அத்தியாயம் 5 - கொலை நான்கு பிணம் மூன்று
தன் வேகத்தை குறைத்து பூனை போல பதுங்கி சென்று உள்ளே ஜன்னலிடுக்கினூடாக பார்த்த விக்ரம், ராகுலின் பிணம் ரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சி கண்டு நடுநடுங்கிப்போனான். பின்னால் நின்றுகொண்டிருந்த ராதிகா விக்ரமின் நிலையைக்கண்டு இனி தன்னுயிரை காப்பாற்ற விக்ரமை நம்பி பிரயோஜனமில்லை என்பதை விளங்கிக்கொண்டாள்.
அந்த நேரத்தில் மழைத்தூறல் சத்தத்தையும் கிழித்துக்கொண்டு கேட்டது மனீஷாவின் கூக்குரல். விக்ரமும் ராதிகாவும் கெஸ்ட் ஹவுசில் தங்களது அறை ஜன்னலையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தனர். சில நொடிகளில் ஜன்னலை உடைத்துக்கொண்டு கீழே வந்து விழுந்தாள் மனீஷா. விழுந்ததில் நிச்சயம் உயிர் பிரிந்திருக்கும். இதைப்பார்த்துக்கொண்டிருந்த விக்ரமிற்கும் ராதிகாவிற்கும் கூட தமது உயிரும் இன்னும் சில நிமிடங்களில் பிரிந்துவிடும் என்றே எண்ணத்தோன்றியது. விக்ரமின் கையிலிருந்த துப்பாக்கி கையிலிருந்து விலகி கீழே விழுந்து விட்டது.
அதோ மேலே இன்னொரு உருவம்....... யாருமில்லை விஷாலிதான்...... எல்லா குழப்பமும் தீர்ந்துவிட்டது. சட்டென சுய நிலையுணர்ந்த விக்ரம் கீழே விழுந்து கிடந்த கைத்துப்பாக்கியை எடுத்து மேலே குறி வைக்கிறான். மழை தூறவில்லை, கொட்டுகிறது. அந்தக்கொட்டும் மழையில் அவ்வளவு தூரத்திற்கு குறி பார்த்து சுடுவது என்பது இயலாத காரியம், வெடிச்சத்தம் கேட்டு விஷாலி உஷாராகினால் தமக்குத்தான் ஆபத்து. ஆனால் அங்கே விஷாலின் பின் இன்னொரு உருவம். சட்டென மறைந்தும் விட்டது. அதே சமயம் விக்ரமும் ராதிகாவும் ஸ்விம்மிங் பூல் அருகே ஒளிந்து கொண்டு மேலே நோட்டம் விட்டதை மேலிருந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ராதிகாவை அழைத்துக்கொண்டு ராகுல் இருந்த அறைக்கு பின்னால் சென்ற விக்ரம் "ராதிகா நிலமை கைய மீறி போய்ட்டு, நீ சீக்கிரமா ஆத்தங்கரைக்கு போ, அங்கதான் சிக்னல் கிடைக்கும். போலீசுக்கு கால் பண்ணு. நடந்த விசயத்த சொல்லு. சீக்கிரம்!.... நான் இங்க ஒளிஞ்சிருந்து அது யாருன்னு பார்க்கிறான். சான்ஸ் கிடைச்சா ரெண்டு பேரையும் போட்ருவன்."
"போலீசுக்கு சொல்லவா? அதனால வேற ப்ரோப்ளம் வராதா விக்கி?"
"என்ன வந்தாலும் சமாளிச்சுக்கலாம், எல்லாத்துக்கும் நம்ம உயிரோட இருக்கணும். சீக்கிரம் போ....." என்று கூறிவிட்டு விக்ரமும் கெஸ்ட் ஹவுஸை நோக்கி நகர்ந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் மின்னல் வேகத்தில் ஆற்றங்கரையை அண்மித்த ராதிகா தாம் வந்திருந்த படகில் பதுங்கியிருந்தபடி போலீசுக்கு அழைப்பை மேற்கொள்ள கைபேசியை எடுக்கும் போது ஒரு துப்பாக்கி வெடிச்சத்தமும் அதைத்தொடர்ந்து சில வினாடிகள் கழித்து அலறல் சத்தமும் கேட்டது. அது நிச்சயமாக உயிர் பிரியும் வலியில் ஏற்பட்ட அலறல்தான் என்பது ராதிகாவுக்கு விளங்கிற்று. அங்கு துப்பாக்கி வைத்திருந்தது விக்ரம் மட்டும் தான். அதனால் விக்ரம்தான் சுட்டிருப்பான். விக்ரம் யாரை சுட்டானோ அந்த நபர் இறந்திருந்தால் வெடிச்சத்தத்துடன் அலறல் சத்தமும் கேட்டிருக்கும். ஆனால் வெடிச்சத்தம் கேட்டு சில வினாடிகள் கழித்து அலறல் சத்தம் கேட்ட படியால் விக்ரமின் குறி தப்பிவிட்டது. ஆகவே விக்ரமின் அலறல் சத்தம் தான் அது என முடிவெடுத்தபடி கைபேசியில் நூறை டயல் செய்தாள் ராதிகா.
