி வாசலைப் பார்த்தான்..

அழகம்மாவோ வெளியே செல்ல காரிலிருந்து இறங்கியவன் உள்ளே ஆழிக்காற்றின் ஆக்ரோசத்துடன் நுழைந்தான் . வருவதற்குள் எல்லாமே முடிந்திருக்க கண்களோ சிவந்து சீற்றத்துடன் திரும்பி அழகம்மாவை பார்த்து'' என்ன'' காரியம் செய்திருக்கீங்க .. மவுனமாக மனதினுள் சொல்லியவன் மணமேடைப் பார்க்க அங்கு பொண்ணும் மாப்பிள்ளையும் சுற்றி வருவதைக் கண்டவன் மாப்பிள்ளை வெட்டி பொலி போட்டு விடும் அளவுக்கு முறைத்துப் பார்த்தான்.

மாப்பிள்ளை, வந்தவனை பார்த்துவிட்டு இனி இவள் என்னுடையவள்,இனி உன்னால் ஒன்றும் பண்ணமுடியாது. என்னை எதும் செய்ய நினைத்தால் இவள் தான் கஷ்டபடுவாள் இறுமாப்புடன் அவள் கரத்தோடு கரத்தை அழுந்தப் பிடிக்க பெண்ணவளோ வலியில் முகம் சுழித்து , ''டேய் விடுடா ''வலிக்குது எனக்கு கத்தினாள் .

(அடுத்த பகுதி போட்டாச்சு தோழிகளே படித்துவிட்டு சொல்லுங்கள். உங்கள் கருத்துக்களை. )
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவிலும் நீதானடி என்னுயிரே..

அத்தியாயம் ---8

உன்னால் உண்டான
காயங்கள் கூட
நின் அதீத அன்பில்
மறைந்துவிடுமோ..

மேடை நோக்கி போனவனை அழகம்மா ராசா அனலு நில்லுய்யா கத்தினார்..அவர் சத்தத்திற்கு திரும்பியவன் அவரை முறைத்து அப்பத்தா என்ன காரியம் செய்துயிருக்கிங்க மிதமிஞ்சிய கோபத்துடன் கேட்டான் .அவனுக்கு என்ன பதில் சொல்ல திகைத்து அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க...

கல்யாண மேடையில் கையை இறுகப் பற்றியபடி நின்றவனைப் பார்த்து டேய் விடுடா வலிக்கது கத்தியவளை பார்த்து , அவனோ கையை விடாமல் அவளிடம் கண்ணம்மா இங்கே பாரு முகத்தை தன் முகத்தின் நேராக திருப்பியவன் , இங்கு பாருடா கண்ணம்மா அத்தான் தான் பிடிச்சிருக்கேன்.. கத்தக்கூடாது.. விடுங்க அத்தான் சொல்லு மெதுவாக கையை வருடியப் படி சொல்ல அவளும் அவன் கண்களைப் பார்த்தபடி ம்ம் என்றாள்...கலங்கிய கண்களை கண்டவன் ''சாரிடா குட்டிமா'' சொல்லி கையை மெதுவாக விட்டவன் சிவந்த இடத்தை வருடிக் கொடுத்தான்...

அங்கே பாரு அப்பத்தா நிற்கிறாங்க அங்கே போகலாமா குட்டிமா கேட்க அவளும் ம் சொல்லியவள் அவனுடன் நடந்தாள்

இருவரையும் பார்த்தபடி நின்று கொண்டிருந்த அழகம்மாவை நோக்கி வந்தவன் அப்பத்தா நீங்க சொன்னபடி நான் நடந்துக் கொண்டேன்..இனி நீங்கள் என்ன செய்யனுமோ செய்யுங்க சொல்லியபடி அப்பத்தாவின் காலில் விழக அருகில் இருநதவளோ அவனையும் அப்பத்தாவையும் பார்த்துவிட்டு மாலையிலுள்ள பூவை உருவி அதை அவன் தலையிலே போட அவனோ ச்சூ குட்டிமா தலையில் இருந்த பூவை தட்டியபடி எழுந்து நின்றான்..

