நேசம் 4:
அந்த நாள் வேலையில் கழிய... புறப்படும் நேரம்...
"போகும்பொழுது எந்த பைக்கு ப்ளான் போட்டு இருக்கீங்க...", மதி.
"ப்லாக் கலர் யமஹா பைக்... பின்னாடி லைட் உடஞ்சு இருக்கும்.. நம்பெர்...??", ஹம்சி.
"நீ அடங்கவே மாட்ட... உன்ன போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போகாம விட்ட என்னை சொல்லனும்", மதி.
"பாஸ்... என்னனு கம்ப்லைன்ட் குடுப்பிங்க.. நான் உங்க பைக் இடிச்சிடேன்னா.. அதுக்கு ப்ரூப் இருக்கா...", ஹம்சி.
"லூசு... ட்ராஃப்பிக் ப்லேஸ்ல CCTV இருக்குல.. அப்புறம் என்ன..", மதி.
மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டனே...!!!(மைண்டு வாய்ஸ்...)
"நீங்க எங்கிட்ட மிஸ்பிகேவ் பன்னீங்க அதான் நான் இடிச்சென் சொல்லுவேன்.. எப்புடி...?", ஹம்சி.
"உன்னை சும்மா விடுறது தப்பு... இரு வறேன்...", மதி அவளைத் துரத்திக் கொண்டு பிளாக் முழுவதும் சுற்றினான். பிளாக்-ல் இவர்கள் மட்டுமே இருந்தனர். மற்ற அனைவரும் டைம் முடிந்ததும் சென்று விட்டனர்.
"ஆத்தி... இவள் செஞ்சாலும் செய்வா.. நம்ம தான் உசாறா இருக்கனும். என் குல தெய்வமே... கருப்பா... என்னை இவள் கிட்ட இருந்து காப்பாத்து... நான் உனக்கு மொட்டயே போடுறேன்.நம்ம இங்கே இருந்து எஸ்கேப் அகிடுவோம்...", ராஜு.
மதியிடம் இருந்து தப்பிக்கப் போராடியவள் அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடி எதிரில் வந்தவன் மீது மோதிக் கொண்டாள். அவன் வேறு யாரும் இல்லை....
"போச்சு... அவனே தான் மாட்டுனோம்...", ஹம்சி மனதில் நினைத்த நொடி...
வலிய கரம் ஒன்று அவளின் கைகளினையும் மற்றொன்று அவளின் முதுகினையும் அணைத்துப் பிடித்தவாறு நிலை நிறுத்த...
"இது ஆபீஸ்னு தெரியுமா இல்லையா..", கவின்.
கூறியவன் அங்கிருக்கப் பிடிக்காமல் அறைக்குள் சென்று விட்டான்.
சில நொடிகளில் தான் எதிர்பார்த்தவனின் குரல் அவள் பின் கேட்க... அப்போ நாம யாரப் பிடிச்சிருக்கோம்... நிமிர்ந்தவள் ஏமாற்றம் அடைந்தவளாய் பின் நகர...
"ஆர் யூ ஓகே வாகினி", உதய்.
"யா... ஓகே. சாரி", ஹம்சி
"ஹேய் நோ ப்ராப்லம். மதி இன்னும் கிளம்பாம இருக்க.. அவன் ராஜு எங்கே?", உதய்.
"கிளம்பிட்டேன் உதய். இவள் பண்ண பிரச்சினைல அவன் இப்போ அவன் வீட்டுலயே இருப்பான். வா நாம போகலாம். வாமா பரதேவதை..", மதி.
"டேய் நான் பரதேவதையா...உன்னை...", ஹம்சி.
"மிஸ் ஹம்சவாகினி உங்க வொர்க் முடிச்ச பைல் எங்கே... கம் அண்டு ஷோ மி...", கவின்.
"நீ போய் பாரு.. அந்த அருந்த வாலு கிட்ட நான் சொல்லிடுறேன்", மதி.
"ஓகே பை வாகினி", உதய்.
"பை உதய்", ஹம்சி.
"சார் நான் உங்க மெயில்க்கு அனுப்பிட்டேன். நீங்க பார்க்கவில்லையா...", ஹம்சி.