“சார்! சார்!............ ஹெல்ப் பண்ணுங்க!....................என்ன யாரோ கொலை பண்ண துரத்துறாங்க. ப்ளீஸ் காப்பாத்துங்க சார்!"
ஹாஸ்ப்பிட்டலில் கட்டிலுடன் விலங்கிடப்பட்ட ராதிகா சோலையாற்றில் நடந்தவற்றை இன்ஸ்பெக்டர் கார்த்திக்கிடம் ஒப்புவித்த போது மீண்டும் சோலையாற்று கெஸ்ட் ஹவுசில் மாட்டிக்கொண்டதைப்போல உணர்ந்து பிரம்மை பிடித்தவள் போலாகி மீண்டும் “சார்! சார்!............ ஹெல்ப் பண்ணுங்க!....................என்ன யாரோ கொலை பண்ண துரத்துறாங்க. ப்ளீஸ் காப்பாத்துங்க சார்!" என்று கத்தி விட்டாள். எதிரே இருந்த கார்த்திக் கூட அதிச்சியிலிருந்து மீளவில்லை.
சில நிமிட அமைதியை குலைக்கும் வண்ணம் கார்த்திக்கின் செல்போன் அலற, கார்த்திக்கும் தண்ணீர் பாட்டிலை ராதிகாவிடம் கொடுத்து குடிக்கும் படி கூறிவிட்டு அறைக்கு வெளியே சென்றான்.
"தாமோதரன் சொல்லுங்க, எனி இன்போர்மேசன்?"
"யெஸ் சார், இங்க இன்னும் டெட் பாடீஸ் கிடைச்சிருக்கு." தாமோதரனின் குரலில் பதற்றம் நிறைந்திருந்தது.
ஆனால் இதை எதிர்பார்த்த கார்த்திக்கோ நிதானமாக "ஓகே, உடனே பாடி எல்லாத்தயும் மார்ச்சுவரிக்கு அனுப்பிடுங்க. எந்த இடத்தில பாடி எல்லாம் இருந்திச்சு?"
கார்த்திக்கின் நிதானம் புரியாத தாமோதரனும் "அது வந்து சார், போலீஸ் டாக் வந்துதான் கண்டுபிடிக்க முடியுமா இருந்துச்சு சார்."
"அது சரி தாமோதரன், எங்க இருந்து பாடிய ரிக்கவர் பண்ணினீங்க?"
"சார் காட்டுக்குள்ள ஒரு இருநூறு மீட்டர் தூரத்துல ஒரு பாழடைஞ்ச கிணறு ஒண்ணு இருந்திச்சு, அதுக்குள்ள தான் சார் இருந்துச்சு."
"ஓகே, மற்ற பாடில்லாம் எங்க இருந்திச்சு?"
"இல்ல சார், எல்லா டெட் பாடியும் அங்கதான் சார் இருந்துச்சு."
தாமோதரனின் பதில் கார்த்திக்கை குழப்ப "என்ன சொல்றீங்க தாமோதரன் எல்லா டெட் பாடியும் ஒரே இடத்தையா இருந்திச்சு?"
"ஆமா சார் ஒரே இடத்திலதான்."
"எத்தன டெட் பாடி ரிக்கவர் பண்ணினதா சொன்னீங்க தாமோதரன்?"
"சார் மொத்தம் மூணு டெட் பாடி. ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு."
"என்ன சொல்றீங்க தாமோதரன்? மூணா? மொத்தம் நாலு டெட் பாடி இருக்கணும்?" இப்போது தாமோதரனின் பதற்றம் கார்த்திக்கிற்கு தொற்றிக்கொண்டது.
"இல்ல சார் மூணுதான் இருந்திச்சு."
"அப்படின்னா இன்னொரு டெட் பாடியும் அந்த இடத்தில தான் இருக்கணும். சேர்ச் பண்ணுங்க. அண்ட் அந்த டெட் பாடிஸ்ஸ போட்டோ எடுத்து எனக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் அனுப்புங்க."
"ஓகே சார்"
"அங்க ஏதாவது கத்தி கிடைச்சுதா தாமோதரன்?"
"இல்லையே சார், கத்திதான் அங்க ரூம்ல கிடைச்சுதே?"
"ஆமா கிடைச்சுதுதான், ஆனா அதனால ஒரு கொலைதான் நடந்திருக்கு. மீதி கொலைங்கள வேற ஒரு கத்தியாலதான் கொலைகாரன் பண்ணியிருக்கான். கேர்புல்லா சேர்ச் பண்ணுங்க. வீ நீட் தட் எவிடன்ஸ்."
"நான் பாத்துக்கிறேன் சார்."
"நமக்கு டைம் இல்ல தாமோதரன், இன்னும் கொஞ்ச நேரத்துல இறந்தவங்களோட பேரண்ட்ஸ் இங்க வந்துடுவாங்க. எதையாவது மிஸ் பண்ணியிருப்பீங்க. புரியுதா?"
