அத்தியாயம் 06
இரவு........
வெகு நேரமாகியும் தங்கள் அறைகளுக்கு செல்லாமல் கீழே சோபாவில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர் அஷ்வியும் கயலும்....
அஷ்வினி வேண்டுமென்றே அவனை தவிர்க்க கயல்தான் நேரம் செல்வதில் தவித்துப்போனாள்.இங்கே ஆரவ் உச்ச கட்ட கடுப்பில் "கயல்விழீ....." என கத்த
"அஷ்வி...சாரிடி...கோச்சிக்காத....நா வர்றேன்..." என்றவள் சிட்டாய் பறப்பதை பார்த்தவளின் முகம் சிரித்த மறு நொடி வலியை தத்தெடுத்தது." ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் பேசிவிட்டான்.....கோபத்தில் எல்லை மீறி பேசுவான்தானென்றாலும் அதற்கென்று இப்படியா...." என்றவளின் முகம் வேதனையில் கசங்கியது.
இன்று அவன் அழைத்த அழைப்பு பனிச்சாரலாய் மனதை குளிரூட்ட பூவாக மலர்ந்தது அவள் முகம்.... அடுத்த நிமிடம் எல்லாம் மறந்து ரூமிற்கு செல்ல மாடியேறினாள் பெண்...
அறைக்குள் அவன் இருப்பானென்று கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல வெற்று அறையே அவளை வரவேற்க " எங்க போனான் இந்த கமாண்டர்?" சுற்று முற்றும் பார்த்தவள் ட்ரெஸ்ஸிங் ரூம் அருகிலிருந்த அறையிலிருந்து வெளிச்சம் வரவும் அவனை தொந்தரவு செய்யாது பெல்கனியில் போய் நின்று கொண்டாள்.
எவ்வளவு தான் மனதை சமாதானப்படுத்தினாலும் அவன் வார்த்தைகளின் தாக்கம் மனதில் இருக்கவே செய்தது. தான் அன்று தாலியை கொடுத்திராவிட்டாள் இப்படி எல்லாம் நடந்திருக்காதே என மனம் கூக்குரலிட மலுக்கென கண்ணீர் கன்னத்தை தொட்டது...
பின்னால் ஆள் அரவம் நிற்கும் சத்தம் கேட்க அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டே திரும்பினாள் முயன்று வரவழைத்த புன்னகையுடன்......
தேவ் தான் நின்றிருந்தான்.அவனை பார்த்து விட்டு தலையை குனிந்து கொள்ள..." தேங்க்ஸ் " எனும் அவனது வார்த்தையில் குனிந்திருந்த தலை சட்டென நிமிர அவளது அழுத வழிகளைக் கண்டு கொண்டான்.
"ஐ ஆம்..." என பேசப்போனவனை தடுத்து
"பரவால்ல விடுங்க தே..." என கூறப் போனவள் தொண்டையை சரி செய்தவாறு அதை தவிர்த்து விட்டாள்.அவன் பார்வை கூர்மையடைவதை உணர்ந்து வேறு புறம் திரும்பி மீண்டும் தொடர்ந்தாள்.
"பரவால்ல விடுங்க...ஒங்களுக்கு புடிச்ச பொண்ணா இருந்தா இப்பிடி பேசியிருக்க மாட்டீங்கல்ல...நானுங்" அவள் மேலும் பேசும் முன்னரே அவளுதடை சிறை செய்திருந்தான் முரட்டுத்தனமாக.....
ஆணவனின் முதல் இதழ் முத்தத்தில் சந்தோஷப்படவேண்டியவளோ அதிர்ச்சியாக.... அவனோ கோபத்திலிருந்தான். ஆக... இருவருமே தங்கள் இணையை உணரத் தவறிவிட்டனர்.
அவனிடமிருந்து விடுபடத்திமிர அவன் மூர்க்கம் இன்னும் கூடியது.கொஞ்ச நேரம் சென்று அவள் கண்ணீரின் சுவையை உணர்ந்து அவளை உதறித்தள்ளிவிட்டு சென்று விட அப்படியே மடங்கி கதறத்துவங்கினாள் அவள்........
வெற்றிவேல் யுனிவர்சிட்டி....
மரத்தடியில் அமைதியாக இருந்த சித்தார்த்திடம் (அதாங்க லவ் சீனியர்
) வந்து தொண்டையை செருமினாள் ரித்திகா.தலையுயர்த்தி பார்த்தவன்
தன் நண்பனின் மனைவியின் தோழி என அறிந்து தன்மையாகவே
" என்ன ரித்திகா...என்னாச்சு?ஏதாவது ஹெல்ப் வேணுமா?"
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..."
