All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஜோவின் "சுகமான புது ராகம்" - பாகம் 1 - கதைத் திரி

Status
Not open for further replies.

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“வீட்ல ஒரு பூஜை, அதுக்கு உன்னை இன்வைட் பண்ண வரலாம்ன்னு கேட்கத்தான் போன் பண்ணேன். இப்ப காலைல வந்தா பார்க்கலாமா?”

“கண்டிப்பா அங்கிள்... நீங்க பிரேக்பாஸ்ட்க்கு இங்க வந்துடுங்க”

“இல்லைம்மா... ஜஸ்ட் ஒரு காபி போதும்”

“நோ வே அங்கிள்... உங்களுக்கு இங்கதான் பிரேக்பாஸ்ட்...”

“ஓகேம்மா... நானும் ஆன்ட்டியும் தான் வர்றோம்”

“வாங்க அங்கிள்...”

“பைம்மா” என்று போனை அணைத்தவர்,

“சம்யுக்தாகிட்ட சொல்லிட்டேன் பவி, நீ கிளம்பு” என்றவர் தானும் அங்கு கிளம்பத்தயாராக ஆரம்பித்தார்.

இங்கு போனை வைத்த சம்யுக்தா,

“மாமா அடுத்த வாரம் ஏதோ பூஜையாம், நம்மை இன்வைட் பண்ண இப்ப இங்க வர்றாங்களாம்”

“ஓகே”

“பிரேக்பாஸ்ட் இங்க தான்னு சொல்லிட்டேன்”

“ஓகே”

“அத்தையும் வர்றாங்களாம்”

“ஓகே”

“என்ன ஓகே? ஓகே? நான் என்ன மொக்கை ஜோக்கா சொல்றேன்”

“மத்ததெல்லாம் அப்புறம், இப்ப நீ என்ன பண்ற, சமையலைப் பார்கிற, நான் வெளிய கிளம்பறேன்”

“ஏன் மாமா? நேத்தே அத்தையைப் பார்த்துட்டீங்க, இன்னிக்கு என்ன?”

“சிவா நேத்து சர்வாவைப் பார்த்ததுமே முகம் மாறிடிச்சு... ரெண்டாவது போட்டோகிராபர் கூட எதுவோ பேசிக்கிட்டு இருந்தார். சோ இங்க வர்றது, உன்னை இன்வைட் பண்றது எல்லாமே சந்தேகமே”

“இப்ப என்ன மாமா பண்றது?”

“நான் இருந்தா கேள்விக்கு விளக்கம் சொல்லனும், நான் பசங்களைக் கூட்டிக்கிட்டு நம்ம பண்ணை வீட்டுக்கு கிளம்பறேன். நீ அவங்களை பார்த்துட்டு எனக்கு கால் பண்ணு.”

“சரி மாமா”

பரத் காரில் பசங்களுடன் பண்ணை வீட்டுக்குச் சென்ற அரை மணி நேரத்தில் சிவாவின் கார் பரத்தின் வீட்டில் நுழைந்தது.

வீட்டின் முகப்பில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருந்தாலும், வீடு அப்படியே இருந்தது.

கார் சத்தம் கேட்டு வந்த சம்யுக்தா, “வாங்க அங்கிள்... வாங்க ஆன்ட்டி...” என்று முகம் மலர வரவேற்க,

இருவரும் புன்னகையுடன் உள்ளே சென்றனர்.

சிவா மட்டும் வீட்டைச் சுற்றி பார்வையிட,

“என்ன அங்கிள் அப்படி பார்க்கறீங்க?”

“ஏற்கனவே வந்ததுக்கும், இப்போதைக்கும் வீடு ரொம்ப மாறிடுச்சு, அதான் பார்த்தேன், ஆனா மத்தபடி அதே மாதிரி தான் இருக்கு”

“அதுவா அங்கிள், இதெல்லாம் நான் பார்த்த வேலை, நிறையா சேஞ்ச் பண்ண ஆசை தான் நோ டைம், கூடவே தாத்தா பாட்டி இருந்த வீடு. அதான் அப்படியே விட்டுட்டேன்”

“சிவா நீங்க எப்ப வந்தீங்க?”

“அது... அது ரொம்ப வருஷம் அகிடுச்சும்மா அதான் தெரியலை”

“உட்காருங்க அங்கிள்... உட்காருங்க ஆன்ட்டி...”

இருவரும் அமர இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள்.

“தேங்க்ஸ்ம்மா”

“இந்தாம்மா...” என்று பவித்ரா குடுத்த கவரில் பழங்களும், இனிப்புகளும், பிஸ்கட்டுக்களும் இருந்தன.

“வாங்க அங்கிள் பிரேக் பாஸ்ட் சாப்பிடலாம்” என்றவள் இருவரையும் அழைத்துச் சென்று டைனிங் டேபிளில் அமர வைத்தாள்.

இருவருக்கும் பரிமாற ஆரம்பிக்க,

“எங்கம்மா பசங்களைக் காணோம்”

“அவங்க வெளிய போயிருக்காங்க ஆன்ட்டி”

“எப்ப வருவாங்க?”

“சன்டே தான் ஆன்ட்டி”

“சன்டேவா?”

“மாமா கூட ஒரு ஜாலி டிரிப் போயிட்டாங்க ஆன்ட்டி, ஊர் சுத்த தான் ரெண்டுக்கும் இஷ்டம்...”

“பசங்க அப்படித்தான் இருப்பாங்கம்மா, பார்க்கலாம்ன்னு நினைச்சேன், முடியாம போய்டுச்சு”

“ஒரு நாளைக்கு நானே வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரேன் ஆன்ட்டி”

“இட்ஸ் ஓகே ம்மா... பசங்க வந்ததும் கூட்டிக்கிட்டு வா...”

“சாரி அங்கிள்... சாரி ஆன்ட்டி... நீங்க சொன்னதும் உடனே என்னால இட்லி, சப்பாத்தி தான் ரெடி பண்ண முடிஞ்சது, டோன்ட் மிஸ்டேக் மீ”

“எங்கம்மா வேற சாப்பிட? எனக்கு கொலஸ்ட்ரால் இருக்கு, அங்கிள் வயசாக ஆக மருந்து மாத்திரைக்கு பயந்து, அவரே கன்ட்ரோல் பண்ணிகிட்டார்”

“ஹெல்த் ரொம்ப முக்கியம் இல்லையா ஆன்ட்டி?”

“ஆமாம்மா. உங்க ஆன்ட்டிக்கு ரொம்ப கவலை, நான் ஒழுங்கா சாப்பிடறதில்லைன்னு...”

“அவர் இப்படித்தான்ம்மா... உனக்கு நன்றி சொல்லனும்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். நேரமே கிடைக்கலை”

“நன்றியா? எதுக்கு ஆன்ட்டி?”

“மனிஷா பத்தி சரியான சமயத்தில் சொன்னதுகும்மா”

“ஹோ.. அதுக்கா, அதுக்கு எத்தனை தடவை சொல்வீங்க, மனிஷா எனக்கு ஒரு பிரெண்ட்... அவங்க வாழ்க்கை நல்லா இருந்தா எனக்கும் ஹேப்பி தான்...”

“சரியான நல்லா இருக்கும்... சரியாகற வரைக்கும் என்ன பண்றதுன்னு தெரியலை”

“ஏன் ஆன்ட்டி? இன்னும் அப்படியேதான் இருக்காங்களா?”

“ஆமாம்ம்மா. ஏதோ முதல்ல இருந்ததுக்கு கொஞ்சம் பரவால்ல. முழுசா சரியாக என்ன பண்றதுன்னு தெரியலை”

“நான் ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன் ஆன்ட்டி”

“உங்க அத்தை எங்கம்மா? ஆளையேக் காணோம், அவங்களும் கூடவே போயிருக்காங்களா?” என்று அதுவரை வீட்டையும், அவளையும் ஆராய்ந்து கொண்டே உணவருந்திக்கொண்டு இருந்த சிவா கேள்வியெழுப்பினார்.

“அவங்க, அவங்க நேட்டிவ்ல இருக்காங்க... அங்கிள்...”

“உன் வீட்டுகாரர் வர்றாரா?”

“அவர் இந்த மன்த் என்ட் வர்றேன்னு சொன்னார், எப்படியும் சீக்கிரம் வந்துருவார் அங்கிள்... பசங்களைப் பார்க்காம இருக்க முடியலையாம்”

“அவர் என்ன பண்றார்?”

“அவர் ஒரு கர்னாட்டிக் சிங்கர் அங்கிள்.”

“பைன்ம்மா... பசங்க ரெண்டு பேரும் இங்க சிட்டிசன் ஷிப்பா இல்லை கனடியன் சிட்டிசன் ஷிப்பா?”

“அவங்க கனடியன் சிட்டிசன் ஷிப் அங்கிள்... நாலு பேருமே அங்க தான், இப்ப இங்க டெம்பரவரியா விசால வந்து இருக்கோம், இந்த இயர் முடிஞ்சதும் கனடாவே போகலாம்ன்னு ஒரு ஐடியா”

“ஏம்மா?”

“பசங்களுக்கு இங்க இஷ்டம் இல்லை ஆன்ட்டி, அவங்க பிறந்ததில இருந்து அங்க பழகின இடத்தை விட்டு இங்க வர அவங்களுக்கு மனசில்லை, எனக்காகத்தான் வந்தாங்க, குறிப்பிட்ட ரூல்ஸ்ல வாழ்ந்துட்டு இப்ப இங்க டோட்டலா மாறி இருக்கறது அவங்களுக்கு பிடிக்கலை, கூடவே அவங்க அப்பா இல்லாதது ரொம்ப வருத்தம்”

“ரெண்டு பேருமே அப்பா பசங்களா?”

“ஆமா ஆன்ட்டி, பையன் அம்மா செல்லம்ன்னு சொல்லிக்கலாம், பட் அவன் சுத்துறது முழுக்க அவங்க அப்பா கூடவாத்தான் இருக்கும், லீவு நாள்ல அவருக்கு முன்னாடி அவர்கூட போக கிளம்பி இருப்பான். அங்கிள் உங்களுக்கு இன்னொரு சப்பாத்தி?”

“போதும்மா... பேசிக்கிட்டே சாப்பிட்டதில் எக்ஸ்ட்ராவே சாப்பிட்டேன்”

சிவா சொல்லி முடிக்கவும் பவித்ராவின் செல் அழைக்கவும் சரியாக இருந்தது.

“எக்ஸ்கியுஸ் மீ அங்கிள்” என்றவள் கிட்செனில் இருந்த அவளுடைய செல்போனை நோக்கிச் சென்றாள்.

அவள் வெளியே வரவும் சிவாவும், பவித்ராவும் கைகழுவிவிட்டு ஹாலுக்குச் செல்லவும் சரியாக இருந்தது.

“என்ன அங்கிள், என்ன ஆன்ட்டி அதுக்குள்ள கைகழுவிட்டீங்க?”

“போதும்மா, நிறையாவே சாப்பிட்டோம்”

“கால் ஹாஸ்பிட்டல்ல இருந்து அங்கிள், எமர்ஜென்சி, சாரி அங்கிள் நான் உடனே கிளம்பனும். டோன்ட் மிஸ்டேக் மீ”

“ஓகேம்மா நோ பிராப்ளம், எங்க வீட்டிலையும் மூனு டாக்டர் இருக்காங்க, கூடவே உயிரோட மதிப்பும் தெரியும்மா, நீ கிளம்பு”

“சரிம்மா, வர்ற வெள்ளிக்கிழமை வீட்ல பூஜை ஏற்பாடு பண்ணி இருக்கோம், வீட்ல எல்லாரையும் கூட்டிக்கிட்டு வெளிக்கிழமை வீட்டுக்கு வந்துடும்மா”

“கண்டிப்பா ஆன்ட்டி?”

“எத்தனை மணிக்கு பூஜை?”

“ஈவ்னிங் ஆறு மணிக்கு”

“கண்டிப்பா ஆன்ட்டி...”

“சரி... கிளம்பு... சம்யுக்தாக்கு லேட் ஆகுது”

“வர்றோம்மா” என்று இருவரும் கிளம்ப,

அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, சம்யுக்தா பரபரப்பாக கேப் புக் செய்து, மருத்துவமனைக்கு கிளம்பினாள்.

மருத்துவமனைக்குள் நுழைந்து அவசர சிகிச்சைப் பிரிவை அடைய, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரைப் பரிசோத்தித்து விட்டு அவருக்கு வேண்டிய சிகிச்சை அளித்து, அவரைக் காப்பாற்றிவிட்டுத்தான் ஓய்ந்தாள்.

ஓய்ந்து போய் அவளறைக்குச் சென்று அமர்ந்தவளின் அறைக்கதவை யாரோ தட்ட,

“எஸ் கமின்” என்றவள் உள்ளே நுழைந்தவரைப் பார்த்து கோபத்தில் முகம் சிவக்க ஆரம்பித்தாள்.

“ஹாய் டார்லிங்”

“-----------------------------------------------“

“என்னம்மா இவ்ளோ டயர்டா இருக்க? காலைல சாப்பிட்டியா? சாப்பிடலையா? இப்ப மணி என்னத் தெரியுமா? வா சாப்பிட போலாம்”

“------------------------------------------------“

“என் மேல கோபம் ஓகே... அதை சாப்பிட்டுகிட்டே ஒரு நாலு திட்டு வழக்கம் போலத் திட்டு... எழுந்திரி”

“ஒழுங்கா என் கண் முன்னால நிற்காம எழுந்து போயிடு. இல்லை நடக்கறதே வேற...”

“என்ன பண்ணுவ? போலீஸ் கம்ப்ளைன்ட் குடுப்பியா? எங்க குடு பார்க்கலாம்? கமிஷனர் நம்பர் கூட இருக்கு தரட்டா?”

“இது ஹாஸ்பிட்டல்... அதுவும் என் ஹாஸ்பிட்டல்... அதானால கொஞ்சம் அடக்கி வாசிச்சா, ரொம்ப பண்ற? எங்கிட்ட உன் வேலையெல்லாம் காட்டாத, அப்புறம் இங்கேயே உன்னை அட்மிட் பண்ற அளவுக்காகிடும்”

“நோ பிராப்ளம், டிரீட்மென்ட்க்கு உன் கை என் மேல படும்ல, அதுக்காகவே அட்மிட் ஆகிக்கறேன், நீ என்ன பண்ணு, எனக்கு ஒரு அட்மிஷன் சிலிப் போடு பார்க்கலாம்”

“யூ... ராஸ்கல்” என்று அவள் பல்லைக்கடிக்கும் போதே,

“எக்ஸ்கியுஸ் மீ மேம்” என்று கதவைத் திறத்து கொண்டு ஒரு செவிலிப்பெண் உள்ளே வந்தார்.

“மேம் உங்களுக்கு பிட்ஸா வந்திருக்கு”

“கொண்டு வரச்சொல்லுங்க”

டெலிவரி பாய் கொண்டுவந்த பிட்சாவிற்கு கைப்பையில் இருந்து பணத்தை எடுத்துக்கொடுத்தவள், பிட்சாவையும், தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக்கொண்டு அவள் இருக்கையை விட்டு எழுந்தாள்.