"அப்படியா.. வந்து காட்டு...", கவின் இருகிய முகத்துடன் கூற...
அவன் கோபத்தில் இருப்பதை அறிந்து அவனருகில் சென்று மெயிலில் அவள் பைலை அவனிடம் காட்டினாள். அவன் பார்வையின் வித்தியாசம் உணர்ந்து அவள் நகர... அவன் அவள் இடையைப் பிடித்து அவன் மடியில் அமர்த்தினான். என்ன என்று உணர்வதர்குள் அவன் அவளின் இதழினைச் சிறை செய்தான். அவளும் விருப்பத்துடன் அவன் சிகை கோதினாள்.
நிமிடங்கள் கறைய... அவனுக்குத் தான் செய்யும் தவறு உணர்ந்து அவளைக் கீழே தள்ளினான். அவள் உணர்விலிருந்து வெளிவந்து கொண்டிருக்க.. அவன் அனல் கக்கும் எரிமலையாய் வார்த்தை அம்பினை அவளின் மனதில் எய்தான்.
"உனக்கு உணர்வுகள் உண்டா இல்லையா என நினைத்துக் கொண்டு இருந்தேன்.. இப்பொழுது உணர்கிறேன்.. உணர்வுகள் என்பது சிறிதும் உன்னிடம் இல்லை. உன்னால் எப்படி முடிந்தது.. என் கண் முன்னாடியே அவனுடன் அணைத்துக் கொண்டு... எனக்கு அருவருப்பாக இருக்கு. அவன் தீண்டியபோது உன் முகம் எப்படி இருந்ததோ... அப்படியே நான் தீண்டும் பொழுதும் இருக்கின்றாய்... இதற்கு என்ன பெயர்... இனி ஒரு நிமிடம் என் கண் முன்னாடி இருந்தாலும் நான் மனுசனாக இறுக்கமாட்டேன். போ", கவின்.
நான் உணர்வுகள் இல்லாதவளா... நான் அவனை விருப்பத்துடன் அணைத்தேனா.. அவனை நீ என்றல்லவா நினைத்து மகிழ்ந்தேன்.. அந்த ஒரு நொடியேனும் ஆசை காதலனின் கைகளில் உள்ளோம் என்றல்லவா நினைத்தேன்.. என்னை இப்படிக் கூற எப்படி மனம் வந்தது... என்னை தீண்ட அருவருப்பாக உள்ளதா... தவறு செய்த நீ இவ்வளவு பேசுகின்றாய்.. நான் ஏன் அழுது கொண்டிருக்கின்றேன். இனி அழ மாட்டேன் என உறுதி கொண்டவள்... எழுந்து நின்றாள்...
"நான் இங்கே பணி புரிய விரும்பவில்லை. நாளை வருகிறேன்.. எனக்கு எனது பான்டினைக் கேன்செல் செய்து கொடுங்கள். எனக்கும் உங்கள் முகத்தில் விழிக்க விருப்பம் இல்லை. இப்பொழுது நான் வருகிறேன்...", என்றுவிட்டு தன் பையினை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.
"தான் பேசியது அதிகமோ என்று யோசிக்க... அவள் செய்தது தவறு தான். அப்படி இருக்க... நம் மீது தவறு என்ன.. நாம் கூறிய வார்த்தைகள் அவளைக் காயப்படுத்தி இருக்கும்... ஆனால் அது ஏன் எனக்கு வலிக்கின்றது.. அவள் கண்ணீர் பார்த்து என் உள்ளம் ஏன் தவிக்கின்றது...", என நினைத்துக் கொண்டே நிமிடங்களைக் கடத்தியவன் நேரம் போனதை அறிந்து இல்லம் வந்தவன் அவன் அறைக்குச் செல்லாது அலுவலக அறையில் இருந்த சோபாவில் சாய்ந்து கடந்த கால நினைவில் பயணித்தான்.
வெளியில் வந்த ஹம்சி முகம் சரியில்லை என்பதை உணர்ந்தவள் அவளிடம் எதையும் கேட்காது நிலா வாகனத்தினை ஓட்டினாள்... இருவரும் இல்லம் வந்து சேர்ந்தனர். நிலா, ஹம்சி மறுத்தும் பாலை மட்டும் குடிக்க வைத்துப் படுக்கச் சொல்லிவிட.. அவள் கடந்த காலம் பயணித்தாள்.
