அதே நேரம் சென்னையில்.......
நகரத்திற்கு சற்று தொலைவில் இருந்த அந்த வீட்டின் ஒர் இருட்டறையில் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் கண்களிலில் மரணத்திற்கு நிகரான வலி இருந்தது. எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவனது நினைவுகளோ தன்னவளை சிந்தித்தது.
"ஏன் ஹனி இப்படி பண்ண. நா உனக்கு அப்படி என்ன தப்பு பண்ணேன். உன் மேல உயிரா இருந்தது தான் நா செஞ்ச தப்பா. என் மேல உயிரையே வச்சிருகேனு சொல்லிட்டு என் உயிர என்கிட்டேர்ந்து பிரிச்சிட்ட.
நீ இந்த உலகத்துல இல்லனு நா நம்பனும்னு ஏன் நினைக்கிற ஹனி. இந்த உலகமே நீ இல்லனு சொன்னாலும் நா நம்ப மாட்டேன். என் மனசு சொல்லுது , நீ உயிரோட இருக்கேனு.
உண்மையிலே நீ இல்லனா நானும் இருந்துருக்க மாட்டேன். எனக்கு நல்லது பண்றேனு , துரோகம் பண்ணிட்ட ஹனி. இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? இப்ப நீ என் கூட இல்லங்கறது எவ்வளவு வலிக்குது தெரியுமா.
எதையும் வெளிய காட்டிக்காம சந்தோஷமா இருக்க மாதிரி நடிக்க நா படுற பாடு நரக வேதனை. காதல் பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் வலிய தரும். யார்க்கிட்டயும் சொல்லவும் முடியாம உன்ன நினச்சு நினச்சு நா சாகப் போறேன் "
ஊமையின் குமறலாய் அத்துவின் மனம் துடித்தது.
சில மாதங்களுக்கு பிறகு..........
ராமின் வீட்டில்.........
"ராம்....... ராம்..... தம்பி என்னப்பா பண்ற. " கமலத்தின் குரல் வீடெங்கும் எதிரொலித்தது. வீட்டினில் இருந்த அனைவரும் அவரது குரலில் திரும்பி பார்த்தனர்.
தன்னுடைய கிண்ணத்தில் வைக்கப்பட்ட பாலை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த பப்லு இடையூறாய் கேட்ட குரலில் பாலைக் குடிப்பதை நிறுத்தி விட்டு தலையை தூக்கிப் பார்த்தது. ராம் என்ற அழைப்பில் அது தனது எஜமானின் அறையை எட்டிப் பார்த்தது.
இவ்வளவு நடந்தும் ராமிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவரது குரல் கேட்டால் எந்த வேலை செய்தாலும் அதை விட்டுவிட்டு வருபவன் இன்று ஏனென்று கூட கேட்காதது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யமாயிருந்தது.
"என்னாச்சு..... தம்பிக்கு..... ஏன் பதில் கூட சொல்ல மாட்டேங்குது. காலைல ஓடவும் (ஜாகிங்) போகல . சரி காபி குடிக்கவாவது கீழே வரும்னு பாத்தா இப்பவும் வரல. ரூமுக்கு கொண்டு போனா தம்பிக்கு பிடிக்காது." தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தார்.
கமலத்தின் குரல் கேட்டு வந்த ஈஸ்வர், கமலத்தை அதிசமாய் பார்த்தார்.
"என்னங்கய்யா பாக்குறீங்க"
"ஏன்மா... என்னாச்சு இவ்ளோ சத்தம் போட்டுட்டு இருக்க"
"இல்லங்கய்யா. தம்பி இன்னும் ரூமவிட்டு வெளிய வரல. நைட் சாப்டவும் இல்ல. வேணாமுனு சொல்லிடுச்சாம். " அவர் சொல்லவும் ஈஸ்வரின் மூளை சிந்திக்க தொடங்கியது.
இவர்களது உரையாடலை கேட்டவாறே வந்த ஸ்ரீ , "அண்ணாக்கு ஏதாவது வேல டென்ஷன் இருந்துருக்கும். காபி தான குடுக்கணும் , குடுங்க நா கொண்டு போறேன்."
"ஸ்ரீ தம்பிக்கு தான் ரூமுக்கு சாப்பாடு , காபி எல்லாம் கொண்டு போனா பிடிக்காதே"
"நா பாத்துக்குறேன். குடுங்க அம்மா எனக்கும் சேர்த்து"
"இந்தாப்பா.... " என்று இரண்டு காபிக் கோப்பைகளை கொடுத்தார்.
அதை வாங்கி கொண்டவன் , தன்னுடைய தமையனின் அறைக் கதவைத் தட்டினான்.
ஆனால் அவனுக்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை எனவும், தானே கதவினைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.
தாழ்போடப்படாமல் இருந்த கதவு சட்டென திறந்து கொள்ள , அறையினுள் சென்றவன் தன் தமையனை தேட அவனோ அறையிலில்லை.
ராமின் கட்டில் முழுவதும் பல காகிதங்கள் சிதறிக் கிடந்தன, மேஜையில் புத்தகங்கள் கலைந்து கிடந்தன. அவற்றை பார்த்த பிறகு ஸ்ரீ க்கு தமையனின் மனநிலை புரிந்தது. என்ன நடந்தது என்று அவனுக்கு தெரியவில்லை. ஆனால் அண்ணன் குழப்பத்துடன் இருக்கிறான் என்பது மட்டும் அவனுக்கு தெரிந்தது.
காபிக் கோப்பையை அங்கிருந்த மேஜையின் மேலே வைத்தவன் , அந்த அறையின் பால்கனிக்கு (balcony) சென்றான். அங்கே சேரில் அமர்ந்து எதையோ யோசித்து கொண்டிருந்த தமையனைக் கண்டான்.
"அண்ணா.... அண்ணா " என்ற படி ராமின் தோளினைப் பற்றி உலுக்கினான். அதில் சுய உணர்வு பெற்றவன் ஸ்ரீ யை தன்னுடைய அறையில் அதுவும் அவன் முறைப்புடன் நிற்பதை பார்த்ததும் சற்று திணறியவன்.