அத்தியாயம் 6 – மோட்டிவ்
சிறிது நேர அமைதிக்கு பின் பிரியா பேசத்தொடங்கினாள்.
"இன்னும் கொஞ்சம் கூட ட்ரை பண்ணியிருந்திருக்கலாம் ஹரி. சின்ன வயசிலேருந்து டாக்டராகணும்னுதான் இலட்சியத்தோட இருந்தன். இப்ப எல்லாமே பாழாகிடுச்சு"
"பிரியா நீங்க இப்ப எடுத்திருக்கிற மதிப்பெண்ணுக்கு நிச்சயமா டாக்டராகலாம். டோன்ட் வொரி"
"பிரைவேட் மெடிக்கல் காலேஜ்லதான் சீட் குடுப்பாங்க. அதுக்கெல்லாம் நிறைய பீஸ் கட்டணும். என்ன மாதிரி பொண்ணு அதுக்கெல்லாம் ஆசை படலாமா?" அலுத்துக்கொண்டாள் பிரியா.
"அத நான் பார்த்துக்கிறேன்மா, என்னோட அப்பாட ப்ரெண்ட் ஒருத்தருக்கு சொந்தமான மெடிக்கல் காலேஜ் ஒண்ணு இருக்கு. நான் அப்பாகிட்ட பேசிப்பார்க்கிறன்."
"ஹரி ப்ளீஸ் எனக்கு நம்பிக்கைய குடுக்க வேணாம். இப்பதான் நமக்கு டாக்டராகிற குடுப்பினை இல்லன்னு மனச தேற்றிட்டு வாறன். திரும்ப ஆசைய காட்ட வேணாம். ஆசைப்பட்டிட்டு திரும்பவும் இல்லன்னா அப்புறம் நான் செத்துடுவன்" அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு பேசினாள் பிரியா.
"ஓகே ஓகே நீங்க எதையும் யோசிக்க வேணாம், நான் சொன்னத மறந்துடுங்க. பட் உங்க ஆசைய நிறைவேத்துறது என்னோட கடமை....... என்ன நம்புவீங்கதானே மேடம்?" பிரியாவை நன்கு புரிந்தவனான ஹரி அவள் முகத்தில் நம்பிக்கையையும் புன்னகையையும் வரவழைத்தான்.
"இந்த உலகத்துல உங்கள நம்பாம யார நம்புவன்?" என்று சொல்லியபடியே ஹரியை அணைத்துக்கொண்டாள் அந்தப்பேதை.
நான்கு நாட்களின் சரஸ்வதி இல்லத்தின் லாண்ட் லைனிற்கு அழைப்பெடுத்த ஹரி, பிரியாவை உடனடியாக சந்திக்க வேண்டுமெனக்கூறினான். அவனது குரலில் பதற்றத்தை உணர்ந்த பிரியாவும் அவசர அவசரமாக ஹரி கூறிய இடத்திற்கு விரைந்தாள். அங்கே ஹரி ஹாயாக பைக் மீது காத்திருப்பதைக்கண்டதும் நிம்மதியும் கோபமும் அடைந்த பிரியா நேரே ஹரியிடம் சென்று "விளையாடுறதுக்கு ஒரு அளவில்லையா? நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்." செல்லமாக முறைத்துக்கொண்டாள்.
"ம்.... நீங்க எதுக்குத்தான் பயப்பட மாட்டிங்க. பைக்ல ரௌண்ட்ஸ் போவம்னா யாரவது பார்த்தா பிழையா நினைப்பாங்கன்னுவீங்க. சினிமா போலாம்னா அவங்க பார்த்திடுவாங்கன்னுவீங்க பீச்சுக்கு போலாம்னா இவங்க பார்த்திடுவாங்கன்னுவீங்க..... ஷ்ஷப்பா ஏன்தான் இப்பிடி பயந்துகிட்டே இருக்கீங்களோ?"
"ஹரி எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்பிடி பேசுறது கஷ்டமா இருக்கு. எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன? உங்களோட பைக்ல சுத்தணும், சினிமா போகணும் பீச் போகணும்னு.... இப்ப நான் ஹோம்லதான் தங்கியிருக்கிறேன். ஹோம்க்கு கிடைக்கிற டொனேஷன்லதான் நான் போட்டிருக்கிற ட்ரெஸ் கூட வாங்கிக்குறன். நான் இப்ப உங்ககூட சுத்துனா ஊர்ல என்ன பேசுவாங்க?"
