All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதீக்க்ஷா ஈஸ்வரின் "எனை ந(நி)னைக்கும் சாரலே" - கதை திரி

Status
Not open for further replies.

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரி பா ரொம்ப லேட் ஆகிடுச்சு இனிமே வீக்லி ஒரு ud தர try பன்றேன்


சாரல் – 1
கிழக்கு சூரியன் ஏகாந்தமாக உதயமாகி, வான மகளை நாணமுற செய்து கொண்டு இருந்தது. பட்சிகளின், “கீச் கீச்” ரீங்காரம் சூழலையே ரம்யமாக்கி கொண்டு இருந்தது. மரத்தின் கிளைகளில் பலவித பறவைகள் தன் கூடுகளில்
ஆனந்தமாக செங்கதிரொனை வரவேற்கும் விதமாக தன் சிறகுகளை, பட பட வென அடித்து வரவேற்று கொண்டு இருந்தது.

ஆனால் அதை இரு விழிகள் மட்டும் உணர்ச்சி துடைத்த விழிகளுடன் பார்த்துக்கொண்டு இருந்தது. அவன் கண்களோ எங்கேயோ தொலை தூரத்தை வெறித்து கொண்டு இருக்க, மனமோ, அலைகடலென ஆர்பரித்துக் கொண்டு இருந்தது.

“இதே மாறி! உன்கூட காலைல, உன் கைய பிடிச்சுக்கிட்டு, உன் தோள்ல சாஞ்சுகிட்டு இந்த “கீச் கீச்” சத்தம், காலை காத்து, பால்கனில நின்னுகிட்டு ஒரு கப் காபியோட இந்த சூரிய உதயத்தை பார்க்கணும்” என, ரசனையோட சொன்ன அவள் வார்த்தைகள் அவனது காதில் ரீங்காரமிட்டு கொண்டு இருந்தது. தூரத்து வெறித்த பார்வையில், அவன் தனது தொலைந்து போன வாழ்க்கையை தேடிக்கொண்டு இருந்தானோ?

அந்த ஏகாந்த சூழல் அவனது மனதை குளிர்விக்காமல், அவனது மன வெம்மையை தான் அதிகரிக்க செய்தது. கண்களை மூடி ஆழ மூச்செடுத்து கண்களை திறந்தவனின் கண்ணோரம் ஏதோ சிறு வலி. மனதெங்கும் ஆறா ரணமாய் பல காயங்கள், அதில் இன்னும் வடியும் உதிரமாய் , அவள் விட்டுச்சென்ற நினைவுகள்.

மனம் நிழலுக்கும், நிஜத்திற்கும் இடையே ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது. அவள் தனது தோள் சாய்ந்து கண் முடிய தருணங்களும், தான் அவள் தலை மேல் தலை சாய்த்து அதை ரசித்த நாட்களும் நினைவுக்கு வர , கண்ணோரம் கரித்துக்கொண்டு வந்தது அவனுக்கு.

தடதடக்கும் ரயில் பெட்டி போல, அதனை தொடர்ந்து சில பல ஞாபக ஊர்வலங்களும், அவன் மனக்கண் முன்னே தோன்ற, “ என்ன காலையிலேயே கனவா? கனவுல யார் கூட டூயட் பாடிக்கிட்டு இருந்த?” என தன் பின்னே கேட்ட குரலில், நிழலை விட்டு நிதர்சனம் திரும்பினான் . சட்டென கேட்ட குரலில், அதை விட அதன் வார்த்தைகளில், மனம் இறுக, மூண்ட சினத்தை தணிக்க, கண்களையும், உள்ளங்கைகளையும் இறுக மூடி தன்னை சமன் செய்துக் கொண்டான்.

அவன் உடல்மொழிக் கொண்டே அவன் மனம் கணித்தாள் அவன் மனைவி. “என்ன கனவ களச்சுட்டேனேனு கோவமா? என அவனை மேலும் சீண்டினாள், அபிரக்ஷிதா. மெல்ல திரும்பி, அங்கு ஒருத்தி இருப்பதையே கண்டுகொள்ளாமல், அவளை தாண்டி செல்ல முற்பட்ட வேளையில், “உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்!” என அவன் கைபிடித்து நிறுத்த, அவள் முகத்தையும், அவள் பிடியில் இருக்கும் தன் கையையும் மாறி மாறி பார்த்தவாறே அவள் பிடியை விலக்க முயல,

“என்ன கட்டிக்கிட்டு எவளையோ மனசுல நெனச்சுட்டு இருக்க?” எனும் வார்த்தையில் அவன் பார்வையின் கூர்மை கூடி அவனது உக்கிரம் தெரிய, நொடியில் அவளது கழுத்தை இருக்கியது அவன் கை.

“பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகமே இருண்டுச்சுன்னு இருக்குமாம் ! உனக்கு எத்தனையோ முறை சொல்லி, சொல்லி நான் ஓய்ஞ்சு போய்ட்டேன்! இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்! இனிமே இப்டி பேசுன!, என தான் பிடித்த பிடியில் அழுத்தம் தர, அவளை அப்படியே உதறிச் சென்றான். அவன் தனது பிடியை விட்டவுடன், வலித்த தன் கழுத்தை தடவி விட்டுக் கொண்டாள் அபிரக்ஷிதா. அவனது உதாசினம் தந்த பாதிப்பால், கண்கள் சிவக்க, அவனை நோக்கி அங்கிருந்த பூஜாடியை எறிய, அது அங்கிருந்த சுவற்றில் பட்டு சில்லு சில்லாக உடைந்து நொறுங்கியது.

அந்த சத்ததில் தூங்கி கொண்டு இருந்த அவர்களின் மகள் லேசாக அசைய, மகளது துயில் களையா வண்ணம் அவன் மகளை தட்டி கொடுக்க, அவள் தூங்க, மனைவியிடம் கண்களால் அவளை எரிப்பது போல் முறைக்க, கணவனின் பார்வையில் உள்ளுக்குள் திகில் பரவ, மகளிடம் விரைந்தாள், அபி.

இங்கே குளியலறையில் , அங்கிருக்கும் வாஷ்பேசினில் தன் இரு கைகளையும் அதன் மீது பதித்த படி, அங்கிருந்த கண்ணாடி முன் நின்று, அதில் தெரியும் தன் பிம்பதையே பார்த்து கொண்டு இருந்தான் விஷ்வபிரகாஷ்.
எதையோ நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டவன், முகத்தில் நீரை வாரி இறைக்கிறான். நேரம் ஆவது உணர்ந்து மனதிற்கு கடிவாளம் இட்டு குளிக்க செல்ல, மனதின் வெம்மையை அந்த குளிர்ந்த நீர் சற்றே போக்கியது.

அவன் குளித்து முடித்து வெளியே வரும் போது அவன் கண்மணி 4 வயதான சின்ன சிட்டு பிரகதி அப்போது தான் துயில் களைந்தாள். தந்தையை கண்டதும் உற்சாகமாக அவனை நோக்கி தன் கை விரிக்க, மகளை நோக்கி விரைந்தான் விஷ்வா.
அந்த சின்ன மொட்டு தனது தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டு, “குட் மார்னிங் ப்பா” என சொல்லி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் தர , அவளை பின்பற்றி அவனும் மகளுக்கு திருப்பி ஒரு முத்தம் வைத்து, “குட் மார்னிங் செல்லம்”, என்றான்.

இதை எல்லாம் சுவற்றில் சாய்ந்த படி கை கட்டி கொண்டு அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்தாள் அபி. அவளை கண்டும் காணாதது போல “என் செல்லம் என்ன இன்னைக்கு சீக்கிரம் எழுந்துடாங்க” என கேட்க மகளோ நான் குட் கேர்ள் பா அதான் நான் ஏர்லியாவே ஏந்துட்டேன்” என, இன்னும் தன் மழலை மாறாமல் பதிலளித்தாள்.

“ஓகே செல்லம்! அப்பா இன்னைக்கு சீக்கிரம் ஆஃபீஸ் போனும்! அப்பா கெளம்புறேன்!” என, மகளிடம் கூற அந்த சின்ன சிட்டின் முகமோ வாடியது. தன் மகளின் முக வாட்டம் கண்டு பொருக்காதவனாய், மகளின் முகம் நிமிர்த்தி, “என்னடா? என்ன ஆச்சு என் பாப்புக்கு?” என கேட்க, “ நீங்க என்ன நேத்து பீச் கூட்டிட்டு போறேன் னு சொன்னேங்க “ என கூற,
அப்போது தான் தான் தனது மகளிடம் நேற்று கூறியது ஞாபகம் வந்தது.

உடனே தான் செய்த தவறு புரிந்தவனாய், “ சாரி செல்லம் அப்பாக்கு நேத்து நிறையா வேல இருந்துச்சு அதுல அப்பா மறந்துட்டேன் டா சாரி மா” ,என் மகளிடம் மன்னிப்பு கேட்க, உங்க அப்பாக்கு எது தான் ஞாபகம் இருக்கு இது மட்டும் இருக்கு என பின்னே எகத்தாளமான பதில் வர , மகளுக்கு அது புரியவிடினும் அவனுக்கு அது புரிய, கண்களில் கனலோடு அவளை நோக்கி திரும்ப, அவன் பார்வை கண்டு “கப் சிப்” , என ஆனாள் அவன் மனையாள்.

மகள் தன்னையே பார்ப்பது உணர்ந்து, “அப்பா உங்களுக்காக இன்னைக்கு சீக்கிரமே வரேன் செல்லம்! பிளீஸ் அப்பா ரொம்ப ரொம்ப சாரி டா” என மகளை சமாதானப்படுத்த, அதில் சமாதானம் அடைந்த மகள், “ப்ரோமிஸ்”என கையை நீட்டி சத்தியம் கேட்க, அதில் அழகாய் கண் சுருக்கி, கெஞ்சலோடு தன்னிடம் வலது கையை நீட்டி “ப்ராமிஸ்”, கேட்ட குரல் ஞாபகம் வந்தது. அதற்கு அவன் சத்தியம் செய்ய கையை நீட்ட, அங்கே அவன் மகள் நின்றுக்கொண்டு இருந்தாள்.

அவன் கவனம் இங்கு இல்லாது போக, மகள் தான் தந்தையை
“அப்பா அப்பா! ” , என அழைக்க, அதில் மகளின் குரலில் தன்னிலை அடைய, தன் முன்னே அதே போல் கண்ணோடு முகமும் சுருக்கி, “ப்ராமிஸ்” கேட்ட மகள் தான் நின்றாள்.

“ப்ராமிஸ்” என நீட்டிய கையில் சத்தியம் செய்ய, மகளின் முகம் மலர, அவளை தூக்கி ஒரு முத்தம் வைத்து இறக்கி விட்டான். அதில் மேலும் குதூகலமாக, தன் பாட்டியிடம் அதை கூற ஓடினாள் பெண்.
இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்க கொண்டு இருந்த அபியின் முகம் மாறுதல் அடைய அவனை ஒரு பொருள் விளங்கா பார்வை பார்த்தாள் அவள்.
மகளின் குதூகலம் கண்டு, புன்னகை முகம் கொண்டு திரும்பியவனின் கண்ணில் மனைவியின் பார்வை விழ, அதைக் கண்டு புருவம் சுருக்கினான்.

கணவனின் பார்வையை உணர்ந்து அவள் முகத்தில் ஒரு எள்ளல் புன்னகை உதயமாக, அதில் முகம் இறுக அவளை கண்டு ஒரு அந்நிய பார்வையை வீசி சென்றான் விஷ்வா.

சாரல் அடிக்கும்…





images (7).jpegimages (26).jpeg
 
Last edited:

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரல் 2


அதிகாலை 4.30 மணி

அலாரம் “க்ரீச் க்ரீச்” என ஒலியெழுப்பி, தன் கடமையை செவ்வனே செய்ய, அதில் லேசாக துயில் கலைந்து, புரண்டு படுத்தாள் பிருந்தா. மறுபடியும் தன் தூக்கத்தை தொடர முற்பட்ட பொழுது, அலாரமும் தனது தூக்கம் தடை பட்ட எரிச்சலில், மீண்டும் கதற ஆரம்பிக்க, அதில் முற்றும் முழுதாக தூக்கம் கலைய, அடித்து பிடித்து எழுந்தாள், பெண்.

பக்கத்தில் அவள் கணவன் முரளி தூக்கத்தில் லேசாக புரண்டு படுக்க, அலாரத்தை வேகமாக எழுந்து அணைத்தாள். இல்லையென்றால் காலையிலே கணவனிடம் யார் சுப்ரபாதம் கேட்பது. மெதுவாக தன் தலையை திருப்பி, கணவனை நோக்க, அவன் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தான். அதில் அவள் லேசாக ஒரு பெருமூச்சை வெளியிட, கணவனின் நினைவை தொடர்ந்து, செய்ய வேண்டிய வேலைகளும் அணிவகுத்து நிற்பது ஞாபகம் வந்தது.
உடலும், இமைகளும் அவளிடம் ஓய்வுக்கு கெஞ்ச, அதன் மொழிகளை காது கொடுத்து கேட்காமல், அவசர அவசரமாக, சத்தமின்றி வேகமாக எழுந்தாள். இல்லையென்றால் அதற்கும் பாட்டு வாங்க வேண்டி வருமே!