அவனை நல்ல இருங்க சொன்னவர் பூவை பியத்து கொண்டிருந்தவளின் கன்னத்தை மெதுவாக வருடிச் கண்ணு கூப்பிட அவளோ யாரையோ போல பார்க்க.. கண்ணு இங்கு பாருடா..இனி நீ அத்தான் சொல்வதை கேட்கனும். தொந்தரவு பண்ணாதே சரியா தங்கம் அவளுக்கு புரியு வைக்க முயற்சித்தார்..அவளோ எதும் புரியாமலே அப்பாத்தா முகத்தையும் அத்தான் முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.. இவர்கள் மூவரையும் பார்த்தபடி நின்ற கொண்டிருந்த அனலரசின் முகம் கற்பாறையாக மாறி இறுகிக் கொண்டே போனது..

அப்பத்தா இனி இவள் என் பொறுப்பு நான் பார்த்துக்கிறேன்.. நீங்கள் சொன்னதை நான் செய்யதைப் போல நான் சொன்னதை நீங்கள் செய்யனும்... சொல்லியவன் அன்பினி சத்தமாக கூப்பிட்டான்.

அவர்கள் இருவரையும் அருகில் நிற்க வைத்தவர் அங்கு கடும் கோபத்தை முகத்திலே தேக்கியபடி பார்த்துக் கொண்டிருவனைப் பார்த்து அனலரசு கூப்பிட அவனோ
எதுவும் பேசாமல் நின்றான் .. அதைப் பார்த்த அழகம்மா எல்லாம் நம்ம அம்முவின் நன்மைக்கு தானே மனதிற்குள் சொல்லியவர் ராசா நான் சொல்வதை கேட்டு கோபப்படக் கூடாது .. சொல்லியவர்
அங்கு அன்பினி வருவதைப் பார்த்தும் இவள் தான் இந்த வீட்டு மருமகள். இங்கே இப்ப உடனே இன்னொரு கல்யாணம் நடக்கனும் அவளுக்கு தாலி கட்டினும் ராசா.. சொன்னார்..

அவர் சொல்வதைக் கேட்ட அனலரசு நெருப்பிலிட்ட புழுவாக துடித்தவன் அப்பாத்தாவின் அருகில் நின்றவனைப் பார்த்து முறைத்தான்..அவனோ இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் மச்சான். இன்று இப்போதே உன் கல்யாணம் நடக்கனும் நடந்தே தீரனும் வேறு வழியில்லை .. அப்பத்தா சொன்னதை நான் செய்தைப் போல நான் சொன்னதை அப்பத்தா
செய்தே ஆகனும். அவர் சொன்னப்படி நீ அன்பினி கழுத்தில் தாலி கட்டனும். முகத்தில் கடுமையாக இருந்தாலும் உதட்டில் கேலிப் புன்னகையும் எகத்தாளமாக சொன்னான்.

அவன் பேச பேச அடிக்க கையை ஒங்கியப்படி அருகிலே செல்பவனை கைப்பிடித்து தடுத்தவர் நான் சொல்வதை கேளு ராசா கெஞ்சினார் அழகம்மா. அவர் கெஞ்சுவதைப் பார்த்தவன் வேண்டாம் போல பார்த்தான்..இதை செய்தே ஆகனும் ராசா இந்த அப்பத்தா இதுவரை உன்னை அதைச் செய் இதைச செய் சொன்னதில்லை. ஆனால் இன்று அப்பத்தா சொல்வதை செய் கண்ணு கெஞ்சியவரின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அவருடைய வருத்ததைப் பார்த்தவன் ஒன்றும் பேசாமல் மணமேடை நோக்கிச் செல்ல அன்பினியின் கையைப் பிடித்து அவளையும் மணமேடைக்கு அழைத்துச் சென்றார் அழகம்மா..