நாமளும் காடந்த காலத்துக்குப் போவோம்...(
)
ஹம்சி மற்றும் நிலா இருவரும் பள்ளியிலிருந்து உயிர் தோழிகள். அவர்கள் இருவரும் விரும்பி ஒரே கல்லூரியில் அவர்களுக்குப் பிடித்தப் பிரிவில் சேர்ந்தனர்.
ஹம்சியின் தாத்தா ராஜசேகர், பெற்றோர் தமிழ்செல்வன் மற்றும் வாணி. அவர்களுக்கு இரு பெண்கள். இரட்டையர்கள். ஹம்சவாகினி மற்றும் ஹம்ச வர்த்தினி. அதில் ஹம்சவாகினிக்கு மட்டும் பொறியியல் படிக்க விருப்பம். மற்றவளுக்கு பள்ளியில் ஓவிய ஆசிரியை ஆக விருப்பம். அதன்படி அவர்கள் விருப்பத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க.. ஹம்சி நிலாவுடன் இந்தக் கல்லூரியில் வந்து சேர்ந்தாள்.
நிலாவிற்கு தாய் இல்லை. தாய் இறந்ததும் தந்தை மருமணம் செய்ய... அவள் நிலாவினை வெறுக்க... நிலாவிற்கு அவளிடம் விடுதலை பெற்றுத் தரவே இந்தக் கல்லூரியில் சேர்த்து ஒரு ஸ்கூட்டி மற்றும் வீடு என அனைத்தும் அளித்து அவளின் தேவைகளை பார்த்துக் கொள்கின்றார். ஆனால் அவளின் தேவை அதுவல்லவே...
சிலுசிலுவென்று தென்றல் வீச... வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க... மாலை வெயில் மேனியில் பட... பொறியியல் கல்லூரியில் தன் தோழியுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் ஹம்சி. தன் சீனியர் கண்ணில் விழக் கூடாது என்று ஒரு வழிப்பாதை வழியில் சென்று கொண்டிருந்தனர். அப்படியும் அவ்வழியில் வந்து கொண்டிருந்த மெக்கானிக்கல் சீனியர்ஸ் அவர்களைப் பார்த்து விட...
"ஓய்... எங்கே போரிங்க... இங்கே வாங்க... என்ன டிபார்ட்மென்ட்", சீனியரில் ஒருவன்.
"ஐடி அண்ணா... இவள்...", ஹம்சி.
"ஐடி தான் அண்ணா...", நிலா.
"அப்படியா... சரி.. ECE ல நிலா-ன்னு ஒரு பொண்ணு... பார்த்தீங்களா...", ஒருவன்.
"இல்லை அண்ணா... அவள் யாருனு தெரியாதே... என்ன பிரச்சினை சொல்லுங்க அண்ணா நான் உதவி செய்யுறேன்", நிலா.
ஹம்சி...."என்ன பன்னித் தொலைச்சாளோ தெரியலையே... சரி இப்போ இங்கே இருந்து தப்பிப்போம்", மனதில் நினைத்தாள்.
"அதெல்லாம் ஒண்ணும் தேவை இல்லை. நீங்கள் விஷ் பன்னிட்டு கிளம்புங்க...", இன்னொருவன்.
"குட் ஈவ்னிங் அண்ணா", என்று இருவரும் கூறிவிட்டுச் சென்றனர்.
"என்ன டி பண்ண... வந்த ஒரு நாள்ள உன் பேர் கல்லூரி முழுதும் தெரியுது...", ஹம்சி.
"நான் ஒண்ணும் பண்ணல டி. ஜஸ்ட் மெக்கானிகல்ல ஒரு சீனியர முகத்துல அறைஞ்சுடேன்.
அதுக்கு இப்படி வலை வீசித் தேடுறாங்க...", நிலா.
"என்ன அறைஞ்சுடியா... ஆ....", ஹம்சி.
