All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராகினியின் "திருடி சென்றாய் இதயத்தையே!!!" கதை திரி

Status
Not open for further replies.

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11


தங்கள் உலகில் மூழ்கியிருந்த அந்தக் காதலர்கள், “ஐயோ!” என வந்த சத்தத்தில் பதறிப்போய் விலகி குரல் வந்த திசையை பயத்தோடு நோக்கியவர்கள், அங்கு தனது வாயை இரு கைகளாலும் அழுத்தமாக மூடியபடி கண்களில் பீதியோடு நின்றிருந்த அபிஷேக்கைக் கண்டு ஆசுவாசப்பட்டவர்களுக்கு அவன் நின்றிருந்த கோலம் சிரிப்பைக் கொடுத்தது...


எனினும் வந்த சிரிப்பை உதடுகளோடு நிறுத்திக்கொண்ட விஷ்ணு, அவனை நோக்கி நடந்தவாறு “இங்க என்ன பண்ணுற???” எனக் கேட்க, அவன் தன்னை நெருங்குவதைக் கண்டு பதறி பின்னால் நகர்ந்த அபிஷேக் சுவரில் மோதி நின்றவனின் கண்களில் இருந்த உணர்வுகளைக் கண்டுவிட்டு அப்படியே நின்றுகொண்ட விஷ்ணு,


“இப்படி காதலன் கிஸ் பண்ண துரத்திய காதலி மாதிரி போகாமல் நான் கேட்டதுக்கு பதில் சொல்லு!” எனக் கேட்க, விஷ்ணு சொன்னதை நினைத்த அபிஷேக்கின் முகம் அஷ்டகோணலாக மாறிப்போனாலும் அவன் அதே இடத்தில் நின்றுவிட்டதனால் தைரியம் வரப்பெற்றவனாக தன் வாயிலிருந்து கைகளை எடுத்தவன்,

“நான் இந்தப்பக்கமாக போனப்போ எலி சத்தம் போடுறது கேட்டிச்சு... இந்த வீட்டுல எலி எங்க நின்னாலும் என்னைத்தானே கூப்பிடுவாங்க... சோ முன்கூட்டியே பிடிச்சுடலாம்னு வந்தேன்... வந்த இடத்தில நீங்க இரண்டு பேரும் எலி சத்தம் போடுறது மாதிரி கிஸ் பண்ணிட்டு இருந்தீங்க” எனவும் விஷ்ணு, பிரியா இருவரும் வெட்டவா, குத்தவா என அவனையே நோக்க, அவனோ அவர்களின் பார்வையை தூக்கித் தூரப்போட்டுவிட்டு,

“அதுமட்டும் இல்லை... நீங்க இருக்கிற இடம்னு தெரிஞ்சிருந்தா வந்தே இருக்கமாட்டேன், என் கெரகம் இதையெல்லாம் பார்க்கவேண்டியிருக்கு!... ச்சை... இந்த வீட்டுல அழகா இருக்கிற எனக்கு பாதுகாப்பே இல்லை... அதுவும் ஒரு ஆம்பளையால ஆபத்துன்னு நினைக்கிறப்போ என் மேலையே எனக்கு பரிதாபமா இருக்கு!” என ஏற்கனவே பிஞ்சுபோன பண்ணு மாதிரி இருக்கும் முகத்தை, குரங்கு கையில் கொடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படி மாறிப்போக சிலிர்த்துக்கொண்டு புலம்பியதைக் கேட்டு, “டேய்!” என ஒருவிரலை நீட்டி விஷ்ணு எச்சரிக்க,

“சிரிப்பு பொலிஸ்லாம் காப்டன் விஜயகாந்த் மாதிரி கை நீட்டி பேசாமல் அங்கிட்டு போங்க சார்... சிப்பு சிப்பா வருது சார்” எனக் கூறிச் சிரிக்க, அதுவரை நேரமும் அவர்களின் உரையாடலைக் கேட்டு சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்த பிரியாவினால் அதற்குமேலும் சிரிப்பை அடக்கமுடியாது வாய்விட்டு நகைக்க, கொலைவெறியாகிப்போனது விஷ்ணுவுக்கு...

‘இத்துப்போன தகரடப்பா என்னை கிண்டல் பண்ணுது... அதை கேட்டு கேலியா சிரிக்கிறியா??? இருடி, உன்னை அப்புறம் கவனிச்சுக்கிறேன்’ எனப் பார்வையால் தன் காதலியை மிரட்டிவிட்டு, அபிஷேக் பக்கம் திரும்பியவன்,

“பொலிஸ்னு பார்க்காமல் கேலி பண்ணுறியா??? இரு உன்னைக் கவனிச்சுக்குறேன்” எனப் பல்லைக் கடித்தபடி அவனை நோக்கிச் செல்ல, அபிஷேக்கிற்கோ ஈரக்குலையே நடுங்கிப்போனது...

‘அடி ஆத்தி கிட்டே வர்றாரே... இங்கயே நின்னா என் கற்பு போயிடும்போல இருக்கே... எஸ்கேப் ஆகிக்கோடா அபிஷேக்’ எனத் தனக்குத்தானே சொல்லியபடி பின்னால் நகர்ந்தவன்,

“ஐயோ... நான் அவன் இல்லை.....” என அலறியபடி ஓட்டமெடுக்க, விஷ்ணுவின் முகம் விளக்கெண்ணை குடித்ததுபோலானது... அவன் சென்ற பக்கத்தை முறைத்துவிட்டு பிரியாவை நோக்கியவன், அவள் சிரிப்பை அடக்குவதைக் கண்டதும் எரிகிற தீயில் எண்ணை வார்ப்பதுபோலாக, விரைந்து சென்று அவளின் பிடரி முடியைக் கொத்தாகப் பிடித்து தன் முகத்தை நோக்கி இழுத்தவன், தன் செயலில் அதிர்ந்து விழிவிரிய நோக்கியவளின் பார்வையை எதிர்கொண்டவாறே தனது உதடுகளை அவளின் மென்னிதழ்களில் புதைத்துக்கொண்டான்...

நேரம் செல்ல செல்ல அவனது மனதில் இருந்த கொதிப்பு அடங்கிப்போக, அவளிடமிருந்து பிரிந்து நின்றவனின் வலது கரம், அவளது முகத்தை வருட,

“சாரிடி” என மன்னிப்புக் கேட்டான்... மன்னவனின் செயலில் முதலில் அதிர்ந்தாலும் அவனது ஆலயங்கனத்தில் மெய்மறந்து போயிருந்தவளை அவனின் வருடலில் தன்னிலைக்கு கொண்டுவந்திருந்தது... அத்தோடு அவன் கேட்ட சாரியில் பதறிப்போனவளாக,

“இப்போ எதுக்கு மன்னிப்பு கேட்கிறீங்க??? அதுவும் என்கிட்ட” எனக் கேட்க,

“இல்லை... உன்கிட்ட கோபப்பட்டு இப்படி நடந்துக்கிட்டதுக்கு” எனக் குற்றவுணர்வோடு சொல்ல, அவனின் பதிலில் மனம் நெகிழ்ந்துபோனவளாக,

“உரிமை உள்ள இடத்தில் தான் கோபம் கொள்ளத் தோணுமாம்... சோ உங்க கோபம் என்மேல வந்ததில் எனக்கு சந்தோசம் தான்” எனக் காதலோடு சொன்னவளை இறுக அணைத்து விடுவித்த விஷ்ணு,

“நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்” எனவும்

“அதுக்கு நம்ம வீடுகள்ல இருக்கிறவங்க சம்மதிக்கணும்... சரி அண்ணா கிட்ட பேசுறேன்னு சொன்னீங்களே, பேசிட்டீங்களா???” என அவள் கேட்டதில் முகம் வாடியவனாக,

“எங்க அதுக்கான வாய்ப்பு வரலையே... அவன் கல்யாணம் நடந்ததுல இருந்து ஏதோ லிட்டர் கணக்குல கஞ்சி குடிச்சவன் போல விறைப்பா திரியுறான்... இதுல எங்கிட்டு இருந்து நம்ம விஷயம் பேச” எனக்கூறி பெருமூச்சு விட, புஷ்சென்று ஆகிப்போனது பிரியாவிற்கு... அவள் முகம்வாடி நிற்பதைப் பொறுக்கமுடியாமல்,
“கவலைப்படாதை பிரீ செல்லம்... சீக்கிரம் அவன்கிட்ட பேசிடுறேன்...” என ஆறுதல் கூறி அவள் முகம் மலர்ந்ததும் “சரி, ரொம்ப நேரம் இங்கனவே இருந்துட்டோம்... யாரும் பார்த்தால் வம்பாகிடும்... அப்புறம் பார்க்கலாம்” எனக்கூறி அவளது நெற்றியில் அவசர முத்தம் ஒன்றைப் பதித்துவிட்டு கண்களால் அவளிடமிருந்து விடைபெற்றான்...

*************************

அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதனால் அன்றே பத்மாவிற்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கினை செய்ய பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்... அதற்கான ஏற்பாடுகள் முதல் நாளே தொடங்கியிருந்ததனால் பெரும்பாலான வேலைகள் முடிந்து சிறு சிறு வேலைகள் மட்டுமே மீதமிருந்தன...

அதர்வா அவள் கழுத்தில் தாலி கட்டிய தினத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சித்ரவதையை அனுபவித்துக்கொண்டிருந்தாள் பத்மா... ஏற்கனவே பெரியவர்களின் நிம்மதிக்காக தாங்கள் சந்தோசமாக இருப்பதாகக் காட்டிவிட்டிருந்தாள்... எனவே தங்கள் அறைக்குள்ளும் சரி, அவள் தனியாக மாட்டும்போதும் சரி தேள் போல கொட்டிக்கொண்டிருந்தான் அதர்வா... அதிலும் சில நேரங்களில் அவனாகவே அவளை நெருங்கி முத்தமிட்டு விட்டு ஏதோ அவள் தான் அதுக்குக் காரணம் என்பதுபோல் வீண்பழியைச் சுமத்தி அவளின் கற்புக்கு களங்கம் விளைவிப்பான்...

அவனின் கோபம் அவ்வாறு வெளிப்பட்டதென்றால் சுமி ஒருபக்கம் தனது வெறுப்பை காட்டிக்கொண்டிருந்தாள்... அவளைத் தனியாகக் காணும்போது எல்லாம் ‘காத்திருந்தவ புருசன நேத்து வந்தவள் ஏமாத்திட்டு போய்ட்டா’ என்றும் ‘அனாதையா வந்தவளுக்குக் கிடைத்த வாழ்வைப் பாரேன்’ எனவும் சத்தமாய் பத்மாவின் காதில் விழுமாறு கூறிவிட்டு முகத்தை நொடித்துவிட்டு போவாள்... அந்த வார்த்தைகள் அவளின் உயிரை குடிக்க, ‘நான் ஒன்றும் அநாதை கிடையாது... நானும் இந்த வீட்டு பொண்ணு தான்’ என இந்த உலகத்துக்கு தெரியுமாறு கத்தி சொல்லவேண்டும் என தோன்றும்...

ஆனால் அதற்கான வாய்ப்பு தான் அவளுக்கு கிடைக்கவில்லையே... அப்படி கத்தி சொன்ன பின்னால் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எதையென்று சொல்லுவாள்... அதிலும் எதை வைத்து தான் இந்த வீட்டு பொண்ணு என்பதை நிரூபிப்பாள்... அதற்கான ஆதாரம் ஒன்று கூட அவளிடம் இல்லையே...

அதிலும் தான் திருடி என்பதை தெரிந்து வைத்திருக்கும் அதர்வா, அதை ஒரு வீதம் கூட நம்பாமல் சொத்துக்காக மட்டுமே அவள் இங்கு வந்ததாக குறை கூறுவான்... அதற்கு பிறகு அவள் வாய் திறப்பாளா என்ன???... எனவே தான் தினம் தினம் நடக்கும் இந்த மௌன போர்கள் கொடுக்கும் வலியை அவள் மனது தனக்குள்ளேயே புதைத்துக்கொள்ள வெளியில் சந்தோசம் போல காட்டிக்கொண்டாள்...

அவளின் அந்த மலர்ந்த முகம் தான் அவ்விருவருக்கும் வெறியை கிளப்பிக்கொண்டிருந்தது... தாங்கள் மட்டும் நிம்மதியை இழந்து பிடித்த வாழ்வை வாழமுடியாமல் வேதனையை அனுபவித்தபடி சுற்றிக்கொண்டிருக்க, இவள் மட்டும் எந்தவித வலியும் இல்லாமல் திரிந்துகொண்டிருப்பதைக் கண்டு எரிகிற தீயில் எண்ணை வார்ப்பதுபோல் இருக்க, அவளைக் கதறவைக்கும் நோக்கத்தோடு கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்துகொண்டிருந்தனர்...

இதையெல்லாம் கூட பொறுத்துக்கொண்டவளுக்கு இந்த ரஞ்சித்தை சமாளிப்பது பெரும்பாடாக இருந்தது... அண்ணன் மனைவி என்று பாராமல் துகிலுரித்த பார்வை பார்த்தபடி அவளையே சுற்றிக்கொண்டிருந்தான்... அதிலும் தன்னால் தான் இவ்வளவு தூரம் நடந்தது என்பதை உணராது விழிகளால் மேய்ந்தவனின் கண்களை சுட்டு பொசுக்கினால் என்ன??? என்ற வேகம் வரும்... ஆனால் இருக்கிற பிரைச்சனை போதாதென்று இதனையும் கிளற வேண்டுமா என மூளை எடுத்துரைத்ததில் மனதில் சூழ்ந்த அருவருப்புடன் நடமாடிக்கொண்டிருந்தாள் பதமா...

அன்றைய விழாவிற்காக அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு அகலக்கரை வைத்த பட்டுப்புடவை உடுத்தி, தலைவாரி கொண்டையிட்டு அதனை சுற்றி நெருக்கமாகக் கட்டிய மல்லிகை சரத்தை சூடிக்கொண்ட வைத்தீஸ்வரி, மேலதிக நகைகளுக்காக பிரத்தியேகமாக இருந்த லாக்கரை திறந்து நகை பெட்டியை எடுத்தவரின் கண்கள், நகைகளோடு இருந்த ஒரு புகைப்படத்திடம் சென்றது...

எப்பொழுதும் போல் அந்த புகைப்படம் அவர் மனதை என்னவோ செய்ய, அதனைக் கையில் எடுத்துக்கொண்டு கட்டிலில் சென்று அமர்ந்தவரின் மனம் கடந்த காலத்தை நோக்கி சென்றது...

**************

பல வருடங்களுக்கு முன்பு.....

தன்னே நானே தானே நானே
யம்மா தன்னே நன்னே நானே நன்னே (2)
தானே நானே தன்னே நானே
யம்மா தான்னே நன்னே தன்னே நன்னே
தான்னே நானே (2)

ஏ... சம்பா நாணத்து சாரக்காத்து
மச்சான் சல்லுன்னுதான் வீசுதுங்க
அங்கம் பூரா (2)
ஏ... பொண்ணு வாசம் பூவு வாசம்
செண்டு பூசிக்கலாம் கட்டிக்குங்க காலம் பூரா
என்னை பூசிக்கலாம் கட்டிக்குங்க காலம் பூரா...


அது திருச்சி மாவட்டத்திலுள்ள வயலூர் கிராமம்... எங்கும் பச்சை பசேல் எனும் வகையில் வயல்கள், பூந்தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள், பெரிய பெரிய மரங்கள், ஆறு குளம் என சூழ்ந்து அந்த கிராமமே பூலோகமாக காட்சி தந்துகொண்டிருந்தது...

அங்கு குடியிருந்த பல குடும்பங்கள் அன்றாடம் கடுமையாக வேலை செய்யும் வர்க்கத்தினர்... அவர்களுக்கு மேலும் சிலர் அளவான பணம் படைத்தவர்களாக இருந்தனர்... இவர்கள் எல்லாரையும் விட பரம்பரை பணக்காரர்களாக திகழ்ந்தது என்னவோ அந்த ஊரின் பண்ணையார் குடும்பம் மட்டுமே...

சொத்திலும் சரி, அடுத்தவர்களுக்கு உதவும் குணத்திலும் சரி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர்கள் பணக்காரர் என்பதை அடிக்கடி நிரூபிக்கும் அவர்களின் ஆணிவேர் அந்த குடும்பத்தின் மூத்த தலைமுறையான செல்லக்கண்ணுவே...

இந்த எழுபது வயதிலும் நல்ல திடகாத்திரமான தேகம், அடர்ந்து வளர்ந்த முறுக்கிய பெரிய மீசை, வெள்ளை வேட்டி, சட்டை என கம்பீரமாக திரியும் அவரின் தோற்றத்திற்கு அந்த கிராமத்தில் இருக்கும் அனைவரும் அடிமை...

அந்த பெரிய மீசைக்காரர் தங்கள் வயலின் ஒரு ஓரமாக கிளைகள் பல விட்டு அடர்ந்து வளர்ந்திருந்த வேம்பின் கீழ் போட்டிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்து பாடியபடி களை எடுத்து கொண்டிருந்த பெண்களை மேற்பார்வை பார்த்தவாறே அவர்களது பாடலை கேட்டு ரசித்துக்கொண்டிருந்தார்...

வேலை நன்றாக இருக்க வேண்டும் என்று கண்டிப்போடு இருப்பாரே தவிர, அவர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கு வகையில் பாட்டு பாடி வேலை செய்வதை அவர் என்றும் தடுத்ததில்லை... இப்பொழுது அவ்வாறே கண்காணிப்போடு இருந்தவரின் அருகில் வந்து கை கட்டியபடி நின்ற கணக்குப்பிள்ளை,

“ஐயா!” என அழைக்க,
“என்ன கணக்கு???” என கணக்குப்பிள்ளையை நோக்கிய செல்லக்கண்ணுவின் கண்களில் கோபம் மின்னியது...

“உனக்கு எத்தனை தடவை சொல்லுறது... என் முன்னாடி கை கட்டி நிக்காதேன்னு... முதல்ல கையை இறக்கு கணக்கு!” இது தான் செல்லக்கண்ணு... தன்கீழ் வேலை பார்க்கும் கணக்குபிள்ளை முதல் கடைநிலை வேலையாள் வரை உள்ளவர்களை அவர் என்றுமே தன் முன்பு கைகட்ட விட்டதில்லை... அவர்களும் தங்களை போன்ற மனிதர்கள் தானே... இதில் என்ன ஏற்றத்தாழ்வு என்ற எண்ணம்... அதுமட்டும் அல்லாமல் மரியாதை மனதில் இருந்தால் போதும் என்ற பெரிய மனம் படைத்தவர்...

“சொல்ல வந்த விஷயத்தை சொல்லு கணக்கு!”

“லோட் எல்லாம் அனுப்பியாச்சுங்க ஐயா... அப்புறம் அந்த குளத்தடில இருக்கிற சின்னையன் பொண்ணு வயசுக்கு வந்துருச்சு ஐயா”

“ஓ... அப்படியா??? எப்பவும் போல அந்த பொண்ணுக்கு சீர் செய்திடலாம்... சாயங்காலம் வீட்டுக்கு போனதும் நினைவுபடுத்து! பெரிய மருமக கிட்ட சொல்லணும்” எனவும் தலையாட்டி கேட்டுக்கொண்டிருந்த கணக்குப்பிள்ளை தன்னிடத்தில் எதையோ சொல்ல தயங்குவது புரிய,

“என்ன கணக்கு... எதையோ சொல்ல வந்து தயங்குற மாதிரி இருக்கு... சும்மா சொல்லுயா” என ஊக்கப்படுத்த,

“அது வந்து... நம்ம சின்னையா அந்த பற்றை காட்டு பக்கம் ஒரு பொண்ணு கூட போனதை பார்த்தேன் ஐயா” என தலை குனிந்தபடி கூற, கேட்டிருந்த செல்லக்கண்ணுவின் முகத்தினில் கருமேகங்கள் சூழ்ந்துகொண்டன...

இது எப்பொழுதும் நடப்பது என்பதனால் மகன் மேல் எழுந்த கோபத்தையும் வருத்தத்தையும் மனதுக்குள் போட்டு புதைத்துக்கொண்டு,

“மதிய சாப்பாட்டை இங்கனவே கொண்டுவர சொல்லு கணக்கு... அப்புறம் உங்க சின்னையா விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும்... இப்போ எனக்கு இளநீர் கொண்டுவா!” எனப் பணிக்க, பெரியவரின் கூற்றை ஏற்று வயலோடு ஒட்டியிருந்த தென்னந்தோப்பினுள் நுழைந்த கணக்குப்பிள்ளையின் மனதில் ‘எப்படிப்பட்ட உத்தமருக்கு இப்படி ஒரு பிள்ளை ச்சை’ என்பதே ஓடிக்கொண்டிருந்தது...

கணக்குப்பிள்ளை அவ்வாறு எண்ணுவதிலும் காரணம் இருக்கிறது... அந்த ஊரில் எல்லோர் வாயிலும் விழுந்து அரைபடும் ஒரே ஆள், செல்லக்கண்ணுவின் இரண்டாவது புதல்வன் ராஜேந்திரன் தான்...

வீட்டில் நல்ல குணவதியான மனைவி இருந்தாலும் பெண் சுகத்துக்காக அலையும் ஒரு ஈனப்பிறவி... செல்லக்கண்ணுவின் சொத்துக்கள் பலவற்றை அழித்த பெருமை இவனையே சேரும்... எல்லா கெட்ட பழக்கங்களும் கொண்ட அவனால் தான் செல்லக்கண்ணுவின் நிம்மதி நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருந்தது...

இத்தனைக்கும் அவரின் மூத்தமகன் மாதேஸ்வரன், தந்தைக்கு பெருமை சேர்க்கும் சீமந்த புத்திரன்... எந்த கெட்ட பழக்கமும் இல்லாத அவர் பெண்கள் விஷயத்தில் ராமனாக இருந்தார்... அதிலும் சொத்துக்களை பெருக்கும் நல்ல மூளைக்காரராகவும் இருந்தார்... அதனால் தானோ என்னவோ தமையனின் மீது மனதளவில் பொறாமையை வளர்த்து வைத்திருந்தார் ராஜேந்திரன்...

இவர்களுடன் பிறந்த பெண் சகோதரியான வைத்தீஸ்வரிக்கு தங்கள் தூரத்து சொந்தத்தில் ராமமூர்த்தியை வீட்டோடு மாப்பிள்ளையாக கொண்டுவந்திருந்தனர்...

மூத்தவருக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாய் இரு குழந்தைகள்... முறையே ராஜேந்திரனுக்கு ஒரு பையனும் வைத்தீஸ்வரிக்கு ஒரு பெண்ணும் சில வருட வயது வித்தியாசத்தில் பிறந்திருந்தனர்...

மாதேஸ்வரனின் மகனான அதர்வா தந்தை போல் குனவானாக இருக்க, ராஜேந்திரனின் மகன் ரஞ்சித்தோ சின்ன வயதிலேயே கெட்ட பழக்கங்களை பழகலானான்... இதனாலேயே வைதீஸ்வரியின் பெண்ணான ஆர்னா, அதர்வாவுடனும் அவனது சகோதரியான பிரியாவுடனும் விளையாடுவாளே தவிர, ரஞ்சித்தின் பக்கத்தில் நெருங்கக்கூட மாட்டார்கள்...

அதில் எப்பொழுதும் கோபம் கொண்டு அதர்வாவுடன் சண்டை போடுவான் ரஞ்சித்... சில வேளைகளில் பொறுத்து போகும் அதர்வாவும் பல சமயம் விளாசித்தள்ளிவிடுவான்... அதன் பின்பு சில நாள் அடங்கி இருப்பவன், மீண்டும் ‘பழைய குருடி கதவை திறவடி’ என ஆரம்பித்துவிடுவான்...

ரஞ்சித்தின் செயலால் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவருக்கும் இந்த சின்ன வயதில் கெட்ட பழக்கங்கள் பழகுகிறான் என்ற கவலை தான்... ஆனால் அதற்கு நேர்மாறாக ராஜேந்திரன், தன்னை போல் தன் மகன் இருக்கிறான் என பெருமைப்பட்டு அவனின் செயல்களை ஊக்கப்படுத்த, அதன் பின்பு கேட்கவும் வேண்டுமா???

மலையில் வீட்டிற்கு வந்த செல்லக்கண்ணுவின் காதில் ஆர்னாவின் அழுகை சத்தம் விழ, பதறியடித்து சத்தம் வந்த இடத்திற்கு சென்றவர், அங்கு ரஞ்சித் ஆர்னாவை அடிக்கும் காட்சியை கண்டு கோபம் கொண்டவராக அவர்களின் அருகில் சென்று ரஞ்சித்திடமிருந்து பேத்தியை விலக்கி நிறுத்தி அவளை சமாதானப்படுத்திவிட்டு அலட்சியமாக நின்றிருந்த அவன் பக்கம் திரும்பி,

“இனி இந்த மாதிரி பண்ணினன்னு தெரிஞ்சுது... தொலைச்சுக்கட்டிடுவேன்” என எச்சரிக்க, அவனோ அவருக்கும் மேலாக,

“யோவ் பெருசு, என் விஷயத்தில நீ தலையிடாதை” என விரல் நீட்டி எச்சரித்துவிட்டு செல்ல, செல்லக்கண்ணுவோ அவனின் உதாசீனத்தில் சிலையாய் சமைந்து நின்றுவிட்டார்...

தேடல் தொடரும்...
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபிஸ்,

அடுத்த அத்தியாயம் போட்டாச்சு... ஓடுங்க... ஓடுங்கள்...

ஸ்வராகினி...
 

swaragini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 12:



அன்று காலையில் இருந்தே வைத்தீஸ்வரியை படுத்தி எடுத்து கொண்டிருந்தாள் ஆர்னா..



இரண்டு மாதத்திற்கு பின் வரப்போகும் பிறந்தநாளைக்கு இன்றே புது டிரஸ் வேண்டும் என்று அவள் படுத்த, வைத்தீஸ்வரியும் எவ்வளவோ கூறி பார்த்தார் சில நாட்கள் சென்று போகலாம் என்று..



எங்கே குழந்தை கேட்டாள் அல்லவா..



ஏனோ அவளுக்கு அன்று டிரஸ் ஆசை வர படுத்தி எடுத்துவிட்டாள்..



அவள் அடம் தாங்காமல் ராமமூர்த்தியிடம் கூறி கிளம்ப சொன்னார் வைத்தீஸ்வரி..



அவர் சமத்தித்ததும் குதூகலித்த சின்னவள் "அம்மா போலாம் போலாம்.." என்று குதித்து கொண்டே கிளம்பினாள்..



முழுவதும் கிளம்பி முடித்த ஆர்னா அறையில் இருந்து வெளியே வருவதற்கு முன் ஏதோ நினைவு வந்தவளாய் அன்னை கையை பிராண்டினாள்..



"என்ன குட்டி..?" என்று மகளின் உயரத்திற்கு குனிந்து வைத்தீஸ்வரி கேட்க



"மாமா.. ஆது மாமா.." என்றது தன் மாமனின் நினைவில் அந்த சின்ன சிட்டு..



அவன் இல்லாமல் அவள் கிளம்பிவிட்டாள் தானே அதிசயம்..



அதை நினைத்து சிரித்துக்கொண்டு ராமமூர்த்தியும் "உன் மாமன் இல்லாமல் நீ வந்துவிடுவாயா என்ன.. அவனையும் தான் கிளம்பி சொல்லி இருக்கேன் வா.." என்று சிரித்துக்கொண்டே மகளை கைகளில் தூக்கி கொண்டார்..



ராஜாத்தியும் அதர்வா பிரியா இருவரையும் கிளப்பி தயாராக அழைத்து வர, மூன்று குழந்தைகளையும் அழைத்து கொண்டு டவுன்னுக்கு சென்றனர் வைத்தீஸ்வரி தம்பதியினர்..



திருச்சியில் இருந்த பிரபல துணி கடைக்குள் அவர்கள் செல்ல அவர்கள் குடும்பத்தை அங்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவர்களுக்கென்று பிரத்யேக வரவேற்பு கிடைத்தது..



நேராக குழந்தைகளுக்கு துணி எடுக்கும் பிரிவிற்கு சென்றவர்கள் அங்கிருந்த நாற்காலியில் அமர, ராமமூர்த்தி கைகளில் இருந்த ஆர்னா இறங்கி துணி எடுத்து போடும் மேசையிலேயே அமர்ந்து கொண்டாள்..



