“சரிம்மா. நான் பார்த்துக்கறேன்” என்றவன் மனதில் சம்யுக்தாவின் முகம் தோன்றியது.
அவனது சிந்தனை படிந்த முகக்தைப் பார்த்துக்கொண்டே,
“மானவ் உன்னை அப்பா போன் பண்ண சொன்னார்” என்று பவித்ரா சொல்ல,
“சரிம்மா” என்றவன் காலி கோப்பையை அன்னையிடம் தந்துவிட்டு உடனே செல்லை எடுத்து சிவாக்கு அழைத்தான்.
அப்பொழுதுதான் சிவாவும் மனிஷாவும் ஜி.ஹெச்சில் எமெர்ஜென்சி வார்டை நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர்.
செல் அடிக்கவும் அதை எடுத்து அட்டென்ட் செய்த சிவா, “சொல்லு மானவ்”
“எங்கப்பா இருக்கீங்க?”
“ஜி.ஹெச் ல”
“நானும் வரேன், அங்கேயே வெயிட் பண்ணுங்க.”
“சரி வா”
போனை அணைத்துவிட்டு அவர் உள்ளே செல்ல, அவர்களை அரவிந்த் எதிர்கொண்டான்.
“ஹலோ சார்” என்று சிவாவிடம் கை குலுக்கினான்.
“ஹலோ அரவிந்த்”
“சார் நேத்து நைட் கார் இருந்த இடம், அதைச் சுத்தி இன்வெஸ்டிகேட் பண்ணதுல சில சிசிடிவி பூட்டேஜ் கிடைச்சுது. சோ அதுல இருக்கறதும், டாக்டர் சம்யுக்தாவைக் கொல்ல முயற்சி செய்ததும் இவங்க தான்.”
“அவங்களை எதுக்கு கொல்ல டிரை பண்ணாங்க?”
“அவங்க சரியான நேரத்துல, மனிஷா மேடத்தை காப்பாத்தி இருக்காங்க, சோ அவங்க பிளான் சொதப்பவும், ஒரு கோபத்துல இந்த முடிவை எடுத்து இருக்காங்க அப்படிங்கறது எங்க கெஸ். அவங்ககிட்ட பிராப்பரா இன்வெஸ்டிகேட் பண்ணினாதான் மெயின் ரீசன் தெரியும் ”
“ஓகே. அவங்களைப் பார்க்கலாமா?”
“உள்ள டிரீட்மென்ட் போய்க்கிட்டு இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பிளீஸ்”
“ஸ்யூர்...” என்ற சிவா, “வாம்மா அங்க வெயிட் பண்ணுவோம் என்று அங்கிருந்த மர பெஞ்சை நோக்கி நகர்ந்தார்.
பத்து நிமிட காத்திருப்புக்கு பின்பு, அவர்கள் இருந்த அறையில் இருந்து சில மருத்துவர்கள் வெளியே வந்தனர்.
அதே நேரம் செல்லில் மானவுக்கு வழி சொல்லிக்கொண்டு இருந்த சிவா, அவர்களுடன் வெளியே வந்த பரத்தைக் கவனிக்கவில்லை.
அவர்களை எதிர்கொண்ட அரவிந்திடம், அங்கிருந்த மருத்துவர் ஒருவர், “மூனு பேர் பிரைன் டெட், இன்னொருத்தர் ரொம்ப கிரிடிக்கல் ஸ்டேஜ் தான், நீங்க மரண வாக்குமூலம் வாங்கிக்கறது பெட்டர். பல்ஸ் குறைஞ்சிடுச்சு. எப்ப வேண்ணாலும் அவர் உயிர் பிரியறது உறுதி”
“ஓகே சார்” என்று மருத்துவருக்கு நன்றி சொல்லிய அரவிந்த்
“தேங்க்யு டாக்டர் பரத்” என்று பரத்திற்கும் நன்றி சொன்னார்.
“இட்ஸ் மை டியூட்டி” என்று புன்னகையுடன் பரத் சொல்ல மற்றவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.
பரத் என்ற பெயரில் தானாக சிவா பரத்தின் பக்கம் திரும்பி இருந்தார்.