"ஆமா. அதுக்கு ஏன் உன் வாட்டர் டேங்க இப்படித் திறக்குற... க்ளோஸ் த டோர். அவன் என்ன கிஷ் பண்ண சொன்னான். நான் அடிச்சேன்", நிலா.
"தெளிவா சொல்லு டி", ஹம்சி.
நிலா ஹம்சியிடம் பை சொல்லிவிட்டு அவள் டிபார்ட்மென்ட் தேடீச் சென்று கொண்டு இருந்தாள். அப்பொழுது அந்த வழியில் வந்த விஜய் அவளைப் பார்த்ததும் காதலில் விழுந்தான். (அது தான்பா... பார்த்ததும் காதல்...
)...
"ஹேய் இங்கே வா... நீ எந்த டிபார்ட்மென்ட்...பேர் என்ன", விஜய்.
"என்ன சுடில வர காலேஜ்க்கு... நாளைக்கு புடவைல வரனும் சரியா...", ஜான்.
"டேய்...", விஜய் ஜானை முறைத்தான்.
"சாரி மச்சான். யூ கன்டினியூ...", விஜய்.
"ம்ம்ம்.. சொல்லு...", விஜய்.
"நிலா... ECE டிபார்ட்மென்ட்", நிலா.
"நல்லா தான் இருக்கு.. நான் விஜய். நிலா விஜய்... இனி யாரு கேட்டாலும் அப்படித்தான் சொல்லனும்... ஓகே வா...", விஜய்.
"என்ன... சொல்றீங்க... நான் போறேன்...", நிலா.
பொறுமையைக் கடைப்
பிடித்துக் கொண்டு இருந்தாள் நிலா.
"எங்க போற... நான் உன்னை லவ் பன்றேன். எனக்கு ஒரு கிஷ் குடுத்துட்டு போ...", எனக் கூறியவன் அவள் கையினைப் பற்ற...
ஜான் தன் கன்னத்தினைத் தேய்த்துக் கொண்டு இருந்தான். விஜயை அடித்தது அவனுக்கு அடித்தது போன்று கன்னம் எறிந்தது.
"ராகிங் அளவோட இருக்கனும்... மீறினா... இப்படிதான். புரிந்ததா...", என்று கூறியவள் தன் டிபார்ட்மென்ட் உள்ளே சென்றாள்.
"ஐ லவ் யூ டி.. இப்ப தான் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...", விஜய்.
"டேய் மச்சான்... உன்னையே அடிச்சிட்டாளா...", ஜான்.
"விடுடா... ஈவ்னிங் அவள் என்னைப் பார்க்க வரனும். அதுக்கு நீ தான் பொறுப்பு. வா போகலாம்", விஜய்.
நேசம் 5:
நடந்தவற்றை நிலா கூற... ஹம்சி பயந்தாள்... நிலா தைரியசாலி. எதையும் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டுமே இருப்பது அவளுக்கு அரவே பிடிக்காது. ஆனால் ஹம்சி பயந்த சுபாவம் கொண்டவள்.
குணத்தில் எப்படி வேறுபாடு உள்ளதோ அதே போன்று தான் உருவத்திலும்... (ஆனால் வாய்க்கு மட்டும் இருவருக்கும் கோல்டு மெடல் தான் கொடுக்கனும்
) நிலா மஞ்சள் கலந்த வெண்மை நிறம். மாசு மருவற்ற முகமும் செவ்விதழும் பெற்றவள். வடிவான, பூசினார் போன்ற உடல்வாகு ஆனால் அதுதான் அவளுக்கு மிகுந்த அழகைக் கொடுக்கும். திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு.
ஹம்சி தூய வெண்மை நிறம். மாசு மருவற்ற முகமும் பின்க் நிற இதழ் பெற்றவள். சற்று அளவான, சிறுத்த இடை கொண்ட, நின்று பார்க்கும் அழகு.
"பிரச்சினை பண்ண மாட்டாங்களா டி... நாளைக்கு லீவ் போட்டிடலாமா..", ஹம்சி.
"சரி. நாளைக்கு லீவ் போடுறோம். அடுத்த நாள் பிரச்சினை பண்ண மாட்டாங்களா... என்ன நடந்தாலும் நான் பார்த்துக்குறேன். நீ பயம் இல்லாம வா..", நிலா.