"உங்கள பற்றி தப்பா பேசுவாங்கங்கிறீங்களா? சொசைட்டில ஆயிரம் கதைப்பாங்க, அத யோசிச்சிட்டிருந்தம்னா நாம வாழ முடியாது"
"இல்ல ஹரி, நாம எல்லாரும் சேர்ந்ததுதான் சொசைட்டி. ஸோ சொசைட்டி பேசுறதையும் கொஞ்சம் திங்க் பண்ணத்தான் வேணும். அதோட இந்த சொசைட்டி என்ன பற்றி பேசுங்கிறத விட எங்க ஹோம் பற்றித்தான் பிழையா கதைக்கும். ஹோமோட பேர் கெட்டுபோய்ட்டா அவங்களுக்கு டொனேஷன் கிடைக்காது. என்னோட சின்ன சின்ன ஆசைகளுக்காக ஒண்ணும் தெரியாத பிஞ்சு குழந்தைகள பட்டினி போடணுமா? அது நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நடக்க விடமாட்டேன். அதனாலதான் நான் வெளில போய் சுயமா சம்பாதிச்சு என்னோட சொந்தக்கால்ல நின்னப்புறம்தான் என்னோட ஆசைகள நிறைவேத்துவன்"
"ஐ லவ் யூ பிரியா.... உங்ககிட்ட எனக்கு பிடிச்சதே இந்த மனசுதான்." என்று உருகினான் ஹரி. சட்டென ஏதோ ஞாபகம் வந்தவனாய் " பிரியா காதல் மயக்கத்துல சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டனே" என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ஹரி
"என்ன விஷயம் சார் அது?
"சார் எனக்கு ரேஷ்மா, திலக், யாழினி, பாலா இப்படி சந்தேகம் இருக்கு"
"அனுராதா, ராபர்ட், சஞ்சய், வினோத், ரிஷி, ஹுசைன், இஷா, லேகா இவங்கள்லாம் என்ன பாவம் பண்ணினாங்க. ஏன் இந்த பாராபட்சம் சத்யா?" என்று நகைத்தான் துகிரன்.
"சார் ஓட்டாதீங்க, என்னோட அறிவுக்கு எதுவும் விளங்குதில்ல"
"அப்பிடியில்ல சத்யா, இதுவரைக்கும் கிடைச்ச எவிடென்ஸ வச்சு நிச்சயமா எதுவும் சொல்ல முடியாதுதான். இப்பவரைக்கும் கிடைச்ச டீடெயில்ஸ வச்சு பார்க்கிறப்ப நீங்க சொன்ன ஆளுங்க மேலதான் கூட டவுட் வருது. பட் அதுக்காக அனுராதா,ராம்குமார்,ரிஷி இவங்களையும் குறைச்சு எடை போட கூடாது"
"அனுராதா சரி, ராம்குமார் அண்ட் ரிஷிய எப்பிடி சொல்றீங்க சார்?"
"ஒரு டவுட்தான், ரிஷிட அப்பா மகாலிங்கத்துக்கும் ராம்குமாருக்கும் உள்ள ப்ரெண்ட்ஷிப் பற்றி இன்போர்மேசன் கலெக்ட் பண்ணுங்க. அதோட ராம்குமார் டெல்லில இருந்ததுக்கான எவிடென்ட்ஸ் அண்ட் அவரோட செல்போன்ல இருந்து போன அவுட்கோயிங் அண்ட் இன்கமிங் கால் லிஸ்ட் எடுங்க. ஏதாவது லீட் கிடைக்கலாம்."
"ஓகே சார்"
"சத்யா உங்கள நீங்களே குறைச்சு மதிப்பிட வேணாம், ஒரு டென் அவர்ஸ் உங்க கூட இருந்திருக்கன். யூ ஹாவ் பொட்டென்ஷியல். ஸோ உங்களுக்கு யார்ல டவுட் இருக்கோ அவங்கள கிளோஸா வாட்ச் பண்ணி ரிப்போர்ட் பண்ணுங்க."
