All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிதிராஜின் "என்னுள் சங்கீதமாய் நீ" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 
Last edited by a moderator:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ் ...


நான் நிதி புது எழுத்தாளரா நம்ம சைட்ல் எழுத வந்திருக்கேன் .

நான் கேட்டவுடனே எனக்கு எழுத வாய்ப்பு தந்த ஸ்ரீ மேம் க்கு மிக பெரிய நன்றி .

இது எனது முதல் கதை மக்காஸ் உங்க சப்போர்ட் கண்டிப்பா எனக்கு ரொம்ப தேவை . என் எழுத்தில் பிழை இருப்பின் கோவப்படாம பதமா சொல்லுங்க ப்ரெண்ட்ஸ் ......

கதையின் தலைப்பு _ என்னுள் சங்கீதமாய் நீ

ஹீரோ _ ஜெய் ஆகாஷ்

ஹீரோயின் _ ஹர்ஷினி
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ

முன்னோட்டம்

கடவுளின் தேசமான கேரளாவில் உள்ள மூணாறு. இன்றைய சுற்றுலா தளங்களில் மூனாரும் மக்கள் மனதில் மிகவும் விரும்பும் இடமாக இடம்பெற்று உள்ளது. பார்க்கும் இடம் எல்லாம் பசுமையாகவும் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது.

ஆனால் நம் நாயகன் "ஜெய் ஆகாஷிற்கு" இந்த குளிர் எல்லாம் ஒரு பொருட்டே இல்ல என்பது போல் வெறித்தனமாக "டேன்ஸ்" ஆடி கொண்டிருந்தான் . மைனஸ் டிகிரி குளிரில் ஒரு நார்மல் பாண்ட் , டீ ஷர்ட் இதுதான் அவன் ஆடை . "மனதின் வெப்பம்" ஒருவேளை குளிரை உணர வைக்க முடியவில்லையோ.


" மாஸ்டர் நிறைய போன் கால்ஸ், வாழ்த்து" வந்துகிட்டே இருக்கு. நீங்க யாருக்கும் ரெஸ்பாண்ட் பண்ணாம இருக்கீங்க . பிரஸ் ல இருந்து வேற ரொம்ப நேரமா வெய்ட் பன்றாங்க பிளீஸ் ஜி என ஜெய்யின் PA மோகன் கூறிக்கொன்டே இருக்கும் போதே

ஜெய்யின் பெர்சனல் போன் ஒலிக்கவும் வேகமாக சென்று எடுத்தான் ஜெய்.

ஹலோ எங்க இருக்கா. "கோயம்புத்தூர்" ஓகே நான் காலையிலே அங்க இருப்பேன் .

நான் வரது "அவளுக்கு தெரியக்கூடாது" என கண்டிப்புடன் விழுந்தது வார்த்தைகள் .


"ஹர்ஷினி" அவளை நினைச்சாலே வெயிலும் பனியும் கலந்தே தோன்றியது ஜெய்க்கு . "9 வருட காதல்" இருவரதும் .

அதை உடைப்பது போலே அவளின் நடவடிக்கைகள் இருந்தது. அதுவும் "ஜெய் கல்யாணம் பண்ணிக்கலாம்" என கேட்ட தினத்தில் இருந்தே .

அவளை பார்த்தே 3 மாசம் ஆயிடிச்சி போன் பண்ணாலும் எடுப்பதில்லை பாத்துக்கிறேன் . என்கிட்டே இருந்து இன்னிக்கு எப்படி தப்பிக்கிறேன்ன்னு.

இதுவரைக்கும் இருந்த ஜெய் வேற இதுக்கு மேல நீ வேற ஜெய் தான் பாக்கப்போற "ரெடியா இரு ஹர்ஷ்" என மனதுக்குள் சூளுரைத்து கொண்டான் ஜெய்.

.......................................................................................................................................................................

இந்தியா அளவிலான டான்ஸ் போட்டியில் "ஜெய் கோரியோ க்ராப் செய்த பாடலுக்கு தான் விருது கிடைத்து" உள்ளது .


காணும் இடம் எல்லாம் "தன்னவனின் புகழே". நியூஸ்பேப்பர் சோசியல் மீடியா என எல்லா இடத்திலும் ஜெய் ஆகாஷின் வெற்றியே .


ச்சே இந்த கண்ணுல தண்ணி வேற என தன் "ஆனந்த கண்ணீரை" துடைத்து கொண்டே தன்னவனின் சாதனையை பார்த்து சந்தோஷ பட்டு கொண்டிருந்தாள் நம் "நாயகி ஹர்ஷினி" .


"நடனம் ஹர்ஷினி ஜெய் இருவரின் உயிர் மூச்சு" என்றே சொல்லலாம் . இருவர் காதலின் தொடக்கமுமே டான்ஸ் தான் .


தன் அறை கதவு தட்டும் சத்தம் கேட்கவும் வேகமாக முகத்தை சீராக்கி கொண்டு ஸ் என்றாள் ஹர்ஷினி


மேம் உங்கள பாக்க தாரிணி வந்து இருக்காங்க என்றாள் ஹர்ஷினி செகரட்டரி ரூபா .


நீ ஜெய்ய "பாக்க ஒத்துகிட்ட மட்டும் தான் அவன் அவார்ட் வாங்க போவேன்" சொல்றான் என்றாள் தாரிணி


வாட் என்ன இது. ஏன் இப்படியெல்லாம் பன்றார் என்றாள் கண் கலங்க ஹர்ஷினி .

................................................................................................................................................................


ஏன் இப்படி பண்றீங்க பிளீஸ் ஜெய்......


எங்க பாக்கலாம் என்றான் கடினமாக ஜெய்........


ஜெய் நீங்க அவார்ட் வாங்கிட்டு வாங்க கண்டிப்பா மீட் பண்ணலாம்.......


ஈவினிங் 5 ஓகே வா.......


நான் கண்டிப்பாக மீட் பண்ண மாட்டேன் என்றாள் கொஞ்சம் கோவமாகவே ஹர்ஷினி


உங்க ஹோட்டல்லே மீட் பண்ணலாம் பை என போன் வைத்து விட்டான் .


கண்டிப்பாக விட மாட்டான் என புரிந்தது . "பிடிவாதம் பிடிவாதம்" என திட்ட மட்டுமே முடிந்தது ஹர்ஷினியால் .
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 1



நம் தமிழ் நாட்டில் முக்கியமான நகரங்களில் ஒன்றான கோயம்பத்தூரில் உள்ள “ஆச்சார்யா விலாஸில்” எப்பொழுதும் போல் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுடனே நடந்து கொண்டிருந்தது .

இன்னிக்கு என்னமோ மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கே, இப்படி எல்லாம் நமக்கு இருக்காதே பார்ப்போம் என்னதான் நடக்குது என யோசித்து கொன்டே கிளம்பி கொண்டிருந்தாள் “நம் நாயகி ஹர்ஷினி” .

இன்டெர் காம் ஒலிக்கவும் அத காதுக்கு கொடுத்தாள் .ஹர்ஷி பிரேக் பாஸ்ட் க்கு டைம் ஆச்சுஎன ரேணுகா ஹர்ஷினியின் அம்மா கூப்பிடவும் . இதோ வந்துட்டேன்மா. வேகமாக மொபைல் எடுத்து கொண்டு கீழே சென்றாள் .

ஹர்ஷினி வரும் சத்தத்தில் ரேணுகா தன் மகளை பார்த்தார் பால் போல மாசு மறு இல்லா முகம் பிரம்மன் “செதுக்கிய சிலையாகவே” இருந்தாள் . இவளை பார்த்தா யாரும் “26 வயசு” சொல்ல மாட்டாங்க 20 வயசு பெண் போல இருந்தாள் . என்ன இருந்து என்ன பிரயோஜனம் என பெருமூச்சு விட்டுக்கொண்டார் ரேணுகா .

அவரின் முக பாவத்தில் இருந்தே அவரின் யோசனையை புரிந்து கொண்டவள். ம்மா டைம் ஆச்சு “டிபன் கொடுங்க” என்றாள் ஹர்ஷினி . வா சாப்புடு என பரிமாற ஆரம்பித்தார் .

என்னமா “நம்ம வீட்டு நாட்டாமை” தன் படையோடு கிளம்பியாச்சா என்றாள் நக்கலாக . ஹர்ஷி இப்படி பேசத்தாயேன் அவர் “உன் தாத்தா “என்றார் கண்டிப்பாக . அவர் சொன்னதற்கு நக்கலாக தோளை குலுக்கி கொண்டதே அவளின் பதில் . ok நான் கிளம்புறேன் .

ஹர்ஷி இன்னிக்கு “போர்ட் மீட்டிங்ல தாத்தாகிட்ட எதுவும் வம்பு வச்சுக்காத” அப்பா கண்டிப்பா சொல்லிட்டு போயிருக்கார் என ரேணுகா கொஞ்சம் வேண்டுகோளகவே சொன்னார் எனலாம், ஹர்ஷினி பதில் எதுவும் சொல்லாமல் அவரை அழுத்தமாக பார்த்து விட்டு கிளம்பி விட்டாள் .

எல்லா விஷயத்திலும் நல்ல பெண்ணே ஆனால் தாத்தா என்றால் மட்டும் ஏன் இப்படி இவள்தான் இப்படி என்றால் தன் “இளைய நாத்தனார் சுபத்ரா” இவளுக்கு மேல் இருக்கிறாள் . கடவுளே இன்னிக்கு எந்த பெரிய பிரச்னையும் ஆகாம பாத்துக்கோ என வேண்டவே ஆரம்பித்துவிட்டார் ரேணுகா .

என்ன சார் சொல்றீங்க “சுபத்ரா, ஹர்ஷினி” மேமும் வரங்களா போர்டு மீட்டிங்குக்கு . போச்சு இன்னிக்கு மீட்டிங் முடிஞ்சு நாம வீட்டுக்கு போன மாதிரிதான் என்றார் ஒருவர்.

இன்னிக்கு என்ன பிரச்னை ஆக போகுதோ என்றார் இன்னொருவர்

ஸ்ஸ் அவங்க எல்லாம் வராங்க என எச்சரித்தார் அருகில் இருந்தவர் .

“75 வயதுமிக்க ஆச்சார்யா” கம்பீர நடையுடன் வர அவர் பின்னால் அவரது இரு மகன்கள் “சந்திரன், இந்திரன்” இரு மகள்களில் மூத்தவரான “மேனகா தன் கணவரான சுரேந்தருடன்” வந்தார் . இளைய மகள் சுபத்ரா . ஹர்ஷினி சந்திரனின் ஒரே மகள் . இந்திரனுக்கு அபிஷேக் .அடுத்து ஸ்வேதா என இரு பிள்ளைகள் . மேனகாவிற்கு கார்த்திக் , ஹாசினி என இரு பிள்ளைகள் இதுதான் ஆச்சார்யாவின் குடும்பம்.

ஆச்சார்யா வரவும் எல்லோரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர் . ஆச்சார்யா உட்காரவும் மற்றவர்களும் அமர்ந்தனர் .

“AD குரூப் ஆப் 7 ஸ்டார் ஹோட்டல்ஸ் “. தமிழ் நாடு முழுவதும்” 5 பிரான்ச்” உள்ளது இந்த . வயதிலும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே மிகவும் வெற்றிகரமாக தொழில் நடத்தி வருபவர் ஹோட்டல் மட்டும் இல்லாமல் குடும்பத்திலும் எல்லோரும் ஆச்சார்யாவின் கட்டுப்பாட்டிலே . நம் நாயகி ஹர்ஷினி , சுபத்ரா தவிர.

மீட்டிங் ஆரம்பிக்க ஆச்சார்யா கை அசைக்கும் சமயம் “சுபத்ரா தன் வேக நடையுடன்” வந்தார் . அவருடன் இவர்கள் குடும்பத்தின் வாரிசுகளில் இருவரான “அபிஷேக் , ஹர்ஷினி” இருவரும் வந்தனர். எல்லோரையும் பார்த்து மரியாதை நிமித்தமாக வணக்கம் செய்து தன் இருக்கையில் அமர்ந்தனர் மூவரும் .

சந்திரன் பொதுவாக எல்லோரையும் வரவேற்று இந்த “வருட வளர்ச்சி விகிதத்தை” விவரித்தார். பின்பு பொதுவான பேச்சுகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு என்ன “என்ன மாற்றங்கள் செய்யலாம்” என கேட்கவும் அதுவரை “யாருக்கு வந்த விருந்தோ” என அமர்ந்து இருந்த சுபத்ரா ஹர்ஷினி இருவரும் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தனர் .

அவர்களை பார்த்தவுடனே தெரிந்து விட்டது இன்னிக்கு ஏழரைய இழுத்து தெருவில் விட போகின்றனர் என .

சுபத்ரா முதல் ஆளாக நம் எல்லா ” ஹோட்டேலியும் ஒரு டான்ஸ் புளோர் ஓபன்” செய்யலாம் என்றார் மிகவும் சீரியஸாகவே . கரெக்ட் அத்தை நானும் இதை தான் யோசிச்சேன் என்றாள் ஹர்ஷினியும் சந்தோஷமாக .

ஆரம்பிச்சுட்டாங்க என தலை மேலே கை வைத்து விட்டான் அபிஷேக். அப்புறம் எல்லா மாசமும் டான்ஸ் போட்டி வைக்கலாம் அதுல விண் பண்றவங்க நம்ம ஹோட்டல்ல ஒரு வாரத்துக்கு ப்ரீயா தங்கலாம் என அறிவிக்கலாம் என ஹர்ஷினி மிகவும் குதூகலமாக சொன்னாள்.

