Shrijo
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்டேஷனில் வேலையை முடித்துவிட்டு, மூவரும் வெளியில் வந்தனர்.
“ஜாக்கிரதையா இரும்மா”
“எனக்கென்ன அங்கிள்... அதான் சேப்டி ஆகியாச்சே”
“இன்னும் கொஞ்ச நாளைக்கு செக்யூரிட்டி இல்லாம எங்கேயும் போகாதே”
“கண்டிப்பா அங்கிள்...”
“சரிம்மா ஒரு நாள் வீட்டுக்கு வா...”
“அவர் வரட்டும் அங்கிள்... அவர் கூட வரேன்...”
“ஏன் தனியா வந்தா உள்ள விட மாட்டோமா?”
“அப்படி இல்லை அங்கிள்... ஒரு நாள் கண்டிப்பா வரேன்.”
“ஓகேம்மா...”
“மாமா போலாமா?”
“போலாம்மா...”
“ஓகே மிஸ்டர் சிவா... மறுபடியும் சந்திக்கலாம்...” என்று பரத் கை நீட்ட, சிவாவும் “ஓகே பரத்” என்று அவரது கரம் பற்றிக்குலுக்கினார்.
அவரிடம் இருந்து விடைபெற்று இருவரும் அவர்களது காரை நோக்கிச் சென்றனர்.
“மாமா என்ன சொன்னார் உங்க பிள்ளை?”
“உன்னை ஸ்கூட்டி எடுக்காதைன்னு சொன்னேனே கேட்டியா?”
“அதான் மறுபடியும் வாங்கி வைச்சுட்டிங்களே”
“உன்னை உன் புருஷன் போன் பண்ணச் சொன்னான்... ஒழுங்கா போன் பண்ணி பேசிடு... அவன் பண்ணப்ப நீ எடுக்கலையாம்.. அதுக்கும் சேர்த்து குதிக்கறான்”
“வாங்க மாமா... பார்த்துக்கலாம்...”
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு செல்வதையேப் பார்த்திருந்த சிவாவின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது.
அதே புன்னகையுடன் அவன் வீட்டிற்குச் செல்ல, வீட்டிற்குள் நுழைந்ததுமே அந்த புன்னகை துணி கொண்டு துடைத்தார்ப் போல மறைந்து போனது.
மானவ் மகளுடன் ஓடி பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தான், பவித்ரா மனிஷாவுடன் இருக்க, நித்யா இரவு உணவு ஆயத்தத்தில் இருந்தார்.
“தாத்தா....” என்று தனு அவரிடம் தாவ,
“என் செல்லக்குட்டி...” என்று அவளைத் தூக்கிகொண்டார்.
“மானவ்... மனிஷா எங்க? எப்படி இருக்கா?” என்ற அவரது குரலில் கோபமும் கலந்து வந்தது...
“தூங்கிக்கிட்டு இருந்தாப்பா... எழுந்துட்டாளான்னு தெரியலை...”
“மேல அவ கூட யார் இருக்கா?”
“அம்மாப்பா”
“அண்ணா... வந்துட்டீங்களா? டிரெஸ் மாத்திட்டு வாங்கண்ணா... பவியை அனுப்பறேன்”
“மனிஷா எப்படி இருக்காம்மா?”
“எழுந்துட்டாண்ணா... தலை பாரமா இருக்குன்னா... உடம்பெல்லாம் வலிக்கற மாதிரி இருக்குன்னா... அதான் சுடு தண்ணீரில குளிக்க வைச்சு படுக்க வைச்சிருக்கோம்... இன்னும் அந்த ஊசியோட பவர் குறையல... தலையெல்லாம் சுத்தற மாதிரி இருக்காம்... அவளுக்குத்தான் இட்லியும், காபியும் கொண்டு போறேன்”
“ஏம்மா? ரொம்ப சோர்வா இருக்காளே, உடம்புக்கு வேற ஏதாவதான்னு விசாரிச்சிங்களா? தனுவை உண்டாகி இருக்கும் போது கூட இப்படித்தான் இருந்தா” என்று நித்யாவைக் கேட்டுக்கொண்டே மகனைப் பார்த்தார்.
அவரது கேள்வியில் மானவ் சட்டென்று அவரை நிமிர்ந்து பார்க்க, தன் பார்வையைத் திருப்பிக்கொண்டு நித்யாவைப் பார்த்தார்.
“இல்லைன்னா... இன்னும் விசாரிக்கலை... எனக்குமே அந்த சந்தேகம் இருக்கு... டிபன் சாப்பிட்டதும் கேட்கலாமேன்னு இருந்தேன்...”
“ஏன்டா உனக்கு ஏதாவது தெரியுமா?”