"குட்டி கீழே இறங்கு டா.." என்று வைத்தீஸ்வரி மென்குரலில் கடிய



"பாப்பா உட்காரட்டுடம் தாயி.. நீங்க துணி பாருங்க.." என்றுவிட்டார் கடைக்காரர்



"பாப்பாக்கு என்ன கலர் பாவாடை சட்ட வேண்டும்..?"



அன்புடன் கடைக்காரர் ஆர்னாவிடம் குனிந்து கேட்க அவளோ பதிலுக்க்கு தன் மாமன் முகத்தை பார்த்தாள்.



அவள் பார்வையில் ஏதோ பெரிய மனிதன் போல் சிரித்தவன் "பாப்பாக்கு பிங்க் காட்டுங்க மாமா.." என்றான் கடைக்காரரிடம்..



அவன் கேட்ட நிறத்தில் விதம் விதமாக ஜரிகையிட்ட பட்டு பாவாடை கடைக்காரர் எடுத்து போட அதில் ஒன்று வைத்தீஸ்வரியை மிகவும் கவர்ந்தது..



அதை எடுத்து மகளிடம் காட்டி "இது அழகா இருக்கு குட்டி.." என்று அவர் கூற, அவளோ



"எனக்கு மாமா தான் எதுக்கணும்.." என்றாள் தன் மழலை மாறாத குரலில்..



அதற்கும் அதர்வாவிடம் இருந்து சிறிய புன்னகையே..



அத்தை மகள் ஆசைப்படி ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தவன் ஆர்னாவிற்கு மிகவும் பொருத்தமான அழகிய பாவாடை சட்டையை தேர்ந்தெடுத்தான்..



அவளுக்கு பிடித்த பிங்க் நிறத்தில் சட்டையில் முழுவதும் தங்க நிற ஜரிகை செய்யப்பட்டிருக்க, மஞ்சள் நிற பாவாடையில் கீழே பெரிய தங்க நிற பார்டர்ருடன் அத்தனை அழகாக இருந்தது அந்த பாவாடை சட்டை..



அதை எடுத்து ஆர்னாவிடம் காட்டியவன் "இது பிடிச்சிருக்கா அம்முலு.." என்று மென்மையாக கேட்க, வேகமாக மண்டையை உருட்டினாள் சிறியவள்..



அதில் தானும் மகிழ்ந்தவன் அந்த உடையை ராமமூர்த்தியிடம் கொடுத்துவிட்டான்..



ப்ரியாக்கு உடை எடுக்க போகும் போது தனக்கும் அண்ணன் தான் எடுக்க வேண்டும் என்று அவள் அடம் பிடிக்க, "நானே எடுக்கறேன் பிரியா குட்டி.." என்று அவளிடம் கூறியவன் அவளுக்கும் அழகிய உடை தேர்ந்தெடுத்து கொடுத்தான்..



பின் அவனுக்கு புது உடை எடுத்துக்கொண்டு அனைவரும் கிளம்பினர்..



தான் ஆசைப்பட்டது போலவே புது துணி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் ஆர்னா சந்தோசமாக ஆடி கொண்டே முன்னால் ஓட, அவள் பின்னாலயே வந்தான் அதர்வா..



"ஹே மெதுவா போ டி.." என்று கத்திகொண்டே வைத்தீஸ்வரி பின்னால் வர, ராமமூர்த்தி ப்ரியாவை தூக்கி இருந்ததால் அவரும் மெதுவாகவே வந்தார்..



வைத்தீஸ்வரி கத்தியதில் ஆர்னா திரும்பி அன்னையை பார்த்து பழிப்பு காட்டிவிட்டு இன்னும் வேகமாக ஓட, வாசலில் இருந்த படி அவள் கால்களை இடறி விட்டது..



அதில் "அம்மா.."என்று கத்திகொண்டே அவள் விழப்போக நொடி பொழுதில் அவள் தடுமாறியதை கவனித்துவிட்ட அதர்வா ஒரே ஏட்டில் அவளை தாங்கி பிடித்தான்..



சிறுவானாலும் ஆர்னாவின் கனத்தை தாங்க முடியாமல் போக இருவரும் கீழே விழுந்தனர்..



இரு படி தாண்டி ரோட்டில் குழந்தைகள் இருவரும் விழ அதர்வாவோ ஆர்னாவிற்கு சிறு அடி கூட படாதவாறு தன்னால் முடிந்தவரை அவளை தன் மீது தாங்கி இருந்தான்..



அவனுக்கு தான் கீழே விழுந்ததில் ஆங்காங்கே சிறு சிராய்ப்பு ஏற்பட்டது.. பூக்குவியல் போல் அவள் மேல் இருந்த ஆர்னாவிற்கு ஒரு அடியும் படவில்லை..



குழந்தைகள் விழுந்ததும் வேகமாக அவர்களிடம் ஓடி வந்த வைத்தீஸ்வரி "அச்சோ.." என்று பதறிக்கொண்டு இருவரையும் தூக்கியவர்



"உன்னை மெதுவாக போக சொன்னேன்ல டி.." என்று ஆர்னாவை கடிந்தார்..



அதற்குள் பிரியாவை தூக்கி கொண்டு வந்த ராமமூர்த்தியும் அதர்வாவை ஆராயா, அவன் கைகளில் இருந்து சிறு சிராய்ப்புகளை பார்த்து பதறியவர் "அசோ வலிக்குதா.." என்று அவனை முழுவதுமாக ஆராய ஆரம்பித்தார்..



பெரிதாக ஒன்றும் அடிபடாததால் அவர் நிம்மதியாக "இல்லை மாமா.." என்று அவரிடம் கூறியவன், ஆர்னாவை தான் ஆராய்ந்து கொண்டிருந்தான்..



அவளை தலை முதல் கால் வரை நன்றாக பார்த்தவன், "உனக்கு ஒன்னும் அடிபடலையே அம்முலு.." என்று கேட்க



"இல்லையே.." என்று அழகாய் கைகளை விரித்தாள் ஆர்னா..



"ஆமாம் அவன் தான் உன்னை பிடித்துவிட்டானே.. பாவம் குழந்தைக்கு தான் காயம் எல்லாம்.. உன்னால் தான் டி.." அதர்வாவை அனைத்து கொண்டே வைத்தீஸ்வரி மகளை கடிந்துகொள்ள



"அம்முலுவை ஒன்னும் சொல்லாதீங்க அத்தை.." என்று அத்தை மகளுக்கு வக்காலத்து வாங்கினான் அதர்வா..



அவர்கள் அன்பில் பெரியவர்கள் மனமும் நிறைந்து விட்டது..



அதர்வாவின் காயத்திற்க்கு மருந்து வாங்கி தடவி விட்டுட்டு வந்து சேர்ந்தனர் அனைவரும்..



****************



அன்று எப்போதும் போல் வயல் அருகில் அமர்ந்து மேல் பார்வை பார்த்து கொண்டிருந்த செல்லக்கண்ணுக்கு திடீரென்று வியர்க்க ஆரம்பித்தது..



அதிகப்படி வெயிலால் இருக்கும் என்று நினைத்து அவர் வியர்வையை துடைத்து கொண்டே அமர, கொஞ்சம் கொஞ்சமாக வியர்வை அதிகரித்தது மட்டும் இல்லாமல் இட புற மார்பும் வலிக்க தொடங்கியது..



மெதுவாக தான் தனக்கு வலிக்கிறது என்பதையே உணர்ந்தவர், திடீரென்று அதிகரித்த வலி தாங்கமால் "கணக்கு.." என்று சத்தமாக கத்த



கொஞ்ச தள்ளி அமர்ந்து நோட்டு புத்தகத்தில் எழுதி கொண்டிருந்தவர் செல்லக்கண்ணின் சத்தத்தில் வேகமாக எழுந்து வந்தார்..



"ஐயா என்ன பண்ணுது ஐயா.." என்று பயந்து கொண்டே கணக்கு பக்கத்தில் வர அதற்குள் மயங்கி சரிந்திருந்தார் செல்லக்கண்ணு..



கணக்குப்பிள்ளையின் சத்தத்தில் அங்கிருந்த அனைவரும் அந்த இடத்திற்கு ஓடி வந்துவிட, அனைவருமே பதறி உடனடியாக அவரை தூக்கி கொண்டு போய் மருத்துவமனையில் சேர்ந்தனர்..



இதற்கிடையில் வீட்டிற்கும் தகவல் தெரிவிக்க பட அனைவருமே மருத்துவமனையில் கூடி விட்டனர்..



செல்லக்கண்ணின் மொத்த குடும்பமும் மட்டும் இல்லாமல் பாதி ஊரே மருத்துவமனை வளாகத்தில் தான் இருந்தது..



மாதேஸ்வரன் அனைவரையும் கிளம்ப சொல்ல மக்களோ, "ஐயாக்கு என்னனு தெரியாம நகர மாட்டோம்.." என்று ஒரு மனதாக கூறிவிட்டனர்..



அனைவரும் பதைபதைக்க நின்றிருக்க உள்ளுக்குள் செல்லக்கண்ணை பரிசோதித்த மருத்துவர் வெளியில் வந்து, "பயப்பட ஒன்னும் இல்லை.. மைல்டு அட்டாக் தான்.. அவர் அதிகம் டென்ஷன் ஆகமா பாத்துக்கோங்க.." என்றுவிட்டு சென்றார்..



அதற்கு பின் தான் அங்கு இருந்த அணைவருமே நிம்மதியாக மூச்சு விட்டனர்..



செல்லக்கண்ணுக்கு பயபடும்படி ஒன்றும் இல்லை என்றதும் ஊர் மக்கள் களைந்து சென்றுவிட, செல்லக்கண்ணு கண் விழித்ததும் அவரை அனைவரும் உள்ளே வந்து பார்த்தனர்..



பெண்கள் கண்கள் கலங்கி நின்றுகொண்டிருக்க ராஜாத்தியை பக்கத்தில் அழைத்தவர், "நீயே அழுதா எப்படி மா.. நான் இல்லைனாலும் இந்த குடும்பத்தின் மூத்த மருமகளா நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும் ராஜாத்தி.." என்று மென்குரலில் மெதுவாக அவர் கூற



"அப்படி எல்லாம் தயவு செஞ்சு பேசாதீங்க மாமா.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது ஐயா..: பதட்டத்துடனும் அழுகையுடனும் ராஜாத்தி பேச



"நான் சாகா வர வாங்கி வரவில்லையா தாயி.." என்று கூறி மென்மையாக சிரித்தார் செல்லக்கண்ணு..



மேலும் சிறிது நேரம் அனைவருடனும் பேசியவர் அப்படியே கண் அயர்ந்து விட, "நானும் ராஜேந்திரனும் இருந்து பாத்துக்கறோம்.. மத்தவங்க எல்லாம் வீட்டுக்கு போங்க.." என்று கட்டளையாக முடித்துவிட்டார் மாதேஸ்வரன்..



இங்கு இருந்தால் அனைவரும் அழுது கொண்டு தான் இருப்பார்கள் என்று அவருக்கு நன்றாகாவே தெரியும்..



மேலும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு செல்லக்கண்ணு வீட்டிற்கு கிளம்புவதாக இருக்க கிளம்பும்முன் மருத்துவரை தனியாக சந்தித்தார் செல்லக்கண்ணு..



அனைவர் முன்பும் கேட்கவேண்டாம் என்று தனியாக அவர் மருத்துவரை சந்தித்தது தன் உடல் நிலை பற்றி முழுவதும் கூறுமாறு கேட்க பெரியவர் பேச்சை தட்ட முடியாமல் அவரும் உண்மையை கூறினார்..



"உங்க உடல் நிலை கொஞ்சம் சரி இல்லாமல் தான் இருக்கு ஐயா.. நீங்க இனி அதிகம் எதுக்காகவும் கவலை பட கூடாது.. கொஞ்சம் பாத்து கவனமா இருங்க ஐயா..." தயக்கத்துடன் மருத்துவர் கூறும் போதே தன் ஆயுள் காலம் முடிவடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று செல்லக்கண்ணுக்கு புரிந்து போயிற்று..



மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த செல்லக்கண்ணுவின் மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லாமல் தவித்து கொண்டே இருந்தது..



அவர் பயம் முழுவதும் தறிகெட்டு தெரியும் தனது இரண்டாம் மகனை நினைத்து தான்..



அவன் எப்போது உருப்பட போகிறானோ என்ற கவலையே அவர் உடல் நிலையை பாதித்து கொண்டிருந்தது..



அன்று மாலை சாய்வு நாற்காலியில் ஹாலில் அமர்ந்திருந்தவர் கண்கள் அங்கு சுற்றி சுற்றி விளையாண்டு கொண்டிருந்த தன் பேரப்பிள்ளைகள் மேல் தான் நிலைத்திருந்தது..



அதிலும் அதர்வா பார்த்து பார்த்து அத்தை மகளை பார்த்து கொள்வதை பார்த்து மனம் நெகிழ்ந்து அமர்ந்திருந்தார் செல்லக்கண்ணு..



"மாமா காஞ்சி குடிங்க.." என்ற ராஜாத்தியின் குரலில் திரும்பியவர் மெல்லிய புன்னகையுடன் மருமகளிடம் இருந்து கஞ்சியை வாங்கி கொண்டார்..



அவர் பார்வை வாஞ்சையுடன் பிள்ளைகளை தொடர்வதை பார்த்த ராஜாத்தி, "என்ன மாமா அப்படி பாத்துட்டு இருக்கீங்க.." என்று கேட்க



"என்ன அழகா விளையாடுதுங்க பாரு மா.. அதிலும் இந்த அதர்வா பய ஆர்னவ எப்படி பாத்துக்கறான் பாரேன்.. நாம யாரும் இல்லாட்டி கூட அவன் அவளை நல்லா பார்த்துப்பான் மா.."



எந்த நேரத்தில் அவர் கூறினாரோ, அதர்வாவால் கூட அவளை காக்க முடியாமல் போகும் என்று பெரிய மனிதர் அந்த நேரம் அறியவில்லையோ...



தொடர்ந்து ஏனோ மன உளைச்சல் இருந்துகொண்டே இருந்ததால் வீட்டில் இருந்த அனைவர் ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு யாருக்கும் சொல்லாமல் தங்கள் குடும்ப ஜோசியரை பார்க்க ஒரு நாள் சென்றார் செல்லக்கண்ணு..



தெய்விக மனம் கமல இருந்த இடத்தில் நுழைந்ததுமே அவர் மனதில் நிம்மதி வந்து ஒட்டிக்கொண்டது..



அவர் குடும்ப ஜோசியரும் கிட்டத்தட்ட செல்லக்கண்ணு வயதை ஒத்தவரே என்பதால் "வா செல்லக்கண்ணு.. எப்படி இருக்க...?" என்று நட்புடன் வரவேற்றார்.



"நல்லா இருக்கேன் ரத்னம்.." என்று பதில் கூறிய செல்லக்கண்ணு அவர் எதிரில் சோர்வுடன் அமர, அவர் நடையில் இருந்த சோர்வு ஜோசியர் கண்களில் இருந்தும் தப்பவில்லை..



"என்ன பா ஏதாவது பிரெச்சனையா..." என்று ஜோசியர் மென்மையாக கேட்க, ஒரு பெருமூச்செடுத்து தன்னை நிலை படுத்தி கொண்டவர் தன் உடல் நிலை பற்றி மருத்துவர் கூறியதை அவரிடம் கூறினார்..



"எனக்கு என்னவோ பயமாவே இருக்கு ரத்னம்.. எனக்கு பிறகு குடும்பம் நன்றாக இருக்குமா என்று ஏதோ படபடபப்பு.. எல்லார் ஜாதகமும் கொண்டு வந்திருக்கேன் பா கொஞ்சம் பார்த்து சொல்லேன்.." என்று அவர் ஜாதகத்தை நீட்ட,



அவர் கூறிய செய்தியை முயன்று ஜீரணித்து கொண்டார் ரத்னம்.. ஜனனமும் மரணமும் வாழ்வின் அங்கம் என்பதை நன்கு உணர்தவர் சில நொடிகளில் தன்னை நிலை படுத்தி கொண்டு செல்லக்கண்ணு கொடுத்த ஜாதகத்தை வாங்கி பார்த்தார்..



கிட்டத்தட்ட இருபது நிமிடம் எடுத்துக்கொண்டு அனைத்தையும் ஆராய்ந்து முடிந்தவர், செலக்கண்ணை நிமிர்ந்து பார்த்து அவர் கேள்விக்கான பதிலை கூற அதை கேட்டு அதிர்ந்து விழித்தார் செல்லக்கண்ணு..



"அப்படி எப்படி ரத்னம் பண்ண முடியும்.. அது தவறாக போய் விடாதா.." என்று அவர் தடுமாற்றத்துடன் கேட்க



"வேறு வழி இல்லை.. உங்கள் குடும்ப சொத்துக்கள் செழிப்புடன் அப்படியே இருக்க வேண்டும் என்றால் இது மட்டும் தான் வழி.." உறுதியுடன் ஒலித்த ரத்னத்தின் குரலில் அவர் கூறும் விஷயத்தின் தீவிரம் செல்லக்கண்ணுக்கு புரிந்தது..



தன் குடும்பத்தின் மீது உள்ள நம்பிக்கையில் ரத்னம் சொன்னதை செய்யும் முடிவை எடுத்து விட்டார் செல்லக்கண்ணு..



அடுத்த நாளே தனது குடும்ப வக்கீலை சென்று பார்த்தவர் அவரிடம் தான் கூறுவது போல் உயில் எழுத சொல்ல, அவர் கூறியதை கேட்டு வக்கீலும் ஒரு நொடி அதிர்ந்து தான் விட்டார்..



"ஐயா ஏன் யா இப்படி.." என்று அவர் தயக்கத்துடன் கேட்க



"வேறு வழி யா.." என்றவர் ஜோசியர் கூறிய விஷயத்தையும் சேர்த்து கூற, அவர் கூறியது போலவே உயில் தயாரித்தார் வக்கீல்..



செல்லக்கண்ணு அணைத்து விஷயங்களையும் முடித்து ஒரு வாரம் ஓடி இருக்கும்..



தனது மனதில் இருந்த எல்லா குழப்பங்களும் நீங்கி விட்டதாலோ என்னவோ அவர் நிம்மதியாக இருந்தார்..



இல்லை ஒருவேளை அது அனைய போகும் விளக்கின் ப்ரகாசமோ..



அப்படி தான் இருக்க வேண்டும்.. ஏன்னென்றால் ஒருநாள் இரவு அனைவருடனும் சிரிக்க சிரிக்க பேசிவிட்டு படுத்தவர் மறுநாள் காலை எழவில்லை..



விடியற் காலையில் எப்போதும் எழுந்து விடும் மாமனார் இன்னும் வராமல் இருந்ததால் அவரை எழுப்ப சென்ற ராஜாத்தி தான் அவரது உயிரற்ற உடலை முதலில் பார்த்தது..



"மாமா.. மாமா.."



எத்தனை முறை அழைத்தும் செல்லக்கண்ணு கண்திறக்காமல் போக ஒருவாறு அவர் உடலில் இருந்து உயிர் பறவை பிரிந்துவிட்டது என்று உணர்ந்து கொண்ட ராஜாத்தி "ஐயோ மாமா.." என்று கத்திய கத்தில் ஒரு நொடி அந்த வீடே அதிர்ந்தது..



அவரது குரல் கேட்டு பதட்டத்துடன் அங்கு வந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெரியவரை நினைத்து கண்ணீர் வடித்தனர்..



எத்தனை உயர்வாக வாழ்ந்த மனிதர்.. வாழும் காலம் வரை யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காமல் தன்னால் முடிந்தவரை அனைவரையும் அரவணைத்து போனவர் அல்லவா..



அவர் இழப்பு அந்த குடும்பத்தையே ஒரு ஆட்டு ஆட்டி விட்டது..



இறுதி சடங்கு செய்வதற்கு முன் ஊர் மக்கள் பார்ப்பதற்காக அவர் உடலை நடு வீட்டில் வைத்திருக்க அவரை சுற்றி அந்த வீட்டின் அணைத்து பெண்களும் அவர் இழப்பை தாங்க முடியாமல் அழுது கரைந்தனர்..



பிரியா, ஆர்னா, அதர்வா, ரஞ்சித் அனைவரையும் தனியாக மேல் அறையில் வைத்து சொந்தக்காரர்கள் பாத்துக்கொள்ள, அதர்வா மட்டும் எப்படியோ கீழே வந்துவிட்டான்..



அவனுக்கோ அனைத்தும் புரிந்தும் புரியாத ரெண்டுக்கட்டான் வயசு..



தாத்தாவை நடுவீட்டில் படுக்க வைத்திருப்பதை பார்த்தவன் அவர் அருகில் வந்து "தாத்தா.. தாத்தா.. எழுந்துகொ தாத்தா.. ஏன் இங்க படுத்திருக்க..? வா ரூம்க்கு போலாம்.." என்று அவரை உலுக்க, அவன் செயலில் அங்கிருந்த அனைவருக்குமே அழுகையை கட்டுப்படுத்துவது பெரும்பாடக இருந்தது..



அவனை எழுந்து ஓடிவந்து அணைத்து கொண்ட ராஜாத்தி "ராசா உள்ள போயா.." என்று அழுது கொண்டே கூற



"அம்மா தாத்தா எழுந்துக்க சொல்லுங்க.. ஏன் எழுந்துக்க மாட்டேங்கறார்.." என்று கண்களில் கரைகட்டிவிட்ட கண்ணீருடன் கேட்டான் சிறியவன்..



அவனுக்கு ஏதோ தவறாக இருக்கிறது என்று மட்டும் புரிந்தது..



அவன் கேள்வியில் அங்கிருந்த வயதானவர் ஒருவர் "ராசா தாத்தா இனிமே எழுந்துக்க மாட்டாங்க ராசா.. தாத்தாத சாமிகிட்ட போய்ட்டாங்க யா.." என்று கதறிக்கொண்டே கூற, அவன் கண்களில் வரவா வேண்டாமா என்று துருத்தி கொண்டிருந்த கண்ணீர் வேகமாக வெளியே வந்தது..



"அம்மா.." என்று அன்னையை அழுகையுடன் கட்டிக்கொண்டே அவர் முகத்தை அவன் பதிலுக்காக பார்க்க, அவரோ மகனிடம் எதுவும் கூற தைரியமயரமற்றவராய் "உள்ளே போ ராசா.." என்று அழுகையுடன் பிள்ளையை வேறுஒருவருடன் அனுப்பி வைத்தார்..



அதர்வாக்கு என்ன புரிந்ததோ அதற்கு பின் யாரையும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக சென்றுவிட்டான்..



அதற்கு பின் மற்ற குழந்தைகளையும் கீழே செல்லாமல் அவனே பார்த்து கொண்டான்..



செல்லக்கண்ணு இறந்து ஒரு மாதம் ஓடி இருந்தது..



அணைத்து காரியங்களும் முடிந்திருந்தாலும் வீட்டில் அவர் இல்லாத துக்கம் இன்னும் அப்படியே தான் இருந்தது..



அனைவரும் ஏதோ சாப்பிட்டோம் தூங்கினோம் என்று பேர் பண்ணி கொண்டிருந்தார்கள் ஒழிய அவர் இழப்பில் இருந்து யாராலும் அத்தனை சுலபத்தில் மீள முடியவில்லை..



அன்று தான் அவர்கள் குடும்ப வக்கீல் காலையில் அனைவரும் இருக்கும் நேரம் பார்த்து அவார்கள் வீட்டிற்க்கு வந்தார்..



மாதேஸ்வரன் அவரை வரவேற்று அமரவைக்க அவரோ தான் கூற வந்த செய்தாயை சொல்ல அனைவரையும் அழைத்தார்..



அனைவரும் வந்ததும் மெல்லாமல் விழுங்காமல் திடீரென்று அவர் கூறிய செய்தியில் அங்கிருந்த அனைவருமே ஒரு நொடி எப்படி உணர்ந்தனர் என்று அத்தனை எளிதில் சொல்லிவிட முடியாது..



இதை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதால் அனைவரிடமும் முதலில் தோன்றியது அதிர்ச்சியே..!!



தேடல் தொடரும்...

ஹாய் பேபிஸ்...


ஸ்வராகினியின் அடுத்த அத்தியாயம் 12 போட்டாச்சு ஓடுங்கோ... உங்கள் கருத்துகளை கருத்து திரியில் பகிரவும்!


ஸ்வராகினி.
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 13:


செல்லக்கண்ணு வீட்டிற்கு வந்த வக்கீல் அனைவரையும் அழைத்து விட்டு மாதேஸ்வரனிடம் தான் பேசினார்..

"ஐயா நம்ம ஐயா சொத்து எல்லாம் நம்ம ஆர்னா பாப்பா பேர்ல தான் எழுதி வைத்திருக்கார்.." என்று கூறி உயில் பத்திரத்தை வக்கீல் மாதேஸ்வரனிடம் நீட்ட , முதலில் அனைவருமே ஒரு நொடி அதிர்ந்து தான் விட்டனர்..

ஆனால் அடுத்த நொடி யாரும் அதை எதிர்க்கவில்லை..

அனைவர் முகமும் சாதாரணமாக மாறி இருந்தது..

ஆர்னா அவர்கள் குழந்தை அல்வா.. அவள் பெயரில் இருந்தால் என்ன என்று நினைத்து பேசாமல் இருந்துவிட்டனர்..

அப்போது ராஜேந்திரன் தான் பேசினார்..

"வக்கீல் சார் சொத்து பாப்பா பேர்ல இருக்கறதை பத்தி ஒன்னும் இல்ல.. ஆனா அப்பா ஏன் அப்படி ஒரு முடிவெடுத்தார் என்று மட்டும் தெரிந்துகொள்ளலாமா.." என்று நயமாக கேட்க

அவரை பார்த்த வக்கீலும் செல்லக்கண்ணு தன்னிடம் கூறியதை அவரிடம் கூறினார்..

செல்லக்கண்ணு ஜோசியரை சென்று பார்த்த போது அவர் கூறிய முடிவு தான் இது..

அவரது பெண் வாரிசின் மூத்த மகளின் பெயரில் சொத்துக்கள் இருந்தால் மட்டுமே அது நிலைக்கும் என அவர் கூறியதால் செல்லக்கண்ணு இப்படி ஒரு முடிவெடுத்திருந்தார்..

அவர் கூறி முடித்ததும் அனைவருமே செல்லக்கண்ணுக்கு தனது முடிவு முன்பே தெரிந்திருக்கிறது என்று நினைத்து வருந்தினரே தவிர சொத்தை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை..

*******

அன்று ஆர்னா பிறந்தநாள்..

வீட்டில் அனைவரும் சோகத்துடன் இருந்தாலும் குழந்தையை வருத்தப்பட விட கூடாது என்று அனைவரும் தங்கள் சோகத்தை தங்களுக்குள் மறைத்து கொண்டு குழந்தையை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டனர்..

காலையில் சிற்றுண்டியுடன் ஆர்னாக்கு மிகவும் பிடித்த கேசரியும் செய்திருந்தனர்..

அனைவரும் உண்டு முடித்ததும் குழந்தைக்கு மாதேஸ்வரன் ஒரு தங்க செயின் போட்டு விட, அவளுக்கு புது டிரஸ்ஸும் அணிந்திருந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள் குழந்தை..

ஆர்னா, பிரியா, அதர்வா மூவரும் தோட்டத்தில் விளையாண்டு கொண்டிருக்க அவர்களை வைத்தீஸ்வரி தான் ஒரு ஓரத்தில் அமர்ந்து கண்காணித்து கொண்டிருந்தார்..

திடீரென்று ராமமூர்த்தி அழைக்கவும் அவர் உள்ளே சென்றுவிட, அதே நேரத்தில் அதர்வாவும் ஏதோ வேலையாக உள்ளே சென்றிருந்தான்..

சிறிது நேரத்தில் வைத்தீஸ்வரி அங்கு வந்த போது ஒரு இடத்தில ப்ரியா மட்டும் தான் விளையாண்டு கொண்டிருந்தாள்..

மற்ற குழந்தைகள் காணாமல் ப்ரியாவிடம் சென்ற வைத்தீஸ்வரி "குட்டி அண்ணாவையும் ஆர்னா பாப்பாவும் எங்க டா..??" என்று மெதுவாக கேட்க

"தெரியலையே.." என்று கைகளை விரித்தாள் சிறியவள்

அதில் மீண்டும் அந்த இடத்தை ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே வந்தவர், "அதர்வா கண்ணா.." என்று குரல் கொடுக்க வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தான் அதர்வா..

அவனை பார்த்ததும் அவனுடன் தான் மகளும் இருப்பாள் என்று நினைத்தவர், "என்ன கண்ணா பிரியா குட்டிய தனியா விட்டுவிட்டு இப்படி நீங்க ரெண்டு பெரும் உள்ள வந்துடீங்களே.."