ஹர்ஷினி என மேனகா கண்டிப்போடு அதட்டவும் அத்தை உங்க கிட்ட சொல்லனுமா ஓகே இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு அது என்னனா “சுபத்ரா அத்தை மாதிரி என்ன மாதிரி முரட்டு சிங்கிள்ஸ் { நீ சிங்கிளா ஹர்ஷி } “மட்டும் குளிக்க தனியா ஒரு ஸ்விமிங் பூல் கட்டணும்.

இந்த கபிள்ஸ் தொல்லை தாங்கல என்னடா அபி என அபியை பார்த்து கண்ணடித்தாள் ஹர்ஷினி . அப்படியா அபி என சுபத்ராவும் குறும்பாக கேட்கவும் அய்யயோ சைடு கேப்ல என்ன போட்டு கொடுங்கறாங்களே . வீட்டுக்கு போன உடனே நாட்டாமை துண்டை உதறி பஞ்சாயத்து பண்ண ஆரம்பிச்சுடுவாரே என மனதுக்குள் அலறினான் அபிஷேக் .

போதும் நிறுத்துங்க “இது போர்டு மீட்டிங்” நீங்க ஆட்டம் போடும் இடம் இல்ல என ஆச்சார்யா கண்டிக்கவும்.

சுபத்ரா அலட்டாமல் oh இது போர்டு மீட்டிங்கா என்றார் நக்கலாக. சுபத்ரா என “இந்திரன் அதட்டவும்” ஹர்ஷினி அவரை பார்த்து எல்லோரையுடைய கருத்தையும் கேக்கறது தான் போர்டு மீட்டிங் தான் மட்டும் டெசிஷன் எடுக்க எதுக்கு மீட்டிங் என்றாள் நிதானமாக .

பிஸ்னஸ் பத்தி எதுவும் தெரியாம என்ன கருத்தை சொல்ல போறாங்களாம் . சண்டை போட மட்டும் தான் தெரியும் அதோட எங்க எப்படி நடந்துக்கணும் அப்படின்னும் தெரியல என்றார் ஆச்சார்யா கண்டிப்புடன்.

என்ன பண்றது எங்க “அப்பா சண்டை போட” சொல்லிக்கொடுத்த அளவு பிஸ்னஸ் பத்தி சொல்லி கொடுக்கல என்றார் சுபத்ராவும் விடாதவராக .

எங்க வீட்லயும் எங்க “எப்படி நடந்துக்கணும் அப்படின்னு சொல்லி தரல” என்றாள் ஹர்ஷினியும் நக்கலாக.

ஹர்ஷினி சுபத்ரா போதும் ரெண்டு பேரும் அமைதியா இருங்க என சந்திரன் கோவமாக அதட்டவும் அவர் முகத்தை கூட பார்க்காமல் திரும்பி கொண்டனர் இருவரும். சொந்த “மகள் ஹர்ஷினி ,மகள் போல் வளர்த்தவர் சுபத்ரா” இருவரும் சண்டை போட கூட தன்னுடன் பேசமாட்டார்கள் என ஒவ்வொரு முறையும் உணர்த்தினார்கள் சந்திரனுக்கு .

அதுவரை கோவமாக இருந்த சந்திரனின் முகம் இவர்கள் முகம் திருப்பவும் அளவு கடந்த வேதனையை பிரதிபலித்தது . ஆச்சார்யா தன் பெரிய மகனின் வேதனையை அவரின் முகத்தில் இருந்தே புரிந்து கொண்டார் .

ஓகே “ஆப்டர் லஞ்ச் பாக்கலாம்” என ஆச்சார்யா சொல்லவும் அனைவரும் சென்றனர் .சுபத்ராவும் ஹர்ஷினி நீங்க வெயிட் பண்ணுங்க என்றார் ஆச்சார்யா கண்டிப்புடன்.

சுபத்ரா நான் உன்கிட்ட சொன்னதுக்கு என்ன முடிவு எடுத்து இருக்க என கோவமாக ஆச்சார்யா கேட்கவும். “நான் முடியாதுன்னு” அப்பவே சொன்னதா ஞாபகம் என்றார் சுபத்ராவும் இறுக்கமாக .

எத்தனை வருஷமா கேட்குறேன் அந்த “டான்ஸ் விட்டு தொலைன்னுட்டு” கேட்க மாட்ட அப்படித்தானே . நீங்க “எத்தனை வருஷம் கேட்டாலும் எல்லா வருஷமும் என் பதில் முடியாதுதான்” என உறுதியுடன் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் சுபத்ரா.

அவர் கிளம்பவும் ஆச்சார்யா கோவமாக ஹர்ஷினி உனக்கு வயசு 26 எப்போ” கல்யாணத்துக்கு” ஓகே சொல்ல போற .

எப்பவும் ஓகே சொல்ல மாட்டேன் என்றாள் ஹர்ஷினி உறுதியாக...........

நீயும் உன் “பிடிவாதத்தை விடமாட்ட” அப்படித்தானே என ஆச்சார்யா கடுப்போடு கேட்கவும்.

நீங்க என்ன எப்பவும் “டான்ஸ் பண்ண கூடாதுன்னு சத்தியம் வாங்கல” அதே மாதிரி நானும் “எப்பவும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு” எனக்குள்ள சத்யம் பண்ணிக்கிட்டேன் .

எப்பவும் நாம பண்ண சத்தியத்தை காப்பாத்தணும் அப்படின்னு எங்க “தாத்தா எங்களுக்கு சொல்லி கொடுத்து இருக்கார்” என்றாள் நக்கலாக ஹர்ஷினி.

..................................................................................................................................................

கடவுளின் தேசமான” கேரளாவில் உள்ள மூணாறு “இன்றைய சுற்றுலா தளங்களில் மூனாரும் மக்கள் மனதில் மிகவும் விரும்பும் இடமாக இடம்பெற்று உள்ள பார்க்கும் இடம் எல்லாம் பசுமையாகவும் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது.

ஆனால் நம் “நாயகன் ஜெய் ஆகாஷிற்கு” இந்த குளிர் எல்லாம் ஒரு பொருட்டே இல்ல என்பது போல் வெறித்தனமாக “டேன்ஸ்” ஆடி கொண்டிருந்தான் . மைனஸ் டிகிரி குளிரில் ஒரு நார்மல் பாண்ட் , டீ ஷர்ட் இதுதான் அவன் ஆடை . மனதின் வெப்பம் ஒருவேளை குளிரை உணர வைக்க முடியவில்லையோ.

மாஸ்டர் என “ஜெயின் PA மோகன்” அழைப்பால் தான் தன் ஆட்டத்தை நிறுத்தினான் ஜெய் . இந்த “ஸ்டெப்ஸ் எல்லாம் ப்ராக்டிஸ்” பண்ணுங்க என குருப் டான்சர்ஸ்க்கு உத்தரவிட்டு மோகனுடன் சென்றான் .

இவ்ளோ வேகமா ஆடினாரு பாதி புரியல என்ன பண்றது . போய் அவர்கிட்ட கேட்டுட்டு வரியா ரவி என்றான் மற்றவன் .

அதுக்கு இந்த மலை மேல இருந்து என்ன தள்ளிவிட்டுடா சாமி எப்போ வேணாலும்” வெடிக்கிற எரிமலை” மாதிரி இருக்காரு அவர்கிட்ட என்ன கோத்துவிட்டு சோளிய முடிக்க பாக்குற , நான் சிக்கமாட்டேன்டா என்றான் நடுங்கும் குரலில் ரவி .

இந்தியா அளவிலான” டான்ஸ் போட்டியில் ஜெய் கோரியோ க்ராப் செய்த பாடலுக்கு தான் விருது” கிடைத்து உள்ளது . டான்ஸில் சாதிக்கணும்ன்னு எத்தனை வருட கனவு லட்சியம் ஏன் ஒரு விதமான வெறி என்றே சொல்லலாம் ஜெய் ஆகாஷிற்கு .

ஆனால் இந்த சந்தோசத்தை முழுதாக உணர முடியவில்லை . அதுவே இன்னும் பயங்கரமான கோவத்தை கொடுத்தது ஜெய்க்கு .

மாஸ்டர் நிறைய போன் கால்ஸ், வாழ்த்து வந்துகிட்டே இருக்கு நீங்க யாருக்கும் ரெஸ்பாண்ட் பண்ணாம இருக்கீங்க . பிரஸ் ல இருந்து வேற ரொம்ப நேரமா வெய்ட் பன்றாங்க பிளீஸ் ஜி என ஜெய்யின் PA மோகன் கூறிக்கொன்டே இருக்கும் போது ஜெய்யின் பெர்சனல் போன் ஒலிக்கவும் வேகமாக சென்று எடுத்தான்

ஹலோ எங்க இருக்கா.

“ கோயம்புத்தூர் ஓகே “நான் காலையிலே அங்க இருப்பேன் . நான் வரது அவளுக்கு தெரியக்கூடாது என கண்டிப்புடன் விழுந்தது வார்த்தைகள் .

“ஹர்ஷினி” அவளை நினைச்சாலே வெயிலும் பனியும் கலந்தே தோன்றியது ஜெய்க்கு . “9 வருட காதல்” இருவரதும் . அதை உடைப்பது போலே அவளின் நடவடிக்கைகள் இருந்தது

அதுவும் ஜெய் “கல்யாணம் பண்ணிக்கலாம்” என கேட்ட தினத்தில் இருந்தே. அவளை பார்த்தே 3 மாசம் ஆயிடிச்சி. போன் பண்ணாலும் எடுப்பதில்லை பாத்துக்கிறேன் . என்கிட்டே இருந்து இன்னிக்கு எப்படி தப்பிக்கிறேன்ன்னு

இதுவரைக்கும் இருந்த ஜெய் வேற இதுக்கு மேல நீ வேற ஜெய் தான் பாக்கப்போற ரெடியா இரு ஹர்ஷ் என மனதுக்குள் சூளுரைத்து கொண்டான் ஜெய் ஆகாஷ் .

……………………………………………………………………………………………………………………………….



ஹாய் ப்ரண்ட்ஸ்.......

முதல் அத்தியாயம் போட்டாச்சு ப்ரண்ட்ஸ் . எல்லோரும் படிச்சுட்டு உங்க மேலான கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் . தாங் யூ ப்ரண்ட்ஸ்....
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 2

ஹர்ஷினி ,ஆச்சார்யா இருவரும் ஒருவருக்கு ஒருவர் தாங்கள் சளைத்தவர்கள் இல்ல என முறைத்துகொன்டே நின்றனர். ஹர்ஷி இது “வீண் பிடிவாதம்” உனக்கு எப்படி புரியவைப்பேன் என ஆச்சார்யா கொஞ்சம் சலிப்பாகவே கேட்டார்.

விட்டுடுங்க புரியவைக்க வேண்டாமுன்னு தான் நானும் சொல்றேன் என்றாள் ஹர்ஷினியும் விடாதவளாக.

உங்க “அத்தை மாதிரியே” நீயும் வீண் பிடிவாதம் பிடிக்காத என ஆச்சார்யா கோவமாக சொல்லவும்.

எங்க அத்தை “எங்க தாத்தா மாதிரி” என்று கொஞ்சம் கேலியாகவே சொன்னாள் ஹர்ஷினி .

ஹர்ஷினி என ஆச்சார்யா அதட்டும் போதே சந்திரன் கதவை தட்டிவிட்டு உள்ளே வரவும் அவரை பார்த்தாவுடன் ஹர்ஷினி வேகமாக அங்கிருந்து கிளம்பிவிட்டாள் .

ஆச்சார்யாவின் கோவமான முகத்தை பார்த்ததும் இது எதிர்பாத்துதானே ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் கிட்ட பேசினாலே அவர் “பிபி எகிறும்” இதுல ரெண்டு பேர்கிட்டேயும் ஒண்ணா பேசிட்டு அவர் வெடிக்குமா இருக்கறதே பெரிய விஷயம்.

ம்ம்ம் என பெருமூச்சு விட்டவர் ஆச்சார்யாவிடம் அப்பா ப்ளீஸ் இப்போ சாப்பிடலாம் என கொஞ்சம் கெஞ்சலாகவே கேட்டவர் அவரை சாப்பிட அழைத்து சென்றார் .

ஹர்ஷினி லஞ்ச் ஹாலுக்குள் செல்லும் போது போன் ஒலிக்கவும் யாரென்று பார்த்தவள் பார்த்ததாகவே நின்றாள். “பேசவும் இல்ல அதே சமயம் கட் செய்யவும் இல்ல” . இதுதான் ஹர்ஷினியின் மனநிலையும் கூட . “ஜெய் ஆகாஷ் ஹர்ஷினியின் மிக பெரிய பலவீனம்” . உலகத்தில் உள்ள எல்லோரையும் எதிர்க்கும் தைரியம் கொண்டவளால் ஆகாஷிற்கு எதிரே சாதாரணமாக கூட நிற்க முடிந்ததில்லை .

அவனோடு என்றென்றும் இருக்கவேண்டும் என்று “தவிப்பவளும் அவளே ஆனால் அதை தவிர்ப்பவளும் அவளே”

ஆச்சார்யா சந்திரன் இருவரும் அவளை பார்த்து கொண்டே கடந்து சென்றதை கூட உணர முடியாமல் நின்று இருந்தாள் .

என்னடா ஆச்சு அவளுக்கு என ஆச்சார்யா மிகவும் கவலையாக சந்திரனிடம் கேட்கவும் அவரும் கவலையாகவே தெரியலப்பா என கூறினார்.

அவளின் முகத்தில் தெரிந்த “அளவு கடந்த வேதனையே” அவர்களின் கவலைக்கு காரணம் . பின்னர் இருவரும் தான் அபியை அனுப்பினார் ஹர்ஷினியை அழைக்க . .

