கண்சிமிட்டும் தென்றலே முன்னோட்டம்
யாதவ் மித்ரன் வெட்ஸ் வசுமதி என்று வாயிலில் பூக்களால் திருமண மண்டபத்தின் வாயிலில் பொறிக்கப்பட்டு இருந்தது. மங்கல வாத்தயங்கள் வாசிப்பவர்கள் அதிர்ச்சியாக பார்க்க,அதே போல் ஊர்மக்கள், யாதவின் குடும்பத்தினர் அனைவருமே அதிர்ச்சியாக பார்க்க கம்பீரமாக வேஷ்டி சட்டையில் நெஞ்சை நிமிர்த்தி
யாதவ் நின்று இருக்க அருகே மஞ்சள் தாலி தழையத் தொங்க தலைக் குனிந்தவாறு நின்று இருந்தாள்
வைஷ்ணவி.
யாதவின் தந்தை, "என்னை அவமானப்படுத்த வசுமதி கூட நான் ஏற்பாடு செஞ்ச கல்யாணத்தை நிறுத்திட்டு அவ தங்கச்சி கழுத்துல தாலி கட்டி வந்திருக்க?" என்று கோபமாய் வினவ, "ஐயோ இல்லை மாமா" என்று வைஷூ அவசரமாக மறுக்க, "வாயை மூடுடி" என்று யாதவ் கர்ஜித்ததில் அவள் மேனி வெளிப்படையாகவே நடுங்கியது.
"ஆமா அன்னைக்கு நீங்க மண்டபத்துல இருந்து அடிச்சி வெளியே துரத்தினிங்களே அதுக்காக உங்க அத்தனை பேரையும் பழிவாங்கவும், அவமானப்படுத்தவும் தான் இவளை இழுத்துட்டு போய் தாலி கட்டினேன்" என்று பல்லிடுக்கில் சொற்களைக் கடித்துத் துப்பினான். வைஷூவோ அவனை அதிர்ந்துப் பார்த்தாள்.
யாதவ், வைஷ்ணவி

#########################
சாத்விக், "ஜானு பேபி" என்று நா குழற பேசியவாறே குடித்ததில் போதை ஏறியவாறே தடுமாற்றத்தில் விழ அவனைத் தாங்கிக் கொண்டான் யாதவ். "இடியட் உனக்கு தான் குடிச்சால உடம்புக்கு ஒத்துக்காதுன்னு தெரியும்ல என்ன ம***** குடிச்ச?" என்று எகிற, "ஐயோ வயிறு எரியுதே" என்று போதையில் வயிற்றைப் பிடித்தவன், "பழசு ஞாபகம் வந்துருச்சு. அதான் குடிச்சேன். நீ யாருடா என்னை கேட்க?" என்று அவன் கழுத்தோடு கையிட்டு வினவினான் சாத்விக்.
"உன் பொன்டாட்டி. ஏதாவது பேசின பல்லை உடச்சிடுவேன்" என்று கோபமாய் இரைந்த யாதவ், அவனைப் பிடித்துக் கொண்டான் விழாமல். சாத்விக்கை தேடி அங்கே வந்த கார்த்திக் அவர்களைப் பார்த்தான். சாத்விக், "ஏன் ஜானு பேபி உன் முகம் சொரசொரன்னு இருக்கு?" என்று யாதவின் கன்னத்தை வருடினான் சாத்விக். "ப்ரவீன்" என்று பல்லைக் கடித்து திரும்ப அங்கே இவர்களை பார்த்தவாறு நின்று இருந்தான் கார்த்திக்.
"அங்க ஏன் டா மசமசன்னு நின்னுட்டு இருக்க? அங்கே ஆகாஷ் இருக்கான். அவனை போய் கூட்டிட்டு வா. நான் இவனை இவன் ரூமுக்கு கூட்டிட்டு போறேன்" என்று சாத்விக்கை தூக்கியவாறே ஆகாஷை கண்களால் தேட அவனோ தன் மனைவி என்று நினைத்து தூணைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்தான்.
கார்த்திக், "குடிச்சால் தூணுக்கும், பொண்ணுக்கும் வித்தியாசத்தை மறந்திருவிங்களாடா?" என்று முணகியவாறே ஆகாஷை இழுத்து வர அவன் முணிகயதைக் கேட்ட யாதவ், "இவனை விட அவன் பெடர். இவன் பொண்ணுக்கும், பையனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கான்" என்று வெளிப்படையாகவே தலையிலிடித்து சிறிது தூரம் நடக்க நால்வரின் மனைவிகளும் அவனை வெட்டவா குத்தவா என்று அவர்களை முறைத்து நின்று இருந்தனர்.
சாத்விக்,
சனா