"புரியுது சார்"
தாமோதரனுடனான அழைப்பை துண்டித்த பின் உடனடியாக கிருஷ்ணமூர்த்திக்கு கால் பண்ணிய கார்த்திக் தாமோதரன் அனுப்பும் புகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் பண்ணி ஹாஸ்ப்பிட்டலுக்கு கொண்டுவருமாறு பணித்தான்.
சில நிமிட பதற்றங்களுக்கு பின்னர் நிதானித்த கார்த்திக்கிற்கு ஒரு பெண் எவ்வாறு மூன்று இறந்த உடல்களை இருநூறு மீட்டர் தூரம் கொண்டு சென்றிருப்பாள் என்பது மட்டும் புரியாத புதிராயிருந்தது.
'அது சரி நான் ஏன் ராதிகாவை முழுதாக நம்பிவிட்டேன். அவள் சொன்னதெல்லாம் உண்மை என்பதில் என்ன நிச்சயம்' என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட கார்த்திக் அவனின் மனதில் எழுந்த கேள்விகளைக்கேட்க மீண்டும் ராதிகா இருந்த அறைக்குள் சென்றான்.
பயத்திலிருந்து சிறிது விடுபட்டிருந்த ராதிகா கார்த்திக்கை கண்டதும் ஏதோ சொல்ல முற்படுவது போல எத்தனித்தாள்.
"கார்த்திக் சார் கொஞ்சம் விலங்க ரிமூவ் பண்ணி விடுறீங்களா?"
"சாரி ராதிகா, நீங்க சொல்ற கதைல எனக்கு நம்பிக்கை இல்ல, நீங்க முழுசா உண்மைய சொல்றவரைக்கும் கை விலங்கு ரிமூவ் பண்றது கஷ்டம் " தான் ஒரு பெண்ணிடம் இவ்வாறு நடப்பது கார்த்திக்கிற்கு கொஞ்சமும் இஷ்டமில்லைத்தான், ஆனால் அவளிடமிருந்து சீக்கிரம் முழு உண்மையையும் தெரிந்து கொள்ளவேண்டும் என முனைப்பிலிருந்தான் கார்த்திக்.
"கார்த்திக் சார் நான் சொன்னது பூராவுமே உண்மையா நடந்தது தான், அதான் நானே சொல்றனே அந்த விஷாலிய நான்தான் கொலை பண்ணினேன்னு, இதுக்கப்புறம் நான் எதுக்காக உங்ககிட்ட பொய் சொல்லணும்?"
"அப்பிடி நீங்க இதுவரைக்கும் சொன்னதா எனக்கு நினைவில இல்லையே மிஸ் ராதிகா!" கார்த்திக்கிற்கு ஏதோ தான் அவளிடமிருந்து உண்மையை கறந்துவிட்டோம் என பெருமையாக இருந்தது, ஆனால் அதை வெளிக்காட்டாமல் அவளிடம் போட்டு வாங்கினான்.
"அத நான் சொல்றதுக்கு முன்னாடியே நீங்க கால் கதைக்க போய்ட்டிங்களே......"
"சரி சொல்லுங்க, நீங்க இன்னைக்கு காலைல 8 மணிக்கு..... இல்ல நேற்று காலைல 8 மணிக்கு போலீஸ் கண்ட்ரோல் ரூம்க்கு கால் பண்ணி உங்கள யாரோ கொலை பண்ண துரத்துறதா சொல்லியிருக்கீங்க...." கார்த்திக் நேரம் இரவு பன்னிரெண்டை தாண்டியிருந்ததை அப்போதுதான் அவதானித்தான்.
ராதிகாவும் ஆம் என்பது போல தலையசைத்தாள்.
கார்த்திக் தொடர்ந்து "திரும்ப எதுக்காக நீங்க மறுபடியும் அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு போனீங்க? அந்த போட்லயே ஒளிஞ்சு இருந்திருக்கலாமே. அதுதானே உங்களுக்கு சேஃப்டி...." தனது சந்தேகத்தை கேட்டு முடித்தான்.
"அது வந்து.........அது வந்து......." ராதிகா இந்தக்கேள்வியை எதிர்பாராதவள் போல சற்றே தடுமாறியதை அவதானித்த கார்த்திக் " ஏன்னா விக்ரம் சாகல, விக்ரம பார்த்திட்டு தான் நீங்க அந்த போட்ல இருந்து வெளிய போயிருக்கீங்க. விக்ரமும் விஷாலியும் தான் கொலைகாரங்க. ஆம் ஐ கரெக்ட்?" துப்பறியும் சினிமாக்களில் கிளைமாக்சில் முடிச்சுக்களை அவிழ்ப்பதுபோல கூறி முடித்தான் கார்த்திக்.
"....................."
