இதயம் 3:
மறுநாள் காலையில் ஷாம்னி அக்னியின் தேர்வு முடிவுகள் இன்று வர இருப்பதாலும்,ராமன் இல்லாததால் அவளும் இன்று ஆபிஸ் வரவேண்டும் என்பதால் அவளை அழைத்துக்கொண்டு ஆபிஸ் செல்லலாம் என்று அவள் வீட்டிற்கு சென்றாள்.
அங்கே ஹாலில் உள்ள சத்யாவிடமும்,அவளின் பாட்டி, தாத்தாவிடமும் அவள் எங்கே என்று கேட்டுக்கொண்டு மேலே செல்ல அங்கே பால்கெனி வாசலில் கோபம் சோகம் என இரு உணர்வுகளின் கலவையாக அமர்ந்து இருக்க அவளை பார்த்ததுமே தேர்வு முடிவுகள் சாதகமாக இல்லை என்று.
பாவம் அவளும் என்னதான் செய்வாள் , துசரின் வீட்டின் எதிர்பார்ப்பு தெரிந்ததுலிருந்து அனைத்து தகுதி தேர்வுகளையும் எழுதுகிறாள்தான் அதில் அவள் நல்ல மதிப்பெண்கள் எடுத்த போதும் அவளை விட அதிகம் எடுத்தவர்கள் அதிகம் இருப்பதால் இவளின் வாய்ப்பு வருவதற்குள் காலி இடங்கள் நிரம்பிவிடுகின்றனர்.
வெளியே வேடிக்கை பரர்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தவளின் தோளை ஷாமு தொட்டு “ என்ன ஆச்சு அக்னி “ என்றாள்.
“ 4 மார்குல போயிடுச்சு ஷாமு “என கண் கலங்க பார்த்த தோழியை பார்க்கும் ஷாம்னிக்குமே கண் கலங்கி விட்டது,
அதை மறைத்து கொண்டு” ஏய் ப்லிங்கி எதுக்கு இப்ப அழுகுற ,எவளோ கஷ்டமான சூழ்நிலையெல்லாம் தைரியமா தாண்டி வந்து இருக்க? , இதெல்லாம் சின்ன விஷயம் விடு,அடுத்த எக்ஸாம்ல பார்த்துக்கலாம்”
“ இல்ல ஷாமு எல்லா விஷயத்திலையும் தைரியமா இருக்குற நான் துசர் விஷயத்துல ரொம்ப பலகீனமா சராசரி பெண்கள் போல மாறிடுறேன்,
என் காதல் ஒரு வேளை அந்த அளவுக்கு உறுதியா இல்லையா நானும் இரண்டு வருஷமா ஒரு எக்ஸாம் விடாம எழுதுறேன் ஆனால் எப்பொழுதும் இப்படியே ஆகுதே "
என்க...
“ ஏய் அக்னி நீ கஜினி முகமதோட கசின் சிஸ்டர்ன்னு நினைச்சேன் நீ ஏன் இப்படி இருக்க , அப்படி எந்த எக்ஸாம்ளையும் பாஸ் ஆகலனா அந்த வீட்ல உள்ள 3 பெருசையும் போட்டு தள்ளிட்டு துசர தூக்கிட்டு வந்துறலாம் ,u dont worry baby “ என்றாள்
துசரை கடத்தி கொண்டு செல்வதை தன் மனக்கன்னில் நினைத்து பார்த்தவள் தன் கவலை மறந்து சிரித்துக்கொண்டே ட்ரெஸ்ஸிங் ரூமில் சென்று மறைந்துவிட்டாள் அக்னி.
கீழே வந்து ஷாம்னி அவளுக்காக காத்திருக்க வந்து சேர்ந்தாள் அக்னி ,சற்று முன்பு தன்னிடம் கலங்கியதற்கான அடையாளம் ஏதும் இன்றி நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையுமாக வந்து கொண்டிருந்தாள்.
அக்னிக்கு ஒல்லியும் அல்லாத அதீத குண்டும் இல்லாத சற்று பூசினார் போன்ற உடல்வாகு.அதற்கு தகுந்தாற் போல அவள் அணிந்து கொண்டுவரும் உடை அவ்வளவு பாந்தமாக இருந்தது.
( ஓ திம்சு கட்டன்னு சொல்லுங்க...)
பிளாக் கலர் லைன்ட் பார்மல் பேண்ட் ,வெய்ட் கலர் புல் ஹாண்ட் சேர்ட் ,அதே பிளாக் கலர் லைன்ட் கோர்ட் ,கழுத்தில் ஒரு மெலிதாக ஆங்கர்( anchor) டாலர் வைத்த செயின் ,காதில் ஒற்றைக் கல் பதித்த தோடு போட்டுக்கொண்டு மாடிபடியிலிருந்து இறங்கி கொண்டிருந்தாள்.
