"தனியாலாம் பேசலடா.... உன்னோட பிரண்ட் கால் பண்ணிருந்தாங்க . அவங்களுக்கு உடம்பு சரியில்லையாம். சோ இன்னைக்கு லீவ்னு இன்பார்ம் பண்ண சொன்னாங்க. "
"ஓ..ஓ... சரிணா நா அவ கிட்ட பேசிக்குறேன்"
ஸ்ரீ சொல்லவும் தான் கனியும், ஸ்ரீ யும் ஒருவரை ஒருவர் ஒருமையில் அழைப்பதை உணர்ந்தான். மனதில் ஏதோ வலி பரவ அவன் ஸ்ரீ யின் அறையிலிருந்து வெளியேற முயலுகையில் ஸ்ரீ யின் அலைபேசி மீண்டும் ஒலித்தது.
அதைப் பார்த்த ஸ்ரீ 'புது நம்பரா இருக்கே. யாரா இருப்பாங்க' என்று யோசித்தபடியே "ஹலோ ...." என்றான்.
"ஏய்.... ஹரி நா கனி பேசுறேன். சாரிப்பா நா ஆபிஸ் வரமாட்டேன்"
"என்னாச்சு கனி உடம்புக்கு"
"லைட்டா பீவர் மாதிரி இருக்குபா"
"சரிமா டாக்டர் கிட்ட போ.... பத்திரமா இரு"
"ம்ம்ம்"
"கனி எனக்கு ஒரு சந்தேகம் "
"சொல்லு"
"இல்ல ஆல்ரெடி (already) நீ லீவ்னு அண்ணா கிட்ட சொல்லிட்ட தான . திரும்பவும் அதுவும் புது நம்பர்லேந்து கால் பண்ற"
"என் கிட்ட பேலன்ஸ் இல்ல ஹரி. பிரண்ட் மொபைலேர்ந்து கால் பண்ணேன். உங்க அண்ணா பேசுனாங்களா. அவங்க கிட்ட யார் பேசுறதுனு சொல்லாமலே லீவ்னு சொல்லிட்டு வச்சிட்டேன். அதான் திரும்பவும் கால் பண்ணேன். நீயே பேசிட்ட. சரிப்பா. பை"
"ஹம்ம்ம்.... ஓ.கே மா" என்ற படி போனை வைத்தவன் தன்னுடைய தமையனை ஓரக்கண்ணால் பார்த்தான்.
அவனுடைய பார்வையை உணர்ந்த ராம் , " என்னடா பாக்குற"
"அண்ணா கனி உங்க கிட்ட பேசும் போது அவளோட பேர சொன்னாளா"
அப்பொழுது தான் ராமிற்கும் அது உரைத்தது. 'அவ பேரு எப்படி எனக்கு கரெக்டா ஞாபகம் வந்துச்சு. என் கிட்ட பேசலனு ஏன் யோசிச்சேன்"
"என்ன அண்ணா. யோசிக்குறீங்க"
"ஒண்ணுமில்லடா".
"அண்ணா"
"டேய் கற்பனை பண்ணாத." என்றவன் கனியை சந்தித்த நிகழ்வை கூறினான்.
"அவ்ளோ தானா"
" ஆமாம்டா"
ஒரு சந்தேகப் பார்வையுடன் தமையனிடம் " நம்பறேன் நம்பறேன்.... வாங்க" என்ற படி டைனிங் டேபிளை நோக்கி நடந்தான்.
அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில் எங்கும் ரம்மியமான இசை எதிரொலித்தது. மயக்கும் இசையிலும் , மங்கிய ஒலியிலும் மயங்கி பலர் அங்கே உணவருந்தி கொண்டிருந்தனர்.
அங்கே அலங்கரிக்கப்பட்ட மேஜையில் அழகான கேக் வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் விதவிதமான உணவுவகைகள் இருந்தன.
அந்த மேஜையைச் சுற்றிலும் ஐந்து பெண்கள் அமர்ந்திருக்க , அதில் நடுவே அமர்ந்திருந்தாள் மதி அவளுக்கருகில் நிவி அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் "ஹேப்பி பர்த் டே நிவி" என்ற சத்தத்துடன் நிவியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
'உங்க பாசமெலாம் போதும்டி. கேக் சாப்ட விடுங்கடி. பாக்கவே நல்லா இருக்கு.' மனதினில் புலம்பியவாறே கேக்கை பார்த்தாள்.
அவளது நேரமோ என்னவோ அவளுக்கு மட்டும் கேக் தராமல் அனைவரும் உண்டுக் கொண்டிருந்தனர்.
