SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 14:
இன்னும் கொஞ்ச நேரத்தில் பங்க்ஷன் ஆரம்பிக்க இருக்க அக்னி தனது நிச்சய புடவையை வெறித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்..
இதுவரை அவள் இது மாதிரி புடவை எல்லாம் அணிந்ததே இல்லை, ஆனால் இன்று அந்த அணிந்ததே ஆகவேண்டும் வேறு வழி இல்லை....
அக்னி அமர்ந்து இருப்பதை பார்த்த ஷாம்னி சிரித்துக்கொண்டே “பிலிங்கி நீ ஸ்கெர்ட் பிளவுஸ் எல்லாம் போட்டுகிட்டு ரெடியா இரு நான் அம்மா கூப்பிட்டாங்க என்னன்னு கேட்டுட்டு வந்து கட்டி விடுறேன்..” என்று வெளியே செல்ல
அந்நேரம் தர்ஷிகா உள்ளே வர அக்னியை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்..
அவள் அழுகை ஓயும் வரை அமைதியாக இருந்த அக்னி கதவை தாழ் போட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தாள்...
தர்ஷிகா “ அக்கா அப்ப அன்னைக்கு நான் துசர் அண்ணாவோட தங்கச்சின்னு தெரியுமா”..என அழுது கொண்டே கேட்க..
“ ஆம் “ என்பது போல அக்னி தலையை ஆட்ட
“அக்கா நீங்க மட்டும் அன்னைக்கு வரலனா நான் செத்த இடத்துல இன்னைக்கு இநேரம் புல்லு முளச்சிருக்கும்...,” என அவளை கை எடுத்து கும்பிட
அவள் கையை கிழே இறக்கிய அக்னி ” அக்கா இல்லை அண்ணி , அப்பறம் அந்த இடத்தில் யாரா இருந்தாலும் நான் அதைதான் பண்ணி இருப்பேன்,இன்னும் நீ என் துசரோட தங்கைன்றதால கொஞ்சம் கூடுதல் , என்றவள் அன்றிலிருந்து இன்று வரை நடந்தது அனைத்தையும் சொல்ல..
தர்ஷிகா வியப்பு,ஆச்சரியம் என வியப்பின் உச்சிக்கே சென்றாள் , ஒரு சாதரண காதலுக்கு ஒரு பெண்ணால் இவ்வளவு செய்ய முடியுமா...,
அய்யோ இவளின் காதலை எப்படி சாதரண காதல் என்று சொல்ல முடியும் அது அசாதரணமானது என்றே தர்ஷிகாக்கு தோன்றியது...
காதல் சில சமயங்களில் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கள்ளக்காதலை கூட நியாயப்படுத்தி விடுமே..
காதலன் உடன் சேர்த்து வைக்க மறுத்த தன் தாயை தன் காதலனுடன் சேர்ந்து கொன்று புதைத்த செய்தியை நாம் அறிவோம், கல்யாணம் ஆகி இரண்டி குழந்தைகளுக்கு தாய் ஆன பெண் தன் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்கு தன் கரு சுமந்த பச்சை குழந்தைகளை கொன்ற கொடூரத்தை கூட நம் நூற்றாண்டில் பார்த்து இருக்கிறோம்..
இது போன்ற இச்சை காதலே இவ்வளவு தைரியம் கொடுக்க ,ஒரு தீண்டலில் உயிர் தொலைத்த அக்னி போன்ற அசாதரண பெண்களின் காதல் எவ்வளவு பலத்தை கொடுக்கும்....
முகம் தொலைத்து..
முகவரி தொலைத்து..
முன்னுரை ஏதும் இன்றி..
முடிவுரை எழுத தூண்டும்...
முரண்பாடு மிக்க முரண் அல்லவா அந்த காதல்..
வாய் அடைத்து போய் நின்ற தர்ஷிகா “அண்ணி வீட்ல எல்லார்ட்டையும் உண்மைய சொல்லலாம் “ என்றவளை தடுத்த அக்னி
அது தெரியவேண்டாம் தர்ஷி என் துசர் ஏற்கனவே என்னால உடைஞ்சி போய் இருக்கான்,
அவனுக்கு இது தெரிஞ்சா அவனால தாங்க முடியாது, அதை என்னாலையும் தாங்க முடியாது “ என்றாள்..
“அண்ணி “ கண்கலங்க தர்ஷிகா நிற்க நிர்மலமான முகத்துடன் தலையை மென்மையாக இடம் வலமாக ஆட்டினாள்..