"ம்ம்ம்....சரி சொல்லு"
"நா ஒருத்தர லவ் பன்றேன் பட்.. அவருகிட்ட சொல்ல பயமா இருக்கு..." எனும் பதிலில் எரிச்சலடைந்தவன்
"அதை ஏன் என்கிட்ட சொல்ற?" என்றான் பல்லை கடித்துக்கொண்டே
" அப்போ நான் அவர் கிட்ட சொல்லட்டுமா...?"
"ப்ச்.....நீ சொல்லு...சொல்லாம போ... என்கிட்ட எதுக்கு கேக்குற?"
"ஓகே....ஐ லவ் யூ சித் (SIDH) "
என்றுவிட்டு சென்று விட அவன் தான் சிலயாகி போனான். சத்தியமா இதை அவளிடம் அவன் எதிர்பார்க்கவே இல்லை.....சட்டென தன்னை சுதாகரித்து " இவளுக்கு மண்டை குழம்பி போச்சா... லூசு மாதிரி உளறிட்டு போறா..." என நினைத்து பல்லை கடித்தவன் " ஏய்...நில்லு..." என கத்த அதை அவள் கண்டு கொள்ளாமல் போகவும் அவனுக்குத்தான் அவள் மீது மேலும் கோபம் பெருகிற்று......
அவள் சென்று விடவும் " ஷிட்....." என தலையை அழுத்த கோதிக்கொண்டு வகுப்பில் வந்தமர அருகில் வந்தமர்ந்த ஆரவ் அவன் தோளில் கை வைத்து
" டேய் சித்து... என்னடா நடக்குது இங்க... நீ இங்கே இருக்க..உன்ன கிழி கிழின்னு கிழிக்கிறானுங்களாம்.... வா என்னன்னு போய் பார்க்கலாம்" என்றவனை புரியாது பார்க்க
"என்னடா....அப்போ எதுவுமே தெரியாதா உனக்கு? அங்க ரித்துவையும் உன்னையும் சேர்த்து வெச்சி...."
என்று முழுதாக கூறி முடிக்கும் முன் அங்கே விரைந்தான் சித்தார்த். கல்லூரி நோட்டீஸ் போர்டில்
சித்தார்த்தையும் ரித்திகாவையும் இணைத்து எடிட் பண்ணி விதவிதமான போட்டோக்கள் எல்லாம் ஒட்டப்பட்டிருக்க.... ரித்திக்காவை எல்லோருமாக சேர்ந்து கேவலமாக பார்த்துக் கொண்டும்; சிரித்துக் கொண்டும்; கேலி பேசிக் கொண்டும் இருக்க எதுவுமே அறியாமல் முகத்தை மூடி அழுதவாறே நின்று கொண்டிருந்தாள் அவள். அவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்த சித்தார்த்தை கண்டதும் அனைவரது வாயும் மூடிக்கொள்ள ரித்து ஓடிவந்து அவனை அணைத்துக்கொள்ள.... நிலைமை கருதி அணத்தவன் எல்லோரையும் பார்த்து
"யார்ரா இப்படி பண்ணது....." என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்..... இவன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அந்த ரேகின் சீனியர் நைசாக பின்பக்கமாக நழுவுவதை கண்ட ஆரவ் அவன் பின்னாடி சென்றான்.
கேட்ட கேள்விக்கு பதில் இல்லாததை பார்த்து
"உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க.... நானும் இவளும் லவ் பண்றோம்... இதைத்தானே கேட்க ஆசப்பட்டீங்க... சொல்லியாச்சில்ல கெளம்புங்க..."
என கத்த யாரு பயந்தார்களோ இல்லையோ அவனை கட்டிப் பிடித்து இருந்தவள் உண்மையில் பயந்து நடுங்கி அவன் உள்ளே இன்னும் ஒன்ற......அவள் பயத்தை புரிந்தவன் போல ஆறுதல் கொடுக்கும் விதமாக அவளை இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டு
" போங்கன்னு சொன்னேன்" என்றான் சத்தம் காட்டாமல் பல்லை கடித்துக்கொண்டு...
அவனை அறிந்தவர்களாதலால் அனைவரும் சென்றுவிட...அவளை மெதுவாக விலக்கி தலைகுனிந்து நின்றவளிடம்
"லுக் ரித்திகா....இது ஒன் தப்புமில்ல...என் தப்புமில்ல... அதனால இத நெனச்சி வருத்தப்பட்டுட்டு இருக்காத சரியா....." என கேட்க அவன் ஆறுதல் அந்த சந்தோஷத்தில் கண்களை துடைத்துக் கொண்டு சிரித்தவாறே
"சரி சித்....அண்ட் சாரி....."எனவும் என்று இன்று சொன்னது ஞாபகம் வந்தவனாக
" அது சரி.....இன்னைக்கு ஏன் அப்படி சொன்ன?"