எதுவும் புரியாதவள் போல முழித்த ராதிகாவை பார்த்து மீண்டும் தனக்குள் இருந்த துப்பறிவாளனை தட்டி விட்டான் கார்த்திக், " என்ன மிஸ், போலீசையும் குறைச்சு எடை போட்டுடீங்களா? சோலையாத்தில மூணு டெட் பாடிய ரிக்கவர் பண்ணிட்டாங்க. ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. ஸோ அது மனீஷா, அர்ஜுன், ராகுல்ன்னு கண்டுபிடிக்கிறதொண்ணும் பெரிய விஷயமில்லையே. ஏன்னா அர்ஜுன் அண்ட் ராகுலோட பாடிய நீங்க பார்த்ததா சொல்லியிருக்கீங்க."
ராதிகாவும் சற்று தெளிந்தவளாய் " கார்த்திக் சார் நீங்க சொல்றதும் ஓரளவுக்கு சரிதான், ஆனா அங்க நடந்ததோ வேற." என்று கார்த்திக்கின் துப்பறியும் மூளையை கேள்விக்குறியாக்கினாள்.
"அப்பிடீன்னா, என்ன நடந்திச்சு?"
ஆகஸ்ட் 22 , நண்பகல் 12.00 மணி
மூன்று மணி நேரமாக போலீஸின் வருகைக்காக போட் இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலிருந்த சிறிய புதரினுள் உடலை முழுவதுமாக மறைத்தபடி காத்திருந்தாள் ராதிகா. மரண பயம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள், ஆனால் அதை அன்று முழுமையாக அனுபவித்துக்கொண்டிருந்தாள். செல்போனின் பற்றறியும் போலீஸ் கண்ட்ரோல் ரூம்க்கு கதைக்கும் போதே தீர்ந்துவிட்டது. இனி அந்த நீலமலைக்காட்டிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் காவல்துறையின் உதவி ஒன்றே அதற்கு வழி. இவ்வளவு காலமும் தமிழ்நாடு காவல்துறையை எள்ளி நகையாடியவள் இன்று வேண்டிக்கொண்டிருக்கிறாள், இவையெல்லாம் யாரென்று தெரியாத ஒரு பெண்ணால் என்று நினைக்கும் போது பயத்துடன் வெட்கமும் கலந்து வந்தது அவளுக்கு.
'இன்னும் எவ்வளவு நேரம் இங்கே ஒளிந்திருக்க முடியும்? எப்படியும் விக்ரமை கொன்றவள் நிச்சயம் என்னை கொல்லாமல் விடப்போவதில்லை. இங்கேயே முட்டாள் மாதிரி போலீஸ் வரும்வரை காத்துக்கொண்டிருப்பதா? இல்லை விஷாலி முந்துவதற்குள் நான் முந்திக்கொள்ள வேண்டுமா?' என்று பல எண்ணங்கள் ராதிகாவிடம் சுற்றிக்கொண்டிருந்தன. ராதிகாவின் நல்ல காலத்திற்கு விட்டிருந்த மழையும் கூட மீண்டும் தூறல் போட ஆரம்பித்திருந்தது. மூன்று மணித்தியாலங்களாக வெளியுலகை காணாது இருந்த ராதிகா போலீசை நம்பி பிரயோஜனமில்லை என்று முடிவெடுத்தவளாய் தலையை சிறிது உயர்த்தி நோட்டமிட ஆரம்பித்தாள்.
அங்கு அவள் கண்ட காட்சி அவளை மீண்டும் புதருக்கடியில் ஒளிந்துவிடச்சொல்லியது. ஒரு கையில் துப்பாக்கியுடன் விஷாலி அவர்கள் வந்த போட்டினை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்தாள். அவள் அங்கு தேடுவது ராதிகாவைத்தான் என்பது ராதிகாவுக்கு புரியாமலில்லை.
'கையில் துப்பாக்கி வைத்திருப்பவளிடம் காலில் கூட விழ முடியாது. இப்போது வெளியே போவது முட்டாள்த்தனம்' என்று பயத்திலும் குளிரிலும் உறைந்து போனவள் மீண்டும் புதருக்கடியில் நங்கூரமிட்டாள்.
சில நிமிடங்களில் தனது தேடுதலை வேறு திசையில் மேற்கொண்டபடி அவ்விடம் விட்டு நகர்ந்திருந்தாள் விஷாலி. அடிக்கடி வெளியே தலையை உயர்த்தி விஷாலியை நோட்டமிட்டுக்கொண்டிருந்த ராதிகாவின் கண்ணிலிருந்து மறைந்து விட்டிருந்தாள் விஷாலி.
மீண்டும் என்ன செய்யலாமென யோசனையில் ஆழ்ந்த ராதிகாவிற்கு அப்போது அவள் காதில் கேட்ட குரல் கடலில் மூழ்கிக்கொண்டிருந்தவனுக்கு கையில் அகப்பட்ட துரும்பாக தெரிந்தது.
"ராதிகா..... ராதிகா....."
அந்த மயான அமைதியில் தூறிய மழைத்தூறல் நடுவிலும் ராதிகாவை யாரோ தேடிக்கொண்டிருப்பதை அந்த சோர்ந்து போன ஆண் குரல் காட்டியது.