“மனிஷா மேம் நீங்க மட்டும் உள்ள வாங்க பிளீஸ்” என்று அரவிந்த் அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.
அரவிந்த், மனிஷா இருவரும் உள்ளே செல்ல, சிவாவைக் கண்ட பரத் தானாக சிவாவை நோக்கிச் சென்றார்.
“ஹவ் ஆர் யூ சிவா?” என்று புன்னகையுடன் கேட்ட பரத்தை நோக்கிய சிவா,
“ம்ம்... பைன்...” என்று மட்டும் சொன்னார். அவர் மனதில் கடந்த கால நினைவுகள் மெல்ல ஊர்வலம் போக ஆரம்பித்தது.
அதை பரத் உணர்ந்து கொண்டாலும்,
“பவித்ரா எப்படி இருக்காங்க?” என்று கேட்டுவைக்க,
“என் வைப் ரொம்ப ரொம்ப நல்லா இருக்காங்க” என்று என் வைப் என்பதில் அதிக அழுத்தம் தந்து சிவா பதில் சொன்னார்.
அதற்கு பரத் மெல்லிய புன்னகையைப் பரிசாக அளித்தார். அதற்கு பின் உள்ள வலியை அவர் மட்டுமே அறிவார்.
அதே நேரம் அங்கு வந்த மானவ்,
“அப்பா... என்னாச்சு?”
அப்பொழுதுதான் மனிஷாவைத் தேடிக் கண்களை சிவா அலையவிட்டார்.
“உள்ள அடையாளம் காட்ட மனிஷாவை கூட்டிக்கிட்டு போயிருக்காங்க” என்று இருவருக்கும் பொதுவாக பரத் சொல்ல,
“ஹோ... பை தி வே நீங்க?”
“ஐம் டாக்டர் பரத், நியுரோ சர்ஜன், பரத் மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல் என்னுடையது தான்”
“ஹலோ சார்... டாக்டர் சம்யுக்தா நல்லா இருக்காங்களா? ஒன்னும் பிராப்ளம் இல்லையே?” என்றவன் கேள்வி வெறும் சம்பிரதாயம் நிறைந்த ஒன்று என்பதை பெரியவர்கள் இருவருமே உணர்ந்தனர்.
“நத்திங்... சீ இஸ் ஸேப்...” என்று பரத் சொன்னாலும், அதை மானவ் சரியாகக் கூட கேட்காமல் பேச்சை மாற்றினான்.
“உங்க ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்றதா சொன்னாங்க, எங்க அவங்க?”
அவன் பதிலில் சிரித்த பரத்,
“சம்யு என்னோட மருமகள், இன்னிக்கு பரத் மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல் நிர்வாகி அவங்கதான்... ரொம்ப காம்ப்ளிகேட் கேஸ் மட்டும் தான் நான் அட்டென்ட் பண்றேன். ரெஸ்ட் எடுக்கச் சொல்லி என் சன்னோட கண்டிஷன்... சோ புல்லா அவங்கதான் பார்த்துக்கறாங்க... அவங்களுக்கு இன்னிக்கு ஒரு பைபாஸ் சர்ஜரி... வழில இப்படி நடக்கவும், எனக்கு தகவல் சொல்லிட்டு அவங்க அங்க போயிட்டாங்க”
“பைன் டாக்டர்...” என்று பரத்திடம் சொன்னவன்,
“அப்பா நீங்க என்ன பண்ணறீங்க? கிளம்பறிங்களா? இருக்கறீங்களா?”
“வெயிட் பண்ணு... மனிஷா வரட்டும், தென் சொல்றேன்”
“ஓகேப்பா”
ஒரு கால் மணி நேரத்திற்கு பின்பு அரவிந்தும், மனிஷாவும் வெளியே வந்தனர்.
“மாமா இவங்களே தான்... பட் மூனு பேர் பிரைன் டெட், ஒருத்தர் இறந்துட்டார்... நல்ல வேலையா அந்த அரசியல்வாதிக்கு எதிரா வாக்குமூலம் வாங்கியாச்சு”
“சரிம்மா...” என்றவர் அரவிந்திடம், “நீங்க ஸ்டேஷன் எப்ப போவீங்க சார்?” என்று கேட்டார்.