“வெல்... இங்க நான் ஓவர் ரியாக்ட் பண்ணி, ரெண்டு பேரோட பெயரும் ஓவர் டேமேஜ் ஆக நான் விரும்பலை, சோ கிளம்பு” என்று அவள் வெளியேற முயற்சிக்க,

அவளது கரம் பற்றி இழுத்து அவன் மடிமீது அமர்த்தி அவள் எழுந்திருக்கா வண்ணம் ஒற்றைக்கையால் இறுக அணைத்தவன், மற்றொரு கையால் பிட்ஸா பெட்டியைத் திறந்து, அதிலிருந்த துண்டுகளில் ஒன்றை எடுத்து சுவாதீனமாக உண்ண ஆரம்பிக்க,

“டேய்... இப்ப விடப்போறியா இல்லியா?”

“இரு செல்லம், எப்பப்பார்த்தாலும் இதையே சாப்பிடறியே அப்படி இதுல என்ன இருக்குன்னு பார்க்கறேன்”

அவன் உண்பதில் கவனமாக, அந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அவளது கரங்களை இறுக்கிப்பிடித்திருந்த அவனது கையைக் குனிந்து கடித்துவிட்டிருந்தாள். அதில் அவன்,

“ஸ்... ராட்சஸி...” என்று முனங்கிக்கொண்டே கைகளை எடுத்துவிட,

அவன் மடியில் இருந்து துள்ளி எழுந்தவள், பிட்சா பாக்சையும், தண்ணீர் பாட்டிலையும் நொடியில் எடுத்துக்கொண்டு அறைக்கதவைத் திறந்திருந்தாள். வெளியே சென்றவள் உள்ளே எட்டிப்பார்த்து,

“எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் கையை வைச்சதுக்கு என் பனிஷ்மென்ட் இது, இது வெறும் சாம்பிள் தான், அப்புறம் ரத்தக்களறி ஆகிடும் ஜாக்கிரதை... ரொம்ப ஆடாத, இன்னும் ஒரு மாசம் தான், அப்புறம் தெரியும் நான் யார்ன்னு”

அவனோ புன்னகைத்துக்கொண்டே,

“ஒரு மாசம் தான்... அப்புறம் தெரியும், நீ இந்த பிரித்வியோட சம்யுக்தா மட்டும்தான்னு... முடிஞ்சா என்னை விட்டு ஒரு செகன்ட் விலக முடியுமான்னு யோசி” என்று எழுந்து கொண்டே அவளருகே வந்து சொன்னவன்,

“தேங்க்ஸ் பார் யுவர் பிட்ஸா” என்று சொல்லிவிட்டு அவளுடைய புடவைத்தலைப்பில் கையை துடைத்துக்கொண்டு சிறு புன்னகையுடன் அவளைத் தாண்டிச் சென்றான்.

அவனது செயலில் மேலும் கடுப்பான சம்யுக்தா, சுற்றிலும் பார்க்க, அவளது அறைக்கு வெளியே இருந்த செவிலிப்பெண் ஒருத்தர் அவளையே பார்ப்பதைக் கண்டதும், அவளுக்கு சர்வ நிச்சயமாக புரிந்து போனது, அவன் அவளது புடவை முந்தானையில் கையைத் துடைத்ததைப் பார்த்திருப்பாளென்று.

ஒரு நொடி அவனை மனதிற்குள் திட்டியவள், அந்த பெண்ணைப் பார்த்து, “என் ரூம்ல லைட் மட்டும் ஆப் பண்ணுங்க, கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்” என்றவள் அங்கிருந்த அவளுடைய தனிப்பட்ட அறைக்குச் சென்றாள்.

ராகம் இசைக்கும்...
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுகமான புது ராகம்!




அத்தியாயம் – 7

சம்யுக்தாவின் வீட்டில் இருந்து கிளம்பிய சிவாவிற்கும், பவித்ராவிற்கும் மனம் முழுக்க பார்க்க முடியாமல் போன பேரனிடத்தே தான் இருந்தது.

வீட்டிற்கு வந்தும் ஓயாமல் பவித்ரா அதைப்பற்றியே தான் பேசிக்கொண்டு இருந்தார்.

“என்னங்க இது? இவ்ளோ தூரம் முயற்சி பண்ணியும் சர்வாவைப் பார்க்க முடியலையே”

“எனக்கும் அதே வருத்தம் தான் பவி, எனக்கு அவனை ஒரு தடவை பார்த்தே ஆகனும்.”

“சரி விடுங்க, மன்டே ஸ்கூல்ல பார்க்கலாம்.”

“ஆனா சர்வா விசயத்துல எனக்கு எதுவோ எங்கேயோ இடிக்குது பவி”

“உங்களுக்கு அப்படி என்ன சந்தேகம்? அவனைப் பார்த்தாலே தெரியுது, சம்யுக்தாவை வைச்சு ஒரு முடிவுக்கு வர முடியலை, அவ புருஷனை பார்த்தா தான் முடிவு பண்ண முடியும்”

“எனக்கு சந்தேகம் இருக்கு, ஆனா ஒரு இடத்துல இருந்து இல்ல, எல்லா இடத்துல இருந்தும், அதாவது உன் பிரசவத்துல இருந்து”

“ஆனா சம்யுக்தா பார்க்க சின்ன பொண்ணா தெரியலை, எப்படியும் முப்பது வயசாவது இருக்கும், இல்லீங்க?”

“ஆமா பவி, நமக்கு இப்ப வேண்டியது சம்யுக்தாவோட பிறந்த நாள் தேதி”

“அதை வைச்சு என்ன பண்ண போறீங்க?”

“ஒரு வேளை அவ பிறந்த தேதி நம்ம பசங்க பிறந்த தேதியோட ஒத்து வந்தா, சம்யுக்தா நம்ம பொண்ணா இருக்கலாம், இல்லைன்னா அவ புருஷன் நம்ம பையனா இருக்கலாம்”

“எனக்கு ஒரு விஷயம் புரியலைங்க, இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் நம்ம குழந்தைன்னா, நம்ம பசங்கள்ல ஒருத்தர் நம்ம குழந்தை இல்லைன்னு ஒரு பாயின்ட் இருக்கே” என்று குரல் பிசிற பவி சொல்ல, அவரது கூற்றில் ஒரு நொடி அதிர்ந்த சிவா,

“ஏன் நமக்கு மூனு குழந்தைங்க பிறந்து இருக்கக்கூடாது” என்று தன்னை சுதாகரித்துக்கொண்டு கேள்வி எழுப்பினார்.

“நிச்சயமா அப்படி இருக்க வாய்ப்பு இல்லைங்க”

“எதை வைச்சு சொல்ற?”

“எனக்கு இன்னும் நல்லா நியாபகம் இருக்கு, ரெண்டு பேபியோட அசைவை மட்டும் தான் நான் உணர்ந்தேன், என் வயிறும் மூனு குழந்தைக்கு ஏற்ப இல்லை”

“நீ சொல்றதை வைச்சு பார்த்தா, பேபி ஸ்வாப் ஆகி இருக்கனும், அப்படி ஆகி இருந்தா, நம்மகிட்ட இருக்கறது, அவங்க குழந்தையா இருக்கனும், ஐ மீன் ஒன்னு சம்யுக்தா பேரண்ட்ஸ் இல்லை பரத் பேமிலி, அப்படித்தான?”

“ஏங்க? நாம அந்த குழந்தையை தேடப் போயி, நம்ம பசங்கள்ல ஒருத்தர் அவங்க பசங்கன்னு தெரிய வந்தா என்ன பண்றதுங்க?”

“யோசிப்போம் பவி. இவங்களையும் நான் விட்டுத்தர மாட்டேன், நம்ம குழந்தையையும் விட்டுத்தர மாட்டேன்”

“இதென்னங்க பேச்சு, நாம யோசிக்கற மாதிரி தான அவங்களும் யோசிப்பாங்க”

“இப்ப நம்ம பேச வேண்டியது டாக்டர் பிரணித்தா கிட்ட”

“அவங்க தான் இங்க இல்லையே, அவங்க பல வருசத்துக்கு முன்னாடியே ரெண்டு மூனு தடவை வெவ்வேற இடம் மாறினாங்கள்ல, இப்ப எப்படி கண்டு பிடிக்க முடியும்? எங்க இருக்காங்கன்னு? எனக்கும் அவங்களுக்கும் தொடர்பு விட்டு போய் பதினாலு அல்லது பதினைந்து வருஷம் இருக்கும்”

“முயற்சி பண்ணி பார்க்கிறேன் பவி... அவங்களை அணுக வழி கண்டு பிடிக்கிறேன், நீ இதை உன் மைன்ட்ல ஏத்திக்காத, நான் பார்த்துக்கறேன், நீ கொஞ்சம் ரிலாக்ஸ்டா இரு”

“எப்படிங்க ரிலக்ஸ்டா இருக்க முடியும், மனசு கிடந்தது தவிக்குது”

“இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ, இந்த பிரச்சனை எல்லாத்தையும் நான் முடிச்சு வைக்கிறேன்”

“அந்த சம்யுக்தா வேற, இங்கிருந்து போற முடிவுல இருக்கறதா சொன்னா, அதுக்குள்ள நம்ம முயற்சி பலிக்குமா?”

“பலிக்கனும்... பலிக்க வைக்கிறேன் பவி...” என்றவர்,

“நீ கொஞ்ச நேரம் தூங்கு, பாப்பாவும், நித்யாவும் தூங்கறாங்க, அவ எழுந்தா ரெண்டு பேரும் தூங்க முடியாது, எனக்கு ஆபிஸ் வொர்க் கொஞ்சம் இருக்கு” என்று பவியை படுக்க வைத்துவிட்டு, போர்வையையும் போர்த்திவிட்டு அறையை விட்டு வெளியே சென்றார்.

சர்வேஷ்வர் சிவேஷ்வரின் மனதை ஆக்கிரமித்து இருக்க, சிவா ப்ரித்வியின் நினைவை சற்றே பின்னுக்குத் தள்ளினார்.

அன்று இரவு தனுவுடன் பெரியவர்கள் ஹாலில் விளையாடிக்கொண்டு இருக்க, அங்கு வந்த மானவ் கோபத்துடன் சோபாவில், கையில் இருந்த லேப்டாப் பையை வீசிவிட்டு அமர்ந்தான்.

தலையில் கைவைத்து அமர்ந்திருந்த மானவைக் கண்டு உள்ளம் பதறிய பவித்ரா,

“ஏன்டா? என்னாச்சு?” என்று அவனருகே சென்று அவனது தோளைத் தொட்டவாறே கேள்வி கேட்டார்.

“என்ன ஆச்சா?... அந்த பிரித்வி இந்த டீலையும் முடிச்சுட்டான். எங்கிட்ட அந்த பையர் பேசவே மாட்டேன்னுட்டான். கடைசி வரை அவனை மீட் பண்ணவே முடியலை, இதுக்கு மேல அவனைத் தொங்க விருப்பம் இல்லாம வந்துட்டேன்”

“இங்க பாரு மானவ் பிசினஸ்ல இது சகஜம், நீ டென்ஷன் ஆகறது சரி இல்லைப்பா”

“என்னம்மா சரி இல்லை? இது வரைக்கும் நமக்கு எவ்ளோ லாஸ்ன்னு தெரியுமா? கிட்டத்தட்ட நம்ம மொத்த சொத்துல நாலுல ஒரு பங்கு இழந்தாச்சு”

அவனது வார்த்தைகளில் அதிர்ந்த பவி, சிவாவைப் பார்த்து அதே அதிர்ச்சியுடன் வினவ,

“என்னடா? என்னங்க சொல்றான் இவன்?”

“இந்த முறை எக்கச்சக்க லாஸ், அப்பா பேர்ல இருந்த லேன்ட்ல கொஞ்சம் சேல் பண்ணி வொர்க்கர்ஸ்க்கு லாஸ்ட் ரெண்டு மாசம் சேலரி குடுக்க, ரொட்டேசன் பண்ண ஏற்பாடு பண்ணி இருக்கு”

“எப்படிங்க இவ்ளோ தூரம் விட்டீங்க?”

“நமக்கு ரொட்டேசனுக்கு பணம் தர்ற பைனான்ஸியர் கொஞ்சம் கை விரிச்சுட்டான், அதுக்காக நம்ம வொர்கர்ஸ்க்கு சம்பளம் தராம இழுத்தடிக்க முடியுமா பவிம்மா?”

“அப்பா இதுக்கு உடனே முடிவு கட்டியாகனும்?”

“இங்க பாரு, கொஞ்ச நாளைக்கு நியூ கிளைன்ட் சேர்ச் பண்ணாத, அமைதியா இரு, இன்னும் மூனு மாசத்துக்கு ரொட்டேசனுக்கு காசு இருக்கு, அதுக்குள்ள நமக்கு வந்து சேர வேண்டிய பணம் வந்துடும், சீசன் டைம் ஆரம்பிச்சா, நமக்கு ரெசார்ட்ல இருந்து பணம் வர ஆரம்பிச்சுடும், தீம் பார்க் இருக்கு, மத்த பிசினஸ் இருக்கு, கொஞ்சம் கொஞ்சமா டீல் பண்ணிக்கலாம்.”

“எப்படிப்பா இவ்ளோ கூலா பேசறிங்க, இதுக்கும் மேல இன்னொரு நியூஸ் இருக்குப்பா, அது தெரிஞ்சா என்ன சொல்வீங்க?”

“என்ன நியூஸ்?”

“இப்பத்தான் ரகு அங்கிள் கால் பண்ணி சொன்னார், பிரித்விதான் இந்த வருஷ ஹோட்டல் அசோசியேஷன் ப்ரெசிடென்ட்டாம்”

“இன்னிக்கு எலெக்சன் ரிசல்ட்ன்னு சொன்னாங்க, மறந்துட்டேன்”
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“அப்படி என்னப்பா அதை மறக்கர அளவுக்கு சிந்தனைல இருக்கீங்க? அவர் கால் பண்ணப்ப முக்கியமான வேலைன்னு சொன்னீங்களாம், கூடவே இன்னிக்கு நீங்க ஆபிஸ்க்கும் போகலையாம், நம்ம நிலைமை என்ன? நீங்க என்ன பண்றீங்க?”

“ஆமாடா கொஞ்சம் வேலை... அதுக்கு இப்ப என்ன?”