அக்னியின் நிலமையில் தான் இருந்து இருந்தால் இந்நேரம் என்ன செய்து இருப்போம் என்று எப்பொழுதும் போல யோசித்துக்கொண்டே அவளை வியப்பாக பார்த்துக்கொண்டு இருந்தாள் ஷாம்னி.
பின் இருவரும் காலை உணவை முடித்துக்கொண்டு பேக்டரி கிளம்பினார்கள்.
பைல் பார்ப்பது, ரேவேன்யூ செக் செய்வது , செக்கில் சைன் செய்வது , புரொடக்ஷன் மேனஜர், அக்கவுண்ட்ஸ் மேனஜருடனான மீட்டிங் என காலை வேலைகளை பார்த்துவிட்டு மதியம் போல புரடக்ஷன் நடக்கும் இடத்திற்கு ரவுண்ட்ஸ் சென்று இருந்தனர் இருவரும் .
அங்கே ஒரு பகுதியில் ஏற்கனவே மக்களுக்கு வினியோகிக்கப்பட்ட பால்,தயிர் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டு வெறும் கவர்கள் மட்டும் மறு சுழற்சிக்காக அங்கே பெரிய மலை போல குவிந்துகிடக்க அதை அள்ளி மிஷினுக்கு அருகில் எடுத்து செல்ல தினக்கூலிக்காக சில பெண்கள் அங்கே வேலை செய்து கொண்டிருக்க ,
அதை சூப்பர்வைஷ் செய்யும் ஒருவன் அங்கே வேலை செய்யும் ஒரு பெண்ணின் தொடக்கூடாத இடங்களை தொட்டுக்கொண்டு “ இப்படி செய் அப்படி செய் “ என்று அந்த பெண்ணை வேலை ஏவிக்கொண்டு இருக்க அந்த பெண்ணும் இவனிடம் கோபத்தை காட்டினால் தன் வேலை போய் விடும் என்பதால் எதும் சொல்லாமல் இருக்க அதை சதாகமாக எடுத்துக்கொண்டு மற்றவர்கள் பார்வையை உறுத்தாத வண்ணம் அந்த பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொண்டிருந்தான் அந்த கயவன்.
அதை பார்த்த அக்னியின் கோபம் உச்சத்தில் சென்றது.
அவனின் பின்புறம் அக்னி வருவதால் அவனுக்கு தெரியவில்லை.வேகமாக வந்தவள் அவன் பின்புறம் தன் வலது காலை அவனின் முதுகுவரை வரை தூக்கி முதுகில் விட்டாள்
ஒரு உதை நான்கு அடி தள்ளி போய் விழுந்தவன் தடுமாறி எழுந்து நிற்க , நின்றவனின் காலரை பிடித்து கன்னம் கன்னமாக அறைந்தவள் ஷாம்னியை நோக்கி “ செண்ட் ஹிம் அவுட் அந்த வேலையை இந்த பொண்ணுக்கு கொடுங்கள் “என்று பெண்ணை கண்களால் காட்டியவள் அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.
ஏன் அவன் அடிவங்கினான் என்று அந்த பெண்ணிற்கும் அவனுக்கும் தவிர வேறுயாருக்கும் தெரியாது ,மற்றவர்களுக்கெல்லாம் இது ஒரு அடக்குமுறையாகதான் தெரியும் .
அங்கு வேலை செய்பவர்களுக்கு அவள் மேல் மரியாதையை விட பயமே அதிகம் இருக்கும்.
ஆண்கள் பெண்கள் என யாருக்கும் பரிந்து போகுபவள் அல்ல அவள்.
அதை போல சில மாதங்களுக்கு முன்னே அவள் அலுவலகத்தில் ஒரு பெண் அங்கு உள்ள பையனை காதலிக்க சொல்லி வற்புறுத்த அவன் மசியவில்லை என்றதும் அவன் தன்னை பாலியல் ரீதியாக தொல்லை செய்வதாக HR டிபார்ட்மென்டில் புகார் செய்ய அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த அக்னி
“ உனக்கு ரீசார்ஜ் செய்யறதுக்கு ,பணம் செலவு பண்ண ,ட்ரெஸ் எடுத்து கொடுக்க,உன்னை கூட்டிகிட்டு ஊர் சுத்த ஆள் தேடுனா அதுக்கான இடம் இது இல்லை , நீ போகலாம் “ என்று அவளை அனுப்பிவிட்டாள் .
