பானுரேகா தமிழ்ச்செல்வன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சென்னையில்..பெரும் செல்வந்தர்கள் அதிகமாக வசிக்கும்...பகுதியில் அமைந்திருந்தது மாதவனின் பங்களா…! தங்கள் அறையின் குளியல் அறையிலிருந்து...தலையை துவட்டிக்கொண்டே….வெளியே வந்த மாதவன்…. கட்டிலில் அமர்ந்து தீவிர யோசனையிலிருந்த மனைவியை பார்த்த வாறே….உடைமாற்றிக் கொண்டவர். தலையை..சீவிக் கொண்டே...கண்ணாடி வழியாக மனைவியை அளவிட்டார்… குளித்து முடித்து...இடையை தொட்ட கூந்தலை நுனியில் முடிச்சிட்டு…. களையான முகத்தில் குங்குமமிட்டு சிவந்த மேனியில் விலை உயர்ந்த சந்தன நிறத்தில் தங்கநிற சரிகை இடையோடிய காட்டன் புடவையை நேர்த்தியாக உடுத்தி...எடுப்பான மூக்கில் அழகாக வைர மூக்குத்தி துலங்க...கணத்த தாலி சங்கிலியோடு சற்றே பூசினாற்போன்ற உடல்வாகோடு…. அமர்ந்திருந்த மனைவியை கண்டவருக்கு காதல் பெருக்கெடுக்க...சத்தம் செய்யாது மனைவியை நெருங்கியவர்...பின்னோடு சேர்த்தணைக்க… கணவனின் திடீர் அணைப்பில் யோசனை கலைந்தவள்….கணவரின் நெஞ்சில் வாகாக பின்னோடு சாய்ந்து நிற்க…
“அதிசயமான மனைவியின் இணக்கத்தில் இன்னும் நெருங்கிய மாதவன்.. “நான்வந்ததை கூட கவனிக்காம அப்படி என்ன யோசனை என் மகாராணிக்கு..” என்றவாரே மனைவியின் கன்னத்தில் தன் முத்திரையை பதிக்க... கண்மூடி கிறங்கி நின்றவள்..
சுயம் பெற்று துள்ளி விலகி..
"என்னங்க இது நேரங்காலமில்லாம… இப்படியெல்லாம் ..." என்று முடிக்க இயலாது கன்னம் சிவக்க..
"என்னடி இது வம்பாப் போச்சு...என் பொண்டாட்டியை நான் கொஞ்ச நேரங்காலம் பார்க்கனுமா…"என்றார் கண்சிமிட்டியவாறே….
“போதும் உங்க அலப்பறை..
கல்யாண வயதில் பொண்ணை வச்சிக்கிட்டு… பேசுற பேச்சைப் பாரு…”
“எனக்கென்னவோ...நேத்து தான் நமக்கு கல்யாணம் ஆன மாதிரி தோணுது….உன்னைப் பார்த்தா... கல்யாண வயசுல பொண்ணு இருக்குங்கறதை நம்பவே....முடியலைடி… வேணும்னா உன்னை வர்ஷூவோட அக்கான்னு சொல்லலாம்….என்றார் கண்களில் குறும்பு மின்ன…!
கணவனது கிண்டலில் மேலும் முகம் சிவந்தவள்..
“அப்படின்னா.. இருங்க.. வர்ஷூவையும்… வருணையும் கூப்பிடுறேன் அவங்களே வந்துஉங்க டவுட்டை கிளியர் பண்ணட்டும்…”என்றவள் அவர்களை அழைப்பது போல் பாவனை செய்ய…. பாய்ந்து வந்து மனைவியின் வாயைப் பொத்தியவர்…
“அடியேய்….!
ஏண்டி உனக்கு இந்த கொலவெறி….! பொண்டாட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்தது குத்தமா….ஆளை விடுடி…!” என்று மனைவியிடம் வெற்றிகரமாக பின்வாங்கியவரை..
“அது…” என்று அவரை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தவள்.. வாய்விட்டு சிரிக்க... மனைவியின் புன்னகையில் தானும் கலந்து கொண்டார்.
“ஆமா.. நான் குளிச்சிட்டு வரும்போது ஏதோ தீவிர யோசனையில் இருந்தியே என்ன விஷயம்? என்று வினவினார் ஞாபகம் வந்தவராக…!
அதுவரை கேலிப்பேச்சில் மலர்ந்திருந்த அருணாவின் முகம் மீண்டும் யோசனைக்கு செல்ல..