“என்னவா? நீங்க தோத்துடுவீங்கன்னு தெரிஞ்சுதான் இன்னிக்கு அங்க வரலைன்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்களாம்”

“டேய்... பேசறவங்க பேசிக்கிட்டு போகட்டும், பிஸினஸ் லைட்டா சறுக்கி இருக்கு, அவ்ளோதான், தென் இந்த இமேஜ் நான் கஷ்டப்பட்டு உருவாக்கினது, அதை அவ்ளோ சீக்கிரம் சரிய விட மாட்டேன், ஆனா அதை விட எனக்கு இப்ப சில முக்கியமான வேலைகள் இருக்கு, சோ கொஞ்ச நாள் பொறுமையா இரு, என்னோட வேலைகளை முடிச்சுட்டு வரேன், அப்புறம் இதை டீல் பண்ணிக்கலாம்”

“அதெல்லாம் முடியாதுப்பா... நான் யாருன்னு, அவனுக்கு நான் காட்டறேன்”

“இங்க பாரு நான் சொல்றதை செய், இப்போதைக்கு இந்த பிரச்சனை வேண்டாம், அவன் நமக்கு பர்ஸ்னலா எந்த தொந்திரவும் இதுவரை தந்ததில்லை, எனக்கு தெரிஞ்சு அவன் போன தடவை கன்ஸ்ட்ரக்சன் அசோசியேஷன்ல அவன் போட்டியிட்டு ஜெயிச்சிருக்கான், இதுவரை அவன் எடுத்த நடவடிக்கை பத்தி உனக்கேத் தெரியும், புத்திசாலி, திறமைசாலி, அவன் நமக்கு மட்டும் தொழில் எதிரி இல்லை, அதையும் புரிஞ்சுக்கோ”

“எப்ப இருந்துப்பா நீங்க இப்படி ஆனிங்க? தொழில்ல வாங்கறவனுக்கு மட்டும் நேர்மையா இருந்தா போதும்ன்னு சொன்ன நீங்க, எதிரிகளே உருவாகாத மாதிரி காட்டிக்கிட்டு, ஒவ்வொருத்தரையும் இந்த தொழிலை விட்டே களையெடுத்த நீங்க, இப்படி பேசறது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குப்பா”

“இளரத்தம் சூடா இருக்கு மான்வித், இப்ப உன் அப்பா ஆடியோடி களைச்சு உட்கார்ந்து இருக்கேன், அதனால தான், நிதானமா நான் யோசிக்கறேன், உன் வயசுல நானும் இப்படித்தான் இருந்தேன்”

“அப்பா நீங்க பேசிகிட்டே இருங்க, நான் பண்றதை பண்ணறேன்” என்றவன் எழுந்து செல்ல முயற்சிக்க, அவனைத் தடுத்த பவி,

“ஒரு நிமிஷம் ரெண்டு பேரும் பொறுங்க... டேய் மானவ் அப்பா சொல்றதை வைச்சு பார்த்தா, அந்த பிரித்வி நம்மகிட்ட பர்சனலா எந்த பகையும் கொண்டு நடக்கலை, எனக்கு இப்ப தேவை என்னன்னா? நம்மகிட்ட இருக்கற எல்லா தொழிலுக்கும் அவன் போட்டிக்கு வர்றானா? இல்லை குறிப்பிட்ட சில மட்டுமா?”

“ஹோட்டல், கன்ஸ்ட்ரக்சன், ரியல் எஸ்டேட் இந்த மாதிரி சிலது மட்டும் தான் ம்மா”

“அவன் யாரு? எங்க இருந்து திடீர்ன்னு முளைச்சான்?”

“அவன் ஒரு இன்டர்நேஷனல் மல்ட்டி மில்லினியர், அவனோட பிரான்ச் ரொம்ப நாளா இங்க இருக்கு, இந்த தடவை அவனே நேர்ல வந்து இங்க உட்கார்ந்து இருக்கான்”

“அவனை எப்படிடா எலெக்சன்ல போட்டியிட அனுமதிச்சாங்க?”

“அவன் கம்பெனி, முறைப்படி இங்க அசோசியேஷன்ல பதிவாகி ஐஞ்சு வருஷம் ஆகி இருக்கு, கூடவே அவன் கைல பெரிய பெரிய பிராஜக்ட்ஸ், அதுல முக்கால்வாசி கவர்ன்மென்ட் பிராஜக்ட்ஸ், கூடவே பெரிய புள்ளிங்க, அரசியல்வாதிங்க செல்வாக்கு இருக்கு, நம்ம அசோசியேஷன் சட்டதிட்டப்படி அவன் போட்டியிட அனைத்து தகுதியும் இருக்கு”

“சரி நீ இப்போதைக்கு இந்த போட்டியை விடு, அப்பாக்கு புதுசா கொஞ்சம் வேலை இருக்கு, அவர் அதை பார்த்தாகனும், நீ நம்முடைய மத்த தொழிலை பாரு, அதை முன்னேற்று, இப்போதைக்கு நீ கொஞ்சம் அமைதியா இரு”

“என்னம்மா நீங்களும் இப்படி சொல்றீங்க?”

“மானவ் அவன் நம்மை, நம் வளர்ச்சியை அழிக்க நினைச்சா, அதை இந்நேரம் முடிச்சு இருப்பான், அந்த மாதிரி அவன் எதுவும் பண்ணலை, அதும் இல்லாம எங்கேயோ இருந்து இங்க வந்தவன், இங்கேயே நிரந்தரமா இருப்பானா? கொஞ்ச நாள் ஆனா போயிடுவான், அதுக்காக உன்னை அதுவரை பொறுமையா இருக்கச்சொல்லல, நம்ம மத்த பிசினஸ்ல நீ கிங்கா இரு, இழந்த பதவி, அந்தஸ்து, சொத்து எல்லாத்தையும் பொறுமையா மீட்டுக்கலாம், இந்த சூழல்ல நிதானமே பிரதானம். அவன் நிரந்தரமா இங்க இருக்கற மாதிரி இருந்தா நம்மை எல்லா தொழில்லையும் வீழ்த்தி இருப்பான், அவன் தொழில்ல மட்டும் தான் அவன் கான்சன்டிரெட் பண்றான் புரியுதா?”

“எனக்கு அதெல்லாம் தெரியாது, அப்பா மன்டே இன்டர்னல் மீட் அரேஞ் பண்ணி இருக்கேன், நீங்க ரெடி ஆகிக்கோங்க” என்று சொன்னவன் சோபாவில் இருந்து எழுந்திருக்க,

“சாரி மானவ், எனக்கு அன்னிக்கு இம்பார்டன்ட் ஒர்க் இருக்கு”

“இதை விட அப்படி என்ன முக்கியமான வொர்க் உங்களுக்கு?”

“என்னடா இப்படி கேட்கற? நம்ம குல தெய்வம் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பண்ற பொறுப்புல அப்பாதான் ஹெட். எப்பயுமே உங்கப்பா தான் முன்னாடி நின்னு செய்வார் தெரியாதா?”

“என்னமோ பண்ணித்தொலைங்க... பிசினஸ் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன்... இடைல வந்து நீங்க தலையிடாம இருந்தா அதுவே போதும்” என்று கத்தியவன் பேகை எடுத்துக்கொண்டு அவனது அறைக்குச் சென்றான்.

“டேய்... நில்லுடா....” என்ற பவியின் குரல் அவனுடைய காதில் விழவே இல்லை.

“விடும்மா... இப்பத்தானே தோல்வியை சந்திக்க ஆரம்பிச்சு இருக்கான், போகப்போக சரியாகிடுவான்”

“எங்க அண்ணனும் இவனும் இந்த விஷயத்துல ஒன்னு” என்று பவித்ரா புலம்ப, அதில் நித்யாவின் முகம் பிரகாசித்தது.

“அண்ணா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்?” என்று நித்யா இடையிட்டார்.

“என்னம்மா?”

“இல்ல பவி சொன்னதை வைச்சு யோசிக்கும் போது, எனக்கு ஒரு சந்தேகம் வருது?”

“என்னம்மா?”

“சர்வா உங்க பேரனா இல்லாம ஏன் உங்க தங்கை பேரனா இருக்கக்கூடாது?”

அவளது கேள்வியில் இருவரும் திகைத்துப் போய் பார்க்க,

“நமக்கு அந்த சூழ்நிலைல, தாய் இறந்ததா சொல்லி ஒரு குழந்தையை மட்டும் தந்தாங்க, மே பீ இன்னொரு குழந்தை பிறந்திருந்தா? உங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்த மாதிரி அவளுக்கும் பிறந்திருந்தா?”

“ஆனா அவன் எப்படி என்னை மாதிரி?”

“மானு இல்லையா? மானு பிறந்ததுல இருந்து இப்ப வரை பவி மாதிரியே தான இருக்கா?”

“பவி உனக்கு என்ன தோணுது? நான் இந்த ஆங்கிள்ல யோசிக்கலை”

“எனக்கு அப்ப இருந்த சூழ்நிலைல ஒன்னும் புரியலை, இப்ப எதுவுமே நியாபகம் வரலை, ஆனா அண்ணா சொன்னதை வைச்சு பார்த்தா ஒரே குழந்தைன்னு மட்டும் தான் தோணுது”

“ஒரு வேளை, அம்மா அப்பா இல்லாத குழந்தைன்னு, குழந்தை இல்லாத யாருக்கோ, இல்லை யாருக்காவது இறந்து பிறந்த குழந்தைக்கு பதிலா ஒரு குழந்தையைக் குடுத்து இருந்தா?”

“சரி நித்யா, நீ சொன்ன கோணத்துலையும் நான் விசாரிக்கிறேன், இப்ப மானவ் வீட்ல இருக்கான், நாம பேசறது இப்போதைக்கு அவன் காதுல விழ வேண்டாம், சோ மீதியை நாளைக்குப் பேசிப்போம்” என்று சிவா முடித்துக்கொண்டு எழுந்துவிட்டார்.

“சரி நித்யா, நீ சொல்றதை நாங்க யோசிச்சு பார்க்கறோம், இன்னும் ஒரு நாள் தானே, சர்வாவை பார்த்தா விபரம் தெரிஞ்சுடும். நீ வா பாப்பாக்கு சாப்பிட ஏதாவது தரலாம்” என்ற பவித்ரா அங்கிருந்து எழுந்தார்.

இவர்கள் இவ்வாறு குழப்பத்திலும், நிம்மதியற்ற மனநிலையிலும் இருக்க,

மனிஷா கான்பிரன்ஸ் முடித்துவிட்டு ஹோட்டல் அறைக்குத் திரும்பியிருந்தாள்.

அறைக்கு வந்து வெந்நீரில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு மஞ்சத்தில் படுத்தவளுக்கோ மறந்தும் உறக்கம் வரவில்லை.

இரண்டு நாட்கள் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில், அவர்களின் மருத்துவமனைக்கும், அவளுக்கும் அவார்டு வழங்கப்பட இருக்கிறது.

முதல் நாள் அதிகளவில் பரவி வரும் புற்றுநோய் குறித்தும், சிக்கலான அறுவைசிகிச்சை செய்வது பற்றியும் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது, அதன் பின்னர், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர் குழாம் ஒன்று அங்கிருந்த பிற மருத்துவர்களின் சந்தேகங்களைக் கேட்டறிந்து, அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

இவற்றையே சிந்தித்துக்கொண்டே, உறக்கம் வராமல் படுத்து இருந்தவளின் செல் அடிக்க, அதில் மிளிர்ந்த எண்களைப் பார்த்தவள் ஒரு புன்னகையுடன் அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.

“ஹெலோ...”

“ஹலோ மனிஷா... ஹவ் ஆர் யூ?”

“பைன்... நீங்க எப்படி இருக்கீங்க?”

“பைன்... உங்களால எனக்கு ஒரு உதவி ஆகனுமே?”

“சொல்லுங்க”

“எனக்கு உங்க ஹாஸ்பிட்டலோட ஷேர்ஸ் கொஞ்சம் வேணும், இமீடியட்டா”

“மேக்சிமம் ஷேர் மாமா & அத்தைகிட்ட இருக்கு, மீதி ட்ரஸ்ட் மெம்பர்ஸ்ட்ட இருக்கு, அதை டேக் ஓவர் பண்ணி மானவ் பேருக்கு மாத்த ஐடியா பண்ணாங்க, பட் அந்த மெம்பர்ஸ் ஒத்துக்கவில்லை, அவங்க மாமாக்கு நெருங்கிய சிநேகிதம், கூடவே தாத்தாவோட நெருங்கிய நண்பர்கள் பசங்க, அதனால மாமாவும் கேட்கலை”

“எனக்கு அவங்க டீட்டைல்ஸ் வேணுமே”

“உங்களுக்கு நான் வாட்சப் பண்றேன்”
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“தேங்க்ஸ்ம்மா”

“இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க? இது என்னோட கடமை”

“சரிம்மா... நீங்க எனக்கு செய்யற உதவி எக்காரணம் கொண்டும் நான் வெளிய தெரியாம பார்த்துக்குவேன், நீங்களும் ஜாக்கிரதையா இருங்க”

“தேங்க்ஸ்...” என்றவள் போனைக் கட் செய்துவிட்டு, மற்ற டிரஸ்டிக்களின் பெயர்களை அதே எண்ணுக்கு வாட்சப் செய்ய ஆரம்பித்தாள்.

இரட்டை டிக் வந்து இரண்டும் நீல நிறமாக மாறிய அடுத்த நொடி, அதே எண்ணில் இருந்து மற்றொரு அழைப்பு வந்தது.

அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தவள்,

“உங்களுக்கு நான் அனுப்பின லிஸ்ட்ல இப்ப லாஸ்ட்டா இருக்கற ஒருத்தர் இங்க இல்லை, அவங்க பையனோட டோட்டலா ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிட்டார்.”

“சரிம்மா, நீங்க அனுப்பின தகவல்களுக்கு நன்றி, உனக்கு ஒரு சின்ன சர்பிரைஸ் இன்னிக்கு நியூஸ் சேனல்ல ஓடுது. இது உனக்கு நான் குடுக்கற கிப்ட், தென் வாட்சப் மெசேஜ் டெலீட் பண்ணிடுங்க” என்றவன் காலைக் கட் செய்ய,

அடுத்த நொடி மனதில் ஏதோ தோன்ற, கட்டிலில் கிடந்த ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தாள்.

அதில் வந்த செய்தியைப் பார்த்து உள்ளம் நிம்மதியடைய ஆனந்த கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்த செய்தி இதுதான்,

“கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருச்சியையே உலுக்கிய சிறுமி லாவண்யாவின் மரணத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குற்றவாளிகள் நால்வரும், இன்று சிறைச்சாலையில் நடந்த அடிதடியில் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை, சிறை வளாகத்தில் இவர்கள் நால்வருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது, நால்வரில் ஒருவர் அரசியல் தலைவரின் வாரிசு என்பதால், அந்த நபருக்கு, சிறைக்குள்ளே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருந்த ஆதரவாளர்கள் சிலர் உதவியுள்ளனர்.

இதைப் பிடிக்காத மற்ற மூவரும் அவரிடம் அடிக்கடி சண்டை வளர்த்துள்ளனர், இன்றும் வழக்கம் போல நடந்த தகராறில் மற்ற மூவரும் அவரைக் கையில் வைத்திருந்த மண்வெட்டி, கடப்பரையினால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

அதில் ரத்தம் கசிய அந்த நபர் மயங்கிய விழ, அவரது ஓலம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்த கைதிகளும், காவலர்களும் ஓடி வந்துள்ளனர், அதில் கைதிகளினுடனிருந்த, அந்த நபரின் ஆதரவாளர்கள் மூவரையும் தாக்க ஆரம்பித்துள்ளனர்.