அந்த பெண்ணும் சத்தம் போடாமல் சென்றுவிட்டாள்.ஏனென்றால் அக்னி சொன்னது போல டைம் பாஸீர்க்கும்,பணதேவைக்குமே அவனை காதலிப்பதாக கூறியது.
அவள் கண்களில் உண்மை காதலை கண்டாள் அக்னியே அவனிடம் பேசி சம்மதிக்க சொல்லி இருப்பாள் என்பது வேறு கதை.
(ஹா ஹா ஆமா ஆமாம்)
அதே போல தவறுகள் எல்லோருமே செய்வார்கள் என்பது அவளின் எண்ணம் மட்டும் இல்லை உண்மை கூட .
சில வருடங்களுக்கு முன் ஏதோ பொருட்களை டெலிவரி செய்ய சென்ற டெலிவரி பாயை (boy) அந்த வீட்டில் உள்ள நான்கு பெண்கள் கற்பழித்து கொன்றதாக செய்தியை படித்தேன்.
அதை மையப்படுத்து ஒரு திரைப்படம் வந்ததாக கூட நியாபகம்.
அதேபோன்று ஒரு கல்லூரி பேருந்தில் நான்கு ஆண்கள் தன்னை பாலியல் தொல்லை செய்வதாக ஒரு பெண் புகார் கொடுக்க சில வருடங்கள் கோர்ட்டில் நடந்த விசாரணையின் முடிவில் அந்த பெண்கள் பொய் சொன்னார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் பாவம் அந்த நான்கு பசங்களுக்கும் கேஸ் நடந்து கொண்டு இருந்ததால் ராணுவத்தில் சேர்வதற்கான வயது கடந்து அவர்களின் கனவு அழிந்துவிட்டது.
எனவே உண்மை என்பது எங்கு வேண்டுமானாலும் இருக்கும் .அது ஏற்றுக்கொள்ள முடியாத இடத்தில் இருந்தாலும் நாம் அதை அலசுவது அவசியம்
( ...ஷ்....போதும்...இந்தாம்மா ரைட்டரு வாயை மூடிக்கிட்டு கதையை சொல்லு... கருத்தெல்லாம் கடைசி 5 எபில சொல்லு...)
அதனால் ராமன் கூட ஆபிசில் எதும் பிரச்சனை என்றாள் அக்னியை தான் கூப்பிடுவார்.அவள் ஒரு சில நாட்கள் வந்தாள் கூட அவரின் கண்களில் படாத தவறுகள் கூட அவளின் கண்களுக்கு தெரிந்துவிடும்.
எனவே அவளை நிரந்தரமாக நிர்வாக பொறுப்பை எடுத்துக்கொள்ள சொல்கிறார்.அவள் தான் அதற்கு பிடி கொடுப்பதில்லை.
அன்றைய அலுவல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவள் சிறிதுநேரம் தூங்கிவிட்டு 8 மணி போல கருப்பு கலர் ஜீன்ஸ்,கருப்பு மற்றும் வெள்ளையில் பெரிய கட்டங்கள் போட்ட முழுக்கை சட்டை ,சட்டையின் கை முழங்கைவரை ஏற்றி இருந்தது.
சட்டையின் இரு பட்டன்கள் திறந்து இருக்க உள்ளே அவள் அணிந்து இருந்த ரவுண்ட் நெக் வைத்த கருப்பு நிற டிசேர்ட் வெளியே தெரிந்தது.
கையில் ஒரு சிறிய பையுடன் வெளியேறியவள் சத்யாவிடம் ஷாம்னியுடன் நைட் ஷோ படதிற்கு செல்வதாக சொன்னவள் வெளியில் உள்ள ஷாம்னியுடன் பைக்கில் பறந்து சென்றாள்.
அங்கே மாளிகை மாறி உள்ள பெரிய வீட்டின் பின்புறம் உள்ள காமோன்டிற்கு பின் பைக்கை நிறுத்தியவள் முதல் வேலையாக தன் பேக்கில் உள்ள ஜாமரை எடுத்து ஆன் செய்தாள்.குறிப்பிட்ட தூரத்தில் உள்ள போன்கள், கேமராக்கள் வேலை செய்யாமல் இருப்பதற்காக.
“சரியா 1.30 மணிநேரம் கழிச்சி இங்க வா “ என்றவள் காமோன்டின் அருகில் செல்ல
ஷாம்னி” ப்லிங்கி “ என்று ஆரம்பிக்க
“ ஷ் ஷாமு பேச நேரம் இல்லை, கிளம்பு” என்றவள் அந்த ஒன்றரை ஆள் உயரம் உள்ள காமோன்ட் சுவரை அரை நிமிடத்தில் அசால்ட்டாக தாண்டி அந்த புறம் குதித்து மறைந்தாள்.
