All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அழகியின் அந்திரன்’ கருத்துத் திரி

deepa

Member
Very nice story mam, everyday I used to wait for your updates. What a lovely flow of the story . Your style of writing the story is really impressed and definitely it is excellent. Mam waiting for your new stories...... Thank you and all the best for your bright future.
 

Kalai karthi

Well-known member
கதை அருமை கலா sis. அந்தினரசன் பெயர் ஏற்றவன் அவன்.அபிராமி இவள் தன் அன்பால் அனைவரையும் அரவணைத்து போகிறவள் . சரண் தைலா சூப்பர். வேங்கடவன் சூப்பர்.மகா செம.கார்த்தி சூப்பர். அகிலா ஆனந்தி டூ மச். கௌசிக் செம. சுபா அரசன் அத்தை 👍. தாத்தா 😈😈. கதையில் காதல் சஸ்பென்ஸ் பாசம் துரோகம் பழி உணர்ச்சி கவிதை கலந்து அருமையாக கொண்டு போயிருக்கேங்க கலா sis. அந்தினரசன் தனது தங்கைக்காக வந்து பின்னர் அபி அன்பை பெற்று தனது வந்த நோக்கத்தை செயல்படுத்தி செல்லவும் அபியின் காதலையும் உணர்ந்து தன்னவளின் உரிமை உணர்வை வெளிப்படுத்தும் போதும் வேடனாக அவளை படுத்தும் போது அழகு தான். அந்தினரசன் தன் காதலையும் தன்னவளையும் பார்த்து கொள்வது அழகு. கௌசிக் காதல் அழகு. அகி டூ மச் சரண் நட்பாக சூப்பர். மகா தங்கையாக சூப்பர். சுபா சுபா அம்மா 👍. கதையில் உண்மைகள் தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்து மற்றவர்களுக்கு மறைப்பதால் நன்மை என்றால் வாழ்க்கை இன்பம் தான். அபி தீரா அவளின் கலவையும் காதலையும் அழகாக காட்டி கவிதை மூழ்கி முத்து எடுக்க வைத்து இருக்கேங்க கலா sis. வாழ்த்துக்கள் கலா sis. வாழ்க வளமுடன்
 

Vaishanika

Bronze Winner
ஹாய் மித்து மேடம் ஸ்டோரி சுபம் ஆயிருச்சு. உங்களோட அந்தினரசனின் அழகியின் கவிதையை எதிர் பார்க்கிறேன். அழகியின் அந்திரனையும் உங்கள் கவி வடிவில் எதிர் பார்க்கிறேன்.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!

இனிய தோழி,

அன்புப் பாடம்
அழகாய் படித்த
அரசன் வென்றான்!

பண்புப் பாடம்
பதமாய் படித்த
அபிராமி வென்றாள்!

அன்பின் ஆளுமையில்
அழகாய் இணைந்த
ஆத்மார்த்த கூடலில்
தேவனும் வேடனும்
அந்திரனாய் உயிர்க்க...
அபிராம வல்லியவள் சிரிக்க...
காதலும் வென்றது
காவியம் ஆனது!

பொய்மையும் வாய்மையிடத்து
வள்ளுவன் வாக்கை
வசமாய் வென்று
பதமாய் இன்று
பவித்திரம் காத்த
எழுத்தரசி நடைக்கு
ஏழேழு ஜென்மமும்
காத்திருக்கலாமே!

இயல்பான வாழ்வை
பக்குவமாய் சொன்ன
கதையின் கருவில்
காதலும் கூதலும்
கவித்துவமன்றோ!

வாழ்த்துகள் தோழி. எதிர்பாராமல் கதையை கொடுத்து, ஏங்கி நின்ற எங்களை உயிர்க்க வைத்த தோழி, நீங்கள் என்றும் பல பல நல் கதைகள் படைக்க என் இனிய வாழ்த்துகள். நன்றி ஸ்ரீமா.
 
Top