என்ன ஆச்சு ஹர்ஷ் ஏன் போனவே வெறிச்சு பாத்துட்டு இருக்கே என அபிஷேக் கொஞ்சம் சத்தமாக கேட்கவும் தான் உணர்விற்கு வந்தவள் ஒண்ணுமில்ல என அமைதியாக தலையாட்டவும் .

என்ன தாத்தா கிட்ட மறுபடியும் பிரச்சனையா என கேட்கவும் ச்சு ஒன்னும் இல்ல விடு வா சாப்பிட போலாம் என அவனோடு சாப்பிட சென்றாள் . அங்கு சாப்பிடும் இடத்தில் சுபத்ரா சந்தோஷமாக போன் பேசிக்கொண்டிருக்கவும் ஹர்ஷினி அமைதியாக அருகில் உட்கார்ந்தாள்.

பபே முறை என்பதால் அபி உணவு கொண்டு வர சென்றான் மூவருக்கும் . ரொம்ப சந்தோசம் சாதிச்சுட்ட என மிகவும் சந்தோஷமாக போன் பேசி முடித்தவர். ஹர்ஷி உனக்கு தெரியும் இல்ல “என்னோட ஸ்டுடென்ட் ஜெய்” அவனுக்கு “பெஸ்ட் கோரியோ கிராபர் அவார்ட் அதுவும் நேஷனல் லெவெல்ல” கிடைச்சிருக்கு இப்போதான் சொன்னான் என சுபத்ரா மிகுந்த உற்சாகமாக சொல்லவும்.

தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்ன என்ன சொல்றீங்க ஜெய்க்கு அவார்ட் அவார்ட் என திக்கவும்.

ஹர்ஷி என்ன ஆச்சு உனக்கு ஜெய்க்கு தான் கிடைச்சிருக்கு என சுபத்ரா மறுபடியும் சொல்லவும் ஹர்ஷினியின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வரவும் .

ஹர்ஷி ஏன் அழற என்ன ஆச்சு என சுபத்ரா பதறி போனவராய் கேட்கவும் . ஒண்ணுமில்ல என வேகமாக தலையாட்டியவள் நான் நான் ச்சே இந்த பேச்சே வரமாட்டேங்குது ரெஸ்ட் ரூம் என சைகை காட்டியவள் அங்கிருந்து வேகமாக ஓடினாள் .

கதவ தாளிட்டவள் “ஜெய் ஜெய் ஐ லவ் யூ” . சாதிச்சிட்ட ஜெய்.. சாதிச்சுட்ட.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ சோ மச் என தொடர்ந்து அளவு கடந்த சந்தோஷத்தில் அழுது கொன்டே இருந்தாள் .

ஹர்ஷி.. ஹர்ஷி.. என்ன ஆச்சு உனக்கு..? கதவ திற என சுபத்ரா படபடப்பாக கதவை தட்டவும் தான் இருக்கும் இடம் உணர்ந்து, இதோ வரேன்.. என குரல் கொடுத்தவள் முகத்தை கழுவி கொண்டு வெளியே வரவும் .

என்னடி ஆச்சு உனக்கு, ஏன் இப்படி அழற..? என சுபத்ரா பரிதவிப்பாக கேட்கவும், ஒன்னும் இல்ல அத்தை.

என்ன ஒன்னும் இல்ல.. சொல்லு.. என்ன ஆச்சு..? என விடாமல் கேட்கவும் .

அய்யோ விட மாட்டாங்க போலே.. என வேகமாக யோசித்தவள் "டான்ஸ் அவார்ட்" சொன்னதால கொஞ்சம் “பழைய ஞாபகம்” வேற ஒன்னும் இல்ல என ஹர்ஷினி சொல்லவும்,

சுபத்ரா அவளின் முகத்தை பார்த்தவர் என்னடி முகம் லைட் போட்ட மாதிரி இப்படி ஜொலிக்குது..! ஓவர் சந்தோஷமும் பொங்குது.. என அவளின் பேச்சை நம்பாமல் சந்தேகமாக கேட்கவும்.

அத்தை அது.. அது.. என இழுத்தவள் “என்னோட ட்ரீமை அவர் அச்சீவ் பண்ணி இருக்கிறாரே” அதோட ஜெய் உன்னோட ஸ்டூடெண்ட் தானே சோ அந்த சந்தோஷம் தான் என சமாளிப்பாக சொன்னவள் அவர் நம்பாமல் பார்க்கவும் வா அத்தை மீட்டிங் டைம் ஆச்சு சாப்புட்டு போவோம் என அவரை இழுத்து கொண்டு சென்றாள் .

சுபத்ரா ஹர்ஷிய நம்பாமல் அன்று முழுவதும் அவளை சந்தேக கண் கொன்டே பார்த்து கொண்டிருந்தார் என்றால் ஆச்சார்யா சந்திரனனும் கூட ஹர்ஷிய சந்தேகமாகவே பார்த்தனர்.

முதலில் அவள் முகத்தில் வேதனையை கண்டு மிகவும் கவலைப்பட்டவர்கள் ஆயிற்றே. ஆனால் அதற்கு நேர் மாறாக சிறிது நேரத்திலே அவளின் முகத்தில் “மின்னும் சந்தோஷத்தை” கண்டு கொண்டனர் .

எதனால் இப்படி இருக்கிறாள் என “சுபத்ரா, ஆச்சார்யா ,சந்திரன்” மூவரும் அவளை நினைத்து கவலை பட்டனர் என்றால்……

நம் ஹர்ஷினி சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள் . அவளுக்கு ஜெய்ய தவிர மத்த எல்லாம் அவுட் ஆப் போகஸ் என்கிற மனநிலையிலே இருந்தாள்.
.
காலிங் பெல் சத்தம் கேட்கவும் மணி 4 என காட்டியது இந்த நேரத்துக்கு யாரு வந்திருக்கா என” விஜயா மகாலிங்கத்திடம்” கேட்கவும் தெரில பாக்கலாம் இரு என கூறிக்கொன்டே இருவரும் ரூமை விட்டு வெளியே வரவும் வீட்டில் வேளை செய்யும் பொன்னி சென்று கதவை திறந்து கொண்டிருந்தார்.

வெளியே "ஜெய் ஆகாஷ்"நிற்கவும் வாப்பா என சந்தோஷமாக முன்னாள் சென்று வரவேற்றார் விஜயா . என்னப்பா இந்த நேரத்துல நேத்து நைட் பேசும் போது கூட வரேன்னு சொல்லல என மகாலிங்கம் கேட்கவும்.

ப்பா , ம்மா முதல்ல ரெண்டு பேரும் ஒண்ணா நில்லுங்க என சொன்னவன் இருவரின் “கால்களில் விழுந்து ஆசீர்வாதம்” வாங்கவும் தீர்க்க ஆயுசோடும் எப்பவும் சந்தோஷமாவும் இருக்கணும் என சந்தோஷமாக வாழ்த்தினார்கள் .

சரி உக்காரு முதல்ல காபி குடிக்கிறாயா என விஜயா கேட்கவும் இல்ல ம்மா நான் “தூங்க போறேன்” காலையிலே பேசலாம் என அமைதியாக சொல்லவும் அவனின் முகத்தில் உள்ள இறுக்கத்தை உணர்ந்து சரி நீ போயிட்டு ரெஸ்ட் எடுப்பா என மகாலிங்கம் சொல்லவும் தலையாட்டியவன் ரூமிற்கு சென்று விட்டான் .

என்னங்க ஏன் இப்படி இருக்கான் . அவனோட “பெரிய கனவு பலிச்சுருக்கு” அந்த சந்தோஷமே இல்ல அவன் முகத்திலே என விஜயா கவலையாக கேட்கவும் விடு ட்ராவல் பண்ணது டயர்ட் இருக்கும் என சமாதானமாக மகாலிங்கம் கூறினாலும் அவருக்குமே என்ன என்றே இருந்தது .

எப்பவும் அளவாக பேசுபவன் தான் ஜெய் என்றாலும் அவனின் முகத்தில் உள்ள இறுக்கம் இருவருக்கும் பயத்தையே கொடுத்தது .

ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரிந்தவனாக இருந்த ஜெய் இப்பொழுது மிகவும் பிரபலமாகிவிட்டான் . சோசியல் மீடியா, நியூஸ் பேப்பர் என காணும் இடமெல்லாம் ஜெய்யின் புகழே.

ஜெய் கிட்ட பேசலாமா என "போன் எடுப்பதும் பின் அவளே வேண்டாம் என வைப்பதுமாகவே" இருந்தாள் ஹர்ஷினி . நேற்றிலுருந்தே இப்படித்தான் இருந்தாள் . ஜெய் கிட்ட பேசியே முழுசா 3 மாசம் ஆயிடுச்சு.

அவன்கிட்ட பேச மிகவும் தவிப்பாக இருந்தாலும் அதற்கு பிறகு என்பதே அவளின் பயமாக இருந்தது . ஆனாலும் ஒரு டைம் பேசினா போதும் என மனதுக்குள் மிகவும் ஏங்கவே ஆரம்பித்துவிட்டாள் .

கதவு தட்டும் சத்தம் கேட்கவும் முகத்தை சீராக்கிக்கொண்டு ஸ் எனவும் மேம் உங்கள பார்க்க “தாரிணி “வந்திருக்காங்க என ஹர்ஷினியின் “செகரட்டரி ரூபா” சொல்லவும்.

ஓ உடனே வர சொல்லுங்க என்றாள் அவசரமாக . ஜெய்யின் ஒரே “தங்கை தான் தாரிணி” அதோடு ஹர்ஷினியின் “காலேஜ் ஜூனியரும்” கூட . இவர்கள் காதல் தெரிந்த இரண்டாமவள் .

தாரணிக்கு இரண்டு வருடம் முன்பு தான் திருமணம் முடிந்து இருந்தது . அவளின் கணவன் ரமேஷ் கோயம்பத்தூரிலே மில் வைத்து இருப்பவர்.

ஜெய் வந்தது கேள்விப்பட்டு காலையில் அவனை பார்க்க சந்தோஷமாக சென்று இருந்தாள் . ஆனால் அங்கு ஜெய்யின் முக இறுக்கத்தை பார்த்து விட்டு அவளும் என்னமோ என்று கவலை படவே செய்தாள் . இதில் விஜயா வேறு மகனை நினைத்து புலம்பி கொண்டே இருந்தார் .

வா தாரிணி என வரவேற்றவள் குடிக்க காபி வரவைத்தாள் .ஹர்ஷினியின் வரவேற்பிற்கு தாரிணி தலை ஆட்டியதோடு சரி அமைதியாகவே இருந்தாள் .

ரமேஷும் குட்டி பாப்பாவும் எப்படி இருக்காங்க என ஹர்ஷினி கேட்கவும் நல்லா இருக்காங்க என சுருக்கமாகவே முடித்துவிட்டாள் . ஏன் இப்படி இருக்கா என ஹர்ஷினி யோசிக்கவும் தாரணி அமைதியாகவே காபி குடித்தவள் உங்க கிட்ட “ஒரு விஷயம் சொல்ல சொன்னார் அண்ணா” என்றாள் .

ஹர்ஷினி மனதிற்குள் கொஞ்சம் படபடப்பாகவே உணர்ந்தவள் என்ன என மெதுவாக கேட்கவும் “அண்ணா அவார்ட் வாங்க போக மாட்டேன்” சொல்லிட்டாரு என்றாள் கொஞ்சம் கோவமாகவே .

என்ன ஏன் ஏன் என வேகமாக ஹர்ஷினி கேட்கவும்......

“உங்களால்தான்” என்றாள் தாரிணியும் வேகமாக ......

என்ன என்னாலவா என அதிர்ச்சியாக கேட்கவும்.......

ஆமா அவர் உங்கள “மீட் பண்ணனுமா” இல்லாட்டி போகமாட்டேன் சொல்லிட்டாரு இப்போ முடிவு உங்க கைலதான் என்றாள் தாரிணி .

இப்போ” வீட்ல தான் இருக்காரு” எனவும்......

ஏன் ஷூட்டிங் கேரளா தானே என ஹர்ஷினி கேட்கவும் தாரிணி முறைப்பாகவே காலையில தான் வந்தாரு என்றாள் .

ஹர்ஷினி என்ன இது ஏன் இப்படி பன்றார் என மனதுக்குள் மிகவும் கலங்கவே செய்தாள் . அவளின் வேதனையான முகத்தை பார்த்து தாரிணியும் வேதனை படவே செய்தாள் .

தாரணியின் போன் ஒலிக்கவும் நான் கிளம்புறேன் என தாரிணி சொல்லவும் ...............

இரு சாப்புட்டு போ ..........

இல்ல பாப்பா அழறா போல.......

ஓ அடுத்த டைம் பாப்பா கூட்டிகிட்டு வா என்றாள் ஹர்ஷினி .

சரி நீங்க கொஞ்சம் பாருங்க என பொறுமையாகவே சொன்னவள் கிளம்பிவிட்டாள் .

வேற எதுவும் பேசிட முடியாது இருவரிடமும். “அழுத்தம் பிடித்தவர்கள் “அதோடு இருவரும் “மிகவும் பிரைவசி பார்ப்பவர்கள்” இப்போ நான் கொஞ்சம் கோவமா ஹர்ஷிக்கிட்ட பேசினது மட்டும் அண்ணாக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். என யோசித்தவாரே கிளம்பிவிட்டாள் தாரிணி .

இப்போ கண்டிப்பா கால் செஞ்சுதான் ஆகணும் ஜெய்க்கு ஏன் இப்படி பன்றார் என யோசித்தவாறே கால் செய்தாள் .

