Niviaju
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2
வெளியில் அதிகமான சத்தம் கேட்க என்ன ஆனது என்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து வெளியில் வந்து பார்த்தனர் புதிதாக மணம் முடித்த இரு பெண்களும்.
அவர்கள் இருவரும் வெளியில் வர அங்கு வாசுகி தான் முகத்தினில் கோபம் கொப்பளிக்கக் கத்திக் கொண்டு இருந்தார்.
"என்ன சொல்றீங்க சொல்லுங்க... இது தான் உங்க வாக்க காப்பாத்துற அழகா???", வாசுகி வசுவினைப் பார்த்த வண்ணம் கேட்டுக் கொண்டு இருக்க..
அங்கிருந்த அனைவரும் வாசுகியினை எதிர்த்து பேச முடியாதவாறு நின்று இருந்தனர். திருமணம் செய்து வைக்கிறேன் என்று வாக்குக் கூறிவிட்டு அதை தவறிவிட்டதால் எதுவும் எதிர்த்துக் கூறும் நிலையில் யாரும் இல்லை.
"நான் அப்போவே என் புருஷன் கிட்ட சொன்னேன்.. இவனுக்கு சொந்தம்னு யாரு இருக்கா.. அதுவும் சொத்துல பங்கு கூடக் கேக்க மாட்டான்.. நீதி நேர்மை நியாயம் பேசிட்டு திரிவான்.. இவன் நம்ம நிஷாவுக்கு வேண்டாம் அப்படின்னு... தொழிலும் சொந்தமா இருக்கா.. கூலிக்கு தான் இவங்க கம்பெனிக்கு வேலைக்குப் போறான்... இவனை யாரு கட்டிப்பா.. அப்படியும் என் பொண்ணு சம்மதம் சொன்னாளே... நல்ல நேரம் அவள் தப்பிச்சா... இதோ இங்க நிக்குறாளே இவ தான் அவனுக்கு பொருத்தம். அவனும் அநாதை இவளும் அநாதை..", வாசுகிப் பேசிக் கொண்டே போக... வசுவின் ஓங்கிய கரம் பாதியில் நின்றது....
அவருக்கு முன் வாசுகியின் கன்னத்தில் இன்னொரு கரம் பதிந்தது...
தேவன் தான் அறைந்திருந்தார்...
எதுக்கு இப்போ என்னை அடிச்சிங்க... தேவன் அவரை அடக்க... "சும்மா இருங்க.. உங்களால வந்தது எல்லாம். இப்போ நம்ம பொண்ண யாரு கட்டிப்பாங்க...", வாசுகி கன்னத்தினைத் தாங்கிக் கொண்டு கேட்க.
"உன் பொண்ணு எங்கமா ", வசு நிதானமாகக் கேட்கவும்
அப்பொழுதுதான் அவருக்கு தன்னுடன் நிஷா இல்லை என்ற எண்ணமே வந்தது.. மண்டபத்தில் தன் மகள் இல்லை என்பதனைப் பார்த்ததில் இருந்து அவரின் உள்ளம் கொதிக்க. தேவன் தான் அவரை சமாதானப் படுத்தி கவின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். மண்டபத்தில் இருந்து அனைவரும் வந்து பின் விளக்கு ஏற்றி நெருங்கிய சொந்தம் மட்டும் இருக்கும் பொழுது தான் தேவன் அவரை வெளியில் விட்டார். அதுவரையிலும் கோபத்தில் இருந்தவர் தனது மகளினையே மறந்து இருந்தார்..
தேவனை விழி விரிய வாசுகி நோக்க... "வீட்டுக்கு வா.. அங்க போய் எல்லாம் பேசிக்கலாம்..", தேவன்.
"இதுதான் நீங்க வர கடைசி முறை இந்த வீட்டுக்கு.. ", என்று வசு தேவனிடம் அழுத்தமாகக் கூற தேவனும் சம்மதமாக தலையினை ஆட்டினார்.
அதன் பின் வாசுகியும் மகளினைக் காண வேண்டும் என்ற நோக்கில் எதுவும் பேசாமல் சென்றுவிட...
அப்பொழுதுதான் அங்கிருந்த அனைவரும் ஒரு நிம்மதி மனதில் படிய நாற்காலியில் அமர்ந்தனர். வாசுகி அநாதை என்ற வார்த்தையினை உபயோகப் படுத்தியதுமே அந்த வார்த்தையில் நொறுங்கிய மதி அவனது அறைக்குச் சென்று விட்டான். அவன் வலி உணர்ந்த கவினும் மதியினுடன் சென்றுவிட... அங்கு நடந்த அனைத்தினையும் கேட்டுக் கொண்டு இருந்த ஹம்சிக்கு அதிர்ச்சி என்றால் அவளருகில் நின்றிருந்த மதியின் மனைவி நிலாவிற்கு சொல்லவும் வேண்டுமா????? (ஹாஹா...யாருலாம் நிலா தான்னு முன்னாடியே கன்பார்ம் பன்னீங்க???? பொய் சொல்லாம சொல்லனும் !)
மதி, சந்திரன் மற்றும் வேணியின் மகன் என்று தான் இதுவரையிலும் அவள் எண்ணி இருந்தாள். அவளுக்கு இந்த விவரம் அதிர்ச்சி. அவளை அநாதை என்று கூறியதும் எப்படி வலித்ததோ அப்படித்தானே அவனுக்கும் வலித்திருக்கும் என்று எண்ணி மிகவும் வருந்தினாள் அவனுக்கும் சேர்த்து..