மெதுவாக வார்டுரோபை திறந்து, தனது துணிகளை அள்ளிக்கொண்டு குளியலறை சென்று, காலை கடன்களை முடித்து அவள் திரும்பி வர அரை மணி நேரம் எடுக்க, தலையை காய வைக்க நேரம் இல்லாமல் அம்மியா அம்மியா என பேருக்கு துவட்டும் போது, “பிருந்தா! இன்னும் சின்ன குழந்தையா நீ? பாரு எப்படி தலை காயாம இருக்கு!” என, சிறு கண்டிப்போடு துண்டை அவளிடம் இருந்து வாங்கி, துவட்டி விடும் அன்னையின் முகம் ஞாபகம் வந்தது. தாயின் நினைவில் மனம் கலங்க, முயன்று தன்னை சமன் செய்து கொண்டாள்.

கண்ணாடி முன் சென்று, ஓரு முறை தலையை துவட்டி, பின் காய்ந்ததும் காயாமலும் இருந்த கூந்தலின் இரு புறமும் சிறு முடி எடுத்து நடுவே சிறு கேட்ச்கிளிப் குத்தி, எந்த வித ஒப்பனையும் செய்து கொள்ளாமல், ஒரு பொட்டை ஒட்டிக்கொண்டு சத்தமே வராமல் கதவை சாத்தி விட்டு கிளம்பினாள்.

அவளுக்கு முன் அவள் செய்ய வேண்டிய வேலைகள் அவளுக்காக கியூவில் காத்துக்கொண்டு இருந்தது. அப்போதே
மணி 5.10 சற்றும் சலிக்காமல், தனது அன்றாடப் பணியை மேற்கொள்ள ஆரம்பித்தாள் பிருந்தா. அவர்கள் வீட்டில், காலை சாமி கும்பிட்டு விட்டு தான் அடுப்பே பற்ற வைக்க வேண்டும்.

வெளி வாசலை வேலை செய்பபவர் கூட்டி பெருக்கி கோலம் போட்டு விடுவார். இவள் தோட்டத்திற்கு சென்று அன்றைய பூஜைக்கு தேவையான பூக்களை பறித்து,
விளக்கேற்றி, இவள் பூஜை செய்ய ஆரம்பிக்கும் போது, அவள் மாமியார் சாரதா அங்கு வந்து சேர்ந்தார்.

பூஜைக்கு பூ பறிப்பது தொடங்கி, ஏற்பாடுகள் அனைத்தும் செய்வது பிருந்தா தான். ஆனால் கடைசி நேரம் மட்டும் வந்து பந்தா காட்டுவது மட்டும் அவர் வேலை. ஆரத்தியை கண்ணில் ஒற்றிவிட்டு, அவள் தனது வேலையை பார்க்க சென்றாள்.

இன்னும் அரை மணி நேரத்தில் கணவன் எழுந்து விடுவான். அவன் ஒரு மணி நேரம் ஜாகிங் சென்று திரும்பி வரும் போது அவனுக்கு சூடான காபி இவளே கலந்து, அவனிடம் தர வேண்டும்.
இவள் கிச்சனிற்கு செல்லும் போது அங்கே வேலை செய்யும் கோமதி அம்மாள் இவளை பார்த்து வரவேற்கும் விதமாய் புன்னகை புரிந்தார்.
“ அம்மா இன்னைக்கு பூரி போடணும் அதனால ஒரு அரை மணி நேரம் கழிச்சு மாவு பெசஞ்சு வச்சுடுங்க. கிழங்கு வேக வச்சு வைங்க” என, அவருக்கு வேலை ஒதுக்கி கொடுக்க, இவள் முகமோ புன்னகையை தத்து எடுத்து இருந்தது.

ஏனென்றால் நேற்று அவளது மகள் பூரி வேண்டும் என கேட்டு செய்த அலப்பறை அப்படி. மணி 6 ஆக வீட்டில் உள்ள அனைவரும் ஒவ்வொருவராக எழ ஆரம்பித்து விடுவர்.

அவர்கள் அனைவருக்கும் அவரது ரசனை கேற்ப இவள் தான் காலை காபி தயாரித்து முடித்து, இவள் காபி அடங்கிய ட்ரேயுடன் வெளியே வர, அவளது மாமனார் வைத்தியநாதன், அவரது தாய் அமிர்தம் பாட்டி ஆகியோர் எழுந்து, ஹாலில் உட்கார்ந்து இருந்தனர்.

அவர்களை கண்டதும் அவளது முகம்
புன்னகையை தத்து எடுத்துக்கொள்ள,
“ குட் மார்னிங் மாமா!” , “குட் மார்னிங் பாட்டி!” என்ற படியே காபி ட்ரேவை அவர்களிடம் நீட்ட, அவர்களும் புன்னகை முகமாக, “குட் மார்னிங் மா!” என்ற படியே எடுத்துக் கொண்டனர். “ முரளி எழுந்துட்டானா மா?” என வைத்தியநாதன் அவளிடம் வினவ, “அவர் எழுந்து ஜாகிங் போயிட்டு வர நேரம் தான் மாமா!”
என அவரிடம் பதில் அளித்து விட்டு,
மாமியார் சாரதாவிடம் நீட்ட, அவர் ஒரு கொணட்டலுடன், அவளிடம் இருந்து வாங்கி கொண்டு மாமியார் அருகில் போய் அமர்ந்தார்.

“தன்யாவும், ராகுலும் எழுந்துட்டாங்களா மா?” என பாட்டி வினவ, “இல்ல பாட்டி! இனிமே தான் அவங்கள எழுப்பனும்! நயிட் ரெண்டு பேரும் தூங்கவே நேரம் ஆகிட்டாங்க “ என பாட்டியிடம் பதில் தந்தவள், காலி கோப்பைகளை அவர்களிடம் இருந்து வாங்கி கிட்சேனில் வைத்து விட்டு அவர்கள் அறை நோக்கி சென்றாள்.

கணவன் வர இன்னும் நேரம் இருக்க, ஆதலால் அவர்கள் அறை ஒரு வித அமைதியோடு இருந்தது. அவர்கள் அறைக்குள் நுழைந்து, இடது புறம் திரும்பினால், ஒரு ஆஃபீஸ் ரூம் போல முதலில் வரும் அதற்கு அடுத்து அறைக்கு செல்லும் போது, “கடவுளே என்ன காப்பாத்து! “ என வேண்டிய படியே தான் சென்றாள்.

அங்கே இன்னும் இருள் கவிழ்ந்து இருக்க, மெதுவாக ஜன்னல் அருகே சென்று அங்கிருந்த திரை சேலையை விலக்க, இளங் கதிர் அந்த அறைக்குள் பிரவேசித்தது. பின்னாடி திரும்ப அங்கே கட்டிலில் இரு உருவங்கள் அசையாமல் அப்டியே இருந்தது.


மெல்ல கட்டிலின் அருகே சென்று, போர்வையை மெல்ல விலக்கி, “ராகுல் கண்ணா எழுத்துரு பா!” என,அந்த சின்ன கண்ணனின் தலை கோதி, சிறு முத்தம் வைக்க, அந்த குட்டி வாண்டோ மம்ம்ம்ம் என திரும்பி படுத்து
விட்ட தூக்கத்தை தொடர, “பிலீஸ் டா என்
செல்லம் ல எழுந்திரிமா!” என அதுவும்
அடம் செய்யாமல் அழகாக தன் கண் மலர்
திறந்து, தன் அரிசி பல் சிரிப்பை சிந்தி,
தனது தாயை கண்டு “அம்முமா குட் மார்னிங்!” என கூறியது.

“குட் மார்னிங் டா பட்டு குட்டி!”என மீண்டும்
ஒரு முத்தம் அதன் குண்டு கன்னங்களில்
பதித்து விட்டு, அவன் போர்த்தி இருந்த
போர்வையை மடித்து வைக்க, அடுத்து அவள் பார்வை அருகே இருந்த கட்டிலில்
இருந்தது. அவளது கால் அங்கே செல்ல,
மெல்ல அதே போல் போர்வையை விலக்க,
முகத்தில் வந்து விழுந்த அந்த இளங் கதிரின் வெளிச்சம் அதன் முகத்தில் விழ,
தனது தூக்கம் தடை பட்ட எரிச்சலில்,
தனது கண்ணை மூடிய படியே, “ அம்மா!
உங்களை யாரு இப்போ விண்டோவ் ஓபன் பண்ண சொன்னது?” என தனது கீச்சு குரலில் அந்த வீடே அதிரும் படி கத்தினாள், அந்த குட்டி ராட்சசி.

அவள் கத்திய சத்தம் கீழே ஹாலில் இருப்போரின் காதில் விழுந்தாலும், இது எப்போதும் வழக்கம் தான் என்பதால், கீழே ஹாலில் இருந்த அனைவரும் அவர் அவர் வேலையை கவனிக்க, பிருந்தா தான் “தன்யா ஏன் இப்படி கத்துற?” என மகளை சிறு குரலில் கண்டிக்க, “ நீ தான் இப்போ வந்து என்ன எழுப்புற! நான் வந்து என்னை எழுப்ப சொன்னேனா?” என கட்டிலில் மீது ஏறி நின்றுக் கொண்டு அவள் கத்த, அவளது பதிலில் சிறு சினம் துளிர்க்க,
“என்ன மரியாதை இல்லாம பேசுற?”
என்றபடி அவளை நெருங்க, அவள் அங்கிருந்து வேகமாக வெளியே ஓட, இவள் பின்னே துரத்திக் கொண்டே வர,
அதற்குள் அவள் அந்த அறையை தாண்டி அவர்களது அறையில் இருந்து வெளியே செல்லும் கதவின் அருகே சென்று விட்டு இருந்தாள்.

“ஏய்! ஓடாத நில்லு!”என்ற படியே இவள் பின்னே வர, மகளோ அதற்குள் கதவின்
கைப்பிடியில் கை வைக்க போக, அதற்குள்அவர்களது அறைக் கதவின் கைபிடி குமிழ் திருகும் ஓசையும், அதனை தொடர்ந்து, அப்போது தான் ஜாகிங் முடித்து விட்டு வீட்டுக்குள் வந்த அவளது கணவன் முரளியின் மேல் மோதி நின்றாள், அந்த குட்டி ராட்சசி.

தன் மேல் திடீரென வந்து மோதிய மகளை, கீழே விழுந்து விடாமல் பிடித்தவன் மகளிடம் குனிந்து, “என்னடாமா ஏன் இப்படி ஓடி வரிங்க?” என மகளிடம் கேட்க, பார்வையோ மனைவியிடம் இருந்தது.

அந்த குள்ள பிசாசோ, “அப்பா இந்த அம்மா என்ன அடிக்க வராங்க!” என அவனிடம் தீக்குச்சி இல்லாமலே பத்தி வைக்க, அவனது பார்வையோ, சற்றென்று தெலுங்கு பட ஹீரோ போல் சிவக்க!, பின் அது பொய்யோ எனும் வகையில், ,அவன் முகம் கனிவே உருவாக, மகளிடம் குனிந்து,அவளை தூக்கி முத்தமிட்டு, “நீங்க பாட்டி கிட்ட போய் ரெடி ஆகுங்க! போங்க! போங்க!”என மகளை தன் தாயிடம் அனுப்பி வைத்தவன், மகள் அறையை விட்டு வெளியேறும் வரை புன்னகை முகமாக இருந்தவனின் முகம் திரும்பும் போது சடுதியில் மிக கடுமையாய் உருமாறி இருக்க, அவளை நோக்கி கூர்மையான பார்வையுடன், அமைதியாக அதே நேரம் அழுத்தமான காலடியுடன் வந்தவன் முகம் அவளுள் குளிரை பரப்ப,
அருகில் வந்தவன் அவள் என்ன! ஏது? என உணரும் முன்னரே, அவனது கை அவளது கன்னத்தில் , “பளார்” என, அழுத்தமாக பதம் பார்த்து இருந்தது.



சாரல் அடிக்கும்…


Weekly monday epi poduven. Inaiku freeya iruken so innaike potuten.
Please read and share your lovely comments.

IMG_20200425_184043.jpg
 
Last edited:

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போன எபிக்கு பொம்மை போட்ட நல் உள்ளங்களுக்கு நன்றி.

கமெண்ட் போட்ட நல் உள்ளங்களுக்கு நன்றியோ நன்றி.

Free time சோ சீக்கிரமே வந்துட்டேன்.
இந்த எபிக்கும் உங்கள் ரியாக்ஷன் எதிர்பார்த்து..... நான்


சாரல் 3

அருகில் வந்தவன் அவள் என்ன! ஏது? என உணரும் முன்னரே, அவனது கை அவளது கன்னத்தில் , “பளார்” என, அழுத்தமாக பதம் பார்த்து இருந்தது. அவன் அடித்ததில், முதலில் கண்கள் அதிர்ச்சியில் பெரிதாக விரிய, காதிற்குள் “நொய்ங்” என்ற சத்தமும், அதனை தொடர்ந்து கன்னத்தில் தோன்றிய எரிச்சல் “ ஜிவ்” என்று மூளை நரம்பு வரை பாய, சித்தம் கலங்கி, சிந்தை தடுமாறி நின்றாள் பிருந்தா.

அடியின் வேகத்தில் கால்கள் தடுமாற, அருகில் இருந்த மேஜை மேல் விழ போனவள் அதனை பிடித்து கொண்டு தன்னை சுதாரித்து நின்றாள்.

அவன் மறுமுறை கையை ஓங்கி கொண்டு வரும்போது, அவள் கண்ணை மூடி தலையை திருப்பி நிற்க அடுத்த அடியை எதிர்பார்த்தவள் கண நேரம் சென்றும் எந்த அரவமும் இல்லாமல் போக, மெதுவாக கண்ணை திறந்து பார்க்க, அங்கே அவள் கண்டது ஓங்கிய கை ஓங்கியவாறு நின்றிருந்த கணவனை தான்.

