Samvaithi007
Bronze Winner
முடியுதம்மா...பந்தம் அது பாசத்தில் வந்தாலும்
சொந்தம் அது சோகத்தில் வந்தாலும்
சந்தம் அது கோஷத்தில் வந்தாலும்
அந்தம் அது அமைதியில் முடியுதம்மா...!
அன்புடன்
செல்வி சிவானந்தம்
பகலின் முடிவு இரவாகவும்....
இரவின் முடிவு பகலாகவும் ....
காலதேவன் காலசக்கரத்தை காலம் காலமாக சுழற்றுகின்றான்.....
கருமையும் வெண்மையும் சேர்த்தே குழைத்தான்....
அதனை மனிதன் என்னும் உருவத்தில் கலந்தே நடமாட விட்டான்....
ஒப்பில்லா உலகில் உறவாட நன்மைகள் பல வைத்தாலும்....தீமைகளையும் சேர்த்தே வைத்தான்....
தீமைகளை தீண்டாமல் நன்மைகளை நாடிட மனமதனை சேர்த்தே படைத்தவன்
அந்தோ பரிதாபம்....படைத்தவன் திகைத்தான்...படைத்தை காரணத்தையே ....மறந்துவிட்டு பதில் தேடியே களைத்தான்....
பாழும் மனிதர்கள் வாழும் வாழ்க்கையின் அவலத்தை பார்த்து......!!!!!!