முழுசா 3 மாசத்துக்கு அப்பறம் பேச போறோம் என சந்தோஷ பட முடியாமல் பயம் தான் அதிகம் இருந்தது . ரிங் போகவும் டென்க்ஷனில் உள்ளங்கை எல்லாம் வேர்த்தது ஹர்ஷினிக்கு .
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 3



பிற்பகல் வேலை என்பதால் ரோடு எல்லாம் கொஞ்சம் காலியாகவே இருந்தது. “ஜெய் ஆகாஷ் அவனுடைய பார்டுனர்” காரை மிதமான வேகத்துடன் செலுத்தி கொண்டிருந்தான்.


வீட்டில் எல்லோரும் அவனை பாத்து என்னோமோ ஏதோன்னு கவலைபடவும் வேலை இருக்குனு சொல்லி வெளியே கிளம்பிட்டான் . அதோடு அவனுக்கு கண்டிப்பாக தெரியும் “ஹர்ஷ் கால் பண்ணுவா” என்றும்….


கையில் இருக்கும் போன் நழுவவும் ச்சே இந்த கை வேற இப்படி வேக்குது என கை துடைத்து கொண்டாள் நம் தைரியசாலி ஹர்ஷினி . ரிங் போகவும் “இதய துடிப்பு தாறு மாறாக” எகிற ஆரம்பித்தது .


டான்ஸில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க” 21 வயதில் இருந்தே போராடியவன்” . அவனுடைய வாழ் நாள் லட்சியத்தை இன்று வேண்டாம் என்கிறான் என்றால் அவனுடைய கோவத்தின் அளவு நினைக்கவே பயமாக இருந்தது .


அவளின் பயத்திற்கு காரணம் ஜெயிற்கு கோவம் என்றால் ஒன்று “சுத்தமாகவே பேச மாட்டான் அல்லது வார்த்தைகளிலே விளாசி தள்ளிடுவான் “. இரண்டுமே ஹர்ஷினிக்கு தாங்க முடியாதவை .


அங்கு காரில் ஜெயின் போன் ஒலிக்கவும் காரை ஓரங்கட்டியவன் இறுக்கமான முகத்துடன் “ஹர்ஷினியின் பேர்” ஒலிப்பதை பார்த்தான் . பின்பு அட்டென்ட் செய்தவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான் .


ஹ ஹா ஹலோ என ஹர்ஷினி பயத்துடனே பேசுவது புரிந்தது ஜெய்க்கு . அய்யோ பேசமாட்டார் போலே என நொந்தவள் ஜெய் என கூப்பிட்டாள் அமைதியே பதில்.

தாரிணி வந்திருந்தா என சொல்லவும் அப்பொழுதும் “அமைதியாகவே” இருந்தான் . அவனுடைய அமைதி இங்கு ஹர்ஷினிக்கு கண்களில் கண்ணீர் துளிர்க்க வைத்தது. ப்ளீஸ் என குரல் கொஞ்சம் கெஞ்சலாகவே வந்தது . மறுபடியும் அமைதியே பதில் ஜெய்யிடமிருந்து . ஹர்ஷினிக்கு புரிந்தது அவன் என்ன எதிர்பாக்கிறான் என


கண்டிப்பாக அவன் பேசமாட்டான் என உணர்ந்து இறுதியாக ஹர்ஷினியே “நான் வரேன்” எனவும் ஜெய் எதுவும் பேசாமல் வைத்து விட்டான் . இன்னும் சிறுது நேரத்தில் வந்துருவான் என புரிந்து வெளியே செல்ல கிளம்பி ரெடியாகி வந்தாள் .


அவள் ஹோட்டல் முகப்பிற்கு வரவும் “சுபத்ரா தன் காரிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தார்” . ஹர்ஷ் எங்க கிளம்பிட்ட எனவும் போச்சு என மானசீகமாக தலையில் கை வைத்தவள் .சும்மா ரௌண்ட்ஸ் முடிச்சுட்டு வீட்டுக்கு தான் எனவும் இது நடைமுறை தான் என்பதால் வேறு எதுவும் கேட்காமல் ஓகே ஹர்ஷ் “நான் சென்னை கிளம்பிட்டேன்” .


சுபத்ராவின் “தேவி டான்ஸ் அகாடமி சென்னை” தான் அதோடு அவரின் இருப்பிடமும் அங்கு தான் .


ஓகே அத்தை நீங்க கிளம்புங்க எனவும். அடியே நான் இன்னும் சாப்பிடல வா இங்கே சாப்பிடலாம் இன்னிக்கு நீ வரமாட்டேன்னு அண்ணிகிட்ட சொல்லிட்டு வந்திட்டேன் என உள்ளே செல்ல திரும்பும் சமயம் ஜெய்யின் கார் வந்து நின்றது .


பக்கத்திலே இருந்ததால் ஜெய் உடனே வந்துவிட்டான். ஹர்ஷினியோடு சுபத்ராவும் நிற்பதை பார்க்கவும் ஏன் இப்படி ச்சே என்றானது ஜெய்க்கு. லாபியில் இருக்கும் செக்யூரிட்டி சென்று கதவை திறந்து விடவும் வேறு வழி இல்லாமல் இறங்கினான் .

சுபத்ரா அவனை பார்த்து விட்டு ஹேய் “ஜெய் வாட் எ சர்பிரைஸ்”

ஹாய் மேம் என சுபத்ராவிடம் சொன்னவன் கவனமாக ஹர்ஷினியின் பக்கம் திரும்பவே இல்ல.


“தி கிரேட் கோரியோ கிராபர் ஜெய் ஆகாஷ்” என சுபத்ரா சந்தோஷமாக சொல்லும் போது ஜெய் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான் .

நல்லா இரு ஜெய் இதே மாதிரி இன்னும் நிறைய சாதிக்கணும் என வாழ்த்தவும்

thank you மேம்

போ இப்பவும் அளந்து தான் பேசுவியா உன்ன என சலிப்பாக சொன்னவர் .


ஜெய் ஹர்ஷினி தெரியும் இல்ல “உன் ஜூனியர் உன் தங்கச்சி தாரிணி சீனியர்” அதோடு ரெண்டு பேரும் “நல்ல பெட்” என சிரிப்புடன் சொல்லவும்

தெரியும் மேம் என்றவன் “ஹாய் ஹர்ஷினி” என்றான் சம்பிராதயமாக. அவளும் “ஹாய் சீனியர்” என முடித்து விட்டாள் தான் ஆனால் உள்ளுக்குள் மிகவும் தவிப்பாகவே உணர்ந்தாள் .

ஜெய்யின் முகத்தில் மருந்துக்கும்” சிரிப்பு இல்ல மிகவும் இறுக்கமாகவே” இருந்தான். ஏன் இப்படி... என்ன நினைக்கிறார் அப்படின்னே கண்டு பிடிக்க முடியல…..

என்ன இந்த பக்கம் உனக்கு இப்போ “கேரளா தானே ஷூட்டிங்” என சுபத்ரா கேட்கவும்


முக்கியமான ஒருத்தரை பாக்க வந்தேன் நைட் கிளம்பனும் மேம்.


ஓகே உள்ளே வா போலாம் என சுபத்ரா அவனை அழைக்கும் போது அவனின் போன் ஒலிக்கவும் “தாரிணி “அழைத்தாள் . எடுத்து பேசியவன் ஓகே நான் பாத்துக்கிறேன் என பேசிவிட்டு

நான் கிளம்புறேன் அவங்க வரல என்று அங்கிருந்து கிளம்ப தயாரானான்.

அய்யோ கிளம்பிருவார் போலே என வேகமாக யோசித்த ஹர்ஷினி இன்னிக்கு “உங்களுக்கு எங்க ட்ரீட் அவார்ட் விண் பன்னதுக்காக” என்ன அத்தை ஓகே தானே என்றாள் சுபத்ராவிடம் . கரெக்ட் ஹர்ஷி வா ஜெய் எங்களோடு ட்ரீட் என சுபத்ராவும் சொல்லவும்

இல்ல மேம் இப்போ கிளம்புறேன் இன்னொரு நாள் கண்டிப்பா thank you பை மேம் பை ஹர்ஷினி என ஜெய் உறுதியாக மறுக்கவும் ஓகே நீ மாற மாட்ட பை என சுபத்ரா சொல்லவும் ஜெய் கார் வரும் பகுதிக்கு சென்றான்.



ஹர்ஷினி கொஞ்சம் சத்தமாக “நான் கார்டன்க்கு போறேன்” அத்தை நீ உள்ளே போ என்றவள் அவர் மறுக்க வழியில்லாமல் அங்கிருந்து செல்லவும் சுபத்ரா உள்ளே சென்றார் .ஹர்ஷினி ஜெய்யின் மொபைல்க்கு அழைத்தவள் அவன் எடுக்கவும் ப்ளீஸ் ஜெய் கார்டன்க்கு வாங்க என கேட்கவும் ஓகே என்றவன் கார்டனுக்கு சென்றான் .



சாரி ஜெய் “அத்தை வருவாங்கன்னு எனக்கு தெரியாது” . ஜெய் எதுவும் பேசாமல் ஏன் அவள் முகம் கூட பார்க்காமல் கால் விரித்து கைகளை பாண்ட் பாக்கெட்ல் விட்டு படி நிற்கவும் .

ஜெய் எதாவது பேசுங்க இப்படி பேசாம இருந்தா எப்படி என சொல்லும் போதே அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வர பார்க்கவும்

அதை உணர்ந்தவன் “அழுத கொன்னுருவேன்” என கோவமாக அவளை பார்த்து சொல்லவும் அவனின் கோவம் புரிந்து அவனை நெருங்கி வந்தவள் அவனின் கைய பாக்கெட்ல இருந்து வெளியே எடுத்து தன் விரல்களை அவன் விரல்களோடு இறுக்கமாக கோர்த்தாள் .


அவளை முறைத்தவன் “என்னடி பண்றே “என அதட்டி தன் விரல்களை அவளிடமிருந்து பிரிக்க பார்க்கவும் ஹர்ஷினி இன்னும் இறுக்கமாக பிடித்தாள் .

வேண்டாம் ஹர்ஷினி அப்புறம் நீ தாங்க மாட்ட விட்டுடு

ஹர்ஷினி மறுப்பாக தலையாட்டவும் அப்போ அனுபவிடி என்றவன் அவளின் முகத்தை பார்த்தவாறே தன் விரல்களை இன்னும் இன்னும் நெறித்தான் . “எலும்புகள் எல்லாம் சில்லு சில்லாகி விடுமோ” என அஞ்சும் அளவு நெறித்தான் .

அப்படியும் ஹர்ஷினி தன் வலியை காட்டாமல் வைராக்கியமாக நின்றாள் . பக்கத்தில் யாரோ பேசும் சத்தம் கேட்கவும் இருவரும் வேகமாக கைகளை விலக்கி கொண்டனர் .

நான் “வீட்ல வெயிட் பண்றேன் நீ கண்டிப்பா வர “என்றவன் வேகமாக கிளம்பிவிட்டான் .

ஹோட்டலில் உள்ள பர்ஸ்ட் எயிட் பாக்ஸில் ஸ்பிரே எடுத்து கைக்கு அடித்து கொள்ளவும் வலி கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது .பின் சுபத்ரா இருக்குமிடம் சென்றாள்.

முடிஞ்சுதா ரௌண்ட்ஸ் வா சாப்பிடலாம் எல்லாம் ரெடியா இருக்கு என இருவருக்கும் சுபத்ரா எடுத்து வைத்தார் . ஹர்ஷினி பொதுப்படையாக பேசியபடி வேகமாக சாப்பிட்டவள் நான் கிளம்புறேன் அத்தை .

ஒரு ப்ரண்ட இன்னிக்கு மீட் பன்றேன்னு சொல்லிருந்தேன். நீ சென்னை ரீச் ஆயிட்டு எனக்கு கால் பண்ணு .

நான் கால் பண்றேன் நீ பாத்து போ பை .

thank you அத்தை பை என அவரை கட்டிப்பிடித்து விடை கொடுத்தவள் வேகமாக கிளம்பிவிட்டாள் .

அவள் சுபத்ராவிடம் செல்லும் போதே உணவு சொல்லிவிட்டு சென்றதால் அவள் கிளம்பவும் உணவு தயாராக இருந்தது . உணவு கூடையை எடுத்து கொண்டவள் வேகமாக காருக்கு சென்றாள் .

.............................................................................................................................................

கோயம்புத்தூரில் இருந்து கொஞ்சம் அவுட்டரில் தான் இருவரும் சேர்ந்து பார்ம் அவுஸ் வாங்கினார்கள். இவர்கள் எப்போதும் மீட் செய்யும் இடமும் அதுதான்.

முன்னதாக சென்ற ஜெய் அங்கு பொறுப்பில் இருக்கும் கந்தனை நைட் வந்தால் போதும் என அனுப்பி விட்டான் .


சிறிது நேரம் சென்று கார் வரும் ஓசை கேட்டு வெளியே வந்தவன் ஹர்ஷினி அவளின் காரிலிருந்து இறங்கி காரின் பின்புறம் இருக்கும் உணவு கூடையை எடுத்து கொண்டு காரின் கதவை மூடி லாக் செய்யும் போது தனக்கு மிக அருகில் ஜெய் ஆகாஷ உணர்ந்தாள் ஹர்ஷினி.


அவனின் வெப்ப மூச்சு காற்று ஹர்ஷினியின் கழுத்தை தீண்டி சென்று அவளை தகிக்க வைத்தது . அவள் கரத்தின் மீது அழுத்தமாக தன் கரத்தை வைத்து அவளிடமிருந்து உணவு கூடையை வாங்கியவன் மற்றொரு கையால் அவளை பற்றி உள்ளே அழைத்து சென்றான் .