அவன் பார்வை சென்ற திசையை அவளும் நோக்க, தமக்கையை பின்தொடர்ந்து சென்ற அன்னையை தேடி வந்த மகன் கண்டது அங்கே தந்தை தன் தாயை அடித்தது தான். அதில் பயந்து முகம் வெளிற, அங்கிருந்த சுவர் ஓரமாக பயந்து போய் ஒன்றி நின்று கொண்டு இருந்தான்.

நிமிடத்துள் சுய உணர்வு அடைந்த முரளி, “ச்சே” என கையை மடக்கி உதறிக்கொண்டு வேகமாக அங்கிருந்து சென்று பால்கனியில் நின்றுக் கொண்டான்.
கணவன் அங்கிருந்து அகன்றதும், முகத்தை அழுத்தி துடைத்து, வெளிவர துடித்த கண்ணீரை இமை சிமிட்டி உள் இழுத்து வேகமாக மகனை நோக்கி ஒன்றுமே நடக்காதது போல, “என்ன டா
செல்லம் ஸ்கூலுக்கு போகணும்! இன்னும்
கிளம்பாமா இருக்க?” என முயன்று வருவித்த குரலில் சாதாரணமாக கேட்க,
மகன் முகமும் கண்ணும் கலங்கி, உதடு பிதுக்கி அழ தயாரானான்.

“அச்ச்சோ! என் செல்லக்குட்டிக்கு என்ன ஆச்சு? என் பட்டுத் தங்கம் ஏன் அழுவுது?” என மகனின் கண்ணை துடைத்தவாறு கேட்க! மகனோ “வொம்ப வயிக்குதாமா?” என இன்னும் தனது மழலை மாறா மொழியில் சற்று முன் அவள் அடி வாங்கிய
கன்னத்தை தடவிய படி கேட்க, அதில் மனம் நெகிழ, பாய்ந்து அவனை கட்டிக் கொண்டு, மௌனமாக கண்ணீர் வடித்தாள் பிருந்தா.

அதுவரை இருந்த அதிர்ச்சி மாறி தாய்க்கே
ஆறுதல் தந்த மகனில், அவனது சாயல்.
அதில் இன்னும் அழுகை வெடித்துக்
கிளம்ப, மகனை கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள் அப்பேதை பெண்ணும்.

கண்ணில் வழிந்த கண்ணீர் தடம் மாறாமலே சிறுவன் முகம் காண, மறுபடியும் “வொம்ப வயிக்குதா? அவுவாத! என தாயின் கண்ணீரை தன் மென் கரம் கொண்டு துடைத்து விட்டு,
“இப்போ வயி போய்ச்சா?” என தாயிடம்
மறுபடி வினவ, அவள் அந்த தாயுமானவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க , “ இன்னும் சயி ஆவவையா? என கேட்டு , “இப்போ சயி ஆயிடும்!” என தாயின் கன்னத்தில் தன் செப்பு இதழ் கொண்டு மென் முத்தம் வைக்க, தன் பிஞ்சின் மென் ஸ்பரிசத்தில் தேகம் சிலிர்த்தவளாய் விழி மலர்கள் மேலும் ஆனந்த பூ சொரிய, தன்னை மறந்து மெய் உறைந்து நின்றாள், அந்த தாய்.

மகன் இன்னும் தன் பதில் எதிர்பார்த்து நிற்பது புரிய, தன் வேதனை மறந்தவளாய், மகனை வாரி அணைத்துக் கொண்டாள், பிருந்தா. “நீ அவுவாத மா நாம தாத்தா கிட்ட முள்ளிய மாட்டி விட்டுடுவோம்!” நொடி நேரத்தில் தனது தாயின் வேதனை காண பொறுக்காமல், அவள் வலி தீர்க்க சுலபமாக வழி கண்டுபிடித்து இருந்தான் பிருந்தாவின் செல்வன்.

மகனின் மொழியில் புலங்காகிதம் அடைந்த தாயோ முதலில் தனக்கு ஆறுதல் அளிக்கும் மகனை கண்டு மகிழ்ந்தாள் என்றால், அவன் சொன்ன செய்தியை கேட்டு முதலில் குழம்பியவள், பின்னர் மகனிடம் அதற்கு விளக்கமும் கேட்க அவனது மறுமொழியில் அவளது கண்கள் சாசர் போல் விரிந்தது.

இங்கே பால்கனியில் நின்று கொண்டு இருந்த முரளியோ அலுவலகத்திற்கு நேரம் ஆவது உணர்ந்து, அறைக்குள் செல்ல திரும்பியவனின் காதில் விழுந்தது, மகனின் சமாதானமே. மகனின் பிஞ்சு மொழியில் புருவம் சுருக்கியவனை கலைத்தது மனைவியின் குரலே, “என்னடா செல்லம் சொன்னீங்க?” என கேட்க “அதான்மா இந்த அப்பாவ நம்ம தாத்தா கிட்ட மாட்டி விட்டுடுவோம்!” என்றது தான்
மகனின் சாமர்த்தியத்தில் அவன் முகம் புன்னகையை பூசிக்கொண்டது என்றால், அவன் மனையாட்டிக்கோ “பகீர்” என திகிலை பரப்பியது.

பாவையவளுக்கோ உள்ளம் “திடும்” என அதிர, இதை யாராவது கேட்டால் குறிப்பாக
கணவனோ மாமியாரோ அல்லது அவள் பெற்ற அந்த குட்டி ராட்சசி கேட்டால் அவ்ளோதான் என்ற எண்ணம் தோன்ற, சுத்தி முற்றி பார்த்து விட்டு, “செல்லம்! இனிமே இப்டி எல்லாம் அப்பாவ அப்படி சொல்ல கூடாது!” என்க,
தாய் சொல்லை தட்டாத அந்த அழகு மயிலோ, உடனே “சரிமா!” என தலையாட்டி கேட்டுக் கொள்ள, சின்ன சிட்டின் தலையாட்டளில் அவள் உள்ளம் கொள்ளை போக மகனை வாரி அணைத்து உச்சி முகர்ந்தாள் பெண்.

மனைவி சுற்றும் முற்றும் பார்த்த போதே, அவன் வேகமாக தன்னை அருகே இருந்த சுவரோரம் மறைத்து கொள்ள, அவள் என்ன சொல்கிறாள் என காதை தீட்டி வைத்து காத்திருந்தவனின் விழுந்த மொழியில், அவனின் உதட்டோரம் சிறு கசந்த முறுவல் தோன்றி மறைந்தது.

மகனை அழைத்துக் கொண்டு நிமிர்ந்தவளின் கண்ணும், உள்ளே வந்து கொண்டு இருந்தவனின் கண்ணும் நேர் கோட்டில் சந்திக்க, விழிகள் நான்கும் மௌன பரிமாற்றம் மேற்கொள்ள, அவன் விழிமொழி இவள் படிக்க தெரியாமல் திணற, அவனோ அவள் விழியின் மொழியை புரிந்தும் அதை அலட்சியம் செய்த படி சென்றான்.

மகள் அவளது பாட்டியிடம் சென்று விட,
மகனை இவள் குளிப்பாட்டி, தயார் செய்து
கீழே அழைத்து வந்து, பூஜை அறையில் மகனை கடவுளை வழிபட வைத்து, உணவு மேஜைக்கு அழைத்து வந்தாள்.
இவள் அங்கு வரும்போது ஏற்கனவே
இவளது மகள் அங்கே கிளம்பி அமர்ந்து
இருக்க , “தன்யா என்னடா கிளம்பிட்டீங்களா?” என கேட்டுக் கொண்டே மகனை கையில் பிடித்தபடி வர, அவளோ அம்மாவை பார்த்ததும் வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்து விட்டால்.

அதில் முகம் சுருங்கினாலும், மகனை தூக்கி அவனை டைனிங் டேபிள் மீது அமர வைத்து, இவள் காலை உணவு தயாராகி விட்டதா என பார்க்க கிச்சன் பக்கம் நகர, ராகுல் தனது தமக்கையை பார்த்து, “ஏன் தனு இப்பி பண்ண?” என அவளிடம் வினவ, அவளோ புருவம் சுருக்கி அவனை கேள்வியாய் நோக்க,
“அம்மா உன்ன ஸ்கூலுக்கு தானே எப்பி விட்டாங்க! நீ ஏன் அப்பாகிட்ட பொய்யி சொன்ன?” என தனது சகோதரன் கேட்டதில், தனது குட்டு வெளிப்பட்டு விதத்தில் அவளுக்கு சினம் பொங்க கோபத்தில் அவனை பிடித்து தள்ளி விட,
குழந்தையோ சமாளிக்க முடியாமல், தடுமாறி விழுந்து விட்டான்.

அவன் பாவம் குழந்தை தன்னை விட மூன்று வயது பெரிய குழந்தை தள்ளிவிட்டதில் மேஜை மேல் உட்கார்ந்து
இருந்தவன் கீழே விழுந்து விட, வலியில்
அழுக தொடங்கி விட்டான். அனைவரும் காலை உணவு ஒன்றாக சேர்ந்து அமர்ந்து உண்ணுவதால், எல்லாரும் வரும் நேரமாகி விட, சமைத்த உணவுகளை டைனிங் டேபிளுக்கு எடுத்து வந்து கொண்டு இருந்த பிருந்தா கண்ணில் பட்டது கீழே விழுந்து அழுது கொண்டு இருந்த மகனும்,
அவன் முன் அலட்சியமாக நின்று கொண்டு இருந்த மகளையும் தான்.

அவள் வேகமாக விரைந்து வந்து, மகனை தூக்கி கை கால்களை தட்டி விட்டு கொண்டு இருக்க, தாயை கண்டதும் அவனுக்கு அழுகை பொங்கி கொண்டு வர, மேலும் வலியும் பெருகியதால், “ஓ”வென்று அழுக, “என்னமா என்ன ஆச்சு?யென் இப்டி அழுறீங்க?” என சிறுவனின் முகம் பார்த்து கேட்க, “அக்கா தான் மா என்ன இப்பி கிழே தள்ளி விட்டுட்டா!” என அவன் அழுகையுடனே சொல்ல, மகளிடம் திரும்பிய பிருந்தா,” ஏன் தனு அவனை தள்ளிவிட்ட? அவன் உன் தம்பி தானே!” என கூற மகளோ வெகு அலட்சியமாக தலையை சிலுப்பிவிட்டு கொண்டு நின்றாள். அவளது செய்கையில் அன்னையிடம் கோவம் வர ஆரம்பிக்க, அவள் தோள் பிடித்து “ஏன் இப்படி பண்ண!”என கேட்கும் போதே, அவ உன்ன அப்பாகிட்ட மாத்தி விட்டால மா, அதான் ஏன் இப்பி பண்ண கேட்டேன்! என்ன இங்க இருந்து தள்ளி விட்டா மா அக்கா!” என மகனது குரல் இடையிட, மகனது கூற்றில் மனம் நெகிழ்ந்து என்றால், மகளது செய்கையில் கோவம் துளிர்த்து.


“உனக்கு என்ன அவ்ளோ பிடிவாதம் இப்போவே!” என அவள் தன்யாவை கண்டித்துக் கொண்டு இருக்க, மகளோ முதலை விட இன்னும் தெனாவெட்டாக தாயை பார்த்து வைக்க, “உன்ன தான் கேட்குறேன்!” என அவள் மறுபடியும் கேட்க, அப்போவும் அவளது அலட்சிய பாவம் மாற வில்லை.

அங்கே அப்போது தான் அவளது பாட்டி சாரதா படி இறங்கி வந்து கொண்டு இருக்க, அவரது கண்ணில் அழுது கொண்டு இருந்த ராகுல் படவில்லை, மாறாக பேத்தியை அதட்டிக் கொண்டு இருக்கும் மருமகள் தான் பட்டாள்.

என்னவோ தனது அருமை பேத்தியை அவள் ஏதோ செய்து விடுவது போல வேகமாக அருகில் வந்தவர், கண்ணில் அலட்சியமாக நின்று கொண்டு இருந்த தன்யா பட வில்லை, அழுது கொண்டு இருந்த ராகுலும் படவில்லை.

கொக்கொன்றே மதி என்பது போல், அவரது கண்ணில் பிருந்தா தான் விழ,
“ஏய்! அவளை என்ன பண்ணிட்டு இருக்க?” என கேட்டபடி வர, மாமியாரை கண்டதும் அவளது கை தானாக மகள் மேல் இருந்து விலக, அதுவரை அமைதியாக அலட்சியமாக நின்று கொண்டு இருந்த தன்யாவோ மறு நொடி தனது செல்ல பாட்டியை கண்டதும், “ஓ”வென்று கத்தி அழுக ஆரம்பித்து விட்டாள்.

சாரல் அடிக்கும்…
 
Last edited:

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
IMG_20200515_215120.jpgபோன எபிக்கு பொம்மை அண்ட் கமெண்ட் அளித்த நல் உள்ளங்களுக்கும் ரொம்ப நன்றி.

இந்த எபில விஷ்வா அவனோட மகளுக்கும் தன்னோட தொழிலுக்கும் இடையே அல்லாடுறான்.

சென்னை மாநகரின் அந்த சிக்னலில்
நின்றுகொண்டு இருந்தது அந்த வெள்ளை நிற ஹியுண்டாய் வெர்னா. அதனுள் அழகாய், கம்பீரமாய் விஷ்வா. அவன் அணிந்திருந்த அந்த வொயிட் கலர் ஷர்ட் அதற்கு பொருத்தமாய் சில்வர் கலர் சூட் பிங்க் கலர் டை அவனுக்கு வெகு பொருத்தமாய் இருந்தது. அலுவலகத்தில் தலைக்கு மேல் வேலைகள் இருக்க, அவன் சீக்கிரம் கிளம்ப தான் நினைத்தான். ஆனால் அவன் பெற்ற அந்த குட்டி வாண்டோ அவனது நேரத்தை சுருட்டிக் கொண்டாள்.