தற்காத்துக்கொள்ள பதிலுக்கு மூவரும் அவர்களைத் தாக்க, காவலர்களும், சுற்றி இருந்த நபர்களும் அதைத் தடுக்க முயற்சி செய்துள்ளனர்.

விபரம் அறிந்த சிறை நிர்வாகம் தலையிட்டு, தடியடி நடத்தி சண்டையை நிறுத்தி, படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

அதில் லாவண்யாவின் வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த நால்வரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதிகப்படியான இரத்தப்போக்கினால் நால்வரும் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் ஐந்து காவலர்களும், பத்து கைதிகளும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது, நடந்த சண்டையை நிறுத்த முயற்சி செய்த உடனிருந்த சில கைதிகள் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.

சிறையில் நிகழ்ந்த இந்த அடிதடி தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளை சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியால், சிறையில் ஏற்பட்டு இருந்த பதற்றம் தணிந்து, சிறையில் அமைதி நிலவுவதாகவும், தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் சிறை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெளியான சி.சி.டி.வி. காட்சிகளை இப்போது காணலாம்”


செய்தியைப் பார்த்த மனிஷாவின் கண்கள் தன்னையுமறியாமல் கலங்கியது, அவளது கைகள் தானாக செல்லில் “தேங்க்ஸ்” என்று டைப் செய்து அனுப்பியது.

இரண்டு நீல நிற டிக்குகளைக் கண்ட மனிஷா அந்த மெசேஜ்கள் அனைத்தையும் டெலிட் செய்துவிட்டு, சற்று நிம்மதியுடன் உறங்கச் சென்றாள்.

அதே இரவில், மலைக்கோட்டை மாநகரத்தில் பழமை மாறாமல் சற்றே புது வர்ணங்களை பூசிக்கொண்டு நின்ற அந்த இல்லத்தின் வெளித்தோட்டத்தில், வானில் உலவும் நிலவிற்குத் துணையாக புவியில் உலவிக்கொண்டு இருந்தாள் சம்யுக்தா.

நினைவுகள் முழுக்க, அன்று மாலை அவள் பரத்திடம் அலைபேசியில் பேசியதையே சுற்றி வந்தது.

அன்று மாலை,

“என்னம்மா? வீட்டுக்கு வந்துட்டியா?”

“இப்பத்தான் மாமா வந்தேன்”

“என்ன சொன்னாங்க? உன் அங்கிளும்? ஆன்ட்டியும்?”

“வர்ற வெள்ளிக்கிழமை பூஜை வைச்சு இருக்காங்களாம் மாமா, பூஜைக்கு பசங்களையும் கூட்டிக்கிட்டு வரச்சொல்லி சொன்னாங்க?”

“நீ என்ன சொன்ன?”

“கர்ட்ஸிக்கு சரின்னு சொல்லிருக்கேன்”

“அப்புறம் என்ன சொன்னாங்க?”

“பசங்க எங்கேன்னு கேட்டாங்க? இன்னும் சொல்லப்போனா அவங்க வந்ததே பசங்களைப் பார்க்கத்தான் போல மாமா”

“எப்படிம்மா சொல்ற?”

“அவங்க பேச்சு, அவங்க செயல் எல்லாமே அப்படித்தான் இருந்துச்சு, உள்ளே நுழைஞ்சதுல இருந்து அவங்க கண்கள் வீட்டை சுற்றி அலசிக்கிட்டே இருந்துச்சு”

“திடீர்ன்னு ஏன் பசங்களைப் பார்க்க கேட்டாங்க?”

“எனக்கும் புரியலை மாமா... நீங்க இதைப்பற்றி என்ன நினைக்கறிங்க?”

“ஒரு வேளை அவங்களுக்கு லைட்டா சந்தேகம் வந்து இருக்கலாம்”

“எப்படி மாமா சொல்றீங்க?”

“ஏன்னா? சர்வாவையும் சிவாவையும் ஒப்பிட்டு பார், ஓரளவுக்கு சாயல் தெரியும், அதை வைச்சு அவங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம்”

“சரி மாமா, அப்படி பார்த்தாலும் அவர் வயசு என்ன? சர்வா வயசென்ன? உத்து பார்த்தா தான் தெரியும். கூடவே சர்வா கம்ப்ளீட்டா பாரின் ஸ்டைல்ல இருக்கான்.”

“அப்படி இல்லைன்னா நம்ம மேல ஏதாவது சந்தேகமா இருக்கலாம்”

“சரி மாமா பார்ப்போம் என்ன நடக்குதுன்னு? ஆச்சு இன்னும் ஒரு மாசம், கிளம்பிடுவோம், ஆனா நீங்க ஏன் கிளம்பினீங்க?”

“என்னை நேரடியா கேள்வி கேட்டா, நான் பதில் சொல்லனுமே”

“இப்ப அடுத்து நாம என்ன செய்யனும்ன்னு நினைக்கறிங்க?”

“பூஜைக்கு போயிட்டு வா, மத்ததை அப்புறம் பேசிக்கலாம்”

“சரி மாமா, நீங்க பசங்களைப் பாருங்க நான் ரெப்ரெஷ் ஆகிட்டு கூப்பிடறேன்”

“சரிம்மா”

இந்த உரையாடலையே சுற்றிச் சுற்றி வந்தவள் மனதில் ஒரு எண்ணம் முழுதாக உருவாகியது, அது உறுதியாகவும் மாறியது, அதை உடனே செயலாற்றும் பொருட்டு, கையில் அலைபேசியை எடுத்தவள், பவித்ரனுக்கு அழைப்பெடுத்தாள்.

அவளது அழைப்பிற்கு காத்திருந்தவன் போல, முதல் ரிங்கிலேயே பவித்ரனும் அழைப்பை ஏற்றான்.

“என்ன டார்லி? இந்நேரத்துல போன்?”

“நான் பண்றது இருக்கட்டும், நீங்க இந்த நேரத்துல கரெக்ட்டா ஒரே ரிங்க்ல போன் அட்டென்ட் பண்றீங்களே? நீங்க என்ன பண்ணறீங்க?”

“கொஞ்சம் வொர்க் இருந்துச்சு, அதான் வர லேட் ஆகிடுச்சு, இப்பத்தான் வந்தேன், உள்ளே நுழைஞ்சதும், உன் நியாபகம், சரி போன் பண்ணலாம்ன்னு போனை எடுத்தேன் நீயே கூப்பிட்டுட்ட”

“ம்ம்.. சிவா அங்கிளுக்கும், ஆன்ட்டிக்கும் ஏதோ சந்தேகம் வந்திருக்கும் போல”

“எப்படி சொல்ற?”

“அதான் அன்னிக்கே சொன்னேனே. பாப்பாக்கு செயின் தந்தாங்க, இன்னிக்கு வீடு வரைக்கும் வந்து அவங்க வீட்டு பூஜைக்கு இன்வைட் பண்ணிட்டு போயிருக்காங்க”

“அதான் பசங்களை அந்த ஸ்கூல்ல சேர்க்க வேண்டாம்ன்னு சொன்னேன், நீ கேட்டியா?”

“ப்ச்... சேர்த்தாச்சு... ஸ்கூலும் முடியப்போகுது... அதை விடுங்க, இன்னிக்கு வந்தவங்க பசங்களை அதிகமா தேடின மாதிரி இருந்துச்சு, மாமா கன்பார்மா சொல்றார், பசங்களைப் பார்க்க வந்திருப்பாங்கன்னு”

“நான் உன்னை அங்க போகவே வேண்டாம்ன்னு சொன்னேன், நீ தான் கேட்கலை”

“அதெல்லாம் முடியவே போகுது, பசங்க எக்ஸாம் நெக்ஸ்ட் வீக் ஆரம்பிக்குது, பதினைஞ்சு நாள்ல முடியுது, பாப்பா பர்த்டே வேற வருது, அதை இங்க செலிப்ரேட் பண்ணிட்டு அடுத்த நாளே நாம பிளைட் ஏறனும், அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க”

“ஓகே... டீல்... நீ உன் வேலையை முடிச்சுட்டியா?”
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“பாதி கிணறு தாண்டி இருக்கேன், மீதியையும் அதுக்குள்ள முடிச்சுடுவேன்”

“ம்ம்... டன்”

“உங்களுக்கு அவங்க நடவடிக்கைல சந்தேகம் ஏதும் வரலியா?”

“எனக்கு சென்ட் பர்சென்ட் கன்பார்ம்ட், அவங்க வீட்டுல நடக்கிற பூஜைல இதுவரை வீட்டு ஆளுங்க தவிர வேற யாருமே கலந்துகிட்டது இல்லை, சோ முதல் முறையா உன்னை இன்வைட் பண்ணி இருக்காங்க, அப்படி பார்த்தா அவங்க சந்தேகத்துல உன்னை இன்வைட் பண்ண வரலை, கன்பார்ம் பண்ணிட்டு தான் இன்வைட் பண்ண வந்திருக்காங்க”

“தம்பி இராஜஸ்தான் போலாம்ன்னு சொன்னான், பாப்பா கேரளா கேட்டிருந்தா, ரெண்டுக்கும் சேர்த்து பிளான் ரெடி பண்ணி இன்னிக்கு மெயில் பண்ணி இருக்கான், பார்த்துட்டு சொல்லுங்க, அதுக்கு ஏத்த மாதிரி எல்லாருக்கும் டிக்கெட் புக் பண்ணனும். அதுக்குன்னு உடனே எடுத்து வைச்சுட்டு உட்கார்ந்துக்காதிங்க, நாளைக்கு காலைல பார்த்துட்டு சொல்லுங்க”

“நான் ஏற்கனவே பார்த்துட்டேன் டார்லி... பிளான் ரெடி, பட் இந்த முறை ரெண்டு பேருக்கு மட்டும் இல்லை மூனு பேருக்கும் சஸ்பென்ஸ், டேட் மட்டும் கொஞ்சம் சேஞ் பண்ணனும்”

“அதென்னவோ நீங்களே முடிவு பண்ணுங்க, நான் நியூ பேசன்ட் யாரும் பார்க்கறதில்லை, ஓல்ட் பேசன்ட்ஸ் & ஆபரேஷன் பண்றவங்களை மட்டுமே டீல் பண்றேன், எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லை, அதுவும் இல்லாம டோட்டலா பொறுப்பேத்துக்கிட்ட ஆபரேஷன் எல்லாத்தையும் முடிச்சுட்டேன். நீங்க தான் வழக்கம் போல உங்க வொர்க் முடிக்கனும்”

“அல்மோஸ்ட் முடிஞ்சது...”

“சரி அவங்க பூஜைக்கு என்னையும் பசங்களையும் இன்வைட் பண்ணினாங்கள்ல, நான் போகவா? வேண்டாமா?”

“நீ மட்டும் போயிட்டு வா”

“சரி... நீங்க சாப்பிட்டீங்களா?”

“இனிமே தான் சாப்பிடனும், ரெஸ்டாரன்ட்ல வாங்கிட்டு வந்துட்டேன்”

“சரி நீங்க தூங்குங்க, நாளைக்கு நானும் பண்ணை வீட்டுக்கு கிளம்பறேன்”

“சரி டார்லிங்... நீ தூங்கு... வில் மீட் யூ சூன்...”

“வில் மீட் யூ சூனா? நம்பிட்டேன்... இதையே ஒரு வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க?”

“ஏன்டி, சூன்ன்னு சொல்லிட்டு, உடனே எட்டிப்பார்க்க, நீ என்ன பக்கத்து ரூம்லையா இருக்க?”

“ஓகே ஓகே... பேட் நைட்”

“ஏன்டி? கனவுல பேய் பிசாசெல்லாம் வரனுமா?”

“நீ என்ன கனவு கண்டாலும், நான் தான் வருவேன், நான் மட்டும் தான் வருவேன், சரியா?”

“அதுக்கு எதுக்குடி பேட் நைட் சொல்ற?”

“உங்களை அடிக்கனும் போல இருக்கு, அதான் கனவுல அடிக்கலாம்ன்னு”

“எனக்கு உன்னை கடிக்கனும் போல இருக்கு, கனவுல வரும்போது கொஞ்சம் கடிச்சுக்கவா?”

“சாப்பிட்டு கண்ணை மூடி தூங்குங்க... கனவுல வந்து அடியோட, உதையும் சேர்த்து தரேன், அப்புறம் பாருங்க... கடிக்கற எண்ணமெல்லாம் இருக்காது, காலைப் பிடிச்சு மன்னிப்பு கேட்கிற எண்ணம் மட்டும் தான் இருக்கும்”

“பார்ப்போம்... பார்ப்போம்... நீ சீக்கிரம் போயி தூங்கு... நாளைக்கு லீவை என்ஜாய் பண்ண வேண்டாமா?”

“பண்ணனும்... பண்ணனும்...”

“குட் நைட் டார்லிங்... தூங்கு... நான் அப்பாக்கிட்ட பேசிட்டு சாப்பிட்டு தூங்கனும்... டுடே சோ டயர்ட்... மார்னிங் வீடியோ கால் பண்றேன்...”

“சரி சரி இன்னிக்கு பொழைச்சு போங்க... நாளைக்கு பேசிக்கிறேன்... குட் நைட்...”

சம்யுக்தா செல்லை அணைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தாள்.

சிவாவிடம் சண்டை போடுவது போல பேசிவிட்டு அறைக்குள் நுழைந்த மான்வித்தோ அன்றைய நிகழ்வில் மனம் கொதிக்க அந்த அறையை குறுக்கும் நெடுக்குமாக அளந்துகொண்டு இருந்தான்.

ஒரு கட்டத்தில் குளியலறைக்குள் புகுந்து ஷவரின் அடியில் நிற்க ஆரம்பித்தான்.

குளிர்ந்த நீர் தலையில் விழ விழ, உடலின் வெப்பம் தீர்ந்ததோ இல்லையோ, மனதின் வெம்மை மறைய ஆரம்பித்தது.

பிரித்வியின் மேல் இருந்த கோபம் மெல்ல மெல்லக் குறைய, பிரித்வியை அடியோடு சாய்க்க வேண்டிய வேலையைப் பற்றி மனம் மெல்ல சிந்திக்க ஆரம்பித்தது.

குளித்து முடித்து உடை மாற்றி வந்தவன், லேப்டாப்பை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.

முதல் கட்டமாக அடுத்து அவன் ஏற்பாடு செய்துள்ள மீட்டிங் சம்பந்தமான தேவையான குறிப்புகளை ஒவ்வொன்றாக எடுக்க ஆரம்பித்தான்.

நிதானமாக ஒவ்வொரு தோல்வியையும், அந்த தோல்விக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவை என அனைத்தையும் ஒன்று சேர திரட்டினான்.

நேரம் போவதே தெரியாமல் உட்கார்ந்திருந்தவனின் அறைக்குள் நுழைந்த பவித்ரா, கையில் கொண்டு வந்திருந்த உணவுத்தட்டுடன் அவளது அருகில் சென்று நின்றார்.

“என்னப்பா பண்ற?”