“இல்லைப்பா... அப்படியெல்லாம் எதுவும் இல்லை... அடுத்த குழந்தை இப்போதைக்கு வேண்டாம்ன்னு தள்ளிப்போட்டு இருக்கோம்”
“சரி நீ போயிட்டு அம்மாவை வரச்சொல்லு, நித்யா இதை அவன்கிட்ட குடுத்துவிட்டுட்டு எனக்கு ஒரு காபி ஸ்டிராங்கா போட்டுட்டு வாயேன்...”
“சரிங்கண்ணா...” என்றவர் “மானவ் அப்படியே அவளுக்கு ஊட்டி விட்டுடுப்பா... சாப்பாடே வேண்டாம்ன்னு சொன்னா... உட்கார கூட முடியலை” என்று சொல்லியவர் தட்டை அவன் கையில் தந்துவிட்டு சமையலறைக்குள் செல்ல, சிவா அவனைப் பார்த்துக்கொண்டே அவரது அறைக்குள் நுழைந்தார்.
மானவ் தட்டை எடுத்துக்கொண்டு அவர்களது அறைக்குச் சென்றான்.
“அம்மா...”
“ஏம்பா?”
“அப்பா வந்துட்டாங்க... உங்களை வரச்சொன்னாங்க”
“ம்ம்..”
“மனிஷா... டிபன் சாபிட்டுட்டு தூங்கு... பாப்பாவை நாங்க பார்த்துக்கறோம்”
“பிளீஸ் அத்தை... கூட்டிக்கிட்டு வந்து காமிச்சுட்டு கூட்டிக்கிட்டு போங்களேன்... பிளீஸ்....”
“சரி நீ சாப்பிடு... எப்படியும் மாமா மேல வருவார்... தூக்கிட்டு வரச் சொல்றேன்... இன்னிக்கு பாப்பா எங்க கூட படுத்துக்கிட்டும்”
“ம்ம்... சரிங்கத்தை...”
அவர் வெளியேற, மானவ் தட்டை எடுத்துக்கொண்டு அவளருகே சென்று அமர்ந்தான்.
அவள் தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். அவன் உதவி செய்ய முயல, அதை மறுத்துவிட்டு தானே அமர்ந்து கொண்டாள்.
அவனிடம் இருந்து தட்டை வாங்கியவள், மெல்ல உண்ணத்தொடங்க, அவன் போனை எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றுவிட்டான்.
ஓரிரு வாய்க்கு மேல் உணவை விழுங்க முடியாமல் சிரமப்பட்டவள், தட்டை அப்படியே வைத்துவிட்டு, காபியை இரண்டு மடங்கு குடித்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.
“என்னங்க? கூப்பிட்டீங்களா?”
“உட்கார்... நான் டிரெஸ் சேஞ் பண்ணிட்டு கூப்பிடறேன், ரெண்டு பேரும் நம்ம ரூமுக்கு வாங்க”
“சரிங்க”
“இந்தா பாப்பா”
“தனு பாட்டிக்கிட்ட வா”
“மாத்தேன்... தாத்தாத்த...”
“தனு... தாத்தா போன் பேசிட்டு வந்ததும் போலாம்... சரியா? பாட்டியும் நீயும் பில்டிங் கட்டலாமா?” என்று பேத்தியை கீழே உட்கார வைத்துவிட்டு, அவரும் அமர்ந்து அங்கிருந்த பில்டிங் பிளாக்குகளை கையில் எடுக்க, அவளும் அமர்ந்து கொண்டாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் சிவாவே பவித்ராவை அழைக்க, இருவரும் குழந்தையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
“என்னங்க? ஏதாவது பிரச்சனையா?”
“ஆமா பவி...”
“மனிஷாக்கு பாதுக்காப்பு ஒழுங்கா ஏற்பாடு பண்ணியாச்சா?”
“பிரச்சனை மனிஷாக்கு தான்... ஆனா காரணம் வேற?”
“என்னங்க?”
“மனிஷாக்கும், மானவ்க்கும் ஏதோ பிரச்சனை”
“அண்ணா... நானே உங்ககிட்ட இதைப்பற்றி பேசனும்ன்னு இருந்தேன்”
“அப்ப உனக்கும் முன்னாடியே தெரிஞ்சு இருக்கு”
“மானவ்வை நான் சின்ன வயசுல இருந்தே பார்த்திருக்கேன், என்னால அவன் மேல குறை கண்டுபிடிக்க முடியலை, அதுவும் இல்லமா அவன் உங்க பையன், அவனை இந்த விசயத்துல என்னால சந்தேகப்படற அளவுக்கு நினைக்க கூட முடியலை”
“பவி... உனக்கு ஏதாவது தெரியுமா?”