மகளது நினைவில் சில காலமாய் இறுகி கிடக்கும் அவன் இதழ்களில் புன்னகை பூ மலர்ந்தது . வறண்ட அவனது வாழ்வின் வசந்த காலம் அவன் மகள். காலை நிகழ்ந்தது அவனது மனதில் வரிசையாய் கூட்ஸ் வண்டி போல சட சடக்க, நினைவு என்னும் ரயில் மகளிடம் ஆரம்பித்து, மனையாளிடம் முடிந்தது.

மனையாளின் நினைவு வந்தவுடன் அவனது தெளிவான மனதடாகத்தில் கல்லெறிந்தது போல் ஏதோ ஒரு மெல்லிய சலனம். அதுவும் அவளது பார்வை அது சொல்லும் செய்தி தான் என்ன? ஆம் ஏனோ அந்த கண்கள் அவனிடம் எதுவோ சொல்ல விளைவது போன்ற ஒரு மாயத்தோற்றம் அவனுள். அந்த கண்கள் அவனிடம் கூற விழைவது தெரிந்தால் அவனது நிலை?

அவளது நினைவுகளை அவன் மகளின் தாய் ஆக்கிரமிக்க, ஏனோ அந்த விழியின் மொழியினை அலட்சியப்படுத்த முடியவில்லை. அது அவனது மகளின் தாய் என்பதாலா, இல்லை அவன் தாலி கட்டிய மனைவி என்பதாலா? எதுவோ ஒன்று அதற்கு பெயர் எது என்று தான் தெரியவில்லை.

எங்கெங்கோ சென்று கொண்டு இருந்தவன் மனது மறுபடியும் மகளிடம் வந்து நின்றது. மகள், அவனது வாழ்வின் வெளிச்சம் அவள். மகளின் புரிந்துணர்வில் அவளது சாயல் கண்டான் அவன். அவன் கண் முன்னே வரிசையாய் சில பல நிகழ்வுகள். அது அத்தனையின் நடுநாயகமாய் அவள்.

சீராய் சென்ற படகு சுழலில் சிக்கியது போல, அவனது மன படகும் அவளது நினைவுச் சுழலில் சிக்கி, அல்லகளிக்கப்பட்டு , வெளி வரமுடியாமல் போக, அவனது மனம் போலவே அவனது வாழ்வும் சின்னாபின்னம் ஆனது விதியின் சதியா? அல்லது மதியின் சதியா?

எதனாலோ நீரோடும் பாதை நடுவே தென்படும் பாறையில் மோதிய படகு போல் அவனது வாழ்வும் உருக்குலைந்து போனது. மனதின் வெண்மை தாளாமல், உடலும் வியர்வையை பெருக்க, அவன் கை ஏசியை இன்னும் கூட்டி வைத்தது. அந்த குளிர்ந்த காற்றும் அவனது வெம்மையை தணித்த பாடில்லை.

அது மேலும் அவனது வெம்மையை பெருக்க தான் செய்ய, மூச்சிற்கு திணறுவது போல இருக்க, காரின் கண்ணாடியை இறக்கி விட்டு வெளி காற்றை கண் மூடி ஆழ்ந்து சுவாசிக்க, அவன் மனம் சமன் பட்டது போன்று இருக்க, அப்படியா உன்னை விட்டு விடுவேன் என விதி கை கொட்டி ஏக்காளமிட்டது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஏசியை ஆஃப் செய்ய திரும்பியவனின் கை பட்டு அங்கிருந்த பிளேயர் ஆன் ஆக, “ஹாய்! ஹலோ! நீங்க கேட்டுகிட்டு இருக்குறது ……… இன்னைக்கு நம்ம ஷோல காதல் பாடல்கள் கேட்கப்போறோம் சோ ஸ்டே டுன் வித் மீ” என ஏதோ ஒரு சேனலில் பாடல் ஒலிக்க, அதை ஆப் செய்ய போனவனின் கை அப்படியே நின்றது.

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓ ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
என் அருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

இது வரை எங்கிருந்தோம்
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்…..

அவள் நினைவாக அவன் கேட்கும் பாடல் இது. அந்த பாடல் ஓடிக்கொண்டு இருக்கும் போது தன் மனம் போகும் போக்கை அறிந்து, திடுக்கிட்டு அவன் “மப்ச்” என சலிப்போடு, திரும்பும் போது, அவனது கார் அருகே ஒரு டூவீலர் வந்து நின்றது.

அவர்கள் காதல் ஜோடி போலும், அவர்கள் உலகத்தில் அவர்கள் லயித்து இருந்தனர். ஏதோ பேசி சிரித்துக்கொண்டு, அந்த பெண் அவனுக்கு தனது துப்பட்டாவினால் குடை பிடிக்க, அவன் அவளை நோக்கி அழகான புன்னகையை சிந்த, அந்த காட்சி ஒரு நொடியில் அவனும் அவளுமாக தோன்ற காணும் யாவிலும் அவள் முகமே, அது அவனது ரணத்தை மேலும் ரணப்படுத்துவதாய்.

தன் எண்ணத்தின் பாதை அறிந்து அவன் தனக்குள்ளே வெட்க, எல்லாம் ஒரு நொடி தான் அவன் வேகமாக கார் கண்ணாடியை ஏற்றி, அந்த பிளேயரையும் ஆஃப் செய்து விட்டு, வழக்கம் போல் அவனது முகம் இறுக, அவனது கையும் ஸ்டியரிங் வீலை இறுக பற்றியது. தன் நினைவில் உழன்று கொண்டு , தன்னை தானே நிந்தித்து கொண்டு இருந்தவனின் கவனத்தை பின்னால் நின்றுக்கொண்டு இருந்த வாகனங்களின் சரமாரியான ஹாரன் ஒலி அவனை கலைக்க, அதில் சுய உணர்வு பெற்றான்.

அதற்குள் சிக்னலும் திறக்க பட, விருட்டென்று காரை கிளப்பி கொண்டு சென்றான். அங்கே வேகமடுத்த அவனது கார் சென்னைக்கு வெளியே சற்று தள்ளி உள்ள அவனது தொழிற்சாலையில் போய் தான் நின்றது.

பார்க்கிங்ல் காரை நிறுத்திவிட்டு, தனது தளத்திற்கு செல்ல, லிப்ட் நோக்கி சென்றான். தனக்குரிய தளம் வந்ததும், அவனுக்கே உரிய வேக நடையுடன் தனது அறை நோக்கி சென்றுக கொண்டு இருந்தவனை அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் மரியாதை நிமித்தமாக வணக்கம் வைக்க, அவனும் மிதமான தலையசைப்புடன் அவர்களை அலட்சியப்படுத்தாமல் கடந்து சென்றான். அது தான் விஷ்வா. நான் முதலாளி என்ற அகங்காரம் அவனிடம் சிறிதும் இருக்காது.
அவனது முகத்தில் இருந்து என்ன நினைக்கிறான் என்று கண்டு பிடிக்க முடியாது. அது அவன் தொழில் செய்வதாலோ? அல்லது வாழ்க்கை கற்று தந்த பாடமா? அவன் உணர்வில்லா முகமூடி கொண்டு தன்னை அதனுள் மறைத்து வைத்து கொண்டான்.
தனது அறைக்கு வந்தபின் தனது மேஜைக்கு சென்று அமர்ந்தவுடன் உடனே இண்டர்காம் எடுத்து “மேனேஜர் சாரை என் கேபின்கு வர சொல்லுங்க” என சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

ஒரு 5 நிமிடம் கழித்து, மெல்லிய கதவுதட்டலுடன் “மே ஐ கம் இன் சார்?”
என ஒரு குரல் கேட்க, “கம் இன்!” என இவன் மொழிய, இவன் வயது மதிக்க தக்க ஒரு ஆள் உள்நுழைந்தான். “வாங்க அசோக் இன்னைக்கு வர இருந்த லோட் எல்லாம் வந்து எறங்கிடுச்சா?” என விஷ்வா கேட்க, “எல்லாம் இன்னைக்கு காலையிலே வந்துடுச்சு சார்!” என அசோக் பதில் சொல்ல, “ஓகே இன்னைக்கு என்ன என்ன அப்பாண்ட்மெண்ட்ஸ் எல்லாம் இருக்கு?” என்றவனுக்கு அவன் பதில் அளித்துக்கொண்டே வர, “இன்னைக்கு மதியம் அந்த கிளையண்ட் மீட்டிங்க்கு தேவையான எல்லா ஏற்பாடும் பண்ணிடுங்க!” என்றவன், உடனே தனது மகளிடம் கொடுத்த வாக்கு ஞாபகம் வரப்பெற்றவனாய், “இல்ல! இன்னைக்கு மதியம் மேல் எந்த அப்பாய்ண்ட்மெண்ட்சும் வேண்டாம் எல்லாத்தையும் போஸ்ட்போன் பண்ணிடுங்க!” என விஷ்வா கூற,

இவனது பதில் கேட்டு அசோக்கிற்கு தலை கிறுகிறுத்து தான் போனது. பின்னே இந்த ஆர்டர் கிடைக்க அவன் அவன் நீ நான் என்ன போட்டி போட்டுக்கொண்டு இருக்க, இவனும் அந்த ஆர்டர் கிடைக்க எவ்வளவோ முயற்சி செய்து அதற்க்கான பலன் கிடைக்க இருக்கும் நேரத்தில், இவன் என்னடா வென்றால் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைத்த கதையாக இவர் அதை போஸ்ட்போன் பண்ண சொல்றார் என்று தான் அவன் மனதில் ஓடியது.

“இல்ல சார் அது வந்து…. வந்து…. !” என இவன் இழுக்க, “என்னனு சொல்லுங்க!” என விஷ்வா அவனை ஊக்குவிக்க, “ரொம்ப முக்கியமான கிளைண்ட் மீட்டிங் சார்! அவங்க ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் நம்மக்கு டேட் பிக்ஸ் பண்ணி இருக்காங்க. இதை நம்ம மிஸ் பண்ணினால் நம்ம கம்பனிக்கு ஒரு பெரிய ஆர்டர் மிஸ் ஆய்டும் சார்!” என அசோக் நிலைமையின் தீவிரம் எடுத்து கூற, இவனின் முகத்திலோ சிந்தனை ரேகை ஓடியது. மகளா? தொழிலா? என அவன் மனம் விவாதம் நடத்த, பெரும் குழப்பத்திற்கு ஆளானான் விஷ்வா.

இவனது புருவ மத்தியில் குழப்ப முடிச்சுகள் சுருண்டு இருக்க, மகளது ஆசையா? அல்லது தனது தொழிலா? என ஒரு மனதாக முடிவெடுக்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக அவன் மகளுக்கும் தொழிலுக்கும் இடையே கிடந்து தவிக்கலானான், அவன்.

மகளது எதிர்பார்ப்புடன் கூடிய முகமே நினைவில் ஊஞ்சலாட, ஒரு தொழில் செய்பவனாக அவனுள் இருக்கும் விஷ்வப்ரகாஷ் தடுமாறினான். எப்போதும் ஆளுமையுடன் எளிதில் அனைத்திற்கும் நொடியில் தீர்வு கண்டுபிடிக்கும் தனது முதலாளி இன்று இப்படி தவிப்பதை கண்டு அசோக் “என்னாச்சு இவருக்கு?” என குழம்பி போனான் அவனும்.

“சரி மீட்டிங் எப்போ?” என அவன் மறுபடியும் கேட்க, இவனோ, “இன்னைக்கு இவருக்கு காத்து கருப்பு எதுவும் அடிச்சுடுச்சா?” என அவன் யோசித்து கொண்டு இருந்தான். “என்ன அசோக்! நான் கேட்குறது காதில் விழுதா?” என விஷ்வா கேட்க, இவனோ கனவில் இருந்து விழித்தவன் போல திருத்திருத்தான்.

“அவங்க மீட்டிங் மதியம் லஞ்சுக்கு அப்புறம் தான் சார்! ஆனா அது முடிஞ்சதும் ஈவினிங் 4o கிளாக் இன்னொரு மீட்டிங் நீங்க பிக்ஸ் பண்ணி இருக்கீங்க சார்!” என அவன் பதிலிருக்க, இவன் ஒரு நொடி கண் மூடி யோசிக்களானான். ஏதோ ஒரு தீர்வு தோன்றவே, பட்டென கண்ணை திறந்து, “ஓகே! பைன் அந்த மெயின் டீலர்ஸ் மீட்டிங் லஞ்சுக்கு முன்னாடி இல்ல லஞ்சு டைம் வசதி படுமானு கேளு?”என மடமடவென அவனுக்கு உத்தரவிட்டான்.

அவனையே பேவென பார்த்துக்கொண்டு இருந்தவனை
“அசோக்! அசோக்!” அப்படியும் அவன் கவனம் இங்கில்லாமல் போக “டேய்! அசோக்!”என அவனை மரியாதையாய் அழைத்து இந்த உலகிற்கு கொண்டு வந்தான்.

