20 இனி எல்லாமே நீ தானே
பகல் பொழுது முழுவதும் கடந்து விட்ட பாரதியால் இரவை நகர்த்த முடியவில்லை..
அந்த வீட்டின் வேலையாட்கள் தங்களுக்குள் பேசி சிரித்து கொண்டு வெற்றியின் அறைக்கு பொருட்களை எடுத்து செல்வது எதற்கு என புரிந்தும் தடுக்க முடியாமல் தவிப்புடன் அபியின் அறையையே சுற்றி சுற்றி வந்தாள்...
ஃபோன் அடிக்க
பாரதி " ஹாலோ மா "
ருக்மணி " நான் ருக்மணி மா பேசுறான் டா "
பாரதி " ஆங் சொல்லுங்க மா "
ருக்மணி " எப்படி டா இருந்துச்சு இன்னைக்கு நாள் "
பாரதி " நல்லாதா மா இருந்துச்சு "
ருக்மணி " சரிடா நான் ஒரு விஷயம் சொல்ல தான் ஃபோன் பண்னேன் "
அவர் சொல்லவருவது தெரிந்து சற்று கலக்கமடைந்தாள் பாரதி..
ருக்மணி " இன்னைக்கு உனக்கும் வெற்றிக்கும் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணிறுக்கேன் "
எதிர்முனையில் அமைதி நிலவ அவரே தொடர்ந்தார்...
ருக்மணி " பாரதி மா கேட்குறியா "
பாரதி " சொ...சொல்லுங்க மா "
ருக்மணி " பாரதி மா இது ஒரு சடங்கு தான் டா நீ ஒன்னும் பயப்படாத வெற்றி அப்படி பட்ட பையன் இல்ல உன் சம்மதம் இல்லாம உன்ன ஒன்னும் பண்ண மாட்டான் அதுக்கு நான் கிரன்டி டா "
பாரதி பேச வாயடுக்க.
" அப்புறம் எதுக்கு இதலாம் நீ கேட்கலாம் "
தன் மனதில் நினைத்ததை சரியாக ஊகித்து ருக்மணி அம்மாயை நினைத்து பெருமைப் அடைந்தாள்...
" நீயும் வெற்றியும் ஒருதர் ஒருதர புரிஞ்சுக்கனும் அதுக்கு நீங்க இரண்டு பேரும் ஒரே அறையில இருந்தா தான் அது நடக்கும் சும்மா நீ வேற இடத்துல அவன் வேற இடத்துல இருந்தா எப்படி புரிஞ்சுபிங்க அதுக்கு தான் பகல் முழுக்க எங்க வேணா இரு நைட்டு அந்த அறையில தங்கு சரியா "
" ஆங் அப்புறம் இன்னோரு விஷயம் வெற்றி உன் சாப்பாட புடுங்கி சாப்பிட மாட்டான் அதுனால தைரியமா அவன் இருக்கும் போதே நீ போய் சாப்பிடலாம் சரியா "
மதியம் அவன் இருந்ததாள் தான் உணவு உண்ண வரவில்லை என நாசுக்காக கூறியதை புரிந்து சிரித்து கொண்டாள் பாரதி..
ருக்மணி " பாரதி மா சொன்னதுலா நியாபகம் இருக்கா உன் மனச மாத்த முயற்சி செய் சரியா வைச்சுடுறேன் டா "
பாரதி " ம்ம் சரி மா "
அறையில் நுழைந்த வெற்றியின் கண்களுக்கு தெரிந்தது அலங்கரிக்கப்பட்ட அறையினுள் நீல வண்ண பட்டு புடவையில் மிதமான அலங்காரத்துடன் உட்கார்ந்திருந்த பாரதியை பார்த்தான்....
சிறு சிரிப்புடன் அவள் அருகில் வந்தவன்.
வெற்றி " இது யாரு வேல "
பாரதி " ருக்மணி அம்மா "
வெற்றி " நினைச்சேன் அவங்களா தான் இருக்குனு "
வெற்றி " சாப்பிடியா "
பாரதி " ம்ம் நீங்க "
ம்ம் என்று தனது உடையை எடுத்து கொண்டு அங்கிருந்த பாத்ரூம் உள்ளே நுழைந்தான்...
என்ன தான் ருக்மணி அம்மா ஆறுதல் கூறினாலும் அவளது மனதினுள் சற்று படபடப்பாகவே இருந்தது.
திரும்ப வந்த வெற்றி படுக்கையை சரி செய்து
வெற்றி " இது பெரிய பெட் தான் நீ இங்கயே படுத்துக்கோ "
அப்போதும் அவள் தயங்கி நிற்க
வெற்றி " பயப்படாத மா நான் அவ்வளவு கெட்டவன் லா இல்ல கொஞ்சம் நல்லவன் தான் மா "
வந்த சிரிப்பை உதட்டின் இடுக்கில் மறைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள் பாரதி...
வெற்றி " பாரவால சிரிக்கலாம் தப்பு இல்ல சிரிச்சா ஹெல்த் க்கு நல்லது "
இம்முறை சற்று தாராளமாகவே சிரித்துவிட்டு பெட்டின் மறுமுனையில் படுத்து கொண்டாள்.....
முதுகு காட்டியபடி இருவரும் படுக்க அன்றைய நாள் முடிந்தது....
தொடரும்....
வணக்கம் நட்புகளே
கதை பத்தி உங்க கருத்துக்களை சொல்லுங்க உங்களது உந்துதல் தான் எனது நம்பிக்கை...
பிளிஸ் பிளிஸ் உங்க பொன்னான கருத்துக்களை போற போக்குல கொஞ்சம் போட்டுட்டு
போங்க புண்ணியமா போகும்........
நன்றி ஆல் சகோ அண்ட் சகி.......