அந்நேரம் ரூமின் கதவு அடிக்க ஷாம்னியாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டே கதவை திறக்க போனாள் ...
ஆனால் அங்கே நின்றது துசர்..
கரு நீல நிற சட்டை சந்தன கலரில் பாரமல் பேண்ட் போட்டுக்கொண்டு , நெற்றியில் சிறு குங்கும,வீபூதி போட்டுடன் அட்டகாசமாக நின்று இருந்தான் அவளின் மாப்பிள்ளை
அவனை பார்த்ததும் அக்னி முகம் மலர்ந்து இமைகளை பட படவென்று அடிக்க..அவளின் விழி மொழியில் தன்னிச்சையாக அவளின் இமையில் முத்தம் பதிக்க செல்ல...
“அண்ணா..நான் இங்கதான் இருக்கேன் “ என்ற தர்ஷிகாவின் குரலில் அவள் புறம் திரும்பியவன் ...
துசர் “நீ இருந்தா என்ன கண்ணை மூடிக்கோ,” என்றவள் அக்னியின் இரு இமைகளில் முத்தம் இட்டே விலகினான்..
எப்பொழுது நிமிடத்திற்கு நூறு முறை அடிக்கும் அக்னியின் இமைகள் இப்பொழுது ,அவளின் புருவங்களை ஆயிரம் முறை தொட்டு மீள மருதாணி போல சிவந்து போனது அவள் முகம்..
அவளின் சிவந்த முகத்தை ஆச்சர்யமாக தர்ஷிகா பார்த்துக்கொண்டிருக்க அவளின் தோள் மேல் கை போட்டு கொண்டு உள்ளே அழைத்து வந்தான்..
உனக்கு புடவை கட்ட கஷ்டமா இருந்தா நீ எப்பொழுது போல பேண்ட் சேர்ட்டே போட்டுக்கா டா, எந்த ட்ரெஸ்ஸா இருந்தா என்ன நாகரிகமா , யாரை கண்ணையுமுறுத்தாம இருந்தா போதும்” என்றான்..
அக்னிக்கு தெரியும் புடவை கட்டுவது துசருக்கு எவ்வளவு பிடிக்கும் என்று இருந்தும் தனக்காக பார்த்து சொல்லும் துசர் மீண்டும் அவளின் மீதான காதலை வேறு வகையில் நிரூபித்து கொண்டே இருந்தான்..
இல்லை துசர் நான் புடவை கட்டிக்கிறேன் , ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றாள் சிரிப்புடன்..
“தர்பூஸ் எனக்கு உன் காதல் மட்டும் போதும் இந்த சமூக அமைப்போட நியாயமான சம்பரதாயங்களை கேட்டா மட்டும் போதும், நீ உன் விருப்ப படி இரு ,அது நியாயமா இருக்கும்னு 100 % நியாயமா இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு “ என்றவன் சென்று விட்டான்..
பின் ஷாம்னி, தர்ஷிகா சத்யாவின் உதவியுடன் புடவையை கட்டியவள் மேடைக்கு சென்றாள்..
செல்லும் போது பேண்ட் ,சட்டை, அணிந்து நடந்து செல்வதை போல வேக வேகமாக நடந்து செல்ல..
சத்யா “பாப்பு கொஞ்சம் அடக்கமா போடி “ என கெஞ்ச “ எனக்கு அதெல்லாம் வரலம்மா விடுங்க”
என்று புயல் வேகத்தில் யாரு உதவியும் இல்லாமல் செல்ல
“அம்மா வாயெல்லாம் நம்மகிட்டதான்..இப்ப பாருங்க உங்க சீமந்த புத்திரியை “என அவளை புரிந்து கொண்டு ஷாம்னி சொல்ல
அவள் கூறியது போலவே மேடையில் நிற்கும் துசரின் விழிகள் தன் மேல் படர்வதை உணர்ந்ததும் பார்வை நிலம் நோக்க , நடையில் தானாகவே ஒரு நிதானம் வர படப்படப்புடன் நின்று விட்டாள்..
பின் சிரித்துக்கொண்டே அருகில் வந்த ஷாம்னியும், சத்யாவும் அவளை மன மேடைக்கு அழைத்து சென்றனர்..