“இல்ல சார்! அ…து….” என இழுத்தவனிடம், “என்னடா நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ கனவு கண்டுட்டு இருக்க!” என தனது நண்பனை அதட்ட, “இல்ல சார்… மச்சான்… அது வந்து இன்னைக்கு என்னடா ஆச்சு உனக்கு எப்போவும் இப்படி போஸ்ட்போன் பண்ண மாட்ட இன்னைக்கு என்ன?” என்ற அவன் விஷ்வாவிடம் வினவ,

“இன்னைக்கு பிரகதிய வெளிய கூட்டிட்டு போறேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கேன் டா!” என சொல்ல, இதுவரை புரியாமல் குழம்பியவன், “இதை முன்னாடியே சொல்ல வேண்டியது தானே இரு மச்சான் நான் இப்போவே போய் அவங்களுக்கு போன் பண்ணி போஸ்ட்போன் பண்ண சொல்றேன்!” என அவன் வேகமாக திரும்ப, “மேனஜர் சார் நான் சொன்னதை செய்ங்க போங்க” என அவன் சிறுபுன்னகையுடன் அதட்ட “ஏண்டா?” என அவன் இவனை பாவமாய் நோக்க, “போங்க சார்!” எனவும் பலியாடு போல தலையை ஆட்டியபடி வெளியேறினான் அசோக். செல்லும் அவனையே கண்டு சிறு புன்னகை உதிர்த்தான் விஷ்வா.

வெளியே வந்த அசோக் என் நண்பன் வாழ்க்கையை சீக்கிரமே சரி பண்ணிக் கொடு ஆண்டவா என கடவுளிடம் அவசர கோரிக்கை வைத்தான். இங்கே உள்ளே விஷ்வா ஏதோ தான் திட்டமிட்டது நடந்தே விட்டது போல மிகவும் மகிழ்ச்சியாய் உணர்ந்தான். தான் திட்டமிட்ட படி நடந்தால் மகளின் முகத்தில் புன்னகையை காணலாம் அல்லவா என அவன் தந்தை மனம் யோசித்தது.

நீங்கள் நினைத்தது எல்லாம் நடந்து விட்டால் நான் எதற்கு இருக்கிறேன் என்று விதியும் இவர்களை கண்டு சிரித்ததை இருவரும் அறியவில்லை.


சாரல் அடிக்கும்……
 
Last edited:

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sorry pa epi late aagiduchu. En paiyan night thoonguvathu illa. Pagal aiyum thoonga vida maaten gustan. Stomach pain ear pain nu aluthu kitte irunthan paathi naal. So ennala epi type pana mudiyala sorry adjust karo paa. Please read and share your comments




சாரல் 5

தனது பாட்டியை கண்டதும் அது வரை அலட்சியமாக நின்று கொண்டு இருந்த தன்யா, “ஓ”வென அழுக ஆரம்பிக்க, தனது பேத்தியின் அழுகையை கண்டதும் சகலமும் மறந்து போனது சாரதாவிற்கு. ஏதோ தனது செல்ல சீமாட்டியை மருமகள் ஏதோ செய்தது போல வேகமாக வந்தவர், என்ன நடந்தது என்று கேட்டு அறிய முற்படவில்லை. மாறாக “ஏய்! என்ன பண்ண அவள? தன்யா கண்ணு என்னமா ஆச்சு? ஏன் இப்படி அழுகுற?” என அதிகாரமான குரலில் மருமகளிடம் ஆரம்பித்து ஆதுரமாக பேத்தியிடம் முடித்தார்.

தன்யாவோ மேலும் அழுதவாறு தனது பாட்டியை பார்க்க, அவரோ அவளது கண்ணீரை காண பொறுக்காமல் அவளை தனது வயிற்றோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, மருமகளிடம் பார்வையை செலுத்த, “இல்லை! அவ…. ராகுல் அஹ் தள்ளி விட்டுட்டா! அதான்…. அவள…. !” என்று பிருந்தா முடிக்கக்கூட இல்லை. இவளது அழுகை சத்தம் அதிகமானது.

உடனே அவரது கவனம் இவளிடம் திரும்ப, “என் கண்ணுல அழக்கூடாது! ஏம்மா இப்படி அழுகுறீங்க ? பாட்டி நான் இருக்கேன்ல நீ அழாத டா ராஜாத்தி!” என விதம் விதமாக பேத்தியை செல்லம் கொஞ்ச, அவளது அழுகையின் ஸ்வரம் சிறிது கூட, “சரிடா என் செல்லம் அழாதீங்க!” என பேத்தியை சமாதானம் செய்ய முயல அவளது அழுகை சிறிது குறைந்தார் போல இருந்தது.

அவளது அழுகை சற்று மட்டு பட்டவுடன் இவர் மறுபடியும் தனது விசாரணையை மருமகளிடம் துவங்க, அவளது பார்வை முழுவதும் மகளிடமே. “சொல்லு! இவள என்ன பண்ணுன யென் அவ அழுகுறா? அவளை எதுவும் சொன்னியா? இல்ல அடிச்சியா?” அவராகவே ஏதோ யூகிக்க, “இல்ல அத்தை! நான் அவளை அடிக்கலாம் இல்லை அவ தான் ராகுல் அஹ் கீழ தள்ளி விட்டுட்டா!” என அவள் தனது மாமியாரிடம் விளக்கம் அளித்து கொண்டு இருக்கும் போதே அதுவரை தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்தவள் முகத்தில் இப்போது லேசாக கலவரம்.

“அப்படியா! சரி சொல்லு அவ எதுக்கு இவனை தள்ளி விட போறா என குதறக்கமாக அவர் மறுபடியும் வினவ பிருந்தா வாயை திறக்கும் போது இவள் எங்கே தனது குட்டு வெளி பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மறுபடியும் தனது ஸ்பீக்கரை அலற விட, அதில் சாரதாவின் கவனம் மறுபடியும் பேத்தியின் இடத்தில்.

தனது மகள் செய்யும் அட்டகாசத்தை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தாள் பிருந்தா. அவளால் வேறு என்ன செய்ய முடியும். ஒரு தாயாய் அவள் தனது மகளை கூட கண்டிக்க முடிவதில்லை.

“என் கண்ணுல அழாதமா பாட்டி நான் இருக்கேன்ல நான் இருக்க வரை நீ எதுக்கும் கண் கலங்க கூடாது!” என சாரதா என்ன நடந்தது என்று கூட அறியாமல் பேத்தியை சமாதானம் செய்துக்கொண்டு இருந்தார். தெரிந்து இருந்தால்!!!!(ஒன்னும் நடந்து இருக்காது)

தனது பாட்டி துணைக்கு இருக்கும் தைரியத்திலும், அவரை மீறி தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற குருட்டு நம்பிக்கையிலும் அவள் தனது தாயை கண்டு யாரும் அறியா வண்ணம் ஒரு கேலி புன்னகையை சிந்த, பிருந்தாவோ அவளை அழுத்தமாக பார்க்க, அவள் தனது பாட்டியின் வயிற்றில் முகம் புதைத்து கொண்டே, “அம்மா என்ன முறைக்குறாங்க பாட்டி !” என மறுபடியும் அழுவது போல் விசும்ப, படக்கென்று தனது மருமகளை நிமிர்ந்து பார்த்தவர், “நான் இருக்கும் போதே நீ இவளை இப்படி முறைக்குற! யாரும் இல்லாத நேரம் நீ என்ன செஞ்சியோ?” என எதிர் இருப்பவளின் வார்த்தைகளை செவி மடுக்காமல் தன் பாட்டுக்கு தீர்ப்பெழுத்தினார்.

ராகுலின் அழுகையோ தேம்பலாக மாறி இருக்க, அவனும் தனது தமக்கையின் அட்டகாசங்களை தான் கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான். அதில் அவனது வலி கூட பின்னே போய் விட்டது. “இன்னும் என்ன மசமச னு இங்கேயே நின்னுகிட்டு இருக்க! எல்லாரும் வர நேரம் ஆச்சு!” என அவளை விரட்ட, நேரம் ஆவது உணர்ந்தும், சூழ்நிலை கருதியும் மௌனமாக அவள் மகனை நாற்காலியில் அமர வைத்து உள்ளே செல்ல, இங்கு தன்யாவோ ராகுலை மிதப்பாக பார்த்து வைத்தாள்.

உணவுகளை கொண்டு வந்து அடுக்கி விட்டு மகனுக்கு தட்டு வைத்து விட்டு மகள் கேட்ட பூரி தயாராகி விட்டதா என பார்க்க அவள் உள்ளே செல்ல, இங்கு தன்யா தனது சகோதரனை பார்த்து நக்கலாக சிரித்து அவனை சீண்டி வம்பிலுக்க, அவன் மறுபடி உதடு பிதுக்கி அழ, “டேய்! ஏண்டா அழுற?” என சாரதா அவனிடம் , அவன் அவரை கண்டு அழுகை அடக்கி பொறும, ஏன் அழுத என சின்ன பிஞ்சிடம் கூட கடுமையாக கேட்க, அதற்குள் மகனது சத்தமும் மாமியாரின் அதட்டலும் கேட்டு விரைந்து வந்தாள், பிருந்தா.

மகன் இம்முறையும் அழுதுக்கொண்டு இருக்க, “மறுபடியுமா! இம்முறை என்ன பஞ்சாயத்தோ ?” என உள்ளம் சோர்ந்து போனால் அந்த தாய். வேகமாக வந்து மகனை வாரி மடியோடு அணைத்துக்கொள்ள, கண்கள் கலங்கி மூக்கு சிவந்து அழுகையில் துடித்து கொண்டு இருந்தது, அந்த சின்ன உதடு.

என்ன? என்று கேள்வியாக ஒரு வரியில் மகளையோ அல்லது மாமியாரையோ கேட்க முடியாது, மகனையே மறுபடியும் கேட்க, “அதை என்கிட்ட கேளு! நல்லா பிள்ளையை வளர்த்து வச்சு இருக்க! எதுக்கு எடுத்தாலும் வீடான வீட்டுல காலைல இருந்து “ஓ”னெ ஒப்பாரி வச்சுக்கிட்டு!” என இடை புகுந்தார் சாரதா.

மகனது கண்ணை துடைத்து, அவன் முகம் காண, தேம்பியவாறே, “அக்கா என்னை பார்த்து இப்டி செய்தா மா!” என அவள் அழகு காண்பித்ததை அதை பெரிதாக நினைத்து வருந்தி சொல்ல,
“நான் ஒன்னும் பண்ணல பாட்டி!” என எங்கே அடித்தால் தனது தாய் அடங்குவாள் என்னும் வித்தை தெரிந்தவளாய் தனது தாயின் பலவீனம் அறிந்து தனது பாட்டியை துணைக்கு அழைத்தாள் தன்யா.

“ மம்க்கும்! என் பேத்தியை சொல்லனா உனக்கும் அம்மாக்கும் தூக்கம் வராதா? இல்ல திங்குற சாப்பாடு செமிக்காதா?” என சிறு பிள்ளை என்றும் பாராமல் அவர் அவனை ஏச,

“ஏன் அத்தை! அவனை இப்டி பேசுறீங்க? அவனும் சின்ன குழந்தை தானே?” என்றது தான் தாமதம், அவள் எப்போது வாயை திறப்பாள் காத்துக்கொண்டு இருப்பவர்க்கு, “ஆமாண்டி! அம்மா! உன்னையும் இவனையும் குறை சொல்லாம எனக்கு சோறு தண்ணி இறங்க மாட்டேன்னுது பாரு!” என தனது புலம்பலை துவக்க, அவர் மேலும் விடாமல் தொடர்ந்தார்.

“உன்னை சொல்ல கூடாது ! எல்லாம் அவனை சொல்லணும் தராதரம் பார்த்து எல்லாம் பண்ணனும்!” என அவர் தனது வசை மாரியை பொலியத்துவங்க, பிள்ளைகள் முன் இப்படியா என்று கலங்கி போனது பெண் மனம். யாரும் இருக்கிறார்களா என அவள் அவமானத்தில் குறுகி கண் கலங்கி தலை குனிந்து நின்று இருந்த வேளை, “சாரதா!” என அவரை இடையிட்டது அவர் மாமியாரின் கம்பீர குரல். அவர் குரல் கேட்டதும் அவர் வாய் தன்னை போல மூட, “என்ன பேச்சு பேசிக்கிட்டு இருக்க, வீட்டு மருமகளை இப்படி தான் பேசுவியா?” என்றவரை மறித்து, “இ..ல்..லை அ..த்..தை!” என்று இவ்ளோ நேரம் தனது மருமகளை வெளுத்து வாங்கிய வாய் இப்போது தனது மாமியாரின் முன் பம்மியது.

“இல்ல அத்தை…. அது … வந்து…. எப்போ பாரு தன்யாவை குறை சொல்லிகிட்டே இருந்தா? அவளும் பாவம் சின்ன குழந்தை னு கூட பார்க்காம அவளை சதா நேரமும் ஏதாவது சொல்லிகிட்டே இருந்தா?” என்றவரின் ராகம் மாமியாரின் அழுத்தமான பார்வையில் நின்று போனது.

“பிருந்தா தான் இவங்க ரெண்டு பேரோட அம்மா பெத்தவளுக்கு தன்னோட பிள்ளைகளை எப்படி வளர்க்கனும் னு தெரியும்! அம்மா குழந்தைகளை கண்டிக்கும் போது மத்தவங்க தலையிடாம இருந்தா போதும் தேவையிருக்கும் போது நம்ம தலையிடலாம். நம்ம செல்லம் கொடுக்கலாம் தப்பில்லை. ஆனா நம்ம கொடுக்குற செல்லம் அவர்களை சீர் படுத்தணுமே தவிர சீரழிக்க கூடாது! பெத்தவளுக்கு தான் தன்னோட குழந்தைங்க மேல முதல் உரிமை, முழு உரிமையும் கூட! பிருந்தாவும் எல்லாத்துக்கும் கண்டிக்குற ஆள் இல்ல!” என்று அமிர்தம் பாட்டி பிருந்தாவை தாங்கி பேச, அவரது அனுசரணையில் பிருந்தா கண்ணில் கண்ணீருடன் அவரை நன்றியுடன் ஏறிட்டாள் என்றால், அவளது மாமியாரின் முகமோ கடுகடுப்பை காட்டியது.