அவரது குரலில் நிமிர்ந்து பார்த்தவன், “அனலைஸ் பன்றேன்ம்மா... தவறு நடந்திருக்கு சரி, அது எப்படி, எங்க, எந்த சூழ்நிலைல நடந்ததுன்னு யோசிக்கறேன்”

“சாப்பிடாம உட்கார்ந்து வேலை பார்த்தா எப்படி? இந்தா நானே கொண்டு வந்திருக்கேன், சாப்பிடு”

“இல்லைம்மா, கொஞ்சம் கவனம் மீறினாலும் நான் இவ்ளோ நேரம் செஞ்சது வேஸ்ட் ஆகிடும், நீங்க போங்க”

“சரி... நான் ஊட்டி விடறேன் நீ உன் வேலையைப் பார்” என்றவர் அவனுடைய பதிலைக்கூட கேட்காமல் ஊட்டிவிட ஆரம்பித்தார்.

என்ன சாப்பிட்டோம் என்று கூடத் தெரியாமல் மான்வித் வேலையில் மூழ்கிப்போனான்.

முன் தின பயண அலுப்பு, அன்றைய தின கசப்புகள் தந்த சோர்வு அனைத்தையும் மீறி விடிய விடிய அவன் நிறை குறைகளை தொகுத்திருந்தான்.

“இடையிடையில் எழுந்த சந்தேகங்களை குறித்து வைத்தவன், திங்கள்கிழமை நடக்க இருக்கும் மீட்டிங் தொடர்பான குறிப்புகளையும் எடுத்து வைத்திருந்தான்.

மொத்த வரவு செலவுகளையும், தொழில் வாரியாகப் பிரித்து, பண வரவையும், வாராமல் இருக்கும் நிலுவைத் தொகையையும் கணக்கிட்டான்.

முன் கூட்டியே அவன் மறுநாள் வேலை நாள் என அலுவலக ஊழியர்களுக்கு தகவல் அனுப்பி இருந்ததால், மறுநாள் அவர்கள் முதற்கட்டமாக செய்ய வேண்டிய வேலையை அவர்களுக்கு மெயில் அனுப்பிவிட்டு, அவன் ஓய்ந்த போது மணி ஐந்து.

லாப்டாப்பை அணைத்து மூடி வைத்தவன், அப்படியே சோபாவில் சாய்ந்து உறங்க ஆரம்பித்தான்.

ராகம் இசைக்கும்...
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுகமான புது ராகம்!




அத்தியாயம் – 8

திங்கள் கிழமை ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தனர்.

காலை ஆறு மணிக்கே மான்வித் அலுவலகத்திற்குப் புறப்பட்டு நிற்க, சிவா எதுவும் பேசாமல் பேப்பரில் மட்டுமே கவனத்தைப் பதித்திருந்தார்.

அவன் அந்த நேரத்திலயே அதிசயமாக கிளம்பி நிற்பதைக் கண்ட பவித்ரா தான் கவலை மேலிட மகனிடம் வந்தார்.

“என்னடா? இப்பவே கிளம்பி நிக்கிற?”

“அதான் சொன்னேனே மா... இன்னிக்கு மீட்டிங் இருக்குன்னு”

“அதுக்கு இப்பவே போகனுமா?”

“எனக்கு இன்னும் கொஞ்சம் டீட்டெயில் ரெடி பண்ணனும்மா... அதெல்லாம் ரெடி பண்ண இப்பவே கிளம்பினாத்தான் சரியா இருக்கும்”

“சரிப்பா இந்தா காபி”

“எனக்கு டிரைவர்ட்ட பிரேக்பாஸ்ட் & லஞ்ச் குடுத்து விட்ருங்க, சீக்கிரமே குடுத்து விடுங்க, டைம் எப்படின்னு தெரியலை”

“சரிப்பா பத்திரம்”

“பை ம்மா...”

“பை ப்பா...”

“சரிப்பா... ஆல் தி பெஸ்ட்”

“தேங்க்ஸ் ப்பா”

அவன் கிளம்பியதும், இந்தப் பக்கம் பவித்ரா சிவாவைப் பிடித்துக்கொண்டார்.

“பாவம் பையன்... ரெண்டு நாளா எவ்ளோ கஷ்டப்படறான், நீங்க வீட்ல தான இருக்கீங்க, கொஞ்சமாச்சும் அவனுக்கு ஹெல்ப் பண்ணலாம்ல... இப்படியே உட்கார்ந்து இருக்கீங்க, முதல்ல நீங்க கிளம்பி ஆபிஸ் போங்க.”

“இப்ப எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகற?”

“அவன் எவ்ளோ வருத்தத்தோட போறான், நீங்களும் போய் இருக்கலாம்”

“அவன் இப்பத்தான் சரியான பாதைல போறான், அவனை அப்படியே விடு”

“என்னங்க சொல்றீங்க?”

“நான் நேத்து காலைல அவன் ரூம்க்கு போனப்ப, அவன் எடுத்து வைச்சு இருந்த டீட்டைல்ஸ் எல்லாத்தையும் பார்த்தேன், அவன் இப்பத்தான் தெளிவா யோசிக்க ஆரம்பிச்சு இருக்கான், இது வரை என்னோட நிழல்ல இருந்துட்டு, அவனோட சுயத்தை தொலைக்க ஆரம்பிச்சு இருந்திருக்கான்”

“அப்படின்னா...”

“என்னதான் நான் சொல்லிக்குடுத்தாலும், அவன் அவனோட ஸ்டைல்ல நிர்வாகம் பண்ணி இருக்கனும், ஆனா அவன் அவனோட ஸ்டைலை விட்டுட்டு என்னையே பாலோ பண்ணி இருக்கான். இனி அவனைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நீ ஆசைப்படற மாதிரி இனி நான் வீட்லையே இருப்பேன்”

“நீங்க சொல்ற மாதிரி நடந்தா எனக்கும் சந்தோஷம் தான்”

“மனிஷா எங்க?”

“இன்னும் கீழ வரலை, தூங்கிகிட்டு இருப்பான்னு நினைக்கிறேன், நைட் லேட்டா தான் வந்தா”

“அந்த லாவண்யா கேஸ் சம்பந்தப்பட்ட நியூஸ் பார்த்தாளோ என்னவோ? கொஞ்சம் அவளைப் பார்த்துக்கோ”

“இன்னிக்கு மேடம்க்கு ஒரு சிசேரியன் இருக்கு, நைட்டே சொல்லிட்டா, மார்னிங் பதினோரு மணிக்கு டைமாம், அலாரம் வைச்சு இருக்காளாம், ஒரு வேளை எழுந்துக்கலைன்னா என்னை அதிக பட்சம் எட்டு மணிக்குள்ள எழுப்பிவிடச் சொல்லி இருக்கா”

“சரிம்மா, நீ பிரேக் பாஸ்ட் முடிச்சுட்டு, ஸ்கூல்க்கு கிளம்பு, அப்புறம் அங்க பசங்களுக்கு லஞ்ச் ஸ்கூல்லையா? இல்லை வீட்ல இருந்து கொண்டு வர்றாங்களான்னு கால் பண்ணி விசாரி”

“அதெல்லாம் விசாரிச்சுட்டேன், ரெண்டு பேருக்கும் மார்னிங் ஹிந்தி கிளாஸ் இருக்கு, அதோட இல்லாம அதுக்கப்புறம் மெயின் லைப்ரரில தான் இருப்பாங்களாம். அதனால ஸ்கூல்ல தான் பிரேக்பாஸ்ட் அன்ட் லஞ்ச்”

“சரி, அவங்களுக்கு வீட்லையே ஏதாவது செஞ்சு எடுத்துட்டு வா, இனி ஸ்கூல்ல புட் வேண்டாம், டெய்லி இங்க இருந்தே கொண்டு போயிடலாம்.”

“அதெல்லாம் வித விதமா ரெடி ஆகுது, நீங்க முதல்ல கிளம்புங்க”

“ஒன்பது மணிக்கு ஸ்கூல்ல இருப்போம், அதுக்கு நான் கேரண்டி, நீ என்ன பண்ற, அன்னிக்கு பசங்க கேசரியை விரும்பி சாப்பிட்டாங்க, ரெண்டாவது தடவையும் போயி வாங்கிட்டு வந்தாங்க, நீ அதையும் செஞ்சுடு, அப்புறம் நீயே செய்... இனிப்பு அதிகமாகாம பார்த்துக்கோ, நெய் கொஞ்சம் நிறையா விடு... அப்புறம்..” என்று சிவா சொல்லிக்கொண்டே போக, அவரை இடை மறித்த பவித்ரா,

“பேசாம நீங்களே வந்து கேசரி கிண்டீடுங்களேன்! எனக்கு ஒரு வேலை மிச்சம், உங்களுக்கும் எனக்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுக்கற ஒரு வேலை மிச்சம்” என்று கோபப்பட,

“இல்ல பவி, சும்மாத்தான்” என்று சமாளிக்கப்பார்த்தார் சிவா,

“என்ன சும்மா? என்னவோ நான் முதன் முதல்ல கேசரி கிண்டர மாதிரி என்ன ஒரு ஆர்ப்பாட்டம்? இன்னிக்கு முழுக்க உங்களுக்கு கேசரி இல்லை. அதான் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பனிஷ்மென்ட்”

“பவி... சும்மா சொல்லிட்டேன்... நீ செய்யற கேசரி மாதிரி இந்த உலகத்துல யாருமே செய்ய மாட்டங்க... ஐ நோ... பாசத்துல கொஞ்சம் எமோஷன் ஆகிட்டேன், பிளீஸ்... செல்லம்ல...”

“மாமா...”

“குட் மார்னிங் மா”

“குட் மார்னிங்லாம் இருக்கட்டும், இன்னிக்கு என்ன அத்தைக்கிட்ட இவ்ளோ கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க?”

“கேசரி சாப்பிடனும் போல இருந்துது, அதுக்குத்தான் இந்த கெஞ்சல்”

“நீ வேற மனிஷா... சாப்பிட கேட்டு இந்த கெஞ்சல் இல்லை, உங்க மாமா எனக்கே கேசரி செய்ய சொல்லித்தந்தார். அதான் அவரையே சமைக்கச் சொல்லிட்டேன், நான் சொன்னதும் ஜகா வாங்கறார்”

“என்ன மாமா திடீர்ன்னு கேசரி? உங்களுக்குத்தான் அது பிடிக்காதே”

“அது ஒன்னும் இல்லைம்மா... நேத்து என் பிரன்ட் வீட்ல கேசரி செஞ்சாங்களாம், அதைப்பத்தி சொன்னான், நானும் அதையே நினைச்சேனா, அதான் செய்யச்சொன்னேன்”

“உங்க மாமாக்கு என்ன வேலை? நீ யோகா முடிச்சுட்டியா?”

“முடிச்சுட்டேன், குளிச்சுட்டேன், ரெடி ஆகிட்டேன், இனி ஹாஸ்பிட்டல் போகிற வரை பாப்பா கூட இருக்கப்போறேன்”

“சரி... முதல்ல நீ காபி குடி, பாப்பா எழுந்துடுவா, குடிச்சுட்டு, அவளுக்கு பாலை கலக்கு...”

“டன்...”

“நீங்க என்ன பண்றீங்க?” என்று மனிஷாவிடம் முடித்து சிவாவிடம் ஆரம்பித்தார்.

“ரெண்டு பேருக்கும் வெளிய கொஞ்சம் வேலை இருக்குல்ல, அதுக்கு ரெடி ஆகப்போறேன்”

“அதெல்லாம் அப்புறம், முதல்ல வந்து எனக்கு காய் நறுக்கிக் குடுங்க”

“இதுக்கு நான் என் பையன் கூடவே போயிருக்கலாமோ?”

“இப்பையும் ஒன்னும் கெட்டு போகலை... கிளம்புங்க, என்ன, நீங்க எப்ப காய் நறுக்கித் தர்றீங்களோ அன்னிக்குத்தான் வீட்ல சாப்பாடு”

“அம்மா தெய்வமே, கொண்டா எல்லா காயையும் நானே நறுக்கித் தர்றேன்”

இவர்களது கலாட்டாவைக் கண்டு மனிஷா சிரித்துக்கொண்டே காபி குடிக்க, அவளுக்கு புரையேறி இரும்பத்தொடங்கினாள்.

“பார்த்தும்மா... பார்த்து” என்று பவித்ரா அவளது தலையைத் தட்ட,

“என் பையன் உன்னை நினைக்கிறான் போல” என்று சொல்லிக்கொண்டே சிவா டைனிங் டேபிளை நோக்கி காய் நறுக்கச் சென்றார்.

மனிஷாவின் எண்ணம் தானாக மானவ் பக்கம் நகர, புரையேறுவது தானாக நின்றது.

“சொன்னேனா... என் பையன் தான் உன்னை நினைச்சு இருக்கான். அதான் அவனை சொன்னதும் நின்றுடுச்சு” என்று சொல்லிக்கொண்டே சிவா காய் நறுக்கிக்கொண்டு இருந்தார்.

அதே நேரம் இன்னொரு பக்கம்,

“பார்த்தீங்களா தம்பி... மனிஷா தான் உங்களை நினைச்சு இருக்கு, அதோட பேரை சொன்னதும் புரை ஏறினது நின்றுடுச்சு” என்று ரகு சொல்லிக்கொண்டே, கையில் இருந்த கோப்புகளுடன் அறையை விட்டு வெளியேறினார்.
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோப்புகளை ஆராய்ந்து கொண்டே, தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தவனுக்கு புரையேறிவிட, அருகில் இருந்த ரகு பதறிப்போய் அவனது தலையைத் தட்டினார்.

“மனிஷா தான் நினைக்கும் போல தம்பி, ரெண்டு நாளா ஊர்ல இல்லை, இன்னிக்கும் நீங்க இங்க காலைலயே வந்துட்டீங்க, எழுந்திரிச்சதும் நீங்க இல்லைன்னு, உங்களைப் பார்க்க முடியலையேன்னு நினைச்சிருக்கும்” என்று சொல்ல,

மானவின் மனம் மனிஷாவைச் சுற்றி வர ஆரம்பித்தது. அதே நேரம் புரை ஏறியதும் தானாக நின்றிருந்தது.

மீண்டும் அதை நியாபகப்படுத்தும் விதமாக ரகு சொல்லிவிட்டுச் செல்ல மானவ்வின் கண்கள் அவனது செல்லின் முகப்பில் இருந்த மனிஷாவின் படத்தைப் பார்க்க ஆரம்பிக்க, விரல்கள் அவளது முகத்தில் கோலமிட ஆரம்பித்தது.

“நீ என்னை மிஸ் பண்றியா?” என்று அவனது இதழ்கள் அவளுடைய பிம்பத்திடம் கேள்வி கேட்டது.

இன்னொரு பக்கம் பள்ளி பேருந்துக்கு கிளம்பி நின்ற பிள்ளைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு தோட்டத்தில் வந்தமர்ந்த சம்யுக்தாவையும், குழந்தைகளையும் கண்ட பரத்,

“கிளம்பியாச்சா?”