“அது ஒண்ணுமில்லைங்க…. அண்ணா...அண்ணிகிட்ட தான் பேசிட்டிருந்தேன்… ரத்னம் ஊரிலிருந்து இன்னைக்கு காலையில வந்துட்டானாம்…! என்றவள் செல்பேசி உரையாடலை அப்படியே கணவரிடம் கூறத் தொடங்கினாள். மனைவி கூறியவற்றை முழுமையாக கேட்டவர்.
“பாண்டிக்கு கல்யாணத்தில் விருப்பமில்லைன்னா… விட்டுடவேண்டியது தானே… அவன் தான் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்றானே.. பிறகு மெதுவா பார்த்து...முடிக்கலாமே..” என்றவரை முறைத்த அருணா..
“ஏங்க புரிஞ்சு தான் பேசுறீங்களா..? அவன் வேலையில் சேர கிளம்பி போய் நாலு வருஷமாச்சு….! இடையில் ஒரு தடவை கூட ஊர்ப்பக்கம் வரலை போன்ல எப்பவாவது பேசுறதோட சரி…. அதுமட்டுமா… இந்த ஜுன் வந்தா அவனுக்கு29 முடிஞ்சு…. 30 வயசு ஆரம்பிச்சிடும்… இன்னும் தள்ளிப் போட்டா நல்லாவாயிருக்கும்! அதான் அண்ணி… நம்ம கதிரோட தங்கையையே ரத்னதுக்கு பேசி முடிச்சிட்டா…. இரண்டு கல்யாணத்தையும் ஒண்ணாவே முடிச்சிடலாம்னு நினைக்கிறாங்க…. ஆனா அவன் பிடிகுடுக்க மாட்டேங்குறானாம்… அவனை எப்படியாவது சம்மதிக்க வச்சிடறேன்னு… அண்ணிக்கு ஆறுதல் சொல்லியிருக்கேன்… அதைப்பற்றி தான் யோசிச்சிட்டிருந்தேன்…”
“நீ சொல்றதும் சரி தான் இதுக்கு மேல கல்யாணத்தை தள்ளிப் போடுறது எனக்கும் சரியாபடலை...இப்ப என்ன பண்ணப்போற….?” என்றவரை..
“பண்ணப்போற இல்ல…. பண்ணப்போறோம்னு சொல்லுங்க…!”
“என்னது நானா..? இந்த விஷயத்தில் நான் என்ன பண்ண முடியும்..என்றார் புரியாதவராக..!
“நீங்க ஒரு வார்த்தை சொன்னா உங்க பேச்சை தட்டவே மாட்டான் பாண்டி..!”
உண்மை தான் சிறுவயதிலிருந்தே பாண்டிக்கு மாதவனின் மீதும் அவருடைய போலீஸ் வேலையின் மீதும் தனி மரியாதை உண்டு… அதுமட்டுமில்லாமல் ஐ.பி.எஸ் படிப்புக்கு தேவையான அனைத்து விவரங்களையும் குறிப்புகளையும் அவ்வப்போது அளித்து...அவனுக்கு குருவாய் இருந்து அவனை வழி நடத்தியவராயிற்றே…!
அந்த மதிப்பும் மரியாதையும் அறிந்தவள் என்பதனாலேயே அருணா கணவரை இதில் இழுத்தது..!
அதை உணர்ந்து கொண்டவராக...மனைவியை வியப்போடு நோக்க..
“பின்ன அவனுக்கு எம்மேல எவ்வளவு பாசம் இருக்கோ... அந்தளவுக்கு உங்க மேல அன்பும் மரியாதையும் வச்சிருக்கான்…. உங்களை பார்த்து தானே தானும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி ஆகனும்னு நினைச்சான்! உங்க மேல ஒரு ஹீரோ அபிமானம் வச்சிருக்கான்... நீங்க தான் அவனோட ரோல்மாடல்னு…. பலதடவை என்கிட்ட பெருமையா சொல்லுவானே….இவ்வளவு அன்பும் மரியாதையும் வச்சிருக்கிற நீங்க சொன்னா அவன் நிச்சயமா கேட்பாங்க…” என்ற மனைவியை பார்த்தவர்…..