"எப்பிடி சொன்னேன்" என அப்பாவியாய் கேட்டவளை முறைத்து விட்டு
"ரித்திகா.... குழப்பத்துல எடுக்கிற எந்த முடிவும் நமக்கு சரியான தீர்வ கொடுக்காது....அதனால உன் முடிவை மாத்திகிட்டு என்ன சாய்ஸ் பண்றதுக்கு பதிலா நீ வேற யாராவது சாய்ஸ் பண்னா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.."
"ஹப்பா.... ஒரு வழியா முடிஞ்சுதா உங்க அட்வைஸ்... ஏன் சித்....உங்களுக்கு என்ன குறைன்னு வேற ஒருத்தனை சாய்ஸ் பண்ண சொல்றீங்க?"
" ரித்தி...."என்று ஏதோ கூற வந்தவனை தடுத்து
" இதோ.... இப்ப கூட என் மேல நம்பிக்கை வெச்சி அடுத்தவங்க மேல கோபப்பட்ட உங்க மேல லவ் கூடி போச்சே தவிற அடுத்தவன சாய்ஸ் பண்ணனும்னு நினைக்கவே இல்ல.... எல்லாத்தையும் நிதானமா சொல்லிக் கொடுக்கிற இந்த எட்டிடியூட் கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..... இப்படி இன்னும் நிறைய இருக்கு...என்னோட சாய்ஸ் தப்பாகாதுங்குற நம்பிக்கை எனக்கிருக்கு.....அதனால தான் சொல்றேன் ஐ லவ் யூ......ஐ லவ் யூ..... ஐ லவ் யூ....." என்றவள் அவ்விடம் விட்டகல அவன் தான் அவளுடைய அவன் மீதான காதலில் வாயடைத்துப் போனான்.
ஆரவ் நண்பர்களுடன் அவனைப் பிடித்துக் வெளுத்து வாங்கிவிட்டு எதுவும் நடக்காதது போலவந்தமர.... ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த சித்தார்த் அதில் கலைந்து ஆரவ்வை பார்க்க அவனுடைய டீ-ஷர்ட்டின் தோல் பக்கத்தில் கிழிந்து இருக்க பதறியவன்
"ஏய்...மச்சான் என்ன ஆச்சுடா...."
"அது ஒன்னும் இல்ல... ரிலாக்ஸ் சித்து... ரித்துக்கு என்ன ஆச்சு?"
"அவளுக்கென்ன... வாய் கிழிய பேசுறா..." என ஏதேதோ நினைவுகளில் கூற புரியாது பார்த்தவன்
" என்னடா சொல்ற?"
"அது ஒன்னும் இல்ல மச்சி... என்ன கேட்ட?"
"உனக்கு என்னமோ நடந்திருக்கு இன்னக்கி...... அது மட்டும் தெளிவா தெரியுது.. சரி விடு...ரித்துவுக்கு என்னாச்சின்னு கேட்டேன்.... அழுதிட்ருந்தால்ல..."
"இப்போ சரியாயிடுச்சு..."என்றவன்
"யார் அப்படி பண்ணதுன்னு புடிச்சு ஒதக்கணும் மச்சான்..." என்றவனை பார்த்து ஆரவ் மர்மமாய் சிரிக்க... அதன் பொருளை உணர்ந்து கொண்டவனாக
" என்ன மறுபடி சண்டையா?" என்று கேட்டு விட்டு அவனை பார்க்க அதற்கும் சிரிக்கவும்
"எனக்காக சண்டை போட்றதுனால ஓன் அண்ணன் ஒன்ன கிழிப்பான்னு தெரிஞ்சுதான் எந்த வம்புக்கும் போக வேண்டாம்னு சொல்றேன்... கேட்டா தானே"
"டேய் நீ எனக்கு வேறு யாரோ இல்ல... என் குடும்பத்துக்கு அடித்தபடி எனக்கு எல்லாமே நீதான் மச்சான்... அண்ணன் ஏசுறது நல்லதுக்கு தானே விடு..." என்றவனின் அன்பில் நெகிழ்ந்து
"அந்த சொட்டை தல பியூன் வந்து இப்போ நம்மல கூப்பிடுவான் பாரு..."என்று சொல்லி முடிக்கவில்லை வாசலில் வந்து நின்ற பியூன்
"ஆரவ் தம்பி.... உங்கள சார் கூப்புட்றாரு..."
என்றுவிட்டு செல்ல அதை பார்த்து வாய்விட்டு சிரித்தான் ஆரவ்.
ஆபிஸ் ரூம்....