இதுக்கு மேல டிசண்ட் (decent ) பாத்து காத்துகிட்டு இருந்தா நமக்கு நாமம் தான் என நினைத்தவள்
"ஏய்.... எனக்கும் கொஞ்சம் தாங்கடி.... நீங்களே திங்குறீங்க. மதி நீயுமா இப்படி"
"அவளுக்கும் தாங்கப்பா . பாவம்"
"இன்னைக்கு அவளுக்கு தான பர்த்டே. அவ தான டிரீட் தரணும் . ஆனா நீ தர. அவ என்னடானா சாப்டறதுலயே குறியா இருக்கா"
"அதான் அவளுக்கு பதில் மதி தராளே வேணி. அப்புறம் என்ன. மதியால தான் நாம எல்லாரும் இந்த மாதிரி பெரிய ஹோட்டல்ல சாப்டுறோம். தேங்க்ஸ்டி"
"ஏன்டி இப்படிலாம் போசுறீங்க. நீங்க எல்லாரும் என்னோட பிரண்ட்ஸ். சோ நோ சாரி, நோ தேங்க்ஸ்"
இவர்களது பேச்சில் கலந்து கொள்ளாமல் தன்னுடைய உணவில் மட்டுமே கவனம் செலுத்திய நிவி சட்டென்று நிமிர்ந்து
"மதி நா உன் பிரண்ட் தான."
"ஆமாம். ஏன் திடீர்னு இப்படிக் கேக்குற"
"அப்படினா உன்னோட பிளேட்ல இருக்குற கோபி மஞ்சூரியன எனக்கு தரியா."
மற்றவர்கள் அனைவரும் அவளை ஏளனமாக பார்த்தனர். மதியோ புன்னகைத்தபடி அவளுடையதை தர, மற்றவர்களின் பார்வையை புறம் தள்ளிவிட்டு ஆசையாக கோபி மஞ்சூரியனை வாயில் வைக்கப்போனாள். ஆனால் அந்தரத்தில் கை அப்படியே நிற்க திறந்த வாயை மூடாமல் நிவி திருதிருவென முழித்தாள்.
"லூசு ஏன் அனகோண்டா மாதிரி வாய பொளந்துகிட்டே இருக்க. நாங்க கேக்க மாட்டோம். திண்ணுத் தொல. எவ்ளோ பெரிய வாயி" என நிவியைக் கிண்டல் செய்தாள் அங்கிருந்த ஒருத்தி.
அப்பொழுதும் நிவி திறந்த வாயை மூடாமல் மனதில் ' ஏய்.... என்னக் கலாய்குறதா முக்கியம். பின்னாடி பாருங்களேன்டி' என கண்களால் பின்னால் பார்க்கும்படி ஜாடைக் காட்ட , ஒட்டு மொத்தமாக அனைவரும் திரும்பி பார்த்தனர்.
நிவியை கேலி செய்தவர்களும் நிவியைப் போலவே வாய் பிளந்து அதிர்ந்திருக்க, மதியின் உடலோ நடுங்க தொடங்கியது.
ஏனெனில் அவர்களுக்கு பின்னால் ஆதி தன் நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். அவனின் பார்வையானது இவர்களது டேபிளை நோக்கி இருந்தது.
"ஓ..ஓ... சரிணா நா அவ கிட்ட பேசிக்குறேன்"
ஸ்ரீ சொல்லவும் தான் கனியும், ஸ்ரீ யும் ஒருவரை ஒருவர் ஒருமையில் அழைப்பதை உணர்ந்தான். மனதில் ஏதோ வலி பரவ அவன் ஸ்ரீ யின் அறையிலிருந்து வெளியேற முயலுகையில் ஸ்ரீ யின் அலைபேசி மீண்டும் ஒலித்தது.
அதைப் பார்த்த ஸ்ரீ 'புது நம்பரா இருக்கே. யாரா இருப்பாங்க' என்று யோசித்தபடியே "ஹலோ ...." என்றான்.
"ஏய்.... ஹரி நா கனி பேசுறேன். சாரிப்பா நா ஆபிஸ் வரமாட்டேன்"
"என்னாச்சு கனி உடம்புக்கு"
"லைட்டா பீவர் மாதிரி இருக்குபா"
"சரிமா டாக்டர் கிட்ட போ.... பத்திரமா இரு"
"ம்ம்ம்"
"கனி எனக்கு ஒரு சந்தேகம் "
"சொல்லு"
"இல்ல ஆல்ரெடி (already) நீ லீவ்னு அண்ணா கிட்ட சொல்லிட்ட தான . திரும்பவும் அதுவும் புது நம்பர்லேந்து கால் பண்ற"
"என் கிட்ட பேலன்ஸ் இல்ல ஹரி. பிரண்ட் மொபைலேர்ந்து கால் பண்ணேன். உங்க அண்ணா பேசுனாங்களா. அவங்க கிட்ட யார் பேசுறதுனு சொல்லாமலே லீவ்னு சொல்லிட்டு வச்சிட்டேன். அதான் திரும்பவும் கால் பண்ணேன். நீயே பேசிட்ட. சரிப்பா. பை"
"ஹம்ம்ம்.... ஓ.கே மா" என்ற படி போனை வைத்தவன் தன்னுடைய தமையனை ஓரக்கண்ணால் பார்த்தான்.
அவனுடைய பார்வையை உணர்ந்த ராம் , " என்னடா பாக்குற"
"அண்ணா கனி உங்க கிட்ட பேசும் போது அவளோட பேர சொன்னாளா"
அப்பொழுது தான் ராமிற்கும் அது உரைத்தது. 'அவ பேரு எப்படி எனக்கு கரெக்டா ஞாபகம் வந்துச்சு. என் கிட்ட பேசலனு ஏன் யோசிச்சேன்"
"என்ன அண்ணா. யோசிக்குறீங்க"
"ஒண்ணுமில்லடா".