“அதெல்லாம் சரி தான் அருணா…. கல்யாணத்துல விருப்பமில்லாதவனை…. எப்படி… என்று தயங்கியவரை…
நம்ம தமிழரசியை பார்த்தா விருப்பமெல்லாம் தன்னால வந்துடும்னு தோணுதுங்க… அவனை வளர்த்தவ நான். எனக்கு அவனோட விருப்பு வெறுப்பு… ரசனை இதெல்லாம் அத்துபடி…. எனக்கு நம்பிக்கை இருக்கு…. நீங்க அவனை பொண்ணுபார்க்க மட்டும் சம்மதிக்க வைங்க போதும்…. மற்றதெல்லாம் தன்னால நடக்கும்….என்று… நம்பிக்கையாய் உரைத்த மனைவியின் முகத்தை பார்த்தவருக்கு முயற்சித்து பார்க்கலாமே என்ற எண்ணமே தோன்றியது.
தானும் ஒரு காலத்தில் கல்யாணத்தை முதலில் மறுத்தவர் தானே..! பெற்றோர்களின்… பிடிவாதத்திற்காக...வேண்டா வெறுப்பாக அருணாவை பெண் பார்க்க சென்றவர்…. துடைத்து வைத்த குத்துவிளக்கின் சுடரைப் போல தன்னெதிரே வந்து நின்ற அருணாவின் அழகில் மெய்மறந்து அவளையே விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தவரை...உலுக்கி பெண்ணை பிடித்திருக்கிறதா என்ற தந்தையின் கேள்விக்கு…. தன்னையறியாமல் தலையாட்டி தான் சம்மதித்து வைத்ததை நினைத்துப் பார்த்தவரின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது!
தான் கூறியதற்கு எந்த பதிலுமின்றி யோசனையில் ஆழ்ந்திருந்த கணவர் திடீரென...புன்னகைக்கவும்..
புரியாது விழித்தவர்…
என்ன என்று பார்வையால் வினவ…
“இல்ல... நான் தான் கல்யாணங்குற பேர்ல தெரியாம… உங்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறேன்னா…. என் மாப்பிள்ளையையும் அந்த கஷ்டத்தில் தள்ளிவிடனுமான்னு யோசிக்கிறேன்…. அவனாவது இன்னும் கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கட்டுமே..”என்று முகத்தை மிகவும் சீரியஸாக வைத்துக்கொண்டு சொன்னவரை….பார்த்து தன் நெற்றிக் கண்ணைத் திறந்த அருணா…
“ஓஹோ…! அப்ப...என்னைக் கட்டிக்கிட்டு…. சார் ரொம்ப கஷ்டப் படுறீங்க… உங்களுக்கு எதுக்கு அம்புட்டு கஷ்டம்….போதும் சாமி நான் இப்பவே என் அண்ணன் வீட்டுக்கு பொட்டியை கட்டுறேன்…. இனிமேலாவது நிம்மதியா மீதி வாழ்க்கையை உங்க விருப்பபடியே..குஜாலா வாழுங்க நான் கிளம்புறேன் என்று முறுக்கிக் கொண்ட மனைவியை… கெஞ்சி கொஞ்சி மலையிறக்கினார்.. மாதவன் ஐ.பி.எஸ்.
(வாண்டடா...வாயை கொடுத்து வாங்கி கட்டுறது இதானா...பாண்டி உன் நிலைமையும் நாளைக்கு இது தானோ…?)
மனைவியுடன் ஒரு வழியாக சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டவர்..
“ஆமா அதென்னடி குஜாலா…?”
“ம்ம்ம்... அது உங்க சென்னை தமிழ்… குஜாலா”
“அப்படின்னா…?”
“கூட்டா சேர்ந்து கும்மியடிக்கறது…”
“இதையெல்லாம் எங்க போய்டி கத்துக்கிட்ட…?!”
“ம்ம்ம் ….டியூஷன் வச்சி கத்துக்கிட்டேன்…!”
“நம்ம வேலைக்காரி முனியம்மாகிட்ட ரெண்டு நிமிஷம் பேசுனீங்கனா…. இது போல பல அரிய வார்த்தைகள் வந்து விழும்….அதுல ஒண்ணு தான் இது...!
என்றவளை…ஆசையாய் பார்த்தவர்...மனைவியை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க...அவரை நன்கறிந்தவளாய்…. இதோ வந்துட்டேன் அத்தை என்று கூப்பிடாத மாமியாருக்கு பதிலளித்தவாறே அறையை விட்டு வேகமாக வெளியேறியவளைத்… தொடர்ந்தது மாதவனின் சிரிப்பு சத்தம்.