இருவருடைய கேங்கும் எதிரெதிரே முறைத்துக்கொண்டு நிற்க அவர்களுக்கு நடுவில் வந்து நின்ற ரிஷி ஆரவ்வை ஒரு பார்வை பார்த்துவிட்டு
" என்ன நடந்தது?" என்றான் அமைதியாக... அவனுடைய அமைதியில் உள்ளுக்குள் குளிரெடுத்து ஆரவ்விற்கு..." அமைதியா வேற கேட்குறாரே..." என நினைத்து விட்டு சொல்ல எத்தனிக்க... அதற்கிடையில் ரேகிங் சீனியர் பொய் பொய்யாய் அவர்களுக்கு எதிராக அனைத்தையும் சொல்லி முடிக்கும் முன் அவன் மீது பாய்ந்தான் ஆரவ்
" டேய்....மரியாதயா உண்மைய சொல்லு... இல்ல..."
" இல்லன்னா....என்னடா பண்ணுவ..." என்று அவனும் எகிற சித்தார்த் ஆரவ்வை சமாதானப்படுத்தி பின்னாலிருந்து இழுக்க....ஆரவ்வை அடிக்க ஓங்கிய ரேகிங் சீனியரின் கை இடையில் வந்த ரிஷியை கண்டு அந்தரத்தில் நிற்க.... பொங்கி விட்டான் ஆரவ்.
"டேய்....." என மறுபடி சித்தார்த்திடமிருந்து திமிரி அவனை கீழே தள்ளிவிட்டு அவன் மேல் ஏறி
" நானே என் அண்ணா மேல கையை ஓங்கினது கிடையாது நீ ஓங்குறியா.... கொன்னுடுவேன்டா நாயே...." வெறிபிடித்தவன் போல் அடித்துக்கொண்டிருக்க.... ரிஷி அண்ணன் என்பதில் அனைவரும் அதிர அவனை தூக்கி எடுத்து கன்னத்தில் அறையப்போக இடைப் பாய்ந்து அதனை வாங்கிக் கொண்டான் சித்தார்த். இதற்கிடையில் ரேகின் சீனியர் எழுந்திருக்க அனைவரையும் முறைத்தவன்
"உங்க இருப்பது பெயரையும் இன்னும் ஒன் வீக்குக்கு சஸ்பெண்ட் பண்றேன்... காலேஜ் பக்கம் வர்ரத பார்த்தேன்....கெட்டவ்ட்"என கூறியவன் எல்லோரும் வெளியேருவதை பார்த்து " ஆரவ்.. " என்று விட்டு அமைதியாகி விட அவன் மட்டும் திரும்பி வந்து தலை குனிந்து நின்றான்.
***
அஷ்வினி இப்பொழுதுதான் வேலையில் இணைந்து இருப்பதால் அவளை இன்னொருவனின் அஸிஸ்டனாகத்தான் வேலை கற்றுக் கொள்ள சொல்லி இருந்தது.அவள் சீனியர் லாயர் பெயர் விஷ்வா; ரொம்ப நல்லவன்; நியாயம் பக்கம் சார்ந்திருப்பவன்; உயரமான கோதுமை நிறம் கொண்ட ஸ்மார்ட்டான ஆணழகன்; ரொம்ப கலகலப்பானவனும் கூட....
கோட்டுக்கு அருகில் தன் டூவீலரை நிறுத்திய அஷ்வினியை " ஹாய் அஷ்வி " என்று கையசைத்தவாறே நெருங்கினாள் அவள் லாயர் நண்பி அபிநயா.
"ஹாய் அபி..." என்றவள் சிரித்துக்கொண்டே நெருங்கி வந்தாள். அதற்குள் அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்த அபி
"என்னடி கன்னமெல்லாம் சிவந்திருக்கு...." என கலாய்க்க அவள் சொல்ல வருவதை உடனே புரிந்து கொண்டவள் அவளை முறைத்துவிட்டு
"அவர் ஒன்னும் காரணமில்லாம அடிக்கல அபி... சோ... நோ ப்ராப்ளம்.. இட்ஸ் ஓகே..." பெருமிதமாக கூறிய தோழியை பெருமையாக பார்த்தாள் அபி.
"ஓஹ்.....மேடத்துக்கு சார் மேல அப்பிடி ஒரு லவ்ஸோ..." எனவும் யோசிக்காமல் பட்டென
" அப்பிடியெல்லாம் எதுவுமில்ல அபி... ஏதோ சொல்லணும்னு தோனிச்சு...."
என்றவளை பார்த்து சிரிப்புத்தான் வந்தது அபிக்கு.....
"இவ அவன் மேல் உள்ள காதல இன்னும் உணரல்ல...அதை சொல்லி புரியவைப்பது காதலுக்கு அழகில்லை என்பது அபியின் கருத்து. சரி அவளே புரிந்து கொள்ளட்டும்!!" என்று விட்டு விட்டாள்.