சிறு கண்டிப்புடன் வைத்தீஸ்வரி கேட்க, "அம்மு குட்டி வெளியே தானே இருந்தா அத்தை.." என்றான் அதர்வா புரியாமல்

அதில் குழப்பமடைந்த வைத்தீஸ்வரி ப்ரியாவை அதர்வாவிடம் விட்டுவிட்டு வேகமாக வாசலுக்கு வந்தவர் அவள் விளையாண்ட இடம் முழுவதும் சுற்றி சுற்றி தேட எங்கேயுமே குழந்தையை காணவில்லை..

மனதிற்குள் ஏதோ இனம் புரியா பயம் தோன்ற வேகமாக வீட்டிற்குள் வந்தவர் அந்த வீடு முழுவதும் சுற்றி சுற்றி நான்கைந்து முறை தேடி பார்த்துவிட்டார்..

ஆர்னா மட்டும் அவர் கண்களில் தென்படவேயில்லை..

மனதில் இருந்த பயம் இப்போது முழுதாக அதிகரித்திருக்க "என்னங்க.. என்னங்க.." என்று கத்திகொண்டே கணவரை தேடி ஓடி வந்தார் வைத்தீஸ்வரி

தலை எல்லாம் களைந்து வியர்த்து வடிய வந்த நின்ற மனைவியை பார்த்து பதறிய ராமமூர்த்தி, "என்ன ஆச்சு மா.." என்று தானும் பதட்டத்துடன் கேட்க

"பாப்பா.. பாப்பா.. ஆர்னா பாப்பா கா.. காணோம்.. வீடு முழுக்க தேடிட்டேன்.
காணோமே.. " அழுது கொண்டே அவர் கூட, ராமமூர்த்திக்கு தூக்கி வாரி போட்டது

மனைவியின் பதட்டம் அவரும் வெகு நேரமாக தேடி கொண்டிருக்கிறார் என்று பறை சாற்றை தானும் வந்து மகளை தேடினார் ராமமூர்த்தி..

ஒருவாறு வீடு முழுவதும் குழந்தை காணும் என்று செய்தி பரவ அன்று முழுவதும் அவளை தேடி தேடி ஓய்ந்து போயினர் குடும்பத்தினர்..

ஒரு பக்கம் அதர்வா வேறு ஆர்னாவை காணவில்லை என்ற செய்தி அறிந்து அழுது கரைய, அவனை வேறு சமாதான படுத்தவேண்டிருந்தது..

அன்று இரவு வரை தேடியும் குழந்தை கிடைக்காமல் போக மறுநாள் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்து விட்டனர்..

என்ன அலைந்து, என்ன தேடி, என்ன பிரோயோஜனம் கடைசி வரை அவர்கள் வீட்டு இளவரசி கிடைக்கவே இல்லை..

வருடங்கள் தான் ஓடியதே தவிர, ஆர்னாவை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை..

கொஞ்சம் கொஞ்சம் காலம் ரணங்களை ஆற்றினாலும், வைத்தீஸ்வரி மனதில் அது என்றுமே ஆறாத வடுவாக தான் பதிந்து விட்டது...

சில வருடங்கள் சென்று சுமித்ரா பிறந்த போது கொஞ்சம் மாறினாலும்
வருடாவருடம் வரும் ஆர்னா பிறந்தநாள் அன்று யாருமே அவர் அருகில் செல்ல முடியாமல் போய் விடும்..

அனைத்தையும் நினைத்துக்கொண்டே அமர்ந்திருந்த வைத்தீஸ்வரிக்கு அந்த நொடி கூட அந்த துன்பத்தின் வலி முழுமையாக மனதை தாக்க தான் செய்தது..

இருந்தும் வெளியில் கேட்ட குரலில் தன்னை முயன்று கட்டுப்படுத்தி கொண்டவர் கண்களை அழுந்த துடைத்து கொண்டு எழுந்தார்..
அறைக்குள் இருந்து வெளியே வந்த வைத்தீஸ்வரியின் கண்கள் நடந்ததை பறை சாற்ற அனைவரும் அவர் சோகத்தில் மௌனமாக பங்கெடுத்து கொண்டனர். சுமித்ராவோ பத்மா மேல் இருந்த கோபத்தில் "ஆயத்தமாக மாட்டேன்" என்று அடம்பிடித்து கொண்டு அறைக்குள் இருக்க அவளை தேடி வந்த பிரியா " என்னடி இன்னும் ரெடி ஆகலையா??? " என்று கேட்டாள்.

உடனே சுமி " எனக்கு பிடிக்கல பிரியா.. நான் இருக்க வேண்டிய இடத்துல " என்று ஆரம்பித்தவள் மேலும் பேசமுடியாமல் தலையை குனிந்து அழ தொடங்க அவள் தலையை ஆறுதலாக வருடிய ப்ரியா " சுமி, சொல்றத கேளுடா.. நடந்தது நடந்து போச்சு.. நீ சின்ன பொண்ணுடா " என்று சமாதான படுத்த முயன்றாள்.

உடனே அவளை கட்டி அணைத்த சுமித்ரா " ரொம்ப கஷ்டமா இருக்கு " என்று சொல்ல அவள் முகத்தை நிமிர்த்தி இருபெருவிரல்களாலும் கண்ணீரை துடைத்து விட்டவள் " உன் அக்கா திரும்பி வந்தா அண்ணா கண்டிப்பா அவளை தான் கல்யாணம் பண்ணி இருப்பான்.. ஆர்னா மேல அண்ணாக்கு அவ்வளவு விருப்பம் ..அது உனக்கு தெரியும் தானே.. அப்போவும் நீ இப்படி தான் அழுவியா?? " என்று கேட்க " அதுக்காக இவ என்னோட அக்கா ஆகிட முடியுமா ?? " என்று மறு கேள்வி கேட்டாள்.

" ஓகே, அக்காவா நினைக்க தேவல.. ஆனா இப்படி எதிரியா நினைச்சுக்க வேணாம்.. நீ சின்ன பொண்ணுடி ..அண்ணாவை விட சூப்பரா ஒருத்தன கல்யாணம் பண்ணிப்ப" என்று பிரியா சொல்ல " அத்தானை விட யாருமே சூப்பர் இல்ல " என்றால் உதட்டை சுளித்து கொண்டாள்..அதற்கு மெலிதாக சிரித்த பிரியா " சரி ரெடி ஆகிட்டு வா... உன் ராஜகுமாரன் இந்த பங்க்ஷனுக்கு வந்திருக்கலாம்.. நீ வராம இருந்து அப்புறம் அவனை மிஸ் பண்ண போற " என்றாள்.

அவள் மனசை கரைக்கும் முறை ப்ரியாவுக்கு தெரியாதா என்ன??? உடனே சுமி " அப்படியா சொல்ற?? " என்று சிணுங்கியபடி எழுந்தவள் அரை மனதாக ஆயத்தமாக தொடங்கினாள்.

அவளை சமாதானப்படுத்திய திருப்தியில் " அப்பாடா " என்று பெருமூச்சோடு வெளிய வந்த ப்ரியாவை ஒரு ஆண் கரம் பிடித்து இழுத்து மாடிப்படியின் கீழ் இருந்த தடுப்பு சுவர் மறைவுக்குள் இழுத்து சென்றது. அது வேறு யாருமல்ல அவளது மனம் கவர் கள்வன் விஷ்ணுவே தான்.

அந்த தடுப்பின் மறைப்புக்குள் கொண்டு சென்ற விஷ்ணு அவளை சுவருடன் சாத்தி அவள் மேல் தனது முழு உடலும் உரசுமாறு நின்று கத்த வந்த அவள் வாயை தனது கை கொண்டு மூடினான்.. தன்னவன் தொடுகையில் அவள் கண்கள் படபடக்க அவள் விழி அசைவில் தன்னிலை இழந்தவன் அப்படியே அவன் மீசை ரோமம் உரச அவள் காதருகில் குனிந்து " ரொம்ப அழகா இருக்கடி " என்று சொல்ல அவளோ அவன் இடையில் நன்றாக கிள்ளி விட்டாள்.

அவன் உடனே " ஐயோ " என்று அலற பதறியபடி அவன் வாயை பொத்தியவள் " நீங்களே காட்டி கொடுத்துடுவீங்க போல இருக்கே " என்று சொல்ல அக்கணம் அவ்வழியால் சென்ற அதர்வா காதில் விஷ்ணுவின் குரல் நன்கு ஒலித்தது.. உடனே " விஷ்ணு " என்றபடி சத்தம் வந்த தடுப்பை நோக்கி அதர்வா நடந்து செல்ல தொடங்க அதை எட்டி பார்த்த அவர்கள் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது.

உடனே பிரியா " ஐயோ அண்ணா வர்றார்... எனக்கு பயமா இருக்கு...இப்போ என்ன பண்ணுறது " என்று தடுமாற
விஷ்ணுவோ எதுவும் பேசாமல் நின்றான்.. அதை கண்டு எரிச்சலைந்தவள் " நான் கேட்டுட்டே இருக்கேன் ..உங்க வாய்க்குள் என்ன முட்டையா??? "என்று பதட்டத்துடன் திட்ட அவன் வாயை மூடி இருந்த அவள் கையை அகற்றியவன் " கையை எடுத்தா தானே பதில் சொல்ல முடியும் " என்றான்.

" சரி .. இப்போவாவது சொல்லுங்க..என்ன பண்ணலாம் " என்று கேட்க அவனோ " எனக்கும் பயமா தாண்டி இருக்கு " என்று வெளிப்படையாக நடுங்க தொடங்க தனது நெற்றியில் அடித்தவள் " உங்க கிட்ட கேட்டேன் பாருங்க .. " என்று திட்டி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தவள் "ஒரு ஐடியா " என்றபடி அங்கு இருந்த கோழி மூடும் கூட்டை காட்டி " இதுக்குள்ள போங்க " என்றாள்.

உடனே அவன் " என்ன இதுக்குள்ளயா ?? நான் வேற டிப் டாப் ஆஹ் ரெடியா இருக்கேன் டி, டிரஸ் எல்லாம் அழுக்காயிடும் " என்றான்.

" பச்.. பேச நேரமில்லை ..உள்ள போங்க " என்றவள் அவனை திருப்பி அவன் முதுகில் கை வைத்து தள்ளி கூடை அருகே கொண்டு சென்றவள் பாய்ந்து அவன் தலையில் கொட்டி " இப்படியே நின்னா எப்படி மூடுறது? கீழ இருங்க" என்றாள்.. உடனே அவன் மனசுக்குள் " உன்னை கட்டிக்கிறதுக்கு என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு?? பகவானே காப்பாத்து " என்றபடி கீழே இருக்க கோழி கூட்டினால் அவனை மூடிய சமயம் ஆறடி ஆண் மகனால் அதற்குள் தன் உடலை அதற்குள் முடியாமல் போக அவன் கால் மட்டும் வெளியே தெரிந்தது.

உடனே அதை கண்டவள் " காலை உள்ளே எடுங்க " என்று பதட்டத்துடன் உரைக்க " முடியலடி" என்று அவன் இயலாமையுடன் உரைத்தான். அந்த நேரம் " யார் கூட பேசிட்டு இருக்க " என்றபடி பட்டு வெட்டி சட்டையுடன் தடுப்பின் பின்னால் எட்டி பார்த்தான் அதர்வா.

அவன் வந்ததும் வேறு வழி இல்லாமல் விஷ்ணுவின் கால் மேல் ஏறி நின்ற பிரியா தனது புடவையின் கரையால் இருவரின் பாதங்களையும் மறைத்து நிற்க உள்ளே நின்ற விஷ்ணு " அடியேய் ராட்சசி " என்று மனதுக்குள் திட்டியவாறு தனது விரல் கடித்து வலியை பொறுத்து கொண்டான்.

அதர்வாவை " ஹி ஹி " என்று சிரித்தபடி பார்த்த ப்ரியா " சும்மா பாட்டு படிச்சுட்டு இருந்தேன் " என்று அனைத்து பற்களும் தெரிய உரைத்த சமயம் அவளை அழுத்தமாக பார்த்தவன் " வா சேர்ந்து நாம பாடி, அந்தாக்ஷரி விளையாடலாம் " என்றபடி அவளை நோக்கி வந்தான்.

உடனே ப்ரியா " இப்போவா "" என்று கேட்க உள்ளிருந்த விஷ்ணு " டேய்...உங்க ரெண்டு பேருக்கும் பாட்டு பாடி விளையாட வேற நேரம் இல்லயா.. உயிர் போகுதுடா... " என்று ப்ரியா நின்ற வலி தாளாமல் முணு முணுக்க பிரியாவோ " அப்புறம் விளையாடலாம் அண்ணா " என்று தயங்கியபடி கூறினாள்.

"ஏன்?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி அதர்வா கேட்டு கொண்டிருந்த சமயம் அப்போது உள்ளே நுழைந்த அவர்களின் உறவு கார பெண் " உன்னை எங்க எல்லாம் தேடுறதுடி " என்று பிரியாவின் கையை பிடித்தபடி கேட்க " கையை எடு " என்று உறுமினான் அதர்வா.

அவன் உறுமலில் ப்ரியாவின் கையை விட்ட உறவு கார பெண் " ஆத்தாடி அவ கைய தானே புடிச்சேன்.. அவர் கைய புடிச்ச போல இப்படி வையிறார் " என்று நினைத்தவள் அப்படியே நிற்க " போ " என்றபடி கண்களால் போகும் வழியை காட்டினான் அதர்வா.

அவன் அனல் பறக்கும் பார்வையில் பயந்த அந்த பெண் அப்படியே வெளியே ஓடி செல்ல அவள் முதுகை கண நேரம் பார்த்த அதர்வா அதே பார்வையை ப்ரியாவை நோக்கி செலுத்தி " மூச்சடைச்சு கொலை கேஸ் ஆக முதல் வெளிய கூட்டிட்டு வா " என்று அழுத்தமாக உரைத்தவன் விறு விறுவென வெளியேறினான்.

அவன் கூறிய தோரணையிலேயே அவனுக்கு இருவருடைய விடயமும் தெரிந்து விட்டது என்று அறிந்தவர்களுக்கு மறு படி கிலி பிடித்து கொண்டது.

அவன் சென்றதை அரவம் மூலம் அறிந்தவன் " அடியேய் இறங்குடி.. அதென்ன பஞ்சு மெத்தையா??எவ்வளவு நேரம் நிற்ப? " என்று சீற " சாரி சாரி" என்றபடி இறங்கியவள் கோழி கூடையை திறந்து விட்டாள்..
வெளியே வந்து மூச்சு வாங்க நின்றவனை பார்த்தவள் " அண்ணா பேசிட்டு போறத பார்த்தா கண்டு பிடிச்சிருப்பாரோ " என்று மருண்ட படி கேட்க " அதில என்ன சந்தேகம்... கண்டிப்பா, அதுவும் அந்த பொண்ணு கண்ணுல நாம படக்கூடாது என்று அந்த பொண்ணை துரத்தி விட்டபோவே நான் கன்பெர்ம் பண்ணிக்கிட்டேன் " என்றான்.

அவள் மார்பில் கை வைத்து ஏங்கியவள் " என்ன சொல்றீங்க??? " என்று கேட்க அவளை ஏறிட்டு பார்த்தவன் " கண்டிப்பா கண்டு பிடிச்சிட்டான்...ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு தான் தெரியல .. பார்க்கலாம் " என்றவன் " நீ முதல் போ.. கொஞ்ச நேரம் கழிச்சு நான் வர்றேன் " என்றதும் அவள் சரி என்று தலையாட்டியபடி முன்னே சென்றாள்.

இருவரையும் கண்டு பிடித்த அதர்வா "இதுக்கு என்ன செய்யலாம்?" என்று நினைத்தபடி மாடி ஏறி தனது அறையை நோக்கி சென்றான்.
அறைக்குள் கண் மூடி அமர்ந்து இருந்த பத்மா மனதில் மனதில் ஆயிரம் யோசனைகள் . அவள் அப்பா டயரியில் எழுதி இருந்த விஷயங்களை மீட்டி பார்த்தாள். அதில் அவள் இந்த வீட்டு பெண் என்றதை தவிர எந்த விஷயமும் அவர் கொடுத்த டயரியில் இருக்கவில்லை. அதையெல்லாம் நினைத்து பார்த்தவள்
" அப்பா வேற நான் இந்த வீடு பொண்ணுன்னு சொல்லிட்டாங்க...யார் பொண்ணு ன்னு தெரியுது இல்லையே...ஒரு வேளை அதர்வா தங்கச்சி " என்றவளுக்கு அதற்கு மேல் யோசிக்க முடியாமல் " ச்சீ அப்படி எல்லாம் இருக்காது " என்று தன்னை தானே சமாதானப்படுத்தியபடி எழுந்து சென்று நிலை கண்ணாடி முன்னே நின்று கலைந்து இருந்த தலையை சீவினாள்.. அந்த சமயத்தில் வெள்ளை நிற வேட்டி சட்டையில் அறைக்குள் கம்பீரமாக நுழைந்தான் அதர்வா.

அவள் பின்னே வந்து அவளை கண்ணாடியூடு பார்த்தவனுக்கு அவளது சோப் வாசனை ஆளை மயக்கியது.

அவள் பின்னல் நெருங்கி உரசியவாறு நின்று எட்டி அவனது கை கடிகாரத்தை எடுத்த போது அவனது மூச்சுக்காற்று அவள் கன்னத்தில் பட அவளும் கண நேரம் நிலை குலைந்தவள் உடனே சுதாகரித்தபடி அவனை திரும்பி அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட அவனோ சமநிலையின்றி விழ போனான். ஒருவாறு விழாமல் காலை குற்றி தன்னை நிலைப்படுத்தியவன் முகம் கோபத்தில் அனலை கக்கியது.

அவளை எரித்து விடுவது போல பார்த்தவன் " இப்போ எதுக்குடி தள்ளி விட்ட?? " என்று பற்களை கடித்தவாறு சீற சுட்டு விரலை நீட்டியவள் "பக்கத்துல வர்ற வேலை வச்சுக்க வேணாம் " என்றாள்..

" வாட்?? பக்கத்துல வர கூடாதா???... " என்று நக்கலாக உரைத்தவன் கையில் இருந்த காப்பை கீழே இறக்கிவிட்டு சட்டை கையை மேலே உயர்த்தியபடி அவளை அழுத்தமாக பார்த்தவன் " இதுக்காகவே வருவேன். " என்றபடி நெருங்க அவள் இதயம் நின்று துடித்தது.

பின்னால் செல்ல முடியாமல் தவித்தவள் அருகில் இருந்த வழியால் தப்பித்து செல்ல முற்பட்ட போது அவள் வெற்றிடையில் கை வைத்து தன்னை நோக்கி இழுத்தவன் தன்னுடன் அவளை நெருக்கி இருந்தான்.

உடனே அவள் " ப்ளீஸ் இதெல்லாம் நல்லா இல்ல " என்றபடி திமிர தொடங்கியவன் கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீர் கீழே சிந்தியது.. உடனே அதற்கும் எரிச்சலடைந்தவன் " நான் தொட்டா உனக்கு அழுகை வருதா?? " என்று நக்கலாக கேட்க என்ன பத்தி சொல்வதென்று தெரியாமல் அவள் விக்கித்து நின்றாள்.

உடனே அவன் " அப்போ இதுக்கும் சேர்த்து அழு " என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை இரு கைகளாலும் தாங்கியவன் அவள் இதழ்களுக்குள் தனது இதழ்களை புதைத்து கொண்டான்.

அவளோ பலம் கொண்ட மட்டும் திமிறினாலும் வலிமையான அவனை ஒரு இன்ச் கூட அவளால் அசைக்க முடியவில்லை. அவளோ கண்ணீருடன் அவனை விலக்க போராடி கடைசியில் அவனே நீண்ட ஒற்றை இதழ் அணைப்பில் அவளை நிலை குலைய வைத்து விட்டு விலகி கொண்டான்.

அவளோ கண்ணீருடன் அந்த முத்த போராட்டத்தில் களைத்து போய் மூச்சு வாங்க அவனை அனல் தெறிக்க பார்த்த படி நிற்க அவள் பார்வையை சட்டை செய்யாமல் கேலியாக உதாசீனப்படுத்தும் பார்வையை அவளை நோக்கி செலுத்தியவன் கண்ணாடியில் முன் நின்று அங்கிருந்த வெட் டிஸ்ஸுவை எடுத்து லிப்ஸ்டிக் பூசப்பட்டு இருந்த தனது இதழ்களையும் குங்குமம் பூசப்பட்டு இருந்த தனது கன்னத்தையும் துடைத்தவன் கையினால் தலையை கோதிவிட்டு வெளியேறினான்.


தேடல் தொடரும்...





ஹாய் பேபிஸ் யூடி படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை கொட்டிட்டு போங்க டாட்டா😍😍



நன்றி,

ஸ்வராகினி.
 
Last edited:

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 14:

"ஆசை அதிகம் வச்சு மனசை அடக்கி வைக்கலாமா என் மைமா" என அன்று தன்னைத் தாங்கிப் பிடித்த பெண்ணை நினைத்து தன் கட்டைக் குரலில் பாடிக்கொண்டே அவனுடைய பெரிய தொந்தியை ஆட, துள்ளிக் குதித்துக்கொண்டு அபிஷேக் வருகையில் அவன் கண்ணில் பட்டனர் விஷ்ணுவும் ப்ரியாவும்.

அவன் வரும் போது தான் சரியாக விஷ்ணு அந்த கூடைக்குள் இருந்து வெளிவர , "அடப்பாவி கூடைக்குள்ள குடும்பம் நடத்துறது உலகத்துலயே இவன் ஒருத்தனா மட்டுமா தான் இருப்பான்" என்று அவன் புலம்பிக் கொண்டு இருக்கையிலே ப்ரியா அவனிடம் ஏதோ பயத்திலே கண்கள் கலங்க பேசிவிட்டு வெளியேறினாள்.

அவள் அதர்வாவை நினைத்து கலங்கிப் போய் இருக்க, அதை தவறாக புரிந்து கொண்ட அபிஷேக் வெளியே வந்த விஷ்ணுவின் இரு கைகளையும் நீட்டி தடுப்பது போல் நிற்க,

அபியைக் கண்ட விஷ்ணு ,"மறுபடியும் இந்த தடிமாடா.. எப்போ பாரு என் பின்னாடியே சுத்துறான் எனக்கே இப்போ டவுட்டா இருக்கு என் ஆள் ப்ரியா வா இல்லை இந்த பாண்டாவான்னு ச்சை" என சலித்துக் கொண்டவன் அவன் கையைத் தட்டிவிட்டு நகரப்போக,

அவனைத் தடுக்க நினைத்த அபிஷேக் , தன் இருகைகளையும் கொண்டு அவனைக் கட்டிப்பிடித்தான்.

சரியாக அதே சமயம் அந்தப்பக்கம் வந்த ஒரு உறவுக்கார பெண்மனியின் கண்ணில் இவர்களின் கோலம் பட, முகத்தை சுழித்தவர்கள் தலையிலே அடித்துக் கொண்டு ,"கர்மம் கர்மம் இந்த நாடு எங்க போய்ட்டு இருக்கு பகவானே..இந்த கன்றாவியெல்லாம் பார்க்கத் தான் என்னை இன்னும் உயிரோட வச்சிருக்கியா" என புலம்ப,

விஷ்ணுவிற்கு எங்காவது போய் முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது..

ஆனால் அபிஷேக்கோ அசையாமல் ,"இந்தாம்மா நான் ஏதோ உன்னை கட்டிப்பிடிச்ச மாதிரி ஓவரா சீனைப் போடுற ..உன்னை யாரு இன்னும் உயிரோட இருக்க சொன்னா போ அந்தாண்டா போய் எமதர்மராஜா நரகத்துக்கு டைரக்ட் டிக்கெட் தராறாம் வாங்கிட்டு கிளம்பு காத்து வரட்டும்" என அசராமல் பதிலடி கொடுத்தான்.

"போடா வெளங்காதவனே.. நல்லா காட்டெருமை மாதிரி இருந்துட்டு என்னை சாகச் சொல்றியா இரு உன்னை என் தம்பி மாதேஸ்வரன் கிட்ட சொல்றேன்..எய்யா மாதேசு மாதேசு" என அவனைத் திட்டி விட்டு அவனைப் போட்டுக் கொடுக்க அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

"போ போ நீ அய்யாகிட்ட மட்டும் சொல்லு உன் தந்தட்டியை காதோட கழட்டி காதர் பாய் கிட்ட விக்கலை என் பேர் அபிஷேக் கான் இல்லை" என சவால் விட்டவன் தன் பிடியில் நெழிந்து கொண்டிருந்த விஷ்ணுவைக் கண்டு முறைத்தான்.

"அடச்சி என்னை விடுடா பரதேசி.." என அவன் பிடியில் இருந்து வெளியேற,

"ரொம்ப துள்ளாதிங்க ஒரு காலத்துல என்னை கட்டிப்பிடிச்சு கின்னுன்னு இருக்குன்னு சொல்லி நச்சு ஒரு இச்சு வச்சு என் வாயை பிஞ்சு போக வச்ச ஆளு தான நீங்க " என சரியான் பாய்ன்டைப் பிடித்து விஷ்ணுவை அடக்க,

அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்த விஷ்ணுவிற்கு எட்டிக்காயை முழுங்கியதைப் போல் கசப்பாக இருக்க, "ச்சை இப்போ என்னடா வேணும் சொல்லித் தொலை" என இறங்கி வர,

கையைக் கட்டிக் கொண்டு அவனை அபிஷேக் பிக்பாஸ் கமல் போல் ஆழ்ந்து பார்க்க, அவன் தோரணையைக் கண்டு விஷ்ணு வெளிப்படையாகவே சலித்துக் கொண்டான்.

"நீங்க பண்றது சரியில்லை" என அபி கூற,

"எது" என விஷ்ணு புரியாமல் கேட்டான்.

"இப்படி மரத்தை சுத்தி சுத்தி கிஸ் அடிச்சு கர்ப்பம் ஆக்கிட்டு கைவிடுறது சுத்தமா சரியில்லை" என அபிஷேக் ப்ரியா அழுது கொண்டு சென்றதை தவறாக புரிந்து கொண்டு கூற,

விஷ்ணுவோ இவனைக் கிஸ் அடித்ததைத் தான் சொல்கிறான் என மிகத் தவறாக புரிந்து கொண்டு ,அதிர்ச்சியில் ,"வாட்ட்ட்ட்!!!" என கத்தினான்.

"என்ன வாத்து வான் கோழின்னு கத்துனா விட்டிருவேனா.. இதுக்கு ஒரு நியாயம் கிடைக்காம நான் ஓய மாட்டேன்.." என அபிஷேக் அழுத்தமாகக் கூற,

"நியாயமா ?? என்னடா உளருற?? ஏதோ அன்னைக்கு தெரியா தனமா நடந்து போச்சு அதுக்காக நீ நியாயம் கேக்குறது சரியே இல்லை டா.. என் மானத்தை வாங்காம ஒழுங்கா நடந்த எல்லாத்தையும் போய் மறந்துட்டு வேலையைப் பாரு போ .." என விஷ்ணு அங்கிருந்து ங்கரப்போக,

அவனைத் தடுத்த அபிஷேக் ,"நெவர்!!!! இந்த அபிஷேக் நியாயத்துக்கு கட்டுப்பட்டவன்.. நீங்க செஞ்ச தப்புக்கு தண்டனையா நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கனும் இல்லைன்னா இதை அதர்வா சார் கிட்ட சொல்றதைத் தவிர எனக்கு வேற வழியில்லை" என அபிஷேக் முடித்தான்.

கல்யாணம் என்ற வார்த்தையிலேயே ஆடிப்போன விஷ்ணு ,"டேய் என்னடா பேசுற ??? இதெல்லாம் தப்பு டா.. ஆம்பளையும் ஆம்பளையும்..ச்சை நினைச்சு பார்க்கவே கன்றாவியா இருக்கு..நீ வேணா அப்படி இருக்கலாம் ஆனா என்னை அப்படி வளர்க்கலை டா..என்னை ஆளைவிடு தெய்வமே" என கையெடுத்துக் கும்பிட்டான் விஷ்ணு.

'ஆம்பளையும் ஆம்பளையுமா என்ன உளருறான் இவன்' என முழித்த அபிஷேக் ,"இந்த பிரியா பொண்ணு எப்போ ஆம்பளையா மாறுச்சு" எனக் கேட்க,

"ப்ரியா வா???" என விஷ்ணு குழம்பினான்.