“எனக்கு இன்னும் கொஞ்சம் வொர்க் இருக்கு சார். எப்படியும் மதியம் தான் போவேன்”
“ஓகே... மனிஷா நீ முதல்ல உன் சைட் தர வேண்டிய ரிபோர்ட் ரெடி பண்ணி குடுத்துடு, அந்த வொர்க்கை முடிச்சுட்டு நீ நேரடியா ஸ்டேஷன் வந்துடு. மானவ் நீ மனிஷா கூட போ, நான் லாயரை மீட் பண்ணிட்டு அவரோட ஹாஸ்பிட்டல் வரேன்”
“ஓகேப்பா”
“ஓகே மாமா”
இருவரும் மூவரிடமும் விடை பெற்றுச் செல்ல, அரவிந்த் மருத்துவர்களைக் காண மற்ற இருவரிடமும் விடை பெற்றுச் சென்றான்.
“ஓகே மிஸ்டர் பரத்... மறுபடியும் சந்தர்பம் இருந்தா மீட் பண்ணலாம்”
“நல்லது மிஸ்டர் சிவா... பவித்ராவைக் கேட்டேன்னு சொல்லுங்க”
ஒரு மெல்லிய புன்னகையுடன் சிவா விடை பெற்று நகரந்தாலும், அந்த புன்னகைக்குள் அடக்கப்பட்ட எரிமலை ஒன்று கனன்று கொண்டு தான் இருந்தது. வயோதிகம் ஆனாலும் மனைவி மீது கொண்ட காதல் அவருக்குள் இன்னும் பொறாமையைத் தூண்டிவிட்டுக்கொண்டு இருந்தது...
“மிஸ்டர் சிவா” என்ற பரத்தின் குரல் கேட்டு சிவா திரும்பி பரத்தைப் பார்த்தார்.
சிவாவின் அருகில் வந்த பரத்,
“நீங்க உங்க பவித்ரா மேல உயிரையே வைச்சு இருந்தீங்க. அப்படிப்பார்த்தா உங்க பையன், உங்க வளர்ப்பு, உங்க மருமக மேல எவ்ளோ உயிரா இருக்கனும்? அப்படி எதுவுமே இல்லையே? ஏன்? பிசினஸ்ஸை மட்டும் பார்க்காம வீட்டையும் பாருங்க” என்று சொல்லிவிட்டு நகர அடியெடுத்து வைக்க,
“என் பையன் என் மருமகள் மேல உயிரா இல்லைன்னு எதை வைச்சு சொல்றீங்க பரத்?” என்ற சிவாவின் கேள்வியில் அடக்கப்பட்ட கோபம் வெளியே சிதறித் தெரித்தது.
“என் மனைவி மேல லேசா கீறல் போட்டாலே அவனை நான் உயிரோட கொன்னு புதைச்சிடுவேன்... நீங்களும் அப்படித்தான்... உங்க பையன் கொலை முயற்சி பண்ணவங்களை எட்டிக் கூடப் பார்க்கலை... அதையும் விடுங்க, என்ன பிரச்சனை இருந்தாலும், கணவன் பக்கத்துல இருந்தா, மனைவியோட முகம் அப்படியே மாறிடும், தன்னம்பிக்கையும் தைரியமும் அதுல நிரம்பி வழியும், சிலர் கணவரோட கையைக்கூட பிடிச்சுக்குவாங்க. பவித்ராவும் இதையெல்லாம் பண்ணி இருக்காங்க. இங்க ரெண்டு பேரும் விலகி தான் இருந்தாங்க... ஏன்? எல்லாத்துக்கும் மேல, நேத்து என் மருமக என் கிட்ட சொன்னது,
“மாமா, வைப் காணோம்ன்னு வெளிய வந்து பார்த்தவர், அவங்களைப் பார்த்ததும் ஜஸ்ட் ரிலாக்ஸா இருக்கார்... அவங்க மேல உண்மையான அன்பு இருந்தா என்ன பண்ணி இருக்கனும், வந்து அட்லீஸ்ட் கையையாவது பிடிச்சு, ரெண்டு திட்டு திட்டி, தோள்ல கை போட்டாவது கூட்டிக்கிட்டு போயிருக்கனும், அதுவும் இல்லை, ஏதோ மிஸ்ஸிங் மாமா”,