நேராக டைனிங் டேபிள் மேல் சென்று கூடையை வைத்தவன் அவள் பிடியை விடவும் ஹர்ஷினி வேகமாக கிட்சனுக்குள் சென்றுவிட்டாள்.


ஜெய் சென்று கதவை அடைத்தவன் சோபாவில் கண் மூடி அமர்ந்து விட்டான் . ஹர்ஷினி சாப்பிட ஏற்பாடு செய்தவள் ஆகாஷ் வராமல் சோபாவில் அமர்ந்து இருப்பதை பார்த்து விட்டு


ஜெய் “சாப்புடுங்க ரொம்ப சோர்வா இருக்கீங்க” எனவும்


இருக்கலாம் காலையில் இருந்து காரிலே தானே சுற்றி கொண்டிருந்தேன் என நினைத்தவன் எதுவும் பேசாமல் எழுந்து ஜன்னலருகில் சென்று நின்று கொண்டான்.


ஹர்ஷினி அவன் அருகில் சென்று நின்றவள் சாப்பிட வாங்க ரொம்ப டைம் ஆயிடுச்சி என மறுபடியும் அழைக்கவும்


ஹர்ஷினி நான் இங்க “விருந்தாட வரல” அதோடு இனிமேல் என்னை பத்தி அக்கறை பட உனக்கு எந்த உரிமையும் இல்லை என கோவமாக சொல்லவும்


ஜெய் என ஹர்ஷினி ஆரம்பிக்கும் போதே அவளை மிக நெருங்கி நின்றவன் “ஷ் ஷ் நீ ஒருவார்த்தை கூட பேச கூடாது “. உனக்கு பேச கொடுத்த சான்ஸ் முடிஞ்சு போச்சு . நான் மட்டும் தான் பேசுவேன் எனவும்


அவனின் கோவத்தை புரிந்து கொண்டவள் அமைதியாகிவிட்டாள் இல்லாவிடில் அவனின் கோவம் இன்னும் தான் அதிகரிக்கும் .


நூல் அளவு இடைவெளி தான் இருந்தது இருவருக்கும் இடையில் அதே நெருக்கத்தோடே பேசினான்.


உன்ன “கல்யாணம் பண்ணிக்கலான்னு கேட்டது ரொம்ப பெரிய தப்பு “அத நான் உணர்ந்துட்டேன் . அதுக்கான தண்டனையும் நான் அனுபவிச்சுட்டேன் .


என்ன சுத்தி எல்லோரும் “என் வெற்றியை கொண்டாடுறாங்க” ஆனா என்னால அதை “உணர கூட முடியல” ஏன் தெரியுமா “என் மனசு மருத்து போன மாதிரி இருக்கு”.


நான் எப்போலிருந்து உன்ன இந்த அளவுக்கு லவ் பன்றேன்னு சத்தியமா எனக்கே தெரியல ஹர்ஷினி.


அவன் சொன்னதை கேட்டவுடன் ஹர்ஷினியின் முகம் மிகவும் தவிப்பை காட்டியது


அவளின் தவிப்பான முகத்தை பார்த்தவன்” 18 வயசுல உங்க தாத்தா டான்ஸ் ஆட கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டாரு” . உன்னால டான்ஸ்ல எதுவும் சாதிக்க முடியல , உன்னோட “லட்சியம் முடிஞ்சு போச்சுன்னு” நீ பட்ட வேதனையை பாத்து அவளால் சாதிக்க முடியாம போன என்ன நான் சாதிக்குறேன் “நானும் அவளும் வேற இல்ல”.


எனக்கும் டான்ஸ்ல சாதிக்கணும் வெறி இருக்கு . இனிமே இது “ஹர்ஷினி ஆகாஷ் லட்சியம்” கண்டிப்பா ஜெயிக்கணும் . ஜெயிச்சி அந்த “சந்தோஷத்தை உனக்கு கொடுக்கணும்” அப்படின்னு வைராக்கியமா அன்னிக்கு நம்ம லட்சியத்துக்கு பின்னாடி ஓட ஆரம்பிச்சேன் .


“9 வருஷத்துக்கு அப்புறம் நிறைய போராட்டத்துக்கு பின்னாடி அதை சாதிச்சும் காட்டிட்டேன்”. ஆனா என்றவன் விரக்தியாக தோளை குலுக்கினான்


அவன் பேச பேச “ஹர்ஷினியின் முகம் அதிர்ச்சியை” காட்டியது . அவளின் அதிர்ச்சியை கண்டு கொள்ளாமல் “ஏன் என்னால உனர முடியல " உனக்கு தெரியுமா ஹர்ஷினி


“நான் இந்த உலகத்தில் உள்ள எல்லாத்தையும் விட அதிகமா உன்ன லவ் பன்றேனே அதனால இருக்குமோ” இல்ல


எனக்கு “உன்ன தவிர வேற எதுவும் பெருசா தெரியல” அதனால இருக்குமோ என்றான் ஒரு மாதிரி குரலுடன் .


இருவருக்கும் இடையில் இருந்த நூல் அளவு இடைவெளியும் குறைத்தவன் தன் முழு உடலும் அவளின் உடலோடு முழுவதுமாக படற நின்றவன்


அவளின் முகத்தில் தெரியும் தவிப்பை பார்த்தவாரே மிக அருகில் இருந்த அவளின் முகத்தை மிக தீவிரமாக பார்த்து கொன்டே தன் விரலால் அவளின் நெற்றியில் இருந்து கோடிழுத்தவாரே இந்த "முகத்தை 3 மாசம் பாக்க முடியாம" போச்சே


அதனால “இல்ல அப்படி இல்ல” நான் வரேன் தெரிஞ்சாலே உன்ன பாக்க விடாம பண்ணியே அதனால இருக்குமோ என கூறியவாரே அவளின் துடிக்கும் இதழை வருடி கொண்டிருந்தவனின் பார்வையில் உள்ள தாகத்தினை உணர்ந்தவள்


கண்ணை மூடி கொள்ளவும் ” ஹர்ஷினி கண்ணை திற “ என கொஞ்சம் கட்டளையாகவே சொன்னான் . அவனின் கட்டளையை உணர்ந்து மெதுவாக கண்ணை திறந்தாள் .


நீ கண்ண மூட கூடாது “என் லவ்வ என் கண்ண பார்த்து நீ உணரணும்” என்றான் .

என்னால முடியல ப்ளீஸ் ஜெய்…..

நோ என உறுதியாக மறுத்தவன் நிதானமாக தன் “இதழை அவளின் துடிக்கும் இதழோடு பொருத்தினான்” . முதலில் மென்மையாக ஆரம்பித்த முத்தம் நேரம் செல்ல செல்ல மிகவும் வன்மையாக மாறியது .


ஜெயின் ஒரு கை அவளின் பின்னந்தலையை இறுக பற்றியது என்றால் மற்றொரு கை அவளுள் இருக்கும் புதையலை தேடி அலைந்தது .

ஹர்ஷினியால் தன்னுள் எழும் “ஆழி பேரலைய தாங்க முடியாமல்” அதை உருவாக்கியவனிடமே சரணைடைந்தாள் .


அவளுடய ஒத்துழைப்பு இன்னும் இன்னும் போதை ஏற்றியது ஜெய் ஆகாஷிற்கு . இருவரின் ரத்த சுவையை இருவருமே உணர்ந்தனர் . ஆனால் அந்த "வலி ஜெய்க்கு போதவில்லை" .

இன்றோடு உலகம் முடியவே போகிறது என்பது போல் மீண்டும் மீண்டும் விடாமல் அவளையும் விலக விடாமல் முத்தமிட்டான் ஜெய்.


அவனின் பார்வை “உயிரை உறைய வைக்கும் பார்வையாக” இருந்தது. அந்த பார்வையை தொடர்ந்து சந்திக்க முடியாமல் ஹர்ஷினி கண்ணை மூடவும் நன்றாகவே அவளின் இதழை கடித்து விட்டான். . ஸ்ஸ் என வலிதாங்க முடியாமல் தன் உதட்டை அவனிடம் இருந்து பிடுங்கவே செய்தாள் .


தன் காதல் தாகம் அடங்காமல் மறுபடியும் அவளை இழுக்கவும் அவனை இறுக கட்டி கொண்டவள் “ப்ளீஸ் ஜெய்” என கெஞ்சவும் தான் கொஞ்சம் நிதானித்திற்கு வந்தான் .


சிறிது நேரம் அப்படியே நின்றவன் பின் நிதானமாக அவளை விலக்கி அவளின் முகத்தை பார்த்தவாறே என் “உயிரை கொல்ற இந்த காதல் எனக்கு வேண்டாம் ஹர்ஷினி . உன் ஆசை படியே நாம பிரிஞ்சிறலாம்” என மிக அழுத்தமாக சொன்னான் ஜெய் ஆகாஷ் ........

....................................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

என்னுள் சங்கீதமாய் நீ 3 போஸ்ட் பண்ணிட்டேன் . படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க ப்ரண்ட்ஸ் thank you
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 4


ஆகாஷ் சொன்னது போல் இரவு வந்த கந்தன் சார் சாப்பாடு என்ன பண்ண என கேட்கவும் மதியம் ஹர்ஷினி வரும் போது கொண்டு வந்திருந்த உணவையே சூடு செய்து தர சொல்லி சாப்பிட்டான்.

மேம் வந்திருந்தாங்களா சார் என கந்தன் கேட்கவும் சிரித்தபடியே ஆமாம் என்றவன்


தான் பிரிந்து விடலாம் என்று சொல்லியதை கேட்டவுடன் “அவளின் அதிர்ச்சி , முகத்தில் இருந்த துயரம் அதோடு கிளம்பும் போது அவள் முகம் காட்டிய நம்பிக்கையும் “ தான் ஞாபகத்திற்கு வந்தது ஆகாஷிற்கு.


கண்டிப்பா அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என் மனதுக்குள் உறுதி எடுத்து கொண்டவன் . என்ன இன்னும் நான் நினைச்சது நடக்கலியே என யோசனையாக தன் போனை பார்த்து கொண்டிருக்கும் போதே


அவன் மிகவும் எதிர்பார்த்த போன் ஒலிக்கவும் ஜெய் ஆகாஷின் முகம் ரகசிய சிரிப்பில் ஒளிர்ந்தது .


“ஹலோ மாஸ்டர் கிளம்பிடீங்களா “என இப்போது அவன் கோரியோ கிராப் செய்யும் படத்தின் டைரக்டர் கேரளாவில் இருந்து கேட்கவும்

“ எஸ் சார் இன்னும் 10 மினிட்ஸ்ல “எனவும்

நோ சார்” நாளைக்கு ஷூட்டிங் இல்ல நீங்க அங்கே இருங்க அடுத்த நாள் இங்க வந்தா போதும்” என அவர் கொஞ்சம் வேகமாகவே சொன்னார் எனலாம்.

நமட்டு சிரிப்பு சிரித்த ஜெய் ஓகே சார் பை என வைத்துவிட்டான் . அடுத்து உடனே அவன் பிஏ மோகன் கால் செய்யவும்


சொல்லு மோகன் “சார் MR . ஆச்சார்யா தான் ஸ்டாப் பண்ணிருக்கார்” அதோட ஷூட்டிங் கேன்சல் ஆன லாஸ்க்காக டபுள் அமோன்ட் ப்ரொடியூசர் கைக்கே வந்துருச்சி எனவும் ஓகே என கால் கட் செய்த ஆகாஷின் முகம் மலர்ந்தே இருந்தது .


ம்ம் ரொம்ப பாஸ்ட்தான் .” யாரு ஆச்சார்யா ஆச்சே இப்படி இல்லாட்டி தான் அதிசயம்" என நினைத்தவன் அடுத்து என்ன செய்வார் என அனுமானம் இருந்தது .


அடுத்து என்ன என ஆகாஷ் யோசித்து கொண்டிருக்கும் போது வீட்டில் இருந்து விஜயா கூப்பிடவும் “நாளைக்கு வீட்டுக்கு வரேன்ம்மா கேரளா போகல ஒரு முக்கியமான வேலை” என்று சொல்லியவன் கொஞ்சம் சந்தோஷமாகவே பேசிடவும் வீட்டில் எல்லோரும் நிம்மதி ஆகினர் .

அவனின் முகம் இரண்டு நாளாய் இறுகி இருந்ததை நினைத்து கவலை பட்டவர்கள் ஆயிற்றே .

...............................................................................................


இரவு 11 மணி கேட்டுக்கு வெளியே ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்கவும் கந்தன் ஹாலில் இருந்த ஆகாஷ பார்த்தார்.


அவன் போய் திறங்க எனவும் இந்நேரத்துக்கு யாரு வந்திருக்கா என யோசித்துவாறே சென்று கேட் திறந்தார் கந்தன் . கேட் திறந்தவுடன் வேகமாக இரண்டு கார்கள் வந்து நின்றது .


முதலில் இறங்கிய கார்ட்ஸ் கார் கதவை திறக்குவும் “ஆச்சார்யா மிகவும் கம்பீரமாக இறங்கினர் அடுத்து சந்திரன் இறங்கவும் இருவர் மட்டும் உள்ளே சென்றனர் “.


ஜெய் ஆகாஷ் நிமிர்ந்து நின்ற படி அமைதியான முகத்துடன் வாங்க உட்காருங்க என உபசரித்தான் . ஆனால் ஆச்சார்யா சந்திரன் இருவரின் முகமும் மிகவும் கோவத்தை உள்ளடிக்கியபடி அவனின் உபசரிப்பை கண்டு கொள்ளாதவர்களாக ஆராய்ச்சியோடும் , கோவத்துடனும் அவனை பார்த்து கொண்டு நின்றனர்.