துகிரன் தன்னைப்பற்றி அவ்வாறு கூறியதும் சத்யாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. "ஓகே சார் டேபினெட்லி" என்று உற்சாக குரல் கொடுத்தான்.
சிறிது நேரத்தில் சத்யாவினை ஸ்டேஷனில் இறக்கிவிட்டு " சத்யா நான் சொன்ன டீடெயில்ஸ கலெக்ட் பண்ணுங்க, ரெஸ்டும் எடுத்துக்கோங்க. ஈவினிங் போஸ்ட்மோட்டம் ரிப்போர்ட் ரெடி ஆனதும் எனக்கு மெசேஜ் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் மாட்னி ஷோவிற்கு பறந்தான் துகிரன். ஆதியின் கொலைவழக்கில் கொலைகாரனை கண்டுபிடிக்கப்போய் புராதனியை கொலைகாரியாய் மாற்றிவிடக்கூடாதென முடிவெடுத்திருந்தான் துகிரன்.
மின்னலென விரைந்த துகிரன் அடுத்த பதினைந்து நிமிடங்களில் வீட்டினை வந்தடைந்தான். உள்ளே மெதுவாக சென்றவன் ஹாலினுள் ஸோபா மீது புராதனி படுத்திருந்ததைக்கண்டு “என்ன புராதனி இன்னும் ரெடி ஆகலையா? மூவி போறத மறந்தாச்சா? என்று புராதனி மீது பழியைப்போட முயன்றான்.
துகிரனின் குரலைக்கேட்டு மலர்ந்த அவள் முகத்தில் புன்னகை படர்ந்தது. "என்னம்மா இவ்வளவு நேரம்? ஏதாவது சாப்பிடீங்களா?" என்று கவலை நிறைந்த கொஞ்சல்களுடன் கேட்டாள்.
புராதனியின் இந்நிலைமாற்றம் துகிரன் அறிந்ததுதான். ஏனெனில் துகிரன் வேலை என்று சென்றால் அவ்வேலையை முடிக்குமட்டும் வேறெந்த விடயத்திலும் கவனம் செலுத்த மாட்டான் புராதனியை தவிர. ஆதலால் இவ்வளவு நேரமும் வெறுவயிற்றில் பசியுடனும் சோர்வுடனும் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் தான் கேட்ட ஒரே காரணுத்துக்காக எல்லாவற்றையும் மறைத்துவிட்டு படம் பார்க்க போக ரெடி ஆகலையா என்று கேட்கும் காதலனை யாருக்குத்தான் பிடிக்காது.
"ஓ நான் சாப்பிட்டேனே" என்று துகிரன் மழுப்ப "நீங்க ஒண்ணும் சொல்லதேவல, சாப்பாடு எடுத்து வைக்கிறன் குளிச்சிட்டு சாப்பிட வாங்க"என்று கூறிக்கொண்டே சமையலறையை நோக்கி சென்றாள்.
குளித்துவிட்டு வந்த துகிரனுக்கோ கொலைவழக்கை சுற்றியே மனசு அலைந்துகொண்டிருந்தது. புராதனி காதல் வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தாள் ஆனால் அவை எதுவும் அவன் மூளைக்கு ஏறவில்லை. மாட்னி ஷோ போக தேவையில்லை என்பது மாத்திரமே அவனுக்கு விளங்கியது. சாப்பிட்டுவிட்டு திரும்பவும் தான் தவறவிட்ட தடயங்களை மீட்டுப்பார்த்துக்கொண்டிருந்தவன் அப்படியே கண்ணயர்ந்து போனான்.
கைபேசியின் அலறல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவன் கைபேசியில் நேரம் ஆறு மணியாகியிருப்பதை பார்த்ததும் "ஐயோ என்ன வேலை பார்த்துட்டேன்" என்று நொந்துகொண்டே சத்யாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு காதில் கைபேசியை வைத்தான்.
"சார் போஸ்ட்மோட்டம் ரிப்போர்ட் சிக்ஸ் தேர்ட்டிக்கு தாறதா டாக்டர் சொல்லியிருக்கார். இப்ப கிளம்பினா சரியா இருக்கும்."