நேரம் 11 மணியை தாண்டி இருக்க வீட்டில் மனைவி ,மக்கள் என யாரும் இல்லாததால் தன் குடி, குட்டி எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டு தன் அறையில் நுழைந்தான் 45 வயது மதிக்கத்தக்க கமலகர் ரெட்டி
ஹைத்ராபாத்தை பூர்வீகமாக கொண்டு சென்னையில் தொழில் நடத்துபவன்.
இவனின் பிரதான அக்கிரமங்களில் ஒன்று தான் தொழிலில் அடுத்த அடுத்த எல்லைகளுக்கு செல்ல பெண்களை அதும் ஒன்றும் தெரியாத அப்பாவி பெண்களை அவனின் சக தொழிலதிபர்களுக்கு இறை ஆக்குவது.
தன் அறையை திறந்து உள்ளே வர அவனின் கட்டிலில் அக்னி கால் மேல் கால் போட்டுக்கொண்டு தன் இரு கைகளையும் பின்னே ஊன்றி ரெட்டியை முறைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.
“ ஏய் யார் நீ ,நீ எப்படி இங்க வந்த” என அவன் கத்த
அக்னி எந்த அலட்டலும் இல்லாமல் பின்னே ஊன்றி இருந்த கைகளை எடுத்து இல்லாத தூசியை தட்டியவள் அன்று ரங்கநாதனை நோக்கி சொல்லிய அதே வார்த்தைகள் கொஞ்சம் மாற்றி கூறினாள்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல
நீ சாக போற அதான் நீ துடி துடிச்சி சாகுறத பார்க்காலாம்னு வந்தேன் “என்றாள் அலட்சியமாக
அதை கேட்டு சத்தமாக சிரித்த ரெட்டி “நீ...நீ நான் சாகுறதா பார்க்க போறியா “என்று அவளை கேலி பேசியவன் “ செக்யுரிட்டி” என்று குரல் கொடுக்க
அதற்கு அவள் அமர்ந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை அவளின் அலட்சிய பார்வையும் மாறவில்லை மீண்டும் ஒரே ஒரு வார்த்தை “ அவன் இன்னைக்கு லீவு” என்றாள் அறிவிப்பாக
அதன் பின்னே தன் காவலாளி இன்று விடுப்பு எடுத்தது நியாபகம் வர லேசாக பயம் எட்டி பார்க்க இருந்தும் ஒரு பெண் தன்னை என்ன செய்தவிட முடியும் என்று பயத்தை புறம் தள்ளியவன் “ அவன் இல்லனா என்ன “ என்றவன் அவன் பிஸ்டல் வைத்து இருக்கும் ட்ராயரை நோக்கி சென்றான் .
அவளை சுட்டுவிடலாம் இல்லை துப்பாக்கி முனையில் போலீசில் பிடித்து கொடுக்கலாம் என்று.
பாவம் அவனுக்கு தெரியவில்லை எமன் அவனின் உயிரை காவு வாங்க அங்கேதான் பல்லை இழுத்து கொண்டு அமர்ந்து இருப்பதை.
அக்னி உள்ளே வந்ததும் அவளின் அனுமானத்தின் படி மூன்று நான்கு இடங்களில் கரண்ட் சப்ளையை கொடுத்து இருந்தாள். அதில் முதல் அனுமானம் தான் அந்த ட்ராயர்
,கண்டிப்பாக அவன் அவனின் பாதுகாப்பிற்காக அதை எடுப்பான் என்று நினைத்தாள்.
அவனும் அதே போல் அங்கு செல்ல அவளின் அலட்சிய பார்வையுடன் வெற்றி களிப்பும் சேர்ந்து கொண்டது .
ரெட்டி அதை திறப்பதற்காக அதை தொட்ட அடுத்த நொடி உயர் மின்னழுத்தம் அவன் உடலை தாக்க அக்னி சொன்னது போலவே அவளின் முன் துடி துடித்து செத்து போனான்.
பின் இறந்த அவன் உடலை இழுத்துக்கொண்டு பாத்ரூமில் வாகாக போட்டவள் அங்கு உள்ள ஹீட்டரை ஆன் செய்து சில வேலைகளை செய்தவள் பின் தான் வந்ததற்கான அடியாளங்கள் எதும் இருக்கிறதா என்று பார்த்து,
அதை அழித்து அந்த ரூமை பழைய படி மாற்றிவிட்டு தான் வந்த வழியே வெளியே சென்றவள் ஷாம்னியுடன் தன் வீட்டிற்கு சென்று நிம்மதியாக படுத்து தூங்கிவிட்டாள்.
