Meerashalini
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரை சேர்ந்த விண்மீன்..8
வினா அது நான்
விடை அது நீயோ
இருந்தும் இன்னுமே
வினாவும் ஏனோ
விடையின்றி இங்கு
வெறும் வரிகளாய்..
சனா அறையிலிருந்து வந்து வாசல்வரை நடக்க முன்னால் நேராக நடந்து வந்துகொண்டிருந்த பாட்டி வள்ளி கண்ணாடியை சரி செய்து கொண்டே இவளிருந்த பக்கம் குறு குறு என பார்க்க அய்யோ என்றிருந்தது அவளிற்கு.
வந்த வழியே திரும்பி ஓடிச்சென்று அவனறைக்குள் புகுந்து கொண்டாள். அங்கு கதவிடுக்கில் கொஞ்சமாய் இடைவெளியில் அவள் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்க பின்னால் யாரோ தொண்டையை செறுமும் சத்தம் கேட்டது.
திருபிப்பார்க்க அங்கு நின்றிருந்தான் ஆதிஷ். முகத்தை மீண்டும் உர்ரென வைத்துக்கொண்ட சனா..கூந்தலை சிலுப்பி விட்டு திரும்ப மௌனமாய் சிரித்துக்கொண்டு "பாட்டி.." என அழைத்தான் ஆதிஷ்.
பதறித்திரும்பிய சனா.."உஷ் உஷ்.." என அவனிடம் சைகை காட்ட இப்போதோ முன்னிலும் சத்தமாய் அழைத்தான் அவன்.
அதே நேரம் "என்னப்பா.." என அறைக்கதவு திறக்க அவனை இழுத்து தன் முன்னால் நிறுத்தி அவன் முதுகில் ஒட்டிக்கொண்டாள் சனா.
இதை சற்றும் எதிர்பார்க்காத அவன் வார்த்தையின்றி தடுமாற..பின்னிருந்து சிரித்துக்கொண்டிருந்தாள் அவள்.
இரண்டு மூன்று முறை அழைத்துக்களைத்துப்போன வள்ளி தலையிலடித்துக்கொண்டு திரும்பி நடக்க சனா விலகினாள். அவள் விலகவுமே மூச்சை இழுத்து விட்டவன் திரும்பி அவளை முறைக்க இவள் என்ன என்றாள் ஒன்றும் நடக்காதது போல்.
இவனும் என்ன என்று யோசித்து விட்டு ஒன்றுமில்லை என தலையாட்டிவிட்டு நகரப்போக புயல் போல்.."ஆஷி டேடி..." என்ற கூவலோடு உள்ளே ஓடிவந்து அவன் மேல் பாய்ந்து ஏறிக்கொண்டாள் அனு.
இவனும் அவளை தூக்கிக்கொள்ள.."டேடி டேடி நீ என்கு ஆன்தி கொன்னு வாதயாமே..ஏன் என்கு சொல்லலலலல?" என அவன் முகத்தை எல்லா பக்கமும் திருப்பி திருப்பி கேட்க அதை பார்த்து அடக்க முடியாமல் சத்தமாய் சிரித்தாள் சனா.
இப்போது அனுவின் பார்வை சனா பக்கம் திரும்பியது.."நீ இன்னும் போவத????" கண்களை சுருக்கி மூச்சை இழுத்து விட்டு கோபமாய் கேட்க அதை பார்த்த சனா அவளை இன்னும் சீண்டிப்பார்க்க ஆதிஷின் வலது புறம் வந்து தோள் மேல் கையை வைத்து சாய்ந்து நின்று.."ஏன் உனக்கு பார்த்தா தெரில நான் இங்க தான இருக்கேன்.." என்றாள்.
"நீ ரொம்ப பேசுத.." ஒரு விரல் நீட்டி அனு கூற..
"ஆமா உனக்கு தான் முடிலயே.." என்றாள் சனா.
"ஹேய் ஹேய் ஸ்டாப் ஸ்டாப்.." ஆதிஷ் அனுவை கட்டிலில் நிறுத்தி அவளை நேராய் தன்புறம் திருப்பினான்.
அவள் உர்ரென்று பார்க்க.."அனு குட்டி இப்படி பேசலாமா.." எனக்கேட்க அவளோ பட்டென முகத்தை திருப்பி விட்டு சனாவை பார்த்தாள்..