கார்த்திக்,
அபி

#######################
யாதவ், "நான் நல்லவன் இல்லை. ரொம்ப ரொம்ப கெட்டவன். இதுக்கு மேலே என்னைப் பத்தி தேட நினைக்காத. என் வாயால நான் எதையும் சொல்ல மாட்டேன். என்னை மிருகமா மாத்ததாத" என்று கர்ஜித்தவன் போத்தலில் இருந்த முழு சரக்கையும் மடமட என குடித்து அறையில் இருந்து வெளியேற குடித்ததினாலா? இல்லை அவன் மனதில் இருக்கும் இரகசித்தியத்தினாலோ கண்கள் சிவந்து கண்ணீரைச் சுரந்து இருந்தன.
வைவஷூவோ பயத்தில் சுவரோடு ஒட்டி நின்று இருந்தாள். அவன் கோபத்தைப் பார்த்து இவளுடைய இயல்பான தைரியக்குணம் அங்கிருந்து பறந்து இருந்து.
########################
வைத்தியாசாலையின் ஒரு அறையில் கட்டிலில் டிரிப்ஸை ஏற்றியவாறே படுத்துக் கொண்டு இருந்தாள் வைஷ்ணவி. "வைஷூ, யாதவ் வந்துட்டான்" என்று அவசரமாக நுழைந்து கௌதம் கூற, "ஐயோ நான் மயங்கிட்டேன்" என்று கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
யாதவ் கோபமாக கதவைத் திறந்து கௌதம், வைஷூவை மாறி மாறிப் பார்த்தவன் "மரியாதையா உன் தங்கச்சை கண்ணை திறக்க சொல்லு. இல்லை எனக்கு இருக்கிற கோபத்துக்கு நான் என்ன வேணூன்னாலும் பண்ணிருவேன்" என்ற அவனது கர்ஜனையில், வைஷூ நடுங்கியபடியே எழுந்து அமர அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.
#########################
அஞ்சலியை நெருங்கிய சாத்விக், "கெட் ரெடி அஞ்சலி" என்று எள்ளலாய் மொழிந்தவன், அவள் கையில் சிலபத்திரங்களைக் காட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் அஞ்சலி. சாத்விக், "இன்னொரு விஷயம் தெரியுமா அஞ்சலி? உன்னோட புருஷன் சொரி சொரி எக்ஸ் புருஷனுக்கு இன்னும் இரண்டு நாளில் வேற ஒரு பொண்ணு கூட கல்யாணம் நடக்க போகுது. மறக்காமல் வந்திரு" என்று இளக்காரமாய் கூறி வெளியேறினான்.
இத்தனை நேரமாக அதிர்ச்சியில் இருந்த அஞ்சலியின் முகம் குரூரமாய் மாறி, 'என்னைப் பத்தி உனக்கு முழுசா தெரியாது எஸ்.பி. பார்க்கலாம்' என்று இகழ்ச்சியில் உதடு சுளித்தாள்.
அடுத்து அத்தியாயங்களுடன் சந்திக்கின்றேன்.
நாயகன்கள் :
1.யாதவ்
2.சாத்விக்
3.கார்த்திக்
நாயகிகள்
1.வைஷ்ணவி
2.திசன்ஜனா
3.அபிநயா.
ஜனவரி ஒன்றுமுதல் வாரத்தில் மூன்று நாட்களில் பதிவிடுவேன்.