தன் வேகத்தை குறைத்து பூனை போல பதுங்கி சென்று உள்ளே ஜன்னலிடுக்கினூடாக பார்த்த விக்ரம், ராகுலின் பிணம் ரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சி கண்டு நடுநடுங்கிப்போனான். பின்னால் நின்றுகொண்டிருந்த ராதிகா விக்ரமின் நிலையைக்கண்டு இனி தன்னுயிரை காப்பாற்ற விக்ரமை நம்பி பிரயோஜனமில்லை என்பதை விளங்கிக்கொண்டாள்.
அந்த நேரத்தில் மழைத்தூறல் சத்தத்தையும் கிழித்துக்கொண்டு கேட்டது மனீஷாவின் கூக்குரல். விக்ரமும் ராதிகாவும் கெஸ்ட் ஹவுசில் தங்களது அறை ஜன்னலையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தனர். சில நொடிகளில் ஜன்னலை உடைத்துக்கொண்டு கீழே வந்து விழுந்தாள் மனீஷா. விழுந்ததில் நிச்சயம் உயிர் பிரிந்திருக்கும். இதைப்பார்த்துக்கொண்டிருந்த விக்ரமிற்கும் ராதிகாவிற்கும் கூட தமது உயிரும் இன்னும் சில நிமிடங்களில் பிரிந்துவிடும் என்றே எண்ணத்தோன்றியது. விக்ரமின் கையிலிருந்த துப்பாக்கி கையிலிருந்து விலகி கீழே விழுந்து விட்டது.
அதோ மேலே இன்னொரு உருவம்....... யாருமில்லை விஷாலிதான்...... எல்லா குழப்பமும் தீர்ந்துவிட்டது. சட்டென சுய நிலையுணர்ந்த விக்ரம் கீழே விழுந்து கிடந்த கைத்துப்பாக்கியை எடுத்து மேலே குறி வைக்கிறான். மழை தூறவில்லை, கொட்டுகிறது. அந்தக்கொட்டும் மழையில் அவ்வளவு தூரத்திற்கு குறி பார்த்து சுடுவது என்பது இயலாத காரியம், வெடிச்சத்தம் கேட்டு விஷாலி உஷாராகினால் தமக்குத்தான் ஆபத்து. ஆனால் அங்கே விஷாலின் பின் இன்னொரு உருவம். சட்டென மறைந்தும் விட்டது. அதே சமயம் விக்ரமும் ராதிகாவும் ஸ்விம்மிங் பூல் அருகே ஒளிந்து கொண்டு மேலே நோட்டம் விட்டதை மேலிருந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ராதிகாவை அழைத்துக்கொண்டு ராகுல் இருந்த அறைக்கு பின்னால் சென்ற விக்ரம் "ராதிகா நிலமை கைய மீறி போய்ட்டு, நீ சீக்கிரமா ஆத்தங்கரைக்கு போ, அங்கதான் சிக்னல் கிடைக்கும். போலீசுக்கு கால் பண்ணு. நடந்த விசயத்த சொல்லு. சீக்கிரம்!.... நான் இங்க ஒளிஞ்சிருந்து அது யாருன்னு பார்க்கிறான். சான்ஸ் கிடைச்சா ரெண்டு பேரையும் போட்ருவன்."
"போலீசுக்கு சொல்லவா? அதனால வேற ப்ரோப்ளம் வராதா விக்கி?"
"என்ன வந்தாலும் சமாளிச்சுக்கலாம், எல்லாத்துக்கும் நம்ம உயிரோட இருக்கணும். சீக்கிரம் போ....." என்று கூறிவிட்டு விக்ரமும் கெஸ்ட் ஹவுஸை நோக்கி நகர்ந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் மின்னல் வேகத்தில் ஆற்றங்கரையை அண்மித்த ராதிகா தாம் வந்திருந்த படகில் பதுங்கியிருந்தபடி போலீசுக்கு அழைப்பை மேற்கொள்ள கைபேசியை எடுக்கும் போது ஒரு துப்பாக்கி வெடிச்சத்தமும் அதைத்தொடர்ந்து சில வினாடிகள் கழித்து அலறல் சத்தமும் கேட்டது. அது நிச்சயமாக உயிர் பிரியும் வலியில் ஏற்பட்ட அலறல்தான் என்பது ராதிகாவுக்கு விளங்கிற்று. அங்கு துப்பாக்கி வைத்திருந்தது விக்ரம் மட்டும் தான். அதனால் விக்ரம்தான் சுட்டிருப்பான். விக்ரம் யாரை சுட்டானோ அந்த நபர் இறந்திருந்தால் வெடிச்சத்தத்துடன் அலறல் சத்தமும் கேட்டிருக்கும். ஆனால் வெடிச்சத்தம் கேட்டு சில வினாடிகள் கழித்து அலறல் சத்தம் கேட்ட படியால் விக்ரமின் குறி தப்பிவிட்டது. ஆகவே விக்ரமின் அலறல் சத்தம் தான் அது என முடிவெடுத்தபடி கைபேசியில் நூறை டயல் செய்தாள் ராதிகா.