"குட், நீங்களே வந்து என்ன பிக் அப் பண்ணிக்கோங்க, நான் டென் மினிட்ஸ்ல ரெடி ஆகிடுறன்"
"ஓகே சார்"
அரக்க பறக்க உடை மாற்றி தயாரானான் துகிரன். புராதனி அவளது தங்கையுடன் ஷாப்பிங் போயிருக்கிறாள் என்பதை கைபேசிக்கு அவள் அனுப்பிய குறுஞ்செய்தி மூலம் அறிந்து கொண்டான்.
சரியாக பத்து நிமிடத்தில் போலீஸ் ஜீப் அவன் வீட்டிற்கு வர அதிலேறி இருவரும் ஹாஸ்பிட்டல் நோக்கி விரைந்தனர்.
"சார் ராம்குமாரோட டெல்லி ப்ரோக்ராம் பற்றி விசாரிச்சிட்டேன், அங்க அவர் அட்டெண்ட் பண்ணின மீட்டிங் எல்லாம் கன்போர்ம். கால் ஹிஸ்ட்ரிலயும் சந்தேகப்படுற மாதிரி எதுவுமில்ல. அண்ட் மகாலிங்கத்த பற்றி விசாரிச்சப்போ நெகட்டிவா எதுவும் கிடைக்கல. பட் ஆரம்பத்துல ராம்குமார்க்கிட்ட வேலை பார்த்தவர்தான் இந்த மகாலிங்கம். அப்புறமா சொந்தமா தொழில் செய்து முன்னேறியிருக்கார். அதில ராம்குமாருக்கு வயித்தெரிச்சல்னு அவங்களோட கிளோஸா இருக்கிறவங்க சொல்றாங்க."
"ஓ, அப்பிடி ஒரு கதை வேற இருக்கா?"
"ஆனா அப்பிடின்னாலும் மகாலிங்கம் ரொம்ப நல்ல மனுஷன்னுதான் எல்லாரும் சொல்றாங்க, அவர கூப்பிட்டு விசாரிப்பமா சார்?"
"இல்ல சத்யா இப்போதைக்கு அவசியமில்ல, பர்ஸ்ட் டாக்டர்கிட்ட பேசினா எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்னு தோணுது. அதுக்கப்புறமா மற்றத யோசிக்கலாம்"
"ஓகே சார்"
"யூ டிட் எ கிரேட் ஜாப் சத்யா" என சத்யாவை தட்டி கொடுத்தான் துகிரன்.
ஹாஸ்ப்பிட்டலை ஜீப் அடைய சரியாக ஆறு முப்பத்தைந்தாகியது. வேகவேகமாக சென்ற துகிரனின் பின்னால் ஒருவித ஆர்வத்துடன் சென்றான் சத்யா. நேராக டாக்டர் வேணு கோபாலின் அறைக்கு சென்றவர்களை எதிர்பார்த்து காத்திருந்தார் டாக்டர்.
"குட் ஈவினிங் டாக்டர்"
"குட் ஈவினிங் துகி, என்ன லேட் ஆகிட்டீங்க?"
"அசதில தூங்கிட்டன், புராதனியும் வீட்டில இல்ல, அதான் லேட்"
"இன்னைக்கு மழைதான், டிடெக்ட்டிவ் துகிரன் ரிப்போர்ட் எடுக்க வராம அஞ்சு நிமிஷம் தூங்கிட்டாரா? அன்பிலீவபில்"
"புராதனிகிட்ட இருந்து நீங்களும் பழகிட்டீங்களா? ஓட்டாதீங்க டாக்டர். பை தி வெ ஹீ இஸ் மிஸ்டர் சத்யா, இந்த கேஸ்ல என்கூட ஒர்க் பண்றார்" என்று சத்யாவை அறிமுகப்படுத்தும் சாக்கில் டாக்டரை கேஸிற்குள் கொண்டுவந்தான் துகிரன்.
"வெல்கம் சத்யா, பார்த்துப்பா இவன் சோறு தண்ணி இல்லாம வேலை செய்வான். நீ கவனமா இருந்துக்கோ."என்று கூறிய டாக்டர் வேணுகோபாலின் கீழ் தான் இரண்டு வருடங்கள் புராதனி டாக்டராக பணி புரிந்தாள். அங்கு கேஸ் விஷயமாக அடிக்கடி டாக்டர் வேணுகோபாலை சந்திக்க வந்த துகிரன் புராதனியிடம் காதலில் வீழ்ந்தது தனிக்கதை.