(கையணைக்க வருவான்…)
ஹாய் மைடியர் பேபீஸ்... 5வது அத்தியாயம் பதிந்துவிட்டேன்... கமெண்ட் ப்ளீச்.... நிறைய பேர் படிக்கிறீங்கன்னு தெரியும்.... ஆனால் ஒரு சிலர் மட்டும் தான் கமெண்ட் பண்றீங்க....! படிக்குற மத்தவங்களும் ஒரு எட்டு வந்து... எப்படி யிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா... ரொம்பவே சந்தோஷப்படுவேன் பேபீஸ் சைலண்ட் ரீடர்ஸ் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்கபா தொடர்ந்து என் கதையை ரசித்து படித்து கமெண்ட் பண்ண எல்லா பேபீஸ்க்கும் நன்றி ...நன்றி
“அதிசயமான மனைவியின் இணக்கத்தில் இன்னும் நெருங்கிய மாதவன்.. “நான்வந்ததை கூட கவனிக்காம அப்படி என்ன யோசனை என் மகாராணிக்கு..” என்றவாரே மனைவியின் கன்னத்தில் தன் முத்திரையை பதிக்க... கண்மூடி கிறங்கி நின்றவள்..
சுயம் பெற்று துள்ளி விலகி..
"என்னங்க இது நேரங்காலமில்லாம… இப்படியெல்லாம் ..." என்று முடிக்க இயலாது கன்னம் சிவக்க..
"என்னடி இது வம்பாப் போச்சு...என் பொண்டாட்டியை நான் கொஞ்ச நேரங்காலம் பார்க்கனுமா…"என்றார் கண்சிமிட்டியவாறே….
“போதும் உங்க அலப்பறை..
கல்யாண வயதில் பொண்ணை வச்சிக்கிட்டு… பேசுற பேச்சைப் பாரு…”
“எனக்கென்னவோ...நேத்து தான் நமக்கு கல்யாணம் ஆன மாதிரி தோணுது….உன்னைப் பார்த்தா... கல்யாண வயசுல பொண்ணு இருக்குங்கறதை நம்பவே....முடியலைடி… வேணும்னா உன்னை வர்ஷூவோட அக்கான்னு சொல்லலாம்….என்றார் கண்களில் குறும்பு மின்ன…!
கணவனது கிண்டலில் மேலும் முகம் சிவந்தவள்..
“அப்படின்னா.. இருங்க.. வர்ஷூவையும்… வருணையும் கூப்பிடுறேன் அவங்களே வந்துஉங்க டவுட்டை கிளியர் பண்ணட்டும்…”என்றவள் அவர்களை அழைப்பது போல் பாவனை செய்ய…. பாய்ந்து வந்து மனைவியின் வாயைப் பொத்தியவர்…
“அடியேய்….!
ஏண்டி உனக்கு இந்த கொலவெறி….! பொண்டாட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்தது குத்தமா….ஆளை விடுடி…!” என்று மனைவியிடம் வெற்றிகரமாக பின்வாங்கியவரை..
“அது…” என்று அவரை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தவள்.. வாய்விட்டு சிரிக்க... மனைவியின் புன்னகையில் தானும் கலந்து கொண்டார்.
“ஆமா.. நான் குளிச்சிட்டு வரும்போது ஏதோ தீவிர யோசனையில் இருந்தியே என்ன விஷயம்? என்று வினவினார் ஞாபகம் வந்தவராக…!
அதுவரை கேலிப்பேச்சில் மலர்ந்திருந்த அருணாவின் முகம் மீண்டும் யோசனைக்கு செல்ல..
“அது ஒண்ணுமில்லைங்க…. அண்ணா...அண்ணிகிட்ட தான் பேசிட்டிருந்தேன்… ரத்னம் ஊரிலிருந்து இன்னைக்கு காலையில வந்துட்டானாம்…! என்றவள் செல்பேசி உரையாடலை அப்படியே கணவரிடம் கூறத் தொடங்கினாள். மனைவி கூறியவற்றை முழுமையாக கேட்டவர்.
“பாண்டிக்கு கல்யாணத்தில் விருப்பமில்லைன்னா… விட்டுடவேண்டியது தானே… அவன் தான் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்றானே.. பிறகு மெதுவா பார்த்து...முடிக்கலாமே..” என்றவரை முறைத்த அருணா..