"அப்பறம் பிரியா இல்லாமா கொரியா ஹீரோயினியா.. அந்தப்புள்ளையை நீங்க தென்னை மரத்தை சுத்தி சுத்தி விரட்டும் போதே நினைச்சேன் ஒருநாள் அதை மாங்காய் மரத்தை சுத்த வைப்பிங்கன்னு.. ஆனா இவ்ளோ சீக்கிரமாவா?? ஹ்ம்ம் என் உதட்டை கடிச்சப்போவே உங்க வெறி எனக்குப் புரிஞ்சுருக்கனும் எல்லாம் என் தப்பு தான்" என பெருமூச்சு விட

இப்போது தான் விஷ்ணுவிற்கு பல்ப் எரிந்தது போலும் உடனே தன்னை இவன் இவ்வளவு கேவலமாக நினைத்தது கோபத்தைக் கிளப்ப, "என் கிட்ட அடிவாங்கி சாவாம ஒழுங்கா நவுரு டா" என கடுப்புடன் கூறிவிட்டு அவனைத் தாண்டிச் சென்றான் விஷ்ணு.

"அப்போ கண்டிப்பா நான் இதை அதர்வா சார் காதுக்கு கொண்டு போவேன்..பிரியாக்கு நியாயம் கிடைக்காம நான் விட மாட்டேன்" என அபிஷேக் கத்த,

அதர்வாவிடம் அடிவாங்கினால் தான் இவன் சரிப்படுவான் என நினைத்த விஷ்ணுவும் வேறெதுவும் கூறாமல்,"உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோ" என கூறிவிட்டு அவனைத் திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டான்.

"ஒரு புள்ளையை கெடுத்துட்டு எவ்ளோ தைரியமா பேசுறான் பாரு.. இருடா நீயா நானான்னு பார்த்துக்கலாம்" என சபதமெடுத்த அபிஷேக் பின் தன் வேலையை(சாப்பிடுவதை) கவனிக்கச் சென்றான்.


***********


"ப்ரியா போய் அண்ணியை கூட்டிட்டு வா நேரமாச்சு சடங்கை தொடங்கிரலாம்" என ராஜாத்தி தன் மகளை ஏவினார்.

"சரிம்மா" என அன்னையிடம் பதிலளித்து விட்டு பத்மாவை கூட்டி வர மாடியேறினாள் ப்ரியா.

அங்கு அதர்வா விட்டுச்சென்ற நிலையிலே பத்மா அதிர்ந்து போய் நின்று கொண்டிருக்க உள்ளே வந்த ப்ரியா அவளின் நிலையைக் கண்டு ,"அச்சோ என்ன அண்ணி இப்படி இருக்கீங்க இன்னும் கிளம்பலையா கீழ எல்லாரும் வந்துட்டாங்க..சீக்கிரம் போய் முகம் கழுவிட்டு வாங்க போங்க போங்க" என அதர்வா பண்ணிய கூத்தால் கிழிந்த நார் போல் தோற்றமளித்தவளை பாத்ரூமுக்குள் தள்ளினாள்.

உள்ளே வந்த பத்மாவிற்கு மனம் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தது.

அவனை கணவனாய் நினைத்து அருகே வரவிட முடியாமல் அவன் தன் அண்ணனாக இருப்பானோ ஒரு மனம் தடுக்க, இன்னொரு மனமோ எங்கே ஒருவேளை அவன் தன் மாமனாக இருந்து விட்டால் அவனை இப்போது உதாசீனப்படுத்துவது எந்த வகையில் சரியாகும்?? என கேள்வி கேட்டு அவளைப் போட்டு பாடாய் படுத்தியது.

"அண்ணி சீக்கிரம் வாங்க!!" என்று வெளியே கேட்ட ப்ரியாவின் குரலில் நடப்புக்கு வந்த பத்மா முகத்தை குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினாள்.

இப்போது மனம் சற்று தெளிந்தது போல் இருக்க, கூடிய சீக்கிரம் தன் குழப்பத்திற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு ப்ரியாவுடன் கிளம்பி கீழே சென்றாள், இன்றே அவள் கேள்விக்கான பதில் கிடைக்கப் போவதை அறியாமல்.


மஞ்சள் வண்ண பட்டுடுத்தி தலை நிறைய மல்லிகையைச் சூடிக்கொண்டு ராஜாத்தி கொடுத்தனுப்பிய நகைகளைப் போட்டுக் கொண்டு தேவதை போல் இறங்கி வந்த பத்மாவைக் கண்டு அங்கு கூடியிருந்த அனைவரும் சொக்கித் தான் போனார்கள்.

அங்கு தன் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்த அதர்வாவே அவள் அழகில் மயங்கிப் போய் தந்தை கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அப்படியே கன்னிவெடி மேல் கால்வைத்தவன் போல் அசையாமல் நிற்க, பதில் வரவில்லை என அவனை நோக்கிய மாதேஸ்வரன் அவன் பார்வை சென்ற திசை கண்டு தனக்குள் சிரித்தவர் அவனை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

அவரும் இவர்கள் வயதை எல்லாம் தாண்டி வந்தவர் தானே, எனவே மகனின் உணர்ச்சிகளைப் புரிந்து நடந்து கொண்டார்.

அவனின் பார்வையை உணர்ந்த பத்மா அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் தன் அத்தை சொன்னது போல் போய் மனையில் உட்கார்ந்து தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

அருகில் யாரோ தன்னை இடித்துக் கொண்டு சென்றதில் சுயஉணர்வு அடைந்த அதர்வாவிற்கு அதற்கு பின்பு தான் தன்னை மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது புத்தியில் உரைக்க, அவனுக்கு தன்னைக் குறித்தே அசிங்கமாக வந்தது.

இதில் அவளின் உதாசீனம் வேறு அதர்வாவை வெறி கொள்ளச் செய்ய, 'உனக்கு இருக்கு டி' என மனதில் கறுவிக் கொண்டான்.

சுமி இந்தச் சடங்கை பார்க்க பிடிக்காமல் ஒரு ஓரமாய் போய் அமர்ந்து கொள்ள, அதர்வா பிடிக்கவில்லை என்றாலும் ஊரார் முன்னால் அவளை விட்டுக்கொடுக்கப் பிடிக்காமல் வேறு வழியில்லாமல் அங்கு நின்று கொண்டிருந்தான். ஆனால் அடை ஒத்துக்கொள்ள மனம் வராமல் எங்கள் பிரச்சனையை ஊரார் முன் கடை பரப்ப விருப்பமில்லாமல் தான் இங்கு நிற்கின்றேன் என தனக்குத் தானே நினைத்து தன்னையே ஏமாற்றிக் கொண்டான்.

விஷ்ணுவோ அதர்வா கண்முன் வர தயக்கப்பட்டுக்கொண்டு வெளியே சென்று விட்டான், அதை அதர்வா உணர்ந்தாலும் பிறகு இவர்கள் பிரச்சனையை பார்த்துக் கொள்ளலாம் என விட்ட்விட்டு அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க துவங்கினான்.

நல்ல நேரம் துவங்கியதும் சடங்குகள் துவங்கியது, ப்ரியாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் நாத்தனார் முறையில் இருந்த ஒரு சுமங்கலிப் பெண்ணை வைத்து நல்ல நேரத்தில் பத்மாவிற்கு தாலி பிரித்து கோர்த்தனர்.

அதன் பின் ஒவ்வொரு சுமங்கலிகளாக வந்து அவளுக்கு நலங்கு வைத்து ஆசிர்வாதம் செய்து விட்டுச் செல்ல, பத்மாவின் மனம் குழப்பத்தயும் மீறிய நிம்மதியில் நிறைந்திருக்க, தன்னையும் அறியாமல் தாலியை இறுக்கமாக பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த அதர்வாவின் கண்களில் அது தவறாமல் விழ, அவளின் செய்கை அவன் கோபத்தை அமைதிப்படுத்தியதை அவன் அப்போது உணரவில்லை.

உணர்ந்த போதோ காலம் கடந்திருந்தது.

அவர்கள் வைத்துவிட்டுச் செல்லவும் அங்கு வந்த ஒரு வயதான பாட்டி பத்மாவை நிறைவாகப் பார்த்துவிட்டு அவளுக்கு நலங்கு வைத்தவர் ,"தீர்க்க சுமங்கலியா பல்லாண்டு காலம் நீ என் பேரனோட மகிழ்ச்சியா வாழனும் மா... எங்க அண்ணன்(செல்லக்கண்ணு) குணம் அப்படியே என் பேரனுக்கு.. அந்த மகாரசனுக்கு ஏத்த மகராசி தான் அவனுக்கு வாய்ச்சிருக்கு.உன்னோட மாமியார் மாதிரியே மூத்த மருமகளுக்கு உண்டான பொறுப்பை புரிஞ்சு நடந்துக்கோ ராசாத்தி" என அவள் கன்னம் வழித்தவர் அங்கிருந்து நகர,

அவளையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த வைத்தீஸ்வரி அந்த பாட்டி கண்ணில் பட, அவருக்கு பழைய நியாபங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் படையெடுக்க, தன்னையும் அறியாமல் ,"இந்நேரம் உன் மகளும் தொலைஞ்சு போகாம இருந்திருந்தா நம்ம ஆர்னாவுக்கும் இந்த மாதிரி சடங்கு செஞ்சு அழகு பார்த்துருப்பியே கண்ணு..ஏன் நம்ம அதர்வாவுக்கே கூட ஆர்னாவை கட்டி வச்சிருப்ப என்ன பண்ண எல்லாம் விதி" என புலம்ப, அதன் பின்னே அங்கு பத்மா இருக்கும் போது ஆர்னாவை அதர்வாவிற்கு கட்டிவைப்பது பற்றி பேசியது தவறு என்பது மூளையில் உரைக்க,

நாக்கைக் கடித்துக் கொண்டார், "நான் ஒரு மடச்சி எந்த நேரத்துல என்ன பேசனும்னு வெவஸ்தை இல்லாம ஏதோ உளறிட்டு இருக்கேன்" என தன்னையே கடிந்து கொண்டு பின் வேறு பேச்சிற்குத் தாவிவிட மற்றவர்களும் அதை மறந்துவிட்டு சகஜமாக பேசத் தொடங்கினர் இருவரைத் தவிர.

ஒன்று வைத்தீஸ்வரி , அவரும் அன்று அதே நிலையில் தான் இருந்தார் ,'இந்நேரம் ஆர்னா தங்களோடு இருந்திருந்தால் அவளுக்கும் இது போல் திருமணம் செய்து அழகு பார்த்திருப்போம், அந்த பாக்கியம் கூட தனக்கு கிடைக்க முடியாத அளவிற்கு பாவி ஆகி விட்டோம்' என நினைத்து மருகியவர் அதற்கு மேல் அங்கு நின்றால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என தனது அறைக்குள் சென்று மறைந்தார்.

இன்னொன்று பத்மா ,அந்த பாட்டி சொல்லிவிட்டுப் போன செய்தி அவள் மனதில் பல கேள்விகளை உண்டு பண்னியது, அந்த பாட்டி தொலைந்து போன பெண் என தன்னைத் தான் சொன்னாரா?? அப்போதென்றால் தான் வைத்தீஸ்வரி தான் தன்னுடைய தாயா?? அதர்வா தன்னுடைய மாமன் மகனா?? என்ற கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக படையெடுக்க, அவளால் அங்கு அமர்ந்திருக்கவே முடியவில்லை. உடலெல்லாம் ஒரு சந்தோஷம் பரவுவதைப் போல் இருந்தது பத்மாவிற்கு, தன் சந்தேகத்தை உடனே தீர்த்துக் கொள்ள முடியாமல் போக, எப்போது இந்த சடங்கு முடியும் அந்த பாட்டியைப் பிடித்து உண்மையைக் கறக்கலாம் என காத்துக் கொண்டிருந்தாள்.

அவளை மேலும் சோதிப்பதைப் போல் அந்த ஊரில் உள்ள அனைத்து சுமங்கலிகளும் வந்து அவளை ஒவ்வொருவராக ஆசிர்வாதம் செய்து கொண்டிருக்க, 'அந்த பாட்டி அதற்குள் இங்கிருந்து கிளம்பி விடக்கூடாது கடவுளே' என மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் பத்மா.

அதே சமயம் அதர்வாவின் தோளை ஒரு கரம் சொரிந்து கொண்டிருந்தது ,

"யார் டா அது " என அதர்வா எரிச்சலுடன் திரும்ப, அங்கு பம்மிக் கொண்டு நின்றிருந்த அபிஷேக்கைக் கண்டு கோபம் பொங்க ," என்ன அந்த இரஞ்சித் அடுத்த ப்ளான் எதாச்சும் சொல்லி அனுப்புனானா??" என பஞ்சாயத்தில் அவன் பொய் சொன்னதை மறக்காமல் கோபத்துடன் வினவ,

"ச்சி அந்த காமக்கொடூரனா கர்மம்" என அவன் தன்னை அன்று தோப்பு வீட்டிற்குள் தள்ளிக் கொண்டு போனதை நினைத்து அபிஷேக் முகத்தைச் சுழித்துக் கொண்டு கூற,

அவனை அழுத்தமான பார்வை பார்த்த அதர்வா ,"இப்போ உனக்கு என்ன வேணும்" என கேட்க,

பயத்தில் எச்சியைக் கூட்டி விழுங்கிய அபி, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ,"பிரியாவைப் பத்தி உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என சொல்லவந்ததை கூறிவிட்டு அவன் அடித்துவிடாதவறு நான்கு அடி பின்னால் தள்ளி நின்று கொண்டான்.

ப்ரியா என்றதும் அதர்வா சற்று யோசித்து விட்டு "பின்னாடி தோட்டத்துக்கு வா" என அபியிடம் பணித்து விட்டு முன்னே நடந்தான்.

அவனைத் தொடர்ந்து அபிஷேக்கும் பின்னால் செல்ல, வழியில் தென்பட்ட விஷ்ணுவை முறைத்துவிட்டு ,"உன்னை தான் போட்டுக்கொடுக்க போறேன் இரு" என மிரட்டி விட்டுச் செல்ல,

"நீ திரும்ப வந்தா பார்க்கலாம்" என நினைத்த விஷ்ணு ரகசியமாக தனக்குள் சிரித்துக் கொண்டான்.



"சொல்லு என்ன விஷயம்" என கைகளைக் கட்டிக் கொண்டு அழுத்தமான குரலில் அதர்வா கேட்க,

பட்டுவேட்டு சட்டையில் ஜம்மென்று இருந்த அதர்வாவை எப்போதும் போல் இன்றும் இரசித்து பெருமூச்சு விட்ட அபிஷேக், பின் அவன் முறைப்பதைக் கண்டு ,"அதுவந்து உங்க தோஸ்த் சுத்தமா சரியில்லை சார். உங்க தங்கச்சி பின்னாடி மரத்தை சுத்தி சுத்தி அப்பா அம்மா விளையாட்டு விளையாடி அதுக்கு ஒரு பிள்ளையை கொடுத்துட்டு இப்போ அந்த பிள்ளையை கைவிட்டுட்டாரு சார்.. உங்க தங்கச்சி பாவம் இதை யார்கிட்டயும் சொல்ல முடியாம இன்னைக்கு அழுதுட்டே பொய்ருச்சு அதான் எனக்கு மனசு கேட்காம உங்க கிட்ட வந்து சொல்லிட்டேன் நீங்க தான் சார் உங்க தங்கச்சிக்கு நியாயம் வாங்கித் தரணும்" என தான் மனப்பாடம் செய்து வைத்ததை அப்படியே ஒப்பிக்க, அடுத்த நிமிடம் கட கட வென உருண்டு போய் அந்த வாய்க்காலில் விழுந்திருந்தான்.

'என்ன டா நடந்துச்சு என அவன் யோசிக்க, அப்போது தான் அதர்வா தன்னை அடித்திருந்ததை உணர்ந்தவன் அந்த சேற்றில் விழுந்து புரண்டு அசைந்து ஆடி ஒரு வழியாக எழுந்து நின்று அங்கு ருத்ரமூர்த்தி போல் தன்னை முறைத்துக் கொண்டிருந்த அதர்வாவை நோக்கி ,"என்ன சார் உங்க தங்கச்சி வாழ்க்கை நல்லா இருக்கனும்னு சொன்னா என்னையவே அடிக்கிறிங்களா.. எனக்கென்ன உங்க தங்கச்சி எப்படியோ நாசமா போகட்டும்னு" என அவன் அந்த வாக்கியத்தை முடிக்கவில்லை அங்கிருந்த தேங்காய் மட்டை அவன் மண்டையை பதம் பார்த்தது.

"யோவ் சொல்ல வந்ததை முழுசா கேட்டுட்டு அடியா.. போலிஸ்னா பேசிகிட்டு இருக்கும் போதே அடிப்பிங்களா.. நாசமாப்போனா எனக்கென்னான்னு விடாம உங்ககிட்ட வந்து சொன்னேன்ல எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு சொல்ல வந்தா அதுக்குள்ள மண்டையை உடைக்கிற மனுஷனாயா நீ" என தலையில் கைவத்துக் கொண்டு அபிஷேக் புலம்ப,

"இதோ பார் விஷ்ணு தான் இந்த வீட்டு மாப்பிள்ளை இன்னொரு வாட்டி என் மாப்பிள்ளையைப் பத்தியோ என் தங்கச்சியை பத்தியோ என்கிட்ட பேசுன மாதிரி வேற யார்கிட்டயாச்சும் பேசுன தோலை உரிச்சுருவேன் ஜாக்கிரதை" என மிரட்டிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென சென்று விட்டான் அதர்வா.

"ஆமா உரிக்கிறதுக்கு என் தேகம் தேங்காய் பாரு.. இவன் என்ன லூசா நானும் அந்த விஷ்ணுவை இவளுக்கு கட்டி வைக்க தான சொன்னேன்.. அதையே இவன் எதுக்கு என்னை அடிச்சு சொல்லிட்டு போறான் ..சோத்துகாக என்னவெல்லாம் பொறுத்துக்க வேண்டியதா இருக்கு.." என அபிஷேக் புலம்ப,

சரியாக அதே நேரம் பின் கட்டில் செய்து கொண்டிருந்த சமையல் வாசம் அவன் நாசியைத் தீண்டியது.

"சோத்துக்காக எத்தனை அடி வேணும்னாலும் வாங்கலாம் ஹப்பா வாசனையே வயலூர் முழுக்க வீசுதே போய் ஒரு பிடி பிடிச்சுற வேண்டிதான்" என கூறிக்கொண்டு இதற்கு முன் யாருக்கோ அடி விழுந்ததைப் போல் அங்கிருந்த ஓட்டாரில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வயிற்றை நிறைக்க கிளம்பினான் நம் அபிஷேக்.





ஒரு வழியாக சடங்கெல்லாம் முடிந்து வந்தவர்களுக்கு வெத்தலை பாக்கு குங்குமம் வலையல் வைத்து தாம்பூலம் தந்து விடைகொடுத்தனர்.

அப்போது அந்த பாட்டியும் பத்மாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப வர, இதுதான் சரியான சமயம் என நினைத்த பத்மா அனைவரும் தங்கள் வேலையில் கவனமாக இருப்பதை உறுதிபடுத்திக் கொண்டு ,அந்த பாட்டியை தனியாக அழைத்துக் கொண்டு போனாள்.

"அட என்னடா புருஷனை இழுத்துட்டு போறதுக்கு பதிலா இந்த பல்லு போன கெழவியை இழுத்து வரவ.. என்ன சேதி புதுப்பொண்ணே" என அந்தப்பாட்டி நேரடியாக விஷயத்திற்கு வர,

'எப்படிக் கேட்பது' என முழித்த பத்மா ,"அது வந்து ஆர்னான்னு யாரோ சொன்னிங்களே யார் அவங்க??" என தயங்கித் தயங்கிக் கேட்க,

"அடிக் கேனைச் சிறுக்கி..இன்னுமா உள்ள சொன்னதை நினைச்சுட்டு இருக்க.. இப்போவே புருஷன் மேல அம்புட்டு உரிமை கொண்டாடுறீகளோ" என அவர் அதர்வாவையும் ஆர்னாவையும் சம்பந்தப்படுத்திப் பேசியதால் பத்மா கேட்கிறாள் என சரியாகத் தவறாக புரிந்து கொண்டு அவளை கிண்டல் செய்ய,

'ஆமா ஆமா அட லூசு கெழவி அவன் புருஷனா அண்ணனான்னு தெரியாம குழம்பிப் போய் இருக்கதுனால தான் உன் கிட்டையே கேட்குறேன் நீ வேற நேரங்காலம் தெரியாம காமெடி பண்றேன்னு க்டுப்பேத்திகிட்டு' என மனதிற்குள் பேசிய பத்மா, வெளியே அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே "ஹிஹி அதெல்லாம் இல்லை பாட்டி வைத்தீஸ்வரி அம்மா முகம் வேற சரியே இல்லையா அதான் என்னான்னு கேட்டேன் வேற ஒன்னும் இல்லை" என சமாளித்தாள்.

"ஹம்ம் என்னாத்தைச் சொல்ல எல்லாம் விதி ..எங்கண்ணன் இருந்த வரைக்கும் எப்படி இருந்த குடும்பம் தெரியுமா" என்று பெருமூச்சு விட்ட பாட்டி , தன் அண்ணனின்(செல்லக்கண்ணு) பெருமை தொடங்கி ஆர்னா தொலைந்து போனது வரை தனக்குத் தெரிந்ததை கூறி முடித்தார்.( உயிலைப் பற்றி குடும்பத்தில் உள்ளவர்களைத் தவிர யாருக்கும் தெரியாததால் அதைத் தவிர்த்து மற்ற விபரங்களைக் கூறி பத்மாவின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்திருந்தார் பாட்டி).

அனைத்தையும் சொல்லி முடித்தவர் ," நீ ஒன்னும் வெசனப்படாத தாயி..அந்த ஆர்னா புள்ளைனா அதர்வாவுக்கு உசுரு..அதேன் அப்படி வாயில வந்துருச்சு.. மத்தபடி என் பேரன் சுத்தத் தங்கம் உன்னைத் தவிர வேற யாரையும் கனவுல கூட நினைக்கா மாட்டான்த்தா.. அதுனால மனசைப் போட்டு உளப்பிக்காம நல்லபடியா வாழப்பாரு தாயி.. எனக்கு நேரமாச்சு எல்லாருகிட்டயும் சொல்லிப்புட்டு நான் கிளம்புறேன்.. நல்லா இரு" என்று அவளை திருஷ்டி கழித்து விட்டு அங்கிருந்து அகன்றார் அந்த வெள்ளந்தியான பெண்மனி.

தன் மனதில் இத்தனை நாளாய் அரித்துக் கொண்டிருந்த சந்தேகம் தீர்ந்த மகிழ்ச்சியில் பத்மாவிற்கு பேச்சே வரவில்லை, கண்கள் கலங்க அங்கேயே நின்றவள் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன.

இப்போதே போய் வைத்தீஸ்வரியின் கண்ணீரைத் துடைத்து ,"அம்மா நான் தான் மா உங்க பொண்ணு ..உங்ககிட்டயே வந்துட்டேன் மா" என அவர் மடியில் படுத்து கதற வேண்டும் போல் இருந்தது,

மேலும் அதர்வா தன்னுடைய மாமன் மகன் என்று நினைக்கும் போதே உடலெல்லாம் புது இரத்தம் பாய்வது போல் இருக்க, அவள் முகத்தில் புதிதாக ஓர் வெட்கப் புன்னகை பூத்தது.

அதை மலர விடாமல் செய்ய சரியாக அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தான் அவன்!!!!!!!

தேடல் தொடரும்...

ஹாய் பேபீஸ் ,

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கீழே உள்ள லின்க்கிள் பகிர்ந்துகோங்க மா..



நன்றி,

ஸ்வராகினி...
 
Last edited:

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 15:



அந்த பாட்டி சொன்னதை கேட்டதும் பத்மாவின் மனம் அத்தனை மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது..



அதர்வா தன் மாமன் என்னும் உணர்வு அவள் உயிர் வரை சென்று தித்திக்க மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் வந்தாள் பத்மா..



அங்கு சடங்குகள் முழுவதாய் முடித்திருக்க பெண்கள் அனைவரும் அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டிருந்தனர் .



அங்கு சுமித்ரா ஒரு புறம் கைகளில் தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுகொண்டிருக்க, அவளிடம் வேகமாக வந்த பத்மா, "சுமி குட்டி என்னிடம் கொடு டா.. நான் செய்கிறேன்.." என்று அவள் கைகளில் இருந்து தட்டை வாங்க கை நீட்ட, சுமியோ அவளை உறுத்து விழித்துவிட்டு



"உன் வேலையை பார்.." என்று கோபத்துடன் நொடித்துக்கொண்டே நகர போனாள்



ஆனால் பத்மாவோ சிறிதும் கோபப்படாமல், "அட சுமி குட்டி.. சும்மா கோபப்படாதே.. கன்னம் எல்லாம் சிவந்து விட்டது பார்.. அழகா இருக்கடி.." என்று அவள் கன்னத்தை பிடித்து கொஞ்ச வேறு செய்ய, இப்போது திருதிருவென விழிப்பது சுமியின் முறை ஆயிற்று..



'இவளுக்கு ஏதாவது பைத்தியம் பிடித்துவிட்டதா..' என்று யோசித்துக்கொண்டே சுமி பத்மாவை பார்க்க, அவளோ அலட்டிகொள்ளாமல் அவள் கைகளில் இருந்த தட்டை வாங்கி கொண்டு நகர்ந்து விட்டாள்..



உள்ளே வந்து அந்த தட்டை வைத்துவிட்டு அதே சிரித்த முகத்துடன் அவள் வெளியே வந்து தங்கள் அறைக்கு செல்வதற்காக படி ஏற மனதில் இருந்த மகிழ்ச்சியுடன் துள்ளலுடன் ஏறி கொண்டிருந்தவள் எதிரில் வந்த ரஞ்சித்தை கவனிக்கவில்லை..



அவனோ முகம் முழுவதும் க்ரோதத்துடன் அவளை தான் பார்த்து கொண்டு வந்தான்..



சரியாக அவள் அவனை கடக்கும் போது அவள் முன் கைநீட்டி தடுத்தவன், "என்ன டி சிரிப்பெல்லாம் பயங்கரமா இருக்கு.. இந்த வீட்டில் உரிமை கிடைத்துவிட்டது என்ற சந்தோசமா.." என்று நக்கலாக கேட்க

ஒரு நொடி ஒன்றும் புரியாமல் அவனை புருவம் சுருங்க யோசைனயுடன் பார்த்தாள் பத்மா..



பின்பு தான் அவன் தன்னை வம்பிலுக்கிறான் என்று புரிய அவனை நக்கலாக ஒரு பார்வை பார்த்தவள், "ஆமாம் திமிர் தான்.. மேலும் நான் உன் அண்ணா மனைவி.. இனி ஒழுங்கா அண்ணி என்று கூப்பிட்டு பழகு.. இல்லை என்றால் பெரியவரிடம் சொல்லிவிடுவேன் பார்த்துக்கோ..." ஏகத்துகும் நக்கலுடன் ஒலித்தது பத்மாவின் குரல்..



அதில் மேலும் கடுப்பான ரஞ்சித், "ஏய் என்ன திமிரா..?" என்று எகிற



"மாமா.." என்று பத்மா பின் புறம் குரல் கொடுக்க, அதற்கு மேல் அங்கு நிற்க அவன் என்ன லூசா.. ஓடியே விட்டான்..





அதில் மேலும் கலகலவென சிரித்துக்கொண்டே பத்மா மேலே வர அவளுக்கு எதிரில் வந்து நின்றான் அபிஷேக்..



'ச்சை என் மாமாவை பார்க்கலாம் என்றால் அதற்கு எத்தனை தடங்கல்..' என்று மனதிற்குள் முணுமுணுத்து கொண்டே பத்மா அவனை பார்க்க, அவனோ சீரயஸ்ஸாக அவளை பார்த்து கொண்டிருந்தான்..



"அந்த மலைமாடுக்கு என்னவாம் பத்மா.. எதாவது வம்பிழுதானா..?" என்று அக்கறையாக அபிஷேக் கேட்க



அவளோ, 'உன் அக்கறையில் தீய வைக்க..' என்று மனதிற்குள் முணுமுணுத்துக்கொண்டவள்



"அதெல்லாம் ஒன்னும் இல்லை டா அவனுக்கு உன்னை மிகவும் பிடித்துவிட்டதாம்.. உன்னை தோப்பு வீட்டுக்கு வர சொன்னான்... போய்ட்டு வா.." என்றுவிட்டு அவள் ஓடிவிட

அவள் கூறியக் செய்தியில் அபிஷேக் தான் அதிர்ந்து நின்றிருந்தான்..