“கிளம்பிட்டோம் தாத்தா”

“சர்வா, ஜுவா இன்னிக்கு மே பீ உங்க கரஸ்பாண்டன்ட் மேடம் உங்களை மீட் பண்ண வரலாம்”

“எதுக்கு தாத்தா” என்று இருவரும் கோரசாய் கேட்க,

“சம்திங் பர்சனல்”

“யாருக்கும் யாருக்கும் பர்சனல்?”

“உங்களுக்கும், உங்க கரஸ்பாண்டன்ட் மேடம்க்கும்”

“எங்களுக்கு இடைல என்ன பர்சனல்?”

“இனிமே இருக்கலாம்”

“புரியலை தாத்தா”

“சர்வா, ஜுவா இன்னிக்கு மே பீ தாத்தா சொல்ற மாதிரி, அவங்க உங்களை மீட் பண்ணா, கர்டசிக்கு விஷ் பண்ணிட்டு வந்துடுங்க, தேவையில்லாம எதுவும் பேச வேண்டாம், தென் அடிக்கடி மீட் பண்றதையும் அவாய்ட் பண்ணிடுங்க”

“நீங்க ரெண்டு பேரும் சொல்றது எங்களுக்கு புரியவே இல்லை, யூ போத் ஆர் கன்பியூசிங் அஸ் ம்மா”

“இது பெரியவங்க சம்பந்தப்பட்ட விஷயம் பசங்களா. இதுல நீங்க ஜாக்கிரதையா இருங்க, என்னோட, அப்பாவோட அனுமதி இல்லாம எதையும் யார்கிட்டையும் டிஸ்கஸ் பண்ணக்கூடாது”

“ஓகே மாம்... சோ வீ நீட் டூ கீப் டிஸ்டன்ஸ் வித் தெம்”

“அப்கோர்ஸ்”

“வீ வில் மா”

“சொன்னது நியாபகம் இருக்கட்டும், டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுங்க, இன்னும் டூ வீக்ஸ் தான், வீ வில் கோ பேக் ஆப்டர் தட்”

வீட்டின் முன் வந்து நின்ற பஸ் ஹார்ன் ஒலி எழுப்ப,

“பை ம்மா... பை தாத்தா” என்று இருவரும் கோரஸாக சொல்லிவிட்டு, இருவருக்கும் முத்தமிட்டுவிட்டு பேருந்தை நோக்கிப் பறந்தனர்.

இங்கு சிவாவின் இல்லத்தில்,

“மனிஷா நீ எப்ப ஹாஸ்பிட்டல் போகனும்?”

“நான் கிளம்பிட்டேன் அத்தை, இப்பதான் கால் பண்ணாங்க, இன்னிக்கு லேப்க்கு புது மிசின்ஸ் வருது, சீக்கிரம் போனா, இன்ஸ்ட்ரக்க்ஷன் குடுத்துட்டு நான் தியேட்டர் போயிடுவேன்”

“சரிம்மா போறப்ப, மானவ்க்கு பிரேக்பாஸ்ட் குடுத்துட்டு போயிடு, நானும் மாமாவும் வெளிய வேலையா போறோம்”

“சரிங்கத்தை”

“நித்யாட்ட லஞ்ச் பார்த்துக்க சொல்லிருக்கேன், இங்க இருந்து டிரைவர்ட்ட ஆபிஸுக்கே லஞ்ச் குடுத்துவிட சொல்லிட்டேன், நீ ஆபிஸ் போயிட்டு, அங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கோங்க, அவன் மீட்டிங் மீட்டிங்க்ன்னு ஒழுங்கா சாப்பிடாம இருப்பான், இங்கேயே ரெண்டு நாளா நான் தான் ஊட்டிவிட்டேன், நீ அவனை சாப்பிட வைச்சிட்டு கிளம்பு.”

“சரிங்கத்தை. நான் பார்த்துக்கறேன். நீங்க டென்ஷன் ஆகாதிங்க”

“சரிம்மா... சிவா கிளம்பிட்டீங்களா?”

“கிளம்பிட்டேன்ம்மா”

“பை ம்மா”

அவர்கள் இருவரும் விடை பெற, மனிஷா உணவருந்தி முடித்துவிட்டு, மானவுக்கு காலை உணவை எடுத்துக்கொண்டு அலுவலகத்தை நோக்கி கிளம்பினாள்.

அங்கு மானவ்வோ அனைத்து வேலைகளுக்கு மத்தியிலும் அவ்வப்போது செல்லில் மனிஷாவின் படத்தைப் பார்ப்பதையும் ஒரு வேலையாகச் செய்து கொண்டு இருந்தான்.

ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிந்து, ஓய்வாக அமர்ந்தவன், அவனது லேப்டாப்பில் ஸ்க்ரீன் சேவராக வைத்திருக்கும் மனிஷா மற்றும் தனுவின் புகைப்படத்தொகுப்பை ஓட விட்டுப் பார்த்துக்கொண்டிருக்க ஆரம்பித்தான்.

அவன் அதில் லயித்திருக்கும் போதே, வெளியே அறைக்கதவு தட்டப்பட,

“எஸ் கமின்” என்று சொல்லி நிமிர்ந்தவனின் கண்கள் கதவைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தவளைப் பார்த்ததும், தானாக அவனது முகத்தில் புன்னகை மிளிர ஆரம்பித்தது.

எளிய சாட்டின் புடவையில், மிதமான ஒப்பனையில் இருந்த மனிஷாவை அவன் கண்கள் உரிமையுடன் ரசிக்க, அவளோ அவனது முக மாற்றத்தையும், அவனது பார்வையையும் கண்டு ஒரு நொடி உள்ளம் அதிர்ந்து போனாள், அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், பேச்சை திசை திருப்பி,

“பிரேக் பாஸ்ட் கொண்டு வந்தேன். வாங்க சாப்பிடலாம்” என்று சொல்லிக்கொண்டே அவனது அறைக்குள் இருந்த சிறு அறையை நோக்கிச் சென்றாள்.

அவனும் புன்னகையுடன், இன்டர்காமில் அழைத்து, விவரம் சொல்லிவிட்டு, அறைக்குள் நுழைந்தான்.

அங்கிருந்த சிறு டைனிங் டேபிளில், தட்டும், டிபன் பாக்ஸையும் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தவளைப் பார்த்துக்கொண்டே, சர்ட்டை முழங்கை வரை மடித்துவிட்டு, அங்கிருந்த வாஸ்பேசனில் கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தான்.

“இன்னிக்கு என்ன இவ்ளோ ஸ்பெஷல்?” என்று அவள் கடை பரப்பி இருந்த உணவு வகைகளைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

“தெரியலை... மாமா செய்யச்சொல்லி சொன்னாராம்”

“நீ சாப்பிட்டியா?”

“ம்ம்... சாப்பிட்டுட்டேன்...”

“பாப்பா என்ன பண்றா?”

“நான் கிளம்பறப்ப ஒரே அடம், காரைப் பார்த்துட்டு, ஈவ்னிங் ரைட் கூட்டிக்கிட்டு போறேன்னு சொல்லி சமாளிச்சுட்டு வந்தேன்”

மானவ் சாப்பிட்டாலும், அவன் கண்கள், அருகில் இருந்த சேரில் உட்கார்ந்து பரிமாறிக்கொண்டு இருந்த மனிஷாவின் மீதே நிலைத்திருந்தது.

எதேச்சையாக அவன் முகம் கண்டவள், அவன் கண்கள் தன்னையே மொய்ப்பதைக் கண்டு உள்ளம் பதறியவளாக, அவன் முகத்தைப் பார்க்க முடியாமல், தன் முகத்தை திருப்பிக்கொண்டு அருகில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.

“என்னாச்சு இவனுக்கு? எப்பயும் போல தான் சாப்பாடு கொண்டு வந்தேன், இன்னிக்கு என்ன? இப்படி பார்த்து வைக்கிறான். காலைல கூட முகத்தை திருப்பிக்கிட்டு போனான். அதுக்குள்ள அப்படி என்ன அதிசயம் நடந்திருக்கும்?” என்று மனதிற்குள் அவள் குழம்பிக்கிடக்க,

“இன்னும் கொஞ்சம் கேசரி கிடைக்குமா? இல்லை அப்படியே வீட்டுக்கு எடுத்துட்டு போக ஐடியாவா?” என்ற அவன் குரலில், அவன் பக்கம் திரும்பியவள், அவனது தட்டில் கேசரியை எடுத்து வைத்தாள்.

அவன் சாப்பிட்டு முடித்ததும், பாத்திரங்களை அவள் எடுத்து வைத்துக்கொண்டு இருக்க, அவன் கை கழுவிவிட்டு வந்து அதே நாற்காலியில் அமர்ந்தான்.

“அந்த பிளாஸ்கில் காபி இருக்கும், எடு குடிக்கலாம்” என்றவன் அவன் பக்கமாக இருந்த கப் இரண்டை எடுத்து வைக்க, அவளும் பிளாஸ்க்கை எடுத்து அதில் இருந்த காபியை அங்கிருந்த கப்பில் ஊற்ற ஆரம்பித்தாள்.

அதே நேரம் அவளுடைய போன் அடிக்க,

அதை அட்டென்ட் செய்தவள்,

“சொல்லுங்க மாமா..”

“எங்கம்மா இருக்கற?”

“இங்க ஆபிஸ்ல, உங்க பையனுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன்”

“சரிம்மா... லேப்க்கு மெசின் வந்துடுச்சு, அதான் கேட்டேன், உனக்கு டிரை பண்ணி இருக்காங்க, நாட் ரீச்சபிள்ன்னு வந்துச்சாம்”

“இதோ காபி குடிச்சுக்கிட்டு இருக்கேன், குடிச்சதும் கிளம்பிடுவேன்”

“நான் சொல்லிட்டேன்ம்மா... சரி இன்னிக்கு என்ன ரெண்டு காபி? அவ்ளோ சீக்கிரம் குடிக்க மாட்டியே?”

“என்ன? ரெண்டு காபியா? காலைல நீங்க ரெண்டு பேரும் என்னை ஒழுங்கா காபி குடிக்க விட்டீங்களா?”

“நாங்க என்னம்மா பண்ணோம்?”
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“நீங்க ரெண்டு பேரும் பார்த்த வேலைல, எனக்கு புரை ஏறி கடைசில காபியே குடிக்கல”

“உன் புருஷன் உன்னை நினைச்சதுக்கு, நாங்க என்ன பண்ணுவோம் மனிஷா”

“அவர் சொன்னாரா? என்னை நினைச்சேன்னு... உடனே அவர் மேல பழி போட்டுடுவீங்களே...”

“அவன் பேரை சொன்னதும் நான் உனக்கு சரியாச்சு மறந்திடாத... சரி சரி... நம்ம சண்டைய ஈவ்னிங் வைச்சுக்குவோம், நான் டிரைவிங்க்ல இருக்கேன், நீ பொறுமையா போ...”

“ஓகே மாமா பை...”

என்றவள் போனை அணைத்துவிட்டு, ஹாஸ்பிட்டலுக்கு போன் செய்து அவர்கள் செய்யவேண்டியதைப் பேசிக் கொண்டே காபி குடிக்க ஆரம்பித்தாள்.

அமைதியாக இருந்த அறையினுள் போனில் எதிர்பக்கம் பேசிய சிவாவின் குரல், அவளருகே அமர்ந்திருந்த மானவுக்கும் தெளிவாகவே கேட்க, அவனையுமறியாமல் அவனது முகத்தில் இருந்த புன்னகை மேலும் அதிகமாகியது.

மனிஷா போன் பேசி முடித்துவிட்டு, கப்பை கழுவி வைத்துவிட்டு,

“ஓகே நான் கிளம்பறேன்.. ரெண்டு பேருக்குமே லஞ்ச் வீட்ல இருந்து அம்மா குடுத்துவிடுவாங்க, எனக்காக வெயிட் பண்ண வேண்டாம், எனக்கு இன்னிக்கு சிசேரியன் இருக்கு, நான் வர லேட் ஆகிடும், நீங்க சாப்பிட்டுடுங்க” என்று பையை எடுக்கப் போனவளின் கரம் பற்றித் தடுத்தவன்,

“இன்னிக்கு முக்கியமான மீட்டிங், அதை நல்லபடியா முடிக்க விஷ் கிடையாதா?”

“ஆல் தி பெஸ்ட்” என்று நகர முற்பட்டவளைத் தன் கைச்சிறைக்குள் கொண்டு வந்தவன்,

“அடுத்தவங்களுக்கு சொல்ற மாதிரி சொல்லாத, எனக்கு ஸ்பெசலா சொல்லு”

“ஸ்பெஷலான்னா?” என்று அவன் கைகளை விலக்கிக்கொண்டு வெளியேற முயற்சி செய்து கொண்டே அவள் கேட்க,

“ஒரு கிஸ் குடுக்கலாம்”

“என்ன?” என்று அவனது பதிலில் அதிர்ந்தவள், “இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி நடந்துக்கறிங்க, விடுங்க முதல்ல” என்று அவள் அவனை விட்டு விலக முயல,

“இப்ப கிடைக்குமா? கிடைக்காதா?”

“அதெல்லாம் முடியாது, என்னை விடுங்க, எனக்கு லேட் ஆச்சு” என்றவள் அவனை விட்டு விலக முயற்சிக்க,

அவள் எதிபாரா வேளையில், அவளை அருகில் இருந்த சுவரின் மேல் சாய்த்தவன், சட்டென்று அவள் முகம் நோக்கிக் குனிந்திருந்தான்.

நொடிகள் நிமிடங்களாக மாற, கணவனின் சட்டையில் இருந்த அவளுடைய கரம் மெல்ல மெல்ல மேலேறி அவனது சிகைக்குள் குடிபெயர்ந்திருந்தது.

தீரா வேட்கையுடன் அவன், அவளது இதழமுதம் பருகத்தொடங்க, அதிர்சியில் திளைத்திருந்தவள், அவளையுமறியாமல் அவனது இதழ் யுத்தத்தில் பங்கேற்க ஆரம்பித்து இருந்தாள்.

மனைவியின் இணக்கம் உணர்ந்தவனின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ள, அவனது கைகள், எல்லை மீறிப் பயணிக்க ஆரம்பித்தன.

அவனது செயலில், உள்ளம் விழித்துக்கொண்டவள், சட்டென்று அவனைத் தள்ளிவிட்டு திரும்பி நின்று கொண்டாள்.

“போச்சு... இப்படியே எப்படிடி நான் மீட்டிங் அட்டென்ட் பண்ணுவேன்?” என்று கத்திய மானவின் குரலில் பதறி அவன் பக்கம் திரும்பியவள் அவனது கசங்கியச் சட்டையைக் கண்டு வெட்கம் கலந்த புன்னகையுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அவளது காதருகே குனிந்தவன், “சொல்லுடி...” என்று தாபமாக உரைக்க,

“நான் கிளம்பறேன்” என்றவள் அவனை விட்டு நகர,

“டிரெஸ்ஸ கரெக்ட் பண்ணிட்டு கிளம்பு & தேங்க்ஸ்... ரொம்ப ரிலாக்ஸாவும், ஹேப்பியாவும் இருக்கு” என்று சொன்னவன், அந்த அறையில் இருந்த பாத்ரூமில் சென்று கசங்கிய உடையை சரி செய்து, தலையை வாரிக்கொண்டான்.