ஆம் தலை குனிய வேண்டியவர்களிடம் தலைக்கு குனிந்தால் போதும் , மரியாதையாக இருக்க வேண்டிய இடத்தில் மரியாதை வந்தால் போதும் ..எதற்கு எல்லாரிடமும் எல்லா உணர்வும் வர வேண்டும்..
யார் யாரிடம் எந்த எந்த உணர்வுகள் தூண்டப்படவேண்டுமோ ,அவர்களிடம் அது வந்தால் போதுமானது...
மேடையிலிருந்து தன் விழி மொழியாலை பார்த்து உறைந்து விட்டான்.. முதல் முறையாக புடவையில் பார்க்கிறான் தன் சட்டை நிறத்திற்கு பொருத்தமாக அடர் நீல நிறத்தில் உடல் முழுவதும் தங்க நிற பூக்களை கொட்டியது போல, தங்க சரிகையால் வேலை பாடு செய்து இருக்க , அதற்குரிய ஆபரணங்களுடன் அழகாக நடந்து வந்தாள்..
எப்பொழுதும் அவளின் முகத்தையும் , விழியையும் மட்டும் பார்க்கும் துசரின் கண்கள் சற்று இறங்கி அவளின் பெண்மை பிரதேசத்தில் படர புடவையில் தெரிந்த அந்த பூக்குவியல் ஆணவனின் உணர்ச்சியை எரிமலையென வெடித்து கொண்டிருந்தது..
கடின பட்டு பார்வை கீழிறக்க 20 அடி தூரத்திலும் அவளின் தும்பை நிற இடுப்பு பளிச்சென தெரிய..இன்றே கல்யாணம் நடந்தால் என்ன என்ற தோன்றி பெருமூச்சு எழும்ப
அவனின் அந்த பெருமூச்சு அக்னியை இங்கே நெருப்பென தகிக்க ஷாம்னியின் கையை இறுக்கி பிடித்தவள் தன் கண்களால் அவனிடம் கெஞ்ச அவளின் விழி மொழியை புரிந்தவன் சிரித்து கொண்டு தலைய சொரிந்து கொண்டே தலையை திருப்பினான்..
பின் இருவரும் ஒன்றாக மேடை ஏறி நிற்க இருவரின் ஜோடி பொருத்தம் கண்களுக்கு நிறைவாக இருக்க இரு விட்டாருக்கும் அவ்வளவு சந்தோஷம்..
அக்னி மாறனையும் நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தாள்..
இன்னும் ஷாம்னி ,குட்டியின் விஷயம் அக்னியை தவிர யாருக்கும் தெரியாததால்..
குட்டி சத்யாவின் அருகில் நிற்கும் ஷாம்னியை “ ஷாம்னி மாமா.., நிச்சயத்துக்கு வந்தவர்களுக்கு அன்பளிப்பா கொடுக்க வேண்டிய வெள்ளி விளக்கு இருக்குற இடம் உங்களுக்கு தான் தெரியுமாமே உங்களிடம் கேட்க சொன்னாங்க “ என்றவனை
“ ஓ...ஆமா என்னோட வாங்க” என்று அழைத்து செல்ல
அங்கே உள்ள ஸ்டோர் ரூமிற்கு அழைத்து சென்றாள்,உள்ளே சென்றதும் அவன் தாள் போட்டு அவள் ஒல்லி தேகத்துக்கு பொருத்தமான காக்ரா ஜோலியில் கையை தூக்கும் போதெல்லாம் தெரிந்த அந்த இடுப்பை அழுத்தி பிடிக்க..
அதில் கூச்சம் வந்தாலும் முயன்று அடக்கியவள் “குட்டி கண்ணு இதுக்குதான் தனியா அழைச்சிகிட்டு வந்து இருக்கா என்ற நினைத்தவள் அவனின் இன்னொரு கையும் எடுத்து இடுப்பில் வைத்து அவன் கன்னங்களில் வைக்க...
“ அய்யா ஜாலி..என்று குட்டி கண்களை மூடிக்கொள்ள நமட்டு சிரிப்புடன் அவன் முகம் நோக்கி சென்று அவனின் மூக்கை தன் கூர் பற்களால் அவனின் மூக்கை வலிக்க கடித்தவள் அவன் சுதாரிக்கும் முன் அங்கிருந்து ஓடிவிட்டாள்..
(பயபுள்ள எதும் ரொமான்சா பண்ணுன்னு பார்த்தா...மூக்கை கடிக்குது..ஏற்கனவே குட்டிக்கு மூக்கு கொஞ்சம் ஓவர் சைஸ்...பாவம்...)