“ஜாக்கிரதையா இரும்மா”
“எனக்கென்ன அங்கிள்... அதான் சேப்டி ஆகியாச்சே”
“இன்னும் கொஞ்ச நாளைக்கு செக்யூரிட்டி இல்லாம எங்கேயும் போகாதே”
“கண்டிப்பா அங்கிள்...”
“சரிம்மா ஒரு நாள் வீட்டுக்கு வா...”
“அவர் வரட்டும் அங்கிள்... அவர் கூட வரேன்...”
“ஏன் தனியா வந்தா உள்ள விட மாட்டோமா?”
“அப்படி இல்லை அங்கிள்... ஒரு நாள் கண்டிப்பா வரேன்.”
“ஓகேம்மா...”
“மாமா போலாமா?”
“போலாம்மா...”
“ஓகே மிஸ்டர் சிவா... மறுபடியும் சந்திக்கலாம்...” என்று பரத் கை நீட்ட, சிவாவும் “ஓகே பரத்” என்று அவரது கரம் பற்றிக்குலுக்கினார்.
அவரிடம் இருந்து விடைபெற்று இருவரும் அவர்களது காரை நோக்கிச் சென்றனர்.
“மாமா என்ன சொன்னார் உங்க பிள்ளை?”
“உன்னை ஸ்கூட்டி எடுக்காதைன்னு சொன்னேனே கேட்டியா?”
“அதான் மறுபடியும் வாங்கி வைச்சுட்டிங்களே”
“உன்னை உன் புருஷன் போன் பண்ணச் சொன்னான்... ஒழுங்கா போன் பண்ணி பேசிடு... அவன் பண்ணப்ப நீ எடுக்கலையாம்.. அதுக்கும் சேர்த்து குதிக்கறான்”
“வாங்க மாமா... பார்த்துக்கலாம்...”
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு செல்வதையேப் பார்த்திருந்த சிவாவின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது.
அதே புன்னகையுடன் அவன் வீட்டிற்குச் செல்ல, வீட்டிற்குள் நுழைந்ததுமே அந்த புன்னகை துணி கொண்டு துடைத்தார்ப் போல மறைந்து போனது.
மானவ் மகளுடன் ஓடி பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தான், பவித்ரா மனிஷாவுடன் இருக்க, நித்யா இரவு உணவு ஆயத்தத்தில் இருந்தார்.
“தாத்தா....” என்று தனு அவரிடம் தாவ,
“என் செல்லக்குட்டி...” என்று அவளைத் தூக்கிகொண்டார்.
“மானவ்... மனிஷா எங்க? எப்படி இருக்கா?” என்ற அவரது குரலில் கோபமும் கலந்து வந்தது...
“தூங்கிக்கிட்டு இருந்தாப்பா... எழுந்துட்டாளான்னு தெரியலை...”
“மேல அவ கூட யார் இருக்கா?”
“அம்மாப்பா”
“அண்ணா... வந்துட்டீங்களா? டிரெஸ் மாத்திட்டு வாங்கண்ணா... பவியை அனுப்பறேன்”
“மனிஷா எப்படி இருக்காம்மா?”
“எழுந்துட்டாண்ணா... தலை பாரமா இருக்குன்னா... உடம்பெல்லாம் வலிக்கற மாதிரி இருக்குன்னா... அதான் சுடு தண்ணீரில குளிக்க வைச்சு படுக்க வைச்சிருக்கோம்... இன்னும் அந்த ஊசியோட பவர் குறையல... தலையெல்லாம் சுத்தற மாதிரி இருக்காம்... அவளுக்குத்தான் இட்லியும், காபியும் கொண்டு போறேன்”
“ஏம்மா? ரொம்ப சோர்வா இருக்காளே, உடம்புக்கு வேற ஏதாவதான்னு விசாரிச்சிங்களா? தனுவை உண்டாகி இருக்கும் போது கூட இப்படித்தான் இருந்தா” என்று நித்யாவைக் கேட்டுக்கொண்டே மகனைப் பார்த்தார்.
அவரது கேள்வியில் மானவ் சட்டென்று அவரை நிமிர்ந்து பார்க்க, தன் பார்வையைத் திருப்பிக்கொண்டு நித்யாவைப் பார்த்தார்.
“இல்லைன்னா... இன்னும் விசாரிக்கலை... எனக்குமே அந்த சந்தேகம் இருக்கு... டிபன் சாப்பிட்டதும் கேட்கலாமேன்னு இருந்தேன்...”
“ஏன்டா உனக்கு ஏதாவது தெரியுமா?”