அவர்கள் செல்வதைப் பார்த்தபடி நின்றவன் அருகில் நின்றவளின் தோளின் மேல் கையைப் போட்டப்படி கண்ணம்மா அங்கு பாரு உன்றன் அண்ணாவுக்கு கல்யாணம் சொல்ல அவனையும் மண மேடையும் பார்த்தவள் அவன் கையை தட்டிவிட்டு மேடை நோக்கி ஓடினாள்...

[சிறிய பகுதி தான் தோழிகளே உடல்நிலை சரியில்லாமல் போனதால் தொடர் தொடர்ந்து கொடுக்க முடியவில்லை. மன்னிச்சுங்கப்பா வாரத்தில் இருநாட்கள் கொடுத்து விடுகிறேன் ..]
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவிலும் நீதானடி என்னுயிரே..

அத்தியாயம்....9

உந்தன் பார்வையிலே
என்னை உன் வசமாக்கி
இறுக்கி கட்டிப் போட்டு
விடுகிறாயடி என்னவளே..

தலையில் பூச்சூடி கண்களில் மையிட்டு நாசியில் ஒற்றைக் கல் மூக்குத்தி ஒளிவீச அதரங்களில் புன்னகை மறந்து போனதுபோல நடுங்க கழுத்தில் ஒற்றை கல்ஆரம் போட்டு பச்சைப் பட்டு சேலை சரசரக்க காலில் மென் கொலுசொலி சிணுங்க மனதில் பயத்துடனே அழகம்மாவின் கையைப் பிடித்தபடி நடந்து வந்தாள்

அன்பினியை அழைத்து கொண்டு சென்றவர் அனலரசின் அருகில் அமர வைத்தார்..அவன் அருகே பயந்தபடி அமர்ந்தாள் ..அனலரசோ
கோபத்தில் முகம் பாறையைப் போல இறுகி கண்கள் உதிரம் நிறத்திற்கு மாறியது..அனலரசின் முகத்தை பார்த்த அழகம்மா அய்யரிடம் சீக்கிரம் ஆகட்டும் சொல்ல மாலை எடுத்து இருவர் கையில் கொடுத்து மாற்றச் சொன்னார்.

மாலையை கையில் வாங்கி திரும்பிய அனலரசு என்னை எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்திருக்கிற. எதுக்கும் கெஞ்சாத அப்பத்தாவை கெஞ்ச வைத்து எனக்கு பிடிக்காத விஷயத்தை அவர்கள் மூலமாக நடத்திய உன் புத்தியை காட்டிவிட்டாய் .. யாரை வேண்டாம் ஒதுக்கி இருந்தோனோ அவர்களை வைத்தே உன் காரியத்தை சாதித்துவிட்டாய் தானே .. உன் குடும்பத்தின் புத்தி தானே உனக்கு இருக்கும். அன்பை நடிப்பாக்கி அப்பாத்தாவை ஏமாற்றியதைப் போல என்னை ஏமாற்றிவிடலாம் நினைக்கிறாய்.இனி தான் இருக்கடி உனக்கு ..மனதில் நினைத்தவன் அவளுக்கு மாலையிட்டான்..

அன்பினி தன் கையில் வாங்கிய மாலை கைகள் நடுங்க அவன் கழுத்திலிட்டவள் மாமா எனக்கு வேறு வழியில்லை இதுதவிர. அதனால தான் .உங்களுக்கு பிடிக்காது தெரிந்தும் துணிந்து செய்கிறேன். எதனால் தெரியுமா? .. நான் உங்க மேல் வைத்த அன்பு மட்டுமே. கடவுளே நான் செய்து என் மாமாவிற்காவும் அவர் குடும்பத்திற்கு மட்டுமே. இனி எத்தனை பிரச்சினை வந்தாலும் நீங்கள் தான் துணை நின்று தைரியத்தை தரணும் வேண்டியபடி மாலையிட்டாள்.