அங்கே மரம் அறுத்து அதை மர சாமன்களாக மற்றும் அந்த பெரிய அளவில் இயங்கும் அந்த பிளே வுட்ஸ் கம்பெனியில் .
அந்த மரத்தை அறுக்கும் ராட்சச மிஷினில் மரத்திற்கு பதில் ஒரு அதிகாரியின் கை இருக்க
அங்கே அந்த ஜிந்தா இருந்தான்.
பசங்க கை எழுத்து போட சொன்னனத்துக்கு டாகுமெண்ட்ஸ்ல பொய்யா இருக்குன்னு...மாட்டேன்னு சொன்னியாம்..., அதனால இனி நீ யாருக்கும் கை எழுத்து போட வேண்டாம் கீப் ரெஸ்ட்” என்றவன் தன் ஆளை நோக்கி கண்ணை காட்டா
சைன் பண்றேன் “, சைன் பண்றேன் என்று அந்த அதிகாரி சொன்னதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவனின் இரு கை விரலும் வெட்டி எடுக்கப்பட்டது..
வலியில் துடிக்கும் அவனை பார்த்த ஜிந்தா நீ போடுற மூடுல இருந்தாலும்...நான் வாங்குற மூடுல இல்லை “ என கூறிவிட்டு தன்அடியாளை நோக்கி இவனை தூக்கி அவன் வேலை செய்ற ஆபிஸ் வாசல்ல போடுங்க,
இவனை என்ன காரணத்துக்காக இப்படி செஞ்சோம்னு நம்ம எதுக்கு இவனை இப்படி பண்ணனும்னு நம்ம ஆளை விட்டே நம்ம சர்கில் ,நமக்கு தேவை படுற சைனிங் ஆத்தாரிட்டி உள்ளவர்களுக்கு சொல்ல சொல்லு..,
ஜிந்தா கேட்ட உயிரையே இருந்தாலும் இங்க உள்ளவங்க கொடுக்கணும்..ம்ம்..போ..” என்றான்..
பின் சதீஸ் மற்றும் சமித்தின் புறம் திரும்பியவன் “ உங்க 4 பிரண்ட்ஸ்சோடா சாவுக்கு காரணம் ஒரு பொண்ணு..
செத்த 3 பேரோட சுத்தி உள்ளவங்களை என்குவரி பண்ணும் போது எதுவும் கிடைக்கலை ஆனால் அமித் செத்த அன்னைக்கு ஒரு பொண்ணு வந்து அமித்தோட பொண்ணு தியாவை அலைச்சிக்கிட்டு போய் இருக்கா...
அமித் இறக்குற செய்தி அமித் வீட்டுக்கு தெரியுற அரை மணி நேரத்துக்கு முன்ன சரியா தியா வீட்டுக்கு போய் இருக்க..
தியா காலேஜ்லேந்து அந்த பொண்ணோட போன 2 மணி நேரத்துல தான் அமித் இறந்து இருக்கான்..
தியா அவங்க அப்பாவை கொல்றதுகான வாய்ப்புகள் கம்மி..கண்டிப்பா தியாவை அழைச்சிக்கிட்டு போன பொண்ணுக்கு கொலையில கண்டிப்பா பங்கு இருக்கும்..
இல்லை அந்த பொண்ணு மட்டும்தான் காரணமா இருப்பாள்..ஏன்னா உங்க 4 பேருக்கும் பொதுவான விஷயம் பெண்கள் தான்...
இன்னும் ஒரு வாரத்துல அது யாரு என்னன்னு கண்டு பிடிச்சு சொல்றேன்..
பேசுன படி அந்த பெண்ணை யாருன்னு கண்டு பிடிச்சு சொல்லவும் ,உங்க 2 பேரோட உயிரை காப்பத்தவும் 10 கோடியை பணமா கொடுத்துடுங்க... “ என்றவன் வேலை முடிந்தது என்பது போல எழுந்து சென்றுவிட்டான் ..
தன்னை நோக்கி ஒரு பலமான எதிரி நெருங்கி வருவதை அறிந்தாலும் தன் இலக்கில் எந்த மாறுதலும் இல்லாமல் தனது அடுத்த காவிற்கான நாளுக்காக கண் கொத்தி பாம்பாக காத்துக்கொண்டிருந்தாள் அக்னி...
போதுமா.....