தன்னையே கண்வெட்டாமல் பார்த்திருக்கும் அபியை
"என்னடி அப்பிடி பாக்குற" எனவும் சிரித்தவள்
"நத்திங்டி" என கூறி முடிக்கும் முன் அவர்கள் முன்வந்து நின்றது வைட் கலர் ஹைபிரிட் கார் ஒன்று.... அதிலிருந்து கையில் கோட் சகிதம் இறங்கிய விஷ்வா அஷ்வினியை பார்த்து
புன்னகைக்க பதிலுக்கு புன்னகைத்து உற்சாகமாக
" ஹாய் சார்...." என்றவளின் பேச்சில் அபிக்குத்தான் மனதில் திக்கென்றது.
அஷ்வினியிடம் ஏதோ பேச திரும்ப அவள் ஏற்கனவே அவனுடன் கதைத்து சிரித்தவாரே நடந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துவிட்டு நாளை பேசிக்கொள்ளலாம் என நினைத்து அவள் தன் கேஸை பார்க்க சென்றுவிட்டாள்.
அவள் விஷ்வாவுடன் நெருங்குவதற்கான காரணமே வேறு..... அஜய்யின் ஜெராக்ஸ் போலவே இருந்தவனை முதன்முறையாக பார்த்தவளிற்கு சற்று அதிக பட்ச அதிர்ச்சி தான்..... என்றாலும் சமாளித்துக் கொண்டாள்.அவனிடம் அஜய்யின் குறும்பு இல்லாவிடினும்.... அவன் காட்டுவது போன்ற அக்கறை அவளை இவனிடம் இன்னும் நெருங்கத்தூண்டியது. அவனிடம் கூட "அண்ணாவ போலவே இருக்கீங்க சார்..." என்றும் சொல்லி விட்டாள். அதற்கு அவன் பதில் புன்னகை மட்டுமே....வீட்டில் உள்ளவர்களுக்கு அவள் அதை தெரியப்படுத்த மறந்து போனதுதான் விதி செய்த சதியோ....
கேபின்.....
தன் கோட்டை வைத்துவிட்டு அவளை அமருமாறு சைகை காட்டியவன்
"சோ..... அண்மைக் காலமா நடக்குற கொலைகள பத்தி இதத்தான் நினைக்கிறீங்களா?"
என விட்டதை தொடர அவளும்
"ஆமா சார்.... அந்த கொலைகள பண்ணவன் சாதாரணமான ஆளா இருக்க முடியாது....ஏன்னா இதுவரைக்கும் அவன் பன்ன கொலைக்கான எந்த ஒரு சின்ன ஆதாரம் கூட இல்லை.... இருந்த ஒரே ஒரு ஆதாரத்தையும் அவன் அழிச்சிட்டான் சார்.."
"அப்படின்னா அவர் தனக்கு எதிரான ஆதாரங்கள் வெளிய வரக்கூடாதுன்னு தெரிஞ்சுதான் பண்ணியிருக்காரு அப்படித்தானே ரிக்ஷி?"
அவன் அப்படி அழைத்ததும் அஜய் தான் ஞாபகம் வந்தான். தனக்கு கஷ்டமான நேரங்களில்... அல்லது மன உளைச்சல் நேரங்களில் தான் அஜய் அக்கறையாக பேசும் போது மட்டுமே வெளிப்படும் வார்த்தை அது....
அவனை கொஞ்ச நேரம் நெற்றி சுருக்கி பார்த்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.
"எஸ்....சார் அன்னைக்கு நைட் அக்ஷ்யா எனக்கு அந்த வீடியோவை அனுப்பி இருக்கா....அது எனக்கு வந்து சேர்ரதுக்குள்ள அவன் அவளைக் கொன்னு அவளையும் ஆதாரத்தையும் சேத்து அழிச்சிட்டான்"
என அவள் கூறவும் விஷ்வாவிற்கு அந்த முகமறியா மர்மக் கொலையாளி மீது கொலைவெறி வந்த அதே சமயம் பிரமிப்பாகவும் இருந்தது.
"சரி இப்போ நீங்க போங்க.... வேறு ஏதாவது இன்பர்மேஷன் கிடைச்சா வந்து மீட் பன்னுங்க ஓகே..?" எனவும் அவளும் " ஓகே " என்று விட்டு வெளியே வந்து அப்பாடா என்று பெருமூச்சு விட்டபடி திரும்ப எத்தனிக்க மூர்ச்சையாகி மயங்கினாள் யாரோ ஒருவனின் கைகளில்....