அய்யர் தாலியை எடுத்து அனலரசின் கையில் கொடுத்து கட்ட சொல்ல எந்திரமாக கையில் வாங்கியவன் அவள் கழுத்தில் கட்டினான்.அவன் கட்டவும் மேடை நோக்கி ஓடிவந்தவளோ அச்சோ கல்யாணம் ஆச்சா. இரு இரு அம்மா கிட்ட சொல்கிறேன் கையை தட்டியபடி சிரித்தாள். அவள் சிரிக்கவும் அவளருகில் வந்தவன் ஆமாம் கண்ணம்மா அவன் கல்யாணம் பண்ணிகிட்டான்.வா போய் அத்தையிடம் சொல்லாம் கூப்பிட ..வா சின்னு சீக்கிரம் போகலாம் அவன் கையைப் பிடித்து அம்மா அம்மா எங்கிருக்கிங்க .. இங்க அன்பு கழுத்தில தாலி கட்டி விட்டான் உள்ளே ஓட அவள் சின்னு கூப்பிட்டதை கேட்டு சில வினாடிகள் அதிர்ச்சி அடைந்து நின்றவன் அவள் பின்னாடி ஓடினான்..சின்னு என்கிற கலையரசன்..


அவள் அம்மா அம்மா கூப்பிட்டபடி ஒடுவதைப் பார்த்த அனலரசோ இத்தனை நாட்கள் கற்சிலை போல எதுவும் பேசாமல் யாரையும் அடையாளம் தெரியாமல் இருந்தவள் இப்ப தன் பெயரைச் சொல்லி போவதைப் பார்த்து அதிர்ந்தான்..''அம்மலுமா'' வாய் முணுமுணுக்க மேடையை விட்டு எழுந்தவன் அவளை நோக்கி வேகமாக போனான்.

அன்பினி அழகம்மா இருவரும் அவர்கள் பின்னே செல்ல அனலரசின் பெரியப்பா அங்கிருந்த உறவினர்களைப் பார்த்து போய் எல்லாரும் சாப்பிட வாருங்கள் அழைத்துச் சென்றார்.

உள்ளே ஓடியவள் அங்கு யாரும் இல்லாதைக் கண்டு நின்றவள் சுற்றி சுற்றிப் பார்க்க சுவரில் இரு சித்திரங்களுக்கு மாலையிட்டதைப் பார்த்துடனே மயங்கி சரிய பின்னால் வந்த சின்னு அவளை தாங்கிப் பிடித்து தூக்கிக் கொண்டவன் தன் பின்னால் ஓடிவந்த அனலரசு அப்பாத்தா அன்பினி மூவரையும் பார்த்தவன் அப்பாத்தாவிடம் இனி இவள் என் பொறுப்பு நான் பார்த்துக் கொள்வேன் .

இவளை எங்க வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போகிறேன். நீங்கள் யாரும் வர வேண்டாம் சொல்லியவன் அனலரசை திரும்பி ஒருமுறை பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் அவளை சுமந்துக்கொண்டு வெளியே நின்ற காரில் ஏறிச் செல்ல அவனை நெருங்க அனலரசு முயல அப்பாத்தா அவன் கையை இறுகப்பற்றி வேண்டாம் அவன் பார்த்துக்குவான் சொல்லியவர் அருகில் அன்பினியை அழைத்து இனி இவள் உன் பொறுப்பு அவன் கையோடு சேர்க்க அவள் கையை உதறியவன் ''எது ''எனக்கு பிடிக்காது தெரிஞ்சு செய்கிற உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கு பேசியபடி கன்னத்தில் ''பளார்'' ஓர் அறை விட்டான்.. அறை வாங்கியவளோ கன்னம் சிவந்து மூக்கு விடைத்து கண்ணீர் செறிய சிலைப் போல நின்றாள் அன்பினி...

சிறிய பகுதி தான் ..சாரி மா கோவிச்சிகாதீங்க..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விரைவில் இந்த வரும்மா .. இதற்கிடையில் வேறு கதை ஒன்று போடுகிறேன் படித்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் மா...
 
Top