அவள் சென்று சிறிது நேரம் கழித்தே அவனுக்கு சுயநினைவு வர 'அட பாவிகளா ஒரு ஆண் அழகா இருக்க கூடாதா.. அதுக்காக இப்படியா ஆளாளுக்கு அலைவீங்க.. அய்யோ இந்த உலகத்தில் ஒரு அழகான பையனுக்கு பாதுகாப்பு இல்லாம போச்சே..' என்று புலம்பி கொண்டே தனது அடுத்த முக்கிய வேலையான உண்ணும் வேலையை பார்க்க சென்றான் அபிஷேக்..



பத்மா தன் மாமனை பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் தங்கள் அறைக்குள் நுழைய அங்கு அவனோ கையில் ஏதோ படத்தை வைத்து வெகு தீவிரமாக அதை பார்த்து கொண்டிருந்தான்..



பத்மா உள்ளே வரும் அரவம் கேட்டதும் கைகளில் இருந்த படத்தை சட்டென பின்னால் மறைத்துக்கொண்டு, அவன் திரும்ப அங்கு பத்மவை பார்த்ததும் அவன் முகத்தில் தானாக ஒரு அலட்சிய பாவம் வந்து ஒட்டி கொண்டது.



அவளோ அது எதையும் உணராமல் கணவனையே கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்..



திருமணம் ஆன நாளில் இருந்து அவன் தனக்கு அண்ணா உறவாக இருந்து விடுவானோ என்ற பயத்தில் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் சுற்றி கொண்டிருந்தவள், இன்று தான் முதல் முறையாக உரிமையுடன் கணவனை தலை முதல் கால் வரை ரசித்தாள்..



நன்றாக ஆறடிக்கும் மேலான உயரத்தில் தினமும் செய்யும் உடற் பயிற்சியால் உரமேறிய உடலுடன் போலீசிற்கே உரிய தனித்துவமான ஹேர் கட்டுடனும், அளவாக அழகாக கத்தறிக்க பட்ட மீசையுடன்அந்த அறையையே சிறிதாக்கி கொண்டு நின்றிருந்தான் அவள் ஆசை கணவன்..



இதுவரை தான் பக்கத்தில் வந்தாலே ஓடுபவள் திடீரென்று தன்னை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கவும், அவளை யோசனையுடன் பார்த்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் அவள் பார்வை வீச்சை தங்க முடியாமல்



"ஏய்.." என்று சத்தமாக கத்திவிட்டான்



அவன் குரலில் தன் நினைவிற்கு மீண்ட பத்மா கொஞ்சமும் பதட்டம் இல்லாமல் அவனை பார்த்துக்கொண்டே, "என்ன மாமா.." என்று சாதாரணமாக கேட்க அவளது மாமா என்ற அழைப்பு அவனுக்குள் ஏதோ இனம் புரியா சிலிர்ப்பை ஏற்படுத்தியது..



இருந்தும் அடுத்த நொடி வழமையான கோபம் தலை தூக்க அவளை திட்ட வாயை திறந்தவன் அடுத்து என்ன நினைத்தானோ தன் கைகளில் மறைத்து வைத்திருந்த படத்தை முன்னால் எடுத்தான்..



"ஒன்னும் இல்லையே மா.. ஜஸ்ட் என் உயிரானவள் படத்தை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்.. அவ்ளோ தான்.." என்று வெகு சாதாரணமாக அவள் தலையில் இடியை இறக்கினான் அதர்வா



அவன் கூறியதை கேட்டு ஒரு நொடி அதிர்ந்து தான் நின்றுவிட்டாள் பத்மா.. உண்மையாகவே அவர் வேறு பெண்ணை காதலித்தால் என்ன செய்வது என்று அவள் மனம் அடித்துக்கொள்ள, அதில் கண்கள் தன்னை அறியாமலே கலங்கி விட்டது..



கலங்கிய கண்களை கணவனுக்கு காட்ட விரும்பாதவள் இமை கொட்டி கண்ணீரை உள்ளிழுக்க போராட, அந்த போராட்டத்தில் அதர்வா கைகளில் இருந்த படம் தற்செயலாக அவள் கண்களில் விழுந்தது..



அந்த படத்தில் இருந்தது இளம் பெண் போல் தெரியவில்லையே என்று அவள் மனதில் லேசாக இடிக்க, அந்த படத்தை உற்று பார்த்தாள் பத்மா..



அதில் ஒரு சிறு பெண்ணிருக்க அந்த பெண்ணை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று அவள் மனம் வேகமாக சிந்தித்தது..



தன் கைகளில் இருக்கும் படத்தை பத்மா ஆராய்வதை ஒரு நக்கல் சிரிப்புடன் பார்த்த அதர்வா "என்ன பாக்குற.. இவள் தான் என் மனதில் எப்போதுமே இருக்கா.. என் அம்மு குட்டி.. அவளை தவிர என் மனதில் யாருக்கும் இடமில்லை.. என்றுமே.." அழுத்தம் திருத்தமாக அதர்வா கூற



"இது யாரு.." என்று கேட்ட பத்மா குரலில் இப்போது இருந்தது சிறு குழப்பமே



ஏற்கனவே ஓரளவு உண்மையை யூகித்திருந்ததால் அவள் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்திருந்தாள்..



ஆனால் அதை உணராத தர்வாவோ, "என் அத்தை மகள்.. என் உயிர்.." என்று மேலும் அழுத்தமாக கூற பத்மாவிற்கு யாரோ ஒரே நேரத்தில் ஆயிரம் கூடை பூவை தலையில் கொட்டியது போல் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது..



தான் கூறிய விஷயத்தில் அவள் அதிர்ந்து விழிப்பாள் என்று அதர்வா எதிர்பார்க்க முகம் முழுவதும் பரவசத்துடன் நின்றிருந்த பத்மாவை பார்த்து அதர்வாக்கு ஒன்றும் புரியவில்லை..



முதலில் அதர்வாவின் காதலில் உண்டான மகிழ்ச்சியில் பரவசத்துடன் நின்றவளுக்கு அடுத்து குறும்பு தனம் தலை தூக்கியது..



'அட மங்குனி மாமா.. கடைசியில் என்னை தான் காதலிக்கிறாயா.. அதை என்னிடமே சொல்லி மிரட்ட வேறு செய்கிறாயா.. உன்னை எப்படி ஓட விடறேன் பாரு..' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவள் அவனை அழுத்தமாக நிமிர்ந்து பார்த்தாள்



"இதோ பாருங்க மாமா.. இதற்கு முன் நீங்க யாரை வேண்டுமானாலும் விரும்பி இருக்கலாம்.. ஆனால் இப்போது நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சது.. இனி நீங்க என்னை தான் விரும்பணும்.. ஏதாவது சின்னப்பிள்ளை தனமா பண்ணிட்டு இருக்காதீங்க.."



மனைவியின் நிமிர்வான பேச்சில் அதிர்ந்து விழித்த அதர்வாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக கோபம் வந்தது



"ஏய் திருடி நீ எனக்கு மனைவியா.."



அவளை வறுத்த வேண்டும் என்றே அவன் பேச, அது தன் இலக்கை சரியாக சென்றடைந்தது..



ஒரு நொடி பத்மாவின் முகம் கவலையில் சுருங்க தான் செய்தது.. ஆனால் அடுத்த நொடியே பத்மா சுதாரித்திருந்தாள்..



இப்போது தான் அவள் யாரென்று அவளுக்கு தெரிந்து விட்டதே.. தான் நிச்சியம் தன் மாமனுக்கு ஏத்த ஜோடி தான் என்று உறுதியாக மனதிற்குள் கூறிக்கொண்டவள், "என்ன பண்ண போலீஸ் மாமா.. இந்த பிறவியில் உங்க தலை எழுத்து இந்த பிக் பாக்கெட் பத்மா தான்.. சீக்கிரம் என்னை காதலிக்க முயற்சி பண்ணுங்க.." என்று கூறி கண்ணடித்தவள் இதற்கு மேல் நின்றாள் ஆபத்து என்று வேகமாக அங்கிருந்து ஓடி விட்டாள்..



அவள் செயலில் மேலும் மேலும் அதர்வாவின் அதிர்வு தான் அதிகரித்து கொண்டே போனது..



அதிர்ச்சி ஒரு புறம் இருக்க, மனைவி செயலை தன் மனம் ரசிப்பதை ஒரு திடுக்கிடலுடன் உணர்ந்தான் அதர்வா..



ஏற்கனவே தாலி பிரித்து கோர்க்கும் போது மனைவி புறம் அவனையே அறியாமல் அவன் மனம் சாய, மாற்றொரு புறம் அவன் அம்முக்குட்டி முகம் கண் முன் தோன்றி குழப்ப என்ன செய்வது என்று தெரியாமல் தான் தன் அறைக்கு வந்து அந்த படத்தை எடுத்து பார்த்து கொண்டிருந்தான்..



அதே நேரத்தில் பத்மா வந்து இப்படி பேசிவிட்டு போகவும் அத்தனை அதிர்ச்சியிலும் அவளை மனம் ரசித்ததும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..



ஒரு வேலை மஞ்சள் கையிற்றின் மாயமாக இருக்குமோ என்று யோசித்தவனுக்கு குழப்பமே மிஞ்சியது..



ஆனால் மனைவி புறமாக தன் மனம் கொஞ்சம் கொஞ்சமாக சாய தொடங்கி விட்டது என்பதை மட்டும் தெளிவாகாவே உணர்ந்தான் அதர்வா..



கீழே வந்த பத்மாவிற்கோ மகிழ்ச்சியில் கால் தரையிலேயே படவில்லை.. அவள் பாட்டிற்கு தோட்டத்தில் குதித்து ஆடிக்கொண்டிருக்க, அவளை ஒரு மாதிரி பார்த்து கொண்டே அங்கு வந்து சேர்ந்தான் அபிஷேக்..



'இதுக்கு ஏதாவது பைத்தியம் பிடித்து விட்டதா.. ஏன் இந்த ஆட்டம் ஆடறா..' என்று மனதிற்குள் புலம்பி கொண்டே அவன் பத்மாவை பயத்துடன் பார்க்க, அப்போது தான் அபிஷேக் நிற்பதை பார்த்தவள்



"டேய் சோத்து மூட்ட நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் டா.." என்று அவனை பிடித்து சுத்த முயல, அவளால் அவன் உடலை அசைக்க கூட முடியவில்லை



"டேய் கொஞ்சம் கம்மியா வளர்ந்து தொலைச்சா என்ன.. ஒரு சந்தோஷத்துல கூட உன்னை நகர்த்த முடியல டா.." என்று கூறி கொண்டே அவன் தலையில் நங்கென கொட்டி வைத்தாள் பத்மா



"அடியேய் நீ சந்தோசமா இருந்தா என்னை அடிப்பாயா.. என்னனு சொல்லி தொலை முதல.." தலையை தேய்த்து கொண்டே அபிஷேக் எரிச்சலுடன் கேட்க



"நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் டா.." என்று கூறிக்கொண்டே மேலும் அவனை நான்கு அடி அடித்தாள் பத்மா.



அவள் மீண்டும் அடித்ததில் அவளை விட்டு நான்கு அடி பின்னால் நகர்ந்தவன், "அட பாவமே உனக்கு நிஜமாவே பைத்தியம் தான் பிடிச்சிருச்சா.. ஐயோ என் தோஸ்த்துக்கு பைத்தியம் பிடிச்சுருச்சே.. என்ன ஆச்சுன்னு தெரியலையே.. வா பத்மா முதலில் ஹாஸ்பிடல் போகலாம்.." என்று புலம்பி கொண்டே மெதுவாக அடி மேல் அடி வைத்து அவள் அருகில் வந்த அபிஷேக்



"அடிக்க கூடாது சரியா.." என்று கூறிக்கொண்டே வர



"டேய் லூசு பயலே.. யாரு டா பைத்தியம்.. நீ தான் டா பைத்தியம்.." என்று மீண்டும் அவனை கொட்டி வைத்தாள் பத்மா



அதில் முழுவதும் கோபம் அடைந்தவன், "திஸ் இஸ் த லிமிட்.. போ டி.." என்று ஒற்றை வில் நீட்டி எச்சரித்து விட்டு திரும்பி நடக்க



"டேய் டேய் நில்லு டா.. சொல்லுறேன் டா.." என்று அவனை பிடித்து இழுத்தாள் பத்மா



அதில் விவரமாக இரண்டு அடி அவளை விட்டு தள்ளி நின்றுகொண்டவன், "டைம் இல்ல சீக்கிரம் சொல்லு.." என்றான் எப்போது வேண்டுமானாலும் ஓட தயாராக நின்றபடி



அதை பார்த்து சிரித்துக்கொண்டவள் மென் குரலில் காலை அந்த பாட்டி கூறிய அனைத்தையும் அவனிடம் கூறினாள்..



"இத்தனை நாள் அதர்வா மாமா எனக்கு என்ன உறவோன்னு பயந்துட்டே இருந்தேன் டா.. இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கு டா.." என்று மகிழ்ச்சியுடன் பத்மா கூற, அவள் கூறியதை கேட்டு அபிஷேக்கிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது..



"சூப்பர் பத்மா.. நிஜமாவே சந்தோசமா இருக்கு டி.." உண்மையான மகிழ்ச்சியுடன் இருவரும் நின்றிருக்க, இதை மறைந்திருந்த கேட்ட மற்றொருவனோ உச்சகட்ட அதிர்ச்சியில் நின்றிருந்தான்..




தேடல் தொடரும்...


ஹாய் டியர்ஸ்

திருடி சென்றாய் இதயத்தையே அடுத்த யூடி போட்டச்சு கமெண்ட்ஸ் ப்ளீஸ்


https://srikalatamilnovel.com/community/threads/ஸ்வராகினியின்-திருடி-சென்றாய்-இதயத்தையே-கருத்து-திரி.1023/
 
Last edited by a moderator:

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 16:



“என்னடா மகனே சொல்ற? நீ சொல்றதெல்லாம் உண்மையா?” என்று தன் மகன் ரஞ்சித் கூறியதை நம்பமுடியாது மனதில் வஞ்சினம் பொங்கக் கேட்டார் ராஜேந்திரன்.



“உண்மை தான் ப்பா” என்றவன்... அவன் கேட்ட உண்மைகளும் அதனால் இவன் அதிர்ந்து நின்ற தருணத்தையும் தந்தையிடம் எடுத்துக் கூறினான்.





பத்மா அந்தவீட்டு வைத்தீஸ்வரியின் பெண் என்பதை அபிஷேக்கிடம் கூறிக் கொண்டிருக்கும் சமயம் மறைந்திருந்து கெட்டவன் ரஞ்சித் தான்...! முதலில் அவளின் கூற்றை நம்பமுடியாது இருந்தவன் பின்பு அவள் கூறியதை நன்றாக யோசித்து பார்த்தவன் தான் அவள் அந்த வீட்டு பெண் என்று உறுதி செய்தான்...!



“மகனே இனி நாம நமக்கென்னன்னு இருந்தா குடி முழுகி போயிரும்டா... இதுக்கு எதாவது நாம செய்தே ஆகணும்... அவ மட்டும் இந்த வீட்டு பொண்ணுன்னு தெரியவந்தா சொத்தெல்லாம் அவளுக்கு போய் நாம தலையில துண்டை போட்டுட்டு நிற்கணும் இதுக்கு எதுவும் மாற்று வழியை யோசிக்கணும்”



“ஹ்ம்ம்... கவலைப்படாதீங்க ப்பா இனி அவளை எப்படி விரட்டணும்னு முடிவு பண்ணி அதுக்கான வேலையை பார்த்துட்டு தான் வந்திருக்கேன்” என்றவன் புன்னகையில் விரோதம் வழிந்தது.



“என்னடா அது?” என்று அவன் தந்தை ஆர்வமாக வினவினார்...





“இது தான் அது” என்றவன்... அவன் உள்ளங்கைகளை தந்தை முன் விரிக்க அதில்இருந்து தொங்கியது அந்த தங்கச்சங்கிலி அது பத்மாவிடமிருந்து அதர்வ பறித்து கொண்டது.





ஆனால் அவன் கையில் இருக்கும் பொருளுக்கும் பத்மாவானா ஆர்னாவிர்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாது விழித்தவர்... “இது என்னடா செயின்?”என்று வினவினார்.



“இது நம்ம வீட்டுல இருந்து தொலைஞ்சு போன ஆர்னா கழுத்துல போட்டிருந்தது. உண்மை தெரிஞ்சுதும் நான்வேகமாகயோசிச்சுஅவங்க அறையை சோதனை போடப்போய் கிடைச்சது. இதை வச்சு தான் அவ இந்த வீட்டுக்குள்ள வர முடியும்” என்றவன் அவன் அதை பறித்துக் கொண்ட கதையை கூறினான்.





ரஞ்சித், பத்மா கூறியதை ஒளிந்திருந்து கேட்டவன் வேகமாக யோசித்தவன் எதுவும் தோன்றாமல் தடுமாறி நின்றான். சிலவினாடிகளில்அவன் மூலையில் பளிச்சென்று ஒரு எண்ணம் தோன்ற இனி தாமதப்படுத்துவது சரிபடாது என்றெண்ணிஅடுத்தநொடிஅவன் நினைத்ததை செயலாற்றிவிட்டே இருந்தான்.ரஞ்சித்அவள் தான் ஆர்னா என்பதற்கு எதுவும் தடயம் இருக்கிறதா என்று எண்ணி சோதனையிட அவளின் அறைக்கு சென்றிருந்தான் ஆர்னா திருமணத்திற்கு பிறகு அதர்வா அறையில் தான் தங்குவதால் அங்கேயே சென்றிருந்தான்.அறைக்குள் நுழைந்ததும் வேகமாக துழவ ஆரம்பித்தான்கண்களில் விளக்கெண்ணெய் விடாத குறையாக ஒவ்வொன்றையும்துழாவினான்... அலமாரி, மேஜை, ட்ராவர் என்று அனைத்தையும் சோதனையிட அவனுக்கு ஏமாற்றமே கிட்டியது! ஆனால் முயற்சியை கைவிடாது அவன் சோதனையிட்டு சோர்வுடன் திரும்பும் வேலை... அவன் காலடியில் அதர்வா ஆடை ஒன்று அவன் காலடியில் விழ அதை எடுத்து சாதரணமாக உள்ளே வைக்கப்போன சமயம் அதிலிருந்து தங்கச்சங்கிலி ஒன்று விழுந்தது. அதை பார்த்தவன் அதிர்ந்து போனான்! அது சிறுவயதில் ஆர்னா கழுத்தில் இருந்தது என்னதான் சிறியவனாக இருந்த போதிலும் அவளையும் அந்த சங்கிலியையும் ஞாபகம் வைத்திருந்தான். அதர்வா சிறுவயதில் ஆர்னா மேல் தான் பாசம் வைத்திருந்தான்... அதனால் அவள் வைத்திருக்கும் பொருள்மேல் அவன் கவனம் சென்றதில்லை; ஆனால் ரஞ்சித் அப்படியில்லையே... எந்தநேரமும் அந்த வீடு, சொத்து, பணம்பொருள் என்று இருந்த அதன்மேல் மட்டும் கண்ணாக இருந்த காரணத்தினாலே அவனால் அந்த சங்கிலியை அடையாளம் காண முடிந்தது! அதர்வாவிற்க்கோ அதை தொடும்போது உணர்வுகள் மேலிட்டாலும் கூட சரியாக நினைவில்லாமல் போனது!இப்போது ரஞ்சிதிர்க்கும் அதுவே வசதியாக இருக்க, இனி தாமதிக்கக்கூடாது என்று நினைத்து வேகமாக திட்டமிட்டான்... அடுத்து அவன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தவன் தீவிரமாக பேசிவிட்டு பேசியை அணைத்து அவன் நினைத்ததைசெய்து முடித்த திருப்தியில் வன்மமாக சிரித்துக் கொண்டான். அவன் நடந்ததை கூறி முடித்திருக்க அவன் தந்தையும் மகனின் செயலில் பெருமையாகசிரித்துக்கொண்டார்! அவர்கள் அறியவில்லை அவர்களின் சதித்திட்டம் அவர்களுக்கே வரப்போவதை!!





********************



அபிஷேக்வீட்டின் பின்புறத்தில் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.



பத்மாவை எப்படி இந்த வீட்டிற்கு நிரூபிப்பது என்றுதான் சிந்தனையில் ஆழ்ந்தான்...பத்மா அவனிடம் உண்மையை கூறிய பிறகு அவளுக்கு எபப்டியும் தன்னை இந்த வீட்டில் நிரூபிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவளுகென்று எதுவும் சிந்தனை தோன்றாத நிலையில் தான் அபிஷேக்கை நாடினாள்.



அவன்அதை பற்றி சிந்திக்கின்றேன் பேர்வழி என்றுவானத்தையும், பூமியையும் மாறிமாறி பார்த்துக் கொண்டும்... தாடையில் ஒற்றைவிரல் தட்டிக் கொண்டு வேறுஇருந்தான்?பத்மா அவன் எப்போது கூறுவான் என்ற அவனையேசிந்தனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.



“ஹ்ம்ம் இப்படி செஞ்சா என்ன?” என்று முனகியவாறு பத்மா முன்ஷாக் அடித்தது போல் நிற்க,பத்மாவோ...



“அப்பாடா எப்படியோ சொல்லப்போகிறான்” என்று ஆர்வமாக பார்க்க...“ஹ்ம்மம்ஹ்ம்ம் இது சரிவராது” என்று கூறிவிட்டு... மறுநொடி முதலில் இருந்து செய்ததை திரும்பச் செய்யலானான். அவளின் ஆர்வத்தில் மண்விழுந்திருக்க...



“மச்.,” என்று உச்ச கொட்டிவிட்டு கன்னத்தில் கைவைத்த படி சலிப்புடம்அப்படியே அமர்ந்துவிட்டாள்.



இரண்டாவது ஒருமுறை...“நான் கண்டுபிடிச்சுட்டேன்” என்று ஏதோ விஞ்ஞான சாகசம் கண்டதை போல் நின்றவனை முன்னை விட வெகு ஆர்வமாக பார்த்தாள்... இப்போதும் “ஹ்ம்மம்ஹ்ம்ம் இதுவும் செட் ஆகாது” என்று கூறிவிட்டு சென்றான். இரண்டாவது முறையாக சலித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள் பத்மா... இதுவே ஐந்து முறை தொடர்கதையாக அதற்கு மேல் பொறுமையை இழந்தாள் பத்மா!



ஆறாவது முறையாக “நான் கண்டுபிடிச்சுட்டேன்” என்று கூறிக் கொண்டு அவள் முன் நின்றவனின் பின்புறமாக இறுக்கி பிடித்தவள்...



“டேய் மங்கூஸ் மண்டையா நானும் பார்க்கிறேன் வானத்தை பார்க்கிற, பூமியை பார்க்கிற, பலமா யோசிக்கிற அப்புறம் என்கிட்டே வந்து சரிவராது சொல்ற... இதே அஞ்சு தடவை சொல்லிட்ட அப்படி எண்ணத்தைடா யோசித்து தொலைக்கிற சொல்லித்தொலையேன் உன்கிட்ட ஒரு யோசனை கேட்டது குத்தமாஎன்று அதட்டலாக கேட்டாள்.



“இங்கபாரு பத்துஅறிவாளின்னா இப்படிதான் பலவிதமா யோசனை செய்வாங்க இப்படி அறிவாளியோட சட்டை பிடிச்செல்லாம் கேள்விகேட்கக்கூடதுன்னு நீ படிச்ச பண்ணிரெண்டாங்கிளாஸ் வாத்தியார் சொல்லிதரலையா?” என்று நேரம்காலம் தெரியாமல் அவன் கிண்டல் பேச அவளுக்கோ ஆத்திரம் உச்சந்தலைக்கு ஏறிவிட்டது.



“அடிங்க்க்!!” என்று அவனை மேலும் இறுக்கி பிடித்தவள்...“இப்போ நான் கேட்டதுக்கு ஒழுங்கா பதில் சொல்லலைஅம்மிக்கல்ல தலைய வச்சு நசுக்கிபுடுவேன் சொல்லிபுட்டேன்”



‘ஐயையோ இவ செஞ்சாலும் செஞ்சுபுடுவாலே அப்புறம் இருபதாம் நம்பர் வீட்டுல இருக்கிற இளவரசி என்னை கட்டிக்கமட்டேன்னு சொல்லிட்டா...கஷ்டப்பட்டு கரக்ட் பண்ணின பிகரை இப்படி அஞ்சு நிமிஷத்துல கோட்டை விடுறதா? நோ நெவெர்... அபிஷேக்கான் ஒருநாளும் கோட்டை விடமாட்டான்” என்று மானசீகமாக பேசி சபதமிட்டுக் கொண்டவன்...

“இங்க பாரு பத்து நீ இந்த வீட்டு பொண்ணுன்னு சொன்னதை என்னைத்தவிர இன்னும் யாருக்கும்தெரியாது அப்படி இருக்கும்போது நாம அவங்ககிட்ட மாட்டிக்காம இருக்கணும்னா நம்மகிட்ட ஆதாரம் வேண்டாமா அதுதான் என்னன்னு யோசிச்சிட்டு இருந்தேன் அதுக்குள்ள அடிக்கவர”



அவனின் கூட்றில் இருந்த உண்மையை உணர்ந்தவள்... “என் செல்லம் அதை பற்றி தான் யோசிச்சுட்டு இருந்தியா? ஹிஹிஹி நான் கூட நீ எப்பவும் போல கிறுக்குத்தனமா எதாவது யோசிக்கிறியோன்னு” என்றவளின் குரல் முனங்கள் மட்டுமே வெளிவந்தது.



“என்ன சொன்ன கடைசியா?” என்று அவள் முனங்களை அபிஷேக் விசாரிக்க...



“ஹிஹிஹி உன்னை போய் தப்பா நினைசுட்டேன்னுஎன்னை நானே திட்டிகிட்ட” என்று சிரித்துக் கொண்டே சமாளித்தாள்.



“சரிசரி இப்போ சொல்லேன்”என்றதும்தன்விளையாட்டுத்தனத்தை கைவிட்ட அபிஷேக்பேச ஆரம்பித்தான்.



“நீ இந்த வீட்டு பொண்ணுதான்னு நிரூபிக்க ஏதாவது ஆதாரம் இருக்கணுமே அப்படி எதுவும் இருக்கா?” என்றவனை யோசனையாக பார்த்தவள்...“அப்படி ஏதும் இல்லையேடா தாத்தா கொடுத்த பெட்டி தான் இருக்கு அதுக்குமேல ஒன்னு கூட இல்லை” என்று யோசித்தவளின் குரலில் மின்னல் வெட்டியது தங்கச்சங்கிலி!



“ஹான்... கிடைச்சிருச்சு! கிடைச்சுருச்சு! கிடைச்சுருச்சு!” என்று குதுகலமாக கூறியவளை ஆர்வமாக பார்த்தவன்...



“சொல்லு பத்து என்ன அது?”



“நான் போட்டிருந்த செயின் தாத்தா இருந்தவரை எக்காரணம் கொண்டும் அதை என்ன கலட்டவிட்டதில்லை; கடைசியா அவர் பெட்டி கொடுக்கும் போது இருந்த கடிதத்தை வச்சு பார்த்தா கண்டிப்பா அது எனக்காக இந்த வீட்டுல இருக்கவங்க போட்டுவிட்டதா தான் இருந்திருக்கணும்” என்றவளின் பேச்சு கடைசியா தோன்றிய ஒன்றில் சுண்டிப்போனது!



“என்ன ஆச்சு பத்து ஏன்சோகமாகிட்டஇனி இந்த அபிஷேக்கான் எல்லாமே பார்த்துப்பான்”என்றவனை கலங்கிய கண்களுடன் பார்த்தவள்...



“அந்த செயின் தான் இப்போ அவர்கிட்ட இருக்கே? அப்புறம் எப்படி?” என்று கூறியவளின் குரலின் சுருதி குறைந்து ஒலித்தது...அபிஷேக்கும் அதற்கு பிறகு தான் அதை பற்றி யோசித்தவன்...



“பத்து நான் ஒன்னு சொல்லவா?”



“சொல்லுடா”



“நாம விட்ட தொழிலை முதலும் கடைசியுமா கையில எடுப்போம்” என்றதும் அவனை தீப்பார்வை பார்த்தாள்.