“ஏங்க புரிஞ்சு தான் பேசுறீங்களா..? அவன் வேலையில் சேர கிளம்பி போய் நாலு வருஷமாச்சு….! இடையில் ஒரு தடவை கூட ஊர்ப்பக்கம் வரலை போன்ல எப்பவாவது பேசுறதோட சரி…. அதுமட்டுமா… இந்த ஜுன் வந்தா அவனுக்கு29 முடிஞ்சு…. 30 வயசு ஆரம்பிச்சிடும்… இன்னும் தள்ளிப் போட்டா நல்லாவாயிருக்கும்! அதான் அண்ணி… நம்ம கதிரோட தங்கையையே ரத்னதுக்கு பேசி முடிச்சிட்டா…. இரண்டு கல்யாணத்தையும் ஒண்ணாவே முடிச்சிடலாம்னு நினைக்கிறாங்க…. ஆனா அவன் பிடிகுடுக்க மாட்டேங்குறானாம்… அவனை எப்படியாவது சம்மதிக்க வச்சிடறேன்னு… அண்ணிக்கு ஆறுதல் சொல்லியிருக்கேன்… அதைப்பற்றி தான் யோசிச்சிட்டிருந்தேன்…”
“நீ சொல்றதும் சரி தான் இதுக்கு மேல கல்யாணத்தை தள்ளிப் போடுறது எனக்கும் சரியாபடலை...இப்ப என்ன பண்ணப்போற….?” என்றவரை..
“பண்ணப்போற இல்ல…. பண்ணப்போறோம்னு சொல்லுங்க…!”
“என்னது நானா..? இந்த விஷயத்தில் நான் என்ன பண்ண முடியும்..என்றார் புரியாதவராக..!
“நீங்க ஒரு வார்த்தை சொன்னா உங்க பேச்சை தட்டவே மாட்டான் பாண்டி..!”
உண்மை தான் சிறுவயதிலிருந்தே பாண்டிக்கு மாதவனின் மீதும் அவருடைய போலீஸ் வேலையின் மீதும் தனி மரியாதை உண்டு… அதுமட்டுமில்லாமல் ஐ.பி.எஸ் படிப்புக்கு தேவையான அனைத்து விவரங்களையும் குறிப்புகளையும் அவ்வப்போது அளித்து...அவனுக்கு குருவாய் இருந்து அவனை வழி நடத்தியவராயிற்றே…!
அந்த மதிப்பும் மரியாதையும் அறிந்தவள் என்பதனாலேயே அருணா கணவரை இதில் இழுத்தது..!
அதை உணர்ந்து கொண்டவராக...மனைவியை வியப்போடு நோக்க..
“பின்ன அவனுக்கு எம்மேல எவ்வளவு பாசம் இருக்கோ... அந்தளவுக்கு உங்க மேல அன்பும் மரியாதையும் வச்சிருக்கான்…. உங்களை பார்த்து தானே தானும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி ஆகனும்னு நினைச்சான்! உங்க மேல ஒரு ஹீரோ அபிமானம் வச்சிருக்கான்... நீங்க தான் அவனோட ரோல்மாடல்னு…. பலதடவை என்கிட்ட பெருமையா சொல்லுவானே….இவ்வளவு அன்பும் மரியாதையும் வச்சிருக்கிற நீங்க சொன்னா அவன் நிச்சயமா கேட்பாங்க…” என்ற மனைவியை பார்த்தவர்…..
“அதெல்லாம் சரி தான் அருணா…. கல்யாணத்துல விருப்பமில்லாதவனை…. எப்படி… என்று தயங்கியவரை…
நம்ம தமிழரசியை பார்த்தா விருப்பமெல்லாம் தன்னால வந்துடும்னு தோணுதுங்க… அவனை வளர்த்தவ நான். எனக்கு அவனோட விருப்பு வெறுப்பு… ரசனை இதெல்லாம் அத்துபடி…. எனக்கு நம்பிக்கை இருக்கு…. நீங்க அவனை பொண்ணுபார்க்க மட்டும் சம்மதிக்க வைங்க போதும்…. மற்றதெல்லாம் தன்னால நடக்கும்….என்று… நம்பிக்கையாய் உரைத்த மனைவியின் முகத்தை பார்த்தவருக்கு முயற்சித்து பார்க்கலாமே என்ற எண்ணமே தோன்றியது.