"சரி துகி, இதான் போஸ்டமோட்டம் ரிப்போர்ட், பார்த்திட்டு ஏதாவது டவுட்ன்னா கேளு" என்று ஒரு பைலை நீட்டினார்.
இப்படியான பல ரிப்போர்ட்களை பார்த்து பழகியவனான துகிரனுக்கு எங்கே தேவையான விடயங்கள் இருக்கும் என்பதும் தெரிந்திருந்தது.
"நான் சந்தேகப்பட்டது போல கொலைய ரெண்டு பேர்தான் செய்திருக்காங்க சத்யா" என துகிரன் சொல்ல,
"யெஸ், அதோட அதில ஒண்ணு பையன் மற்றது பொண்ணு." என்று விளக்கினார் டாக்டர்
"டாக்டர் ஆர் யு ஸுவர்?
"ஹண்ட்ரட் பெர்ஸன்ட். ஆதிய மாடில இருந்து தள்ளிவிடுறதுக்கு முன்னாடி ஒரு சின்ன கைகலப்பு நடந்திருக்கு. பட் ஆதிய அடிச்சவன் கைக்கு கிளவுஸ் மாட்டி இருந்திருக்கான். நோ பிங்கர் பிரின்ட். ஆதிட நெஞ்சுப்பகுதில கை முஷ்டியால குத்தியிருக்கான். அது நிச்சயமா ஒரு ஆணாலதான் அவ்வளவு போர்ஸா குத்தமுடியும். அண்ட் ஆதிட கன்னத்திலயும் யாரோ அறைஞ்சிருக்காங்க, வித் கிளவுஸ். அது ஒரு பொண்ணுதான். ஸோ ரெண்டு பேர் சம்பந்தப்பட்டிருக்காங்க"
"வெல் ப்லான்ட் மர்டர்" என்று சத்யா குறுக்கிட்டான்.
அதை ஆமோதிப்பது போல் டாக்டரும் தலையசைத்து "ஆமா கொலை பண்ணினவன் தெளிவா பிளான் பண்ணி பண்ணியிருக்கான்."
துகிரன் குறுக்கிட்டு "அப்போ அந்த பொண்ணு யாரு? கில்லர் ஏன் பொண்ண கூட்டிவர்றான். ஏன் அவ ஆதிய அறையணும்?" என்று தன்னை தானே மனசிற்குள் கேட்பதென நினைத்து சத்தமாக கேட்டான் துகிரன்.
"நோ ஐடியா, அத நீங்கதான் சொல்லணும்" என்று டாக்டர் கூற சுயநினைவுக்கு வந்த துகிரன் டாக்டருக்கு நன்றி சொல்லி விடைபெற்றான்.
ஹாஸ்பிட்டலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது வெகு நேரமாக அமைதியாயிருந்தான் துகிரன். அந்த அமைதி சத்யாவிற்கு மேலும் குழப்பங்களை உண்டாக்கியது. பொறுமை தாளாமல் அவனும் "எக்ஸ்கியூஸ்மி சார், டாக்டர்கிட்ட போனா ஒரு தெளிவு கிடைக்கும்னு சொன்னீங்க. இப்பிடி ஒண்ணுமே பேசாம வரீங்க....." என்று இழுத்தான் சத்யா.
"பார்ட்டில அஞ்சு பொண்ணுங்க இருந்திருக்காங்க. டாக்டர் சொல்றத வச்சு பார்க்கிறப்ப ரேஷ்மாக்கும் யாழினிக்கும் கூடுதலான சான்ஸஸ் இருக்கிற போல தெரியுது. பட் எதையோ நம்ம மிஸ் பண்றமாதிரி ஒரு பீலிங்"
"நம்ம கரெக்டான ரூட்லதானே போய்கிட்டிருக்கம் சார். எத மிஸ் பண்ணிருப்பம்னு சொல்றீங்க?"
"மோட்டிவ்" என்று வாயினுள் முணுமுணுத்தான் துகிரன்.
"பட் மோட்டிவ்தான் அவங்ககிட்ட இருக்கே" என்று சத்யா யோசித்துக்கொண்டிருக்கும் போதே துகிரனும் "சத்யா இமீடியட்டா ஆதிட பாஸ்ட் லைஃப் பற்றின டீடெயில்ஸ் கலக்ட் பண்ணுங்க. ஏதாவது போலீஸ் கேஸ் இருக்குதான்னு செக் பண்ணுங்க. அவங்க அப்பாட ஹிஸ்டரியையும் செக் பண்ணுங்க."