இன்னும் கொஞ்ச நேரத்தில் பங்க்ஷன் ஆரம்பிக்க இருக்க அக்னி தனது நிச்சய புடவையை வெறித்து கொண்டு அமர்ந்து இருந்தாள்..
இதுவரை அவள் இது மாதிரி புடவை எல்லாம் அணிந்ததே இல்லை, ஆனால் இன்று அந்த அணிந்ததே ஆகவேண்டும் வேறு வழி இல்லை....
அக்னி அமர்ந்து இருப்பதை பார்த்த ஷாம்னி சிரித்துக்கொண்டே “பிலிங்கி நீ ஸ்கெர்ட் பிளவுஸ் எல்லாம் போட்டுகிட்டு ரெடியா இரு நான் அம்மா கூப்பிட்டாங்க என்னன்னு கேட்டுட்டு வந்து கட்டி விடுறேன்..” என்று வெளியே செல்ல
அந்நேரம் தர்ஷிகா உள்ளே வர அக்னியை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்..
அவள் அழுகை ஓயும் வரை அமைதியாக இருந்த அக்னி கதவை தாழ் போட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தாள்...
தர்ஷிகா “ அக்கா அப்ப அன்னைக்கு நான் துசர் அண்ணாவோட தங்கச்சின்னு தெரியுமா”..என அழுது கொண்டே கேட்க..
“ ஆம் “ என்பது போல அக்னி தலையை ஆட்ட
“அக்கா நீங்க மட்டும் அன்னைக்கு வரலனா நான் செத்த இடத்துல இன்னைக்கு இநேரம் புல்லு முளச்சிருக்கும்...,” என அவளை கை எடுத்து கும்பிட
அவள் கையை கிழே இறக்கிய அக்னி ” அக்கா இல்லை அண்ணி , அப்பறம் அந்த இடத்தில் யாரா இருந்தாலும் நான் அதைதான் பண்ணி இருப்பேன்,இன்னும் நீ என் துசரோட தங்கைன்றதால கொஞ்சம் கூடுதல் , என்றவள் அன்றிலிருந்து இன்று வரை நடந்தது அனைத்தையும் சொல்ல..
தர்ஷிகா வியப்பு,ஆச்சரியம் என வியப்பின் உச்சிக்கே சென்றாள் , ஒரு சாதரண காதலுக்கு ஒரு பெண்ணால் இவ்வளவு செய்ய முடியுமா...,
அய்யோ இவளின் காதலை எப்படி சாதரண காதல் என்று சொல்ல முடியும் அது அசாதரணமானது என்றே தர்ஷிகாக்கு தோன்றியது...
காதல் சில சமயங்களில் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கள்ளக்காதலை கூட நியாயப்படுத்தி விடுமே..
காதலன் உடன் சேர்த்து வைக்க மறுத்த தன் தாயை தன் காதலனுடன் சேர்ந்து கொன்று புதைத்த செய்தியை நாம் அறிவோம், கல்யாணம் ஆகி இரண்டி குழந்தைகளுக்கு தாய் ஆன பெண் தன் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்கு தன் கரு சுமந்த பச்சை குழந்தைகளை கொன்ற கொடூரத்தை கூட நம் நூற்றாண்டில் பார்த்து இருக்கிறோம்..
இது போன்ற இச்சை காதலே இவ்வளவு தைரியம் கொடுக்க ,ஒரு தீண்டலில் உயிர் தொலைத்த அக்னி போன்ற அசாதரண பெண்களின் காதல் எவ்வளவு பலத்தை கொடுக்கும்....
முகம் தொலைத்து..
முகவரி தொலைத்து..
முன்னுரை ஏதும் இன்றி..
முடிவுரை எழுத தூண்டும்...
முரண்பாடு மிக்க முரண் அல்லவா அந்த காதல்..
வாய் அடைத்து போய் நின்ற தர்ஷிகா “அண்ணி வீட்ல எல்லார்ட்டையும் உண்மைய சொல்லலாம் “ என்றவளை தடுத்த அக்னி
அது தெரியவேண்டாம் தர்ஷி என் துசர் ஏற்கனவே என்னால உடைஞ்சி போய் இருக்கான்,
அவனுக்கு இது தெரிஞ்சா அவனால தாங்க முடியாது, அதை என்னாலையும் தாங்க முடியாது “ என்றாள்..