மனிஷா கலைந்திருந்த புடவையைக் களைந்து, மீண்டும் சரியாக கட்டிக்கொள்ள, பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவன், அவளையே விழுங்குவது போல பார்த்துக்கொண்டு நின்றான்.

“இன்னிக்கு முக்கியமான மீட்டிங்ன்னு யாரோ சொன்னாங்க” என்று அவனைத் தாண்டி பாத்ரூமிற்குள் அவள் நுழைய,

“அதைத்தானே டீல் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்ற அவனது பதிலில்,

“ஷ்... நான் கிளம்பிட்டேன்” என்றவள் சாப்பாட்டு பையைத் தூக்கிக்கொண்டு நகர,

“உன்னோட போன் வேண்டாமா?” என்று போனை டேபிளில் இருந்து மானவ் எடுத்துத்தர, அதை வாங்கிக்கொண்டு மனிஷா வெளியேற அவள் பின்னாலேயே மானவ்வும் வெளியே வந்தான்.

“நிஷா... கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்து ரிலாக்ஸ் ஆகிட்டு போ... உன் பேஸ் புல்லா ரெட்டா இருக்கு” என்று புன்சிரிப்புடன் கூறியவன்,

டையைக் கட்டிக்கொண்டு, ஓவர் கோர்ட் அணிந்துகொண்டு மீட்டிங்கிற்கு கிளம்ப ஆயத்தமாக, அவனது இன்டெர்காம் அலறியது.

“என்னன்னு கேளு நிஷா” என்று சொல்லிவிட்டு, உடையை சரி செய்வதில் அவன் முனைப்பாகிவிட,

மனிஷா காலை அட்டென்ட் செய்தாள்,

“மனிஷா ஸ்பீக்கிங்”

“மேம் நான் அக்கவுண்ட்ஸ்ல இருந்து பேசறேன், சார் கேட்ட டீடைல்ஸ் மெயில் பண்ணிட்டேன், அவர்கிட்ட இன்பார்ம் பண்ணனும்”

“சார் முக்கியமான வொர்க்கா இருக்கார், நான் சொல்லிடறேன்”

“தேங்க்ஸ் மேம்”

“அக்கவுண்ட்ஸ்ல இருந்து கால், நீங்க கேட்ட டீடைல்ஸ் மெயில் பண்ணி இருக்காங்களாம்”

“அப்படியே டவுன்லோட் பண்ணி பிரிண்ட் எடு”

எதிர்பக்கம் இருந்து நகர்ந்து, அவனுடைய சேரில் சென்று அமர்ந்தவள், அவனுடைய லேப்டாப்பை உயிர்பிக்க, அதில் தெரிந்த அவளுடைய படங்களைக் கண்ட, அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது.

கோர்ட்டை அணிந்து கொண்டு அவளது பக்கம் திரும்பியவன், அவள் கண்களில் இருந்து வழியும் கண்ணீரைக் கண்டவன்,

“ஏய்... நிஷா... என்னாச்சு?” என்று அவள் பக்கம் வந்து அவளது தோள் தொட,

கண்களைத் துடைத்துக்கொண்டவள்,

“நான் கிளம்பறேன்” என்று சொல்லிக்கொண்டே,

சாப்பாட்டுக்கூடையையும், கைப்பையையும் எடுத்துக்கொண்டு அவனது அறையை விட்டு வெளியேறப் போனவள் ஒரு நொடி நின்றுவிட்டு, மீண்டும் திரும்பி வந்து, அவனது கன்னத்தில் முத்தமிட்டு, “ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு, அவனது அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் அழுத காரணம் தெரிந்து வருந்தினாலும், அவள் மீண்டும் வந்து தந்துவிட்டுச் சென்ற முத்தத்தில் உள்ளம் மகிழ்ந்தவன், அதே மகிழ்ச்சியுடன் அன்றைய மீட்டிங்கை எதிர்கொள்ள, கான்பிரன்ஸ் ஹாலை நோக்கிச் சென்றான்.

இன்னொரு பக்கம், சிவாவும், பவித்ராவும் காலை உணவுடன் அவர்கள் அறையில் ஆஜராகி இருந்தனர்.

பியூனை விட்டு பிள்ளைகள் இருவரையும் அழைத்து வரச்சொல்லி இருந்தனர், சிவா நிதானமாக இருந்தாலும், பவித்ராவால் ஆவலை அடக்க முடியவில்லை.

“மே ஐ கமின் மேம்” என்ற குரலில், வந்தவர்களை அடையாளம் கண்டு கொண்ட இருவரும் உற்சாகமாக,

“எஸ் கமின்” என்று பவி சொல்லிவிட்டு, அவரது இருக்கையில் இருந்து எழுந்து பிள்ளைகளை நோக்கிச் சென்றார்.

உள்ளே வந்த இருவரும், கோரசாக,

“குட் மார்னிங் மேம்”

“குட் மார்னிங் சார்” என்று சொல்ல,

இருவரும் பதிலுக்கு,

“குட் மார்னிங்” என்று கோரசாக சொல்ல,

சிறியவர்கள் இருவரும் அவர்களது செயலில் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக்கொண்டனர்.

இருவரின் தோளிலும் கைபோட்டு அழைத்து வந்த பவித்ரா,

“ரெண்டு பேரும் பிரேக் பாஸ்ட் சாப்பிட்டீங்களா?”

“நோ மேம்... ஆக்சுவலி வீ ஆர் ஆன் தி வே டூ கேன்டீன், பட் ப்யூன் ஆஸ்க்ட் அஸ் டு மீட் யூ பிபோர் இட்”

“ஓகே... இனிமே மேம், சார்ன்னு சொல்லக்கூடாது. தாத்தா, பாட்டின்னு சொல்லனும்”

சிறியவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“சரி வாங்க சாப்பிடலாம்”

“வேண்டாம் மேம்”

“இப்போதானே சொன்னேன்... மேம் சொல்லக்கூடாது, பாட்டின்னு சொல்லனும்”

“வேண்டாம் பாட்டி, நாங்க ரெண்டு பேரும் கேண்டீன்ல சாப்பிட்டுக்கறோம்”

“இன்னிக்கு ஒரு நாளைக்கு சாப்பிடலாம்”

“அம்மா, அப்பா சொல்லி இருக்காங்க, அவங்க பெர்மிஷன் இல்லாம வெளிய சாப்பிடக்கூடாதுன்னு”

“கரெக்ட்... பட் இது உன் ஸ்கூல் தான, நான் உங்களுக்கு பாட்டி தான், அதனால பிராப்ளம் இல்லை, வாங்க சாப்பிடலாம்.” என்றவர், அவர்கள் தோளில் மாட்டியிருந்த ஸ்கூல் பையை வாங்கி கீழே வைத்தார்.

அவரது வற்புறுத்தலின் பேரில், சிறியவர்கள் இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

பவித்ரா பரிமாற பிள்ளைகள் இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

“நான் ஊட்டி விடவா?” என்று இருவரையும் பார்த்து பவித்ரா கேட்டார்.

“வேண்டாம் பாட்டி” என்று இருவரும் ஒரு சேரக் கூற, புன்னகையுடன் அவர்களது கன்னங்களைத் தட்டினார்.

“உனக்கு அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா?” என்று சர்வேஷைப் பார்த்து சிவா கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

“எனக்கு அம்மா தான் பிடிக்கும்”

“ஜுவாலாக்கு யாரை பிடிக்கும்?”

“எனக்கு அப்பா தான் பிடிக்கும் தாத்தா”

“உங்களுக்கு வேற பாட்டி, தாத்தா இருக்காங்களா” என்ற சிவாவின் கேள்வியில் சர்வேஷ் யோசனையாக,

“ம்ம்... எனக்கு பரத் தாத்தா, ஜாஸ்மின் பாட்டி, பிரபாகர் தாத்தா, ரேவதி பாட்டின்னு நிறையா இருக்காங்க” என்று ஜுவாலா பதில் சொன்னாள்.

“உங்க அப்பாக்கு யாரை பிடிக்கும்? அவரோட அம்மாவையா? அப்பாவையா?”

“எங்க அப்பாக்கு ஜாஸ்மின் பாட்டியை தான் பிடிக்கும். அத்தை பிறந்தப்ப கூட, அப்பா ஜாஸ்மின் பாட்டிக்கிட்ட தான் தூங்குவாங்களாம். அப்புறம் தாத்தா தூக்கிட்டு போயி அப்பா ரூம்ல படுக்க வைப்பாங்களாம்.”

“அம்மாவுக்கு யாரை பிடிக்கும்?”

“அம்மாவுக்கு பிரபாகர் தாத்தா தான் பிடிக்கும்” என்று ஜுவாலா அவளையுமறியாமல் சிவாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

“இந்த பாட்டியோட சமையல் நல்லா இருக்கா?”

“பைன் தாத்தா”

“நாளைக்கும் பாட்டியையே கொண்டு வரச் சொல்லவா?”

“வேண்டாம் தாத்தா... அம்மா, அப்பா அலவ் பண்ண மாட்டாங்க”

“நாங்க பேசவா”

“அம்மா கூட ஓகே சொல்வாங்க தாத்தா, அப்பா நோ வே...”

“ஜுவாலா மட்டும் பேசறா, சர்வேஷ் பேச மாட்டியா?”
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஐ வான்ட் டூ நோ சம்திங் ப்ரம் யூ?”

“எஸ்... வாட் யூ வான்ட்ஸ் டு நோ?”

“வீ போத் ஹேவ் எனி ரிலேஷன்ஷிப்?”

“அப்ஸல்யூட்லி”

“சோ யூ போத் ஆர் கிரான்ட் பேரன்ட்ஸ் டு அஸ் இன் சம் வே”

“அப்கோர்ஸ்”

“பை தி வே, ஐ வான்ட்ஸ் டூ கிளியர் யூ ஒன் திங், தட், இப் அவர் பேரெண்ட்ஸ் ஹைட் சம்திங் எபவ்ட் யூ ப்ரம் அஸ், இட்ஸ் கிளியர் தட் தை டோன்ட் லைக் அஸ் டூ கீப் எனி காண்டக்ட் வித் யூ, ஆர் தை பிளான் டு ரிவில் திஸ் இன் பியூச்சர் மே பீ. சோ வித்தவுட் தெயர் பெர்மிஷன், வீ போத் நாட் லைக் டூ பில்ட் எனி ரிலேஷன்ஷிப் வித் யூ. ஸாரி” என்ற சர்வா,

“தேங்க்ஸ் பார் யுவர் பிரேக் பாஸ்ட் மேம் & சார்” என்று சொல்லிக்கொண்டே ஒரு கர்டசிக்காக சாப்பிட, ஜுவாலாவும் அதையே பின்பற்றினாள்.

அவனது பேச்சில் வருத்தம் மேலிட்டாலும், அதனையும் மீறி பெருமையாகப் பார்த்த இருவரும், உள்ளம் மகிழ்ந்தனர்.

“சர்வா, உன் அம்மா, அப்பாக்கு உண்மை தெரிஞ்சும் இருக்கலாம், மே பீ தெரியாமலும் இருக்கலாம், ஆனா என்னிக்கா இருந்தாலும் நீங்க எங்களுக்கு பேரப்பசங்க தானே, உங்க மேல எங்களுக்கும் பாசம் இருக்கும்ல”

“அப்கோர்ஸ், பட் நவ் வீ போத் வில் பாலோ அவர் பேரன்ட்ஸ் டெசிசன் ஒன்லி” என்று சொல்லிக்கொண்டே, அங்கிருந்த வாஸ்பேசனில் சர்வா கைகழுவச் செல்ல, ஜுவாலாவும் அதையே பின்பற்றினாள்.

கை கழுவிவிட்டு வந்து, பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டவன், “தேங்க்ஸ் பார் எவ்ரிதிங், ரியலி ஐம் சாரி டு சே திஸ், ஐ டோன்ட் லைக் டூ ஹர்ட் யூ ஹியர் ஆப்டர், சோ பிளீஸ் கீப் டிஸ்டன்ஸ் வித் அஸ்” என்றவன் தங்கையை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

ஜுவாலா மட்டும் இரண்டு முறை திரும்பி இருவரையும் பார்த்துக்கொண்டே வெளியேறினாள்.

பவித்ரா இருவரும் சென்ற பின்னர், கண்கள் கலங்க அமர்ந்துவிட்டார்.

வெளியே வந்த சர்வாவோ,

“ஜுவா, அம்மா மார்னிங் என்ன சொன்னாங்க? நீ எதுக்கு நம்மை பத்தின டீட்டைல்ஸ் ஷேர் பண்ற?”

“சாரின்னா” என்றவள், அமைதியாக உடன் நடந்தாள்.

திடீரென நியாபகம் வந்தவளாக,

“அண்ணா ஐ பர்கெட் மை புக் தேர்”

“சரி நீ போ, நான் போயி எடுத்துட்டு வரேன்”

“ஸ்கூல் அசெம்ப்ளி ஸ்டார்ட் ஆக போகுது, நீங்க என் பேக் எடுத்துட்டு போங்க, நான் ஓடி போய் எடுத்துட்டு வந்துடறேன், ஐ கான்ட் டேக் தீஸ் டூ பேக் அட் சேம் டைம்”

“ஓகே.. பட் பீ கேர்புல் டோன்ட் டெல் எனிதிங் டூ தெம், கீப் டிஸ்டன்ஸ் வித் தெம், ஜஸ்ட் பிரிங் யுவர் புக் அன்ட் கம் இம்மீடியட்லி”

“ஷ்யூர்”

தன் அண்ணனிடம் பையைக் குடுத்துவிட்டு, வேகமாக முதல் மாடியில் இருந்த பவித்ராவின் அறையை நோக்கி ஜுவாலா ஓடினாள்.

“பவி அழாத, சின்னப் பையன் தான”

“சின்னப்பையான, அவனா, அவன் எப்படி பேசறான் பாருங்க, உங்களையே வித்துட்டு வந்துடுவான்”

“அழாத, இன்னிக்கு இல்லைனாலும், இன்னொரு நாளைக்கு அவனே வந்து பேசுவான்” என்று அவர் பவித்ராவுக்கு ஆறுதல் சொல்லும் போதே,

“மே ஐ கமின்” என்ற குரலில் பவித்ரா அழுகையை நிறுத்திவிட்டு சிவாவைப் பார்த்தார்.

“எஸ் கமின்” என்ற சிவாவின் குரல் கேட்ட ஜுவாலா, கதவை நன்கு திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்,

“என்னோட புக் இங்கேயே மிஸ் பண்ணிட்டேன் தாத்தா, எடுத்துக்கவா?” என்று கேட்ட ஜுவாலாவை புன்னகையுடன் பார்த்த சிவா,

“ம்ம்” என்று தலையாட்ட,

அவர்கள் பையை வைத்திருந்த டீபாயின் மீது இருந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டவள், கதவை நோக்கிப் போகாமல், நேராக பவித்ராவை நோக்கி வந்தாள்.