“சார்! சார்!............ ஹெல்ப் பண்ணுங்க!....................என்ன யாரோ கொலை பண்ண துரத்துறாங்க. ப்ளீஸ் காப்பாத்துங்க சார்!"
ஹாஸ்ப்பிட்டலில் கட்டிலுடன் விலங்கிடப்பட்ட ராதிகா சோலையாற்றில் நடந்தவற்றை இன்ஸ்பெக்டர் கார்த்திக்கிடம் ஒப்புவித்த போது மீண்டும் சோலையாற்று கெஸ்ட் ஹவுசில் மாட்டிக்கொண்டதைப்போல உணர்ந்து பிரம்மை பிடித்தவள் போலாகி மீண்டும் “சார்! சார்!............ ஹெல்ப் பண்ணுங்க!....................என்ன யாரோ கொலை பண்ண துரத்துறாங்க. ப்ளீஸ் காப்பாத்துங்க சார்!" என்று கத்தி விட்டாள். எதிரே இருந்த கார்த்திக் கூட அதிச்சியிலிருந்து மீளவில்லை.
சில நிமிட அமைதியை குலைக்கும் வண்ணம் கார்த்திக்கின் செல்போன் அலற, கார்த்திக்கும் தண்ணீர் பாட்டிலை ராதிகாவிடம் கொடுத்து குடிக்கும் படி கூறிவிட்டு அறைக்கு வெளியே சென்றான்.
"தாமோதரன் சொல்லுங்க, எனி இன்போர்மேசன்?"
"யெஸ் சார், இங்க இன்னும் டெட் பாடீஸ் கிடைச்சிருக்கு." தாமோதரனின் குரலில் பதற்றம் நிறைந்திருந்தது.
ஆனால் இதை எதிர்பார்த்த கார்த்திக்கோ நிதானமாக "ஓகே, உடனே பாடி எல்லாத்தயும் மார்ச்சுவரிக்கு அனுப்பிடுங்க. எந்த இடத்தில பாடி எல்லாம் இருந்திச்சு?"
கார்த்திக்கின் நிதானம் புரியாத தாமோதரனும் "அது வந்து சார், போலீஸ் டாக் வந்துதான் கண்டுபிடிக்க முடியுமா இருந்துச்சு சார்."
"அது சரி தாமோதரன், எங்க இருந்து பாடிய ரிக்கவர் பண்ணினீங்க?"
"சார் காட்டுக்குள்ள ஒரு இருநூறு மீட்டர் தூரத்துல ஒரு பாழடைஞ்ச கிணறு ஒண்ணு இருந்திச்சு, அதுக்குள்ள தான் சார் இருந்துச்சு."
"ஓகே, மற்ற பாடில்லாம் எங்க இருந்திச்சு?"
"இல்ல சார், எல்லா டெட் பாடியும் அங்கதான் சார் இருந்துச்சு."
தாமோதரனின் பதில் கார்த்திக்கை குழப்ப "என்ன சொல்றீங்க தாமோதரன் எல்லா டெட் பாடியும் ஒரே இடத்தையா இருந்திச்சு?"
"ஆமா சார் ஒரே இடத்திலதான்."
"எத்தன டெட் பாடி ரிக்கவர் பண்ணினதா சொன்னீங்க தாமோதரன்?"
"சார் மொத்தம் மூணு டெட் பாடி. ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு."
"என்ன சொல்றீங்க தாமோதரன்? மூணா? மொத்தம் நாலு டெட் பாடி இருக்கணும்?" இப்போது தாமோதரனின் பதற்றம் கார்த்திக்கிற்கு தொற்றிக்கொண்டது.
"இல்ல சார் மூணுதான் இருந்திச்சு."
"அப்படின்னா இன்னொரு டெட் பாடியும் அந்த இடத்தில தான் இருக்கணும். சேர்ச் பண்ணுங்க. அண்ட் அந்த டெட் பாடிஸ்ஸ போட்டோ எடுத்து எனக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் அனுப்புங்க."
"ஓகே சார்"
"அங்க ஏதாவது கத்தி கிடைச்சுதா தாமோதரன்?"
"இல்லையே சார், கத்திதான் அங்க ரூம்ல கிடைச்சுதே?"
"ஆமா கிடைச்சுதுதான், ஆனா அதனால ஒரு கொலைதான் நடந்திருக்கு. மீதி கொலைங்கள வேற ஒரு கத்தியாலதான் கொலைகாரன் பண்ணியிருக்கான். கேர்புல்லா சேர்ச் பண்ணுங்க. வீ நீட் தட் எவிடன்ஸ்."
"நான் பாத்துக்கிறேன் சார்."
"நமக்கு டைம் இல்ல தாமோதரன், இன்னும் கொஞ்ச நேரத்துல இறந்தவங்களோட பேரண்ட்ஸ் இங்க வந்துடுவாங்க. எதையாவது மிஸ் பண்ணியிருப்பீங்க. புரியுதா?"