அமிர்தம் பாட்டியின் கண்கள் கூர்மையுடன் தன்யாவை அளவிட, அவரது பார்வையில் அவள் பதறி, பயந்து தான் போனாள். இவர்களது சம்பாஷனைகளை கேட்டபடியே பிருந்தாவின் மாமனார் வைத்தியாலிங்கம் வர, கணவரை கண்டதும் தனது பாவனையை மாற்றிக்கொண்டனர், அனைவரும்.

என்ன இங்க சத்தம் என அவர் வினவ ஒன்னுமில்ல தம்பி நீ சாப்பிடு சாரதா நீ பரிமாறு பிருந்தா பசங்களை கவனிக்கட்டும் என தன் மருமகளை ஏவ அவர் உடனே பவ்யமாக சரிங்கத்தை என சிரித்தவாறு முகத்தை மாற்றிக் கொண்டார்.

மனத்திலோ “நேரம் காலம் தெரியாம இவங்க வேற!, இவங்க தயவுல தானே நீ இந்த ஆட்டம் போடுற! உன்னை எப்படி அடக்கனும்னு எனக்கு தெரியும். எனக்குன்னு நேரம் வராமலா போய்டும். அப்போ உங்க ரெண்டு பேரையும் கவனிச்சுக்குறேன்!” என மனதில் கருவியபடி தனது கணவருக்கு தட்டு வைத்து பரிமாற ஆரம்பித்தார்.

பாவம் அவர் அறியாதது, இங்கே நடந்த அனைத்தையுமே வைத்யநாதனும், அமிர்தம் பாட்டியும் அறிவர் என தெரியாமலே அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர். சாரதா மனதில் தனக்கான நேரம் வரை காத்திருக்க நினைத்தார். அவர் மனதில் நினைப்பது போல நடந்தால்? அந்த பேதை பெண்ணின் நிலையும் என்ன ஆகுமோ?

சாரல் அடிக்கும்….
 
Last edited:

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends
Sorry பா ரொம்ப late ஆகிடுச்சு. ரெகுலர் uds தர முடியல.

இன்னைக்கு எபி கொஞ்சம் மொக்கையா தான் இருக்கும் எனக்கே அது தெரியுது. இதை விட்டா எனக்கு வேற வழி தெரியல மொமெண்ட். இன்னைக்கு define பண்ணியே ஆகணும்னு தோணுச்சு சோ அதன் கொஞ்சம் bore அஹ் இருக்கும். Adjust பண்ணிக்கோங்க.


IMG_20200703_055120.jpg



சாரல் 6

தனது திட்டப்படி அனைத்தும் நடந்த மகிழ்ச்சியில் தனது அறையில் முகம் முழுக்க ஒரு வித உவகையும், தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறிய கர்வமும் ஒருங்கே அவன் முகத்தில் குடி இருக்க, கண்ணை மூடி அந்த கணத்தின் சந்தோஷத்தை அனுபவித்து கொண்டிருந்தான் விஷ்வா. தனது சீட்டில் பின்னே சாய்ந்து, டையை சிறிதாக தளர்த்தி, சட்டையின் முதல் இரு பட்டன்களை கழற்றி விட்டு, கண்மூடி அமர்ந்து இருந்தவனின் மனமோ 10 வயது சிறுவனுக்கு அவனுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை வாங்கி தந்தால் துள்ளிக் குதிப்பான் இல்லையா! அது போல உற்சாக துள்ளல் போட்டுக்கொண்டு இருந்தது.

இது என்ன சும்மா வந்த வாய்ப்பா? இது அவனது பல வருட கனவு. இதற்கு அவன் பட்ட பாடு அவனை அறிந்தோர் மட்டுமே அறிவர். அவன் காலையில் இருந்து நடந்தவைகளை அசை போட்டு கொண்டு இருந்தது.

அசோக்கிடம் செய்ய வேண்டியதை கூறியவுடன், அவன் இவனை “லூசாப்பா நீ!” என்பது போல தான் பார்த்திருந்தான். அவனின் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் விஷ்வா, காரணத்தை சொல்ல, ஏனோநண்பனின் துயரம் அறிந்தவனாய் அவனுக்கு உதவி செய்ய முன் வந்தான் அசோக்.

இருந்தாலும் ஒரு வளர்ந்து வரும் நிறுவனத்திற்கு சிறு சிறு விஷயங்களும் பெயர் பெற்று தரும். அப்படி இருக்க இப்படி வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் நண்பன் தாழியை உடைத்த கதையாகி போக கூடாதே என நண்பனின் நலனுக்காய் வேண்டியவாறே தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் கம்பெனியின் அதிகாரியிடம் தொடர்பு கொண்டான்.

தொழில் என்று வரும் போது அதில் எந்த வித சமரசமும் இன்றி தனது பக்கம் அனைத்தும் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வான் விஷ்வா. தனக்கு ஆர்டர் கிடைக்க வேண்டும் என்பதற்காக தேவையற்ற பொய்யான வாக்குறுதிகளோ அல்லது அவர்கள் புகழ் பாடியோ செய்ய முயலாதவன். அதுவே அவனுக்கு இந்த பத்து வருடத்தில் தொழிலில் ஒரு நற்பெயரை ஏற்படுத்தி தந்தது.

மற்றவரை போல இருந்து இருந்தால் இந்நேரம் இவன் திறமைக்கு அபார வளர்ச்சி இருந்திருக்கும். இவனது நேர்மையால் இவனால் ஆமை வேகத்தில் தான் தனது சொந்த உழைப்பில் முன்னேறி கொண்டு இருந்தான். அதற்கு பலன் தான் இந்த பேச்சு வார்த்தை.

இதுவரை குட்டி கரணம் போட்டு பல தடைகளை தாண்டி சிறிய அளவில் செய்து வந்ததை, இப்போது பெரிய அளவில் செய்ய ஆசைப்பட்டான். அதற்கு அவன் முழு உழைப்பையும் போட்டு இருக்கிறான். அவனவன் கொக்கு போல இந்த சந்தர்பத்திற்கு காத்திருக்கும் போது, இவனது இந்த செயல் நிச்சயம் அவனுக்கு அவர்களிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி தரப்போவதில்லை. அது மட்டுமே உறுதி.

இதை எல்லாம் யோசித்து கொண்டே இருக்கும் போது, அந்த பக்கம் லைன் கிடைத்து விட்டது. இல்லாத தைரியத்தை எல்லாம் திரட்டி, அவன் ஒருவாறு சொல்லி முடிக்க, அந்த அதிகாரியோ அவனை காயிச்சி எடுத்துவிட்டார்.

“இதுக்கு தான்ன்யா உங்களை மாறி சில்லறை கம்பெனி நடத்துற சின்ன பசங்க கிட்ட பேச்சுவார்த்தை வச்சுக்க கூடாதுனு என்றது சரியா போச்சு. உங்களை சொல்ல கூடாது என்ன சொல்லணும் காரியம் ஆகும் வரை காலை பிடிக்க வேண்டியது. அப்புறம் காரியம் ஆனோன காலை வாரி விட வேண்டியது!”

“வைங்கயா போன இனிமே இந்த பக்கம் மறந்தும் கூட எட்டி பார்க்காதீங்க!” என சரமாரியாக வசை மாறி பொழிந்தவர் போனை பட் என வைத்து விட்டார்.

நண்பனிடம் என்ன சொல்வது என தவித்து கொண்டு இருப்பவரின் மனதில் பாலை வார்க்கும் விதமாக, அவரே திரும்ப தொடர்பு கொண்டு, “ சரியா! நீங்க சொன்ன படியே லஞ்சு டைம்லயே மீட்டிங் அரேஞ்சு பண்ணிக்கலாம்!” இது தான் உங்களுக்கு லாஸ்ட் சான்ஸ் இதை மிஸ் பண்ணிடாதீங்க. உங்களை சிபாரிசு நான் தான் பணி இருக்கேன். என் மானத்தை வாங்கிடாதீங்க!” என ஏறக்குறைய மிரட்டி விட்டே போனை வைத்தார்.

இதை கேட்டு நிம்மதி பெரும்மூச்சு விட்டான், அசோக். விஷவாவிடம் இதை தெரியப்படுத்த, அதன் பின்னர் வேலை வேகமாக நடைபெற தொடங்கியது.

மதிய உணவு இடைவேளை நேரத்திற்கு முன்பு மீட்டிங் ஆரம்பம் ஆனது. வந்தவர்களை எந்த வித குறைவுமில்லாமல் வரவேற்று அமர வைத்து அதன் பின்னர் பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆனது.

அந்த நிறுவனம் பல வருடம் பாரம்பரியம் மிக்கது. அவர்கள் கால் பதிக்காத துறையே இல்லை எனலாம். எப்போவும் தங்களுக்கு இணையான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்பவர்கள்,இந்த முறை ஒரு மாற்றமாக சிறு மற்றும் புதியவர்களை அணுகலாம் என முடிவு செய்ய, விஷ்வா வின் நிறுவனத்திற்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

வந்தவர்கள் பலரும் ஆரவமில்லாமல் ஏனோ தானோ என இருக்க, அங்கிருந்த ஒரு வயசானவரின் பார்வை மட்டும் அவனை அளவிட்டு கொண்டு இருந்தது. அவர் அந்த நிறுவனத்தின் தலைவர்.

அவன் தனது விளக்கத்தை முன் வைத்த போது பலரின் பார்வையும் மாறி இருந்தது. இவன் என்ன செய்து கிழிக்க போகிறான்?” என நினைத்து இருந்தவர்களின் எண்ணத்தை வெற்றி கரமாக தன்னை நோக்கி தனது செயல்திட்டம் மூலம் திருப்பிவிட்டான்.

அவனது நிறுவனம் பாரம்பரிய சிறுகுறு தானியங்களை கொண்டு எப்போதும் செய்யப்படும் கூழ், களி, கஞ்சி போன்றவற்றிலிருந்து மாறு பட்டு அதில் இருந்து வித விதமாக சப்பாத்தி, பூரி, இட்லி, பணியாரம் பிட்சா போன்ற எண்ணற்ற உணவுகளை புதிய அதேநேரம் எந்த வித செயற்கையான கலப்படம்களும் இன்றி இயற்கையாக உடனடி உணவுகளாக தயார் செய்ய தனது நிறுவனம் மூலம் முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்றான்.

இந்த ஒப்பந்தம் மட்டும் அவனுக்கு கிடைத்து விட்டால், அவனது நிறுவனம் மிகப் பெரிய புகழை அடைந்து விடும்.

மிஸ்டர். விஷ்வ பிரகாஷ். உங்க ஐடியா எல்லாம் நல்லா தான் இருக்கு. பட் இது எவ்ளோ தூரம் ஒர்க் அவுட் ஆகும்?” போன்ற எண்ணற்ற கேள்விகளை அவர்கள் தொடுக்க, அனைத்தையும் சமாளித்து அவர்களை திருப்தி படுத்தி இருந்தான்.

ஆனால் அந்த பெரியவரின் அளவிடும் பார்வையில் மட்டும் எந்தவித மாற்றமும் இல்லை.

“சரி மிஸ்டர். விஷ்வப்ரகாஷ். எங்க எம்.டி யோட டிசிஸின் தான் பைனல். சோ நாங்க முடிவு பண்ணிட்டு சொல்றோம். என அவர்கள் கூற, “லன்ச் ரெடியா இருக்கா?” என இவன் அசோக்கிடம் வினவ, எல்லாரும் கலைந்து சென்றனர்.

இவர்களை சிபாரிசு செய்த அந்த அதிகாரியும், அஷோக்கும் பதற்றத்துடன் இருக்க, விஷ்வா மிகவும் அமைதியாக இருந்தான்.

அவன் எப்போதும் டென்ஷன் அடைபவன் இல்லை தான். ஆனால் அவனுக்கும் சேர்த்து இவன். டென்ஷனாக இருந்தான்.

மறுபடியும் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆனது. தனது அனைத்து தரப்பையும் இவன் பக்காவாக சொல்ல, அது அனைவருக்கும் திருப்தியாக இருக்க, இப்போது அந்த பெரியவர் முகம் சற்று தெளிந்து இருந்தது.

கடைசியாக அவர் அவனிடம், “உங்க திட்டம் எல்லாம் நல்லா இருக்கு தம்பி. ஆனா உங்களை விட எங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். ஆனா ன்எங்க எந்த காரணத்திற்காக இப்டி நடந்துகிட்டீங்கன்னு சொல்ல முடியுமா?” என அவர் வினவ

இதற்கு அவன் மவுனம் காத்தான். எல்லாரும் அவனையே நோக்க, "அது என் personal சர்!", என அவன் முடிக்க பார்க்க, "இது எனக்கு வேண்டிய பதில் அல்ல!" என்பது போல அவர் அழுத்தமாக அமர்ந்து அவனையே பார்த்து கொண்டு இருக்க.

ஒரு பெருமூச்சுடன் கண்ணை மூடி திறந்து, "என் பொண்ணுக்கு நான் இன்னைக்கு சாயங்காலம் வெளிய கூட்டி போறதா வாக்கு கொடுத்து இருந்தேன் சர்!” என அவன் முடிக்க, "எல்லாரும் உங்க சொந்த விஷயத்துக்காக எங்க நேரத்தை வீணாக்குவீங்களா ?” என நினைக்க, அதையே பலரும் வாய் விட்டும் கேட்க, “இந்த ஆர்டர் உங்களுக்கு தான். உங்க கூட வேலை செய்ய நாங்கள் தயார். சீக்கிரம் எங்கள் வக்கீல் உங்களை தொடர்பு கொள்வார்!” என கூறி அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தார், வைத்தியநாதன்.