அவள் மீண்டும் கண் விழிக்கும் போது ஏதோ ஒரு பெரிய அரிசி குடோனில் சேரில் கட்டப்பட்டிருந்தாள். முதலில் கண் விழித்தவளுக்கு எதுவுமே புரியவில்லையாயினும்.... தான் கடத்தப்பட்டிருப்பது தெளிவாக புரிந்தது. ஆனால் எதற்கு? என யோசித்த கேள்விக்கான பதிலாக தடாலென கதவு திறக்கப்பட்டு மெலிந்த உடல்வாகுடைய ஆளை அசரடித்து வீழ்த்தும் அளவு அழகுக்கு சொந்தமான ஒரு பெண் முன்னே வர அவளுக்குப் பின்னே கருப்பு பேண்டும் டீ ஷர்ட்டும் அணிந்து கிட்டத்தட்ட ஒரு ஐந்தாறு பேர் சுற்றி துப்பாக்கிகள் சகிதம் வந்து கொண்டிருந்தனர்.
அப்பெண் முகத்தில் ஒரு ஏளன சிரிப்பு.... மற்றவர்களோ இவளை பாதுகாப்பதை தவிர வேறு வேலையே எங்களுக்குத் தெரியாது என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு வந்து கொண்டிருக்க... அவர்களின் சுட்டெரிக்கும் பார்வையில் உண்மையில் அவளுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.நேரே அவள் முன் வந்து கால் மேல் கால் போட்டு அமர அவள் அமர்ந்ததும் அவள் மாடர்ன் டிரஸ் சற்று விலக அதில் முகத்தை சுளித்த அஷ்வினியை சொடக்கு போட்டு அழைத்த அப்பெண்
"ஹாய் அஷ்...வினி.... ரிக்ஷி...தா...! என்ன அப்பிடி ஷாக்கா பாக்குற...ஓஹ்...நா யாருன்னு கேக்குறியா..?" என்பவளை புரியாது பார்க்க
"சரி... சரி...நானே சொல்லிட்றேன்... நான்தான் தேவ்வொட ஒரிஜினல் பொண்டாட்டி.... தாலி கட்டினதுது உனக்குத்தான்....பட்...லவ் பண்ணது என்னல்ல... அதனாலதான் அப்பிடி...என்று பேர சொல்ல மறந்துட்டேன் பாரேன் நான் "அனன்யா" தெரியும்னு நினைக்கிறேன்..."
"தேவ்" என்பதில் சற்று அழுத்தம் கொடுத்தாதாகவே தோன்றியது அஷ்வினிக்கு....அவளை அதிர்ச்சியாக பார்த்தவளிடம்
"ச்சு...ச்சு.....பாவம் நீ.... பொண்டாட்டின்னு பேரு மட்டும்தான் போல... உனக்கு ஒன்னுமே தெரில... அப்போ வேலை இன்னும் ஈசியா முடிஞ்சிடும் போலவே...." என்றுவிட்டு வில்லி சிரிப்பு சிரித்தவள்
"ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.... மரியாதையா என் தேவ்வோட வாழ்க்கைல இருந்து விலகிறு.... இல்ல.... சாவு உன்னை தேடி வராது அவனுக்குத்தான் வரும்....என் வாழ்க்கைய நாசமாக்கி... எனக்கு புள்ளைய கொடுத்துட்டு.... நல்லவன் மாரி ஒன்ன கட்டிக்கிட்டான்...." என எழப்போனவளின் வார்த்தையில் கோபம் கொப்பளிக்க
" ஏய்...உக்காருடி...." எனவும் அவள் குரலில் சற்று ஆடித்தான் போனாள் அனன்யா.
"ஏய் உட்காருன்னு சொல்றேன்ல.... உனக்கு என்ன காது செவிடா...." என கேட்டு முடிக்கும் முன் இடியாய் வந்திறங்கியது அனன்யாவின் அரை... அதை கண்டு கொள்ளாது
" எனக்கு என் தேவ் வ பத்தி தெரியும் நீ சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை....இந்த அதிகாரம் பண்ற வேலையெல்லாம் ஒன் அடியாளுங்ககிட்ட மட்டும் வெச்சிக்கோ....ஹம்ம்...
என்ன சொன்ன...என்ன சொன்ன.... சாவு அவனைத் தேடி வருமா? குட் ஜோக்....சாவு அவனைத் தேடி வராது.... அவனைப் பார்த்து பயந்து அவன் கிட்ட என்னால போக முடியாதுன்னு உன்கிட்ட தான் வரும்..." என ஏளனமாக கூற அவளைப் பார்த்து கத்தி கத்தி சிரித்துவிட்டு கைதட்டியவள்
"எனக்கு ஏற்கனவே தெரியும்டி... ஓன் அபார நம்பிக்கைய பத்தி.... அதுக்குத்தான் இந்த சின்ன கிப்ட்...." என்றவள் ஒரு போட்டோவை அவள் முன் இருந்த மேஜை மேல் போட அவள் தேவின் மேல் வைத்த நம்பிக்கை சுக்கு நூறாய் உடைந்து போக கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
அந்த போட்டோவில் இருந்தது இதுதான்...