"சரி டி", ஹம்சி.
நிலாவும் ஹம்சியும் பள்ளியில் இருந்தே நண்பர்கள். நிலா, ஹம்சி வீட்டினர் அனைவருக்கும் பழக்கம். நிலா உடன் என்பதால் மட்டுமே ஹம்சியை வெளியில் அனுப்பினர் ஹம்சியின் பெற்றோர். நிலாவின் தந்தை, இல்லம் மற்றும் ஸ்கூட்டி என அனைத்தையும் ஏற்றுக் கொள்ள.. இவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. கல்லூரி செல்லும் முதல் நாள் வந்து இருந்துவிட்டு வீடு திரும்பினர். நிலாவின் தந்தை அவளை ஹம்சி வீட்டில் விட்டவர் தான். அதற்கு பின் போனில் கூட அழைக்கவில்லை. அவளுக்குத் தெரியும் தந்தை தன் நினைவாகத் தான் இருப்பார் என்று.. ஆனால் விதி...!
கல்லூரியில் இருந்து இல்லத்தினை அடைந்தவர்கள் ப்ரஷ் ஆகிவிட்டு அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர். ஹம்சி வீட்டிற்கு அழைத்து பேசுவது... நிலா அருகில் உள்ள குழந்தைகளுடன் ஹைட் அண்டு ஷீக் விளையாடுவது.. அசைன்ட்மென்ட் எதுவும் இருந்தால்.. இருவரும் இரவில் விழித்து முடித்துவிட்டு தான் உறங்குவர்.
ஹம்சி தான் சமையல் வேலை அனைத்தும் செய்வாள். நிலாவிற்கு தெரியாது என்று ஒன்றும் இல்லை. அவளுக்கு ஹம்சியின் கைப்பக்குவத்தில் அலாதி பிரியம். ஆனால் சண்டே மதியம் மட்டும் நிலா தான் சமையல். இரவில் இருவரும் ஹோட்டல் சென்று விடுவர். காலை என நீங்கள் கேட்க வருவது புரிகின்றது...(சண்டே, காலை என்பது இருக்கின்றதா எனக் கேட்கும் அளவிற்கு உறங்கும் ஜீவன்கள் இருவரும்... அப்புறம் எங்கே சமையல்
)
"எப்படி கண்ணு இருக்க... நேரத்துக்கு சாப்பிடுங்க ரெண்டு பேரும்... கோயம்புத்தூர்ல யாராவது வீம்பு பண்ணா சொல்லு கண்ணு... நம்ம ஊரு தான். நான் வந்து அருவால்ல ஒரு வெட்டு வெட்டிடறேன். நிலா எங்க
போய்டுச்சு..", ராஜசேகர்.
"நல்லா இருக்கோம் கிங். உங்களோட பிரதிபலிப்பு தான் இங்க ஒருத்தி இருக்காளே.. அப்புறம் என்ன பயம். அவள் குட்டீஸ் கூட விளையாடுறா கிங்..", நாளைக்குப் பேச சொல்றேன்(ராஜசேகர் பெயரின் சுருக்கம் கிங். இந்தப் பெயர் யாரு வச்சிருப்பாங்கனு யோசிக்குறிங்க.. டவுட்டே வேண்டாம் நிலா தான்
)
"சரி கண்ணு. பெரிய பாப்பா கிட்ட கொடுக்குறேன்", தாத்தா.
"என்ன டி வாகினி எப்படி இருக்க. காலேஜ் ஓகே வா", ஹம்ச வர்த்தினி.
"நல்லா இருக்கேன். காலேஜ் ஓகே தான். போக போக தான் தெரியும். உனக்கு எப்படி இருக்கு ஹம்சி..", ஹம்சி.(ஹம்சி வீட்டில் அனைவரும் ஹம்சவாகினியை வாகினி என்றும் ஹம்சவர்த்தினியை ஹம்சி என்றும் அழைப்பர். நிலா மட்டும் இதில் விதிவிலக்கு. ஹம்சவர்த்தினியை ஸ்வீட்டி என்பாள்.(அவள் ஸ்வீட் அதிகம் உண்பதால் அப்பெயர்
)
"எனக்கும் அப்படித் தான் டி வாகினி", எனத் தொடங்கி 10 நிமிடம் பின்னர் அவள் தந்தையிடம் தர...