"ஏன் சார் திடீர்ன்னு பாஸ்ட் லைஃப் பற்றி கேட்குறீங்க?"
"இல்ல சத்யா, இது ஏதோ கோபத்திலயோ அவசரத்திலேயோ நடந்த கொலை இல்ல, அண்ட் நிறைய நாளா பிளான் பண்ணி இந்த கொலைய பண்ணியிருக்காங்க. அண்ட் வன் மோர் திங்.... என்னோட கெஸ்சிங் சரியாயிருக்கும்னா இவ்வளவு பிளான் பண்ணினவங்க நிச்சயமா ஒண்ணாத்தான் அந்த பார்ட்டிக்கு வந்திருப்பாங்கன்னு சொல்ல முடியாது." இறுதியில் ஒரு குண்டைத்தூக்கி போட்டான் துகிரன்.
"அப்பிடீன்னா என்ன சொல்ல வறீங்க சார்?"
"ஒருவேளை யாழினிதான் கொலைகாரின்னா அதுக்கு உடந்தையா இருந்தவன் பாலா இல்லன்னு சொல்றன். இது ஒரு உதாரணம் தான்"
அதிர்ச்சியில் வெலவெலத்துப்போயிருந்த சத்யா சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.
"சத்யா நான் ஏற்கனவே சொன்ன டீடெயில்ஸ் அண்ட் நம்ம பெருசா கான்சிடெர் பண்ணாம விட்ட இஷா, லேகா பற்றியும் டீடெயில்ஸ் கலக்ட் பண்ணி மோர்னிங் சப்மிட் பண்ணுங்க."
அதிர்ச்சியிலிருந்து மீண்ட சத்யா "ஓகே சார்." என்று கூறிக்கொண்டிருக்கும் போதே துகிரனின் வீட்டை வண்டி அடைந்திருந்தது.
அன்றிரவு தூக்கமும் இன்றி அன்றைய நாள் நடந்த சம்பவங்களைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தான் துகிரன். தனது கணவனைப்பற்றி நன்கு அறிந்திருந்த புராதனியும் அவனுக்கு தொல்லை கொடுக்காமல் உறங்கிவிட்டாள். இந்தகேஸ் முடியும் மட்டும் துகிரன் வேறெதனைப்பற்றியும் யோசிக்கமாட்டான் என்று அவளுக்கு தெரியாமலிருக்காதுதானே.
நடுச்சாமத்தில் திடுக்கிட்டு எழுந்தவள் தன்னவன் வேறு யாரோ பெண்களின் பெயரை முனகிக்கொண்டிருப்பதை கேட்டு வாய்விட்டு சிரித்தே விட்டாள். அரைத்தூக்கத்திலிருந்த துகிரனும் சிரிப்பு சத்தம் கேட்டு எழுந்து "என்ன நடந்திச்சு?" என்று திடுக்கிட்டான்.
"உங்களுக்கு ஒருநாள் இப்பிடி பைத்தியம் பிடிக்கும்னு தெரியும். ஆனா அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நினைக்கல. அத நினைச்சுதான் சிரிச்சேன்"
தான் அரை தூக்கத்தில் உளறியதை விளங்கிக்கொண்ட துகிரனும் "அது வந்து.... இன்னைக்கு கேஸ் ரொம்ப காம்ப்ளிகேட்டடா இருக்கு. அதனாலதான்....." என்று அலுத்துக்கொண்டான்.
"அப்பிடி என்ன கேஸ். நித்திரை வேற குழம்பிட்டு. உங்க கதையை சொல்லுங்க தூக்கம் வருதான்னு பார்க்கிறான்"
துகிரனும் மீண்டும் அன்றைய நிகழ்வை மீட்டி பார்க்கும் ஆர்வத்தில் சம்பவங்கள் அனைத்தையும் புராதனிக்கு சொன்னான். கதை சொல்வதிலும் துகிரன் கெட்டிக்காரன்தான். முழுவதையும் சொல்லி முடித்த துகிரனிடம் " இன்ட்ரஸ்டிங் துகி. உங்களுக்கு ஏன் ஒரு பொண்ணு மேல மாத்திரம் சாஃப்ட் கோனர்?"