அவனின் நிமிர்வு , தைரியம் கண்டு ஆச்சார்யா சந்திரன் இருவருக்கும் தங்கள் வரவில் அவனுக்கு எவ்விதமான அதிர்ச்சியும் இல்ல அது மட்டுமில்லாமல் அவன் தங்களை எதிர்பார்த்தே காத்திருக்கிறான் எனவும் புரிந்தது.


ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் ஆச்சார்யா கோவமான முகத்துடன் தன் கையில் இருக்கும்” ரிப்போர்ட்டை” அங்கிருக்கும் டீபாயில் ஏறக்குறைய வீசினார் என்றே சொல்லலாம் .


அவரின் கோவத்தில் இருந்தே தங்களின் காதலை பற்றி அனைத்தும் அவர்களுக்கு தெரிந்து விட்டது என புரிந்தது ஆகாஷிற்கு......ஆனால் “அவன் எதிர்பார்த்தும் அதை தானே” .


அவர்களின் கோவம் எதனால் எனபதும் ஆகாஷிற்கு புரிந்தது “அவர்கள் மிகவும் வெறுக்கும் டான்ஸர்” என்பதாலும் போதாதற்கு அவர்கள் மகள் “சுபத்ராவின் வாழ்க்கையில் வந்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்த சினி பீல்டில் இருப்பதாலும்” என்று


இருந்தாலும் முகத்தில் எவ்விதமான உணர்வையும் காட்டாமல் அந்த ரிப்போர்ட்டை எடுத்து பார்த்தான் . “தங்களின் 9 வருட காதலின் முழு டீடைலும்" அதில் இருந்தது .


எவ்விதமான ஆச்சரியமும் இல்ல ஆகாஷிற்கு “டிடெக்ட்டிவ் மூலம் விசாரிச்சிருப்பார்கள்” என தெரியும் என்பதால் அமைதியாக வைத்தவன் அடுத்து “என்ன என்பது போல் தைரியமாகவே” பார்த்தான் .


தீர்க்கமான நேரான பார்வையுடனும் அகன்ற தோள்களுடனும் கம்பீரமாக தைரியமாக தங்களை பார்த்தபடி நின்றிருந்த ஜெய் ஆகாஷ பார்க்கும் போது ஆச்சார்யா ,சந்திரன் இருவருக்கும் தோன்றியது” ஜெய் ஆகாஷ் ஹர்ஷினிக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன்" என்பதே .



இவர்களின் காதல் தெரிந்தவுடன் அவனை பற்றி விசாரிக்கவும் எல்லாம் நல்ல விதமாகத்தான் தோன்றியது . “மறுக்க எந்த காரணனும் இல்ல ஒரே ஒரு விஷயத்தை தவிர” ….. மற்றபடி ஆகாஷின் குடும்பமும் மிகவும் நல்ல குடும்பம்


ஆகாஷின் தந்தை மகாலிங்கம் கார் ஷோ ரூம் வைத்து இருக்கிறார் அது மட்டுமில்லாமல் நிலம் , மில் என இவர்கள் அளவு இல்லையென்றாலும் நல்ல வசதியாகவே இருந்தனர் .

ஆனாலும் என நினைத்தவர்கள் தங்களின் எண்ணங்களை வெளி காட்டிக்கொள்ளாமலே நின்றனர்.


அது மட்டுமில்லால் தங்கள் “வீட்டு பெண் 9 வருடமாக காதலிக்கிறாள் ஆனால் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியவில்லை” என்பதே அவர்களுக்கு சொல்ல முடியாத உணர்வை கொடுத்தது .

சந்திரன் கொஞ்சம் கோவமான குரலில் “என்னங்க இது எல்லாம் “என கேட்கவும்


ஜெய் ஆகாஷ் மறுபடியும் பர்ஸ்ட்” நீங்க ரெண்டு பேறும் உட்காருங்க” என்றான். மரியாதையாகவே பின்பு அவர்கள் உட்காரமாட்டார்கள் என புரிந்தவன்


“ஓகே இது எல்லாம் உண்மை தான்” என சொல்லவும் ஆச்சார்யா சந்திரன் இருவரின் முகமும் மிகவும் இறுகியது .


ஆனா என இழுத்தவன் அவர்களின் முகத்தை பார்த்து கொன்டே “எங்க காதல் இன்னிக்கு ஈவினிங் தான் பிரேக்கும் ஆச்சு” என்றான் நிறுத்தி நிதானமாக .


ஆச்சார்யாவின் முகம் நக்கல் சிரிப்பில் விரிந்தது . பின் நிதானமாக கால் மேல் கால் போட்டு கம்பீரமாக சோபாவில் அமர்ந்தார் .


இது என் பேத்தி வீடும் இல்ல என்ற ஆச்சார்யாவின் குரலில் பெருமையும் நக்கலும் கலந்தே ஒலித்தது .


இரண்டையும் புரிந்து கொண்டவன் இது “உங்க பேத்தி வீடும்ம் இல்ல …..எப்பவும் அவ வீடு மட்டும்தான் .ரெஜிஸ்டெரும் அவ பேரில் தான் “என ஆகாஷ் உறுதியாகவே சொன்னான் . ஆனால் ஆகாஷும் பாதி ஷேர் போட்டு இருந்தான் தான் .


ஆச்சார்யா அவன் சொன்னதை கண்டு கொள்ளாதவர் போல் “நீங்க என் பேத்தியோட காலேஜ் பங்க்ஷன்ல டான்ஸ் ஆடினவர்தானே” எனவும்


ஆகாஷின் முகம் கோவத்தில் மிகவும் இறுகியது . அதை பற்றி பேச விரும்பவில்ல என காட்டும் விதமாக முகம் திருப்பவும் ஆச்சார்யாவும் அதை புரிந்து கொண்டவர் ஏன் அவருக்குமே அதை பற்றி பேச விருப்பமில்லை அதை நினைக்கவும் பிடிக்கவில்லை என்பதால் ஓகே என்று முடித்து விட்டார்.


இத்தனை வருஷமா என் பேத்தி ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னு இப்போதான் நல்லா புரியுது 9 வருஷ காதல் ஆனா நான் வேற காரணம் எல்லாம் நினைச்சுகிட்டு இருந்துட்டேன் என்ற ஆச்சார்யாவின் மனதில் என்ன நினைக்கிறார் என்று ஒன்றுமே கண்டுபிடிக்க முடியாத குரலில் பேசியவர் தொடர்ந்து


ஆனா இப்போ நீங்க பிரேக் பண்ணிட்டேன் சொல்றீங்க அப்படித்தானே என இழுத்தவர் “எங்களுக்கு ஹர்ஷிய பத்தி நல்லா தெரியும் ….இப்போ உங்களை பத்தியும் முழுசா தெரியும்” என சொல்லவும் ஆகாஷிற்கு புரிந்தது அவர் என்ன சொல்ல வருகிறார் என


உங்க ரிப்போர்ட் என்ன சொல்லுது தெரியுமா “நீங்கள் இருவருமே மனதளவில் உங்க காதலில் மிகவும் உறுதியானவர்கள் . அதோடு இருவருமே ஒன்றை நினைத்தாள் அதிலே நிற்கும் ரகம்” அப்படின்னு


அது மட்டுமில்ல “நீங்க மத்த காதலர்கள் போல் கிடையாதுன்னும் “போட்டிருக்கு


நீங்க அந்த டான்ஸ்ல “என வெறுப்போடு சொன்னவர்” சாதிக்க போராடிட்டு இருந்ததால டைம் கிடைக்கும் போது தான் ரெண்டு பேறும் மீட் பண்ணிருக்கீங்க .போன் கூட வாரத்துக்கு 4 டைம் பேசினாலே பெருசுன்னு போட்டுருக்கு .


அந்த வயசுலே அவ்வளவு மெச்சூரிட்டியோடயும் , உங்க காதலுல உறுதியாவும் இருந்த நீங்க இப்போ சொல்லவே வேண்டாம்


9 வருசமா இவ்வளவு கஷ்டத்தை கடந்துட்டு இப்போ நீங்க ரெண்டு பேறும் உங்க கால்ல நிக்கும் போது நீங்க பிரேக் பண்ணிட்டேன் சொன்னா அதை நான் நம்புவேன்னு நீங்க நினைக்குறீங்களா என ஆச்சார்யா நிதானமாக அவனை போலவே கேட்டார்.


அவர் சொன்னது அனைத்தும் உண்மையே . இவர் கண்டிப்பா நான் சொல்றதை நம்ப மாட்டார் என புரிந்தது ஆகாஷிற்கு. ஆனாலும் முகத்தில் எதையும் காட்டாமல்


“3 மாசத்துக்கு முன்னாடி நான் ஹர்ஷிக்கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு" கேட்டேன் ஆனா அவ அதுக்கு எப்பவும் ஒத்துக்க மாட்டான்னு சொல்லிட்டு என்ன 3 மாசமா புல்லா அவாய்ட் பண்ணிட்டா..


எங்க வீட்லயும் “கல்யாணம் பண்ண பிரஸ்ஸர் “சோ இன்னிக்கு முடிவா பேசினேன் ஆனா அவ என்று விரக்தியாக தோளை குலுக்கியவன் …சோ நான் தான்” பிரேக் அப் பண்ணிட்டேன் . எல்லாம் முடிஞ்சது “ . இது தான் உண்மை என தெளிவாக கூறியவன் . அப்பறம் உங்க இஷ்டம் என முடித்து விட்டான் .


அவன் சொன்னதை கேட்டவுடன் சந்திரனின் முகம் வேதனையதான் காட்டியது.


ஆச்சார்யா எதுவும் பேசாமல் சிறிது நேரம் யோசித்தவர் நீங்க சொன்னனது போல் உண்மையாகவே முடிஞ்சிருந்தால் “முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும் அதுதான் நம்ம எல்லாருக்கும் நல்லதும் கூட" என சொன்னவர்


ஆனால் ஹர்ஷினியும் நீங்களும் உங்க காதலை விடுவீங்கன்னு எனக்கு 1 பெர்சென்ட் கூட நம்பிக்கையில்லை. எப்படிருந்தாலும் இனிமேல் நான் கண்டிப்பா விட மாட்டேன் ….


ஹர்ஷினிக்கு இந்த வருஷத்துக்குள்ள கண்டிப்பா கல்யாணம் முடிச்சிடுவேன் மாப்பிள்ளையும் ரெடியா இருக்கார் . சோ எல்லாமே நல்லவிதமாக நடக்கும் தான் என்றவர் கிளம்பவும்…


சந்திரன் அப்பா என்று கூப்பிடவும் அவரின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஆச்சார்யா மறுப்பாக தலை அசைத்தார் . ஆனால் சந்திரன் ப்ளீஸ்ப்பா ஒரு டைம் எனவும்


இதுக்கு முதல்ல உன் பொண்ணே கண்டிப்பா ஒத்துக்க மாட்டா நீ கேட்கறது கண்டிப்பா நடக்காது பெரியவனே.


ஹர்ஷினி ஏன் ஆகாஷ் கேட்டப்போ கல்யாணதுக்கு ஒத்துக்கல தெரியுமா ஆகாஷ் டான்ஸ் விட கூடாதுன்னுதான் .


அப்போ நாமளும் கண்டிப்பா இவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டோம் அப்படின்னும் என் பேத்திக்கும் தெரியும் . நான் சொல்றது கரெக்ட் தானே ஆகாஷ் என ஆச்சார்யா கேட்கவும்


ஆகாஷிற்கு உள்ளுக்குள் மிக பெரிய பயமாக இருந்தது இது தான் . ஹர்ஷினிக்காக உன் டான்ஸை விட்டுடு என கேட்டு விட்டால் என்பதே ..


இந்த கேள்விக்கு தன்னிடம் எப்பொழுதும் பதில் இல்லையே . ஹர்ஷினி தன்னை பிரிந்தாலும் பிரிவாளே தவிர நான் கண்டிப்பாக டான்ஸ் விட எக்காரணத்தை முன்னிட்டும் ஒத்து கொள்ளவே மாட்டாளே .


அவர்கள் காதலிக்கும் போதே இதற்காக நிறைய சண்டை போட்டவர்கள் ஆயிற்றே .


ஆச்சார்யா தங்கள் காதலுக்கு கண்டிப்பாக ஒத்து கொள்ள மாட்டார் என தெரிந்து ஆகாஷ் டான்சிலிருந்து விலக முடிவு எடுத்த அன்று ஹர்ஷினியின் கோவமும் அதை தொடர்ந்து அவள் செய்த செயலும் … அதை இப்பொழுது நினைத்தாலும் பயமே ஆம் பயமே ஆகாஷிற்கு .


அவர் சொல்வது அனைத்தும் உண்மையே என்பதால் ஆச்சார்யா கேட்டதற்கு ஆகாஷ் எதுவும் பேசாமல் நின்றான் .


சந்திரன் அவனின் மௌனத்திலே புரிந்து கொண்டு ஆச்சார்யா கிளம்பவும் எதுவும் பேசாமல் நிராசையான முகத்துடன் கிளம்பிவிட்டார் .


அவர்கள் சென்றவுடன் ஜெய் ஆகாஷ் ஓய்ந்து போன முகத்துடன் அமர்ந்து விட்டான் . ஆச்சார்யாவின் மாப்பிள்ளை ரெடியா இருக்கார் என சொன்னதை நினைத்து பார்த்தவன் கோவத்தில் பல்லை கடித்தான் .


என் ஹர்ஷிக்கு மாப்பிள்ளையா அதை நினைத்தாலே பற்றி கொண்டு வந்தது அதையும் தான் பாக்கலாம் என மனதுக்குள் சூளுரைத்து கொண்டான் ஜெய் ஆகாஷ் .