அது ஒரு பார்க்கில் எடுக்கப்பட்டிருக்க... ஆரவ்விற்கு அருகில் ரிஷியும் அவனுக்கு அருகில் அனன்யா... என தோளில் கைபோட்டு சந்தோசமாக நின்று கொண்டிருந்தனர். அதிலும் ரிஷியின் கண்களில் தெரிந்த காதல் பொய்யாக இருக்க வாய்ப்பே இல்லை...... அதில் தெரிந்த நெருக்கம்........
அவளுக்கு அவளை நினைத்தே கூசிப்போன நேரம் அனன்யா மேலும் பேசினாள்.
"அதோட என்ன சொன்ன...? தேவ் ஆ? தேவ்னு நான் தான் கூப்பிடுவேன்.... நீ கூப்பிடும் போது பேர் சொல்ற வேலயெல்லாம் வெச்சிக்காத சொல்லிட்டேன்னு சொல்லியிருப்பானே.....?"
என்று கேட்க உண்மையில் அவன் கோபத்தில் அன்று கேட்டது இன்று உடல் கூசி குறுகிப் போகும் அளவு வலித்தது.
அவள் எண்ணம் போகும் போக்கை நினைத்து திருப்தி அடைந்து முதலை கண்ணீருடன்
"ப்ளீஸ் அஷ்வினி....நீயும் ஒரு பொண்ணு தானே... என் வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பா பேரு தெரியாமல் இருக்கணுமா? அப்பா பெயர் தெரியாம வளர்ர குழந்தைகள் இந்த சமூகத்துல எவ்வளவு கேவலமா பார்க்கடுதுன்னு பார்த்திருக்க தானே?ப்ளீஸ் எங்களை விட்டுடு...எங்க வாழ்க்கைல இருந்து போயிடு....ப்ளீஸ்...."
என கண்ணீர் வடித்து கையெடுத்து கும்பிட்டவள் எழுந்து சென்று விட அவள் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டவர்களும் அவள் பின்னே செல்ல..... அஷ்வினி தான் தேற்றுவாரின்றி ஓய்ந்து போனாள்.
***
தன் முன் தலைகுனிந்து நின்றிருந்தவனை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அவன் முன் வந்து நின்ற ரிஷி
"என்ன நடந்துது..?" என்று கேட்க நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்துவிட்டு மீண்டும் தலையை குனிக்க அதில் சிரித்தவன்
"இப்போ எதுக்கு தலய குனிஞ்சு நிக்கிற...?" என்ற கேள்வியில் விலுக்கென தலையை உயர்த்திப் பார்த்த ஆரவ் ரிஷியின் கண்கள் சிரிக்கவும் "அண்ணா...." என கூறிக்கொண்டே இருக்க அணைக்க தானும் அணைத்தான் ரிஷி.....
சற்று நேரத்தின் பின் அவனை விடுவித்து
"உனக்கு எதுக்குடா இவ்வளவு கோபம் வருது...?"
"பின்ன எண்ணன்னா..... என் அண்ணாக்கு நானே கை ஓங்க மாட்டேன்... அவன்...?"
"அவன் தான் எனக்கு ஓங்கவே இல்லையேடா...."
"அதுக்காக....?"
என்றுவிட்டு மூஞ்சியை திருப்ப அவனை தன் புறம் திருப்பி
"இப்போல்லாம் நீ ஓவரா கோவப்பட்ற...ஆரவ்"
(அத நீ சொல்றத தான் எங்களால தாங்க முடிலடா சாமி...)
"அண்ணா.... எனக்கு என்ன வேணா சொல்லிக்கோ... பட் உனக்கு நீ கூட ஒண்ணுமே சொல்லாத... அதை என்னால தாங்க முடியாது... என்ன அடிச்சு ஒதச்சாலும் உனக்கு ஒன்னுனா நான் சும்மா இருக்க மாட்டேன்....நீயும் சும்மா சும்மா என்ன தடுக்காத"
என்ன கோபித்துக் கொண்டு சென்றுவிட ரிஷியின் முகத்தில் அவனை நினைத்து பெருமிதத்துடன் கூடிய புன்னகை அரும்பியது.... தனக்கு ஆபீஸிலிருந்து கால் வரவும் அங்கு விரைந்தான் ரிஷி.
கயலின் வரவுக்காக பைக்கில் காத்திருந்தான் ஆரவ்.அப்போது தனியாக வந்த ரித்துவிடம்
"ரித்து...கயல் எங்கமா?" என கேட்க
"என் கூடத்தான் வந்தாண்ணா எங்க போனா..." என சுற்றி முற்றி பார்க்க சித்தார்த் ஏதோ அவளிடம் பேசுவது கண்டு கடுப்பானாள்.