"புரியுது சார்"
தாமோதரனுடனான அழைப்பை துண்டித்த பின் உடனடியாக கிருஷ்ணமூர்த்திக்கு கால் பண்ணிய கார்த்திக் தாமோதரன் அனுப்பும் புகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் பண்ணி ஹாஸ்ப்பிட்டலுக்கு கொண்டுவருமாறு பணித்தான்.
சில நிமிட பதற்றங்களுக்கு பின்னர் நிதானித்த கார்த்திக்கிற்கு ஒரு பெண் எவ்வாறு மூன்று இறந்த உடல்களை இருநூறு மீட்டர் தூரம் கொண்டு சென்றிருப்பாள் என்பது மட்டும் புரியாத புதிராயிருந்தது.
'அது சரி நான் ஏன் ராதிகாவை முழுதாக நம்பிவிட்டேன். அவள் சொன்னதெல்லாம் உண்மை என்பதில் என்ன நிச்சயம்' என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட கார்த்திக் அவனின் மனதில் எழுந்த கேள்விகளைக்கேட்க மீண்டும் ராதிகா இருந்த அறைக்குள் சென்றான்.
பயத்திலிருந்து சிறிது விடுபட்டிருந்த ராதிகா கார்த்திக்கை கண்டதும் ஏதோ சொல்ல முற்படுவது போல எத்தனித்தாள்.
"கார்த்திக் சார் கொஞ்சம் விலங்க ரிமூவ் பண்ணி விடுறீங்களா?"
"சாரி ராதிகா, நீங்க சொல்ற கதைல எனக்கு நம்பிக்கை இல்ல, நீங்க முழுசா உண்மைய சொல்றவரைக்கும் கை விலங்கு ரிமூவ் பண்றது கஷ்டம் " தான் ஒரு பெண்ணிடம் இவ்வாறு நடப்பது கார்த்திக்கிற்கு கொஞ்சமும் இஷ்டமில்லைத்தான், ஆனால் அவளிடமிருந்து சீக்கிரம் முழு உண்மையையும் தெரிந்து கொள்ளவேண்டும் என முனைப்பிலிருந்தான் கார்த்திக்.
"கார்த்திக் சார் நான் சொன்னது பூராவுமே உண்மையா நடந்தது தான், அதான் நானே சொல்றனே அந்த விஷாலிய நான்தான் கொலை பண்ணினேன்னு, இதுக்கப்புறம் நான் எதுக்காக உங்ககிட்ட பொய் சொல்லணும்?"
"அப்பிடி நீங்க இதுவரைக்கும் சொன்னதா எனக்கு நினைவில இல்லையே மிஸ் ராதிகா!" கார்த்திக்கிற்கு ஏதோ தான் அவளிடமிருந்து உண்மையை கறந்துவிட்டோம் என பெருமையாக இருந்தது, ஆனால் அதை வெளிக்காட்டாமல் அவளிடம் போட்டு வாங்கினான்.
"அத நான் சொல்றதுக்கு முன்னாடியே நீங்க கால் கதைக்க போய்ட்டிங்களே......"
"சரி சொல்லுங்க, நீங்க இன்னைக்கு காலைல 8 மணிக்கு..... இல்ல நேற்று காலைல 8 மணிக்கு போலீஸ் கண்ட்ரோல் ரூம்க்கு கால் பண்ணி உங்கள யாரோ கொலை பண்ண துரத்துறதா சொல்லியிருக்கீங்க...." கார்த்திக் நேரம் இரவு பன்னிரெண்டை தாண்டியிருந்ததை அப்போதுதான் அவதானித்தான்.
ராதிகாவும் ஆம் என்பது போல தலையசைத்தாள்.
கார்த்திக் தொடர்ந்து "திரும்ப எதுக்காக நீங்க மறுபடியும் அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு போனீங்க? அந்த போட்லயே ஒளிஞ்சு இருந்திருக்கலாமே. அதுதானே உங்களுக்கு சேஃப்டி...." தனது சந்தேகத்தை கேட்டு முடித்தான்.
"அது வந்து.........அது வந்து......." ராதிகா இந்தக்கேள்வியை எதிர்பாராதவள் போல சற்றே தடுமாறியதை அவதானித்த கார்த்திக் " ஏன்னா விக்ரம் சாகல, விக்ரம பார்த்திட்டு தான் நீங்க அந்த போட்ல இருந்து வெளிய போயிருக்கீங்க. விக்ரமும் விஷாலியும் தான் கொலைகாரங்க. ஆம் ஐ கரெக்ட்?" துப்பறியும் சினிமாக்களில் கிளைமாக்சில் முடிச்சுக்களை அவிழ்ப்பதுபோல கூறி முடித்தான் கார்த்திக்.
"....................."