"அபோ அது மத்தும் பேசுது.." என்றாள் கையை சனா பக்கம நீட்டி. எது என அவள் கை நீட்டிய பக்கம் அவன் பார்க்க அங்கு சனா தீவிரமாய் அங்கிருந்தவற்றை ஆராய்ந்து ஒரு சாக்லெட்டை கண்டெடுக்க அதை பார்த்த அனு குதித்திறங்கி ஓடிச்சென்று அதை அவளிடம் இருந்து பிடுங்கினாள்.
"ஏய் அதை கொடு.."
"முதியாது அது ஏன்ட.." கைகளுக்குள் மூடிக்கொண்டு தனக்கு பின்னால் ஒழித்துக்கொண்டாள் அனு.
அதனை பறிக்க சனா அவளை பிடிக்க முயல ஆரம்பிச்சிட்டாங்க என செல்லமாய் அழுத்துக்கொண்டு அனுவை கையில் தூக்கிக்கொண்டான் ஆதிஷ்.
ஆதிஷ் கையிலிருந்து கொண்டு சனாவிற்கு அனு வாயை இழுத்துக்காட்ட சனா முகத்தை சுருக்கிக்கொண்டாள்.
ஆதிஷ்க்கு சனாவையும் பார்க்க இன்னொரு குழந்தையாய் தோன்ற அனுவை தன்பக்கம் திருப்பி.."அனு குட்டி நமக்கு பிடிச்ச சாக்லட்னாலும் நாம அடுத்தவங்களோட ஷெயார் பன்னிக்கனும்டா..எப்பவும் எங்களுக்கு பிடிச்சதை தான் அடுத்தவங்களுக்கும் கொடுக்கனும்.." ஆதிஷ் கூறவும் யோசித்து விட்டு ஒரு முறை கையில் இருந்த சாக்லட்டை பார்த்து விட்டு சரி என கடினப்பட்டு தலையை ஆட்டி வைத்தாள்.
ஆதிஷ் சிரித்துக்கொண்டே கன்னத்தில் தட்டி விட்டு அதனை இரண்டாக பிரித்து அவளுக்கு ஒன்றும் சனாக்கு ஒன்றும் கொடுத்து விட்டு.."அப்புறம் அனு மா அவங்கள ஆன்டி சொல்லனும் நீ.." இவன் கூறி முடிக்க முன்னமே.."முதியாது சனா தான் சொல்வேன்.." என்றாள் அனு.
இந்த அளவு சாக்லெட் விடயத்தில் இறங்கி வந்ததே பெரிய விடயம் என்பதால் இதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டான் ஆதிஷ்.
அப்போதுதான் சனாவிற்கு நினைவில் வந்தது.."நம்ம கூட ஒரு கூட்டம் வந்ததே..சரி அது இருக்கட்டும் போகும் போது பார்த்துக்கலாம்..ரொம்ப பசிக்குதே.." எண்ணிக்கொண்டு ஆதிஷ் பக்கம் திரும்பினாள் சனா.
"ஆ..ஹ்ம்..உங்களை எப்படி கூப்பிடுறது நான் ?"
"பெயர் சொல்லி கூப்பிடவா..?"
என அவளும்
"பெயர் மட்டும் சொல்லி கூப்பிடாதே" என அவனும் இருவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கூற..கண்கள் மின்ன.."அப்போ பெயர் தான் சொல்லி கூப்பிடனும்.." அவள் கூற இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் என நினைத்துக்கொண்டான் ஆதிஷ். ஆதிஷிற்கு பொதுவாக யாரும் பெயர் சொல்லி கூப்பிடுவது பிடிப்பதில்லை இவளிடம் மறுத்து வாதம் செய்ய முடியாமல் விட்டு விட்டான்.
"ஓகே ஆதிஷ் ஒரு காபி இல்லையா.." சனா கேட்க "ஏய் எங்க டேடி பேத் பேசாத.." காபி வந்ததோ இல்லையோ அனு சனா முன்னாடி வந்து மூச்சிறைக்க நின்று கொண்டாள்.