“இல்லைப்பா... அப்படியெல்லாம் எதுவும் இல்லை... அடுத்த குழந்தை இப்போதைக்கு வேண்டாம்ன்னு தள்ளிப்போட்டு இருக்கோம்”
“சரி நீ போயிட்டு அம்மாவை வரச்சொல்லு, நித்யா இதை அவன்கிட்ட குடுத்துவிட்டுட்டு எனக்கு ஒரு காபி ஸ்டிராங்கா போட்டுட்டு வாயேன்...”
“சரிங்கண்ணா...” என்றவர் “மானவ் அப்படியே அவளுக்கு ஊட்டி விட்டுடுப்பா... சாப்பாடே வேண்டாம்ன்னு சொன்னா... உட்கார கூட முடியலை” என்று சொல்லியவர் தட்டை அவன் கையில் தந்துவிட்டு சமையலறைக்குள் செல்ல, சிவா அவனைப் பார்த்துக்கொண்டே அவரது அறைக்குள் நுழைந்தார்.
மானவ் தட்டை எடுத்துக்கொண்டு அவர்களது அறைக்குச் சென்றான்.
“அம்மா...”
“ஏம்பா?”
“அப்பா வந்துட்டாங்க... உங்களை வரச்சொன்னாங்க”
“ம்ம்..”
“மனிஷா... டிபன் சாபிட்டுட்டு தூங்கு... பாப்பாவை நாங்க பார்த்துக்கறோம்”
“பிளீஸ் அத்தை... கூட்டிக்கிட்டு வந்து காமிச்சுட்டு கூட்டிக்கிட்டு போங்களேன்... பிளீஸ்....”
“சரி நீ சாப்பிடு... எப்படியும் மாமா மேல வருவார்... தூக்கிட்டு வரச் சொல்றேன்... இன்னிக்கு பாப்பா எங்க கூட படுத்துக்கிட்டும்”
“ம்ம்... சரிங்கத்தை...”
அவர் வெளியேற, மானவ் தட்டை எடுத்துக்கொண்டு அவளருகே சென்று அமர்ந்தான்.
அவள் தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். அவன் உதவி செய்ய முயல, அதை மறுத்துவிட்டு தானே அமர்ந்து கொண்டாள்.
அவனிடம் இருந்து தட்டை வாங்கியவள், மெல்ல உண்ணத்தொடங்க, அவன் போனை எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றுவிட்டான்.
ஓரிரு வாய்க்கு மேல் உணவை விழுங்க முடியாமல் சிரமப்பட்டவள், தட்டை அப்படியே வைத்துவிட்டு, காபியை இரண்டு மடங்கு குடித்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.
“என்னங்க? கூப்பிட்டீங்களா?”
“உட்கார்... நான் டிரெஸ் சேஞ் பண்ணிட்டு கூப்பிடறேன், ரெண்டு பேரும் நம்ம ரூமுக்கு வாங்க”
“சரிங்க”
“இந்தா பாப்பா”
“தனு பாட்டிக்கிட்ட வா”
“மாத்தேன்... தாத்தாத்த...”
“தனு... தாத்தா போன் பேசிட்டு வந்ததும் போலாம்... சரியா? பாட்டியும் நீயும் பில்டிங் கட்டலாமா?” என்று பேத்தியை கீழே உட்கார வைத்துவிட்டு, அவரும் அமர்ந்து அங்கிருந்த பில்டிங் பிளாக்குகளை கையில் எடுக்க, அவளும் அமர்ந்து கொண்டாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் சிவாவே பவித்ராவை அழைக்க, இருவரும் குழந்தையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
“என்னங்க? ஏதாவது பிரச்சனையா?”
“ஆமா பவி...”
“மனிஷாக்கு பாதுக்காப்பு ஒழுங்கா ஏற்பாடு பண்ணியாச்சா?”
“பிரச்சனை மனிஷாக்கு தான்... ஆனா காரணம் வேற?”
“என்னங்க?”
“மனிஷாக்கும், மானவ்க்கும் ஏதோ பிரச்சனை”
“அண்ணா... நானே உங்ககிட்ட இதைப்பற்றி பேசனும்ன்னு இருந்தேன்”
“அப்ப உனக்கும் முன்னாடியே தெரிஞ்சு இருக்கு”
“மானவ்வை நான் சின்ன வயசுல இருந்தே பார்த்திருக்கேன், என்னால அவன் மேல குறை கண்டுபிடிக்க முடியலை, அதுவும் இல்லமா அவன் உங்க பையன், அவனை இந்த விசயத்துல என்னால சந்தேகப்படற அளவுக்கு நினைக்க கூட முடியலை”
“பவி... உனக்கு ஏதாவது தெரியுமா?”