"அண்ணா"
"டேய் கற்பனை பண்ணாத." என்றவன் கனியை சந்தித்த நிகழ்வை கூறினான்.
"அவ்ளோ தானா"
" ஆமாம்டா"
ஒரு சந்தேகப் பார்வையுடன் தமையனிடம் " நம்பறேன் நம்பறேன்.... வாங்க" என்ற படி டைனிங் டேபிளை நோக்கி நடந்தான்.
அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில் எங்கும் ரம்மியமான இசை எதிரொலித்தது. மயக்கும் இசையிலும் , மங்கிய ஒலியிலும் மயங்கி பலர் அங்கே உணவருந்தி கொண்டிருந்தனர்.
அங்கே அலங்கரிக்கப்பட்ட மேஜையில் அழகான கேக் வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் விதவிதமான உணவுவகைகள் இருந்தன.
அந்த மேஜையைச் சுற்றிலும் ஐந்து பெண்கள் அமர்ந்திருக்க , அதில் நடுவே அமர்ந்திருந்தாள் மதி அவளுக்கருகில் நிவி அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் "ஹேப்பி பர்த் டே நிவி" என்ற சத்தத்துடன் நிவியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
'உங்க பாசமெலாம் போதும்டி. கேக் சாப்ட விடுங்கடி. பாக்கவே நல்லா இருக்கு.' மனதினில் புலம்பியவாறே கேக்கை பார்த்தாள்.
அவளது நேரமோ என்னவோ அவளுக்கு மட்டும் கேக் தராமல் அனைவரும் உண்டுக் கொண்டிருந்தனர்.
இதுக்கு மேல டிசண்ட் (decent ) பாத்து காத்துகிட்டு இருந்தா நமக்கு நாமம் தான் என நினைத்தவள்
"ஏய்.... எனக்கும் கொஞ்சம் தாங்கடி.... நீங்களே திங்குறீங்க. மதி நீயுமா இப்படி"
"அவளுக்கும் தாங்கப்பா . பாவம்"
"இன்னைக்கு அவளுக்கு தான பர்த்டே. அவ தான டிரீட் தரணும் . ஆனா நீ தர. அவ என்னடானா சாப்டறதுலயே குறியா இருக்கா"
"அதான் அவளுக்கு பதில் மதி தராளே வேணி. அப்புறம் என்ன. மதியால தான் நாம எல்லாரும் இந்த மாதிரி பெரிய ஹோட்டல்ல சாப்டுறோம். தேங்க்ஸ்டி"
"ஏன்டி இப்படிலாம் போசுறீங்க. நீங்க எல்லாரும் என்னோட பிரண்ட்ஸ். சோ நோ சாரி, நோ தேங்க்ஸ்"
இவர்களது பேச்சில் கலந்து கொள்ளாமல் தன்னுடைய உணவில் மட்டுமே கவனம் செலுத்திய நிவி சட்டென்று நிமிர்ந்து
"மதி நா உன் பிரண்ட் தான."
"ஆமாம். ஏன் திடீர்னு இப்படிக் கேக்குற"
"அப்படினா உன்னோட பிளேட்ல இருக்குற கோபி மஞ்சூரியன எனக்கு தரியா."
மற்றவர்கள் அனைவரும் அவளை ஏளனமாக பார்த்தனர். மதியோ புன்னகைத்தபடி அவளுடையதை தர, மற்றவர்களின் பார்வையை புறம் தள்ளிவிட்டு ஆசையாக கோபி மஞ்சூரியனை வாயில் வைக்கப்போனாள். ஆனால் அந்தரத்தில் கை அப்படியே நிற்க திறந்த வாயை மூடாமல் நிவி திருதிருவென முழித்தாள்.
"லூசு ஏன் அனகோண்டா மாதிரி வாய பொளந்துகிட்டே இருக்க. நாங்க கேக்க மாட்டோம். திண்ணுத் தொல. எவ்ளோ பெரிய வாயி" என நிவியைக் கிண்டல் செய்தாள் அங்கிருந்த ஒருத்தி.
அப்பொழுதும் நிவி திறந்த வாயை மூடாமல் மனதில் ' ஏய்.... என்னக் கலாய்குறதா முக்கியம். பின்னாடி பாருங்களேன்டி' என கண்களால் பின்னால் பார்க்கும்படி ஜாடைக் காட்ட , ஒட்டு மொத்தமாக அனைவரும் திரும்பி பார்த்தனர்.
நிவியை கேலி செய்தவர்களும் நிவியைப் போலவே வாய் பிளந்து அதிர்ந்திருக்க, மதியின் உடலோ நடுங்க தொடங்கியது.
ஏனெனில் அவர்களுக்கு பின்னால் ஆதி தன் நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். அவனின் பார்வையானது இவர்களது டேபிளை நோக்கி இருந்தது.