"பத்திரமா இருமா.. அம்மா கிட்ட பேசிட்டு போய் சாப்பிடுங்க.. நேரம் ஆகுது.. அம்மா கிட்ட கொடுக்குறேன்மா..", தமிழ்செல்வன்.
"சரிங்கப்பா.. ", ஹம்சி.
"வாகினி....", என ஆரம்பித்தவர்கள் அரை மணி நேரம் சென்ற பின்னர் நிலா வர அவளும் பேசிவிட்டு உண்பதற்குத் தயாரானார்கள்.
காலைக் கல்லூரி வந்து சேர்ந்தனர். வழக்கம் போல் நிலா ஹம்சியை அவள் டிபார்ட்மென்ட்-ல் விட்டுவிட்டு அவள் டிபார்ட்மென்ட் செல்ல வழியில் விஜய் நிற்க... அவனருகில் அவன் நண்பர்கள்.
"மச்சான் இது தான் உன் ஆளாடா.. நல்லா தான் டா இருக்கா...", திலீப்.
"உனக்கு நேரம் சரியில்லை டி மாப்பிள. விதி யாரை விட்டது", ஜான் மைண்டு வாய்ஸ்.
"என்னை ஏன்டா அடிச்ச..", கன்னத்தினைத் தடவியபடி திலீப் கேட்க..
"அவங்க நம்ம சிஸ்டர்டா.. மறியாதை இல்லாம பேசலாமா.. அதான் மச்சான் உன்ன டச் பன்னிடான்", ஜான்.
அவர்கள் தன்னை ஒன்றும் செய்யவில்லையே என யோசித்தவள் அவள் டிபார்ட்மென்ட் உள்ளே நுழைந்தாள்.
பின் விஐய் குழு அவர்கள் டிபார்ட்மென்ட் திரும்பியது.
இடைவேளைக்கு ஐந்து நிமிடம் முன்... கெமிஸ்ட்ரி வகுப்புச் செல்ல... ஹம்சி தூக்கக் கலக்கத்தில் இருந்தவள் கையில் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இடையில் பேனாவை வைத்துக் கொண்டு இடவலமாக ஆட்டிக் கொண்டு இருந்தாள். தூக்கக் கலக்கத்தில் இருந்தவள் கொஞ்சம் வேகமாக ஆட்ட...அவள் அருகில் இருந்த தீபா அவளை தெரியாமல் இடிக்க அது பறந்து சென்று ஒரு நெற்றியைப் பதம் பார்த்தது. நெற்றியில் கூர்முனை தீண்டியதில் நல்ல அழுத்தம் பதிந்து மீண்டது.
சுய நினைவை அடைந்தவள் நொடியில் நடந்தது புரிய... பாவமாக திரும்பிப் பார்க்க.. அந்த நபரின் கண்கள் அவளைத் திரும்பிப் பார்க்க...
இவள் தன் இரண்டு கரங்ளையும் கிராஸ் ஆக காதுக்குக் கொண்டு சென்று விழிகளில் பயத்துடன் மன்னிப்பு வேண்டினாள். அந்த பாவத்தில் சிரிப்பு வர கண்களைத் திருப்பி விட்டு அந்த நபர் சென்று விட்டார்.
இடைவேளை தொடங்க... ஹம்சி அந்த நபரைத் தேடி கண்டுபிடிக்க அந்த நபர் வகுப்பினுள் சென்று விட.. அவளும் அவள் வகுப்பினுள் நுழைந்தாள்.
மதியம் நிலாவிடம் கூறி அவளுடன்அந்த நபரினைக் காணச் செல்ல.. அந்த நபருடன் ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் இருந்தனர். இவள் அந்த நபரின் பின் நின்று விழிக்க...
"ஹலோ பாஸ்... உங்க கிட்ட இவள் பேசனும்", நிலா.