எதுவும் புரியாதவள் போல முழித்த ராதிகாவை பார்த்து மீண்டும் தனக்குள் இருந்த துப்பறிவாளனை தட்டி விட்டான் கார்த்திக், " என்ன மிஸ், போலீசையும் குறைச்சு எடை போட்டுடீங்களா? சோலையாத்தில மூணு டெட் பாடிய ரிக்கவர் பண்ணிட்டாங்க. ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. ஸோ அது மனீஷா, அர்ஜுன், ராகுல்ன்னு கண்டுபிடிக்கிறதொண்ணும் பெரிய விஷயமில்லையே. ஏன்னா அர்ஜுன் அண்ட் ராகுலோட பாடிய நீங்க பார்த்ததா சொல்லியிருக்கீங்க."
ராதிகாவும் சற்று தெளிந்தவளாய் " கார்த்திக் சார் நீங்க சொல்றதும் ஓரளவுக்கு சரிதான், ஆனா அங்க நடந்ததோ வேற." என்று கார்த்திக்கின் துப்பறியும் மூளையை கேள்விக்குறியாக்கினாள்.
"அப்பிடீன்னா, என்ன நடந்திச்சு?"
ஆகஸ்ட் 22 , நண்பகல் 12.00 மணி
மூன்று மணி நேரமாக போலீஸின் வருகைக்காக போட் இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலிருந்த சிறிய புதரினுள் உடலை முழுவதுமாக மறைத்தபடி காத்திருந்தாள் ராதிகா. மரண பயம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள், ஆனால் அதை அன்று முழுமையாக அனுபவித்துக்கொண்டிருந்தாள். செல்போனின் பற்றறியும் போலீஸ் கண்ட்ரோல் ரூம்க்கு கதைக்கும் போதே தீர்ந்துவிட்டது. இனி அந்த நீலமலைக்காட்டிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் காவல்துறையின் உதவி ஒன்றே அதற்கு வழி. இவ்வளவு காலமும் தமிழ்நாடு காவல்துறையை எள்ளி நகையாடியவள் இன்று வேண்டிக்கொண்டிருக்கிறாள், இவையெல்லாம் யாரென்று தெரியாத ஒரு பெண்ணால் என்று நினைக்கும் போது பயத்துடன் வெட்கமும் கலந்து வந்தது அவளுக்கு.
'இன்னும் எவ்வளவு நேரம் இங்கே ஒளிந்திருக்க முடியும்? எப்படியும் விக்ரமை கொன்றவள் நிச்சயம் என்னை கொல்லாமல் விடப்போவதில்லை. இங்கேயே முட்டாள் மாதிரி போலீஸ் வரும்வரை காத்துக்கொண்டிருப்பதா? இல்லை விஷாலி முந்துவதற்குள் நான் முந்திக்கொள்ள வேண்டுமா?' என்று பல எண்ணங்கள் ராதிகாவிடம் சுற்றிக்கொண்டிருந்தன. ராதிகாவின் நல்ல காலத்திற்கு விட்டிருந்த மழையும் கூட மீண்டும் தூறல் போட ஆரம்பித்திருந்தது. மூன்று மணித்தியாலங்களாக வெளியுலகை காணாது இருந்த ராதிகா போலீசை நம்பி பிரயோஜனமில்லை என்று முடிவெடுத்தவளாய் தலையை சிறிது உயர்த்தி நோட்டமிட ஆரம்பித்தாள்.
அங்கு அவள் கண்ட காட்சி அவளை மீண்டும் புதருக்கடியில் ஒளிந்துவிடச்சொல்லியது. ஒரு கையில் துப்பாக்கியுடன் விஷாலி அவர்கள் வந்த போட்டினை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்தாள். அவள் அங்கு தேடுவது ராதிகாவைத்தான் என்பது ராதிகாவுக்கு புரியாமலில்லை.
'கையில் துப்பாக்கி வைத்திருப்பவளிடம் காலில் கூட விழ முடியாது. இப்போது வெளியே போவது முட்டாள்த்தனம்' என்று பயத்திலும் குளிரிலும் உறைந்து போனவள் மீண்டும் புதருக்கடியில் நங்கூரமிட்டாள்.
சில நிமிடங்களில் தனது தேடுதலை வேறு திசையில் மேற்கொண்டபடி அவ்விடம் விட்டு நகர்ந்திருந்தாள் விஷாலி. அடிக்கடி வெளியே தலையை உயர்த்தி விஷாலியை நோட்டமிட்டுக்கொண்டிருந்த ராதிகாவின் கண்ணிலிருந்து மறைந்து விட்டிருந்தாள் விஷாலி.
மீண்டும் என்ன செய்யலாமென யோசனையில் ஆழ்ந்த ராதிகாவிற்கு அப்போது அவள் காதில் கேட்ட குரல் கடலில் மூழ்கிக்கொண்டிருந்தவனுக்கு கையில் அகப்பட்ட துரும்பாக தெரிந்தது.
"ராதிகா..... ராதிகா....."
அந்த மயான அமைதியில் தூறிய மழைத்தூறல் நடுவிலும் ராதிகாவை யாரோ தேடிக்கொண்டிருப்பதை அந்த சோர்ந்து போன ஆண் குரல் காட்டியது.
- தொடரும்-