சாரல் அடிக்கும்…
 
Last edited:

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் செந்தாமரைக்களே,
என் எழுத்து எப்படி இருக்கு. எனக்கு நான் ஏதோ உரைநடை இல்ல கட்டுரை எழுதுறது மாதிரியே இருக்குது. எப்படி இருக்கு நான் எழுதுறது, நான் சொல்ல வரது உங்களுக்கு புரியுதா என்று சொன்னால் மிக்க மகிழ்ச்சி.

போன எபிக்கு பொம்மை போட்டு கமெண்ட் செய்து என்னை உற்சாக படுத்திய நல் உள்ளங்களுக்கு நன்றி.








சாரல் 7

அனைத்தையும் அசை போட்டுக்கொண்டு இருந்தவனை கலைத்தது, “டேய்! நீ இன்னும் கிளம்பாம என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” எனும் அசோக்கின் குரல். அதில் தன் நினைவு அடைந்தவனாய் அவனை பார்த்து முகம் விகசிக்க புன்னகை புரிந்தவனை கண்டு, தன்னை மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான், அசோக்.

நண்பனின் அசையா பார்வை கண்டு, “என்னடா அப்படி பாக்குற?” என கேட்க,
“இல்லடா! நீ இப்படி சிரிச்சு பார்த்து ரொம்ப நாள் ஆச்சுன்னு!” என்றா சொல்வான்? அவன் என்ன பைத்தியமா? இப்படி அவன் சொன்னால் ஒரு வேளை நண்பனின் மனம் மாறி விடுமோ? இப்போது தான் இவன் தனது கூட்டுக்குள் இருந்து வெளியே வருகிறான்.

இன்றைய நாளின் மகழ்ச்சியை இதை அப்படியே சொல்லி அவன் மனநிலையை கெடுக்க வேண்டுமா? என்ற எண்ணம் தோன்ற, அதை நெருப்புக்கோழி எதிரியை கண்டு மண்டையை மண்ணுக்குள் புதைத்து கொள்வது போல, அப்படியே தனக்குள் புதைத்து கொண்டு, “இல்ல மச்சான் நீ பொண்ணா பொறந்து இருக்க கூடாதானு நெனச்சேன்!”

அவன் சொல்ல வருவது புரியாமல், புரியாத பாவனையில் “என்னடா சொல்ற?” என கேட்க, அதில் அவனது விஷம குணம் தலை தூக்க, அவனை விட்டு சிறிது தூரம் தள்ளி நின்றுக்கொண்டு, “இல்ல மச்சான்! நீ மட்டும் பொண்ணா இருந்து இருந்தா, முன்னாடியே உன்ன பார்த்து….. கரெக்ட் பண்ணி கல்யாணம் கட்டி இருப்பேன்!” என சொல்ல. அதில் இவன் கண்கள் அதிர்ச்சியில் எண் பூஜ்ஜியம் போலாக, மேலும் “இப்போ கூட ஒன்னும் கெட்டு போகலடா!” என சொல்லி கூட முடிக்கவில்லை.

“அடேய்!” எனும் அலறலுடன், வேகமாக தனது நாற்காலியை விட்டு எழுந்து வர. அசோக் அதற்குள் அந்த அறை வாசலை அடைந்து இருந்தான்.

“மச்சான்! இப்போ நீ ரொம்ப நல்ல மூட்ல இருக்க! நான் உன்னை வந்து அப்பறமா பார்க்குறேன்!” என இவனை பார்த்து சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, “வாங்க!” என பவ்யமாக அழைக்க, யாராக இருக்கும் என இவன் திரும்பி பார்த்த வேளை, அவன் அசந்த நேரம் பார்த்து, அவனை பிடிக்க வர, அதற்குள் சுதாரித்து அந்த அறைக்குள்ளே ஓட ஆரம்பித்தான் அசோக்.

“டேய்! ஒழுங்கு மரியாதையா நின்னுடு! நான் வந்தேன் மவனே நீ சாஸு தான்!” என விஷ்வா எச்சரிக்க, அதை பொருட்படுத்தாமல் ஓடி கொண்டு இருந்தான் அசோக்.

இவர்கள் இங்கே கண்ணா மூச்சி ஆடிக்கொண்டு இருக்க, வீட்டில் தனது தந்தை தன்னோடு செலவழிக்க போகும் நேரத்திற்காக வீட்டில் உள்ளவர்களையே அமர்களப்படுத்திக்கொண்டு இருந்தாள், அவனின் குட்டி தேவதை.

எப்படியோ அவனை எட்டி பிடித்து, தனது கை வளைவுகள் கொண்டு வந்து அவனது கழுத்தை நெருக்கி பிடித்த வண்ணம், அவன் மண்டை அதிர அதிர, கொட்டினான் விஷ்வா.

“டேய் மச்சான்! என்ன விட்டுடுடா! நான் உன் பெஸ்ட் பிரெண்டுடா !” என வலி தாங்க முடியாமல் அவன் கதற, “இனிமே இப்படி சொல்லுவியா? சொல்லுவியா?” என மேலும் பல கொட்டுக்களை பரிசளித்து விட்டு தான் ஓய்ந்தான் விஷ்வா.

தனது நண்பனின் முகம் இறுக்கம் இல்லாமல், பல காலம் கழித்து இருப்பதை கண்டு, “நீ எப்போவும் இப்படி சிரிச்சுகிட்டே இருக்கணும் டா மச்சான்!” என அசோக் சொல்ல, முகம் மாற ஆரம்பித்தது, விஷ்வாவிர்க்கு.

“அப்பா சாமி! உடனே நீ மலை ஏறிடாதே! நான் ஒண்ணுமே சொல்லல டா அப்பா!”

நீ முதல கிளம்பு!” என சொல்ல, நண்பன் பேச்சை மாற்றுவது புரிய, “எங்கடா ?” என்றானே பார்க்கலாம். அவனது கேள்வியில் கரண்ட்டு கம்பத்தில் அடிபட்ட காக்கா போல ஆனது அசோக்கின் நிலைமை.

“என்னாது எங்கயா !” அடேய் மறுபடியும் முதல இருந்து ஆரம்பிக்காதடா என்னால முடியல! உன் பொண்ண வெளிய கூட்டிட்டு போறேன்னு சொன்னியே டா அதுக்குத்தான்!” என.

உடனே தனது கை கடிகாரத்தை திருப்பி பார்த்து பதறியவனாய், நேரம் ஆவதை உணர்ந்து, “ அச்சச்சோ! டேய் எரும உன்னால தான் இப்போ லேட் ஆகி போச்சு! நவுறு டா அங்குட்டு!” என அவனை தள்ளாத குறையாக அவனை தொட்டு நகர்த்தி முன்னேற,

“டேய் கிராதகா! எல்லாம் என் நேரம் டா எல்லாம் என் நேரம். நீ இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ! நேரமாச்சே னு உன்னை நான் கிளம்ப சொல்ல வந்தா, நீ என்னையே குறை சொல்லரியா?” என அவனை திட்ட அவனையும், வெட்டுக்கிளி போல படையெடுத்த அவன் வசவுகளையும் கண்டு கொள்ளாமல், “சரி! சரி! வெட்டி பேச்சு பேசாம போய் வேலையை பாருடா!” என அசால்ட்டாக பிரியாணி செய்தது போல துடைத்து விட்டு சென்றான், அவனின் நண்பன்.






மதியம் 3 மணி போல வீட்டுக்கு வரும் பிரகதி, எப்போதும் வீட்டுக்கு வந்து கை கால் கழுவி, உடை மாற்றி, தனது பாடி செய்து தரும் மாலை நேர சிற்றுண்டியை கொறித்து விட்டு சிறிது நேரம் விளையாடிவிட்டு, ஹோம்ஒர்க் செய்து முடித்து சமத்தாக 8 எட்டு மணிக்கு சாப்பிட்டு விட்டு சீக்கிரமாகவே உறங்கி விடுவாள்.

எப்போதும் தாமதமாக வரும் விஷ்வாவும், அவன் மகளும் சந்திக்க முடியாமலே போகும். அவன் வீட்டில் இருக்கும் நேரமும் குறைவு தான். அவன் வரும் நேரம் இவள் உறங்கி விடுவதால், தூங்கும் மகளை ஒரு முறை பார்த்து விட்டு, அவள் முன் உச்சியில் சிறு முத்தம் பதித்து சென்று விடுவான்.

காலை நேரமும் அவன் ஆபீஸ்க்கும், இவள் பள்ளிக்கும் செல்ல நேரம் ஆகிவிடும் என்பதால், இருவருக்குமான நேரம் மிக குறைவு. என்ன தான் தாய் தன்னை பார்த்துக்கொண்டாலும் தனது தகப்பனை மிகவும் தேடினால் பெண்.

அதுவும் தனது பள்ளியில் உடன் படிக்கும்.பிள்ளைகளை அவர்கள் தந்தை கொண்டு வந்து பள்ளியில் விடுவதும், கூட்டி செல்வதும் என பார்த்து தனது தந்தை அது போல் செய்ய வேண்டும் என மிகவும் ஆசை பட்டது குழந்தை.

தாயிடம் சொன்னால், “உன் கூடவே இருக்கேன்! உனக்காகவே பார்த்து பார்த்து செய்றேன் ஆனா நீ உன்னை கண்டுக்காத உங்க அப்பாவை தான் தேடுற!” என கூறி அடிப்பாள் என்பதால், தனது மனத்திருக்குள்ளே போட்டு மறுகியது குழந்தை.

இங்கே அசோக்கிடம் சொல்லி கொண்டு கிளம்பிய விஷ்வப்ரகாஷ், லிப்டை நோக்கி சென்று பட்டனை அழுத்தி விட்டு காத்திருக்க, அவனது பொறுமையை சோதிக்க, காத்திருக்கும்அந்த நொடி கூட அவனுக்கு யுகமாக தெரிந்தது.

அவசர அவசரமாக பார்க்கிங் வந்தவன், தனக்குரிய பார்க்கிங் ஏரியா சென்று வேகமாக தனது காரை அடைந்து அதை உயிர்ப்பித்து அதனை இயக்கினான்.

மறுபடியும் ஒரு முறை தனது கை கடிகாரத்தை திருப்பி பார்த்தவன், நேரம் ஆவது அறிந்து லேசாக பதற்றம் அடைய, அதன் விளைவாக அவன் நெற்றியில் வியர்வை அரும்புகள் அந்த ஏ.சி காரிலும் அவனுக்கு அரும்பியது.

இங்கு வீட்டிலோ, தனது தந்தையுடன் வெளியே செல்ல ஆயத்தம் ஆகி கொண்டு இருந்த பிரகதி, வீட்டையே ரெண்டாக்க, அபியும் அவளது அழிச்சாட்டியங்களை இழுத்து பிடித்து வைத்த பொறுமையுடன் பொறுத்துக் கொண்டு இருந்தாள்.

அவன் வருகிறேன் என சொன்ன நேரம் நெருங்கிக்கொண்டு இருக்க மகளின் பதட்டம் கூடியது. மணி ஐந்தை தொட இன்னும் 5 நிமிடங்களே இருக்க தந்தையை காண ஆவலோடு காத்திருந்தாள், பிரகதி.

அவன் சொன்ன நேரம் தாண்டி நேரம் சென்று கொண்டே இருக்க, முதலில் அலட்சியமாக நின்று கொண்டு இருந்த அபியும் ஓரக்கண்ணால் மகளை கவனித்து கொண்டு தான் இருக்க, நேரம் செல்ல செல்ல அனிச்சம் மலர் போல வாட துவங்கியது, மகளின் முகம்.

மகளின் வாட்டம் பொறுக்காமல் மகளுக்காக அவன் சீக்கிரம் வர வேண்டுமே என்கிற தவிப்பில் இவளும் இருக்க, அவன் தான் வந்த பாட்டை காணோம்.

மகளின் முகத்தை பார்த்தாள். அதில் கண்ணில் நீர் 100 நாள் வேலையில் வெட்டி வைத்த குளம் போல தேங்க, அதை காண சகியாமல்,

“பிரகதி மா! நீங்க போய் உள்ள விளையாடுங்க!” என்ற விஷ்வாவின் தாய் வித்யா அவளை அழைத்து செல்ல, உள்ளுக்குள் பொறுமிக்கொண்டே, செல்லும் தன் அவர்களையே வெறித்தவாறு,

“க்கும்! அவன் வர மாட்டான்! அவனை நம்பினா இப்படி தான் நட்டாத்துல நிக்கனும்!” என அவள் முணுமுணுக்க,

“ரொம்ப நன்றி!” என தன் முதுகு பின்னே கேட்ட விஷ்வாவின் குரலில், பதறி பயந்து போய் திருத்திருத்து,
அவள் திரும்ப,
“என் மேல உன் நம்பிக்கையை வச்சத்துக்கு!” என அவளை பார்த்தவாறு அவன் அழுத்தமாக அவள் மட்டும் கேட்கும் குரலில் கூற, அவள் கண்கள் மிட்டாய் திருடி மாட்டி கொண்ட குழந்தையை போல, மாட்டிக்கொண்டவளாய் அதிர்ச்சியில் விரிந்தது.

சாரல் அடிக்கும்…
 
Last edited:

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
HI மக்களே
யாரும் என்னை மறந்து இருக்க மாட்டிங்கன்னு நம்புறேன்.
நாளையில் இருந்து சாரல் update வரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi நண்பர்களே அன்பர்களே,

சாரி ரொம்ப சீக்கரம் எபி குடுக்க தான் நினைக்குறேன் நான் ஒன்னு பிளான் பண்ணினா கடவுள் ஒன்னு பிளான் பண்றார். சோ நோ ப்ளானிங் னு முடிவு பண்ணிட்டேன்.