"அப்பிடில்லாம் இல்லையே. யாரு சொன்னா?"
நீங்க தூக்கத்தில நாலு பொண்ணுங்களோட பேரத்தான் சொன்னீங்க. அதான் கேட்டன்."
"நாலு பேரா?"
"ஆமா, எனக்கு அப்பிடித்தான் விளங்கிச்சு. பட் பேரு என்னன்னு விளங்கல்ல. எனக்கு தூக்கம் வருது, நான் தூங்கப்போறன். குட் நைட்" புதிர் போட்டு விட்டு தூங்கிவிட்டாள் புராதனி.
புராதனி இவ்வாறு துகிரனை கேலி செய்வதும் விளையாடுவதும் வாடிக்கைதான், துகிரனும் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டான்.
"துகி துகி எழுந்திரிங்க, ஏழு மணியாச்சு. என்ன ஹாஸ்பிட்டல்ல டிராப் பண்ணிட்டு நீங்க வண்டியெடுத்திட்டு போங்க. இப்பவே லேட் ஆயிட்டுது." புராதனி தோளைப்பிடித்து உலுப்பியபோதுதான் சயனநிலை கலைந்தான் துகிரன்.
"ச்சா லேட் ஆகிட்டுதே..... நைட் சும்மா என்னோட தூக்கத்த குழப்பினதாலதான் எல்லாமே" என்று புராதனி மீது சிரித்துக்கொண்டே பழியைப்போட்டான்.
"ஓ..... நீங்க நைட்ல கண்ட கண்ட பொண்ணுங்க பேர சொல்லுவீங்க, நான் அத கேட்டுட்டு சும்மா இருக்கணுமா?" செல்ல சண்டையை ஆரம்பித்தாள் புராதனி.
"ஹேய் அது உன்னோட பேராத்தான் இருக்கும், உனக்கு சரியா விளங்கியிருக்காது"
"நிச்சயமா அது என் பேரு இல்ல. ஏதோ நாலு பொண்ணுங்க பேரு சொன்னீங்க, என்னைக்கு நான் உங்க கனவுல வந்திருக்கன்?"என்றாள் கொஞ்சம் எரிச்சலாகவே.
"புராதனி நிஜமாத்தான் சொல்றியா? நான் நீ எதோ விளையாட்டுக்கு சொல்றான்னு நினைச்சன்."
"உங்க கூட விளையாடிட்டாலும்..... பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல, சீக்கிரம் ரெடி ஆகுங்க" என்றபடி நகர்ந்தாள் புராதனி.
சில வினாடிகள் அந்த ஐந்து பெண்களைப்பற்றியும் யோசித்தவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. "ஐயோ இத மறந்துட்டமே" என்று மனதிற்குள் கூறிக்கொண்டு சத்யாவின் கைபேசி இலக்கத்தை அங்கிருந்த லாண்ட் போனில் தட்டினான்.
"ஹலோ, சப் இன்ஸ்பெக்டர் சத்யா ஸ்பீக்கிங், ஹூ ஐஸ் திஸ்?"
"சத்யா நான் துகிரன் பேசுறேன். நான் சொன்ன டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிடீங்களா?"
"பண்ணிக்கிட்டிருக்கேன் சார், சீக்கிரம் ரெடி ஆயிடும்"
"தட்ஸ் பைன், அதுகூட முக்கியமா அனுராதா பற்றியும் கலெக்ட் பண்ணுங்க. வெரி இம்போர்ட்டன்ட்."
"ஓகே சார். என்ன திடீர்னு?"
"ஜோடியா வந்த நாலு பொண்ணுங்க மேலயும்தான் சந்தேகபட்டிட்டிருக்கம். அதேபோல ஒன்னுக்கொன்னு தெரியாதவங்க போல வந்தவங்களுக்கும் கொலை செய்ய சான்ஸ் இருக்குனு முடிவெடுத்ததுக்கப்புறம் கூட இஷா அண்ட் லேகால தான் டவுட் வந்திச்சு. மே பி அனுராதாட கண்ணீர்ல மிஸ் பண்ணிருக்கலாம்."
"ம்.... இருக்கலாம் சார், நான் கலெக்ட் பண்ணிடுறன்"