“உனக்கு கிறுக்கா பிடிச்சுருக்கு... என்ன சொல்றன்னு தெரிஞ்சுதான் சொல்றியா?” என்று கோபமாக அதட்டினாள்.



“பொறு பத்து... இப்போதைக்கு அது ஒண்ணுதான் ஆதாரம் அதுவும் உன்னுடைய பொருளை தான் நீ எடுக்கப்போற எப்படியும் அதை அந்த எம்ப்டன் திரும்ப கொடுக்கமாட்டான் காலம் பூரா அப்புறம் நீ இப்படியே இருக்கணும் யோசிச்சுக்கோ” என்றவனின் கூட்றை சிறிது நேரம் யோசித்தவள்...



“சரிடா இது தான் லாஸ்ட் இதுக்கப்புறம் இதை பத்தி யோசிக்கக்கூடாது சரி என்ன செய்யலாம் அடுத்து அதையும் நீயே சொல்லு”



இருவரும் சிறிதுநேரம் மெல்லிய குரலில் பேசிக் கொண்டவர்கள் பேசிமுடிந்ததும்“எப்படி என் திட்டம்?” என்று அபிஷேக் சட்டையை தூக்கிவிட்டு கொள்ளும் சமயம்....



“பட் பட்” என்று கரகோஷம் கேட்க... இருவரும் திடுக்கிட்டு திரும்பினார்கள் அங்கே கைகளை தட்டிக் கொண்டு வந்தவன் அதர்வா!



“என்ன இங்கயும் உங்க கைவரிசையை காட்ட திட்டம் போட்டீங்களா? சபாஷ்!” என்று இறுகிய குரலில் கூறியதும் இருவருமே ஒருநொடி நடுங்கிவிட்டனர்... ஆனால் அப்போது சுதாரித்தது பத்மாதான் சமீபமாக தாலிப்பிரித்து கோர்க்கும் வைபவமும், அதர்வா அவளின் மாமன் என்பதும் கொடுத்த தைரியத்தில் துணிவாக அவனை நோக்கியவள்...



“இங்க பாருங்க...’ என்றவள் அவள் கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை அவன் முன்பு நீட்டி...“இதை கட்டினது நீங்க... நான் உங்க மனைவி! என்னைக்கும் என் புருஷனுக்கு ஒரு கெட்டப்பெயரை பெற்றுதரவிடமாட்டேன்” என்று ஆவேசமாகவே கூறியிருந்தாள்.



அவளின் பேச்சில் “ஹஹஹா” என்று சிரித்தவன்...“நீ என் மனைவி...?;எனக்குகெட்டப்பெயர் வரபோல நடந்துக்கமட்டா?; இதை நான் நம்பனும்?”என்று கிண்டல் போலவே வினவினான்.



ஆனால் அதற்கெல்லாம் அசராது அவனை நிமிர்வுடன் நோக்கியவள்...“இதை நம்பினாலும் சரி நம்பாட்டியும் சரி இதுதான் உண்மை” என்றவளின் பேச்சைஎதிர்த்துபேசபபோனவனை அவளின் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவனை தடுத்து நிறுத்தியது. அதன்பிறகுவேகமாக அவன் அறைக்கு சென்றவன் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.



அதர்வா பத்மாவின் நடவடிக்கைகளை பார்த்து சிந்தனையில் இருந்தநேரம் அவனின் காவல்துறை மேலதிகாரி அழைப்பதாக கூறிவிட்டு விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு இரவோடுஇரவாக சென்னையை நோக்கி பயணித்தான்.



**************************



பத்மா அபிஷேக் இருவரும் அவளின் தங்கச்சங்கிலியை எப்படி கைப்பற்றுவது என்ற யோசனையில் ஆழ்ந்து அதற்கு தீர்வும் கண்டு உற்சாகமாக இருந்த சமயம்...அவர்களின் திட்டமும் சிதைந்துஎன்னவென்று யோசிக்க இயலாத நிலையும் உருவானது!!



*****************************



வயலூர் என்று பெயரிட்ட பலகை நோக்கி இறங்கினாள் அந்த யுவதி... நேர்த்தியாக கட்டிய காட்டன் புடவையும் அதற்கு ஏற்ப அணிகலனும் அணிந்து கிராமத்து பெண்போலவே நின்றிருந்தாள்! ஆனால் அவள் இருப்பதோ பட்டனம் இந்த புதிய தோற்றம் அவளுக்கு பெரிதாக விருப்பம் இல்லை என்றாலும்... ரஞ்சித் கேட்டுக்கொண்டதின் பெயரில் அணிந்து வந்திருந்தாள். தூரத்தில் அவளை கண்டுகொண்டவன் அவள் அருகில் நெருங்கி...





“வெல்கம் ரோஷினி” என்று வரவேற்றான் ரஞ்சித்





“அதெல்லாம் இருக்கட்டும் எதுக்காக என்னை இப்படி வர சொன்ன அதை சொல்லு?” என்று வினவினாள்.





“எல்லாமே இங்கயே நின்னு சொல்லனுமா கொஞ்சம் என்கூட வா” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு தென்னை மரம் தோப்பின் வரப்பில் நிறுத்தி பேச ஆரம்பித்தான்.





“சும்மா சொல்லக்கூடாது ரோஷினி இந்த கஸ்டியும்ல நீ செமையா இருக்க அப்படியே கிராமத்து பெண் தான் ஆச்சு அசல்” என்று அவளை பற்றி சிலாகிக்க அதில் எரிச்சில் அடைந்தவள்...



“இப்போ நீ மொக்கப்போடாம விஷயத்தை சொல்ல போறியா? இல்லையா ரஞ்சித்?” என்று கறாராக வினவியதும் எங்கே காரியம் கெட்டுவிடுமோ என்றெண்ணி விஷயத்தை கூறினான்... அவன்மேல் ஒருகாலத்தில் உண்டான ஈர்ப்பில் அவளும் அவனின் செயலுக்கு உடன்பட்டாள் அதுவும் பணம் என்றதும் அவள் வேறு இதை பற்றியும் யோசிக்கவில்லை;



ரோஷினி, ரஞ்சித் இருவரும் தெறிந்து கொள்ளாதவர்கள் போல் கட்டிக்கக்கொள்ள முடிவு செய்து ரோஷினி மட்டும் பண்ணையார் வீடு நோக்கிச் சென்றாள்... திட்டமிட்டபடி உள்ளே நுழைந்தவள் அங்கே முதலில் தேடியது வைத்தீஸ்வரியை தான்...





“அம்மா” என்று அழைத்துக் கொண்டு அவள் நிற்க வைத்தீஸ்வரி இவளின் குரலை கேட்டு ஆசுவாசமாக திரும்பினார்...வீட்டில் இருந்த அனைவருமே அவள் முன் குழுமி இருந்தார்கள்... அனைவரும் பார்க்கும் பார்வையே நீ யார் என்பது போல் வினவியிருக்க இதற்குமேல் அவள் மௌனமாக நிர்ப்பது சரிவராது என்றெண்ணி பேசஆரம்பித்தாள் ரோஷினி.





“அம்மா என்னை தெரியல? நான் தான் உங்க தொலைந்து போன பொண்ணு ஆர்னா” என்று வைத்தீஸ்வரியை பார்த்து கூறியதும் அவரோ அதிர்ந்து நின்றுவிட்டார்!



“இந்தா எங்க வந்து யார் கிட்ட கதை விடுற? நீ தான் இந்த வீட்டுக்கு பொண்ணுங்கறதுக்கு என்ன சாட்சி?” என்று பெரிய பண்ணையார்தான் சுதாரித்து அவளிடம் அதட்டலாக வினவினார்.



அவரின் பேச்சில் மனதிற்குள் அச்சம் பிறந்தாலும் அதை கட்டுப்படுத்திக் கொண்டவள்.... “இந்த பொருளை பார்த்த பிறகும் நீங்க கேள்வி கேட்பீர்களா? இது நீங்க எனக்கு ஆறு வயசுல போட்டுவிட்ட செயின்” என்று பத்மாவின் சங்கிலியை அவளது என்று கூறி காட்ட அனைவரும் அவள் சொல்வதை உண்மையா என்று நம்பி வாயடைத்து அதிர்ச்சியில் நின்றிருக்க அறையிலிருந்து அப்போதே அங்கே வந்த பத்மாவுக்கு தலையில் இடி விழுந்தது போல் பேரதிர்ச்சியாக இருந்தது!!!





தேடல் தொடரும்...





ஹாய் டியர்ஸ்

திருடி சென்றாய் இதயத்தையே அடுத்த யூடி போட்டச்சு கமெண்ட்ஸ் ப்ளீஸ்


https://srikalatamilnovel.com/community/threads/ஸ்வராகினியின்-திருடி-சென்றாய்-இதயத்தையே-கருத்து-திரி.1023/
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

இதயம் 17:

புதிதாய் வந்தவள் சொன்ன செய்தியில் வீட்டினர் அதிர்ந்துபோய் விழிக்க, அவள் காட்டிய செயினை கண்டு அவர்களின் முகங்கள் மலர்ந்தது... ஏனெனில் அவள் காட்டிய செயின் அந்த வீட்டு வாரிசின் கழுத்தில் ஆறு வயசில் போடப்பட்ட செயின் ஆகும்... இருப்பினும் தங்கள் வீட்டு வாரிசு தொலைந்து போனதை அறிந்து செயினை யார் வேண்டுமென்றாலும் ஆதாரமாக காட்ட வாய்ப்பு இருக்கு என்பதை எண்ணியவர்கள் சந்தேகம் தீராது பார்க்க,

“என்ன இன்னும் சந்தேகம் தீரலையா??? நான் இங்க இருந்து காணாமல் போகும் போது பிங்க் கலர் பாவாடை, சட்டை அணிந்திருந்தேன் அப்படின்னு என்னை தூக்கிட்டு போனவர் சொன்னார்” என சொன்ன ரோஷினி, பெரியவர்கள் சந்தேகம் நீங்க பெற்றவர்களாக முகம் மலர்ந்து நோக்க, அதனைப் பார்த்து திருப்தியாய் மனதுக்குள் புன்னகைத்தவள், வெளியில் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு,

“இவ்வளவு சொல்லி, ஆதாரம் காட்டியும் யாரும் நம்பலையா??? இவ்வளவு காலத்துக்கு பிறகு உண்மை தெரிஞ்சு என் சொந்தத்தை பார்க்க வந்தா, யாரும் என்னை ஏற்றுக்குறீங்க இல்லை... இனி நான் இங்க இருந்து என்ன பிரயோசனம்??? என் தலையெழுத்து, இனி வாழ்க்கை பூரா அனாதையா வாழணும்னு” என அழுகுரலில் புலம்பி வராத கண்ணீரை துடைக்க குனிந்து கொண்டவளை பாய்ந்து சென்று அணைத்துக்கொண்ட வைதீஸ்வரி,

“நான் நம்புறேன்டா உன்னை... என் பொண்ணு எனக்கு கிடைச்சுட்டா” என அவளை இறுக அணைத்து கண்ணீர் சிந்த, மற்றவர்களும் அவளை சூழ்ந்துகொண்டனர்...

ஆனால் இடி விழுந்ததுபோல் திகைத்து நின்ற பத்மாவிற்கு ‘இது என்னடா புது குழப்பம்???’ என தோன்றியது... அது மட்டுமல்லாமல் அதர்வாவிடம் இருந்த செயின் எப்படி இவளிடம் வந்தது என்ற கேள்வியோடு தான் அந்த செயினை வைத்தே இந்த வீட்டின் வாரிசு தான் தான் என நிரூபிக்க எண்ணி இருந்த விஷயம் இப்பொழுது எல்லா பக்கமும் மூடப்பட்ட நிலையை அடைந்தது போலாக, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் செயலிழந்து போய் நின்றவளை இரு ஜோடி கண்கள் குரூரமாய் நோக்கியதை அவள் கவனிக்கவில்லை...

புதிதாக வந்தவளை சூழ்ந்து கொண்டு அவர்கள் நடத்திய பாச சங்கமத்தை ஏக்கம் நிறைந்த விழிகளோடு நோக்கிய பத்மாவினால் அது தனக்கு கிடைக்கவேண்டிய அன்பு என தோன்றியதில் ஏற்பட்ட வலியில் அங்கு நிற்க முடியாமல் வேரோடிப்போன கால்களை சிரமப்பட்டு நகர்த்தி அங்கிருந்து நகர்ந்து தோட்டத்திற்குச் சென்றுவிட, அதனை அறியாது ரோஷினியை அணைத்திருந்த வைதீஸ்வரி, அவளை விட்டு விலகி நின்று, தன் கண்களை துடைத்துக்கொண்டவர், மகள் கிடைத்துவிட்டாள் என்ற சந்தோசத்தில் குதூகல குரலில் அவளுக்கு சொந்தங்களை அறிமுகப்படுத்த, அவளும் செயற்கை புன்னகையோடு பேருக்கு ஒவ்வொருவரிடமும் நலத்தை விசாரித்து உறவுமுறை சொல்லி விசாரிக்கலானாள்...

ராமமூர்த்தி அன்பான அணைப்பின் மூலம் தன் பாசத்தை வெளிப்படுத்தினார்... அவருக்கு இழந்த தங்கள் கை சேர்ந்த திருப்தி... ஆனால் மிகப்பெரிய கொடுமையாக ராஜேந்திரன் மற்றும் ரஞ்சித், ரோஷினியின் நடிப்பை உணராது போனது எவரின் துர்ரதிஷ்டமோ அந்த கடவுளுக்கே வெளிச்சம்...

*************

மனதில் பொங்கிய தூக்கத்தோடு தோட்டத்திற்கு வந்தவளால் நிற்க முடியாமல் கால்கள் தள்ளாட பொத்தென அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்தவளின் தலை பாரமாக கனப்பது போல் தோன்ற அதனை இரு கைகளாலும் தாங்கியவாறு குனிந்து அமர்ந்திருந்தவளின் மனம் அளவில்லா வேதனையில் குமுறிக் கொண்டிருந்தது... வீட்டின் உண்மையான வாரிசான தான் குத்துக்கல்லாட்டம் அங்கு இருக்கும் போது எவளோ ஒருத்தியை அவர்கள் இந்த வீட்டு வாரிசாக ஏற்று கொண்டதை அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை... இருந்தும் சாட்சிகளும் ஆதாரங்களையும் பார்த்து அவர்கள் முடிவு பண்ணியதை மனம் வலிக்க எண்ணியவளுக்கு அந்த சாட்சிகளும் ஆதாரங்களும் இப்பொழுது தனக்கு எதிராக இருப்பது மட்டும் புரிந்து போனது...
இந்த பிரச்சனைகளை எப்படி தீர்க்க என யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் மனதுக்குள் ஒரு விஷயம் சுரீர் என உறைக்க, இதை எப்படி மறந்தோம் என தன்னையே கேட்டு கொண்டவள் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலானாள்... அப்பொழுது தலையை தொங்க போட்டு கொண்டு வந்து அவள் அருகில் அமர்ந்த அபிஷேக்,

“என்ன பத்து இப்படி ஆயிடுச்சு???” என சோகக் குரலில் கேட்க, அவனின் சோக முகத்தை விசித்திரமாக பார்த்தவள்,

“என்ன, என்ன ஆயிடுச்சு???” என ஒன்றும் அறியாதவள் போல் கேட்க, தலையை விலுக்கென நிமிர்த்தி,

“என்ன இப்படி சொல்ற... உண்மையான வாரிசான நீ இங்கே இருக்க ஆனால் யாரோ ஒருத்தியை உண்மை என்று நம்பி அவங்க கொஞ்சிகிட்டு இருக்காங்க எனக்கு பார்க்க கடுப்பாகுது” எனச் சொல்ல, அதனை கேட்டு மெல்லிதாக சிரித்தவள்,

“அதை பற்றி நான் தான் கவலைப்படணும்... ஆனால் நான் சாதாரணமா இருக்கேன், நீ தான் ஏதோ கப்பல் கவிழ்ந்தது மாதிரி உட்கார்ந்து இருக்க... முதல்ல ரியாக்சனை மாத்துட, சகிக்கல” என முகத்தை அஷ்டகோணலாக்கி சொன்னதை கேட்டு பாவமாக முகத்தை வைத்து,

“உனக்காக தானே பீல் பண்ணினேன்... இப்போ இப்படி சொல்லுற” என அழுதுவிடுபவன் போல் சொல்ல,

“அந்த கொஞ்சலும் பாசமும் தான் நிரந்தரம் இல்லையே... அப்போ வீணான பீலிங்ஸ் அவசியம் இல்லை தானே???” என கண்சிமிட்டி சொல்ல, அதனை கேட்ட அபிஷேக் அவளை புரியாது நோக்கி,

“நீ என்ன சொல்ற???” எனக் கேட்டான்...

“ஆமாடா முதல்ல எனக்கும் கஷ்டமாத்தான் இருந்துச்சு... என்னை என நினைச்சு எவளோ ஒருத்திய கொஞ்சிகிட்டு இருந்தது... ஆனால் அவள் சொன்ன விஷயமும் அந்த செயினும் எப்படி அவளுக்கு தெரிந்தது... அதுவும் அதர்வா மாமா கிட்ட இருந்த செயின் எப்படி அவள்கிட்ட வந்துச்சு???” என என பாயின்ட் பாயின்டாக அவள் எடுத்துக் கொடுக்க, அப்பொழுதுதான் அபிஷேக்கின் முகமும் தெளிந்து அவனும் யோசனைக்கு தாவினான்...

“ஆமா பத்து... இதை நான் யோசிக்கலையே... அதுவும் அதர்வா சார் இல்லாத நேரமா பார்த்து வந்திருக்காள்”

“ஆமா... அவர் இங்க இருந்திருந்தா அந்த செயின் மேட்டர்ல அவளோட வண்டவாளம் தண்டவாளத்துல ஏறி இருக்கும்”

“அதுவும் சார் வந்ததும் நடக்கும் பத்து” என துள்ளி குதித்து சொல்ல,

“எப்படி சொல்லுற???” என யோசனையாய் கேட்க,

“இல்லை... சாருக்கு அந்த செயின் உன்னோடதுன்னு நல்லாவே தெரியும்... அவர் இங்க வந்து விஷயம் தெரியும் போது அந்த செயினை தன்னோடதுன்னு சொல்லிக்கிட்டு வந்திருக்கிறவள் பிராடுன்னு தெரியாதா??? என சொல்ல, அவளின் முகம் மத்தாப்பூவாக மலர,

“கரெக்டுடா... உனக்கு கூட மூளை வேலை செய்யுது” என மனது லேசாக அவனை கேலி செய்ய, அதில் கடுப்பாகி அவளது தலையில் கொட்டியவன்,

“எல்லாம் என் நேரம், இந்த பிரச்சனை அதரவா சார் வர தீரப்போகுத்தில்ல... அந்த தைரியத்துல இதுவும் பேசுவ, இதுக்கு மேலையும் பேசுவ” என எகிற, பதிலுக்கு எகிறாமல் முகம் சீரியஸாக மாறியிருக்க அவன் கொட்டிய இடத்தை பர பரவென தேய்த்தபடி,

“இல்லை, பிரச்சனை இனித்தான் ஆரம்பம்டா” என தீர்க்கமான குரலில் சொல்ல,

“புரியலை பத்து” என கூறி அவளது முகத்தை பார்த்தான் அபிஷேக்...

“ஃபர்ஸ்ட் அதர்வா மாமா கிட்ட இருந்த செயின் எப்படி அவள் கிட்ட போச்சு??? அதுவும் இந்த வீட்டுல இருந்தது... அதுக்கப்புறம், அவள் சொன்ன டிரெஸ் விஷயம்... அதுதான் நான் இங்கு இருந்து தொலைந்து போன போது போட்டிருந்த டிரஸ் பற்றி... எல்லோரும் நம்பினதை வச்சு பார்க்கும் போது அது கரெக்டா தான் இருக்கும் போல... ஆனா ஏன் டவுட் எல்லாம் அப்போ நடந்த விஷயம் இவ்வளவு தூரத்துக்கு மூணாவது மனுசிக்கு தெரியுதுன்னா இந்த குடும்பத்தில் இருந்துதான் யாரும் சொல்லி இருக்கணும்... அவங்க எதற்காக இதைச் சொல்லி இருப்பாங்கன்னு புரியலை... ஆனால் மூணாவது மனுஷிய கொணர்ந்து இருக்காங்க எனும் போது அது நல்ல விஷயத்துக்காக இருக்காதுன்னு தோணுது... அவங்களது நோக்கம் என்ன என்று முதலில் கண்டுபிடிக்கணும்” என அவள் சொல்ல சொல்ல கேட்டிருந்த அபிஷேக்குக்கு தலைசுற்றி போக திகைத்து அமர்ந்திருந்தவனை பார்த்து,

“என்னடா ப்ரீஸ் ஆகிட்ட???” எனக் கேட்டதில் தலையை உலுக்கி தன்னிலைக்கு வந்தவன்,

“இவ்வளவு தூரம் விஷயம் இருக்கா??? நான் கூட இதெல்லாம் யோசிக்கலை... நீ சொல்றது கரெக்டு தான்... ஆர்னான்னு சொல்லி வந்தவளும் சரி இங்கே இருந்து அவளுக்கு ஹெல்ப் பண்றவங்களும் சரி எவ்வளவு ஆபத்தானவங்கன்னு தெரியலையே” என சொல்ல அவளுக்கும் அது தான் கவலையாக இருந்தது...

அவர்கள் செய்த எல்லாவற்றையும் வைத்து யோசிக்கும் போது அவர்களின் நோக்கம் அவளுக்கு நல்ல விதமாக தோன்றவில்லை... அதுமட்டுமில்லாமல் யாரை நம்பி இதைச் சொல்ல என்ற கேள்வியும் மனதை அரித்துக் கொண்டிருந்தது... ஏனெனில் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் அவள் யாரையும் நம்ப தயாராக இல்லை... ஒருவேளை அவள் நம்பி சொல்லுபவரே பிரச்னைக்கு உரியவர் எனின் அவளுக்கு ஆபத்து வருவதோடு இந்த குடும்பத்துக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற பயம்...

எனவே அபிஷேக் துணையுடன் தானே களத்தில் குதித்து விஷயங்களை அறிய நினைப்பதை அவனிடத்தில் அவள் சொல்ல, அவனும் அவளுக்கு துணை நிற்பதாக சொன்னான்... அவர்கள் மறைக்க நினைத்ததை அவர்களுக்குப் பின்னால் இருந்த மரத்தின் மறைவில் நின்றிருந்த ஒரு உருவம், அவர்கள் பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டு முதலில் அதிர்ந்து பின் திகைத்து ஆனந்தம் அடைந்ததை அவர்கள் அறியவில்லை...

“சரி வாடா, உள்ளே போவோம்... அப்புறம் அவள் வந்தது நமக்கு பிடிக்கலைன்னு நினைக்க போறாங்க... இனிமேல் இந்த வீட்டுல நிறைய சீன்ஸ் நடக்கும், எல்லாத்தையும் சகிச்சுக்கணும்” எனச் சொல்லி பத்மா எழுந்து கொள்ள, அபிஷேக்கும் எழுந்து அவளுடன் நடக்க, இருவருமாய் உள்ளே சென்றவர்களை ஹாலில் போடப்பட்டிருந்த பெரிய இருக்கையில் வைத்தீஸ்வரி மற்றும் ராமமூர்த்திக்கு நடுவில் ரோஷினி அமர்ந்து வைத்தீஸ்வரியின் தோளில் சாய்ந்திருக்க, மற்றவர்கள் ஏனைய இருக்கைகளில் அமர்ந்து இருந்த காட்சி கண்ணில் பட, நேராக அவர்களின் முன்னால் சென்று நின்று கொண்டனர்...

பத்மாவை கண்டதும் புன்னகை முகமாக,

“ஆருமா, இது பத்மா... இந்த வீட்டு மருமகள், அதாவது நம்ம அதர்வா பொண்டாட்டி... நீ இல்லாத குறையை தீர்த்தவள்... எனக்கு பொண்ணு மாதிரி” என வாஞ்சையுடன் பத்மாவை பார்த்து வைத்தீஸ்வரி அவளை அறிமுகப்படுத்த, பத்மாவும் சிரித்த முகமாக, “ஹாய்!” என்றாள்... அதில் திடுக்கிட்டு வைத்தீஸ்வரியின் தோளில் இருந்து எழுந்து நிமிர்ந்து அமர்ந்த ரோஷினி, நொடியில் தன் திடுக்கிடலை மறைத்து இதழ்களில் புன்னகை படர,
“ஒஹ்... உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம்... எங்க அம்மாவை சந்தோசமா வைத்திருந்ததுக்கு நன்றி” என சொல்ல, வைத்தீஸ்வரி பெண்ணின் தலையை அன்போடு வருடிக்கொடுக்க, பத்மாவோ ‘எங்க அம்மா’ என ரோஷினி அழுத்தி சொன்னதில் காண்டாக, அதனை வெளியில் காட்டாது,

“அது என் கடமை” என புன்னகையுடன் கூறி ஒரு கொட்டு வைக்க, உள்ளுக்குள் புகைந்தாலும் வெளியில் இளித்து வைத்த ரோஷினி, பத்மாவுடன் நின்றிருந்த அபிஷேக்கை பார்த்து,

“யார் இந்த குண்டு பூசணி???” என கேட்க, அதில் பத்மா எதிரில் இருந்தவளை முறைத்து எதுவோ சொல்ல வருவதற்கு முதல்,

“என்னய்யா பூசணின்னு சொன்னீங்க??? இதுவரை எல்லாரும் பிஞ்சுபோன பண்ணு மூஞ்சி, தகர டப்பா மூஞ்சின்னு தான் சொன்னாங்க... ஆனா நீங்க தான் இப்படி ஒரு நல்ல பெயரை சொல்லியிருக்கீங்க” என வாய் எல்லாம் பல்லாக இளித்தபடி சொல்ல, அவனை கலங்க வைக்க வேண்டும் என நினைத்த ரோஷினி தான் கடைசியில் மூக்குடைபட்டு “ஙே” என விழிக்கும் படி ஆனது... அவளது முகம் போன போக்கை கண்டு பத்மாவுக்கு சிரிப்பு வர கஷ்டப்பட்டு வாய்க்குள் அடக்கிக் கொள்ள, மற்றவர்களின் முகங்களிலும் அபிஷேக்கின் செயலில் புன்னகை தவழ்ந்தது... வைத்தீஸ்வரி தன் சின்ன மகளை பார்த்து,

“அக்காவை உள்ளே கூட்டிட்டு போ சுமி” என பணிக்க, அவளும் இத்தனை வருஷம் காணாத தமக்கையை தன்னோடு அழைத்து செல்ல, மற்றவர்களும் தங்கள் வேலையை பார்க்க சென்றனர்...

*****************

அந்த வீட்டின் வாரிசை நீண்ட வருடங்களின் பின் வந்ததன் பெயரில் அன்றைய தினம் விருந்தும் கொண்டாட்டமுமாக அமளிப்பட்டது அந்த வீடு... ஒவ்வொருவர் ஒவ்வொரு வேலையாகச் சுற்றிக் கொண்டிருக்க, பத்மாவும் சமையலறையில் நின்று உதவிக் கொண்டு இருந்தாள்... காய்கறிகள் நறுக்கிக் கொண்டிருந்த வைத்தீஸ்வரி,

“இன்றைய விடியல் இப்படி சந்தோசமா இருக்கும் என்று நான் நினைக்கவே இல்ல அண்ணி... என்னைவிட்டு போன உசுரு இத்தனை வருஷங்களுக்கு பிறகு என் கையில் வந்து சேர்ந்துடிச்சு” என நெகிழ்ந்த குரலில் சொன்னவரை கனிவாய் நோக்கிய ராஜாத்தி,

“எல்லாம் நன்மைக்கேன்னு நினை... நம்மை பிடித்த சனி இதோட போய்ட்டுன்னு நிம்மதியா இருக்கு” என சொல்ல, கேட்டிருந்த பத்மாவுக்கு ரோஷினி மேல் கோபம் கோபமாக வந்தது... இப்படியான அன்பு நெஞ்சங்களை தன் தேவைக்காக உபயோகப்படுத்துகிறாளே என்று...