அவனைப் பார்க்க வேண்டும் போன்று இருக்க.. அவனது அறைக்குச் செல்லவேண்டும் என்று வேணியிடம் நிலா கேட்க.. வேணி அவளினை அழைத்துக் கொண்டு செல்லுமாறு ஹம்சவர்த்தினியிடம் கூற... நிலாவினை அவனது அறைக்கு அழைத்துச் செல்ல.. மதியும் கவினும் கவினின் அறையிலேயே இருக்க.. அங்கு செல்லுமாறு வர்த்தினி சொல்லவும்... நிலா வரவும் ஹம்சி எழுந்து செல்ல..
நிலா மதியின் அருகில் சென்று அமர்ந்தாள். மதி ஜன்னல் புறம் திரும்பியிருந்தவனுக்கு நிலா வந்தது தெரியவில்லை. அதுவரையிலும் மதியின் பின் அமர்ந்து கவின் தான் ஆறுதலாக அவனது தோளினைப் பற்றி இருந்தான்.
நிலா அவனது தோளினைப் பற்றி திருப்ப முயற்சிக்க.. அவனது இடது கரத்தில் அவனது கண்ணீர் பட்டுத் தெரிப்பதனைக் கண்ட நிலா அவனது கரத்தினைத் தன் வலக் கரம் கொண்டு கொண்டு கோர்த்துக் கொள்ள..
அதுவரை தனது வலியினை அடக்கிக் கொண்டு இருந்த மதி அதற்கு மேல் முடியாது திரும்பி அவளை இருக்கமாக அணைத்திருந்தான். அவனது வலியினை இருக்கி தன்னை அணைத்திருக்கும் வலிமையில் நிலா உணர்ந்தாள். அவனது கைகள் தளரவில்லை. அவளும் அவனது வலி போக்க அவனது முதுகினைத் தடவிக் கொண்டே இருந்தாள். அவளுக்கு கண்ணீர் ஆறாக ஓடியது.. நிலாவிற்கு அவன் மீது காதல் எல்லாம் இல்லை. அப்பொழுது வலியில் துடிக்கும் குழந்தையாகத் தான் மதி தெரிந்தான்...
வெகு நேரம் கழிந்து சுயம் அடைந்தவன் அப்பொழுதுதான் தான் அணைத்திருப்பது கவின் அல்ல என உணர்ந்தான். உடனே அவளை விட்டு விலகியவன் நிலா என்று அறிந்து அவளின் முகம் பார்க்க முடியாமல் ஜன்னல் புறம் சென்று நின்று கொண்டான்.
வசு நிலாவினை பார்த்து கட்டிலில் அமர சொல்லியவர் மதியினை இழுத்து அவள் அருகில் அமர வைத்தார். மதி வசுவின் முகம் பார்க்க தயங்கினான். எங்கே தன்னை மீறி கதறி விடுவோமோ என்ற தயக்கம்...
அங்கிருந்த நாற்காலியினை மதியின் முன் இழுத்துப் போட்டவர் அவனின் முகத்தினைத் தன் முகம் காணச் செய்து அவன் விழிகளினை நேருக்கு சந்தித்து... "ஏனக்கு இரண்டு மகன் இல்லை.. ஐந்து மகன்.. இப்போ சொல்லு யாரு அநாதை", வசு கேட்ட நொடி...
மதி வசுவினை மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டான்... அவனுக்கு ஆனந்தக் கண்ணீர் வடிந்தது... தான் அநாதை என்று கூறியதும் ஏன் வருந்தினோம் என்று அவனுக்கேத் தவறாகத் தோன்றியது... தனது பியூட்டி இருக்க... இப்படி யோசித்ததே தவறு என்று எண்ணியவன் அப்பொழுதுதான் மனம் லேசானது போல் உணர்ந்தான். நிலாவிற்கு அவர்கள் அன்பினைக் கண்டு உள்ளம் குளிர்ந்தது..
மதியினை சிறிது நேரம் கழித்து விலக்கியவர்.. நிலாவின் தலையினைக் கோதியவாறு.. "அரசிக் கண்ணு அவள் கூறு கெட்டவள் சொல்றான்னு நீயும் ஏன் கண்ணு வருந்தி நிக்குற.. உனக்கு அப்பா இருக்காக... மாமனார் இருக்காக மாமியார் இருக்காக. உன் புருஷன் இவன் இருக்கான்.. அதையெல்லாம் விட நானும் ஹம்சியும் உனக்கு இருக்கோம்.. நீ அதை நினைத்து மனச குழப்பிக்காதத்தா", வசு.
நிலா சம்மதம் என சிரித்துக் கொண்டே தலையினை ஆட்ட மதியும் நிலாவும் வசுவின் தோளில் ஆளுக்கொரு புறம் சாய்ந்து கொள்ள.. கவின் ஹம்சி இருவரும் உள்ளே வரவும் அதன் பின் அனைவரும் சடங்கு வேலைகளினைத் தொடங்கினர்.
நேசம் இணையும்
ஹாய் டியர்ஸ்....
இன்றிலிருந்து
ஞாயிறு , செவ்வாய் மற்றும் வெள்ளி
வாரம் மூன்று முறை பதிவு இடுகிறேன்
(முடிந்தவரை இடையில் பதிவும் உண்டு)
தங்களின் கருத்தினைக் காண ஆவலுடன் உங்களின் நிவி