“அண்ணி “ கண்கலங்க தர்ஷிகா நிற்க நிர்மலமான முகத்துடன் தலையை மென்மையாக இடம் வலமாக ஆட்டினாள்..
அந்நேரம் ரூமின் கதவு அடிக்க ஷாம்னியாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டே கதவை திறக்க போனாள் ...
ஆனால் அங்கே நின்றது துசர்..
கரு நீல நிற சட்டை சந்தன கலரில் பாரமல் பேண்ட் போட்டுக்கொண்டு , நெற்றியில் சிறு குங்கும,வீபூதி போட்டுடன் அட்டகாசமாக நின்று இருந்தான் அவளின் மாப்பிள்ளை
அவனை பார்த்ததும் அக்னி முகம் மலர்ந்து இமைகளை பட படவென்று அடிக்க..அவளின் விழி மொழியில் தன்னிச்சையாக அவளின் இமையில் முத்தம் பதிக்க செல்ல...
“அண்ணா..நான் இங்கதான் இருக்கேன் “ என்ற தர்ஷிகாவின் குரலில் அவள் புறம் திரும்பியவன் ...
துசர் “நீ இருந்தா என்ன கண்ணை மூடிக்கோ,” என்றவள் அக்னியின் இரு இமைகளில் முத்தம் இட்டே விலகினான்..
எப்பொழுது நிமிடத்திற்கு நூறு முறை அடிக்கும் அக்னியின் இமைகள் இப்பொழுது ,அவளின் புருவங்களை ஆயிரம் முறை தொட்டு மீள மருதாணி போல சிவந்து போனது அவள் முகம்..
அவளின் சிவந்த முகத்தை ஆச்சர்யமாக தர்ஷிகா பார்த்துக்கொண்டிருக்க அவளின் தோள் மேல் கை போட்டு கொண்டு உள்ளே அழைத்து வந்தான்..
உனக்கு புடவை கட்ட கஷ்டமா இருந்தா நீ எப்பொழுது போல பேண்ட் சேர்ட்டே போட்டுக்கா டா, எந்த ட்ரெஸ்ஸா இருந்தா என்ன நாகரிகமா , யாரை கண்ணையுமுறுத்தாம இருந்தா போதும்” என்றான்..
அக்னிக்கு தெரியும் புடவை கட்டுவது துசருக்கு எவ்வளவு பிடிக்கும் என்று இருந்தும் தனக்காக பார்த்து சொல்லும் துசர் மீண்டும் அவளின் மீதான காதலை வேறு வகையில் நிரூபித்து கொண்டே இருந்தான்..
இல்லை துசர் நான் புடவை கட்டிக்கிறேன் , ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றாள் சிரிப்புடன்..
“தர்பூஸ் எனக்கு உன் காதல் மட்டும் போதும் இந்த சமூக அமைப்போட நியாயமான சம்பரதாயங்களை கேட்டா மட்டும் போதும், நீ உன் விருப்ப படி இரு ,அது நியாயமா இருக்கும்னு 100 % நியாயமா இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு “ என்றவன் சென்று விட்டான்..
பின் ஷாம்னி, தர்ஷிகா சத்யாவின் உதவியுடன் புடவையை கட்டியவள் மேடைக்கு சென்றாள்..
செல்லும் போது பேண்ட் ,சட்டை, அணிந்து நடந்து செல்வதை போல வேக வேகமாக நடந்து செல்ல..
சத்யா “பாப்பு கொஞ்சம் அடக்கமா போடி “ என கெஞ்ச “ எனக்கு அதெல்லாம் வரலம்மா விடுங்க”
என்று புயல் வேகத்தில் யாரு உதவியும் இல்லாமல் செல்ல
“அம்மா வாயெல்லாம் நம்மகிட்டதான்..இப்ப பாருங்க உங்க சீமந்த புத்திரியை “என அவளை புரிந்து கொண்டு ஷாம்னி சொல்ல
அவள் கூறியது போலவே மேடையில் நிற்கும் துசரின் விழிகள் தன் மேல் படர்வதை உணர்ந்ததும் பார்வை நிலம் நோக்க , நடையில் தானாகவே ஒரு நிதானம் வர படப்படப்புடன் நின்று விட்டாள்..
பின் சிரித்துக்கொண்டே அருகில் வந்த ஷாம்னியும், சத்யாவும் அவளை மன மேடைக்கு அழைத்து சென்றனர்..