இவர்களுக்கு உண்மையை சொல்லலாம் என்றால் அவளிடம் எந்த ஆதாரமும் இல்லை... அப்படியே சொன்னாலும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என தெரியாததால் வாயை இறுக மூடிக்கொண்டு வேலையை பார்த்தவள், அது முடிந்ததும் ராஜாத்தியிடம் திரும்பி,

“நீங்க சொன்ன வேலை எல்லாம் செய்திட்டேன்... வேற ஏதாவது வேலை இருக்கா அத்தை???” என கேட்க,

“ஒண்ணும் இல்லைடா... இனிமேல் ஏத்தி இறக்குற வேலை தான்... அதை நாங்க பாத்துக்கிறோம்... நீ போய் குளிச்சுட்டு நல்ல புடவையா கட்டிக்கோ” என சொல்லி அனுப்ப, அவளும் தலையாட்டிவிட்டு அங்கிருந்து தங்களது ரூமிற்கு சென்றாள்...

இப்படியாக மாறி மாறி, விருந்துகளும் ரோஷினியை பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்க, பண்ணையார் வீடு எப்பொழுதும் கலகலப்பாக இருக்க, விதியை நொந்தபடி பத்மாவும் அதில் கலந்து கொண்டாள்...

மேலும் இரு தினங்கள் சென்ற பின்பு சென்னை சென்றிருந்த அதர்வா தன் வீட்டில் ஆஜராக, குடும்பம் மொத்தமும் அவனை சூழ்ந்து கொண்டது, ரோஷினியை தவிர... எல்லோர் மேலும் பார்வையை சுழலவிட்டவனது விழிகள், பத்மாவிடத்தில் சிறிது அதிக நேரம் நிலைக்கவிட்டு திரும்பி தந்தையை நோக்கி,

“அவள் எங்கப்பா???” என கேட்க,

“அம்மாடி ஆர்னா, இங்க வாமா” என உள்நோக்கி குரல் கொடுக்க, சில நிமிடங்களில் சுமியோடு வந்த ரோஷினியை கண்டு ஆர்வத்தோடு அவளருகில் சென்று,

“அம்முக்குட்டி வந்துட்டியா???” என கேட்டு அவளது கைகளை பிடித்துக்கொண்டு அவன் கேட்டதில் அதுவரை தந்தை சொன்னதை கேட்டு அது பொய் என கூறி உண்மையை தெளிவுபடுத்தி ரோஷினியை வெளியில் துரத்துவான் என ஆவலோடு காத்திருந்த பத்மா, மன்னவனின் செயலில் அதிர்ந்து சிலையாய் சமைந்து போனாள்...

தேடல் தொடரும்........

ஹாய் செல்ல குட்டீஸ்,

"திருடி சென்றாய் இதயத்தையே" அடுத்த ud போட்டாச்சு பேபீஸ்..

படித்துவிட்டு உங்கள் கருத்தை கன்டிப்பா பகிர்ந்துக்கோங்க பேபீஸ்..

 

aishu

Bronze Winner
இதயம் 18


"அம்முக்குட்டி வந்துட்டியா?? " எனக்குரலில் இத்தனை வருட பிரிவினால் உண்டான வருத்தத்தையும் ஏக்கங்களையும் ஒன்று திரட்டி அதர்வா கேட்டதில் அங்கிருந்த நால்ரும் வெவ்வேறு விதமாக அதிர்ந்தனர்.

தன்னுடைய கடைசி நம்பிக்கையாக அதர்வாவை எண்ணி அவனின் வருகைக்காக ஒவ்வொரு நொடியும் காத்துக்கொண்டிருந்த பத்மாவுக்கு அதர்வாவின் செயல் அவள் தலையில் யாரோ பாரங்கல்லை போட்டது போல் இருந்தது.. 'கடைசியில நீயும் அவள் நாடகத்தை நம்பிட்டியே மாமா!!!' என அவள் மனம் உள்ளுக்குள் கதற, முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க மிகவும் போராடினாள்.

அபிஷேக்கோ, "அட நல்லா ஆர்ம்ஸை மட்டும் அர்னால்டு மாதிரி வளர்த்து வச்சிருந்தா மட்டும் போதாது போலிஸ்கார் மூளையை அட்லீஸ்ட் மினியேச்சர் சைஸ்லயாச்சும் வச்சிருக்கனும்.. என்னையும் பத்துவையும் தவிர இந்தாளு ஊருல இருக்க எல்லா பக்கிங்களையும் நம்புவான் போல... அம்முகுட்டியாம்ல உண்மை தெரிய வரட்டும் ரெண்டு பேரையும் அம்மிக்கல்லை போட்டே அடிக்கிறேன்" என அபி தன் தோழிக்காக வருத்தப்பட்டு அதர்வாவை நன்றாக அர்ச்சித்துக் கொண்டிருந்தான்.

ரஞ்சித்திற்கோ அதர்வா இப்படி எந்தக் கேள்வியும் கேட்காமல் அவளை நம்பிவிட்டது மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருக்க, அதர்வாவை நன்றாக வாட்ச் செய்ய வேண்டும் என மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டான்.

ஆனால் இவர்கள் யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தான் வந்த வேலையைக் கூட மறந்து தன் முன் பரிதவிப்புடன் நின்றிருந்த அதர்வாவை கண் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஆர்னாவாக நடித்துக் கொண்டிருந்த ரோஷினி.

அதர்வாவை புகைப்படத்தில் பார்த்திருந்தாலும் இப்படி தனக்கு மிக அருகில் ஆண்மைக்கு இலக்கணமாய், திண்ணிய உடல் முறுக்கேறிய புஜங்கள் தீட்சண்யமான பார்வையுடன் நின்றிருந்தவனின் அழகில் சொக்கிப் போனவள் அதர்வாவிடம் கவனமாக இருக்கச் சொல்லிய ரஞ்சித்தின் அறிவுரைகளை காற்றில் பறக்க விட்டிருந்தாள்.

அவளின் மோன நிலையைக் கலைத்த சுமி மிகவும் ஆசையுடன் , "அக்கா என்னக்கா இப்படிப் பார்க்குற, இவர் தான் நம்ம மாமா அதர்வா .. சின்ன வயசுல கூட நீங்க ரெண்டு பேரும் தான் ஒன்னாவே இருப்பீங்கன்னு கூட அம்மா சொல்லுவாங்க மறந்துட்டியா" என பேசிக்கொண்டே போக,

அதில் சுதாரித்த ரோஷினி , " என்ன சுமி பேபி இப்படிச் சொல்லிட்ட என் மாமாவை நான் மறப்பேனா?? நான் இத்தனை வருஷமா உயிர் வாழ்ந்துகிட்டு இருந்ததே என் மாமாவையும் நம்ம குடும்பத்தையும் பார்ப்பீங்கன்ற நம்பிக்கையில தான்.. சட்டுன்னு மாமாவைப் பார்க்கவும் அப்படியே கையும் ஓடலை காலும் ஓடலை.." என சுமிக்கு பதிலளித்தவள்,

அங்கு தன்னையே கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்த பத்மாவை நோக்கி ஒரு நக்கல் பார்வையை சிந்தியவள் , யாரும் எதிர்பாராவண்ணம் அதர்வாவை கட்டிப்பிடித்து குலுங்கி குலுங்கி அழுகத் தொடங்கினாள்.

அவள் செய்கையில் ரஞ்சித் முதற்கொண்டு அனைவருமே அதிர , பத்மாவோ அரிசையைப் போட்டால் வெந்துவிடும் அளவிற்கு கொதிநிலையில் இருந்தாள்.

ரோஷினி இவ்வாறு செய்வாள் என எதிர்பார்க்காத அதர்வாவும் முதலில் அதிர்ந்தவன் பின் அவள் தலையை வருடிக் கொடுத்து அவளை சமாதானப் படுத்த முயன்று கொண்டே அவளை தன்னில் இருந்து பிரித்து நிறுத்தினான்.

"என்னாச்சு அம்மு அதான் திரும்ப எங்ககிட்டயே வந்துட்டியே.. கூல் டவுன் டா.. நீ அழுதா வீட்டுல எல்லாரும் கஷ்டப்படுறாங்க பாரு" என அதர்வா அவளை சமாதானப் படுத்த, பத்மாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது .

அவளின் முகமாற்றங்களை கவனித்த வைத்தீஸ்வரிக்கு அவளின் வருத்தம் மனதை பிசைய, அதர்வாவிடம் இருந்து ரோஷினியை தன் புறம் இழுத்தவர், "அதர்வா கண்ணா இப்போ தான் ஊர்ல இருந்து களைப்பா வந்துருப்ப.. நம்ம ஆர்னா இனி நம்ம கூட தான இருக்கப் போறா.. நீ ரூம்ல போய் ரெஸ்ட் எடு ... பத்மா நீ போய் உன் புருஷனுக்கு வேண்டியதை பாருடாமா" என அதர்வாவிடம் கூறியவர், 'புருஷன்' என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து அதர்வா அவளுக்கு மட்டுமே சொந்தம் என்பதை பத்மாவிற்கு உணர்த்தினார்.

"சரிங்கத்தை .. போய் ஃப்ரெஷ் ஆய்ட்டு வரேன்.. அம்முகுட்டி நீ போய் உன் வேலையைப் பாரு நம்ம அப்பறம் பேசலாம்.. பேச வேண்டியது நிறைய இருக்கு" என ஓரக்கண்ணால் பத்மாவைப் பார்த்துக் கொண்டே கூறியவன் விடுவிடுவென மாடிப் படிகளில் ஏறி தன்னறைக்குள் சென்றான்.

'அம்மானா அம்மா தான்' என மனதிற்குள் அன்னையை கொஞ்சிக் கொண்ட பத்மா , அதர்வாவை மனதிற்குள் வறுத்தெடுத்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்து மேலே சென்றாள்.

போகும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ரோஷினியின் பார்வை வைத்தீஸ்வரிக்கு ஏனோ நெருடலாக இருக்க 'அதர்வாவிடம் அளவாக பழகச் சொல்லி கண்டிக்க வேண்டும்.. சீக்கிரம் இவளுக்கும் ஒரு நல்ல வரனாய் பார்த்து திருமணத்தை முடிக்க வேண்டும் ' என மனதிற்குள் குறித்துக் கொண்டவர் தன் வேலையை கவனிக்கச் சென்றுவிட, மற்றவர்களும் கலைந்து சென்றனர்.



*************************************



அதர்வாவின் அறைக்குள்...

"நீங்க உண்மையாகவே அவ தான் இந்த வீட்டுப் பொண்ணுன்னு நம்புறீங்களா?? " என பத்மா நேரடியாக விஷயத்திற்கு வர,

தன் சட்டையைக் கழட்டிக் கொண்டே அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்த அதர்வா , "என்ன அடுத்த டிராமாவை ஸ்டார்ட் பண்ணிட்ட போல??" என நக்கலாக கேட்டான்.

'என்னைத் தவிர எல்லாரையும் நம்ப வேண்டியது ... மங்குனி மாமா' என மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டவள் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டே, " ஆமா எனக்கு வேற வேலை இல்லை... உங்க முன்னாடி இப்படி டிராமா போட்டு ப்ராக்டீஸ் பண்ணி சங்கர் படத்துல ஹீரோயின் ஆக போறேன் பாருங்க" என அவள் நொடித்துக் கொள்ள,

"என்ன வாயெல்லாம் ரொம்ப நீளுது.. நான் ஊருக்கு போன கேப்ல அந்த ரஞ்சித் கூட கூட்டு சேர்ந்து பெரிய சதித்திட்டம் ஏதும் போட்டுட்டியோ??" என அவன் வார்த்தைகளால் அவளைத் தாக்கினான்.

அதர்வாவின் வார்த்தைகள் அவள் மனதை வலிக்கச் செய்தாலும் , இப்போது அவனுக்கு உண்மையை புரிய வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவள் இருந்ததால் எதுவும் எதிர்த்துப் பேசாமல் அவனுக்கு விளக்கி விடும் நோக்கோடு பொறுமையுடன் , "நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேழுங்க ப்ளீஸ்.. ஒரு பொண்ணு இத்தனை வருஷம் கழிச்சு திடீர்னு வந்து நான் தான் இந்த வீட்டு வாரிசுன்னு சொன்னா கண்ணை மூடிட்டு நம்பிருவீங்களா??? ஏன் அவ உங்க எல்லாரையும் ஏமாத்த வந்திருக்கக் கூடாது" என நயமாகக் கேட்க,

பத்மாவை நோக்கி ஒரு ஏளனப் பார்வையை வீசிய அதர்வா, "அடேங்கப்பா ஏமாத்துறதைப் பத்தி ஒரு திருடி பேசுறதை கேட்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. என் அம்முகுட்டி ஏமாத்துறானா அப்போ மேடம் என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க??? " என அழுத்தமாக வினவியவன் அடுத்து அவள் கேட்ட கேள்விக்கும் பதில் கூறும் விதமாக, " அப்பறம் என்ன கேள்வி கேட்ட எப்படி நம்புறன்னு தான?? ஆர்னா இந்த வீட்டுக்கு வந்தன்னைக்கே இங்க நடந்த எல்லாத்தையும் எனக்கு எங்கப்பா போன் பண்ணி சொல்லிட்டாரு.. சோ அவங்க எதை வச்சு நம்புனாங்கன்னுதான் உனக்கே தெரியுமே இங்க தான இருந்த நீ??" என அவன் கேள்வி கேட்க,

'அப்போ இவனுக்கு அந்த செயின் பத்தி தெரிஞ்சும் எந்த சந்தேகமும் வரலையா??' என நினைத்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது, இருந்தும் தன் முயற்சியில் இருந்து பின்வாங்காமல், "அப்.. அப்போ அந்த செயினை நீங்க பார்த்தீங்களா???" என கடைசி முயற்சியாக அவள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வினவ,

'இவ எதுக்கு இத்தனை கேள்வி கேட்குறா??' என்பது போல் பார்த்த அதர்வா, "ஆமா பார்த்தேன்.. ஏன் செயின் நல்லா ஐஞ்சு பவுன் தேறும்னு நீயும் அந்த வீணாப்போனவனும் அதையும் திருடிட்டீங்களா என்ன??" என அவன் மீண்டும் வார்த்தையை விட,

அவன் பதிலில் நொந்து போன பத்மா , "அதை பார்த்து உங்களுக்கு எந்த சந்தேகமுமே வரலியா??" என மனத்தாங்கலுடன் கேட்க,

அவள் குரலில் இருந்த வருத்தன் அதர்வாவை ஏதோ செய்தது , தலையைக் குலுக்கி தன்னை சமன் படுத்தியவன், " நீ எதுக்கு இப்போ இவ்ளோ கேள்வி கேட்குற?? திருடுனாலாம் கொஞ்சம் தான் திருட முடியும்னு நீதான் ஆர்னான்னு சொல்லி மொத்த சொத்தையும் அமுக்கிறலாம்னு ப்ளான் எதும் போடுறியா என்ன?? " என அவன் சந்தேகமாகக் கேட்க,

அவளுக்கு அவன் மண்டையிலே ஆட்டுக்கல்லை தூக்கிப்போட்டால் என்ன என்பது போல் கோபம் வந்தது , 'பக்கி பக்கி அங்க ஏமாத்த வந்தவளை கண்டுபிடிக்க துப்பில்லை இங்க வந்து எப்போப்பாரு என்னை சந்தேகப்பட்டுக்கிட்டே இருக்கது' என கடுப்புடன் நினைத்தவள் , இனி சுற்றி வலைத்தால் வேலைக்காகாது என்றுணர்ந்து அவனிடம் உண்மையை கூறிவிட முடிவெடுத்தாள்.

கைகளைக் கட்டிக்கொண்டு அவன் கண்களை நேராக சந்தித்தவள் தீர்க்கமான குரலில் , "நீங்க நம்புனாலும் நம்பலைனாலும் நான் தான் ஆர்னா .. இந்த வீட்டோட பொண்ணு அதாவது உங்க அம்முக்குட்டி" என சொல்ல,

அடுத்த நிமிடம் ஒரு நக்கல் புன்னகையுடன் அவளை நெருங்கியவன், "வாவ் வாவ்வ்வ் சூப்பர் என்ன ஒரு ஆக்டிங்க்!!!! மார்வெலஸ்" என கிண்டல் தொனியில் கூறியவனின் குரல் அடுத்த நிமிடமே சீற்றத்துடன் வெளிவந்தது ," திருடின்னு மட்டும் நினைச்சா இப்படி கேவலமா பொய் சொல்றியே உனக்கு வெட்கமா இல்லை.. ச்சை" என ஆத்திரத்தில் கத்தினான்.

அவன் இவ்வாறு தான் கூறுவான் என அவள் முன்பே எதிர்பார்த்திருந்ததால் அவன் பேச்சைக் கண்டுகொள்ளாத பத்மா, "நீங்க நிஜமாகவே போலீஸ் தானா??" என கிண்டலாக கேட்க,

"என்னடி லந்தா?? நீ பண்ணிய திருட்டுக்கெல்லாம் சேர்த்து உள்ள தூக்கிப் போட்டிருவேன் ஜாக்கிரதை" என அதர்வா மிரட்ட,

அதெற்கெல்லாம் அசராத பத்மா , "பின்ன என்ன என் கிட்ட இருந்து நீங்க பறிச்ச செயினை அந்த பொண்ணு தூக்கிட்டு வந்து நான் தான் இந்த வீட்டுப்பொண்ணுன்னு சொல்லுது நீங்களும் நம்புறீங்க.. அப்போ நீங்க போலீஸா இல்லையான்னு எனக்கு சந்தேகம் வரதுல்ல ஒன்னும் தப்பில்லையே" என அவள் கேட்க,

"வாட்? என்ன உளர்ற? உன் கிட்ட இருந்து நான் பறிச்ச செயின் என் கிட்ட தான் இருக்கு.. இப்படி பொய்க்கு மேல பொய்யா சொல்லிக்கிட்டே போகாத" என அவன் எரிச்சலுடன் மொழிய,

பத்மா ஒரு எள்ளல் சிரிப்புடன் , "எங்க அந்த செயினை எடுத்துக் காமிங்க பார்ப்போம்" என கேட்க, "எதுக்கு அதை அடிச்சுட்டு ஓடிரலாம்னு பார்க்குறியா??" என அவளுக்கு பதிலடி கொடுத்தாலும் அவள் கேட்டதைச் செய்ய அவன் அலமாரியை நோக்கிச் சென்றான்.

'தேடு தேடு இருந்தா தான கிடைக்கும் அதான் அந்த மேனாமினுக்கி ஆட்டையப்போட்டுட்டு போய்ட்டாளே' என பத்மா அசட்டையாக அவன் தேடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது அவளிடம் அன்று பறித்த செயினைத் தன் கையோடு எடுத்து வந்த அதர்வா அதை அவள் கண்முன் ஆட்டி ,"இப்போ என்ன சொல்லுற???" என்பது போல் பார்க்க,

பத்மாவிற்கு அதிர்ச்சியில் மயக்கம் வந்துவிடும் போல் இருந்தது.

'இது எப்படி சாத்தியம் ??' என அவள் மண்டை குழம்பித் தவிக்க, அவனோ ," என்ன வேஷம் கலைஞ்சு போச்சுன்னு ஃபீலிங்கா?? என்ன பார்க்குற?? நீயே ஒரு திருடி இந்த செயினை யார்கிட்ட திருடிட்டு வந்தியோ?? சும்மா இங்க இருக்க கெழவிங்க ஆர்னாவைப் பத்தி சொன்னதும் அப்படியே இந்தச் செயினை வச்சு இந்த வீட்டுப் பொண்ணா நடிச்சு உள்ள வந்துரலாம்னு ப்ளான் போட்டியா??? அது ஒருபோதும் நடக்காது.. ஆர்னா கொண்டு வந்த செயினும் இதுவும் வேற வேற .. இனிமேலாச்சும் ஒழுங்கா திட்டம் போடு.." என அந்தச் செயினை அவள் முன் ஆட்ட,

அப்போதுதான் அவளுக்கு அது தென்பட்டது, அவள் அணிந்திருந்த பரம்பரைச் செயினின் டாலரில் "N" என்ற எழுத்துக்குள் இரு கோடு போட்டு இரண்டு பக்கமும் "A" என்பது போல் நவ்தீபனுக்குள் அதர்வா-ஆர்னா என வரும் அர்த்தத்தில் அந்த டாலரை வடிவமைத்திருப்பார்கள், ஆனால் இப்போது அதர்வா கையில் இருந்த செயினில் ஒரு பக்கம் மட்டுமே அந்த கோடு இருந்தது.

'ஆக யாரோ வேண்டுமென்றே அந்த டாலரை எடுத்து விட்டு அதர்வாவிற்கு சந்தேகம் வராதது போல் இன்னொரு செயினை இங்கு வைத்துவிட்டு சென்றிருக்கின்றனர், அதுவும் பெரிய மாற்றங்கள் செய்தால் அதர்வாவிடம் மாட்டிக்கொள்வோம் என தெளிவாக ஒரே ஒரு கோடை மட்டும் அளித்து விட்டு இரண்டும் வெவ்வேறு நகை போல் செய்து வைத்திருப்பதிலே அவர்களுக்கு தான் இந்த வீட்டின் வாரிசு எனத் தெரிந்துதான் இப்படித் திட்டம் போட்டுள்ளனர்' என்பது புரிய, இனிமேல் அதர்வாவிடம் போராடி பயனில்லை எனப்புரிந்து அவள் பதிலேதும் சொல்லாமல் கனத்த மனதுடன் வெளியேறப் போக,

அவள் கைப்பற்றி தன்னருகே இழுத்த அதர்வா, "என்ன மேடம் இந்த திட்டம் இப்படி புஸ் வானம் ஆய்ருச்சேன்னு கவலையா?? உங்க கிட்ட தான் இந்த சொத்தை அடைய இன்னொரு வழி இருக்கே" என விஷமத்துடன் அதர்வா கேட்க,

பத்மா எதைச் சொல்கிறான் எனப் புரியாமல் முழித்துக் கொண்டே அவன் கைகளில் இருந்து விடுபட போராட, அவள் முயற்சியை முறியடித்தவன், புடவையின் இடையில் தெரிந்த அவள் வெற்றிடையில் கைகொடுத்து அவளை தன்னுடன் இறுக்கியவன், அவள் காதுக்குள் குனிந்து, "இதோ இப்போ பண்ற மாதிரி என்னை மயக்கி என் பொண்டாட்டியாகி சொத்தை அடைய வழி இருக்கே உனக்கு" என வார்த்தையில் அமிலத்தைத் தேய்த்துக் கொட்ட,

அதுவரையில் அவன் நெருக்கத்தில் சற்றே இளகிய பத்மா அவன் வார்த்தையின் வீரியத்தைத் தாங்க முடியாமல் பட்டென அவனிடமிருந்து விலகி அவனைத் தீப்பார்வை பார்த்தாள்.

"அடேங்கப்பா பெரிய கண்ணகின்னு நினைப்பு.. போடி !! எனக்கு என் அம்முக்குட்டி வந்துட்டா.. அவளுக்கும் என் மேல ஒரு இது இருக்க மாதிரி தான் இருக்கு.. சோ இனி நான் என் அம்முக்குட்டிகிட்ட பேசி பழகி அவ வாயாலையே என்னை லவ் பண்றேன்னு சொல்ல வைக்கப் போறேன்.. அவ லவ்வை சொன்ன அடுத்த நிமிஷம் நீ இந்த வீட்டை விட்டு கிளம்ப ரெடியா இரு.. முக்கியமா அந்த சோத்துமூட்டை அதான் உன் ஃப்ரென்ட் அவனையும் கூட்டுட்டு கிளம்ப இப்போவே பேக் பண்ணி வச்சுக்கோ ஓகே வா பொண்டாட்டி" என வேண்டுமென்றே பொண்டாட்டி என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தவன் அவள் அதிர்ந்து நிற்பதைப் பொருட்படுத்தாமல் துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.

'ஆர்னாவாக வந்திருப்பவளுக்குப் பின் யாரிருக்கிறார்கள் அவர்கள் நோக்கம் என்ன?? என நினைத்து வருந்துவதா ??? இல்லை இப்போது அந்த மேனாமினுக்கியிடமிருந்து தன் மாமனை எவ்வாறு காப்பாற்றுவது என நினைத்து வருந்துவதா எனக் குழப்பத்தில் பத்மா அங்கே இருந்த கட்டிலில் பொத்தென விழுந்தாள்!!!!

இவ்வளவு நேரம் அவர்களின் உரையாடலை வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த இரஞ்சித்திற்கு இப்போது தான் போன உயிர் திரும்ப வந்தது.

அதர்வா கண்டிப்பாக ரோஷினியை நம்ப மாட்டான் எனத்தெரிந்து அவன் தான் நகையை மாற்றி வைத்திருந்தான். ஆனால் அதர்வா எந்த கேள்வியும் கேட்காமல் ரோஷினியை நம்பிவிட்டது அவனுக்கு உள்ளுக்குள் நெருடலாக இருக்கவே அவர்களைத் தொடர்ந்து அவனும் யார் கண்ணிலும் படாமல் மேலே வந்தான். அதர்வா கூறிய அனைத்தையும் கேட்ட இரஞ்சித்திற்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது, 'இந்த பத்மா ஒரு திருடியாய் இருப்பதால் நல்லவேளை அவன் நம்மளை சந்தேகப்படவில்லை' என நினைத்தவன் ஓர் வெற்றிப் புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் வந்ததையும் அங்கிருந்து செல்வதையும் இருவிழிகள் நோட்டமிட்டுக் கொண்டிருந்ததை பாவம் அவன் அப்போது அறியவில்லை...


***********************************



அன்று மாலை அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர்,

மாதேஸ்வரன் அதர்வாவைப் பார்த்து, "என்ன தம்பி எல்லார்கிட்டயும் முக்கியமா ஏதோ விஷயம் பேசணும்னு சொல்லிட்டு அமைதியாகவே இருக்க?? என்னன்னு சொல்லுப்பா " எனக் கூற,

அனைவரின் மேலும் பார்வையை சுழலவிட்ட அதர்வா, அங்கு ராஜாத்தியின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்து நின்று கொண்டிருந்த ப்ரியாவின் மேல் பார்வையை அழுத்தமாக பதித்தான்.

அன்று அவனிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டதில் இருந்து ஓர் பயத்திலே சுற்றிக் கொண்டிருந்த ப்ரியா, அவன் அவசரமாக சென்னை கிளம்பவும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள்.

ஆனால் அவனோடு விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு சென்று விடவும் அவளுக்கு மீண்டும் கிலி பிடித்துக் கொண்டது, அதற்கேற்ப விஷ்ணுவும் ஊருக்குப் போனதிலிருந்து அவளிடம் பேசாமல் போக்குக் காண்பித்துக் கொண்டிருந்தவன் இன்று வீட்டிற்கு வந்த பின்னும் கூட அவள் முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல் சுற்றிக் கொண்டிருந்தது வேறு அவள் மனதில் என்னென்னவோ எண்ணங்களை விதைத்திருந்தது.

அதன் பலனாக பகல் முழுதும் அழுது கரைந்தவள், இப்போது தன் அன்னை வந்து அழைத்த பின்னே முகத்தை கழுவிக் கொண்டு வந்து நின்றாள்.

ஆனால் அதர்வாவின் பார்வையில் அவளுக்கு பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டுப் போனது . 'அச்சோ போச்சு அண்ணா நம்மளைப் பத்தி தான் பேசப்போறாங்க செத்தோம்' என கண்கள் கலங்க பயத்தில் தன் அன்னையிடம் மேலும் ஒண்டினாள் ப்ரியா.

அவள் மீதிருந்து பார்வையை விலக்கிய அதர்வா பின் அனைவரையும் பார்த்து , "நம்ம ப்ரியாக்குட்டிக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்" என பேசத்தொடங்க,

அங்கிருந்த அனைவரும் மேலே சொல் என்பது போல் பார்த்திருக்க, ப்ரியா மட்டும் அனல் மேலிட்ட புழுவாய் துடித்துக் கொண்டிருந்தாள்.

"நியாயமா பார்த்தா நம்ம அம்முக்குட்டிக்கு தான் முதல்ல பண்ணியிருக்கனும்.. ஆனா இப்போ தான் பல வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்த பொண்ணை உடனே இங்க இருந்து அனுப்ப வைத்தீஸ்வரி அத்தை ரொம்ப வருத்தப்படுவாங்க.. அதான் அவ இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்க இருந்து நம்ம கூடலாம் 'நல்லா' பேசி பழகி சந்தோஷமா இருக்கட்டும்" என அவன் பத்மாவைப் பார்த்துக்கொண்டே கூற,

பத்மாவிற்கு அவன் பழக வேண்டும் என எதைச் சொல்கிறான் என தெளிவாக புரிந்து போனதில் அவள் மனம் மேலும் காயமடைந்தது.

அனைவரைப் பற்றியும் சிந்தித்து செயல்படும் அதர்வாவை நினைத்து பெரியவர்கள் பூரித்துப் போய் அமர்ந்திருக்க அவனே தொடர்ந்தான்.