உங்க வீட்டு புள்ளையா நினைச்சு என்ன மன்னிச்சுடுங்க.

சீக்கரம் கதைய முடிக்க முயற்சி பண்றேன்.




சாரல்8

“உன்னோட நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி!” என தன் பின்னே கேட்ட குரலில், ஆடு திருடிய கள்ளன் போல் முழித்தாள், அபிரக்ஷிதா.

தன்னை நோக்கி அழுத்தத்துடன் வரும் ஒவ்வொரு காலடி ஓசைக்கும் அவள் இதயம் பலமாக அடித்து கொள்ளத் தான் செய்தது.

இருந்தும் அதனை வெளிக் காட்டிக்கொண்டால் அவள் அபிரக்ஷிதா அல்லவே.

காதை கூர் தீட்டிக்கொண்டு,
அவனது காலடி ஓசையை அவதானித்தபடி நின்றாள்.
அவன் தன்னை நோக்கி தான் வந்து கொண்டு இருக்கிறான் என்பது, தொலைவில் கேட்ட அவனது “தட் தட்” என்ற ஷுக்களின் ஓசையே அவளுக்கு உணர்த்த,

அவனது ஷுக்கள் எழுப்பிய சத்தமே அந்த யாரும் இல்லா வீட்டின் போர்டிகோவில் மிக பெரிய அதிர்வை தான் எழுப்பியது.

அந்த சத்தம் அவளது இதயத்தை பட படவென அடித்துக்கொள்ள செய்தாலும்,
மெதுவாக எச்சில் கூட்டி விழுங்கியவாறு, அவன் தனக்கு அருகில் வரும் பொழுதிற்காக காத்திருந்தாள்.


நொடிகள் நிமிடங்களாக கரைந்து போன பின்னும், அவன் வந்து சேர்ந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படாமல் போகவே,


நெற்றியில் குழப்ப மேகங்கள் சூழ, “என்ன இன்னும் ஆள் வந்த சத்தத்தையே காணோம்! நம்ம தான் கனவு கினவு எதுவும் கண்டுகிட்டு இருக்கோமா!” என யோசித்து விட்டு அவள் திரும்ப அங்கே ஆட்கள் யாரும் வந்தற்கான சுவடே இல்லை.

அதில் குழம்பி போய், “எனக்கு கேட்டுச்சே! ஆனா யாரையும் காணோம்”, என புருவம் சுருக்கி யோசித்து, பின் “எப்பவும் அவன நெனச்சுட்டே இருந்தா இப்டி தான் இருக்கும்!” என அவளது மனசாட்சியே அவளை கொட்டு வைக்க,



“அவளும் ஒரு வேளை நம்ம பிரமையா இருக்கும் போல!”, என்று அவளே தன்னை சமாதானம் செய்து விட்டு நெஞ்சிலே கை வைத்து ஒரு நீண்ட நெடிய பெருமூச்சை வெளியிட்டு, “அப்பாடா நம்ம தப்பிச்சோம் இல்ல! , இன்னைக்கு திரிபுரம் எரித்த சிவன் மாதிரி தன்னோட நெற்றிகண்ணை திறந்து நம்மள எரிச்சு இருப்பான் அந்த விஷ்வா”.

என அவள் முனங்கி கொண்டே மெதுவாக திரும்ப , அங்கே தான் அணிந்து இருந்த கோட்டை கழட்டி தனது கையிலேயே மடித்து வைத்த படி, தனது இரு கைகளையும் கட்டியவாறு
அவளை பார்த்து இரு புருவத்தையும் ஏற்றி இறக்கி,
அவளது எண்ணத்தின் நாயகனே நின்று கொண்டு இருந்தான்.

அதனை பார்த்து அவள் தன்னை மறந்து மயங்கி நின்றாள்! அவனும் அவள் தன்னை கண்டு மயங்கி நிற்கும் மனைவியை கண்டு ஒரு ஆணாக கர்வம் எழ, அவளை நோக்கி மாய கண்ணனை போல மயக்கும் சிரிப்பை உதிர்த்தான்.

பின் தனது உதட்டை குவித்து, மெதுவாக, மெலிதாக ஊதினான். அதில் அவள் கண்ணை மூடி கிறங்கி, தன்னை வருடும் அவனது மூச்சு காற்றில் நெகிழ்ந்து, குழைந்து, அதனை நுரையீரலில் தான் சுவாசிக்க உயிர் காற்றாய் சேமித்து வைத்தாள் என்று எழுத எனக்கும் ஆசை தான்.


ஆனால் அப்படி ஒன்று அப்படி அங்கே நடைபெறவில்லை. அப்படி நடந்து கொள்ள அவர்கள் ஒன்றும் காவிய காதலர்களும் இல்லை.

ஆதர்ஷ தம்பதிகளும் இல்லை.

அங்கே என்ன நடந்தது என்றால்??,

அவன் அவளை பார்த்தவாறு, கையை கட்டிக் கொண்டு நிற்க, அவளோ முதலில் அவனை கண்டு திடுக்கிட்டாலும்,

பின் தனது பயத்தையும் பதற்றத்தையும் புறம் தள்ளி,

வழக்கம் போலவே தனது கண்களில் திமிரையும், முகத்தில் அலட்சியத்தையும், உதட்டில் நக்கல் புன்னகையையும் கொண்டு வந்தாள்.

இதை எல்லாம் எதிரே அவளது முகத்தையே பார்த்துக் கொண்டு ருந்த விஷ்வா, முதலில் அதனை சுவாரசியமாக பார்த்துக் கொண்டே இருந்தவன், கடைசியில் அவளது அலட்சியத்திலும், அவளது இதழ்கள் சிந்தும் ஏளன புன்னகையிலும் கோவம் கொண்டான்.

அதில் அவனையும் அவனது முக பாவனைகளையும் கவனித்து கொண்டு இருந்த அபி, அவன் தன்னை கண்டு கோவம் கொள்கிறான் என தெரிந்து கண்டு மேலும் அவனை வெறுப்பேத்தும் விதமாக அதே நக்கல் புன்னகையுடன் இருந்தாள்.

இப்போ என்னவோ சொல்லிட்டு இருந்தியே, எங்க அதை மறுபடியும் சொல்லு என அவன் கண்களில் கூர்மையுடன் கேட்க,

அவளாவது வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்து இருக்கலாம், ஆனால் விதி யாரை விட்டது. “ஏன் நான் சொன்னதுல்ல என்ன தப்பு இருக்கு! என்னகென்ன பயமா? முதுகுக்கு பின்னாடி என்ன முகத்துக்கு முன்னாடியே சொல்லுவேன்! உங்கள நம்பினா நட்டாத்துல்ல தான் நிக்கணும்! ஏன்னா நீங்க யாருக்குமே உண்மையா இருந்தது இல்ல.”

“உங்கள நம்பின
யாருக்குமே நீங்க உண்மையா இல்ல! எல்லாரும் உங்க மேல வச்ச நம்பிக்கைக்கு நீங்க என்னைக்கும் நியாயம் செஞ்சது இல்ல!
யு ஆர் அ சீட்டர்”, இன்னும் என்ன என்னவெல்லாம் சொல்லி இருப்பாளோ!, அவள் பேசிய வார்த்தைகளில் மனதில் குற்றஉணர்வு தாக்க,

கடந்த காலமும், அது பரிசாய் தந்த வலியும் ஒரு நொடியில் கண் முன்னே படமாய் விரிந்து அவனையே நெருப்பென சுட,

அதன் தாக்கமும் அது தந்த வலியும் என ஒரு நொடி தடுமாறியவன், கண்ணில் அது பிரதிபலிக்க,

அதை அவள் கண்டுகொள்ளாமல் மேலும் மேலும் பேசிக்கொண்டே போனவள், அவனை சிறிதும் கவனிக்க வில்லை.

அவளது வார்த்தைகளில் காயம் பட்ட மனது ஏற்கனவே ஆறிவரும் ரணத்திலேயே மறுபடியும் அடிபட்டது போல, அவனை வலிக்க செய்ய, மறுபடியும் அனைத்தும் இப்பொது நடைபெற்றது போலவே அவனுக்கு தோன்றியது.


அன்றைய தனது இயலாம்மையும், தனது கையாலாகாத தனமும், மறுபடி நினைவுக்கு வர அது அப்படியே தன் மேலேயே கோவமாக மாற, என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே, அந்த கோவம் எதிரே இருந்தவளின் மேலே பாய, நொடி பொழுதில் ஆத்திரம் அதிகமாக, அவளது கழுத்தை பிடிக்க கையை எடுத்து சென்றவனது கை அந்தரத்திலேயே நின்றது.

“அப்பா!” எனும் தனது மகளின் அழைப்பில், அப்படியே இருவரும் சிலையாக,

தனது கூடவே இருந்த பேத்தி மறுபடியும் தந்தையை எதிர்நோக்கி வாசலுக்கு ஓடவும், ஏற்கனவே மகனின் செயலில் அதிருப்தி கொண்டு அவனின் மீது கோவமாக இருக்கும் மருமகளிடம் பேத்தி அடி வாங்கி விட கூடாதே என்ற எண்ணத்தில், பிரகதியின் பின்னேயே வந்தவர் கண்டது இவர்கள் இருவரின் நிலையை தான்.

முதலில் அதிர்ந்தவர் பின் சட்டென சுதாரித்து, எங்கே பேத்தி இதனை கண்டு விட்டாலோ என பயந்தவராய்,

“பிரகதி” என உரக்க அழைத்து, அவளது கவனம் கலைத்தவர், அவர்கள் இருவரையும் அழுத்தமாக பார்த்தவர், அவர்களின் பக்கம் கூட திரும்ப பிடிக்காதவராய் பேத்தியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றார்.

அதில் அபி மற்றும் விஷ்வா எனும் இரு சிலைகளுக்கு உயிர் வர, பின் தாயின் பாராமுகத்தில் எல்லாம் இவளால தான் என அதற்க்கும் அவளின் மீதே கோவப்பட,

கை முஷ்டியை இறுக்கி, பல்லை கடித்து கொண்டு “இருடி இதுக்கெல்லாம் ஒரு நாள் உன்ன வச்சுக்குறேன்” என கடித்த பற்களுடன் வார்த்தையையும் அவளை நோக்கி கடித்து துப்பி, தனது தாய் மகளின் பின்னே வேகமான நடையுடன் அவர்களை தொடர்ந்து அவர்களின் பின்னே சென்றான்.

அவன் சென்று நொடி முள் நிமிடங்களாக ஓடி முடித்த பின்னும், அவள் இன்னும் அசையாமல் அதே இடத்தில், அங்கேயே இருக்க, உள்ளே மகள் மற்றும் கணவனின் பேச்சு குரல்கள், கேட்டாலும் அப்படியே நிற்க,

அதனை தொடர்ந்த சில நிமிடங்களில், அவன் வெளியே செல்ல ஏற்றவாறு, உடை மாற்றி இருக்க, அவனது கைகளில் மகளை அணைத்து பிடித்தவண்ணம் வர,

அவர்கள் பின்னாடியே பேத்திக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பையுடன் வித்யா வர,

நேராக வந்தவன் இவளை சட்டை செய்யாமலேயே கடந்து செல்ல, அதனை உணர்ந்தாலும் அப்படியே அவள் இருக்க,

மகள் தான் அப்பாவுடன் செல்லும் குஷியில் தாயை மறந்து போனாலும், தாயை கண்டவுடன் அது வரை அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டு கதை பேசி வந்த மகள் அப்பாவின் முகத்தை தன்னை நோக்கி திருப்பி, அம்மாவும் நம்மக் கூட வரலையா பா?” என வினவ,

அதுவரை மகளின் கேள்விகளுக்கு அவளுக்கு ஏற்ற மாதிரி பதில் சொல்லிக் கொண்டே வந்தவன் நடை ஒரு நொடி தடையாக, பேச்சு தடுமாற, பின் சமாளித்து, அது அம்மாக்கு வேலை இருக்காம் அம்மா தான் நம்ம ரெண்டு பேரையும் போக சொன்னாங்க என ஒரு நொடி அவன் முகம் பார்த்தாலும், அவனுடன் செல்லும் குஷியில் அதுவும் சரிப்பா என்று சமர்த்தாக தலையாட்டி கேட்டுக்கொண்டது.

மகள் தான் தந்தையின் கைகளில் இருந்த படியே அம்மா நானும் அப்பாவும் வெளிய போறோம் bye மா!” என அவளை பார்த்து சொல்லிய படியே திரும்பி பார்க்காமல் செல்ல,

அவனும் மகளை காரில் முன் இருக்கையில் உட்கார வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டு, மறுபக்கம் வந்து காரை கிளப்ப, பை மா பை பாட்டி என்னும் உற்சாக குரலோடு இருவருக்கும் கை அசைக்க, அவன் தாயிடம் மட்டும் லேசாக தலை அசைத்து விடைபெற அதனை கண்டும் காணாமலும் பேத்திக்கு மட்டும் கை அசைத்து விடை குடுத்தார், வித்யா.

பின் கார் கிளம்பும் வரை அங்கேயே நின்றவர் ஒரு பெரு மூச்சுடன் திரும்ப அங்கேயே நின்றுக் கொண்டு இருந்த அபியையும் பார்த்தவர், அவளையும் கண்டுக்காமல் உள்ளே சென்று விட்டார்.

நடந்த அனைத்தும் கருத்தில் பதிந்தாலும், செல்லும் காரையே வெறித்துக் கொண்டு இருந்தாள், அபி ரக்ஷிதா.

சாரல் அடிக்கும்...
 
Last edited:
Status
Not open for further replies.
Top