"ஏனாம் பெரிய பேத் பேத்து..அப்பிதான் கூப்பிதுவேன்..பாரு பாரு..ஆதிஷ் ஆதிஷ் ஆதிஷ்.." சனா வம்பிலுக்க ஆதிஷ், குட்டி சிறுத்தையாய் சீறிக்கொண்டிருந்தவளை தூக்கிக்கொண்டு சென்று எங்கேயோ விட்டு விட்டு வந்தான்.
"வா.." என அவளை அழைத்துக்கொண்டு அவன் செல்ல..வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டே வந்தாள் சனா.
"ஆமா ஏன் அனு கூட சண்ட போட்டுகிட்டே இருக்க.." ஆதிஷ் கேட்க..
"ஆதிஷ் நானா சண்ட போடுறேன்..நல்லா பாருங்க என்னை பார்த்தா சண்டை போடுற போலவா இருக்கு.." முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு அவள் கேட்க.."ஆமா ஆமா.." என கூறிக்கொண்டான் ஆதிஷ்.
இருவரும் படிக்கட்டுகளில் கீழிறங்கிச்செல்லவும் படிக்கட்டுகளின் அடியில் சில நடமாட்டம் தெரிந்தது. யார் என ஊகித்துக்கொண்ட சனா படிகளில் இருந்து தலையை கீழே தொங்க விட்டு எட்டிப்பார்த்து.."bowwwwww".... என கூறி சத்தமிட "இந்து மஹதி இதை.." என ஏதோ சொல்லிக்கொண்டிருந்த சுதன் அங்கு திடீரென முளைத்த தலையையும் சத்தத்தையும் கண்டு பேய் பேய் என அலறினான்.
அவனது சத்தத்தில் ஆதிஷ் அங்கு ஓடி வர அங்கிருந்த வாண்டுகளை கண்ட அவன்.."அதானே பாத்தேன் வால் இல்லாம தலை மட்டும் வருமான்னு"..என ஒரு பார்வை பார்த்தான்.
அனைவருக்கும் டீ பிஸ்கட் என வைத்து ஆதிஷ் உபசரிக்க அமைதியே நிலவியது உபசரிப்புக்கள் முடியும் வரை. அங்கிருந்த வாண்டுகள் அனைத்தும் சனாவை முறைத்துக்கொண்டே இருக்க அவளோ அந்த டீயும் பிஸ்கட்டும் தவிர வேறு எதுவும் அங்கு இல்லை என்பது போல் ஒவ்வொரு பிஸ்கட்டும் கதறக் கதற அவற்றை டீயில் மூழ்கடித்து வாயில் அடைத்துக் கொண்டிருந்தாள்.
ஆதிஷை பார்த்து முதலில் பேசினான் சுதன்.
"மாமா அந்த விக்கி கொடுத்த பெட்ட எங்ககிட்ட கொடுத்தீங்கன்னா நாங்க போய்டுவோம்..இல்ல மஹதி.." பல்லைக்காட்டிக்கொண்டே அவன் கேட்க.."இவ்வளவு தானா..இதுக்கு எதுக்கு இவ்வளோ ரிஸ்க்..என்கிட்டே கேட்டிருக்கலாமே..ஆமா அந்த பெட் உங்களுக்கு எதுக்கு.." கேட்டான் ஆதிஷ்.
சுதன் பெட் வரலாற்றை சில பல மூக்கு உறிஞ்சலுடனும் வராத கண்ணீருக்குப் பதில் வாடகைக்கு குமாரின் கண்ணீரையும் எடுத்து முழுவதுமாய் கூறி பெட்டை வாங்கிக்கொண்டு சனாவிடம் கூறாமலே சென்று விட அனைத்து பிஸ்கட்டையும் காலி செய்த பின் அவள் நிமிர அங்கு ஆதிஷையும் இவளையும் தவிர யாருமில்லை...
திரு திரு என விழித்துக்கொண்டிருந்தவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதிஷ்.
அந்த அழகிய தருணம்.."ஆதிஷ் என் பொண்ணு எங்க.." என்று அதிகாரமாய் ஒலித்த பெண் குரலில் கலைந்திட அது யார் என குரலிலே அறிந்து கொண்ட ஆதிஷ் கோபத்தில் கையில் இருந்த கப்பை இறுக்க பிடிக்க சனா குழம்பியவண்ணம் குரல் வந்த திசைக்கு தன் பார்வையை திருப்பினாள்.
கருத்துக்களை பகிர
வினா அது நான்
விடை அது நீயோ
இருந்தும் இன்னுமே
வினாவும் ஏனோ
விடையின்றி இங்கு
வெறும் வரிகளாய்..
சனா அறையிலிருந்து வந்து வாசல்வரை நடக்க முன்னால் நேராக நடந்து வந்துகொண்டிருந்த பாட்டி வள்ளி கண்ணாடியை சரி செய்து கொண்டே இவளிருந்த பக்கம் குறு குறு என பார்க்க அய்யோ என்றிருந்தது அவளிற்கு.
வந்த வழியே திரும்பி ஓடிச்சென்று அவனறைக்குள் புகுந்து கொண்டாள். அங்கு கதவிடுக்கில் கொஞ்சமாய் இடைவெளியில் அவள் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்க பின்னால் யாரோ தொண்டையை செறுமும் சத்தம் கேட்டது.
திருபிப்பார்க்க அங்கு நின்றிருந்தான் ஆதிஷ். முகத்தை மீண்டும் உர்ரென வைத்துக்கொண்ட சனா..கூந்தலை சிலுப்பி விட்டு திரும்ப மௌனமாய் சிரித்துக்கொண்டு "பாட்டி.." என அழைத்தான் ஆதிஷ்.
பதறித்திரும்பிய சனா.."உஷ் உஷ்.." என அவனிடம் சைகை காட்ட இப்போதோ முன்னிலும் சத்தமாய் அழைத்தான் அவன்.
அதே நேரம் "என்னப்பா.." என அறைக்கதவு திறக்க அவனை இழுத்து தன் முன்னால் நிறுத்தி அவன் முதுகில் ஒட்டிக்கொண்டாள் சனா.
இதை சற்றும் எதிர்பார்க்காத அவன் வார்த்தையின்றி தடுமாற..பின்னிருந்து சிரித்துக்கொண்டிருந்தாள் அவள்.
இரண்டு மூன்று முறை அழைத்துக்களைத்துப்போன வள்ளி தலையிலடித்துக்கொண்டு திரும்பி நடக்க சனா விலகினாள். அவள் விலகவுமே மூச்சை இழுத்து விட்டவன் திரும்பி அவளை முறைக்க இவள் என்ன என்றாள் ஒன்றும் நடக்காதது போல்.
இவனும் என்ன என்று யோசித்து விட்டு ஒன்றுமில்லை என தலையாட்டிவிட்டு நகரப்போக புயல் போல்.."ஆஷி டேடி..." என்ற கூவலோடு உள்ளே ஓடிவந்து அவன் மேல் பாய்ந்து ஏறிக்கொண்டாள் அனு.
இவனும் அவளை தூக்கிக்கொள்ள.."டேடி டேடி நீ என்கு ஆன்தி கொன்னு வாதயாமே..ஏன் என்கு சொல்லலலலல?" என அவன் முகத்தை எல்லா பக்கமும் திருப்பி திருப்பி கேட்க அதை பார்த்து அடக்க முடியாமல் சத்தமாய் சிரித்தாள் சனா.
இப்போது அனுவின் பார்வை சனா பக்கம் திரும்பியது.."நீ இன்னும் போவத????" கண்களை சுருக்கி மூச்சை இழுத்து விட்டு கோபமாய் கேட்க அதை பார்த்த சனா அவளை இன்னும் சீண்டிப்பார்க்க ஆதிஷின் வலது புறம் வந்து தோள் மேல் கையை வைத்து சாய்ந்து நின்று.."ஏன் உனக்கு பார்த்தா தெரில நான் இங்க தான இருக்கேன்.." என்றாள்.
"நீ ரொம்ப பேசுத.." ஒரு விரல் நீட்டி அனு கூற..
"ஆமா உனக்கு தான் முடிலயே.." என்றாள் சனா.
"ஹேய் ஹேய் ஸ்டாப் ஸ்டாப்.." ஆதிஷ் அனுவை கட்டிலில் நிறுத்தி அவளை நேராய் தன்புறம் திருப்பினான்.
அவள் உர்ரென்று பார்க்க.."அனு குட்டி இப்படி பேசலாமா.." எனக்கேட்க அவளோ பட்டென முகத்தை திருப்பி விட்டு சனாவை பார்த்தாள்..
"அபோ அது மத்தும் பேசுது.." என்றாள் கையை சனா பக்கம நீட்டி. எது என அவள் கை நீட்டிய பக்கம் அவன் பார்க்க அங்கு சனா தீவிரமாய் அங்கிருந்தவற்றை ஆராய்ந்து ஒரு சாக்லெட்டை கண்டெடுக்க அதை பார்த்த அனு குதித்திறங்கி ஓடிச்சென்று அதை அவளிடம் இருந்து பிடுங்கினாள்.
"ஏய் அதை கொடு.."
"முதியாது அது ஏன்ட.." கைகளுக்குள் மூடிக்கொண்டு தனக்கு பின்னால் ஒழித்துக்கொண்டாள் அனு.
அதனை பறிக்க சனா அவளை பிடிக்க முயல ஆரம்பிச்சிட்டாங்க என செல்லமாய் அழுத்துக்கொண்டு அனுவை கையில் தூக்கிக்கொண்டான் ஆதிஷ்.
ஆதிஷ் கையிலிருந்து கொண்டு சனாவிற்கு அனு வாயை இழுத்துக்காட்ட சனா முகத்தை சுருக்கிக்கொண்டாள்.
ஆதிஷ்க்கு சனாவையும் பார்க்க இன்னொரு குழந்தையாய் தோன்ற அனுவை தன்பக்கம் திருப்பி.."அனு குட்டி நமக்கு பிடிச்ச சாக்லட்னாலும் நாம அடுத்தவங்களோட ஷெயார் பன்னிக்கனும்டா..எப்பவும் எங்களுக்கு பிடிச்சதை தான் அடுத்தவங்களுக்கும் கொடுக்கனும்.." ஆதிஷ் கூறவும் யோசித்து விட்டு ஒரு முறை கையில் இருந்த சாக்லட்டை பார்த்து விட்டு சரி என கடினப்பட்டு தலையை ஆட்டி வைத்தாள்.
ஆதிஷ் சிரித்துக்கொண்டே கன்னத்தில் தட்டி விட்டு அதனை இரண்டாக பிரித்து அவளுக்கு ஒன்றும் சனாக்கு ஒன்றும் கொடுத்து விட்டு.."அப்புறம் அனு மா அவங்கள ஆன்டி சொல்லனும் நீ.." இவன் கூறி முடிக்க முன்னமே.."முதியாது சனா தான் சொல்வேன்.." என்றாள் அனு.
இந்த அளவு சாக்லெட் விடயத்தில் இறங்கி வந்ததே பெரிய விடயம் என்பதால் இதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டான் ஆதிஷ்.
அப்போதுதான் சனாவிற்கு நினைவில் வந்தது.."நம்ம கூட ஒரு கூட்டம் வந்ததே..சரி அது இருக்கட்டும் போகும் போது பார்த்துக்கலாம்..ரொம்ப பசிக்குதே.." எண்ணிக்கொண்டு ஆதிஷ் பக்கம் திரும்பினாள் சனா.
"ஆ..ஹ்ம்..உங்களை எப்படி கூப்பிடுறது நான் ?"
"பெயர் சொல்லி கூப்பிடவா..?"
என அவளும்
"பெயர் மட்டும் சொல்லி கூப்பிடாதே" என அவனும் இருவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கூற..கண்கள் மின்ன.."அப்போ பெயர் தான் சொல்லி கூப்பிடனும்.." அவள் கூற இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் என நினைத்துக்கொண்டான் ஆதிஷ். ஆதிஷிற்கு பொதுவாக யாரும் பெயர் சொல்லி கூப்பிடுவது பிடிப்பதில்லை இவளிடம் மறுத்து வாதம் செய்ய முடியாமல் விட்டு விட்டான்.
"ஓகே ஆதிஷ் ஒரு காபி இல்லையா.." சனா கேட்க "ஏய் எங்க டேடி பேத் பேசாத.." காபி வந்ததோ இல்லையோ அனு சனா முன்னாடி வந்து மூச்சிறைக்க நின்று கொண்டாள்.
"ஏனாம் பெரிய பேத் பேத்து..அப்பிதான் கூப்பிதுவேன்..பாரு பாரு..ஆதிஷ் ஆதிஷ் ஆதிஷ்.." சனா வம்பிலுக்க ஆதிஷ், குட்டி சிறுத்தையாய் சீறிக்கொண்டிருந்தவளை தூக்கிக்கொண்டு சென்று எங்கேயோ விட்டு விட்டு வந்தான்.
"வா.." என அவளை அழைத்துக்கொண்டு அவன் செல்ல..வீட்டை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டே வந்தாள் சனா.
"ஆமா ஏன் அனு கூட சண்ட போட்டுகிட்டே இருக்க.." ஆதிஷ் கேட்க..
"ஆதிஷ் நானா சண்ட போடுறேன்..நல்லா பாருங்க என்னை பார்த்தா சண்டை போடுற போலவா இருக்கு.." முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு அவள் கேட்க.."ஆமா ஆமா.." என கூறிக்கொண்டான் ஆதிஷ்.
இருவரும் படிக்கட்டுகளில் கீழிறங்கிச்செல்லவும் படிக்கட்டுகளின் அடியில் சில நடமாட்டம் தெரிந்தது. யார் என ஊகித்துக்கொண்ட சனா படிகளில் இருந்து தலையை கீழே தொங்க விட்டு எட்டிப்பார்த்து.."bowwwwww".... என கூறி சத்தமிட "இந்து மஹதி இதை.." என ஏதோ சொல்லிக்கொண்டிருந்த சுதன் அங்கு திடீரென முளைத்த தலையையும் சத்தத்தையும் கண்டு பேய் பேய் என அலறினான்.
அவனது சத்தத்தில் ஆதிஷ் அங்கு ஓடி வர அங்கிருந்த வாண்டுகளை கண்ட அவன்.."அதானே பாத்தேன் வால் இல்லாம தலை மட்டும் வருமான்னு"..என ஒரு பார்வை பார்த்தான்.
அனைவருக்கும் டீ பிஸ்கட் என வைத்து ஆதிஷ் உபசரிக்க அமைதியே நிலவியது உபசரிப்புக்கள் முடியும் வரை. அங்கிருந்த வாண்டுகள் அனைத்தும் சனாவை முறைத்துக்கொண்டே இருக்க அவளோ அந்த டீயும் பிஸ்கட்டும் தவிர வேறு எதுவும் அங்கு இல்லை என்பது போல் ஒவ்வொரு பிஸ்கட்டும் கதறக் கதற அவற்றை டீயில் மூழ்கடித்து வாயில் அடைத்துக் கொண்டிருந்தாள்.
ஆதிஷை பார்த்து முதலில் பேசினான் சுதன்.
"மாமா அந்த விக்கி கொடுத்த பெட்ட எங்ககிட்ட கொடுத்தீங்கன்னா நாங்க போய்டுவோம்..இல்ல மஹதி.." பல்லைக்காட்டிக்கொண்டே அவன் கேட்க.."இவ்வளவு தானா..இதுக்கு எதுக்கு இவ்வளோ ரிஸ்க்..என்கிட்டே கேட்டிருக்கலாமே..ஆமா அந்த பெட் உங்களுக்கு எதுக்கு.." கேட்டான் ஆதிஷ்.
சுதன் பெட் வரலாற்றை சில பல மூக்கு உறிஞ்சலுடனும் வராத கண்ணீருக்குப் பதில் வாடகைக்கு குமாரின் கண்ணீரையும் எடுத்து முழுவதுமாய் கூறி பெட்டை வாங்கிக்கொண்டு சனாவிடம் கூறாமலே சென்று விட அனைத்து பிஸ்கட்டையும் காலி செய்த பின் அவள் நிமிர அங்கு ஆதிஷையும் இவளையும் தவிர யாருமில்லை...
திரு திரு என விழித்துக்கொண்டிருந்தவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதிஷ்.
அந்த அழகிய தருணம்.."ஆதிஷ் என் பொண்ணு எங்க.." என்று அதிகாரமாய் ஒலித்த பெண் குரலில் கலைந்திட அது யார் என குரலிலே அறிந்து கொண்ட ஆதிஷ் கோபத்தில் கையில் இருந்த கப்பை இறுக்க பிடிக்க சனா குழம்பியவண்ணம் குரல் வந்த திசைக்கு தன் பார்வையை திருப்பினாள்.
கருத்துக்களை பகிர