நிலாவின் குரலைக் கேட்டவன் திரும்பிப் பார்க்க... ஹம்சி விழிகளில் அச்சத்துடன் இருந்தாள். அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு நிலாவிடம் என்ன எனப் புருவம் உயர்த்த... அவள் அவளினைக் கைகாட்ட..
"சாரி. நான் தெரியாம உங்களை காயப் படுத்திட்டேன்", ஹம்சி.
"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. வருத்தப் படவேண்டாம். சரி போகலாம்", அந்த நபர்.
"இல்லை அந்தப் பேனா எனக்கு முக்கியமான பேனா. அது வேண்டும்!", ஹம்சி.
"ஓ... சரி நாளைக்குத் தறேன். உன் பேர் என்ன?... ", அந்த நபர்.
அவளிடம் பதில் வராது போக... அவளை விசஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தவள்...
"இவள் பெயர் ஹம்சி. என் பெயர் நிலா. நான் ECE, இவள் IT. நீங்க?", நிலா.
"நான் 3 இயர் IT டிபார்ட்மென்ட்... கவின் சந்திரன்", கவின்.
"ஓ... அந்த கவின் நீங்க தானா...?", நிலா.
சிறு புன்னகையுடன் தலை ஆட்டியவன்...
"பை காய்ஸ். நிலா அண்டு ஹம்சி பை", கவின்.
"ஹாய் ஹம்சி. ஏன் பயந்து நிக்குறீங்க... கவின் ஒண்ணும் சொல்ல மாட்டான். ஆனால் அவன் நெற்றி வீங்குனதுக்கு காரணம் நீங்க தான்னு யார்கிட்டயும் சொல்லிடாதிங்க.. அவன் விசிறிகள் அடிக்கத் துரத்துவாங்க... ஹா ஹா ஹா", ரக்சிதா.
"ஆஹ்ன். சரி... ?", ஹம்சி.
"சாரி நான் என்னை இன்ட்ரோ கொடுக்கல.. நான் ரக்சிதா... யூ கால் மீ ரக்ஷி. நான் 2 இயர் IT. பீ ப்ரன்ட்ஸ்", என்று ரக்ஷி கை கொடுக்க...
"நான் IT... ", ஹம்சி... தொடங்க..
"ஐ நோ. ஹம்சவாகினி. IT ப்ரம் பழநி. இவள் உன் தோழி நிலா", ரக்ஷி.
"எப்படி?", நிலா.
"எல்லாம் அப்படித்தான். சரி க்ளாஸ் போங்க... நாளைக்கு மீட் பண்ணலாம். பை", ரக்ஷி.
"பை", கவின் நண்பர்கள்.
"பை", நிலா மற்றும் ஹம்சி.
"உனக்கு அவங்கள முன்னாடியே தெரியுமா டி", ஹம்சி.
"எனக்குத் தெரியாது டி. என் தோழி ஆய்ஷா தான் சொன்னா.. கவின் கவின்னு ஒரே கவின் புராணம் தான். என்னடானு கேட்டா... காலேஜ் டாப் சிங்கர் போல...", நிலா.
"சிங்கர் ஆஹ்...", ஹம்சி.
"ஐயோ உங்கிட்டயா சொன்னேன். நீயே ஒரு சாங்
பைத்தியம்.. நீ அவளுக்கு மேலே இருப்பியே... என்னடி நிலா உனக்கு வந்த சோதனை... ஐயஹோ...", நிலா.
"ஹேய்.. அப்போ அவர் கூட ப்ரன்ட்ஸ் ஆகிடலாம் டி", ஹம்சி விழிகளில் ஆர்வத்துடன் கேட்டாள்.
"அது நம்ம கையில் இல்லை செல்லம். அவங்க கையில் இருக்கு. பார்க்கலாம்", நிலா.
நட்பாகுமா...?
நேசம் தொடரும்...
Hiii drss...
Forgive me with your love if there is a mistake...
Give your support drs...
Thanking you...
ரொம்ப bore... எனில் கண்டிப்பாகத் தெரிவிக்கவும்...
தங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்களின் நிவி
...
அடுத்தப் பதிவுடன் விரைவில் சந்திக்கலாம்