"அதான் முதல்ல நம்ம ப்ரியா குட்டிக்கு பண்ணிரலாம்னு உங்க கிட்டே கேட்க வந்தேன்.. மாப்பிள்ளையைப் பத்தி நீங்க கவலையே பட வேண்டாம் உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச பையன் தான்" எனக் கூறி விஷ்ணுவைப் பார்த்துக் கண்ணடிக்க, விஷ்ணுவும் பதிலுக்கு யாருக்கும் தெரியாமல் அவனுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பி வைத்தான்.

இந்தக்காட்சி தவறாமல் அபியின் கண்களில் விழுந்து விட , 'கருமம் கருமம் இந்த விஷ்ணு ஒருத்தனையும் விட மாட்டான் போலயே.. இவனுக்கு அந்த ரஞ்சித்தே தேவலாம் அவனாச்சும் பொண்ணுங்களுக்கு மட்டும் ரூட்டு விடுவான் ஆனா இது!!' என மானசீகமாக தலையில் அடித்து நொந்து கொண்டான் அபி.

"அப்படி யாருப்பா மாப்பிள்ளை?? பில்ட் அப் எல்லாம் பலமா இருக்கே??" என ராஜாத்தி ஆர்வம் மேலோங்கிட கேட்டுவிட,

"எல்லாம் நம்ம எல்லாருக்கும் பிடிச்ச என் நண்பன் 'விஷ்ணு' தான் மா" என அவன் பெருமையுடன் கூற, தன் காதில் வந்து விழுந்தது சரிதானா என சந்தோஷப் பரபரப்புடன் கலங்கிய கண்களுடன் தன் அண்ணனை விழுக்கென நிமிர்ந்து பார்த்தாள் ப்ரியா.

அதர்வா அவளைக் கண்டு ஆதரவாக புன்னகைத்தவன் , 'எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் டா குட்டி' என்பது போல் கண்களை மூடித் திறக்க, ப்ரியாவிற்கு தன் தமையனின் அன்பைக் கண்டு கண்கள் கலங்கியது சந்தோஷத்தில்!!!

அனைவரும் 'விஷ்ணு' தான் மாப்பிள்ளை என்றதும் ஒரு நொடி அதிர்ந்தாலும் அடுத்த நிமிடமே அதர்வாவின் மேலுள்ள நம்பிக்கையிலும் விஷ்ணுவின் குணநலன்களைக் கண்கூடாக பார்த்ததாலும் திருப்தியாக புன்னகைத்தனர்.

ரோஷினியோ யாருக்கு வந்த விருந்தோ என கடமைக்காக ஒட்டிவைத்த புன்னகையுடன் அமர்ந்திருக்க, ராஜேந்திரனும், இரஞ்சித்தும் மட்டும் 'இந்நேரத்தில் இந்த கல்யாணத்துக்கு வேற காசை அழுவணுமா ச்சை.. இந்த கல்யாணம் முடிஞ்சதும் சீக்கிரம் சொத்தெல்லாம் ரோஷினிகிட்ட இருந்து எழுதி வாங்கிறனும்' என நினைத்து கடுப்புடன் அமர்ந்திருந்தனர்.

மாதேஸ்வரன் அனைவரின் முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சியிலே அவர்களின் சம்மதத்தைக் கண்டுகொண்டு திருப்தியுடன் , "எங்க எல்லாருக்கும் சம்மதம் தான் தம்பி. ஆனா சேர்ந்து வாழப்போறது அவங்க ரெண்டு பேரும் தான் அதுனால அவங்க முடிவைக் கேட்டுட்டு நம்ம மாப்பிள்ளை வீட்டுல பேசலாம்" என தன் சம்மதத்தைக் கூறிவிட,

விஷ்ணு முகம் கொள்ளா புன்னகையுடன் முந்திரிக்கொட்டை போல், "எனக்கு ப்ரியாவை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.. எங்க அம்மா அப்பாகிட்ட கூட சென்னை போனப்போவே நானும் மாப்பிள்ளையும் போய் பேசிட்டோம் அவங்க உங்க சம்மதத்துக்காகத் தான் காத்துகிட்டு இருக்காங்க" என உளறிவிட,

"ஆக எல்லாம் ப்ளான் பண்ணி தான் நடக்குது நடக்கட்டும் நடக்கட்டும்" என வைத்தீஸ்வரி கிண்டல் செய்த பின்பு தான் தன் அவசரபுத்தியை நினைத்து அதர்வாவைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தான் விஷ்ணு.

பின் மாதேஸ்வரன் தன் மகளை நோக்கி , " என்னம்மா உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு தான??" என அவள் சம்மதத்தை கேட்க,

வெட்கத்தில் மேலும் தலை குனிந்து கொண்ட ப்ரியா, "உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா எனக்கும் சம்மதம் தான் பா" என அடக்கமாகக் கூற,

அதர்வா, விஷ்ணு, அபி மூவரும் அவளின் நடிப்பைப் பார்த்து வாயைப் பிளந்தனர்.

"அப்பறம் என்ன அப்போ மள மளன்னு கல்யாண வேலையை ஆரம்பிக்க வேண்டிதான்" என இராமநாதன் கூறியவுடன்,

"அப்போ இனி டெய்லி வீட்டுல எலிச்சத்தம் தாங்க முடியாது" என அபிஷேக் விஷ்ணு பிரியாவின் முத்தப்போரின் அக்கப்போரை நினைத்து சப்தமாக கூறிவிட,

விஷ்ணுவும் பிரியாவும் ஆடு திருடி மாட்டிக்கொண்டவனைப் போல் திரு திருவென முழித்தனர்.

மற்றவர்கள் புரியாமல் , "என்ன எலிசத்தம்???" என கேட்க,

"அது வந்தும்மா கல்யாணம்னா நிறையா திண்பண்டம்லாம் வீட்டுல செய்வோம்ல அதான் அப்போ எலித்தொல்லை தாங்க முடியாதுன்னு சொன்னேன்" என விஷ்ணுவைப் பார்த்துக் கொண்டே அபி கூறினான்.

விஷ்ணுவின் முழியை வைத்தே அபி எந்த அர்த்தத்தில் சொல்லி இருப்பான் என புரிந்து கொண்டவர்கள் மௌனமாக சிரிக்க,

சுமியோ, "அப்போ எலிமருந்தை வச்சு அந்த எலிங்களை போட்டுத் தள்ளிர வேண்டிதானே" என ஆலோசனை வழங்கினாள்.

அவள் சொன்னதைக் கேட்டு விஷ்ணு அதிர்ந்து போய் , "என்னாஆஆஆது!!!!!" என கத்த,

மற்றவர்களால் என்ன முயன்றும் சிரிப்பை அடக்க முடியாமல் போக , அனைவரும் பல நாள் கழித்து வாய்விட்டு சிரித்தனர்.

பத்மா கூட தன் கவலைகளை மறந்துவிட்டு சிரிக்க, அவள் சிரிப்பதையே மூன்று ஜோடி விழிகள் பார்த்திருந்தது!!!!!


தேடல் தொடரும்!!!



 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயம் 19


கல்யாணத்துக்கு இரு கிழமை முன்னால் நிச்சயதார்த்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க அதற்கான வேலைகள் தடல் புடலாக நடந்து கொண்டு இருந்தன. நிச்சயதார்த்த விழாவுக்காக உடை எடுக்க அனைவரும் அந்த கிராமத்தை அண்டி இருக்கும் நகரத்துக்கு செல்ல முடிவெடுத்தார்கள். . அதர்வா தனது ஜீப்பை எடுக்க அவன் அருகே ரோஷினி ஏறி இருந்தாள். அது யாருக்கும் சரியாக படவில்லை ஆயினும் ரோஷினி மனம் புண் பட கூடாது என்ற காரணத்தினால் அமைதியாக இருந்தனர். குளித்து ஆயத்தமாகி புடவை அணிந்து வந்த பத்மா மீது பிரியாவின் பார்வை பரிதாபமாக படர , அதை புருவம் சுருக்கி பார்த்த பத்மா, ஜீப்பினுள் பார்வையை செலுத்த அங்கு அதர்வா பக்கத்தில் ரோஷினி அமர்ந்து இருந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தது அவள் கண்ணில் பட்டு தொலைத்தது. அதை பார்த்ததும் மனதில் சுரீரென்று வலியெழும்பினாலும் , கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்தி வலுக்கட்டாயமாக பிரியாவை பார்த்து புன்னகைத்து விட்டு மெதுவாக ஜீப்பை நோக்கி சென்று பின்னால் ஏறிக் கொண்டாள். அவள் ஏறும் போது அதர்வாவின் கண்கள் கண்ணாடியூடு அவள் மீது படிந்து மீண்டது. விஷ்ணு மற்றும் பிரியாவுடன் சிலர் அடுத்த காரில் ஏறிக்கொள்ள , மீதி இருப்பவர்கள் வானில் ஏறிக்கொள்ள அவ்வழியால் வந்த அபிஷேக் அனைவரையும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான். அவன் ஏக்க பார்வையை உணர்ந்த அதர்வா சுட்டு விரலால் தன்னை நோக்கி அவனை அழைத்தான்.

"எதுக்கு இந்த போலீஸ் கூப்பிடுது?" என்று நினைத்த அபிஷேக்கும் அவன் அருகில் செல்ல பின்னால் ஏறும்படி கண்களால் சைகை செய்தான். அதை பார்த்த பத்மாவுக்கு தன்னோடு அபிஷேக் துணை வருவது நெஞ்சில் பால் வார்த்தது போல இருந்தது. உடனே "அபிஷேக், வாடா" என்று அழைத்த அவள் இதழ்கள் அதர்வா திரும்பி பார்த்ததும் கப்பென்று மூடிக் கொண்டது. அபிஷேக்கும் முகம் முழுதும் புன்னகையுடன் ஜீப்பின் பின்னால் ஏறிக் கொண்டான். ஜீப் , கார், வான் என பல வாகனங்களின் அணிவகுப்பில் அனைத்து குடும்பங்களும் ஜவுளி கடையை நோக்கி புறப்பட்டனர்.
போகும் வழியில் அதர்வா பக்கத்தில் இருந்த ரோஷினி பேசுகிறேன் பேர்வழி என்று தனது வெட்டி பேச்சை ஆரம்பித்தாள். "இது தானா வயல் ? பச்சை பச்சையா இருக்கு?" என்று கேட்க அங்கிருந்த மற்ற மூவருக்குமே கடுப்பாக போய் விட்டது. பொறுமை இழந்த அபிஷேக் "ஏன் உங்க ஊர்ல சிவப்பு சிவப்பா இருக்குமா?" என்று கேட்க பத்மா அவன் கையில் கிள்ளி சும்மா இருக்கும் படி சைகை செய்தாள். அவனோ "ரொம்ப பிலிம் காட்டுறா பத்மா " என்று கிசு கிசுத்தது அனைவர் காதிலும் விழுந்தாலும் , அதை கேட்டும் கேட்காத போல இருந்த ரோஷினி அதர்வாவை கடைக்கண்ணால் பார்த்தாள். அவனோ எதையும் சட்டை செய்யாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க "இப்படி பேசி இவனை கவுக்க முடியாது. ரொம்ப மேன்லியா வேற இருக்கான். புடிச்சா புளியங்கொம்பு தான் " என்று மனதுக்குள் கணக்குப் போட்டவள் "மாமா" என்று ஏக்கமான குரலில் அழைத்தாள். உடனே அவனும் "சொல்லு அம்முக்குட்டி" என்று அதே ஏக்கத்தை தேக்கி கேட்க பத்மாவின் வயிறு பற்றி எரிந்தது. உடனே அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து பத்மாவிடம் நீட்டிய அபிஷேக் "உன் ஸ்டொமக் பெர்ன் ஆகுற ஸ்மெல் வருது.. இத குடிச்சு அணைச்சுக்கோ " என்றான்.

அதை கேட்டு பத்மா அவனை முறைத்தபடி அந்த நீரை குடித்து தனது கோபத்தை அடக்கி கொண்டாள். மேலும் தொடர்ந்த ரோஷினி "உங்க ஹெயர் கட் சூப்பர் ஆஹ் இருக்கு" என்று சொல்ல அபிஷேக்கோ மனதுக்குள்'இவன் வெட்டி இருக்கிற போலீஸ் கட் சூப்பரா இருக்கா? மொட்டை பாஸ் போல இருக்கான். அப்போ என் அலைகடல் போல இருக்கிற முடியை பார்த்தா என்ன சொல்லுவ?" என்று நினைத்துக் கொண்டான். அதை கேட்ட அதர்வா அவளை பார்த்து வசீகரமாக சிரிக்க அதில் மயங்கிய ரோஷினி மேலும் தொடர்ந்தாள். இதையெல்லாம் கடுப்புடனேயே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த பத்மாவை கண்ணாடி ஊடாக அதர்வா பார்க்க தவறவில்லை.

"இந்த தாடி கூட உங்கள இன்னும் ஸ்மார்ட் ஆஹ் காட்டுது" என்று ரோஷினி கூற அவன் முகத்தை கண் மூடி நினைத்து பார்த்த பத்மாவுக்கு அது உண்மை என்றே தோன்றியது. பெருமூச்சோடு அதர்வா என்ன சொல்லுவான் என்று யோசனையுடன் இருக்க அவனோ "அம்முக்குட்டி இந்த சாரீல ரொம்ப அழகா இருக்க" என்று கூறி பத்மா வயிறை மேலும் எரிய வைத்தான். ரோஷிணியோ அதற்கு வெட்கப்பட்டு சிரிக்க அதை பார்த்த அபிஷேக் "இந்த மூஞ்சுக்கு வெட்கம் ஒன்னு தான் குறை" என்று மானசீகமாக அவளை கடிந்தபடி இருந்தான்.
இருவரின் நெருக்கமான பேச்சை பார்த்த பத்மா முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடிக்க கஷ்டப்பட்டு தன்னை கட்டுப் படுத்தியவள் ஜன்னல் ஊடு வெளியே பார்த்துக் கொண்டு இருந்தாள்.அவள் மனதிலோ எப்போடா கடை வரும் ? இறங்கலாம் என்ற எண்ணம் ஓடிக் கொண்டு இருக்க சிறிது நேரத்தில் கடை வந்து சேர்ந்தது. முதலில் இறங்கிய பத்மா அங்கிருந்து நகர முயல பக்கத்தில் வந்த அபிஷேக் "எங்க போற பத்மா? உன் ஆளை கரெக்ட் பண்ண நீயே அந்த பிராடுக்கு சந்தர்ப்பம் அமைச்சு கொடுக்காம , அவர் கூடவே வா" என்று காதில் ஓதினான். உடனே அவளுக்கும் அது சரியாக பட அதர்வா ஜீப்பை பார்க் பண்ணி வரும் வரைக்கும் நடையை தளர்த்தி மெதுவாக நடந்தாள்.
கடை வாசலில் மெதுவாக நடந்த பத்மா அருகே வந்த அதர்வா "தரைக்கு வலிக்க போகுது" என்று சொல்லி விட்டு விறு விறுவென படியேற "எப்போ பார்த்தாலும் நம்ம கிண்டல் பன்னுறதே வேலையா போச்சு" என்று முணு முணுத்தவள் அவன் நடைக்கு கஷ்டப்பட்டு ஈடுகொடுத்து நடந்து போனாள். நேரே பிரியாவுக்கு புடவை எடுக்க அனைவரும் புடவை செக்ஷனுக்குள் நுழைய காரில் சைட் அடித்தது போதாது என்று அங்கேயும் பிரியாவை வைத்த கண் வங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. உடனே அவன் அருகே வந்த அபிஷேக் "இவன் குறு குறுன்னு பார்க்கிறத விடமாட்டான் போல இருக்கே" என்று நினைத்தபடி பெருமூச்சோடு அவனை தாண்டி சென்றான்.

அதே சமயம் தனக்கான புடவைகளை பார்த்துக் கொண்டு இருந்த பத்மா அருகில் வந்த அதர்வா "எதையாவது சுருட்டலாம் என்று பார்க்கிறியா? எங்க குடும்ப மானம் இதுல தங்கி இருக்கு... " என்றான். அதை கேட்டவளுக்கு கோபம் சர சரவென ஏற "நானும் பார்க்கேன் எப்போ பார்த்தாலும் ஏன் என்னை திருடி போல நடத்துறீங்க? " என்று நாசி சிவக்க அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டாள். உடனே அவனை அழுத்தமாக பார்த்தவன் "நீ திருடி தானே" என்று சொல்ல அவளுக்கு எரிச்சலாகவே இருந்தது. கோபத்தில் கண்ணீர் கூட முட்டிக் கொண்டு வர அந்நேரம் பார்த்து அதர்வாவை நோக்கி வந்த ரோஷினி "மாமா இந்த கலர் நல்லா இருக்கா? " என்று ஒரு புடவையை அவனிடம் காட்டினாள் . உடனே அவனும் "உன் கலருக்கு சூப்பரா இருக்கும்" என்று பத்மாவை பார்த்துக் கொண்டே கூற அவள் கண்களில் இருந்து கண்ணீர் துளி அவளையும் மீறி உருண்டு விழுந்தது. அதனை அதர்வாவும் கண்டு கொண்டான். ஆனாலும் அதனை மறைக்கும் முகமாக உடனே துடைத்தவள் அவனை பார்க்காமல் புடவையை பார்த்துக் கொண்டு இருந்தாள். கணவன் மனைவி நடுவே ரோஷினி நிற்பதை கண்ட வைத்தீஸ்வரிக்கு சங்கடமாக போக அவர் அருகே வந்தவர் "இங்க வாம்மா அழகான புடவை எல்லாம் இங்கே இருக்கு" என்று சொல்லி அவள் கையினை பிடித்து அழைத்து சென்றார்.

ரோஷினியோ வேறு வழி இல்லாமல் அவருடன் கூட இழுபட்டு சென்றாள் . அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித் அருகே வந்த அவன் தந்தை "என்னடா இது? சொத்தை பிடிக்க ஆள கூட்டி வந்தா, அவ அவனை வளச்சு போட பிளான் போடுறா?" என்று கேட்க பல்லை கடித்தபடி அவரை பார்த்த ரஞ்சித் "அத தான்பா நானும் பார்த்துகிட்டே இருக்கேன்" என்றான் எரிச்சல் கலந்த குரலில்.

ரோஷினி சென்றதும் பத்மாவிடம் நெருங்கி நின்ற அதர்வா "புடவை எடுக்கலையா?' என்று கேட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் குனிந்து கொண்டாள். உடனே "நான் ஒரு பட்டுப்புடவை கொடுத்து அம்முக்குட்டி கிட்ட ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருக்கேன்... நீயே ஒரு பட்டுப்புடவை எடுத்து தா" என்று அவள் தலையில் இடியை இறக்க அவளோ அவனை அதிர்ந்து பார்த்தாள்.

"என்னை பார்த்தது போதும், ஒரு புடவை எடுத்து கொடு" என்று அதிகாரமாக சொல்ல "புடவையா புடவை? " என்று கருவிக் கொண்டவள் முட்டாசு கலரில் கேவலமான டிசைன் உடைய புடவையை எடுத்து கொடுத்து "இது நல்லா இருக்கு" என்றாள் செயற்கை தனமான புன்னகையுடன். அவளையும் புடவையையும் மாறி மாறி பார்த்தவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. ஒருவாறு சிரிப்பைக் கட்டுப்படுத்தியவன் அங்கிருந்த பையனை அழைத்து "தம்பி, இந்த அம்மாக்கு இந்த புடவை பிடிச்சிருக்காம்,.. பில்லை போடு" என்று சொல்லி அவள் கையில் இருந்த புடவையை வாங்கி அவனிடம் கொடுத்தவன் "உனக்கு சாரீ செலக்ட் பண்ணி முடிஞ்சு தானே.. வா வேற செக்ஷன் போவோம்" என்று கூப்பிட்டான். அவளுக்கோ யாரோ தலையில் கல்லை போட்டது போன்ற உணர்வு, "இல்லை நான் செலக்ட் பண்ணல" என்று அவள் சொல்ல "இப்போ எடுத்து கொடுத்தியே" என்றான் அழுத்தமான குரலில்.

உடனே சுதாகரித்தவள் "அது நீங்க எடுத்து கொடுக்க சொன்னது," என்று கூற "உனக்கு பிடிச்சு இருக்கு தானே" என்று மறு கேள்வி கேட்டான். இல்லை என்று சொன்னால் திட்டியே தன்னை சாகடிப்பான் என்று நினைத்தவள் "ம்ம் பிடிச்சிருக்கு" என்றாள் வேண்டா வெறுப்பாக. "சோ அது உனக்கு தான்.. இன்னும் இங்க நின்று வேற சாரீயை ஆட்டைய போடாம ...என் கூட வா,, " என்றவன் அவள் கையை பிடித்துக் கொண்டு ஷர்ட் செக்க்ஷனுக்கு சென்றான். அவளுக்கோ இப்படி கேவலமான புடவையையா கல்யாணத்துக்கு உடுக்க போறோம் என்ற கவலை ஒரு பக்கம் அதர்வாவின் குத்தல் பேச்சு ஒருபக்கம் என பாரமான மனதுடன் அவன் பின்னே இழுபட்டு சென்றாள்.
அங்கே சென்றதும் "பக்கத்திலேயே நில்லு " என்றவன் தனக்கு உரிய ஷர்ட்டை எடுத்து பார்க்க தொடங்கினான். அவளுக்கோ என்ன செய்வதென்று தெரியாமல் ஒரே அலுப்பாக இருந்தது. வேறு வழி இல்லாமல் ஒவ்வொரு ஷர்ட்டாக அவளும் பார்க்க "இத சுருட்டிட்டு ஓட யோசிக்கிறியா?" என்று அவள் காதில் அமில வார்த்தைகளை கூற எரிச்சலாக கையில் இருந்த ஷர்ட்டை தூக்கி கீழே போட்டவள் "நான் ஒன்னையுமே தொடல " என்றபடி கையை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு நின்றாள். அவளை முறைத்தபடி கீழே குனிந்து ஷேர்ட்டை எடுத்த அதர்வாக்கு நிமிரும் போது அவள் வெண்ணிற இடை கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. கஷ்டப்பட்டு கண்ணை அதிலிருந்து எடுத்தவன் நிமிர்ந்தாலும் அவன் கண்கள் அவள் இடையை நோக்கியே சென்றது.. "என்ன நடந்தது எனக்கு? அவ பார்த்தா என் மானம் என்னத்துக்கு ஆகிறது?" என்று நினைத்தவன் கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்தியபடி நிமிர முன்னால் அவனை நெருங்கி நின்ற அபிஷேக் "நீங்க பார்த்ததை நான் பார்த்தேன்" என்றான்.
இதை கேட்டவனுக்கோ தர்ம சங்கடமானாலும் அதை முகத்தில் காட்டாமல் சமாளித்தவன் "என் பொண்டாட்டி நான் பார்ப்பேன்.. உனக்கென்னடா?" என்று கேட்க அதை கேட்டு பத்மா வானத்தில் பறந்தாலோ இல்லையோ அபிஷேக் தனது நண்பி வாழ்க்கையை நினைத்து வானத்தில் பறந்து கொண்டு இருந்தான்.
அவன் கனவில் பழைய படங்களில் வருவது போல பத்து பேர் பின்னால் வர அதர்வாவும் பத்மாவும் ஓடி வந்து கொண்டு இருந்தனர். மேலே பார்த்து கனவு கண்டு கொண்டிருந்தவனிடம் "டேய்" என்று அழைக்க அவன் இந்த பூலோகத்துக்கு வரும் எண்ணமே இல்லாமல் இருந்தான். அதை பார்த்து பெருமூச்சு விட்டபடி "டேய்" என்று அவன் இரு தோள்களையும் பிடித்து உலுக்கியதும் தன்னிலை அடைந்த அபிஷேக் "ஐயோ எனக்கு வெட்கம் வெட்கமா வருது" என்றபடி அங்கிருந்து முகத்தை மூடியபடி ஓட நெற்றியில் வெளிப்படையாக அடித்தவன் திரும்பி பத்மாவை பார்த்தான். அவளோ அவன் கூறிய வார்த்தையில் மெய் மறந்து அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். "சரி அவனை எழுப்பி முடிஞ்சு இனி இவளையும் எழுப்பனுமா?" என்று நினைத்தவன் அவள் அருகே மூச்சு காற்றுப் படுமளவுக்கு நெருங்கி வந்தான்.
ஏற்கனவே அவள் வெண்ணிற இடை போதையேற்ற அவள் காந்த விழிகள் அவனை தடுமாற வைக்க அவன் கை தன்னையும் மீறி புடவையூடு தெரிந்த அவளது வெண்ணிற இடையில் அழுத்தமாக படிந்தது. ஏற்கனவே கணவன் கூறிய வார்த்தையில் சந்தோஷத்தின் உச்சத்தின் நின்றவள் இப்போது கணவனின் ஸ்பரிசம் பட்டதும் சிலிர்த்து போனாள். அவனுக்கோ அவள் நெருக்கம் தடுமாற வைக்க காற்றுக்கும் கேட்காத குரலில் "பத்மா" என்று அழைத்தான். அவன் வன்மையான கையாள்கை நடுவே இந்த மேன்மை அவளை தன்னிலை இழக்க செய்து இருந்தது. அவன் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவளுக்கு நிலை தடுமாற "மாமா " என்று அழைத்தவளுக்கு காற்று தான் வந்தது. அவள் காதருகே மீசை ரோமம் உரச குனிந்தவன் "இப்படியே நின்னா பொம்மைன்னு நினச்சு புடவை கட்டி விட போறாங்க" என்று ஹஸ்கி குரலில் சொன்னதும் அவன் சொன்னது அவள் மூளைக்கு ஏற சிறிது நேரம் எடுத்தது. அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தவளோ தீச்சுட்ட போல விலகி அவனை பார்க்க சங்கடப்பட்டு கொண்டு தலையை குனிந்து கொண்டாள்.

அவள் விலகல் அவனுக்கு பிடிக்காமல் இருந்தாலும் தன்னை கட்டுப்படுத்தியவன் பெருமூச்சோடு அவளை மீண்டும் வம்பிழுக்க நினைத்தபடி "ஆட்டைய போட்ட ஏதும் கீழ விழுந்திடுச்சா?" என்று கேட்டான். அதை கேட்டு விழுக்கென நிமிர்ந்தவள் அவனை உறுத்து விழித்தபடி "இன்னொரு வாட்டி என்னை திருடின்னு சொன்னா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்" என்று உரைக்க "அப்போ தெய்வம் ஆய்டுவீங்களோ?" என்று அவன் நக்கல் குரலில் கேட்டான். "ஐயோ ஐயோ ஐயோ " என்று மானசீகமாக தலையில் அடித்தவள் "நான் போறேன்" என்றபடி அங்கிருந்து கிளம்ப ஆயத்தமாக அவள் கையை இழுத்து பிடித்தவன் "என் கூட ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வா" என்று தலையில் இடியை இறக்கினான்.

"நான் மாட்டேன்" என்று அவள் கூறி முடிக்க முதல் அவளே அறியாமல் அவன் அவளை ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் தள்ளி லாக் பண்ணி இருந்தான். அவளோ அனல் தெறிக்க அவனை பார்த்தவள் "இப்போ எதுக்கு ?" என்று ஆரம்பிக்க அவள் வாயை பொத்தியவன் "வெளியே கேட்டா தப்பா நினைப்பாங்க" என்று சொல்ல அவள் புரியாமல் புருவம் சுருக்கி பார்த்தாள். சற்று அவளை வீட்டு விலகியவன் "ஒன்னும் இல்ல , என் ஷர்ட் கழட்டி வைக்க ஸ்டாண்ட் வேணும்" என்றவன் ஷர்ட் பட்டனில் கை வைக்க "ஐயோ" என்றவள் கதவை திறந்து கொண்டு வெளியே விரைவாக ஓடியதால் முன்னால் நின்ற அபிஷேக் மேல் மொத அவன் நிலை தடுமாறி பின்னால் நின்ற விஷ்ணு மேலே சாய அவன் அபிஷேக்கை பின்னால் இருந்து அவன் வயிற்றை கட்டி அணைத்து தாங்கி இருந்தான். தலையை பக்கவாட்டாக சரித்து விஷ்ணுவை பார்த்தவன் "என் மேல உங்களுக்கு இப்போவும் கண்ணா?" என்று கேட்க அவனை முறைத்த விஷ்ணு "அட போடா" என்றபடி அவனை கீழே விட்டான்.


தேடல் தொடரும்.

 
Status
Not open for further replies.
Top