இருவரும் அவளையேப் பார்க்க,

“நீங்க என் கிரான்ட் பேரன்ட்ஸா?”

“ஆமாம்மா” என்று சிவா சொன்னார்,

“எப்படி?”

“அது சீக்ரெட்”

“ஹோ..” என்று யோசித்தவள் பவித்ராவின் அருகில் சென்று,

“நீங்க கொண்டுவந்த புட் நல்லா இருந்துச்சு, பாட்டி உங்களுக்கு டர்மரின்ட் ரைஸ் செய்யத் தெரியுமா?”

“ம்ம்.. நல்லாவே செய்வேன்”

“ஹை... அப்படின்னா நாளைக்கு செஞ்சு கொண்டு வரீங்களா?”

“கண்டிப்பா செல்லம், உனக்கு இல்லாமையா?”

“தேங்க்ஸ் பாட்டி” என்றவள் சட்டென்று பவித்ராவின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு,

“பை பாட்டி...” என்று கதவை நோக்கிச் சென்றவள் மீண்டும் இருவரின் அருகில் வந்து, “ஷ்.. அண்ணாக்கு தெரிய வேண்டாம், தெரிஞ்சா என் கூட பேச மாட்டாங்க, டீலா?” என்று கட்டை விரலை உயர்த்தி அவள் கேட்க,

“டீல்” என்று சிவா சொல்ல,

அவரது கன்னத்திலும் ஒரு முத்தம் பதித்துவிட்டு கதவை திறந்து கொண்டு சர்வாவைத் தேடி ஓடினாள்.

அவளது செயலில் பெரியவர்கள் இருவரும் மனம் நிறைந்து போயினர்.

“பார்த்தியா? என் பேத்தியை?”

“எப்படியோங்க, இவளாவது நம்ம அன்பை புரிஞ்சிக்க முயற்சி பண்றாளே”

“சரி மதியம் நாம குடுக்கற சாப்பாட்டை உன் பேரன் சாப்பிட வர மாட்டான், நாளைக்கு எப்படி உன் பேத்திக்கு புளி சாதம் தரப்போற?”

“கிளாஸ் இடைல தான்”

“சரி வா வீட்டுக்கு போகலாம்”

“இல்லைங்க, நான் இங்கேயே இருந்து மதியம் பசங்க எப்படி சாப்பிடறாங்கன்னு பார்க்கனும்”

“சரி அழாம இரு, நான் அப்படியே ஸ்கூலை ஒரு ரவுன்ட் போயிட்டு வரேன், எல்லாமே சரி ஆகும், சர்வா என்ன தான் பத்து வயசா இருந்தாலும், இப்ப அவன் குணம் அப்படியே பதினாறு, பதினேழு வயசு மாதிரி இருக்கு, அதனால, ஜுவாலாவை விட சர்வா நிச்சயம் நம்மை புரிஞ்சுப்பான்”

“சரிங்க”

சிவா பள்ளியை பார்வையிடச் செல்ல, பவித்ரா சர்வாவின் பேச்சை எண்ணிக் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்.

அவரவர், அவரவர் பணியில் இருக்க,

சம்யுக்தா பிரித்வியிடம் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாள்.

“உங்க மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?”

“உன்னைத்தான்”

“எத்தனை தடவை சொல்றேன், ஹாஸ்பிட்டல் பக்கம் வராதீங்கன்னு”

“எனக்கு உன்னை பார்க்கனும்னு தோணிச்சுனா நான் வருவேன், நீ எங்க இருந்தாலும்”

“நீங்க இங்க வர்றது மாமாக்கு தெரிஞ்சது?”

“தெரிஞ்சா? என்ன பண்ணுவார் உன் மாமா?”

“பல்லைத்தட்டி கைல குடுத்துடுவார், இன்னும் ரெண்டு வாரம் தானே, பொறுமையா இருப்போம்ன்னு பார்த்தா, ஓவரா ஆடறீங்க?”

“நான் உட்கார்ந்து தானே இருக்கேன், ஆடலையே?”

“ச்ச... நீங்க வந்து போறதால, என்னைப்பற்றி ஹாஸ்பிட்டல்ல என்ன பேசறாங்கன்னு தெரியுமா?”

“என்ன பேசறாங்க?”

“அசிங்கமா பேசறாங்க... உங்களோட தப்பான லிங்க்ல இருக்கேனாம், என் புருஷன் வெளிநாட்ல இருக்கறதால இங்க உங்க கூட சுத்தறேனாம், இதெல்லாம் எனக்குத் தேவையா?” என்று அவள் கண்கள் கலங்கி அழ ஆரம்பிக்க,

“ஐம் ரியலி சாரி, இனி நான் இங்க உன்னை பார்க்க வரலை, போதுமா?” என்றவன் கோபத்துடன் அவளது அறையை விட்டு வெளியேறினான்.

அவன் சென்ற பின்னரும், சில நிமிடங்கள் அழுதவள், அங்கிருக்கப்பிடிக்காமல் வீட்டிற்குத் திரும்பினாள்.

ராகம் இசைக்கும்...
 

Shrijo

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 9

வீட்டிற்குள் நுழைந்த மகளைப் பார்த்த நித்யா நொடியில் பதட்டமடைந்து விட்டார்.

“ஏன்டி? என்னாச்சு? ஹாஸ்பிட்டல் போகலையா?” என்று குழந்தையை தூக்கிக்கொண்டு அவளை நோக்கி வந்தார்.

“போகனும்மா, மதியம்மா போய்க்கலாம்ன்னு வந்துட்டேன்” என்று சொல்லிக்கொண்டே அன்னையின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டாள் மானஷா.

“அப்புறம் ஏன் வீட்டுக்கு வந்த?”

“மைன்ட் சரியில்லை, அந்த கேஸை இன்னொரு டாக்டரை பார்க்கச் சொல்லிட்டேன்”

“என்னம்மா? என்னாச்சு? மானவ் ஏதாவது சொன்னானா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை, சும்மா தான்” என்றவள் மகளுடன் விளையாட்டு அறைக்குள் நுழைந்தாள்.

“அம்மா... மதியம் சாப்பாடு நானே கொண்டு போறேன், டிரைவர்ட்ட குடுத்துவிடாதிங்க”

“சரிம்மா” என்றவர், குழப்பம் மேலிட மற்ற வேலைகளைப் பார்க்கச் செல்ல, மனிஷா மகளுடன் விளையாட ஆரம்பித்தாள்.

அன்று மதியம் மீட்டிங் முடித்து வந்து அமர்ந்த மான்வித்தின் முகத்தில் வெற்றிக்களிப்பும், நிம்மதியும் ஒருங்கே சேர்ந்திருந்தது.

மீட்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு, தீர்வுகளையும் கண்டுபிடித்து செயலாற்றிவிட்டிருந்தான்.

தவறுகள் நிகழ்ந்த இடங்கள், கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டிருந்தன.

கோர்ட்டையும், டையையும் கழட்டி வைத்தவன், கண்கள் மூடி ரிலாக்ஸாக உட்கார,

ரகு உள்ளே நுழைந்தார்.

“தம்பி, சூப்பர், கலக்கிட்டீங்க”

“என்ன அங்கிள் நீங்க, இதெல்லாம் பெரிய விஷயமா?”

“கண்டிப்பா, அப்பா கூட இந்தளவுக்கு மீட்டிங்க்ல பர்பார்ம் பண்ணி இருக்க மாட்டார், வேண்ணா பாருங்க, இந்த தடவை சேல்ஸ் அதிகமா இருக்கும், பிளஸ் பிராபிட் இருக்குமே ஒழிய லாஸ் இருக்காது”

“அங்கிள் நீங்க சொல்ற மாதிரி நடந்தா சந்தோசம் தான்”

“இன்னிக்கு மனிஷா முகத்தைப் பார்த்துட்டு போனீங்கள்ள அதான், மனிஷா ராசி வொர்க்கவுட் ஆகிடுச்சு”

“பார்டா... ரெண்டு நாளா கண்ணு முழிச்சு வேலை பார்த்தது நான், இதுல நிஷா எங்கிருந்து வந்தா?” என்று சிரித்துக்கொண்டே மானவ் கேட்டான்.

“இன்னிக்கு காலைல எவ்ளோ டென்சனா இருந்தீங்க? மீட்டிங் ஹால் நுழையும் போது அப்படியே சேஞ்ச் ஆகிட்டிங்க, எல்லாத்துக்கும் மனிஷா தான் காரணம்”

“அங்கிள் நீங்க நிஷா புராணம் பாடாம, பர்ஸ்ட் போயி சாப்பிடுங்க, அதுக்கு அப்புறம் நான் சொன்ன வொர்க்கெல்லாம் முடிச்சுடுங்க, மெமோ நீங்களே சைன் பண்ணி இஸயூ பண்ணிடுங்க, தென் எனக்கு லஞ்ச் வந்திடுச்சா?”

“இன்னும் இல்லை தம்பி, வீட்டுக்கு போன் பண்ணேன், நித்யா மேடம் எடுத்தாங்க, மனிஷாட்ட குடுத்து விடறேன்னு சொன்னாங்க”

“ஹாஸ்பிட்டல் போறேன்னு சொன்னா, கேஸ் இருக்குன்னா, இப்ப எப்படி வீட்ல? காலைல லேப் மெட்டீரியல்ஸ் வேற வருதுன்னு சொன்னா...”

“தெரியலை தம்பி... உங்க மீட்டிங்கை நினைச்சு டென்சனா இருந்து இருப்பாங்க, இந்நேரம் வந்துகிட்டு இருப்பாங்க, அதுக்குள்ள, இந்த பைலை பார்த்து சைன் பண்ணிட்டீங்கன்னா, ஆடிட்டருக்கு அனுப்பிடுவேன்”

“சரி குடுங்க, நீங்க சாப்பிட போங்க, நான் பார்த்துடறேன்” என்றவன் பைலை வாங்கிக்கொள்ள, ரகு வெளியேறிவிட்டார்.

“ஏன் நிஷா ஹாஸ்பிட்டல் போகல?” என்று சில நிமிடங்கள் குழம்பியவன், மனிஷாவுக்கே கால் செய்தான்.

டிரைவிங்கில் இருந்தவள், அவனது காலை அட்டென்ட் செய்து,

“நான் ரீச் ஆகிட்டேன், இன்னொரு பைவ் மினிட்ஸ், நீங்க ரெப்ரெஷ் ஆகிட்டு உட்காருங்க, வந்துடறேன்” என்று அவனை பேச விடாமல் அவளே பேசிவிட்டுக் காலை கட் செய்ய,

மானவ் ரகு தந்த பைலை பார்வையிடத் தொடங்கினான்.

காரை அலுவலக வளாகத்தில் பார்க் செய்துவிட்டு இறங்கிய மனிஷா, அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த தனுவை தூக்கிக்கொண்டு, அவளது கைப்பையை எடுத்துக்கொண்டு, அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள்.

எதிர்பட்ட பியூனிடம் கார் சாவியைத் தந்தவள், “கார்ல சாப்பாடும், பாப்பாவோட திங்க்ஸ் இருக்கற பேக்கும் இருக்கும், எடுத்துட்டு சார் ரூம்க்கு வந்துடுங்க” என்று சொல்ல, அவரும் சாவியை வாங்கிக்கொண்டு அவளது காரை நோக்கிச் சென்றார்.

அவள் லிப்ட்டில் ஏற, இரண்டாவது மாடியில் ரகுவும் அவளுடன் ஏறிக்கொண்டார்.

“அட வாம்மா, காலைல உங்களை பார்க்க முடியலை, மீட்டிங் வேலையா இருந்தேன், தனு... வாங்க... வாங்க...” என்று அவர் கை நீட்ட,

குழந்தை உதட்டை பிதுக்கிக்கொண்டு மனிஷாவின் தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டது.

“என்னாச்சும்மா? அழுகையும் கோபமும்மா இருக்காங்க குட்டி பாஸ்”

“காலைல என் கூட வர்றேன்னு ஒரே அடம் அங்கிள், விட்டுட்டு வந்துட்டேன், இப்பையும் கூட வர்றேன்னு அடம், சரின்னு கூட்டிட்டு வந்தா, கார்ல இருந்து இறங்கவும் கோபம் வந்துடுச்சு”

“கார் ரைட்லையே இருக்கனுமா, குட்டி பாஸ்க்கு?”

“வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா அங்கிள்?”

“நல்லா இருக்காங்கம்மா” அவர்கள் பேசிக்கொண்டு இருக்கவே, ஐந்தாம் தளம் வந்துவிட,

லிப்டை விட்டு வெளியே வந்தவர்கள், அங்கிருந்த வராண்டாவில் நின்று பேச ஆரம்பித்தனர்.

“மீட்டிங் எப்படி போச்சு அங்கிள்?”

“உன் புருஷன் பின்னிட்டார்... சக்சஸ்”

“ரெண்டு நாளா நைட்டெல்லாம் தூங்கலை”

“நீ வந்துட்டு போற வரைக்கும் ஒரே டென்ஷன், டென்சன்ல தண்ணி கூட ஒழுங்கா குடிக்க முடியாம புரை ஏறி ரொம்ப கஷ்டப்பட்டார்”

“அச்சோ அப்புறம்?”

“நீ தான் நினைச்சு இருப்பேன்னு சொன்னேன், அப்புறம் தான் நின்னுச்சு” அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, சாப்பாடு வந்துவிட,

“ஓகே அங்கிள், போறப்ப உங்களை மீட் பண்றேன், அவர் ஏற்கனவே கால் பண்ணிட்டார்”

“ஓகே ம்மா, என்கிட்டேயே ரெண்டு தடவை கேட்டுட்டார், கொஞ்ச நேரம் முன்னாடி தான் அவர்ட்ட பைலை வாங்கப் போனேன், களைச்சு போயிட்டார், சீக்கிரம் போங்க...” என்றவர் அவரது அறைக்குள் நுழைய, மனிஷா மானவ்வின் அறையை நோக்கிச் சென்றாள்.

பியூன் கதவைத் திறந்து உள்ளே வந்து உணவுக்கூடையை மானவின் டேபிளுக்கு அருகில் வைத்துவிட்டு வெளியேற, மனிஷா குழந்தையுடன் உள்ளே நுழைந்தாள்.

மானவ் உள்ளிருந்த அறையில் இருப்பதை உணர்ந்தவள், குழந்தையை கீழே இறக்கி விட முயற்சிக்க, குழந்தையோ அன்னையின் புடவையைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்க மறுத்து அழ ஆரம்பித்து விட்டது.

மானவ் உள்ளிருந்த அறையில் இருந்து ரெப்ரெஷ் செய்து கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வர, குழந்தையின் அழு குரல் அவன் செவிகளைத் தீண்டியது.

அந்த அறையை விட்டு வெளியே வந்து இருவரையும் கண்ட மானவ் முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் இருவரையும் நோக்கி வந்தான்.

“தனு குட்டி, ஏன் செல்லம் அழறீங்க?” என்று மனிஷாவிடம் இருந்து குழந்தையை வாங்க முயற்சிக்க,
 
Status
Not open for further replies.
Top