ஆம் தலை குனிய வேண்டியவர்களிடம் தலைக்கு குனிந்தால் போதும் , மரியாதையாக இருக்க வேண்டிய இடத்தில் மரியாதை வந்தால் போதும் ..எதற்கு எல்லாரிடமும் எல்லா உணர்வும் வர வேண்டும்..
யார் யாரிடம் எந்த எந்த உணர்வுகள் தூண்டப்படவேண்டுமோ ,அவர்களிடம் அது வந்தால் போதுமானது...
மேடையிலிருந்து தன் விழி மொழியாலை பார்த்து உறைந்து விட்டான்.. முதல் முறையாக புடவையில் பார்க்கிறான் தன் சட்டை நிறத்திற்கு பொருத்தமாக அடர் நீல நிறத்தில் உடல் முழுவதும் தங்க நிற பூக்களை கொட்டியது போல, தங்க சரிகையால் வேலை பாடு செய்து இருக்க , அதற்குரிய ஆபரணங்களுடன் அழகாக நடந்து வந்தாள்..
எப்பொழுதும் அவளின் முகத்தையும் , விழியையும் மட்டும் பார்க்கும் துசரின் கண்கள் சற்று இறங்கி அவளின் பெண்மை பிரதேசத்தில் படர புடவையில் தெரிந்த அந்த பூக்குவியல் ஆணவனின் உணர்ச்சியை எரிமலையென வெடித்து கொண்டிருந்தது..
கடின பட்டு பார்வை கீழிறக்க 20 அடி தூரத்திலும் அவளின் தும்பை நிற இடுப்பு பளிச்சென தெரிய..இன்றே கல்யாணம் நடந்தால் என்ன என்ற தோன்றி பெருமூச்சு எழும்ப
அவனின் அந்த பெருமூச்சு அக்னியை இங்கே நெருப்பென தகிக்க ஷாம்னியின் கையை இறுக்கி பிடித்தவள் தன் கண்களால் அவனிடம் கெஞ்ச அவளின் விழி மொழியை புரிந்தவன் சிரித்து கொண்டு தலைய சொரிந்து கொண்டே தலையை திருப்பினான்..
பின் இருவரும் ஒன்றாக மேடை ஏறி நிற்க இருவரின் ஜோடி பொருத்தம் கண்களுக்கு நிறைவாக இருக்க இரு விட்டாருக்கும் அவ்வளவு சந்தோஷம்..
அக்னி மாறனையும் நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தாள்..
இன்னும் ஷாம்னி ,குட்டியின் விஷயம் அக்னியை தவிர யாருக்கும் தெரியாததால்..
குட்டி சத்யாவின் அருகில் நிற்கும் ஷாம்னியை “ ஷாம்னி மாமா.., நிச்சயத்துக்கு வந்தவர்களுக்கு அன்பளிப்பா கொடுக்க வேண்டிய வெள்ளி விளக்கு இருக்குற இடம் உங்களுக்கு தான் தெரியுமாமே உங்களிடம் கேட்க சொன்னாங்க “ என்றவனை
“ ஓ...ஆமா என்னோட வாங்க” என்று அழைத்து செல்ல
அங்கே உள்ள ஸ்டோர் ரூமிற்கு அழைத்து சென்றாள்,உள்ளே சென்றதும் அவன் தாள் போட்டு அவள் ஒல்லி தேகத்துக்கு பொருத்தமான காக்ரா ஜோலியில் கையை தூக்கும் போதெல்லாம் தெரிந்த அந்த இடுப்பை அழுத்தி பிடிக்க..
அதில் கூச்சம் வந்தாலும் முயன்று அடக்கியவள் “குட்டி கண்ணு இதுக்குதான் தனியா அழைச்சிகிட்டு வந்து இருக்கா என்ற நினைத்தவள் அவனின் இன்னொரு கையும் எடுத்து இடுப்பில் வைத்து அவன் கன்னங்களில் வைக்க...
“ அய்யா ஜாலி..என்று குட்டி கண்களை மூடிக்கொள்ள நமட்டு சிரிப்புடன் அவன் முகம் நோக்கி சென்று அவனின் மூக்கை தன் கூர் பற்களால் அவனின் மூக்கை வலிக்க கடித்தவள் அவன் சுதாரிக்கும் முன் அங்கிருந்து ஓடிவிட்டாள்..
(பயபுள்ள எதும் ரொமான்சா பண்ணுன்னு பார்த்தா...மூக்கை கடிக்குது..ஏற்கனவே குட்டிக்கு மூக்கு கொஞ்சம் ஓவர் சைஸ்...பாவம்...)