கொஞ்சம் அவங்க மேலேயும் கவனம் வைங்க”
“------------------------------------------------------“
“ஏன்னா என் பையன் என் மருமகளை அவனே பிக்கப், டிராப் பண்ணுவான், எந்நேரம் போன் பண்ணாலும் அட்டென்ட் பண்ணிடுவான், சப்போஸ் லேட் ஆனா, தேடிக்கிளம்பிடுவான், சில நேரம் வீட்டு வாசல்லையே நிற்பான், அவ முகத்தைப் பார்த்தே அவ மனக்கஷ்டத்தை சால்வ் பண்ணுவான், அவளுக்கு ஒண்ணுன்னா சுத்தி யார் இருக்கா, என்னன்னே பார்க்க மாட்டான்”
“என் மகனும் என் மருமக மேல உயிரா தான் இருக்கான்... நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு பேசறீங்க”
“பைன்... நீங்க சொல்ற மாதிரி இருந்தா நல்லது, எதுக்கும் நான் சொன்னதையும் யோசிச்சு பாருங்க, குறிப்பா அவங்களை கவனிச்சு பாருங்க... உங்களுக்கே புரியும். வரேன்” என்று பரத் அங்கிருந்து நகர,
சிவா யோசனையுடன் நின்று கொண்டார்.
அங்கு லாவண்யாவை கடவுள் அழைத்துக்கொள்ள, மனிஷா ரிபோர்ட்டை மீடியா முன்னிலையில் வெளியிட்டு அந்த சிறுமியின் இறுதி முடிவை உலகறியச் செய்தாள்.
அந்த அரசியல் செல்வாக்கு நிறைந்த பிரபலத்தின் அச்சுறுத்தல் மற்றும் அவர்களது சட்ட விரோத நடவடிக்கை குறித்து ஏற்கனவே மீடியாவில் ஆதாரத்துடன் அரவிந்த் நிரூபித்து இருக்க, அவரும் கைது செய்யப்பட்டார்.
பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு அன்றைய நாள் திருச்சியையே பரபரபாக்கிக்கொண்டு இருக்க, எவ்வித பரபரப்பும் இல்லாமல் ஒரு ஜீவன் ஏரோப்பிளேனில் பறந்து கொண்டு இருந்தது.
பிரித்வி அமைதியாக கையில் இருந்த மேகஸின் ஒன்றைப் படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். பிளைட் இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எழுந்தவன், தனது பிளேசரை எடுத்துக்கொண்டு நேராக ரெஸ்ட் ரூம் சென்று உபயோகித்துவிட்டு, மேலே பிளேசரைப் போட்டுக்கொண்டு தன்னுடைய உடையை சரி செய்ய ஆரம்பித்தான்.
அப்பொழுதுதான் அவனது கண்களில் அவனது சட்டை பட்டனில் மாட்டிகொண்டு இருந்த அந்த முடி கண்ணில் பட்டது.
நீண்ட அந்த கருப்பு நிற முடியைக் கையில் எடுத்தவனின் உள்ளம் தானாக சம்யுக்தாவை நினைக்க, அவனது இதழ்களில் புன்னகை பூத்தது.
அந்தப் புன்னகையின் ஊடாக முகமெங்கும் மலர்ச்சி பொங்க, அந்த முடியை அழகாகச் சுற்றி தனது வாலெட்டில் வைத்துக்கொண்டு அவனது சீட்டிற்கு விரைந்தான்.
சீட்டில் வந்தமர்ந்தவனின் இதழ்கள் தானாக முனுமுனுத்துக் கொண்டன, “என்னிக்குமே இந்த பிரித்வியின் சம்யுக்தா நீ தாண்டி... நீ மட்டும் தாண்டி...”
ராகம் இசைக்கும்....