கேரளாவில் இருந்து கிளம்பும் போது “ஆகாஷின் மனநிலை ஹர்ஷினியை பார்த்து பேசினால் போதும் “என்றே இருந்தது .


ஆனால் எல்லாம் மாறியது ஹோட்டல் கார்டெனில் ஹர்ஷினியிடம் பேசிவிட்டு திரும்பும் போது அங்கிருக்கும் “cctv கேமராவை “பார்த்தவுடன் தான் .


ஹர்ஷினிக்கு ஜெய்யிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என தவிப்பில் இருந்ததால் “கார்டெனில் இருக்கும் cctv கேமராவை மறந்து விட்டாள்” .


ஆனால் ஆகாஷ் கவனித்து விட்டவன் அதை தனக்கு ஏற்றார் போல் மாற்றியும் கொண்டான் .


ஆச்சார்யா , ஹர்ஷினி , சுபத்ரா மூவரையும் சமாளித்து கல்யாணம் செய்ய வேண்டும் என்றால் “60 ஆம் கல்யாணம் தான் நடக்கும்” என புரிந்து அதிரடியாக தன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான் ஜெய் ஆகாஷ் .

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


ஹாய் ப்ரண்ட்ஸ்

என்னுள் சங்கீதமாய் நீ 4 போஸ்ட் பண்ணிட்டேன் . உங்க கருத்துக்களுக்கு ஆவலாக இருப்பேன் ப்ரண்ட்ஸ் . இதுவரைக்கும் என்ன என்கரேஜ் பண்ண எல்லா ப்ரண்ட்ஸ்க்கும் சைலன்ட் ரீடர்ஸ்க்கும் நன்றி .
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 5



“பெரியம்மா கொஞ்சம் சீக்கிரம் கொண்டாங்க எங்க அம்மா வந்துருவாங்க என ஹாசினி” அவசரமாக கேட்கவும் .

இருடி கொண்டு வரேன் ஆனா இதான் கடைசி பூரி ஹாசினி இனி மேல் நீ கேட்டாலும் தரமாட்டேன் என கண்டிப்புடன் ரேணுகா சொல்லவும்

ஓகே ஓகே என்றவள் வேகமாக பூரியை வாயில் அடைத்துக்கொண்டாள் .

மெதுவா மெதுவா அவசரமா சாப்பிடாத

போங்க பெரியம்மா எங்க அம்மா மட்டும் பாத்துச்சி வாயில இருக்கிற பூரியைவே வெளியே எடுத்துடும் என ஹாசினி சொல்லி கொண்டிருக்கும் போதே

ஹாசினி இன்னும்” நீ இங்க என்ன பண்ற “என சந்தேகமாக கேட்டபடி மாலதி {இந்திரனின் மனைவி } வர உடன் வந்த அபிஷேக் வேற என்ன பண்ணுவா பெரியம்மா கேட்டு திருட்டு பூரி சாப்புடுவா என கிண்டலாக சொல்லவும்

“போட்டு கொடுத்துட்டான் எரும மாடு” என பல்லை கடித்தாள் ஹாசினி .

“ஹர்ஷி என்ன எந்திருச்சிட்ட ஒரு பூரி போதுமா” உனக்கு என கோவமாக ரேணுகா அதட்டவும்

ம்மா போதும் என்ற ஹர்ஷினி

ஹாசினி அபிஷேக் இருவரிடமும் ரெண்டு பேரும் சீக்கிரம் முடிச்சுட்டு வாங்க என்று சொன்னவள் ஹாலுக்கு சென்று விடவும்

“ஒருத்தி சாப்பிடவே மாட்டேங்கறா இன்னொருத்தி சாப்புட்டுக்கிட்டே இருக்கா” என மகளை முறைத்து பார்த்து கொன்டே சொன்ன மாலதி அவன் சொல்றது உண்மையா ஹாசினி பூரி சாப்பிட்டியா என்ன “ஓட்ஸ் தானே சாப்புடனும் நீ” என அதட்டவும்

விடு மாலதி ஏன் அதட்டுற பாவம் புள்ள மூஞ்சி சுருங்கி போச்சு என ரேணுகா பரிவோடு சொல்லவும் மாலதியும் ஹாசினியின் பாவமான முகத்தை பார்த்துவிட்டு “சரி கிளம்பு ஹர்ஷினி ரெடியா இருக்கா” பாரு எனவும் ஹாசினி வரேன் என பொதுவாக சொன்னவள் அபிஷேக்கை பார்த்து ரகசியமாக அழகு காட்டிவிட்டு சென்றாள் .

ஏன்மா இப்படி “அவ மூஞ்ச பாவமா வச்சி உங்கள ஏமாத்திட்டு போறா” என அபி கடுப்பாக சொல்லவும்

டேய் எப்ப பாத்தாலும் அவளோடு மல்லு கட்டுற பேசாம சாப்புட்டு கிளம்பு என ரேணுகா அதட்டவும்

வர வர இந்த வீட்ல எனக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்ல பாத்துக்குறேன் உங்களை என்றவன் சாப்பிட்டு கிளம்பிவிட்டான் .


முன்னைக்கு ஹாசினி இப்போ நல்லா வெயிட் குறைஞ்சிருக்கா . கொஞ்ச கொஞ்சமா குறைக்கலாம் விடு மாலதி என ரேணுகா சொல்லவும்

எனக்கும் புரியுதுக்கா 70 கிலோலிருந்து இப்போ 63 வந்துட்டா அவ கல்யாணத்துக்குள்ள கண்டிப்பா இன்னும் ஒரு 5 கிலோ மட்டும் குறைச்சுட்டா போதும் என மாலதி கவலையோடே சொல்லவும்.
"
மேனகாவின் மகன் கார்த்திக்குக்கு தான் ஹாசினியை” உறுதி செய்து இருந்தனர்” .

கார்த்திக்கே அவ வெயிட் பிரச்சனை இல்ல அதனால் ரொம்ப கவலை படாத விடு பாத்துக்கலாம் என ஆறுதலாக ரேணுகா சொன்னார் .

…………………………………………………………………….


அக்கா உனக்கு எப்படி அந்த” ஒரு பூரி போதும்” என ஆச்சரியமாக ஹாசினி கேட்கவும்

ம்ப்ச் என்ற ஹர்ஷினி “உன்னோட ப்ராஞ்சுக்கான ரிப்போர்ட் எங்க ஹாசினி”. இன்னிக்கு மதியத்துக்குள்ள நாம எல்லா ரிபோர்டும் கொடுக்கணும் தெரியுமில்ல என கொஞ்சம் கண்டிப்போடு கேட்கவும்

இந்த ஒரு மாதமாகவே எந்த எந்த ஸ்டேட்ல புது பிரான்ச் ஓபன் பண்றது , அதுக்கான இடம் , கொட்டேஷன் ரேடி பண்ண என மிகவும் பிஸியான மாதமாகத்தான் இருந்தது இவர்கள் மூவருக்கும்.

ஹி ஹி அது இன்னும் பைனல் வேலை மட்டும் தான் பெண்டிங் இருக்கு. ஹோட்டல் போனவுடனே அதை முடிச்சுட்டு 1 மணிநேரத்துல கொடுத்துருவேன் என ஹாசினி சமாளிப்பாக சொல்லவும்.

“புது பிரான்ச் ஓபன் பண்றத பத்தி பேசத்தான் இன்னிக்கு ஈவினிங் சென்ட்ரல் மினிஸ்டர பாக்க” உங்க தாத்தாவும் , உங்க பெரியப்பாவும் போறாங்க தெரியுமில்ல. அவங்க கிளம்பரத்துக்குள்ள நாம ரிப்போர்ட் கொடுக்கணும் ஹாசினி.

அபி நேத்தே அவன் பிரான்ச் ரிப்போர்ட் கொடுத்து அதை அப்ரூவும் வாங்கிட்டான் . நீ மட்டும் தான் இன்னும் முடிக்காம இருக்க
அபி நீ அவளோட இருந்து அவகிட்ட கொடுத்திருக்கிற ப்ராஞ்சுக்கான ரிப்போர்ட் ரெடி பண்ணு. எனக்கு 10 மணிக்கு ரிப்போர்ட் கையில் இருக்கணும் என சொல்லவும் அபி , ஹாசினி இருவரும் ஒகேக்கா என்றனர்.

கிடைத்தது சான்ஸ் என ஹாசினி உனக்கு எப்ப பாத்தாலும் சாப்பாடு சாப்பாடு இது தான் அத தவிர வேலையெல்லாம் நீ டைம்க்கு பாத்துட்டாலும் என அபி நக்கலாக சொல்லவும்

உன்னக்கு என்ன நீ கார் ஓட்டுற வேலையை மட்டும் பாரு என ஹாசினி வரிஞ்சி கட்டி கொண்டு சண்டைக்கு கிளம்பினாள் அபியிடம்.

கொஞ்சமாவது “அண்ணன் அப்படின்ற மரியாதை இருக்கு” உனக்கு திருஷ்டி பூசணிக்கா எனவும்

யாரு நானா “நீ தாண்டா காண்டா மிருகம்” என எப்பொழுதும் போல் இருவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டு கொள்ள ஆரம்பிக்கவும் .

இவங்கள திருத்த முடியாது என சலித்த ஹர்ஷினி மொபைல் பார்க்க ஆரம்பிக்கவும் அதில் “இன்று ஜெய் ஆகாஷ் பாடல் ஷூட்டிங் முடிந்து வெளி நாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்” என ஏர்போர்ட்டில் இருக்கும் அவனின் போட்டோ போட்டு இருந்தனர்.

“நேஷனல் பெஸ்ட் கோரியோ கிராபர் அவார்ட் “வாங்கிய பிறகு ஜெய் ஆகாஷ் என்ன செய்தாலும் நியூஸ் தான் .

அதிலும் இப்பொழுதெல்லாம் அவன் கோரிய கிராப் செய்யும் பாடல்கள் எல்லாம் மிகவும் வெற்றி பெற ஆரம்பித்தது . அவனின் “தனித்துவமான ஸ்டெப்ஸ்கள் அனைத்தும் ட்ரெண்ட் ஆனது”. மிகவும் விரும்பும் தேடப்படும் ஆளாக மாறினான் ஜெய் ஆகாஷ் .

அவனின் வளர்ச்சியில் மிகவும் பெருமையே ஹர்ஷினிக்கு. சாதிப்பதற்காக அவனின் போராட்டங்கள் அனைத்தும் அறிந்தவள் என்பதால் “இந்த புகழுக்கு எல்லாம் மிகவும் ஏற்புடையவன் என்னவன்” என கர்வமே கொள்ளும் மனது ஹர்ஷினிக்கு .

அந்த நியூஸில் இருக்கும் அவனின் போட்டோவை ஜூம் செய்தவள் தன் விரலால் அவனின் முகத்தை வருடினாள் . இது போல் அவனின் போட்டோவை பார்த்தால் தான் உண்டு மற்றபடி நேரில் பார்ப்பது எல்லாம் என நினைத்தவுடன் மனம் வெகுவாக சுருண்டது ஹர்ஷினிக்கு .

அன்று அவன் “நாம பிரிஞ்சிரலாம் என சொன்னவுடன் கோவத்தில் சொல்கிறான்” . அவனின் கோவம் குறையட்டும் பிறகு பேசலாம் என்றே நினைத்தாள் .

ஆனால் அவன் கோவத்தில் எல்லாம் சொல்லவில்லை உண்மையாகத்தான் தான் சொல்லிருக்கிறான் என நாளாக நாளாகவே ஹர்ஷினி உணர்ந்தாள்.

அவனை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள முடியவே இல்ல ஹர்ஷினியால் அதை விட ஆகாஷ் விடவே இல்ல என்றே சொல்லலாம். கால், சோசியல் மீடியா என எல்லாவற்றிலும் இருந்து முழுவதுமாக அவளிடமிருந்து விலகி விட்டான் .

ஆகாஷ பார்க்க முடியாமல் அவனோடு பேசவும் முடியாமல் இரண்டு மாதம் தாங்க முடிந்த ஹர்ஷினியால் அதற்க்கு பிறகு முடியவே முடியாது என புரிந்தவுடன் அவனோடு பேச வேண்டும் என தாரிணியின் மூலமாக சொன்னதற்கு அவனின் பதில் ஓரு மெயில் மூலமாக இரண்டே வரிகளில்

“தன்னிடம் பேச அவனுக்கு எதுவும் இல்லையெனவும்….. முடிந்தது முடிந்ததுதான் பை” என்றிருந்ததது. அதை பார்த்தவுடன்ஆகாஷ் ஏதோ பிளான் செய்கிறான் என புரிந்தது.

அதன் பிறகு அவனோடு பேச ஹர்ஷினியும் எந்த முயற்சி எடுக்கவில்லை. ஆனால் “மனம் மட்டும் கொதி கனலாக கொதித்தது “என்ன பதில் இது முடிசிஞ்சிருச்சுன்னு . அதெப்படி அவனால் இப்படி சொல்ல முடிகிறது.

போ இனிமேல் நானும் பேச ட்ரை பண்ணமாட்டேன் என முடிவு எடுத்துவிட்டாலும் ஆகாஷின் செயல் ஹர்ஷினிக்கு அதிகமான வேதனை , கோவம் இரண்டும் கொடுத்தது.

அவளின் கோவத்தை மேலும் அதிகரிப்பது போல் ஒரு மாதத்திற்கு முன்பு அவர்களின் பார்ம் ஹவுஸிற்கு ஹர்ஷினி சென்ற போது ஜெய் ஆகாஷும் அங்கு தான் இருந்தான் .

இவள் கார் ஹார்ன் அடிக்கவும் கந்தன் வந்து கேட் திறந்தவர் அவளிடம் “மேம் ஒரு நிமிஷம் இங்கே இருங்க” என்றார் கொஞ்சம் சங்கடமான முகத்துடன்

ஏன் என்னாச்சு என புரியாமல் ஹர்ஷினி கேட்கவும்

இல்ல ஜெய் சார் உள்ளே இருக்கார் “அவர் இப்ப கிளம்பிடுவாராம். அப்பறம் உங்கள உள்ளே வர சொன்னார்” என சொல்லவும் ஹர்ஷினிக்கு அதிர்ச்சி மற்றும் கோவத்தில் பேச்சே வரவில்லை .

அப்பொழுது ஜெய் ஆகாஷ் அவனின் காரை எடுத்து கொண்டு வெளியே வந்தவன் “ஹர்ஷினியின் பக்கம் கூட திரும்பாமல்” அங்கிருந்து கிளம்பியே விட்டான் .

அவனின் செயலில் முதலில் அதிர்ந்தாலும் பின்பு இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கன்னு நானும் பாக்குறேன் இரு என மனதுக்குள் கருவி கொண்டாள் ஹர்ஷினி.

“அக்கா ஹோட்டல் வந்துடுச்சி” என ஹாசினி உலுக்கவும் தான் சுயத்திற்கு வந்த ஹர்ஷினி ஓஹ் என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இறங்கி உள்ளே சென்று விடவும் .

அக்கா ஏன் இப்படி இருக்கா …. அடிக்கடி இந்த மாதிரி அமைதியாகிடற…. என்ன ஆச்சு அவளுக்கு என ஹாசினி கவலையோடு கேட்கவும்

“அக்கா கிட்ட யாரும் எதுவும் கேக்க கூடாதுன்னு தாத்தா கண்டிப்பா சொல்லிருக்கார்” இல்லாட்டியாவது என்னனு பாக்கலாம் என அபியும் கவலைப்பட்டான் .

ஹேய் கைஸ் “என்ன இங்க மாநாடு என கேட்ட படி கார்த்திக் வரவும்” ஹாசினி அபி இருவரும் முகத்தை இயல்பாக வைத்து கொண்டனர் .

கரெக்ட் தான்” ஹாசினி இருக்கா இல்ல அதான் உங்களுக்கு மாநாடு போல கூட்டமா தெரியுது “என அபி கிண்டலாக சொல்லவும்

ஹாசினி அப்படியா என்பது போல் கார்த்திக்கை முறைத்து பார்க்கவும்

அய்யோ “பேபி நான் அந்த மீனிங்க்ல சொல்லல”… டேய் உனக்கு ஏன்டா இந்த கொலவெறி என அபியை பார்த்து கார்த்திக் கேட்டு கொண்டிருக்கும் போதே

இருவரையும் முறைத்தபடி நான் உள்ளே போறேன் என்ற ஹாசினி உள்ளே சென்று விடவும்

இப்போ சந்தோஷமா உனக்கு நல்லா வருவடா என்று கடுப்பாக சொன்ன கார்த்திக் ஹாசினிய பின்பற்றி உள்ளே சென்று விட்டான்.

அபி சிரித்தவாறே நின்றவன் அய்யோ அக்கா கொடுத்த ஒர்க் முடிக்கணும் சும்மாவே இவ செய்ய மாட்டா . இப்போ கார்த்திக் வேற வந்துட்டார். சுத்தம் இப்போ நான் தான் எல்லாம் செய்யணும் என ஹாசினியை கடுப்பாக மனதுக்குள் திட்டியவன் வேகமாக வேலையை பார்க்க சென்றான் .

…………………………………………………………………….

ஒருவழியாக எல்லா ரிப்போர்ட்டும் முடிச்சி ஆச்சார்யாவிடமும் கொடுத்து அவர் எல்லாத்தையும் சரிபார்த்து விட்டு சந்திரனுடன் கிளம்பியும் விட்டார் . மிகவும் ஆசுவாசமாக அபி ,ஹாசினி ,ஹர்ஷினி மூவரும் வீட்டுக்குள் வரும்போதே உள்ளே மேனகா பேசும் சத்தம் வாசல் வரை கேட்டது .

அவரின் சத்தத்திலே எதை பத்தி பேசுகிறார் என புரிந்தவுடன் அபி , ஹாசினி இருவரும் பதட்டத்துடன் திரும்பி ஹர்ஷினியை பார்க்கவும் அவள் கோவமான முகத்துடன் வேகமாக உள்ளே சென்று கொண்டிருந்தாள்.

மேனகா இந்திரனிடம் கோவமாக இங்க பாருங்கண்ணா என் பயனுக்கு வயசு 28 முடிஞ்சு 29 ஆரம்பிக்க போகுது . அப்படி இருக்கும்போது நீங்க இன்னும் டைம் கேட்குறீங்க. எனக்கு தெரிஞ்சு போச்சி கார்த்திக் ஹாசினி கல்யாணம் கண்டிப்பா நடக்காதுன்னு .

ஏன் நடக்காது என கேட்டு கொன்டே ஹர்ஷினி வீட்டுக்குள்ளே வரவும் அவள் பின்னாலே வந்த அபி , ஹாசினி இருவரும் மாலதியின் பார்வையை புரிந்து கொண்டு வேகமாக அவர்களின் ரூமிற்கு சென்றுவிட்டனர்.

வா ஹர்ஷினி நல்ல நேரத்துக்கு தான் வந்திருக்க என கோவமாக வரவேற்ற மேனகா என்ன கேட்ட ஏன் நடக்காதுன்னா

உனக்கு கல்யாணம் பண்ணிட்டுதான் ஹாசினிக்கு பண்ணணுன்னா எப்படி நடக்கும் 26 வயசாகியும் உனக்குத்தான் கல்யாணம் பண்ணிக்கிற நினைப்பு இருக்கிற மாதிரியே தெரியலையே என கொந்தளிக்கவும்.

அவர் சொன்னதை கேட்டு அதிர்ந்த ஹர்ஷினி "சித்தப்பா ஹாசினி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு" நான் முன்னாடியே சொன்னப்போ நீங்க நான் மேனகா கிட்ட பேசியாச்சு.

அதெல்லாம் சீக்கிரம் நடக்கும் சொல்லிட்டு இப்போ அத்தை வேற மாதிரி சொல்ராங்க என கொஞ்சம் கோவமாகவே இந்திரனிடம் கேட்கவும்

இந்திரனோ ஹர்ஷினியின் கேள்வியை கவனிக்காதவர் போல் "அப்பா அண்ணன் வந்ததுக்கு அப்புறம் நாம இத பத்தி பேசலாம் மேனகா" இப்போ வேண்டாம் என பிரச்னையை முடிக்க பார்க்க. அதை ஹர்ஷினி மேனகா இருவருமே கண்டு கொள்ளவில்லை

அதுவும் ஹர்ஷினி இந்திரனிடம் பேசியதை கேட்கவும் மேனகாவின் கோவம் இன்னும் அதிகரித்தது என்றே சொல்லலாம் .

அவருக்கு சுபத்ரா , ஹர்ஷினி இருவரையும் மிகவும் பிடிக்கும். ஆனாலும் ஆச்சார்யா , சந்திரன் இருவரும் இவர்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர்கள் .

அது தெரிந்தும் ஒரு டான்ஸ்க்காக இவர்கள் இருவரும் நடந்து கொள்ளும் முறை சரியில்ல என்பதே அவரின் எண்ணம் .

ஆனால் உண்மை காரணம் இதுவல்ல என்பது அவருக்கு தெரியாது. அவருக்கு மட்டுமில்ல வீட்டில் உள்ள யாருக்கும் எதுவும் தெரியாது சந்திரன் , இந்திரன் தவிர.

மற்றவர்களுக்கு சொல்லக்கூடாது என்பது எல்லாம் இல்ல ஆனால் ஏனோ இவர்கள் விஷயம் சொல்ல வேண்டாம் என்று தோன்றியதால் சொல்லவில்லை ஆச்சார்யா. மகன்களையும் சொல்லவிடவில்லை.

ஏற்கனவே மேனகா கொஞ்சம் கோவத்தில் தான் ஆச்சார்யாவை பார்க்க வந்திருந்தார் . அவர் இல்ல என்று தெரிந்ததும் இந்திரனிடம் பேசினார் . ஆனால் அவர் இன்னும் டைம் கேட்கவும் தான் இந்த பிரச்சனை எல்லாம்.

அவரின் புகுந்த வீட்டில் இப்பொழுது எல்லாம் ஹர்ஷினியின் கல்யாணத்த பற்றி தான் அதிகம் பேசுகின்றனர்.

அதிலும் இன்று ஒரு படி மேலே போய் ஹர்ஷினியும் உன் தங்கை சுபத்ரா போல தான் இருக்க போகிறாளா என கேட்கவும் தான் மேனகாக்கு கோவம் , வருத்தம் , ஆங்கம் எல்லாம்

அதோடு இப்பொழுது ஹர்ஷினியும் ஹாசினியின் கல்யாணத்த பற்றி மட்டும் பேசவும்

என்ன நீ ஹாசினி கல்யாணம் பண்றத பத்தி மட்டும் பேசுற உனக்கு கல்யாணம் பண்ற எண்ணமே இல்ல அப்படித்தானே

அப்போ நீயும் சுபத்ரா மாதிரி கடைசி வரை இப்படியே இருக்க போறியா என ஆத்திரமாக மேனகா கேட்கவும்

அத்தை உங்க பையன் கல்யாணத்தை பத்தி மட்டும் பேசுங்க மத்தது எல்லாம் பேசாதீங்க என ஹர்ஷினி கொஞ்சம் கோவமாக சொல்லி விடவும்

ஏன் பேசக்கூடாது அப்போ எனக்கு உங்க மேல எந்த உரிமையும் இல்லையா என மேனகா கொஞ்சம் கோபமாகவும் அதே சமயம் வருத்தமாகவும் கேட்கவும் அதை உணர்ந்த ஹர்ஷினி

அத்தை உங்களுக்கு எங்க மேல எல்லா உரிமையும் இருக்கு ஆனா என் கல்யாணத்த பத்தி மட்டும் பேசாதிங்கன்னு தான் சொல்றேன் என கொஞ்சம் பொறுமையாகவே சொன்னாள்.

ஹர்ஷினி உனக்கு தெரியாது. உனக்கு ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலன்னு எத்தனை பேரு இப்போல்லாம் கேட்கறாங்க தெரியுமா .

போன வாரம் நம்ம சொந்தத்துல நடந்த கல்யாணத்துல கூட உன்ன பத்தி தான் நிறைய பேசினாங்க அதுவும் நீயும் சுபத்ரா மாதிரி தான் இருக்க போறியான்னு அண்ணிகிட்ட கேட்டு அண்ணி எப்படி அழுதாங்க தெரியுமா.

ஏன் ஹர்ஷினி உனக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்குது என மேனகா ஆற்றாமையுடன் கேட்கவும் ஹர்ஷினி ரேணுகாவை பார்த்தாள் .

அவர் தன் கண்ணீரை கட்டுபடித்து கொண்டு நின்றிருந்தார் . அவரின் கண்ணீரை பார்க்கவும் ஹர்ஷினிக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது .

ஹர்ஷினி என மேனகா மறுபடியும் ஆரம்பிக்கவும் இவர் இன்று விடமாட்டார் போலே எப்படி தப்பிப்பது என யோசித்தவள் அத்தை ப்ளீஸ் இப்போ எதுவும் பேச வேண்டாம் அப்பறமா பேசுவோம் எனக்கு ரொம்ப பசிக்குது என பாவமான முகத்துடன் சொல்லவும்

அண்ணி அப்பறமா பேசலாம் அவளே ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தான் பசிக்குது சொல்றா என ரேணுகா மாலதி இருவரும் மேனகாவிடம் கேட்கவும்

அவ எஸ்கேப் ஆக தான் பசிக்குதுன்னு சொல்றா என கரெக்டாக கண்டுபிடித்தவர் ஹர்ஷினி நான் இன்னும் ஒரு வாரத்துக்கு இங்க தான் இருக்க போறேன் என முறைப்பாக சொல்லவும்

என்னது ஒரு வாரமா என மனதுக்குள் அதிர்ந்தாலும் நம்ம அத்தை தானே சமாளிப்போம் என நினைத்தவள் வெளியே ஒன்றும் காட்டி கொள்ளாமல் ஏன் அத்தை என்ன அவசரம் இன்னும் ஒரு வாரம் இருங்க என பாசத்துடனே சொன்னாள் .

மேனகாவும் அவளின் பாசத்தை உணர்ந்தாலும் அதை அப்பறம் பார்ப்போம் என தன் முறைப்ப கைவிடாமலே சொன்னவர்

அண்ணி ஹாசினி , அபியையும் சாப்பிட வர சொல்லுங்க நான் இன்னும் அவங்க கிட்ட பேசவே இல்லை என மாலதியிடம் சொல்லவும் எல்லோரும் ஒன்றாகவே உணவு உண்டனர் .

ஆனாலும் எல்லோரின் மனதிலும் மேனகா இந்த முறை கண்டிப்பாக விட மாட்டார் என்று புரிந்தது.

முதலில் எல்லாம் இது போல் நிறைய சமாளித்தவள் தான் ஆனால் இப்பொழுது ஆகாஷும் ஹர்ஷினியை அவாய்ட் செய்ய செய்ய அவளின் வருத்தம் எல்லாம் போய் இப்போ கோவம் தான் அதிகம் ஆனது. எப்போ யார் மேல வெடிப்போம் என ஹர்ஷினிக்கே கொஞ்சம் பயமாக தான் இருந்தது .
 
Last edited:
Status
Not open for further replies.
Top