அங்கே மரம் அறுத்து அதை மர சாமன்களாக மற்றும் அந்த பெரிய அளவில் இயங்கும் அந்த பிளே வுட்ஸ் கம்பெனியில் .
அந்த மரத்தை அறுக்கும் ராட்சச மிஷினில் மரத்திற்கு பதில் ஒரு அதிகாரியின் கை இருக்க
அங்கே அந்த ஜிந்தா இருந்தான்.
பசங்க கை எழுத்து போட சொன்னனத்துக்கு டாகுமெண்ட்ஸ்ல பொய்யா இருக்குன்னு...மாட்டேன்னு சொன்னியாம்..., அதனால இனி நீ யாருக்கும் கை எழுத்து போட வேண்டாம் கீப் ரெஸ்ட்” என்றவன் தன் ஆளை நோக்கி கண்ணை காட்டா
சைன் பண்றேன் “, சைன் பண்றேன் என்று அந்த அதிகாரி சொன்னதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவனின் இரு கை விரலும் வெட்டி எடுக்கப்பட்டது..
வலியில் துடிக்கும் அவனை பார்த்த ஜிந்தா நீ போடுற மூடுல இருந்தாலும்...நான் வாங்குற மூடுல இல்லை “ என கூறிவிட்டு தன்அடியாளை நோக்கி இவனை தூக்கி அவன் வேலை செய்ற ஆபிஸ் வாசல்ல போடுங்க,
இவனை என்ன காரணத்துக்காக இப்படி செஞ்சோம்னு நம்ம எதுக்கு இவனை இப்படி பண்ணனும்னு நம்ம ஆளை விட்டே நம்ம சர்கில் ,நமக்கு தேவை படுற சைனிங் ஆத்தாரிட்டி உள்ளவர்களுக்கு சொல்ல சொல்லு..,
ஜிந்தா கேட்ட உயிரையே இருந்தாலும் இங்க உள்ளவங்க கொடுக்கணும்..ம்ம்..போ..” என்றான்..
பின் சதீஸ் மற்றும் சமித்தின் புறம் திரும்பியவன் “ உங்க 4 பிரண்ட்ஸ்சோடா சாவுக்கு காரணம் ஒரு பொண்ணு..
செத்த 3 பேரோட சுத்தி உள்ளவங்களை என்குவரி பண்ணும் போது எதுவும் கிடைக்கலை ஆனால் அமித் செத்த அன்னைக்கு ஒரு பொண்ணு வந்து அமித்தோட பொண்ணு தியாவை அலைச்சிக்கிட்டு போய் இருக்கா...
அமித் இறக்குற செய்தி அமித் வீட்டுக்கு தெரியுற அரை மணி நேரத்துக்கு முன்ன சரியா தியா வீட்டுக்கு போய் இருக்க..
தியா காலேஜ்லேந்து அந்த பொண்ணோட போன 2 மணி நேரத்துல தான் அமித் இறந்து இருக்கான்..
தியா அவங்க அப்பாவை கொல்றதுகான வாய்ப்புகள் கம்மி..கண்டிப்பா தியாவை அழைச்சிக்கிட்டு போன பொண்ணுக்கு கொலையில கண்டிப்பா பங்கு இருக்கும்..
இல்லை அந்த பொண்ணு மட்டும்தான் காரணமா இருப்பாள்..ஏன்னா உங்க 4 பேருக்கும் பொதுவான விஷயம் பெண்கள் தான்...
இன்னும் ஒரு வாரத்துல அது யாரு என்னன்னு கண்டு பிடிச்சு சொல்றேன்..
பேசுன படி அந்த பெண்ணை யாருன்னு கண்டு பிடிச்சு சொல்லவும் ,உங்க 2 பேரோட உயிரை காப்பத்தவும் 10 கோடியை பணமா கொடுத்துடுங்க... “ என்றவன் வேலை முடிந்தது என்பது போல எழுந்து சென்றுவிட்டான் ..
தன்னை நோக்கி ஒரு பலமான எதிரி நெருங்கி வருவதை அறிந்தாலும் தன் இலக்கில் எந்த மாறுதலும் இல்லாமல் தனது அடுத்த காவிற்கான நாளுக்காக கண் கொத்தி பாம்பாக காத்துக்கொண்டிருந்தாள் அக்னி...
போதுமா.....