நாளை வந்து ரெட்டியின் நிலையை பார்ப்பவர்கள் “ ஹீட்டரை ஆன் செய்யும் போது ஏற்பட்ட மின்சார கசிவின் காரணமாக ஷாக் அடித்து இறந்துவிட்டான் என்பதே..அந்த அளவு கச்சிதமாக வேலையை முடித்து இருந்தாள் அக்னி..
கொலை செய்கிறோமே என்ற பயமோ , மாட்டிக்கொள்வோமே என்ற பதட்டமோ அவளிடம் கண்டிப்பாக இல்லை , அப்படியே மாட்டிக்கொண்டாளும் எப்படி சமாளிப்பது என்பதில் தெளிவாக இருந்தாள்.
மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து இன்று ஒரு எக்ஸாம் இருப்பதால் படித்து கொண்டிருந்தாள்.
மதியம் 11 மணிக்கு பரிட்சை என்பதால் துசரை பார்த்துவிட்டு ஷாம்னியை அழைத்துக்கொண்டு செல்லலாம் என்று வெளுத்த கலரில் ப்ளூ ஜீன் ,ரெட் அண்ட் பிளாக் செக்ட் புல் ஹாண்ட் சேர்ட்டில் காரை எடுத்துக்கொண்டு மின்வாரியத்தை நோக்கி விரைந்தாள்.
அங்கே ஒரு இஞ்சி டீ சொல்லிவிட்டு தன் கூலரை எடுத்து போட்டுக் கொண்டு அலுவலக வாயிலை வெறித்து பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.
டீயை டேபிள் மேல் வைத்த அங்கு வேலை பார்க்கும் சிறுவன் “சோலை “ ஷாம்னி மற்றும் அக்னியால் “சோனமுத்தா” என்று அழைக்கப்படுபவன் “ அக்கா இன்னைக்கும் வேடிக்கை பார்க்க தான போற “ என்று கலாய்க்க
“போடா பன்னி “ என்று அவனை திட்டியவள் டீயை உறிஞ்சி கொண்டே வாசலை பார்த்து கொண்டிருந்தாள்.
“ அக்கா நீ மெதுவா வேடிக்கை பார்த்துட்டு கிளம்பு ,எனக்கு இன்னைக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும் பணத்தை கொடு” என்றான்.
அக்னி அவனை முறைத்து கொண்டே தன்
டேபிட் கார்டை எடுத்து கொடுக்க தான் கலாய்ப்பதால் தான் அக்கா முறைக்குது என்று தெரிந்தும் “சும்மா முறைக்காத அக்கா படிச்சி முடிச்சி வேலைக்கு போனதுக்கு அப்பறம் எல்லா பணமும் திருப்பி தந்துறேன் “ என்று அவளை வம்புவளத்து கொண்டே சென்றான்.
“போடா இவனே “ என்று அவனை மீண்டும் திட்டியவள் தன்னவன் தரிசனத்திற்காக காத்துக்கொண்டிருந்தாள்.
சரியாக 9.25 க்கு பைக்கை அலுவலக வாயிலில் நிறுத்தியவன் இறங்கி ஒரு டீ குடிக்கலாம் என்று டீக்கடையை நோக்கி செல்ல அங்கு அக்னி கண்ணில் கூலருடன் அமர்ந்து இருந்தாள்.
“நல்லா கொலு பொம்மை மாறி இருக்கா தினம் இங்க யாரை பார்க்க வருவா” என்று யோசித்து கொண்டே செல்ல
( உன்னை பார்க்கத்தான் ராசா...)
துசர் கடையை நோக்கி வரும்போதே அவனை பார்த்துவிட்டவள் கை கால்கள் நடுங்க கூலருக்கு பின் உள்ள கருவிழிகள் பட பட வென்று அடித்து கொள்ள ,உள்ளங்கை வேர்க்க வேகமாக எழுந்தவள் கடையிலிருந்து வெளியே சென்று மறைந்து நின்று கொண்டாள்.
இவனை பார்த்ததும் ஜர்க் ஆகி வெளியே சென்றவளை வித்யாசமாக பார்த்தவன் ஒன்றும் செல்லாமல் சென்று அமர்ந்துவிட்டான்..
( ஏய்..முடிக்காதிங்க முடிக்காதீங்க முடிச்சிடீங்களா ...இனி எப்போ அடுத்த எபியோ...,,
)
போதுமா....