அதற்குள் கயல் வந்து பைக்கில் ஏறி சென்று விட நேரே சித்தார்த்திடம் சென்று
"பேசி முடிச்சிட்டீங்களா..." என முறைப்போடு கேட்கவும் அவள் எதை கேட்கிறாள் என புரிந்து மனதிற்குள் சிரிப்பு வந்தாலும் வெளியில்
"ஆமா முடிஞ்சிட்டேன்.......அதுல உனக்கு என்ன வந்தது?"
"ப்ச்....அப்போ உங்களுக்கு என் மேல லவ்வே வராதா சித்....?" என சிணுங்கி அப்பாவியாய் கேட்டவள் முதன்முறை சித்தார்த்தின் மனதில் தன் தடத்தை ஆழமாகப் பதிக்க அவளை பார்த்து புன்னகைத்தவாறே
" அதுக்கான பதிலத்தான் நான் தெளிவா சொல்லிட்டேனே அப்பறமென்ன...?"
"ஒருவேல...லவ் வந்தால்...."
உற்சாகமாக அவள் கேட்க வேண்டும் என்றே அவளை சீண்ட எண்ணியவன்
"வராது" என்ற ஒற்றைச் சொல்லில் அவள் கண்கள் கலங்கிவிட்டது. அதனைப் பார்த்து
"ஹேய் ரித்திக்கா... அழாத... நா எதோ விளையாட்டுக்கு...."என்று ஏதோ சொல்லப் போனவனை தடுத்தவள்
" சாரி சித்...என் மேல உங்களுக்கு லவ் வரும்குற நம்பிக்கைல தான் உங்கள டிஸ்டர்ப் பண்ணேன்.
இனிமேல் பண்ண மாட்டேன்...சாரி..." என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் சென்றுவிட
அவன் தலையில் அடித்துக் கொண்டான்.
இரவு 10 மணியை தாண்டியும் வீட்டிற்கு போக மனமில்லாமல் கடற்கரை மணலில் யாருமற்ற தனிமையில் அமர்ந்திருந்தாள் அஷ்வினி ரக்ஷிதா.
தன் வாழ்க்கையை யாரோ திருடி விட்டு போய் விட்டதாகவே தோன்றியது அவளுக்கு...... முதலிலிருந்து அனைத்தையும் யோசித்தவள் தான் மட்டும் தான் அவனிடம் வழிய போய் பேசி இருக்கிறோமே தவிர அவனாக வந்து எப்போதும் பேசியதேயில்லை என்றது அப்போதுதான் உறைத்தது.
கையில் இருந்த அந்த போட்டோ வேறு அவள் கண்ணீரில் நனைந்து நொறுங்கிப் போய் இருந்தது. தேவின் கண்களில் தெரியும் காதல் தனக்கு சொந்தமானதல்ல என எண்ணும் போதே யாரோ இதயத்தைக் கசக்கிப் பிழிவது போல் இருந்தது.
அவள் பையிலிருந்த செல்போன் தன் இருப்பை உணர்த்த அதில் ஒளிர்ந்த "கமான்டர்" என்ற எண்ணில் அனன்யாவின் வார்த்தைகளும் சேர்ந்துகொள்ள காலை கட்டி பண்ணி விட்டாள்.
மறுபடி மறுபடி கால் வரவும் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி மூடி வைத்துவிட்டாள்
ஒரு மணித்தியாலம் கழித்து.... போவோம் என எழுந்தவளின் முன் நிழல் ஆடவும் அங்கு இவளை கொலைவெறியுடன் பார்த்தவாறு நின்றிருந்தான் ரிஷிகுமார். அவனை பார்க்காதது போல் எழுந்து நிற்க எத்தனிக்க அவன் விட்ட அறையில் நிற்க முடியாமல் தள்ளாடியவளுக்கு ஏனோ அழுகை அழுகையாக வந்தது.
அவன் அறைந்ததில் கையிலிருந்த போட்டோ கீழே விழ அதை அவள் எடுக்கும் முன் அவன் எடுத்திருந்தான்.எடுத்தவனுக்கு கடல் அலைகள் ஓய்ந்து அடங்கி போனது போல் இருக்கவும் அவன் உதடுகள் தானாக
"அனு"என முணுமுணுக்க அதை பார்த்தவுடன்
ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் மொத்தமாக வடிந்து போக அவளும் உடைந்துபோய் மண்ணில் மயங்கி சரிய அவளை தாங்கிப் பிடித்தான் அவளது கணவன்....
தொடரும்..........
27-03-2021.