தானும் ஒரு காலத்தில் கல்யாணத்தை முதலில் மறுத்தவர் தானே..! பெற்றோர்களின்… பிடிவாதத்திற்காக...வேண்டா வெறுப்பாக அருணாவை பெண் பார்க்க சென்றவர்…. துடைத்து வைத்த குத்துவிளக்கின் சுடரைப் போல தன்னெதிரே வந்து நின்ற அருணாவின் அழகில் மெய்மறந்து அவளையே விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தவரை...உலுக்கி பெண்ணை பிடித்திருக்கிறதா என்ற தந்தையின் கேள்விக்கு…. தன்னையறியாமல் தலையாட்டி தான் சம்மதித்து வைத்ததை நினைத்துப் பார்த்தவரின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது!
தான் கூறியதற்கு எந்த பதிலுமின்றி யோசனையில் ஆழ்ந்திருந்த கணவர் திடீரென...புன்னகைக்கவும்..
புரியாது விழித்தவர்…
என்ன என்று பார்வையால் வினவ…
“இல்ல... நான் தான் கல்யாணங்குற பேர்ல தெரியாம… உங்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படுறேன்னா…. என் மாப்பிள்ளையையும் அந்த கஷ்டத்தில் தள்ளிவிடனுமான்னு யோசிக்கிறேன்…. அவனாவது இன்னும் கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கட்டுமே..”என்று முகத்தை மிகவும் சீரியஸாக வைத்துக்கொண்டு சொன்னவரை….பார்த்து தன் நெற்றிக் கண்ணைத் திறந்த அருணா…
“ஓஹோ…! அப்ப...என்னைக் கட்டிக்கிட்டு…. சார் ரொம்ப கஷ்டப் படுறீங்க… உங்களுக்கு எதுக்கு அம்புட்டு கஷ்டம்….போதும் சாமி நான் இப்பவே என் அண்ணன் வீட்டுக்கு பொட்டியை கட்டுறேன்…. இனிமேலாவது நிம்மதியா மீதி வாழ்க்கையை உங்க விருப்பபடியே..குஜாலா வாழுங்க நான் கிளம்புறேன் என்று முறுக்கிக் கொண்ட மனைவியை… கெஞ்சி கொஞ்சி மலையிறக்கினார்.. மாதவன் ஐ.பி.எஸ்.
(வாண்டடா...வாயை கொடுத்து வாங்கி கட்டுறது இதானா...பாண்டி உன் நிலைமையும் நாளைக்கு இது தானோ…?)
மனைவியுடன் ஒரு வழியாக சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டவர்..
“ஆமா அதென்னடி குஜாலா…?”
“ம்ம்ம்... அது உங்க சென்னை தமிழ்… குஜாலா”
“அப்படின்னா…?”
“கூட்டா சேர்ந்து கும்மியடிக்கறது…”
“இதையெல்லாம் எங்க போய்டி கத்துக்கிட்ட…?!”
“ம்ம்ம் ….டியூஷன் வச்சி கத்துக்கிட்டேன்…!”
“நம்ம வேலைக்காரி முனியம்மாகிட்ட ரெண்டு நிமிஷம் பேசுனீங்கனா…. இது போல பல அரிய வார்த்தைகள் வந்து விழும்….அதுல ஒண்ணு தான் இது...!
என்றவளை…ஆசையாய் பார்த்தவர்...மனைவியை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க...அவரை நன்கறிந்தவளாய்…. இதோ வந்துட்டேன் அத்தை என்று கூப்பிடாத மாமியாருக்கு பதிலளித்தவாறே அறையை விட்டு வேகமாக வெளியேறியவளைத்… தொடர்ந்தது மாதவனின் சிரிப்பு சத்தம்.
(கையணைக்க வருவான்…)
ஹாய் மைடியர் பேபீஸ்... 5வது அத்தியாயம் பதிந்துவிட்டேன்... கமெண்ட் ப்ளீச்.... நிறைய பேர் படிக்கிறீங்கன்னு தெரியும்.... ஆனால் ஒரு சிலர் மட்டும் தான் கமெண்ட் பண்றீங்க....! படிக்குற மத்தவங்களும் ஒரு எட்டு வந்து... எப்படி யிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா... ரொம்பவே சந்தோஷப்படுவேன் பேபீஸ் சைலண்ட் ரீடர்ஸ் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்கபா தொடர்ந்து என் கதையை ரசித்து படித்து கமெண்ட் பண்ண எல்லா பேபீஸ்க்கும் நன்றி ...நன்றி
Last edited: