All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிதிராஜின் "என்னுள் சங்கீதமாய் நீ" - கதைத் திரி

Status
Not open for further replies.

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 17


ஜெயின் கோவமும், அவனின் உணர்வுகளும் ஹர்ஷினிக்கு புரியாமல் இல்லை.. ஏன் ஹர்ஷினிக்குமே ஜெய் ராஜீவின் கையை உடைத்ததை பற்றி கேள்விப்பட்டவுடன் முதலில் தோன்றியது பெருமையும், கர்வமே..

ஒரு விதத்தில் அவன் செய்தது சரியும் கூட.. அதை மறுப்பதற்கே இல்ல என்றாலும்… அவளின் எண்ணமெல்லாம் ஜெய் இதிலிருந்து தள்ளியே இருக்க வேண்டும் என்பதே.. ராஜீவ் பிரச்னையில் ஜெய் தலையிட்டு, அவனுக்கு தேவையில்லாத கஷ்டங்கள் வருவானேன்.?

ஏனெனில்.., “என்குயரி நடந்த அன்றே ராஜீவின் அப்பாவும், ராஜீவும் அவன் தவறை மறைக்கத்தான் பார்த்தனார். கடைசி வரை அவர்கள்.. அவனின் தவறை உணரவும் இல்லை.. ஏற்று கொள்ளவும் இல்ல..”

தாத்தா தன் “பவரை..” உபயோகப்படுத்தி, எல்லா வழியையும் அடைத்து விட்டதால், வேறு வழி இல்லாமல் தான் அவர்கள் பனிஷ்மெண்ட்டை ஏற்று வெளியேறினர்..

அவ்வளவு ஏன்..? என்குயரி முடிந்து வெளியே செல்லும் போதும்.. ராஜீவ் அடங்காமல் என்னை குரூரமாக முறைத்து விட்டு தான் சென்றான்.

நான் அவனை அடித்ததை அவன் கண்டிப்பாக விட போவதில்லை, மறக்கவும் போவதில்லை.. இதில் இவர் வேறு அவனை விடாமல் தேடி பிடித்து அவன் கையை உடைத்து விட்டு வந்திருக்கிறார்..

அன்று அவனின் கோவமே எனக்கும்.. ஜெயிக்கும்.. என்ன..? என்பதே.. இப்பொழுது இவர் வேறு அவன் கையை உடைத்து, அவனிடம் எங்கள் காதலை உறுதி படுத்தி விட்டு வந்திருக்கிறார்..

அவனுக்கு தெரிவதால் எனக்கு எந்த விதமான பிரச்னையும் இல்ல தான் என்றாலும்.. இப்பொழுது அவளின் கவலை எல்லாம் “ஜெய்க்கு அவர்களால் எதாவது தொந்தரவு வருமோ..?” என்பதே..

அதனாலே.. ஆதங்கப்பட்டு ஜெய்யிடம் கேட்டு விட்டவள், அவன் கோவத்தில் கத்தவும், இவர் புரிஞ்சுக்காம கோவப்பட்டு கத்துனா என்ன செய்ய நான்..? என்ற ஆற்றாமையில் மூக்கு விடைக்க நின்று இருந்தாள்..

இங்கு ஜெய்க்கோ மிகவும் ஏமாற்றமான மனநிலை.. மனதே ஆறவில்லை.. இந்த நாளுக்காக தானே அவன் இத்தனை மாசம் தவிப்புடன் காத்திருந்தது..

பார்த்த முதல் நாளிலிருந்தே ஹர்ஷினியை காதலிக்க ஆரம்பித்து விட்ட ஜெய், எப்பொழுது அவளும் தன்னை காதலிப்பாள் என்ற இத்தனை மாத தவிப்போடு இருந்தவனுக்கு,

அன்று கேன்டீனில் ஹர்ஷினி கண்ணில் தனக்கான காதலை பாத்த பொழுது... அவனின் இதயம் ஒரு நிமிடம் நின்றே துடித்தது

அன்று அவன் கொண்ட சந்தோஷத்தை சொல்ல.. இந்த உலகத்துல வார்த்தைகளே இல்ல எனலாம்.. அவன்.. அவனாகவே இல்ல.. அப்படியே மிதக்கும் உணர்வு தான்..

அப்படி இருந்தும்.. இந்த காலேஜ் மீட் முடியும் வரை அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய கூடாதென்று.. அன்றிலிருந்து.. இன்று வரை பேச கூட செய்யாமல் முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தவன்..

இன்று ஹர்ஷினியிடம் தன் காதலை சொல்ல எண்ணற்ற கனவுடனும், எதிர்ப்பார்ப்போடும் வந்தவனிடம்.. அவள் ராஜீவை பற்றி பேசவும், அதுவும் அவன் கையை ஏன் உடைஞ்சீங்க..? என்று கேட்கவும் கோவம், ஏமாற்றமே அவனுக்கு..

நான் காதலை சொல்ல வரும் போது தான்.. இவ அந்த ராஜீவை பத்தி பேசணுமா..? என்ற ஏமாற்றத்துடன் ஜெயும்,

நான் அவரருக்காக தானே யோசிக்கிறேன்.. அதை புரிஞ்சிக்காம கோவப்படுறாரே என்ற ஆற்றாமையுடன் ஹர்ஷினியும்,
எதுவும் பேச தோன்றாமல் அமைதியாக நிற்கும் பொழுது,

“அம்மிணி..” என்று ஹர்ஷினியின் டிரைவர் கொஞ்சம் தூரத்தில் இருந்து கூப்பிடவும், திரும்பி பார்த்த ஹர்ஷினி "5 நிமிஷம் அங்கிள்.." என்றாள்.

இல்லை அம்மிணி.. இன்னும் ஏன் வரலன்னு "பெரியவர்.." போன் பண்ணிட்டார்.. என்று தயக்கமாக இழுக்கவும்,

ஓஹ்.. சரி நான் வந்துறேன், நீங்க போய் கார் ஸ்டார்ட் பண்ணுங்க என்றவள், அவர் செல்லவும், திரும்பி ஜெயயை பார்த்து, நான் கிளம்புறேன் எனவும், இப்பொழுது இருக்கும் மனநிலையில் எதுவும் பேசமுடியாது என்ற புரிந்து கொண்ட ஜெய், ஓகே நீ கிளம்பு என்று விட்டான்.

திரும்பி நடக்க ஆரம்பித்து விட்ட ஹர்ஷினிக்கு, அப்பொழுதுதான் உறைத்தது ஜெய் முதலில் மிகவும் உற்சாகமாக ஏதோ சொல்லிக்கொன்டே வந்தான் என்று, உடனே திரும்பி ஜெயிடமே வந்தவள்,

கொஞ்சம் தயங்கி கொன்டே என்கிட்ட எதாவது சொல்லனுமா..? என்று கேட்கவும், என்னவென்று சொல்ல முடியா ஒரு முகபாவத்துடன் நின்ற ஜெய் எதுவும் இல்லை.. என்பது போல் தலையாட்ட செய்தான்.

இல்லை நான்.. நீங்க.. ஏதோ.. என்னவென்று எப்படி கேட்க..? என்று தடதடக்கும் இதயத்துடன் ஒரு ஊகத்துடனும், கொஞ்சம் எதிர்பார்ப்போடும் நின்ற ஹர்ஷினியை புரிந்து கொண்ட ஜெய்,

ம்ம்.. நான் சொல்ல வந்தேன்னு தான்.. ஆனா..? என்று முடிக்காமல் நிறுத்தியவன், இப்போ வேண்டாம்.. எனவும்,

ஏன்..? என்ற கேள்வியுடன் அவனை பார்த்த ஹர்ஷினிக்கு, அவனின் ஷர்ட் பாக்கட்டில் துருத்தி கொண்டு நின்ற கிப்ட் ரேப்பை பார்த்து விட்டு, அவனை கேள்வியாக பார்க்கவும்,

அதுவரை இருந்த முக இறுக்கம் மறைந்து மெலிதாக சிரித்த ஜெய், தன் பாக்கட்டை தட்டி கொன்டே, "இந்த கிப்ட் உனக்கு தான் வாங்கினேன்.. அதுவும் ரொம்ப தேடி பிடிச்சு வாங்கினேன்.." என்று சொல்லி நிறுத்தவும்,

என்னவாக இருக்கும்..? என்ற எதிர்பார்ப்போடு கிப்டை பார்த்தவள், தருவாரா..? என்று அவனை பார்க்கவும்,

அவளின் எதிர்பார்ப்பை கண்ட ஜெய்க்கு, ஒரு புறம் சந்தோஷம் உண்டானாலும், கொடுக்க தோன்றவில்லை.. அந்த கிப்டை எப்படி எல்லாம் கொடுக்க வேண்டும் என்ற கனவுடனே வாங்கியவனுக்கு, அதை செய்ய முடியாத ஏமாற்றம் உண்டாக, அடங்கியிருந்த கோவம் மறுபடியும் வந்தது.

எதிர்பார்க்காதே..! இந்த கிப்டை உனக்கு தரமாட்டேன்.. என்று உறுதியாக சொல்லவும்,

ஏன்..? ஏன் தரமாட்டீங்க..? என்று கொஞ்சம் உரிமையுடன் கேட்கவும்,

அவளின் உரிமை புரிந்தாலும், வீம்பாக நின்ற ஜெய்.. தரமாட்டேன்.. அவ்வளவுதான்.. காரணம் எல்லாம் சொல்ல முடியாது.. இப்போ நீ கிளம்பு.. எனவும்,

போகாமல்.. கண்களை சுருக்கி அவனை பார்த்த படியே நின்ற ஹர்ஷினி, எனக்கு தானே வாங்குனீங்க..? அப்பறம் ஏன் தரமாட்டீங்க..? என்று உர்ரென்று முகத்தை வைத்து கொண்டு கேட்கவும்,

ஏன் தரணும் உனக்கு..? நான் எவ்வளவு கனவோடு உன்கிட்ட சொல்ல வந்தா.. நீ அந்த ராஸ்களை பத்தி பேசி என்னை டென்ஷன் பண்ணிட்டு.. இப்போ ஏன் தரமாட்டேங்கன்னு குதிக்கிற.. என்று கோவத்தில் முறுக்கி கொள்ளவும்,

என்ன சொல்ல வந்தீங்க..? என்று பயம் கலந்த படபடபடக்கும் இதயத்தோடு கேட்டாள் ஹர்ஷினி.

அதெல்லாம் இனிமேல் சொல்ல முடியாது.. மறுபடியும் கேட்டு என்னை கோவப்படுத்தாம கிளம்புடி.. என்று அதட்டவும்,

இப்போ மட்டும் கோவப்படாமலா பேசுறாரு.. என்று மனதுக்குள் முணுமுணுத்த ஹர்ஷினி, போகாமல் நிற்கவும்,

நீ எவ்வளவு நேரம் நின்னாலும் கண்டிப்பா நான் சொல்ல போறதும் இல்ல.. கிப்டை கொடுக்க போறதும் இல்ல.. என்று உறுதியாக சொன்னவன், இப்போ கிளம்பு.. அவர் எவ்வளவு நேரம் வெய்ட் பன்றாரு என்று ட்ரைவரை கை காட்டி கண்டிப்புடன் சொல்லவும்,

நேரம் ஆவதை உணர்ந்து கொண்டு, எதுவும் பேச முடியாமல் மனதுக்குள் அவனை திட்டிக்கொண்டே சென்றாள் ஹர்ஷினி,

என்னை திட்டாம சீக்கிரம் போடி.. என்று அதட்டவும், திரும்பி அவனை பார்த்து உதட்டை சுளித்துவிட்டு கிளம்பிவிட்ட ஹர்ஷினி, அதற்கு பிறகு எப்போது ஜெயயை பார்த்தாலும், ஒரு வித எதிர்பார்ப்போடு பார்ப்பவள்.. அவன் அமைதியில் முறைத்து விட்டு தான் செல்வாள்..

அதனை ஒரு நாள் கவனித்து விட்ட குமார்.. என்னடா மச்சி.. அந்த தில்லானா அம்மிணி உன்னை முறைக்குது.. என்று சந்தேகமாக கேட்கவும், இல்லையே.. நல்லா பாரு மச்சி.. அவ உன்னைத்தான் முறைக்கிறா..? என்று சீரியசான குரலில் சொல்லவும்,

என்னையா முறைக்கிறா..? நான் என்னடா பண்ணேன் என்று கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டான். அவனின் பதட்டத்தில் மனதுக்குள் சிரித்து கொண்ட ஜெய்,

டேய் மறந்துட்டியா.. நீ அவளை ராக் பண்ணி பிரியாணி வாங்கி கொடுக்க சொல்லி சாப்பிட்டியே என்று சொல்லவும், ஆமாடா.. ஆனா நீங்களும்தானே ராக் பண்ணீங்க.. என்னை மட்டும் ஏன்டா அந்த அம்மிணி முறைக்குது..

ஒரு வேளை அவளுக்கு உன் முகம் மட்டும் தான் ஞாபகம் இருக்கும் போல.. என்று குறுஞ்சிரிப்புடன் சொன்ன ஜெய், ஆனா சூப்பர் கெத்து மச்சி நீ.. அவளுக்கே கான்டீன்ல அக்கவுண்ட் ஓபன் பண்ண வச்ச பாரு.. அங்க நிக்கிற மச்சி நீ என்று நக்கலாக சொல்லவும்,

ஆமாமில்லை.. என்று கெத்தாக ஷர்ட் காலரை தூக்கும் போது, மச்சி அவசப்பட்டு காலரை தூக்கிடாத.. என்று அவசரமாக ஜெய் சொல்லவும்,

ஏன் மச்சி..?

அதுவா எனக்கு என்ன பயமென்னா.. அவளை ராக் பண்ணதை பத்தி அவ எப்போ உன்னை ப்ரின்சிகிட்ட போட்டு கொடுப்பான்னு தான்..

டேய் டேய் மெதுவா பேசுடா.. அந்த அம்மிணி காதுல விழுந்துற போது.. என்று அலறிய குமார்.. ஆனா அந்த அம்மிணி அப்படி பண்ணனும்ன்னு எனக்கு தோணலைடா.. நாமும் இத்தனை மாசமா பாக்குறோம்.. நல்ல பொண்ணு தாண்டா.. எனவும்,

ஜெயின் மனதுக்குள் பனிமழை தான்.. இருந்தாலும் நீ எதுக்கும் உஷாரா இருந்துக்கோ மச்சி என்று குமாரை கலவர படுத்தவும், அவன் எப்பொழுது ஹர்ஷினியை பார்த்தாலும் பார்க்காதது போல் விலகி ஓடவே செய்தான் எனலாம்.

இந்த மாசம் நம்ம டிபார்ட்மெண்ட் பங்க்ஷன் வருது.. ஹர்ஷினி இந்த டைமாவது நீ நம்ம சீனியர் ஜெய் சாரோட சேர்ந்து டான்ஸ் ஆடணும் என்று ஜோதி சொல்லவும்,

ஆமா ஹர்ஷினி, அவர் பைனல் இயர் வேற.. இந்த மாசம் செமஸ்டர் எக்ஸாம் முடியவும், ப்ராஜெக்ட் அப்பறம் பைனல் எக்ஸாம் தான்.. அதானல இப்போ தான் அவர் கூட சேர்ந்து ஆடினாதான் ஆடுன மாதிரி.. என்று ரோஹனும் சொன்னான்.

ஆமாப்பா.. இன்டெர் காலேஜ் மீட்டிலே நீங்க ஆடுவீங்கன்னு நம்ம டிபார்ட்மெண்ட்ல எல்லாரும் எதிர்பார்த்தோம்.. சீனியர்ஸ் கூட ஜெய் சார்கிட்ட பேசினங்காலம்.. ஆனா அவர்தான் இன்னொரு டைம் பாத்துக்கலாம்ன்னு சொல்லிட்டார் போல..

இப்போ கேட்டா கண்டிப்பா ஒத்துப்பார்.. நீ என்ன சொல்ற ஹர்ஷி.. உனக்கு ஓகே தானே.. எனவும், சிறிது நேரம் யோசித்த ஹர்ஷினி, எனக்கு ஓகே தான்.. ஆனா அவர்.. என்று கேள்வியாக இழுக்கவும், அதை நாங்க பாத்துக்குறோம் என்றவர்கள் அன்றே மற்ற சீனியர்ஸ் மூலம் ஜெயிடமும் பேச சென்றுவிட்டனர் .

.........................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்,

அடுத்த போஸ்ட் போட்டுட்டேன்.. படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க மக்களே.. thank you
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 18



என்ன சீனியர் இப்படி சொல்றீங்க..? முடியாதுன்னு மட்டும் சொல்லாதீங்க.. ஓகே சொல்லுங்க.. ப்ளீஸ் சீனியர்.. ஆமாடா ஓகே சொல்லுடா.. என்று அனைவரும் மாற்றி மாற்றி கேட்கவும்,

டேய் பசங்களா.. புரியாம பேசாதீங்கடா.. என்று ஜூனியர்ஸை அதட்டிய ஜெய், ஏன்டா..? உங்களுக்குமாடா காலேஜ் ரூல்ஸ் தெரியாது.. கப்பில் டான்ஸ் அல்லோவ் கிடையாது தெரியுமில்ல.. கண்டிப்பா இதுக்கு ஒதுக்கமாட்டாங்க..

அதனால தான் நீங்க முதல்ல கேட்டப்பவே, நான் பாக்கலாம்ன்னு சொன்னேன்.. என்று ஜெய் மறுப்பாக சொல்லவும்,

டேய்.. நாம போய் கேட்டா ஓகே சொல்ல சான்ஸ் இருக்கு.. ஆமா மச்சி கேட்டு தான் பாக்கலாமே.. என்று குமாரும், செல்வமும் சொல்ல,

மற்றவர்களும் ஆமா சீனியர்.. நீங்களும், ஹர்ஷினியும் பேரா ஆடினா நல்லா இருக்கும்ன்னு தானே எல்லாரும் ஆசைப்பட்டு கேட்கிறோம்.. நீங்க பைனல் இயர் வேற.. இது தான் கடைசி வாய்ப்பு.. என்று ஜூனியர்ஸும் விடாமல் சொன்னனர்.

எல்லாம் சரிடா.. போய் கேட்கலாம்தான்.. ஆனா நீங்க தா கேட்கிறீங்க.. அந்த “மேடம்க்கு ஓகேவா..?ன்னு எனக்கு எப்படி தெரியும்..?” என்று மனதுக்குள் சிரித்துகொன்டே வெளியில் சாதரணமாக கேட்டான் ஜெய்.

“ஹர்ஷினிக்கும்.. ஓகே தான் சீனியர்..” என்று ரோஹன் சொல்லவும்,

அதெப்படி உங்ககிட்ட சொன்னா ஆச்சா..? என்கூட டான்ஸ் ஆட என்கிட்டே தானே சொல்லணும்.. உங்க பேச்சை நம்பி நான் பெர்மிஷின் கேட்டுட்டு அப்பறம் அவ முடியாதுன்னு சொல்லிட்டா..?

ஆமா மச்சி.. நீ சொல்றதும் கரெக்ட்.. அந்த அம்மிணியே வந்து நேரா சொல்லட்டும்.. அப்பறம் கேட்கலாம் என்று செல்வமும் சொல்ல,

சரி சீனியர்.. ஹர்ஷினியே வந்து உங்களக்கு நேர்ல ஓகே சொல்லுவா.. நாங்க போய் அவளை கூட்டிட்டு வரோம்.. என்று ஜோதியும், ரோஹனும் சென்றவர்கள் கையோடு ஹர்ஷினியையும் அழைத்து வந்தனர்.

“என்ன எதுக்கு இங்க கூட்டிட்டு வரீங்க ..?” என்று ஹர்ஷினி, ஜோதியிடமும், ரோஹனிடமும் கேட்டு கொன்டே வந்தவள், ஜெய் இருக்குமிடம் வந்ததும்,

ஜோதி.. ஹர்ஷி நீ ஜெய் சீனியர்ட்ட நேராவே ஓகே சொல்லிடு.. எனவும், அதிர்ந்தவள், எதுக்கு ஓகே சொல்லணும்..? என்று குறும்பு சிரிப்புடன் தன்னை பார்த்து கொண்டிருக்கும் ஜெயயை சந்தேகத்துடன் பார்த்த படி கேட்கவும்,

என்னங்கடா.. எதுக்கு ஓகே சொல்லணும்..?ன்னு கேக்குறா உங்க ப்ரண்ட்.. என்று ஜெய் கொஞ்சம் கோவம் போல் ஜூனியர்ஸிடம் கேட்க,

ஹர்ஷி.. என்ன மறந்துட்டியா..? “நீ ஜெய் சீனியர் கூட சேர்ந்து டான்ஸ் ஆட கிளாஸ்ல ஓகே சொன்ன இல்லை.. அதை தான் இப்போ காண்பேர்மேஷனுக்காக ஜெய் சார் முன்னாடியும் நேராவே நீயே ஓகே சொல்லிடு, என்று ஜோதி சொல்லவும்,

ஜெயின் குறும்பை புரிந்து கொண்ட ஹர்ஷினி, பல்லை கடித்தபடி அவனை கண்களால் முறைக்கவும், மற்றவர்கள் கவனிக்கா படி நொடியில் அவளை பார்த்து கண் அடித்து விட்டான். அய்யோ.. எங்க வச்சி என்ன பன்றாரு..?

ஓகே சொல்லு ஹர்ஷினி, சீக்கிரம் என்று மற்றவர்களும் சொல்லவும், வேறு வழி இல்லாமல், “எனக்கு ஓகே..” என்று கடுப்பாக சொல்லவும்,

எதுக்கு..? ஓகே சொல்ற ஹர்ஷினி..? என்ற ஜெய் யாரும் கவனிக்கா வண்ணம் இதுக்கா..? என்பது போல் சட்டென அவளை பார்த்து லேசாக உதட்டை குவித்து உல்லாசமாக காட்டவும்,

அவனின் செயலில் அதிர்ந்தவள், யாராவது பாத்துட்டாங்களா..? என்று மற்றவர்களை அவசரமாக பார்க்கவும், யாரும் கவனிக்கவில்லை என்று கண்டு கொண்ட பிறகே கொஞ்சம் ஆசுவாசமானவள், எல்லோரும் இருக்கும்போது என்ன வேலை பாக்குறாரு.. இவரை.. என்று மனதுக்குள் கடிந்து கொண்டாள்.

“உன்னை இன்று விட்டேனா பார்..” என்று உறுதி கொண்டவன் போல், அமைதியா இருந்தா எப்படி..? எதுக்கு ஓகே சொன்ன ஹர்ஷினி..? என்று மறுபடியும் லேசான சிரிப்புடன் கேட்கவும்,

மற்றவர்களும் அவனின் குறும்பான விளையாட்டை புரிந்து கொண்டு, ஆமா எதுக்கு ஓகே சொன்ன..? என்று சிரிப்பாக கோரஸாக கேட்கவும், மனதுக்குள் நொந்தவள்,

“எனக்கும் உங்க கூட சேர்ந்து டான்ஸ் ஆட சம்மதம்..” என்று சொல்லவும்,

எனக்குமா..? நான் இன்னும் டான்ஸ் ஆட ஓகே சொல்லலையே..? என்னங்கடா நான் ஓகே சொன்னேனா..? என்று ஜெய் கேட்கவும்,

“இதுக்கு மேல முடியாது..” என்று கொதித்தெழுந்த ஹர்ஷினி, ரொம்ப நல்லதா போச்சி.. ஓகேவே சொல்லாதீங்க.. என்று பொரிந்து விட்டு அங்கிருந்து கிளம்பியும் விட்டாள்.

ரொம்பத்தான் பண்றாரு.. என் கூட சேர்ந்து டான்ஸ் ஆட இன்னும் ஓகேன்னு சொல்லலியாமே..? சாருக்கு ஓகே வேற சொல்லனுமா..? ஓவர் சேட்டை.. எல்லாரும் இருக்கும் போதே கண் அடிக்கிரதென்ன..?

அப்பறம்.. என்று அவன் உதட்டை குவித்ததை நினைத்தவுடனே சட்டென காதுவரை சிவந்துவிட்டது ஹர்ஷினிக்கு.. அந்த சிவப்பு ஜெய் மீதுள்ள கோவத்திலா..? வெட்கத்திலா..? என்று அவளுக்கே தெரியவில்லை..

என்ன ஹர்ஷி இது..? ஜெய் சீனியர் சும்மா உன்னை டீஸ் பண்ணதுக்கு போய் கோவப்பட்டுட்டு வந்துட்ட.. நல்ல வேளை அவர் எதுவும் நினைச்சுக்கல.. சிரிச்சிட்டு தான் இருந்தாரு.. என்று சிறிது நேரம் கழித்து வந்தவர்களில் செல்வி சொல்லவும்,

ஏன் சிரிக்கமாட்டாரு துரை..? என்று மனதுக்குள் ஜெயயை தாளித்தவாரே கடுகடு முகத்துடன் அமர்ந்திருந்த ஹர்ஷியை கண்ட ஜோதி, சரி விடு செல்வி.. என்றவள், ஹர்ஷினியிடம்,

ஹர்ஷி.. ஜெய் சார் ப்ரின்சிகிட்ட பேசிட்டார்.. முதல்ல ஒத்துக்குவே இல்லை.. அப்பறம் இவங்க எல்லாம் பைனல் இயர் சார்.. கன்சிடர் பண்ணுங்கன்னு ரெக்வஸ்ட் பண்ணவே ஒத்துக்கிட்டார். ஆனா கொஞ்சம் கண்டிஷன்ஸ் இருக்கு,

என்ன கண்டிஷன்ஸ்..? என்று ஹர்ஷினி யோசனையாக கேட்கவும், அது.. நீங்க ரெண்டு பேறும் டான்ஸ் ஆடும் போது குறைஞ்சது 5 அடியாவது கேப் இருக்கணும்.. அப்பறம் பாட்டு நல்ல பாட்டா இருக்கணும்.. டிரஸ்.. இது போல சொல்லிருக்கார்.. ஜெய் சாரே உன்கிட்ட சொல்லுவார்.. என்று ஜோதி முடிக்கவும்,

ரோஹன்.. ஹர்ஷி இதை பத்தி டிஸ்கஸ் பண்ண சீனியர் உன்னை ஈவினிங் ஸ்டேடியத்துக்கிட்ட வர சொல்லிருக்கார் எனவும், ஓகே என்று விட்டவள், உற்சாகமான மனநிலையுடன் “என்ன பாட்டுக்கு ஆடலாம்..?” என்று யோசித்தவள், ஆமா.. நான் யோசிச்சா மட்டும்.. அதெல்லம் இந்நேரத்துக்குள்ள அவரே கண்டிப்பா பாட்டு சூஸ் பண்ணிருப்பார்..

மாலை காலேஜ் முடியவும், ப்ரண்ட்ஸ் எல்லாம் நாங்களும் வரோம்.. என சொல்லவே, அவர்களுடனும் ஸ்டேடியம் சென்ற ஹர்ஷினி, அங்கு ஜெய் தன் நண்பர்கள் புடை சூழ ஏதோ சொல்லி தலையை ஒரு பக்கமாக கோதி கொண்டே சிரித்துக்கொண்டிருந்தவனின் அழகில் தன்னையே மறந்து அவனை ரசித்து பார்த்தவள்,

ஏய் ஹர்ஷி.. என்ன இங்கேயே நின்னுட்ட.. வா போலாம் என்று செல்வி தன் தோள் தொட்டு அழைக்கவும், அச்சோ.. இப்படியா அவரை பாத்துவைப்பேன்.. வர வர எனக்கு முத்திப்போச்சு.. என்று மனதுள் தன்னையே திட்டி கொண்டவள், ஜெய் இருக்குமிடம் நெருங்கவும்,

அவன் ஹர்ஷினியை கண்டு கொண்டதாகவே காட்டி கொள்ளாமல் தன் நண்பர்களிடம் சிரித்து பேசி கொண்டிருந்தான்.. ரோஹன் இரண்டு முறை கூப்பிட்டும், காது கேட்காதவன் போல் இருக்கவும்,

கடுப்பான ஹர்ஷினி, இதோ ஆரம்பிச்சுட்டாரு .. இவர் மட்டும் அடங்கவே மாட்டாரு.. இப்போ நானே கூப்பிடனும் இவரை.. அதானே... என்று பல்லை கடித்தவள்

"சீனியர்..?" என்று கூப்பிட்டும் , அவன் திரும்பாமல் இருக்கவும், "ஜெய் சீனியர்..?" என்று கொஞ்சம் சத்தமாக கூப்பிட்டாள். முதல் முறையாக தன் பெயரை அவள் சொல்ல கேட்கவும் உச்சி முதல் பாதம் வரை சில்லென இருந்தது ஜெய்க்கு,

தன் சில்லிப்பை வெளிக்காட்டாமல் அவள் புறம் திரும்பியவன், என்ன ஹர்ஷினி கூப்பிட்டிங்களா..? என்ன விஷயம்..? என்று கேட்கவும், இவர் ஒரு முடிவோடுதான் இருக்கார்.. இந்த டான்ஸ் பிராக்டிஸ் முடியறதுக்குள்ள என்னை ஒருவழியாக்க போறார்..! என்று புரிந்து விட்டது ஹர்ஷினிக்கு,

அதனாலே அவன் கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் கோவத்தில் எங்கோ பார்த்தபடி நிற்கவும், அவளின் கோவத்தை புரிந்து கொண்ட ஜெய், இதுக்கு அப்பறம் கடுப்பேத்தினா.. அவ்வளவுதான்.. என்று உஷாரானவன்,

ஓஹ்.. நான் தான் டான்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ண வரச்சொன்னேன்.. இதுல ஒரு 5 பாட்டு இருக்கு.. உங்களுக்கு எது ஓகேவா இருக்கும்ன்னு சொல்லுங்க.. என்று ஒரு லிஸ்டை கொடுக்கவும்,

வாங்கி பார்த்தவளுக்கு முதலில் அதிர்ச்சியே.. என்ன இது.. இது எல்லாமே பியூஷன் சாங்ஸ் மாதிரி இருக்கு..? இதுக்கு எப்படி..?

ஆமா.. பியூஷன் சாங்ஸ் தான்.. பட் இதுக்கு நீ பரதநாட்டியம் ஆடணும்..,

ஆனா நீங்க.. உங்களுக்கு.. என்று தயக்கமாக இழுக்கவும், புரிந்து கொண்டவன்.. எனக்கு பரதநாட்டியம் தெரியாது.. என்று சிரித்தபடி சொல்லவும்.

அப்பறம் எப்படி..? என்று புரியாமல் கேட்கவும், மற்றவர்களும் என்ன சொல்லவருகிறான்..? என்று குழப்பமாக பார்த்தனர்.

இதுல நீ செலெக்ட் பண்ற பாட்டுக்கு ஒரு பக்கம் நீ பரதநாட்டியம் ஆடு.. அதே பாட்டுக்கு இன்னொரு பக்கம் நான் வெஸ்டர்ன் ஆடுறேன்..

என்னது..? எப்படி..? இது கரெக்ட்டா வருமா..? என்று யோசனையாக ஹர்ஷினி கேட்கவும், ஆமாடா மச்சி.. இது நல்லா இருக்குமா..? ரெண்டு பெரும் வேற வேற ஸ்டைல் ஆப் டான்ஸ்.. சரியா வருமா..? என்று குமாரும் கேட்டான்.

கண்டிப்பா இது நல்லா இருக்கும்.. என் மேல நம்பிக்கை வைங்க.. என்றவன், நீ உனக்கு ஓகேவான பாட்டு சொல்லு என்று ஹர்ஷினியிடம் கேட்கவும், சிறிது யோசித்தவள் அதில் இருக்கும் ஐஸ்வர்யா ராய், அனில் கபூர் நடித்த “தாளம்..” படத்தில் உள்ள “எங்கே என் புன்னைகை..” இந்தி வெர்ஷன் பாடலை சொல்லவும்,

மெச்சியவன், எனக்கும் அதுதான் ஓகேவா இருந்துச்சு.. என்ன பண்ற நீ.. இன்னைக்கு நைட்டே உன்னால முடிஞ்ச வரை இந்த பாட்டுக்கு ஸ்டெப்ஸ் யோசிச்சிட்டு வா, நாளையிலிருந்து பிராக்டிஸ் ஆரம்பிச்சுரலாம்.. என்று முடித்துவிடவும், எல்லாரும் இது சரிவருமா..? என்ற மனநிலையிலே சென்றனர்.. ஹர்ஷினி உட்பட..

ஆனால் மறுநாள் அந்த பாடலுக்கு ஹர்ஷினி ஒரு புறம் பரதநாட்டியம் ஆடினாள்.. என்றால் மறுபுறம் ஜெய் அதே பாடலுக்கு வெஸ்டர்ன் ஆடவும், எல்லாரும் மெய்மறந்து நின்றுவிட்டனர். பாடல் முடியவும் கைதட்டலால் ஸ்டேடியமே அதிர்ந்தது..

மச்சி சான்ஸே இல்ல.. நீ சொன்னப்ப நாங்க யாருமே நம்பல.. பட் நீ தான் கரெக்ட் மச்சி.. இந்த ஐடியா சேன்ஸல்ஸ்.. ப்ரின்சி சொன்ன கண்டிஷன்ஸும் இதுல அடங்கிருச்சி.. சூப்பர் சீனியர்.. ஹர்ஷி நீயும் கலக்கிட்ட.. என்று அனைவரும் சொல்லவும்,

சிரிப்புடன் ஏற்றுக்கொண்டவன், என்ன இவ ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா..? என்று ஹர்ஷினியை பார்த்தால், அவள் ஓகே நான் கிளம்புறேன்.. நாளைக்கு பார்க்கலாம்.. என்று ஒன்றும் சொல்லமால், கிளம்பி சென்றுவிட்டாள்.

இரவு 10 மணி.. ஹர்ஷினியின் மொபைல் ஒலிக்கவும், யாரு என்று பார்த்தவள், ஜெயின் நம்பர் வரவும், ஆச்சரியமே.. இருவர் நம்பரும் இருவருக்குமே தெரியும் என்றாலும் இதுவரை இருவருமே போனில் பேசிக்கொண்டதில்ல.. அதோடு காலேஜிலும் மொபைல் அல்லோவ் கிடையாது..

என்ன.. இந்த நேரத்துக்கு கால் பன்றாரு..? அதிசயமா இருக்கு.. என்னவா இருக்கும்..? என்று கொஞ்சம் இனிமை கலந்த படபடப்புடன் அட்டென்ட் செய்தவள்,

ஹா.. ஹலோ.. எனவும், ஏன் என் நம்பர் தெரியாதா உனக்கு..? என்று சுள்ளென பேசினான் ஜெய்.. ஏன் இப்படி பேசுறாரு..?

தெரியும்.. சொல்லுங்க..

ஏன் எதுவும் சொல்லாம கிளம்பிட்ட..?

என்ன சொல்லணும்..? புரியாமல் கேட்கவும்,

வேண்டாம் ஹர்ஷினி.. என்னை இன்னும் கோவப்படுத்தாதா..?

என்ன ஆச்சு..? ஏன் கோவப்படுறீங்க..? என்று குழப்பமாக கேட்க,

என்ன ஆச்சா..? ஏய்.. என்னடி தெரியாத மாதிரியே கேக்குற.. நேர்ல வந்தேன் தொலைஞ்சே பாத்துக்கோ..

ஏன் இவ்வளவு கோவப்படுறாரு..? என்ன கேக்குறாருன்னு வேற புரியலையே..? ப்ளீஸ்.. கோவப்படமா நீங்களே சொல்லுங்க..?

டான்ஸ் பிராக்டிஸ் பத்தி கேக்குறேன்.. எப்படி இருந்துச்சு..? என்று பொறியவும்,

ஸ்ஸ் சாரி.. சாரி சூப்பரா இருந்துச்சி.. நான் ஆடும்போதும் உங்களை பாத்தேன்.. செமயா ஆடுனீங்க.. இந்த ஐடியா ஒர்கவுட் ஆகும், என்று சந்தோஷமாக சொன்னாள்..

லைனிலே கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன், சாரி.. அதிகமா கோவப்பட்டுட்டேன்.. என் ஐடியாவை பத்தி நீ ஒன்னும் சொல்லாம போகவும் உனக்கு பிடிக்கலையோன்னு டென்ஸனாயிட்டேன்.. என்றவன்,

என்ன பிரச்சனை ஹர்ஷ்..? என்று கொஞ்சம் அமைதியான குரலில் கேட்கவும், அதிர்ந்தவள்.. அது ஒன்னும்.. ஒன்னும் இல்லை... என்று திணறவும்,

என்கிட்ட சொல்ல கூடாததா..? என்று ஆறுதலாகாவே கேட்டான்.

அப்படி எல்லாம் இல்ல..? என்று சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், அத்தை.. கொஞ்சம் பிரச்சனை.. என்று கலங்கிய குரலில் சொன்னவளின் துயரத்தை புரிந்து கொண்டவன்..

ஹர்ஷ்.. வருத்தப்படாதே.. எந்த பிரச்சனையா இருந்தாலும்.. எல்லாம் சரியாகிரும்.. கவலை படாதே..

ம்ம் எனக்கும் அந்த வேண்டுதல் தான்.. எல்லாம் நல்லபடியா நடக்கணும்.. அத்தை.. இதுவரை நிறைய கஷ்டப்பட்டுட்டாங்க.. இனியாவது அவங்க சந்தோஷமா இருக்கணும்..

கண்டிப்பா.. சந்தோஷமா இருப்பாங்க.. நீ வருத்தப்படாதே.. சரியா..?

ம்ம் சரி.. என்று வைத்து விட்டவளின் கவலை முழுவதும் சுபத்ராவை பற்றியதே..

நேற்று இரவு சென்னையில் இருந்து திடீரென டென்ஷனாக வந்த சுபத்ரா.. நேராக ஆச்சார்யாவிடம் சென்று அவரின் ரூமில் தனியாக பேசினார்.. சிறிது நேரத்திலே இருவரும் வாக்குவாதம் செய்யும் சத்தம் கேட்டது..

பின்னர் அமைதியாக நீண்ட நேரம் உள்ளே பேசிவிட்டு, வெளியே வந்த இருவரின் முகங்களும் சொல்லும் படி இல்லை.. ஏதோ பிரச்சனை என்ற வரை தெரிந்தது..ஆனால் என்ன..? என்பது தெரியாமலே வீட்டில் உள்ள அனைவரும் கவலையோடு இருந்தனர்.. யாரிடமிமும் எதுவும் சொல்லாமல் சுபத்ராவும் மறுநாளே சென்னை கிளம்பிவிட்டார்..

ஒரு வாரமாகியும் என்ன பிரச்சனை..? என்றே யாருக்கும் தெரியவில்லை, இந்திரன், சந்திரன் உட்பட.. ஆச்சார்யா மிகவும் அமைதியாகவே.. எந்நேரமும் ஏதோ யோசனையுடனே இருந்தார்.

ஹர்ஷினிக்கும் கவலை இருந்தாலும், டான்ஸ் பிராக்டிஸில் எந்த தடங்கலும் இல்லாமல் பார்த்து கொண்டாள். ஜெயும் அவளின் நிலை புரிந்து எதுவும் சீண்டவில்லை.. உடை முதல் அனைத்தையும் அவனே பார்த்துக்கொண்டான்..

தாத்தா.. இன்னிக்கு தான் பங்க்ஷன்.. நான் டான்ஸ் ஆடுறேன்னு சொன்னேனே.. பாக்க நீங்களும் வரீங்களா..? ப்ளீஸ்.. அவரின் மனநிலைக்கு கொஞ்சம் மாறுதலாக இருக்கட்டும் என்று ஹர்ஷினி கெஞ்சலாக அழைக்கவும், ஆச்சார்யாவும் அவரின் செல்ல பேத்தி விருப்பத்தை ஏற்று பங்க்ஷணக்கு சென்றார்..

ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை.. அந்த ஒரு நாள் தான் அவர்களின் வாழ்க்கையிலே என்றும் மறக்கமுடியா கருப்பு நாள், எல்லோரின் வாழ்க்கையும் திசை மாறப்போகும் நாள்..! என்று, இனி என்ன..?


..........................................................................

ஹாய் மக்களே

அடுத்த பதிவோடு வந்துட்டேன்.. படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ப்ரண்டஸ்.. thank you
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 19



"காளிதாஸ்.." அவன் பேரை சொல்லும் போதே ஆச்சார்யாவிற்கு அவ்வளவு ரௌத்திரம்..!

அவன் இங்க பன்றான்.? என்று காலேஜ் பங்க்ஷன் ஆரம்பிக்கும் இடத்தில் தூரத்தில் அமர்ந்துஇருந்த மனிதரை பார்த்து ஆத்திரத்துடன் கேட்க,

அவரை ஏன் தாத்தா இவ்வளவு கோவமா பாக்குறாரு..? என்னவாக இருக்கும்..? என்று அவரை பார்த்துகொன்டே

யாரை தாத்தா சொல்றீங்க..? அவரையா..? என்று தங்களையே பார்த்து கொண்டிருந்த மனிதரை கைகட்டி ஹர்ஷினி புரியாமல் கேட்கவும், அவனுக்கு மரியாதை ஒண்ணுதான் குறைச்சல்.. ராஸ்கல்.. என்று பல்லை கடித்து வார்த்தைகளை துப்பினார்.

ஹர்ஷி.. “இன்னும் கொஞ்ச நேரத்துல உங்களோட டான்ஸ் ஸ்டார்ட் ஆகப்போகுது.. நீ இன்னும் ரேடியே ஆகலை பாரு,” சீக்கிரம் வா போலாம் என்றபடி ஜோதி வரவும்,

ஹர்ஷினி பதில் ஏதும் சொல்லாமல் தாத்தா சொன்ன காளிதாஸ் என்ற மனிதரையே பார்த்துக்கொண்டிருந்தாள். இவர்.. இவர் தான் சுபத்ரா அத்தை.. என்று யோசனையாக பார்த்துக்கொண்டிருக்கவும்,

ஜோதி கேட்டதுக்கு பதில் சொல்லாத பேத்தியின் கவனம் அவனிடம் இருப்பதை புரிந்து, தன்னை சுதாரித்து கொண்ட ஆச்சார்யா, நீ போ ஹர்ஷினி.. என்று சொல்ல,

தாத்தா, அவர்.. “அவர் தானே சுபத்ரா அத்தை..?” என்று குழப்பமாக இழுக்கவும், ஹர்ஷினி.. நீ கிளம்புன்னு சொன்னேன்.. கட்டளையாக ஆச்சார்யா சொல்ல, மீறமுடியாமல் சரி தாத்தா.. என்றவள் யோசனையுடனே ஜோதியுடன் சென்றாள்.

குழப்பமான முகத்துடன் உள்ளே வந்த ஹர்ஷினியை கண்ட ஜெய் அவளை நெருங்கி, என்ன ஆச்சு..? என்று கேட்கவும், அவனை பார்த்தவள்,

எனக்கும் தெரியல..? புரியல..? என்று அதே குழப்பத்துடன் சொன்னாள். அவளின் பதிலில் என்ன சொல்றா இவ..? என்பது போல் பார்த்தவன்,

என்ன உனக்கு தெரியல..? புரியல..?..

அது வெளியே ஒருத்தரை பாத்ததும் தாத்தாக்கு அவ்வளவு கோவம்.. அவர் பேர் காளிதாஸ்.. இந்த பேரை நிறைய டைம் எங்க வீட்ல சொல்ல.. ம்ஹூம் நிறைய திட்ட கேட்டிருக்கேன்..

“இவருக்கும் எங்க அத்தைக்கு நடந்த பிரச்சனைக்கும்..? எதாவது சம்மந்தம் இருக்குமோன்னு தோணுது..” என்று யோசனையாக ஹர்ஷினி சொல்ல கேட்ட ஜெய், ஓஹ்.. இப்போ... என்று பேச ஆரம்பிக்கும் போது,

ஜெய், ஹர்ஷி.. இன்னும் கிளம்பாம என்ன பேசிட்டு இருக்கீங்க..? டைம் ஆச்சு..? சீக்கிரம் என்று செல்வம், குமார் வர,

ஒரு 2 மினிட்ஸ்டா என்று அவர்களை அனுப்பிவிட்டவன், ஹர்ஷ்.. நாம இதைப்பத்தி அப்பறம் பேசலாம்.. இப்போ போய் கிளம்பு.. எதா இருந்தாலும் பாத்துக்கலாம் சரியா..? என்று ஆறுதலுடன் சொல்லவும்,

சரி.. என்று தலையாட்டிவிட்டு ரூமிற்குள் வந்து தயாராக ஆரம்பித்தவளின் எண்ணம் முழுவதும் அந்த காளிதாஸயே தான் சுற்றி வந்தது. அவர் தங்களை பார்த்த பார்வை.. அதில் இருக்கும் பொருள்.. ஒன்றும் சொல்லி கொள்ளும்படியாகவே தோன்றவில்லை.

அவரை பார்த்ததிலிருந்து ஏதோ தவறாக நடக்க போகிறது..? என்று மட்டும் உள்ளுணர்வு உந்தி கொண்டேயிருந்தது, என்னவாக இருக்கும்..? என்று யோசித்து கொண்டிருந்தவளிடம் வந்த செல்வி,

வாவ் ஹர்ஷி.. ரொம்ப அழகா இருக்க.. அதுவும் இந்த ட்ரெஸ் உனக்கு செமயா இருக்கு..

ஆமா இந்த குங்கும கலர் பரதநாட்டிய சாரீ உனக்கு ரொம்ப சூப்பரா இருக்கு ஹர்ஷி.. என்று ஜோதியும் சொல்ல, தன் சிந்தனையிலிருந்து வெளி வந்த ஹர்ஷினி, அவர்கள் சொல்லவும்தான் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தவள், பார்த்த படியே நின்றாள்.

இந்த கலரை உனக்காக ரொம்ப தேடி பிடிச்சி வாங்கிருக்கேன் என்று ஜெய் உற்சாகமாக சொல்ல, அப்படி என்ன கலர்..? என்று அவன் கொடுத்த பாக்ஸை தன் கையில் வாங்கி பிரித்து பார்த்தவள்,

குங்கும பூ கலர்..? ரொம்ப நல்ல கலர்தான்.. ஆனா அப்படி தேடி பிடிச்சு வாங்கும் அளவுக்கு என்ன ஸ்பெஷல் இருக்கு இந்த கலர்ல..?

என்ன இப்படி கேட்டுட்ட..? என்ன ஸ்பெஷலா..? உன்னோட மாமனுக்கு ரொம்ப பிடிச்ச கலர்.. அதுவும் நீ இந்த புடவையை கட்டுனா பாக்க அப்படி இருப்ப.. அப்படியே அள்ளும் போ என்று குதூகலத்துடன் அன்று ஜெய் சொன்னதை நினைத்து பார்த்தவளின் முகம் அன்று போல் இன்றும் தானாகவே வெட்கத்தில் சிவந்து விட்டது.

ம்ம்.. அவர் சொன்னது கரெக்ட்தான், இந்த கலர் உண்மையிலே எனக்கு ரொம்ப நல்லா இருக்கு.. அன்னிக்கு சொல்லும் போதே அவ்வளவு எக்ஸய்ட் ஆனவர், இப்போ நேரிலே பார்க்கும் பொழுது என்ன சொல்லுவார்.. என்று நினைத்தவுடனே ஹர்ஷினிக்கு எதிர்பார்ப்பு, வெட்கம் கலந்த இனிமையான படபடப்பு உண்டானது.

அவளின் எதிர்பார்ப்பை வீணாக்காத ஜெய், அவளுக்கு மேட்ச்சாக குங்கும கலர் ஷர்ட், சந்தன கலர் பாண்ட் போட்டு வெஸ்டர்ன் ஸ்டைலில் தயாராகி இருந்தவன், நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தயாராகி வெளியே வந்த ஹர்ஷினியை கண்டதும் அவளின் ஆளை அசரடிக்கும் அழகில், உறைந்து சிலை போலே நின்றுவிட்டான்.

அவனையே பார்க்காமல் பார்த்து கொண்டிருந்த ஹர்ஷினிக்கு அவனின் ஆளை முழுங்கும் பார்வையில் இதயம் தாளம் தப்பியது.. உச்சி முதல் பாதம் வரை வெட்கத்தில் செங்கொழுந்தாகவே மாறிவிட்டாள்.

அய்யோ.. எல்லாரும் இருக்கிற இடத்தில இப்படியா பாத்து வைப்பாரு..? கண்ணை கூட சிமிட்ட மாட்டேங்கறாரே..? யாராவது பாத்துட்டா..? என்ற பயம் வந்தவுடன் தன் கண்களாலே அவனை திரும்பும் படி மிரட்டியவளை,

அவன் கண்டு கொண்டால் தானே.. யார் இருந்தா எனக்கென்ன..? நான் இப்படி தான் பார்ப்பேன்..! என்று சட்டமாகவே அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்து கொண்டிருந்தான். அவனின் அடாவடியில் இவளுக்கு தான் வேர்த்து கொட்டி கொண்டிருந்தது.

“அடுத்து உங்க டான்ஸ் தான்..” என்று குமார் சொல்லவும், இருவரும் மேடையின் பின்புறம் வந்து நின்றனர்.. எதோ சொல்வது போல் அவளை நெருங்கியவன்,

“செமயா இருக்கடி.. நான் நினைச்சு பார்த்ததை விட இன்னும் இன்னும் அழகா இருக்க..” என்று கிறங்கிய குரலில் கிசு கிசுப்பாக சொல்லவும், வெட்கத்தில் சிவந்து நின்ற ஹர்ஷினி, இன்னும் அழகாகவே தோன்றினாள் ஜெய்க்கு,

“இப்படி வெட்கப்படாதேடி..” என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியல.. இப்போ கூட பாரு என் கை என் பேச்சை கேட்காம உன்னை தொடவே வருது.., என்று தன்னை தொடுவது போல் வந்த அவனின் கையை கண்டவள், வேகமாக அவனை விட்டு இரண்டடி தள்ளியே நின்றாள்.

எதுக்குடி தள்ளி போற..? என்று அதட்டியவன், அவளை மறுபடியும் நெருங்கும் போது, மேடையில் இவர்கள் பேர் சொல்லவும், ச்சே.. உன்னை அப்பறம் கவனிச்சுக்கறேன்டி.., என்று மிரட்டிவிட்டு முன்னால் செல்லவும், சிரிப்புடன் அவனை பின்தொடர்ந்தவள்,

அதே மனநிலையில் தன் குழப்பத்தை எல்லாம் மறந்து மிகவும் சிறப்பாகவே ஆடினாள்.. அவளுக்கு ஈகுவலாகவே ஜெயும் மிக சிறப்பாக ஆடினான்.. இருவரில் யார் நடனத்தை பார்ப்பது என்று எல்லோரும் தவிக்கும் அளவுக்கு இருந்தது அவர்களின் டான்ஸ்.

ஜெயும், ஹர்ஷினியும் ஆடிக்கொன்டே மற்றவரின் நடனத்தை ரசித்து பார்த்தனர்... இவர்கள் டான்ஸ் முடியவும் கைதட்டல் வானை பிளந்தது என்றே சொல்லலாம். இருவரும் எல்லோரையும் பார்த்து தலை குனிந்து நன்றி சொல்லும் போதும் தான் தன் தாத்தாவை பார்த்த ஹர்ஷினி..

அச்சோ.. இவரை எப்படி மறந்தேன்..? என்று அவரை பார்த்தவள், அவரின் கோவ பார்வையில் என்ன என்றே தெரியாமல் ஒரு நிமிடம் நின்று விட்டவள், பின் வேகமாக கீழ் இறங்கி நேராக அவரிடம் செல்லும் போது தான் கவனித்தாள்,

அந்த காளிதாஸ் தாத்தாவிடம் ஏதோ சொல்வதும், அதற்கு ஆச்சார்யாவின் முகத்தில் தோன்றும் கட்டுங்கடங்கா கோவத்தையும் அவதானித்து கொண்டே அவர்களை நெருங்கியவள்,

தாத்தா.. என்ன ஆச்சு..? என்று பதட்டத்துடன் கேட்கும் போதே, அவளின் கையை இறுக்கமாக பற்றியவர், அந்த காளிதாஸை நெருப்பாக பொசுக்கும் பார்வை பார்த்து,

இதுக்கு அப்பறம் ஒரு வார்த்தை பேசின, “உன்னை ஆளே அடையாளம் தெரியாத படி மாத்திருவேன்.. என்னை நீ ஒன்னும்.. என்று தன் தலை முடியை காட்டி சொன்னவர்.."

அவரின் கர்ஜனையில் அரண்டு போய் நின்று இருந்த காளிதாஸயே பார்த்து கொண்டிருந்த ஹர்ஷினியை,
வா போலாம்.. என்று இழுத்து கொண்டு அங்கிருந்து உடனடியாக கிளம்பியும் விட்டார்.

அவர்களையே பார்த்து கொண்டிருந்த ஜெய்க்கு, ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. மனமும் சொல்ல முடியாத, எதோ விரும்பத்தகாதது நடக்க போகும் தவிப்பில் செல்லும் அவர்களையே பார்த்து கொண்டிருந்தான்.

காரில் ஆச்சார்யாவுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த, ஹர்ஷினியோ மிகவும் பதட்டத்தில் இருந்தாள். தாத்தாவின் முகம்.. அதில் இருக்கும் கடுமை, ஆத்திரம். கோவம் எல்லாம் மிகுந்த பயத்தையே கொடுத்தது.

என்ன என்று எதுவும் கேட்கவும்..? ஆச்சார்யாவின் இறுகிய முகம் அனுமதிக்க வில்லை.. என்ன ஆச்சி..? ஏன் இப்படி இருக்கார்..? இதுக்கு கண்டிப்பா அந்த காளிதாஸ் தான் காரணம்.. அவர் தான் எதோ சொல்லிட்டு இருந்தார்.

ஆனா இவர் இவ்வளவு கோவப்பட்டு அவரை மிரட்டுற அளவுக்கு அப்படி என்ன சொன்னாருன்னு தெரியலையே..? என்ற யோசனையுடனே வந்தவள், வீடு வரவும் இறங்கி நின்ற இவளின் கையை பிடித்த ஆச்சார்யா வேகமாக உள்ளே வந்தவர்,

நடு ஹாலில் மாட்டப்பட்டு இருந்த “தேவியின்..” படத்தின் முன் நின்று, நான் என்ன சொன்னாலும் கேட்பியா..? என்று பதட்டத்துடன் வேர்த்து கொண்டிருந்த தன் நெற்றியை துடைத்து கொன்டே கேட்கவும்,

அவரின் தோற்றத்தில், பதட்டத்தில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொண்டவள், என்ன ஆச்சு தாத்தா..? ஏன் இப்படி வேர்க்குது.. என்று பேசிக்கொண்டே, தன் கையை பிடித்திருந்த அவர் கையை நடுக்கத்தையும் கண்டு கொண்டவள்.

அம்மா.. அப்பா.. யாராவது வாங்க என்று சத்தமாக அழுகையுடன் கத்தவும், என்ன..? என்ன ஆச்சு..? ஏன் இப்படி கத்துற..? என்று கேள்வி கேட்ட படி அனைவரும் வேகமாக வந்தவர்கள், ஆச்சார்யாவின் உடல் நிலைய கண்டு,

அப்பா.. என்ன பண்ணுது..? என்று இந்திரனும், சந்திரனும், மாமா.. ஏன் இப்படி வேர்க்குது..? என்று ரேணுகாவும், மாலதியும் பதட்டத்துடன் கேட்டாலும், அவர்களுக்கு எந்த விதமான பதில் சொல்லாத ஆச்சார்யாவின் பார்வை முழுவதும் ஹர்ஷினியிடமே இருந்தது.

ஹர்ஷினி.. முதலில் நான் கேள்வி கேட்டதுக்கு பதில் சொல்லு..?

என்ன பதில் சொல்லணும்.. என்னடி ஆச்சு தாத்தாக்கு..? என்ன பிரச்சனை சொல்லு..? என்று ரேணுகா மகளிடம் கேட்க,

எனக்கும் தெரியலம்மா..? தாத்தா.. என்ன பண்ணுது உங்களுக்கு..? என்று பயத்துடன் கேட்க,

“ஹர்ஷினி.. நான் உன்கிட்ட என்ன கேட்டேன்..? அதுக்கு முதல்ல பதில் சொல்லு..?” என்று வேகமாக கத்தவும், அவரின் கோவத்தில் அதிர்ச்சியடைந்த அனைவரும் அவரையே பார்த்தனர்.

பதில் சொல்லு..? என்று மறுபடியும் கட்டளையாக கர்ஜிக்கவும்,

கேட்பேன்.. கேட்பேன்.. கண்டிப்பா நான் உங்க பேச்சை கேட்பேன்.. என்ன செய்யணும்..? சொல்லுங்க தாத்தா.. அழுகையுடன் கேட்க,

ம்ஹூம்.. “செய்யணும் இல்லை… இனிமேல் எப்பவும் செய்யவே கூடாதுன்னு உன் பாட்டி, உன் முதல் குரு மேல சத்தியம் பண்ணு..” எனவும் உட்ச கட்ட அதிர்ச்சி அடைந்த ஹர்ஷினி..

எதை செய்ய கூடாது..? எதுக்கு பாட்டி மேல சத்தியம் பண்ணனும் என்று வேகமாக துடிக்கும் இதயத்துடன் கேட்க,

“இனிமேல் நீ எப்பவும் டான்ஸ் ஆடமாட்டேன்னு சத்தியம் பண்ணு..” என்று யாரும் கனவிலும் நினைக்காத, எதிர்பார்க்காததை எகின் குரலுடன் சிறிதும் இளகாமல், “நீ இதை செய்தே ஆகவேண்டும்..” என்ற உறுதியுடன் கேட்டார்.

அவர் சொன்னதை கேட்டவுடன் வீட்டில் குண்டூசி போட்டால் கூட கேட்கும் அளவு நிசப்தம். நம்ப முடியாமல் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்து கொண்டனர்.. பேச்சே வரவில்லை யாருக்கும்.. தொண்டையில் அடைத்த உணர்வு..

சத்தியம் பண்ணு ஹர்ஷினி.. என்று “இதுதான் முடிவு..” என்ற தீர்க்கத்துடன் கேட்க, அவர் சொன்னதை கேட்டவுடன் உறைந்து நின்றிருந்த ஹர்ஷினி,

தா.. தாத்தா.. தாத்தா.. நான்.. பேச முடியாமல் திக்கியவாறே அழுகையுடன் நின்றவள், பின் வேகமாக அவரையே கட்டி பிடித்து கொண்டு கதறினாள்..

வேணாம்.. தாத்தா.. என்னால முடியாது.. நீங்க இப்படி கேட்கலாமா..? உங்களக்கு தெரியுமில்ல.. எனக்கு டான்ஸ்ன்னா உயிர்.. எனக்கு டான்ஸ்ல எதாவது சாதிக்கணும் தாத்தா.. டோன்ட் டூ திஸ் டு மீ தாத்தா..

தாத்தா உங்களுக்கே தெரியுமில்ல.. எனக்கு டான்ஸ்ன்னா சின்ன வயசுலே புடிக்கும், அதை கண்டு பிடிச்சு நீங்க தானே பாட்டி கிட்ட சொல்லி 5 வயசுலே என்னை டான்ஸ் ஆட கத்துக்க வச்சீங்க..

“அதுதான் என் லைபிலே நான் பண்ண மிக பெரிய தப்பு..” என்று வெறுப்புடன் சொன்ன ஆச்சார்யாவை விட்டு வேகமாக விலகி நின்ற ஹர்ஷினி, நீங்களா இப்படி சொன்னீங்க..? என்பது போல் நம்பாமல் அவரை பார்த்தாள்.



மாமா ப்ளீஸ்.. அவ ரொம்ப அழகுறா.. வேணாம் மாமா.. என் பொண்ணு தாங்கமாட்டா மாமா.. என்று ரேணுகா கையேந்தி கேட்க,

அப்பா என்னதான்ப்பா ஆச்சு..?, ஹர்ஷினி பாவம்ப்பா. ஏதா இருந்தாலும் பாத்துக்கலாம்.. சொல்லுங்கப்பா என்று சந்திரனும் வற்புறுத்தலுடன் கேட்கவும்,

அந்த காளிதாஸ்.. “என் பேத்தியை சினிமாவில நடிக்க கேட்கிறான்.. இப்படித்தான் என் பொண்ணு வாழ்க்கையை தான் அவன் பாழக்கினான்.. இப்போ அடுத்து என் பேத்தி வாழ்க்கையில விளையாட பாக்குறான்.. இந்த டைம் நான் விட மாட்டேன்.. நான் விட மாட்டேன்.. விட மாட்டேன்..” என்று உணர்ச்சிவசத்தில் கத்தியவர்,

நிற்க முடியாமல் தடுமாறி கீழே விழ பார்க்கவும், வேகமாக அவரை தாங்கி கொண்ட ஹர்ஷினி, சந்திரன், ஹாஸ்பிடல் போலாம் என்று கத்தவும்,

முடியாது.. நான் எங்கேயும் வரமாட்டேன், முதல்ல நீ சத்தியம் பண்ணு.. என்று பக்கத்திலிருக்கும் டேபிளை பிடித்து கொண்டு உறுதியுடன் சொல்லவும், அப்பா வாங்க ஹாஸ்பிடல் போலாம் என்று எல்லோரும் கெஞ்சினாலும் அவர் பார்வை ஹர்ஷினியிடம் தான் இருந்தது.

அவரின் பயம், பரிதவிப்பு புரிந்தது. காளிதாஸ் சொன்னதால் கோவத்தில் நிதானமிழந்து சத்தியம் கேட்கிறார். தான் சத்தியம் செய்யாமல் அவர் கண்டிப்பாகவே ஹாஸ்பிடல் வரமாட்டார் என்ற அவரின் உறுதி புரிந்தது.

இருந்தாலும் கடைசி முயற்சியாக “நான் நடிக்க எல்லாம் போக மாட்டேன்.. என்னை நம்புங்க தாத்தா.. டான்ஸல எனக்குன்னு ஒரு அங்கீகாரம்,அடையாளம் கிடைச்சா போதும்.. அதுக்கு அப்பறம் நானே டான்ஸை விட்டுடுறேன் தாத்தா.. ப்ளீஸ் தாத்தா..”

முடியாது.. நீ சத்தியம் பண்ணு..

வேண்டாம் தாத்தா.. இப்படி கேட்காதீங்க.. ப்ளீஸ்..

அப்போ எனக்காக சத்தியம் பண்ண மாட்ட.. உனக்கு அந்த டான்ஸ் தான் முக்கியம்.. நான் இல்ல அப்படித்தானே.. என்று கலங்கிய குரலில் பரிதவிப்போடு கேட்டவர் நெஞ்சில் சுருக்கென்று அதிகமான வலி தோன்றுவதை அவரின் முகத்தில் இருந்தே அனைவரும் புரிந்து கொண்டனர்.

அவரா..? டான்ஸா..? என்றால் கண்டிப்பாக அவர்தான்.. இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை தான். ஆனால் “டான்ஸை விட வேண்டும் எனும் போது, இதயம் முழுவதும் தோன்றும் அந்த வலி, ஒருவித மரத்த உணர்வு, ஆற்றாமை, ஏதும் செய்ய முடியாத தன்னுடைய இயலாமை..” எல்லாம் சேர்ந்து ஹர்ஷினிக்கு மனதுக்குள் நரக வேதனை..

அவளுடைய வேதனைய புரிந்து கொண்ட ரேணுகா, “வேண்டாம் மாமா.. அவ ரொம்ப அர்ப்பணிப்போடு, ஆசையோடு கத்துக்கிட்டா.. மொத்தமா அவகிட்டிருந்து பிடுங்காதீங்க மாமா” என்று அவரின் கையை பிடித்து கொண்டு மகளுக்காக கதறவும்,

அப்படி எல்லாம் இல்ல மருமகளே.. அவ ஆடட்டும்.. ஆனா மேடையில, சினிமாவுக்கு இப்படி பொதுவுல, ம்ம்ம் என்று மூச்சை இழுத்து விட்டு நெஞ்சு வலியில் தவித்தவாறே, சாதிக்கணும்ன்னு சொல்றா பாரு இந்த மாதிரி எல்லாம் ஆட மாட்டேன்ன்னு சத்தியம் பண்ண சொல்லு.. என்று மூச்சி வாங்கி கொன்டே பேசவும்,

ப்ளீஸ் ஹர்ஷினி.. என்று அனைவரும் அவளை கெஞ்சலுடன் பார்க்கவும், ஆச்சார்யாவையே வெறித்து பார்த்து கொண்டிருந்த ஹர்ஷினி, கல் போன்ற முகத்துடன் தேவியின் படத்தை நெருங்கியவள்,

அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கின் மேல் கை வைத்து “இனி மேல் தாத்தா சொன்ன மாதிரி எங்கேயும் ஆட மாட்டேன்..” என்று அப்படியே எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் மேல் கையை வைக்கவும்,

பதை பதைத்து போன ரேணுகா, ஹர்ஷினி என்ன பண்ற.. உன் கை என்று வேகமாக சென்று அவளின் கையை பிடித்து தூக்கினார். ஒரு வட்டம் முழுவதும் உள்ளங்கை வெந்து போயிருந்தது..

ஆனால் அவளின் முகத்தில் அந்த வலிக்கு உண்டான எந்த அடையாளமும் இல்லாமல் இறுகி போய் நின்று இருந்தவள் ரேணுகாவிடம் இருந்து தன் கையை பிரித்து விட்டு,

நெஞ்சு வலியில் தவித்தவாறே தன்னை பார்த்து கொண்டிருந்த ஆச்சார்யாவை நெருங்கி, அவரின் கையை பற்றி எழுப்பியவாறே, அப்பா கை பிடிங்க போலாம், சித்தப்பா கார் ஸ்டார்ட் பண்ணுங்க என்று வேகமாக செயல் பட்டதில் அடுத்த 10 நிமிடத்தில் ஹாஸ்பிடல் ICU வில் இருந்தார் ஆச்சார்யா.


...........................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போட்டுட்டேன்.. மறக்காம படிச்சுட்டு உங்க கருத்தை ஷேர் பண்ணுங்க மக்களே.. நன்றி
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 20


“ICU..” வில் இருக்கும் ஆச்சயர்யவிற்கு சிகிச்சை முடிந்து “டாக்டர் கணேஷ்” வெளியே வரவும், பதட்டத்துடன் அவரை நெருங்கியவர்கள், அங்கிள் அப்பாக்கு என்ன ஆச்சு..? இப்போ எப்படி இருக்கார்.? மாமாவை நாங்க பாக்கலாமா..? என்று ஒருவர் ஒருவர் மாற்றி கேட்கவும்,

முதல்ல எல்லாரும் பொறுமையா இருங்க. ஆச்சார்யா இப்போ நல்லா இருக்கார்.., ஆனா நீங்க இப்போ அவரை பாக்க முடியாது.. அவர் மயக்கத்துல இருக்கார், நாளைக்கு தான் கண் முழிப்பார்... என்று முடித்தவர்,

இந்திரன், சந்திரன் நீங்க ரெண்டு பேரும் வாங்க. உங்ககிட்ட தனியா பேசணும் என்று சொல்லவும், என்னமோ.. ஏதோ.. என்ற பயத்துடன் என்ன ஆச்சு மாமாக்கு..? நீங்க ஏதா இருந்தாலும் இங்கேயே சொல்லுங்க.. என்று ரேணுகா பயத்துடன் கேட்க, ஆமா எங்களுக்கும் சொல்லுங்க... என்று மாலதியும் சொல்ல,

“பரவாயில்லை அங்கிள்..” எதுவா இருந்தாலும் இங்க எல்லார் முன்னாடியும் சொல்லிடுங்க.. என்று ஓரத்தில் கண்மூடி நின்றிருந்த ஹர்ஷினியை பார்த்த படியே சொன்னார் சந்திரன்.

அவர்தான் அவர்களின் பேமிலி டாக்டர்,அதோடு ஆச்சார்யாவின் நண்பரும் கூட என்பதால், அவர்களின் குடும்பத்தை பற்றி நன்றாகவே தெரியும்.. அதனால் ஓகே உங்க விஷ் என்றவர்,

“ஆச்சார்யாவுக்கு இது பர்ஸ்ட் ஹார்ட் அட்டாக்...” என்று சொல்லவும், “இதுவாகத்தான் இருக்கும்…?” என்று அனைவருக்கும் முன்னமே யூகம் இருந்தாலும், அவர் சொல்லும் போது மனம் பதைபதைக்க தான் செய்தது.

அவருக்கு அட்டாக் வரதுக்கு முன்னாடி அதுக்குள்ள அறிகுறி கண்டிப்பா தெரிஞ்சிருக்குமே, உங்க கிட்ட சொல்லலையா அவர்..? என்றபடி அனைவரது முகத்தையும் பார்த்தவருக்கு, “இவர்களுக்கு தெரிந்திருக்கிறது..” என்று சொல்லாமலே புரிந்தது.

ரொம்ப நேரம் அந்த வலியில இருந்திருக்கார்.. இது ஹைலி ரிஸ்க்... என்னவேனாலும் நடந்திருக்கலாம்., இனியாவது அவரை கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க, என்று அவர்களிடம் கொஞ்சம் கடுமையாக கணேஷ் சொல்லி செல்லவும், அனைவரும் இறுகிய முகத்துடன் கண்மூடி நின்றிருந்த ஹர்ஷினியை தான் பார்த்தனர்.

மறுநாள் ஆச்சார்யா கண்முழித்ததும் முதலில் தேடியது ஹர்ஷினியை தான், நர்ஸ் வெளியே வந்து அவருக்கு முழிப்பு வந்தது விட்டது என்று இவர்களிடம் சொல்லவும், ஒவ்வொரு வராக சென்று அவரை பார்த்து வந்தனர்.

கடைசியாக சென்ற ஹர்ஷினி கதவருகிலே நின்று ஒரு வார்த்தை கூட பேசாமல் அவரை வெறுமையாக பார்க்கவும், ஆச்சார்யாவின் மனது பேத்தியின் பார்வையில் நிலையில்லாமல் தவிக்க ஆரம்பித்தது.

“ ப்ளீஸ் ஹர்ஷி.. தாத்தாவை அப்படி பாக்காத..” என்று கஷ்ட பட்டுக்கொண்டே பேசவும், வேகமாக அவர் அருகில் வந்தவள்,
“இப்போ எதுவும் பேச வேண்டாம், ஏதா இருந்தாலும் நாம அப்பறம் பேசிக்கலாம், ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க..”, என்று உணர்வற்ற குரலில் சொன்னவள், ஆச்சார்யா எதோ பேசவருகிறார் என்று தெரிந்தும்,”நான் வரேன்..” என்று சென்றவள் உடனடியாக அங்கிருந்து கிளம்பியும் விட்டாள்.

அன்று அவளுடைய ரூமில் அடைந்தவள் தான், அதற்கு பிறகு வெளியே வரவும் இல்லை, யாரிடமும் பேசவும் இல்லை. ரேணுகாவிடம் போனில் அவரின் உடல்நிலையை பற்றி கேட்டுக்கொண்டதோடு சரி.

பேத்தியின் ஒதுக்கத்தில் மிகவும் வேதனையடைந்த ஆச்சார்யா, “அவளிடம் பேச வேண்டும்..” என்று ரேணுகா,சந்திரன் மூலமாக சொன்ன போதும், ஹர்ஷினி அவரை பார்க்க செல்லல்லை..

என்னதான் அவர் மேல் இருந்த பாசத்தில், அவரின் அன்றய உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் கேட்டதுக்கு சத்தியம் செய்து கொடுத்து இருந்தாலும்,”கோவம், இயலாமை, ஏமாற்றம்..” எல்லாம் தீராத நெருப்பு போல் மனதுள் கனன்று கொண்டே தான் இருந்தது.

“ஹர்ஷினி..” தாத்தா மேல இருக்கிற உன்னோட கோவம், வருத்தம் எல்லாம் நியாயம் தான். பட் அதை காண்பிக்கிற நேரம் இது இல்லை.. அவர் கண்டிஷன் தெரியுமில்லை.. இந்த டைம்ல நீ இப்படி அவர் கிட்ட நடத்துகிறது சரியில்லை..

அதோட இந்த ஒரு காரணத்துக்காக அவரை நீ ஒதுக்குறது அதுவும் இந்த நிலையில ஒதுக்குறது ரொம்ப ரொம்ப தப்பு.. என்று ஆச்சார்யாவின் வேதனையை கண்ட ரேணுகா போனில் கண்டிப்புடன் சொல்லவும்,

ஹர்ஷினியின் மனதுக்குள்ளும் இந்த எண்ணம் இருந்தாலும், எங்கு அவரை பார்த்தால், அவரிடம் தன் கோவத்தை கட்டிவிடுவோமா..? அது இப்போதிருக்கும் உடல்நிலையில் மறுபடியும் அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ..? என்ற பயம் ஒரு புறம் இருந்தாலும்,

அவரை பார்க்காமல்.. அதுவும் இந்த நிலையில் அவருடன் தான் இல்லாமல் இருப்பது ஹர்ஷினிக்குமே கொஞ்சம் உறுத்தலாக தான் இருந்தது, என்பதாலுமே அவள் ஆச்சார்யாவை பார்க்க ஹாஸ்பிடல் வந்தாள்.

மூன்று நாள் கழித்து தன்னை பார்க்க வந்த பேத்தி 5 நிமிடங்கள் ஆகியும் எதுவும் பேசாமல் குனிந்து தன் விரல்களையே பார்த்த வண்ணம் இருக்க, அவளுக்கு தன் மேல் இருக்கும் கோவத்தை உணர்ந்து கொண்ட ஆச்சார்யா,

ஹர்ஷினி தாத்தா மேல கோவமா இருக்கியா..? ஹர்ஷினியிடம் மௌனமே பதில்..

எனக்கு தெரியும் நீ கண்டிப்பா என்மேல ரொம்ப கோவமா தான் இருக்கன்னு.., ஆமாத்தானே.. இதற்கும் பதில் இல்லது போகவும்,

“எதாவது பேசு ஹர்ஷினி, இல்ல என் மேல கோவமாவது படு.. இப்படி யாரோ மாதிரி என்கிட்ட இருக்காத..”என்ற அவரின் வேதனையை குரலிலே உணர்ந்த ஹர்ஷினி, அடைத்த தன் தொண்டையை செறுமிய படி

எப்படி இருக்கீங்க..? என்று மிகவும் பார்முலாக கேட்கவும், அளவில்லா வருத்தத்தை கண்களில் தேக்கி அவளை பார்த்தவர்,
ஏன்டா இப்படி யாரோ போல பேசுற..?

“அப்படி எல்லாம் இல்லை..” என்று மொட்டையாக உறவு முறை இல்லாமல் பேசவும், கண்டு கொண்ட ஆச்சார்யா,
அன்னையிலிருந்து இதுவரை.. “ஒரு டைம் கூட நீ என்னை தாத்தான்னே கூப்பிடலை..” எனக்கு உன்னோட கோவம், வருத்தம் எல்லாம் புரியாம இல்லை..

ஆனா.. “என்னோட பயம்.?” அதை உன்கிட்ட எப்படி சொல்ல..?

என்ன உங்களுக்கு பயமா..?

ஆனா ஏன் பயம்..? யார்கிட்ட பயம்..? ஒருவேளை அந்த காளிதாஸா இருக்குமோ..? என்று யோசித்தவாறே நம்பாமல் சந்தேகமாக கேட்க,

அவளின் சந்தேகத்தை உணர்ந்த ஆச்சார்யா, விரக்தியாக சிரித்தவாறே, எனக்கு ஒரு விஷயத்து மேல தான் பயம்.. மத்தபடி யார்கிட்டேயும் பயம் இல்ல..

அதை "விதி.."ன்னு சொல்லலாம்., இல்லை ஒரு வகையான "சாபம்.."ன்னு கூட சொல்லலாம்., இல்லை தீர்க்கதரிசங்க சொன்ன "சொல்லா..? கூட இருக்கலாம்.. என்று கசங்கிய முகத்துடன், கலங்கிய குரலுடன் சொன்னார்,

அவர் முகத்திலே அவரின் வேதனையை புரிந்து கொண்ட ஹர்ஷினி, ஓகே இப்போ டிரீட்மென்ட்ல இருக்கும் போது எதுவும் பேச வேண்டாம், நாம இதை பத்தி எல்லாம் அப்பறம் பேசலாம்..

இல்லை ஹர்ஷினி, நான் இன்னிக்கு சொல்லியே ஆகணும்.. என்னால இதுக்கு மேலயும் உன்கிட்ட சொல்லாம இருக்க முடியாது..,
இதற்கு மேல் கேட்டு ஆகப்போவது என்ன..? என்று தோன்றினாலும், அவருக்காக கேட்க நினைத்தவள், பேசலாம்.., ஆனா இப்போ வேண்டாம், இன்னொரு நாள்.,
இல்லை ஹர்ஷினி எனக்கு இப்பவே என் பக்க நியாத்தை உன்கிட்ட சொல்லியே ஆகணும்., என்று உறுதியுடன் சொல்ல ஆரம்பித்தவர்,

ஹர்ஷினி உனக்கு தெரியுமில்லை, நான் தேவிக்கு டான்ஸ் அகாடமி ஆரம்பிச்சி கொடுத்தது, "ஆமா.." என்று ஹர்ஷினி தலையாட்டவும்,
அது எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே பிடிக்கல.. அவங்க அப்போ என்கிட்ட ஒருவார்த்தை சொன்னாங்க.. என்று வருத்தத்துடன் சொன்னவர்,

“இந்த டான்ஸால நீ பின்னாடி ரொம்ப கஷ்ப்படுவேன்னு…” சொன்னாங்க.

அவங்களுக்கு அன்னிக்கு எதோ தோணபோய்த்தான் அப்படி சொன்னாங்க போல.. அவங்க சொன்னதும் உண்மையாகிடுச்சி.. என்று தன் வாழ்க்கையின் கருப்பு பக்கத்தை புரட்டியவர்,

உங்க அத்தை சுபத்ராவுமே, உன்னை போல சின்ன வயசுல இருந்தே டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சா, ஆனா அவ பரதம் மட்டும் கத்துக்கல.. தேடி பிடிச்சி இன்னும் நிறைய வகையான டான்ஸ் கத்துக்கிட்டா..

தேவி மாதிரித்தான் சுபத்ராவும் டான்ஸ் மேல அவ்வளவு ஈடுபாடு, இப்போ நீ சொன்னயில்ல..? அது போலத்தான் அன்னிக்கு சுபத்ராவும் சொன்னா.. அவளுக்கு டான்ஸ்ல எதாவது சாதிக்கணும், டான்ஸ்ல தனக்குன்னு ஒரு அடையாளம், அங்கீகாரம் வேணும்ன்னு பிடிவாதமா நின்னா,

தேவியும் மகளுக்கு சப்போர்ட் பண்ணினா.. ஒருவேளை அவளுக்கு அவளால தொடர்ந்து டான்ஸ் ஆடமுடியாம போன ஏக்கம் மனசுக்குள்ள இருந்திருக்கும் போல.. ஆனா அவ அதை கடைசி வரை வெளிக்காட்டிக்கவே இல்லை, என்று மனைவியை பற்றி சொல்லும் போது.

அவரின் கண்களில் தெரிந்த காதலை கண்டு கொண்ட ஹர்ஷினிக்கு, தன்னிடம் மூன்று நாட்களாக எல்லா வழியிலும் பேச முயற்சித்து கொண்டிருக்கும் ஜெய் தான் ஞாபகத்திற்கு வந்தான்.

அதனால மகளும் நம்மை போல கஷ்டப்படக்கூடாதுன்னு தான் சுபத்ராவுக்கு சப்போர்ட் பண்ணா தேவி, அப்பவே “என் மனசுக்குள்ள ஏதோ ஒப்பாத மாதிரி இருந்தது”, அதனால நான் அதெல்லாம் வேணாம்.. கல்யாணம் செஞ்சுக்கோன்னு உறுதியா சொல்லிட்டு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.

கரெக்ட்டா அந்த நேரம் பார்த்து வந்தவன் தான் இந்த “காளிதாஸ் சினிமா ப்ரோடியூசர்..”, எதோ வெல்பேர் ப்ரோகிராம்க்கு சுபத்ரா ஆடினதை பார்த்துட்டு, “சினிமாவுல அவளை நடிக்க..” வைக்க கேட்டு ஒரு நாள் வீட்டுக்கு வந்தான்.

நான் அதெல்லாம் கண்டிப்பாவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.. ஆனா அவன் டான்ஸ் அகாடமிக்கே போய் தேவிகிட்டேயும், சுபத்ராகிட்டேயும் பேசிருக்கான். அப்போ சுபத்ராவுக்கு டான்ஸ்ல சாதிக்கணும்ன்னு எண்ணம் இருந்ததை தெரிஞ்சுக்கிட்டு, அதை வச்சே

“நீ சினிமாவுல பெருசா சாதிக்கலாம், டான்ஸ்ன்னாலே அது சுபத்ரா தான் அப்படின்னு இந்த உலகத்துக்கே சினிமா மூலம் காட்டலாம்..” இது போல விடாம அவங்களை பாத்து பேசியே அவங்க ரெண்டு பேரையும் ஒத்துக்க வச்சி, அவங்க மூலமா என்னையும் ஒத்துக்க வச்சான் ராஸ்கல்.

ஆனா அப்பவும் “படத்துல வர ஒரு பரதநாட்டிய பாட்டுக்கு மட்டும் தான் சுபத்ரா ஆடுற மாதிரி ஒத்துக்கிட்டேன்..” இல்லாட்டி அதுவும் முடியாதுன்னு நான் உறுதியா சொல்லவும், வேறு வழி இல்லாமல் அவன் காரியத்துக்காக ஒத்துக்கிட்டான் அந்த பொறுக்கி. அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க வேற.. இதுல,

“அவனுக்கு சுபத்ரா மேல ஆசை…” என்று சொல்லும் போதே ஆத்திரத்தில் பல்லை கடித்த ஆச்சார்யா, அது எங்க யாருக்கும் அப்போ தெரியல.. அவ்வளவு நல்லவன் மாதிரி நடந்துக்கிட்டான்.

சுபத்ரா ஆசைப்பட்ட மாதிரி அந்த படத்துல அவ ஆடுன டான்ஸ் அப்போ ரொம்ப பேமஸ் ஆச்சி.. இதுதான் வாய்ப்புன்னு மறுபடியும் இதைவச்சே அவன் இன்னொரு படத்துக்கு கேட்கவும், நான் உறுதியா முடியாதுன்னு சொல்லிட்டு “சுபத்ராக்கு மாப்பிள்ளை..” பாக்க ஆரம்பிச்சேன்.

தேவி, சுபத்ராக்குமே அவங்க சாதிக்கணும்ன்னு ஆசை பூர்த்தியானதால அவங்களும் என்னோட முடிவை முழு மனசோட ஏத்துக்கிட்டு அந்த ராஸ்கல்கிட்ட முடியாதுன்னு சொல்லிட்டாங்க..

நம்மோட தூரத்து சொந்தத்திலே ஒரு வரன் வந்துச்சு... அவங்களும் நம்மை போல பரம்பரை பணக்காரங்க.. பேர் சொல்ல கூடிய பாரம்பரியம் கொண்டவங்க.. எல்லாருக்கும் அந்த வரன் பிடிச்சி போய் அவங்க உறுதி பண்ண நம்ம வீட்டுக்கு வந்திருந்த சமயம்,

அந்த காளிதாஸ் வந்தான்.. கையில ஒரு 20 போட்டோ எடுத்துக்கிட்டு வந்தான்.. அது எல்லாமே அவனும்.. சுபத்ராவும் நெருக்கமா இருக்கிற மாதிரி அவனா உருவாக்கின மார்பிங் போட்டோஸ்.. என்று கண்மூடி கொஞ்சம் மெலிதாக திக்கி... திணறிய குரலில் சொன்ன ஆச்சார்யா, அப்பொழுது தான் அடைந்த வேதனையை இப்பொழுதும் உணர்ந்தார்.

அவர் சொன்னதில் உச்சகட்ட அதிர்ச்சி ஆன ஹர்ஷினி, அவரின் மௌனத்தில், அவரின் மனநிலைய உணர்ந்து கொண்டு ஆறுதலாக அவரின் கையை தன் கையால் பற்றி கொண்டு,

“வேண்டாம் விடுங்க தாத்தா, எதுவும் சொல்லாதீங்க..” என்று சொல்லவும் கண்திறந்து ஹர்ஷினியை பார்த்த ஆச்சார்யா, “இல்ல ஹர்ஷினி, நான் சொல்லிடுறேன்.. அப்போதான் என் நிலையை உன்னால புரிஞ்சுக்க முடியும்..”

அவன் கொண்டு வந்த போட்டோவை பார்த்துட்டு, முதல்ல யாருக்குமே பேச்சே வரலன்னு தான் சொல்லணும். எங்களால நம்பவே முடியல.. அப்போதான் அவனோட எண்ணத்தையே நாங்க புரிஞ்சிகிட்டோம்.

“பொய்யடா சொல்ற..? உன்னை என்னை பண்றேன் பாருன்னு.. சந்திரன் கோவப்பட்டு அவனை அடிக்க போய் கொஞ்ச நேரம் அந்த இடமே கலவரமா ஆகிடுச்சு...
அந்த “மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும். அவன் கொண்டு வந்த போட்டோவை உண்மைன்னு நினைச்சு, சுபத்ராவை சபையிலே வச்சி தப்பா பேச.. நாங்களும் அது எல்லாம் உண்மை இல்லன்னு எவ்ளோ சொல்லியும் நம்பாமல்... எல்லாம் முடிஞ்சிருச்சு..”

அப்பவும் அந்த காளிதாஸ் அடங்காம, அவங்க போனா போறாங்க.. “நான் என் பொண்டாட்டியை விவாகரத்து பண்ணிட்டு, சுபத்ராவை கட்டிக்கிறேன்ன்னு” தைரியமா சுபத்ராவை பொண்ணு வேறு கேட்டான்.

இதுக்கு அப்பறமும் அவனை விட்டா சரிவாரதுன்னு அவனை அன்னிக்கு என்ன என்ன பண்ண முடியுமோ..? அத்தனையும் பண்ணியாச்சு, தொழிலையும் முடக்கியாச்சி..? அன்னிக்கி போனவன் தான் மறுபடியும் அவனை இப்போதான் பார்த்தேன்.

இப்பவும் எவ்வளவு தைரியம் இருந்தா உன்னை நடிக்க வைக்க கேப்பான்.. அவனை பாத்துக்கிறேன்.. அப்பவே அவனை உருத்தெரியாம அழிச்சிருப்பேன்.. தேவி தான் அதெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னதால் தான் அவன் தப்பிச்சான்.

“ஆனா.. அதுக்கு அப்பறம் இந்த விஷயம் பேப்பர்ல எல்லாம் வந்து ஊர், உலகம் எல்லாம் பரவி, சுபத்ரா பேர் ரொம்ப அடிபட்டு வர வரன் எல்லாம் நின்னு போய்... ரொம்ப கொடுமையான நாட்கள் அது..”

அந்த கஷ்டம் அதோட முடியல.. இந்த பிரச்சனையில நாங்க தேவியை சரியா கவனிக்காம விட்டுட்டோம், “என் பொண்ணு வாழ்க்கை அழிய நானே காரணமா ஆயிட்டேனேன்னு அவளுக்கு மனசுக்குள்ள ரொம்ப குற்ற உணர்ச்சி மாதிரி ஆகிருச்சு..”

“சுபத்ரா ஆசைப்பட்டாலும்.. நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணியிருக்க கூடாது. ஒரு அம்மாவா நான் யோசிக்கலை.. ஒரு குருவாதான் யோசிச்சேன்.. என்னோட ஆசையை, ஏக்கத்தை அவ மூலம் தீர்க்க நினைச்சி, இப்போ அவ பேர் கெட நானே காரணமா ஆயிட்டேனேன்னு..” அவளுக்குள்ளே ரொம்ப மருகி இருக்கா..

இதுவே ஒரு மாதிரி “மன அழுத்தம்..” ஆகி ஒரு நாள் மயக்கம் போட்டு விழுந்துட்டா.. அப்பறம் தான் அவளோட எண்ணம் புரிஞ்சு, “இதுக்கு எல்லாம் நீ காரணமில்லைன்னு..” நாங்க எல்லாரும் எவ்ளோ சொன்னோம், அவ ஏத்துக்கவே இல்லை.

அந்த “மன அழுத்தமே அவ இதயத்தை அடைக்க, இரத்த நாளங்கள் எல்லாம் உள்ளுக்குள்ள வெடிச்சி, கடைசி காலத்துல மனசால, உடம்பால ரொம்ப கஷ்டப்பட்டுட்டா..”
அந்த டைம்ல தான் அவ “எங்க அப்பா, அம்மா சொன்னது உண்மை ஆகிருச்சுன்னு சொன்னா.. எனக்கும் அவங்க சொன்னது உண்மை தான் போலன்னு மனசுல பதிந்திருச்சு..”

எவ்ளோ ட்ரீட்மெண்ட் கொடுத்ததும் தேவியை காப்பாத்த முடியல.. எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு தான் நாங்க நினைச்சோம் ஆனா உங்க அத்தை, நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன், இனி டான்ஸ் தான் என் வாழ்க்கைன்னு எங்ககிட்ட சண்டை போட்டு இத்தனை வருஷம் உறுதியா நின்னுட்டா,

ஆனா இப்போ தான் .. என்று ஆரம்பித்தவர், சரியாக அந்த நேரம் டாக்டர் செக் அப் வரவே அவர் சொல்ல வந்தது, சொல்லாமலே நின்று விட்டது, ஒரு வேளை அவர் ஹர்ஷினியிடம் சொல்லிருந்தால்.....

...............................................................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்.

அடுத்த எபி போட்டுட்டேன்.. படிச்சுட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லிடுங்க.. thank you ப்ரண்ட்ஸ்
 
Last edited:

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 21





அங்கிள் இப்போ தாத்தாக்கு எப்படி இருக்கு..? என்று ஆச்சார்யாவிற்கு செக் அப் முடித்ததும் டாக்டர் கணேஷிடம், ஹர்ஷினி கவலையுடன் கேட்க,

இப்போ ஓகே ஹர்ஷினி.. பட் இன்னும் ஒரு வாரத்துக்கு கம்ப்ளீட் பெட் ரெஸ்ட்ல தான் இருக்கணும், நோ மோர் ஸ்ட்ரெஸ் ஆச்சார்யா.. என்று ஆச்சார்யாவிடம் கண்டிப்புடன் சொன்னார்.

ம்ம் அதெல்லாம் சரி... நான் வீட்டுக்கு போகணும்… என்று ஆச்சார்யா அடமாக ஆரம்பிக்க,

வாட்...? என்ன விளையாடுறியா நீ..? நான் என்ன சொல்லிட்டுருக்கேன்.. நீ என்ன சொல்ற..? இன்னும் மூணு நாளைக்கு நீ இங்க தான் இருக்கணும்.. வீட்டுக்கு எல்லாம் போக முடியாது..

என்னது இன்னும் மூணு நாளா..? அதெல்லாம் முடியாது, என்னால இதுக்கும் மேல இங்க இருக்க முடியாது.. எனக்கு வீட்டுக்கு போகணும்.. உனக்கு என்ன நான் ஸ்ட்ரெஸ் எடுத்துக்க கூடாது அதானே..

அதுமட்டுமில்ல கண்டிப்பா உனக்கு ரெஸ்ட்டும் வேணும்..,

ரெஸ்ட் தானே.., நான் வீட்லே ரெஸ்ட்ல இருந்துப்பேன்..

யாரு நீ..? உனக்கு உங்க ஹோட்டலுக்கு போகலேன்னாவே தூக்கம் வராது.. நீ எங்க வீட்ல ரெஸ்ட் எடுக்க போற என்று நக்கலாக கணேஷ் சொல்ல,

கடுப்பான ஆச்சார்யா, எனக்கு இந்த ஹாஸ்பிடல் அட்மாஸ்பியரே பிடிக்கல.. நான் இன்னிக்கு வீட்டுக்கு போயே ஆகணும், அவ்வளவுதான் என்று உறுதியாக நிற்க,

அவரின் ஹாஸ்பிடல் விருப்பமின்மையை புரிந்து கொண்ட.. ஹர்ஷினியும் ஆச்சார்யாவிற்காக, “தாத்தாவை நீங்க சொன்ன படியே நான் பாத்துக்கிறேன் அங்கிள்..” என்று சொல்ல, வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொண்ட கணேஷ்,

ஓகே ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்றேன்.. பட் மூணு நாளைக்காவது என் ஸ்டாப் அங்க உன்கூட இருப்பாங்க என்று முடித்துவிட, ஆச்சார்யாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் வீட்டுக்கு போன போதும் என்ற மனநிலையுடன் ஓகே என்றுவிட்டார்.

ஓகே.. இவ்ளோ நேரம் ரெஸ்ட் எடுக்காம பேசிட்டு இருந்துட்ட.. சோ இப்போ நீ கண்டிப்பா ரெஸ்ட் எடுக்கணும். என்று ஆச்சார்யாவிடம் சொன்னவர்,

ஹர்ஷினி நீ என்னோட வா.. என்று கையோடு அவளை அழைத்து கொண்டு வெளியே வந்துவிடவும், ஆச்சார்யா சுபத்ராவை பற்றி சொல்ல வந்தது சொல்ல முடியாமலே போய்விட்டது.

ஹர்ஷினி டாக்டரிடம் ஆச்சார்யாவிற்கான உணவு முறை மற்றும் பிற சந்தேகங்களை கேட்டுகொண்டு வந்தவள், ரேணுகாவிடமும், மாலதியுடனும் அதை பற்றி பேசி கொண்டிருக்கும் போது, அங்கு வேகமாக வந்த சுபத்ரா,

அப்பாக்கு என்ன ஆச்சு..? ஏன் தீடிர்ன்னு இப்படி..? இப்போ எப்படி இருக்கார்..? யாராவது பதில் சொல்லுங்க.. என்று பதட்டத்துடன் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கவும்,

அத்தை.. “தாத்தா இப்போ பெர்பெக்ட்லி ஆல்டரைட்.. நீங்க பதட்டப்படாம முதல்ல ரிலாக்ஸா உட்காருங்க..” என்று சொல்லியபடியே அவரின் கையை பிடித்து சேரில் உட்கார வைத்த ஹர்ஷினி, அம்மா தண்ணி கொண்டு வாங்க.. என்று ரேணுகாவிடம் சொல்ல,

வேகமாக தண்ணி கொண்டு வந்தவர், இந்தா இந்த தண்ணியை குடி முதல்ல.. மாமா இப்போ நல்ல இருக்க்காருன்னு, நாங்க தான் போன்லே சொன்னோம் இல்ல சுபா..

உங்க அண்ணன் டிரைவர் அரேஞ் பண்றதுக்குள்ள உன்னை யாரு சென்னையிலிருந்து தனியா டிரைவ் பண்ணிட்டு வர சொன்னது..? என்று கண்டிப்புடன் சொல்ல,

ஆமா அக்கா, அதுவும் இவ்வளவு டென்க்ஷன்ல வண்டிய ஓட்டிட்டு வந்திருக்கா பாருங்க.., எதுக்கு இந்த மாதிரி ரிஸ்க் எடுக்கற சுபா நீ என்று மாலதியும் கடிந்து கொண்டனர்.

ச்சு.. இனி இப்படி பண்ண மாட்டேன்.. “எனக்கு பர்ஸ்ட் அப்பாவை பார்க்கணும்” எனவும்,

அவர் இப்போ தான் தூங்கினார் அத்தை,

பரவாயில்ல ஹர்ஷினி.. எனக்கு அவரை பாத்தா போதும் என்றவர், ஹர்ஷினியுடன் சென்று ஆச்சார்யாவை பார்த்து விட்டு வந்தவர்,

என்ன ஆச்சு அண்ணி..? அப்பாக்கு ஏன் திடீர்னு இப்படி..? என்று கேட்க, ரேணுகா, மாலதி இருவரும் ஹர்ஷினியை தான் பார்த்தனர், “என்ன நடந்ததென்று எப்படி சொல்ல..?” என்று புரியாமல் தயக்கமாக பார்க்கவும், புரிந்து கொண்ட ஹர்ஷினி,

“நான் வெளியே கார்டென்ல் இருக்கேன்..” என்று விட்டு வேகமாக எழுந்து செல்லவும், என்னவென்று புரியாமல் குழப்பமாக பார்த்த சுபத்ரா, ப்ளீஸ் அண்ணி, அப்பாக்கு என்ன ஆச்சின்னு சொல்லுங்க..” பயத்துடன் கேட்க,

“மாமாக்கு பர்ஸ்ட் ஹார்ட் அட்டாக்..” என்று ரேணுகா வேதனையுடன் சொல்ல,

வாட்... என்ன அப்பாக்கு ஹார்ட் அட்டாக்கா ... எப்படி..? ஏன்..? என்று அதிர்ச்சியுடன் அழுகையாக கேட்டார்.

மூணு நாளைக்கு முன்னாடி தான் மாமாக்கு இப்படி ஆச்சு.. என்று மாலதி சொல்லவும்,

அப்பவே ஏன் அண்ணி..? நீங்க யாரும் என்கிட்ட சொல்லலை..

நாங்க உன்கிட்ட சொல்ல எவ்ளோ ட்ரை பண்ணோம்.. பட் நீ கேம்ப் போயிருந்த இடத்தை எங்களால ரீச் பண்ண முடியல.. வேற வழி இல்லாமல் உங்க கேம்ப் ஆர்கனைசேர் கிட்ட சொல்லி வச்சோம்,

ம்ம்... அந்த காட்டுல சிக்னலே கிடைக்கல.. நான் சென்னை ரீச் ஆகவும் தான், “அப்பா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிருக்காருன்னு..” எனக்கு தகவலே வந்தது, என்னவோ..? ஏதோண்ற..? பதட்டத்துல அப்படியே கிளம்பிட்டேன், என்று சொல்லி முடித்த சுபத்ரா,

என்ன பிரச்சனை அண்ணி ..? அப்பாக்கு ஏன் திடீர்னு இப்படி..? ஹர்ஷினி ஏன் என்னவோ போல இருக்கா..? என்று கேட்கும் போதே, ரேணுகா அழுகவும், பதறி போன சுபத்ரா,

அண்ணி ஏன் அழறீங்க..? நீங்க சொன்னாத்தானே எனக்கு தெரியும், சொல்லுங்க அண்ணி.. என்று ரேணுகாவிடம் திரும்ப.. திரும்ப.. கேட்டும் பதில் சொல்லாமல் அவர் அழுது கொண்டே இருக்கவும்,

என்னதான் ஆச்சின்னு நீங்களாவது சொல்லுங்க அண்ணி...? என்று மாலதியிடம் வற்புறுத்தலாக கேட்கவும், அவர் தயங்கி கொன்டே, “ஆச்சார்யா, ஹர்ஷினி காலேஜில் காளிதாஸை பார்த்தது, அதை தொடர்ந்து வீட்டில் ஆச்சார்யா ஹர்ஷினியிடம் சத்தியம் வாங்கியது வரை..” நடந்த அத்தனையும் சொல்ல,

என்ன சத்தியம் வாங்கிட்டாரா..? அப்பா எப்படி இப்படி செய்யாலாம்..? ஹர்ஷினிகிட்ட டான்ஸ் ஆடக்கூடாதுன்னு சத்தியம் வாங்க அப்பாக்கு எப்படி மனசு வந்துச்சு..? அதுவும் அந்த காளிதாஸ் கேட்டதுக்காகவா..? என்று கோவத்தில் கத்தியவர்,

நீங்களும் யாரும் அப்பாவை தடுக்கலையா..? என்று ஆத்திரமாக கேட்கவும், மாமாக்கு அப்போ நெஞ்சு வலி, ஹாஸ்பிடல் போகலாம்ன்னு கெஞ்சினோம், ஆனா அவர் ஹர்ஷினி சத்தியம் பண்ணத்தான் வருவேன்னு உறுதியா நின்னுட்டார்.. என்று ரேணுகா அழுதபடியே சொல்லவும்,

அந்த சூழ்நிலையை புரிந்து கொண்ட சுபத்ரா, நான் ஹர்ஷினியை பாத்துட்டு வரேன் என்று விட்டு கார்டெனில் தனியாக அமர்ந்த படி அங்கிருக்கும் மரத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தவளின் அருகில் அமர்ந்த படி அவளின் கையை பற்றி தன் கையோடு கோர்க்கவும், திரும்பி பார்த்தவள் எதுவும் பேசாமல் அவரின் தோள் சாய்ந்து கொள்ளவும், அவளை அணைத்து பிடித்த சுபத்ரா,

என்னடா ரொம்ப கஷ்டமா இருக்கா..? என்று பரிவோடு கேட்கவும், ம்ஹூம் இல்ல அத்தை.. என்று கமறிய குரலில் சொன்னவள், கண்மூடி கொள்ளவும்,



என்னோட பிரச்னையியால தான் உனக்கு இப்படி..? என்று அவர் சொல்ல ஆரம்பிக்கும் போதே, சட்டென்று உடைந்து விட்ட ஹர்ஷினி அவரின் மடியை கட்டி கொண்டு கதறவும், பதை பதைத்து போனார் சுபத்ரா.

அவர் மட்டுமல்ல அவர்களின் பின்னால் உள்ள கல்லில் அமர்ந்திருந்த “ஜெயும் தான்..” ஹர்ஷினியின் கதறலில் துடித்து விட்டான்.

அத்தை என்னால முடியல.. உங்களுக்கு தெரியுமில்ல எனக்கு டான்ஸ்ல எதாவது பேர் சொல்ற மாதிரி சாதிக்கணும்ன்னு.. ஆனா இனி முடியாது அத்தை.. என்னோட ஆசை, கனவு, இத்தனை வருஷ உழைப்பு எல்லாம் போச்சி... என்னால ஒன்னும் பண்ண முடியாது.. ஐம் ஹெல்ப்லெஸ் அத்தை... என்னால தாங்க முடியல... என்று அரற்றிய படியே கதறியவளை,

ஒன்றும் செய்ய முடியாத தவிப்பில் மனதுள் துடித்து கொண்டிருந்தான் ஜெய். என்ன ஆச்சின்னு தெரியலே..? ஏன் இப்படி அழறா..? டான்ஸ் ஆட முடியாதுன்னு வேற கதறுறாளே..? ஏன் ஆடமுடியாதுன்னு வேற தெரியலயே ..? ச்சே... இப்போ என்னால அவ பக்கத்துல கூட போக முடியலேயே.. நான் என்ன செய்ய..? என்று தவிப்பில் அமர்ந்து இருந்தான் ஜெய்.

சுபத்ராவிற்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.. அதோடு அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் என்ன ஆறுதல் சொல்லிவிட முடியும்..? என்ற வேதனையோடு ஹர்ஷினியை அணைத்து கொண்டவாறே,

ஹர்ஷி ப்ளீஸ்.. கண்ட்ரோல் யுவர்செல்ப்.. அப்பா உனக்கு பண்ணது ரொம்ப பெரிய அநியாயம்.. அவர் ஏன் இப்படி பண்ணாரு..? அவருக்கு நல்லா தெரியுமே உன்னோட லட்சியத்தை பத்தி.. ம்ப்ச்... அவர்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை.. என்று கோவமாக சொல்லவும்,

அழுகையில் கரைந்து கொண்டிருந்த ஹர்ஷினி, ஆச்சார்யா சொன்னதை நினைத்து பார்த்தவள், சுபத்ராவை விட்டு பிரிந்து கண்களை துடைத்தவாறே அவர் பக்கம் அவருக்குன்னு ஒரு நியாயம் இருக்கலாம் அத்தை.., என்று சொல்லவும்,

கலைந்த அவளின் தலை முடியை ஒதுக்கியவாறே, அப்படி என்ன பொல்லாத நியாயம்..? எனக்கு மனசே ஆறலை ஹர்ஷினி என்று குமுறினார்.

அவர்களின் பேச்சு புரிந்தும்.. புரியாமலும் அமர்ந்து இருந்த ஜெய், அடுத்து ஹர்ஷினி சொன்னதை கேட்டு உச்ச கட்ட அதிர்ச்சிக்குள்ளானான்.

அவர் என்கிட்டஇனி நீ எப்பவும் டான்ஸ் ஆடக்கூடாதுன்னு சத்தியம் கேட்டப்போ..? என்று கலங்கிய குரலில் நிறுத்தியவள், அளவில்லா துக்கத்தில் அடைத்த தொண்டையை செறுமிய படி, எனக்கும் அவரா இப்படின்னு தான் தோணுச்சு..

“என்னோட வருத்தமெல்லாம், என்னால இனி எப்பவும் டான்ஸ்ல எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்க முடியாதுன்னு தான்..” என்று சொல்லும் போதே மறுபடியும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டவும்,

ப்ளீஸ் ஹர்ஷினி.. இப்படி அழாதே.. என்னால தானோ இதெல்லாம்ன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. இதுக்கு எதாவது செய்ய முடியுமான்னு பார்க்கலாம்.. என்று கண்களில் கண்ணீரோடு சுபத்ரா சொல்லும் போதே, அங்கு வந்த மாலதி,

மாமாக்கு முழிப்பு வந்துருச்சி, உங்களை வர சொல்றார்.. என்றவர் சுபத்ராவின் முகத்தில் உள்ள கோவத்தை புரிந்து கொண்டு.. சுபா மாமா கஷ்டப்படுற மாதிரி எதுவும் பேசிடாத.. அவர் ஹெல்த் கண்டிஷன் தெரியுமில்ல.. என்று வேண்டுகோளாகவே கேட்ட படி இருவரையும் அழைத்து கொண்டு சென்றார்.

குமார் போன் செய்து அம்மா செக் அப்க்காக ஹாஸ்பிடல் வந்தப்போ, நம்ம தில்லானா அம்மிணியை பார்த்தேண்டா.. என்று சொல்லவும், அடித்து, பிடித்து “இன்று எப்படியாவது அவளை பார்த்து பேசி விட வேண்டும்..” என்ற தவிப்பில் வேகமாக வந்த ஜெய்,

கார்டெனில் அமர்ந்து இருந்த ஹர்ஷினியை தேடி கண்டு கொண்டு அவளிடம் பேச வந்தவன், அவனுக்கு முன்னே சென்ற பெண்மணி, அவளருகில் அமரவும், சட்டென்று அவர்களுக்கு பின்னால் உள்ள கல்லில் அமர்ந்தவாறே,

ஹர்ஷினியின் பேச்சில் இருந்தே அனைத்தையும் தெரிந்து கொண்ட ஜெய், அவளின் வேதனையை, ஏமாற்றத்தை, முழுவதுமாக புரிந்து கொண்டவன், எதாவது செய்து அவளின் வேதனையை போக்கி விட முடியாதா..? என்ற தவிப்புடன் எழுந்து வீட்டிற்கு சென்றவனின் எண்ணம் முழுவதும் அடுத்த ஒரு வாரத்திற்கு இதை பற்றியே தான் இருந்தது.
.....................................................................
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 22



மாமாவை.. டிஸ்சார்ஜ் செய்து நாங்களே வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுறோம்.. நீங்க ரெண்டு பேறும் கிளம்புங்க... என்று இந்திரன் வரவும், ரேணுகா சொல்ல, சுபத்ராவிற்கும் “நெடு நேரம் கார் ஓட்டியதால்..” களைப்பாக இருந்ததால், ஹர்ஷினியுடன் வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

மாலை நெருங்கவும், வீட்டில் உள்ள அனைவரும் ஆச்சார்யா வருவதற்காக காத்திருக்கும் போது, வந்தனர் “இளங்கோ..” குடும்பத்தினர். அவர்களை பார்த்ததும் பதட்டமடைந்த சுபத்ரா, வேகமாக அவர்கள் அருகில் சென்றவாறே வாங்க.. வாங்க என்று வரவேற்கவும்,

“யார் இவர்கள்..?” என்று தெரியாமல் குழப்பமடைந்த சந்திரனும், ஹர்ஷினியும், வீட்டு ஆட்களாய் முறையாக “வாங்க.. உட்காருங்க..” என்றனர்.

அண்ணா.. “இவர் இளங்கோ.. இது அவங்க அப்பா, அம்மா..” என்று சந்திரனிடமும், இது என்னோட பெரிய அண்ணா, அவரோட பொண்ணு ஹர்ஷினி என்றபடி இரு பக்கமும் முறையாக அறிமுக செய்தார் சுபத்ரா.

யார்..? என்ன..? என்று தெரியாத போதிலும், சுபத்ராவிற்காக வரவவேற்று உட்கார செய்த சந்திரன், காபி, பலகாரம் கொண்டு வரச்செய்து அவர்களை உபசரிக்கவும்,

இருக்கட்டும்ப்பா..? இப்போ அப்பாக்கு எப்படி இருக்கு..? என்று வயதான அந்த பெண்மணி கேட்கவும், “இப்போ நல்லா இருக்கார்.. வீட்டுக்கு வர டைம் தான்” எனவும்,

ஓஹ் நல்லதா போச்சு, நாங்கலே ஹாஸ்பிடல் போய் அவரை பாக்கலாம்ன்னா..? எந்த ஹாஸ்பிடல்ன்னு தெரியல.. அதான் வீட்டுக்கே வந்துட்டோம் என்று இளங்கோவின் அப்பா சொன்னார்.

என்னங்கடா இது..? இவ்வளவு உரிமையா பேசுறாங்க.. யாருன்னே தெரியல..? சரி அத்தை கிட்டே கேட்டுரலாம் என்று யோசித்தபடி சுபத்ராவை பார்த்த ஹர்ஷினி அதிர்ச்சியில் உறைந்தே விட்டாள்.

இளங்கோவை பார்க்காமல் பார்த்த படி இருந்த, “சுபத்ராவின் கண்களில் தெரிந்த காதல்.. அவர் முகத்தில் உள்ள வெட்க சிவப்பு, கொஞ்சம் பதட்டம்.. இதெல்லாம் ஜெயயை பார்க்கும் போது தனக்குள் ஏற்படும் அதே தடுமாற்றம்.. அப்படி என்றால் அத்தை லவ் பண்றங்களா..?” என்று நினைத்தவுடன்,

அதிர்ச்சியில் கண்களை பெரிதாக விரித்தவாறே, தன் கையை கொண்டு வாயை மூடியபடி, இளங்கோவையும், சுபத்ராவையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

அப்பொழுது இளங்கோவிடம் இருந்து மெலிதான சிரிப்பு சத்தம் கேட்கவும், அவரை பார்த்த ஹர்ஷினி, அவர் தன்னை பார்த்து தான் சிரிக்கிறார் என்று புரிந்தவுடன், தன் கையை வாயிலிருந்து எடுத்துவிட்டு அவரை நன்றாக பார்த்தாள்.

திடகாத்திரமான தோற்றம், கம்பீரமாக அமர்ந்து இருந்த விதம், மாநிறத்தில் மிகவும் களையான முகம், அதோடு அவர் கண்களில் எந்தவிதமான கள்ளமும் இல்லாமல், மிகவும் நல்லவிதமாக தான் தெரிந்தார்,

எல்லாவற்றயும் விட, சுபத்ராவை பார்க்கும் போது தெரிந்த அவரின் கண்களில் தெரிந்த அளவில்லா காதல்.. ஒன்றே ஹர்ஷினிக்கு போதுமானதாக இருந்தது.

அவரோட அப்பா, அம்மாவும் நல்ல ஆளுங்களாத்தான் இருக்காங்க.. என்ற படி அவர்களை தனக்கு தெரிந்த வரை எடை போட்டவள், மறுபடியும் ஆராய்ச்சியாக இளங்கோவை பார்க்கவும், அவர் சைகையாலே..

உங்க அத்தைக்கு நான் ஓகேவா இருக்கேனா.? என்று கண்களில் சிரிப்புடன் கேட்க, முதலில் அதிர்ந்தாலும், பின்பு

எங்க அத்தை அழகுக்கு, நீங்க ஓகே ரகம் தான்.. எனும் விதமாக இவளும் குறும்பாக சைகை காட்ட, சிரித்த இளங்கோவை கவனித்த சுபத்ரா, என்ன ஹர்ஷினி..? என்று ஆவலாக கேட்க,

நீ பேசாத அத்தை.. என்கிட்ட நீ சொல்லவே இல்ல போ..? என்று முறுக்கவும், ஹர்ஷினிக்கு தெரிந்து விட்டது என்று புரிந்து கொண்ட சுபத்ரா.. தடுமாற்றத்துடன் அப்பாகிட்ட சொல்லிருக்கேன்.. அவர் ஓகே சொன்னதுக்கு அப்பறம் உங்ககிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சேன் என்று வெட்கத்துடன் சொல்லவும்,

அத்தை நீங்க வெட்கப்பட்டா இன்னும் இன்னும் அழகா இருக்கீங்க.. என்று கொஞ்சிய படி அவரை கட்டிப்பிடித்து கொண்டாள். இளங்கோ அப்பா, அம்மாவிடம் பொதுவாக பேசியபடி இருந்த சந்திரனுக்கு போன் வரவும். நான் இதோ வந்துடுறேன் என்று விட்டு, அவர் பேச எழுந்து தள்ளி செல்லவும்,

என்ன சுபா இது..? அவ்வளவு தூரம் தனியாவே வண்டி ஓட்டிட்டு வந்திருக்க, இளங்கோ போன் பண்ணாலும் எடுக்கல, அதான் உன்னையும் பாத்துட்டு, அப்படியே அப்பாவையும் பாத்துட்டு போகலாம்ன்னு நாங்களும் சென்னையிலிருந்து கிளம்பி வந்துட்டோம் என்று இளங்கோவின் அம்மா அன்னபூரணி சொல்லவும்,

அவர்களின் அலைச்சலை புரிந்து கொண்ட சுபத்ரா குற்ற உணர்ச்சியுடன், இல்லம்மா, அப்பா ஹாஸ்பிடல்ல இருக்காருன்னு சொன்னதும், என்ன ஆச்சோங்கிற பயத்துல கிளம்பிட்டேன்.. என்று விளக்கம் கொடுத்தவாறே இளங்கோவை பார்த்தவர்,

அவர் கோவமாக முறைக்கவும், சாரி.. என்று சொல்ல, “இனி எப்பவும் இப்படி செய்ய கூடாது..? இது தான் பைனல்..” என்று கண்டிப்புடன் இளங்கோ சொல்லவும், ஓகே என்று சுபத்ரா சொல்லும் போதே,

அங்கு வந்த சந்திரன், “வந்ததிலிருந்து எதுவும் சாப்பிடாம இருக்கீங்க, இந்த காபியாவது எடுத்துக்கோங்க..” என்று உபசரிப்பாக சொல்லவும்,

“என்னதான் நாங்க பொழப்புக்காக மெட்ராஸ்ல இருந்தாலும், எங்க வேர் கிராமம் தான், அதுவும் எங்க பக்கத்துல நாங்க சம்மந்தியாக போற இடத்துல பரிசம் போடாம கை நனைக்க மாட்டோம் என்று பளிச்சென்று இளங்கோவின் அப்பா தண்டபாணி சொல்லிவிடவும்,

என்ன சொல்றீங்க..? சம்மந்தம் பண்ற இடமா..? என்ன சுபத்ரா இதெல்லாம்..? என்று சந்திரன் கோவமாக கேட்க,

அண்ணா.. ப்ளீஸ் கோவப்படாம பொறுமையா பேசுங்க.. நான் இந்த விஷயத்தை பத்தி ஏற்கனவே அப்பாட்ட சொல்லிட்டேன்.. என்று கெஞ்சலாக சுபத்ரா சொல்லவும்,

அப்படியா..? அப்பா என்ன சொன்னார்..?

அது.. அது.. யோசிச்சி சொல்றேன்னு சொன்னார்.. என்று தடுமாற்றத்துடன் சொல்ல

ஓஹ்.. அதான் அப்பா ஒரு வாரமா ரொம்ப யோசனையா, கவலையாவே இருந்தாரா..? “இதில் எதோ ஆச்சார்யாவிற்கு பிடிக்கல..” என்று புரிந்து கொண்ட சந்திரன்,

எதுக்கு யோசிக்கிறேன்னு சொன்னார்..? என்ன அப்பாக்கு பிடிக்கல..? என்று இளங்கோவையும், சுபத்ராவையும் கூர்மையாக பார்த்தபடி கேட்டார்,

அண்ணா நாம கொஞ்சம் உள்ள போய் பேசலாமா..? என்று சுபத்ரா சொல்லி கொண்டிருக்கும் பொதே..

“நான் 3 வருஷம் ஜெயில்ல இருந்தேன்.. கொலை குற்றத்திற்காக..?” என்று இளங்கோ பட்டென்று தைரியமாக உடைத்து விட,

அதிர்ச்சியில் கல்லாய் சமைந்து விட்டனர் சந்திரனும், ஹர்ஷினியும்.. அண்ணா..? என்று சுபத்ரா பயத்துடன் கூப்பிடவும், நீ பேசாத..? என்று விரல் நீட்டி மிரட்டியவர், இளங்கோவை ஆத்திரமாக பார்த்து,

“ஜெயிலுக்கு போன உனக்கு என் தங்கச்சி கேக்குதா..?” என்றபடி ஆவேசமாக சந்திரன் கத்தவும்,

தம்பி கொஞ்சம் பொறுமையா பேசலாம்.. என்று அன்னபூரணி சொல்ல,

இதில பொறுமையா பேச என்ன இருக்கு,..? உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா உங்க கொலைகார மகனுக்கு பொண்ணு கேட்டு எங்க வீட்டுக்கே வருவீங்க..?

என் தங்கச்சிக்கு ஒரு கொலைகாரன் மாப்பிள்ளையா..? என்ற ஆத்திரத்தில் என்ன சொல்ல வருகிறார்கள்..? என்று யார் சொல்ல வருவதையும் கேட்காமல் கோவத்தில் எகிறியவாறே இருந்தார்.

தம்பி அவசரப்பட்டு அப்படி எல்லாம் சொல்லாதப்பா.. ஏன் “என் புள்ள ஜெயிலுக்கு போச்சுன்னு கேட்டுட்டு அப்பறம் பேசுப்பா..” என்று இறைஞ்சுதலாக அன்னபூரணி கேட்டார் என்றால்,

தண்டபாணியும் மகனுக்காக பொறுமையாவே சந்திரனிடம் பேசி புரிய வைக்க முயற்சி செய்தார்.. சுபத்ராவும் “அண்ணா.. அவசரப்பட்டு எதுவும் பேசாதீங்க ப்ளீஸ்ன்னா..” என்று கெஞ்சவே செய்தார்.

முதலில் அதிர்ச்சியடைந்த ஹர்ஷினியும், இளங்கோவின் கண்களில் இருக்கும் நேர்மையை கண்டு, கண்டிப்பா எதாவது காரணம் இருக்கும் என்று புரிந்து கொண்டு, “அப்பா.. பொறுமையா பேசலாம்..” என்று சுபத்ராவுடன் சேர்ந்து கெஞ்சவே செய்தாள்.

இளங்கோவுமே நான் சொல்றதை பொறுமையா கேளுங்க.. என் பக்கம் உள்ள நியாயம் புரியும் என்று வேண்டுகோளாகவே கேட்டார்.

ஆனால் ஆத்திரத்தில் நிதானமிழந்த சந்திரன் யார் பேசுவதையும் கேட்காமல், இளங்கோ கொலைகாரன், அவனுக்கு என் தங்கச்சி கேட்குதா..? என்ற ரீதியிலே திரும்ப திரும்ப பேசவும், பொறுமையிழந்த தண்டபாணி,

தம்பி மனுஷனுக்கு முதல்ல பொறுமை ரொம்ப அவசியம், நாங்க சொல்ல வரதை கூட கேட்காம இப்படி கோவத்தில கத்தினா எப்படி..? என்று சத்தமாக அதட்டவும், அவரின் அதட்டலில் மேலும் ஆத்திரம் கொண்ட சந்திரன்,

என் வீட்டுக்கே வந்து எனக்கு புத்திமதி சொல்லறது எல்லாம் இருக்கட்டும்.. உன் கொலைகார மகனுக்கு புத்தி சொல்லி வளத்திருந்தா அவன் ஏன் இப்படி கொலைகாரானா நிக்க போறான்..? வந்துட்டார் எனக்கு புத்தி சொல்ல என்று மரியாதை இல்லாமல் பேசவும்,

கொதித்தெழுந்த இளங்கோ, எங்க அப்பாவையே மரியாதை இல்லாமல் பேசுரீங்க ..அவரை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. என்று கோவமாக பேச, பதிலுக்கு சந்திரனும் பேச, பிரச்சனை முற்றி, என் வீட்டை விட்டு வெளியே போங்க என்று சந்திரன் சொல்லிவிட,

அதுவரை பொறுமையாக கெஞ்சி கொண்டிருந்த சுபத்ரா, சந்திரன் சொன்னதை கேட்டவுடன் பொறுமை இழந்து,

அதை நீங்க சொல்ல கூடாது.. எனக்கும் இந்த வீட்ல உரிமை இருக்கு என்று கோவமாக சொல்லவும்,

ஓஹ் அந்தளவுக்கு ஆயிடுச்சா..? உனக்கு என்னை விட இவன்தான் முக்கியமா போய்ட்டானா..?

ஆமா.. அப்படித்தான்.. என்று சுபத்ரா உறுதியுடன் சொல்ல, என்ன சொன்ன..?என்ற படி அவரை அறைய கை ஓங்கவும், ஓங்கிய கையை பாதியிலே பிடித்து விட்ட இளங்கோ,

“அவங்க மேல கை வைக்கிற வேலை எல்லாம் வேண்டாம்..” என்று கோவமாக சொல்லவும், உச்ச கட்ட கோவத்தில் அறிவிழந்த சந்திரன்,

என் வீட்டுக்கே வந்து என்ன கையவாடா பிடிக்கிற..? வெளியே போடா.. என்று கத்திய படி இளங்கோவின் கையை பிடித்து இழுத்து கொண்டு கேட்டுக்கு வெளியே தள்ளவும்,

அவர்கள் வீடு இருந்த இடம் மெயின் ரோடு என்பதால் இளங்கோ தடுமாறி கீழே விழும் சமயம்,அந்த பக்கமாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று அவரின் வலது கால் மேல் ஏறிவிட்டது..

கண் இமைக்கும் நொடியில் நிகழ்ந்து விட்ட கொடூரத்தில், ஐயோ.. அம்மா.. ஏங்க.. இளங்கோ.. தம்பி என்று பலவிதமான குரல் எதிரொலித்தது, தள்ளி விட்ட சந்திரனும், அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு..” என்ற பொன்மொழியை உண்மையாக்கினார் சந்திரன்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் வந்து விட, அவர்களின் உதவியுடன் ஒரு ஆட்டோவில் இளங்கோவை ஏற்றி கொண்டு அன்னப்பூரணி, தண்டபாணி இருவரும் ஹாஸ்பிடல் கிளம்பிவிட்டனர்.

பின்னாலே இன்னொரு ஆட்டோவில் சென்ற சுபத்ராவும், ஹர்ஷினியும், அவர்கள் எந்த ஹாஸ்பிடல் சென்றார்கள், எங்கு சென்றார்கள் என்று தெரியாமல் நெடு நேரம் தேடியவர்கள், கிடைக்காமல் வீடு திரும்பினர்.

சரியாக அப்பொழுது வந்த ஆச்சார்யாவும் விஷயம் கேள்விப்பட்டு, அங்கு சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைத்து ஹாஸ்பிடலில் தேடியும், அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை.

"உன்கிட்ட நான் இதை எதிர்ப்பார்க்கலை பெரியவனே.." என்று நடந்த அத்தனையும் விசாரித்து தெரிந்து கொண்ட ஆச்சார்யா வெறுப்பாக சொன்னார் என்றால், சுபத்ராவும், ஹர்ஷினியும் அவரின் முகத்தை கூட பார்க்க மறுத்தனர்.

………………………………………………………………….



ஹாய் ப்ரண்ட்ஸ்


இன்னிக்கு ரெண்டு எபி போட்டுஇருக்கேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்கப்பா.. thank you ப்ரண்ட்ஸ்
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 23





ஆச்சார்யாவால்.. “ஒருவரமாக கோயம்புத்தூரையே சல்லடை போட்டு சலித்தும்.. இளங்கோ குடும்பத்தினர் சென்ற தடதை கண்டுபிடிக்க முடியவில்லை”.

எங்கு சென்றனர்..? எப்படி சென்றனர்..? எங்கு மாயமாக மறைந்தார்கள்..? என்று ஒரு “துப்பும் கிடைக்காமல்..?” திணறித்தான் போனார்.. அதற்கு மேல் வேறு ஊர்களில் எல்லாம் தேட அவர் உடலும் ஒத்துழைப்பு தரவில்லை.. வீட்டிலும், டாக்டரும் விடவில்லை.

சுபத்ராவும் சம்பவம் நடந்த மறுநாளே ஹர்ஷினி உடன் வர அவர்களை தேடி சென்னை கிளம்பிவிட்டார். அங்கும் அவர்கள் வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை... வீடும் பூட்டித்தான் இருந்தது.

சென்னையிலும்.. தனக்கு அவர்களை பற்றி தெரிந்த வரை எல்லா இடத்திலும் விசாரித்துவிட்டார்.. போதாதற்கு அவர்களின் “பூர்விகமான மதுரைக்கும், அவர்கள் அங்கு எச்சூழ்நிலையிலும் செல்ல மாட்டார்கள்..” என்று தெரிந்தும் எதற்கும் பார்ப்போம் என்று நேரடியாகவே சென்று விசாரித்தார்.

எங்கும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் மிகவும் சோர்ந்து, வேதனையின் உச்சத்தில் இருந்த சுபத்ராவை தேற்றுவதே ஹர்ஷினிக்கு மிக பெரிய விஷயமாக இருந்தது.

ஒருவாரம் கழித்து சந்திரனுடன் சென்னை வந்த ஆச்சார்யாவிற்கு சுபத்ராவை பார்த்ததும் மிகப்பெரிய அதிர்ச்சியே.. ஒரேவாரத்தில் மிகவும் மெலிந்து, சுத்தமாக தூக்கம் இல்லாமல், கண் சுற்றி கருவளையம் வந்து மிகவும் நொடிந்த நிலையில் இருந்தார்.

ஏற்கனவே தான் செஞ்ச தப்பை உணர்ந்து மிகவும் குற்ற உணர்ச்சியில் தவித்து கொண்டிருந்த சந்திரன், சுபத்ராவை இந்த நிலையில் பார்த்ததும் மனதளவில் நரக வேதனையை உணர்ந்தார்.

அய்யோ.. “என்னோட ஆத்திரத்தால என்ன செஞ்சு வச்சிருக்கேன் நான்.. என் தங்கச்சி வாழ்க்கை கெட நானே காரணமாயிட்டேனே.. இந்த அண்ணனை மன்னிச்சுடுமா..” என்று கதறிக்கொண்டே சுபத்ராவிடம் செல்ல, சுபத்ராவோ அவரின் முகத்தை பார்க்க கூட பார்க்க விரும்பாமல் வேகமாக ரூமிற்குள் சென்று கதவடைத்து கொண்டார்.

அன்று மட்டுமல்ல சந்திரன் அங்கிருந்த இரண்டு நாட்களும் ரூம் கதவை கூட திறக்கவில்லை. ஆச்சார்யாவும், சந்திரனும்.. எவ்வளவு முயன்றும் சுபத்ராவை பார்க்க கூட முடியாமல் தான் ஊர் திரும்பினர்.



இளங்கோவின் பக்கத்து வீட்டில் முன்னமே சுபத்ரா சொல்லிருந்ததால், “தண்டபாணி வீட்டுக்கு வந்திருப்பதை..” அவர்கள் போன் செய்து சொல்லவும், உடனடியாக கிளம்பினார்கள் சுபத்ராவும், ஹர்ஷினியும்,

அங்கு “அவர் வீட்டை காலி செய்து கொண்டிருக்கவும் அதிர்ந்த சுபத்ரா, இவர்களை பார்த்தும் பார்க்காதது போல் இருந்த தண்டபாணியிடம் சென்று என்னப்பா வீட்டை காலி பண்றீங்களா..?” என்று கலங்கிய குரலில் கேட்க,

அவரோ எங்கோ பார்த்துக்கொண்டு “ஆமாம்..” என்று சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு வேறுபுறம் செல்லவும், அவரை தொடர்ந்தவாறே

“அவர்.. அவர் இப்போ எப்படி இருக்கார்..? கால்.. கால்ல தானே அன்னிக்கு கா.. கார்.. கார்..” என்று தொடர்ந்து கேட்க முடியாமல் அழுகையில் திணறவும், அவரின் கையை ஆறுதலாக பற்றி கொண்ட ஹர்ஷினி,

ப்ளீஸ் சொல்லுங்க அங்கிள்.. அத்தை இந்த ஒருவராமா “அவருக்கு என்ன ஆச்சோ..? எப்படி இருக்காரோன்னு ரொம்ப.. ரொம்ப.. வேதனைப்பட்டுட்டாங்க..” ப்ளீஸ்.. அவர் எப்படி இருக்காருன்னு மட்டுமாவது சொல்லுங்க.. என்று சுபத்ராவின் வேதனையை அருகில் இருந்து பார்த்ததால் அவருக்காக அவரிடம் கெஞ்சவே செய்தாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த தண்டபாணி, “நல்லா இருக்கான்.. கால் ஒன்னும் பிரச்னையில்லை… அவ்வளுதானே கிளம்புங்க..” என்று இப்பொழுதும் முகம் பார்க்காமலே பேசி முடித்தவர்,

அப்போது மட்டுமல்லாமல் அவர் பொருட்களை ஏற்றி அங்கிருந்து கிளம்பும் வரையும்.. அங்கேயே இருந்த சுபத்ரா, ஹர்ஷினியை கண்டு கொள்ளவே இல்லை. “அவரின் ஒதுக்கத்தில்.. ஏதும் பேச முடியாத குற்ற உணர்ச்சியில்.. மேலும் அவர்களை பற்றி ஏதும் அறிந்து கொள்ள முடியாத தவிப்பில்” அமைதியாகவே நின்றுவிட்டார் சுபத்ரா,

ஹர்ஷினி தான் விடாமல் அவரிடம் பேச முயற்சி செய்ய.. அவரோ கடைசி வரை அதற்கு இடம் கொடுக்காமலே நிரந்தரமாக அங்கிருந்து கிளம்பியும் விட்டார். அன்று முழுவதும் அழுது கரைந்த சுபத்ராவை தேற்றுவதே ஹர்ஷினிக்கு பெருங்கவலையாக இருந்தது.

சுபத்ராவின் வேதனையை பார்த்த அவளுக்கு இளங்கோ மீது சிறிதளவு வருத்தமும் உண்டானது. “அப்பா பண்ணது கண்டிப்பா தப்புதான்.. அதுவும் அவர் இளங்கோவை வீட்டை விட்டு வெளியே தள்ளுனது.. அதனால அவருக்கு அடிபட்டது எல்லாம் மாபெரும் குற்றமே.. அதை யாரும் மறுக்கவோ.. நியாப்படுத்தவோ முடியாது தான்..”

ஆனா.. அவர் அத்தையை பற்றி யோசிச்சிருக்கலாமே.. அத்தை கண்டிப்பா மனசால ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னு அவருக்கு தெரியாமலா..? புரியாமலா..? இருக்கும்.

அப்படி இருந்தும் அவர் ஏன் அத்தையை பற்றி யோசிக்கலை..? அண்ணா பண்ண தப்புக்கு தங்கச்சிக்கு தண்டனை கொடுக்கலாமா..? என்று மனதுக்குள்ளே யோசித்து கொண்டிருந்தவள், அதையே கேள்வியாக சுபத்ராவிடமும் நேரடியாக கேட்டுவிட்டாள்.

அவளுடைய கேள்வியில் விரக்தியாக சிரித்த சுபத்ரா.. ”ஹர்ஷி.. உனக்கு எப்படி சொல்லணும்ன்னு..? எங்கிருந்து சொல்லணும்ன்னு..? எனக்கு தெரியல.. என்றுவிட்டு சில நிமிடங்கள் கண்மூடி அமர்ந்துஇருந்தவர்,

அவங்களோட சொந்த ஊர் மதுரை பக்கத்துல உள்ள கிராமம்.. நாம கூட அவங்களை தேடி போனோமே அந்த ஊர் தான்... இளங்கோ IT முடிச்சிட்டு இங்க சென்னையில இருக்கிற சாப்ட்வேர் கம்பெனியில வேலை பார்த்தார்,

அவருக்கு “கீர்த்தின்னு..” ஒரு தங்கச்சி உண்டு.. அவரை விட 12 வருஷம் சின்ன பொண்ணு, “நம்ம வீட்ல நான் எப்படி எதிர்பார்க்கமா பிறந்தேனோ அது போல..”

சின்ன பொண்ணுங்கறதால “வீட்ல எல்லாருக்கும் ரொம்ப செல்லம்.. அதனாலே ரொம்ப பிடிவாதமும் கூட..” 12த் முடிச்சிட்டு காலேஜ் சென்னையில தான் படிப்பேன்னு பிடிவாதம் பிடிக்கவும், அவளோட பிடிவாத குணம் தெரிஞ்சதால அவங்களும் வேறு வழி இல்லாம சென்னயில காலேஜ் சேர்த்தாங்க.

அவளோட காலேஜ் ப்ரண்ட்ஸ் கொஞ்ச பேர் இங்க நம்ம அகாடமியில டான்ஸ் கத்துக்கிறாங்க.. அதை தெரிஞ்சுக்கிட்டு அவளும் எப்பவும் போல டான்ஸ் கத்துக்கணும்ன்னு பிடிவாதம். அப்பறம் என்ன அவளை இங்க டான்ஸ் கத்துக்க சேர்க்க வந்தப்போதான் நான் முதன் முதல்ல இளங்கோவையும், கீர்த்தியையும் பார்த்தேன்.

அவளும் டான்ஸை ரொம்ப ஆர்வமாவே கத்துக்கிட்டா., நல்லா பேசுவா.. பிடிவாதத்தை தவிர்த்து பார்த்தா கீர்த்தி உண்மையிலே ரொம்ப நல்ல பொண்ணு தான்.

அப்போதான் இளங்கோக்கும் கல்யாணம் பிக்ஸ் ஆச்சி.. “அவளுக்கு அவங்க அண்ணான்னு உயிர்ன்னே சொல்லலாம்.. அவருக்கும் அப்படி தான்..” எல்லாமே ரொம்ப நல்லாத்தான் போயிட்டு இருந்தது.

அவங்க அண்ணா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது, இவங்க ரெண்டு பேறும் அடுத்த நாள் காலையில கல்யாணத்துக்காக ஊருக்கு கிளம்பிறவங்க..

“கீர்த்தி ஈவினிங் காலேஜ் முடிச்சிட்டு ஹாஸ்டல் போகாம இருக்கவும், வார்டன் இளங்கோக்கு போன் செஞ்சு இன்பார்ம் பண்ணாங்க..” அவரும் எல்லா இடத்திலும் தேடிட்டு, நம்ம அகடாமியிலும் தேடவும் தான் எனக்கு விஷயம் தெரிஞ்சி, நானும் அவ ப்ரண்ட்ஸ் கிட்ட விசாரிக்க அப்போதான் தெரிஞ்சுது,

அவளுக்கும், அவ கிளாஸ் ப்ரண்ட்ஸ்க்கும் சண்டை.. எதனாலன்னு பார்த்தா.. “அடுத்த நாள் ஈவினிங், அவங்க கிளாஸ் பொண்ணு பர்த்டேக்காக OMRல எதோ ரிசார்ட்ல பார்ட்டி அரேஞ் செய்து இருப்பாங்க போல,”

இவ அவங்க கிட்ட அதை பத்தி ஆர்வமா விசாரிக்க.. அவங்க “இவளை அதுக்கெல்லம் நீ சரிப்பட்டு வரமாட்ட.. நீ கிராமம் தானேன்னு ரொம்ப சீண்டி இருக்காங்க..”

அவ்வளவுதான்.. சொல்லவா வேனும்.. ஹாஸ்டல் வராம பீச்சல போய் இருந்துகிட்டு, அதை தெரிஞ்சி இளங்கோவும், நானும் பீச்சுக்கு போய் அவளை செம வாங்கு வாங்கிட்டார் இளங்கோ..

அப்படியும் அடங்காம ஓவர் பிடிவாதம் பிடிக்க, இளங்கோ கண்டிப்பாவே முடியாதுன்னு சொல்லி அவர்கூடவே அவர் ஸ்டே பண்ணிருக்கிற வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டார்.

ஆனா மறுநாள் ஈவினிங் அவ.. அவர் ஏமாந்த நேரம் பார்த்து அந்த ரெசார்ட்க்கு கிளம்பிட்டா. அவர் முதல் நாள் போல தேடிகிட்டு இங்க என்கிட்ட வரவும், நானும் விசாரிச்சு, அது எந்த ரெசார்ட்ன்னு பேர் சொல்லி அனுப்புனேன்..

அதுக்கு அப்பறம் “நடந்ததெல்லாம் ரொம்ப கொடுமையான சம்பவம்..” கீர்த்தி பிடிவாத வீம்புல.. அங்க போய்ட்டாலும், அங்க நடக்கறதை எல்லாம் பாத்துட்டு, பயந்து போய் அவளே அவங்க அண்ணனுக்கு கூட்டிட்டு போக போன் பண்ணிட்டா..

ஆனா இவர் அங்க போறதுக்குள்ள எல்லாம் கை மீறி போச்சு.. அந்த ரெசார்ட்ல இருந்த வேற பசங்க ட்ரக்ஸ் எடுத்து இருந்தாங்க போல.. போதையில இவகிட்ட வம்பு பண்ண, இவ அந்த பசங்கள அடிச்சி,

அவனுங்க இவளை பழிவாங்க கார்டெனக்கு தூக்கி போயி கொடூரமா சீரழிச்சி, கடைசியில அங்க போன இளங்கோ தேடி பிடிச்சி அவங்க கிட்ட போனப்போ அவ உடம்புல உயிரே இல்லை..

அது கூட தெரியாத அந்த மிருகங்க அவளை.. இவர் தங்கச்சியை அந்த நிலையில் பாத்து.. வெறியேறி அங்கேயே பக்கத்துல இருந்த சம்மட்டிய எடுத்து அவனுங்களை போட்டு புரட்டி எடுத்துருக்கார்..

சத்தம் கேட்டு எல்லாம் வர.. அப்பறம் என்ன, மீடியா, டிவி, நியூஸ் பேப்பர் எல்லாத்திலும் திரும்ப.. திரும்ப.. இந்த விஷயத்தை போட்டு மிச்சம் மீதி இருந்த குடும்ப மானமும் போய்.. கல்யாணமும் நின்னு போச்சு.

இவர் அடிச்சதுல ஒரு பையன் ஸ்பாட் அவுட்.. அதனால இவரை அப்பவே அரெஸ்ட் பண்ணிட்டாங்க.. எதோ இவர் நல்ல நேரம்.. ஜட்ஜ் நல்ல மனுஷனா இருக்க போய், குறைஞ்ச பட்ச தண்டனை 3 வருஷம் கொடுத்தாரு..

இதுல என்ன கொடுமைன்னா.. அவரோட சொந்த பந்தங்கள் எல்லாம் சப்போர்ட் பண்ணாம இவங்களை கை விட்டதும் இல்லாம, பொண்ணை சரியா வளக்கலை.. அந்த பார்ட்டி நடக்கிற இடத்துக்கு எல்லாம் போவானேன்.. பொண்ணு மேலயும் தப்பு இருக்குன்னு எல்லாம் பேச வெறுத்து போன அன்னபூரணி அம்மாவும், அப்பாவும் அங்க இருந்த சொத்தை எல்லாம் வித்துட்டு இங்க சென்னைக்கே வந்துட்டாங்க..

அப்போ அவங்களுக்கு நான் தான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.. இளங்கோ ஜெயில்ல இருந்து வர வரை அவங்களுக்கு தேவையானது எல்லாம் என்னால முடிஞ்சு வரை பாத்துக்கிட்டேன்.. அப்படி ஆரம்பிச்சது தான் எங்க பழக்கம்..

எனக்கும்.. இளங்கோக்கும் உள்ள விருப்பம் இப்போ ஒரு வருஷமாத்தான். அதுக்கு அப்பறம் என்னை பத்தியும் அவங்களுக்கு முழுசா எல்லாம் நானே சொல்லிட்டேன்.

அப்பாகிட்டயும் எல்லாத்தையும் சொல்லிட்டேன்.. அவரும் அவங்களை பத்தி நல்லா விசாரிச்சாரு தான் ஆனாலும் அவரால ஒத்துக்க முடியல.. இருந்தாலும் எனக்காக ஓகே சொல்ற ஸ்டேஜில தான் இப்படி எல்லாம் நடந்திருச்சி..

உண்மையிலே அவங்க ரொம்ப பாவம் ஹர்ஷினி.. எல்லார்கிட்டயும் நிறைய கேட்டுட்டாங்க.. நிறைய அவமானம், சொல்.. இப்போ உங்க அப்பா அவங்களை தப்பா பேசணுதும் இல்லாமல், வீட்டை விட்டு வெளியே தள்ளி அவமானபடுத்தி.. அடிபட்டு.. ச்சே.. என்று வெறுப்போடு சொன்னவர் எழுந்து செல்லவும்,

அவர் சொன்னதை கேட்ட ஹர்ஷினி சிலை போலே அமர்ந்து இருந்தாள்.. அவளால் தாங்கவே முடியல.. மனது மிகவும் பாரமாகி போனது.. கேட்கும் போதே இவ்வளவு வேதனை என்றால், அனுபவித்தவர்களுக்கு சொல்லவா வேண்டும்..?

“நாம பண்றது ரொம்ப தப்பு இளங்கோ..” என்று தண்டபாணி சொல்லவும், என்ன..? என்று கூட கேட்காமல் கண்மூடி படுத்து இருந்தான் இளங்கோ.

“நாம என்ன தப்பு பண்ணோம்..? இன்னிக்கு என் மகன் ஒரு காலை தொலைச்சி கட்ட கால்ல நடக்கிறான்னா..? அதுக்கு காரணமே அந்த குடும்பம் தான்..” என்று வெறுப்போடு அன்னபூரணி சொல்ல,

“அவங்க அண்ணா பண்ண தப்புக்கு அந்த புள்ள என்ன பண்ணும்..? பாவம் அந்த பொண்ணு.. ஒரே வாரத்துல ஆளே பாதியாயிட்டா.. பாக்கவே எவ்வளவு வருத்தமா இருந்துச்சி தெரியுமா..?” என்று வருத்தத்துடன் தண்டபாணி சொன்னார்.

அதுக்கு நாம என்ன செய்ய..? “அவ அண்ணா பண்ண தப்புக்கு அவ கஷ்டப்பட்றா..” இனிமேல் அந்த பொண்ணை பத்தி நீங்க பேசவே கூடாது.. “எல்லாம் முடிஞ்சது முடிஞ்சதுதான்..” நீங்க உங்க வேலையை பாருங்க என்று அன்னபூரணி சொன்னதுக்கு, எந்த வித மறுப்பும் இல்லாமல் இறுகிய முகத்தோடே படுத்து இருந்தான் இளங்கோ.

ஹர்ஷினியால் சுபத்ராவை இந்த நிலையில் விட்டு செல்ல முடியாததால் “காலேஜில் மெடிகல் லீவ் அப்ளை..” செய்துவிட்டு, மேலும் ஒருவாரம் அங்கே தான் இருந்தாள்.

இதற்கிடையில்.. “ஜெய் ஒரு முறை மட்டுமே போன் செய்து சில நிமிடங்கள் பொதுவாக பேசியிருந்தான்.” எப்பொழுதும் அவர்களுக்குக்கிடையில் போன் பேசும் பழக்கம் மிகவும் அரிது தான் என்றாலும், இம்முறை ஹர்ஷினி மனதளவில் மிகவும் ஜெயயை தேடினாள் என்றே சொல்லலாம்.

சில நிமிடங்கள் பேசிவிட்டு அவன் வைக்கவும், “ஏன் இன்னும் பேசினால் தான் என்ன..? என்று மனம் வெகுவாக முறுக்கி கொண்டது.” இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தி இருந்தாலாவது, எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அவளே போன் செய்து பேசியிருக்க முடியும்.

ஆனால்.. இப்பொழுது போன் செய்து கூட பேச முடியாமல், அவனை பார்க்க கூட முடியாமல் மனதளவில் அவனை மிகவும் தேடினாள்.

இந்த இடைப்பட்ட நாட்களில் தான் அனுபவித்த துயரை, மனப்பாரத்தை, அவனை கட்டிக்கொண்டு அழுது தீர்க்க வேண்டும் என்றே தவித்தாள்..

தன்னை சுற்றி அத்தனை பேர் இருந்தும், மனம் அவனை தான் தேடியது..

அவன் அருகாமை தான் கேட்டது..

அவன் தோள் சாயத்தான் ஏங்கியது..

அவனிடம் தன் மனபாரத்தை இறக்கி வைக்க தான் தோன்றியது..

தாத்தா டான்ஸ் ஆடக்கூடாதென்று சத்தியம் வாங்கிவிட்டதை அவனிடம் சொல்லி ஆறுதல் கேட்க தான் விழைந்தது..

சுபத்ரா ஆரம்பித்து.. கீர்த்தி வரை தன்னுடைய மனதில் தேங்கி விட்ட அழுகையை அவனிடம் தான் சொல்லி மனதார அழச்சொன்னது..

அவளின் அந்த தவிப்பை போக்குவது போல் சுபத்ராவே அவளை காலேஜ் கிளம்பும் படி கட்டாயப்படுத்தி அனுப்பிவிட, மிகுந்த ஏக்கத்தை சுமந்தவாறே அவன் எப்பொழுதும் அமரும் மரத்தடி மேடைக்கே நேராக சென்றுவிட்டாள்..

எதிர்பாராமல் வந்தவளை.. முதலில் தன் ஆசை தீர பார்த்த ஜெய்.. அதன் பிறகே “அவளின் கண்களில் தெரிந்த தனக்கான அளவில்லா தேடலை புரிந்து கொண்டவனின் மனம்..” அதை விட அதிகமாக தான் அவளை தேடியதை அவளிடம் வெளிப்படுத்த மனம் பரபரத்தது..

....................................................................


ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போட்டுட்டேன்.. படிச்சுட்டு மறக்காம உங்க கருத்தை சொல்லுங்க.. thank you ப்ரண்ட்ஸ்
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 24



ஹர்ஷினியின் கண்களில் தெரிந்த தேடலில், அவளையே காதலோடு பார்த்து கொண்டிருந்த ஜெயிடம், என்னடா தில்லானா அம்மிணி இங்கேயே நிக்கிது என்று குமார் சந்தேகமாக கேட்க, சுதாரித்து கொண்ட ஜெய்,

நான் தாண்டா.. அவ ப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லி “என்ன பாக்க வர சொல்லி சொல்லிருந்தேன்”.

நீ ஏண்டா அந்த அம்மினியை வர சொன்ன..?

ம்ம்.. அதுவா.. ஆஹா “நாங்க டான்ஸ் ஆடுன சிடி அவளுக்கு இன்னும் கொடுக்கல இல்ல.. அதான் அதை வாங்க தான் வர சொல்லிருந்தேன்”, என்று வேகமாக கூறியவன்,

அடுத்து அவன் பேசுமுன், நான் லேப்ல தான் சிடி வச்சிருக்கேன்.., போய் எடுத்து கொடுத்துட்டு வந்திறேன்டா.. என்றவன், ஹர்ஷினியை நெருங்கி,

"என்கூடவே வா.." என்று விட்டு முன்னாள் செல்ல, அவனை பின்தொடர்ந்து சென்றவள், அவன் லேபிற்குள் நுழைந்து லேசாக கதவை சாத்தவும், எதுவும் பேசாமல் அவனை ஏக்கத்தோடு பார்த்தவாறே நின்றாள்.

அவளுக்கு அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்து, அவன் நெஞ்சின் மீது சாய்ந்து தனக்கான ஆறுதலை தேட மிகவும் தவிப்பாக இருந்தாலும், எந்த உரிமையில் அவனை நெருங்குவது என்ற தயக்கத்தோடு அவனை பார்த்தவாறே நிற்கவும்,

அவள் கண்கள் வெளிப்படுத்திய ஏக்கத்தை, தவிப்பை புரிந்து கொண்ட ஜெய், அவளை நெருங்கி நின்றவாறே,

என்ன ஆச்சு ஹர்ஷ்..? ஏன் இப்படி தவிப்பா நிக்கிற..? என்று பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் கேட்க,

நான் எதிர்பார்க்கறதை எப்படி உங்ககிட்ட சொல்ல முடியும்..? என்ற பார்வையை பார்க்க, அவளின் எண்ணத்தை புரிந்து கொள்ள முடியாத ஜெய் மேலும்,

ஏதா இருந்தாலும் சொல்லு..? அதுக்கு நாம என்ன செய்ய முடியும்ன்னு யோசிக்கலாம்..? என்று “அவளின் தாத்தா டான்ஸ் ஆடக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிவிட்டததுக்காக தான் வருத்தப்படறா போல..” என்று நினைத்துக்கொண்டு கேட்டான்.

ஜெய் சொன்னதை கேட்ட ஹர்ஷினிக்கு அவனின் காதலை நினைத்து கர்வமாக இருந்தாலும், அந்த காதலை அவன் வார்த்தைகளால் தன்னிடம் வெளிப்படுத்தாத வரை, அவன் காதலை அனுபவிக்க முடியாத தன் நிலைய நினைத்து துயரம் கொண்டவள், ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாக நிற்கவும்,

அவளின் தவிப்பிற்கான காரணம் தெரியாமல், இல்லை வேற எதாவது பிரச்சனையா இருக்குமோ..? என்ற பயத்தில் என்னடி ஆச்சு..? ஏன் இப்படி எப்படியோ இருக்க..? வாய திறந்து தான் சொல்லேண்டி..? என்று அவளிடமே கோவப்பட,

அவனின் சொன்னால் தானே தெரியும்..? என்ற கோவத்தில் பாதிக்கப்பட்ட ஹர்ஷினி, அவனை அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் கிளம்ப பார்க்க,

அவளின் பார்வையில் தன் தவறை உணர்ந்த ஜெய், “ச்சு.. எனக்கு இவகிட்ட மட்டும் தான் இப்படி டக்கு.. டக்குன்னு.. கோவம் வந்து தொலையுது, பொறுமையே இல்லடா உனக்கு.. ஏற்கனவே மனசு கஷ்டத்துல இருக்கிறவகிட்டே போய் கோவப்பட்றே”, என்று தன்னையே நொந்தவன் அவளின் கையை பிடித்து தடுத்தவாறே,

இல்லடி.. நீ கஷ்டப்படவும், என்ன ஆச்சோ..? அப்படிங்கிற பயத்துல தான் கோவப்பட்டுட்டேன், என்று அவளிடம் சமாதானமாக பேசியவன், அவளின் கண்களை பார்த்தாவறே,

நீ என்கிட்ட எதையோ எதிர்பாக்கிற..? ஆனா அது என்ன அப்படின்னு தான் என்னால கண்டுபிடிக்க முடியல.. நீயே சொல்லிடு ஹர்ஷ் என்று கேட்க, அவனின் தொடர் கேள்வியில் கடுப்பானவள்,

சொல்லு..சொல்லுன்னு என்னதான் சொல்ல நான்..? ஒரு பொண்ணாய் இருந்துகிட்டு நான் எதிர்பார்க்கிறதை நானே எப்படி சொல்ல முடியும்..? என்று மனதுள் பொறுமியவள், அவனிடம் இருந்து தன் கையை விடுவித்து கொண்டு,

நான் ஒன்னும் உங்ககிட்ட இருந்து எதிர்பாக்கலை..? என்று சிடுசிடுத்து விட்டு மறுபடியும் கிளம்பவும்,

ஏய் என்னடி..? என்ன கேட்டுட்டேன்னு இப்படி கடுப்படிக்கிற..?

என்ன ஆச்சு..? ஏன் திடீர்னு கோவப்பட்றா..? என்று புரியாமல் கேட்க, ஆத்திரமடைந்த ஹர்ஷினி,

ம்ம்.. நீங்க ஒண்ணும் தப்பா கேட்கல.. நான் தான் தப்பு, உங்ககிட்ட போய் எதிர்பார்த்தேன் பாருங்க என்ன சொல்லணும்..?

அதான்.. அதையே தானே நானும் கேட்கிறேன்.. என்கிட்ட என்ன எதிர்பாக்கிறேன்னு சொன்னாத்தானே நான் செய்ய முடியும்..? என்று அவளின் ஆறுதல் தேடும் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமல் கேட்டான்,

அவனின் கேள்வியில் கொந்தளித்த ஹர்ஷினி,

ம்ம் எனக்கு உங்களை இறுக்கி கட்டிப்பிடிச்சுக்கிட்டு, உங்க நெஞ்சு மேல சாய்ந்துகிட்ட மனசார அழணும் போல இருக்கு, உங்க தோள்ல சாய்ந்து என் மனப்பாரத்தை இறக்கணும் போல இருக்கு.. இப்படி நிறைய ஏக்கம் இருக்கு..

ஆனா இதையெல்லாம் எந்த உரிமையில் நான் செய்ய..? நீங்க தான் என்கிட்ட உங்க காதலை சொல்லக்கூடாதுன்னு குறிக்கோளா இருக்கீங்களே..?

அதுகூட பரவாயில்லை.. என்னடா ஒருத்தி காலேஜ் வந்தே மூணு வாரத்துக்கு மேல ஆச்சு.. என்ன ஆச்சோ..? ஏன் வரலன்னு எதாவது கண்டுகிட்டீங்களா.. இல்ல ஓரு வார்த்தை தான் போன் செஞ்சி கேட்டீங்களா..?

முதல்ல ஒரு நாலு நாள் பண்ணதோடு சரி, அதுக்கப்புறம் ஒரு டைம் மட்டும் போன் பண்ணிட்டு.. அதுவும் ஒரு ரெண்டு, மூணு நிமிஷம் பேசனத்தோடு சரி.. ஏன் இன்னும் கொஞ்சநேரம் என்கிட்ட பேசுனா குறைஞ்சா போயிருவீங்க..?

இப்போ மட்டும் வந்து ரொம்ப அக்கறையா என்ன ஆச்சுன்னு கேட்டுகிட்டு இருக்கீங்க..? சொல்ல முடியாது.. போங்க.. என்று உணர்ச்சி வேகத்தில் தன் ஆதங்கத்தை கொட்டி கொண்டிருந்தவள்,

ஜெய் தன்னை மிகவும் நெருங்கி வரவும் தான், சுயத்திற்கு வந்தவள், அய்யோ.. ஆத்திரத்துல என்ன செஞ்சு வச்சிருக்கேன்.. எல்லாத்தையும் நானே சொல்லிட்டேனே,,? என்று நினைத்தவாறே,

முகம் சிவந்து, கண்கள் தாழ்ந்து, படபடக்கும் இதயத்துடன், மெலிதான நடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தவளை மிக மிக நெருங்கிய ஜெய், அவளின் காதருகில் குனிந்து, உதடுகள் உரச..

என்ன பாருடி.. என்று கிறக்கமாக சொல்லவும், முதன் முதலாக ஒரு ஆணின் ஸ்பரிசத்தை, அதுவும் “தன் மனங்கவர் மன்னவனின் ஸ்பரிசத்தை தன் உடல் முழுவதும் உணர்ந்த ஹர்ஷினி” மேலும் நடுங்கியவாறு, கைகளை இறுக்கி பிடித்து கொண்டு, கண்களை மூடிக்கொள்ளவும்,

அவளின் நடுக்கத்தை, இன்பமான தவிப்பை மிக அருகில் ரசித்து பார்த்த ஜெய், அவளின் இறுக்கி பிடித்த கைகளை தன் கை கொண்டு விடுவிக்கவும், தன் ஸபரிசத்தால் சிலிர்த்த அவளை ரசனையாக பார்த்தபடி,

அவளின் ஆட்காட்டி விரலில் இருந்து உள்ளங்கை வரை தன் ஒரு விரல் கொண்டு கோடிழுத்தவன், அங்கேயே தேங்கி தன் விரலால் வட்டம் போட்டு கொண்டே,

“என்ன நிமிந்து பாருடி..” என்று சொல்லவும், மறுப்பாக தலையசைத்த ஹர்ஷினி, அவனின் கையிலிருந்து தன் கையை உருவ பார்க்க,

ம்ஹூம்.. நீ முதல்ல என்னை நிமிந்து பாரு.. அப்பறம் உன் கையை விடறேன் என்று குறும்பாக பேரம் பேசினான், அவன் உள்ளங்கையில் வட்டம் போடுவதால் கூசும் தான் கையை இழுக்க முடியாமல் தவித்தவள்,

அய்யோ.. கோவத்துல எல்லாத்தையும் உளறிட்டு, இப்போ எப்படி அவர் முகத்தை பார்க்கிறது..? “ம்ஹூம்..” என்று மறுப்பாக தலையசைக்க, “என்னை பாக்க வைக்கிறேண்டி” என்றவாறே மேலும் நெருங்க,

ஐயோ.. என்ன செய்ய போறாரு..? இவ்வளவு கிட்ட வராரே..? என்று பரிதவிப்புடன் நின்றவளை.. காதலாக பார்த்தபடி,

“தன்னை முதலில் கவர்ந்த.. அவளின் மூடிய கண்களில் மேல் தன் முதல் இதழ் முத்தத்தை அழுத்தமாக பதிக்க”,

அவனின் எதிர்ப்பாரா செயலில் அதிர்ந்த ஹர்ஷினி, வேகமாக கண் திறந்து குறுஞ்சிரிப்புடன் நின்றிருந்தவனை நம்பமுடியாமல் பார்த்தாள்.

என்னடி.. ரொம்ப அதிர்ச்சியா பாக்குற..? இனி இதெல்லாம் அடிக்கடி நடக்கும்.. பழகிக்கோ..என்று உல்லாசமாக, சொல்ல, ம்க்கும்.. ரொம்பத்தான் என்றபடி ஹர்ஷினி தன் உதட்டை சுழிக்கவும்.

அவளின் சுழித்த உதட்டை தன் விரலால் சேர்த்து குவித்து பிடித்தவன், என்னடி ரொம்பத்தான் சுழிக்கிறா..? ஓஹ் இங்க கொடுக்கலன்னு கோவமா..? என்று அவளின் குவித்த உதட்டை தாபமாக பார்த்தபடி கேட்டான்,

அவனின் கேள்வியில் கடுப்பான ஹர்ஷினி, கையால் அவனிடமிருந்து தன் உதட்டை பறித்தவள், முதல்ல தள்ளி நில்லுங்க.. என்று படபடக்கவும்,

ஓஹ்.. இன்னும் உன்கிட்ட தள்ளி வரணுமா..? என்று கேட்டவாறே இன்னும் அவளை நெருங்கவும்,

அச்சோ.. ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க.. தள்ளி நில்லுங்க..

அதெல்லாம் முடியாது.. எது பேசறதா இருந்தாலும் இப்படியே பேசு.. என்று ஒரு இன்ச் கூட நகராமல் உரிமையாக சொல்ல,

இத்தனை மாசமா பேசக்கூட இல்லாம இருந்துகிட்டு இப்போ வந்து ரொம்பத்தான் உரிமை கொண்டாடுறாரு..? என்று நினைத்தவள்,

ரொம்பத்தான் உரிமையா பேசுறீங்க.. அப்புறம்.. அப்பறம்... என்று அவன் முத்தம் கொடுத்ததை சொல்ல முடியாமல் திணறியவள், கண் மீது கை வைத்து, இதையெல்லாம் செய்றீங்க..? என்று கேட்க,

மெலிதாக சிரித்த ஜெய், எதையெல்லாம் செஞ்சேன்..? என்று கேட்டவாறே அவளின் கை விரல்களை தன் விரல்களோடு இறுக்கமாக கோர்த்தான், அவனின் கை இறுக்கத்தில்,

ஸ்ஸ்.. ஏன் இப்படி..? கையை விடுங்க.. என்று இன்பமான வலியில் மெலிதாக முணங்க,

ஏன் அப்படி கேட்ட..? என்று கேட்க, எதை கேட்டேன்..? என்று இப்போது கேட்டதையே மறந்து புரியாமல் பார்த்தவளை, ஆசையோடு பார்த்தவன், ஏன் உரிமையை பேசுறீங்கன்னு கேட்டையே..?

அப்பறம்..என்று சொன்னவன், டக்கென்று மறுபடியும் அவளின் கண் இமைகளின் மேல் முத்தம் வைத்துவிட்டு, நான் இப்படி முத்தம் கொடுத்ததை ஏன் கொடுத்தீங்கன்னு கேட்ட இல்ல..? அதான் ஏன் அப்படி கேட்ட..? எனக்கு இதையெல்லாம் செய்ய உரிமை இல்லங்குறியா..? என்று காதலனான கோவத்தோடு கேட்டான்,

ஆமாம்.. உங்களுக்கு என்ன உரிமை இருக்கு..?

ஏன் எனக்கு உரிமை இல்ல..?

எப்படி உரிமை இருக்கு.. நீங்க தான் இன்னும் உங்க காதலை என்கிட்ட சொல்லவே இல்லையே..?

ஏன் நான் தான் முதல்ல சொல்லனுமா..? நீ உன் காதலை சொல்ல மாட்டியா..? என்று வம்பிழுத்தான், அதை புரிந்துகொள்ள முடியாத ஹர்ஷினி,

ஆஹான்.. நான் எப்படி சொல்லுவேன்.. எனக்கு.. என்னால.. எப்படி முடியும்..? என்று திணறவும்,

ஏன் முடியாது..? நமக்குள்ள யார் சொன்னா என்ன..? “இன்பாக்ட் முதல்ல எதுக்கு காதலை சொல்லணும்..? நாம ரெண்டு பெரும் லவ் பண்றது நமக்கு தெரிய தானே செய்யும், அப்பறம் எதுக்கு அதை வேற சொல்லுவானேன்..?” என்று கண்களில் குறும்புடன் சீரியசாக கேட்டான்,

அவனின் கேள்வியில் காண்டான ஹர்ஷினி, “அதானே.. ஏன் சொல்லணும்..? சொல்லவே வேண்டாம்.. நீங்களே உங்க காதலை பத்திரமா வச்சிக்கோங்க..” என்று சிடுசிடுக்கவும், சத்தமாக சிரித்த ஜெய்,

ஏண்டி.. நான் இப்போ உன்கிட்ட என் லவ்வை சொன்னாதான்.. உனக்கு நாம லவ் பண்ற பீல் வருமா..? என்று கேட்க,

“லவ்வை சொல்றதுக்கே இந்த அக்கப்போறா.. போயா நீ ஒன்னும் சொல்லவே தேவையில்லை.. என்று கடுப்பாக முகத்தை திருப்பி கொண்டாள் ஹர்ஷினி. திரும்பிய அவளின் முகத்தை, கன்னத்தை பிடித்து தன்னை பார்க்க செய்த ஜெய்,

இப்போ ஓகேவா..? என்று கேட்க, என்ன ஓகேவா..? என்று விழித்தவளை, தன்னோடு சேர்த்து இறுக்கி கட்டி பிடித்தவன்,

உனக்கு இப்போ அழணும் போல இருக்கா..? என்று கேட்க, முதலில் புரியாமல் யோசித்தவள், புரிந்த பின் தானகாவே கண்கள் கலங்கியது.. ஆனால் “இது காதலின் கண்ணீர்..”

தன் மார்பு சட்டை ஈரமாவதை உணர்ந்து அப்படியே சிறிது நேரம் நின்றவன், பின் அவளை தன்னிடம் இருந்து பிரித்து, “போதும்டி அழுதது..” என்றவாறே அவளின் கலைந்த தலை முடியை ஒதுக்கி, கண்களை தொடைத்தவன்,

என்னை பாரு ஹர்ஷ்.. என்று அழுத்தமாக சொல்லவும், அவனின் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

“உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலைடி..” என்று அதிருப்தியாக சொல்ல, என்ன.. நான் என்ன செஞ்சேன்..? என்று அவன் அதிருப்தியில் கலங்கியவள் கேட்க,

“உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு.. என்னை கட்டிப்பிடிக்க, என் தோள்ல சாய்ஞ்சு அழ.. நினைச்ச நேரத்துல என்கிட்ட பேச.. உன்னோட கஷ்டத்தை என்கிட்ட சொல்ல.. இன்னும் சொல்லபோனா, உன்னை தவிர இந்த உலகத்திலே யாருக்கும் அந்தளவு உரிமை இல்லன்னு கூட சொல்லலாம்.. அதே போல தான் நீயும் எனக்கு..”,

ஆனா நீ உன்னோட கஷ்டத்தை என்கிட்ட சொல்ல, என்னை நெருங்க அவ்வளவு தவிக்கிற.. ஏன் தெரியுமா..? “உனக்கு ஒரு மூணு வார்த்தை தான் தேவை.. இது தான் எனக்கு கஷ்டமா இருக்கு..” என்று சொன்னான்,

அவனின் பேச்சில், ஒரு வேளை தான் தான் தவறோ..? ஆனால்.. லவ்வை எக்ஸ்பிரஸ் பண்ணா தானே..? என்று அவளின் வயது காரணமாக குழப்பமாக யோசித்தவளை பார்த்து புரிந்து கொண்டவன்,

ம்ம்.. உனக்கு நான் சொல்றது இப்போ புரியாது.. ஓகே லீவ் இட்.. என்றவன், இனி இந்த மாதிரி இருக்க மாட்ட தானே.. ஏதா இருந்தாலும் என்கிட்ட எந்தவிதமான தயக்கமும் இல்லாம வருவ தானே..?

ஆமா.. ஆனா.. நீங்க இன்னும்.. இன்னும் லவ் சொல்லவே என்று முடிக்க முடியாமல், அவளின் இதழ்களை தன் இதழ் கொண்டு அழுத்தமாக மூடியவன், தன் காதலை முத்தத்தின் மூலம் அவளுக்கு உணர்த்தினான்.

இனி என்கிட்ட லவ் சொல்ல சொல்லி கேட்ட இதுதான் நடக்கும்.. என்றவாறே மேலும் முத்தமிட்டவன், அதிர்ச்சியோடு தன்னை பார்த்தவளிடம்,

“நான்.. முதல்லே உன்கிட்ட என் காதலை சொல்ல வந்தப்போ நீ தான் அந்த ராஜீவை பத்தி பேசி கெடுத்த..”,

சோ.. இனி எனக்கு எப்போ தோணுதோ அப்போதான் சொல்லுவேன்.. பட் எனக்கு இன்னிக்கு சொல்ல தோணலை.. என்று தோரணையாக சொன்னான்

அவனை முறைத்து பார்த்த ஹர்ஷினி, “அப்போ எனக்கு அந்த கிஃப்ட்டையும் கொடுக்க மாட்டீங்க.. அப்படித்தானே..?” என்று ஆத்திரமாக கேட்டவுடன்,

அவள் கிஃப்டை மறக்காமல் இன்னும் எதிர்பார்ப்போடு கேட்கவும், முதலில் மகிழ்ந்தவன் கண்களில் ஓர் நொடி தோன்றி மறைந்தது வேதனை..

ஆமா.. அதெப்படி தருவேன்.. லவ் சொன்னாத்தானே கிப்ட் தரணும்.. ஏன் நீ எனக்கு ஏதாவது கிப்ட் வாங்கி வச்சிருக்கியா..? அப்போ சரி.. நீ இவ்வளவு ஆசை படறதால.. நீ வேணும்ன்னா என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணலாம்.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல என்று இன்னும் அவளை வம்பிழுத்தான்.

அவனுக்கு.. அவளிடம் காதலை சொல்ல கூடாது என்றெல்லாம் இல்லை, ஆனால் சூழ்நிலை அது போல் அமையவும் தான் அவன் சொல்ல சென்று சொல்லாமலே விட்டது..

ஆனால் அதற்கு பிறகு ஹர்ஷினி.. தன்னிடம், சொல்வானோ..? என்று தினம்.. தினம்.. எதிர்பார்க்கவும் தான் , அவனுக்கும் காதலை சொல்லாமல் காதலிப்பதும்.. ஹர்ஷினியை சீண்டுவதும் மிகவும் பிடித்திருந்தது என்றே சொல்லலாம்.. இதுவும் நல்லதான்பா இருக்கு.. என்று நினைத்தவன் வேண்டுமென்றே அவளிடம் காதல் சொல்லாமல் இருந்தான்.

ஆனால் இப்பொழுது.. அவன் ஹர்ஷினியிடம் காதல் சொல்வதை பற்றியே நினைக்கவில்லை என்றே சொல்லலாம்.. இன்னும் சொல்ல போனால் அவனுடைய எண்ணம் முழுவதும் கடந்த நாட்களில் வேறாக தான் இருந்தது.

அதனாலே முதலில் அவனால் ஹர்ஷினியின் எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்த பின்னால் அவளை "அவளின் மனஅழுத்தத்திலிருந்து" வெளியே கொண்டு வர நினைத்து தான் அவளை வம்பிழுத்தான்.

அவன் சொன்னதை கேட்டு கடுப்பான ஹர்ஷினி, இவர் கண்டிப்பா சொல்ல போறதில்லை, என்னை வம்பிழுக்கவே இப்படி பன்றாரு.. என்று புரிந்து கொண்டவள், அவனை முறைத்துவிட்டு செல்லவும், சத்தமாக சிரித்தான் ஜெய் ஆகாஷ்.



………………………………………………..





ஹாய் ப்ரண்ட்ஸ்..




அடுத்த எபி போட்டுட்டேன்.. படிச்சிட்டு இந்த லவ் எபி எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்கப்பா.. thank you சோ மச் பார் யுவர் சப்போர்ட் ப்ரண்ட்ஸ்..
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 25 1



ஹர்ஷி.. “பர்ஸ்ட் செமஸ்டர் எக்ஸாம் சர்குலர் போன வாரமே வந்துருச்சி.. நான் மெசேஜ் அனுப்பி இருந்தனே பாக்கலியா நீ..” என்று ஜோதி கேட்க..

பாத்தேன் ஜோதி.. அதை பாத்துட்டு தான் அத்தை என்னை உடனே அனுப்பிட்டாங்க..

ஓஹ்.. உங்க அத்தைக்கு உடம்பு முடியல சொன்ன இல்ல.. இப்போ எப்படி இருக்காங்க..?

ஓகே.. பரவாயில்ல.. என்று முடித்துவிட்ட ஹர்ஷினி, இப்போ நான் “எக்ஸாம்க்கு படிக்க நோட்ஸ் தான் பாக்கணும்..” என்று சலிப்பாக சொன்னாள்.

அதெல்லாம் எல்லா சப்ஜெக்டும் சேர்ந்து போதும்.. போதும்ன்ற அளவுக்கு நிறைய இருக்கு.. என்று செல்வி புலம்ப,

ம்ம்.. அப்போ இனி எழுதறது எல்லாம் கஷ்டம்.. பெட்டெர் உங்க நோட்ஸை எல்லாம் ஜெராக்ஸ் எடுத்துற வேண்டியதுதான்..

அதுவும் கரெக்ட் தான் ஹர்ஷி.. என்று செல்வி சொல்ல, அப்போ ஓகே.. உங்க நோட்ஸை எல்லாம் கொடுங்க.. இப்போ ப்ரீ பீரியட் தானே.. போய் ஜெராக்ஸ் எடுத்துட்டு வந்துரலாம்.. என்று நோட்ஸை வாங்கிக்கொண்டு செல்வி, ஜோதி உடன் வர சென்று கொண்டிருந்தவள்,

“ஆஃபீஸ் அட்டெண்டர்..” வந்து உன்னை பார்க்க விசிட்டர் வந்திருக்காங்க எனவும், என்னை பாக்க இங்க யாரு வரப்போறாங்க.. என்று யோசித்தவாறே, நீங்க போயிட்டே இருங்க.. நான் யாருன்னு பாத்துட்டு வந்துடுறேன் என்று தோழிகளிடம் சொல்லிவிட்டு, அட்டெண்டர் உடன் சென்றவள்,

அங்கு “காளிதாசை” காணவும், வெறுப்புடன் திரும்பி நடக்கவே ஆரம்பித்துவிட்டாள்.

ஹர்ஷினி.. நான் சொல்றதை கொஞ்சமா கேளுமா.. என்று வேகமாக அவரும் பேசிக்கொண்டே உடன் வர.. காதில் விழாதவள் போல் வேக நடையுடன் சென்று கொண்டிருந்தவளின் வழியை மறைத்த காளிதாஸ்,

ப்ளீஸ்.. ப்ளீஸ் “ஹர்ஷினி ஒரு 2 மினிட்ஸ்..” என்று இறைஞ்சுதலாக கேட்டவண்ணம் வழி மறைத்து நிற்கவும், அவரின் பின்னால் வந்த காலேஜ் சேர்மேன்.

“ஹர்ஷினி.. அவருக்கு பேச ஒரு வாய்ப்பு கொடு..” என்று அதிகாரமாக இல்லாமல் பொறுமையாகவே கேட்டார். அளவுகடந்த கோவத்தில் கொதித்து கொண்டிருந்த ஹர்ஷினி, தன் கையை கட்டி கொண்டு காளிதாசை வெறித்து வெறுப்புடன் பார்த்தாள்.

“உன்னோட வெறுப்பு, கோவம் எல்லாம் எனக்கு புரியுது.. நான் இந்த வெறுப்புக்கு தகுதியானவன் தான்..” என்று வேதனையுடன் காளிதாஸ் சொல்ல,

“இது என்ன புது நாடகம்..” என்பது போலே பார்த்தாள் ஹர்ஷினி. அவளின் பார்வையிலே அவளின் எண்ணத்தை உணர்ந்து கொண்ட காளிதாஸ், விரக்தியாக சிரித்தவாறே,

“நான் உங்க அத்தைக்கு ரொம்ப பெரிய துரோகம், அநியாயத்தை பண்ணிட்டேன்., அது எனக்கு அப்போ புரியல, சபலம்.. ஆனா அதை காலம் கடந்து உணர்ந்து ரொம்ப.. ரொம்ப வேதனை பட்டிருக்கேன்.. அதனாலே உங்க தாத்தா என் தொழிலை முடக்கனப்போ, அதை மறுபடியும் செய்யணும்ன்னு எனக்கு தோணல..”

ஆனா இப்போ “என்னோட தப்புக்கெல்லாம் பரிகாரமா, பிராய்ச்சித்தமா.. உன்னை பெரிய டான்சரா ஆக்கணும்ன்னு நினக்கிறேன்..” இதை தான் அன்னிக்கும் உங்க தாத்தாகிட்டேயும் கேட்டேன். ஆனா.. அவர்.. ம்ம்ம் என்று பெருமூச்சு விட்டவர், இப்போ உன்கிட்ட இதை வேண்டுகோளாவே கேட்கிறேன்..” என்று உண்மையாகவே கேட்டார்.

அவன் சொல்றது எல்லாம் உண்மை தான்... அவன் இத்தனை வருஷம் ரொம்பவே வருத்தப்பட்டுட்டான் .. “என்னோட ப்ரண்ட் தான் காளிதாஸ்,” சோ எனக்கு நடந்தது எல்லாமே தெரியும்..

நான் அப்பவே இதெல்லாம் ரொம்ப பெரிய பாவம்.. வேண்டாம்டான்னு நிறைய சொன்னேன்.. இவன் கேட்கல.. “ஓகே பாஸ்ட் இஸ் பாஸ்ட்..” அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடு ஹர்ஷினி.. என்று காலேஜ் சேர்மேனும் சொன்னார்.

இருவரையும் வெறித்தது பார்த்தவண்ணம் நின்றுஇருந்த ஹர்ஷினி, “எல்லா பாவத்துக்கும் பிராய்ச்சித்தம் கிடையாது..” இனி இதைப்பத்தி எப்பவுமே என்கிட்ட பேசாதீங்க.. என்று உறுதியாக சொல்லிவிட்டு வந்தவளின் எண்ணம் முழுவதும் சுபத்ராவே..

இப்போ வந்து இவர் பரிகாரம் செஞ்சா எங்க அத்தை இழந்தது எல்லாம் கிடைச்சிடுமா.. இல்லை எங்க பாட்டிதான் திரும்பி வருவாங்களா..? இப்பவும்.. இவராலா தானே “என்னோட கனவும்.. கனவாவே போயிடுச்சே..” என்று மனதுக்குள் கொதித்தவாறே நேரே ஜெராக்ஸ் எடுக்குமிடம் சென்றாள்.

என்ன ஆச்சு ஹர்ஷி..? ஏன் இவ்ளோ கோவமா இருக்க..? என்று இவளின் கோவமான முகத்தை பார்த்து ஜோதி கேட்கவும், ச்சு.. ஒண்ணுமில்லை விடு.. ஜெராக்ஸ் எடுக்கலாமா..? அதெல்லாம் எடுக்க கொடுத்துட்டோம்.. இப்போ கொடுத்துருவாங்க.. என்று செல்வி சொல்லி கொண்டிருக்கும் போதே, அங்கு வந்தனர் “ஜெய் அண்ட் கோ..”

முத்தண்ணே.. என்று ஜெராக்ஸ் எடுப்பவரை ராகம் இழுத்து கொண்டே வந்தவர்கள், இவர்களை பார்க்கவும், “இங்க என்ன பண்றீங்க..?” என்று குமார் சீனியர் கெத்துடன் அறிவுபூர்வமான கேள்வி கேட்கவும்,

இந்த “கொரில்லா..” கேட்கிற கேள்வியை பாருடி.. ஜெராக்ஸ் எடுக்கிற இடத்துல வந்து என்ன பண்றீ ங்கன்னு கேட்குது.. என்று ஜோதி முணுமுணுக்கவும்,

ஆமாடி.. இந்த “ஜோக்கருக்கு மனசுல பெரிய ரவுடின்னு நினைப்பு..” என்று செல்வியும் சொன்னதை கேட்ட ஹர்ஷினி அதுவரை இருந்த இறுக்கம் மறைத்து மெலிதாக சிரிக்கவும்,

என்னடா.. இந்த தில்லானா எதுக்கு சிரிக்குது..? என்று குமார் சந்தேகமாக கேட்க, அவளையே பார்க்காமல் பார்த்து கொண்டிருந்த ஜெய், குமார் கேட்டதில் ஹர்ஷினியிடம் பேச வாய்ப்பு கிடைக்க,

“ஒய் எதுக்கு சிரிக்கிற..? குமார் கேட்டதுல என்ன தப்பு.. அவன் இந்த மாதிரி அறிவுபூர்வாமான கேள்வி எல்லாம் கேட்டா உடனே நீங்க சிரிச்சிருதா..?” என்று கேட்க,

“மச்சி நீ எனக்காக பேசுறியா..? இல்லை என்னை கலாய்க்கிறாயா..?” என்று குமார் சந்தேகமாக கேட்கவும், “என்னா குமாரு.. இப்படி கேட்டுட்ட.. அவன் உன்னை கலாய்க்கவே இல்லை” என்று செல்வம் சிரிப்புடன் சொல்ல, மற்றவர்களும், ஆமாடா குமாரு.. என்று கோரஸாக இழுக்கவும்..

“என்னை அசிங்கப்படுத்த யாருமே தேவையில்லடா.. நீங்கலே போதும்.. நீங்க எல்லாம் ப்ரண்ட்ஸாடா.. துரோகிங்க..” என்று புலம்பவும், எல்லோரும் சிரிக்கவும், “நான் போறேன்.. போங்கடா..” என்று முறுக்கியவாறே செல்ல பார்க்க,

“மச்சி எங்க கிளம்பிட்ட..? எக்ஸாம்க்கு நோட்ஸ் வேணாமா..?” என்று செல்வம் நக்கலாக கேட்க, “இருக்கேன்.. இருந்து தொலைக்கிறேன்..” என்று கடுப்பாக சொன்ன குமார், “முத்தண்ணே இந்தாங்க.. இதை எல்லாம் பத்து பத்து காபி போடுங்க” என்று சொல்லவும்,

அவர்களையே புரியாமல் பார்த்து கொண்டிருந்த செல்வியும், ஜோதியும், “இந்தாங்கம்மா.. உங்க ஜெராக்ஸ்..” என்று முத்தண்ணே கொடுக்கவும், காசு கொடுத்த ஹர்ஷினி, ஜெயயை ஓரக்கண்ணால் பார்த்தவண்ணம் கிளம்பவும்,

“நாங்க ஜெராக்ஸ் எடுக்கறதுக்கு நீங்க எதுக்கு அப்படி பாத்தீங்க..?” என்று ஜெய் அவர்களை செல்லவிடாமல் தடுக்க கேட்க,

அது.. அது.. வந்து சீனியர்.. நோட்ஸ் ஜெராக்ஸ்.. என்று செல்வி பயத்துடன் இழுக்கவும்,

ஆமா.. நோட்ஸ் ஜெராக்ஸ் தான்.. அதுல என்ன இருக்கு..?

இல்லை.. நீங்களும் ரொம்ப நாளா கிளாசுக்கு போகலையா..? அதான் உங்ககிட்ட நோட்ஸ் இல்லையா..? என்று ஜோதி கேட்டவுடன்,

“ஹாஹா.. ஹாஹா” என்று அனைவரும் சிரிக்க, “ஏண்டி நாம இப்போ என்ன கேட்டுட்டோம்ன்னு இப்படி சிரிக்கிறாங்க..” என்று புரியாமல் செல்வி, ஜோதியிடம் கேட்டாள். “அதான்.. எனக்கும் தெரியல..”

இவர்களின் பேச்சை கவனித்தும், கவனிக்காமலும் “சிரிக்கும் ஜெயயையே மனதுள் தீவிரமாக சைட் அடித்து கொண்டிருந்தாள் ஹர்ஷினி,” அவளை புரிந்து கொண்ட ஜெய், சிரித்தவாறே அவளை பார்த்து “கண்ணடித்து, முத்தம் கொடுப்பது போல் உதட்டை குவிக்கவும், பதறி போன ஹர்ஷினி, சிவந்த முகத்துடன் வேகமாக வேறு புறம் திரும்பவும், அவளின் வெட்கத்தை ரசனையாக பார்த்தான் ஜெய்.”

“நாங்க எல்லாம் கிளாசுக்கு தினமும் போனோம் தான்.,” என்று சிறிதுமுடித்து அசோக் சொல்ல, “அப்புறம் நோட்ஸ் ஏன் ஜெராக்ஸ் எடுக்கணும்.. கிளாஸ்ல எழுதி..” என்று ஜோதி இழுக்கவும்,

“என்னது.. கிளாஸ்ல நோட்ஸ் எழுதணுமா..?” என்று எதோ செய்ய கூடாததை கேட்டது போல் முறைத்து பார்க்கவும், நொந்து போன ஜோதி, பாவமாக பார்க்க,

“டேய்.. போதும் விடுங்கடா.. நீங்க கிளம்புங்க..” என்று ஜெய் சொல்லவும், விட்டால் போதுமென பறந்து விட்டனர் செல்வியும், ஜோதியும். பின்னால் சென்ற ஹர்ஷினி, ஜெயயை கடக்கும் போது. அவன் வேண்டுமென்றே, “இச்சு தா.. இச்சு தா..” என்று மெலிதாக பாட, வெட்கம் கலந்த கோவத்தில் அவனை முறைத்துவிட்டு சென்றாள் ஹர்ஷினி,

“ஏனுங்க மாமா.. எங்களுக்கு இந்த வீட்ல நடக்கிற எதையும் தெரிஞ்சிக்கிற உரிமை இல்லன்னு நீங்க எல்லாம் நினைக்கிறீங்களா..?” என்று இரவு உணவுண்ணும் போது மாலதி உடன் நிற்க ரேணுகா ஆழ்ந்த துயரத்தோடு கேட்க,

எல்லோரின் கையும் உணவுண்பதை நிறுத்திவிட்டு ஆச்சார்யாவிடம் கேள்வி கேட்கும் அவரை ஆச்சரியத்தோடு பார்த்தனர். ஆனால் ஆச்சார்யாவோ அவரின் வருத்தத்தை முன்னமே புரிந்து தான் இருந்தார் என்பதால்,

“இல்ல மருமகளே.. இந்தவீட்டில உங்களுக்கு இல்லாத உரிமை எங்க யாருக்கும் இல்ல..” என்று பொறுமையாகவே சொன்னார்.

“ஆனா நடக்கிறதை பார்த்தா அப்படி தெரியலையே மாமா.. நாங்க ஏதோ சமையல்கட்டோடு நின்ருற மாதிரிதான் தெரியுது..”

அண்ணி என்ன ஆச்சு..? ஏன் இப்படியெல்லாம் தப்பு தப்பா யோசிச்சி பேசுறீங்க..? என்று இந்திரன் புரியாமல் கேட்க,

அக்கா கேட்கிறதில எந்த தப்பும் இல்ல.. அவங்க சொல்றது சரிதான்.. என்று மாலதியும் சொன்னார், இதை எதையுமே கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு கொண்டிருந்த ஹர்ஷினியை கண்ட ரேணுகா மனதில் அவளின் மாறுபட்ட நடவடிக்கையில் குழப்பத்தோடு வருத்தமே மிஞ்சியது.

அவரின் பார்வையை புரிந்து கொண்ட ஆச்சார்யா, “என்ன கேட்குமோ கேளு மருமகளே..?” என்று சொல்லவும்,

“உங்களை ஹாஸ்பிடல இருந்து நாங்க கூட்டிட்டு வந்த அன்னிக்கு நம்ம வீட்ல என்ன நடந்துச்சு மாமா..?” என்று நிதானமாக சந்திரனை கூர்மையாக பார்த்தபடியே கேட்டார்,

அவருக்கு நன்றாக புரிந்தது “சந்திரன் எதோ செய்ய கூடாததை செய்திருக்கிறார் என்று..” ஆனால் இதுவரை யாருமே அவர்களிடம் சொல்லவில்லை என்பதாலே இதுவரை பொறுத்து பார்த்துவிட்டு இன்று நேரடியாகவே கேட்டுவிட்டார்,

சந்திரனுக்கு மனைவியிடம் நடந்ததை சொல்ல முகமே இல்ல.. எங்கு “அவரும் தங்கை, மகளை.. போல் தன்னை வெறுத்துவிடுவாரோ என்ற பயமே பிரதானமாக நின்றது”. அவரின் பயத்தை தெரிந்து வைத்திருந்த ஆச்சார்யா, மகனை வெறுமையாக பார்த்து விட்டு,

“சுபத்ராவுக்கு ஒரு நல்ல இடத்துல சம்மந்தம் கூடி வந்துச்சி, ஆனா பெரியவனுக்கு அந்த சம்மந்தம் பிடிக்கல, அதனால.. அதனால கொஞ்சம் கோவப்பட்டு பேசி அவங்களை வெளியே அனுப்பிட்டான்..” என்று மறைத்து மேம்போக்காக சொல்லவும்,

அவரை நிமிர்ந்து ஹர்ஷினியின் விழிகளில் தெரிந்த குற்ற சாட்டில் மருகி போனார் ஆச்சார்யா.

“சுபத்ராவுக்கு இந்த வரன் பிடிச்சி இருந்ததா மாமா..?” என்று “சுபத்ரா, ஹர்ஷினியின்.. சந்திரன் மீதான வெளிப்படையான கோவத்தில்” ஓரளவுக்கு புரிந்து வைத்திருந்த ரேணுகா கேட்கவும், “ஆமா..” என்றுவிட்டார் ஆச்சார்யா,

அதற்கு பிறகு சிறிது நேரம் எதுவும் பேசாமல் நின்றவர், “நான் நாளைக்கு சென்னை போறேன் மாமா..” என்று முடிவுடன் சொன்னவர், சந்திரனை திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டார்.

சொன்னது போல் மறுநாள் சென்று சுபத்ராவை பார்த்தவர், அவரின் கையை பிடித்து கொண்டு கண்ணீர் விடவும், “என்ன அண்ணி நீங்க, அம்மாக்கு அப்புறம் நீங்க தானே எனக்கு அம்மாவா இருக்கீங்க, உங்க புருஷன் செஞ்சதுக்கு நீங்க என்ன செய்வீங்க..” என்றவர், மனபாரம் தாங்காமல் அவரை கட்டிப்பிடித்து ஒரு மூச்சு அழுது தீர்த்தார்.


.....................................................................................
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


என்னுள் சங்கீதமாய் நீ 25 2



ஹர்ஷினி, “இன்னிக்கு தானே உனக்கு பர்ஸ்ட் செமெஸ்டர்.. வா நானே இன்னிக்கு உன்னை காலேஜில் ட்ராப் பண்றேன்..” என்று ஆச்சார்யா வரவும்,

“வேண்டாம்.. நானே போய்க்கிறேன்..” என்று அவரின் முகம் கூட பார்க்காமல் சொன்னவள் கிளம்பி விடவும், “பேத்தியின் ஒதுக்கத்தில் மிகவும் ஒடிந்து போய் நின்றுருந்த ஆச்சார்யாவை கண்ட சந்திரனுக்கு குற்ற உணர்ச்சி மேலும் மேலும் அதிகரித்து அவரை கொன்றது”.

கேட்டின் அருகிலே நின்ற ஜெய், ஹர்ஷினி வரவும் "ஆல் த பெஸ்ட் ஹர்ஷ்.. நல்லா எக்ஸாம் எழுது.." என்று வாழ்த்து சொல்லவும், “ஆச்சார்யாவை ஒதுக்கிவிட்டு தானும் வேதனையில் வந்த ஹர்ஷினிக்கு ஜெயின் விஷ் கொஞ்சம் தெம்பூட்டியது” என்றே சொல்லலாம்.

“thank யு.. நீங்களும் நல்லா பண்ணுங்க..” என்று இவளும் விஷ் செய்ய, அதெல்லாம் அய்யா கலக்கிடுவேன்.. பாஸ் பண்ற அளவுக்கு படிச்சிட்டோம்ல.. என்று கூலாக சொல்ல, இவரை.. என்று சிரிப்புடன் முறைத்தவளை,

என்ன..? “என்னையும் உன்ன மாதிரி படிப்பஸ்ன்னு நினைச்சியா..?” அந்த மாதிரி எல்லாம் மாமன்கிட்ட தப்பி தவறி கூட எதிர்பார்க்காதடி..

அதைவிட “வீட்ல ரெண்டு பேர்ல ஒருத்தர் படிச்சா போதும்ன்னு..” ஒருத்தர் சொல்லிருக்கார் என்று சொல்லவும், “யாருடா அது..?” என்று ஹர்ஷினி புரியாமல் பார்க்க,

“வேற யாரு.. நம்ம தனுஷ் தான்” என்று சிரித்துக்கொண்டே சொன்னவன், சரி பெல் அடிச்சிட்டாங்க பாரு.. அது கூட தெரியாம “எப்ப பாரு மாமனையே சைட் அடிச்சிட்டு திரும்ப வேண்டியது.. கிளம்பு.. கிளம்பு..”என்று குறும்பாக சொல்லவும், "உங்களை வந்து பேசிக்கிறேன்.." என்று செல்லமாக மிரட்டிவிட்டு சென்றாள் ஹர்ஷினி.



அப்பாடா.. “ஒருவழியா எல்லா எக்ஸாமும் முடிஞ்சது..” என்று ஆசுவாசமாக சொன்னபடி குமார் அவர்களின் ஆஸ்தான இடமான மரத்தடியில் அமரவும், “ஆமாண்டா.. இப்போ தான் பயங்கர ரிலீபா இருக்கு..” என்று அசோக் சொல்ல,

“என்ன ரிலீபா இருக்கா உனக்கு.. இதுக்கப்புறம் தான் மச்சி நமக்கு ஆப்பே இருக்கு..” என்று பீடிகையுடன் செல்வம் சொல்ல,

“இவன் ஒருத்தன் நாம சந்தோஷமா இருந்தாவே இவனுக்கு ஆகாது.. எதையாவது சொல்லி பீதி கிளப்ப வேண்டியது..” என்று எரிச்சலாக குமார் சொன்னான்,

“டேய்.. நான் உண்மையைத்தான் சொல்றேன்.. என்ன மறந்துட்டிங்களா..? இதுக்கு அப்பறம் நாம காலேஜே வரத்தேவையில்லை.. அடுத்த செமஸ்டர் நமக்கு ப்ராஜெக்ட்.. அது முடிஞ்சி வைவா.. பைனல் எக்ஸாம், அடுத்து வேலையோ, இல்ல மேல படிக்கவேண்டியதோ எதையோ செய்யணும்..” என்று பொறுப்பாக சொல்ல,

ஜெயின் எண்ணம் முழுவதும் அடுத்து அவன் செய்ய வேண்டியதையே தெளிவாக, உறுதியாக யோசித்து கொண்டிருந்தது. அதன்படியே அவனுடைய ப்ராஜெக்ட்டுக்காக என்று வீட்டிலும், ஹர்ஷினியிடமும் சொல்லி கொண்டு சென்னை சென்றவன், அவன் நினைத்ததை செயல்படுத்தவும் முயற்சி செய்தான்.

ஆனால் பலன் என்னமோ பூச்சியமாக தான் இருந்தது. வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே போன் செய்து பேசும் அவனின் குரலிலே உள்ள ஏமாற்றத்தை புரிந்து கொண்ட ஹர்ஷினிக்கு, “ஏன் இப்படி பேசுறாங்க..? என்ன ஆச்சு..?” என்று அவனை நினைத்து குழம்பவே செய்தாள்.

“அப்பா.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என்று காலையிலே ஜெய் வரவும், “வா ஜெய்.. நானே உன்கிட்ட பேசணும்ன்னு தான் இருந்தேன்.. அடுத்து என்ன செய்ய போற..?” என்று டிகிரி முடித்த எல்லா மகன்களிடமும் அப்பாக்கள் கேட்கும் கேள்வியை கேட்டார் மகாதேவன்.

அதைப்பத்தி தான் உங்ககிட்ட பேசணும்ப்பா..

ஓகே சொல்லு.. என்ன யோசிச்சி வச்சிருக்கே, வேலையா..? இல்லை மேல ஏதாவது படிக்கிறயா..?

ரெண்டும் இல்ல..

என்ன சொல்ற..? ரெண்டும் இல்லன்னா..? வேற என்ன இருக்கு..? என்று புரியாமல் கேட்டார்.

“நான் டான்ஸல ஏதாவது செய்யலாம்ன்னு இருக்கேன்..”

என்ன..? என்ன சொல்ற நீ..? எதாவது யோசிச்சி தான் பேசுறியா..? என்று கோவத்தோடு கத்தவும், அவரின் கத்தலில் வேகமாக வெளியே வந்தனர் ஜெயின் அம்மா விஜயாவும், ஜெயின் தங்கை தாரணியும்,

“ஏங்க.. என்ன ஆச்சு..? ஏன் காலையிலே இப்படி கத்துறீங்க..?” என்று விஜயா கேட்க. “என்ன ஏன் கேக்குற.. இங்க நிக்கிறாரு இல்ல.. இந்த துரை கிட்டேயே கேளு..” என்று ஆத்திரமாக சொல்லவும்,

“என்ன ஜெய்.. ஏன் அப்பா கோவப்படுறாரு..?” என்று கேட்க, அவரிடமும் அதையேதான் சொன்னான் ஜெய். அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த விஜயா.,

“என்ன தம்பி இது.. இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வருமா.. வேணாம்பா.. நீ பேசாம அப்பா ஷோ ரூம்க்கே போ..” என்று அவரும் மறுத்து பேச, தன்னுடைய முடிவில் உறுதியாக நின்ற ஜெய், யார் சொல்வதையும் கேட்காமல் மறுபடியும் சென்னைக்கே சென்றுவிட்டான்.

போகுமுன் இந்த ஆண்டு தான் +2 முடித்த தாரணியை அவனின் காலேஜிலே சேர்க்க இருப்பதால், ஒருநாள் ஹர்ஷினியை பார்க்கிற்கு வரவைத்து, தாரணியிடம் “உன் வருங்கால அண்ணி..” அறிமுகமும் செய்யவும்,

ஹர்ஷினியின் முகம் அண்ணி.. என்று அவன் இவளையே காதலாக பார்த்துகொண்டு சொல்லவும் வெட்கத்தில் சிவந்தாலும், “இன்னும் வாயைத்திறந்து காதலையே சொல்லலை..” என்று மனதுள் செல்லமாக நொடிக்கவும் செய்தாள்.

ஹர்ஷினியிடம் வேலை பார்க்கவே சென்னை செல்கிறேன்.. என்று விட்டு தான் சென்றான். ஏனெனில் “அவனுக்கு டான்சில் ஏதாவது சாதித்த பிறகே அவளிடம் இதையும் தன் காதலையும் சேர்த்தே சொல்ல வேண்டும்” என்று இருந்ததால் அவன் அவளிடம் மறைக்கவே செய்தான்.

ஆனால்.. அது அவன் நினைத்தது போல் அவ்வளவு எளிதாக இல்லை.. மிகவும் முயற்சி செய்தும் அவனால் ஏதும் செய்ய முடியாதது மட்டுமில்ல அவனால் உள்ளயே நுழைய முடியவில்லை..

அப்படியும் சான்ஸ் கிடைத்தால், அவனால் அவர்கள் எதிர்ப்பார்க்கும் அளவுக்கு ப்ரொபஷனாக ஆடமுடியவில்லை. இதற்கிடையில் அவனுடைய செலவுக்கு மகாதேவன் காசு அனுப்ப முடியாது என்று விஜயாவிடம் உறுதியாக சொல்லிவிட்டதால், அவர்தான் அவருடைய சேமிப்பிலிருந்து இத்தனை மாதம் மகனுக்கு பணத்தை அனுப்பி வைத்தார்.

இப்பொழுது அதுவும் குறைந்து அவரால் அடுத்த மாதத்திலிருந்து பணத்தை அனுப்ப முடியாது என்பதால் கணவரிடமே கெஞ்சியும், அவர் தராததால் அழுது கொண்டிருக்கவும் , விஷயம் தெரிந்த தாரணி,

அண்ணனை நினைத்து சோகமாக கேன்டீனில் அமர்ந்து கொண்டிருக்கவும், அவளை கவனித்த ஹர்ஷினி, என்னவென்று கேட்க, முதலில் எதுவும் இல்ல என்று மறைத்த தாரணி, பிறகு இதுதான் என்று சொல்லி அழவும்,

ஹர்ஷினிக்கு.. “டான்சில் சாதிக்கும் அவனின் குறிக்கோளை நினைத்து மிகவும் சந்தோஷமாக, பெருமையாக இருந்தாலும், பணம் இல்லாமல் தவிக்கும் தன்னவனின் நிலையை நினைத்து மனம் மிகவும் கனத்து போனது.”

அதோடு “டான்ஸில் ஜெய் சாதித்தாலே நான் சாதித்தது போல் தானே..” இதற்கு கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும், தன்னால் என்ன செய்ய முடியும்..? என்று ஒரு நாள் முழுவதும் யோசித்தவள், மறுநாளே ஆச்சார்யாவிடம் சென்று “தனக்கு ஹோட்டலில் பார்ட் டைம் வேலை வேண்டும்” என்று கேட்க,

எதனால்..? என்று கேட்டவரிடம், எதையோ சொல்லி சமாளித்தவள், அவர் பேத்தி தன்னிடம் நெடுநாள் கழித்து கேட்பதாலே சம்மதிக்கவும், காலேஜ் முடியவும் நேரே ஹோட்டல்க்கு சென்றுவிடுபவள், இரவு 9 மணி வரையுமே அங்கு தான் இருப்பாள்,

வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், தனக்கு தெரிந்தவரை. முடிந்தவரை நன்றாகவே செய்தாள். “பேத்தியின் பொறுப்பில் மனம் குளிர்ந்த ஆச்சார்யா, தாராளமாகவே பணம் கொடுக்கவும், மிகவும் மகிழ்ந்த ஹர்ஷினி முழு பணத்தையும் தாரணி மூலமாக ஜெயின் அக்கவுண்ட்டில் சேர்த்துவிடுவாள்”.

விஜாவிடமும், மகாதேவனிடமும், “ஜெய் பார்ட் டைம் வேலை” செய்து சமாளிப்பதாகவும், அவனிடம் அதை பற்றி கேட்கவேண்டாம், அவன் நீங்க பணம் தராததால் கோவமாக இருக்கான் என்றும் தாரணி சொல்லிவிட,

விஜயா மகனை நினைத்து கவலை பட்டு கொண்டிருந்தவர், இனி அவனே சமாளித்து கொள்வான்.. என்று மகிழ்ந்தார் என்றால், மகாதேவனோ “பணம் தராவிட்டால் வந்துவிடுவான் என்பதாலே கொடுக்காமல் இருந்தவர், ஜெய் வேலை பார்ப்பதை கேள்விப்பட்டு, எதையோ செய்யட்டும்..” என்று விட்டுவிட்டார்.

“என்கிட்ட அசிஸ்டன்ட்டா சேர உனக்கு என்ன தகுதி இருக்கு..? முதல்ல ஒரு டான்ஸரக்கு எல்லா விதமான ஸ்டைல் ஆப் டான்ஸும் தெரியணும்.. நீ எல்லாம் ப்ரொபஷனலா டான்ஸ் ஆட தெரியாம எதுக்கு டான்ஸ் ஆட சான்ஸ் கேட்டு வர..” என்று ஒரு பிரபல டான்ஸ் ,மாஸ்டர் எல்லோர் பார்க்க கத்திவிடவும்,

“வாழ்க்கையிலே ஏற்பட்ட முதல் அவமானத்தில்..” உள்ளுக்குள் மிகவும் நொறுங்கி போனான் ஜெய், அன்றோடு மட்டுமல்லாமல். வேறு இரண்டு மாஸ்டரும் இதே போல் சொல்லி அவமானப்படுத்திவிட, ஏமாற்றத்தில், இயலாமையில், தன்னால் எதுவும் சாதிக்க முடியாதோ..? என்று மிகவும் அழுத்தமான மனநிலைக்கு சென்றுவிட்டவன்,

தன்னையே தன்னால் சமாளிக்க முடியமால், ஆறுதலுக்காக ஹர்ஷினிக்கு போன் செய்தான். அவளோ காலேஜில் இருந்தவள், காலேஜ் முடியவும் வழக்கம் போல் நேரே ஹோட்டேல்க்கு சென்றுவிட்டாள். அதனாலே அவளுக்கு ஜெய் போன் செய்தது தெரியாமல் போய்விட்டது.

இரவு வீட்டிற்கு வந்ததும், ரூமில் இருக்கும் தன் மொபைலை எடுத்து பார்த்தவள், “ஜெயிடமிருந்து வந்திருந்த 20 மிஸ்ட் கால்களை” பார்த்துவிட்டு, வேகமாக அவனுக்கு போன் செய்தாள்.

பீச்சில் உட்கார்ந்து கடலை வெறித்து கொண்டிருந்த ஜெய், இவள் போன் செய்யவும், முதலில் எடுக்காமல் இருந்தவன். அவள் விடாமல் கூப்பிடவும், அட்டென்ட் செய்து காதில் வைத்து கொண்டு எதுவும் பேசாமல் இருக்கவும், பயந்து போன ஹர்ஷினி,

“ஹலோ.. ஹலோ ஜெய்..” என்று பதட்டத்துடன் கூப்பிடவும், ம்ம் என்று மட்டும் சொன்னவன், வேறு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும், அவனின் ம்ம்.ல் நிம்மதியடைந்த ஹர்ஷினி, “லைன்ல தான் இருக்கீங்களா..?” என்று ஆசுவாசப்படவும்,

“ஏன் நான் லைன்ல இருக்க வேண்டாம்ங்கிறேயா..?” என்று கேட்க,

என்ன சொல்றீங்க..? எனக்கு புரியல..?

“என்ன புரியல உனக்கு..? நான் உன்கூட லைன்ல இருக்கிறது உனக்கு பிடிக்கல போல.. அதான் உனக்கு இப்போ நிறைய பேர் இருக்காங்களே.. அழகா, உன்னை மாதிரி பணக்காரனா.. எல்லாம் சாதிக்க முடிஞ்சவங்களா..?” என்று தன் இயலாமையை ஆத்திரத்துடன் அவளிடம் கட்டினான் ஜெய் ஆகாஷ்.

“என்ன பேசுறீங்க நீங்க..? இதுபோலேல்லாம் பேசாதீங்க..?” என்று அவன் பேச்சில் கோவம் கொண்டு ஹர்ஷினி சொல்லவும்,

“நான் என்ன இல்லாததய்யா சொல்லிட்டேன்.. அதான் ME ஸ்டூடெண்ட் ஒருத்தன் உன்பின்னாடியே சுத்துறானாமே..? இப்போவாரைக்கும் அதைப்பத்தி ஒருவார்த்தை என்கிட்ட சொன்னியா நீ..?” என்று முன்னமே பேச்சு வாக்கில் அங்கேயே ME படித்து கொண்டிருக்கும் குமார் சொன்னதை வைத்து, அவள் போன் எடுக்காத கோவத்தை காட்டினான்.

“எனக்கு அது ஒருவிஷயமாவே தெரியல.. அதான் நான் சொல்லலை” என்று ஹர்ஷினி முடிந்தவரை பொறுமையாகவே சொன்னாள்.

“ஜெயிக்கும் அது ஒன்றுமில்லை தான்.. என்றாலும் இப்பொழுதுள்ள அவன் மன அழுத்தத்தை, கோவத்தை கையாள முடியாமல் ஹர்ஷினியிடம் காட்டிக்கொண்டிருந்தான்.

“அதெப்படி அந்த விஷயம் எனக்கு முக்கியமா..? இல்லையான்னு..? நீயே எப்படி முடிவு பண்ணலாம்.. எனக்கு உன்சம்மந்த பட்ட எல்லா விஷயமும் முக்கியம் தான்..” என்று காட்டமாக சொல்ல,

அவனின் கோவத்தை உணர்ந்த ஹர்ஷினி, இப்போ எது பேசினாலும் கண்டிப்பா சண்டை தான் வரும் என்று புரிந்துகொண்டு ஜெயிடம் “ஓகே.. இனி எல்லாத்தையும் சொல்லிடுறேன்..” என்று முடிக்க பார்த்தாள்., ஜெய் மறுபடியும் ஆரம்பித்தான்,

“ஏன் என் போனை எடுக்கல..? நான் உனக்கு வேண்டாதவனா ஆய்ட்டேனா..? என்னால எதையும் சாதிக்க முடியாதுன்னு நீயும் நினைக்கிறியா..?அதான் என்னை விட்டு போக நினைக்கிறாயா.?” என்று ஹர்ஷினி சொல்ல வருவதை கூட கேட்காமல் தொடர்ந்து பொரிந்து தள்ளியவன், போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டான்.

ஒரு வாரமாகியும் போனை ஆன் செய்யவில்லை. அவனுடைய பேச்சில் ஹர்ஷினிக்கு கோவம் இருந்தாலும் அவனை நினைத்து கவலை கொள்ளவும் செய்தாள், தினமும் தாரணியிடம் விசாரிப்பவள் அவன் அவர்களுக்கும் போன் செய்யாததை கேள்விப்பட்டு ஒரு கட்டத்தில் “அவனுக்கு என்ன ஆச்சோ..?” என்று பயப்படவே ஆரம்பித்துவிட்டாள்.

..............................................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

அடுத்த எபி போட்டுட்டேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.. thank you
 
Status
Not open for further replies.
Top